கீலகம் – ராத்ரி சூக்தம்.
கீலகம் – சண்டிகாயை நம||
மார்கண்டேயர் சொன்னார்.
1. ஓம். விசுத்த – மிகத் தௌiவான ஞானமே உருவானவரும், மூன்று வேதங்களiல் திவ்ய சக்ஷJஸ் (கண்களாக) விளங்குபவரும், பிறை சந்திரனை சிரஸில் தரித்தவருமான (சிவபெருமானை) ஸ்ரேயஸ் எனப்படும் செல்வங்களை அடைய விரும்பி வணங்குகிறேன்.
2. இந்த ஜபத்தை ஈடுபாட்டுடன் செய்ய விரும்பும் அன்பர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கீலக மந்திரம் இது. இதை தெரிந்து கொள்பவர்கள் Eக்ஷமத்தை அடைவது நிச்சயம்.
3. உச்சாடனம் முதலியவை தானாகவே சித்திக்கச் செய்யும். மற்ற சகல வஸ்துக்களும் இந்த ஸ்தோத்ரத்தை படித்த மாத்திரத்தில் சித்திக்கும்.
4. ஜபிக்காமல் எந்த மந்த்ரமும், ஒளஷதமும் பலன் தராது. உச்சாடனம் முதலியவை தப்பு தவறுகள் இல்லாமல் செய்தால் தானே சித்தியாகும் என்ற பொதுவான சந்தேகம், ஜனங்களiடையில் உள்ளதை அறிந்த ஹுரன் எல்லோரையும் அழைத்தார். சண்டிகா ஸ்தோத்திரத்தை முறைபடுத்தி ரஹுஸ்யமாக செய்து வைத்தார். இfந்த முறையை அறிந்து செய்வதால் பெறும் புண்யங்களுக்கு அளவேயில்லை. சந்தேகமில்லாமல் எல்லா Eக்ஷமங்களையும் அடைவார்கள். அமாவாஸ்யை, சதுர்தசி, அஷ்டமி போன்ற நாட்களiல், நியமமாக, தானம் செய்தும், தான் தானம் பெற்றும் உரிய கடமைகளை செய்வதால் தேவி பெரிதும் மகிழ்ச்சியடைகிறாள். மகாதேவர் தானே அருளiய இந்த கீலகம், இதையும் படித்து மேற்கொண்டு சண்டிகா துதியை முழுவதுமாக படிப்பவர்கள் தான் சித்தர்கள். அவர்கள் தான் கணங்கள், கந்தர்வர்களாக ஆகிறார்கள். அவர்கள் எந்த இடத்தில் சுற்றி அலைந்தாலும் பயம் என்பதே இருக்காது. அபம்ருத்யு – அகால மரணம், வராது. காலத்தில் மரணமடைந்து மோக்ஷம் செல்வான். விவரமாக தெரிந்து கொண்டு முறைப்படி பூஜிப்பவன், சௌபாக்யம் முதலானவைகள், தங்கள் குடும்பங்களiல் விரும்பும் அனுசரனை முதலியவைகளையும் அடைகிறான். எனவே, சுபமான இந்த துதியை படியுங்கள். மெதுவாக, ஆரம்பித்து, மௌfள மௌfள விரிவாக படிக்கலாம். அந்த தேவியின் பிரஸாதத்தால், சௌபாக்ய, ஆரோக்ய, சம்பத்துக்கள், சத்ரு ஹானீ, பரமான மோக்ஷம் முதலியவை கிடைக்கும் எனும் பொழுது ஜனங்கள் ஏன் ஈடுபாட்டுடன் படிக்க கூடாது.
கீலக ஸ்தோத்ரம் நிறைவுற்றது.
இதன் பின் தந்த்ரம் எனும் முறையில் ராத்ரி சூக்தம்.
இவள் விஸ்வேஸ்வரி. உலகை காப்பவள் இவள் தான். இவளே ஸ்திதி ஸம்ஹார காரிணி. பகவான் விஷ்ணுவின் நித்திரை – இவளே நித்திரா தேவி. பகவானுடைய அளவில்லா தேஜஸால் இவள் பலம் பெற்றாள்.
ப்ரும்மா சொல்கிறார் (72)
தேவி, நீதான் ஸ்வாஹா, நீயே ஸ்வதா4, வஷட்காரமும் நீயே, வேதத்தின் ஸ்வரமாக இருப்பவளும் நீயே. சுதா4 என்ற அம்ருதமும் நீயே. 51 அக்ஷரங்களும் நீயே. மூன்று விதமாக அக்ஷரங்களுள் நீ விளங்குகிறாய். அந்த அக்ஷரத்தின் அரை மாத்திரையிலும் நீ நித்யாவாக விளங்குகிறாய் என்று விசேஷமாக உன்னைச் சொல்வார்கள். நீ தான் ஸந்த்3யா, ஸாவித்திரி, நீ தான் ஜனனீ – தாயாக இருப்பவள். இந்த உலகம் நிலை பெற்று இருப்பது உன்னால் தான். உன்னால் தான் உலகில், பிறப்பும், படைத்தலும் நடக்கின்றன. உலகை காப்பவள் நீயே. இதன் முடிவும் நீயே. நீ ஸ்ருஷ்டி ரூபமாக இருக்கும் பொழுது, உலகம் தோன்றியது. ஸ்திதி ரூபமாக இருக்கும் பொழுது உலகம் பாலிக்கப் படுகிறது. முடிவில் ஸம்ஹுfருதி ரூபமாக விளங்குகிறாய். இந்த உலகமே உன் ஸ்வரூபம் தான் தாயே, நீயே மகா வித்3யா, மகாமாயா, மகா மேதா4 (அறிவு) , மகா ஸ்ம்ருதி (நினைவாற்றல்), மகா மோகா, மகா தேவி, மகாசுரி. உலகின் இயல்பே நீதான். முக்குணங்களாக விளங்குகிறாய் தாயே. கால ராத்திரி, மகா ராத்திரி, மோக ராத்திரி என்று பயங்கரமாகவும் காட்சி தருகிறாய். நீ தான் ஸ்ரீ என்ற லக்ஷfமி, ஈஸ்வரி நீயே, ஹுfரீ எனும் புத்தியும் நீயே. அறிவைத் தருவதும் உன் அடையாளமே. லஜ்ஜை, புஷ்டி, துஷ்டி, சாந்தி, க்ஷaந்தி என்றும் உன்னை குறிப்பிடுவர். சௌம்யமாக இருக்கும் பொழுது நீ பரமேஸ்வரி. அதே சமயம், கோரமான ஒரு உருவமும் உனக்கு உண்டு. அந்நிலையில், கையில் வாள், சூலம், ஏந்தி பயங்கரமாகத் தெரிவாய். க3தை4. சக்ரம்,. சங்கம், அம்பு , வில், பு4சுண்டி, பரிக4ம் என்ற மரக்கட்டை இவைகளும் உன் ஆயுதமே. உலகில் உள்ள நல்லதோ, பொல்லாதோ, எந்த பொருளiல் எந்த சக்தி உள்ளதோ, அந்த சக்தி நீ தான். இப்படித்தான் உன்னைத் துதிக்கிறார்கள். உன்னை யாரால் துதிக்க முடியும் ? விஷ்ணுவோ உறங்கிக் கொண்டிருக்கிறார். என்னையும், ஈசனையும் தோற்றுவித்து, கடமைகளை கொடுத்த அவரே தான், உன்னை ஏவ முடியும். அவரையன்றி நாங்கள் துதி செய்யக் கூட தயங்கி, உன் பிரபாவம், சக்தியை அறிந்ததால் வேண்டிக் கொள்கிறோம்.
தேவி, தயை செய். இந்த அசுரர்களை மோகத்தில் ஆழ்த்து. மது4, கைடப4ர்கள், அளவில்லாத பலம் உடையவர்கள். இவர்களை வதைக்க ஜகன்னாதனான பகவானை எழுப்பு, சீக்கிரம். அவரால் தான் முடியும் இவர்களை நிக்ரஹும் செய்யச் சொல்.