தேவி மாஹாத்ம்யம் – தேவியின் மகிமை
தேவி மாஹாத்ம்யம் – தேவியின் மகிமை
சண்டிகா தேவியை வணங்குகிறேன் — என்று துவங்குகிறது இந்த துதி பாடல். இதை முதலில் சொன்னவர் மார்கண்டேய ரிஷி. ஒரு சமயம் அவர் சொன்னார். – மனுவின் வம்சத்தில் எட்டாவது மனு – சூரியனின் மகன் சாவர்ணீ என்பவன் சாதாரணமாக சூரிய புத்திரனாக தோன்றியவன் தான். அவனை ஒரு மன்வந்திரம் எனும் காலம், அரசனாக உயர்த்தி வைத்தது தேவியின் கருணை. அந்த கதையை விவரமாக சொல்கிறேன் கேள்.
வெகு நாட்களுக்கு முன் சித்திர வம்சம் என்ற வம்சத்தில் பிறந்த சுரதன் என்பவன் அரசனாக பூமியை ஆண்டு வந்தான். தன் பிரஜைகளை தன் புத்திரர்களாகவே கருதி, நியாயமாக ஆண்டு வந்தான். விதி அவனையும் விட்டு வைக்கவில்லை. கோலாவித்4வம்சகர்fகள் என்ற சத்ருக்கள் படையெடுத்து வந்து பயங்கரமாக யுத்தம் செய்தனர். இத்தனைக்கும் அவர்கள் படை பலமும் மிகக் குறைவே. சுரதன் அவர்களiடம் தோற்றதில் அவமானம், துக்கம் அடைந்தாலும், திரும்ப ஊர் வந்து ராஜ்ய பாலனத்தை செய்து வந்தான். ஆனால் எதிரிகள் தந்திரமாக, அவனுடைய மந்திரிகளை தன் வசப்படுத்திக் கொண்டு, நாலா புறமும் சூழ்ந்து கொண்டனர். இது வரை விசுவாசமாக இருந்த மந்திரிகளே துஷ்டர்களாக, துராத்மாக்களாக ஆனார்கள். உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தனர். அரசனுடைய பொக்கிஷம் சூறையாடப்பட்டது. படைகள், சேனை வீர்ர்களை அபகரித்தனர். தன் ஊரிலேயே அன்னியனாக நடத்தப் பட்டான். மனம் நொந்து போன அரசன் வேட்டையாடும் சாக்கில் காட்டுக்கு வந்தான். அரசனாக, மதிப்புடன் வாழ்ந்தவன், அந்த ராஜ மரியாதை பறி போனபின் திரும்ப ராஜ்யத்திற்கு போக விரும்பாமல், தான் எறி வந்த குதிரையில் அடர்fந்த கானகம் வந்து சேர்ந்தான். அமைதியான சூழ்நிலையில் சிஷ்யர்கள் புடை சூழ இருந்த ஒரு முனிவரைக் கண்டான். சிறந்த அறிஞர்
அந்த முனிவர் என்பதும் தெரிந்தது. இதமான அந்த சூழ்நிலையே அவன் மனதுக்கு ஆறுதல் அளiத்ததால் அங்கேயே தங்கினான். முனிவரும் இனிமையாகப் பேசி உபசாரம் செய்தார். ஆசிரமத்துள் மனம் போனபடி சுற்றிச் சுற்றி வந்த சமயம் மனம் மட்டும் கொந்தளiத்த வண்ணமே இருந்தது. எப்படி இருந்த தன் மக்கள். பாசத்தைக் கொட்டி வளர்த்தது எல்லாமே வீணா ? என் முன்னோர்கள் பாலித்த நகரம் என்னால் அழிந்து விட்டதே. என் மக்களும், குழந்தைகளும் எப்படி இருக்கிறார்களோ ? மந்திரிகளும், அதிகாரிகளும் நியாயமாக ஆள்கிறார்களோ இல்லையோ, சூரஹுஸ்தி தான் பிரதான மந்திரி. எப்பeaழுதும் மதாந்தமாகவே இருப்பவன். அவனும் எதிரி வசம் ஆகி விட்டானோ? என்னை அண்டி எவ்வளவு சுகங்களை அனுபவித்தார்கள். தனம், போஜனம், என் செல்வாக்கு எல்லாவற்றையும்
அனைத்தையும் கொடுத்தேனே. இfப்பொழுதும் அதே போல் வேறு ஏதோ அரசனுக்கு அடிபணிந்து வாழ்வார்கள். செலவாளiகள். வேண்டாத இடத்தில் காசை கரியாக்குவார்கள். எவ்வளவு கஷ்டப்பட்டு பொக்கிஷத்தை பாதுகாத்து நிரப்பி வைத்திருந்தேன். அவ்வளவும் வீணாகப்போகிறது. இவ்வாறு எண்ணி எண்ணி மாய்ந்தான். ஒரு நாள், ஆசிரமத்தில் ஒரு புது முகம். வைஸ்யன் ஒருவனை சந்தித்தான். யார் நீங்கள் ? இங்கு வரக் காரணம் என்ன ? என்று கேட்டான். உங்களைப் பார்ததால் கஷ்டத்தில் அடி பட்டவராகத் தெரிகிறது. முகம் வாடி இருக்கிறீர்கள். எதனால் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டீர்களோ? இவ்வாறு உள்ளன்போடு அரசன் வினவியதும், அந்த வைஸ்யன் உணர்ச்சி வசப்பட்டான். அரசனை வணங்கி தலை குனிந்தவாறு தன் கதையைச் சொல்லலானான்.
வைஸ்யன் சொன்னான் –
என் பெயர் சமாதி4. வியாபாரி. பணக்கார குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன்.
மனைவி. மக்கள் எல்லாம் உண்டு. என் போதாத காலம், அவர்களுக்கு செல்வம் பெரிதாகி விட்டது. என்னை உதறி விட்டார்கள். அறிவிலிகள். அன்போ, இரக்கமோ இல்லாத அசடுகள். என்னால் தாங்கவே முடியவில்லை. தன்னைச் சார்ந்தவர்கள் என்று நம்பிய என்னை இப்படிக் கூட அலட்சியம் செய்வார்களா? மனம் வெறுத்து தான் காட்டுக்கு வந்தேன். ஆனால் இங்கும் அவர்களையே எண்ணி கவலைப்படுகிறேன். எப்படி இருக்கிறார்களோ ? என் மகனும், மற்றவர்களும் நலமாக இருக்கிறார்களா? என்ன செய்வார்கள் ? வீட்டு நிலைமை சீராக இருக்கிறதா? என் மகன்கள் திருந்தினார்களா? அல்லது அதே போல் துஷ்டர்களாக மனம் போனபடி போகிறார்களா, இதே கவலை என் மனதை வாட்டுகிறது என்றான்.
அரசன் சொன்னான் –
லோபிகள் என்று சொல்லி விட்டீர்கள். உங்களையும் அலட்சியம் செய்து துரத்தி விட்டார்கள். அவர்களiடம் உங்களுக்கு ஏன் இந்த பாசமும், பந்தமும் உங்களுடைய இந்த கவலையும், அங்கலாய்ப்பும் அவர்களுக்கு உரியதேயல்ல.
வைஸ்யன் சொன்னான் –
நீங்கள் சொல்வது சரிதான். என்ன செய்வேன். அவர்களுடைய அலட்சியமும் அட்டகாசமும் கூட, நான் அவர்களiடம் கொண்டிருந்த பாசத்தை அழிக்கவில்லையே. தந்தை, குடும்பத் தலைவன் என்ற மரியாதை கூட இல்லாமல் பணம் தான் பெரிது என்று என்னை விரட்டியவர்கள் தான். கணவன் என்றோ, உறவினன் என்றோ மற்றவர்களும் நினைக்கவில்லையே. ஆனாலும் என் மனம் அவர்களையே நினைத்து வாடுகிறது. நீங்கள் மகானாகத் தெரிகிறீர்கள். அறிவு உடையவர். ஏன் என் மனம் இப்படி அலை பாய்கிறது? குணம் இல்லாதவர்கள் அவர்களை இன்னமும் ஏன் உறவினன் என்றும் பந்துக்கள் என்றும் நம்புகிறேன். கவலைப்படுகிறேன். ஏன் ? என்ன செய்தால் எனக்கு மன அமைதி கிடைக்கும் சொல்லுங்கள். இருவருமாக பேசிக் கொண்டே முனிவரிடம் வந்தனர். சமாதி4 என்ற வைஸ்யனும், சுரதன் என்ற அரசனும் முனிவரை வணங்கி அவர் அருகில் அமர்ந்தனர். அரசன் முனிவரைக் கேட்டான்.
பகவன் , உங்களை ஒரு விஷயம் கேட்க விரும்புகிறேன். பதில் சொல்வீர்களா ? என் மனதில் ஏன் இந்த துக்கம் ? என் மனதை அடக்கவே முடியவில்லையே. என்னுடையது என்று இருந்தது அனைத்தையும் இழந்து விட்டேன். ராஜ்யம் போயிற்று. அரசு சம்பந்தமான எல்லாம் விலகியது. எனக்குத் தெரிந்தும், அறிவிலி போல ஏன் இப்படித் தவிக்கிறேன் ? இதோ இந்த வைஸ்யனும் தன் மனைவி, குழந்தைகள், சுற்றத்தார்களாலேயே துரத்தப்பட்டிருக்கிறான். இவனும், தன்னைத் தியாகம் செய்து விட்ட பந்துக்களையே நினைத்து வாடுகிறான். இவனுக்கும் அவர்கள் இழைத்த துரோகம் பெரிது. நாங்கள் இருவருமே வருத்தத்துடன், என் மக்கள், என் பந்துக்கள் என்ற எண்ணங்களால் அலைக்கழிக்கப் படுகிறோம். தவறு அவர்களுடையது தான். விலகி இருக்கவே காட்டுக்கு வந்தோம். ஆனால் மோகம் எங்களை விடவில்லை. விவேகம் கை கொடுக்கவில்லை. மூடத்தனம் தான் எங்கள் இருவரையும் ஆட்டிப் படைக்கிறது. என்ன செய்வோம் ?
ரிஷி சொன்னார். (46)
ஞானம் என்பது அனைத்து ஜந்துக்களுக்கும் உண்டு. புலன்களுக்கு புலனாகும் விஷயங்கள் ஜீவனை தன் வழியில் இழுத்துச் செல்கின்றன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக தன் பக்கம் ஜீவனை இழுப்பதால் தடுமாறுகிறான். சில பிராணிகள் பகலில் குருடாக இருக்கின்றன, மற்றவை இருள் சூழ்ந்தால் கண் தெரியாமல் தவிக்கின்றன. பார்க்கப் போனால், ஞானி என்பவனும் மனிதனே. பசு, பக்ஷி, மிருகங்களோ, மனிதனோ, ஞானியோ எல்லாமே ஒன்று தான். பக்ஷி, மிருகங்களுக்குத் தேவையான அறிவு அவைகளுக்கு வாய்த்திருப்பது போலவே, மனிதர்களுக்குத் தேவையான அறிவை நிரம்பப் பெற்றிருப்பவன் ஞானி. ஒரு விதத்தில் இரண்டும் சமமே. இவைகளைப் பாருங்கள். பறவைகள் தன் குஞ்சுகளுக்கு அலகால் ஊட்டி வளர்க்கிறது. இது அறிவு இல்லையா? க்ஷண நேரம் தாய் பறவை பிரிந்தாலும் பசியால் வாடி அலறுகின்றன அந்த குஞ்சுகள். மனிதனும் அப்படித்தான். வ்யாக்ரம் என்ற புலி போல கவனமாக ஆண்டதாக சொல்கிறாயே, ராஜன், மனிதர்களும், தங்கள் புத்திரர்கள், சுற்றத்தார் என்ற பாசப் பிணைப்பு உள்ளவர்களே. பிரதி உபகாரம் எதிர்பார்த்தா அன்பு செலுத்தினாய் ? யோசித்துப் பார். இருந்தும், என்னுடையவர்கள், நான் சேமித்து வைத்தது என்று உன் மனம் அலை பாய்கிறது. மோகத்தில் ஆழ விழுந்து விடுகிறது. இதற்கு காரணம் என்ன தெரியுமா? மகாமாயை என்ற நம் சித்தத்திற்கு எட்டாத அளவில்லாத சக்தி எனும் தேவி தான். அவள் பிரபாவம் தான், ஸம்ஸாரம், ஸ்திதி, (ஸம்ஹாரம்) என்ற நிலைகளை உருவாக்குகிறது. அதனால் நடக்கக்கூடாதது உங்களுக்கு மட்டும் தான் நடந்து விட்டதாக எண்ணி கவலைப்படாதீர்கள். இவள் உலக நாயகனான பகவான் விஷ்ணுவின் யோக நித்ரா எனப்படுவாள். ஹரியினுடைய மகாமாயை – உலகை மயக்குபவள் இவளே. நல்ல அறிஞர்களுடைய மனதையும், இந்த தேவி, பலாத்காரமாக திருப்பி மோகத்தில் ஆழ்த்துகிறாள். எதற்கு ? அவளால் தான் இந்த சராசரமான – அசையும், அசைவில்லாத -உலகம் முழுவதும் ஆட்டி வைக்கப்படுகிறது. இவளே மனமிரங்கி வரங்களும் தருவாள். அரசர்களiன் கஷ்டங்களைத் தீர்ப்பாள். சனாதனீ – என்றும் அழியாமல் இருப்பவள் – இவள் தான் அறிய வேண்டிய அறிவின் எல்லை. சர்வேஸ்வரியான இவள் தான் ஸம்ஸாரம், பந்தம் இவைகளுக்கு காரணம்.
அரசன் கேட்டான் (59)
பகவன், யாரது? யாரை நீங்கள் மகாமாயா என்று சொல்கிறீர்கள்? பெரியவரே, எங்கு தோன்றியவள் ? என்ன செயல் அவளுடையது ? எப்படி அவளுக்கு இந்த அளவு சக்தி வந்தது? எப்படி இருப்பாள் ? உருவம் என்ன? அவள் பிறப்பிடம் எது? எல்லாவற்றையும் விவரமாகச் சொல்லுங்கள். தாங்கள் ப்ரும்ம ஸ்ரூபத்தை அறிந்த ஞானிகளiலும் சிறந்த ஞானி என்பதை அறிவேன் என்றான்.
ரிஷி சொன்னார் (63)
நித்யமான வஸ்து என்றால், இந்த மகாமாயா தான். உலகில் இவளால் தான் இயக்கம், அதாவது செயல் என்பதே வந்தது எனலாம். எப்படித் தோன்றினாள், சொல்கிறேன் கேளுங்கள். தேவர்களின் காரிய சித்திக்காக இவள் தோன்றினாள் – ஆவிர்பவித்தாள். நித்யா என்ற இவள் கதையை நான் கேட்டபடி சொல்கிறேன்.
சமுத்திர மத்தியில் பகவான் விஷ்ணு சயனித்து இருந்தார். கண் மூடி யோக நித்ரையில் ஆழ்ந்து இருந்தார். கல்ப முடிவு நெருங்கும் நேரம். இரண்டு அசுரர்கள் தோன்றினர். மது, கைடபன் என்ற பெயருடன். கோரமானவர்கள். பகவான் விஷ்ணுவின் காது அழுக்கில் தோன்றியவர்கள். ப்ரும்மாவையே அடிக்கக் கிளம்பினர். பகவானுடைய நாபி கமலத்தில் ப்ரும்மா இருப்பது தெரிந்திருக்கும். அவர் தான் பிரஜாபதி. ஸ்ருஷ்டித் தொழில் அவருடையது. இந்த அசுரர்களைப் பார்த்தவுடன் பகவான் தூங்குகிறாரே என்று நினைத்தவர், பதட்டத்துடன் யோக நித்ரா என்ற தேவியை எழுப்பினார். பகவானை எழுப்பு என்று சொல்ல. இவள் வசிப்பது எங்கே தெரியுமா? ஹரி என்ற பகவானின் கண்கள் தான் இவள் இருப்பிடம். இவள் விஸ்வேஸ்வரி. உலகை காப்பவள் இவள் தான். இவளே ஸ்திதி ஸம்ஹார காரிணி. பகவான் விஷ்ணுவின் நித்திரை – இவளே நித்திரா தேவி. பகவானுடைய அளவில்லா தேஜஸால் இவள் பலம் பெற்றாள்.
ப்ரும்மா சொல்கிறார் (72)
தேவி, நீதான் ஸ்வாஹா, நீயே ஸ்வதா, வஷட்காரமும் நீயே, வேதத்தின் ஸ்வரமாக இருப்பவளும் நீயே. சுதா என்ற அம்ருதமும் நீயே. 51 அக்ஷரங்களும் நீயே. மூன்று விதமாக அக்ஷரங்களுள் நீ விளங்குகிறாய். அந்த அக்ஷரத்தின் அரை மாத்திரையிலும் நீ நித்யாவாக விளங்குகிறாய் என்று விசேஷமாக உன்னைச் சொல்வார்கள். நீ தான் ஸந்த்3யா, ஸாவித்திரி, நீ தான் ஜனனீ – தாயாக இருப்பவள். இந்த உலகம் நிலை பெற்று இருப்பது உன்னால் தான். உன்னால் தான் உலகில், பிறப்பும், படைத்தலும் நடக்கின்றன. உலகை காப்பவள் நீயே. இதன் முடிவும் நீயே. நீ ஸ்ருஷ்டி ரூபமாக இருக்கும் பொழுது, உலகம் தோன்றியது. ஸ்திதி ரூபமாக இருக்கும் பொழுது உலகம் பாலிக்கப் படுகிறது. முடிவில் ஸம்ஹ்ருதி ரூபமாக விளங்குகிறாய். இந்த உலகமே உன் ஸ்வரூபம் தான் தாயே, நீயே மகா வித்3யா, மகாமாயா, மகா மேதா4 (அறிவு) , மகா ஸ்ம்ருதி (நினைவாற்றல்), மகா மோகா, மகா தேவி, மகாசுரி. உலகின் இயல்பே நீதான். முக்குணங்களாக விளங்குகிறாய் தாயே. கால ராத்திரி, மகா ராத்திரி, மோக ராத்திரி என்று பயங்கரமாகவும் காட்சி தருகிறாய். நீ தான் ஸ்ரீ என்ற லக்ஷ்மி, ஈஸ்வரி நீயே, ஹ்ரீ எனும் புத்தியும் நீயே. அறிவைத் தருவதும் உன் அடையாளமே. லஜ்ஜை, புஷ்டி, துஷ்டி, சாந்தி, க்ஷாந்தி என்றும் உன்னை குறிப்பிடுவர். சௌம்யமாக இருக்கும் பொழுது நீ பரமேஸ்வரி. அதே சமயம், கோரமான ஒரு உருவமும் உனக்கு உண்டு. அந்நிலையில், கையில் வாள், சூலம், ஏந்தி பயங்கரமாகத் தெரிவாய். க3தை4. சக்ரம்,. சங்கம், அம்பு , வில், பு4சுண்டி, பரிக4ம் என்ற மரக்கட்டை இவைகளும் உன் ஆயுதமே. உலகில் உள்ள நல்லதோ, பொல்லாதோ, எந்த பொருளில் எந்த சக்தி உள்ளதோ, அந்த சக்தி நீ தான். இப்படித்தான் உன்னைத் துதிக்கிறார்கள். உன்னை யாரால் துதிக்க முடியும் ? விஷ்ணுவோ உறங்கிக் கொண்டிருக்கிறார். என்னையும், ஈசனையும் தோற்றுவித்து, கடமைகளை கொடுத்த அவரே தான், உன்னை ஏவ முடியும். அவரையன்றி நாங்கள் துதி செய்யக் கூட தயங்கி, உன் பிரபாவம், சக்தியை அறிந்ததால் வேண்டிக் கொள்கிறோம்.
தேவி, தயை செய். இந்த அசுரர்களை மோகத்தில் ஆழ்த்து. மது4, கைடப4ர்கள், அளவில்லாத பலம் உடையவர்கள். இவர்களை வதைக்க ஜகன்னாதனான பகவானை எழுப்பு, சீக்கிரம். அவரால் தான் முடியும் இவர்களை நிக்ரஹம் செய்யச் சொல்.
ரிஷி சொன்னார் (88)
இப்படி அவர்கள் துதி செய்யவும், தாமஸி என்பவளாக, மது4, கைடப4ர்களை அழிக்க, விஷ்ணுவை எழுப்ப வேண்டுமே , அதனால், அவருடைய கண்கள், முகம், மூக்கு, புஜங்கள், ஹ்ருதயம், வயிற்று பாகங்களiல் புகுந்து புறப்பட்டு கண்களiலிருந்து விலகி நின்றாள். அவள் விலகியதும், ஜகந்நாதன் எழுந்தார். தூக்கம் கலைந்து ஜனார்த3னன் விழித்துக் கொண்டார். கடல் நடுவில் பாம்பு படுக்கையில் படுத்த நிலையிலேயே அந்த இருவரையும் கண்டார். துராத்மாக்களான மது கைடபர்கள். நிரம்ப பலமும் வீர்யமும் உடையவர்கள். கோபத்தால் சிவந்த கண்களுடன், கொல்லத் தயாராக, ப்ரும்மாவை துரத்தியபடி இருந்தவர்களைக் கண்டார். உடனே நன்றாக எழுந்து, ஹரியான பகவான், தானே அவர்களை எதிர்த்தார்.
ஐயாயிரம் ஆண்டுகள் இருவரும் கை கலந்தனர். மகா மாயாவினால் மோகத்தில் தள்ளப் பட்டவர்கள் அதிசயமான பலத்துடன் மதம் கொண்டவர்களாக ஆனார்கள். கேசவா, என்ன வரம் வேண்டும் கேள் என்று அகங்காரமாக உரைத்தனர்.
ஸ்ரீ பகவான் சொன்னார் (96)
நீங்கள் இருவரும் என் கையால் மாளப் போகிறீர்கள். ஆனாலும் திருப்தியாக சாகுங்கள். எனக்கே வரம் தரத் துணிந்தவர்கள். எனக்கென்ன வரம் வேண்டும். – இது தான் – என் கையால் உங்களை வதைக்க வேண்டும் என்றார்.
ரிஷி சொன்னார் (99)
ஆகா, ஏமாந்தோமே, என்று இருவரும் திகைத்தனர். நாலாபுறமும் நீர் சூழ்ந்து கிடந்த அந்த சமுத்திர மத்தியில், தைரியம் கை கொடுத்தது. ஆகட்டும். தண்ணீர் சூழ இல்லாத இடத்தில் எங்களை கொல்வாயாக என்றனர்.
ரிஷி சொன்னார் (102)
அப்படியே ஆகட்டும் என்ற பகவான், சங்கம், சக்ரம், கதை என்ற ஆயுதங்களை ஏந்தியவர், தன் துடையிலேயே இருவரையும் சக்ரத்தால் துண்டித்தார். இப்படி ப்ரம்மா துதித்து தன்னை வெளிப் படுத்திக் கொண்டவள் தான் இந்த மகா மாயா. இவள் சக்தி பற்றி இன்னமும் சொல்கிறேன், கேளுங்கள்.
(ஊர்வி – பூமி. அவர்கள் கேட்டது, நீர் சூழாத பூமியில். ஊரு-துடை, ஊர்வி- துடையில் என்று பொருள் பெறும். வார்த்தையில் விளையாடி, மது கைடபர்களை அழித்ததாக ஆகும்.)