அத்யாயம் 6.
த்யானம் – சூழ்ந்திருக்கும் நாக ராஜ கூட்டங்களiன் படத்தில் விளங்கும் உயர்ந்த மணிகளின் ஒளி, காந்தி பட்டு ஜொலிக்கும், தேகத்தையுடையவள், சூரிய ஒளியே தானோ என்று பிரமிக்கும் படி இருப்பவள், மூன்று கண்களையுடையவள், மாலை, கும்பம், கபாலம், நீரஜம்-தாமரை அல்லது அல்லி மலர்கள், இவைகளை கைகளில், பிறை சந்திரனை தலையில் சூடாமணியாக தரித்தவள், ஸர்வக்ஞர் எனப்படும் பைரவரின், சிவ பெருமானின் உடலின் ஒரு பாகமாக சொல்லப்படுபவள், அந்த பத்3மாவதியை சிந்தயே – நினைக்கிறேன்.
ஓம். ரிஷி சொன்னார் (1)
தேவி இவ்வாறு சொல்லக் கேட்ட அசுரனுக்கு கோபம் தலைக்கேறியது. தைத்ய ராஜனிடம் சென்று அப்படியே விஸ்தாரமாக சொன்னான். தூதன் சொன்னதைக் கேட்டு மகா அசுரனும் மிக்க கோபத்துடன், தூ4ம்ராக்ஷன் என்ற வீரனை அழைத்து, ஹே, தூ4ம்ரலோசன, சீக்கிரம் பரிவாரத்தோடு போ. துஷ்டையான அவளை கேசத்தை பிடித்து, பலாத்காரமாக இழுத்துக் கொண்டு வா. அவளை பாதுகாக்க யாராவது வந்து போரிட்டாலும் அவர்களையும், யக்ஷனோ, கந்தர்வனோ யாராயிருந்தாலும், கொன்று விடு.
ரிஷி சொன்னார் (6)
இப்படி அசுரனால் கட்டளையிடப் பட்ட தூம்ரன், ஆறாயிரம் அசுரர்கள் கொண்ட படை சூழ, வேகமாக வந்தான். தேவியைக் கண்டான். பனி மூடிய மலையில் வாசம் செய்த தேவியை பார்த்து, சீக்கிரம் வா, சும்ப, நிசும்பர்கள் அழைக்கிறார்கள் என்று உரக்க கத்தினான். என் தலைவர்கள் இவர்கள். நீயே அன்புடன் வந்து விட்டால் சரி, இல்லாவிடில், கேசத்தை பிடித்து, நிலை குலைய இழுத்துச் செல்வேன், என்றான்.
தேவி சொன்னாள். (10)
அசுர ராஜன் அனுப்பி வந்தாயா, பலசாலி தான். படை பலத்தோடும் வந்திருக்கிறாயா, சரி, என்னை பலாத்காரமாக இழுத்துச் செல்வாயோ, சரி, செய், நான் என்ன சொல்ல. . . .
ரிஷி சொன்னார் (12)
தேவி இப்படிச் சொன்னதும், அந்த அசுரன் வேகமாக ஓடி வந்தான். அருகில் வருமுன் அந்த தூ4ம்ர லோசனனை தன் ஹுJங்காரத்தினாலேயே பஸ்மமாக ஆக்கி விட்டாள், அம்பிகா தேவி. இதைப் பார்த்து வெகுண்டெழுந்த அசுர வீரர்களை, தேவி தன் கூர்மையான அம்புகளாலும், சக்தி, பரஸ்வதம் என்ற ஆயுதங்களாலும் சரமாரியாக பொழிந்து தாக்கினாள். பார்த்துக் கொண்டிருந்த தேவியின் வாகனமான சிங்கம், தன் பிடரியை சிலிர்த்துக் கொண்டு, பயங்கரமாக கர்ஜித்தபடி, அசுர சேனையின் மேல் பாய்ந்தது. ஒரு சில அசுரர்களை, தன் கையால் அடித்து, சிலரை, வாயால் கடித்து, மற்றும் பலரை உதடுகளால் ஆக்ரமித்து, கொன்றது. அந்த கேஸரி (சிங்கம்), நகங்களால் நைய புடைத்தது. கைத்தலத்தால், அசுர கூட்டத்தினரில் பலரின் தலை அவர்கள் உடலை விட்டு கீழே விழச் செய்தது. மற்றும் சிலரை, புஜங்களiல், தலையில் அடி பட்டவர்களாக ஆக்கி, ரத்தத்தையும் குடித்தது. க்ஷண நேரத்தில் அசுர சைன்யம் இருந்த இடம் தெரியாமல் போயிற்று.
அத்யந்த கோபத்துடன் வாகனமான கேஸரி, (சிங்கம) செய்த வேலை இது.
மகா அசுரன் காதில் இவை விழுந்தன. தூ4ம்ர லோசனன் வீழ்ந்தான். படை பலமும் பெரும்பாலும் அழிந்தார்கள், என்று கேட்ட மகா அசுரன், உதடு துடிக்க சண்டண். முண்டன் என்ற தலைவர்களை அழைத்தான். ஹே சண்ட, ஹே முண்ட – ஏராளமான வீரர்களுடன், பெரும் படையுடன் போய் முற்றுகை இடுங்கள். எப்படியும் அவளை அழைத்து வாருங்கள். வெற்றி பெறுவோமா என்ற ஐயமே வேண்டாம். ஆயுதங்களோ, அசுர வீரர்களோ, வேண்டிய மட்டும் எடுத்துச் செல்லுங்கள். துஷ்டை, அவளை தோற்கடித்து, அவள் வாகனமான சிங்கத்தையும் கொன்று விட்டுத் திரும்பி வாருங்கள். சீக்கிரம். அம்பிகையை கட்டிப் பிடித்து தூக்கி வாருங்கள் என்றான்.