பொருளடக்கத்திற்கு தாவுக

||  ஸ்ரீமத் பாகவதம்  ஆறாவது ஸ்கந்தம் || – அஜாமிளோபாக்யானம்  

மே 1, 2024

ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-1   

அரசன் வினவினான்:  நிவ்ருத்தி மார்கம் என்ற ஆத்யாத்மிகம் – பரலோகம் பற்றிய விஷயங்களை விவரமாக வரிசை கிரமமாக ப்ரும்மா சொன்னபடியே விவரித்து சொன்னீர்கள். இகலோக வாழ்க்கையின் பொருள், எப்படி வாழ வேண்டும் என்பதிலிருந்து, முக்குணங்கள்,  இவற்றைச் சொல்லுங்கள். உயிரினங்கள் பிறப்பதும் இறப்பதும், மறுபடி பிறப்பதும் தானே கண்ணெதிரே காண்கிறோம்.  அதர்மம், நரகம் மன்வந்தரம் இவற்றைக் கேட்டு அறிந்து கொண்டோம். முதல் ஸ்வயம்புவ மனுவைப் பற்றி, பிரியவ்ரத, உத்தான பாத சரித்திரங்கள், தீவுகள், வர்ஷங்கள், சமுத்திரம் மலை நதி உத்யானங்கள், தாவரங்கள் பற்றியும் தரா என்று பூமியின் மண்டலம், அது எப்படி நிலை  நிற்கிறது, மேலும் ஜோதிட சாஸ்திரம் பற்றியும், இவைகளை பகவானே ஸ்ருஷ்டித்தார் என்பதை சொல்லிக் கேட்டோம். அடுத்து, நரக வேதனை இல்லாமல் மனிதன் வாழ்வது பற்றிச் சொல்லுங்கள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இகவாழ்வில் தான் தவறு செய்து விட்டோம் அல்லது அதர்மமாக அறிந்தோ அறியாமலோ செய்து விட்டோம் என்று தோன்றினால் உடல் நலத்துடன் இருக்கும் பொழுதே ப்ராயச்சித்தம் செய்யலாம். உடனடியாக செய்வது நலம். வியாதி முற்ற முற்ற மருந்தும் அதிகமாக தேவைப் படுவது போல நாட்களைக் கடத்தக் கடத்த பிராயச் சித்தம் செய்வதும் அதிகம் தேவைப் படும்.  இந்த பிறவியில் மனோ, வாக்கு, காயம்- மனம், சொல், உடல் இவற்றால் செய்யும் பாபங்கள்  விலக, மனு முதலிய தர்ம சாஸ்திரங்களில் விதித்துள்ள பரிகாரங்களைச் செய்யலாம்.  வயதாக ஆக உடல் நலிவினால்,  நற்காரியங்களை விட அதிகமாக தவறுதல்களே அதிகமாக போக வாய்ப்புள்ளது.

அரசன் வினவினான். தவறு என்று தெரிந்தும், சூழ்நிலையின் நிர்பந்தங்கள்,  தன் சக்திக்கு  மீறிய சில செயல்கள்,.செய்ய நேர்ந்து விட்டால், அதற்கு பரிகாரம் என்ன செய்ய வேண்டும்?  நடந்து விட்டதை திருப்ப முடியுமா?  தனக்கு சம்மதமில்லை, இது தவறு என்று தெரிந்த பின்னும் அதர்மத்தைச் செய்வது யானை குளித்து விட்டு வந்து தன் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதை போல அல்லவா?

ஸ்ரீ சுகர் சொன்னார்: சாப்பிடாதவனுக்கு அன்னமே வைத்யம். மருந்தாக இருப்பது நித்யம் உண்ணும் உணவே என்பது தன் செயல்களை சாஸ்திரப் படி செய்பவன் தவறு செய்தால் அவனுக்கு பரிகாரம் எளிது. அறிவுடையவன் தவம், தன்னடக்கம், ஒழுக்கம், சத்யம், நியமங்களை அனுசரித்தல் இவற்றால் தன்  உடல், சொல், புத்தி இவற்றால்  தவறுகள் வராமல் பார்த்துக் கொள்ள முடியும். அப்படியும் தவறு என்று தோன்றினால் தைரியமாக அதற்கான பரிகாரமும் செய்து கொள்ளவும் முடியும். மூங்கில் காட்டை அக்னி அழிப்பது போல தன் பாபங்களை போக்கிக் கொள்வான்.

ஒரு சிலர் வாசுதேவனை பக்தியுடன் ஆராதித்து தன் பாபங்களை போக்கிக் கொள்வர். வாசுதேவனிடத்தில் பக்தி சூரியன் பனித்துளியை விரட்டுவது போல பாபத்தை விலக்கும் என்பது நம்பிக்கை. இந்த சிறிய காரியத்திற்கு இவ்வளவு பெரிய சகாயம் வேண்டுமா என்று கேட்கலாம்.  முடிந்தவரை தவம் அனுசரிக்கலாம்.  அல்லது ஸ்ரீ க்ருஷ்ணனிடத்தில்  மனப் பூர்வமாக பக்தி செய்யலாம்.  நாராயண பராயணராக  ஆசார சீலராகவும் உள்ள சாதுக்கள் பிராயச்சித்தம் என்பதை ஏற்பதில்லை.  பரிகாரம் பலிப்பதும் பகவானின் அருளால் என்பது இவர்கள் கருத்து. அரசனே,  ஒரு கதை சொல்கிறேன். விஷ்ணு படர்களும், யம படர்களும் விவாதிக்கிறார்கள். கேள்.

கான்யகுப்ஜம் என்ற இடத்தில் ஒரு அந்தணன்.  அஜாமிளன். அவன்  சந்தர்ப வசத்தால் நன்னடத்தை இல்லாத ஒரு பெண்ணுடன் வாழ்ந்தான்..  விலை மாது என்பர். அவளுடன் இருந்ததாலேயே, அதுவரை கௌரவமாக இருந்த அஜாமிளன் தன் பெயரையும், ஒழுக்கத்தையும் இழந்தவனாக அறியப் பட்டான்.   அவளுடன் வாழ்ந்ததால் குலமே அவனை எதிர்த்தது.  அதை பொருட்படுத்தாமல் அஜாமிளன் அவளிடம் புதல்வர்களைப் பெற்றான்.  காலம் சென்றது. அஜாமிளன்  தன் பத்து புதல்வர்களில்  மிகவும் பிரியமான கடைசி புதல்வனான  நாராயணன் என்பவனை  மிகவும் கொண்டாடி வளர்த்தான். அவனுடைய மழலையை விரும்பி கேட்டான்.  உண்ணும் சமயம் அருகில் இருந்து பார்த்து ஊட்டி,  விரும்பியதை வாங்கி கொடுத்து சதா நாரயணா, நாராயணா என்றே நினைப்பதும் வாய் உச்சரிப்பதும் ஆனது.  அறிவில்லாதவன். மரணத் தறுவாயிலும், அதை உணராமல் நாராயணா என்று அழைத்தபடி இருந்தான்.  பாசத்துடன் வந்த பார்வைக்கே பயங்கரமாக இருந்த மூன்று புருஷர்களைப் பார்த்து பலமாக நாராயணா என்று அழைத்தான். பாலகன் சற்று தொலைவில் தன் விளையாட்டில் ஈடு பட்டிருந்தான்.  ஹரி கீர்த்தனம்,  அதுவும் மரணத் தறுவாயில் கேட்டதும் யம படர்கள்  குழம்பினர்.  என்ன செய்வது?   தன் யஜமானிடம் சென்றார்கள்.  என்ன செய்வது? ஹரி நாமத்தை ஆத்மார்தமாக சொல்வதை கேட்ட விஷ்ணு தூதர்கள், அங்கு வந்தனர். யம கிங்கரர்களைத் தடுத்தனர்.  வைவஸ்வத புரஸ் சரா:-யமனுடைய சேவகர்கள், கேட்டனர், எங்களை ஏன் தடுக்கிறீர்கள்? தர்ம ராஜனின் சாஸனம் இது என்பது  தெரியாதா உங்களுக்கு?  யாருடைய சேவகர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்ன காரணத்தால் தடுக்கிறீர்கள்?  தேவர்களா? உப தேவர்களா?  சிறந்த சித்தர்களா? நீங்கள் யாவர்?  அனைவரும் பத்மத்தின் இலை போன்ற விரிந்த கண்களுடன், பீதாம்பரம் தரித்து, கிரீடமும் குண்டலமும் பள பளக்க,  அழகிய பூமாலை அணிந்தவர்களாக, இளம் வயதினர், அழகிய சதுர் புஜங்கள், அதில் வில், அம்பு, வாள், கதை, சங்க சம்ர, அம்புஜம் என்று ஆயுதங்களும், ஆபரணங்களும்,  திசைகளை வெளிச்சமாக காட்டும் ஆபரணங்கள் பிரகாசிக்க இங்கு வந்து தர்மபாலரின் கிங்கரர்கள் நாங்கள், எங்களை தடுக்க என்ன காரணம்?  

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொன்ன யமதூதர்களைப் பார்த்து வாசுதேவனின் சொல்படி ஏவல் செய்பவர்கள், கம்பீரமான குரலில், மென்னகையோடு பதில் அளித்தனர்.

விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்:  நீங்கள் தர்மராஜனுடைய ஆணையை மேற் கொண்டு வந்துள்ளீர்கள் என்பதை அறிவோம். சொல்லுங்கள், தர்மம் எது?  அதன் தத்வம் என்ன? தர்மத்தின் லக்ஷணம் என்ன ? எப்படி தண்டத்தை சுழற்றிக் கொண்டு வருவீர்கள். இந்த தண்டத்தை பயன் படுத்த ஏற்ற இடம் எதுவென்று எப்படி அறிவீர்கள்?  தண்டிக்கப் படுபவர்கள் என்ன செய்ததால் தண்டிக்கப் பெறுவார்கள்?  அல்லது அரச ஆணை என்ற மாத்திரத்தில் அணைவரும் தண்டிக்கப் படுவார்களா?

யமதூதர்கள் சொன்னார்கள்: வேதத்தில் சொல்லப் பட்டது  தான் தர்மம்.  அதற்கு எதிரானது அதர்மம்.  வேதம்  சாக்ஷாத் நாரயணனே. ஸ்வயம்பூ என்று கேட்டிருக்கிறோம்.  அவர் தன்னுள் ரஜஸ், சத்வம், தமஸ்  என்ற குணங்களையும்,   தனக்கென்று குணம், பெயர், ஒரு செயல் என்று பிரித்து தானே அதற்கு ஏற்ப நடப்பவர்.

ஸூரியன், அக்னி, வானம், காற்று, பூமி, சந்திரன், சந்த்யா, நாட்கள், திசைகள் , பூமி, நீர்  இவை தவிர,  தானே தர்மம் என்றும் இருப்பவர்.  இந்த தேஹி – தேகமுடையவன், உயிரினம் அதற்கு சாக்ஷி.  

இவர்களுக்கு அதர்மம் எது என்று தெரியும். எது தண்டிக்க தகுந்த இடம் என்று தெரியும். தங்கள் வினைகளுக்கு ஏற்ப அனைவருமே தண்டத்துக்கு தகுதியானவர்களே.  சில சமயம் நல்லவர்களும், அதற்கு விபரீதமாக தீயவர்களும் சேர்ந்து தான் உலகம். காரியம் செய்யாமல் எந்த பிறவியும் இருப்பதில்லை. இவர்கள் குணத்துக்கு ஏற்ற வாறுதான் உடன் வசிக்கும் உற்றார் உறவினர் அமைவர்.  யாரால், எந்த அளவு, எப்படி -அதர்மமோ, தர்மமோ, என்பது பொருட்டல்ல-. அதன் பலனை அனுபவித்தே ஆக வேண்டும். இந்த உலகிலோ. பரலோகத்திலோ. ஸூரியனே பிறவிகளின் வினைகளுக்கு சாக்ஷி. அதை பிரமாணமாகக் கொண்டு தான் தண்டனையும்.  தேவர்களில் சிறந்தவர்கள், அறிஞர்கள்,  நிகழ் காலத்தில் ஒருவனது நடவடிக்கைகளை வைத்து அவன் தார்மிகனா, அதர்மியா என்பதையும், அவனது முக்காலத்தையும் கணிக்கிறார்கள். நிகழ் காலத்தில் பூர்வ ஜன்ம தொடர்பு வெளிப்படுவதாக குணங்களை வைத்து நிர்ணயிக்கிறார்கள். அதே போல மறு பிறவியையும் எதிர்பார்த்து ஊகித்து சொல்கிறார்கள். இதற்கு உதாரணமாக வசந்த காலத்தைச் சொல்கிறார். வசந்த காலத்தில் பூக்கள் பூக்கும் என்பதும், பருவ காலங்களையொட்டி பழங்கள் கிடைப்பதையும் நினைவில் வைத்து இருப்பது போல பிறவிகளின் செயல்பாடுகளும் ஒரு ஒழுங்கில் இருப்பதாகவும், கால நிலை மாறுதல்களை வைத்து அடுத்த சில மாதங்களில் பூக்கும் அல்லது துளிர்க்கும் என்பதை அந்த தொழிலில் உள்ளவர்கள் அறிவது போல என்கிறார்.  இவர்கள் மனதால் பூர்வ ஜன்மத்தை அறிகிறார்கள். மற்றதை அதே அளவு கோலால் அனுமானிக்கிறார்கள்.  கனவில் கண்டதை அறிவில்லாதவன் உண்மையாக நினைப்பான். அதே உறக்கம் கலைந்து எழுந்தவுடன் மறப்பான். பிறவிகளும் அவ்வாறே. நிகழ் காலம் இந்த பிறவி முடிந்தவுடன் மறந்து போகிறது.

ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து ஞானேந்திரியங்கள், சப்தம் முதலிய ஐந்து, இவற்றுடன் மனமும் சேர்ந்து பதினாறு இதனுடன் அந்த பிறவியில் அடைந்த சரீரம், ஆக மொத்தம் பதினேழு.  இவைகளால் சுகம், துக்கம், இரண்டும் சமமாக இருக்கும் மத்யமம் சமநிலை என்ற மூன்று,  மகிழ்ச்சி, வருத்தம், பயம் போன்ற உணர்வுகள், இவை தவிர  உருவமாக இருந்து உடல் அனுபவிப்பது என்று விரியும்.  எனவே  உணர்வுகள் இல்லாத மற்ற பிறவிகளுக்கு தேகமே அனைத்தும்.  இந்த பதினாறும்  சக்தி த்ரயம் என்ற முக்குணங்களால் மாறுதலுக்கு உள்ளாகும்.  இந்த குணங்களின் பாதிப்பால், தேஹி-தேகம் உடைய ஜீவன் தான் விரும்பாவிட்டாலும் சில செயல்களை தர்மமோ, அதர்மமோ செய்கிறான்.  பட்டுப் பூச்சி போல தன்னைத் தானே வலைக்குள் சிறைப் படுத்திக் கொள்கிறான்.  வினைப்பயன் வலையாக அவனை சூழ்ந்து கொள்கிறது.  யாருமே, எந்த ஒரு சமயத்திலும் செயலின்றி இருப்பதில்லை. “ ந ஹி கஸ்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்யகர்மக்ருத் | கார்யதே ஹ்வஸ: கர்ம குணை: ஸ்வபாவிகைர் பலாத்||”

न हि कश्चित्क्षणमपि जातु तिष्ठत्यकर्मकृत् । कार्यते ह्यवशः कर्म गुणैः स्वाभाविकैर्बलात् ॥ 

வினைப் பயனால் சரீரம் அமைகிறது. என்ன சரீரம் என்பது முன் கூட்டியே தெரியாமல் போனாலும், பிறந்தபின் அந்த சரீரத்தின் குண தோஷங்கள் தான் அந்த ஜீவனுக்கு கிடைக்கிறது.   ஸ்தூலமோ, ஸூக்ஷ்மமோ, எந்த விதமான பிறவி என்பதோ, தாய் தந்தைகளிடம் பெறும் குண தோஷங்கள், அறிவோ, மற்றதோ, பிறவிக் குணமாக ஹிம்சையோ, சௌம்யமான குணமோ வந்து சேருகிறது.  இதில் ஜீவனின் விருப்பு வெறுப்புக்கு இடம் இல்லை.

பூமியில் பிறந்த பின் ஜீவனின் சுற்றுப் புறம், இயற்கையின் தாக்கம் இவற்றால் அதன் குணமும் உடல் வளர்ச்சியும் கூடவே புத்தியும் வளருவதால் நல்லது கெட்டதை தானே அறிந்து கொள்கிறது.  ஈசனின் சம்பந்தம் குறைகிறது.  

அஜாமிளன் பற்றி சொல்கிறார். அஜாமிளன் என்ற இந்த அந்தணன் சீல சம்பன்னனாக – நற்குணம், நல்ல நடத்தை உள்ளவனாக, வேத சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்து,  சதாசாரமும், நல்ல குணங்களுமாக பொறுமை முதலிய குணங்களுக்கு இருப்பிடமாக வாழ்ந்தான். குரு, அக்னி, அதிதி, மூத்தோர், முதியவர் அனைவருக்கும் சேவை செய்தவன். தான் என்ற எண்ணமின்றி அனைவருக்கும் உரிய நண்பனாக மிதமாக மென்மையாக பேசுபவனாக, அசூயை இல்லாமல் இருந்தான்.  ஒருசமயம், தந்தையின் தூண்டுதலால் வனம் சென்றவன்,  பழங்கள், புஷ்பம், சமித் என்று சேகரித்துக் கொண்டு வரும் சமயம், காமினியான இந்த பெண், மதுவை குடித்து மயங்கிய நிலையில் இருப்பவளைக் கண்டான்.  தன்னிலை மறந்து, ஆடை கலைந்து,  வெட்கத்தை தொலைத்தவளாக, மிதமிஞ்சிய மது பானத்தால், பித்து பிடித்தவள் போல பிதற்றிக் கொண்டிருந்தாள்.  ஏனோ, அவளை காப்பாற்றப் போனவன் அவள் வசம் வீழ்ந்தான்.   தன்னைத் தானே விடுவித்துக் கொள்ள முயன்றான். ஆயினும் அவளிடம் ஈடுபாடு கொண்ட மனம் மதனனால் ஆட்கொள்ளப் பட்டு விடுவித்துக் கொள்ள முடியாமல் அவளையே விரும்பினான்.  அவளே சகலமும் என்று ஆனான். தன் வீடு, எதற்கு வந்தோம் என்பது, தன் புத்தி, தர்மம் அனைத்தும் விலகின.  அவளை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதே தன் தர்மம் என்று நினைத்தான்.  தந்தை வழி வந்த சொத்து முழுவதும் அவளுக்கே செலவழித்தான்.  அவளுக்காக தன் நிலையிலிருந்து இறங்கி சாதாரண அறிவில்லாத மனிதனாக அவளுடன் நாட்களைச் செலவழித்தான்.  தன் பிரிய மனைவி, நல்ல குலத்தில் பிறந்தவள், தன் குறிப்பறிந்து சேவை செய்தவளை கை விட்டான்.  இதுவரை சேர்த்த செல்வம் கரைந்தது.  தவறு என்று தெரிந்தும்  மோகத்தால் பல காலம் இருந்து முதியவனாக, இறுதி காலம் அடைந்தவனை, நாங்கள் யம படர்கள், கொண்டு செல்கிறோம். இவன் உரிய தண்டனையைப் பெற்றால் தான் இவனுடைய  வினைப் பலன் விடுபடும். சுத்தமாவான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்த்தின்,    முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-68

 

அத்யாயம்-2

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இவ்வாறு யம படர்கள், தங்கள் பக்கத்து நியாயத்தை சொன்னதும், நயமாக பேசத் தெரிந்த விஷ்ணு படர்கள் தங்கள் தரப்பு வாதங்களைச் சொன்னார்கள்.

விஷ்ணு தூதர்கள் சொன்னார்கள்: அஹோ! கஷ்டம். தர்மம் என்ற பெயரில் அதர்மம் உயர்வாக சொல்லப் படுகிறது. தண்டனைக்கு உரியவன் அல்லாத ஒருவனை  அநியாயமாக தண்டிப்பதை நியாயப் படுத்துகிறார்கள்.   பிரஜைகளுக்கு பிதாவாக இருந்து பாலனம்  செய்ய வேண்டியவனே தண்டித்தால் பிரஜைகள் யாரிடம் சரணமடைவார்கள்.  தலைமை  பதவியில் இருப்பவர்கள் செய்வதை மற்றவர்களும் பின்பற்றுவார்கள். அதையே எடுத்துக் காட்டாக சொல்வர்.  எவருடைய மடியில் தலை வைத்து கவலையின்றி இருக்கிறார்களோ, அந்த பிரஜைகள்,  தர்மம் அதர்மம் என்று எதையும் அறியார்.  அந்த தலைவன், அரசனோ, குடும்பத் தலைவனோ, காப்பாற்றுவான் என்று இருப்பர்.  பசுக்கள் இருப்பது போல. அப்படி தன்னையே ஒப்படைத்து விட்டது  அந்த பசு இடையனை நம்புவது போல, பகவானை நம்பும் ஒருவனை தண்டிப்பதில் தீவிரமாக  முனைந்து இருப்பது நியாயமா?  இந்த மனிதனும் அப்படி பகவானை நம்பி இருப்பவன். கோடி ஜன்மத்து பாபத்தையும் கரைத்து விடும் அளவு நாம ஜபம் செய்தவன் என்பது தன் நினைவு இன்றி மரணத் தறுவாயிலும் பகவானின் பெயரைச் சொல்கிறான். இதிலிருந்தே, இவன் குற்றமற்றவன் என்று ஊகிக்க முடியவில்லையா? நாராயணாய என்று அஷ்ட அக்ஷர மந்திரத்தை உச்சரித்திருக்கிறான்.  பாபம் செய்பவர்கள் என்ற பட்டியலில், திருடன், மதுவை குடித்து மயங்குபவன், நண்பனை துரோகம் செய்தவன், ப்ராம்மணனைக் கொன்றவன், குருவிற்கு துரோகம் செய்பவன் (குரு மனைவியை அபகரிப்பவன்)  பெண்களை, அரசனை, தந்தையை, பசுவைக் கொல்பவன்,  இவர்கள் தான் வருகிறார்கள்.   இந்த மனிதன், உண்ணும் போதும் ஹே நாராயணா என்று சொல்லிய பின் உண்டவன்.   ஹரி நாம சங்கீர்த்தனம் பாபத்தை போக்கும், என்பது வெறும் வெற்று வாதமல்ல.  அனுபவம் மிக்க ஞானிகளின் வாக்கு அது. எப்படி விரதங்கள் உடலை தூய்மையாக்குமோ, அதே போல மனதை தூய்மையாக்குவது ஹரி கீர்த்தனம் என்பது பலரும் அனுபவித்து சொல்லியிருக்கிறார்கள்.  உத்தமஸ்லோகன் (உயர்ந்த அறிவாளி)  என்பதற்கான ஆதாரம்.

இப்படி சொல்வதால், காகம் உட்கார பனம் பழம் விழுந்தது என்ற நியாயம் போல எதேச்சையாக அமைவது அல்ல. குற்றம் செய்தவன் ஒருமுறை நாராயணா என்று சொல்லி விட்டு திரும்ப அதே குற்றத்தைச் செய்ய ஒப்புதல் கொடுப்பது போல ஆகாதா என்று கேட்கலாம்.  இந்த மனிதன் விஷயத்தில் அப்படியல்ல.   வாழ் நாள் முழுவதும்  பக்தி பாவம் தான் இவன் மனதில் இருந்திருக்கிறது.   உயிர் போகும்  தறுவாயில் ஹரி நாமம் வாயில் வருவதற்கு அது தான்  பின் பலம்.   எனவே, இவனை அழைத்துச் செல்லாதீர்கள். குற்றம் செய்தவன் என்று நீங்கள் கருதினாலும் ஹரி நாமத்தைச் சொன்னதால் அந்த பாபத்திலிருந்து விடுபட்டு விட்டான்.  சந்தர்ப வசமோ, பரிகாசமாக சொன்னதோ, காரியார்த்தமாக, பாடலை பூர்த்தி செய்ய ஹரி நாமத்தை போட்டாலும், ஏளனம் செய்வதே ஆனாலும்,  வைகுண்ட நாமத்தைச் சொல்வது பாபத்தை போக்கும் என்று சொல்வர்.  கீழே கால் தடுக்கி  விழுந்தவன், அடிபட்டு உடல் பாகம் இழந்தவன், விஷ ஜந்துக்களால் கடிக்கப் பட்டவன், நெருப்பில் காயப் பட்டவன், அடி பட்டவன், ஹரி என்று சொன்னால் அந்த மனிதன் அதிக கஷ்டப் பட மாட்டான்.   அபராதம் எப்படிப் பட்டது என்பதை பொறுத்து, பெரிய  தவறுக்கு, பெரிய பரிகாரம், சிறியதானால் அதற்கேற்ப சிறிய பரிகாரம் போதும்  என்பது மஹரிஷிகளின் வாக்கு. இவர்களுக்கு அந்த பாபங்கள் போக தவம், தானம், ஜபம் என்பன பரிகாரமாக சொல்லப் பட்டன. பகவானை நம்பியவனின் இதயம் அதர்மத்தில் செல்லாது.  தெரிந்தோ, தெரியாமலோ, உத்தம ஸ்லோகன் என்ற பகவானின் பெயரை சொன்னால், மனிதர்களுடைய பாபத்தை போக்கும். எரி பொருள்-விறகு போன்றவை அருகில் இருந்தால் அக்னி தகித்து விடுவது போல.  வியாதியஸ்தன், நெடு நாட்களாக வருந்தியவன், அறியாமல் ஔஷதம்- அதற்கான மருந்தை தெரியாமல் உட்கொண்டால் கூட மருந்து அவனை குணப்படுத்துவது போல,   மந்திரமும் அதே போல சக்தி வாய்ந்தது என்று சொல்கிறார்கள். 

ஸ்ரீ சுகர் சொல்கிறார்:  இவ்வாறு பாகவதன்- பகவானை நம்பியவன் – என்பதன் தர்மம் என்பதை சொல்லி, அரசனே! அந்த யம படர்களிடமிருந்து அந்தணனை மீட்டனர்.  இவ்வாறு திருப்பி அனுப்பட்ட யம தூதர்கள் தங்கள் தலைவனிடம் போய் முறையிட்டார்கள். நடந்ததை நடந்தபடி சொன்னார்கள். 

யமபாசத்திலிருந்து விடுபட்ட அந்தணன், பயம் தெளிந்து, நினைவு வரப் பெற்றான்.  விஷ்ணு கிங்கரர்களையும், பகவான் விஷ்ணுவையும் வணங்கினான்.  திடுமென விஷ்ணு பார்ஷதர்கள் மறைந்தனர்.  அஜாமிளன் கேட்டுக் கொண்டிருந்த சம்பாஷனைகளை நினைவு கூர்ந்தான். யம படர்களும், நாராயண சேவகர்களும் பேசியதை,  தார்மிகமான ,சுத்தமான, மூன்று வேதங்களையும், தன் முந்தைய சாந்தமான வாழ்க்கையையும் நினைத்தான். பக்திமானாக, ஹரி மாஹாத்ம்யம் கேட்டதால் வந்த புது அறிவுடன், தன் வழி தடுமாறலை நினைத்து வருந்தினான். என்ன காரியம் செய்தேன்,  அந்தணனாக பிறந்து அதே நியமங்களுடன் வாழ்ந்தவன் என் கடமைகளிலிருந்து நழுவி விழுந்தேனே. எனக்கு நல்ல இள வயது மனைவி அன்புடையவளாக இருந்தாள்.  அவளைத் துறந்து சென்றது என்ன நியாயம். வயது முதிர்ந்த தந்தை, தாய் இருவரும். வேறு பந்துக்களும் இல்லை. நன்றி மறந்தவன் நான். அவர்களைத் தவிக்க விட்டேன்.   நீசன் நான்.  எனக்கு நரகம் தான் சரி. அதுவும் பயங்கரமான நரகம். தர்மத்தை மீறியவர்கள், காமமே பெரிதென்று நினைப்பவர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களை அனுபவிக்கப் போகிறேன்.  ஆ, இது கனவா? உண்மையாக நேரில் கண்டேனா? அத்புதம். பாசங்களை கையில் வைத்துக் கொண்டு வந்த யம படர்கள் எங்கு சென்றார்கள்?  அழகிய தோற்றம் கொண்ட சித்தர்கள், என்னை பாசக் கயிற்றிலிருந்து விடுவித்தவர்கள் எங்கு சென்றார்கள்?  என்னதான் நான்  தகுதியற்றவன் என்றாலும் அந்த உத்தம புருஷர்களைச் சந்தித்தது வீண் போகாது.  மங்களமே நடக்கும். என் மனம் மகிழும்படி ஏதோ நன்மைகளே பெறுவேன்.  இல்லாவிடில், முன் பின் அறியாத  அந்த காட்டு வாசியான பெண்ணிடம் வாழ்ந்தவனின் நாக்கில் வைகுண்ட பதி ஸ்ரீமன் நாராயணன் பெயர் வருமா?

மஹா மட்டமானவன் நான். பாபி. ப்ரும்ம குலத்தில் பிறந்தவன் என்று சொல்லிக் கொள்ளவே அருகதையற்றவன்.  வெட்கம் அறியாதவன். இப்படிபட்ட   எனக்கும் மங்களமான ஸ்ரீமன் நாரயணனின் பெயர் சரியான சமயத்தில் வழி காட்டவே நினைவு வந்ததோ.  இனி நான் திருந்தியவனாக குல வழக்கப் படி நடப்பேன். புலன்களை அடக்கி வாழவே முயல்வேன்.  இனியும் என் மனதில்   தாமஸமான எண்ணங்கள் வர விட மாட்டேன்.  அவை இருட்டில் மூழ்கடிக்கும்  என அறிந்து கொண்டு விட்டேன்.  இந்த பந்தத்திலிருந்து என்னை விலக்கிக் கொள்வேன். எதுவும் அறியாத அக்ஞானி  போல காமம் என்னை ஆட்டுவிக்க விட மாட்டேன். இனி என் வாழ்க்கை அனைத்து பிறவிகளையும் நேசிக்கும், நண்பனாக உதவும், சாந்தமானவனாக, கருணையுடன் ஆத்மாவை உணர்ந்தவனுடையதாக இருக்கும்.  மிருகத் தனமான இச்சையுடன் அதமனாக வாழ்ந்த வாழ்வைத் தொலைத்து மூழ்கி விட்டேன்.   நான், என் உடல், என் சுகம் என்ற நினைவுகள் என்னை விட்டு அகலட்டும். பொய்யான பொருள் ஆசை விலகட்டும். நல்ல புத்தி வரட்டும். என் மனதை பகவத் தியானத்தில், அவனுடைய கீர்த்தனத்தில் செலுத்தி பவித்ரமானவனாக ஆவேன்.  

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன்னையே நொந்து கொண்டு, எஞ்சிய நாட்களைக் கழிக்க,  சாதுக்களுடன்  கங்கைக் கரையை அடைந்தான்.  அனைத்து பந்தங்களையும் துறந்தவனாக வாழ்ந்தான்.  அங்கு யோகங்களைக் கற்று, சாதனைகளைச் செய்தான். தன்னையே அறிவது என்ற பெரும் நிலையை அடைந்தான். காலம் வந்ததும் இயற்கை எய்தினான்.  ப்ரும்மானுபவத்தை அடைந்தான்.  அங்கு முன்பு கண்ட விஷ்ணுவின் சேவகர்களை அடையாளம் கண்டு வணங்கினான்.  ஸ்ரீயின் பதியான ஸ்ரீமன் நாராயணனின் வைகுண்ட லோகத்தில் கிங்கர்களோடு சேர்ந்தான்.

இவ்வாறு தன் தர்மத்தை விட்டு, கடமையை மறந்தவனாக வாழ்ந்தவன் கூட, பகவானின் நாமத்தை சொன்னதால், தன்னுணர்வை அடைந்து மேலும் பாபத்தை செய்வதில் இருந்து மீண்டான்.  அதை விட கர்ம பந்தனத்தை விலக்க ஏற்ற சாதனம் வேறு எது உள்ளது?  திரும்பவும் உலக வாழ்க்கையின் ரஜோ, தமோ குணங்களுடன் குழம்பிய நீரில் நிற்பது போன்ற நிலை வராமல் அந்த நாம ஸ்மரணமே உதவியது.

இதிகாசம் இது. நடந்த கதை. ஸ்ரத்தையுடன் கேளுங்கள். மனதின் சஞ்சலம் நீங்கும்.  பக்தியுடன் பாடுங்கள். யம கிங்கரர்கள் நரகத்துக்கு அழைத்துச் செல்ல அருகில் கூட வர மாட்டார்கள்.  இறக்கும் தறுவாயில் ஹரி நாமத்தை, புத்ரனை நினைத்து சொன்னதே, அஜாமிளனுக்கு நல்வழி காட்டியது எனும் பொழுது,   சிரத்தையுடன் அன்புடன் சொல்பவர்கள் பற்றி சொல்வானேன்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-49.

 அத்யாயம்-3 

பரீக்ஷித் ராஜா வினவினான்.  இவ்வாறு திரும்பி வந்த யம தூதர்களை யம தர்மராஜன் எப்படி எதிர் கொண்டான். ஆணையை மீறியதற்காக தண்டிக்கவில்லையா?  அவர்கள் வர்ணித்த முராரியின் அணுக்கத் தொண்டர்கள் அவர்கள் வசத்தில் அந்தணனை எடுத்துக் கொண்டதை ஒத்துக் கொண்டானா?  யமதேவன் நியாயமாக அளித்த தண்டம் அதை மீறுவது என்பது கேட்டதேயில்லையே.  உலகில் அனைவருக்கும் இந்த சந்தேகம் வரும். ரிஷியே, உங்களையன்றி இதற்கு யார் பதில் சொல்ல முடியும் ?

ஸ்ரீ சுகர் சொன்னார்:  யம தூதர்கள், தங்கள் தலைவனான யம ராஜனிடம் நடந்ததைச் சொன்னார்கள். சம்யமனீ என்ற திக்கின் பதி யமன்.  ப்ரபோ! ஜீவ லோகத்தில்  ஆணயிடக் கூடியவர்கள்  பலர் இருக்கிறார்கள்? த்ரிவித்யா என்ற வேத மார்கத்தை பயிலுபவர்கள்  மனிதனின் வினைப் பயன்கள் தொடரும், அதை தவிர்க்க முடியாது என்று அறியாதவர்களா?  இப்படி பலர் ஆணையிட முனைந்தால், மரணமோ, மரணமற்ற நிரந்தரம் எனும் நிலையோ, யாருக்கு, எப்படி, எதனால் அளிக்கப் படுகிறது என்பதே கேள்விக்குரியதாகாதா? சாஸ்திரம் என்பது உண்மையில் சக்தியின்றி, பேச்சளவில் இருக்குமா?  தாங்கள் தான் மனிதர்களின், தேவர்களின், பூதங்களின் அதீஸ்வரர் என்ற பதவியில் திடமாக நின்று அனைத்து ஜீவ ராசிகளின் சுப, அசுப செயல்களை கணித்து தண்டனை வழங்குபவர்.  ஆணையிடுபவர். யமதண்டம் யாராலும் மீற முடியாது என்பது தான் இதுவரை நடந்து வந்திருக்கிறது. இந்த நான்கு விஷ்ணு  சேவகர்களால்  மீறப்பட்டது. அவர்கள் அத்புதமாக, சித்தர்களாக  இருந்தனர். நயமாக பேசி, எங்கள் கைகளிலிருந்து, உங்கள் ஆணையின் பேரில் யாதனா க்ருஹம் என்ற இடத்திற்கு அழைத்துச் செல்லப் பட இருந்த,  தவறு செய்த பிரஜையை பலவந்தமாக பாசக்கயிற்றிலிருந்து விடுவித்து விட்டார்கள்.  எங்கள் மேல் தவறு இல்லை என்று நீங்களும் நினைத்தால் விவரமாக சொல்லுங்கள். ‘நாராயணா” என்று சொன்னவுடன், பயப்படாதே என்று காப்பாற்ற ஓடி வந்து விட்டார்கள்.

ஸ்ரீசுகர் சொன்னார்:  ப்ரஜைகளை சம்யமனம் – பிறவித் தளையிலிருந்து விடுவிப்பவன் என்ற பெயரில், உலகில் பிறப்பு இறப்புகளை கட்டுக்குள் வைத்திருப்பவன் என்ற பதவியில் நியமிக்கப் பட்ட யமராஜன்  பதில் சொன்னார்:  எனக்கும் மேல் ஒருவன் உலகை நடத்திச் செல்பவன் இருக்கிறான். என் வேலை அசையும் உயிரினங்களில் மட்டுமே.  அதிலும் மனிதர்கள் தான் பிரதானம். அதிலும் பாபம் செய்தவர்களை தண்டிக்க மட்டுமே எனக்கு அதிகாரம் உள்ளது. சர்வேஸ்வரன் என்பவன் யார் தெரியுமா?  ஊடும் பாவுமாக நெய்து வைத்த வஸ்திரத்தால் சுற்றி வைத்தது போல தானே  அனைத்து உலகங்களுக்கும் ஒரே  வஸ்திரமாக முழுவதுமாக பரவி நிற்கிறான்.   அதன் ஒரு பகுதி பிறப்பும், இறப்பும்.  அவன் வசத்தில் இருப்பது தான் உலகம். கம்பத்தில் கட்டி வைத்த பசுக்கள் போல ஜனங்களை தன் வசத்தில் ஆட வைக்கிறான்.  வாயால் அவன் புகழை பாடுபவர்கள், அவனைச் சுற்றியே வளைய வருகிறார்கள்.  நான், இந்திரன், நிர்ருதி, ப்ரசேதஸ் என்பவர்கள்,  சந்திரன், அக்னி, ஈசன், பவன், ஸூரியன், விரிஞ்சி, ஆதித்யன்,  உலகில் வசுக்கள், மற்றும் சாத்யர்கள், மருத் கணங்கள், ருத்ர கணங்கள் சித்தர்கள்,  விஸ்வத்தை படைத்தவன், அமரேசன், ப்ருகு முதலான ரிஷிகள்- இவர்களை தமஸ், ரஜஸ் என்ற குணங்கள் நெருங்க கூட முடியாது அந்த அளவு சத்வமே உருவானவர்கள், இவர்கள் அனைவரும் சத்வ ப்ரதானமாக இருந்தும், பகவானின் மாயைக்கு அடங்கியவர்களே.  எப்பொழுது, எதை, எந்த விதமாக செய்யப் போகிறார் என்பதை அறிய மாட்டார்கள். மற்றவர்களைப் பற்றி சொல்வானேன்.  அந்த:கரணத்தில் சாக்ஷியாக இருப்பவன், பரமாத்மா.  எந்த ஜீவனும் இதுவரை கண்டதில்லை, கேட்டதும் இல்லை.  மனம், ப்ராணன், ஹ்ருதயம் அல்லது குரலில்  எதிலுமே காட்டிக் கொள்ளாமல் இருக்கிறான் அந்த ப்ரபு.  சுதந்திரமானவன்.  அந்த மயாவியின் தூதர்கள் அவரைப் போலவே வேஷ தாரணங்கள், உருவம் இவற்றுடன் இருப்பர்.  இவர்களைக் காண்பதே கூட துர்லபம்.  இவர்கள் தான் பக்தர்கள் படும் கஷ்டங்களைத் தீர்க்க ஓடோடி வருவார்கள். பகவானே தான் தர்மம் என்பதை வரையறுத்தார். நானும் அவர் ஆணைக்கு உட்பட்டவனே.  பாகவத தர்மம் என்று அவரே சொல்கிறார். அது என்ன  என்று எங்களில் யாருக்கும் தெரியாது. அதை அறிந்தவர்கள் பகவான் அருகில் இருப்பவர்கள் மற்றும் ப்ரும்மா, நாரதர், பகவான் சங்கரன், சனத்குமாரன், கபிலர், ஸ்வாயம்புவ மனு, ப்ரஹ்லாதன், ஜனகர், பீஷ்ம பிதாமஹர், பலி, சுகதேவர் இவர்களுடன் நான்.

பக்தியோகம் தான் உலகில் சிறந்த தர்மம் என்பர்.  ஹரியின் நாம உச்சாரணமே ம்ருத்யு பாசத்தை விட மேலானது என்று அஜாமிளன் சரித்திரம் சொல்கிறது.  போதும். அஜாமிளன் எந்த விதத்தில் உயர்வு இந்த தகுதியைப் பெற என்றால், எதுவுமில்லை. அவன் மரணத் தறுவாயில் ஹரி நாமத்தை நினைத்தான் என்பது ஒன்றே. அதனால் தூதர்களே! ஹரி சங்கீர்த்தனம் இருக்கும் இடத்தில் பார்த்து கவனமாக நடந்து கொள்ளுங்கள்.  அவர்கள் பக்தர்கள் என்றால் கவசமாக பகவானின்  3தை இருக்கும். என் தண்டம் அதற்கு முன் ஒன்றுமேயில்லை.

குணமில்லாதவர்கள், முகுந்த பாதாரவிந்தத்தை  தவிர்த்து தன் விருப்பம் போல செய்பவர், எவருடைய வாய் பகவானுடைய புகழை பாடவில்லையோ, எவருடைய மனம் அவர் சரணாரவிந்தத்தை நினைப்பதில்லையோ,  க்ருஷ்ணா என்று சொல்லி எந்த  தலைகள் வணங்குவதில்லையோ, அவர்களை அழைத்து வாருங்கள்.

அதனால் விஷ்ணு தூதர்கள் தடுத்தார்கள் என்பதை மன்னித்து விடுங்கள். புராண புருஷன் ஸ்ரீமன் நாராயணன், தானே தன் ஏவலர்களைக் கொண்டு இப்படி ஒரு செயலை செய்வித்திருக்கிறான். நாம் கை கூப்பி வணங்கி விட்டு நம் வழியே செல்வோம், அதுவே நன்மை.

ஜகன்மங்களம் என்பது விஷ்ணுவின் கீர்த்தனமே.  குருவம்சத்து அரசனே, அதுவே அனைத்து பலன்களையும் தரும். அந்த அளவு  விரதம் முதலியவைகள் கூட மனிதனை பவித்ரமாக்குவதில்லை, ஹரி கீர்த்தனமோ, கேட்பதோ, பக்தியுடன் நினைப்பதோ அதை விட மேல்.  க்ருஷ்ண பாத பத்மத்தில் மனப் பூர்வமாக வணங்கினாலேயே காம, மோகங்கள் விலகும்.  இவ்வாறு தங்கள் தலைவன் சொன்னதைக் கேட்டு யம தூதர்கள் வியந்தபடி, அதன் பின் அச்யுதனை ஆஸ்ரயித்த ஜனங்கள் உள்ள இடங்களில் தங்கள் வேகத்தைக் காட்டாமல் பார்த்து நடந்து கொள்ளலாயினர். 

அரசனே! இந்த கதையை அகஸ்தியர் மலய மலையில் ஒரு நாள் பூஜை முடிந்து அமர்ந்திருந்த பொழுது சொன்னார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-35.

 

 

 

 அத்யாயம்-4

அரசன் பரீக்ஷித் வினவினான்.  பகவன்!  ஸ்வாயம்புவ ஆட்சியில் தேவாசுர சர்கம், நாகங்கள், மிருகங்கள், பக்ஷிகள்  இவற்றைப் பற்றியும் சொன்னீர்கள்.  அதையே மேலும் கேட்க விரும்புகிறேன்.  மனிதனுக்கு அடுத்த நிலையில் இவைகள் எப்படி எந்த சக்தியால் எப்படி பகவான் படைத்தார்? 

சூதர் சொன்னார்: இப்படி கேட்கும் அரசனைப் பார்த்து வியாச பகவான் அவனை பாராட்டி விட்டு, விவரமாக சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: ப்ராசீன பர்ஹிஷரின் பத்து பிள்ளைகள்,  நீருக்குள் இருந்தபடி தவம் செய்தார்கள். அங்கிருந்தபடியே, பூமியை காண முடியாமல் மரங்களே நிறைந்திருக்கக் கண்டனர்.   பார்வையை மறைத்தன என்று மரங்களை வெறுத்தனர்.  தவம் செய்து வந்ததால் அடங்கியிருந்த கோபம் வெடித்து  எழுந்தது போல  அவர்கள் வாயிலிருந்து தீயும், வாயுவும் வெளிப்பட்டன.  மரங்களை எரித்தது அந்த தீ ஜ்வாலைகள்.  அதைக் கண்ட சோமன்- சந்திரன் திகைத்து அவர்களை சமாதானப் படுத்தினான். (தாவரங்கள் சந்திரனின் பொறுப்பில் என்பதால்)  பெரியவர்களே! உங்கள் கோபத்தை இந்த மரங்களிடம் காட்ட வேண்டாம். பாவம், அவைகள் என்ன செய்தன.  நீங்கள் பிரஜைகளை பெருக்குவதற்காக தோன்றியவர்கள். அஹோ! ப்ரஜாபதி பகவான் ஹரி இப்படி ஆகும் என்று நினைத்திருக்க மாட்டார். காட்டு மரங்களும் ஔஷதிகளும்   ஜீவன்களின் களின் நன்மைக்காக அவர் உருவாக்கி கொடுத்தார்.  மனிதர்களுக்கு அன்னம், அசைய முடியாத, பாதம் இல்லாத இவைகள் பாதங்களுடன் நடமாடும்  பிறவிகளுக்கு உணவு. கைகள் இல்லாத இந்த தாவரங்கள் கைகளுடன் உள்ள மனிதர்களுக்கும், இரண்டு கால் பிராணிகளுக்கும், நான்கு கால் பிராணிகளுக்கும் உதவ என்றே படைக்கப் பட்டன. நீங்கள் உங்கள் பெற்றோரால் ப்ரஜைகளை பெருக்குங்கள் என்று ஆணையிடப் பெற்றவர்கள். இந்த மரங்களை ஏன் தகிக்கிறீர்கள் ? நல்லவர்களின் வழியில் செல்லுங்கள். கோபத்தை அடக்கிக் கொண்டு, உங்கள் தந்தை, பாட்டனார், முப்பாட்டனார் சொன்னதையும், செய்ததையும் அனுசரியுங்கள். குழந்தைகளை பந்துவானவன் பாதுகாப்பது கடமை. ஞானியானவன் அறிவு உள்ளவனை ஆதரித்து கண்களை இமைகள் காப்பது போல காக்க வேண்டும். மனைவியை கணவன் பாதுகாக்க வேண்டும் பிரஜைகளை அரசன் பாதுகாக்க வேண்டும். துறவிகளை, யாசிப்பவர்களை குடும்பஸ்தன் காக்க  வேண்டும்.  இவ்வாறு பிற ஜீவன்களிடம் தயையுடன் இருக்க வேண்டும் என்பது தான் பகவானின் நோக்கம் என்பது உங்களுக்கு நினைவில்லையா?  பிற ஜீவன்களை துன்புறுத்துவது பகவானையே துன்புறுத்துவதற்கு சமம்.  போதும் மரங்களை எரித்தது. வார்க்ஷீ அல்லது மரீஷா என்ற இந்த பெண் கண்டு ரிஷியின் மகள்.  ப்ரமலோசனி என்ற அப்சரஸ்  தாய். மரங்களில் வளர்ந்தவள். இவளை மனைவியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.   சோமன் சொன்னதால், ப்ராசீன பர்ஹிஷின் பத்து புதல்வர்களும் அவளை ஏற்றுக் கொண்டனர்.  அவர்களிடம் அவள் பிரஜைகளை பெருக்குவதே நோக்கமாக கொண்ட  ப்ராசேதஸர்களை பெற்றாள்.  இவர்களின் வம்சம் வளர்ந்து உலகை நிரப்பியது.

2)

தக்ஷ பிரஜாபதி தன் புத்ரிகளை மிகவும் நேசித்தான். தக்ஷன், இயல்பாக பெற்ற சந்ததிகள் தவிர, மனதால், பலரை ஸ்ருஷ்டித்தான்.  அதைக் கேள்.  மனதால் சங்கல்பம் செய்தே  தேவர்கள், அசுர்கள், மனிதர்கள் என்று ஸ்ருஷ்டியைச் செய்தான்.  அப்படியும் திருப்தி இல்லை என்று  விந்த்ய மலைக்குச் சென்று தவம் செய்யலானான்.  அங்கு அகமர்ஷணம் என்று தீர்த்தம் இருந்தது.  பாபங்களைப் போக்கும் பரம பவித்ரமான நதி.  அங்கு தங்கி தினமும் அதில் ஸ்னானங்களை செய்தபடி தவம் செய்து ஹரியை மகிழ்வித்தான்.. அவர் சொன்ன துதிகளைச் சொல்கிறேன் கேள்.  

“ நம: பராய – என்று ஆரம்பித்து,   தஸ்மை மஹேஸாய நமஸ்கரோமி மகேசனுக்கு நமஸ்காரம். உடன் இருக்கும் ஆப்தமான சகா போல இருப்பவன்.  இதை நற்குணம் குணங்கள் நிறைந்த சாதகர்கள் தான் அறிவர். நண்பனுக்கு நண்பனாக விளங்கும் அந்த மகேசனுக்கு நமஸ்காரம். , 

 தன்னில் பரமாத்மாவை அறிந்தவன் தான் அறிவாளி. அவனும் சர்வக்ஞன் என்ற பகவானை முழுமையாக அறிந்தவனா, சந்தேகமே. அனைத்தும் அறிந்த பரம புருஷனான பகவானை வணங்குகிறேன்.

 மரத்தில் அக்னி போல உயிரினங்களின் இதயத்தில் இருப்பவன்.  அவனே சர்வ நாமா- எந்த பெயர் சொல்லி அழைத்தாலும் அவனையே குறிக்கும் – விஸ்வ ரூபன், தயை செய்ய வேண்டும். 

வேதங்கள் பரம் பொருளைப் பற்றி நிரூபிக்க முயன்றிருக்கின்றன. எங்கு, எங்கிருந்து வந்தது, யாரால் அறியப்பட்டது, எதில் நாம் காணலாம், என்ன உருவம் இது தான் என்று எப்படி அறிவோம், என்ன செயல் செய்கிறது, செய்விக்கிறது, என்று கேள்விகள் தானே கேட்டு,  நாமென்ன அறிவோம், அந்த பரம் பொருளின் சித்தம், பரத்திற்கும் பரமானது, அதுவே ப்ரும்மம், அதுவே தேகங்கள் தோன்ற காரணம், இது தான் அதன் சக்தி என்று விவாதிப்பவர்கள், எல்லையில்லாமல் விவாதித்து முடிவே காண முடியாத பரம் பொருள், இதோ கண்டு கொண்டேன் என்று சொல்லி முடிக்கும் முன் அவர்கள் தங்கள் விவாதம் ஒர் பலனையும் தரவில்லை என்பதை உணர்வார்கள்.  ஒரு முஹூர்த்த மோகமே. 

அஸ்தி என்று சிலரும், நாஸ்தி-இல்லை என்று சிலரும் சொல்வர். வித விதமான தர்மங்கள் பற்றி பேசுவர்.  சங்க்யம், கர்யோகம், என்று பெயர்கள் சொல்வர். கண்டவர் எவருமில்லை. 

என்னையும் ஒரு கடமையைக் கொடுத்து உலகில் பிறக்கச் செய்தவன் என்னை காக்கட்டும்.  பாமரனான கிராம வாசி உலக வாழ்க்கையில் எதை அறிவான்.  அனைத்தும் தேகமே, உடல் சம்பந்தப் பட்டதே என்று இருப்பான். பகவானே, எதை நான் செய்யவேண்டுமோ, அதற்கான மனோ பலத்தைக் கொடுங்கள். “

 ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதி செய்யவும், மனம் மகிழ்ந்து பக்த வத்ஸலனான பகவான் எதிர்ப்பட்டார்.  பாதம் சுபர்ணனின் மேல் இருக்க, நீளமான அஷ்ட புஜங்களும், சக்ர, சங்க, வாள், தனுஷ், பாணம்,  க3தை இவற்றை ஏந்தியவராக , பீதாம்பரமும், கரு மேகம் போன்ற நிறமும்,  ப்ரஸன்னமான கண்களும், முகமும், வனமாலையும், ஸ்ரீ வத்ஸம், கௌஸ்துப மணிகள் பிரகாசிக்க, பெரிய கிரீடமும், கடகமும், மகர குண்டலங்களின் ஒளிச் சிதற, இடையில் காஞ்சி, விரல்களின் வளையங்கள், நூபுரம்,அங்கதம் என்ற பூஷணங்களும் அலங்கரிக்க, மூவுலகிலும் ப்ரசித்தமான மோகன ரூபனாக,   புவனேஸ்வரன், நாரதர், நந்தன் முதலானோருடனும்,  உடன் இருக்கும் ஏவலர்களுடனும் தேவர்கள் கூட்டத்தோடும், துதி செய்வோர் பாட, மற்றவர் உடன் பாடும் கோஷ்டியாக,திடுமென வரவும் சித்த கந்தர்வ சாரணர்கள்,  ஆச்சர்யமான அந்த ரூபத்தைப் பார்த்து மனம் மகிழ்ந்து   நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்கினர்.  ப்ரஜாபதி தக்ஷன் எதுவும் பேசக் கூட முடியாதபடி மகிழ்ச்சியில் திக்கு முக்காடினார்.  அருவியிலிருந்த நீர் வேகமாக  வந்து விழுந்து நிரம்பிய தடாகம் போல மனம் நிறைந்தது.  ப்ரஜைகளை பெருக்குவது தான் அவருடைய விருப்பம் என்பதை அறிந்திருந்த பகவான் ஜனார்தனன் பேசலானார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்:  என்னிடம்   மனப் பூர்வமான ஈடுபாடு, கவனம் இவற்றுடன் ப்ராசேதஸ! உன் தவத்தை முறையாக சரியாக செய்து முடித்து விட்டாய்.  அதில் எனக்கு மகிழ்ச்சியே.  நீ விரும்பியபடி ப்ரஜைகள் பெருகட்டும்.  எனக்கும் அது சம்மதமே. ஏனெனில், ப்ரும்மா, பவன், நீங்கள், மனு, என் அம்சமே ஆவீர்கள்.   உலகத்தில் வளம் நிறையட்டும்.

ப்ரும்மன்! தவம் எனது ஹ்ருதயம்,  வித்யா என் உடல். காரியங்கள் என் உடல் வாகு. அங்கங்கள் க்ருதுக்கள் என்ற யாகங்கள்.  தர்மமே என் ஆத்மா.. என் உடலில் உள்ள திரவங்கள் சுரா: தேவர்கள்.  உலகில்  ச்ருஷ்டி ஆரம்பத்தில்  நான் மட்டுமே இருந்தேன். சைதன்யம் ( உள்ளுணர்வு) மாத்திரமாக வெளியில் தெரியாத உருவுடன் பரவி இருந்தேன்.  என்னிடம் ஸ்வயம்பூ அனந்தமான குணங்களின் சேர்க்கையால் தோன்றினார்.  அவரே அஜன். மஹாதேவனும் என் வீர்யத்தில் தோன்றினார்.  ஒன்பது புதல்வர்களை அவர் படைத்தார். அதில் ஒருவரான நீங்களும் அஸிக்னீ என்ற பராஜாபதியின் மகளை மணந்து கொண்டு தம்பதிகளாக தர்ம வழியில் பிரஜைகளை பெருக்குவீர்களாக. உங்களுக்குப் பின் உலகில்  தாம்பத்யம் தான் ப்ரஜோத்பத்திக்கு காரணம் என்பது நிலைக்கட்டும். என் மாயையும் உதவும்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி சொல்லி விட்டு அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே மறைந்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், நான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-54

 அத்யாயம்-5

பஞ்சஜனன் என்ற பிரஜாபதியின் மகள் பாஞ்சஜன்யா- அவளை தக்ஷன் மணந்தார்.  ஹர்யஸ்வன் முதலான பிரஜைகள் பிறந்தனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான சீலம் உடையவர்கள். தந்தையின் சொல்படி மேற்கு திசை நோக்கிச் சென்றனர். சிந்து சமுத்திரங்கள் சேரும் இடத்தில் நாராயண ஸரஸ் எனும் குளம் அருகில் பல முனிவர்களும் சித்தர்களும் வசித்து வந்தனர்.  அந்த ஜலத்தை தொட்டவுடனே புத்துணர்ச்சி பெற்றவர்களாக ஆயினர். தர்மத்திலும் பரம ஹம்ஸ எனும் ஆன்மீக தேடலில் மனம் லயித்தது.  அந்த இடத்தில் தவம் செய்ய முனைந்தனர்.  தேவரிஷி நாரதர்  அவர்களைக் கண்டார்..  ஹர்யஸ்வா:! (ஹர்யஸ்வன் முதலானவர்கள்)  பிரஜைகளை உத்பத்தி செய்ய தவம் செய்ய முனைந்தீர்கள். நல்லது. ஆனால்  நீங்கள் இன்னும் உலகையே பார்க்கவில்லையே.  ஜீவ  ஆத்மா போன்ற தத்வங்களை அறியாமல், ஈஸ்வரனின் ஆதிக்கத்தில் தான் ராஜ்யங்கள், தேசங்கள் உருவாயின என்ற விவரங்கள் தெரியாமல், அறியாமையை விலக்கும் உபதேங்களைக் கேளாமல், ஹ்ருதய பிலத்தில் ஈஸ்வரனைக் காணாமல், பெண்களின் ஆகர்ஷணம்,  அந்த சபலத்திலிருந்து விடுபடாமல்,  இரு பக்கமும் ஓடும் நதி போல ஐந்தாக ஐந்தாக தத்வங்கள், தவிர சிருஷ்டியின்  மாயை சூழ்ந்துள்ள உடலைப் பற்றி அறிந்து கொள்ளாமல் நீங்கள் என்ன செய்யப்  போகிறிர்கள்? கால சக்கரம் கூரான ஆரங்களுடன் வேகமாக சுழலும் தன்மையுடையது.

நன்மை தீமை எதையும் அறியாமல் என்ன செய்வீர்கள் சொல்லி விட்டு போய் விட்டார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: தந்தை வாக்கை நிறைவேற்றுவதாக எண்ணி ஊரை விட்டு வெளியேறிய போதும் என்ன செய்ய வேண்டும் எப்படி என்று எதுவும் அறியாத அந்த தக்ஷனின் புதல்வர்கள் நாரதரின் வார்த்தைகளை புரிந்து கொள்ள முடியாமல் யோசித்தனர்.  தங்களுக்குள்  விவாதித்தனர். 

பூ:- நிலம் பூமி, அனாதி – இந்த பதம் மனித சரீரம் நிலையற்றது என்று சொல்கிறாரா?   எப்படி சரீரம் உண்டாயிற்று என்று தெரிந்து கொள்ளாமல் மோக்ஷம் பற்றி யோசிக்கிறோம்.  அதையறியாமல் செய்யும் தவம் முதலியவை பலனற்றது.

ஒன்று தான் என்றார். சாக்ஷியாக இருப்பது   பகவான் ஒருவரே. அவர் சுதந்திரமானவர். அவரை அறியாமல் நாம் செய்யும் செயல்கள் பொருளற்றவை.

பில ஸ்வர்கம் என்றார்- பள்ளத்தில் உள்ள சுவர்கம். பாதாள சுவர்கம் அதிலிருந்து மீளவே முடியாது. நல்ல வினைப் பயனால் சுவர்கம் போகலாம் என்று எண்ணி யாக காரியங்கள் செய்பவர்கள், உண்மையில் பெறுவது என்ன? சுவர்க வாசம், வினைப் பயன் தீர்ந்த பின்  தன் வினைக்கேற்ப மனிதனோ, மற்றதோ ஒரு  பிறவி. இந்த பிறவிச் சுழலில் இருந்து விடுபடவே முடியாது. எனவே, அதை விட பிறவியைத் தீர்க்கும் ப்ரும்மவிதர்கள் என்ற ப்ரும்ம ஞானிகள் சொல்லும் சாஸ்வதமான நிலையை அடையத் தான் நாம் முயற்சிக்க வேண்டும்.

பெண் மோகம் பற்றிச் சொன்னார்.  பெண்களின் சங்கத்தால் சுகம், துக்கம் இரண்டும் உண்டு.  மோகத்தால் தன்னையிழக்காமல் இருக்கும் வரை நல்லது.  புத்தியை குண சம்பன்னமான பெண்ணாகச் சொன்னார். புத்தி நன்மையும் செய்யும். தவறான வழியையும் காட்டும்.  குணமில்லாத பெண் போல, அந்த புத்தியே தவறான சங்கத்தால் கெடும்.  புத்தியை சரியாக பயன்படுத்த தெரியாதவரை அந்த புத்தியால் என்ன பலன்?

ஸ்ருஷ்டி என்பது நதி சமுத்திரத்தை அடையும் போது இரு விதமான வேகம், ஒன்று நதியின் சமுத்திரத்தைஅடையும் வேகம், மற்றொன்று ஆழ் கடல் அந்த நீரை இழுக்கும் வேகம் –  இது போலத்தான் ஆத்மா உடலில் அலை பாயும் என்றார்.  புது யுகம் அல்லது புது படைப்பு எனும் சமயம், பழைய தத்வங்களை விலக்குவதும் புதியனவற்றைச் சேர்ப்பதுமான செயல் என்றார்.  அதைத் தான் மனிதனின் ஜனனமும் மரணமும் இருபக்கமும் பாயும் நதியாக சொன்னாரா?

இருபத்து ஐந்து தத்வங்கள் உடைய புருஷன் அத்புத தரிசனம் என்றார்.   இவை பகவானால் உண்டாக்கப் பட்டவையே. இவைகளால் பிரபஞ்சம்  உண்டாயிற்று பிறிவிகள் தோன்றின. அவரை நாம் எப்படி காண்போம். அத்புதம் என்கிறார். நம் ஆத்மாவிலேயே இருப்பவர், அவரை அறிய தன் ஆத்மாவை அவருக்கு சமர்ப்பித்து விடு என்கிறார்.  முக்தி தரும் என்று நினைத்து செய்வதை ஹரியை நினைத்தே செய், தன்னையே அறிந்து கொள் என்கிறார். “வேதை: சர்வைரஹமேவ வேத்ய:” கீதை.  கற்று அறிவதில் சாரபூதமான பரமாத்ம வஸ்து என்று அறிவதே பரமானந்தம்.

சாஸ்திரங்கள் தருவது ஐஸ்வர்யம், சுக ஜீவனத்துக்கானவை. சாஸ்திரங்கள் வழி காட்டுவன.  அவை தாய் போல ரக்ஷிக்கும்.   புராணங்கள் கதைகளாக ஞானம் பெறச் செய்கின்றன.  இவைகளை கற்றுத் தேர்ந்து தன் வழி நடப்பதும், அனுபவத்தால் அதன் சார பூதமான ஹம்ஸம் சாரமான பாலை மட்டும் பிரித்து எடுத்துக் கொள்வதைப் போல தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

கால சக்கரம் பற்றிச் சொன்னார். காலம் தன் வழிச் செல்லும் மிகவும் சுதந்திரமானது, யாராலும் கட்டுபடுத்த முடியாது.  பன்னிரண்டு மாதங்கள், வருஷங்கள் என்பது அதனை அறியும் வழி அவ்வளவே.

சாஸ்திரங்கள் தந்தை போல ஆணையிடும். அதுவும் ஜீவனுக்கு எது நன்மை என்பதையே சொல்கிறது. அதை முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்கிறார்.

ராஜன்! அந்த தக்ஷ புதல்வர்கள்  தங்களுக்குள் விவாதித்து நிரந்தரமான தீர்வைத் தரும் வழி எது என்பதைப் பற்றி யோசித்தனர்.

நாரதரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வினவினர்.  ஸ்ரீ ஹரியை  நினைத்து யோக மார்கத்தில் ப்ரும்மத்தை அறியலாம், என்று சொல்லி தான் உபாசிக்கும் நாராயண மந்திரத்தை உபதேசித்தார்.  பின் சப்த ப்ரும்மமாக  சங்கீதம் மூலம் ஆராதிக்கும் நாரதர் தன் வாத்யத்தை மீட்டிகொண்டு தன் வழி சென்றார்.

தக்ஷன் இதைகேட்டு மிக வருந்தினார்.  ப்ரஜா வ்ருத்தி வேண்டும் என்று என் புதல்வர்களிடம் சொல்லியிருந்தேன், இந்த நாரதர் உபதேசம் செய்து அவர்கள் மனதை மாற்றி விட்டாரே.   திரும்ப குடும்ப வாழ்க்கையில் அவர்கள் நாட்டம் செல்லாது. என் வம்சம் எப்படி வளரும்? ப்ரும்மா சமாதானப் படுத்தினார். திரும்பவும் பாஞ்சஜன்யா என்ற மனைவியிடம் ஸபலாஸ்வான் என்ற பெயரில், நிறைய  புதல்வர்களைப் பெற்றார்.  அவர்களும் தந்தையின் ஆணையை ஏற்று நாராயண ஸரஸ் என்ற தங்கள் முன் பிறந்தோர் சென்ற இடத்துக்கே சென்றனர்.  அவர்களும் அந்த பவித்ரமான நீரைத் தொட்டதுமே சாந்தமான குணமும் தங்கள் மன அழுக்கெல்லாம் விலகி பவித்ரமாக ஆகி விட்டதாகவும் உணர்ந்தனர்.  பர ப்ரும்மத்தை குறித்து தவம் செய்யலானார்கள்.  தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு சில மாதங்கள், வாயுவை உணவாகக் கொண்டு சில மாதங்கள், தவம் செய்தனர். நாராயண மந்திரத்தை ஜபித்தபடி-

 ओं नमो नारायणाय पुरुषाय महात्मने । विशुद्धसत्त्वधिष्ण्याय महाहंसाय धीमहिநாரதர்  திரும்பவும் அதே இடத்துக்கு வந்தார்.   தாக்ஷாயணர்களே! கேளுங்கள்.  உங்கள் சகோதர்களைத் தேடி வந்தீர்களா? சகோதரர்கள் தன் முன் பிறந்தோர்களை பின் பற்றி தர்மத்தை அறிந்து கொள்வதே சிறந்தது.  அவர்கள் தான் புண்ய பந்துக்கள்.   சொல்லிவிட்டு நாரதர் சென்று விட்டார்.

சபலாஸ்வர்கள் என்ற அந்த தக்ஷணின் புதல்வர்களும் தவம் செய்யலாயினர்.  முன் பிறந்தோர்களைப் போலவே ப்ரும்ம தத்வம் என்பதை அறிவது என்ற ஆன்மீக வழிலேயே சென்றனர்.  மேற்கு திசையில் சென்றவர்கள் அஸ்தமித்த பின் காண முடியாத சூரியன் போல தென் படாதவர்களாக மறைந்த பின் தக்ஷன் செய்வதறியாது தவித்தான்.   பழையபடி நாரதர் அவர்களுக்கு உபதேசம் செய்தார் என்றறிந்து மிக கோபம் கொண்டான்.  இந்த சமயம் நாட்டில் பல கெட்ட நிமித்தங்கள் தோன்றின.   

மிகுந்த கோபத்துடன் நாரதரைத் தேடிக் கண்டவர் உதடுகள் துடிக்க அஹோ அசாதோ! சாது வேஷம் போட்டு என் புதல்வர்களுக்கு, பிக்ஷு வாழ்க்கையை உயர்ந்ததாகச் சொல்லி கெடுத்து விட்டீர் என் புதல்வர்கள் எனக்கும் என் முன்னோர்களுக்கும் பித்ரு காரியங்களை செய்ய வேண்டியவர்கள், அவர்களைத் தடுத்து விட்டீர்கள் என்று குற்றம் சாட்டினான்.  இரக்கம் இல்லாதவர் நீங்கள், சிறு பிள்ளைகளை தவறாக தூண்டி கெடுத்து விட்டு ஸ்ரீஹரியின் அணுக்கத் தொண்டர்களுடன் திரிகிறீர். வெட்கம் இல்லயா?  அவருடைய புகழுக்கே இழுக்கு. சாதாரணமாக பாகவதர்கள் ஜீவன்களின்  நன்மைக்காக உபதேசிப்பார்கள். நீங்கள் எனக்கும் என் புதல்வர்களுக்கும் இடையில் பகையை கிளப்பி விட்டு என்ன அடைந்தீர்கள்?  உங்களைப் போல இருவரிடையே இருக்கும் பாசத்தை நல்லெண்னத்தைக் கெடுப்பவரை கண்டதில்லை.  என் புதல்வர்கள் என் வார்த்தையை மீறும்படி செய்து விட்டு உலகில் என்ன சாதிக்கப் போகிறீர்கள்.  குடும்பம் தன் மக்கள் என்று வாழும் க்ருஹஸ்தர்கள் நாங்கள்.  சாஸ்திர சம்மதமான கர்ம மார்கிகள். யாகம் முதலான கர்மங்களை செய்பவர். அமைதியாக எங்கள் வழியில் நல்லதையே செய்கிறோம். நீங்கள் செய்வது சாதுக்களாக, க்ருஹஸ்த தர்மத்தை பாலனம் செய்யும் என் போன்றோர்களுக்கு நன்மையைச் செய்யவில்லை.  சந்ததியை தடைபடாமல்  காக்கவே புதல்வர்களைப் பெறுகிறோம். அதைக் கெடுக்க வந்த மூடனே! உலகில் ஒரு இடத்திலும் உன் பாதங்கள் நிலைக்காமல் போகட்டும். சுற்றிக் கொண்டே இரு”  

ஸ்ரீ சுகர் சொன்னார்: நல்லது என்று தலை குனிந்து அந்த சாபத்தை நாரதர் ஏற்றுக் கொண்டார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-44

 அத்யாயம்-6 

அதன் பின் தக்ஷ பிரஜாபதி ஸ்வயம்பூ சொன்னதன் பேரில் அசிக்னி என்பவளிடம் அறுபது பெண்களைப் பெற்றார்.  அவர்களும் தந்தையிடம் பாசத்துடன் இருந்தனர். பத்து பெண்களை  தர்ம தேவதைக்கும், பதிமூன்று  பெண்களை காஸ்யபருக்கும்,  சந்திரனுக்கு இருபத்து ஏழு பெண்களை,  க்ருத்திகா, ரோஹிணி என்ற தாரகைகள், பூத, ஆங்கிரஸ,க்ருஸாஸ்வ என்பவர்களுக்கு தலா இரண்டு இரண்டு பெண்கள், நான்கு பெண்களை தார்க்ஷ்யர் என்பவருக்கும் கொடுத்தார்.  இவர்கள் மூலம் உலகில் பலவிதமான பிறவிகள் தோன்றின என்பதால் விவரமாக சொல்கிறேன், கேள். 

தர்மன் – பாநு, லம்பா , ககுபு, ஜாமி, விஸ்வா,சாத்யா, மருத்வதீ, வசு, முஹூர்தா, சங்கல்பா

பானு மகன் தேவருஷபன், இந்த்ரஸேனன்;  லம்பாவின் புத்திரர்கள்- வித்யோதன், மேக கூட்டம் என்ற பொருளில் ஸ்தனயித்ன என்பவர்கள் (மின்னலும், இடியும்) ககுபா என்பவளின் மகன் சங்கடன், அவன் வழியில் கீகட்- சிறு பூச்சிகள், , அவன் மகன் உலகில் உள்ள அனைத்து துர்கம்-கிலம் என்பதன் அதிபதிகள்.  ஜாமியின் மகன் ஸ்வர்கன். அவன் மகன் நந்தி;  விஸ்வாவிடம் விஸ்வதேவன் என்பவன் அவனுக்கு சந்ததி இல்லை.  ஸ்ந்த்யா என்பவளின் மகன் சாத்யகணன் என்பவன், அவன் மகன் அர்த சித்தி;  மருத்வதி என்பவளுக்கு இருவர் மருத்வான், ஜயந்தன் என்போர். ஜயந்தன் உபேந்திரன் என்றும் சொல்லப் படுவான், பகவானின் அம்சம் உள்ளவன்.

முஹூர்தா என்ற பத்னியிடம் மௌஹர்திகா என்ற தேவ கணங்கள் பிறந்தன. இவைகள் தான் ஜீவன் களின் தங்கள் பிறந்த கால பலன் அளிப்பவர்கள்.  (பிறந்த சமயத்தை வைத்து அதன் அனுபங்கள் – ஜோதிடம்)

சங்கல்பா என்பவளிடம்- சங்கல்பம், காமன் இவள் மகன். ( மற்றொரு யுகத்தில்)

வசு என்பவளிடம் எட்டு புத்திரர்கள்- த்ரோண, ப்ராணன், த்ருவன், அர்கன், அக்னி, தோஷோ, வசு, மற்றும் விபாவசு.  த்ரோண அபிமதி என்ற மனைவியிடம், – ஹர்ஷ, சோக, பயம்  என்ற மூவர்.  (தரா என்ற மனைவி- (  யுகம் வேறு)   ப்ராண புத்திரர்கள்- ஊர்ஜஸ்வதி என்ற மனைவி, ஆயுள், புரோஜவன், ; த்ருவனுடைய மனைவி தரணி, பல புரங்கள் (நகரங்கள்)  ;  அர்கனுக்கு வாசனா என்ற மனைவி.  அக்னி மனைவி வசோர்தாரா த்ரவிணகர்கள் புதல்வர்கள்.  ஸ்கந்தன் க்ருத்திகா புத்ரன்.  விசாகா முதலானோர்.  தோஷன் என்பவன் மனைவி ஸர்வரீ புத்ர: சிசுமாரன் என்ற ஹரியின் அம்சமாக பிறந்தான்.  வசு என்பவனின் மனைவி ஆங்கிரசின் புத்ரி. ஆக்ருதீ,  விஸ்வகர்மா,  சாக்ஷுஸன் என்பவனிடம், மனுவும், மனுவிற்கு விஸ்வன், சாத்யன் என்ற புதல்வர்கள்; விபாவசு மனைவி உஷா,  வ்யுஷ்டன், ரோசிஷன், ஆதபன், பஞ்சயாமன் என்பவர்கள். இவர்களால் ஜீவன்கள் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

சரூபா பூதனின் மனைவி ருத்ர்களை கோடி கணக்காக பெற்றாள்.  ரைவதன், பவன்,பீமன், வாமன், உக்ரன், வ்ருஷாகபி என்பவர்கள் தவிர ருத்ரனின் அணுக்கத் தொண்டர்கள். (பார்ஷதர்கள்)

ஆங்கிரஸ ப்ரஜாபதியின் பத்னி ஸ்வதா.  அதர்வா மகன் வேதன் க்ருசாஸ்வோ, அர்சி என்பவளிடம் தூம்ரகேசம், திஷணா  என்பவளிடம் வேதசிரோ, தேவலம், வயுனம் மனு,

 தார்க்ஷ்யன் (மரீசி) இவருக்கு நான்கு மனைவிகள். மனைவி வினதா கத்ரூ, பதங்கீ, யாமினீ என்பவர்கள். பதங்கீ- பக்ஷிகளை, யாமினீ   பூச்சிகளை, சுபர்ணா கருடன்,  ( பகவானின் வாகனம்), கத்ரூ- நாகங்கள்.

க்ருத்திகா முதலான நக்ஷத்திரங்கள் சந்திரனின் மனைவிகள்.  தக்ஷனின் சாபத்தால் சந்ததி இல்லை.

கஸ்யபரின் மனைவிகள் லோக மாதா எனப்படுவர்.

திமி என்பவளிடம், நீர் வாழ் ஜீவன்கள்.   சரமா என்பவளிடம் நால்கால் புலி, பூனை போன்ற  மிருகங்கள் (நான்கு நகங்கள்)  ;  சுரபி என்பவளிடம் மகிஷம், பசு போன்றவை; தாம்ரா என்பவளிடம், கழுகு, க்ருத்ரம்; முனி என்பவளிடம் அப்சர கணங்கள்; தந்தசூ என்பவளிடம் சர்ப்பங்கள், க்ரோதவசா என்பவளிடம்  கந்தர்வர்கள், இலா என்பவளிடம் மரங்கள், எல்லா யாதுதானர்களும் சௌரஸா என்பவளிடம், அரிஷ்டா என்பவளிடம் கந்தர்வர்கள், காஷ்டா என்பவளிடம் வீட்டு மிருகங்களில், மகிஷம்,பசு தவிர மற்றவைகள்;  தனு என்பவளிடம் பலர். த்விமூர்தா, சம்பரன், அரிஷ்டன், ஹயக்ரீவன், விபாவசு, அயோமுகன், சங்குசிரன், ஸ்வர்பானு,(ராகு அல்ல) கபிலன், அருணன். முக்கியமானவர்கள்.   இவர்களில் வ்ருஷபர்வன் என்பவனின் மகள் சர்மிஷ்டா என்பவளை  நகுஷனின் மகன்  யயாதி மணந்தான். 

வைஸ்வானரனின் பெண்கள் நால்வர் அழகிகள். உபதானவி என்பவள் ஹிரண்யாக்ஷனின் மனைவியானாள். க்ருது என்பவள் ஹயக்ரீவனின், புலோமா என்பவளும் காலகா  என்பவளும், ப்ரும்ம புத்திரரான கஸ்யபரின் பத்னிகள் ஆனார்கள்:   பௌலோமா, காலகேயா: என்று அழைக்கப்பட்ட இவர்கள் புதல்வர்கள் யுத்தம் செய்வதில் நாட்டம் உடையவர்கள்.

விப்ரசித்தி என்பவர் சிம்ஹிகா என்பவளிடம் நூற்றி ஒன்று புதல்வர்களைப் பெற்றார்.  மூத்தவன் ராகு, கேது என்பவர்கள் க்ரஹங்கள் ஆனார்கள்.  

அதிதியின் வம்சம் பற்றிச் சொல்கிறேன்.  இதில் பகவான் நாராயணன்  தன்னுடைய அம்சமாக அவதரித்தார். விவஸ்வான், அர்யமா, பூஷா, த்வஷ்டா, சவிதா, பக:. தாதா, விதாதா, வருணன், மித்ரன், சக்ர, உருக்ரமன்  என்பவர். இந்த பன்னிருவரும் ஆதித்யர்கள் எனப்படுவர்.

விவஸ்வான் மனைவி சங்க்ஞா ஸ்ரார்த தேவன் என்ற மனுவையும்,  யமதேவனையும் யமுனா என்ற மகளையும் இரட்டையர்களாகப் பெற்றாள். இந்த சங்ஞா என்பவள் பின்னால் அஸ்வினீ என்பவளாக அஸ்வினி குமார்களைப் ஈன்றாள். சாயா என்பவள் சனைச்சரம் என்ற க்ரஹத்தையும்,  சாவர்ணி மனு, தபதீ என்ற கன்யா  இவர்களை ஈன்றாள். அர்யமா என்பவர், மனைவி மாத்ருகா என்பவளிடம், கர்ம சீலர்களான புல்வர்களைப் பெற்றார்.  இதன் பின் மனித இனம் ப்ரும்மாவால் படைக்கப் பட்டது.            

பூஷனுக்கு சந்ததி இல்லை.  தக்ஷ யக்ஞத்தில் பல் உடைந்தவர் இவர் தான்.  த்வஷ்டாவின் மனைவி தைத்யர்களின் சகோதரியான ரசனா. இவர்கள் மகன் விஸ்வரூபன்.  இந்திரன் ஒருமுறை தேவ குரு ப்ருஹஸ்பதியை அவமதித்ததால் அவர் விலகிய பொழுது தேவர்கள் சேர்ந்து இந்த விஸ்வரூபனை இந்திரனாக நியமித்தனர்.   தைத்யர்களிடம் பகை இருந்தாலும் சகோதரி, அவள் மகன் என்பதால். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஐந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  ஸ்லோகங்கள்-45

அத்யாயம்-7

பரீக்ஷித் அரசன் வினவினான்:  ஆசார்யர் ஏன் தேவர்களை விட்டு விலகினார். சிஷ்யர்களை விட்டு குரு விலகுவது என்பது நியாயமாக இல்லையே? சொல்லுங்கள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்திரன் மூவுலகிலும் ஐஸ்வர்யம் பெற்று மகோன்னதமாக இருந்த சமயம்.   தேவர்கள், சித்த சாரணர்கள் என்று அனைவரும் அவனை போற்றி புகழ்ந்தனர். வெண் சாமரமும் குடையும் மற்றும் சாமரங்கள் என்று அரச மரியாதைகளுடன் பௌலோமி என்ற மனைவியுடன் மகிழ்ந்து அமர்ந்திருந்த சமயம் தேவ குரு சபையில் நுழைந்தார். அவரைக் கண்டதும் காணாதது போல எழுந்திருக்கவோ, வணங்கவோ இல்லை. அவர் முனிகளுள் சிறந்தவர். வாசஸ்பதி, நல் வாக்கு உடையவர் என்று புகழப் படுபவர்.  தேவர்கள் அசுரர்கள் அனைவருமே அவரிடம் மரியாதையாக நடந்து கொள்வர்.  கண்ணால் பார்த்த பின்னும், அவர் வந்ததைக் கண்டு கொள்ளவில்லை என்பதை அவர் மரியாதைக் குறைவாக எடுத்துக் கொண்டார்.  எதுவும் பேசவில்லை. மௌனமாக தன் வீட்டிற்கு திரும்பி விட்டார்.  

 அதன் பின் இந்திரனுக்கு உறைத்தது.  சபையிலேயே தன்னையே நொந்து கொண்டான்.  அஹோ! தப்பு செய்து விட்டேனே.  அரச  சபையில் குருவை அவமதித்து விட்டேனே  வீட்டுக்கு வந்த லக்ஷ்மியை விரட்டியது போல தர்மத்தை மறந்தவனாக,  குருவை வரவேற்று உபசரிப்பது என் கடமையாக இருக்க, காணாதது போல் இருந்து விட்டேன்.   தவறு என்று அறிந்து செய்பவன், பெரு வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் கூழாங்கற்கள் போல வலிமையற்றவன் ஆவான்.  எனவே, ஆசார்யரை இப்பொழுதே சென்று  அவர் சரணங்களில் தலை பட வணங்கி மன்னிப்பு கேட்கிறேன் என்று கிளம்பினான்.  ஆனால் அவர் தன் வீட்டிலும் இல்லை. எங்கு சென்றார் என்பதை யாரும் அறியவுமில்லை.  அத்யாத்ம மாயை என்ற வழியில் அவர் தன்னை கண்களுக்கு புலனாகாதவராக மாற்றிக் கொண்டு விட்டார்.  இதனால் மேலும் அதிகமாக இந்திரன் மனம் கலங்கினான்.  தேவர்கள் அனைவருமாக என்ன செய்வது என்று யோசித்தனர்.

இதையறிந்த அசுரர்கள்  குருவான சுக்ராசாரியரின் அனுமதி பெற்று இது தான் சமயம் என்று படையெடுத்து வந்தனர்.   அவர்களின் நுண்ணிய அஸ்திரங்களால் அடிபட்டு கை கால்கள் முறிந்தவர்களாக  ப்ரும்மாவை சரணடைந்தனர்.  அவர்களின் துன்பத்தை சகிக்க முடியாதவராக, ப்ரும்மா சமாதானப் படுத்தி, விவரங்களை கேட்டறிந்தார். என்ன காரியம் செய்தீர்கள்? ப்ரும்ம நிஷ்டரான உங்கள் குரு ப்ருஹஸ்பதி சாந்தமானவர்.  அவரை அவமதிக்க காரணம் ஐஸ்வர்யத்தால் வந்த மதம் தவிர வேறு என்ன இருக்க முடியும்?  வெளியிலிருந்து உங்களைத் தாக்க காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு இதுவே சரியான சமயம்.   இந்திரனே, அசுரர்கள் முதலில் ஆசார்யரான சுக்ரரிடம் அனுமதி பெற்று தாக்கி இருக்கிறார்கள். ப்ருகு போன்றவர்கள் மந்த்ர சித்தி அடைந்தவர்கள்,  இவர்களை நானும் வணங்குகிறேன். அதனால் தற்சமயம் செய்ய வேண்டியது என்ன பார்ப்போம். விஸ்வரூபன் தவம் செய்து பலம் பெற்றவன். த்வஷ்டாவின் மகன்.  அவன் அசுரன் மகனே என்று யோசிக்காதே.  வெகுமதிகள் கொடுத்தும் மரியாதைகள் செய்தும் வேண்டினால் மறுக்க மாட்டான்.

அவர்களும் அவ்வாறே விஸ்வகர்மாவை வணங்கி வேண்டினர். உங்களின் அதிதியாக வந்துள்ளோம்.  புதல்வர்களுக்கு பித்ருக்களை பூஜிப்பது முக்கியம். அதே அளவு ஆசார்யனையும், குருவையும் பூஜிக்க வேண்டும்.  பிதாவை ப்ரஜாபதியாக, சகோதரனை மருத்பதியாக, தாயை பூ மாதாவாக, சகோதரியை தயையே உருவானவளாக, அதிதியாக வந்தவனை தர்ம ரூபனாக  காண வேண்டும். அனைத்து உயிரினங்களும் பகவானின் அம்சங்களே.   நாங்கள் தற்சமயம் மிகவும் சங்கடத்தில் இருக்கிறோம்.  உறவினர்களான எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் என்று பிரார்த்தித்தனர்.  உங்களை  எங்கள் ஆசார்யனாக ஏற்றுக் கொள்கிறோம்.   ப்ரும்ம நிஷ்டரான நீங்கள் எங்களை வழி நடத்தக் கூடிய தகுதியுடையவர், எங்கள் குருவாக வந்து ஆசிர்வதிக்க வேண்டும் என்று பவ்யமாக வேண்டினர்.  வயதில் சிறியவன் ஆயினும் அறிவிலும் அனுபவத்திலும் சிறந்தவன்.  வயது மட்டும் மூத்தவனாக்குவதில்லை.  

ரிஷி சொன்னார்:  இவ்வாறு வேண்டிக் கொண்டதைக் கேட்டு, விஸ்வரூபன்  யோசித்து பதில் சொன்னார்.  இந்த பதவியை ஏற்பதால் என் தவ பலன் குறையும் என்பது ஒரு பக்கம் இருக்க,  தர்ம சீலம் அறிந்த லோகேசன் என்ற பதவியில் இருப்பவர்,  சொல்வதால் ஏற்றுக் கொள்கிறேன்.   வேதம் அறிந்தவர்கள் புரோஹிதம் என்ற இந்த பதவியை உயர்வாக எண்ணுவதில்லை.  இதை வயலில் வேலை செய்பவர்களுக்கு உதிர்ந்த தானிய மணிகளை கொடுப்பது போல சொல்வார்கள்.  ஆயினும் பெரியவர்கள், நீங்கள் வேண்டிக் கொண்டதால் ஏற்கிறேன்.   மனப் பூர்வமாக என் கடமையைச் செய்வேன் என்று வாக்களிக்கிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: விஸ்வரூபன் தேவ குருவாக இருக்க சம்மதித்து மிகவும் நேர்மையாக தன் பதவியை நிர்வகித்தான்.  இதுவரை சுக்ராசார்யருடைய மாணவனாக இருந்து அறிந்த வித்தைகள், அவரிடம் கற்ற  நாராயண கவசம் இவற்றை மகேந்திரனுக்கு கொடுத்தான்.  மிகவும் அரியதான இந்த நாராயண கவசத்தை அடைந்த இந்திரன் அசுர படையை வென்றான்.  இழந்த தன் செல்வத்தை அடைந்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40

அத்யாயம்-8

அரசன் நாராயண கவசம் பற்றி விவரமாக சொல்ல வேண்டினான். இதனால் இந்திரன் தான் இழந்த செல்வத்தைப் பெற்றான்  என்று சொன்னீர்கள். அவன் சைன்யங்கள், வாகனங்கள் கூட அவனிடம் வந்து சேர்ந்தன, விளையாட்டாக போரில் வெற்றி பெற்று மூவுலக சாம்ராஜ்யத்தை அடைந்தான் என்று கேட்டேன்.  அந்த நாராயண கவசத்தை எனக்கும் உபதேசியுங்கள்.  ஒருவருக்கொருவர் தாயாதிகளாக (பங்காளிகள்) சண்டையிட்டுக் கொண்டவர்கள் – இந்த நாராயண கவசம் மூலம் இந்திரன் தன் பங்காளிகளையும் வென்றான் என்பது ஆச்சர்யம், என்றான். 

ஸ்ரீ சுகர் சொன்னார்: புரோஹிதன் என்ற பதவியை ஏற்றுக் கொண்ட த்வஷ்டாவின் மகனான விஸ்வரூபன் தான் ஏற்றுக் கொண்ட பதவி பிரமாணத்திற்கு ஏற்ப பங்காளியானாலும் இந்திரனுக்கு நாராயண கவசம் என்ற மந்திரத்தை உபதேசித்தான். அதைச் சொல்கிறேன், கேள். 

விஸ்வரூபன் சொன்னார்: கைகால்களை சுத்தமாக கழுவிக் கொண்டு, ஆசமனம் செய்து பவித்திரனாக கிழக்கு நோக்கி அமர்ந்து தன் கை,உடல், வாய் இவைகளை மந்திரங்களால், தொட்டு, தூய்மையாகி,  வாக்கினால்  நாராயண மயமான இந்த வர்மம் என்பதை ந்யாசம் என்பதை செய்து கொள்ள வேண்டும்.  அஷ்டாக்ஷரம்  என்பதை ப்ரணவத்துடன்  ஒவ்வொரு அக்ஷரமாகச் சொல்லி வலது கட்டை விரலில் தொடங்கி ஜபம் செய்ய வேண்டும்.  ஓம் நமோ நாராயணாய – என்பது மந்திரம்.  பன்னிரண்டு அக்ஷரம் உள்ள, ஓம் நமோ பகவதே வாசுதேவாய- என்ற மந்திரத்தால்  ப்ரணவத்துடன் கர ந்யாசம் என்பதையும், ஹ்ருத்யத்தில் ஓங்காரம், என்ற ஹ்ருத்யாதி ந்யாசம் என்பதையும் செய்து கொள்ள வேண்டும்.  ஓம் விஷ்ணவே நம என்ற மந்திரம்.  ஆறு சக்திகளுடன் ஆத்மாவை தியானம் செய்து வித்யா, தவம், தேஜோ  மயமான இந்த மந்திரத்தை சொல்லி ஜபம் செய்ய வேண்டும்.

தன்னையே  – ஆறு சக்திகள் கொண்ட தன்  ஆத்மாவையே  –  வித்யாவித்யா, தேஜஸ், தபோ மூர்த்தி என்று பரமாத்மாவை தியானம் செய்து மந்திர ஜபம் செய்ய வேண்டும். 

ओं हरिर्विदध्यान्मम सर्वरक्षां न्यस्ताङ्घ्रिपद्मः पतगेन्द्रपृष्ठे ।  கருட வகனத்தில் பகவான் காக்கட்டும்.

दरारिचर्मासिगदेषुचाप- पाशान् दधानोऽष्टगुणोऽष्टबाहुः ॥ १२॥ வாள், முதலிய எட்டு ஆயுதங்களுடன், எட்டு புஜங்களுடன் இருப்பவர்.

जलेषु मां रक्षतु मत्स्यमूर्ति-र्यादोगणेभ्यो वरुणस्य पाशात् । நீரில் மத்ஸ்த்ய -மீனாகி வந்து வருணனின் பாசத்திலிருந்தும், கடல் வாழ் பிராணிகளிடம் இருந்தும் காக்கட்டும்.

स्थलेषु मायावटुवामनोऽव्या-त्त्रिविक्रमः खेऽवतु विश्वरूपः ॥ १३॥ பூமீயில் வாமனனாக வந்து த்ரிவிக்ரமனாக

दुर्गेष्वटव्याजिमुखादिषु प्रभुः पायान्नृसिंहोऽसुरयूथपारिः । – வளர்ந்த பகவான் காக்கட்டும். வானத்தில்

विमुञ्चतो यस्य महाट्टहासं दिशो विनेदुर्न्यपतंश्च गर्भाः ॥ १४॥ விஸ்வரூபனும்,  கோட்டைகளில், காடுகளில்

அட்டஹாஸமாக கர்ஜனை செய்த நரசிம்மனாக, காக்கட்டும்.

रामोऽद्रिकूटेष्वथ विप्रवासे सलक्ष्मणोऽव्याद्भरताग्रजोऽस्मान् ॥ १५॥ மலை குகைகளில், விட்டிற்கு வெளியே பிரயாணம் செய்யும் சமயம் லக்ஷ்மணனோடு பரதனின் முன் பிறந்த ஸ்ரீ ராமன் காக்கட்டும்.

रक्षत्वसौ माध्वनि यज्ञकल्पःस्वदंष्ट्रयोन्नीतधरो वराहः ।-  அத்வானமான இடங்களில் நீண்ட பற்களுடன் வராக மூர்த்தி காக்கட்டும்.

मामुग्रधर्मादखिलात्प्रमादा-न्नारायणः पातु नरश्च हासात् ।  கடுமையான தர்மானுஷ்டானங்களில் ஸ்ரீமன் நாராயணனன், நரன் என்பவர்களாக காக்கட்டும்.

दत्तस्त्वयोगादथ योगनाथः-पायाद्गुणेशः कपिलः कर्मबन्धात् ॥ १६॥ தத்தாசார்யன், தவறான சகவாசம் வராமல் காக்கட்டும். கபிலாவதார பகவான் கர்ம பந்தங்களை விலக்கட்டும்.

सनत्कुमारोऽवतु कामदेवा-द्धयशीर्षा मां पथि देवहेलनात् । சனத் குமாரன் காம தேவனிடமிருந்தும்,

ஹயக்ரீவன் அவமானம்  தலை குனிவுகள் வரமலும் காக்கட்டும்.

देवर्षिवर्यः पुरुषार्चनान्तरा-त्कूर्मो हरिर्मां निरयादशेषात् ॥ १७॥ உயர்ந்த ஞானிகளான ரிஷிகள் மாற்றுமதங்களிலிருந்து காக்கட்டும். கூர்மமாக வந்த பகவான் ஹரி,  செல்வமோ, மற்றதோ இழப்புகளில் இருந்து காக்கட்டும்.

धन्वन्तरिर्भगवान् पात्वपथ्या-द्द्वन्द्वाद्भयादृषभो निर्जितात्मा । பகவான் தன்வந்திரி அபத்யங்கள் – ஒவ்வாத உணவுகள் – உடலைத் தாக்காமல் காக்கட்டும்.

यज्ञश्च लोकादवताज्जनान्ता-द्बलो गणात्क्रोधवशादहीन्द्रः ॥ १८॥ வேற்று ஜனங்கள் யாக கர்மாக்களில் நம்பிக்கை இல்லாதவர்களிடமிருந்து ய்க்ஞ வராக ரூபியான பகவான் காக்கட்டும். 

द्वैपायनो भगवानप्रबोधा-द्बुद्धस्तु पाखण्डगणप्रमादात् । வியாச பகவான் அறியாமையை விலக்கட்டும்.  புத்தர் வீண் விவாதம் செய்யும் ப்ரமையான கொள்கைகளில் இருந்து காக்கட்டும்.

कल्किः कलेः कालमलात्प्रपातु – धर्मावनायोरुकृतावतारः ॥ १९॥ கல்கி அவதாரத்தில் கலியின் காலத்தால் வரும் அசம்பாவிதங்களைத் தடுக்கட்டும். இந்த அவதாரம் தர்மத்தை நிலை நாட்டவே என்பதால்.

मां केशवो गदया प्रातरव्या-   கதையுடன்  கேசவனாக என்னை விடியலில், காக்கட்டும்

द्गोविन्द आसङ्गवमात्तवेणुः ।- கோவிந்தனாக வேணுவை ஏந்தி மாலை வரை காக்கட்டும்.

नारायणः प्राह्ण उदात्तशक्ति- நாராயணனாக பிராணனில் சக்தியை கூட்டட்டும்.

र्मध्यन्दिने विष्णुररीन्द्रपाणिः ॥ २०॥– மத்யான வேளையில் விஷ்ணுவாக அரிந்த்ரன்- வாளை ஏந்தியவன்

देवोऽपराह्णे मधुहोग्रधन्वा – பிற் பகலில் மதுவை வென்ற தேவன், உக்ரமான தண்டத்தால் காக்கட்டும்.

सायं त्रिधामावतु माधवो माम् । மாலையில் த்ரிதாமன் – மாதவன் காக்கட்டும்.

दोषे हृषीकेश उतार्धरात्रे -निशीथ एकोऽवतु पद्मनाभः ॥ २१॥ தோஷங்கள் தாக்காமல் இரவு ஆரம்பத்தில் ஹ்ருஷீகேசன் காக்கட்டும்- நடு  இரவில் பத்மனாபனாக காக்கட்டும்.

श्रीवत्सधामापररात्र ईशः- பின் இரவில்  ஒளிர்விடும் ஸ்ரீவத்ஸம் அணிந்த  ஸ்ரீவத்ஸ தாமன், ஈசன் காக்கட்டும்

प्रत्यूष ईशोऽसिधरो जनार्दनः । இளம் காலையில் கையில் வாளேந்திய ஈசன், ஜனார்தனன் காக்கட்டும்

दामोदरोऽव्यादनुसन्ध्यं प्रभाते – இரு சந்த்யா காலங்களில் தாமோதரன் காக்கட்டும்.विश्वेश्वरो भगवान् कालमूर्तिः ॥ २२॥விடியலில் கால மூர்த்தியான பகவான் விஸ்வேஸ்வரன் காக்கட்டும்.

चक्रं युगान्तानलतिग्मनेमि -भ्रमत्समन्ताद्भगवत्प्रयुक्तम् । யுகாந்த காலங்களில் சுழற்றும் அவர் கை சக்ரம்

दन्दग्धि दन्दग्ध्यरिसैन्यमाशु- எதிரி சைன்யங்களை பொசுக்கி அழிக்கட்டும்.

कक्षं यथा वातसखो हुताशः ॥ २३॥ வீடுகளை வாயு உதவியுடன் நெருப்பு அழிப்பது போல.

गदेऽशनिस्पर्शनविस्फुलिङ्गे- கதையை வீசும் போது தீப்பொறிகள் பறக்குமே, அது போல.

निष्पिण्ढि निष्पिण्ढ्यजितप्रियासि ।-  மண்ணை  மிதித்து பிசைவது போல கூழாக்கி விடு. உன்னை யாரால் ஜயிக்க முடியும்?

कूष्माण्डवैनायकयक्षरक्षो-  भूतग्रहांश्चूर्णय चूर्णयारीन् ॥ २४॥- கூஷ்மாண்டம், வைனாயக என்ற யாகங்கள், இவைகளை ரக்ஷிப்பவன் நீ, இவைகளைத் தாக்கும் எதிரிகளை பூத க்ரஹங்களை பொடிப் பொடியாக்கி விடு.

त्वं यातुधानप्रमथप्रेतमातृ-पिशाचविप्रग्रहघोरदृष्टीन् ।

दरेन्द्र विद्रावय कृष्णपूरितो भीमस्वनोऽरेर्हृदयानि कम्पयन् ॥ २५॥ யாது தானர்கள், ப்ரமத்த, ப்ரேத, மாத்ரூ, பிசாச, விப்ரக்ரஹ-ப்ராம்மணனை  தாக்குபவன், காணத் தகாத கொடிய உருவம் உடையவன் இவர்களை, தரேந்திர,  வாளேந்திய க்ருஷ்ணனே, பெரும் நாதத்தால் எதிரிகளின் இதயத்தை துளைத்து ஆட்டம் காணச் செய்.

त्वं तिग्मधारासिवरारिसैन्य- मीशप्रयुक्तो मम छिन्धि छिन्धि । ஈசனே! கூர்மையான உன் வாளினால் என் எதிரிகளை தூள் தூளாக்கு   

चक्षूंषि चर्मञ्छतचन्द्र छादय –  द्विषामघोनां हर पापचक्षुषाम् ॥ २६॥ – கண்களின் மேல் இமையாக பாதுகாக்கும் சந்திரனே! என்  எதிரிகள் கண்ணில்  படாமல் முழுவதுமாக மூடி வைத்துக் கொள்.

यन्नो भयं ग्रहेभ्योऽभूत्केतुभ्यो नृभ्य एव च ।सरीसृपेभ्यो दंष्ट्रिभ्यो भूतेभ्योंऽहोभ्य एव वा ॥ २७॥ எங்களுக்கு யாரிடமெல்லாம் பயமோ, க்ரஹங்கள், பூதங்கள், கேது (கொடிகள்) அரசர்கள், ஊர்வன, பற்களால் கடிக்கக் கூடிய பிராணிகள், பெரிய நாகங்கள் இவைகளிடமிருந்தும்

सर्वाण्येतानि भगवन् नामरूपास्त्रकीर्तनात् ।प्रयान्तु सङ्क्षयं सद्यो ये नः श्रेयःप्रतीपकाः ॥ २८॥ இவைகளின் பெயரைச் சொன்னாலே பயம். எங்கள் நலனை கெடுக்கும் எதுவானாலும்- அவைகளிடமிருந்து காப்பாய்.

गरुडो भगवान् स्तोत्रस्तोभश्छन्दोमयः प्रभुः ।रक्षत्वशेषकृच्छ्रेभ्यो विष्वक्सेनः स्वनामभिः ॥ २९॥ கருடன் மஹான். வேத, சாஸ்திரங்கள், ஸ்தோத்ரங்கள் இவைகளே உருவானவன். அவர் எங்களை காக்கட்டும். விஷ்வக்சேனர், தன் பெயரை உச்சரித்தாலே காப்பவர், அவர் காக்கட்டும்.

सर्वापद्भ्यो हरेर्नामरूपयानायुधानि नः ।बुद्धीन्द्रियमनःप्राणान् पान्तु पार्षदभूषणाः ॥ ३०॥ ஹரி நாமமே ஆபரணமாக உடைய உன் வாகனங்கள், ஆயுதங்கள், எல்லா ஆபத்துக்களிலிருந்தும் எங்களைக் காக்கட்டும். உன் அணுக்கத் தொண்டர்கள் எங்கள் புத்தி, இந்திரிய , மனம், ப்ராணன் இவைகளைக் காக்கட்டும்.

यथा हि भगवानेव वस्तुतः सदसच्च यत् ।सत्येनानेन नः सर्वे यान्तु नाशमुपद्रवाः ॥ ३१॥ அனைத்து நல்லதும், நல்லது அல்லாதவைகள் எல்லாமே பகவானே தான் என்பது சத்யம்.  ஆகவே உபத்ரவம் செய்யும் அனைத்தும் தானாகவே விலகிச் செல்லட்டும்.

यथैकात्म्यानुभावानां विकल्परहितः स्वयम् ।भूषणायुधलिङ्गाख्या धत्ते शक्तीः स्वमायया ॥ ३२॥ ஏகாத்ம்யபாவம்- ஆத்மா பரமாத்மா என்ற இவைகளின் நிலைப் பாட்டை தெரிந்து கொண்ட பெரியவர்களிடம்  தானே விகல்பமின்றி தன் பூஷணங்கள், ஆயுதங்கள், உருவங்கள் மூலம் தன் மாயையால்  சக்தியை அளிக்கிறாய். 

तेनैव सत्यमानेन सर्वज्ञो भगवान् हरिः ।पातु सर्वैः स्वरूपैर्नः सदा सर्वत्र सर्वगः ॥ ३३॥ அதனால் தான் உன்னை சர்வக்ஞன், எல்லாம் அறிந்தவன், பகவான் ஹரி: என்பர்.   எங்கும் நிறைந்த உன் ஸ்வரூபங்கள் எங்களை எப்பொழுதும் எல்லா இடங்களிலும், காக்கட்டும்.

विदिक्षु दिक्षूर्ध्वमधः समन्ता-दन्तबर्हिर्भगवान् नारसिंहः ।

प्रहापयँल्लोकभयं स्वनेन स्वतेजसा ग्रस्तसमस्ततेजाः ॥ ३४॥ எப்படி பகவான் நரசிம்ஹாவதாரத்தில், திசைகள் அதிரும் படி, அட்டஹாசம் செய்தாரோ, அந்த த்வனி காக்கட்டும். அந்த சமயம் வெளியில் நீண்டு தெரிந்த பெரிய பற்கள், காக்கட்டும். அதைக் கண்டு அனைவருக்கும் தோன்றிய பயம் காக்கட்டும். உலகம் முழுவதும் பரவிய அவரது தேஜஸ் காக்கட்டும்.

 

இந்திரனே!, இது நாராயண கவசம் என்ற மந்திரம். இதை ஜபித்து பலம் பெறுவாய். அசுர படைகளை ஜயிப்பாய்.  இதை ஜபித்து சித்தி அடைந்தவர்கள், கண்களால் ஒருவரைப் பர்த்தாலும், சரீரம் பட்டாலும் அவர் முக்தியடைவார்.  இந்த வித்யையை அறிந்த பின் எதிலும் பயம் தோன்றாது.  யோக தாரணையால் தானே தன் சரீரத்தை விடும் அளவு சக்தி பெறுவர்.

இந்த வித்தையை முன்பொரு காலத்தில் கௌசிகரான ஒரு முனிவர் இவ்வாறு தன் தேகத்தியாகம் செய்வதை சித்ர ரதர் என்பவர், தன் மனைவி மார்களுடன் ஆகாயத்தில் சென்று கொண்டிருந்தவர், கண்டார்.  திடுக்கிட்டு விமானத்துடன் பூமியில் விழுந்து விட்டார்.  அதன் பின் அங்கிருந்த மாணவர்கள் சொல்லி தெரிந்துகொண்டு, அந்த ரிஷியின் அஸ்தியை மரியாதையுடன் சரஸ்வதி நதியில் கரைத்து விட்டு தன் இருப்பிடம் சென்றார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இதை நன்றாக கற்று, ஜபித்து பலன் அடைவீர்களாக.  இதைக் கற்றவர்களையே  பயம் தெளிய நமஸ்கரிப்பார்கள்.

சதக்ரது என்ற இந்திரன் இந்த மந்திரத்தைக் கற்றுக் கொண்டு யுத்தத்தில் அசுர்களை ஜயித்து மூவுலக சாம்ராஜ்யத்தை திரும்ப பெற்றான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40

 

அத்யாயம்-9

ஸ்ரீ சுகர் சொன்னார்: விஸ்வரூபனுக்கு மூன்று தலைகள் இருந்தன என்பர்.   சோமபீதம், சுராபீதம், அன்னத்தை சாப்பிடும் அன்னாதம் என்பன.   யாகங்களில் இந்த்ராய இதம் – இது இந்திரனுக்கு என்பது போலவே, அசுர்களுக்கும் யாக பலன் கிடைக்குமாறு செய்து வந்தான்.  தாமதமாக இதையறிந்த தேவர்களும் பித்ருக்களும்  கவலையடைந்தனர்.   விஸ்வரூபன்  யஜமானனாக யாகம் செய்யும் சமயம் அவன் தன் தாய் வழி மாமன் போன்ற உறவினர்களுக்கு செய்வதை தடுக்கவும் இயலாது என்பதால் பயந்தனர்.   தேவர்களுக்கு அவமானம், தர்மத்தை மீறிய செயல் என்று தேவராஜன் இந்திரன் அவன் தலைகளை வெட்டி விட்டான்.  சோம பீதம் என்ற தலை கபிஞ்சலம் என்ற பக்ஷி ஆயிற்று.  சுராபீதம் என்ற தலை கலவிங்க என்ற பக்ஷி யாகவும், அன்னதம் என்ற தலை தித்திரி என்ற பறவையாகவும் ஆயின.  இந்த செயலால் இந்திரன் ப்ரும்மஹத்தி என்ற தோஷத்தையடைந்தான்.  ஓராண்டுகாலம் ஆன பின் தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள அந்த தோஷத்தை நான்கு பாகமாக நால்வருக்கு கொடுத்து விட்டான்.   பூமிக்கு தோஷம் உவர் நிலமாக ஆகும். அதற்கு பரிகாரமாக வெட்டினாலும் பள்ளம் நிரம்பும் பூமி சமமாக ஆகும் தன்மையை வரமாக அளித்தான்.  மரங்களுக்கு  வெட்டுப்பட்ட இடங்களில் பால் வடிவது  தோஷம், வெட்டினாலும் வளரும் தன்மையை வரம். பெண்களிடம் தோஷம் மாதவிலக்காக தோன்றுவது தோஷத்தின் பலன்,  கர்பம் தரித்திருக்கும் காலத்திலும் தாம்பத்யம் தடைபடாமல் இருப்பது வரமாகவும், கடலில் நுரை தோஷத்தின் பலன்,  அருவிகள் மூலம் இடைவிடாது நீர் வரவு கடலுக்கு வரம். 

தன் மகனை இந்திரன் கொன்றதை பொறுக்க மாட்டாமல் விஸ்வரூபனுடைய தந்தை த்வஷ்டா இந்திரசத்ரோ! வர்தஸ்வ என்று தன் மகனை உயிர்ப்பித்தார். கோரமான உருவத்துடன் நிமிஷத்திற்கு நிமிஷம் வளர்ந்து மலை போல நின்ற அந்த அசுரன், மூன்று தலைகளையும் சூலத்தில் ஏந்திக் கொண்டு, நடனமாடினான்.   க்ருதாந்தன் யுக முடிவில் ஆடுவது போல.  தீ பிரகாசமாக ஜ்வாலை மலையளவு வளர்ந்தாற்போல வளர்ந்தான். சந்த்யா கால வானம் போல உடல் வர்ணம்   புடமிட்ட தாம்ரம் போல கேசமும், மீசையும்,  நடுப்பகல் சூரியன் தகிப்பது போல் சிவந்த கண்கள், பூமியையே புரட்டிப் போடுவது போன்ற நடை,  கம்பீரமான  முகத்தால் வானத்தையே வளைத்து வாயில் போட்டுக் கொண்டும்,  க்ரஹ நக்ஷத்திரங்களை நாக்காலேயே நக்கியும், மூவுலகையும்  வாயிலிட்டு சுவைத்தும் , அடிக்கடி வாயால் பயங்கரமாக எக்காளமிட்டபடியும்  திரிந்தான்.  உலகில் உயிரினங்கள் நடுங்கி இலக்கின்றி ஓடின.  த்வஷ்டாவின் மகன் அவனை விருத்திரன் என்றனர்.  ஒரு நிலையில் அவன் தவிர உலகில் எதுவுமே மீதி இராது என்பது போல பயந்தனர்.  பயங்கரமான உருவம் நடுங்கச் செய்தது.  கொல்வதற்காக, கூட்டம் கூட்டமாக திவ்யாஸ்திரங்களை எடுத்துக் கொண்டு சக்தியுள்ள ரிஷிகளும் மற்றவர்களும் முயன்றனர். எதற்கும் பலனில்லாமல் போகவே பகவானை சரணடைந்தனர். 

தேவர்கள் துதி செய்தனர்:  இவன் அந்தகனே தானோ என்று பயப்படுகிறோம்.  வானம், வாயு மண்டலம், அக்னி, பூமி, நீர் அனைத்தையும் தன் வசம் ஆக்கிக் கொண்டு விட்டான்,  எங்களால் இவனை ஜயிக்க முடியாது.  அதனால் பகவானே சரணம்.   பரிபூர்ண காமனாக எதையும் எதிபார்க்காதவனாக, மிகவும் சாந்தமாக இருப்பவனை ஆசை காட்டி தன் வசப் படுத்த வழியில்லை.  எதிர்த்து போரிடுவது குட்டி நாய் தன் வாலால் சமுத்திரத்தை ஆழம் பார்ப்பது போலத் தான்.  பகவானே, நீங்கள், பல்லின் நுனியில் பூமியைத் படகாக்கி பிரளய காலத்தில் காத்தவர்.   மஹா மீனமாக வந்து அண்டியவர்களை காத்தீர்கள். தற்சமயம் அதே நிலையில் த்வஷ்டாவின் மகனிடம் பயந்து நடுங்குகிறோம்.  ப்ரளய காலத்தில் பயங்கரமான அலைகள்  முட்டி மோதின. அதன் வேகத்தில் ஸ்வயம்பூ  தான் அமர்ந்திருந்த பத்மம் ஆட, விழப் பார்த்தார்.  அந்த சமயம் பகவானே, நீங்கள் தான் காப்பற்றினீர்கள். அதே கருணையோடு தற்சமயம் எங்களையும் காக்க வர வேணும்.  நீங்கள் தான் எங்களை படைத்து எங்களுக்கு பொறுப்புகளையும் கொடுத்தீர்கள்.  உங்கள் அனுக்ரஹ பலத்தால் உலகத்தை சிருஷ்டி செய்ய முனைந்திருக்கிறோம்.  உங்களைக் காணாமல் தவிக்கிறோம், பகவானே! எதோ ஒரு அவதார ரூபத்தில் எங்கள் எதிரில் தரிசனம் தர வேண்டுகிறோம். (உபேந்திர, பரசுராம, ராம, மத்ஸ்ய, பல ராம என்ற உருவங்கள்)

பகவானே, எங்கள் பங்காளிகள் உபத்ரவம் செய்த போதெல்லாம், தேவ, ரிஷி, கால் நடைகள்,மனிதன் என்று அவதாரங்கள் செய்து உங்கள் மாயையால்  ஒவ்வொரு யுகத்திலும் காப்பாற்றியது போலவே இப்பொழுதும் எங்கள் ஆத்ம தெய்வமான உங்களிடம் பிரார்த்திக்கிறோம்.  வேறு யாரிடம் சரணடைவோம். சரணம், சரணம், எங்களுக்கு நன்மையைச் செய்யும் மகாத்மாவே! 

ஸ்ரீ சுகர் சொன்னார்: இப்படி தேவர்கள் வந்து வேண்டிய பொழுது, மேற்கு திசையில் பகவான் சங்க, சக்ர, கதா சமேதமாக ப்ரசன்னமானார்.   தன்னைப் போன்றே தோற்றம் உடைய பதினாறு அனுக்கத் தொண்டர்கள், ஸ்ரீவத்ஸ கௌஸ்துபம் மட்டும் இல்லாமல், உடன் வர, அப்பொழுதே மலர்ந்த சரத் கால தாமரை மலர் போன்ற கண்களுடன்  காட்சி தந்தார்.  கண்டவுடன் அனைவரும் தண்டம் விழுவது போல தடாலென்று விழுந்து நமஸ்கரித்தனர்.  மெள்ள எழுந்து துதி செய்தனர்.

தேவர்கள் துதி:  யக்ஞ வீர்யனான உனக்கு நமஸ்காரம். கையில் சக்கரத்துடன் விளங்கும் புரூஹூதனே, நமஸ்காரம்.   முக்குணங்களையும் அடக்கி ஆளும்  உன் பரம பதத்தை  முழுமையாக அறிந்தவர் எவருமில்லை.  உனக்கு நமஸ்காரம். இதன் பின் பகவானின் பல நாமங்களையும் சொல்லி பாடுகின்றனர்.

ओं नमस्तेऽस्तु भगवन् नारायण  वासुदेवाऽऽदिपुरुष महापुरुष महानुभाव परममङ्गल परमकल्याण परमकारुणिक केवल जगदाधार लोकैकनाथ सर्वेश्वर लक्ष्मीनाथ परमहंसपरिव्राजकैः परमेणात्मयोगसमाधिना परिभावित-परिस्फुटपारमहंस्यधर्मेणोद्घाटिततमः-कपाटद्वारे चित्तेऽपावृत आत्मलोके स्वयमुपलब्धनिजसुखानुभवो भवान् ॥ ३३॥

உன் மாயை, விளையாட்டாக நீ செய்வதை புரிந்து கொள்ள சக்தியில்லை,   சரணடைகிறோம், காப்பாற்று..

நீயே தான் படைத்தாய். நீயே தான் எங்களை காக்கவும் வேண்டும்.  உனக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது. உன் அடியார்களுக்குள்ளேயே,  சிஷ்டன்-நல்லவன், துஷ்டன்- கெட்டவன் என்ற பாகுபாடு செய்வது ஏன்? அனைத்திலும் வஸ்து ஸ்வரூபமாக இருப்பவன் நீயே. சர்வேஸ்வரன், ஜகத் காரண பூதன். நீ அறியாததா?

வீடு கட்ட வரும் கொத்தனார் அறிவார்.  எது, எந்த அளவு, எந்த சமயம் வேண்டும் என்பதை.  ப்ரும்ம ஸ்வரூபனான நீ, உன் அவதார காலத்தில் மூவுலகின் தேவைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிவாய்.  அனுக்ரஹம், நிக்ரஹம் இவைகளை உன் மாயா பலத்தால் அந்தந்த சமயம் நீ ஒருவனே செய்து விடுகிறாய்.   சாதாரண மனித மனம் கயிற்றில் பாம்பைக் கண்டால் நடுங்குவதும், பின் உண்மையை உணர்ந்துகொள்வதும் போலவும் உன் மாயாமயமான ஆற்றலில் வெளிப் படுவதை எளிதில் தெரிந்து கொள்வதில்லை.  ஆகவே, பரமேஸ்வரா! உன்னிடம்  பக்தியுடன் சரணடைவதே எங்களால் முடிந்தது.  அம்ருத மதனம் செய்ததை நினைவு கூர்கிறோம்.  தேவர்கள், அசுரர்களும் அனைவரும் ஒன்றாக உன் தலைமையில் கடைந்தனர்.  அவரவர் சுயநலம் காரணமாகத் தான் கூடினர்.  இருந்தாலும்  அனைவரையும் ஒன்றாக கூட்டி வைத்து பெரிய செயலை நடத்த உன்னையன்றி வேறு எவராலும் முடியாது என்று அறிவோம்.

த்ரிபுவனாத்மபவன், த்ரிவிக்ரம, த்ரி நயன, த்ரிலோக மனோஹரானுபாவ, உன்னுடைய விபூதிகளே, திதி மைந்தர்களான தேவர்கள், தனு மைந்தர்களான தானவர்கள், (முன் செய்தது போலவே) இப்பொழுதும் த்வஷ்டாவின் மகனை அடக்கு.  உன் அவதார காலத்தில் தரித்த ஆயுதங்களை தரித்து எங்களுக்கு அனுக்ரஹி, ஏனெனில் நாங்கள் தாவகா:- உன்னைச் சார்ந்தவர்கள்.  (முதல் உரிமை எங்களுக்கு) 

உங்களை வணங்கி வந்து நிற்கும் எங்கள் மேல் கருணை செய். எங்கள் தாபத்தை தீர்த்து வை. எந்த நேரமும் உன் நினைவாகவே இருந்து, உன் புகழையே பாடுவதும், உன் குணங்களையே கேட்பதுமாக இருக்கிறோம்.

பகவன்! தவாஸ்மி- உன்னையே சரணடைகிறோம்.  தேச காலங்களை அறிந்தவன். ஆகாசமே சரீரமாக உடையவன். சாக்ஷாத் பரப்ரும்மன். ஹே பரமாத்மா! இதைத் தவிர,  வேறு என்ன கேட்போம்.  ஒளி மயமான உன்னிடம், சிறு நெருப்பின் தீச் சுடரை யாசிப்பது போல  இருக்கும் எது கேட்டாலும்.

பரமகுரோ! நீயே தீர்மானித்துக் கொள். எங்கள் தேவை என்ன என்பதை கூட யாமறியோம். உன்  பாத  நிழலை அண்டி வந்து நிற்கிறோம். நூறு நூறு பலாச மரங்கள் தரும் சாயை போன்ற குளிர்ந்த பாதங்கள்.  சம்சார சாகரத்தில் உழலும்  பலவிதமான ஜீவன்களின், சார்பாக இங்கு வந்து வேண்டுகிறோம்.

எனவே, ஈசா!  த்வஷ்டாவின் மகனை வதம் செய். அவன்  மூவுலகத்தையும்  ஆக்ரமிக்கிறான். க்ருஷ்ணா! ஏற்கனவெ, எங்கள் அஸ்திரங்களை, எங்கள் ஆயுதங்களை, எங்கள் தேஜஸை க்ரஹித்துக் கொண்டு விட்டான்.

எங்கள் இதய கமலத்தில் விளங்கும் ஹம்ஸம் நீ, க்ருஷ்ணா, உன்னை காணவா முடியும்? உன் எல்லையற்ற புகழ் ஒன்றே நாங்கள் அறிந்தது, சத்யத்தை க்ரஹிக்கும் (ஹம்ஸம் போல) சம்சார பாதையைக் கடந்து மீள முடியாமல் ஓய்ந்து உன்னை அண்டியவர்களுக்கு ஆப்தமானவனே!  சாயுஜ்யம், சாலோக்யம் என்ற பதவிகளைத் தருபவனே, ஹே ஹரே! நமஸ்தே.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்விதம் வேண்டியதைக் கேட்டு,  எழுந்து வந்து ஆதரவுடன் பார்த்து  ஸ்ரீ ஹரி பதில் சொன்னார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்:   சுரஸ்ரேஷ்டர்களே!   பக்தியுடன் இங்கு வந்து சரணடைகிறோம் என்று சொன்னதை ஏற்கிறேன்.  இங்கு வந்ததே உங்கள் நிலைமையையும், தேவைகளையும் தெரிவித்து விட்டன. ரோகம் இல்லாதவன் ஏன் மருந்தை நாடிப் போகிறான்.  மகவன்! தைரியமாக போய் வா,  சுத்தமான, ப்ரும்ம ஞானம் அறிந்த ஒருவரைத் தேடிக் கண்டு பிடி.  நாராயண கவசம் த்வஷ்டாவின் மகன் உனக்கு கொடுத்திருக்கிறான். அவனிடமும் அந்த கவசம் இருக்கிறது.  எனவே, மந்திரங்கள் சொல்லி உருவேற்றிய சரீரம் உடைய ஒரு ரிஷியின் சரீர அஸ்தியை யாசித்து பெறுங்கள்.  அதைக் கொண்டு விஸ்வகர்மா ஆயுதம் தயாரித்துக் கொடுப்பார். நீ வ்ருத்திரனின் தலைகளைக் கொய்தாய் அல்லவா? அதற்கு ஈடான ஆயுதம் வேண்டும்.

(ஞானியும், வேதமறிந்தவனும், நன்னத்தையுடையவனுமான விஸ்வரூபனை, கொன்றதற்கு பரிஹாரம் அதே போல ஞானியும், வேத விற்பன்னரும், நடத்தைகளும் உடைய முனிவரால் மட்டுமே இயலும் என்பதாக )

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-55

அத்யாயம்-10

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இந்திரனுக்கு இவ்வாறு உத்தரவிட்டு விட்டு பகவான் அந்தர்தானமானார்.   தேவர்களும் ஆதர்வண  என்ற ரிஷியை சந்தித்து வேண்டினர்.  கூட்டமாக பகவான் சொன்னார் என்பதற்காக யாசிக்க வந்துள்ளீர்கள்.  உலக வாழ்க்கை, சரீரம், அதன் முடிவான மரண பயம் இவற்றை நீங்கள் அறிய மாட்டீர்கள்.  ஜீவன்கள்  வாழவே விரும்புபவர்கள்.  ஆத்மா வேறு என்று உணர்ந்தாலும் தன் சரீரத்தில் பற்று உடையவர்களே. சரீரத்யாகம் செய்ய எளிதில் சம்மதிக்க மாட்டார்கள்.  யாசிப்பது ஸ்ரீ விஷ்ணு பகவானே என்றாலும்.

தேவர்கள் சொன்னார்கள்: ப்ரும்மன், நீங்கள்  உலகில் அனைத்து உயிர்களிடமும் அனுதாபம் உள்ள மகான் புண்யஸ்லோகனை எண்ணி கர்ம மார்கத்தில் ஈடுபட்டவர்.  உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. சுயனலமே பெரிதாக எண்ணுபவர்  உலகில் பிறர் கஷ்டத்தை உணர மாட்டார்கள்.  நீங்கள் அப்படி அல்லவே. அறியாமல் உங்களை யாசியுங்கள் என்று பகவான் சொல்வாரா?

ரிஷி சொன்னார்:  உங்களுக்கு நன்மை என்பதால் நான் தேகதியாகத்தைச் செய்கிறேன்.  பூத தயை – பிற உயிர்களிடம் அன்பு உள்ள மனிதன் தானே தன் ஆத்மாவுக்கு நாதனாகிறான். ஸ்வதந்திரன் ஆவான். தர்மமோ, புகழோ அந்த சுதந்திரத்தைத் தராது. தாவரங்களைப் பாருங்கள். தன்னை அழித்தவனுக்கும் நன்மையையே  செய்யும். அது தான் அழியாத தர்மம். பகவான் தானே அனுசரித்த தர்மம். எவனுடைய மனம் மற்ற ஜீவன்களின் துக்கத்தில் தானும் துக்கமடையுமோ, அவர்கள் சுகத்தில் தானும் பங்கேற்கிறானோ,  அவனே அழிவற்றவன். அஹோ! என்ன கஷ்டம். என்ன தீனமான நிலை. தங்கள் பங்காளிகளிடையே தோன்றியுள்ள இந்த பயம். 

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தர்மத்தை உபதேசித்து விட்டு, தத்யங்க் – அதர்வணர்-  என்ற அந்த ரிஷி, (ததீசி) பரம் பொருளான பகவானிடத்தில் தன் ஆத்மாவை வைத்தவராக உடலைத் தியாகம் செய்தார்.  யோக  மார்கத்தில், தன் வசப்படுத்தியிருந்த இந்திரியங்கள், ப்ராணன் முதலான வாயுக்கள், மனம், புத்தி இவற்றை உதறி  விட்டவர்,  தேகத்தை விட்டு வெளியேறும் கடைசியான யோக நிலையை அடைந்தபின் தேகம் தானே கழண்டு விழுந்து, அதைச் சற்றும் அறியாதவராக பரமனடி சேர்ந்தார்.

அதன் பின் இந்திரன் விஸ்வகர்மாவைக் கொண்டு  ரிஷியின் அஸ்தியிலிருந்து வஜ்ராயுதம் தயாரிக்கச் செய்து பகவானின் ஆசியைப் பெற்று,  தேவகணங்கள் சூழ, தன் பட்டத்து யானை மேலேறி உடன் வந்த தேவ கணங்கள் வாழ்த்த மூவுலகையும் மகிழ்விப்பவன் போல கிளம்பினான்.  அசுர்களின் பாசறை சென்றவன். வ்ருத்திரனை போருக்கு அழைத்தான். ருத்ரன் கோபத்துடன் அழைப்பது போல இருந்தது.

அதன் பின் சுர, அசுர்களிடையேயான  யுத்தம் நர்மதா நதிக் கரையில், த்ரேதா யுகத்தில் பயங்கரமாக நடந்தது.  கையில் வஜ்ராயுத்துடன், ருத்ர கணங்கள், வசு, ஆதித்ய கணங்கள், அஸ்வினி குமார்கள், பித்ருக்கள், அக்னி, மருத்துகள், ரிஷிகள் சாத்யர்கள், விஸ்வே தேவர்கள்,  மருத்பதி என்று அனைவரும் புடை சூழ போருக்கு அழைத்தவனை வ்ருத்திரனும் எதிர்கொண்டான்.  அவனுக்கு சகாயமாக நமுசி, சம்பரன், அனர்வா, த்விமூர்தா, ருஷபன் என்ற அசுரன், ஹயக்ரீவன், சங்கு சிரஸ், விப்ரசித்தி, அயோ முகன், புலோமா, விருஷபர்வா, ப்ரஹேதி, ஹேதி, உத்கலன், தைத்ய தானவர்கள், யக்ஷ ரக்ஷர்கள், ஆயிரக் கணக்கானவர்கள்,  சுமாலி, மாலி முதலியோர், கார்த்த்ஸ்வர வம்சத்தினர்,  தாங்களே ம்ருத்யு போல இந்திரனின் சேனையை எதிர்கொண்டனர்.

சற்றும் தயக்கமின்றி சிம்ஹ நாதம் செய்தபடி, மதம் கொண்ட யானைகளுடன், அளவில்லாத அம்புகள், ப்ராஸங்கள், முத்கர, தோமரங்கள், சூலங்கள், பரஸ்வதங்கள், கட்கம் எனும் வாள், சத்க்னீ, புசுண்டீ முதலியன,

அந்த பிரதேசமே, இவ்வாறான ஆயுதங்கள் இரைந்து காணப்பட்டன.  கூர்மையான சரங்கள், ஆகாயத்திலிருந்து ஜோதி கணங்களே விழுந்து விட்டாற் போல பிரகாசமாக நிறைந்து காணப் பட்டது.

சுர சைன்யத்தினர் ஆசுர அஸ்த்ர., சஸ்திரங்களின் தாக்குதலை தாங்க முடியாமல் சிதறினர். கை கால் உடைந்து ஆங்காங்கு விழுந்தனர்.  இதற்குள் அஸ்திர சஸ்திரங்கள் தீர்ந்து போனதாலோ, மலை முகடுகளையும், பாறைகளையும், அடி மரங்களையும் அசுரர்கள் அவர்கள் மேல் வர்ஷித்தனர்.   அதன் பின்னும் அதிக சேதம் இல்லையென்பதை அறிந்து, வ்ருத்திரனின் ஆட்கள், மேன் மேலும் மரங்களையும், கற்களையும் வீசினர்.   யுத்தமுடிவு என்ன ஆனாலும் சரி, இனி நம்மால் தாக்கு பிடிக்க முடியாது என்று தோன்றியதாலோ, அசுர சைனிகர்கள் ஓட்டம் பிடித்தனர்.  வ்ருத்திரன் அவர்களை பெயர் சொல்லி அழைத்து, வீரர்களே, பிறந்தவன், இறப்பது நிச்சயம் என்பதை அறியாதவர்களா? ஓடாதீர்கள் என்று அழைத்தான்.  இதுவே எளிய வழி ம்ருத்யுவை எதிர்கொள்ள.  யுத்த பூமியில் விழுந்தால் ஸ்வர்கம் செல்வீர்கள்.  அதிர்ஷ்டவசமாக நம்மை ம்ருத்யு தேடி வருகிறான். ரண பூமியில் மரணம், ப்ரும்ம யோகத்தால் மரணம் இரண்டும் ஒன்றே என்றான். 

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-33

 

அத்யாயம்-11 

ஸ்ரீ சுகர் சொன்னார்:   இது தான் தர்மம்-  நம் கடமை என்று தலைவன் சொன்னதைக் கேட்டாலும், பயத்தால் நடுங்கிய சேனை வீர்கள் ஓடி விட்டனர்.  யுத்தபூமியில் புற முதுகிட்டு ஓடுபவர்களை அழைத்தும் அவர்கள் வராததை வ்ருத்திரன் கண்டான்.  ஆயினும் கலங்கவில்லை. வ்ருத்திரனின் பயங்கரமான கர்ஜனை போன்ற போர் அறைகூவலிலேயே, தேவ சைன்ய வீர்கள் பாறைகளால் அடிபட்டது போல விழுந்தனர்.   கோபத்துடன் கையில் சூலத்துடன் பாதங்களால் ரணபூமியை மிதித்தபடி, அட்டகாசமாக முன்னேறியவன், இந்திரனை, தன் இடது கையால் பிடித்தான்.  தன் கதையால் இந்திரனின் ஐராவதத்தை தாக்கினான். அதன் முகத்தில் ஓங்கிஅடித்தான்.  பார்த்தவர்கள் அனைவரும் திகைத்தனர்.  ஐராவதம் ஏழு வில் தூரம் பின்னடைந்தது.  இந்திரனை நேருக்கு நேர் நின்று வசை பாடினான்.  உன் கையில் வஜ்ராயுதமும் சாதாரண கதை போலவே செயல் இழக்கும். உன் பராக்ரமத்தாலா அதை அடைந்தாய், முனிவர் சந்தோஷமாக தன் உடலையே தந்தது. அவருடைய தவமும், நேர்மையும் யோகமும் நீ எப்படி அறிவாய்.  சகோதரன், உனக்கு சமயத்தில் உதவியவன் என்பதை மறந்து கொல்ல வந்து நிற்கிறாய். அற்பனே! என்ன சாதிக்கப் போகிறாய்.  கருமியின் கையில் கிடைத்த தனம் பயனின்றி போவது போல வஜ்ராயுதத்தின் அருமை தெரியாத உன் கையில் பயனின்றி போகக் கூடாது. பிரயோகி இந்த வஜ்ராயுதம் ஸ்ரீ ஹரியின் தேஜஸால், ததீசியின் தவத்தினால் வந்த தேஜசும் கூடியது. அமோகமான ஆயுதம் இது.  ஸ்ரீ ஹரி இருக்குமிடத்தில் நிச்சயம் வெற்றி இருக்கும் என்ற நியதி படி நீ வெற்றி பெறலாம். உன் சாமர்த்யத்தால் அல்ல.   வஜ்ராயுதத்தை பிரயோகி. சங்கர்ஷ்ண மூர்த்தியான பகவானிடம் நான் மனதால் அடைந்து விட்டேன். இந்த அஸ்திரம் என்ற வியாஜத்தால் புனிதமாகி நல்ல கதியடைவேன். – என்றான். அதன் பின் நேரடியாக துதி செய்யலானான்.

ஹரே! நான் உன் பாதங்களை சரணடைகிறேன்.  முன் போலவே உன் தாஸானுதாஸனாக சேவை செய்வதையே வேண்டுகிறேன். என் மனம், வாக்கு, உடல் அனைத்தும் உன் சேவையிலேயே ஈடுபடட்டும்.

சுவர்கமோ, பாரமேஷ்டி என்ற நிலையோ, ராஜாதி ராஜன் எனவோ, பாதாள உலகங்களின் அதிபன் என்றோ,   யோக சித்தியோ, பிறவியில்லாத  தன்மையோ, வேண்டேன். சற்றும்  உன்னை விட்டு விலகாத இடத்தையே வேண்டுகிறேன்.

அரவிந்தாக்ஷ!  எப்படி, இறக்கை முளைக்காத பறவைகள் தாயை எதிபார்த்து பசியுடன் காத்திருக்குமோ, வெளியில் சென்ற கணவன் திரும்பி வருவதை மனைவி  எப்படி எதிர்பார்த்து காத்திருப்பாளோ, அதே போல என் மனம் உன்னைக் காணவே தவிக்கிறது.

 சம்சார சக்ரத்தில் தன்  வீடு, மனைவி என்று உழலாமல், நல்ல நடத்தையுள்ள பாகவதர்கள் நட்பு வேண்டும், அதுவே நான் வேண்டுவது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின்,  இந்திரனுக்கு வ்ருத்ஹிரனின் உபதேசம் என்ற பதினொன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-27  

 

அத்யாயம்-12

ரிஷி சொன்னார்:  அசுர உடலைத் தியாகம் செய்த பின், யுத்தத்தில் வெற்றி பெறுவதை விட மரணமே மேல் என்று எண்ணிய வ்ருத்திரன், இந்திரனை             க 3தையால் அடித்தான். முன் ஒரு முறை கடலுக்குள் கைடபன் , மகா  புருஷனை அடித்தது போல.   அழிந்தான் இந்திரன் என்று சொல்லி அட்டகாசமாகச் சிரித்தான்.   அடி எதிர்பாராமல் படவும் இந்திரன் கால் இடறி தலகீழாக  எரிந்து கொண்டிருக்கும் க்ரஹம் விழுந்தது போல குப்புற விழுந்தான்.  வஜ்ரம் வ்ருத்திரனின் கையை துண்டித்த படி கீழே விழும் முன் விருத்திரன் தன் பரிகத்தால் (परिघम्)  எடுத்துக் கொண்டு அதாலேயே இந்திரனை தாடையில் அடித்தான். சுராசுரர்கள் திகைத்து ஹா ஹா காரம் செய்தனர்.  விருத்திரனை சிலாகித்தனர்.  வெட்கம் மேலிட இந்திரன் தன் கையிலிருந்து விழுந்த வஜ்ரத்தை திரும்ப எடுக்கவில்லை. விருத்திரன், மூடனே, ஹரியே தயாரித்துக் கொடுத்த வஜ்ரம் அதை ஏன் பிரயோகிக்க தயங்குகிறாய் என்றான்.   பார்க்கப் போனால்,  உத்பத்தி ஸ்திதி லயம் என்று தன் வசத்தில் வைத்திருக்கும் சனாதனமான புருஷனின் சங்கல்பம் அன்றி,  ஜயமோ பராஜயமோ, யுத்தகளத்தில் போரிடும் இருவரிடையில் முடிவாக வெளிப்படாது.  இறுக்கி முடித்த சிகை போல காலனின் வசத்தில் ஜீவன்களில் காலம் கட்டுபட்டுள்ளது.  தன் சரீரம், பலம், ப்ராணன், அம்ருதம், ம்ருயு இவைகளுக்கு தானே பொறுப்பு என்று நினைப்பவன் அக்ஞானி – அறிவற்றவன். மரத்தில் யந்த்ரம் சுயமாகவா  உண்டாகும்? பெண் பதுமை தானாகவா வரும் இவைகளை செய்யும் சிற்பியின் கை வண்ணம் என்பது எப்படி நிதர்சனமோ அதே போலத் தான் உலகில் ஜீவன் களின் தோற்றமும். சத்வ,ரஜஸ், தமஸ் என்ற குணங்களும் ஆத்மா வின் அதீனத்தில் இல்லை. அது சாக்ஷி மட்டுமே.

இந்திரனே! என்னையே உதாரணமாக எடுத்துக் கொள். என் சூலம், கை இரண்டையும் இழந்தபின்னும் உன் உயிரை எடுக்கும் அதே உத்வேகத்தோடு போர் முனையில் நிற்கிறேன்.  ஜயிக்க முடியுமானால் மட்டுமே போரில் ஈடுபடுவேன் என்பது சூதாட்டமாக சொல்வர். பணயமாக யானை. குதிரைகளை வைத்து ஆடுவது போல.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவரும் அன்யோன்யமாக நண்பர்கள் போலவே மதித்தனர். இந்திரன் பதில் சொன்னான்:  அஹோ, தானவ, சித்தோ(அ )ஸி.  பிறப்பில் தானவனாலும் விருத்திரனே, நீ உன் புத்தியால் ஜகதீஸ்வரனை பக்தியால் உணர்ந்த சித்தனாகவே இருக்கிறாய்.   எல்லா உயிர்களுக்கும் நண்பனாக உள்ள பகவானைப் போலவே நீயும் நண்பனே. வைஷ்ணவீ மாயையும் அறிந்தவன். அசுரன் அல்ல மஹாபுருஷனே. அசுர குணம் ரஜஸ் பிரதானமானது என்பது உலக வழக்கு. ஆனால் நீ வாசுதேவனித்தில் திடமான அன்பை உடையவனாக இருக்கிறாய். அம்ருதமயமான சமுத்திரத்தில் விளையாடும் உனக்கு , பள்ளத்தில் தங்கிய குட்டை ஜலம் எதற்கு? 

இருவரும் ஒருவரையொருவர்  தர்மத்தை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு பேசிக் கொண்டபின், யுத்தத்தை தொடர்ந்தனர்.  வ்ருத்திரன் தன் பரிகத்தை எடுத்துக் கொண்டான்.  இடது கையால் அதை இந்திரனை நோக்கி வீசினான். அவனும் வஜ்ராயுத்தால், விருத்திரனின் கையை தாக்கினான்.  இரு கைகளும் இல்லாத நிலையில் பிரவாகமாக ரத்தம் சொட்ட,  இறக்கைகளை இழந்த பறவை ஆகாயத்திலிருந்து விழுவது போல விருத்திரன் விழுந்தான். அதன் பின்னும் தாடையின் ஒரு பகுதி பீமியிலும், மேல்பகுதி சுவர்கத்திலுமாக வளர்ந்து, அதன்

பலத்தில் வானளாவி இருந்த தன் வாய், நாக்கினால் கிடைத்தவரை, பூமி, மலைகள் என்று மூவுலகையும் இழுத்து பயங்கரமான பற்களால் கடித்து, வஜ்ரதாரியான இந்திரனையும்.  அவன் வாகனங்கள், ஆயுதங்களோடு, உடன் இழுத்து  முழுங்குபவன் போல வாயில் போட்டுக் கொண்டான்.  மஹாப்ராணன், மஹாபலம் உடையவன், மஹாவீர்யோ, மஹா ப்ரபாவ: என்று கண்டவர் வியந்தனர்.  அஜகரம் எனும் மலைப் பாம்பு, யானையை விழுங்குவது போல இருந்தது.  அசுரனின் பெரிய வயிற்றுக்குள் விழுந்த இந்திரன் யோக மாயா பலத்தால், (நாராயண கவசம் சொல்லி உருவேறியிருந்ததால்)  வஜ்ரத்தால் அவன் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளி வந்தான்.  மலையின் சிகரம் போல இருந்த அவன் தலையை வஜ்ரத்தால் அடித்தான். சட்டென்று திரும்பிய விருத்திரன் இந்திரனின் தோள்களைப் பற்றிக் கொண்டான்.  பலமாக இந்திரனின் தோள்களைத் தாக்கியபடியே வேகமாக சுழன்றான். சூரியனின் கதியில் உத்தராயண, தக்ஷிணாயனங்கள் மாறி வருவது போல  இருவரும் அந்தரிக்ஷத்தில் சுழன்றனர்.  உயிர் பிரிந்த விருத்திரனின் உடல் விழுந்ததும் தேவர்கள் துந்துபியை முழங்கினர்.  தேவ கந்தர்வ, சித்தர்கள், புஷ்பங்களை வர்ஷித்தனர்.  விருத்ரனின் ப்ராணன் அனைவரும் காண ஜ்யோதி மயமாக அகார பொருளான வாசுதேவனின் வைகுண்டம் சென்றடைந்தது. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், விருத்திர வதம் என்ற பன்னிரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-35

அத்யாயம்-13

ஸ்ரீ சுகர் சொன்னார்: விருத்திரனின் வதம் ஆனதில் லோகபாலர்கள், தேவ, ரிஷி, பித்ருக்கள், தேவர்கள் பக்ஷத்தில் இருந்த அனைவரும் மகிழ்ந்தனர். இந்திரனைக் காணவில்லை என்பதை கூட பெரிதாக நினைக்கவில்லை. 

அரசன் பரீக்ஷித் கேட்டான்:  முனிவரே! இந்திரன் ஏன் மறைந்தான். வெற்றி பெற்றவன் மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டுமே.

ஸ்ரீ சுகர் சொன்னார்: விருத்திரனின் வளர்ச்சியால் தனக்கு ஆபத்து வரலாம் என்று பயந்த இந்திரன் அவன் தலையைத் துண்டித்தான்.  அந்த தோஷத்தை உலகில் நால்வரிடம் பகிர்ந்து அளித்தான். தற்சமயம் அவனைக் கொன்றதால் ஏற்பட்ட ப்ரும்மஹத்தி, குருத்ரோஹம் என்ற தோஷங்கள்  இவற்றை எப்படி பரிகாரம் செய்வேன் என்று வருந்தினான். ரிஷிகளிடம் விசாரித்தான்.    அவர்களும் யாகம் செய். அஸ்வமேத யாகம் செய்து பகவானை திருப்தி செய்.  பகவான் ஸ்ரீமன் நாராயணனை வேண்டிக் கொள். எந்த பாபமும் அவரால் தான் போக்க முடியும் என்றனர்.  

ரிஷிகள் சமாதானமாகச் சொன்னாலும்,  ப்ரும்மஹத்யா என்ற தோஷம் உருவெடுத்து ஒரு பெண்ணாக இந்திரனைத் துரத்தியது.  சண்டாளி போல வெளிறிய உடலும்,  க்ஷயரோகத்தால் பீடிக்கப் பட்ட நோயாளி போன்ற தோற்றமும் கலைந்த  நரைத்த கூந்தலும், சிவப்பு வஸ்திரமும் வாயிலிருந்து அழுகிய மீன் வசனையும் கொண்ட பெண் உருவம். அவள் பின் தொடர தொடர இந்திரன் ஓடினான். அவள் சென்ற இடமெல்லாம் துர்கந்தம் வீசியது.  கிழக்கில் ஆறம்பித்து உலகம் முழுவதும் சுற்றியபின் வடக்கு திசையில் தப்பிக்க மானஸ சரோவரத்தில் தாமரைத் தண்டில் ஒளிந்து கொண்டான்.  பல காலம், ஆயிரம் வருஷங்கள் அதில் இருந்தபடி அன்ன ஆகாரம் இன்றி இருந்தான். ஹவ்ய வாஹநன் என்ற அக்னி தான் அவனுக்கு உணவு அளிப்பவன். அவன்  குளத்தின் உள் வர இயலாமல் உணவும் இல்லை.  மனதினுள் தியானம் செய்தபடி இருந்தான்.  விஷ்ணு பத்னியான மஹாலக்ஷ்மியின் அருளால் உயிர் வாழ்ந்தான்.

இந்திரன் காணவில்லை என்றதும், நகுஷன் வித்யாதி பலத்தால், தேவலோகத்தை ஆளத் தகுதியானவனாக இருந்ததால், இந்திர பதவியை அடைந்தான். தானே இந்திரன் என்ற மதம் கண்களை மறைக்க, இந்திராணி என்னை ஏற்க வேண்டும் என்று உரிமை கொண்டாடினான். இந்திராணி அகஸ்திய முனிவரின் சாபம் என்ற வியாஜத்தால் அவனை தேவலோகத்திலிருந்து சர்ப்ப ரூபத்தில் பூமியில் விழ வைத்தாள்.

அந்த சமயம் தான் ரிஷிகள், இந்திரன் இருக்குமிடம் அறிந்து அவன் இருக்குமிடம் வந்து அஸ்வமேத யாகம் செய்யச் சொல்லி உபதேசித்தனர்.  பல காலம் செய்த தவத்தினால் சுத்தமாகி விட்டாய், இந்திர பதவியை திரும்பப் பெறுவாய் என்றனர்.

இந்திரனின் விருத்திர வதமும், அதன் பின் அவன் அனுபவித்த கஷ்டங்களும் லக்ஷ்மீ கடாக்ஷத்தால் மீண்டதும் பற்றிய இந்த சரித்திரம் படிப்பவர்களுக்கு நன்மைகளைத் தரும் என்று பலஸ்ருதி சொல்லி முடிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், இந்திர விஜயம் என்ற பதின்மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-23

 

அத்யாயம்-14

பரீக்ஷித் ராஜா வினவினான். வ்ருத்திரன்  ராஜஸ தாமஸ குணங்கள் நிறைந்த குலத்தில் பிறந்தவன்.  அவனுக்கு ஸ்ரீமன் நாராயண ஸ்மரணம் இருந்தது எப்படி?  தேவர்கள், சாதுக்கள், நிர்மலமான மனதுடைய ரிஷிகள் தான் சாதாரணமாக முகுந்த பாதங்களில் பக்தி செய்வதை அறிந்திருக்கிறோம்.  மனிதர்களில் சிலர் தான் மோக்ஷம் வேண்டி சாதனைகள் செய்வர், அவர்களிலும் சிலரே சித்தியடைவர்.  அந்த சித்தர்களிலும், ஸ்ரீமன் நாராயண பராயணர்களாக இருந்து, அமைதியான குணமும் உடையவர்கள் கோடியில் ஒருவர் இருந்தால் அதிகம்.  வ்ருத்திரன் எப்படி பாபி என்றானான். க்ருஷ்ணனிடத்தில் திடமான பக்தியுடையவன்,  நியாயமாக போர் புரிந்தான், தன் ஆற்றலால் சஹஸ்ராக்ஷன் என்ற இந்திரனை மகிழ்ச்சியுடன் எதிர் கொண்டான். இந்திரன் அவன் நல்ல குணத்தை அறிந்து கொண்டு தனக்கு சமமாக  மதித்தான்.

ஸ்ரீசுகர் சொன்னார்: ராஜன்! இந்த கதையைக் கேள்.  வியாசர் சொல்லி, நாரதர் கேட்டார்.   ஸூரசேன வம்சத்தில் ஒரு சக்ரவர்த்தியான அரசன் இருந்தான்.  சித்ரகேது என்பது அவன் பெயர்.  அவன் ஆட்சியில் பூமியில்  பொன் விளைந்தது.  நிறைய மனைவிகள். ஆயினும் சந்ததி இல்லை என்று வருந்தினான்.  அனைவரும் ருபம், குணம், நற்குடி பிறப்பு, வித்யை, ஐஸ்வர்யம் என்று எல்லா விதமான செல்வமும் நிறைந்தவர்கள். அவர்கள் சக்ரவர்த்தினிகள் சந்தோஷமாகவே இருந்தனர். ஒருசமயம் யதேச்சையாக ஆங்கிரச முனிவர் தன் பரிவாரங்களோடு வந்தார்.  அரசனும் அவரை பூஜித்து,  விருந்தினராக வந்த அவருக்கு வேண்டிய உதவிகளை குறைவில்லாமல் செய்தான்.  மகரிஷி தானே அரசனிடம் வினவினார்.

அரசனே! நலமாக இருக்கிறாயா? உன் பிரஜைகள் நலமா? அரச காரியங்கள், நல்லபடியாக நடக்கின்றனவா?  அரசன் எப்பொழுதும் ஏழு ரகசியமான உளவாளிகளை வைத்திருக்க வேண்டும் என்பது ஒரு நியதி. ஜனங்களுடைய கஷ்ட நஷ்டங்கள் அரசனுக்கு தெரிந்திருக்க வேண்டும்.  அரசன் தங்களுக்கு தேவையானதை செய்வான் என்ற நம்பும் பிரஜைகள் உள்ள அரசன் உயர்ந்தவன்.  உன் மனைவிகள், மந்திரிகள், ஏவலர்கள், சேனை வீர்கள், ஊர் மக்கள், ஜனபத தலைவர்கள், உன் பிள்ளைகள், உனக்கு அடங்கி இருக்கிறார்களா?  இவர்கள் உன்னை அனுசரித்து இருந்தால் தான் ஆட்சியை சரிவர செய்ய முடியும்.  அரசன் சற்று நேரம் பதில் சொல்ல யோசித்து விட்டு மெதுவாக சொன்னான். முனிவரே, உங்களுக்கு தெரியாததா? எனக்கு சந்ததி இல்லை என்பது மட்டுமே மனக் குறை என்றான்.  என்னைச் சுற்றி உள்ளவர்கள் அனைவரும் என்னிடம் அனுசரித்து இருக்கிறார்கள். உலகில் லோகபாலனோ, சாம்ராஜ்ய அதிபதியோ முக்கியமல்ல. புத்ர பௌத்ரர்கள் உள்ளவன் அதிகம் மதிக்கப் படுகிறான்.  சந்ததி இல்லாதவன் என்று என்னிடம் இவர்களுக்கு மனத்தாங்கல் உள்ளது என்பதை அறிவேன். அதனால் முனிவரே! என் முன்னோர்களை கரையேற்ற எனக்கு பிரஜை வேண்டும்.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  முனிவர் கருணையுடன் தன் அறிவாலும், தவ வலிமையாலும் த்வஷ்ட்ரு என்ற தேவதையை ஆராதித்து  சரூ என்ற பாயசத்தை வரழைத்து அரசனுக்கு கொடுத்தார்.  அரசனும் முதல் மனைவியும் பட்ட மகிஷியுமான க்ருத த்யுதி என்பவளுக்கு அந்த பாயசத்தைக் கொடுத்தான்.  முனிவரும் உன் மகன் பிறப்பான், நலமாக இரு என்று ஆசிர்வதித்துச் சென்றார்.  க்ருத த்யுதி என்ற அரசியும் க்ருத்திகா தேவதை அக்னியை தாங்கியது போல அரசரின் கர்பத்தை தாங்கினாள்.  நாள் ஒரு மேனி என்று நாட்கள் செல்லச் செல்ல அந்த குழந்தை நன்றாக வளர்ந்து, சூரசேன குலத்தோருக்கு மன மகிழ்ச்சியைத் தரும் சுகுமாரனாக பிறந்தான்.  அரசன் மகிழ்ந்து, குழந்தைக்கு ஸ்னானம் செய்வித்து, அலங்கரித்து, அந்தணர்களைக் கொண்டு ஆசிகள் பெற வைத்து, ஜாதகர்மா என்பதையும் செய்தான்.   அந்தணர்களுக்கு தங்கம், வெள்ளி, ஆடைகள் ஆபரணங்கள் என்று நிறைய தானமாக கொடுத்தான்.  பலருக்கு நிலங்கள், க்ராமங்கள், குதிரை, யானை என்றும் கணக்கில்லாத பசுக்களையும் தானம் கொடுத்தான்.   அவர்களும் ஆசிர்வதித்தனர். தன்யம், புகழ், ஆயுஷ் என்று மந்திரங்கள் சொல்லி மனப் பூர்வமாக ஆசிகளை பொழிந்தனர்.

தவமிருந்து பெற்ற மகன், அரசன் தினமும் பெரும் பகுதியை மகனுடனேயே செலவழித்தான்.  செல்வமற்றவன் பாடு பட்டு சேர்த்த தனத்தை பாதுகாப்பது போல பாதுகாத்தான்.  தாயாரும் அவ்வாறே, புத்திரனிடத்தில் அதிக பாசத்துடன், அருகிலேயே இருந்தாள்.  க்ருத த்யுதியின் சபத்னிகளுக்கு தங்களுக்கு மகன் இல்லாதது பொறாமையை கிளப்பி விட்டது.   சித்ரகேது தன் மகனின் தாய் என்று க்ருத த்யுதியிடம் அதிக அன்புடன் நடந்து கொள்வதையும், குழந்தையை கொஞ்சுவதையும்  கண்டவர்கள் பொறாமையால் தவித்தனர்.  சந்ததி இல்லை என்பதை விட அரசனின் பராமுகம் அவர்களை கோபமடையச் செய்தது. தாசிகள் கூட அவர்களை மதிக்காமல் க்ருத த்யுதியிடம் அதிகமாக செவை செய்தனர்.  அவர்களின் தாபம் தலைக்கேறிய நிலையில் குழந்தைக்கு யாருமறியாமல் விஷத்தைக் கொடுத்து விட்டனர்.  இதையறியாத க்ருத த்யுதி தூங்குவதாக நினைத்து வீட்டுக்குள் நடமாடிக் கொண்டிருந்தாள்.  நெடு நேரமாக தூங்குவதைக் கண்டு சந்தேகம் வர குழந்தையைக் கொண்டு வரச் சொல்லி தாத்ரி என்ற பணிமகளிடம் சொன்னாள்.  அந்த பெண் கையில் எடுத்தவள், பிராணன் இல்லாததைப் பார்த்தவள் ஹா ஹதாஸ்மி என்று அலறியபடி  மயங்கி விழுந்து விட்டாள்.  அந்த கதறலைக் கேட்டு ஓடி வந்த ராணி தன் மகனின் சடலத்தை  கண்டாள்.   அவளும் மயங்கி விழுந்தாள்.  இந்த விவரம் அந்த:புர வாசிகள் அழும் குரலைக் கெட்டு விசாரிக்க வந்தவர்கள், ஓடிச் சென்று அரசனுக்கும் சபையினருக்கும் தெரிவித்தனர்.

இந்த துஷ்ட காரியத்தைச் செய்த மற்ற மனைவிமார்களும் பொய்யாக அழுதனர். அரசனால் தாங்கவே முடியவில்லை. பாலனின் காலடியில் கதறியவன் பேசக் கூட முடியாமல் தொண்டையடைக்க வருந்தினான்.ராணி மூர்ச்சை தெளிந்து எழுந்தவள், அரசனை என்ன சொல்லி சமாதனப் படுத்துவாள்?  ஓவென்று கதறியழுதாள். கண்ணிரால் உடல் நனைய, ஹே விதாதா! உனக்கு கண் இல்லையா?  சிருஷ்டியை செய்பவன் நீ என்பார்களே, ஒருவன் ஜீவிப்பதும், மற்றவனுக்கு ம்ருத்யும் தருவதா உன் கருணை?  மனிதனின் பிறப்பும் இறப்பும் ஒரு ஒழுங்கில் இல்லையேன்றால்,  எதற்கு தன் மகன் என்று பாசமும் பந்தமும்.  என் குலம் வளர வேண்டும் என்ற ஆசை ஏன்?   மகனே! இதோ பார், உன் தந்தை தவிக்கிறார்.  பிள்ளையில்லை என்ற துக்கத்தை விட இந்த துக்கம் கொடிது.  யம லோகம் போக உனக்கு ஏன் இந்த அவசரம்?  மகனே, எழுந்திரு, இன்னும் எதையுமே அனுபவிக்கவில்லையே. உன் வயது குழந்தைகள் வருவார்கள். உன்னுடன் விளையாட – என்று இவ்வாறு பலவாறாக புலம்பி அழுதுதாள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: அவளாவது  அழுது அரற்றினாள். அரசனுக்கு குரலே எழும்பவில்லை. பிரமித்தவன் போல பேச்சின்றி இருந்தவன், நினைவு வந்தவன் போல ஓவென்று கதறி அழுதான்.  மற்றவர்கள் செய்வதறியாமல் திகைத்தனர்.  பெற்ற மகனை இழக்கும் துக்கம் என்ன என்பதை உணர்ந்தவர்கள் போல் அழுதனர். இதையறிந்த ஆங்கிரஸ முனிவர் நாரதரோடு அங்கு வந்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது விலாபோ என்ற  பதி நான்காவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-61

 

அத்யாயம்-15 

இறந்த மகன் அருகில் தானும் இறந்தவன் போல விழுந்து கிடந்த அரசனை இருவருமாக சமாதானப் படுத்தினர்.  ராஜேந்திரனே! உன் மகன் யார்? அவனுக்கு இது ஒரு ஜன்மம். தன் வினைப் பயனை கழிக்க உன் பிள்ளையாக வந்தானோ?  பெருகி ஓடும் நீரில் அடித்துச் செல்லப் படும் சருகுகள் போலத்தான் பிறவியும்.  காலம் தான் மனிதர்களை பிராணிகளை ஆட்டுவிக்கிறது. சேர்த்து வைப்பதும், பின் பிரிப்பதும் அதன் விளையாட்டு.  தானியங்கள் விதையாகி முளைக்கும் – வேறு தானியங்கள் வரும் – சில தானியங்கள் விதையாவதில்லை.  அதே போலத் தான் மனிதர்களிலும் சிலருக்கு சந்ததிகள்  தோன்றுவதில்லை. ஈசனுடைய சங்கல்பம் என்பதைத் தவிர வேறு காரணமேயில்லை.  நீயும், நாங்களும் தற்காலத்தில் இருக்கிறோம். முன் ஜன்மத்தில் எப்படி இருந்தோம், மறு பிறவியில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதற்கு எந்த வித உத்தரவாதமும் இல்லை.  ஈஸ்வரனும் தன் மாயையால் ஸ்ருஷ்டியைச் செய்தான்.  தன் மகன் என்ற பாசம் நியாயமானதே. பிறந்த குழந்தை தன் பேச்சாலும், விளையாட்டாலும் பெற்றோரை மகிழ்விக்கிறான், அதற்கு ஈடே இல்லை.  தந்தையிலிருந்து மகன் என்று வம்சம் வளருகிறது. பீஜத்திலிருந்து பீஜம் என்பது போல. தாயார் தேஹத்திலிருந்து பிறப்பது அந்த வம்சத்தின் பீஜமே. அப்படி பார்க்கப் போனால் தேஹி, தேஹமுடையவன் அழிவதேயில்லை. 

ஸ்ரீ சுகர் சொன்னார்: மேலும் பலவிதமாக சமாதானப் படுத்துகிறார்.  அழுது சிவந்த கண்களையும், முகத்தையும்,துடைத்துக் கொண்டு சித்ரகேது முனிவரிடம் கேட்டான்.

யார் நீங்கள்?  துறவி வேஷத்தில் இருக்கிறீர்கள், அறிவுடைய ஞானிகள், ரகசியமாக இங்கு எப்படி வந்தீர்கள்? பூமியில் பலர் பாகவதர்கள் என்றும் அந்தணர்கள் என்றும் உலவுகிறார்கள். என் போன்ற மந்த புத்திகளுக்கு உபதேசம் செய்ய வருவார்கள்.  குமாரன், நாரதர், அங்கிரஸ், தேவலன், அசிதன், எல்லையில்லாத பெருமை உடைய வியாசர், மார்கண்டேயன், கௌதமர், வசிஷ்டர், பகவான் ராமன், கபிலோ, பாதராயணி,   துர்வாசர், யாக்ஞவல்க்யர்,  ஜாது கர்ணி, ஆருணி, ரோமஸ:. ச்யவனோ, தத்த, ஆசுரி, பதஞ்சலி, ரிஷி வேத கிரா என்பவர், போத்ய:, பஞ்சசிரஸ் என்பவர், ஹிரண்ய நாப:, கௌசல்ய:, ஸ்ருத தேவ, ருதத்வஜ:, இன்னும் பல சித்தர்கள் உலகில் சஞ்சரிக்கின்றனர்.  ஞானிகள், இவர்களில் நீங்கள் யார்? என் துக்கம் பெரிது தாமஸமான இருட்டில் மூழ்கியவன் போல, பாமரனாக இருக்கிறேன். எனக்கு அறிவு என்ற ஒளியைத் தாருங்கள்.

அங்கிரஸ் சொன்னார். பிள்ளையில்லை என்று தவித்த உனக்கு புத்திரனைத் தந்த அங்கிரஸ் நான்.  இவர் ப்ரும்மாவின் மகன் நாரதர்.  நீ புத்ர சோகத்தில் வாடுவதை பார்த்து உன்னை சமாதானப் படுத்த வந்தோம். சாமர்த்யசாலியான நல்ல அரசன்.  மற்றவர்கள் கண்களுக்கு புலனாகாமல் உன்னைக் காண வந்தோம். உனக்கு அனுக்ரஹம் செய்யவே வந்தோம். நீ பகவானின் பக்தன், ப்ரும்ம மார்கத்தில் செல்பவன், இவ்வாறு வருந்துவது அழகல்ல. மற்ற செல்வங்கள் நிறைந்தவன், அனைத்துக்கும் மேல் புத்திரனை வேண்டுகிறானே என்று புத்திரனை தந்தோம். அதனால் மிகுந்த தாபத்தை அனுபவிக்க நேர்ந்து விட்டது  ராஜன், இதே போலத்தான் மற்ற மனைவி, ராஜ்யம்,., வீடு என்று நீ ஐஸ்வர்யமாக  நினைக்கும் அனைத்தும் பிரிவினால் துன்பத்தையே தரும்.  சப்தம் முதலான உணர்வுகள், ராஜ்ய பரிபாலனம் தரும் நிறைவு, நிரம்பியுள்ள பொக்கிஷம், நண்பர்கள், மந்திரிகள்,  அனைவருமே ஸுரசேனா! கனவில் வருவது போன்ற பாத்திரங்களே. எனவே சோகத்தை விடு.  சந்தாபம் தரும் இவை மனிதர்களின் உடலைச் சார்ந்தவை, மனதால் அறிபவை மட்டுமே.  இவை சாஸ்வதமல்ல.  ஆரோக்யமான சிந்தனைகள் உன் மனதில் நிறையட்டும்.  சமாதானப் படுத்திக் கொள். எவருடைய பாதங்களை ஆஸ்ரயித்து மஹாதேவன் முதலானோர்,  நிலையான பலன்களை  அடைந்தனரோ அந்த வழியில் நீயும் நற்கதி அடைவாயாக.   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது சாந்த்வனம் என்ற பதினைந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28

 

அத்யாயம்-16

தேவரிஷி நாரதர்  அரசனுடைய இறந்த மகனைக் காண செய்தார்.   அந்த ஜீவனிடம் நாரதர், ஜீவாத்மன்! இதோ பார்,  உன் தந்தை, தாய், உறவினர்கள், அனைவரும் உன் பிரிவால் வருந்துகிறார்கள்.  திரும்பவும் இந்த சரீரத்தில் நுழைந்து போகங்களையும், அரச பதவியையும் அனுபவிப்பாய் என்றார்.

அந்த ஜீவன் கேட்டது: எந்த ஜன்மத்தில் இவர்கள் என் தாய் தந்தையராக இருந்தனர்.  விணைபயனால் நான்   தேவனாக, மிருகமாக, மனிதனாக என்று பல வித பிறவிகள்.  பந்துக்கள், பங்காளிகள், நண்பர்கள், கண்டு கொள்ளாத மற்றவர்கள், பலர் இருந்தனர்.   கடைகளில் விற்கப் படும் தங்கம் போன்ற பொருட்கள் கை மாறிக் கொண்டே இருப்பது போல ஜீவன்கள் தாய்மார்களின் கர்பத்தில் தோன்றி பிறந்து இறந்து மறுபடி எங்கோ பிறக்கின்றன.  அந்த பொருள்களின் சம்பந்தம் வாங்குபவர், விற்பவர் இடையே இருப்பது போலவே மனித உறவுகளும் அனித்யமானவையே.  தன் கையில் இருக்கும் வரை விலை மதிப்பற்றதாக இருக்கும் ஆபரணம் போல.  உறவும்  ஒட்டுதலும் அவ்வளவே.   நித்யமானது இந்த உலகை ஸ்ருஷ்டி செய்த பகவான் ஒருவரே. அவருக்கு எவரும் மிக பிரியமானவர் என்றோ, பிரியமே இல்லாதவன் என்றோ பாகுபாடு கிடையாது.  தன் பிறர் என்று எண்ணாமல் மனிதனின் காரியங்களில் குண தோஷங்களை மட்டுமே பார்க்கிறார்.  ஆத்மாவுக்கு குணம் தோஷம் க்ரியையின் பலன் என்பது இல்லை.  அது சாக்ஷி மாத்திரமே.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சொல்லிவிட்டு அந்த ஜீவன் மறைந்து விட்டது.  அரசன் ஆச்சர்யத்துடன் இதைக் கேட்டு தன் மனதை சமாதானப் படுத்திக் கொண்டான். பித்ரு காரியங்களைச் செய்து விட்டு,  தன் ராஜ்ய காரியங்களை கவனிக்கச் சென்று விட்டான்.

குழந்தையை கொன்றவர்கள் வெட்கம் தாளாமல், பிராயச் சித்தங்கள் செய்தனர். யமுனை நதிக் கரையில் அந்தணர்களைக் கொண்டு தானங்கள் செய்வித்தனர்.   சித்ரகேதுவும் தன் மனச் சிறையிலிருந்து  யானை குளத்தின் சேற்றில் மாட்டிக் கொண்டு தவித்தது வெளி வந்தது போல இருந்தான்.  காலிந்தீ நதிக் கரையில் விதிகளை அனுசரித்து ஸ்னானம் முதலானவைகளைச் செய்து  முனிவர்களை வணங்கினான். நாரதர் அவருக்கு உபதேசம் செய்தார்.

ओं नमस्तुभ्यं भगवते वासुदेवाय धीमहि ।प्रद्युम्नायानिरुद्धाय नमः सङ्कर्षणाय च ॥ १८॥

नमो विज्ञानमात्राय परमानन्दमूर्तये ।आत्मारामाय शान्ताय निवृत्तद्वैतदृष्टये ॥ १९॥

आत्मानन्दानुभूत्यैव न्यस्तशक्त्यूर्मये नमः ।हृषीकेशाय महते नमस्ते विश्वमूर्तये ॥ २०॥

वचस्युपरतेऽप्राप्य य एको मनसा सह ।अनामरूपश्चिन्मात्रः सोऽव्यान्नः सदसत्परः ॥  यस्मिन्निदं यतश्चेदं तिष्ठत्यप्येति जायते । मृण्मयेष्विव मृज्जातिस्तस्मै ते ब्रह्मणे नमः 

यन्न स्पृशन्ति न विदुर्मनोबुद्धीन्द्रियासवः ।अन्तर्बहिश्च विततं व्योमवत्तन्नतोऽस्म्यहम् ॥  देहेन्द्रियप्राणमनोधियोऽमी यदंशविद्धाःप्रचरन्ति कर्मसु। नैवान्यदा लोहमिवाप्रतप्तं स्थानेषु तद्द्रष्ट्रपदेशमेति 

ओं नमो भगवते महापुरुषाय महानुभावाय महाविभूतिपतये, सकलसात्वतपरिवृढ-निकरकरकमलकुड्मलोपलालितचरणा-रविन्दयुगल परम परमेष्ठिन् नमस्ते ॥  

நாரதரின் உபதேச மந்திரம் தவிர அவர் சொன்ன விஷயங்களை புரிந்து கொண்டு ஏழு நாட்கள்  நீரை மட்டும் குடிப்பவனாக தவம் இருந்தான்.  வித்யாதர பதி என்ற பதவியை அடைந்தான்.  அதன் பின்  தாமரைத் தண்டு போல வெண்மையான, நீல வஸ்திரம் தரித்த கிரீடம் முதலிய ஆபரணங்களுடன், ப்ரஸன்ன முகமாக இருந்த பிரபுவை சித்தர்கள் சூழ இருந்தவராக கண்டான்.  வாயால் எதையும் சொல்ல முடியாமல் தவித்தவன், சமாளித்துக் கொண்டு துதி செய்தான்.

நீ மற்றவர்களிடம் அஜிதனாக- தோல்வியறியாதவனாக இருந்தாலும், சாதுக்களாலும், பக்தர்களாலும் தோற்கடிக்கப் படுகிறாய். ஏனெனில் நீ   கருணை மிக்கவன்.  பகவன் ! உன்னுடைய விபவம் படைப்பதும், காப்பதும், பின் கலைப்பதும்,   அவர்களுக்கும் ஆசையே இல்லையென்றாலும் நீ உன் ஆத்மாவையே தருகிறாய். உன் அம்சம் அவர்களிடத்திலும் காணக்  கிடைக்கிறது.  பரமாணு, பரம மஹத்  ஆனவன் நீ, வேத ரூபி, பொருள்களின் ஆதி அந்தம் நடுவில் எது சாஸ்வதமோ அதுவும் நீயே.  பூமி முதலானவைகளை சூழ்ந்து இருப்பது ஏழு, அதே போல பத்து மடங்கு பெரிதான ப்ரும்மாண்டம் என்ற அண்ட கோசம்- இதில் அணு அளவு உன் கடாக்ஷம் விழுவதே, கோடி கோடி அண்டங்களுக்கு சமம்.  மனிதர்கள் இன்பங்களை நுகர்வதில் ஆசை மிக்கவர்கள்.  உன்னை உபாசிப்பதில் நாட்டம்  கொள்வதில்லை.  ராஜ குலத்தில் நம்பிக்கை வைத்தவர்கள், வசதிகள் பெற்றவர்கள், அந்த குலம் அழிந்தால் தாங்களும் அழிவார்கள்.  பலனை வேண்டி உன்னை பஜித்தவர்கள் அந்த பலனைப் பெறுவதோடு, உன்னிடம் பக்தியும் வளர்த்து கொள்கிறார்கள்.

எனவே, பகவன்! தேவ ரிஷி நாரதர் உபதேசம் பெற்ற பின்,  உங்கள் தரிசனமும் கிடைக்கப் பெற்று பரிசுத்தமானேன்.  வேறு விதமாக  எப்படி இருக்க முடியும்?

இங்கு நடந்ததும் தாங்கள்  அறிந்திருப்பீர்கள்.  பரமகுரோ ! எது தேவையென்று பிரார்த்திப்பேன்.  ஞானம் என்ற ஸூரியனே  கிடைத்தபிறகு, தாரகைகள் எதற்கு. நமஸ்துப்யம் பகவதே!  பரம ஹம்ஸாய நம: – துரவசித ஆத்ம கதயே நம:,  சகல ஜகதீசாய நம:.

பூ மண்டலத்தை தாங்கி நிற்கும்  ஆயிரமாயிரம் தலைகளுக்கு நமஸ்காரம்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு துதி செய்தபின், பகவானும் ஆசிர்வதித்தார். நாரதன், ஆங்கிரஸ் உபதேசத்தால்  சித்தனானாய்.  ராஜன்! நல்ல வித்யை கிடைக்கப் பெற்றாய். என் தரிசனமும்.  நானே சகல பூதாத்மா. பூத பாவனன்.  சப்த ப்ரும்மும் நானே. பர ப்ரும்மம் என்ற சாஸ்வதமானவனும் நானே.  என் ஆத்மாவை லோகத்திலும் என்னிடத்தில் லோகத்தையும் காணலாம்.  பாதி கனவில் விழிப்பது போலத்தான் வாழ்க்கையில் நடப்பதும் நடந்ததும்.  இளமை, முதுமை என்ற அவஸ்தைகள்  வரும். பற்றின்றி இவைகளைக் கடந்து ப்ரும்ம ஞானத்தை அடைவாய்.   ராஜன்!  இந்த விஷயங்களை சிரத்தையாக மனதில் கொண்டு, நல்ல ஞானம், மேலும் மேலும் அதை வளர்த்துக் கொண்டு விக்ஞானியாக ஆவாய். இவ்வாறு பகவான், சித்ரகேதுவை சமாதானம் செய்து விட்டு மறைந்தார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேதுவின் பரமார்த்த தரிசனம்  என்ற பதினைந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-65

அத்யாயம்-17

அதன் பின்  வித்யாதரன் என்ற ஆகாயத்தில் சஞ்சரிக்கும்  நிலைக்கு உயர்ந்த சித்ரகேது பகவான் இருந்த திக்கை நோக்கி வணங்கி விட்டு ஆகாயத்தில் சஞ்சரிக்கலானான்.  முனிவர்கள், சித்த சாரணர்களைக் கண்டும், குலாவியும், அவர்களுடன் பல லக்ஷ வருஷங்கள்,  குறைவில்லாத பலத்துடன்  பல க்ஷேத்ரங்களை  தரிசித்தான். குலாசலம், என்ற மலையின் சரிவுகளில், ஹரி பஜனையை வித்யாதர ஸ்த்ரீகளுடன் சேர்ந்து பாடியபடி அனுபவித்தான். இந்த இடம் பலவிதமான சங்கல்பங்களை நிறைவேற்றும் என்பது ப்ரசித்தம்.  ஒரு முறை பகவானே கொடுத்த ப்ரகாசமான விமானத்தில், பகவான் கிரீசனை தரிசித்தான். உடன் சித்த சாரணர்களும் இருந்தனர்.   தன் சரீரத்தில் ஒரு பாகமாக அங்கீகரித்த தேவியை அணத்தபடி முனிவர்களுடன் பேசிக் கொண்டிருந்தவரைப் பார்த்து தேவி பார்த்திருக்கையிலேயே பலமாக சிரித்தான்.

சித்ரகேது சொன்னான்: இவர் லோக குரு.  மனிதர்களுக்கு தர்மத்தை உபதேசிப்பவர்.  இந்த முக்யமான சபையில் மனைவியுடன் தம்பதியாக  அணைத்தபடி, ஜடாதாரி, தீவிரமான தவம் செய்தவர், பாமரன் போல வெட்கம் இன்றி மனைவியுடன்  பொது இடத்தில் இருக்கிறாரே,  பாமரன் கூட யாருமறியாமல் தான் பெண்ணுடன் கூடுவான். மஹா வ்ரத தரன் என்று பெயர் பெற்றவன், சபையில் பெண்ணை மடியில் வைத்துக் கொண்டிருக்கிறார் என்றான்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: பகவானும் அதைக் கேட்டு மெல்ல சிரித்து விட்டு பேசாமல் இருந்தார். சபையினரும் எதுவும் சொல்லவில்லை.  அசோபனமான இந்த வார்த்தைகளைக் கேட்டு, தேவி வெகுண்டாள். வீர்ய விதுஷி எனப்படும் அவள், தன் எல்லையைக் கடந்த த்ருஷ்டன்- தன்னைப் பற்றி உயர்வாக எண்ணுபவன்- அவனைப் பார்த்து கோபத்துடன், யார் இவன், உலகில் தண்டிக்கும் தகுதி பெற்ற ப்ரபுவோ?  இவனைப் போன்ற துஷ்டர்கள், விபரீதமாக அடக்கமின்றி பேசும் வீணர்கள் எதையும் அறியாமல் பிதற்றுகிறார்கள்.  பத்மயோனியான  ப்ரும்மாவுக்கு ஏதாவது தெரியுமா?  ப்ரும்ம புத்திரரான நாரதர், ப்ருகு போன்றவர்கள் தான் அறிவார்களா? குமாரர்கள், கபிலர், மனு இவர்கள் தான் ஏதாவது அறிவார்களா?  இவர்கள் ஹரன் செய்வது அநியாயம் என்று  ஏன் தடுக்கவில்லை?  இவர்கள் ஹரனின் பாதங்களை ஜகத்குரு என்று வணங்குபவர்கள். ஹரன் தானே மங்கள மங்களமானவன் என்பதை அறிந்தவர்கள்.  இந்த க்ஷத்ரபந்து (வசைச் சொல்) த்ருஷ்டன் சொல்கிறான் – இவனே தண்டிக்கப் பட வேண்டியவன். இவன் வைகுண்ட பதவியை அடைய தகுதியுடையவன் அல்லன்.  மதிப்புக்குரிய ஒரு பெரியவரை அவமதித்த இவன் பாபம் செய்தவர்கள் அடையும் ஒரு அசுர குலத்தில் பிறக்கட்டும்.  மகனே, துர்மதியுடையவனே,  போ,  மேலும் ஏதாவது தவறாக செய்யும் முன் விலகு என்றாள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு சபிக்கப் பட்ட சித்ரகேது தன் தவற்றை உணர்ந்தவனாக, விமானத்திலிருந்து இறங்கி தேவியிடம் மன்னிப்பு கேட்டான்.  விழுந்து வணங்கினான். அம்பிகே, தங்கள் சாபத்தை ஏற்றுக் கொள்கிறேன்.  என் அஞ்சலியை சமர்ப்பிக்கிறேன்.  மனிதர்களுக்காக சொன்னதை அறியாமல் மோகத்தால் சொல்லி விட்டேன்.  சுக துக்கங்களுக்கு ஆத்மா காரணமல்ல.  அதை மீறிய பரமாத்மாவின் செயல்களில் சாபம் என்ன, அனுக்ரஹம் என்ன இரண்டுமே ஒன்றுதான்.  சுத்த சத்வனான பகவான் ஆத்ம மாயையால் ஜீவன்களை ஸ்ருஷ்டிக்கிறார்.  பந்தமோ, மோக்ஷமோ, சுகமோ, துக்கமோ, நிரஞ்சனான அவர் செயலில் ஆசையோ, ரோஷமோ ஏது?   அதனால் தேவி, நான் சாப விமோசனம் கேட்கவில்லை. என் தவறு, அதற்கான தண்டனையை அனுபவிக்கிறேன்.   தேவி, என் செயலை மன்னித்து அருள வேண்டும்.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  சித்ரகேது தன் விமானத்தில் புறப்பட்டு சென்றபின், கிரீசன், தேவியிடம்  இந்த  சித்ர கேது ஹரி பக்தன், அவருடைய உயர்ந்த குணம் அவனடியார்களிடமும் தென்படுகிறது.  நாரயணனை நம்பியவன் யாரிடமும் எதற்கும் பயப்படுவதில்லை. சுவர்கம், நரகம் இரண்டையுமே சமமாக எண்ணத் தெரிகிறது.  கனவில் காணும் கயிற்றில் பாம்பு போல மனித மனம் உண்மையை உணர்ந்த பின் சமாதானம் அடையும்.   

தேவியின் சாபத்தை ஏற்று, சித்ரகேது  தானவனான த்வஷ்டாவின் மகனாக பிறந்தான்.  நீ கேட்டாயே, விருத்திரன் எப்படி அசுரன் ஆனான், அவனுக்கு ஹரி ஸ்மரணம் வர என்ன காரணம் என்று, அந்த வரலாறு தான் இது.  ஹரி பக்தனாக இருப்பவன் நன்மையே அடைவான் என்பதற்கு இந்த இதிகாசம் ஒரு சான்று.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், சித்ரகேது அடைந்த சாபம்  என்ற பதினேழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-41

 

அத்யாயம்-18

தக்ஷனின் மகளான ப்ருஸ்னீ என்பவள் ஸூரியனின் மனைவியானாள்.   சாவித்ரி, வ்யாஹ்ருதி, த்ரயீ, அக்னிஹோத்ரம், பசு, சோமன், சாதுர்மாஸ்யம், மஹா மகான் (பெரிய யாகங்கள்) சித்தி என்பவள் பகனின் மனைவி, அங்க மஹிமானம், ஆசிஷம் என்ற பெண் மகவும், பெற்றாள்.

ப்ரும்மாவுக்கு, குஹோ, சினீவாலி, ராகா, அனுமதி, சாயம், தர்சம், ப்ராத:, பூர்ணமாஸம் அனுக்ரம படி,

அக்னிகளை புரீஷ்யான் என்பவர்களுக்கும், சர்ஷணீ வருணனுக்கும், இவளிடம் ப்ருகு திரும்பவும்  பிறந்தார்.

வால்மீகி மஹா முனிவர்  வல்மீகம் என்ற புற்றிலிருந்து தோன்றினார்.  அகஸ்தியரும், வசிஷ்டரும் மித்ர வருண என்பவர்களிடம் தோன்றினர்.  (இவர்கள்  ஒரு சமயம் ஊர்வசியை கண்டதுமே வீர்யம் வெளிப்பட அதை கடம்- மண் பானையில் வைத்ததாகவும், அதிலிருந்து வசிஷ்டரும், அகஸ்தியரும் தோன்றியதாக வரலாறு)  இந்திரன் தன் மனைவி பௌலோமி என்ற சசியிடம் ஜயந்தன்,  ருஷபன், மீடுஷன்  என்றவர்களை பெற்றான்  என்பர்.    மாயா வாமன ரூபம் எடுத்த பகவான், கீர்தி என்ற பத்னியிடம் ப்ருஹஸ்லோகன் என்பவனையும் அவனுக்கு சௌபகா என்ற சிலரும் பிறந்தனர்.  காஸ்யபருடைய சரித்திரத்தை பின்னால் சொல்கிறேன்.  கஸ்யப தாயாதிகள், திதி புத்திரர்கள் கதையைச் சொல்கிறேன். இதில் பாகவதனான ஸ்ரீமான் ப்ரஹ்லாதன், பலி என்பவர்கள் தோன்றினர்.

திதி புத்திரர்கள் இருவர், ஹிரண்யாக்ஷன், ஹிரண்யகசிபு என்று பெயர்கள்.  ஹிரண்யகசிபுவின் மனைவி கயாது என்ற தானவி. ஜம்பனுடைய மகள். அவளுக்கு நான்கு குமாரர்கள்.   சம்ஹ்லாதம், அனுஹ்லாதம், ஹ்லாதம், ப்ரஹ்லாதம் என்பது அவர்கள் பெயர்கள். அவர்கள் சகோதர் சிம்ஹிகா ராஹுவை பிடித்தாள்.  ராஹுவின் தலையை ஹரி, அம்ருதத்தை குடித்துக் கொண்டிருக்கும் சமயம் தன் சக்ரத்தால் துண்டித்தார்.  சம்ஹ்லாதன் மனைவி க்ருதி பஞ்சஜனம் என்பவனையும், ஹ்லாதனின் மனைவி தமனி வாதாபி இல்வலன் என்பவர்களையும்,  இவர்கள் இருவரும் அகஸ்தியர் அதிதியாக வந்த சமயம் அவரால் வயிற்றில் ஜீரணிக்கப் பட்டனர்.  அனுஹ்லாதன் மனைவி ஸூர்மி- பாஷ்கலன், மஹிஷன் என்பவர்களையும், விரோசனன் ப்ரஹ்லாதன் மகன், அவன் மகன் பலி.

பாணன் நூறு பிள்ளைகளை அஸ்னா என்பவளிடம் பெற்றான்.   பாணன் கிரீசனை ஆராதித்து, அவர் கணங்களின் தலைவனாக ஆனான்.  சாக்ஷாத் பகவான் கிரீசன் அவருடைய நகர பாலகனாக இருந்தார். 

திதியின் மற்ற புத்திரர்கள்: மருத் என்பவர்கள் நாற்பத்து ஒன்பது பேர்.  இவர்கள் இந்திரனுக்கு சமானமாக இருந்தாலும் இவர்களுக்கு வாரிசு இல்லை.

பரீக்ஷித் ராஜா வினவினான்: ஏன்? எதனால் அசுரத்வம் என்பதாலா? இந்திரனுக்கு சமமாக எப்படி ஆனார்கள்?  முனிவரே! மற்றவர்களும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். அந்த சரித்திரத்தைச் சொல்லுங்கள். அவரும் சொல்ல தயாரானார்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: திதியின் மகனை, இந்திரனுடன் அருகில் இருந்து பகவான் விஷ்ணு வதைத்தார். கோபமும் வருத்தமும் மேலிட திதி என்ன செய்வது என்று யோசித்தாள்.  சகோதரனைக் கொன்றவன் இந்திரன்.  சற்றும் இரக்கம் இல்லாமல், கொன்றதுமல்லாமல், பச்சாதாபமும் இல்லாமல் தன் சுகமே பெரிதாக இருக்கிறான்.  மரணமடைந்த உடலை கிருமிகள் தின்று தீர்த்தால், க்ருமய என்றும், நாய் போன்ற பிராணிகள் அழித்தால் விஷ்டய என்றும்,  நெருப்பில் தகித்தால், பஸ்மம் என்றும் சொல்லப்படும் தன் தேக சுகத்துக்காக, மற்ற ஜீவன்களிடம் விரோதம் பாராட்டுகிறான், அழிக்கிறான். அவன் தன்னலம் தவிர வேறு என்ன அறிவான், (தானும் அதே போன்ற தேஹி- உடலையுடையவன் தானே, இதே கதி தானே நமக்கும்வரும் – என்பதாக ) இந்த இந்திரனுடைய மதம்- கர்வம் இதை அடக்கக் கூடிய புத்திரன் எனக்கு வேண்டும் என்று கணவன் காஸ்யபரை நச்சரித்தாள்.  அவரும் சம்மதித்தார்.  மனதுக்கு இசைந்த மனைவி, கேட்பதை பொதுவாக கணவன்மார் மறுப்பதில்லை. என்ன வரம் வேண்டுமோ கேள் என்றவரிடம், இந்திரனைக் கொல்லும் மகன் வேண்டும் என்று திதி யாசித்தாள்.   என் இரு பிள்ளைகளயும் கொன்றவன் அவன்.  இதைகேட்ட காஸ்யபர் திடுக்கிட்டார்,  என்ன வேண்டும் கேள், என்று வாக்கு கொடுத்தபின் மீறவும் முடியாது. இந்திரனும் பிழைக்க வேண்டும் – என்ன செய்யலாம் என்று யோசித்து, அவளிடம் ‘ அப்படியே ஆகட்டும். உன் விருப்பப்படியே மகன் பிறப்பான். ஒரு வருஷம் விரதம் மேற்கொள்.   அவளும் சம்மதித்து,  விரத நியமங்களை முழுவதுமாக கேட்டுத் தெரிந்து கொண்டாள்.

காஸ்யபர் சொன்னார்: எந்த பிராணியையும் ஹிம்சிக்க கூடாது. யாரையும் சபிக்க கூடாது. பொய் சொல்லக் கூடாது. நகங்களை, ரோமங்களை வெட்டக் கூடாது.  அமங்களமான பொருட்களைத் தொடக் கூடாது. நீரில் மூழ்கி ஸ்னானம் செய்யக் கூடாது. துர்ஜனங்களேயானாலும் அவர்களை கோபிக்க கூடாது, பேசவும் வேண்டாம்.  மீந்து போன பழைய உணவை சாப்பிடக் கூடாது. மாமிசமோ, சாதாரணமாக நல்லதல்ல என்று சொல்லப் படும் பொருட்களை சாப்பிடாதே.  அஞ்சலியால் தண்ணீர் குடிப்பது, சந்த்யா காலங்களில் விரித்த கேசத்துடன் வெளியில் நடமாடாதே,  கால்களை அலம்பாமல் தூங்கப் போகாதே, சந்த்யா காலங்களில் தூங்காதே, விடியுமுன் எழுந்து தினசரி நியமங்களை, ப்ராம்மணர்கள், பசு, லக்ஷ்மீ, ஸ்ரீமன் நாராயண பூஜை  முதலிய பூஜைகளை விடாமல் செய்.  இவ்வாறு ஒரு ஆண்டு முழுவதும் ஸ்ரத்தையுடன் செய், உன் விருப்பப் படி மகன் பிறப்பான் என்று சொல்லி, அவளுக்கு கர்பாதானம் என்பதை செய்து விட்டு, புறப்பட்டு போனார். இந்திரனும் அவர் எண்ணத்தை புரிந்து கொண்டவனாக ஆஸ்ரமத்தில் திதிக்கு பணிவிடைகள் செய்து வந்தான்.

தினமும் வனத்திலிருந்து பூவோ, பழங்களோ, சமித், குசம் முதலிவைகளோ, இலைகளோ, நீரோ, அந்தந்த சமயம் தேவையறிந்து கொண்டு வந்து கொடுத்தான்.   எந்த விதத்திலாவது அவள் தன் விரதத்தில் தவறு செய்வதையே எதிர் நோக்கி காத்திருந்தான்.  வேட்டையாடுபவன் வஞ்சனையாக மிருகத்தை தொடருபவன் போல பரிசாரகனாக நாடகமாடினான்.  ஒருநாள், களைத்தவளாக, சந்த்யா காலத்தில் தூங்கி விட்டாள். கால்களை அலம்பாமல் தூங்குவதைக் கண்ட இந்திரன் யோக மாயையால் பரகாய ப்ரவேசம் எனும் – வேற்று உடலில் பிரவேசிப்பது எனும் செயலை செய்து அவள் உதரத்தில் புகுந்தான்.  பொன் போல பிரகாசமாக இருந்த சிசுவை தன் வஜ்ராயுத்தால் ஏழாக சிதைத்து விட்டான்.   சிதைக்கப் பட்ட பின்னும் , அம்மா என்று அழுத குழந்தைகளை சமாதானப் படுத்துபவன் போல ஒவ்வொன்றையும் ஏழு ஏழாக சிதைத்தான். அதன் பின்னும் அந்த சிசுக்கள், இந்திரனிடம் சொல்லிற்று.  ஹே இந்த்ர! நாங்கள் மருத்- காற்றின் சகோதர்கள்.  ஏன் பயப்படுகிறாய் என்றன.  அதைக் கேட்ட இந்திரன், அடிப்பதை நிறுத்தினான்.  நீங்கள் என் சகோதரர்கள், என்னுடனேயே இருங்கள் என்று மருத் கணங்கள் என்று அவர்களை ஏற்றுக் கொண்டான்.  அதுவும் பகவான் ஸ்ரீநிவாசனின் கருணையே.  த்ரோண புத்திரனின் அஸ்திரத்திலிருந்து நீ பிழைத்தது போலவே அந்த சிசுக்களும் பிழைத்தன.  அவைகளும்  நாற்பத்தொன்பது மருத் கணங்களாக இந்திரனுக்கு சமமான அந்தஸ்தை பெற்றன. ஓராண்டுக்கு சிறிதே குறைவான நாட்கள் திதி ஸ்ரீ ஹரியை ஆராதித்து வந்ததன் பலன் அவள் குழந்தைகள் பிழைத்தன.

விழித்து எழுந்த திதி  இந்திரனிடம் வினவினாள். கடினமான விரதத்தை அனுசரித்து ஒரு மகனை பெற நினைத்தேன். இந்த குழந்தைகள் எப்படி வந்தன? இந்திரன் தான் செய்ததைச் சொல்லி ‘தாயே உன் சங்கல்பம் எனக்கு எதிரான மகன் என்று இருந்ததால் நான் அருகிலேயே இருந்து உன் விரதத்தை கெடுக்கவே முயன்றேன். சந்த்யா காலத்தில் தூங்கிய சமயம் விரத பங்கமானதைக் கண்டு கர்பத்தைக் கலைத்தேன். தர்மம் அல்ல – புத்தியில்லாமல் நான் செய்த செயல்.  ஏழாக சிதைத்த பின்னும் அவை அம்மா என்று அழுதன.  திரும்பவும் ஏழாக துண்டித்தேன். பகவானை நீங்கள் ஆராதித்து வந்தது வீணாகுமா? அவைகள் அழியவில்லை.  ஸ்ரீ ஹரியின் க்ருபையால் எனக்கு சமமான அந்தஸ்துடன் மருத் கணங்களாக இருப்பார்கள். தாயே! என்னை மன்னித்து விடுங்கள்.  சுய நலமே பெரிதாக எண்ணி அல்பனாக நான் செய்த செயல்.  நல்ல வேளையாக இந்த சிசுக்கள் உயிருடன் இருக்கின்றன.  திதியும் அனுமதித்து விடை கொடுக்க இந்திரன் கிளம்பிச் சென்றான்.

இது தான் அரசனே! மங்களமான மருத் கணங்கள் பிறந்த கதை.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், மருதுத்பத்தி கதனம்  என்ற பதினெட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-78

 

அத்யாயம்-19

பரீக்ஷித் ராஜா வினவினான்.   ப்ரும்மன்! பும்சவனம் என்ற விரதம் பற்றிச் சொல்லுங்கள்.    இந்த விரதம் ஸ்ரீ விஷ்ணு பகவானின் அனுக்ரஹத்தை தரும் என்பதால் அதை நன்றாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: மார்கழி மாதம் சுக்ல பக்ஷத்தில் பெண்கள் கணவன் அனுமதி பெற்று, இந்த விரதத்தைச் செய்யலாம்.  விரும்பிய வரம் அளிக்கும். இந்த மருத் கணங்கள் பிறந்த கதையை கேட்டுவிட்டு,  பல் துலக்கி, குளித்து, வெண் நிற ஆடையணிந்து அலங்கரிக்கப் பட்ட மண்டபத்தில் ஸ்ரீ தேவியுடன் பகவான் விஷ்ணுவை ஆராதிக்க வேண்டும்.  

अलं ते निरपेक्षाय पूर्णकाम नमोऽस्तु ते । महाविभूतिपतये नमः सकलसिद्धये ॥ ४॥

यथा त्वं कृपया भूत्या तेजसा महिमौजसा ।-जुष्ट ईश गुणैः सर्वैस्ततोऽसि भगवान् प्रभुः ॥ ५॥

विष्णुपत्नि महामाये महापुरुषलक्षणे ।प्रीयेथा मे महाभागे लोकमातर्नमोऽस्तु ते ॥ ६॥

ओं नमो भगवते महापुरुषाय महानुभावाय-महाविभूतिपतये सह महाविभूतिभिर्बलिमुप-

हराणीति अनेनाहरहर्मन्त्रेण विष्णोरावाहना-र्घ्यपाद्योपस्पर्शनस्नानवासौपवीतविभूषण-

गन्धपुष्पधूपदीपोपहाराद्युपचारांश्च-समाहितोपाहरेत् ॥ ७॥

அதன் பின் பன்னிரண்டு ஆஹுதி இந்த மந்திரங்களுடன் சொல்ல வேண்டும். 

ओं नमो भगवते महापुरुषाय महाविभूतिपतये स्वाहेति ॥

வேண்டும் வரங்களை நினைத்துக் கொண்டு  ஸ்ரீ தேவி, பகவான், இருவரையும், பக்தியுடன் பூஜிக்க வேண்டும். விழுந்து நமஸ்கரித்து பத்து முறை இந்த மந்திரத்தைச் சொல்லி, துதிகளையும் சொல்லவேண்டும்.

நீயே விஸ்வம் உண்டாக காரணமான விபு. இந்த ப்ரக்ருதி, இயற்கை உன் மாயையே. இதை மீற முடியாது.  இதன் அதீஸ்வரன் நீயே.  பர புருஷனான நீ தான் யாக மூர்த்தி என்று வணங்குகிறேன்.  செய்பவனும் நீயே, செயலின் பலனும் உனதே. தேவி, நீயே சரீரத்தில் ஆத்மாவாக நிறைந்துள்ளாய்.  இருவருமாக உலகில் வரம் அருளும்  பரமேஷ்டி எனப்படுகிறீர்கள். எனவே, எனக்கு உங்கள் ஆசிகள் பரிபூர்ணமாக கிடைக்கட்டும்.

இவ்வாறு ஸ்ரீநிவாசனை தேவியுடன் சேர்த்து பூஜித்து,  உபசாரங்கள் செய்து ஆசமனீயம் செய்து முடிக்க வேண்டும்.  தெரிந்த துதிகளைச் சொல்லி,  இருவருமாக பூஜித்தல் நலம்.  இது ஒரு விரதம் விஷ்ணுவை வேண்டி செய்வது.  இந்த பூஜையை பன்னிரண்டு மாதங்கள் அனுசரிக்க வேண்டும்.  கார்த்திகை மாதத்தின் கடைசி நாள் முடிக்க வேண்டும்.  மறுநாள் புனர் பூஜை செய்து பாயசம் நைவேத்யம் செய்து பந்துக்களுடன் விருந்துண்ண வேண்டும். மீதியான பாயசத்தை கணவன் மனைவிக்கு கொடுத்து இருவருமாக நல்ல புத்திரனை வேண்டி சாப்பிட வேண்டும்.

விதிகளுடன் இந்த பூஜையை செய்து விரும்பியதை அடையலாம். பெண்கள் இந்த விரதத்தை அனுசரித்து, நல்ல கணவன், செல்வம், நீண்ட ஆயுள், புகழ், வீடு வாசல்கள் என்பவைகளைப் பெறலாம். கன்யா பெண்கள் நல்ல பதியை வேண்டியும்,  அழகிய லக்ஷணம் வேண்டியும், மகன் நீண்ட ஆயுளுடன் இருக்கவும், தன தான்யங்கள் நிறைந்த சுகமான வாழ்க்கையையும் பெறலாம்.  ப்ரசன்னமாக ஆன ஸ்ரீதேவி யுடன் கூடிய பகவான் எல்லா நன்மைகளையும் அருளுவார்கள். அரசனே!   இது தான் திதி செய்த விரதம்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த அஜாமிளோபாக்யனம் என்ற ஆறாவது ஸ்கந்தத்தின், பும்சவன விரத கதனம்  என்ற பத்தொன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-18

இத்துடன் ஆறாவது ஸ்கந்தம் முடிவடைகிறது

 ||ஓம் தத் ஸத்  ||

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக