பொருளடக்கத்திற்கு தாவுக

மே 1, 2024

ஸ்ரீமத் பாகவதம்  –

ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-1

ராஜா பரீக்ஷித் தன் சந்தேகத்தைச் சொன்னார்:  ப்ரியவ்ரதன், ஆத்மாராமன்- இல்லற வாழ்கையை துறந்தவன் என்று கேள்வி. குடும்பஸ்தனாக, கர்ம பந்தனாக  மாறியது எப்படி? அது அவருக்கு தலை குனிவு இல்லையா?   துறவி என்று ஆனபின், திரும்ப குடும்ப பொறுப்பை ஏற்றுக் கொள்வது முடியுமா?  அவர்கள் வழியே வேறு. மனம் ஒன்றி குடும்பத்தில் ஈடுபடுமா?

சந்தேகம் தான். மனைவி குழந்தைகள் வீடு என்று பற்றுடன் இருப்பவர்கள் அதிலிருந்து விடுபட்டு ஸ்ரீ ஹரியிடம் பக்தி செய்து மனம் மாறியது கேட்டிருக்கிறோம்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: சரியான கேள்வி. உத்தமஸ்லோகன் என்று வர்ணிக்கப் படும் பகவானின் சரணாரவிந்தங்களில் முழுமையாக ஈடுபட்டவர்கள்,  வேறு எதையும் விரும்ப மாட்டார்கள். அந்த ராஜகுமாரன் ப்ரியவ்ரதன்,  பரம பாகவதரான நாரதரிடம் பயின்றவன்.  பரமார்த்த தத்வத்தை உள்ளபடி அறிந்தவன்.  ப்ரும்மசத்ரம்- என்ற ஒரு யாகம், அதைச் செய்ய தீக்ஷை எடுத்துக் கொண்டான். பூமியை ஆள தேவையான எல்லா குண நலன்களையும் குறைவற பெற்றவன். தன் தகப்பனார் சொன்னதின் பேரில், பகவான் வாசுதேவனிடம் அனைத்தையும் சமர்ப்பித்தவனாக,  அவரை முன்னிட்டு, அல்லது அவரது வழிகாட்டலில், தன் அனைத்து ராஜ காரியங்களையும் செய்து வந்தான். தனக்கு தலை குனிவு என்று நினைக்கவில்லை. வாசுதேவனின் கட்டளை என்று எடுத்துக் கொண்டான்.

ஆதி தேவனான பகவான் ஸ்வாயம்புவ மனு ஏன் இந்த மாறுதலுக்கு அனுமதித்தார், என்றால், உலக அபிப்பிராயம் அது போல இருந்தது.  ஒரு சமயம் அவர்  தன் பரிவாரங்கள், நிகமங்கள் ஸூழ தன் வாசஸ்தலத்திலிருந்து தான் ஸ்ருஷ்டித்த உலகங்களை காண வந்தார்.

ஆங்காங்கு வானவெளியில் பறவை ராஜன் போல வரிசை வரிசையாக விமானங்களில் மற்றவர்களும் உடன் வர பவனி வந்தார்.  வழியில் சித்த, கந்தர்வ,சாதுக்களான முனிவர்கள் வந்து புகழ் பாட கேட்டு ரசித்தபடி, கந்தமாதன மலை சிகரத்தில் இறங்கினார்.

அங்கு,அவரை தேவ ரிஷிகள், ஹம்ஸ வாகனத்தில், உலக தந்தையான பகவானை ஹிரண்ய கர்பன் என்று போற்றப் படும் அவரை வரவேற்க தந்தையும் தனயனுமாக பரபரப்புடன் கை கூப்பியபடி வந்தனர்.

அவரும் அந்த உபசரிப்பை ஏற்றுக் கொண்டார்.  அரசவை பாடகர்கள் துதி செய்து பாடியதைக் கேட்டவர் தயையுடன் ப்ரியவ்ரதனைப் பார்த்து, சிரித்தபடி சொன்னார்.

ஸ்வாயம்புவ மனு  சொன்னார்:   மகனே, நான் சொல்வதை கேள். இது உலகில் நடைமுறையில் உள்ள சத்யமான சொல்.  புவியில் பிறந்த பின் நமக்கு நம் வாழ்வின் போக்கு எப்படியிருக்கும் என்பது முன்பே தெரிவதில்லை.  அந்தவகையில் மனிதர்கள் பராதீனர்கள் தான். அதற்காக தெய்வத்தை நிந்திக்கவும் வேண்டாம். மஹரிஷிகள் முதல் நாங்களும் முன்னமே விதிக்கப் பட்டதைத்தான் அனுபவிக்கிறோம். உடல் எடுத்தவன்,(மனிதன்) தனக்கு பிடிக்கவில்லை என்று உதறவும் முடியாது.  தவமோ, வித்யை என்ற கல்வியோ, யோகமோ, புத்தியோ, அர்த்த தர்மம்- பொருளைக் கொடுத்தோ, மற்றவர் உதவியாலோ மாற்ற முடியாது.  தேகம் அமைந்த விதம், அது வளரும், அழியும், செயல்களைச் செய்யவும், சோகம், மோஹம், சதா பயம், என்றும், சுகம், துக்கம் என்றும், எது எந்த விதத்தில் வரும், அதை அனுபவிக்க மட்டுமே முடியும், முன்னெச்சரிக்கையாக தடுக்கவோ, நல்லதானால் அனுபவிக்கத் தயாராகவோ முடியாது. மகனே, நமது, உடல்,  வாக்கு, இவற்றால் கண்களுக்குத் தெரியாத கயிற்றால் கட்டப் பட்டிருக்கிறோம்.  கால் நடைகளில் மூக்கின் வழியாக கட்டப்படும் கயிறு-மூக்கணாங்கயிறு- அது நம் வசதிபடி உடன் வரவேண்டும் என்று கட்டுகிறோமோ, அதே போலத்தான் இந்த  வேத சாஸ்திரம், மற்றும் சத்வம் முதலான குணங்கள்  என்ற கயிற்றினால் கட்டப் பட்டு .ஈஸ்வரனுடைய பலி கடாவாக இருக்கிறோம். கண்ணால் பார்க்க முடிந்தவன் கண்ணில்லாத ஒருவனை அழைத்துச் செல்வதைப் போல. ஈஸ்வரனால் ஸ்ருஷ்டிக்கப் பட்டதை, சுகமோ, துக்கமோ, அந்தந்த காலத்தில் அனுபவிக்கிறோம்.   தூங்கி விழித்தவன் போல, முன் தினத்தை முற்றிலும் மறந்தவனாக, உண்டு உடுத்து நாளைக் கழிக்கிறோம்.  பயந்தவனுக்கு அரண்யத்திலும் பயம் தான். ஆறு குணங்கள், இவைகளுடன் பிறந்தவன், அதை கட்டுக்குள் வைக்கத் தெரிந்தவன் வீட்டில் இருந்தால் என்ன? வனத்தில் இருந்தால் என்ன? (பிறப்பு, இறப்பு, பயம்,சோகம்,காம,மோகம் என்றவை) நீ பத்மநாபனுடைய சரணாரவிதங்களை ஆஸ்ரயித்தவன், இந்த ஆறு உடன் பிறந்த குணங்களை ஜயித்தவன், மனிதனுக்கு  விதிக்கப்பட்ட போகங்களை அனுபவி. பற்றின்றி இயல்பாக வாழ்கையை நடத்து.  இவ்வாறு மூவுகத்திற்கும் குரு எனப்படும் குல மூத்தவரான பகவான் சொன்னதை சரியென்று ஏற்றுக் கொண்டான்.

மனு பகவானும், நல்ல முறையில் தனது  உபதேசங்களை ஏற்றுக் கொண்டதால் மகிழ்ந்து, ப்ரியவ்ரத நாரதர் இருவரையும் ஆசீர்வதித்து, அவரவருக்கு உரிய வாழ்க்கை முறைகளை ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அடைந்தார்.  சுர ரிஷிகளில் சிறந்தவரான நாரதரை, தன் வம்சத்தினான ப்ரியவ்ரதனுக்கு ராஜ காரியங்களில் உதவ ஏற்பாடு செய்தார்.  இல்லறம், போக வாழ்க்கை என்பவைகள் விஷ ஜலம் நிரம்பிய தடாகம் போன்றது என்று தோன்றினாலும், நாரதர் சரியான குருவாக இருந்து வழி நடத்துவார் என்று நம்பினார். 

ப்ரியவ்ரதனும், ஜகதீபதி-  மஹா ராஜா என்ற பெரிய ராஜ்யாதிபதியானான்.  ஈஸ்வரன் விட்ட வழி என்று தன் பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.  பகவான் ஆதி புருஷன், அவர் பாத சேவைகளை விடாமல் செய்து வந்ததால், தெளிவான மனதுடன், எந்த ஸூழ்நிலையிலும் தன் கொள்கைகளை கை விடாமல் அந்த பெரிய ராஜ்யத்தை ஆண்டு வந்தான்.

ப்ரஜாபதி விஸ்வகர்மா என்பவரின் மகள் பர்ஹிஷ்மதி என்பவளை மணந்து தனக்கு சமமான குணம்,  சீலம், செயல் திறம், ரூபம், வீர்யம் உதார குணம் இவைகளுடன் பத்து பிள்ளைகளும், இளையவளாக உர்ஜஸ்வதி என்ற பெயருடன், மகளையும் பெற்றார். ஆக்னீந்த்ரன், இத்ம ஜிஹ்வன்,யக்ஞ பாஹு, மகாவீர,ஹிரண்யரேதஸ், க்ருத ப்ருஷ்ட, சவனமேத, அதிதி, வீதி ஹோத்ர, கவய என்று அனைத்தும் அக்னியின் பெயர்களே.

இவர்களில், கவி, மஹாவீரன்,சவனன் என்ற மூவரும் பாரமஹம்ஸ்யம் எனும் துறவு வாழ்க்கையே ஏற்றனர்.

அவர்கள் சாந்தமாக பரம ரிஷிகளுக்கு சமமான  வாழ்கையை வாழ்ந்தனர்.

பயந்தவர்களுக்கு அபயம் அளிக்கும் வாசுதேவனையே அனவரதமும் தியானிப்பவராக ப்ரியவ்ரதன்  பொது மக்களின் நன்மையே நினைத்து அரச காரியங்களை கவனமாக செய்தார்.   மற்றொரு மனைவியிடம் மூன்று புத்திரர்கள் உத்தம, தாமசோ, ரைவத என்ற பெயர்கள்.  அவர்கள் மன்வந்தராதி பதிகள் ஆனார்கள்.

பல ஆண்டுகள் இவ்வாறு இல்லறத்தை நல்லறமாக வாழ்ந்து வந்த அரசன் சிறிதும் பாதிக்கப்படாத தன் குண நலன்களால்  குறைவற்ற நிறைந்த செல்வம்,  வளமான பூமி, தர்மம் தவறாத ஆட்சி, பர்ஹிஷ்மதியுடன் இனிய தாம்பத்யம், என்று சந்தோஷமாக இருந்தான்.

ஸூரியன் எவ்வாறு சுர கிரியைச் சுற்றி வந்து பாதி உலகை தபிப்பவனாகவும், பாதி உலகை மூடி இருட்டாக்குபவனாகவும் உலகில் அறியப் படுகிறானோ, அதே போல பகவதுபாசனா பலத்தால், சீரான ஒரே வேகம் கொண்ட பிரகாசமான ரதத்தில் ராஜ்யத்தில் சுற்றி வந்து இரவையும் பகலாக்குவேன் என்று முனைந்தான்.

அந்த ரத சக்ரத்தில் ஏழு சமுத்திரங்களும் ஆரமாக இருந்தன.  ஜம்பூ, ப்லக்ஷ, சால்மலீ, குச, க்ரௌஞ்ச,சாக, புஷ்கர என்ற பெயருடைய  தீவுகள். இவை கிழக்கின் கிழக்கிலும், வடக்கின் வடக்கிலும் இரண்டு மடங்காகிக் கொண்டே சென்றன. க்ஷாரோத (உப்புக் கடல்), இக்ஷு ரஸ கரும்பு ரசம் நிறைந்த கடல்) , சுர (மது) ரசம்,(மது-தேன்)  க்ருதோத (நெய்), க்ஷீரோத (பால்) ததி மண்டோத (தயிர்) சுத்தோத (சுத்தமான நீர்)  என்று ஏழு கடல்கள், அந்த ஏழு தீவுகளைச் ஸூழ்ந்து அமைந்திருந்தன. தன் மகன் அக்னீந்திரன் முதலானவர்களை ஒவ்வொரு தீவுக்கும் அதிபதியாக்கினார். ஊர்ஜஸ்வதி என்ற மகளை உசனஸ் (சுக்ராசார்யர்) என்ற முனிவருக்கு கொடுத்தார். தேவயானி என்ற  அவர் மகள் ப்ரசித்தமானாள்.  

இவ்வளவும் செய்தபின் ப்ரியவ்ரதன் மனம் கலங்கினான். இது என் இயல்பு இல்லை என்று உணர்ந்தான். புலனடக்கி அத்யாத்ம வாழ்க்கை வாழ நினைத்தவன் தன் புத்திரர்கள், மனைவி என்று வாழ்ந்தது சரியா என்று சந்தேகம் வந்தது. நாரதரிடமே சரணடைந்தான்.

ஸ்லோகங்கள்:

பகவான் அருள் இல்லாமல் ப்ரியவ்ரதனால் இவைகளை செய்திருக்க முடியுமா? சமுத்திரங்கள் முன்பே பகவானால் தோற்றுவிக்கப் பட்டன.  ப்ரியவ்ரதன் அந்த தீவுகளில் தன் புத்திரர்களை அரசர்களாக்கி அங்கு நகரங்கள், உயிரினங்கள், மனிதன் உட்பட வாழ வகை செய்தனர்.  ஒவ்வொரு தீவும், நதிகளும் , மலைகள், காடுகள் இவைகளுடன் எல்லைக்கு உட்பட்டு இருந்தன.  பூமியை இவ்வாறு வசதிகள் நிறைந்ததாகச் செய்தவன் என்று பாராட்டப் பட்டான்.   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரியவ்ரத விஜயம்  என்ற ஐந்தாவது  ஸ்கந்தத்தில், முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் )  வசன நடையில் உள்ளது.

அத்யாயம்-2

இவ்வாறு தந்தையால் நியமிக்கப் பட்ட ஆக்னீந்திரன்  ஜம்பூ த்வீப தீவில் ப்ரஜைகளை தங்கள்  சொந்த மகன்கள் போல பாலித்தான். தர்மம் தவறாமல் ஆட்சியைச் செய்தான்.  புத்ரனை விரும்பி தவம் செய்ய தேவ லோக பெண்கள் நடமாடும் மலையின்  சிகரத்தில், பூஜைக்கான த்ரவ்யங்களோடு வந்து சேர்ந்தான்.  மனம் ஒன்றி தான் செய்யப் போகும் தவம் பலன் தர வேண்டும் என்று  பகவானை வேண்டியபடி பூஜைகளைச் செய்த பின் தியானத்தில் ஆழ்ந்தான்.  அதை அறிந்த பகவான் ஆதி புருஷன், தன் சபையில் பாடிக் கொண்டிருந்த பூர்வசிதி என்ற அப்சர ஸ்த்ரீயை அழைத்து, அங்கு செல்ல பணித்தார். அவளும் அழகான அந்த ஆசிரமத்தில், பலவிதமான மரங்கள், சிறு தாவரங்கள் நிறைந்த இடத்தில்,  கொடிகள் ஸூழ்ந்து மண்டபமாக இருந்த இடத்தில்,  பறவைகள் ஜோடியாக இருப்பதையும்,  அவைகள் கூக்குரலே வேத மந்திரம் போல ஒலிப்பதையும் ரசித்தவளாக, அருகில் நீர் நிலையில் நீர் கோழிகள், காரண்டவ, கல ஹம்ஸ, இவைகள் வளைய வரும் தாமரைத் தடாகத்தை பார்த்தாள். மென்மையான, நடையுடன்,  அவள் அங்கு சுற்றி வந்த சமயம் கால்களின் நூபுரம் கண கண வென்று ஒலி எழுப்பியது.  அந்த ஓசையால் கவரப் பட்டு நர தேவ குமார:- ராஜ குமாரன், சமாதி யோகம் கலைய, கண்களை சிறிதே திறந்து  நோக்கினான். 

சற்று தூரத்தில், பூக்களை முகர்ந்து பார்த்துக் கொண்டிருந்தவளைக் கண்டான்.  தேவதையா, மனித பெண்ணா மனதை கவரும் அழகுடன் இருக்கிறாள் என்று எண்ணினான்.  வெட்கமும் வினயமுமாக அவள் அங்கு நடந்து செல்வதைக் கண்டவன் மனதில் மன்மதனின் அம்புகள் ஆழப் பதிந்தன.  மென் முறுவலோடு அவள் பேச ஆரம்பித்ததும், தன்னையே மறந்தான்.  மதுவில் மயங்கிய தேன் வண்டைப் போல வேகமாக நடந்து அருகில் சென்றான்.  அவளின் மயில் தோகையை ஒத்த கேசத்திலிருந்து, ஒவ்வொரு அங்கமாக பார்த்து வியந்தான். அவள் திரும்பி பார்த்த சமயம், பகவான் மகரத்வஜன்- மன்மதன் வலையில் வகையாக அகப்பட்டவனாக ஆனான்,  ஜடம் போல தன்னை மறந்து பேசலானான்.

யார் நீ? என்ன வேண்டும்? இது சிறந்த முனிவர்கள் வசிக்கும் மலை. பரதேவதையின் மாயையே உருவெடுத்து வந்தவளா? கையில் எதற்கு வில்? இங்குள்ள சாது மிருகங்களை வேட்டையாடவா?  பகவானின் பாணங்கள்- நூறு இலைகள் வடிவில் உள்ள ஆயுதம், இவை. உன் பற்களா?  யாரைத் தேடுகிறாய்?  சாதுவான என் புத்திக்கு எட்டவில்லை. உன் விக்ரமம் எங்கள் நன்மைக்கே என்று இருக்கட்டும்.   இங்கு பல பெண் மாணவிகள் படிக்கின்றனர். ரகசியத்துடன் கூடிய அஜஸ்ரன்- ஈஸ்வரனை மகிழ்விக்க சாம கானம் பாடுகிறார்கள். உன் கேசத்திலிருந்து விழும் பூக்கள், வேத சாகைகள் பகவானை அர்ச்சிப்பது போல இருக்கின்றன.  தித்திரி- கௌதாரி என்ற பறவை கொஞ்சுவது போல உன் வாக்கை கேட்க விரும்புகிறேன்.  கதம்ப புஷ்பம் போன்ற அங்கங்கள். செதுக்காத சிலை போன்ற உடல், இதில் ரிஷிகளின் வல்கலம் பொருந்துமா? எந்த ஆஸ்ரமத்தை நீ ஒளி பெற செய்கிறாய்? இந்த இரண்டு மலைகளின் நடுவில், சிறுத்த இடம் இதில்,  எதைக் காண வந்தாய்? அருணனின் நிற இந்த பத்மம் போன்ற கண்கள் எந்த ஆசிரம விளக்கை ஒளி பெற செய்கின்றன.  உன் இருப்பிடத்தைக் காட்டு, நண்பனே!   (அல்லது உன்னையே காட்டு)  உன் எழில் நிறைந்த ரூபத்தை நான் முழுதும் காணும் படி நீயும் உன் சம்மதத்தை கண்களால் தெரிவிப்பதாக உணருகிறேன். . அத்புதம். சரஸமான ராஸம் என்ற மது நிரம்பிய உன் முகம்.

அங்கம் அங்கமாக வர்ணிக்கிறான்.  தபோதன! இவைகளை என்ன தவம் செய்து கிடைக்கப் பெற்றாய்?  என்னுடம் தவம் செய்ய வருகிறாயா? எனக்கு அனுக்ரஹம் செய்.  தெய்வமே அனுப்பியது போல வந்திருக்கிறாய். உன்னை விட மாட்டேன். உன்னைக் கண்ட என் கண்கள் அகலவேயில்லை.  அழகிய ஸ்தனங்களை உடைய பெண்ணே!  நீ என்னுடன் இணை பிரியாமல் இரு.  என் தவமும் பலிக்கட்டும். ப்ரும்மா அனுக்ரஹிக்கட்டும்.  

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு பெண்னை சம்மத்திக்க வைக்கத் தெரிந்த சாதாரண பொது ஜன பரிபாஷைகளால் பேசியே அந்த உயர் குலமான அப்சர ஸ்த்ரீயை தன் வசப் படுத்திக் கொண்டான்.  அவளும் அந்த வீரனான ராஜகுமாரன், புத்தி.சீலம், சம வயது, செல்வம், உதார குணம் இவைகளால் மனம் மகிழ்ந்து பலகாலம் அவனுடன் பூவுலகின் போகங்களை குறைவற அனுபவித்தாள்.ஒன்பது பிள்ளைகளைப் பெற்றாள்.

நாபி, கிம்புருஷ, ஹரிவர்ஷ,இலாவ்ருத,ரம்யக,ஹிரண்மய,குரு, ப்த்ராஸ்வ, கேது மால என்று பெயர்கள். இவர்களைப் பெற்ற பின், அந்த அப்சரஸ்த்ரீ தன் இருப்பிடம் சென்று விட்டாள்.

ஆக்ரீந்திரனின் பிள்ளைகள் தாயின் தொடர்பாலேயே, மிகுந்த பலமும், தந்தை பகிந்து அளித்த ஜம்பு தீபத்தின் பகுதிகளை பல வருஷங்கள் ஆண்டனர்.

ஆக்னீந்திரன் மனைவியை மறக்க முடியாமல் தவித்தான்.  சீக்கிரமே அவன் காலம் முடிந்தது.  அதன் பின் ஒன்பது சகோதரர்களும் மேருதுஹித்ரு, மேரு தேவீம், ப்ரதிரூபா,உக்ரதம்ஷ்ட்ரீம், லதா, ரம்யா, ஸ்யாமா, நாரீ, பத்ரா தேவவதீ என்று ஒன்பது பெண்களைப் மணந்தனர்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த ப்ரியவ்ரத விஜயம்  என்ற ஐந்தாவது  ஸ்கந்தத்தில், இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் )  வசன நடையில் உள்ளது.

அத்யாயம்-3

ஸ்ரீ சுகர் சொன்னார்: நாபி  , மேரு தேவியை மணந்து, பிரஜைகள் இல்லாமையால், புத்ர வரம் வேண்டி யக்ஞ புருஷன் எனும் பகவானை வேண்டினான்.  சிரத்தையுடன், உள்ளன்புடன் வேண்டுதல்களை செய்தான். அரிதான த்ரவ்யங்கள், சரியான தேச காலங்களை அறிந்து, மந்த்ரங்கள், ருத்விக் தக்ஷிணைகள் என்று சாஸ்திரங்களில் சொல்லியபடி செய்தான்.  அதனால், சாதாரணமாக மனிதனின்  மனம் வாக்குக்கு எட்டாத பகவான், மகிழ்ந்து, தன்னை நம்பியவர்களை எப்பொழுதும் காப்பவன் எனும் தன் வார்த்தையை நிறைவேற்றுபவன் போல,  அவனுக்கு பார்த்த மாத்திரத்தில் மனதை கவரும் அழகிய அங்கங்களுடன் மகனாக பிறந்தார். நான்கு புஜங்களும், நாவல் நிற, பட்டு வஸ்திரமும், மார்பில் பிரகாசமான ஸ்ரீவத்ஸம் எனும் மணியும், வன மாலையும், கதையும், கிரீடமும், குண்டலமுமாக, தக தகக்க, கைகளில் கடகமும், இடையாபரணமும், ஹார கேயூரங்களும் நூபுரம் முதலிய மற்ற பூஷணங்களும் பிரகாசிக்க, ரிஷிகள், அரச சபையினர், குடும்பஸ்தர்கள், கௌரவம் மிக்க அதிகாரிகள், அனைவருமே,  பரம ஏழை மிகப் பெரிய செல்வத்தை அடைந்தது போல மகிழ்ந்தனர்.  தலை குனிந்து வணங்கியபடி காண வந்தனர். 

ரித்விக்குகள் சொன்னார்கள்:  உங்களுடைய அடியார்கள் நாங்கள். எங்கள் வணக்கம் உங்களுக்கு உரியதாகுக. நல் உபதேசம் பெற்றவர்கள்  கூட உலக வாழ்கையில்  மூழ்கி இருப்பவர்கள் ஈசன், ஈசன் அல்லாதவன் ,  இவைகளுக்கும் மேம்பட்ட புருஷன், தன் வசத்தில் இயற்கையை வைத்திருப்பவன், தன் விருப்பப்படி படைப்புத் தொழிலைச் செய்பவன், இருந்தும் ப்ரக்ருதி, புருஷன் என்ற இரண்டிற்கும் அப்பாற்பட்டவன்  ஆயிரக் கணக்கான பெயர்களில் துதி செய்யப் படுபவன்,   என்றுள்ள உங்கள் ரூபத்தை முழுமையாக எடுத்துச் சொல்லவா முடியும்?

உடன் இருப்பவர்கள் அன்புடன்  புகழ் பாடுவார்கள்.  அதனுடன் இணைந்து  துளசி தளங்கள். மணம் வீச பலவிதமான பூக்களும் , துளிர்களும் கொண்டு பூஜை செய்வர்.   இதில் தாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறீர்கள். அதை விட அதிகமாக கடினமான யாக காரியங்கள் செய்து, உங்கள் அருள் செல்வத்தை அடைகிறோம். தங்களைப் போலவே, ஒவ்வொரு யாகத்திலும், அனாயாசமாக பல மாறுதல்கள், மேம்பாடுகள் செய்து, அனேக புருஷார்தங்கள் என்ற நன்மைகளை அடைகிறோம். உங்கள் ஆசிகளும், நல் வாழ்த்துக்களும் எங்களுக்கு பூரணமாக இருக்க வேண்டும்.

 அறியாமயால் சிலர் தன் நலனுக்காக வரம் வேண்டுபவர்களாக இருக்கலாம். விஷயம் அறிந்தவர்கள், பரம புருஷனை அறிந்தவர்கள்.  அவர் கருணையை உணர்ந்தவர்கள் ஆதலால் அபவர்கம் என்ற மிகச் சிறந்த வரத்தை அவராகவே அளிக்கும் சமயம், வேறு எதையும் யாசிக்க மாட்டார்கள். ஆகையால், அர்ஹத்தம- மகானான தாங்கள் தரிசனம் கிடைத்த பின் வேறு என்ன வேண்டும்? நன்மைகள் தானே வந்து சேரும். எனவே, பர்ஹிஷ ராஜ ரிஷிக்கு, வரத ரிஷபனான  உங்கள் தர்சனமே பரம மங்களம்.  தீயில் பொசுக்கியது போல எங்கள்  குணக் குறைவு  லவ லேசமும் மீதியில்லாமல் பொசுக்கி விட்டது.   தூய்மையானவர் தாங்கள்.  முனிவர்கள் அனவரதமும் மனதில் எண்ணி துதிக்கும் மரம மங்களமான சரித்திரங்கள் உடையவர்.எதோ  விதத்தில் கவனக் குறைவோ, பசி, தாகம் இவற்றாலோ, உடல் உபாதையாலோ, தவறு நேர்ந்தாலும் , ஜுரம், மரண தசையால் செய்யாமல் விட்டாலும் எங்கள் ஸ்மரணம் தவறாமல் இருக்க வேண்டும். உங்கள் நாமங்கள் மறக்காமலும், பெரியவர்களின் பஜனைகள் காதுகளில் ஒலித்துக் கொண்டும் இருக்க வரம் வேண்டும்.

அது தவிர, இந்த ராஜ ரிஷி மகனை வேண்டுகிறான். ப்ரஜைகளை ஆளும் தகுதியுடன் இவனுடைய சந்ததியினர் பிரஜைகளுக்கு தேவையானவைகளை செய்யவும் தனதன் போல செல்வ செழிப்புடன் இவன் பிரஜைகளும் இருக்க வேண்டும், உங்களுடைய ஆசிகளும், அனுக்ரஹமும் ஸ்வர்க ப்ராப்தியை விட மேலானது.

 யார்தான் மீற முடியாத உங்கள் மாயையை தாண்டி, உலகியல் இன்ப துன்பங்களை கடந்து உங்கள் சரணத்தை நினைப்பார்கள்.  பொருளையே உயர்வாக நினைக்கும் மந்த மதிகள், அறியாமல் செய்த சிறு குறைகளையும் மன்னித்து ஏற்றுக்  கொள்ள வேண்டுகிறோம்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இந்த துதிகளைக் கேட்டு தேவர்கள் தலைவனான (அனிமிஷ ருஷபோ- தேவர்கள் கண்கள் இமைப்பதில்லை என்பதால் அனிமிஷ – அவர்கள் தலைவன்) வர்ஷ தரன்- மழை பொழிபவன் -இந்திரன்- அவனால் வணங்கப் பட்ட சரணங்கள் உடையவர் தயையுடன் சொன்னார்:  அஹோ! ரிஷிகளே, சொல்லுங்கள்.  நீங்கள் தெளிவான உங்கள் சொற்களால், கஷ்டமான வரங்களை யாசித்திருந்தாலும், என் வம்சத்தினன் எனக்கு சமமாக ஆவான் கைவல்யம் என்ற ப்ரும்ம பதவியை தரக் குறைவாக எண்ணக் கூடாது. என் முகத்திலிருந்து வந்தது தானே, அந்தணர்கள், தேவர்கள் குலமும்.  ஆக்னீந்த்ரனின் மகனுக்கு மகனாக நானே அவதரிக்கிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு வரமளித்து விட்டு மறைந்து விட்டார்.

விஷ்ணு தத்தன் என்ற பெயருடன், மகிழ்ச்சியுடன் நாபி என்ற அந்த அரசனுக்கு பிரியமாக எதாவது செய்ய நினைத்தவர்,  மேரு தேவியிடம் பிறவியிலேயே  யோக சாதனைகளைச் செய்யும் ரிஷிகளைப் போல அவதரித்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-22

அத்யாயம்-4

பகவானுடைய அவதாரம் என்பது பிறந்த பொழுதே பார்த்தவர்களுக்கு தெளிவாக தெரிந்தது.  பகவானுடைய சிறப்பான குணங்கள், அமைதி, அடக்கம், வைராக்யம், ஐஸ்வர்யம், மஹா விபூதி இவைகளைக் கண்ட பொது மக்கள் வியந்தனர்.  தேவதைகளும் பூமியில் இறங்கி வந்தது போலவும், அந்தணர்களுடன் பிரஜைகளும் பிறந்த சிசுவை துதி செய்தனர். இப்படி பிறவியிலேயே அதிசயமாக இருந்த குழந்தைக்கு தந்தை ரிஷபன் என்று பெயர் ஸூட்டினார்.  பகவானுக்கு சமமான காந்தியுடன், பலம், ஸ்ரீ, கண்டவர் பாராட்டினர்.  இதைக் கண்டு இந்திரன் பொறாமை கொண்டு அந்த ஆண்டு மழையை வர்ஷிக்கவில்லை.  யோகேஸ்வரர் ரிஷப தேவர் சிரித்தார். தன் யோக சாதன பலத்தால் அஜ நாபம் என்ற அந்த தேசம்  முழுவதும் மழை பொழியச் செய்து விட்டார்.

அரசன் நாபியின் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.  சுபுத்ரனை வேண்டியதில் பகவானே வந்ததில் நா தழதழக்க பகவானை துதித்தார். அழகான சொற்களால், உடனே நரலோகம் வந்த புராண புருஷனின் கருணையை தன் மகனை கொஞ்சி குலாவுவதில் வெளிப் படுத்தினார். மகனே என்றும், தந்தையே என்றும் அன்புடன் அழைத்தார்.  மகனை குலாவுவதில் அதிக இன்பம் அடைந்தார்.

உரிய வயது வந்ததும், நாபி ராஜா, பிரஜைகளும் சம்மதிக்க, ருஷபரை ராஜ்யத்தில் அமர்த்தினார்.  தன் நம்பிக்கைக்கு உகந்த அந்தணர்களை உதவியாக நியமித்து விட்டு மேரு தேவியுடன் விசாலா என்ற இடத்தில் தவம் செய்ய சென்று விட்டார்.  நர நாராயணன் எனும் பகவான் வாசுதேவனை ஆராதித்தார். காலம் வரவும் அவர் பதம் அடைந்தார்.

பாண்டவர்கள், நாபி என்ற அந்த அரசனின் செயல்களை உதாகரணமாக சொல்வர். அப்படி என்ன விசேஷம் என்றால், அந்த அரசன் சத்புத்திரனை பெற்றான், தூய்மையான மனதுடன் செயல்களைச் செய்தான், அந்தணனர்களை கௌரவித்தான், தன் தவ வலிமையால் அவர்களும் யோகேசனான பகவானை தரிசிக்க வழி செய்தான் என்பர்.

அதன் பின் ருஷப தேவர், இந்த பூமி கர்ம க்ஷேத்ரம் என்பதை அறிந்து,  குருகுல வாசம் செய்தார். வயது வந்ததும் குரு ஜனங்கள் அனுமதி பெற்று, இந்திரன் தன் மகளான ஜயந்தியை அளிக்க, அவளை மணந்து குடும்ப வாழ்க்கையை ஏற்றுக் கொண்டார்.  தன் குடும்ப நலன், தேச நலன், தேவதைகள், பித்ருக்களுக்கு செய்ய வேண்டியவை இவற்றை குறைவற செய்தார்.  தன் குலம் விளங்க தனக்கு சமமான நூறு பிள்ளைகளையும் பெற்றார். 

இவர்களுள் மகா யோகியான பரதன் முதல்வன்.  ஸ்ரேஷ்ட குணங்கள் நிரம்பியவன். அவனால் இந்த தேசமே பாரதம் என்று பெயர் பெற்றது.

குசாவர்தன், இலாவர்தன், ப்ரும்மாவர்தன், மலயகேது, பத்ரசேன, இந்த்ரஸ்ப்ருக், விதர்பன், கீகட என்று மற்ற ஒன்பது பேர் பிரதானமானவர்கள்.  கவி, ஹரி, அந்தரிக்ஷன்,ப்ரபுத்தன், பிப்பலாயன், ஆவிர்ஹோத்ரோ, த்ருமிலன், சமச:, கரபாஜனன், என்பவர்கள் பாகவதர்களாக, பாகவத தர்மத்தை ப்ரசாரம் செய்பவர்களாக ஆனார்கள்.  வாசுதேவ நாரத உரையாடலாக அதை பின்னால் வர்ணித்துச் சொல்கிறேன்.  ஜயந்தியின் மற்ற பிள்ளைகளும், தந்தையை அனுசரித்து நடந்தனர். இயல்பாகவே பெற்ற சிறந்த  சீலம் , நல்ல கல்வி, வேத அறிவு, யாகங்களை செய்யும் திறன், செயல்களை ஆற்றலுடன் செய்து முடிப்பவர்கள், இவை தவிர  ப்ரும்ம ஞானம் உள்ளவர்களாகவும் ஆனார்கள்.

ருஷப என்ற பெயருடன் பகவான், தானும், புவியில் மற்ற ஜீவன்கள் படும் சிரமங்களை தவிர்த்து, கேவலானந்தம் என்பதே பிரதானமாக, ஈஸ்வரன் தான் என்பதை உணர்த்த,  காலத்தை அனுசரித்து வேத கர்மாக்களை, ஊக்குவித்தார். தர்மத்தை செய்வதில் தேவையான மாறுதல்கள் செய்தார்.  அறிஞர்களுடன் சமமாக நட்புடன் தர்மார்த,  புகழ்,  ப்ரஜைகளின் நன்மை க்ருஹஸ்தாஸ்ரமத்தின் சிறப்பை வெளி படுத்துபவராக வாழ்ந்தார்.  எதை தலைவன் செய்கிறானோ, அதை பொது மக்கள் அனுசரிப்பார்கள். அதனால் தான் அறிந்த எல்லா தர்மங்களையும்,  ரகசியமானவை, ப்ரும்ம மார்கத்தில் செல்பவர் காட்டிய வழிகள், சமாதி என்ற வழிகளில் ராஜ்யத்தை ஆண்டான்.

த்ரவ்யம், தேச கால, வயது, ஸ்ரத்தா. இவற்றுடன் ருத்விக் எனும் பெரியவர்கள் உபதேசித்தபடி நூறு யாகங்களை செய்தான்.

ருஷப ராஜாவால் பரிபாலிக்கப் பட்ட இந்த தேசத்தில்,  யாருமே, தேவை என்பதை உணரவில்லை. கிடைக்காது என்று எந்த பொருளும் இல்லை. எப்பொழுதும், எதுவானாலும் எதோ விதத்தில் கிடைத்தது.   அரசனின் யாகங்களில் அன்புடன் கலந்து கொண்டனர்.

ஒரு சமயம் ப்ரும்மாவர்தம் என்ற இடம் சென்ற சமயம் தன்னிச்சையாக சுற்றிக் கொண்டிருந்த பொழுது, ப்ரும்மரிஷிகள் நிறைந்த சபையில்  ப்ரஜைகள் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த தன் புத்திரர்களை கண்டான். மிகுந்த ஆஸ்ரய- அடைக்கலம் தரும் குணம் உடையவர்களாக, விநயம் நிறைந்த கட்டுப்பாடான ஏற்பாடுகளை செய்து வருபவர்களாகவும் இருப்பதை பார்த்து மகிழ்ந்தான். தானும் உபதேசங்கள்  செய்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-19

அத்யாயம்-5

தன் புதல்வர்களைப் பார்த்து ரிஷபர் என்ற ராஜ ரிஷி, சில உபதேசங்களைச் செய்தார். உலக வாழ்க்கையில் தான், தன் குடும்பம் அதன் சௌக்யங்களே ப்ரதானம் என்று இருக்க வேண்டாம். ஆத்மார்த்தமாக அறிவு வளர வேண்டும். ப்ரும்ம ஞானம் தான் சௌக்யம் என்றும் சொல்கிறார்.  இதற்கு முதல் படி பெரியவர்களை, அறிவிற் சிறந்தவர்களை அண்டி சேவை செய்வது தான்.  சம சித்தமாக, அமைதியாக,  கோபம் இல்லாத சாதுக்களின் நட்பு வேண்டும்.  பகவானிடத்தில் ஈடுபாடு கொண்டவர்களும்,  வீட்டு நிர்வாகத்தில், மனைவி மக்களிடத்தில் ப்ரீதியுடனும், அதற்கான பொருள் ஈட்டுவதும் அவர்கள் கடமை என்பதால் அனுமதிக்கப்பட்டதே.  அது அவர்கள் தன்னடக்கம் இன்றி அது மட்டுமே என்று, பரமார்த்த அறிவு இன்றி இருப்பது தான் கெடுதல்.  அவமானம் என்று எண்ணுவது கூட அறியாமையே.   ஆத்ம தத்வம் அறிந்தவர்கள், தான் மனதை கட்டுக்குள் வைக்கத் தெரிந்தவர்கள். கோப தாபங்கள் அவர்களிடம் நெருங்காது, அதன் எல்லை உடல் அளவிலேயே, மனதை பாதிக்க விடக் கூடாது.  லௌகிகமான செயல்கள் சரீர தேவைகளை தீர்க்க செய்ய வேண்டியதும் அவசியமே.  வாசுதேவனிடத்தில் ப்ரீதியுடையவனாக இருப்பது தான் முக்கியம்.   அவித்யா-அறியாமை அகலும். அதனால் விவேகம் வளரும், மன்யு என்ற கோபம் விலகி விடும். மனதை கெடுக்கும் முதல் எதிரி மன்யு தான்.  அடுத்தது சுயநலம், இது கண்களை மறைக்கும். நினைவையே மழுங்கச் செய்து விடும். மற்றவர்களிடம் குறையே தெரியும், அதனால் மனக்லேசம் என்று இதன் பாதிப்புகள் விரியும்.  சாஸ்திரங்கள் சொல்லும் நித்ய கர்மாகளைக் கூட செய்யவிடாமல் தடுக்கும்.

தாம்பத்யமும், மிதுனீ பாவம் என்ற ஆண் பெண் உறவு ஒருவருக்கொருவர் அன்புடன் இருப்பதை இயற்கை என்று ஏற்றுக் கொள்கிறோம். இதன் நீட்சியாக, க்ருஹம், நில புலங்கள், புதல்வர்கள் பெறுதல், அதற்கான பொறுப்புகள்,  என்று தொடர்ச்சியாக கவனம் செல்வதால், ப்ரஜைகளில், தான் தனது என்ற எண்ணத்தை விளைவிக்கிறது.  இது உலகியலில் தவிர்க்க முடியாத  பந்தம். 

தகுந்த குரு, ஜனங்களின் கஷ்டங்களை தீர்க்க எப்பொழுதும் எங்கும் மன அமைதிக்கு தவத்தையே உபாயமாக சொல்வார்கள்.  யோக சாதனைகள், பகவத் பக்தி இவைகளே  இல் வாழ்ழ்கையில் அமைதி சேர்க்கும். இவ்வாறு, பக்தியையும், யோக சாதனைகளையும்  உயர்வாக சொல்கிறார்.

தேஹம் தேஹி – உடல், அதனுள் உள்ள ஆத்மா இரண்டும் வெவ்வேறு – உடல் பௌதிகமானது, அழியக் கூடியது. ஆத்மா அதை இயக்குவது, அழியாதது என்ற அறிவு அத்யாத்ம யோகத்தால் வரும். இதை குருவை ஆசிரயித்து உடன் இருந்து சேவை செய்வதால் பெறலாம்.  ப்ராணாயாமம்  செய்து மூச்சு பயிற்சிகளை விடாமல் செய்து வருவதும்,  சிரத்தையுடனும், நன்னத்தையுடனும், -உடல், உள்ளம் இரண்டும் சுத்தமாக இருக்கச் செய்து கொள்ளுதல்- தவிர வார்த்தைகளை அளந்து பேசுதல், சொல்லடக்கம் என்பது மிகச் சிறந்த குணம். இதை பகவானைப்  பற்றிய உள்ளுணர்வு இருந்தால் மேம்பட்ட ஞானமாகும் (விக்ஞானம்). யோக சாதனைகளால் ஆற்றல் பெருகும். த்ருதி என்ற வைராக்யம், சத்வம் என்ற நல்ல குணம் இவை வளரும்.  நான் என்ற அஹம்பாவம் விலகும். 

கர்ம மார்கிகள், கற்றதால் வரும் பெருமிதத்தால் தவறு செய்யலாம். அவர்களும் யோக சாதனைகள் மூலம்  தன்னையறியலாம்.  புதல்வர்களோ, சிஷ்யர்களோ, அரசனே! குருவேயானாலும், பகவானின் அனுக்ரஹம் வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள்,  முதல் காரியமாக, தன்னை திருத்திக் கொள்வார்கள். மன்யு என்ற கோபம் அண்ட விடாமல், சிஷ்யர்களிடம் பரிவுடன், ‘தத்’ என்ற உயரிய ஞானத்துடன் கர்ம மார்கங்களில் ஈடுபட செய்வார்கள்.  ஏனெனில் கர்ம மார்கத்தில் வரும் யாக காரியங்கள் உலக நன்மைக்காக ஏற்பட்டவையே. இப்படி உணர்ந்து செய்யாதவர்கள் தான் வீழ்வார்கள்.  இவ்வளவும் அறிந்தும் ஏதோ சுய நலத்துக்காக, பொறாமையாலோ,  செய்பவன் கண் இருந்தும் குருடனாவான்.

மோக்ஷம் என்ற பிறவியிருந்து விடுபடும் அறிவைப் பற்றி சொல்லாத, குரு குருவல்ல. தன் உறவினர் என்றாலும் உறவே இல்லை. தந்தையோ, தாயோ கூட இல்லை.  பதியோ, பத்னியோ கூட இல்லை. ம்ருத்யு பயம் என்பதை போக்காத தெய்வமும் இல்லை.

இந்த சரீரம் எனக்கு அமைந்து விட்டது, இதை தவிர்க்க முடியாது.  என் ஹ்ருதயம் சத்வமயமாக இருக்கிறது, தர்மம் இதில் குடி கொண்டிருக்கிறது. அதர்மத்தை பின் தள்ளி விட்டதால் என்னை ருஷபன்- உயர்ந்தவன் என்கிறார்கள்.   உங்கள் அனைவரையும் என் ஹ்ருதயத்தால் பெற்றேன்.  எல்லோருமே மகான்களாக வளர்ந்து விட்டீர்கள், இந்த நாபனும் தான். பரதனை (பாரத) புத்தி பூர்வமாக பார்த்து, அதை ஆளுவதும், ப்ரஜைகளை காப்பதையும் செய்யுங்கள்.

பஞ்சபூதங்களின் சேர்க்கையால் உண்டான படைப்பில் மரங்கள், தாவரங்களில் உயர்வு. அசையும் பொருட்களில் புழு பூச்சிகளைவிட சிறிது ஞானம் உள்ள பசுக்கள், அவற்றைவிட மனிதன் மேலானவன், மனிதர்களை விட ப்ரமத கணங்கள், அடுத்து கந்தர்வர்கள்,சித்தர்கள், கின்னர்கள் என்ற தேவர்களில் அனுயாயி அதாவது பரிவாரங்கள், என்று அந்த வரிசை செல்லும். மற்றும் அசுரர்களை விட தேவர்கள் சிறந்தவர்கள். இந்திரன் அவர்களிலும் மேன்மையானவன். இந்திரனை விட ப்ரம்ம புத்திரர்களான  தக்ஷ பிரஜாபதிகள், அவர்களிலும் ருத்ரன் அனைவரிலும் மேலானவன், ஆனாலும் இவர்கள் அனைவரும் வணங்கும் பகவான் சர்வ வல்லமையுள்ளவன்.  வேத சாஸ்திரங்களை கற்ற ப்ராம்மணன் வேத ரூபமான பகவானை நிலை நிறுத்துகிறான்.   எட்டு நல்ல குணங்களும் உடைய ப்ராம்மணன் ஸ்ரேஷ்டன் எனப்படுவான். (ஸம, தம,சத்ய, தயா, தவம், கல்வி, ஞானம் )

பகவான் அறியாத பொருள் இல்லை.  பக்தி உள்ளவனுக்கு பொருள் பொருட்டல்ல.  அசையும் அசையா பொருட்கள், புதல்வர்கள், நிரந்தரம் என்று நினைக்கும் பொருட்கள், சம்பாவிதானி- பின்னால் என்றோ  நடக்க கூடும் எனும் உத்தேசங்கள், இவைகளை விக்ஞானிகள் சிறிது சிறிதாக விசேஷமான கண்கள் அதாவது சாதனைகளால் கண்டு கொள்ளக் கூடும். இவர்கள் மனம், வாக்கு, கண், அந்த:கரண சுத்தமாக என் அம்சமாக  இருப்பவர்கள்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இவ்வாறு தன் வம்சத்து புதல்வர்கள், மற்றும் இளையவர்களுக்கு உபதேசம் செய்தார். தன்னுடன் இருந்து ராஜ்யம் ஆளுவதை அறிந்திருந்தாலும், உலகை அனுசாஸனம் ஆளும் கலையை, அவர்களுக்கு விவரித்தார். தானே மஹானுபாவன் எனும் ருஷபன் என்ற பெயரில் பகவதம்சமாக தோன்றியவர், மகா முனிவர்கள் கூட மதிக்கும் பரதனை தன் நூறு புத்திர்களிலும் ஸ்ரேஷ்டன் பரம பாகவதன் என்று அறிவித்து அவனுக்கு முடி ஸூட்டி, தான் ப்ரும்மா வர்த்தத்திலிருந்து கிளம்பி விட்டார்.  அதன் பின் உன்மத்தனாக, ஆடைகளை கூட துறந்து, விரித்த கேசமும், அவதூதர் என்ற நிலையில் அனைத்தையும் துறந்தவராக பேச்சையும் நிறுத்தி, தன்னிடம் பேசுபவர்களுக்கும் எந்த பதிலும் சொல்லாமல், மௌன விரதம் பூண்டவராக ஆனார். போகும் வழியில், புரங்கள், கிராமங்களில் அறியாத இடங்களில் மதிக்கப் படாமல் ஈயை விரட்டுவது போல விரட்டினாலும் எதிர் விணையின்றி அந்த இடத்திலிருந்து அகன்று விடுவார். வனங்களில் துஷ்ட மிருகங்கள் அவரை பயமுறுத்தவில்லை. வன கஜங்கள் எதிரில் வந்தாலும் நடுங்கவில்லை. எந்த ஜீவனும் அவரை துன்புறுத்தவில்லை. எதிலும் கவனம் செலுத்தாமல் தன்னிச்சையாக நடந்து கொண்டேயிருந்தார்.

அதி சுகுமாரனாக வளர்ந்தவர். இயல்பிலேயே அழகியவர். தேவ லோக பெண்கள் கூட மயங்கும்படியான தோற்றம் கொண்டவர். இப்பொழுது புழுதி படிந்து ஏதோ க்ரஹ கோளாறினால் துர் தேவதைகள் ஆட்கொண்டுவிட்டதோ எனும்படி இருந்தார்.  உலகமே துச்சம் என்றேண்ணி எதற்கும் பர்தி க்ரியா- பதில் வினையாற்றாமல், விழுந்து கிடக்கும் மலைப் பாம்பு போல, படுத்தபடியே சாப்பிட்டு, குடித்து, மற்ற உடல் இயக்கங்களும் படுத்தபடியே  அந்த அஜகரம்- மலைப் பாம்பு போலவே கிடந்தார்.  அந்த நிலையிலும் தன் யோக சாதனைகளைச் செய்தார்.  அவர் அறியாத யோகமே இல்லை. வைஹாச,-ஆகாயத்தில் சஞ்சரிப்பது,  மனோஜவ – வாயு வேகத்தில் செல்வது, , அந்தர்தானம் திடுமென மறைவது,  பரகாய ப்ரவேச- வேறு சரீரத்தில் ப்ரவேசிப்பது, தேசாந்தரத்தில் உள்ள பொருட்களை எடுப்பது,  தூரத்தில் உள்ளதை எடுப்பது, என்ற பல சாதனைகள் அவருக்கு அனாயாசமாக கை வந்தன. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-19

 

அத்யாயம்-6

பரீக்ஷித் ராஜா இதுவரை கேட்ட நிவிருத்தி மார்கம் பற்றிய உபதேசங்களை கேட்ட பின் ஸ்ரீ சுகரிடம் “பகவன்! க்ரமமாக யோக சாதனைகளச் செய்த நீங்கள்  ப்ரும்மம்  பற்றியும் உலக வாழ்க்கைக்கு அப்பால் உள்ள விஷயங்களையும் சொன்னதைக் கேட்டு தெரிந்து கொண்டேன்.  ப்ருவ்ருத்தியின் லக்ஷணங்கள், முக்குணங்கள், அவைகளின் ஆளுமை இவை யுகம் தோறும் தொடர்ந்து வருபவை.  அதர்ம லக்ஷணங்களும் சொன்னீர்கள்.  நரகம், மன்வந்தரம் பற்றி ஆதி ஸ்வயம்பூ முதல் விவரமாக கேட்டறிந்தேன். ப்ரிய வ்ரத உத்தான பாத சரித்திரங்கள், தீவுகள், மழை, சமுத்திரங்கள் , மலைகள், நதி, உத்யான, உப வனங்கள் காட்டு மரங்கள்  – எவ்வளவு விஷயம் – உலகில் இந்த அளவு விவரங்கள் உள்ளன என்பதையே இப்பொழுது தான் அறிந்தேன்.பூமி, பூ மண்டலம் இவைகளின் இருப்பு,  ஜோதிடம் பற்றி, ப்ரபு இவ்வாளவு ஸ்ருஷ்டி செய்திருக்கிறார் என்று மலைப்பு தோன்றுகின்றது.   பகவானே, நரக யாத்திரையைப் பற்றி மேலும் சொல்லுங்கள்.

அதர்மம் என்று தெரிந்தும் அதை செய்ய நேரிட்டால், அதற்கான ப்ராயச்சித்தம் செய்யலாம்.  பகவானை ஸ்மரித்து வேண்டிக் கொள்ளலாம். எப்பேர்பட்ட பாபமானாலும். தவற்றை உணர்ந்து பகவானிடம் மன்னிப்பு கேட்கலாம்.  திரும்பத் திரும்ப பாகவதர்களுடன் சேர்ந்து நாம ஸ்மரனைகள், பஜனைகள் செய்வதாலும், கைங்கர்யங்கள் செய்வதாலும் கதைகளை கேட்பதாலும் நாளடைவில் பக்தி பாவம் மனதில் வேறூன்றும்.  அதுவே தவறு செய்யாமல் காக்கும். விரதங்களை முறையாக செய்வதும், எண்ணங்களின் போக்கை நேராக்கும்.  இது போல நெறி முறையை வழக்கப் படுத்திக் கொண்டு விட்டால், பகவானை அன்றி வேறு எவரையும் உயர்வாக எண்ணாமல், தன்னை மேம்படுத்திக் கொள்ள வழி பிறக்கும்.  இதை விட்டு, புலன்கள் போன வழியே வாழ்ந்து கெட்ட பின், பிராயச்சித்தம் என்று செய்தால்  அதற்கு பலனும் அதற்கு தகுந்த படி தான் இருக்கும்.  கர்ம பலன் குறைந்தாலும் வாசனை விடாது.  வைத்யர் உடலின் நோயின் தன்மையை கணித்து அதிகமாகவோ, குறைவாகவோ மருந்துகளைத் தருவது போல செய்த குற்றத்தின் தன்மைக்கு ஏற்ப நரக வாசமும் அமையும்.  பகவானே அவனை திருத்தினால் கூட, யானை குளித்துவிட்டு வந்து சேற்றை பூசிக் கொள்வது போல அவனுடைய கர்ம வாசனை திரும்பவும் அதே தவறுகளை செய்யத் தூண்டும்.

 அத்யாயம்-6

 பரீக்ஷித் ராஜா வினவினான்: பகவன்!  ஆத்மாராமன் என்றும், சாதனைகள் செய்து யோக மார்கத்தில் பல படிகளை கடந்தவர்கள், ஞானிகள் என்றும், அதன் மூலம் வினைப் பயன்கள் இவர்களை பாதிக்காது என்ற நிலையில், இவர்களுக்கு  எதிர்பாராமல் தானாக வந்து சேரும் யோக ஐஸ்வர்யங்கள் இடையூறாக இருக்காது  தானே.   

ரிஷி சொன்னார்: உண்மைதான்.  அதற்குத் தான் மனப் பூர்வமாக இல்லாமல் யாரிடமும் நட்பு பாராட்டக் கூடாது. வியாபார நோக்கத்தோடு பிராணிகளை வேட்டையாடும் வேடன் போல என்று சொல்வார்கள். (வேடனானாலும் தன் உணவுக்கு மட்டுமே பிராணிகளைக் கொல்லலாம் என்பது நியதி) ஒரு சிறிய இடம் (இடுக்கு) இருந்தாலும் காமம்  சௌபரி போன்ற ரிஷிகளையே ஆட்டி வைத்து விட்டது போலாகும்.  வெகு காலமாக  தவம் செய்தவர், காமத்தை ஜயித்து விட்டோம் என்று அவர் மனம் நம்பியது. மனம் யோகிகளைக் கூட கைவிடுகிறது. காமம் என்ற ஆயுதம் அவ்வளவு கொடியது. மனதை வென்றவர்கள் தானே, இந்த யோகிகள் என்று கேட்பாயோ, சக்கரத்தின் ஆரங்கள் நடுவில் உள்ள இடைவெளி போலவும் அதில் ஊடுருவி செல்லும் ஒளி போலவும் காமம் நுழைந்து விடும்.

காமம் மன்யு, மதம், லோபம், சோக, மோஹம், பயம் தவிர வினைப் பயன், இவை தான் அடிப்படையில் மனதைக் கெடுக்கும்.

விட்ட இடத்திலிருந்து ருஷபரின் கதையைச் சொல்கிறார்.  இவ்வாறு லோகபாலனாக, பிரஜைகள் விரும்பும் சக்ர வர்த்தியாக நாடாண்ட ருஷப ராஜன், ஏதோ காரணத்தால், ஜடம் போல, அவதூத வேஷமும், தொடர்பில்லாத பேச்சும், பார்த்தவர் நகைக்கும் படியான நடத்தையும் , அவர் பகவானுடைய அம்சமாக பிறந்தவர், மிகச் சிறந்த பிரபாவம் (ஆற்றல்) உடையவர் என்பதை வெளிக்காட்டாத தோற்றமுமாக  யோகிகளின் சம்ப்ரதாயங்களை மீறி தன் உடலைத் தியாகம் செய்தார். குயவனுடைய சக்கரம் போல சுழலும் ஜீவனின் வாழ்க்கை.    யோகிகள் உ.டல் தியாகம் செய்ய பல வழிகள், அதில் ஒன்று உன்மாதனாக திரிவதும்.

இவ்வாறு தான், தன் உடல் என்ற பற்று நீங்கிய பகவான் ருஷபருடைய யோக மாயா முடிவில், இந்த உலகில் ஏற்றுக் கொண்ட தேகத்தை துறக்க, இந்த உலகில் அபிமானம் இல்லாமல் தான்தோன்றியாக அலைந்த சமயம், கொங்க, வேங்க, குடகான், தக்ஷிண கர்னாடக தேசங்களை யதேச்சையாக சென்றடைந்தார். குடகாசல உபவனத்தில், சின்னஞ்சிறு பாலகன் மண்னை வாயில் போட்டுக் கொள்வதைப் போல.  ஆகாரம் என்ற கவலையின்றி, கிடைத்ததை உணவாக நினைத்து, கேசம் காற்றில் பறக்க, நடந்து கொண்டே இருந்தார்.  அச்சமயம் காற்றின் வேகத்தில் மூங்கில் காட்டில், மூங்கில்கள் உரசுவதால் ஏற்பட்ட தீ, காட்டுத்தீயாக பரவி அவரையும் விழுங்கியது.

இவரைப் பற்றி கேள்வியுற்ற அர்ஹன் என்ற பெயருடைய கொங்க, வெங்க,குடக தேசங்களின் அரசன்,  ப்ரும்ம, யக்ஞ புருஷன், என்பவைகளை ஏற்றுக் கொள்ளாத சிலர், கலியின் ப்ரபாவத்தால், தேவ மாயை புத்தியை மறைக்க, ஸ்னானம் முதலிய சௌசம்- சுத்தம் உடல் ஆடைகள் நடத்தை இவைகள் தூய்மையாக இருக்க வேண்டிய அவசியத்தைச் சொல்லும் செயல்களை நிராகரித்தும் கேசத்தை மழித்துக் கொள்வதையும், அபவ்ரதானி- தர்ம சம்ஸ்காரங்கள் கூடாது என்று சொன்ன விஷயங்கள் மட்டுமே ப்ரதானமாக ஒரு மதம் தோன்ற காரணமாக இருந்தான்.  வேத சாஸ்திரங்களை நம்பாத இவர்களின் கூட்டம் தன்னிச்சையாக, கலி காலத்தை அதர்மம் நிறைந்ததாக செய்வார்கள்.  கண்ணில்லாத கபோதிகள் ஒருவரை ஒருவர் வழி நடத்துவது போல  இவர்களும் தமஸ்- அந்தகாரத்தில் வாழ்ந்திருந்து, அந்தகாரத்திலேயே மறைவார்கள்.

இந்த அவதாரம், ரஜோ குணத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்களுக்கும் கைவல்யம் என்பதை சொல்ல ஏற்பட்டது.

ஏழு சமுத்திரங்களையுடைய இந்த பூலோகம், ஏழு தீவுகளையும் உடையது. இதன் மத்தியில் பாரத தேசம் மிக புண்யமானது. இங்கு ஜன ங்கள் முராரியை பாடுகிறார்கள். அவருடைய அவதாரங்கள் இங்கு தான் போற்றப்படுகிறது. ப்ரியவர்தனுடைய வம்சத்தில் புராணபுருஷன் அவதரித்தான். அவன் முதன் முதலாக வேத சாஸ்திரம் சொல்லும் கர்மத்தை (யாகாதி கர்மாக்களைச் செய்யும்) நிராகரித்த ஒரு மதம்-தர்மம் – என்பதை ஸ்தாபித்தான். சிறந்த யோகியானவன், தன்னிச்சையாக உன்மத்தனானான் அவனை எவர், ஏன் பின் பற்றுகிறார்கள்?  மகா யோகியானவர் அதைத் துறந்தார் என்றால், யோக மார்கத்தில் எப்படி நம்பிக்கை வரும்? உன்மத்த நிலையில் அவரை கண்டவர்கள் அவரை பின் பற்றத் துணிவார்களா?  அந்த வேத, யோக மார்கத்தில் செல்ல சக்தியற்றவர்கள், சம்சாரத்தின்  கட்டாயங்களிலிருந்து விடுபட முடியாதவர்கள், தங்களுக்கு முன்னுதாரணமாக ஒருவராக இவரை அங்கீகரித்தார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாம். இதுவும் வாசுதேவனின் அவதாரமே.

பல ஸ்ருதியோடு இந்த அவதார கதையை முடிக்கிறார்.

எவர் மாற்று தர்மங்கள் பற்றி யோசிக்கிறார்களோ, அவர்களுக்கு இதுவும் ஸ்ரீமன் நாராயணனின் அவதாரமே என்ற ஆறுதல்.

அரசனே! யது குலத்தில் வந்த வாசுதேவன் தான் உங்களுக்கு வழிகாட்டி, தெய்வம் எல்லாம். ஒரு அவதாரம் ருஷப யோகீஸ்வரராக.  சம்சாரத்தின் கஷ்ட நஷ்டங்களுக்கு யாகம் , யோகம் முதலியவைகள் பரிஹாரமாக சொன்னது பரபுருஷார்த்தம்-  பகவானிடம் சேர்க்கும் என்ற ஒரு கொள்கை. இது வேறு வழி ஆயினும் பகவத் தியானமே பரமார்த்தம் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

உங்கள் குல தெய்வம் வாசுதேவனே. யதுகுல தேவன், பிரியமான குலபதி. நாம் அவர் கிங்கரர்கள்-ஏவலர்கள்.  கருணையுடன் அபயம் அளிப்பவர். “ நமோ பகவதே ருஷபாய தஸ்மை “

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-16

அத்யாயம்-7

ஸ்ரீ சுகர் சொன்னார்:  அடுத்து வந்த பரதனும் மஹா பாகவதன் என்று புகழ் பெற்றான்.  பகவானால் பூமியை ஆள நியமிக்கப் பட்டிருக்கிறேன், அதனால் ராஜய பரிபாலனத்தை நேர்மையாக செய்வதில் கவனமாக இருப்பேன் என்று எண்ணினான். அவன் மனைவி பஞ்சஜனீ, விஸ்வரூபன் என்பவரின் குமாரி.  அவர்களுக்கு அனுரூபமான பஞ்ச பூதங்கள் போல ஐவர்,  சுமதி, ராஷ்ட்ரப்ருத், சுதர்சன், ஆவரணன், தூம்ரகேது என பெயர்கள். அதுவரை அஜனாபம் என்று இருந்த தேசத்தின் பெயர்   இந்த பரதனின் ஆட்சிக்கு பின் பாரதம் என்று ஆனது.

மாகாராஜாவாக இருந்த பரதன் பல கலைகளையும் அறிந்தவன். தங்கள் குலத் தொழிலோ, கலையோ, அந்தந்த துறையில் ஈடுபட்டிருந்த பிரஜைகள் அரசனின் நேரடி கண்காணிப்பையும் ஆதரவையும் பெற்றனர். 

யக்ஞ புருஷன் பகவானை  எண்ணி பல யாகங்களை சிரத்தையுடன் செய்து வந்தான். உச்சாவசு, அக்னிஹோத்ர, தர்சபூர்ணமாச, சாதுர்மாஸ்ய. விரதங்கள், பசு சோம என்ற ஒவ்வொரு யாகத்தையும் சாதுர்ஹோத்ர விதிகள் படிமுறையாகச் செய்தான்.

பிரபலமான யாகங்கள் தவிர,  தர்ம பலன்களை உத்தேசித்து செய்யும் யாகங்களையும் அதன் அங்கங்களுடன் அர்த்த நியமங்களுடன் பரபுருஷனான யக்ஞ நாராயணனே சர்வ தேவதா என்று சொல்லும் மந்திரங்களையும் பொருள் உணர்ந்து சொல்வதால் சாக்ஷாத்தாக வந்து பகவான் வாசுதேவனே அனுக்ரஹித்ததால் தானே தன் திறமையினால் அத்வர்யூ என்ற ஸ்தானத்தை ஏற்று, யஜமானனாக, தேவர்களை திருப்தி செய்தான். (ஸ்ருஷ்டி காலத்தில் எவ்வாறு பரம புருஷனின் அவயவத்தில் தோன்றினார்களோ அதே க்ரமத்தில்  த்யானம் செய்து) 

இவ்வாறு  சிறப்பாக செய்த யாகத்தால், பரிசுத்தமான மனிதனின் ஹ்ருதயத்தில் வசிக்கும் ப்ரும்மம் வாசுதேவனிடத்தில் மஹா புருஷன் என்ற உபலக்ஷணம் உள்ளவர் என்பவரை ஸ்ரீவத்ஸ, கௌஸ்துப, வனமாலை சகிதமாக வாள், கதை முதலிய ஆயுதங்களுடனும், தன் மனதில் எழுதி வைத்தது போல கண்டான். அனுதினமும் பக்தி பாவத்துடன் வணங்கி வந்தான்.

இவ்வாறு பல காலம் ஆண்ட பின், தன் புத்திர்களுக்கு ராஜ்யத்தை பிரித்து கொடுத்து விட்டு புலஹாஸ்ரமம் என்ற இடத்துக்குச் சென்று விட்டார்.

அந்த இடத்தில் பகவான் வாத்சல்யத்துடன் தன்னை அண்டியவர்களுக்கு அவர்கள் விரும்பும் விதத்தில் காட்சியளிப்பதாக சொல்வார்கள்.  பாறைகளின் இடையிலிருந்து பெருகி சக்ர நதி என்ற பெயரில் நதி அசிரமத்தை இருபுறமும் அணைத்தவாறு செல்லும்.  தனித்து வாழும் ரிஷி, முனிவர்கள் ஆசைகளைத் துறந்து எளிமையாக வாழ்கிறார்கள். சாந்தமாக பூஜை, தங்கள் யோக சாதனைகள் என்று இருப்பவர்கள் தாங்களும் சுத்தமாக இருந்து அந்த இடத்தையும் சுத்தமாக வைத்திருப்பர். புலஹாஸ்ரமம் என்ற அந்த இடத்தின் உபவனம் பலவிதமான பூக்கள், துளிர் இலைகள் துளசி போன்ற சிறு செடிகள், கந்த மூல பலம் – கிழங்குகள், கீரைகள், பழங்கள் இவைகளுடன் நிரம்பி இருந்தது. அது அவர்கள் உணவு தேவையை நிறைவு செய்தது. நன்றாக வாழ்ந்து அனுபவித்தவர்களே அங்கு இருந்தனர். அதனால் உபசமம் – தானாகவே அடங்கி விட்ட ஆசைகள் – உடையவர்களாக இருந்தார்கள்.   அந்த பவித்ரமான நதியில் ஸ்னானம் செய்து பகவானைத் தியானமோ, மலர்களால் அர்ச்சனையோ செய்வதிலேயே திருப்தி அடைந்தவர்களாக இருந்தனர்.  ஸூரியோதயத்திலேயே ஸூரியனை வேத மந்திரங்களால் துதித்தனர். இந்த மந்திரத்தை காயத்ரி சகோதரன் என்பர். “த்யேய: சதா சவித்ரு மத்யவர்தீ நாராயண: சரஜிசாஸன சன்னிவிஷ்ட:  | கேயூரவான் மகர குண்டலவான் கிரீடீ ஹாரீ ஹிரண்மய வபு: த்ருத சங்க சக்ர: “ |

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஏழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-14

அத்யாயம்-8

 ஒரு சமயம் மகா நதியில் ஸ்னானம் செய்த பின், அதன் பின் செய்ய வேண்டிய ஜப தபங்களை, ப்ரும்மாக்ஷரத்துடன் சேர்த்து செய்து கொண்டு மூன்று நாழிகள் (ஓரு முஹூர்த்த காலம் )  நதிக் கரையில் அமர்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு மான் தாகத்தால் தண்ணீரை குடிக்க அங்கு வந்தது.  பாதி குடிக்கும் பொழுது எங்கோ தூரத்தில் ம்ருகபதியான சிங்கம் பலமாக கர்ஜனை செய்வது கேட்டது.  

அதைக் கேட்டு அந்த பெண் மிருகம் இயல்பாகவே பயந்த குணம், சிங்கத்திடம் பயம், பர பரப்பில் கண்கள் மயங்க, ஹ்ருதயம் துடிக்க,  தாகம் தணியாமலே தண்ணீரை விட்டு வெளியேற முயன்றது.  கர்பத்தை தாங்கியிருந்த அந்த பெண் மான் குதித்து ஏறுகையில் அதன் வயிற்றிலிருந்த சிசு வெளி வந்து தண்ணீரில் விழுந்தது. ஏற்கனவே பயம், பிரசவ வேதனை சேர்ந்து கொண்டது, நீரில் விழுந்த குட்டியை பற்றிய தாயின் கவலை,  க்ருஷ்ண சார என்ற ஜாதியைச் சேர்ந்த பெண் மான், அதன் கூட்டத்தார் யாரும் அருகில் இல்லாமல் தனித்து விடப் பட்ட நிலையில் அந்த க்ஷணத்திலேயே உயிரை விட்டது.

மான் குட்டி, நதியில் விழுந்து தவித்தது.  கரையில் ஜபம் செய்து கொண்டிருந்த ராஜ ரிஷி பரதன் பரிவுடன் அதை காப்பாற்றி, தாய் இல்லாத குட்டி என்ற நிலையில் ஆசிரமத்திற்கே கொண்டு வந்தார்.  அதனிடம் அவருக்கு தன் குழந்தையிடம் தோன்றுவது போன்ற பாசம் மிகுந்தது.  அதை ஆஹாரம் கொடுத்து, தூக்கி வைத்துக் கொண்டு, கொஞ்சியும், விளையாடியும் பாலனம் செய்தார்.  ஒவ்வொருவராக அருகில் உடன் இருந்த தபஸ்விகள் சிலர் காலம் முடிந்தும், மற்றவர்கள் வேற்றிடமும் சென்று விட்டனர்.  மான் கூட்டங்களும் இந்த குட்டி மானை ஏற்றுக் கொள்ளவில்லை.  தனித்து விடப் பட்ட குட்டி மானை பார்த்து “அடடா, இதற்கு யாருமேயில்லை. என்னையே தாய் தந்தையாக எண்ணுகிறது என்று பூரித்து போனார்.  இதற்கு உடன் பிறந்தார்களோ, உறவினர்களோ எல்லாமே நான் தான் என்று அதனிடம் மிகுந்த வாத்சல்யத்துடன் வளர்த்தார். அதுவும் அவரிடம் ஒட்டிக் கொண்டது.

இவ்வாறு அதனிடம் அன்பு கொண்டு அதிலேயே தன் நேரம் முழுவதும் செலுத்தியபடி இருந்தவர், கண் மூடித் தனமான பாசத்தால் தன்னுடன் தவம் செய்த ஆசிரம வாசிகளைக் கூட மறந்தார். அதனுடன் நடந்து, அதற்கான தேவைகளை பார்த்து பார்த்து செய்து வந்தவர் மனம் முழுவதும் இந்த மான் குட்டியே நிறைந்தது. புல்லைத் தேடி போனால் கரடிகள் அடித்து விடுமோ, தானே விழுந்து விடுமோ என்ற பயத்தால் வளர்ந்த பின்னும் அதனுடன் சுற்றினார்.  தோளில் தூக்கிக் கொண்டு நடப்பார்.  மார்பில் போட்டு தூங்க வைப்பார். இதில் என்றுமில்லாத சந்தோஷமும் அடைந்தார்.  தன் செயல்களின் நடுவில்  அது என்ன செய்கிறது என்ற கவலையுடன் எழுந்து வருவார்.  இயல்பாக இளகிய மனதுடையவர், அதன் நலனில் அளவுக்கு மீறி கவலைப் பட்டதும், தன் புதல்வனுக்கு செய்வது போல் நன்றாக இரு என்று ஆசீர்வதிப்பதுமாக காலம் சென்றது.  கண் மூடி ஜபம் செய்யக் கூட பயம்.  அந்த சமயம் துஷ்ட மிருகங்கள் வந்து அடித்து விடுமோ, செல்வமே குறியான லோபி, தன் சேமிப்பான  தனத்தை பாதுகாப்பது போல பாது காத்தார். தன் தவம், ஜப தபங்கள் பற்றி சில சமயம் நினைத்தாலும், ஒத்திப் போட்டுக் கொண்டே வந்தார்.  ஒருநாள் அதைக் காணவில்லை.

பரதன் என்ற அந்த ராஜரிஷி பரிதவித்தார். இந்த பிரிவை அவரால் தாங்கவே முடியவில்லை. தேடினார். புல் வெளிகளில், தினமும் செல்லும் வழியில், எங்கும் அதைக் காணவில்லை. தேடி அலைந்த  சமயம் எண்ணம் முழுவதும் அந்த குட்டி மானே இருந்தால், அவருடைய நித்ய சாதனைகள், செயல்கள் எதிலுமே கவனம் இல்லாமல் ஆயிற்று.   தான் ஆரம்பித்த தவம், யோகம், பகவதாராதனம், எதுவுமே நினைவில் இல்லை. வளர்ப்பு மிருகம் , தன் பிறவிக்கும், வாழ்க்கைக்கும், சாதனைகளுக்கும் சம்பந்தமே இல்லாத ஒட்டுதல், அதன் பிரிவால் தன்னையே மறந்தவராக தன் தகுதிக்கு சற்றும் பொருந்தாத ஒரு மனக்லேசத்தை அடைந்தார்.  முன்னால் தானே முனைந்து கைவிட்ட ஆசைகள், காம, மோஹங்கள் இவைகளே அவர் மனதில் நிறைந்தது. தனது, தான் என்ற எண்ணங்கள் அழிவை கொடுக்கும் என்று அறியாதவரா? எலி வளைக்குள் புகுந்த பாம்பு போல இந்த பரிவும், மோகமும் அவரை துளைத்தெடுத்து விட்டன. காலன் வந்தான். அப்பொழுதும் அருகில் இருந்த  பாசம் மிகுந்த  தன் மக்களை, புதல்வர்களை விட்டு வளர்ப்பு மானையே நினைத்து உடலை விட்டார். அதன் பலனாக மிருக பிறவியை அடைந்தார்.  மறு பிறவியில்  மானாகவே பிறந்தார்.

அஹோ கஷ்டம், நான் நிலையழிந்தேன்.  ஆத்ம ஞானம் அடையவே வாழ் நாள் முழுவதும் பாடு பட்டேன், சத் சங்கத்திலேயே இருந்தேன், பலவிதமான  நன்மைகளைத் தருபவனும்,  சரணம் என்று வந்தவர்களைக் காப்பவனுமான வாசுதேவனிடத்தில் அனவரதமும் பக்தி செய்து வந்திருக்கிறேன். அனுஸ்ரவணம், மனனம், சங்கீர்த்தனம்,ஆராதனம்,அனுஸ்மரணம் என்ற பக்தி மார்கத்தில் சொல்லியுள்ள அனைத்தையும் கடை பிடித்தேன். மனதை துடைத்தது போல சுத்தமாக வைத்திருந்தேன். \அதனுள் நுழைந்து என்னை அறிவில்லாதவனாக ஆக்கி, மான் குட்டியைக் காட்டி தடுமாற வைத்தது விதி என்று புலம்பினார். பூர்வ ஜன்ம நினைவு இருந்ததால் மான் தாயை விட்டு ரிஷிகளின் ஆசிரமங்களின் அருகிலேயே சுற்றி வந்து ஒரு நாள் உயிரை விட்டார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஆறாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-31

அத்யாயம்-9

ஸ்ரீ சுகர் சொன்னார்:  ஆங்கிரஸ கோத்ரத்தில் பிறந்த ஒரு அந்தணன் தன் நித்ய கர்மாகளை சிரத்தையாக செய்து வந்தவன்.  சமம், தபம்,ஸ்வாத்யாய, அத்யனம் இவைகளில் சந்தோஷமாக இருந்து வந்தவன் அஸூயை இல்லாமல் தன் வித்யையும். ஞானமே பிரதானமாக உள்ள விஷயங்களைக் கேட்பதிலும், மற்றவர்களுக்குச் சொல்வதிலும் காலம் கழித்து வந்தார்.    ஒன்பது புதல்வர்கள்  அவரைப் போலவே குணம், சீலம் உடையவர்களாக பிறந்தனர். இளைய மனைவியிடம் இரட்டையர்.  அவளும் பிறந்த சிசுக்களை விட்டு பரலோகம் சென்றாள்.

 பரம பாகவதரான ராஜ ரிஷி பரதனே ம்ருக சரீரத்தை விட்டபின் அந்தணனாக பிறந்தார் என்பர். 

இந்த பிறவியிலும் தனித்து இருப்பதிலும், பகவானின் நினைவிலும், தன் முந்தைய கர்ம பந்தங்களை முற்றிலும் அழிக்க உதவும் ஸ்ரவண, ஸ்மரண என்ற வழிகளையே அனுசரித்து வந்தார்.  முன் பிறவி வாசனையால் தன்னை ஜடமாகவும், செவிடனாகவுமே மக்கள் மத்தியில் வெளிப் படுத்திக் கொண்டு வாழ்ந்தார். அந்தணரோ, ஏன் தன் மகன் இப்படி இருக்கிறான் என்று கவலை கொண்டார். அவனுக்கு உரிய சம்ஸ்காரங்களை செய்வித்தார். உபநயனம், காலம் காலமாக வந்த நியமங்கள், அவன் அதில் நாட்டம் கொள்ளாவிடினும் உபதேசித்தார். அனுஷ்டானங்கள்  அவனை தெளிவாக்கும் பின்னால் அவன் தந்தையாகும் பொழுது உதவும் என்று நம்பினார். அவனும் அவர் எதிரில் அவைகளை சிரத்தையாகச் செய்தான். வேதங்களை முறையாக கற்றான்.  ப்ரணவத்துடன் த்ரிபதி என்ற காயத்ரி மந்திரத்தை ஜபம் செய்தான்.  வேணிற்காலம், வசந்தம் என்று பருவ காலங்களில் கற்க வேண்டியவைகளை க்ரஹித்துக் கொண்டான்.

தந்தை இறந்த பின் சகோதரர்கள் வேத அத்யனம் செய்வதில் மட்டுமே ஈடுபாடும் மற்ற எதுவுமே அறியாதவன் போல ஜடமாக இருந்த இளையவனை கைவிட்டனர். அவனும் இயல்பாக  பசுக்களிடம் அதிக நேரம் செலவழித்தான். அவைகளைப் போலவே மந்த மதி,  நடவடிக்கைகள் என்று மற்றவர் ஏளனம் செய்தனர். பொருள் ஈட்டவோ, மற்றவர்களுக்கு சமமாக உடையோ, உணவோ வேண்டாமல் கிடைத்ததை, மீந்த உணவு எதைக் கொடுத்தாலும் உண்டு வாழ்ந்தான். தனக்குள் பூர்வ ஜன்ம வாசனையால் அமைந்த சித்தியும் திருப்தியுமாக ஆனந்தமாகவே இருந்தான்.  சுகமோ, துக்கமோ எதுவுமே பாதிக்காமல், தேஹ அபிமானமே இல்லாமல் வாழ்ந்தான். மற்றவர்கள் அவனை சீண்டினர். காளை மாடு போல குளிரோ, வெய்யிலோ உறைக்காத உடல் வாகு, கொழுத்த உடலும், புல்லில் படுத்தாலும் , புழுதியில் படுத்தாலும் யாரும் கவனிக்கவில்லை. மறைந்திருந்த  ப்ரும்ம வர்சஸ்- சாதனைகளின் பலனான தேஜஸ் மஹாமணி போல அழுக்கு வஸ்திரத்திலும், உபவீதத்தினால் மட்டுமே அந்தணன் என்று தெரியும்படியாக இருந்தவனை ப்ரும்மபந்து (வசைச் சொல்) என்று பழித்தனர். அந்த அவமானங்களை பொருட்படுத்தாமல் வளைய வந்தான். வயலில் வேலை செய்யச் செய்தனர்.  அதையும் செய்தான். அங்கு காளைகளுக்கு கொடுப்பது போலவே பிண்ணாக்கு போன்றவைகளை உண்ணக் கொடுத்தனர். அதையும் எந்தவித உணர்வும் இன்றி உண்டான். ஒரு சமயம்  ஏதோ ஒரு சமையல் வேலை செய்பவன், தனக்கு குழந்தை வேண்டும் என்று வேண்டி பத்ரகாளிக்கு பலி கொடுக்க நினைத்தான்.  பசுவை தேடி வந்தவனை பசுக்களின் உரிமையாளர்கள் விரட்டினர்.  இரவில் திருடிக் கொண்டு செல்ல வந்தவன், வயற்காட்டு வளர்ப்பு மிருகங்களின் இடையில் ஆனந்தமாக தூங்கிக் கொண்டிருந்த அந்தண மகனைக் கண்டான்.  அவனை பலி கொடுக்க ஏற்றவனாக நினைத்து கயிற்றால் கட்டி சண்டிகா கோவிலுக்கு கொண்டு சென்றான். சரியான பலி என்று மகிழ்ந்தான். தங்கள் குல விதிப் படி அவனை பசுவாக நினைத்து முழுக்காட்டி, நல்ல வஸ்திரங்கள் அணிவித்து, பூஷணங்கள் வாசனை திரவியங்கள் பூசி, திலகம் இட்டு, உணவுக்குப் பின் தூப தீபங்கள் காட்டி, இலைகள் பழங்கள் கொடுத்தும் ம்ருதங்க பணவ வாத்யங்கள் வாசித்து புருஷ பசு என்று பத்ரகாளியின் முன் நிறுத்தினர்.  அந்த சமையல்கர்களின் தலைவன் புருஷ பசுவை வெட்டி தேவிக்கு சமர்ப்பிக்க, அதற்கான மந்த்ரங்களை சொல்லி, கொடூரமான ஒரு வாளைத் தூக்கினான். ஏராளமான தனம், அதனால் விளைந்த மதம், ராஜஸ் என்ற குணமே பிரதானமான கூட்டம், ஹிம்சையே பழகிப் போனதால் இதை பயங்கரமாக எண்ணவே முடியாத மனோபாவம்,  ப்ரும்ம தேஜஸ் கண்ணில் படவில்லை, தங்கள் தேவை நல்ல ஜாதி பசு, அது கிடைத்தது என்று  எண்ணி மகிழ்ந்தனர்..  

சர்வ பூதங்களையும் சமமாக நட்புடன் பார்க்கும், ஸூன்யமான இடத்திலும் தன்னுள் லயித்து ஆனந்தமாக இருப்பவன், மிக அரிதாக சாதனைகள் மூலம் அடைந்த  ப்ரும்ம ஞானம், சரீரத்தின் காந்தியே நெருப்பாக சுடர் விட இருந்தவனைக் கண்ட  பத்ரகாளி திடுமேன வெகுண்டெழுந்தாள்.

பெரும் கோபத்துடன் ஆவேசமாக பேசலானாள்.  புருவங்கள் நெரிய, பற்களை நற நறவென கடித்த படி, கண்கள் பயங்கரமாக சிவக்க, அட்டஹாச ஆர்பாட்டங்களுடன் கொல்லத் தயாராக இருந்த கொலையாளிகளை அதே வாளால் வெட்டித் தள்ளி, தன் பரிவாரங்களுடன் ஆடிப் பாடி, வெட்டிய தலையை பந்து போல உருட்டி விட்டு மறைந்தாள்.

விஷ்ணு தத்தா !(பரீக்ஷித்)  தலையை வெட்ட கூட அனுமதித்து சிறிதும் கவலைபடாமல் ஆயத்தமாக இருந்த போதிலும், அந்தந்த சமயத்திற்கு ஏற்ப ரூபம் எடுத்து வரும் பகவான் பத்ரகாளியாக வந்து தன் பக்தனை ரக்ஷித்தான். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  ஒன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-20

அத்யாயம்-10

ஸ்ரீ சுகர் சொன்னார்: சிந்து சௌவீர நாட்டு அரசன் ரகூகணன்  என்பவன்  இக்ஷுமதி  நதிக் கரையோரமாக சென்று கொண்டிருந்தான். அவனது சிவிகையை தூக்க ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தவர்களின் பார்வையில் இந்த அந்தணன் பட்டான். தெய்வமே அனுப்பியது போல தடிமனான இளைஞன்,  பாரத்தை தூக்க சரியான ஆள் என்று எண்ணி அவனை அழைத்து சிவிகையை தங்களுடன் சேர்ந்து  தூக்க செய்தனர்.  பாரத்தை தூக்குவது அந்த இளைஞனுக்கு பழக்கம் இல்லாததால் சிறிது தூரம் செல்லும் முன் சிவிகை ஆடுவதையும், சீராக தூக்காததால் சரிந்து விழுவதையும் அறிந்த ரஹோகணன், சிவிகை தூக்கிகளை திட்டினான்.   என்ன ஆயிற்று உங்களுக்கு, என்றவன் புது மனிதனைப் பார்த்து ஏய், சரியாக  தூக்கு என்று அதட்டினான்.  எஜமானன்  திட்டும்படியாயிற்றே என்று பழைய சிவிகை தூக்கிகள், அவரிடம் காரணம் இவன் தான் என்று சுட்டிக் காட்டினர்.  அரசனே! நாங்கள் வழக்கமாக சிவிகைத் தூக்கிகள் சரியாகத் தான் தூக்குகிறோம், இவன் புதியவன்,  இப்பொழுது தான் நியமித்தோம், வேகமாக போகிறான், எங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றனர்.

பலர் இணைந்து செய்யும் தொழிலில் ஒருவனின் தவறு அனைவரையும் பாதிப்பது தெரிந்தது தானே. ராஜா ரஹோகணன் விசாரிக்க பல்லக்கிலிருந்து இறங்கினார்.  வயதானவர் ஆனதால் கோபத்தை அடக்கிக் கொண்டு  புழுதி மூடிய ப்ரும்ம தேஜஸன், ஜாதவேதன் என்ற வேதம் அறிந்தவன்,  என்பதெல்லாம் அந்த தோற்றத்தில் தெரியவில்லை.  அவனை பார்த்து கேட்டார்.

சகோதரனே! அஹோ, கஷ்டம். இது கடினமான தொழில், உடல் உழைப்பைக் கோருவது.  அத்வான வழியில் வெகு தூரம் செல்ல வேண்டும். சகே! நீ பலசாலியாக, திடகாத்திரனாக தெரிகிறாய். இளைஞன் தான், உடல் ஊனம் எதுவும் இல்லை. ஏன் இவ்வாறு ஒத்துழைக்காமல் நடந்து கொள்கிறாய்?  பாராட்டுவது போல வார்த்தைகள், அதில் தொனித்த அவமதிப்பு புரிந்தாலும்,  பதில் சொல்லாமல் முன் போலவே சிவிகையை தூக்க முனைந்தான்.  ஆத்ம தத்வம்அறியாதவன் கடைசி காலத்தில் பஞ்ச பூதங்களும், இந்திரியங்களும், புண்ய பாபங்களும், அந்த: கரணமும்  தான்  பிறவிக்கு காரணம் என்பதை அறியாதவன். தண்டபாணியான யமன் போல தன் மக்களை ஆளுகிறான். நர தேவன் என்ற அபிமானம். என்னை ஜடம் என்று நினைக்கிறான் போலும் என நகைத்தவாறு சென்றான்.

திரும்பவும் ஆட்டம் கண்ட தன் சிவிகையிலிருந்து இறங்கிய ரகூகணன் ஏகமாக கோபத்துடன் கத்தினான்.

என்ன இது, நீ உயிருடன் இருக்க வேண்டுமா, இல்லையா? என்னை தவிக்க விட்டு,அரச ஆணையை மீறுகிறாய். மூடன், மன நலம் இல்லாதவன் உனக்கு தண்டபாணி, யமன் போல தண்டனை கொடுக்கிறேன். நான் யார் என்று தெரிந்து கொள், என்றான்.

நாட்டை ஆளும் தகுதியால் எல்லாம் அறிந்தவன் போல பேசுகிறான்.  அபிமானம்- கர்வம் பேச வைக்கிறது. ராஜஸமும், தாமஸ குணமும் மேலோங்கி இருந்தால் இப்படித்தான் பேசுவார்கள். தானே பண்டிதன் என்பர். பகவானைக் கூட துச்சமாக நினைப்பர்.  சர்வ பூத சுஹ்ருதன், அனைவரிடமும் நட்பாக இருப்பவன் என்று புகழப் படும் பகவான், யோகேஸ்வரனின் செயல்களை அதிகமாக அறிந்திராத அரசனிடம், நகைப்பது போலவும் அதை வெளிக் காட்டாமல் அடக்கிக் கொள்வது போலவுமான குரலில் பதில் சொன்னார்.

அந்தணர் சொன்னார்: அரசனே, நீ சொன்னது சரியே.  நான் ஆள்பவன், நீ எளிய ஏவலன் என்றாய். உன் சொல்லை மதிக்காமல் அவமதித்து விட்டேன் என்கிறாய். 

நீ ஞானி. அதில் சந்தேகமில்லை. ஹே வீர! பாரம் என்பது உடலுக்குத்தான், உயிரினங்களில் அந்தர்யாமியாக இருக்கும், சித்ரூபமான பகவானுக்கு இல்லை. அதனால் என்னால் சுமக்க முடியாது என்ற சொல்லில் பொருள் இல்லை.  வெகு தூர பயணம் என்கிறாய். வாஸ்தவம் தான். என்னை ஸ்தூல சரீரி- கொழுத்த உடல் உடையவன் என்றாய். அதுவும் சரியே.  ஸ்தூலம், க்ருசம், ஆதி வியாதி, பசி தாகம், ஆசை மோஹம், முதுமை, நித்ரை, ரதி, கோபம், மதம் இவை தேஹிகளுக்குத் தான்.   ப்ரும்ம ஸ்வரூபனான எனக்கு என் உடலில் தேவையில்லாத வஸ்து எதுவுமே இல்லை. உயிர் உள்ளவனா இல்லையா என்பது ஆதி அந்தம் உள்ள பிராணிகளுக்குத் தான். ஸ்வ,ஸ்வாம்ய – தானும் பரமனும்- என்ற திடமான கொள்கை உள்ளவனுக்கு தேவைகளும் இல்லை.

விதி வசத்தால் சிவிகையை தூக்குதல் என்ற செயல் எனக்கு அதுவும் யோகமே. என்ன செய்கிறேன் பார் என்றாய். ராஜஸ குணம் மிகுந்த க்ஷத்திரியன் நீ.  இப்பொழுது நான் கேட்கிறேன்? யார் ஈஸ்வரன் , அதாவது ஆணையிட யோக்யதை உள்ளவன்? உன் உடலாலும், வாக்கினாலும், தண்டத்தாலும் இதுவரை என்ன சாதித்து இருக்கிறாய்?  பிசைந்த மாவை மேலும் பிசைந்தால் என்ன மாறுதல் இருக்கும்? அது போல ப்ரமத்தன் என்றாய்-மூளை பிசகியவன்- அவனை தண்டித்தால் அவனிடம் என்ன எதிர் பார்க்க முடியும், மேலும் ப்ரமத்தனாவான். ராஜன்! ஞான உபதேசம் பெற கபிலாஸ்ரமம் செல்பவன் வழியில் எதற்கு ஒரு அந்தணனை சிவிகை தூக்கியாக வைத்திருக்கிறாய்? அவனுக்கு அது குறைவில்லை. ப்ராரப்த கர்மாவை குறைக்க பாரம் தூக்குதல் ஒரு வழி.  பாண்டவனே! உன் மூதாதையர் வனத்தில் வசிக்கின்றனர்.  (அரசனாக இருந்து மான் பிறவி எடுத்து, தற்சமயம் உன் முன் அந்தணனாக இருப்பவன் என்று என்னை அறிவாயா?) இந்த ப்ரமத்தன் என்ன கண்டான், தத்துவ அறிவு வேண்டும் என்று நினைக்க கூட முடியுமா? நான்கு வித சாதனைகள் என்ன என்று தெரியுமா? வேதாந்தம் அறிவானா? என்று தானே நினைக்கிறாய்?  எல்லா பாத சுவடுகளும் யானையின் காலடி சுவட்டில் மறையும் என்று ஒரு விதி- அதன் படி, சிரத்தையுடன் செய்வதே பலன் தரும் சிரத்தையில்லாமல் செய்யும் யாகமோ, தானமோ பலன் தராது என்பது நியதி. சிரத்தை உள்ளவனுக்கு ஞானம் பெற தகுதி வருகிறது. (ஸ்ரத்தாவான் லபதே ஞானம் -கீதை) அதன் பின் மற்றவையும் தொடரும். 

அரசன் திகைத்தான். பாண்டவ வம்சத்தின், சிந்து ரஹோகண ராஜ்யாதிபதி தான் ஆத்ம தத்வம் அறிய விரும்பியதை அதை ஏற்கனவே அடைந்தவனாக அந்த அந்தணன் பேசியதை கேட்டபின் வேகமாக இறங்கி வந்தான்.  தலையால் அவர் பாதத்தில் வணங்கி, மன்னிப்பு கேட்டான்.

தாங்கள் யார்? உங்கள் தகுதியை மறைத்துக் கொண்டு சேவகனாக வந்துள்ளீர்கள்.  எந்த ரிஷியின் வழித் தோன்றல்?  எங்கிருந்து வருகிறீர்கள்? எங்கள் நன்மைக்காக, எங்கள் மனதில் தெளிவை அளிக்க வேண்டும்.  தேவேந்திரனின் வஜ்ரம் ஒரு பொருட்டல்ல.   முக்கண்ணனின் ஸூலத்திற்கும் பயப்படமாட்டோம். யமனுடைய தண்டமும் அக்னி, ஸூரியன், சந்திரன், வாயு, நீர் இவைகளிடமும் பயமில்லை, அந்தணர்களின் குலத்தை அவமதிக்க பயப்படுவோம். எனவே ப்ரும்மசங்க!  ஜடம் போல வெளித் தோற்றம்.  உங்கள் விக் ஞானம்- தெளிவான ஞானம் – அதை மறைத்து நடமாடுகிறீர்கள்.  அதனால் உங்களைத் தெரியவில்லை.  சாதோ! மனதால் கூட எங்களை கோபிக்காதீர்கள். மன்னிக்க வேண்டுகிறேன். நான் இந்த யாத்திரையை துவங்கியதே, பரம குரு, முனிவர்களின் தலைவன். அவரிடம் பாடம் கேட்கவே.  சாக்ஷாத் ஹரியைப் பற்றி அவருடைய ஞான உபதேசம் பற்றி, அவர் அவதரித்த கதையைக் கேட்க கிளம்பினேன்.  உலகை சுற்றி பார்க்க வந்தீர்களா, யோகேஸ்வரர் நீங்கள்.   உங்களைப் போன்ற யோகேஸ்வரர்களின் போக்கு சாதாரண உலகியலில் உள்ள எங்களால் எப்படி ஊகிக்க முடியும்?  பாரம் தூக்குவதின் சிரமத்தை அறிவேன்.  உடல் நோக வேலை செய்பவன் படும் பாடு எனக்கு புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் வேறு வழி இல்லை. இது உலகத்தின் நடை முறை. ஸ்தூலத்வம்-உடல் பருமன்-  ஸ்தூலமான பாத்திரத்தை அடுப்பில் வத்து நீரை விட்டு  கீழே அக்னியை மூட்டினால், அக்னியின் ஸூடு பாண்டத்தில் உள்ள தண்ணீரை சுடவைக்கிறது, அது அதில் இருக்கும் தான்யத்தை வேக வைத்து உணவாக்குகிறது.  மனித சரீரம் ஸ்தூலமானால் இந்திரியங்களின் செயல்களில் ப்ரதி பலிக்கும்,  உள்ளிருக்கும் புருஷனின் அனுரோதம்- தூண்டுதலால் என்பது ஒரு நியதி.  சாஸ்தா, அபிகோப்தா – சாஸனம் செய்பவன், பரி பாலனம் செய்பவன் என்பது அரசன் பெயர். அவன் கடமை. ஒரு விதத்தில் அவன் பிரஜைகளின் கிங்கரனே-அடியாளே.  பிசைந்த மாவை பிசைவது- செய்த காரியத்தையே செய்வது ராஜாவாக என் குலதர்மம். அச்யுதனின் கட்டளையாக நினைத்து செய்யும் பொழுது  தவிர்க்க முடியாமல் செய்யும் குற்றங்கள், பாபங்கள்  தானே கரைந்து விடும். 

அதனால், தாங்கள் என்னிடத்தில் நரதேவ அபிமானம்-கர்வம் , அதனால் உங்களை பொருட்டாக நினைக்கவில்லை  என்று சொன்னதில் பொருள் இல்லை.. ஆர்த பந்தோ!  (கஷ்டத்தில் இருப்பவனுக்கு பந்துவாக இருந்து உதவுபவர்)  என்னை நட்புடன் பாருங்கள். உலகத்துக்கே சகாவாக இருக்கும் ப்ரும்ம ஸ்வரூபனுக்கு அது ஏற்றதே.  ஸூலபாணியை போல அறியாமையால் செய்த என் தவறை மன்னித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பத்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-25

அத்யாயம்-11

அந்தணன் சொன்னான். அரசனே! நீ அறிந்ததைச் சொன்னாய்.  அது போதாது, அறிந்து கொள்ள வேண்டியது இன்னமும் நிறைய உள்ளன.  க்ருஹஸ்தன், தன் குடும்பம், தன் நாடு, பிரஜைகள் என்பதை நல்ல முறையில் நிர்வஹிக்க வேண்டிய நிலையில் உள்ளவன்,  இந்த பிரச்னைகளே உன் மனதை ஆக்ரமித்து இருக்கிறது. அதனால் நீ என் கேள்விக்கு பதில் அந்த நிலையிலேயே சொன்னாய். அது சாதாரண மனிதனுக்கு சரி. .வேதங்களில்  கூட தத்துவ வாதம் என்பதை  சாதுக்கள்  சரியென்று சொல்வதில்லை.  தத்துவங்களை புரிந்து கொள்ள சாதாரண சொற்கள் போதும்.  கனவில் கண்ட சுகமான காட்சிகளை விழிப்பு வந்த நிலையில் நாம் அது வெறும் தோற்றமே என்பதை அறிவதில்லையா ?  மனம் ராஜஸ குணத்தால் நிரம்பியிருக்கும் சமயம் அங்குசத்தால் கட்டுபடுத்த முடியாத யானையின் மதம் போன்று மற்ற சத்வ, தாமஸ குணங்களுக்கு இடமளிக்காது.  அவனுடைய புர்வ ஜன்ம வாசனை விஷயங்களில் – உலகியல் சுக துக்கங்களிலேயே இருக்கும். மாயையே உண்மை என்றேண்ணி மாற்று கருத்தின்றி தேகத்தையே நிரந்தரமாக எண்ண வைக்கும்.

  பலவிதமான பெயர்களுடன் பதினாறு விதமாக ஆத்மா தன்னை வெளிப் படுத்திக் கொள்ளும். பூர்வ ஜன்ம வாசனையின் பலனாக விருப்பு வெறுப்புகள் வரும். க்ஷேத்ரக்ஞன் – பரமாத்மா சக்ஷியாக இருப்பான்.  பருமனான உடலோ, மிகவும் சிறிய உடலோ,  நான் தேவன் அல்லது மனிதன் என்ற பேதமோ,  உடல் சம்பந்தப்பட்டது, வெளியில் தெரிவது.  மனம் குணங்கள் (ஸத்வ,ரஜோ,தாமஸ)  ஆட்டுவித்தபடி ஆடுகிறது. -அதனால் பந்த மோக்ஷத்திற்கு அதுவே காரணமாகிறது.  பொருள்களில் நல்லது தீயது என்றும், விரும்புவது, வேண்டாதது என்று அது காட்டும் சித்திரமே அல்லது உருவமே. . ஞானம் உதயமானால் உண்மை தெரியும். 

மனதை தான் விரும்பியபடி செய்யச் செய்யும் குணங்கள் துன்பத்தையே தரும். ஆகவே  மனதை அடக்கி தன் வசம் ஆக்கிக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்  பஞ்சால் ஆன திரி நெய்யை தான் உள் வாங்கி, அக்னியின் உதவியோடு தீபமாக ஒளி விடுவது போல மனமும்  புத்தியும் நிர்குணம் என்ற ப்ரும்மத்தை அறிந்து கொண்டு சத்புத்தியாக சுடர் விடும்.

பதினோரு செயல்கள்.  உடல் செய்யும் வேலைகள், இந்திரியங்கள் செய்பவை, ஞானம் மற்றும் அபிமானம். வாசனை முதலான  விஷயங்கள் நுகர் பொருட்கள்.  அகூதி- ரூபம். கர்மேந்தியங்கள் செய்யும் ஐந்து விஷயங்கள்.  நடப்பது முதலியவை

ரஹூ கணனுக்கு ஞான உபதேசம்

முன் சொன்ன பல ஆத்ம விசாரங்களை விவரமாகச்  சொல்லி முடிக்கிறார்.  …….மேலும் பல ஸ்லோகங்கள்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில் பதினொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்- 17 

அத்யாயம்-12

ரகூ கண ராஜா துதி செய்தார்;

நமோ நம: காரண விக்ரஹாய, ஸ்வரூப துச்ச்சீ க்ருத விக்ரஹாய. அவதூதனான அந்தணனாக வந்து ரகசியமான அரிய தத்வங்களை எனக்கு விளக்கிச் சொன்ன  நித்யானந்த ரூபமாக விளங்கும் உங்களுக்கு நமஸ்காரம்.  வெப்ப நோயால் தவிக்கும் நோயாளிக்கு  குளுமையான பனிக் கட்டி நிறைந்த நீரால் உடலை நீராட்டியது போலவும், தவறான தான் தனது என்ற அபிமானம் என்ற பாம்பின் விஷம் தாக்கி, மயங்கி , இருண்ட கண் பார்வையுடன் இருந்த எனக்கு ப்ரும்மன்! உங்கள் வாக்கு அம்ருதம் போலவும் விஷத்தை முறியடிக்கும் மருந்தாவும் அமைந்து விட்டது. ஆகவே, உங்களை, என் சந்தேகங்களை நீக்கும் பொருட்டு வணங்குகிறேன். அதன் பின், நல்ல அறிவும், அத்யாத்ம  யோகம் பற்றியும் விவரமாக சொல்லுங்கள். என் மனம் தற்சமயம் அதை மிக மகிழ்ச்சியுடன் கேட்க  விழைகிறது.  யோகேஸ்வர! தாங்கள் சொன்னீர்கள்.  கண் முன் தெரியும் நற் பலன்கள் முன் செய்த வினைகளின் பலனே.  எதிர்பாராமல் வந்தது அல்ல. இதன் விவரங்களை அலைபாயும் என் மனதிற்கு விளங்கும்படி சொல்லுங்கள்.

அந்தணர் சொன்னார்: இந்த ஜனங்கள் என்பதும், இவர்களுக்கு அரசன் என்றும் சொல்வது எதை குறிக்கிறது? யார் யாருக்கு என்ன காரனத்தால் இந்த பெயர் அல்லது பதவி வருகிறது. அந்த அரசனுக்கும் மற்றவர்களைப் போலவே தான், கால்கள், கனுக்கால்கள், முழங்கால்கள், மார்பு மத்ய பகுதி,  தலை என்ற அமைப்பு உள்ளது.   தானாக நடக்க கால்கள் இருந்தும் என்ன காரணத்தினால் உன்னை சிவிகையில் வைத்து வேறு சிலர் தூக்கிச் செல்கிறார்கள்.  சௌவீர ராஜன் என்ற பெயர் அத்துடன்  நான் இந்த ஜனங்களை ஆளுகிறேன் என்ற உன் எண்ணம்  உன் பதவியுடன் சேர்ந்து வந்தது.   இந்த பூமி என்பது சிறு மணல் துகள்கள், சிறு கல் முதலியவைகளின் சேர்க்கையே.  இவைகளை பிரித்தால் என்ன தேறும்? அணு, பரமாணு எனும் சின்னஞ்சிறு துகள் தானே. எந்த பரமாணு உன்னுடையது? மனம் தான் காரணம் இவைகளைக் கூட்டி வைத்து பூமி என்று பெயரிட்டு அதற்கு நாயகன் என்று உன்னை அழைத்து எதனால் அல்லது எது செய்கிறது?  இதில் எந்த துகள் ஸ்தூலம்,(பருமன்)  எது க்ருசம் (மெலிந்தது) என்று பிரித்தறிய முடியுமா?  அணு அல்லது ப்ரும்மாண்டம் எது? சத் அசத் , நல்லது, அல்லாதது எவை?  எதற்கு உயிர் , எதற்கு இல்லை என்று இந்த துகள்களில் எப்படி அறிவாய்?  இதை செய்தது அஜன்- என்ற ஆதி அந்தமில்லாத, பிறப்பு இறப்பு இல்லாத முதல் புருஷன் -அவன் தான் செய்தான் என்பதை உணர்ந்து கொள்.

பரமார்த்தமான ஞானம்- நாம் அறியாத ஒரு பரம் பொருள் உலகை இயக்கும் சக்தி அதை அறிவது தான் உண்மையான அறிவு. சத்யமான ப்ரும்மா ஒன்றாக பலவாக, உள்ளும் வெளியுமாக பரவியிருக்கும்  அதன் பெயர் தான் பகவான்.  கண் எதிரில் பார்க்கும் பொழுது ப்ரசாந்தனாக, அமைதியாக இருக்கும். அதை கவிகள் வாசுதேவன் என்பர். ரஹூ கணா! அதை தவம் செய்து மட்டும் அறிய முடியாது.  வீட்டைத் துறந்து, மற்ற வசதிகளை அழித்துக் கொண்டால் மட்டும் கண்ணுக்கு புலப்படாது. வேத பாராயணத்தை முழுமையாக செய்தவனும் அறிந்ததாக தெரியவில்லை.  தனித்தனியாக நீரை, அக்னியை.ஸூர்ய சந்திரர்களை , பூஜித்து தெரிந்து கொள்ள முடியாது. (நாயமாத்மா ப்ரவசனேன லப்யோ, ந மேதஸா, ந பஹுனா ஸ்ருதேன- கீதை)

வாசுதேவனை அறிய வேண்டுமானால் அவனை அறியவே சாதனைகள், பஜனைகள் செய்பவர்களுடன் இணைந்து இருப்பது பலன் தரும்.  கேட்பதும்,நினைப்பதும் வாசுதேவன் என்ற பெயர், அதுவே பகவான், பூஜ்ய: என்ற சம்பந்தமாகவே ஆகும்.

நான் முன்பு பரதன் என்ற அரசனாக இருந்தேன். வயதானதும் பகவானின் ஆராதனம், முழுமையாக செய்ய எண்ணி, துறவியாகி  வனம் வந்தேன்.  மானின் மேல் வைத்த பற்றினால் ம்ருகமாக ஒரு ஜன்மம் எடுத்தேன். அந்த பிறவியிலும் என் நினைவு ஸ்ரீ க்ருஷ்ணன் அருளால் அழியவில்லை. மனிதனாக இந்த என் பிறவியில் என் மனம் ஜனங்களின் நடுவில் அமைதியாக இல்லை. அதனால் தனித்து தோன்றியபடி அலைகிறேன். எனவே, பல விதமான அனுபவங்களின் பலனாக விரக்தனாக அத்வானமான இடங்களில் செல்கிறேன். என் மனதில் மோஹம் இல்லை. ஞானம் என்ற வாளினால் என் மோகம் என்ற குணத்தை அடியோடு வெட்டி வீழ்த்தி விட்டேன். நான் முன்பு கேட்டு என்  நினைவில் உள்ள ஸ்ரீ  ஹரியின்  கதைகள்,  அத்வானமான இடங்களிலும் எனக்கு துணையாக உள்ளன. 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில்  பன்னிரண்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் )  வசன ஸ்லோகங்கள்-12

அத்யாயம்-13

அந்தணர் (பரத முனி) சொன்னார்: கடினமான வழி இது. இதில் நுழைந்தவன் இருட்டும், ரஜஸ், தமஸ், சத்வம் இவைகளின் பலனாக பிறவி பெற்று செயல் ஆற்றுபவன்.  இதில் தனமே முக்யமானதாக நினைத்து அலைகிறான், சிரமப்பட்டு தனத்தை சேர்கிறான்.  பலன் அவன் விரும்பியபடி அமைவதில்லை. இருந்தாலும் விடாமல் உழைக்கிறான்.

மனிதனுக்கு உடன் பிறந்த பத்து திருடர்கள் (இந்திரியங்களே திருடர்கள் போல துன்பம் விளைவிக்கும் என்பதால்).  கோமாயு, ஓனாய்கள் போல அவனிடம் இருந்து பிடுங்குதிலேயே குறியாக இருப்பவை. ஆனாலும் சில சமயம் கந்தர்வ புரம் என்பதை காண்கிறான். ரசிக்கிறான். பலவிதமான இன்னல்கள் கொசு கடிப்பது போல இருந்தாலும், சில சமயம் கிடைத்த நன்மையை நினைத்து தொடர்ந்து உழைக்கிறான். 

வீடு வேண்டும், குடிக்க நீர், செல்வம், இவைகளை தன் புத்தியால் சம்பாதிக்கிறான்.   காட்டில் அலந்து திரிவது போல இதற்கும் பல இடங்களில் அலைந்து திரிகிறான். பலமான காற்று வீனாலும், புழுதி மண்டினாலும், திசை தெரியாமல் திணறினாலும் கண்களை மறைக்கும் புழுதி, பூச்சிகள் சப்தமிடுவதைக் கேட்டும், ஆந்தை அலறுவதைக் கேட்டும் திசையறிந்து கொண்டு பசித்தாலும், பாலைவனத்தின் கானலைக் கண்டு மயங்கி அதன் பின் ஓடினாலும், வேறு வழியின்றி தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறான். வாழ்க்கையின் தேவைகளை நிறைவேற்ற.

எதிர்பாராமல் ஒரு நீர் நிலையை அல்லது நதியைக் கண்டால் ஆஹா என்று மகிழ்வான். தாவாக்னி எதிர்ப்படுவது போல உடலை வதைக்கும் இடங்கள்.  யக்ஷர்கள் வந்து அடிப்பார்களோ என்ற பயம். இந்த நிலையில் சேமித்ததையும், பிடுங்கி திருடிக் கொண்டு போக பலசாலிகளான திருடர்கள் எதிர் படலாம். சிரமப்பட்டு சேமித்த செல்வம் பறி போக பல வழிகள்.  இதனிடையில் முஹூர்த்த நேரம் கந்தர்வ நகரம் எதிப்பட்டால், மனம் மகிழ மாட்டானா?  வழி நடையில் முள் குத்திய வலி அவனுக்குத் தானே தெரியும். நகங்களில் பட்டு வலி தெறிக்கும். சற்றும் அமர்ந்த்து விட்டு பின் தொடர்ந்து செல்வான்.  குடும்பஸ்தனுடைய கஷ்டம் அவனுக்குத் தான் தெரியும். 

அதைவிட கஷ்டம், வழியில் மலைப் பாம்புகள் இருந்து விழுங்கி விட்டால் என்று பயம்.  தந்த சூகம் என்ற அந்த ஜீவன்களில் பல்லில் விஷம்.  குருடன் இருண்ட பாழும் கிணற்றில் விழுவது போல. அந்த சமயம் சிறிதளவு தேனீக்களின் கூட்டில் இருந்து வழியும் தேன் நாக்கில் படுமானால் மகிழ்ச்சி அடைவதும் இயல்பே. அனைத்து துன்பங்களையும் ஒரு வினாடி நேரம் மறக்கச் செய்யும் சுகானுபவம்.

மழை, கடும் குளிர் அல்லது கோடை வெய்யில் என்று பருவ காலங்களினால் உடல் வருத்தம் வரும். சூதாடி நண்பர்களோடு விளையாடி தொலைப்பது போன்ற தாங்களே அறிவின்மையால் வகுத்துக் கொண்ட நஷ்டங்கள்.  தனம் இல்லை, அல்லது போதவில்லை என்றால் தூக்கத்தை தொலைப்பான்.  யாசித்து ஏதோ சிறிது பெற்றாலும் தொடர்ந்து யாசித்தால் அவமானம் தான் மிஞ்சும். அதனாலும் வைரம், நன்பர்களே விரோதிகள் ஆவார்கள்.  இப்படி துன்பம் வரும் என்று முன் யோசனை வராது.

இதை எண்ணித்தான் பெரியவர்கள், மனதை அடக்கு என்றார்கள். தன்னை அறிந்து கொள். ஆசை படாதே என்ற அறிவுரைகள்.   பல விதமாக மனித வாழ்க்கையின் நிரந்தமின்மையைச் சொல்லி விட்டு, ரஹூ கணா! நீயும் இந்த அனுபவங்களை பெற்றிருக்கலாம். நட்பும், வைரமும் தெரிந்திருக்கும். அதனால் தான் ஞானம் பெற உபதேசம் பெற கிளம்பி இருக்கிறாய்.  ஹரி சேவையால் நன்மை அடைவாய். தாண்ட முடியாத இந்த சம்சாரம்  என்ற தளையை நீக்கி வெளி வர அது தான் வழி. ஞானம் பெறுவாய்.

அரசன் ரஹூ கணன் பதில் சொன்னான். அஹோ!  அந்தணரே நீங்கள் பாக்யசாலி. ஹ்ருஷீகேசனிடம் மனதை செலுத்தி மஹாத்மாவாக ஆனவர்.  க்ருதாத்மானம், மாஹாத்மானம் என்று உங்களை வணங்குகிறேன்.  உங்களை சந்தித்தால் என் வாழ்வே பயனுடையதாக ஆயிற்று.  உங்களை வணங்கி அமலமான அதோக்ஷஜனை வணங்கிய பலனுக்கு சம மான நன்மையை அடைந்து விட்டேன்.  தர்க்கம் செய்த எனக்கு விவேகம் கிடைக்கச் செய்து விட்டீர்கள்.

மஹானான உங்களுக்கு வணக்கம். இந்த அறிவு உடையவன் யாரானாலும், குழந்தையோ, யுவனோ, மாணவனோ, படித்து முடித்த அறிவாளியான அந்தணனோ, அனைவருக்கும் வணக்கம்.  பேதமின்றி அந்த அறிவை வணங்குகிறேன்.  இப்படி ஓரிடத்தில் நில்லாமல் சுற்றும் மாபெரும் அறிவாளிகளால் அரசர்கள் பெருமை நிலைக்கிறது.

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இவ்வாறு பதில் சொன்ன அரசனுக்கு ரிஷி பரதன் ஆத்ம தத்வம் என்ற உபதேசம் செய்தார்.  சிந்து தேச அரசனுக்கு கருணையுடன், அன்யோன்யமாக அன்புடன் ப்ரும்மரிஷியின் மகன் உபதேசிக்கவும் அந்த அரசன் மேன் மேலும் பணிவுடன் வணங்கியும், மகிழ்ச்சி கடலில் திக்கு முக்காடியவன் போல உணர்ந்தான்.  உடல் தரையில் பட அவரை விழுந்து வணங்கினான்.  அரசன் என்ற பெருமிதமும், உடலே பிரதானம் என்ற எண்ணமும், விலகின. இப்படித்தான் பகவானை நம்பி அதே நினைவாக வாழும் பெரியவர்களை அடைந்தால், அவர்கள் அருளுக்கு பாத்திரமாகி தாங்களும் நல் கதி அடைவர்.

மஹா பாகவதரே! பரமார்த்தமான விஷயங்களை புரியும்படி சொல்லி எனக்கு அறிவை புகட்டி விட்டீர்கள். என் கண் திறந்து கொண்டது போல தெளிவாக உலகியலை காண்கிறேன். ஆர்யா! புத்திமானான தாங்கள் எனக்கு அளித்த அறிவு, சாதாரணமாக எளிதில் கிடைக்காது. மேலும் சொல்லுங்கள். நான் உய்யும் வழியை காட்டுங்கள், என்று வேண்டினான்.

இதுவரை ஐந்தாவது ஸ்கந்தத்தின், பதின் மூன்றாவது அத்தியாயம்.

அத்யாயம்-14

அவர் மேலும் உபதேசித்தார்:  வசன நடையில் அலங்காரமான சொற்களுடன் அழகாக அமைந்த இந்த பகுதியில், தான், தன் தேகம் , தன்னுடைய என்ற குணங்களே பிரதானமாக வாழ வேண்டாம்,  பகவானை நினைத்து அவர் பாதார விந்தங்களில் சரணடைவாயாக. அவரே, குரு, அவரே  உலகியல் தாபங்களை தீர்க்க கூடியவர் என்று சொல்கிறார்.

இந்த ஐந்து புலன்களும் திருடன்கள் போல- எப்படி என்றால், சிரமப் பட்டு ஈட்டிய செல்வத்தை விரயமாக்கும் வழிகளில் மனதைச்  செலுத்தும்.  தர்மத்தைச் செய்ய எண்ணினாலும், கண் பார்த்தும், செவிகள் கேட்டும், நாக்கு ருசித்தும், தொடு உணர்ச்சியால் கவரப் பட்டும், பகவானை ஆராதிக்க விடாமல் இழுத்து வழி மாற்றி இழுத்துச் செல்லும். அதனால் மனதை அலை பாயாமல் திடமாக வைத்துக் கொள்.

இல்லறத்தில் இருப்பவனுக்கு, மனைவி  மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் மிக அதிகம். அவர்கள் அனு கூலமாக இல்லையென்றால் நாய்களும், குள்ள நரிகளும் அபகரிப்பது போல செல்வம் கரையும். அதைத் தவிர எந்த நன்மையும் இல்லை.

ஆண்டு தோறும் உழுது பயிரிட்ட விளை நிலம், ஒரு காலத்திற்குப் பின் வறண்டு போகும் அபாயம் உள்ளது. அந்த சமயம் விதைகள் உலர்ந்து முளைக்காமல் போகும். இதையறியாமல் விதைத்து விட்டு வருந்துவது அறியாமையே.   அது போலத்தான் இல்லறமும்.  தொடர்ந்து போஷித்துக் கொண்டு உறவினரை மகிழ்ச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும். காலம் செல்லச் செல்ல உறவுகளின் நெருக்கம் குறையும், தேவைகள் அதிகமாகும், அதனால் மனம் வருந்த நேரிடும்.

விட்டில் பூச்சி, சகுந்த என்ற பறவை, எலிகள், இவைகள் பயிரை நாசம் செய்வது போலவே, அறிவில்லாத மனிதர்கள், மற்றவர்களால் பாதிக்கப் படுவர்.  கந்தர்வ நகரம் என்று தாங்கள் வாழும் இடத்தை ரசிப்பதும் காலம் செல்லச் செல்ல அதுவும் மன பிரமையே என்று உணருவர்.

பானங்கள், நல்ல உணவுகள் என்று தேடி தேடிச் செல்வார்கள். வெகு தூரத்தில் கோடைக் காலத்து கானல் நீர் போன்று எதையோ நம்பி ஏமாறுவர்.  வெளி வேஷம், தோற்றங்கள் பொன் போலவும், உண்மை போலவும் கண்களை மயக்கும்.  அதனால் தான் சம்சாரத்தை அடவி, காடு என்றனர். அலைந்து திரிந்தாலும் வேண்டி வந்த பொருள் கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்.

பலவிதமான அவமானங்கள் தன் மனிதர்களிடமே அடைய நேரிட்டால் அதிக துக்கம். ஆனால் அதை மறந்து அவர்களையே நம்புவது தான் மனித இயல்பு. முன் செய்த நல்வினையால், நல்ல பொருளும், சுகங்களும் நிறைய இருந்து விட்டால், சுற்றத்தார், உறவினர் அது தீரும் வரை உடனிருப்பர்.  எதேச்சையாக நல்ல உபதேசம் பெற்று மனம் மாறி வந்தால், மன நிலை சரியில்லாதவன் என்பர்.  ஒரு அளவுக்கு மேல், செல்வத்தில் உள்ள ஆசையால் தந்தை மகனுக்கிடையில் கூட மன வேற்றுமை வரும்.

இவ்வாறே, நரை, திரை, மரண பயம் என்று இல்லறத்தில் வரக் கூடிய துன்பங்களைச் சொல்லி, எச்சரிக்கிறார்.

ஈஸ்வரனான பகவான் அருளால், நல்ல எண்ணங்களும், வாழ்க்கையை வீணே செலவழிக்காமல்,  பரமாணு முதலான பகவானின் ரூபங்களை  தெரிந்து கொண்டு தானே தன்னை உய்வித்துக் கொள்ளவும் முடியும். ப்ரும்மத்திலிருந்து, புல் பூண்டுகள் வரை பகவானின் அம்ச பூதமே என்ற அறிவும், கால சக்கரம் என்ற தன் ஆயுத த்தால், யக்ஞ புருஷனான பகவான் நம்மை காக்கிறான் என்ற ஞானம் பெறலாம். மிக கவனமாக  இருந்து கழுகு போலும், ஆந்தை போலும், கவடன் போலும் கலைக்க வரும் கும்பல்கள் ஆத்ம ஞானம் அடைவதை தடுக்கவே வரும் என்பதையும் அறிந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டும். இவர்கள் வேதங்களும், சாஸ்திரங்களும் சொல்வதை மறுப்பார்கள்.  தங்கள் கடமைகள், ஒழுக்கங்களை, தர்ம சாஸ்திரங்களை மறுத்து பேசுவது தவிர தாங்களும் எந்த நன்மையும் அடைவதில்லை.  பகவானை நம்பி ஆராதனை செய்து சாஸ்திர கர்மாக்களை சரிவர செய்து வருபவன், உயர்வு அடைவதால், அவர்களைப் பார்த்து பொறாமை மட்டுமே அவர்கள் செயலுக்கு காரணமாகும்.  

வானரங்கள் போல வாழ்வார்கள்.  தன்னிஷ்டம் போல சுற்றும் விலங்குகள் போல உண்பதும், வம்சத்தை பெருக்குவதும் மட்டுமே வாழ்க்கை.   தன் மகன், மனைவி இவர்களை காப்பது என்ற செயல் கூட இராது. எந்த விதம் செல்வத்தை சேர்ப்பது என்று மட்டுமே அறிவை பயன்படுத்தும் இது போன்ற மக்களிடம் விலகியே இருக்க வேண்டும்.

எனவே தான், யோக முறையில் சாதனைகள் செய்யும் பெரியவர்களை உயர்வாக சொல்கிறோம். முனிவர்கள் என்ற இவர்களால் மற்றவர்களுக்கு இடையூறோ, துக்கமோ இல்லை.  மாறாக அமைதியான அவர்கள் குணமும் நடத்தையுமே அண்டியவர்களுக்கு ஆறுதல் தரும்.  ராஜ ரிஷிகள், திக்குகளை ஜயித்து, வெற்றி வலம் வந்தவர்கள் கூட,  யாகங்கள் செய்தும், தானங்கள் கொடுத்தும் தன் ப்ரஜைகளை சுகமாக இருக்கச் செய்வார்கள்.  கர்ம காண்டம் என்பதும் முக்கியமான ஒரு விதி.  அதனால் சாஸ்திர விதிகளின் படி நடப்பர்.

ராஜரிஷியே! இது பெரியவர்கள், சாதித்தவர்கள் சொல்லும் அறிவுரை. மகன், மனைவி, உற்றார் உறவினர் அனைவரையும் அனவணைத்துச் செல்லும் இல்லற வாழ்க்கையிலும், தன் மனக் கட்டுப்பாடும், தன்னை உயர்த்திக் கொள்ளும் முணைப்பும் இருக்க வேண்டும்.  பகவான் ஸ்ரீமன் நாராயணனே யாக புருஷன். தர்மத்தின் அதிபதி. விதி என்ற வேதங்களில் நிபுணன். சாங்க்யம் என்ற ஞான மார்கத்தை அருளியவன்.  யோகம் என்பதையும் சொல்லும், இயற்கையின் ஈஸ்வரனான நாராயணனை நமஸ்கரிப்போம். உலகை காக்க மிருகமாக கூட அவதரித்தவன். 

இவ்வாறு பரத ரிஷி,    ஏற்கனவே பாகவதனாக, அறிவுத் தாகம் உடையவனாக இருந்ததால் அரசன் ரஹூ கணனை ஆசீர்வதித்து,  , ஆயுள், செல்வம், புகழ், சுவர்க பதவிகள் கிடைக்கவும் வாழ்த்தி அருளினார்.  

இதை கேட்பவர்களுக்கும் நல்ல பகுத்தறிவும் – இது காஞ்சனம்  இது தோற்றமே என்று பிரித்து அறிந்து கொள்ளும் திறமை- வரும் என்று பலன் சொல்லி முடிக்கிறார்.

(இதுவரை ஸ்ரீமத் பாகவத்தின் ஐந்தாவது ஸ்கந்தத்தில், பதி நான்காவது அத்யாயம்.)

அத்யாயம்-15

ஸ்ரீ சுகர் சொன்னார்: பரதனுடைய மகன் சுமதி என்பவனை,  ஒரு சில நாஸ்திகர்கள், ருஷப ராஜனை அனுசரிப்பதாக சொல்லிக்  கொண்டு வேத சம்ப்ரதாயத்திற்கு மாறான ஒரு வழியை  தங்கள்  புத்திக்கு எட்டியவரை புதிதாக  ஒரு சம்ப்ரதாயத்தை ஆரம்பிப்பார்கள்.

சுமதிக்கு விருத்த சேனா என்பவளிடம் தேவதாஜித் என்ற பெயரில் ஒரு மகன் பிறந்தான். ஆசுர குணம் கொண்ட அந்த மகன் அசுர ஜாதி பெண்ணிடம் தேவத்யும்னன்  என்ற மகனை பெற்றான். அந்த வம்சம், தேனுமதி மகன் பரமேஷ்டி, அவன் மகன்  ப்ரதீஹ என்பவன் என்ற வரை வளர்ந்தது.

ப்ரதீஹன் ஆத்ம வித்யையை கற்றான். தானும் பரி சுத்தமாக இருந்து மஹா புருஷர்களை அனுசரித்து நடந்து கொண்டான். சுவர்சலா அவன் மனைவி. அந்த வம்சம் வளர்ந்தது.

அத்யாயம்-16

அரசன் வினவினான்.  பூமண்டலம் பற்றிச் சொன்னீர்கள்.  ஆதித்யனின் வெப்பம் உலகில் உயிர்களை வாழ வைக்கிறது.  சந்திரனுடனும், தாரகைகளுடனும் இருப்பதை ஜோசியம் என்ற அறிவியல் உடன் இருந்து உலகின் நன்மை தீமைகளை உறுதி செய்வதாக சொல்வர். அது பற்றிச் சொல்லுங்கள்.

அதிலும், ப்ரிய விரதன்  தன் ரதத்தில் ஏழு கடல்களை தாண்டினான் என்று சொன்னீர்கள். அதை விவரித்துச் சொல்லுங்கள். சப்த த்வீபம்- ஏழு தீவுகள் என்பவை யாவை? அவைகளின் தனித் தன்மை என்ன?  அவைகளின்  இருப்பையும், பயனையும் விவரமாக தெரிந்து கொள்ள விரும்புகிறேன், என்றான்.  அதிலும், பிரியவ்ரதனின் ரதம் சென்ற வழியில் ஏழு கடல்கள் ஸூழ இருந்தன என்ற பூ பாகங்கள் பற்றிச் சொல்லுங்கள்.  விரிவாக இவைகளின் இருப்பு, இவைகளின் சிறப்புகள் இவற்றைச் சொல்லுங்கள். 

பகவன்! நீங்கள் பொதுவாக அதன் வெளி உருவத்தை மட்டும் சொன்னால் போதாது. நீங்கள் மனதை அடக்கியவர்கள். மனதின் ஆற்றலை சூக்ஷ்ம மான ஆத்மஜோதி என்பதில், அதுவே பர ப்ரும்மான பகவான் வாசுதேவன், அவரிடம் முழுமையாக ஈடுபாட்டுடன்  வைக்கத் தெரிந்தவர்,  அதனால் குரோ! இவைகளை விளக்கிச் சொல்ல உங்களால் தான் முடியும்.

ரிஷி சொன்னார்:  மகாராஜ! பகவானின் மாயா குணங்கள் அளவற்றவை அல்லவா. முழுவதும்  அறிவது மனித யத்தினத்தில் முடியுமா? ஓரளவு, வாக்கு, மனம், உடல் இவைகளால் தெரிந்து கொண்டோமானால் அதுவே போதுமானது. மிகச் சிறந்த அறிவாளிகள் அறிந்து சொன்ன விவரங்களையே, முக்யமான பூகோளத்தின் அமைப்பு, அதன் சிறப்பு, பெயர்கள், அடையாளங்கள் இவற்றைச் சொல்கிறேன்.   

இவைகளின் மத்தியில், இளாவ்ருத்தம் என்ற பூப் பகுதி, ப்ரும்மாண்டமே உருவானால் அதன் நாபி-மத்ய ப்ரதேசத்தில் இருப்பது போல அமைந்துள்ளது.  குல கிரி எனப்படும் மலையரசன், பொன் நிறத்தினனாய், இத்தீவின் காதுகளில் வைத்த கர்ணிகாரம் பளீரென்று தெரிவது போல பரவி நிற்கிறான்.  குவலய கமலம் – இந்த பூப் பகுதி,  அதன்  உச்சி, தலை போன்ற பாகத்தில், முப்பத்து இரண்டு ஆயிரம் யோஜனை தூரம், அடிப் பகுதி, பதினாறு ஆயிரம்  வரை பூமிக்குள் வேரூன்றியவனாக இருக்கிறான்.

வடக்குக்கும் வடக்காக, இளா விருத்தம் நீலன், ஸ்வேதன், ஸ்ருங்கவான் (நீல மலை, வெண் மலை, சிகரம் உடையவன்) என்று முன்று விதமானவை  ரம்யக, ஹிரண்மய, குரூ  என்ற பூமிகளின் பாதுகாப்பு அரண்களாக, எல்லைகளாக  உள்ளன.  இரு புறமும், பாற்கடல், இரண்டாயிரம் ப்ருதவ- பூ பாகங்கள், ஒவ்வொன்றும் கிழக்கு, அதற்கும் கிழக்கில், வடக்கிலிருந்து வடக்காக பத்திற்கும் மேலான பகுதிகளாக நீண்டு செல்கிறது.

தென் பகுதியில் இளா வ்ருத்தம் நிஷத, ஹேமகூட, ஹிமாலய என்று சிறப்பு பெயர்களால் அழைக்கப் படும்.  முன் சொன்ன நீலம் முதலானவை இரண்டு யோஜனை தூரம் இடைவெளிகளில்  ஹரிவம்சம், கிம்புருஷ, பாரதம் என்று கிரமமாக பெயர் பெற்றவை. 

அதே போல, மற்ற திசையில், மால்யவான், கந்த மாதனன், அவானீல, நிஷாயதன் என்பவைகள் இரண்டாயிரம் பூப்ரதது: சற்றே சிறிய பூ ப்ரதேசங்கள், கேதுமால, பத்ராஸ்வ இவைகளின் எல்லைகளாக இருக்கின்றன.

மந்தரம், மேரு மந்தரம், சுபார்ஸ்வ:, குமுத என்று இவைகளும் இரண்டாயிரம் இடைவேளிகளில் விஸ்தாரமாக உயர்ந்து மேருவின் நால் திசைகளுக்கும் பாதுகாவலாக நிற்கின்றன.

இந்த நான்கிலும், சூத-மா,  ஜம்பூக-நாவல், கதம்ப, ந்யக்ரோத, என்ற நால் விதமான மரங்கள் ப்ரசித்தம். மலையின் உச்சியில்  கட்டப் பட்ட கொடிகள் போல, கிட்டத்தட்ட ஆயிர யோஜனைகள் உயர்ந்து மரங்களின் அடர்த்தியால் நூறு யோஜனை தூரம் பரவி உள்ளன.

பரதர்ஷபா!  இதில் நான்கு குளங்கள், பயோம, (பால் நிறைந்த), இக்ஷுரஸ (கரும்பின் ரசம்), இவைகளின் ருசியுடன் நீர் நிறைந்தவை. இதைத் தொட்ட மாத்திரத்தில் தேவர்களின் உபதேவ கணங்கள்,  சாதகர்கள்,  யோக ஐஸ்வர்யங்களை  சுலபமாக பெறுவர். 

தேவ உத்யான வனங்களும் உள்ளன. அவையாவன- நந்தனம், சைத்ர ரதம், வைப்ராஜகம், சர்வதோ பத்ரன் என்பவை.

இவைகளில் தேவர்களின் கூட்டம் மற்றும் தேவ லோக பெண்கள், சேனைத் தலைவர்கள், உபதேவ கணங்கள், பாடிக் கொண்டு மகிழ்ச்சியாக வலம் வருவர். 

மந்தர மலையின் சாரல்களில், பதினோரு நூறு – ஆயிரத்து ஒன்று யோஜனை உயரங்களில் தேவ சூத, தேவ லோக மாமரம்,  மலைகளின் சிகரங்களுக்கு இணையாக வளர்ந்து பழங்கள் நிரம்பி, அடர்த்தியாக இருக்கும்.

அவைகளின் அதி மதுரமான பழங்களின் மணம், அருண வர்ணத்தில் நிரம்பி வழியும் ரஸம், ப்ரவாகமாக ஓடும் அருணோதா என்ற நதியில் விழ, மந்தர கிரியின் சிகரத்திலிருந்து பாய்ந்து விழுவது போல கிழக்கு திசையாக ஓடி இளா விருத்தம் என்ற பகுதியை வளமாக்கும்.

பவானியின் அனுக்கத் தோழிகள்,   இந்த நீரில் நீராடி, இந்த மணத்தையும் தங்கள் உடலில் பரவப் பெற்று செல்லும் இடங்களில் எல்லாம் முகர்ந்து மகிழ்வர்.

இவ்வாறு ஜம்பூ பழங்களின் மரங்கள் உயரமாக வளரும் தன்மையவை. உயரத்திலிருந்து விழும் பழங்கள், பரவலாக இரண்டாயிரம் யோஜனைகள் நிலப்பரப்பில் விழுந்து, அங்கு ப்ரவஹிக்கும் ஜம்பூ என்ற நதியில் அதன் மணம் நிறைந்திருக்கும் படி செய்கின்றன. மேரு மந்தர சிகரத்திலிருந்து வேகமாக இரண்டு யோஜனை தூரம் பூமியில் விழுவது போல அருவியாக வருபவள், தென் பகுதியிருந்து இளா விருத்த பூ பிரதேசத்தை நனைக்கிறாள். 19 

இந்த நதிகளின் இடையில் சேரும் வண்டல் மண், அதனுடன் வாயுவும், அர்க்க எனும் ஸுரியனின் வெப்பமும் சேர அமரர்களும் என்றும் விரும்பும் பொன் என்ற தாதுவாக பரிணமிக்கிறது.  ஜாம்பூனதம் எனும் உயர்ந்த வகை பொன் சுவர்ணம் என்றும் அழைக்கப் படுகிறது.  இதை விவரம் அறிந்தவர்கள், பெண்களுக்கான கடகம், இடையில் அணியும் ஒட்டியானம், கழுத்தில் அணியும் மாலைகள் என்ற ஆபரங்களைச் செய்ய அறிவர்.   

மகா கதம்பம் சுபார்ஸ்வ என்ற மலை சிகரத்திலிருந்து தோன்றி அருவியாக விழுந்தவை அருகில் இருக்கும் குகைகளுக்குள்  நுழைந்து ஐந்து விதமான மது தாரைகளாக, பெருகி வந்து இளா விருத்தம் என்ற இந்த பூமியை வளமாக்குகின்றன.  அதன் மணத்தை காற்று பல நூறு யோஜனைகளுக்கு எடுத்துச் சென்று அந்த இடத்தையே சுகந்தமாக்குகிறது.

அதே போல, குமுத சிகரத்திலிருந்து விழும் சதவல்ஸோ என்ற மரத்தின் கிளைகளின் அடியில் பெருகி சுற்றி வந்து, பால் கடலாக, மது, நெய், வெல்லம் கலந்த அன்னம் மற்றும் ஆடைகளுக்கான, படுக்கை, ஆசனங்களுக்கான, ஆபரணங்களூக்கான எல்லா விதமான தேவைகளையும் நிறை வேற்ற பயனுள்ள பொருட்களை நதியாக, நதா: (நதியின் ஆண்பால், மேற்கிலிருந்து கிழக்காக பாய்பவை)   குமுத சிகரத்திலிருந்து அருவியாக வடக்கு பகுதியிலிருந்து இளா விருத்த தேசத்தை வளமாக்குகிறது. 

இவைகளை பயன் படுத்தும் ப்ரஜைகள், ஒரு பொழுதும், நரை, திரை, சோர்வு, வியர்வை பெருகி துர்கந்தம் வீசுதல், வயது முதிரும் சமயம் தோன்றும் மாறுதல்கள், வியாதிகள், அதனால் ம்ருத்யு, சீதோஷ்ணம் – குளிர், வெப்பம் என்பவைகளால் உடல் வர்ணத்தை இழத்தல், உபசர்கம் என்ற துன்பங்கள் வரா.  இவை பெயர்களாக கேட்டவைகளாக மட்டுமே இருக்கும். உயிர் உள்ள வரை சுகமாக இருப்பர். இது ஒரு நிரந்தரமான அதிசயமே.    

இவை தவிர, இருபது மலைச் சிகரங்கள், மேருவின் இருபக்கமும், மலையை ஒட்டியே அணைப்பது போல் ஒட்டியே நிலைத்து நிற்கின்றன. அவையாவன:  குரங்க, குரர, குசும்பவ, ஏக, கங்க, த்ரிகூட, சிசிர, பதங்க, ருசக, நிஷத, சினீவாச, கபில, சங்க2, , வைதூர்ய, ஜாருதி, ஹம்ஸ, ருஷப, நாக காலஞ்ஜர,நாரத என்பவை. 

தேவகூட என்பதன் மத்திய பகுதியில், மேருவை கிழக்கிலிருந்து பதினெட்டு ஆயிரம் யோஜனைகள், இரண்டாயிரம் பெரிய சிகரங்கள், சூழ்ந்து, தனித் தனி சிகரங்களாகவே, இருந்து மற்றொரு விதமான காற்றும், தென் திசையிலிருந்து கைலாஸ, கரவீர என்பவை, பாடல் பெற்ற ஸ்தலங்கள்,  அதே போல வடக்காக த்ரிஸ்ருங்க, மகராவஷ்ட என்பவைகளுடன் சுற்றிலும் அக்னி ஸூழ்ந்தது போல கஞ்சன கிரி என்ற பெயரில் பொன் வண்ணமாகவே பிரகாசமாக விளங்குகின்றன. 

மேருவின் உச்சியில், ஆத்மயோனி என்படும் பகவானின்  நகரம், இரண்டாயிரம் யோஜனைகள் அதன் நால் சதுர மடங்கு தூரம் பரவி ஸாதகும்பம் என அழைக்கப்படுகிறது. 

அதைச்சுற்றிலும் லோக பாலர்கள் எட்டு பேர், திசைகளுக்கு அதிபதிகளாக எட்டு திசைகளையும்  ஒரே விதமான ரூபம், நகரத்தை எட்டு திக்கிலும் நிலைத்து நின்று பாலிக்கிறார்கள்.

 (இது வரை ஸ்ரீமத் பாகவதத்தின் ஐந்தாவது ஸ்கந்தத்தில், பதினாறாவது அத்யாயம்)  

அத்யாயம்-17

ஸ்ரீ சுகர் தொடர்ந்தார்: பகவானின் யாக ஸ்வருபத்தில் விஷ்ணுவின் இடது பாத நகத்தின் வழியாக ப்ரவாஹமாக வந்த நீர்,  ப்ரும்மாண்டத்தில் மேல் பகுதியில் விழுந்தது.  அதன் பின் எங்கோ மறைந்தவள்,  பின் நதியாக உற்பத்தியாகி அவருடைய சரணங்களின் காந்தியுடன் கூடிய அருண வர்ணமாக ப்ரவஹித்தாள்.  அவளே கங்கை.  அகில ஜகத்தையும்  பரிசுத்தமாக்கும் தன்மையுடன் அமலா சாக்ஷாத் பகவதி – பகவானின் பாதத்தில் பிறந்தவள்-  காலம் காலமாக ஆயிரம் யுகங்களுக்கும் மேலாக தென்படாமல் பெயரளவில் அறிந்தவளாக இருந்தவள்   மேரு மலையில் இறங்கினாள்.  அதுவே கங்கை நதியானது.  அவள் வெளிப்பட்ட இடம் விஷ்ணு பாதம் என்று  போற்றப் படுகிறது.  உத்தானபாதரின் வம்சத்தில் வந்த பரம பாகவதர்களான எங்கள் முன்னோர் அவளை குல தேவதை என்று வணங்கினர்.  பகவானின் பாதத்தில் தோன்றியவள் புண்யமான நீர் என்று யாகங்களில் பயன் படுத்துவோம். அவளை என் முன்னோர்கள் மிக்க மரியாதையுடன் தலையில் தெளித்துக் கொள்வர்.

அதன் பின் ஏழு ரிஷிகளும் அதன் பிரவாஹத்தில் மூழ்கி எழுவதை புண்யமாக நினைத்து தவம் செய்வதை அவள் கரைகளிலேயே மேற்கொண்டனர்.  வாசுதேவனிடத்தில் இருந்த பக்தி விசேஷத்தால் கங்கை நதியை அவர் அனுக்ரஹம் பெற்றவள்  என்று இன்றளவும்  முக்தியை வேண்டுபவர் பகுமானத்தோடு பார்க்கின்றனர்.  அதன் பின் பல சஹஸ்ர கோடி விமானங்களில்   வந்த தேவர்களுடன், சந்திர மண்டலத்தைச் சுற்றி வந்து, ப்ரும்ம சதனம் என்ற இடத்தை அடைந்தாள்.  இங்கு நான்காக பிரிந்து சீதா, அலகநந்தா, சக்ஷு:, பத்ரா என்ற பெயர்களுடன் நான்கு திசைகளிலும் பரவி நத, நதீ பதி எனும் சமுத்திரத்தை சென்றடைகிறாள். சீதா என்ற நதி ப்ரும்ம சதனத்திலிருந்து கேஸர முதலிய சிகரங்களில் இருந்து கீழ் நோக்கி ஓடி, கந்தமாதன பர்வதத்தின் முடியில் இறங்கி,   பத்ராஸ்வ வர்ஷம் என்ற இடத்தில் நுழைந்து கிழக்கு நோக்கி பிரவஹித்து உப்பு சமுத்திரத்தை அடைகிறாள்.  அதே போல சக்ஷு: என்பவள் மால்யவானின் சிகரத்தில் இறங்கி, கேது மாலா என்ற சிகரத்தை தழுவிக் கொண்டு இறங்கி உவமிக்க முடியாஹ வேகத்துடன் ஓடி, மேற்கு திசையில் சமுத்திரத்தில் கலக்கிறாள். பத்ரா மேரு சிகரத்தில் இறங்கியவள்,  நீல கிரி மலையின்,ஸ்வேத கிரி என்று  சிகரத்திற்கு சிகரம் தாண்டி பிரவகிக்கிறாள். ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் இருந்து விழுபவளாக குரு க்ஷேத்ரத்தை சுற்றி வளைத்து ஓடி வந்து வடக்கு திசையில் ஹேமகூட மலைகளின் நடுவில்  புகுந்து புறப்பட்டு சமுத்திரத்தில் கலக்கிறாள்.  அதே போல அலகநந்தா தென் திசையில் ப்ரும்மசதனத்திலிருந்து கிளம்பி பல விதமான மலை சிகரங்களைக் கடந்து ஹேம கூடத்திலிருந்து வெகு வெகமாக பிரவஹித்து ஓடி, பாரத வர்ஷத்தின் நில பகுதி வழியாக தக்ஷிண சமுத்திரத்தை அடைகிறாள். இங்கு ஸ்னானம் செய்ய வருபவர்கள், வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் அஸ்வமேத, ராஜஸூய யாகங்கள் செய்த பலனுக்கு குறையாத நற்பலனை அடைகிறார்கள்.  

இவை தவிர நதிகள், (கிழக்காக ஓடி சமுத்திரத்தில் கலப்பவை) நதங்கள் (மேற்காக ஓடி சமுத்திரத்தில் கலப்பவை)  மேரு மலையின் பெண்களாக நூற்றுக் கணக்காக  பாரத வர்ஷத்தின் ஒவ்வொரு பகுதியையும் வளமாக்குகின்றன.  பாரத வர்ஷம்- பாரத தேசம் தான் கர்ம பூமி.  மற்ற எட்டு கண்டங்கள், ஸ்வர்கத்தில் வசிப்பவர்களின் புண்ய சேஷம்- அனுபவித்தது போக மீதியான புண்யங்களை அனுபவிக்க போக பூமிகள்.

(திவ்ய, பௌம,பில- தேவ, பூமி,பாதாளம் என்று  ஸ்வர்க போக பூமிகள்.) நீண்ட ஆயுள், திடமான உடல் வாகு, சமமான மனைவியிடம் முதல் ஆண்டிலேயே பெறும் சந்ததியுடையவர்கள், த்ரேதாயுகத்தினர்.       க்ருத யுகத்தினர் தியான நிஷ்டர்கள். த்வாபரம் முதல்  அதிக துக்கம்.  தேவ பதிகள் உல்லாசமாக வனங்களையும், நதிக் கரைகளிலும், சுற்றுபவர்களாக அனுபவிப்பதே நோக்கமாக கொண்ட தம்பதிகள்.

ஒன்பது கண்டங்களிலும் பகவான் நாராயணன், மனிதர்களை தன் அனுக்ரத்தால் காக்கிறார். அவர்கள் சுக சௌக்யங்களை அனுபவிக்க வசதியாக தானே கவனமாக கண்காணிக்கிறார்.

இலா விருத்தம் எனும் இடத்தில் பகவான் பவன் மட்டுமே புருஷன், பவானி மட்டுமே ஸ்த்ரீ.   வேறு எந்த புருஷன் அங்கு வந்தாலும் பவானியின் சாபத்தால் பெண் ஆவார்கள். அது பற்றி பின்னால் சொல்கிறேன். ஏராளமான பெண்கள் அவரை தெய்வமாக துதித்து வணங்கி இருந்தாலும் பவன் தன் தியானத்திலேயே மூழ்கி இருப்பார்.

ஸ்ரீ பகவான் சொன்னார்:

’ ஓம் நமோ பகவதே மஹாபுருஷாய சர்வ குண சங்க்யாய, அனந்தாய, அவ்யக்தாய நம:’  

அனைத்து குணங்களும் எவரிடமிருந்து பிரகாசமாக வெளிப் படுகின்றனவோ,  அறியமுடியாத  அரிய பொருள் எவரோ, போற்றத்தகுந்த மாஹாபுருஷனான அவருக்கு நமஸ்காரம்.

வணங்கத் தகுந்தவர் அவரே. முக்தி அளிப்பவர். பக்தர்களுக்கு போதும் போதும் எனுமளவு அனுக்ரஹம் செய்யும் பூத பாவனன்.  பவம் என்ற சம்சாரத்திலிருந்து விடுதலை அளிப்பவர். ஈஸ்வரனான உன்னை வணங்குகிறேன்.  உன் லீலைகளை மாயா குண சரித்திரங்களை பக்தர்கள் கண் கொட்டாமல் பார்ப்பர். உன் கோபம் கூட அவர்களுக்கு ரசிக்கத் தகுந்ததே.  தன்னை அறிய விரும்பும் அடியார்களுக்கு நீயே கதி. மற்றவர்களிடமிருந்து வேறு பட்டவனாக உன்னைக் காணும் பக்தர்கள் உன்னை ஸூழ்ந்து இருக்கும், மற்ற நாகம் முதலியவைகளைக் கண்டு பயப்படுவதில்லை.

உலகத்தில் ஸ்திதி, சம்ரக்ஷணம், சம்ஹாரம் என்பதில் சம்ஹார மூர்த்தியான உன்னை பிறப்பு இறப்பு என்ற தொடரை நிலை நிறுத்துபவனாக வணங்குகிறார்கள்.  ஆயினும் இந்த செயல்களுக்கும் அப்பாற் பட்டவன் நீ. சித்தார்த்தனாக- ஞானமே உருவானவனாக உன்னை சிலரே அறிவர்.  ஆயிரக்கணக்கான பூமண்டலங்களைத் தலையால் தாங்குபவன்.  மஹான் என்றும், விக்ஞானி- அனைத்து அறிவுகளுக்கும், கலைகளுக்கும் இருப்பிடம் என்றும், ஆதி அந்தம் இல்லாதவன் என்றும், தன் தேஜஸால் உலகை சிருஷ்டிக்கும் சக்தியை உடையவன் என்றும்,  உன் புகழ் பாடுகிறார்கள்.  பறவைகள் கூடு கட்டுவது போல ஸ்ருஷ்டியை ஒரு ஒழுங்காக செய்பவன். மிகப் பெரிய காரியம் அது. மஹத்,(இயற்கை)  குணங்கள்- சத்வ ரஜஸ் தாமஸ குணங்கள்) இந்திரியங்கள் இவைகள் சரடாக  ஊடும் பாவுமாக ஊடுருவி இருக்க,  உங்கள் அனுக்ரகத்தால் படைப்புத் தொழிலை செய்கிறோம். 

கர்ம பந்தனத்திலிருந்து காப்பவன் என்று அறிந்தாலும், உன் மாயையை நீ நிர்வகிக்கும் விதத்தை உணர முடியாத சாதாரண ஜனங்கள்,  உன்னிடமே அனைத்தையும் ஒப்படைத்தவர்களாக பரமேஸ்வரன் என்று வணங்கினாலே போதும் என்று திருப்தியடைகிறார்கள். அப்படிப் பட்ட  உனக்கு நமஸ்காரம்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற ஐந்தாவது ஸ்கந்தத்தில்  பதினேழாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-24

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-18

ஸ்ரீ சுகர் சொன்னார்:  அதன் பின் பத்ரஸ்ரவா என்ற தர்மனின் புதல்வர்கள், அந்த குலத்தின் மூத்தோர்களுடன், பத்ராஸ்வ வர்ஷம்- பத்ராஸ்வம் என்ற நாட்டில்,  சாக்ஷாத் பகவான் வாசுதேவனின் ஹயக்ரீவ என்ற அவதார  வடிவை வணங்கினர்.  ஹயக்ரீவனே தர்ம மயமானவன் என்ற கொள்கையுடன் அவரை மிக அன்புடன், பற்றுதலுடன் ஏற்றுக் கொண்டவர்கள் அவர்கள்.

பத்ரஸ்ரவஸன் என்பவன் சொல்லலானார்: ‘ஓம் நமோ பகவதே!  தர்மாய ஆத்மவிசோதனாய நம:’

அஹோ! விசித்ரம் பகவானுடைய செயல்கள்.  இந்த ஜனங்கள் கொல்கிறார்கள். அவர்களை கண்டும் காணாமல் இருக்கிறான்.   தந்தை வாழ பிள்ளையை பலி கொடுக்கிறார்கள்.  அசத் – நன்மையில்லாதது என்று நாம் சொல்வதையே தியானமாக, வேண்டாத வேலைகளே முக்கியமாக நினைத்து, வயதான தந்தைக்காக மகனை கொல்கிறார்கள்.  அதை தவறாகவே எண்ணுவதில்லை.

கவிகள் உலகை அழியக் கூடியது எங்கிறார்கள். அத்யாத்ம வழியில் செல்பவர் விவரித்து சொல்லியும் இவர்கள் மோஹம் போகவில்லை. அஜ! பிறப்பற்றவனே! உன் மாயை தான் இதுவும்.  உன் செயல்கள் ஆச்சர்யமானவை. உனக்கு நமஸ்காரம்.

உன் செயல்  விஸ்வ ஸ்ருஷ்டி, அதில் ஒன்றுக்கொன்று முரணான பல வித மாற்றங்கள் இருப்பதை ஆச்சர்யத்துடன் பார்க்கிறோம்.  அதுவும் உன் மாயையே. உனக்கு நமஸ்காரம்.  ந்ரு துரங்க- மனிதனும் அஸ்வம் என்ற மிருகமுமாக (ஹய க்ரீவன்)  நீ யுகாந்தத்தில் வந்தாய்.  தாமஸ புத்தியால் வேதங்களை திரஸ்காரம் செய்த சிலரால் பாதாளத்தில் மறைத்து வைக்கப் பட்ட ஸ்ருதி-வேதங்களை மீட்டுத் தருமாறு கவிகள் வேண்டினர். அவர்கள் வேண்டுதலை ஏற்று வேதங்களை மீட்டுத் தந்தாய்.  அமோகமான  அந்த செயலைச் செய்த உனக்கு நமஸ்காரம். (மது என்ற  அரக்கன் வேதங்களை பாதாளத்தில் ஒளித்து வைத்து விட்டான். அதை மீட்ட கதை)

ஹரி வர்ஷத்திலும் பகவான் நரஹரி ரூபனாக வந்தான்.  அந்த ரூபத்தை எடுத்த கதையை சொல்கிறேன். மிகவும் விரும்பத்தக்க ரூபம். மஹா புருஷ குணங்கள் உடைய பாகவதர்கள் தைத்ய தானவ குலம் இரண்டையும் பவித்ரமாக்கிய சரித்திரம்.  ப்ரஹ்லாதன் என்பவன் தூய பக்தியால் பகவானை வேண்டினான் என்பதை இந்த தேச பக்தர்கள் சிலாகித்து சொல்கிறார்கள்.

ஓம் நமோ பகவதே நரசிம்ஹாய, நமஸ்தேஜஸ்தேஜஸே, ஆவிராவிர்பவ  வஜ்ரநக, வஜ்ர தம்ஷ்ட்ர, கர்மாஸயான்.  ரந்தய ரந்தய தமோ க்ரஸ க்ரஸ ஓம் ஸ்வாஹா – அபயமபயம் ஆத்மனி பூயிஷ்டா ஓம் க்ஷ்ரௌம்

ஸ்வஸ்த்யஸ்து விஸ்வஸ்ய – உலகில் நன்மை விளங்கட்டும்.  அறிவில்லாத கொடியவர்களும் சந்தோஷமாக இருக்கட்டும். ஜீவ ஜனங்கள் தியானம் செய்யட்டும். புத்தியில் மங்களமான எண்ணங்களே நிறையட்டும். மனம் தூயதாக விளங்கட்டும். அதோக்ஷஜனான பகவானை துதிக்கட்டும்.  எந்த எதிர்பார்ப்பும் இன்றி பகவானிடத்தில் எங்கள் மனம் ஈடுபடட்டும்.  வீடு வாசல், தாரம், புதல்வர்கள், உறவினர் என்று எப்பொழுதும்  நினைத்துக் கொண்டிராமல்,  அறிவும் பக்தியும் உள்ள பெரியவர்கள் அருகாமையில் இருக்க வேண்டும்.  சத் சங்கத்தில் தான் நல்ல விஷயங்களை அறிந்து கொள்ள முடியும். உன் வீர தீர கதைகளை கேட்கலாம். மனம் தெளிவடையும்.  திரும்பத் திரும்ப நினைப்பதும், ஹரி தியானமும் மனதில் காம வாசனையை அழிக்கும்.  யார் தான் அந்த முகுந்தனின் விக்ரமத்தை விரும்பாதவர்கள்? 

ஒரு சிறிதளவு பகவானிடத்தில் பக்தி இருந்தால்,   மற்ற தேவர்கள் பல நல்ல குணங்களையும் அங்கு கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள்.  ஹரியிடம் பக்தி இல்லாதவர்களுக்கு உயர் குணங்கள் எப்படி வரும்? அவர்கள் மனம் வேண்டாத விஷய போகங்களை நோக்கியே ஓடும்.  சாக்ஷாத் பகவான் ஹரியே.   நீர் வாழ் ஜந்துக்களுக்கு இன்றியமையாத நீர் போல உடல் தரித்த மனித குலத்துக்கு ஆத்மாவானவன்.  அவ்வாறின்றி தன் வீடு, குடும்பம் என்றே இருப்பவன் சுகமாக இல்லையா என்றால், அதுவும் தான், தம்பதிகள் சேர்ந்து வாழ்ந்து வயதாகி முதியவர்கள் ஆவது தான் இயற்கை.  அதில் ஆசை, அனுராகம் , வருத்தம், கோபம், மான அவமானங்கள்,  ஏதோ ஒன்றில் அதிக பற்று, பயம், தீனமான தன்மை, மனோ வியாதி இவைதான் அதிகமாக இருக்கும். இந்த சக்ரத்தை விட்டு வெளி வந்து ந்ருசிம்ஹ பாதத்தை சேவியுங்கள்.  பயமின்றி இருக்கலாம்.

கேதுமாலா என்ற தேசத்தில், பகவான், காம தேவ ஸ்வரூபனாக லக்ஷ்மியின் விருப்பத்தை நிறைவேற்ற, அந்த தேச அரசர்களான  ப்ரஜாபதியின் பெண்களின் புதல்வர்களை   அவர்களுக்கு புருஷாயுஷ் என்ற நீண்ட ஆயுளை அளித்தார்.  அதுவும் பகவானின் மாயா மயமான ரூபம்.

ஓம் ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் ஓம் நமோ பகவதே ஹ்ருஷீகேஸாய, சர்வ குண விசேஷைர் விலசிதாத்மனே,ஆகூதீனாம் சித்தீனாம், சேதஸாம், விசேஷாணாம் சாதிபதயே, ஷோடஸ கலாய சந்தோ மயாய அன்ன மயாய, அம்ருத மயாய சர்வமயாய சஹஸே, ஓஜஸே, பலாய காந்தாய காமாய நமஸ்தே உபயத்ர பூயாத்.

பெண்கள் ஹ்ருஷீகேசனான உன்னை தாங்களே ஆராதித்து, நல்ல பதியை அடைகிறார்கள்.  அவர்களிடம் நல்ல புதல்வர்களைப் பெறுகிறார்கள். அன்பான பந்துக்கள், தனம், ஆயுள் இவைகளை அடைகிறார்கள். அவர்களின் பதியும் பயமின்றி, தானே மற்றவர்களை காக்கவும் ஆற்றல் பெறுகின்றனர்.  பிறர் நலனும் தன் பொறுப்பே என்பது போல நினைப்பார்கள் அதனால் பொறாமை படுவதில்லை.

பகவானுடைய பாத சரோருஹம் அதிலேயே லயித்தவன், மற்ற அல்பமான  உலகியல் இன்பங்களை நாடுவதில்லை.  விரும்பியது கிடைக்கவில்லை என்ற வருத்தமும் வாட்டாது.  அஜன், ஈசன் இவர்களும் என்னைப் பூஜிக்கின்றனர்.  மனப் பூர்வமாக பஜித்தாலே போதுமானது. என்னையடைய உக்ரமான தவங்கள் விரதங்கள் தேவையில்லை.

ஆகவே, அச்யுதா!  வணங்கியவர்களுக்கு அபயம் அளிக்கும் உன் கரங்களை என் தலையில் வைத்து ஆசீர்வதி. உன் அருளின்றி நான் விபு என்றும் ஈஸ்வரன் என்றும் உன்னை அறிந்து கொள்ளவா முடியும்? 

ரம்யக தேசத்தில் பகவானுடைய மத்ஸ்ய அவதார ரூபத்தை அந்த தேச புருஷன் ஓரளவு காட்டியதை இன்றளவும் மிக பக்தியுடன் ஆராதித்து வருகிறார்கள். ‘ஓம் நமோ பகவதே முக்யதமாய நம: சத்வாய ப்ராணாயௌஜஸே சஹஸே பலாய மஹாமத்ஸ்யாய நம “ இதி

உள்ளூம் புறமும் அகில லோக பாலகர்கள் கண்ட ரூபம்.  மத்ஸரம்- பொறாமை போல மற்றொரு ஜுரம் இல்லை. முயற்சி செய்பவர்கள் கூட இதனால் பாதிக்கப்பட்டு,  கால் நடைகளோ, மனிதர்களோ, ஊர்வன, அசையாத ஜங்கம பொருட்கள் அனைத்திலும் உன்னைக் காணலாம் என்பதை மறந்து விடுகிறார்கள்.  தாங்கள் அலை வீசும் யுகாந்தார்ணவ – யுக முடிவிலான ப்ரளய ஜலத்தில், படகு ரூபத்தை எடுத்துக் கொண்டு,  ஔஷதிகள்-தாவரங்கள் அனைத்தையும் காப்பாற்றி தன்னிடம் வைத்துக் கொண்டு,  உன் ஓஜஸ் என்ற சக்தியால் உலகை காத்தாய். அந்த ஜகத்ப்ராண கணாத்மனே நம: வணக்கம்.

ஹிரண்மய தேசத்தில்  பகவான் கூர்ம -ஆமை உருவம் எடுத்து வந்தார்.  அது அவருடைய மிக பிரியமான உருவம். ஸூரியன் முதலான வர்ஷ புருஷர்கள், பித்ரு கணங்கள், இந்த மந்த்ரத்தை ஜபிக்கிறார்கள். ‘ ஓம் நமோ பகவதே அகூபாராய சர்வ சத்வ குண விசேஷணாய அனுபலக்ஷித ஸ்தானாய நமோ வர்ஷ்மணே நமோ பூம்னே நமோ நமோ அவஸ்தானாய நமஸ்தே’  இந்த ரூபம் உன் மாயையால் தானே ஏற்றுக் கொண்ட ரூபம். அர்த ஸ்வரூபம் – பொருள் மிக்கது. கணக்கிலாத சத்வ குணம் ஞானாந்தம் என்று பலவிதமாக புகழப்படுகிறது. உண்மையான உன் உருவம் அல்ல, மாயையால் நீ ஏற்றுக் கொண்டது என்றும் சுத்த சத்வ மூர்த்தி, மஹாப்ராணன் என்றும் போற்றுகின்றனர். (வைகுணடவாசியான நீ, மஹா சமுத்திரத்தின் அடியில் கூர்மமாக வந்து உலகை காத்தது உன் அருள்)  இந்த சராசரத்தில் வித விதமான உயிரினங்கள், வியர்வையில் பிறக்கும் ஜீவன்கள், முட்டையிட்டு பொரிக்கும் சில, தேவ ரிஷி, பித்ரு பூதம், இந்திரியங்கள், ப்ரும்மாண்டம் , வானம், பூமி, மலைகள், நதிகள், சமுத்திரங்கள், தீவுகள், க்ரஹ, ருக்ஷ என்று சொல்லப் படுவது எல்லாம் ஒன்றே,  இப்படி கணக்கில்லாத விசேஷ நாமங்களைக் கொண்ட உருவமாக கவிகள் காண்கின்றனர். அந்த ஞான ரூபியான உனக்கு நமஸ்காரம்.

வட குருக்ஷேத்ரத்தில் பகவான் யக்ஞ புருஷன்,  வராகனாக அவதரித்தார். அங்கு பூமியே தேவி.  உபனிஷதங்கள் அவள் பக்தியை வர்ணிக்கின்றன. ‘ஓம் நமோ பகவதே மந்த்ர தத்வ லிங்காய யக்ஞ க்ரதவே மஹாத்வராவயவாய மஹா புருஷாய நம: கர்ம சுக்லாய த்ரியுகாய நமஸ்தே’   எவருடைய ஸ்வரூபத்தை பலவித ரசிகர்களான கவிகள், மரத்தினுள் மறைந்திருக்கும் ஜாதவேதஸ் என்று வர்ணிக்கிறார்களோ, மனதால் மத்தால் கடைந்தது காண முயலுகிறார்களோ.  மிக அரிதான அந்த காட்சியை காணவும், ப்ரகாசமாக வெளிப்பட்ட அந்த பரமாத்மாவை வணங்குகிறேன்.

இந்திரியங்களில் செயல், தேவதைகள் அதன் காரணம், தேகம் தான் ஈசன், காலம் செய்பவன், அஹங்காரம் இவை மாயா குணங்கள்.  இவைகளை கார்ய ரூபமாக, தனித்தன்மையுடன், வஸ்துவாக காண்பது ஆத்மா. அதற்கு நமஸ்காரம். அன்வீக்ஷிகீ- விசாரித்து ஆராய்ந்து அறிந்து கொள்வது, அங்கம்- சாதனைகள், ஆத்ம புத்தி, தன்னுடைய புத்தியை பயன்படுத்தி அறிதல், என்ற பல விதங்களில் அறியத் தகுந்த உனக்கு நமஸ்காரம்.  விஸ்வத்தை தோற்றுவித்து, நடத்திச் செல்வது உன் விருப்பம்.  சாதாரணமாக காணும் பொழுது உன் மாயை சுற்றி சுழன்று வருவதை அறிய முடியாது. குண கர்ம சாக்ஷியான உனக்கு நமஸ்காரம். 

தைத்யனை வீழ்த்தி,  உன் மூக்கின் நுனியில் பூமியைத் தாங்கியபடி மிகப் பெரிய யானை போல நீரிலிருந்து வெளிப்பட்ட ஆதி ஸூகரன் உனக்கு நமஸ்காரம்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பதினெட்டாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 39

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-19

ஸ்ரீ சுகர் சொன்னார்:  கிம்புருஷ வர்ஷம்- கிம்புருஷ தேசத்தில்  பகவானான ஆதி புருஷன், லக்ஷ்மணனின் மூத்த சகோதரன், சீதாபிராமம் ராமம், அவன் அருகில் இருப்பதையே புண்யமாக நினைத்தவர், பரம பாகவதரான அனுமான்,  இவர்கள் மற்ற கிம்புருஷர்களுடன் ராம பக்தியை பரப்பினார்.   தன் இனத்து முக்கியமான அறிவுடைய பெரியோர்களுடன் சேர்ந்து ராமர் புகழை பாடினர்.  ‘ஓம் நமோ பகவதே உத்தம ஸ்லோகாய நம ஆர்ய லக்ஷண சீல வ்ரதாய நம உப சிக்ஷிதாத்மன உபாசித லோகாய நம: சாது வாத நிகஷணாய நமோ ப்ரும்மண்ய தேவாய மஹா புருஷாய மஹா ராஜாய நம இதி’

யத்தத் விசுத்தானுபவ மாத்ரமேகம் ஸ்வ தேஜஸா த்வஸ்த குண வ்யவஸ்தம் ப்ரத்யக் ப்ரஸாந்தம் சுதியோபலம்பனம் ஹ்னாமரூபம் நிரஹம் ப்ரபத்யே ||

மனிதனாக பிறந்த இந்த அவதாரம், மனிதனுக்கு உபதேசிக்கவே.  ராக்ஷஸனின் வதம் நிமித்த மாத்ரமே. அப்படியானால், சீதா விரஹத்தால் வருந்தியது எப்படி ஆத்மாராமன், ஜிதேந்திரியன் – தன்னடக்கம் உடையவன், என்ற உயர் நிலையில் இருந்ததாகச் சொல்லப்படும்  ஸ்ரீ ராமனுக்கு  பொருந்தும்?  

(ஆத்மவான் என்றும், ஞானிகளின் நண்பன் என்றும் போற்றப்படும் பகவான் வாசுதேவன், ஒரு பெண்ணுக்காக மனம் உடைந்து போனதாகவோ, உடன் பிறந்த சகோதரன் லக்ஷ்மணனைத் துறந்ததையோ, ஏற்றுக் கொள்ள முடியவில்லையே என்ற கேள்விக்கு பதிலாக, உலகியலில்   மனிதனாக சம்சாரத்தில் இருந்தால், இது போன்ற இடர்களும் தவிர்க்க முடியாது என்பதைக் காட்டவே  என்று உரையாசிரியர்கள் கருத்து. )

லக்ஷ்மணனின் மூத்தவன், ஸ்ரீ ராமன், குலமோ, பெருந்தன்மையோ, செல்வச் செழிப்போ நல்ல வாக்கோ, நல்ல புத்தியோ, செயற்கரியன செய்து காட்டியதாகவோ உயர்வாக சொல்ல முடியாத ஒரு காட்டு வாசிகள், வானரங்கள் அவர்களுடன் சக்யம் செய்து கொண்டான்.  எதற்காக, (சுமித்திரையின் மகன், உடன் பிறந்தான் லக்ஷ்மணன் தாஸனாக இருக்க,) இந்த வானரத்தோடு சக்யம் செய்து கொண்டான்.  தேவனோ, அசுரனோ, வானரமோ, மனிதனோ, எவன் மனப் பூர்வமாக நல்லதைச் செய்கிறான் என்றால், அவன் ஸ்ரீ  ராமனுக்கு உகந்தவனாகிறான். மனித ரூபத்தில் வந்த ஸ்ரீ ஹரி, கோஸல வாசிகள் அனைவருக்கும் மோக்ஷத்தைக் கொடுத்தார். அனைவரையும் தன்னுடன் வைகுண்டத்துக்கு கூட்டிசென்றார்.

பாரத வர்ஷத்தில், பகவான் நர நாராயணனாக வந்து, அந்த  கல்பம் முடியும் வரையில், தர்மத்தை உபதேசித்து, ஞான வைராக்ய, ஐஸ்வர்ய, உபசமம் மற்றும் பரமாத்மாவின் அனுக்ரஹம் பெற விரும்பி தவம் செய்யும் சாதகர்களிடம்  இரங்கி, மறைந்திருந்து அருளினார்.

அந்த சமயம் பகவான் நாரதர் வந்தார். பாரதத்தில் வர்ணாஸ்ரமம் நடை முறையில் இருந்த காலம் அது.  பகவானே உபதேசித்த சாங்க்யம்- என்ற ஞான மார்கம் அனைவருக்கும்  பொதுவானது, இதில் வர்ண பேதம் இல்லை என்பதை தெளிவாக்கி, பரம பக்தி என்பதன் மேன்மையை எடுத்துச் சொன்னார். அவருடைய உபதே மந்திரம்:- ஓம் நமோ பகவதே உபஸம சீலாய,  உபரதானாத்ம்யாய நமோ, அகிஞ்சன வித்தாய ரிஷி ருஷபாய, நர நாராயணாய பரம ஹம்ஸ பரம குரவே ஆத்மாராமாதிபதயே நமோ நம இதி.

பாட்டாகவும் பாடினார்.  உலகின் கர்த்தா – உலகை படைத்தவன்,.  இவன் எதிலும் கட்டுப்படுவதில்லை, யாரையும் வதைப்பதில்லை, தேகத்தில் இருந்தாலும், தேகம் இல்லாதவர்களுக்கும் (தேவர்கள்) தரிசனம் கொடுப்பவன்,  இவருடைய பார்வையில் ஏற்றத் தாழ்வு இல்லை,  அந்த தேவனுக்கு நமஸ்காரம். உலக வாழ்வில்  பற்றுதல் உள்ளவன், பற்றைத் துறந்தவன் என்ற அனவருக்கும் சாக்ஷியாக இருப்பவன், அவனுக்கு நமஸ்காரம்.

இது தான் யோகேஸ்வரனுடைய யோக நிபுணத்வம்.  ஹிரண்ய கர்பனான பகவான் சொன்னது. ஆயுள் முடியும் நேரத்தில் நிர்குணமான உன்னிடத்தில் எவனுடைய மனம் பக்தியுடன் நினைக்கிறதோ,  அவனை அது வரை வாழ்ந்த வாழ்வையோ தாழ்வையோ கணக்கில் கொள்ளாமல் கை தூக்கி விடுகிறான்.   ஒருவன், வித்வானாக இருந்த போதிலும்,  செயல் வீரனாக வாழ்ந்திருந்தாலும்,  இந்த உலக வாழ்வின் முடிவில் இறக்கும் தறுவாயிலும்,  மகன், மனைவி, தனம், என்று நினைத்தபடியே  இருந்தால், என்ன பயன்? வெறும் சிரமம் மட்டுமே. அதனால் ப்ரபோ! இந்த சரீரம் எடுத்ததும் உன் மாயையால், நான், எனது என்ற பற்றுதல்கள் தானாக வந்து சேர்ந்தவை, அதோக்ஷஜ, இதிலிருந்து என்னை விடுவித்து விடு. மிக கஷ்டமான செயல் இது. தன்னைத்தானே உயர்த்திக் கொள்வது சாதாரண மனிதர்களுக்கு இயலாத செயல். பக்தி யோகம் என்பதை எங்களுக்கு அருள்வாய். உன்னருளால் தான் உங்களை வணங்குவதையும் மனதால் உணர்ந்து செய்ய முடியும்.

இந்த பாரதத்தில்,  நதிகள், மலைகள் நிறைய உள்ளன. பல மலய மங்கள ப்ரஸ்தங்கள். – மென்மையான காற்றுடன் மங்களமாக விளங்கும் இடங்கள்.  மைனாகம், த்ரிகூட,ருஷப, கூடகம், கொல்லகம், சஹ்யோ, தேவகிரி, ருஷ்யமூக: ஸ்ரீசைலம்,  வேங்கட, மஹேந்திர, வாரிதார, விந்த்ய, ஸுக்திமான், ருக்ஷகிரி,பாரியாத்ர, த்ரோண, சித்ரகூட, கோவர்தன, ரைவதகம், ககுபம், நீலம், கோகாமுகம், இந்த்ரகீல:, காமகிரி  என்றும் மேலும் பல நூறு ஆயிரம் மலைகள், அதன் மடியிலிருந்து இறங்கும் ஏராளமான நதிகள், நதங்கள் இவைகளை கணக்கிடவே முடியாது.

பாரத நாட்டு மக்கள், இவைகளை புண்ய நதிகளாக நினைக்கின்றனர். இதன் பெயர்களை மரியாதையுடன் உச்சரிக்கின்றனர்.

இவையாவன: சந்த்ரவஸா, தாம்ரபர்ணி, அவடோதா, க்ருதமாலா, வைஹாயஸீ, காவேரி, வேணி, பயஸ்வினீ, சர்கராவர்த்தா, துங்கபத்ரா, க்ருஷ்ணா, வேண்யா, பீமரதீ, கோதாவரி, நிர்விந்த்யா, பயோஷ்ணீ, தாபி (தபதி) ரேவா, சுரஸா, நர்மதா, சர்மண்வதீ, சிந்துரந்த:, சோணா,  என்ற நதிகள்.

 நதங்களாவன: மஹானதி, வேதஸ்ம்ருதி, ருஷிகுல்யா, த்ரிஸாமா, கௌஸிகீ, மண்தாகினீ, யமுனா, சரஸ்வதீ, ருஷத்வதீ, கோமதி, சரயூ, ரோதவதீ, சப்தவதீ, சுஷோமா, ஸதஸ்சந்த்ர பாகா, மருத்வ்ருதா, விதஸ்தா, அஸிக்னீ, விஸ்வா என்ற மஹா நதிகள். (மேற்கிலிருந்து, கிழக்கு நோக்கி பாய்பவை நதங்கள்.)

இந்த பாரத வர்ஷத்தில் தான் பிறந்தவர்கள், வெண்மை, லோஹிதம் என்ற வர்ணம் (இளம் சென்னிறம்) க்ருஷ்ண வர்ணம், தன் வினைகளுக்கு ஏற்ப, திவ்ய, மானுஷ, நாரக கதிகளுடன், பலர் தங்கள் முன்னோர்கள் காட்டிய வழியிலேயே நம்பிக்கையுடன் குல தர்ம அனுஷ்டானங்கள் செய்தே நற்கதி அடைகின்றனர்.  இவர்கள் பரமாத்மா, சர்வ பூதங்களுக்கும் ஆத்மாவானவன் என்று  பகவான் வாசுதேவனை கொண்டாடுகிறார்கள்.  அதனால் மாற்று எண்ணமின்றி பகவானிடம் பக்தி செலுத்துகின்றனர். பக்தி யோக லக்ஷணமும் அதுவே.  பலவிதமான தொழில்கள், கல்வி முறைகள், வாழ்க்கை நியதிகள் என்று தினசரி வாழ்க்கை முறைகள், எதுவானாலும் மஹா புருஷன் எனும் பகவானிடத்தில் ஈடுபாடு அவர்களை இணைக்கிறது. இதை தேவர்களும்  பாடுகின்றனர். “அஹோ! இவர்கள் என்ன பாக்கியம் செய்தனர்! இவர்களிடம் ஸ்ரீ ஹரி ப்ரஸன்னமாக இருக்கிறான். பாரத தேசத்தில் ஜன்மம் எடுத்தவர்கள் புண்யம் செய்தவர்கள். முகுந்த சேவை இவர்களுக்கு பிறவியிலேயே அமைந்து விடுகிறது. நாங்கள் சிரமப்பட்டு யாகங்கள் செய்தும், தவம் விரதம் அனுசரித்தும், தானங்கள் கொடுத்தும் ஸூதாட்டதில் ஜயித்தும் அடைவதை மிக அதிகமான போக உத்ஸவங்கள், ஸ்ரீமன் நாரயணனின் நினைவு இல்லாமல் செய்வதால் வீணாகிறது.  கல்ப ஆயுள் எங்களுக்கு.  அதோடு ஒப்பிட்டால் மறு பிறப்பு என்பதால் மனிதர்களுக்கு க்ஷணம் தான் ஆயுள். பாரத பூமியின் வரம், அந்த க்ஷண நேர வாழ்வில் மனிதர்கள் செய்வதும் பெறுவதும் ஹரி பதத்தில் திடமான நம்பிக்கை வைத்து அபயம் என்பதை பயமற்ற தன்மையை பெறுகிறார்கள்.

எந்த இடத்தில் வைகுண்ட கதை என்ற அம்ருதம் நதியாக ப்ரவஹித்து ஓடவில்லையோ,  பாகவதர்கள் எந்த இடத்தில் உண்மையான பக்தியுடன் வழிபடுவது இல்லையோ,  எந்த இடத்தில் யாகங்கள், மஹோத்ஸவமாக நடக்கவில்லையோ,  அந்த இடம் தேவலோகமே ஆனாலும் அதனால் எந்த நன்மையும் இல்லை.   

இங்கு அரச பதவி அடைந்தவர்கள், அல்லது ஏதோ ஒரு சாதாரண பிறவி,  ஞானம், கர்ம யோகம், செல்வ செழிப்பு இவை இருந்தும் மறு பிறப்பு இல்லாமல் போகும்படி நடந்து கொள்ள வேண்டியதும் அவசியம். இல்லையெனில், திரும்பவும் வன வாசிகளான கால்நடைகள் போல் பிறப்பு எடுப்பர். திரும்ப அதே ஸூழல், பிறவி, மறு பிறவி என்று பந்தனம்.  

ஸ்ரத்தையுடன்  மந்திர, மற்ற விதிகளை மீறாமல் செய்யப் படும் யாகங்களில் பங்கு கொண்டு அதன் பிரஸாதங்களை உண்டு,  தன்னால் முடிந்த அளவு உதவிகளையும் செய்து வருகிறானோ, அவன் பூர்ணமான ஆசிகளைப் பெறுகிறான்.   அரசர்களுக்கு செல்வத்தை, வேண்டாமலே தன் பக்தர்களுக்கு தேவையானதை ஸ்ரீ ஹரி ஆசிர்வதிக்கிறான். சுவர்க சுகம் என்று பிரமாதமாக வர்ணிப்பதை அஜனாப வர்ஷத்தில் (பாரத நாட்டில்) ஸ்ம்ருதி,   மனப் பூர்வமாக நினைப்பதாலேயே, ஸ்ரீ ஹரி அவர்களுக்கு கிடைக்கச் செய்கிறான்.  

ஸ்ரீ சுகர் சொன்னார்:  ஜம்பூத்வீபம், எட்டு  உப தீவுகள் உடையது. சகர புதல்வர்கள், அஸ்வத்தை தேடித் தேடி நிலத்தை வெட்டிக் கொண்டு சென்ற பொழுது இவ்வாறு பிரிந்தன.  அவையாவன: ஸ்வர்ண ப்ரஸ்தம், சந்த்ர சுக்ல ஆவர்தனோ, ரமணக, மந்தர, ஹரிண:, பாஞ்ச ஜன்ய: சிம்ஹள: லங்கை என்பன.

பாரத வம்சத்தவனே! இதில் இதுவரை நாம் வர்ணித்தவை பாரத வர்ஷம்-ஜம்பூத்வீபம் என்பது மட்டுமே.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  பத்தொன்பதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-31

 ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-20

 ஸ்ரீ சுகர் சொன்னார்:  அடுத்ததாக, ஜம்பூத்வீபத்தைத் தாண்டியும் உள்ள நிலப் பரப்புகளைப் பற்றி விவரமாகச் சொல்கிறேன்.  இந்த ஜம்பூத்வீபம் எவ்வளவு விஸ்தீர்ணம், உப்பு சமுத்திரத்தால் ஸூழப் பட்டதோ, மேரு மலை இங்கு உள்ளதோ, அதே போல இரண்டு மடங்கு விஸ்தாரமான உப்பு சமுத்திரம் ஸூழ்ந்து  உள்ள பிரதேசங்கள், கோட்டைகளும், வெளிப் புரத்தில் உபவனங்களும்,  இந்த ஜம்புத்வீபம் போலவே அதே அளவு விஸ்தீர்ணம் உள்ள பொன் நிற, ஏழு நாக்குகள் உள்ள அக்னியை உபாசிக்கிறார்களோ, அதன் அதிபதி ப்ரிய வ்ரதன் மகன் இத்மஜிஹ்வன் , தன் நிலத்தை ஏழாக பிரித்து ஏழு பெயர்களுடன் தன் புதல்வர்களுக்கு கொடுத்து விட்டு தான் ஆத்ம யோகம் செய்வதில் ஈடுபட்டான்.

அவர்கள் பெயர்கள்: சிவன், யவஸன், சுபத்ரன், சாந்தன், க்ஷேமன், அம்ருதன், அபயன் – ஏழு தீவுகளிலும் நிலப்பரப்பும் நதிகளும், மலைகளும், ஏழு ஏழாகவே இருந்தன.

மணி கூடோ, வஜ்ரகூட்ட, இந்த்ரசேனோ, ஜ்யோதிஷ்மான், சுபர்ணோ, ஹிரண்யஷ்டீவோ, மேக மால என்று மலைகள் அரண்களாக இருந்தன. அருணா, ந்ரும்ணா , ஆங்கிரஸி, சாவித்ரி, சுப்ரபாதா, ருதம்பரா, சத்யம்பரா என்று மகா நதிகள். இதன் நீரை தொட்ட மாத்திரத்தில் தவறான எண்ணங்கள் விலகி ஓடும். ஹம்ஸங்கள், உயர பறக்கும் சத்யாங்க, முதலிய நான்கு பிரிவுகளுள்ள ஆயிரம் ஆண்டுகள் வாழ் நாள் உடைய  தேவர்கள் போல தோற்றம் உடைய ஜனங்கள்,  சுவர்க த்வாரத்தை அடைய வேத வித்யா அறிவினால், பகவானான வேத புருஷனாக, ஸூர்யனை தங்கள் தெய்வமாக பூஜிக்கிறார்கள். அவர்கள் ஜபிக்கும் மந்திரம்:

‘ ப்ரத்னஸ்ய விஷ்ணோ ரூபம் யத் சத்யர்தஸ்ய ப்ரஹ்மண:| அம்ருதஸ்ய ச ம்ருத்யோஸ்ச ஸூர்யமாத்மானமீமஹீதி ||” – ப்ரத்ன- விஷ்ணு.  சத்யம், உண்மை, ப்ரும்மம், அம்ருதம்,ம்ருத்யு, இவைகளின் அதிகாரியாக இருக்கும் ஸூரியனை வணங்குகிறேன்”

ப்லக்ஷாதி ஐந்து தேசங்களில்புருஷர்களின் ஆயுள், இந்திரியம், ஆற்றல்,பலத்துடன்  புத்தி, விக்ரமம்  இவை பிறவியிலேயே சிறப்பாக அமைந்து விடுகின்றன.   அதற்கு சமமான  கரும்பு ரஸம் நிறைந்த கடல் இந்த தேசத்தை ஸூழ்ந்துள்ளது.  இதைப் போல இரண்டு மடங்கு விசாலமான த்வீபம் சால்மலீ.  அதைச் ஸூழ்ந்து மது நிறைந்த கடல் உள்ளது. சால்மலீ ப்லக்ஷ தேசத்தின் அங்கமாக சொல்வதும் உண்டு. இது பக்ஷி ராஜனான கருடனின் ப்ரதேசம்.   அந்த தீவின் அதிபதி,  ப்ரியவ்ரதனின் மகன் யக்ஞபாஹு என்பவன். தன் ஏழு புதல்வர்களுடன் வசித்து வந்தான். அவர்களுக்கு அந்த ராஜ்யத்தை பிரித்து கொடுத்து விட்டான். சுரோசனம், சௌமனஸ்யன், ரமணகன், தேவர்ஷன், பாரிபத்ரன், ஆப்யாயனன், அவிக்ஞாதன் என்று பெயர்கள்.

அந்த தேசங்களில் மலைகள், நதிகள், ஏழு. ஸ்வரஸ:, சதஸ்ருங்கோ, வாமதேவன், குந்தன், முகுந்தன், புஷ்பவர்ஷன், சஹஸ்ரஸ்ருதி, என்ற மலைகள், அனுமதி, நினீவாலீ, சரஸ்வதி, குஹூ, ரஜனீ, ந்தா, ராகா என்பவை.  அந்த தேசத்து ஜனங்கள்,  ஸ்ருத தர, வீர்யதர, வசுந்தர, இஷுந்தர – என்ற நான்கு வேத பிரிவுகளுடன்  அறியப் படும் பகவானை ஆராதிக்கிறார்கள்.  சந்திரனை வேத மந்திரங்களால் ஆராதிக்கின்றனர். சந்திர தேவன் சுக்ல, க்ருஷ்ண பக்ஷங்கள் மூலம் தன் கிரணங்களால், கால நிர்ணயம் செய்கிறான். தேவதா, பித்ருக்கள், தவிர அனைத்து உயிரினங்களுக்கும் அன்னம் அளிக்கிறான். – தாவரங்கள் வளரச் செய்வதால்.  எனவே சந்திரன் எங்கள் அரசன்.  – லோக பரிபாலனம் என்ற அரசனின்  கடமையை செய்ய உதவுவதால்.  இந்த மது நிறைந்த கடலுக்கும் அப்பால் அதே போல இரண்டு மடங்கு விஸ்தீர்ணமுள்ள குச த்வீபம் உள்ளது. (புல் வெளி) இதைச் ஸூழ்ந்து இருப்பது நெய் நிறைந்த கடல்.  இங்கு ப்ரும்மாவால் நிர்மாணிக்கப் பட்ட குசஸ்தம்பம் உள்ளது.  இது மிக பிரகாசமாக இருப்பதால் மற்றொரு அக்னி எனப்படுகிறது.  கோமளமான இந்த குசம் என்ற புல் பத்து திசைகளையும் ப்ரகாசமாக்கும். இந்த தீவின் அரசன் ஹிரண்ய ரேதன் என்ற ப்ரியவ்ரதனின் மகன். இவனும் தன் ஏழு புதல்வர்களுக்கு ராஜ்யத்தை பிரித்துக் கொடுத்து விட்டு வனம் சென்றான். வசு, வசுதான, த்ருடருசி,நாபிகுப்த, ஸ்துத்ய வ்ரத, விவிக்த, வாமதேவன் என்பர்.

இந்த தேசங்களுக்கு மலைகளே அரண்கள். நதிகள் ஒவ்வொன்றிலும் ஏழு ஏழாகவே உள்ளன. சக்ர, சதுஸ்ருங்க:, கபில, சித்ரகூடோ, தேவானீக, ஊர்த்வரோமா, த்ரவிண என்பன.  ரஸ்குல்யா, மதுகுல்யா, முத்ரவிந்தா, ஸ்ருதவிந்தா, தேவகர்பா, க்ருத ச்யுதா,  மந்த்ரமாலா என்பன.  இவைகளில் நீர், குஸத்வீபவாசிகள் சௌக்யமாக, நல்ல ஆறிவுடையவர்களாக, குலகன் என்ற பெயரில் பகவானை ஜாதவேதஸ்ன்- அக்னி என்ற ரூபத்தில் கர்ம கௌசலம்,- செய் நேர்ந்தி – சிறந்த கை வேலைகள்- இவற்றுடன் பூஜிக்கின்றனர்.

பர ப்ரும்மாவுக்கு இணையான ஜாதாவேதன் என்றும் ஹவ்ய வாட்- ஹவிஸை கொண்டு செல்பவன் என்றும் சொல்லப் படும் அக்னி,  பரம புருஷனின் அங்கமான தேவர்களுக்கு ஹவிஸை கொண்டு சேர்க்கிறான் என்பதால் யாகங்கள் செய்து பகவானை ஆராதிக்கிறார்கள்.

அதே போல நெய் கடலுக்கு அப்பால், க்ரௌஞ்சத்வீபம்-  அதன் விஸ்தீர்ணத்தின் இரண்டு பங்கு அதிகமான க்ஷீரோதம்- பாற்கடல் ஸூழ்ந்துள்ளது.  க்ரௌஞ்ச என்ற பக்ஷி ராஜனின் இடம் அது. இந்த மலையைத் தான்  குஹன்- முருக பெருமான்,  பிளந்ததார். அதில் இருந்த அசுரனை வதைத்தார்.  அதன் பின் பாற்கடலின் வளத்தால் வருண பகவானின் உதவியாலும், பக்ஷி ராஜன் பயமின்றி வாழ்கின்றான்.  அதை தனக்குரிய பங்காக பெற்ற ப்ரியவ்ரதனின் புதல்வன், க்ருதப்ருஷ்டோ என்பவன், தன் ராஜ்யத்தை ஏழாக பிரித்து சந்ததிகள் சொத்தின் பாகத்தை பெறுகிறார்கள் என்ற நியாயப் படி கொடுத்து விட்டான்.  அதன் பின் தன் எஞ்சிய நாட்கள் பரம கல்யாணன் என்றும், சர்வ  ஆத்ம பூதன் என்றும் ஸ்ரீ ஹரியை பாடியபடி  சரணத்தை பஜித்தபடி சென்றது. 

க்ருதப்ருஷ்ட அரசனின் புதல்வர்களுக்கு  ஆமோ, மதுருஹோ, மேகப்ருஷ்ட:, சுதாமோ, ப்ராஜிஷ்டோ, லோஹிதார்ணோ, வனஸ்பதி என்ற பெயர்கள்.  அவர்களுக்கும் ராஜய்த்தில் ஏழு ஏழு மலைகள், நதிகள் இருந்தன. சுக்ல, வர்தமான, போஜன, உப பர்ஹிணோ, ந்தோ, ந்தன:, சர்வதோ பத்ர என்று மலைகளும்,  அபயா, அம்ருதௌகா, ஆர்யகா, தீர்தவதீ, ரூபவதீ, பவித்ரவதீ சுக்லா என்பன நதிகள்..  இந்த நதிகளின் நீர், பவித்ரமானது.  இதை பயன்படுத்தும் ப்ருஷ ருஷபர், த்ரவிண தேவக என்பவர்கள்,  பகவானை ஆபோமயன்- ஜல ரூபமாக எண்ணி,  கை நிறைய ஜலம் எடுத்து, அஞ்ஜலி செய்து வழிபடுகிறார்கள்.  ஜலம் மனிதனை சுத்தமாக்கும்.  “ ஆப: புருஷவீர்யா:ஸ்த புனந்தீர் பூர் புவ: சுவ: | தா ந: புனீதாமீவ க்னீ: ஸ்ப்ருஸதாம் ஆத்மன புவ இதி||” – ஹே ஆப:  ஹே தண்ணீரே!  நீங்கள் பரமபுருஷனின் வீர்யமாக இருக்கிறீர்கள்.  சக்தி ரூபமாக இருப்பவர்கள். அவருடைய சரீரத்தில் நிரந்தரமாக இருப்பவர்கள்.  பூர்பூவ:ஸ்வ:- பூ முதலிய மூவுலகையும் பவித்ரமாக்குபவர்கள்.  எனவே, உங்களை தொடுபவர்கள் பாபங்கள் நீங்கி பவித்ரமாகிறார்கள்”

இவ்வாறு முன் புறம் க்ஷீரோதம்- பாற்கடலால் ஸூழப் பட்ட  சாகத்வீபோ- கறி காய்கள் நிறைந்த தீவு-  முப்பத்திரண்டு லக்ஷ யோஜனை தூரம் பரவியிருந்தது.   அதற்கு சமமான தயிர்  போன்ற ஜலம் ஸூழ்ந்திருக்க அதில் சாகோ (शाको)  என்ற மரம் தன் பூமியின் அடையாளமாக , மஹாசுரபி – மிகச்சிறந்த வாசனையை தீவு முழுவதும் பரப்புவதாக அமந்துள்ளது.

அந்த தீவும் ப்ரியவ்ரதனின் புதல்வன் மேதாதிதி என்பவனின் ஆளுமையில் இருந்தது.. முதுமையில் தன் புதல்வர்களுக்கு ஏழு ஏழாக பிரித்து கொடுத்து விட்டு தான் பகவானின் சேவையில் காலம் கழிக்கச் சென்று விட்டான்.  புதல்வர்கள் பெயர்களாவன: புரோஜவ, மனோஜவ, பவமான , தூம்ரானீக, சித்ர ரேப, பஹு ரூப, விஸ்வதார என்பன.  இவர்களுக்கு தேசம் என்பதற்கான மலைகள், நதிகள் ஏழு ஏழாக இருந்தன. ஈஸான, உருஸ்ருங்க, பலபத்ர, ஸதகேஸர:, சஹஸ்ர ஸ்ரோதோ, தேவபாலோ, மஹானஸ என்ற மலைகள். அனகா, ஆயுர்ட்கா, உபயஸ்ப்ருஷ்டி, அபராஜிதா. பஞ்சபதீ, சஹஸ்ரஸ்ருதி, நிஜத்ருதி என்பன நதிகள்.  அந்த தேசத்து ஜனங்கள்,  பகவானை, ருதவ்ரதன், சத்யவ்ரதன், தானவ்ரதன், அனுவ்ரதன் என்று பகவானை வாயு ரூபமாக ப்ராணாயாமம் செய்து சுத்தமான மனமும் உடலுமாக, பரம சமாதி என்ற சாதனகளால் பூஜிக்கின்றனர்.

“ஆந்த்: ப்ரவிஸ்ய பூதானி யோ பிபர்த்யாத்மகேதுபி: அந்த்ர்யாமீஸ்வர: சாக்ஷாத்பாது நோ யத்வஸே ஸ்புடம்”

உயிரினங்களின் உள்ளே புகுந்து தன் வசம் ஆக்கிக் கொண்டுள்ளானோ,   அந்தர்யாமியாக உள்ள  அந்த ஈஸ்வரன்  எங்களை எப்பொழுதும்   காக்கட்டும்”

ததி மண்டலத்துக்கு அப்பால், புஷ்கரத்வீபம் உள்ளது.  அதன் விஸ்தீர்ணம் போல இரண்டு மடங்கு அதிகமான விஸ்தீர்ணம் உள்ள தேசத்தை, சுத்தமான் ருசியுடன் கூடிய ஜலம் நிறைந்த சமுத்திரம் ஸூழ்ந்திருக்கிற்து. இங்கு உள்ள மிகப் பெரிய புஷ்கரம்- குளம் இதில் தான் தீயின் ஜ்வாலை  போல ஜ்வலிக்கும்,  பொன் மயமான இலைகளுடன் பகவானுடைய கமலாஸனம் அமைந்துள்ளது.

அந்த தீவின் மத்தியில், மானஸோத்தர என்ற பெயரில், (மானஸ ஏரிக்கு வடக்கில்) அர்வாசீன, பராசீன, என்ற தேசங்கள். மர்யாதாசல இரண்டு யோஜனை தூரம் உள்ள இடம் நான்கு திசைகளிலும் நான்கு பழமையான இந்த்ராதி லோக பாலர்கள்,  இவர்களுக்கும் மேல் ஸூர்ய ரதம் மேருவை சுற்றி வரும் சம்வத்ஸர என்ற பெயருடைய சக்ரம், தேவர்களுக்கு இரவு பகல் என்பதை  தெரிவிக்கிறது.

அந்த தீவின் அதிபதி ப்ரியவ்ரதனின் ஒரு புதல்வன் வீதீஹோத்ரோ என்பவன்.  அவன் புதல்வர்கள், ரமணக, தாதகி என்பவர்கள்- இவர்களி ராஜ்யத்தில் நியமித்து விட்டு தன் மூத்த சகோதரர்கள் போலவே பகவானின் சேவையில் ஈடுபட்டான். அந்த தேசத்து ஜனங்கள், ப்ரும்ம ரூபியான  பகவானை சகர்மகம்- கர்ம மார்கத்துக்கு அதிகாரியாகவும் எண்ணி, ஆராதிக்கின்றனர். அவர்கள் துதி:

“யத் தத் கர்ம மயம் லிங்கம் ப்ரும்மலிங்கம் ஜனோ அர்சயேத், ஏகாந்தம் அத்வயம், ஸாந்தம், தஸ்மை பகவதே நம இதி”   கர்ம மயமான ரூபம் ப்ரும்ம லிங்கம். இதை ஜனங்கள் அர்ச்சிக்க வேண்டும்.  ஏகாந்தமானது. அத்வயம், சாந்தம், அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

ரிஷி சொன்னார்: அதன் பின் பூவுலகம் தவிர மற்ற உலகங்களும் அதன் மலைகள், இயற்கை பற்றியும், லோகங்களுக்கு இடயிலான பல விஷயங்களைப் பற்றியும் விவரித்தார்.

மானஸ ஏரியின் வடக்கு பகுதி வரை உள்ள பூமி பொன் நிறமானது.  அதை எல்லையாகக் கொண்ட பூ பிரதேசம் ஏழரை லக்ஷம், ஏழரை கோடி பரிமாணம் உள்ள  சுத்த ஜலம் நிரம்பிய கடலுக்கு அப்பால் உள்ளது.

மேரு மலையிலிருந்து மானஸ ஏரியின் வட பகுதி வரை  எந்த அளவு பூமியின் விஸ்தீர்ணம்  உள்ளதோ, அதே  அளவு விஸ்தீர்ணம் காஞ்சன -பொன் நிறமான- பூமி கண்ணடி போன்று தெளிவான சுத்த உதகம் உள்ள சமுத்திரம் வரை.  . அதில் விழுந்த பொருள்கள் திரும்பக் கிடைப்பதில்லை என்பதால் பொது ஜனங்கள், கால் நடைகள் அங்கு போவதை தவிர்ப்பார்கள்.

(ஏழரை லக்ஷத்து பதினைதாயிரம் கோடி யோஜனை தூரம் என்றும் அதுவே மானஸ மத்தியிலிருந்து, சுத்த ஜல சமுத்திரம் வரையில் அறுபத்து ஒன்பது லக்ஷ யோஜனை தூரம், அதன் பின் காஞ்சன பூமி – ஏழரை லக்ஷத்து பதினைதாயிரம் கோடி யோஜனை  தூரம் பரவியுள்ளதாக உரையாசிரியர் சொல்கிறார்.) 

லோகாலோகம் என்று சொல்லப் படுவது இந்த மலையிலிருந்து  மற்ற லோகங்களின் இருப்பிடத்தை வைத்து நிர்ணயிக்கப் படுகிறது.  லோக த்ரயம் என்று ஈஸ்வரனால் சொல்லப் பட்டதும் ஸூரியன், துருவ நக்ஷத்திரம் , மற்ற க்ருஹங்கள்,  நக்ஷத்திர கூட்டங்கள் – ஜ்யோதிர்கணங்கள் – ஒளி வீசும் தாரகைகள்- கபஸ்திகள், அர்வாசீன என்ற மூன்று உலகங்கள்.

இது வரை லோகங்கள் பற்றிச் சொல்லிய பின், லக்ஷண, அனுமானம் , இயற்கை நிலையில் அதன் ஸ்திதி இவைகளைக் கோண்டு கவிகள்,  பூ கோளத்தை  ஐம்பது கோடி யோஜனை என்று கணித்து அதன் கடைசி கால் பாகம் லோகாலோக அசலம் என்று கணிக்கிறார்கள்.  அதற்கு அப்பால், நான்கு திசைகளிலும் ஆத்ம யோனி- அகில ஜகத் குரு  ப்ரும்மாவினால்,  பெரிய யானைத் தலைவன்,  ருஷப:, புஷ்கர ஸூடோ, வாமனோ, அபராஜித என்று சகல லோகத்தின் இருப்பை நிர்ணயிக்கின்றன.  தன் ஆற்றலால் லோக பாலர்களுக்கு பலவித சக்திகளை அடைய வசதியாக, பகவான், பரம மஹா புருஷன், மஹா விபூதிபதி, அந்தர்யாமியாக இருக்கும் ஆத்மாவின் மிக விசேஷமான சத்வம் – (பொருள்) , தர்ம, ஞான, வைராக்ய, ஐஸ்வர்ய முதலிய எட்டு மஹா சித்தி களுக்கு உதாஹரணமாக விஷ்வக் சேனர் முதலான தன் பார்ஷத –(bodyguard) முதன்மை பாதுகாலர்களால் ஸூழப்பட்டவராக, நிஜ தன்னுடைய புஜங்களில்  சிறப்பான ஆயுதங்களுடன்  அந்த உயர்ந்த கிரியில், உலக நன்மைக்காக எப்பொழுதும் சித்தமாக இருக்கிறார்.

ஒரு கல்பம் முடியும் வரை இந்த ரூபத்தில் இந்த பகவான் தன் யோக மாயையால், பல வித லோக யாத்திரைகளை மேற் கொள்கிறார்.

இப்படி லோகங்களுக்கு இடையிலான தூரம், பரிமாணம் இவைகளை விவரித்திருப்பது, பூவுலகுக்கு அப்பால் உள்ள லோகாசலம் என்பதிலிருந்து கணக்கிடப் பட்டுள்ளது. அதன் பின் யோகேஸ்வரனின் கதியை தெளிவாக சொல்கிறார். அண்த்தின் மத்தியில் உள்ளடு ஸூரியன். வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளி. ஸூரியன் அண்ட கோளத்தின் மத்தியில்  இருக்கிறான்.  மேரு மலை பூமியின் மத்தியில் இருப்பது போல. ஸூரியனுக்கும் அண்ட கோளத்தின் வடக்கு,   அல்லது மேல் பகுதி,  தேகு அல்லது கீழ் பகுதி இரண்டுமே,  இருபத்தைந்து கோடி யோஜனைகள் தூரம்.  நிலையில்லாத பூகோளம், அதில் இருப்பதால் – நிரந்தரமில்லாத ம்ருத அண்டம் – ம்ருதாண்டம் – அதன் மத்தியில் இருப்பவன் மார்த்தாண்டன் என்று ஸூரியனுக்கு  ஒரு பெயர்.  ஹிரண்ய கர்பன் என்று மற்றொரு பெயர்.  ஹிரண்ய- பொன் மயமான கோளத்தில் உண்டானவன் என்பதால்.

ஸூரியனிடமிருந்து தான் திசைகள் கணக்கிடப்படுகின்றன.   அவ்வாறே. அண்ட வெளி, வானம், பூமி, தவிர ஸ்வர்க அபவர்கங்கள்.  நரகம், ரஸௌகா -பாதாளம் என்ற லோகங்களும் அறியப் படுகின்றன.  தேவர்கள், கால் நடைகள், மனிதர்கள், ஊர்வன, வேர்களுடைய மரங்கள், தாவரங்கள் என்று அனைத்து உயிரினங்களுக்கும் ஆத்மாவாக இருப்பது ஸூரியனே.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபதாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-46

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-21

ஸ்ரீ சுகர் சொன்னார்:  இதே போல பூமியைச் சுற்றி உ ள்ளவையும் ப்ரமாண லக்ஷணங்களால் அறிந்து சொல்லப் படுகிறது.

தேவ மண்டலம் இரண்டு பாகமாக வர்ணிக்கப் படுகிறது.  பூ மண்டலத்தின் இருப்பும், ஸூர்யனின் கதியையும் வைத்து அதன் விஸ்தீர்ணம்  ஐம்பது கோடி யோஜனை என்று சொல்லியதை போலவே, அதே கணக்கில் தேவ லோகம் பற்றியும் கணக்கிட்டுள்ளார்கள்.  எப்படி என்றால், கோதுமை போன்ற தானியங்களை மூடியிருக்கும்  தோலை (உமி) அதைப் பிளந்து ஒன்றை அளந்தால் மற்றொன்றும் அதே அளவு தான் இருக்கும் என்பது எப்படி நிச்சயமோ,  அந்த நியாயத்தின் அடிப்படையில்,  பூலோகத்தின் அளவே தேவலோகமும் கணக்கிடப் படுகிறது. இரண்டுக்கும் இடையில் அந்தரிக்ஷம் என்ற உலகம். இது பூலோகத்தையும், தேவலோகத்தையும் இணைக்கிறது.  இந்த பகுதியில் க்ரஹங்கள், நக்ஷத்திரங்கள், உள்ளன. ஸூரிய பகவான் வெப்பமும், பிரகாசமும் அளித்து மூவுலகையும் காக்கிறார்.  உத்தராயணம், தக்ஷிணாயனம் என்ற பிரிவுகள், ஸூரிய பகவானுடைய கதியின் அளவைக் கொண்டு, மந்த,சீக்ர, சமான  என்ற கதிகளின் வேகத்தை வைத்து பிரிக்கப்பட்டுள்ளன. மகரம் முதலிய ராசிகளில், மேலும் கீழுமாக மற்றும் நேராக ரதம் செல்லும் சமயம் பகலும் இரவும், அதிகமாகவோ, குறைவாகவோ அல்லது சீராகவோ இருப்பது போலத் தெரியும்.   ஸூரிய பகவான் மேஷம் அல்லது துலா ராசிக்கு வரும் சமயம், தினமும், இரவும் சமமாக இருக்கும்.  வ்ருஷப முதலான ஐந்து ராசிகளில் செல்லும் சமயம்,  ஒவ்வொரு மாதமும் இரவு நேரம் ஒவ்வொரு மணிநேரம் குறைந்து கொண்டே வரும்.  அதே அளவு பகல் கூடும்.  வ்ருச்சிகம் முதலான ஐந்து மாதங்கள், இரவு  பகல் விகிதம் நேர் மாறாக இருக்கும்.  இரவு அதிகமாகவும், பகல் குறைவாகவும் இருக்கும்.  

இவ்வாறு  ஸூரியனின் சஞ்சாரம்  ஒன்பது கோடி ஐம்பத்து ஒன்று லக்ஷம் யோஜனைகள் மானஸ கிரியின்  சுற்றுப் புறத்தில் அமையும். இதில் ஐந்த்ரீபுரி- இந்திரனின் நகரம் மேருவின் கிழக்கில் தேவதானி என்ற பெயரில், தென் திசையில் யமனுடைய ஸம்யமனி என்ற பெயரில், மேற்கில் வருணனின் நிம்லோசனீ என்ற பெயரில், வடக்கில் சௌம்யமான விபாவரீ என்ற பெயர்- இவைகளில் உதய, மத்யான்ன, அஸ்தமய இரவு என்பவை உயிரினங்கள் தங்கள்  நடவடிக்கைகளுக்கான  சமயத்தை  சரியாக அறிந்து கொள்ள முடிவதால். மேருவின் நான்கு முகங்களாக சொல்லப் படுகின்றன.  இங்குள்ளவர்கள்  தினம்  நடுப்பகல் வரை ஸூரியன் தபிக்கிறான் என்றும் பின் மேருவின் பின் மறைந்ததாகவும், இரவு என்றும்  நினைப்பது, மற்றொரு பாகத்தில் விடியலாகவும்  புதிய ஒரு தினம் காலை. நடுப்பகல்  என்று விரிவதாகவும் அறியப்படுகிறது. பூ கோளத்தின் மேற்கு திசையில், நிம்லோசனி என்ற யமனின் நகரத்தில்,  தன் ரதத்தில் செல்லும் சமயம்  முற்றிலும் மறைந்து விடுகிறான்.

எந்த நகரத்தில் ஸூரிய பகவானின் உதயம் ஆகிறதோ, அதற்கு நேர் எதிர் பாகத்து நகரில் அஸ்தமனம் ஆகியிருக்கும். ஒரு பக்கம் உயிரினங்கள் ஸூரியனின் தாபம் தாங்காமல் தவிப்பர். அதே சமயம், எதிர் பக்கத்தில் இரவாகி தூங்கிக் கொண்டிருப்பர். ஒரு சிலர் மத்யான்னம் என்ற நடுப்பகல்,  ஸூரியனை கண்ணால் காண்பர். அதே சமயம் சௌம்ய திசையில் ஸூரியனை காண முடியாது.  இந்திர புரியிலிருந்து யம ராஜனின் நகர் நோக்கி ஸூரியனின் ரதம் செல்லும் சமயம், பதினைந்து கடி घडि நேரத்தில், இரண்டேகால் கோடி பன்னிரண்டரை லக்ஷ  யோஜனைகளை விட இருபத்தைந்து யோஜனை தூரம் அதிகமாக செல்வார். அதே க்ரமத்தில் வருணன், சந்திரன் நகரங்களைக் கடந்து இந்திரனின் நகரம் வந்து சேருவார். இதே போல சந்திரனின், நக்ஷத்திரங்களின் உதயமும், அஸ்தமனமும் நடந்து கொண்டேயிருக்கும்.  வேதமயமான ஸூரிய பகவானின் ரதம் ஒரு முஹூர்த்த நேரத்தில், முப்பத்து லக்ஷத்து எண்ணூறு யோஜனை என்ற வேகத்தில் நாலு திக்கிலும் உள்ள நகரங்களைக் கடந்தபடி சுற்றி வருகிறது.

சம்வத்சரம் என்பது ஒரு ஆண்டு. அதை ஒரு சக்கரமாக சொல்கிறார். அதற்கு மாதங்கள் என்பன பன்னிரெண்டு ஆரங்கள்.  பருவங்கள் ஆறும் நேமி (नेमि) நான்கு மாதங்களாக மூன்று பிரிவுகள்.  இதை ஆங்கன் (आंगन्) என்பர்.  (சக்கரத்தின் உள் வட்டம்) இந்த ரதத்தின் மேல் பகுதியின் ஒரு சிகரம் மேரு பர்வதத்தின் உச்சியில் உள்ளது.   மற்றொன்று மானஸத்திற்கு வடக்கில் உள்ள ஒரு மலையில் உள்ளது.  இதன் மேல் அமைந்த சக்கரம் எண்ணெய் எடுக்கும் செக்கின் சக்கரம் போல் சுற்றும்.  இரண்டு மலைகளும் வாணியன் (கடுகு,எள் போன்ற தானியங்களிலிருந்து எண்ணெய் எடுப்பவன்) சக்கரத்தின் நடு பாகம் போல இணைந்து இருக்கும் (சக்கரத்தின் அச்சு)  மற்றொரு அச்சு உயரமாக, இதைபோல நான்கு மடங்கு இருக்கும்.  அது எண்ணெய் செக்கின் நடுவில் உள்ள தண்டு போல நீண்டு த்ருவ மண்டலத்தை எட்டும்.  இந்த ரதத்தில் அமரும் இடம்  முப்பத்தாறு லக்ஷம் யோஜனை  நீளமும், ஒன்பது லக்ஷ யோஜனை அகலமும்  உள்ளது.  जुवा என்ற பகுதியும் முப்பாத்தாறு லக்ஷம் யோஜனை தூரமேயாகும்.  அதில் அருணன் என்ற சாரதி, காயத்ரி முதலான பெயர்களுடன்- வேத மந்திரங்கள் போன்ற பெயர்களுடன் – ஏழு குதிரைகளை பூட்டி வைத்திருக்கிறான்.  இந்த ரதத்தில் அமர்ந்து ஸூரிய தேவன் பவனி வருகிறான்.  அவர் எதிரில் அவருடைய முகத்தை பார்த்தபடி அமர்ந்து அருணன் சாரத்யம் செய்கிறான். அவருக்கும் முன்னால் ஸ்வஸ்தி வாசகங்களை சொல்லிய படி, பாலகில்யர்கள் என்ற ஆறாயிரம் ரிஷிகள், -இவர்கள் கட்டை விரல் அளவே உள்ளவர்கள்)  (பௌருவ?) செல்கின்றனர். இவர்கள் தவிர, ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரா, நாக, யக்ஷ, ராக்ஷஸ, மற்றும் தேவர்கள், பதினான்கு பேரும் தங்கள் துணைவர்களுடன் பின் தொடருகின்றனர். ஜோடியாக இருப்பதால் ஏழு கணங்கள் எனப்படுவர்.  மாதந்தோறும் இவர்களுக்கு சில  செயல்கள் உண்டு.  இருவருமாக சேர்ந்து செய்வர். அந்த சமயம் இவர்கள் பெயர்களும் மாறும். (ஏழு நாட்கள்)  இப்படியாக ஒரு க்ஷணத்துக்கு இரண்டாயிரத்து இரண்டு யோஜனை தூரத்தை கடந்து விடும் வேகத்தில், ஒன்பது கோடி, ஐம்பத்தோரு லக்ஷ யோஜனை உள்ள பூ மண்டலத்தின் சுற்றளவை ஸூரிய பகவான் கடக்கிறார்.  

இவ்வாறு ஸூரியனின் கிரணங்களுக்கு மேல் லக்ஷ யோஜனை தூரம் வேகமாக செல்லும் சந்திரன்,  ஸூரியனுடைய வர்ஷம் என்ற காலத்தை பக்ஷங்கள், வளர் தேய் பிறைகளாலும், மாதம் கால் (நான்கில் ஒரு பாகம்) ருக்ஷம் என்ற கணக்கிலும், பக்ஷம் என்பதை ஒரு தினமாகவும் அடைகிறான்.  இந்த இரண்டு வளர், தேய் பிறைகளுக்கும் இடைப்பட்ட கலைகளால் அமரர்கள் என்ற தேவர்களுக்கும், குறைந்து கொண்டு வரும் கிரணங்களால் பித்ருக்களையும், இரவு பகல், பூர்வ பக்ஷம் அபர பக்ஷம் என்பவைகளால் நிர்வகிக்கிறான். அந்த விதமாக அனைத்து உயிரினங்களையும் காத்து, முப்பது முஹூர்தங்களாக ஒவ்வொரு நக்ஷத்திரத்தையும் பிரித்து ஆள்கிறான். பதினாறு கலைகள் உடைய  பகவான் சந்திரன், மனோ மய, அன்னமய , அம்ருத மயன், தேவ பித்ரு மனுஷ்ய மற்ற பிறவிகள், பசு, பக்ஷி, ஊர்வன, பறவைகளுக்கும் ப்ராணனை தருவதால் சர்வமயன் என்று வர்ணிக்கப் படுகிறான்.

இதற்கும் மேல், மூன்று லக்ஷ யோஜனைகள் தூரத்தில், நக்ஷத்திரங்கள், மேருவை வலது புறமாக கால அயனங்கள்  பகவானே செய்த வகையறை, அபிஜித் என்பதோடு சேர்த்து இருபத்தியெட்டு என்பர்.

அதற்கும் மேல் உசனா என்ற ரிஷி இரண்டு லக்ஷண யோஜனை தூரத்தில் காணக் கிடைக்கிறார்.  கிழக்கு, மேற்கில், சில சமயம் சேர்ந்தும் ஸூரியனோடு பயணம் செய்கிறார்.  அவருடன் வேகமாகவும், மந்தமாகவும், சமமாகவும் ஸூரியன் போலவே சஞ்சரிக்கிறார்.  உலக மக்களுக்கு எப்பொழுதும் அனுகூலமாக மழை வரச் செய்வதும், தன் ஏவலர்களுடன் மழையின் அளவு, மழையை தடுப்பது, தவிர  கிரஹங்களின் போக்கையும் கண்காணிக்கிறார்.

உஸனஸ் ரிஷிக்கும் பிறகு புதன் பற்றி சொல்கிறார்.  உஸனஸ் க்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகள் ( பூமியிலிருந்து ஒன்பது லக்ஷ தூரத்தில், ) புத க்ரஹம் – பொதுவாக சுபமானது. சில சமயம் ஸூரிய கதியின் இடையில் வரும் சமயம் அசுபமாகவும் செயல்படும்.  அந்த சமயம் அதிக காற்று, அதிக மழை என்று பூமியில் இடர்கள் தோன்றும்.   அதற்கும் மேல் இரண்டு லக்ஷ யோஜனை, பூமியிலிருந்து  பதினோறு -11- லக்ஷ யோஜனை தூரத்தில் அங்காரகன்.  பொதுவாக கெடுதல் விளைவிப்பவன் என்று சொன்னாலும், நன்மையும் உண்டு. “தசமே அங்காரகோ யஸ்ய ஸ ஜாத: குல தீபக:- எவனுடைய ஜாதகத்தில் பத்தாவது இடத்தில் அங்காரகன் இருக்கிறானோ, அவன் குல தீபகனாவான்” என்ற படி. வக்ரனாக சஞ்சரிக்கும் சமயம் ஒரே இடத்தில் பல காலம் இருப்பான் என்றும் சொல்லப் படுகிறது.  அங்காரகன் தன் வக்ர கதியில் செல்லும் சமயம் அந்த ஸ்தான விசேஷத்தால், தீங்கு விளையும் என்பது நம்பிக்கை.

அங்காரகனைவிட இரண்டு லக்ஷம், பூமியிலிருந்து பதின்மூன்று-13- லக்ஷ தூரம் ப்ருஹஸ்பதி. ஒவ்வொரு ராசியிலும் மூன்று மூன்று பக்ஷங்கள் பரிவத்ஸரம் பரிவத்ஸரமாக கடப்பதாக சொல்லப் படுகிறது. பொதுவாக ப்ராம்மண குலத்துக்கு அனுகூலமானவன்.   பொதுவாக சாந்தியை தருபவன்.

அதற்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகள் தாண்டி சனைச்சரன் என்ற பெயரில் ஒவ்வொரு ராசிக்கும் மூன்று மாதங்கள் பதின்மூன்று மாதங்கள் மெதுவாக செல்வதால் சனைச்சரன் என்று பெயர்.   

அதற்கும் வடக்கில், பதினைந்து லக்ஷ தூரத்தில், பூமியிலிருந்து 11-பதினொன்று லக்ஷ தூரத்தில் இருப்பது  உலகத்தின் சம நிளையை நிலை நிறுத்தும் விஷ்ணு பதம். அதை ப்ரதக்ஷிணமாக கடப்பர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்தொன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-17

ஸ்ரீமத் பாகவதம்  –  ப்ரிய வ்ரத விஜயம் என்ற  ஐந்தாவது ஸ்கந்தம் || ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||

அத்யாயம்-22

அரசன் வினவினான். பகவன்!   ஆதித்யன், மேருவையும், துருவ நக்ஷத்திரத்தையும் ப்ரதக்ஷிணமாக சுற்றி வருவதும், ராசிகளின் திசைகளில் பார்வை படும் படி, வருவதும், அதன் பின் அப்ரதிக்ஷணம் – மறு திசையில் சுழன்று செல்வதாகவும் வர்ணித்தீர்கள்.  அதை நாங்கள் காண முடியுமா? எப்படி?

அவர் பதில் சொன்னார்:  குயவனின் சக்கரம் சுழலும் சமயம் அத்துடன் சில எறும்புகள் வேறு இலக்கை நோக்கிச்  செல்கின்றன.  அதே திசையிலோ, எதிர் திசையிலோ கூட அதன் கதி இருக்கலாம்.  அது போல நக்ஷத்திர மண்டலம் கால சக்கரத்தில் உடன் வந்தாலும், அவை துருவனை, மேருவை ப்ரதக்ஷிணமாக சுற்றும் சமயம் உடன் அதே போல ப்ரதக்ஷிணமாக வந்தாலும் அவைகளின் கதி வேறே.  நக்ஷத்திரங்களுக்கும், ராசிகளுக்கும் இடையில் உள்ள சம்பந்தத்தால் மாறும் தன்மையுடையன.

ஆதி புருஷனான பகவான் நாராயணனே,  தன்னுடைய வேதங்களில் சொன்ன கர்ம விதிகளை சிறப்பாக நடைமுறைக்கு கொண்டு வர,  ப்ரும்மா முதலானவர்களும் சேர்ந்து வேத்தை நன்றாக அறிந்தவர்கள் மேலும் அதன் பொருளை விவரமாக ஆராய்ந்து, பன்னிரெண்டாக பிரித்து ஆறு வசந்தம் முதலான பருவகாலங்கள் (ருதுக்கள்) அவை அந்தந்த  சமயங்களில் எப்படி இருக்கும் என்பதையும் விளக்கி உள்ளார்கள்.

அதையே மனிதர்கள் வேத அறிவினால், வர்ணாஸ்ரம விதிகள், அதே போல கர்ம மார்கத்தை அனுசரித்தும், யோக மார்கத்தை சாதனைகள் செய்தும், சிரத்தையுடன் யாகங்கள் செய்து, அல்லது பயிற்சிகள் செய்து, முடிவாக எது நன்மை என்பதை அறிந்து கொள்வார்கள்.

 எனவே, இந்த ஆத்மா வானத்துக்கும், பூமிக்கும் இடையில் வானத்தின் வட்டத்தில், கால சக்கரம் செல்லும் சமயம், பன்னிரெண்டு மாதங்கள் என்று அறிந்தார்கள்.  ராசிகளின் எண்ணிக்கையை ஒரு ஆண்டின் பகுதிகளாக  மாதம், அதில் இரண்டு பக்ஷங்கள், (வளர் பிறை, தேய் பிறை) , இரவு, பகல் பாதி ருக்ஷம் என்பதன் இரண்டாக சொன்னார்கள். அதனால் ஆறு பகுதிகளாக ருதுக்களின் எண்ணிக்கை வந்தது.  இவை ஆண்டு என்பதன் அவயவங்கள்- பாகங்கள்.

வான வெளியில் பாதி வரை ஸுரியனின் கதி செல்லும் காலம் அயனம் எனப்படும். அதனால் எதுவரை ஸுரியனின் கதி வானத்திற்கும் பூமிக்கும் இடையில் மண்டலமாக, வளையமாக  முழு சுற்று முடித்தால் அது சம்வத்ஸரம்- ஆண்டு, பரி வத்ஸரம், இடா வத்ஸரம், அனு வத்ஸரம், வத்ஸரம் என்று பானுவின் தாக்கம், அதிகமாக, மந்தமாக, சம மான கதிகள் இவற்றை அனுசரித்து பெயர்கள் ஸூட்டினர். .

இவ்வாறு சந்த்ரமா அர்க்கனின்- ஸூரியனின் கிரணங்களால் மேலாக லக்ஷ யோஜனை தூரத்தில் இருப்பதால், சூரியனுடைய கதியை வைத்து சொன்ன சம்வத்சரங்கள்,  தான் வளர் பிறை, தேய்பிறை என்பதால் இரண்டும் ஒரு முறை கடந்தால் மாதம் என்றும், மாதங்கள் என்பதையும் நாட்களாக பிரித்தும்,  பாதி பாதியாக பிரித்த ஒரு நாளின் இரவு பகலை, தன் பிரயாண காலத்தை கணக்கிட்டுக் கொண்டு முன்னும் பின்னுமாக, செல்லும் வேகத்தையும் அமைத்துக் கொள்ளும்.

அதன் பின்  வளரும்  வளர் கலைகள், அமரர்களின்,  தேய் பிறை கலைகள் பித்ருக்களின்  காலம் என்றனர்.  இரவும் பகலும் பூர்வ பக்ஷ-வளர் பிறை, அபர பக்ஷ -தேய் பிறை என்பதன் காரணமாக உலகில் ஒட்டு மொத்த ஜீவன்களின் ப்ராணன் , ஜீவனின் ப்ராணன் ஒரு நக்ஷத்திரம் என்று முப்பதாக முஹூர்த்தங்களாக பிரிக்கப் பட்டன.

அது பதினாறு கலைகள் கொண்ட பகவான் மனோ மயன், அன்ன மயன், அம்ருத மயன், தேவ, பித்ருக்கள், மனுஷ்ய, பூத, பசு, பக்ஷி,சரீ ஸ்ருப ஊர்வன, வீருத-பறப்பன  என்பவைகளின் ப்ராணங்களால் ஸூழப் பட்டு இருப்பதால், அவைகளின் தாக்கமும் சேர்ந்து, சர்வமய என்று வர்ணிக்கின்றனர்.

அதன் பின், மேற் கொண்டுமூன்று லக்ஷ யோஜனைகள் நக்ஷத்திரங்கள் மேருவை தக்ஷிண கால – தக்ஷிணாயனம் என்ற காலத்தில்,  ஈஸ்வரனால் ஒருங்கிணைக்கப்பட்டு அபிஜித் என்பதையும் சேர்த்து இருபத்தெட்டு.

மேலும், உசனா- சுக்ரன் என்பது இரண்டு லக்ஷ யோஜனை தூரத்தில் காணப் படும். முன்னாலும், பின்னாலும் ஸூரியனுடைய வேகம் அதிகமாவதும், மந்தமாவதையும், சமமாக இருப்பதையும் வைத்து ஸூரியனுடன் சேர்ந்தே செல்கின்றன, உலகங்களுக்கு  எப்பொழுதும் அனுகூலமாக இருப்பதே ப்ரதானமாக இருந்து, காலங்களில் மழை பொழிவதும், பயிர்கள் செழிப்பதும், மழை குறைவதும் இந்த க்ரஹங்களின் செயல்.

சுக்ரனின் இருப்பிடத்திலிருந்து மேல் இரண்டு லக்ஷ யோஜனைகளுக்கு அப்பால் சோமசுதன்- சந்திரனின் மகனான புதன் இருப்பதாக சொல்கின்றனர்.  புதன் பொதுவாக சுப க்ரஹம். எந்த சமயங்களில் ஸுரியனுடன் முரண் படுகிறானோ, அந்த சமயங்களில் வாத- காற்றின் போக்கு,, வானம் இவைகளின் கதியில் இடறி, அதிக மழை போன்ற ஆபத்துக்கள் நேரும் என்று கணிக்கிறார்கள்.

அதற்கும்  மேல் இருப்பது அங்காரகன்.  இரண்டு லக்ஷ யோஜனைகளுக்கு அப்பால் இருந்து கொண்டு, மூன்று மூன்றாக பாதங்கள்-பக்ஷங்கள் (15 நாட்கள் – ஒரு பக்ஷம் ) ஒவ்வொரு ராசியையும் பன்னிரண்டு ராசிகளையும் ஆளுகிறான். வக்ரமாகச் செல்லும் காலத்தில், பொதுவாக, அசுபம்- நன்மையல்லாத க்ரஹம் என்று கணிப்பு.

அங்காரனுக்கும் மேல் இரண்டு லக்ஷ யோஜனைகளுக்குள், பகவான் ப்ரஹஸ்பதியின் ஸ்தானம்.  ஒவ்வொரு ராசியிலும் பரிவத்சரம், பரிவத்சரம் இருந்து தன் பிரயாணத்தை செய்வார்.  வக்ரமாக கதி இருந்தாலும் அந்தணர்களுக்கு அனுகூலமாகவே இருப்பார்.

அதற்கும் மேல், இரண்டு லக்ஷ யோஜனைகளில் காணப்படும் சனைச்சரன், ஒவ்வொரு ராசியிலும் முப்பது மாதங்கள் தங்குபவனாக, அனைவரையும் பின் தொடர்ந்த்து  செல்வான். அவர்களுடன் அனு வத்சரங்களில் பொதுவாக அனைவருக்கும் அசாந்தி- கெடுதலைச் செய்பவன். 

வடக்கில், ரிஷிகள் பதினோரு லக்ஷ யோஜனைகள் தூர இடைவெளிக்குள், இருப்பர். இவர்கள் உலக நன்மையை எண்ணி செயல் படுபவர். பகவான் விஷ்ணுவின் பரம பதம் என்பதை ப்ரதக்ஷிணமாக சுற்றி வருவர். 

(இதுவரை ஸ்ரீமத் பாகவதத்தில், ஐந்தாவது ஸ்கந்தத்தின், இருபத்து இரண்டாவது அத்யாயம்)

அத்யாயம்-23 

ஸ்ரீ சுகர் சொல்கிறார்.  அதற்கும் அப்பால், பதின் மூன்று-13- லக்ஷ யோஜனைகளுக்குள், விஷ்ணுவின் பதம் என்று சொல்வார்கள் அங்கு தான் மஹா பாகவதனான துருவன் அக்னி, இந்திரன், கஸ்யப ப்ரஜாபதி, தர்மன் முதலிய சமகாலத்தினருடன்  கௌரவமாக  கல்ப ஜீவிகளுக்கு ஜீவனோபாயமாக  கருணையுடன் இருப்பதாக சொல்வர். அதை வர்ணிக்கிறேன்.

துருவன் தான் எல்லா ஜோதி ரூபமான க்ரஹ நக்ஷத்திரங்கள், சிமிட்டாத ஒளி வீசும் தாரகைகள்,  பகவான் காலத்தின் ஆதிக்கத்தில் செல்லும் அனைத்தின் இடையில் அசையாது ஸ்திரமாக நிற்கும்படி பகவானால் ஸ்தாபிக்கப்பட்டவன், அதை அதே விதமாக செயல் படுத்துகிறான்.

நீளமான கயிற்றால் கட்டப்பட்டு  ஸ்திரமான ஒரு தூணில் கட்டபட்ட மாடுகள் சுதந்திரமாக நடமாடுவது போல இருந்தாலும், அந்த கயிற்றின் அளவே அவைகள் செல்லும் தூரம் என்பது போல கீழும் மேலும், பக்கங்களில் என்று சுழலும் கிரஹ நக்ஷத்திரங்கள் அசையாத ஸ்தம்பமாக இருக்கும் பகவானின் ஆணையால் ஒரே சீராக அவைகளுக்கு விதிக்கப்பட்ட பாதைகளில் செல்கின்றன, அதை விட்டு விலகுவதில்லை.  வானத்தில் சஞ்சரிக்கும் க்ரஹங்கள் இதே போல உள்ளும் புறமும் செல்வது கால சக்கரத்தின் சக்தியும் துருவ நக்ஷத்திரத்தின் ஆளுமைக்கு உட்பட்டதே.  அதே போல வான மண்டலத்தில் வாயுவால் அலைக்கழிக்கப் படும் மேகங்கள், கல்பம் முடியும் வரை சுற்றி வந்து கொண்டிருப்பதும் துருவனின் ஆகர்ஷணத்தாலேயே. கழுகு முதலிய பறவைகள் வாயுவின் உதவியால்  உயர உயர பறக்கும்.  அதே காற்றின் அதீதமான வேகத்தால்   விழாமல் தடுப்பதும்,  ஜோதிர்கணங்கள்,  ஓளியுடன் (கண்) சிமிட்டும், சிமிட்டாத தாரகைகள், இவை இயற்கையும், இறைவனும் சேர்ந்து அனுக்ரஹிக்கப்பட்டவை, தங்களுக்கு விதிக்கப் பட்ட பாதையில் மட்டுமே சஞ்சரிப்பதும் பூமியில் விழாமல் இருப்பதும் துருவனின் ஆகர்ஷணத்தினால் தான்.  சில தாரகைகள் திமிங்கிலம் –(dolphin) உருவில் உள்ளவை, இவை பகவானின் யோக தாரணையை அனுசரிக்கின்றன. இவைகளின்   தலைகீழாக, உடலை சுருட்டிக் கொண்ட வடிவில், வால் போன்ற பகுதியின் ஆரம்பத்தில் துருவன் வசிப்பதாக சொல்வர். அந்த வால் பகுதியில் ப்ரஜாபதி, அக்னி, இந்திரன், தர்மன் இருப்பர். வால் நுனியில் தாதா, விதாதா (धाता,विधाता) இடுப்பு பகுதியில், சப்த ரிஷிகள் அதன் வலது பக்கம் வளைந்த குண்டலீயான  (சக்கர வடிவ) சரீரத்தின் தென்பகுதியின் கீழ் சில நக்ஷத்திரங்கள் (அபிஜித், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அஸ்வினி, பரணி, காரித்திகை, ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, புனர்வசு இவை உதக யானானி எனப்படும்) பதினான்கு நக்ஷத்திரங்களும், இடது புறத்தில், புஷ்யம், ஆஸ்லேஷம்(ஆயில்யம்), மகம், பூர்வ பால்குனி(பூரம்,) உத்தர பால்குனி(உத்திரம், )ஹஸ்த, சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுராதா (அனுஷம்)  ஜ்யேஷ்டா (கேட்டை) மூலம், பூர்வாஷாட, உத்திராஷாட (பூராட, உத்திராட) இவை தக்ஷிணாயன நக்ஷத்திரங்கள், பதினான்கும், திமிங்கில வடிவின் இரு பக்கமும், அவயவங்களாக அறிஞர்கள் விவரிக்கிறார்கள்.  திமிங்கிலத்தின் வயிற்று பாகத்தில் ஆகாச வீதி என்றும் அதில் ஆகாச கங்கா என்றும் இருப்பிடங்களை சொல்கிறார்கள்.

புனர்வசு,   உத்தராயனத்தின் முடிவாகவும், புஷ்ய நக்ஷத்திரம் , தக்ஷிணாயனத்தின் ஆரம்பமாகவும் இருப்பதாக சொல்கின்றனர்.  சிசுமார- திமிங்கில வடிவின் உடல் பாகங்களில் இருபத்தெட்டு (அபிஜித் உட்பட) நகத்திரங்களின் ஸ்தானம் விவரமாக சொல்லப்பட்டுள்ளது.  அதன்,

வலது பக்கம்  -கிழக்கு –          இடது பக்கம்- மேற்கு.

வலது பாதம் – திருவாதிரை,ஆயில்யம்,    –   அபிஜித் – உத்திரட்டாதி,

மூக்கு-  திருவோணம், பூராடம்

கண்கள்- சதயம், மூலம்                                                              

காதுகள்- மகம் முதலிய எட்டு நக்ஷத்திரங்கள்.                                    

இடது பாதம்- மிருகசீர்ஷம் முதலான எட்டு  

 சதயம், கேட்டை தோள்கள்,

மேல் பாகத்தில் அகஸ்திய தாரகை, கீழே யமன், வாயில் அங்காரகன் (பௌம)தாரகை, ஜனன உறுப்பில் சனி, ககுத்-திமில் (விலங்குகளில் முதுகில் ஒரு பாகம்) என்ற பகுதியில் ப்ருஹஸ்பதி, மார்பில் ஆதித்யன், ஹ்ருதயத்தில் நாராயணன், மனதில் சந்திரன், நாபியில் உசனா, சுக்ர தாரகைகள், ஸ்தனங்களில் அஸ்வினி, தாரகைகளான அஸ்வினி குமாரர்கள், ப்ராண அபான வாயுக்களின் இடத்தில் புதன்,  கழுத்தில் ராஹு, மீதி உள்ள எல்லா இடங்களிலும், கேது,  ரோமங்களில் மற்ற தாரகைகள் என்று அறியவும்.          

பகவான் விஷ்ணுவின் சர்வ தேவதாமயமான ரூபம். தினந்தோறும் கண்களால் பார்த்து, வணங்க,” நமோ ஜ்யோதிர் லோகாய, கால, அயன  அனிமிஷ பதயே மஹா புருஷாய அபிதீமஹி “ என்ற வாசகம்.  க்ரஹ, ருக்ஷ, தாராமயமான  தெய்வீகமான பாபத்தை போக்கும், மந்திரம். இதை மூன்று வேளையும் நினைப்பதால், உடனடியாக பாபங்கள் விலகும்.                   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து மூன்றாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-9

 அத்யாயம்-24 

ஸ்ரீ சுகர் சொன்னார்: ஸூரியனின் கீழ் பாகத்தில், ஒரு யோஜனை தூரத்தில், ஸ்வர்பானு நக்ஷத்திரம் போலவே செல்லும் ஒரு க்ரஹம் உள்ளது என்று சிலர் சொல்கிறார்கள்.  அது ஒரே சமயத்தில் அமரத்வம்-நிரந்தரமான நிலையையும், க்ரஹமாகவும் மதிக்கப் படுகிறது. தகுதியின்றி இருந்தாலும், பகவானுடைய அருளால், உண்மையில் அசுரன். சிம்ஹிகா புதல்வன்.  தாரா மண்டலத்திலிருந்து  தாபம் தாங்காமல், ஒரு யோஜனை தூரம் விழுந்தவன்.  சந்திரனிடமிருந்து. இருபத்திரண்டு ஆயிரம், பதின்மூன்றாயிரம் ராஹுவிடமிருந்தும் விலகி இருக்கும்.  ஒரு பருவ காலத்தில் ஸூரிய சந்திரர்களை பின் தொடர்ந்து மறைத்தது. அதைக் கேட்ட பகவான் தன் சக்கரத்தை அனுப்ப, அதன் வேகத்தை தாங்க முடியாமல், ஒரு முஹூர்த்தம் மட்டுமே ஆன நிலையில் ஸுரியனுடைய ஒளி வட்டத்திலிருந்தே விலகி விடும் என்பர்.

அதற்கும் கீழ் சித்த சாரணர்களின் இருப்பிடம்.  அதற்கும் கீழ் யக்ஷ ரக்ஷ ப்ரேத பூத கணங்களின் நடமாட்டம் உள்ள அந்தரிக்ஷம் – இங்கு வாயு வீசும், மேகங்கள் உலவும்.  அதற்கும் கீழே, நூறு யோஜனை தூரத்தில், இந்த பூமி – இங்கு ஹம்ஸங்கள், பாஸ, கழுகு, சுபர்ணன் என்ற கருடன் முதலிய பறவைகள் பறக்கும் இடம். பூமிக்கும் கீழே, ஏழு நிலங்கள் இரண்டு யோஜனை தூர இடைவெளியில், விஸ்தாரமாக வர்ணிக்கப் படும், அதலம், விதலம், சுதலம், தலாதலம்,மஹா தலம், ரஸாதலம், பாதாளம் என்பவை.  பூமியின் அடியில் பள்ளம் போல இருந்தாலும், ஸ்வர்க்கத்தை விட அதிகமான போக ஐஸ்வர்யங்கள், ஆனந்தங்கள், மற்றும் விபூதிகள்  நிறைந்த பவனங்கள், உத்யான வனங்கள், க்ரீடா விஹாரங்கள், இவற்றுடன் தைத்ய தானவ  வம்சத்தினர், மனைவி மக்கள், புத்ர பௌத்ர்கள் என்று க்ருஹஸ்த ஜீவனத்தை  சுகமாக தொடர்ந்து வருவதாக சொல்லப் படுகிறது. இவர்கள், ஈஸ்வர பக்தி, மாயா விநோதங்கள் இவைகளிலும் ஈடுபாடு உடையார்களாக உள்ளார்கள். 

அரசனே!  இங்கு மாயாவியான மயனால் கட்டப் பட்ட நகரம். பலவிதமான  உயர் மணிகள் அழகுற பதிக்கப் பெற்ற பவனங்கள்.  ப்ராகாரங்கள், கோபுரங்கள். சபைகள், சிறு உத்யான வனங்கள்.  நாற்கால் மண்டபங்கள். நாகாசுர்கள்,  இரட்டையர்களாக சஞ்சரிப்பர். உத்யான வனங்கள் அமர லோகம் போலவே அழகுடன் பராமரிக்கப் படுகின்றன.  பழங்கள், கொத்து கொத்தாக மலர்களும், தனி மலர்களும், தளிர்களுமாக, தலை வணங்கி நிற்பது போன்ற மரங்கள், அவைகளை சுற்றிப் படர்ந்து இருக்கும் கொடிகள், இவைகளுடன் அழகிய காட்சியளிக்கும். அருகில்  குளங்கள், நீர் நிலைகள்.  எப்பொழுதும்  இணைபிரியாத இரட்டையர்களாக சக்ரவாகங்கள்,  அந்த சுத்தமான நீரில் மிதந்தபடி இருக்கும். துள்ளும் மீன் கூட்டங்களும் மற்ற நீர்வாழ் ஜந்துக்களும் விளையாடும்.  நீரில் மலரும் பூக்கள், அனேக நிறங்களில் கமலங்கள் நிறைந்த இடங்கள்.  அந்த பூக்களிடையில் வசிக்கும் சிறு பறவைகளும், பூச்சிகளும் ஆர்பரிக்கும் சத்தம் மதுரமாக கேட்கும்.  அனைத்துமே லக்ஷ்மீ கடாக்ஷம் பெற்றவை,       பகலா இரவா என்று கூட தெரியாதபடி உல்லாசமான வாழ்க்கையை வாழ்பவர்கள்.  பெரும் நாகங்கள் தலையில் உள்ள மணிகளின் பிரகாசம் இருட்டை விரட்டி விடும். 

இங்கு வசிப்பவர்கள் திவ்யமான ஔஷதி ரஸம், அன்ன பானாதிகள், ஸ்னானம் முதலியவைகள், மனோவியாதி, உடல் வியாதி, முதுமையால் தேஹ வர்ணம் இழந்து, துர்கந்தம், வியர்வை, அலுப்பு, ஓய்ச்சல் என்று பலவிதமன  இடர்களையும் அனுபவிப்பதில்லை.     இவர்கள் எப்பொழுதும்  நன்மைகள், அழகிய  பலசாலியான உடல்  இவற்றுடன் வாழ்கின்றனர். பகவானுடைய சக்கரம் அன்றி வேறு எதனாலும் மரணம் இல்லை என்பது இவர்கள்  பெற்ற வரம்.  அதனால் சுதர்ஸன சக்கரத்தைக் கண்டாலே அசுர பெண்மணிகளின் கர்பம் கலையும், அவர்கள் பயத்தால் அழிவர்.  அசுர நகரில் மயன் என்ற தானவனின் மகன் பல என்பவன் வசிக்கிறான். தொன்னூற்று ஆறு விதமான மாயைகளை அறிவான்.  அவற்றில் சில இன்றளவும் மாயை என்ற கண்கட்டி வித்தை செய்பவர் அறிவர்.  ஒரு சமயம் கொட்டாவி விட்ட சமயம் மூன்று விதமான பெண்கள் வெளி வந்தனர்.  சுவர்ண வர்ணமான, காமினி, பும்ச்சலி என்பவர்கள். ஹாடக எனும் மதுவினால் மயக்கி இங்குள்ள ஆண்களுடன் காலம் கழிப்பர். அந்த மதுவினால் மயங்கி அவர்களும் நானே கடவுள், நானே சித்தன் என்று பிதற்றுவர்.

அதற்கும் கீழ், விதலம் எனும் இடத்தில்,  பகவான் ஹாடகேஸ்வரர் என்ற பெயரில் மகேஸ்வரன்,  பவானி எனும் தன் பத்னியுடன் வசிக்கிறார். உடன்.  பார்ஷதர்கள் எனும் ஏவலர்கள் பூத கணங்கள், இவர்களுடன் ஹாடகீ என்ற நதிக் கரையில்  ப்ரும்மாவின் வேலையான பிரஜைகளை பெருக்குவது என்பதை ஊக்குவிக்கிறார்.  பவனும் பவானியும் இணைந்தே இருப்பர்.  இந்த நதியின் நீரிலிருந்து பொன் விளைகிறது. பெண்கள் யாரானாலும், தேவ, மானிட, ஆசுர ஜனங்கள் விருப்பமுடன் பொன்னை விரும்பி,  நகைகளாக அணிகின்றனர்.

இதையும் அடுத்து சுதலம். இதில் விரோசனன் என்பவரின் மகனாக பலி என்ற அசுர ராஜன் குணசாலியாக, உத்தம ஸ்லோகன் என்று அறியப் பட்டார்.   மகேந்திரனின்  வேண்டுகோளுக்கு இரங்கி பகவான், வாமனனாக  அதிதி மகனாக பிறந்தார்.  பலியிடம் மூவடி நிலம் தானமாக பெற்று, ஓங்கி உயர்ந்து வளர்ந்து  மூவடியால்  மூவுலகையும் அளந்து கொண்டார்.  அதன் பின் பகவானின் அருளாலேயே, இந்திரன் முதலான தேவர்களுக்கும் கிடைக்காத செல்வத்தை லக்ஷ்மீ கடாக்ஷத்தினால் ராஜா பலி கிடைக்கப்  பெற்றான்.  அதன் பின் தன் இயல்பான குணம் சற்றும் மாறாமல், இன்றளவும் வாழ்கிறான்.  சுதல லோக ஐஸ்வர்யம் அரசனான அவனிடம் இருந்தது. அதை  பூமியுடன் தானம் செய்ததன் பலனாக என்றும் அழியாத ஐஸ்வர்யமாக மோக்ஷ ப்ராப்தி அடைந்தான்,

யதேச்சையாக, , கீழே விழும் போதோ, வேறு ஏதோ ஆபத்தோ எனும் பொழுது தன்னையறியாமல் கூட பகவன் நாமாவை சொல்பவர்  நல்ல கதியை அடைவர்.  தன் பூர்வ ஜன்ம வினைப்பயன் நீங்கப் பெறுவர் என்கிறார்.  அவரே தன் பக்தர்களின் ஆத்மாவில் ஆத்மாவாக இருப்பவர்.  அவரே, இப்படி பலியின் நல்ல எண்ணத்துடன் அளித்த மூன்றடி நிலத்தை மூவுலகமாக ஏற்றுக் கொண்டது  நியாயமா ? என்ற கேள்வியும் -பலியின் பக்திக்கே பகவான் தண்டனை கொடுத்தார் என்பது போன்ற சந்தேகங்களும் வருவது இயல்பே.   பலியின் தந்தை வழி தாத்தா ப்ரஹ்லாதனின் தந்தை மோக்ஷத்தை கூட வேண்டவில்லை. பகவானின் அருகில் இருக்கும் நிலையையே வேண்டினார்.  பலி எதையும் கேட்கவில்லை.  அதனால் பகவான் பலியின் ராஜ்யத்தில், தன் கதையை கையில் ஏந்தி காவலாக நின்றார்.  ராவண ராஜா சுதலம் வந்தபொழுது அவனை விரட்டியடித்தார் என்பது வரலாறு என்கிறார்,  ஸ்ரீ சுகர்.  

பொருளே பெரிதென்றி எண்ணிய இந்திரன் என்ன செய்தான்?  இந்திரனின் மந்திரி ப்ருஹஸ்பதி. அவரையே அவமதித்தான்.  பகவானிடம் இந்திரலோக சௌக்யங்களையே வேண்டினான். இந்த இந்திர பதவியும் ஒரு மன்வந்தரமே – சாஸ்வதமான பகவானின் அருகாமையை விட இந்த பதவிகள் துச்சம், ப்ரஹ்லாதன் ஹிரண்யகசிபு வதத்தின் பின் அகண்டமான ராஜ்யத்தை பகவானே கொடுத்த பொழுது கூட ஏற்கவில்லை. பகவானின் அருகாமையே வேண்டினான். மஹானுபாவன்  ப்ரஹ்லாதன்.   பலிக்கும் அவர் அனுக்ரஹமே செய்தார். அவருடைய மனம் தயையால் நிறைந்தது. இவைகளைப் பற்றி நான் பின்னால் விவரமாக விளக்கம் அளிக்கிறேன்.

சுதலத்தின் கீழ் இருப்பது தளாதளம்.  அங்கு தானவ ராஜன் மயன் வசிக்கிறான். அங்கு தான் பகவான் ஸ்ரீ சங்கரன் உலக நன்மைக்காக மூன்று புரங்களையும் எரித்தார்.  அதன் பின் மயன் அவருடைய அருளால் இந்த இடத்தில் வசிக்கிறான்.  மயன் என்பவன் மாயாவிகளின் பரம குரு.  இங்கு உள்ள மயனின் பிரஜைகளுக்கு  சுதர்ஸன சக்கரத்திடம் கூட பயம் இல்லை. ஏனெனில் பகவான் மஹாதேவனின் ஆசியால்  மயன் காக்கப் படுகிறான்.

அதற்கும் கீழ் காத்ரவேயர்கள் என்ற சர்ப்பங்களின் நகரம். பல தலைகள் உள்ள, நாகங்களின் கூட்டம், குஹக, தக்ஷக, காலிய, சுசேஷணன் முதலிய பெரிய சர்ப்பங்கள், பகவானின் கருட வாகனத்தைக் கண்டு அசூயை உடையவர்கள், இந்த இடத்தில் தன் நண்பர்கள், மனைவி மக்களுடன் குடும்பமாக சந்தோஷமாக வாழ்கின்றனர்.

இதற்கும் கீழே, ரஸாதளம் எனும் இத்தில் திதி புதல்வர்கள் தைத்ய தானவர்கள், பணய என்பவர்கள், காற்று புகாத கவசங்களுடன், மகா சாகஹ பிரியர்கள்,  பிலங்களில் வசிப்பவர்கள், இந்திரனிடம் பயந்து வாழ்கின்றனர்.

அதற்கும் கீழ், நாக லோகம். வாசுகி முதலானோர் வசிக்கும் இடம். சங்க, குலிக, மஹா சங்க, ஸ்வேத, தனஞ்ஜய, த்ருதராஷ்டிர, சங்கசூட, கம்பல, அஸ்வதர, தேவதத்தன் என்பவர்கள், கடும் கோப குணம் கொண்ட நாகங்கள்.  ஐந்து ஏழு, பத்து, நூறு, ஆயிரம்  என்ற அளவில் தலைகளும்,  படம் எடுக்கும் வல்லமையும் உள்ள நாகங்கள். அவர்களின் தலையின் நடுவே உள்ள படத்தில் மாணிக்கம் என்ற உயர் மணி பிரகாசிப்பதால், அந்த லோகமே இருளின்றி ஒளி மயமாக இருக்கும்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-31 

அத்யாயம்-24 

ஸ்ரீ சுகர் சொன்னார்:  அதன் பின், பதின்மூன்று ஆயிரம் யோஜனைகள் தூரத்தில், இருப்பது பகவானுடைய தாமஸமான கலை.  சாத்வீக – சத்வ குணம் நிரம்பிய சமயம் ஸ்ருஷ்டியில் வந்தவர்கள் சங்கர்ஷணன் என்று பகவானை சொல்வதை, இவர்கள்  நாங்கள் தான் சாங்கர்ஷணர்கள் – சங்கர்ஷணிடம் தோன்றியவர்கள் என்று சொல்லிக் கொள்வர்.  இங்குள்ள அனந்தன் எனும் நாகம், பூ மண்டலத்தை தன் தலையில் தாங்குவதாக சொல்லப் படுகிறது.   பகவான்  ஆதி புருஷன், சங்கர்ஷணன்.   ஸ்ருஷ்டி ஆரம்பத்தில்  தெளிவாக தெரிந்த தெரியாத தத்வங்களை  இணைத்ததால் வந்த பெயர்.  அவர் புருவம் கோபத்தால் நெரிந்த சமயம் உண்டானவர் ருத்ரன். அவரே சாங்கர்ஷணர்.  பதினொன்று வித ரூபங்கள்,  மூன்று கண்கள், மூன்று தலைகள், சூலத்தை ஏந்தியபடி வந்தார். அவருடைய பாத கமலங்கள், அதன் நகங்கள், மின்னும் பலவித மணிகளை விட அதிக ஓளியுடையவை..  பாதாள லோக தலைவர்கள், பல ரிஷிகளுடன் ஏகாந்தமான பக்தி யோகத்தால் இவரை வணங்குகின்றனர்.  அப்படி வணங்கும் சமயம் இந்த நகங்களின் ஒளி தங்கள் முகங்களில் படுவதே மனோஹரமாக இருப்பதாக மகிழ்ந்து நோக்குகின்றனர்.   நாகராஜ குமாரிகள் வெட்கத்துடன் அவரை அங்கம் அங்கமாக ரசிக்கின்றனர்.  அங்குள்ள வெள்ளியிலான ஸ்தம்பங்களில் ப்ரதி பலிக்கும் ஒளியில் ருத்ரனின் புஜங்களில் அணிந்துள்ள வலயம் எனும் ஆபரணம் மேலும் ஒளி கூடியதாக ஆகிறது. சந்தனம், அகரு, குங்குமம், முதலிய வாசனை திரவியங்கள் மணத்தால் அந்த இடமே  நிரம்பியுள்ளது போல மயங்குகின்றனர். அதற்கும் மேல் மகரத்வஜன்  (திமிங்கிலம் அல்லது ஏதோ ஒரு கடல் வாழ் பிராணியை  தன் கொடியில் உடையவன்)  சிரிப்பில், மற்றும்  அவருடைய கருணை நிரம்பிய பார்வையில்  மயங்குகிறார்கள்.

பகவான் அனந்தன், ஆதி தேவனாக அனைத்தையும் தன்னுள் நிரப்பி வைத்துக் கொண்டிருந்த ஆதி புருஷன்,  லோக அமைதி ஒன்றே குறியாக இருந்தார்.   சுரர்கள், அசுரர்கள், உரக, சித்த, கந்தர்வ வித்யாதர, முனி கணங்கள் அனவரதமும்  தொழுத பொழுதும், சற்றும் மாறாத புன்னகையுடனே ஆசீர்வதித்தார்.  அச்சமயம் அங்கு வந்த நாரதர்  பகவானை வர்ணித்து துதி செய்தார்.

உத்பத்தி, ஸ்திதி, லயம் என்ற செயல்களை தன் பார்வையாலேயே நடத்திச் செல்லும் சங்கர்ஷணன் தான் தனியாகவே இந்த பரந்த உலகை பாலிக்கிறார். இந்த சங்கர்ஷணன் என்பதையே சாதாரண மக்களால் புரிந்து கொள்ள முடியாது.  மிருகபதியான  சிங்கம் இவருடைய பராக்ரமத்தை தானும் பெற முயற்சிக்கிறது.  சேஷன் தவிர மற்றவர்களால் இவருடைய கருணையை, சத்வ குணத்தை பாட முடியாது.  எதேச்சையாக கேட்டாலே இவருடைய மகிமையை உணர்ந்து சஹஸ்ர சீர்ஷா புருஷன் என்று வணங்கி நலம் பெறுவர். மலைகள், நதிகள், சமுத்திரங்கள் நிறைந்த சம்பூர்ண மண்டலம் இவர் சிரசில் ஒரு துகளாக தெரியும்.  அதனாலேயே அனந்தன். எனவே இவருடைய பராக்ரமத்தைச் சொல்ல யாராலும் ஆகாது.  தங்கள் விருப்பங்கள் நிறைவேற  பொது ஜனங்கள் , அரசர்கள் அனைவருமே வேண்டிக் கொள்கிறார்கள்.  அது இயல்பே.  இது, இவருக்கு, இவ்வளவு என்று விதிக்கும் வினைப் பயனையும் இவரது அருள்  மாற்றியமைக்கும் என்ற நம்பிக்கை.   

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து நான்காவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-15

அத்யாயம்-25

பரீக்ஷித் அரசன் கேட்டான்:  மஹரிஷியே, உலகத்தில் ஏன் இந்த வேறு பாடுகள்?

ரிஷி சொன்னார்: முன்று குணங்கள்.  செய்பவனின் ஈடுபாடு, அறிவு இவற்றின் பலனாக பல வழிகள்.   அனைத்துமே தனிதனியானவை. அனவருக்கும் பொதுவாக ஒன்று சாத்யமில்லை. அதனால் தார தம்யங்கள் – வேறு பாடுகள் தோன்றுகின்றன. ப்ரதிஷித்தம்- செய்யாதே என்று அறிவுறுத்தினாலும், அதர்ம காரியங்களை சிலர் செய்கிறார்கள்.  ஈடுபாட்டுடன் செய்வதிலும், அவரவர் மனப் பான்மைக்கு ஏற்ப அதிகம், மிதம், மிக குறைவு என்று பாகுபாடு தானாகவே வந்து விடுகிறது.  அறியாமலோ, விவரம் தெரியாமல் அவித்யை காரணமாகவோ, அவரவர் அறிவுக்கு ஏற்ப செய்யும் செயலின் தன்மையும் மாறுபடுகிறது. ஸ்ரூதய:? सृतयःபல தோன்றி விட்டன.

 ரிஷி சொன்னார்: மூவுலகுக்கும் தென் திசையில், பூமியை சூழ்ந்து ஜலம், அக்னி வாயு இவை இருக்கும் இடத்தில் யோகம், சாதனகள் என்று நியாயமாக வாழ்ந்தவர்கள் தங்கள் முன்னோர்கள் உடன் இருப்பார்கள்.

வைவஸ்வதன் என்ற பித்ருராஜன்,   தன்னிடம் வந்து சேர்ந்த  அந்த உயிரினங்களின், கர்மாவசேஷம், வினைபலன் எந்த அளவில் மீதமுள்ளது என்பதை தன் ஏவலர்கள் உதவியால், கவனிக்கிறார்.  தோஷம் இருந்தாலும், சட்டத்தை மீறாதவரை அனுமதிக்கிறார்.

இதன் பின் நரக வர்ணனை. ஐந்தாவது ஸ்கந்தம் இத்துடன் முடிவடைகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  ப்ரிய வ்ரத விஜயம் என்ற நான்காவது ஸ்கந்தத்தில்  இருபத்து ஐந்தாவது அத்யாயத்தின் தமிழாக்கம் ) வசன ஸ்லோகங்கள்-15

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக