பொருளடக்கத்திற்கு தாவுக

புது தில்லி – ஸ்டேஷனில் இறங்கிய அந்த பெரியவர், தன் சிறிய கைப்பையை எடுத்துக் கொண்டு வெளியே வந்தார்.  அவர் மகன் அடையாளம் எழுதியிருந்தான்.  வீட்டைக் கண்டு பிடிக்க. ஏதோ ஒரு பஸ் நம்பர் அதில் ஏறி குறிப்பிட இடத்தில் இறங்கி கடை வாசலில் நில்லுங்கள், நான் வந்து அழைத்து போகிறேன். நிச்சயம் முக்கால் மணி நேரம் ஆகும்.  போன் வசதிகள் இல்லாத எழுபதுகளில் இது தான் வழி.

பிப்ரவரி 4, 2025

ள் இல்லாத எழுபதுகளில் இது தான் வழி.

சொன்னபடி பஸ் நம்பரைப் பார்த்து ஏறினார், நியூ ராஜேந்திர நகர்  என்று சொன்னதும்  அவன் டிக்கெட்டை கொடுத்து விட்டு நகர்ந்தான். அவருக்கு கிடைத்த இடத்தில் அமர்ந்து வெளியில் நோக்கினர்.  மணி 6 கூட ஆகவில்லை இருட்ட ஆரம்பித்து விட்டது. குளிருக்கு அடக்கமான உடையை எடுத்து அணிந்து கொண்டார். பஸ் நிற்கும் இடம் வந்ததும் வெளியில் பார்த்து அந்த நகைக் கடையை அடையாளம் கண்டு கொண்டவர் இறங்கி ஓரமாக நின்றார்.

ஐந்து பத்து நிமிஷங்களுக்கு உள்ளாகவே அலுப்பும், குளிர் தாங்காமல் அமர்ந்தால் தேவலையே என்ற எண்ணமும் உந்த சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு வாலிபன் தன்  ஸ்கூட்டரை நிறுத்தி விட்டு கடைக்குள் போவான் போல இருந்தது.  அவனிடம் விலாசம் எழுதியிருந்த சீட்டைக் காட்டி இந்த இடம் எங்கே இருக்கிறது சொல்ல முடியுமா? என்றார். அவனும் உடனே அடுத்து இருந்த நால்வழி சாலையைத் தாண்டினால் இரண்டாவது திருப்பம் என்று சொல்லி விட்டு நகர்ந்தான். போய்த் தான் போர்ப்போமே, நடந்தால் குளிர் குறைந்தது போல இருந்தது. அந்த வழியே நடக்க ஆரம்பித்தார்.  அந்த ஸ்கூட்டர் நம்பர் அவர் மனதில் ஏதோ சிந்தனையை கிளப்பி விட்டது. அப்பா பிறந்த வருஷம் 1930 –  தொடர்ந்து நினைவுகள் அவரைச் சுற்றி வந்தது. போலும். சற்று தூரம் சென்றவர் அடுத்து வீடுகளே தென்படாமல் புதிதாக கட்டிக் கொண்டிருந்த வீடுகளும், காலி மனைகளுமாக இருக்க திரும்பி வந்த வழியே வந்தார். இருள் அதிகமாகி குளிரும் தாங்க முடியவில்லை.

கடை கண்ணாடியின் வழியே அதைப் பார்த்த பைக் பையன், சிரித்துக் கொண்டான். நேர் எதிர் திசையில் கை காட்டி விட்டிருக்கிறான். எதற்கு என்று அவனுக்கே தெரியவில்லை. அல்ப சந்தோஷம். அவர் திண்டாடுவதைப் பார்க்க.   உள்ளே சென்றவன் சற்று பொறுத்து வெளியில் வந்தான்.

ஒரு கார் வந்து கடை வாசலில் நின்றது. அதிலிருந்து இறங்கியவர் யாரையோ தேடினார். வாசலில் காவல் இருந்தவனிடம் ஒரு பெரியவர் இங்கு வந்தாரா, எனவும் அவனும் அவர் போன திசையைக் காட்டினான். அவரைக் கண்ட பைக் பையனுக்கு உதறல் எடுத்தது. அவன் படிக்கும் காலேஜில் அவர் சில காலம் கணினி ப்ரொபசராக இருந்தார், பின் வேறு நல்ல வேலை கிடைத்து சேர்ந்து விட்டார் என்பது வரை தெரியும் கார் வாங்கும் அளவு வசதியாக ஆகி விட்டிருக்கிறார். நானும் என் ஓட்டை வண்டியும் – பொறாமையும், கையாலாகாத தன் மேலேயே கோபமாக வந்தது. காரை நிறுத்தி விட்டு  அவர் முதியவரை தேடிக் கொண்டு சென்றார். அவரை சந்திக்காமல் வேகமாக சென்று விட வேண்டும் என்ற எண்ணம் வந்தது. வெளியில் வந்து ஸ்கூட்டரைக் கிளப்பி கொஞ்ச தூரம் போகும் முன் அது நின்று விட்டது.  உதை உதை என்று உதைத்து தன் ஆத்திரத்தை அதனிடம் காட்டினான். 

வேகமாக கடந்து சென்ற காரில் அந்த ப்ரொபசரும், தான் வழி காட்டிய முதியவரும் இருந்ததைப் பார்த்தான். அவரும் தன் வீட்டிற்கு அருகில் தான் போகிறார். முதியவரும் அவனையும் பைக்கையும் பார்த்து ஏதோ சொன்னார்.  அந்த ப்ரொபசர் எட்டிப் பார்த்தார்,  எப்படி நினைவு இருக்கும். அவனுக்குத் தெரியுமா அவன் ஸ்கூட்டரின் நம்பர் அவர் மனதில் கிளப்பி விட்ட எண்ணங்களை.  தன்னுடைய அப்பா பிறந்த வருஷம் என்று அதை வைத்து கண்டு கொண்டார் என்பதை.  .

கல்லூரியில் அவன் சேர்ந்த ஆண்டில் கணிணி என்று ஆவலாக நிறைய பேர் சேர்ந்தனர். ஆனால் அதை கற்பிக்க யாரும் முன் வரவில்லை. அந்த துறையில் படித்தவர்களுக்கு உடனடியாக நல்ல வேலை கிடைத்த காலம். பலர் வெளி நாடு சென்றனர். இன்று எதிர்பட்டவரும் அந்த ஆண்டு கணிணி மேற்படிப்பு முடித்து வேலை தேடிக் கொண்டிருந்தார் என்று நினைவு. அவர் நடை சற்று பெண்கள் நடப்பது போல இருக்கும் அதை வைத்து அந்த வயதில் பொறுப்பில்லாமல் அவரை கிண்டல் செய்திருக்கிறான்.   சக மாணவர்கள் சிரித்தது மேலும்  ஊக்கம் அளிக்க என்னவெல்லாம் செய்தோம் என்று நினைத்து பார்த்தான்.  அந்த ப்ரொஃபெசர், மூன்றே மாதங்களில் விலகி விட்டார். அடுத்து பல நாட்கள் மற்றொருவர் வரவும் இல்லை வந்தவர் இவரைப் போல் விஷயம் அறிந்தவராகவும் இல்லை.  நீ அவரை கிண்டல் பண்ணியதால் தான் அவர் விட்டு விட்டு போய் விட்டார் என்று அன்று சிரித்த மாணவர்களே அவனை குற்றம் சாட்டினர்.  தனியார் பள்ளி. மிக குறைந்த ஊதியமே கொடுத்திருக்கின்றனர். அவர் ஏன் இருப்பார்?  அவனைச் சுற்றி வந்த கூட்டமும்  குறைந்தது. அந்த முன்று மாத ஊதியமும் கல்லூரிக்கே அன்பளிப்பாக கொடுத்து விட்டார் என்றனர். யாரைப் போய் பகைத்துக் கொண்டோம் என்று பின்னாட்களில் வருந்தியது அவனுக்குத் தான் தெரியும்.

மேற் படிப்பு படிக்க தேவையான மதிப்பெண்கள் இல்லை. கிடைத்த வேலையில் சேர்ந்தான்.

மன உளைச்சல் தாங்காமல் கவனமில்லாமல்  டீவியில் யாரோ பேசிக் கொண்டிருப்பதை கேட்டான். இதுவரை சொன்னது காதில் விழவில்லை.  இதுவரை இந்த நிகழ்ச்சிகளை கேட்டதும் இல்லை.  பாகவதம் என்ற தலைப்பில்  பேசுபவர் சொல்லிக் கொண்டிருந்தார்.  

தான் செய்தது தப்பு என்று உணர்ந்தான் அரசன் பரீக்ஷித். காட்டில் வேட்டையாடி அலைந்து களைத்து தாகம் தாங்க முடியாமல் வாட்டியது. அருகில் நீரைத் தேடி சென்றான்.  ஒரு குடிலில் யாரோ ஒருவர் கண் மூடி தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா என்று கேட்டான். அவரோ கண் மூடி தவம் செய்து கொண்டிருந்தவர் பதிலே சொல்லவில்லை. அரசன், போகும் இடங்களில் எல்லாம் உபசாரமாக, மரியாதையாக பேசிக் கேட்டிருக்கிறான். இதென்ன அலட்சியம் என்று கோபம் வந்தது. கீழே மரத்தில் உலர்ந்த இலைகள் விழுந்து குப்பையாக இருந்தது. அதனிடையில் ஒரு பாம்பு செத்து கிடந்தது கண்ணில் பட்டது, ஏன் செய்கிறோம் என்று தெரியாமலே, அதை வில்லின்  நுனியால் எடுத்து அவர் கழுத்தில் போட்டான். அதன்பின் வெளியேறி எப்படியோ தன் மாளிகை  வந்து சேர்ந்தான்.  உடல் அசதி அடங்கி தாகமும் தீர்ந்தபின் நினைத்து பார்த்தால், தன் தவறு புரிந்தது.  அவர் யாரோ, தவம் செய்கிறார்.  நான் ஏன் அவர் மேல் கோபம் கொள்ள வேண்டும். என்ன காரியம் செய்து விட்டேன், நானா செய்தேன் என்று தவித்தான்.

அதற்கு மேல் கேட்க பொறுமையில்லை. ஆமாம், என்னைப் போல செய்வதை செய்து விட்டு பின்னால் வருந்துகிறான்.  விளம்பரம் முடிந்து கதை தொடர்ந்தது.  கேட்டான்.  அந்த ரிஷியின் மகன் இதை அறிந்தவன் மகா கோபம் கொண்டான். என்ன அகங்காரம். என் தந்தையின் மேல் பாம்பை போட்டிருக்கிறான். இது செத்த பாம்பு  தான், ஆனால் உன்னை உயிருள்ள பாம்பு கடிக்கட்டும். இன்றிலிருந்து ஏழாவது நாள், உன்னை தக்ஷகன் என்ற பாம்பு கடித்து உயிரிழப்பாய் என்று சொல்லி  நீரை கையில் வைத்துக் கொண்டு சாபம் இட்டான்.  வந்து தந்தையைப் பார்த்த சமயம் அவர் விழித்துக் கொண்டு இது என்ன , இதை யார் என் மேல் போட்டது என்றார். மகன் அழுது கொண்டே சொன்னான். அவன் சாபம் கொடுத்ததாகச் சொன்னதை அந்த பெரியவர் ஏற்கவில்லை.  அரசன் தாகத்தால் தவித்து வந்திருக்கிறான். அவன் இந்த நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பொறுப்பானவன். அவனுக்கு சாபம் கொடுத்தது தப்பு என்றார். உடனே அதை அரசனுக்கு தெரிவிக்கச் சொல்லி ஒருவனை அனுப்பினார்.

சுய பச்சாதாபத்தால் தவித்துக் கொண்டிருந்த அரசன் பரீக்ஷித் இந்த சாபத்தை ஏற்கிறேன். எனக்கு வேண்டும் இந்த தண்டனை. ஏழு நாட்கள் அவகாசம் கொடுத்ததே அதிகம்  என நினைத்தான்.

மேலும் கேட்க பொறுமையின்றி டீவியை அனைத்து விட்டு யோசனையில் ஆழ்ந்தான்.

படிக்கிற நாட்களில் படிக்காமல் வீணே பொழுதைக் கழித்து விட்டு பரீட்சை சமயம் படிக்க புஸ்தகத்தைத் திறந்தால் எதுவும் புரியவில்லை.  கோச்சிங்க கிளாஸ் – போனான்.  பண வசதி இருந்தது. உயர் தரம் என்று அறிவிக்கப் பட்ட இடத்தில் சேர்ந்தான். அங்கு போனால் யாரும் அவனுடன் பேசக் கூட தயாராக இல்லை. படித்துக் கொண்டோ எழுதிக் கொண்டோ இருந்தவர்கள் அவனை தவிர்ப்பதாகத் தோன்றியது.  எப்படியும் பாஸாக வேண்டும் என்று தானும் படிக்க ஆரம்பித்தான்.  இதிலும் படித்து பாஸாகா விட்டால் என்ன செய்வது என்ற பயம் தோன்றியது.  ரகசியமாக ஒரு மாணவன் ஒரு விஷயம் சொன்னான்.  ஒருவர் இவனைப் போன்ற மாணவர்களுக்காகவே ஆபத் பாந்தவனாக ஒரு உதவி செய்வார். பரீட்சை எழுதும் பொழுதே விடைகளை யாரும் அறியாமல் சொல்லித் தருவார் – பாஸ் மார்க் நிச்சயம் – மீதி நீயும் கொஞ்சம் முயன்றால் நல்ல மார்க் வாங்குவாய். 

கடலில் மூழ்குபவனுக்கு கட்டை கிடைத்து போல அவரை தொடர்புன் கொண்டான்.  அவரோ கண்ணுக்கு புலனாகாத பரமாத்மா போல இருந்தார். போனில் மட்டும் தான் பேச்சு. ஒரு நாள் தபாலில் ஒரு  சிறிய  இரண்டு பேனாக்கள் வைக்கும் பெட்டி வந்தது.  அது ஒரு கருவி- எழுத்தில் விடை வரும் – சில நொடிகளே நிலைக்கும். அதில் அவனுக்கு புரியாத கணிணி பாட கேள்விகளுக்கு பதில் மட்டும் இருக்கும்.  அதை இயக்குவது பற்றி போனில் விவரங்கள் சொன்னார். ஒரு முறை தான் அது செயல்படும். கவனமாக கையாண்டு கொள்.  

எல்லாம் சரியாகத் தான் இருந்தது.   ரிஸல்ட் வந்த பிறகு தான் தெரிந்தது. அதுவும் கை கொடுக்கவில்லை என்பது. எங்கே தவறு.  கண்டறியாத அந்த புது ஆசாமி ஏமாற்றி விட்டானா, தான் தான் சரியாக கவனிக்கவில்லையா?  மற்ற பையன்கள் அவனளவு குழம்பவும் இல்லை. யாரிடமும் நெருங்கி பழகாமலே இருந்ததால்,  எவரையும் கேட்டுத் தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. ஒரு வருடம் வீண்.

அடுத்த வருடம் தானே முயன்று படித்து புரிந்தவரை எழுதினான். தலை தப்பியது. பட்டதாரி ஆனான்.  அது போதுமா?   மேலும் கதை கேட்க திரும்பினான். முடிந்து விட்டிருந்தது.  

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக