பொருளடக்கத்திற்கு தாவுக

Rajatharangini -7 harsha charitham

ஓகஸ்ட் 2, 2025

ராஜ தரங்கிணீ – 7 வது அலை

சிவ பெருமானை துதிக்கிறார். தேவி பார்வதியுடன் இருக்கும் சிவ பெருமான் என்னை காக்கட்டும்.  சந்த்யா ஜபம் செய்பவரை தேவி சீண்டுவதாக பாடல். நான் அருகில் இருக்கும் பொழுது சந்த்யா (என்ற பெண்) எதற்கு?

அரசனாக இருப்பவன்,பூமியை பொறுமையுடனும், பெருந்தன்மையான மனதாலும், வீரர்களான   சேனைத் தலைவர்களை சக்தி வாய்ந்த  தன் புஜ பலத்தாலும்  வெற்றி கொள்கிறான்.

அரசி மறைந்தவுடன், அவள் பக்க பலமாக இருந்து வளர்த்த துங்கனும் தன் பதவியை துறப்பான் என்று எதிர் பார்த்திருந்தனர்.  சந்த்யா காலத்துடன் பகலவன் விடை பெறுவது போல. ஆனால் அவன் அனவரையும் எதிர்த்து நின்று வளர்ந்தான். படைத்தவனுடைய விளையாட்டு.  எதை, யாரால், எப்படி செய்வான்  என்பதை சாதாரண மனிதர்கள் அறியவா முடியும்?  தீரனாக முக்ய மந்திரி பொறுப்பை வகித்த சந்திரகரன் என்பவனும் கால கதி அடையவும், அவன் கை ஓங்கியது.  புண்யாகரன் என்ற செல்வந்தனின் இரு மைந்தர்கள், அலுவலகத்தை திறமையாக கவனித்துக் கொண்டிருந்தவர்களும் மறைந்தனர்.  இப்படி அனுபவம் மிக்க அரச அதிகாரிகள் இன்றி ஆன பின் வேறு வழியின்றி அரசாட்சியில் முன்  அனுபவம்  உள்ளவன் என்ற காரணத்தால் துங்களை அனுமதிக்க வேண்டியதாயிற்று.  தவிர, உயிர் போகும் முன் அரசி தித்தாவும் அவர்கள் இருவரையும் ஒற்றுமையாக இருக்கச் சொல்லியிருந்தாள்.  துங்கனும் சாமர்த்யமாக அரசாட்சி பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு அரசு கட்டிலில் அமர்ந்த சங்க்ராம ராஜனை அரசருக்குரிய மரியாதைகளுடன், அதனுடன் இணைந்த போகங்களை அனுபவித்தால் போதும் என்ற அளவில் நிறுத்தி விட்டான். அதற்கு ஏற்றாற் போல பொருத்தமில்லாத மனைவிகள் வாய்த்தனர்.  அதனாலும் அவன் பெயர் கெட்டது. 10

தித்தா நிறுவிய ஒரு மடத்தின் தலைவரான அந்தணர் தன் மகள்  லோடிகா என்பவளை அரசன் ஸங்க்ராம ராஜனுக்கு  கொடுத்தார். தொழில் வேறு, அதனால் வாழ்க்கை முறைகளும் வேறு,  அரசனாக கொடை என்பது அவனுக்கு விதிக்கப் பட்ட ஒன்று, அந்தணன் தானம் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டவன்.  சமூகத்தில் இவர்கள் இருவரும் இரு முனைகளில் இருப்பவர்கள்.  அந்த அந்தணரோ, வந்தவுடன் துங்கனை எதிர்த்து தனக்கு சாதகமாக சிலரை தூண்டி விட பரிகாசபுரத்தில் ஒரு கூட்டம் கூடியது.  சில முன்னாள் மந்திரிகளும் சேர்ந்து  கொண்டனர். அரசன் சங்க்ராம ராஜனால் சமாளிக்க முடியவில்லை. துங்கனை நீக்கு என்ற கோஷம் வலுத்தது.

தெரிந்த முரடன். அவனுக்கு பக்க பலமாக பலர் இருந்தனர். ஒரு அந்தணன் இறந்தான். அவன் உடலை துங்கன் வீட்டில் தகனம் செய்து அந்திம கிரியைகள் செய்வோம் என்று அறிவித்தான். பொய்யாக ஒரு கிணற்றிலிருந்த இறந்த ஒரு உடலைக் கொண்டு வந்து அந்திம கிரியைகள் செய்வதாக பாவனை காட்டினர்.  ஒரு துண்டு கேசத்தை எரித்து க்ருத்யா என்ற ஏவல் என்ற செயலை செய்ததாக அவள் உங்களைத் துரத்துவாள் என்று பயமுறுத்தினான். எல்லை மீறிய இந்த செயலை எதிர்பாராத அந்தணர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்த ராஜ கலசன் என்பவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.  (இப்படி ஒரு செயல் அந்தணர்கள் தங்கள் தூய்மையை இழந்தால் அவர்களுக்குள் நடக்குமாம் – ஒரு தவற்றை திருத்த  பயன்படுத்தப் பட்டு வந்த செயல், துங்கன் கையில் ஆயுதமாக ஆயிற்று – உண்மையில் அதை அவனால் செய்ய முடியாது. வெற்று பயமுறுத்தல் மட்டுமே. அதையறியாமல் பயந்து ஓடி விட்டனர்.)  மற்ற மந்திரிகள் வந்து சமாதானம் செய்தும், அந்த நேரத்தில் அடங்கிய கலகம் நீறு பூத்த நெருப்பாக இருந்து மந்திரிகளை, அரச ஆலோசகர்களை கொன்று தீர்த்தும், அவமானப் படுத்தியும் இந்த கூட்டம் தங்கள் வெற்றியைக் கொண்டாடியது. பூதி கலசன் என்ற மற்றொரு மந்திரியும் தன் மகன் ராஜகன் என்பவனோடு ஊரைவிட்டே வெளியேறி ஸூர மடம் சென்று விட்டார்.  துங்கனின் பக்கம் தெய்வம் இருந்ததோ, பரிகாச புரத்தில் ஆரம்பித்த எதிர்ப்பு அடங்கியது.  அவமானப் படுத்தப் பட்ட அந்தணர்கள் அனைவரும் வேறு தேசங்களுக்குச் சென்று விட்டனர்.

அதன் பின் குணதேவ என்ற மந்திரி அரசனிடம் பேசினார்.  பூதி கலச என்ற மந்திரி  கங்கையில் நீராடி பிராயச் சித்தம் செய்து கொள்ள சென்று விட்டிருந்தார்.  அவரையும் சமாதானப்படுத்தி வரவழைத்தனர்.

இவர்கள் அரசாட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் அரசன் சங்க்ராமன் தானே ஒற்றர்களை அனுப்பி துங்கனை கண்காணிக்கச் செய்தான்.  இதை எதிர்பார்த்தவன் போல துங்கன்  பூதி கலசனை மகனுடன் நாட்டை விட்டு விரட்டி விட்டான்.  ஒவ்வொருவராக, மகளைக் கொடுத்து அரச பதவியை அடைய விரும்பிய பிரேமன் என்ற அவள் தந்தை, மற்றொரு சந்திரகர என்பவரின் மகன்  என்று தன்னை எதிர்த்தவர்களை கொன்றோ. விரட்டியோ அட்டகாசம் செய்தான்.  அதன் பின், துங்கனும் அவன் சகோதர்களும் எந்த வித இடரும் இன்றி ராஜ்ய சுகத்தை அனுபவித்தனர்.

நதிக் கரையில் ஓங்கி வளர்ந்த அரச மரம் அந்த நீர் வளத்தால் பாதுகாக்கப் பட்டது போல பல காலம் நிலைத்து இருக்கும். வெள்ளம் வரும் வரை. வெள்ளம் கரையை அரிக்கும் சமயம் அதே நீர் மரத்தடி மண்ணை கரைத்து மரத்தை விழச் செய்யும்.  அதே போல, துங்கன் சில காலத்திலேயே தான் தன் திறமை என்று  மக்கள் மனதில்  ஏற்படுத்தியிருந்த நல்லெண்ணம் மறைந்தது.  தனக்கு உதவியாக அவன் நியமித்த காயஸ்தன்-  பத்ரேஸ்வரன் என பெயர் கொண்டவன்,  சமூகத்தில் கீழ் மட்டத்து வியாபாரி, மாட்டுச் சாணி, விறகு முதலியவை விற்பவன், சமயத்தில் மாமிசத்துக்காக விலங்குகளை வெட்டும் குலத்தவன், அவனை வீடுகளில் தோட்டக் காரனாக பயன்படுத்தி வந்தனர்.  அவன் தானே ஒரு தடிமனான கம்பளத்தை போர்த்திக் கொண்டு அரச அலுவலகத்தில் நீர் நிரப்பவும், எடுபிடி வேலைகளைச் செய்பவனாகவும் நுழைந்து கொண்டான்.  மந்திரிகளையும், ஆலோசகர்களையும், கற்றறிந்த அறிஞர்களையும், தன் மனம் போன போக்கில் பந்தாடிய துங்கன் இவனிடம் ஏமாந்தான். 

அரச பொறுப்பில், வரவு செலவுகளை நிர்வகிக்கும் பொறுப்பை இவனிடம் ஒப்படைத்தான். அறிவோ, அனுபவமோ, குணமோ இல்லாதவன் வந்த உடன் முதல் காரியமாக, தெய்வ காரியங்கள், பசுக்களுக்கான செலவுகள், எளிய ஏழைகளுக்கான உதவித் தொகைகள்,  அனாதைகள் பாதுகாப்பு, அந்தணர்களுக்கான சன்மானங்கள், விருந்தினர் வருகைக்கான செலவினங்கள்,  அரசனுடைய அந்தரங்க உறவினரின் சலுகைகளைக் கூட நிறுத்தி விட்டான்.  காபாலிகன் என்று சவத்தின் மேல் ஆடும் கொடூரன் கூட தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாப்பான். இவன் அதையும் விட்டான்.

சித்திரை மாதம் இவனை நியமித்தான், ஆடி மாதம் துங்கனின் சகோதரன் சுகந்தீசிஹ  என்பவன் மடிந்தான். முழு பொறுப்பையும் ஏற்று சிறப்பாக நிர்வகித்த சகோதரன் இறந்தது, கை ஒடிந்தது போல, தானே தன்னை இழந்தவன் போல ஆனான்.

 (Mahmud மாமூது உடன் நடந்த போரில் அந்தபாலன் என்ற அரசன் தோற்றான்.  என்னை வெற்றி கொண்டவன், மற்றொருவன் உன்னை வெற்றி கொள்ள விட மாட்டேன். என் படையை அனுப்புகிறேன். அல்லது என் மகன்  திரிலோசனபாலன்  இதே போல இரண்டு பங்கு படையுடன் வருவான். ஒரு சேனை -5000ம்குதிரை வீர்கள், 10 ஆயிரம் காலாட்படையினர், 10 யானைகள் படை கொண்டது. திரிலோசனபாலன் முகம்மது அரசருடன் நட்பையே விரும்பினான்- ரஞ்சித் சீதாராம பண்டிட்)

அந்த சமயம் பிரபலமாக இருந்த ராஜபுத்திர அரசன்  திரிலோசனபாலன்- காபூல்-காந்தார தேசங்களை ஆண்ட வம்சம். துருக்கிய குஷாண் வம்சத்தினருடன் போரிட்டவர்கள்.  காஸ்மீர அரசன்  சங்க்ராம ராஜனை  உதவிக்கு அழைத்தான். அரசன் துங்கன் தலைமையில் ஒரு படையை  அதே ஆண்டு மார்கழி மாதம் அனுப்பினான். அவர்கள் ராஜபுத்திரர்களின் பெரும் படை பல உயர் அதிகாரிகள், சேனைத் தலைவர்களுடன் புறப்பட்டது.

ஊருக்குள் வந்த பின் ஐந்தாறு நாட்களுக்குப் பின் சாஹி என்ற அந்த தேசத்து அரசன் வந்து பார்த்தான். துருக்கர்களுடன் போரிடுவது சுலபமல்ல.  உள்ளபடி எப்படி போரிடுவது என்பதை அறிந்து கொண்டு செயலில் இறங்கு. அது வரை  அந்த மலையடிவாரத்தில் காவல் இரு என்றான்.  பெரும் படை வீர்களுடன் போரிடும் உத்வேகத்துடன் வந்திருந்த துங்கனுக்கு அது ரசிக்கவில்லை.  திருலோசனபாலன் சொன்ன இந்த ஆலோசனையை புறக்கணித்து, உடனடியாக போர் புரியவே விரும்பினான்.  ராஜ்யத்தில் இரவு வேளையில் காவல் இல்லை. தற்காப்பு படைகளோ, எதிர்பாராத தாக்குதல்களை முறியடிக்க திட்டங்களும் இல்லை என்பதை குறித்துக் கொண்டான்.

ஹம்மீரா – போர் வீரன்   –  சிறிய படையுடன் ஒரு போர் வீரனை துருக்க அரசன் அந்த இடத்து இயற்கை அமைப்புகளை ஆராய அனுப்பினான். துங்கன்  தௌஷீ என்ற நதிக் கரையில்  அந்த படையை  முறியடித்து விட்டான்.   இதையறிந்தும், அவனுடைய திறமையை புரிந்து கொள்ளாமல் திரிலோசனன் முன் சொன்னபடியே பொறுத்து இரு, புரிந்து கொண்டு செயல் படுவோம். எதிரியின் பலம் தெரிந்து கொள்வோம் என்றான்.   திரும்பத் திரும்ப இதையே சொல்கிறான், அவன் போர் புரிந்த அனுபவன் உடையவன் என்று எண்ணாமல், துங்கன் போர் வெறியிலேயே இருந்தவன் அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 

ஒருவனுடைய முடிவு நெருங்கி விட்டதால், தானே ஆபத்தின் அருகில் வேகமாக போய் கொண்டிருப்பவன்,  அந்த நிலையில் என்னதான்  நல்ல அறிவுரை என்றாலும் அவன் காதில் ஏறாது என்பது அனுபவ பூர்வமான செய்தி.

விடிந்தவுடன் துருக்க சேனத் தலைவன் பெரும் கோபத்துடன்  வந்து தந்திரமான செயல்களும், அதர்மமான போர் முறைகளாலும் அடிக்க ஆரம்பித்தான். போர்க்கலை அறிந்தவன்.   திடுமென துங்கனின் படை சலசலத்து பிரிந்தது. எல்லையின்றி பரவியிருந்த  சாஹி சைன்யம் சிதறியது.  எதிர்பாராத தாக்குதல்.  சாஹி சைன்யம் புறமுதுகிட்டு,  கலைந்தாலும் அதன் பின்னும் ஜயசிம்ஹன் தொடர்ந்து போராடினான்.  தாமர சங்க்ராமனின் வழி வந்தவர்களான ஸ்ரீவர்தனனும் விப்ரமார்கனும் தங்கள் நாட்டின் பெருமையை நிலை நிறுத்த போர் முனையில் தங்கள் வீரத்தைக் காட்டினர்.  ஸ்ரீ திரிலோசன பாலன் அன்றைய போரில் எதிரி படையுடன் போரிட்டதை வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது என்பது போல அந்த பெரும் எதிரிபடைக்குள் புகுந்தவன் அபாரமாக  போர் புரிந்தான். கல்ப முடிவில் முக்கண்ணன் சிவ பெருமான் கையில் தீப்பிழம்புடன் போரிட்டது போல இருந்ததாம்.  தாய் நாட்டின் பெருமையை காக்கவே முனைந்து இருந்தனர்.

சாரி சாரியாக வந்த எதிரிகளின் கணக்கற்ற கவசம் அணிந்த வீரர்கள் – அவர்களை எதிர்த்து நின்ற        ஸ்ரீ திரிலோசனன்  ஒரு நிலையில் தப்பி விட்டான். அவனைத் தொடர்ந்த அவன் வீரர்களும் கண்ணுக்கு எட்டாத தூரம் செல்லவும் இருள் பரவவும் சரியாக இருந்தது,    புயல் காற்று தாக்கிய புற்றிலிருந்து ஈசல்கள் விழுந்து கிடப்பது போல போர்க் களம் குப்பையாக மனித, மிருக உடல்களும் ஆயுதங்களுமாக காட்சி அளித்தது. முகமதுவின் வீரன் ஹம்மீரனால் வெற்றியை ருசிக்க இயலவில்லை. உடல் முழுவதும் காயம், ரத்தம் ஆறாக பெருகி ஓட, ஸ்ரீ திரிலோசனின் வீரத்தை வியந்து கொண்டிருந்தான்.   இதற்குள் திரிலோசனன், தங்கள் யானைப் படையை தயார் செய்து கொண்டு, திரும்ப போரிடத் தயாரானான்.   ஹம்மீரன் வெற்றி பெற்றதாக நினைக்கவில்லை. ஸ்ரீ த்ரிலோசனின் சௌர்யம்- உடல் வீரமும் மன ஆற்றலும் இணைந்த போர் திறமை-  அமானுஷம் – மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்றே நினைத்தான்.  அதனால் எதிர்த்து நிற்காமல் திரும்பினான்.

தேவையின்றி வெளி தேசத்திலிருந்து வந்து போர் முற்றுகையிட்ட துருக்க வீரர்களை ஓட ஓட விரட்டியவன், அவன் சாகசமும், செயற்கரிய செயல்களும் போற்றப் பட வேண்டியவை.  முழு விவரங்களும்  சொல்ல சரித்திர ஆசிரியர்கள் மறந்து விட்டனரா, சாதாரண சிறு குறிப்பு மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்று கவி அங்கலாய்க்கிறார். சமயோசிதமாக செயல் பட்டு, நாட்டின்  பெருமையைக் காக்க உயிரைக் கொடுத்த வீரன்.    கனவிலும் நினைக்க முடியாத வீரச் செயல்கள்.  வசதிகள் குறைந்த அந்த நாட்களிலேயே தான் ஒருவனாக சாதித்த பெருமை உடையவனாக இருந்தான். வெறும் மனித யத்தினத்தால் முடியாது தெய்வம் துணையிருந்தால் மட்டுமே செயற்கரியன செய்ய முடியும்.  அவர்களே பெரியோர்கள்.  சாஹி வம்சத்தினரின் ராஜ்யமும் – ராஜ புத்திரர்கள்- வெகு தூரம் பரவி இருந்திருக்கிறது. காந்தார, காபூல்- இணைந்த தேசம். சங்கரவர்மன் காலத்தில் செழிப்பாக, நல்ல முறையில் பரி பாலிக்கப் பட்ட தேசத்தின் வரலாறு மிக் குறைந்த அளவிலேயே சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பதும் வருந்த தக்கது என்பது கவி கல்ஹணாவின் கருத்து.  கிடைத்த அளவு விவரங்களே அறிஞர்கள் வியக்கும் அளவு உள்ளதாம். சாஹி தேசம், அரசர்கள்.  மதி நிறைந்த மந்திரிகள், அரசனுடைய உள் நாட்டு வெளி நாட்டு அரசியல் அறிவு, பொதுவாக ராஜ்ய பரிபாலனம் பிரஜைகளின் நன்மையே குறிக்கோள் என்பது போன்ற ஆட்சி இவைகள்  நன்றியுடைய பிரஜைகளின் எழுத்துக்களில், நாட்டுப் பாடல்களில் இன்றளவும் நினைக்கப்படுகின்றன.

துருக்கர்களை விரட்டி அடித்த பின், தன்னளவில் எதுவும் சாதிக்காமல் தோற்றதாக எண்ணி மனம் ஒடிந்த துங்கன், நினைக்க நினக்க வருந்தி பொருமினான். நரியை விரட்டுவது போல விரட்டப் பட்டேன். அதனால் எழுந்த கோபத்தை யாரிடம் காட்ட முடியும்?  மெள்ள தன் ஊரை நோக்கி வந்தான்.  ஸ்ரீ திரிலோசனின் குணத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தைரியம் என்றால் அதுதான் – நாம் எதற்கு வருந்த வேண்டும் என்று சமாதானம் செய்து கொண்டாலும் எதனால் தனது தோல்வி என்றும் யோசித்தான். அடிமைத்தனம்- என சொந்த பொருளா, பசுக்கள் போல விரட்ட விரட்ட ஓடியவன் தானே. துங்கனின் மகன் கந்தர்ப சிங்கனும் ஸ்ரீ திரிலோசன அரசனை மிக்க மதிப்புடன் நினைத்தான்.  அரசனாக இருந்தால் அந்த அளவு சௌர்யம் இருக்க வேண்டும்.  இப்படி புகழ்ந்து பேசிய மகனை அசூயையுடன் பார்த்தான்.

துங்கனின் சகோதரன் விக்ரஹராஜா, தன்னளவில் வேறு விதமாக யோசித்துக் கொண்டிருந்தான். ராஜா, எப்படி ஆட்சி செய்கிறான், அவனுடைய பலவீனம் என்ன என்று விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான்.  தானே  அனாமத்து கடிதங்களை எழுதி துங்கனுக்கு எதிராக ஆக்கி விட்டான். அரசனோ, தாங்கள் இருவருமாக சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டதை நினைத்து எதுவும் துங்கனுக்கு விரோதமாக செய்யத் துணியவில்லை.  கொல்வது எப்படி? உடன் பிறந்தவர்கள் போல வளர்ந்தவர்கள். அப்படியே வாழ்ந்தவர்கள். இதுவரை இருவரிடையில் எந்த ரகசியமும் இல்லை. அப்படி இருக்க  திடுமென அவன் மறைந்தால் என்ன செய்வோம்.    

அவன் மகனுடன் போய் இருக்கிறான். திரும்பி வரட்டும். என்று சொல்லி  காலம் தாழ்த்தினான்.    ஒருவேளை இந்த செய்திகள் உண்மையானால், அதே அளவு அவனும் என்னிடம் சந்தேகப்பட்டால், இந்த அளவு யோசிக்க கூட மாட்டான். என் மரணம் நிச்சயம்.  என்றான்.   இப்படி யோசித்து யோசித்து விதை போல மனதில் விழுந்த சந்தேகம் நாளடைவில் வளர்ந்து மரமாகி விட்டது.

அரசனின் சொல் விக்ரஹராஜாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த பயத்தையே  பெருக்கும் விதமாக திட்டம் தீட்டினான்.   உடன் இருந்தவர்களுடன் அது போன்ற ஒரு காட்சியை செயற்கையாக அரசன் அறியாமல் செய்து விட்டிருந்தனர். 

ஆறு மாத காலம் மெள்ள பிரயாணம் செய்தபடி துங்கன் வந்து சேர்ந்தான்.  ஐந்து மெய்க் காப்பாளர்கள், மற்றும் மகனுடன் அரச சபைக்கு வந்தான்.  பின்னாலேயே வந்த பர்வ,சர்காரகா என்ற சகோதரர்கள், அரசன் எதுவும் பேச ஆரம்பிக்கும் முன் தங்கள் வாட்களால் இருவரையும் அடிக்கலாயினர்.

இதைக் கண்டு திடுக்கிட்டாலும் மகாரதன் என்ற மந்திரி, பரம்பரையாக அரச சபையில் இருந்த மந்திரிகள் வம்சத்தில் வந்தவர், கையில் ஆயுதம் இல்லாமலே, துங்கனை காப்பாற்ற விரைந்து வந்தார்.  துங்கனின் முன் நின்று வாளால் அடிபடும் முன் தடுத்து விட்டார்.  முதல் அடியில் துங்கன் திகைத்து மூச்சே வராமல் இருந்தவனை கண்ட அரசன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

ஆஸ்தான மந்திரி தர்மன் என்பவன்,  துஷ்டனான பார்தா, கங்கன் என்ற மற்றொருவன்- இவர்கள் அனைவரும் துங்கனுக்கு அணுக்கமாக இருந்தவர்களே.அந்த சமயம் துங்கனின் மகன் அருகில் இருந்தும், கையில் ஆயுதம் இருந்தும் பயந்தவர்களாக.செய்வதறியாது, குலை நடுங்க,  மனம் கலங்க,  பேசாமல் நின்றனர்.    அரசன், துங்கனின்,  அவன் மகன் இருவரையும் தலையைச் சீவி, கோட்டைக்கு வெளியில் எறிய ஆணையிட்டான்.  அதன் பின் துங்க ஆதரவாளர்கள் சிலரை தண்டித்தான். மேலும் சிலர் தாங்களே வெளியேறி விட்டனர்.  அவர்களில் ஒருவன் துங்கனுடன் போர்க் களம் சென்றவன், அவனுடைய அசராத போர் முறைகளை கண்டு வெகுவாக மதிப்பு உடையவனாக இருந்தான்.  ஒரு மந்திரிக்கு, அந்தண மனைவியிடம் பிறந்தவன், புஜங்கன் என்ற பெயருடைய துங்கனின் சேவகன்,  சங்க்ராம அரசனை துரத்தி அடித்தான். தலை நகரம் முழுவதும் வீட்டுக்கு வீடு ஓடி ஒளிய முன்றவனை  தான் ஒருவனே இழுந்து வந்து அடித்தான்.  அரச சபையில் இருந்த காவல் இருபது வீரர்களை அடித்து நொறுக்கி விட்டான். பொக்கிஷ அதிகாரியாக இருந்த த்ரைலோக்ய ராஜா, கய்யன் மந்தகன் என்ற இடத்தில் வசித்து வந்த அபினவா என்ற போர் வீரன்.  அந்த ராஜ சபையில் துங்கனுடைய பாதுகாப்புக்காக ஏகாங்கா- எனப்படும் மெய்க் காப்பாளர்கள் முப்பது பேர் இருந்தனர்.  அவர்களும் புஜங்கனுடன் சேர்ந்து துங்க விரோதிகளை அழிப்பதில் தங்கள் உயிரைக் கொடுத்தனர். 94

அந்த கூட்டத்தில் இருந்த பத்மராஜன் என்பவன் மட்டும் தான் உயிர் பிழைத்தான். அவனும் மனம் தாங்காமல், தீர்த்த யாத்திரை கிளம்பி விட்டான்.  மீதி இருந்த சபையினர் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்து அரச சேவகமே வேண்டாம் என அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று விட்டனர்.  சண்டா என்பவன் குறி தவறாமல் அடிக்க கூடியவன். அர்ஜுனன் மத்ய தேசத்திலிருந்து வந்தவன்,  டாமரன் ஹேலசக்ரன் மூவரும் ஆயுதங்களை கீழே வைத்தவுடன் புரட்சி செய்தவர்களால் கொல்லப் பட்டனர்.  துங்கனுடைய வீட்டை ஸூறையாடினர்.   

ஆஷாட மாதம், வளர் பிறை துவாதசியன்று, துங்கன், அவன் மகன் இருவரையும், உள்ளுக்குள் இருந்து ஸூழ்ச்சி செய்த துரோகிகளின் பேச்சைக் கேட்டு நம்பிய அரசனால் கொல்லப் பட்டனர். துங்கன் தன் சமயோசிதமான செயல்களால் அறிவும் அனுபவமும் பெற்றவனாக  இருந்தான்,  உடன் இருந்து முதுகில் குத்தும் ஈனச் செயலை செய்பவன் அல்ல.  மகன் அவனுடன் இருந்து அறிந்து கொண்டவனாக அதிக அனுபவம் மிக்கவனாக வளர்ந்திருந்தான்.  இவர்களை தங்கள் சுயனலத்துக்காக ஏமாற்றி வதைத்த கயவர்கள் கையில் அரசாட்சி சென்றது.

நாகன் என்ற துங்கனின் சகோதரன் சேனைத் தலைவன் ஆனான். அரசன் சங்க்ராம ராஜன் மனதை கலைத்து, தன் சகோதரனையே கொலை செய்து,  பல தவறான நடவடிக்கைகளால் மக்களின் கோபத்துக்கும் ஆளானவன், தன் குடும்பத்தையே அழித்தவன், அரசாட்சியை கைப்பற்றினான். க்ஷேமா என்ற கந்தர்பசிங்கனின் மனைவியை  பலவந்தமாக தனக்கு அடி பணியச் செய்தான்.  நாலே நாட்களில், அந்த துங்கனுடைய மருமகள், சாஹி அரசனின் மகள் தீக்குளித்தாள்.

கந்தர்பனுடைய முதல் மனைவியிடம் அவனுக்கு விசித்ர சிம்ஹன், மாத்ருசிம்ஹன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர்.  மம்மா என்ற அவர்கள் தாயார், மகன்களையும், துங்கனின் மற்றொரு ,மனைவி மங்கானா என்பவள்- அவளையும், அவளை அங்கு விட்டு வைத்தால் தனியாக தவிப்பாள் என்பதால் -அழைத்துக் கொண்டு ராஜபுரி என்ற ஊரில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாள்.

துங்கனின் இடத்தில் பத்ரேஸ்வரா வந்தான். கோவில்களை கொள்ளையடித்தவன்.  பூதேஸ்வர ஆலய பொக்கிஷங்களை திருடியவன்.  மற்றொரு பதவிக்கு தகுதியற்றவன் என்று தெரிந்தும் பார்த்தாவை நியமித்தான்.  தீய எண்ணங்களே உருவானவன், செய்வதெல்லாம் தீதே எனும்படி இருந்த வெறுக்கத்தகுந்த மனிதன் அவனையும் அவனைச் சார்ந்தவர்களுமே சாஜ சபையில் அதிகாரிகளாக அமர்த்தப் பட்டனர். இந்த அரசனின் புத்தியை என்ன சொல்வது?  சகோதரன் மனைவியையே அபகரித்தவன்,  துஷ்டன் என்று நாட்டு மக்கள் தூற்றுவர்.  அவன் நகராதிபனாக வலம் வந்தான். கொலை  கொள்ளை எதையும் விடவில்லை.  கூட்டம் கூட்டமாக மக்களை அடித்து வதம் செய்தான். எந்த நல்ல செயல் என்று அவனுக்கு அந்த பதவி?  தம்பத்துக்காக  பவித்ரமான ப்ரவரேஸவரனின் சன்னிதியில் ரங்க பீடத்தில் – கருவறை நுழைந்தான்.   மந்தங்கா என்ற சிந்துவின் மகன், கஞ்சன், அவன் பொக்கிஷ அதிகாரியாக ஆனான். அவனால் ஆனது மக்களிடம் வரி என்ற பெயரில் முடிந்த வரை கறந்தான். தின்பண்டம் விற்பவன், தேவமுகன் என்பவன், சந்திரமுகன் என்பவனை அரசன் கொண்டாடி அருகில் வைத்துக் கொண்டான். அவன் வியாபாரம் செழித்தது. கோடீஸ்வரனாக ஆனான்.  அரசன் அருகில் இருந்து உபாயனம்- அன்பளிப்பு என்ற பெயரில் காண வருபவர்கள் கொடுத்த பொருட்களை விற்று தனக்கு எடுத்துக் கொண்டான்.  வலுவான உடல் வாகுடையவன், பசித்தால் வேண்டிய அளவு தானே உண்பான், அதற்கு ஏற்றபடி இந்த இடத்தில் ஏன் கேட்பாரின்றி உண்டு கொழுத்தான். ஒரு நிலையில் உடல் நிலை ஏளனத்துக்கு உரியதாக ஆகியது.  செய்த பாபங்களுக்கு பரிகாரமாக சாகும் பொழுத்து ரனேஸ்வர கோவிலுக்கு தன் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடையாக அளித்தான். அவன் புதல்வர்கள் துங்கன் இருந்த பொழுதே சேனையில் உயர் பதவிகளில் நியமிக்கப் பட்டிருந்தனர்.  மக்கள் இவர்களுக்கு கிடைத்த பதவிகளைப் பற்றி தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.  காதில் அணியாக,   பொன் அணியும் இடத்தில் ஒரு கோதுமையை உமியுடன்   வைப்பது போல என்று உதாரணம்.  அறிவில்லாத அரசன் துருக்கன் நாட்டை முற்றுகையிட்ட பொழுது இவர்களை அனுப்பினான். அலறி அடித்துக் கொண்டு திரும்பி வந்தவர்கள், தங்கள் சொந்த ஊருக்கே போய் சேர்ந்தனர். 118

திறமையில்லாத அதிகாரிகள், அவர்களைத் தட்டிக் கேட்க இயலாத அரசன், கீழ்நிலை அலுவலகர்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.  அவர்களும் டாமர தலைவர்களும் சேர்ந்து கொண்டு கலகம் செய்யலாயினர்.  அரசனின் மகள் லோடிகா என்பவள்  லோடிகா மடம்  என்பதை நிர்மாணித்தாள். தாயார் திலோத்தமா என்ற பெயரில் மற்றொரு மடமும் எழுந்தது.  அரசன் சங்க்ராமன்  குடும்பத்திலும் ஒருவள் இப்படி குணவதியாக இருந்து, மக்களுக்கு நன்மை செய்தாள்.  பத்ரேவரனும், ஒரு விஹாரம் என்பதை அமைத்தான்.  ஒரு நல்ல காரியம். இந்த அளவு கூட அரசன் சங்க்ராமன் செய்யவில்லை. கால் நடைகளுக்கான நீர்த் தொட்டி கூட கட்டவில்லை.

புகழ் பெற்ற யசோமங்கலா என்பவரின் மகள், ஸ்ரீலேகா என்பவளுக்கு வாய்த்தவன்  எந்த விதத்திலும் சாமர்த்யம் இல்லாதவனாக இருந்தான்.  சுகந்தீசீஹன் – துங்கனின் சகோதரன், ஜயலக்ஷ்மி என்ற மகளிடம் பிறந்த வல்லபன் என்பவன் அவளைக் கவர்ந்தான்.  கூர்மையான அறிவும், பேச்சுத் திறமையும் உடையவனாக, தானே ஜயகரகஞ்சா- ஜயகர என்ற பெயரில் பணத்தை சேமித்து வைக்கும் இடம்- என்பதை ஆரம்பித்தான்.  ஜயகர என்பவனும் ராணி ஸ்ரீ லேகாவின் அன்புக்கு பாத்திரமானான்.

நாலாம் ஆண்டு, ஆஷாட மாதத்து முதல் நாள், தன் மகன் ஹரி ராஜா என்பவனுக்கு பட்டம் சூட்டி விட்டு, சில நாட்களில் அரசன் சங்க்ரமரஜா மறைந்தான்.   1028 AC

ஹரி ராஜா வந்தது வசந்த காலம் வந்து விட்டது போல மக்கள் மகிழ்ந்தனர்.  அவனை வளர்த்தவர்கள் நல்ல பண்புடைய பெரியோர்கள்.  அறிவும், உத்சாகமும், புதியன செய்வதில் ஆர்வமும் உடையவன், அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தான்.   நாலா திசைகளிலும் பரவும் மலர்களின் மணம் போல அவனுடைய நல்லெண்ணமும் செயல் திறமையையும் அனைவரும் உணர்ந்தனர்.

மீற முடியாத கட்டளைகள் பிறப்பித்தான்.  திருட்டு என்பதை ஒழிக்க, கடைவீதிகளில் இரவு கடைகளை மூடுவதை தடைச் செய்தான்.   நிலவு உதித்தால் தோன்றும் புத்துணர்வுன் இவனது ஆட்சியில் தோன்றியதாம்.  அரண்மனை அதிகாரிகள் தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்ய முடிந்தது. குறிக்கீடுகள் அறவே நின்றன. இருபத்து நான்கு நாட்களே நீடித்த இந்த அரசு  அதே ஆஷாட வளர்பிறை எட்டாம் நாளே முடிவடைந்தது.  பிரகாசமாக வேணிற் கால நடு இரவில் சிமிட்டும் தாரகை போல மக்கள் மனதில் நிலைத்தவனாக திடுமென மறைந்தான்.  அரிதாக  உலகில் பிறக்கும் மிகச் சிறந்த மனிதர்கள்  அதிக நாள் வாழ்வதும் இல்லை. வேணிற்காலத்து நடு நிசியில் மேகங்கள் இல்லாத வானத்தில் பளீரென்று ஒளி வீசும் தாரகை போன்றவர்கள்.

அவன் தாயே, அவளுடைய தவறான வாழ்க்கை முறையை  எதிர்த்ததால், மகன் என்றும் பாராமல் தீவினை வைத்து கொன்று விட்டாள் என்று வதந்தி.   1028 AC

அடுத்து,   ஸ்ரீலேகா  என்ற ராணி, தான் ராணியாகப் போவதாக நினைத்து, நீராடி பட்டாடைகள், ஆபரணங்கள் அணிந்து கொண்டு வரும் முன், மெய்க்காப்பாளன் ஒருவனுடைய சகோதரன் சாகரன் குழந்தையை வளர்த்த தாத்ரீயின் மகன்  அனந்தா என்ற சிசுவை பட்டம் கட்டி அரியணையில் அமர்த்தி விட்டனர்.  1028-1063 AC

ரத்னம் பாம்பின் தலையில் இருக்கும் . மிகவும் சிரமப்பட்டு அதை வளர்த்தவன், கண் முன்னே மற்றவன் அபகரித்து விட்டால் எப்படி இருக்கும்?  அரசியின் நிலை அது தான். மகன் என்றும் பாராமல் கொலைக்கே துணிந்தவன் ராஜ்யம் கைவிட்டுப் போனால் அப்படி இருந்தது.  பேராசை. அரசியாக வாழ விரும்பியவள், ஒரு சாதாரண தாயாக கூட இல்லாமல் மகனை கொல்லச் செய்தது.

அதே சமயம், விக்ரஹராஜா என்ற  வயதான தந்தை வழி உறவினன்,  இளவரசன் மறைந்ததைக் கேட்டு லோஹாராவில் இருந்தவர், அவசரமாக  வந்தார். தானே அரியணையில் அமரப் போவதாக கிளம்பியவர்  வந்து சேர இரண்டரை நாட்கள் ஆகி விட்டன.  ஸ்ரீ நகரத்தில் தன் படைகளுடன் வந்து சேரவும், ஸ்ரீலேகா அனுப்பிய அவளுடைய படைகள் வழியிலேயே லோதிக மடம் என்பதில் எதிர் மறித்து, தங்கியிருந்த  மடத்துக்கு தீ வைத்து விட்டனர். 141

தன் வாழ் நாளில், இரண்டு மடங்களைக் கட்டி  ஒன்று தன் கணவன் பெயரில் மற்றது தன் மகன் பெயரில் என்று பிராயசித்தம் போல செய்து விட்டாள்.  அவை தவிர அரசியாக  ஆடம்பரமாக தன் விருப்பம் போல வாழ்ந்தாள்.   அவள் மகனும் அடுத்த பட்டத்துக்குரிய இளவரசனும், கர்பேஸ்வரன்- கருவிலேயே திரு உடையவன் – பிறக்கும் முன்பே அரசனாக அறிவிக்கப் பட்டவன்-  அதே குணங்களுடன் வளர்ந்தான்.  சாஹி வம்ச  ஒரு இளவரசனும், ருத்ரபாலன் என்பவனும்   அவனுக்கு நண்பர்களாக ஆனார்கள், ஏராளமான ஊதியம் கொடுத்து அவர்களை அரசவையில் பணிக்கு அமர்த்தினான். தானும் தாராளமாக செலவழித்தான். அப்படியும் ருத்ர பாலன் அமைதியாகவில்லை. தித்தாபாலன்,  எதுவும் செய்ய இலயாத நிலையில் பரிதவித்தான்.  ருத்ர பாலனின் அடியாட்களாக இருந்த அரசு அதிகாரிகள் பிரஜைகளை கசக்கி பிழிந்தனர்.   ருத்ரபாலனுக்கு நாட்டில் இருந்த அனைத்து தீய சக்திகளும் உற்ற நண்பராயினர்.  (ருத்ரபாலன் முதலான ஐவர்-துங்கன் சாஹி அரசனுக்கு உதவச் சென்ற சமயம் நண்பனானவர்கள்).  உத்பல என்ற மூத்தவன் மட்டும் கண் தெரியாதவர்களுக்கான ஒரு ஸ்தாபனத்தை கட்டிக் கொடுத்தான்.  அரசு பதவியை ஏற்ற  அனங்கபாலன் அசுர குணம் கொண்டவனாக இருந்தான்.   எந்த கோவிலில்  தேவ, தேவிகளின் எந்த பொற் சிலையை உடைக்கலாம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தானாம்.

(முதன் முதலில் சிலையை உடைப்பவனாக அனங்கபாலன் வரலாற்றில் அறிமுகம் ஆகிறான். அரசன் ஹர்ஷன் வந்த பின் தான் அதை எதிர்த்து சிலைகளுக்கு பாதுகாப்பாளராக இருந்தார் என்று சரித்திரம்)

ஆசாமதி என்ற நிலவு போன்ற முகம் உடைய பெண்ணை அவள் அழகுக்காக மணந்திருந்தான்.  பின்னர், ஜலந்தர தேசத்து அரசனின் இந்து சந்திரா என்பவரின்  அழகிய மகளை  அரசன்  அனந்ததேவன்  மணந்தான்.  இந்து சந்திரா  திரிபுரேஸ்வர என்ற இடத்தில் ஒரு பௌத்த மத மடத்தை மகள் பெயரில் கட்டியிருந்தார்.   பின்னர் இளையவளான ஸூர்யமதி என்பவளையும் மணந்தான்.

ருத்ர பாலனை அருகில் வைத்துக் கொண்டது துரியோதனன் கர்ணனுக்கு இடம் கொடுத்ததை ஒத்து இருந்ததாம்.  அரசன் காதில் அவன் ஓதுவது  அனேகமாக தவறான செய்கைகளாகவே ஆகும்.

த்ரிபுவன என்ற சேனைத் தலைவன், தாமரர்களை அடக்கி அவர்கள் உதவியுடன் இந்த (அனந்த தேவ) அரசனை வீழ்த்த முற்றுகையிட்டான்.  மெய்க் காப்பாளர்கள் தவிர மற்ற போர் வீரர்கள் அனைவரும் அவன் வசம் ஆகி விட்டிருந்தனர்.  கவசங்களை அணிந்து அனந்த தேவன்  எதிர்த்து நின்று போரிட்டான்.  ஆனால் உடல் வலு இல்லாதவன்.  வாய் வழிய உதிரம் பெருக விழுந்தான். ஆயினும் வாளினால் தாமரர்களின் ஈட்டியை வீழ்த்தியதைக் கண்ட திரிபுவனன் திகைத்தான். எதிர்ப்பே இருக்காது என்று எண்ணி வந்தவன், சிறுவனின் பராக்ரமத்தின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் பின் வாங்கினான்.  ஸமால தாமரன், அபினவ என்பவன், சாலாஸ்தலம்  என்ற அவர்கள் ஊரில் பிரபலமான வீரர்கள்.  சமயோசிதமாக செய்த அமோகமான வீரச் செயல்.  தாக்க வந்தவர்களை பயமுறுத்தி ஓடச் செய்தவன். உடல் முழுவதும் காயமும், பெருகிய உதிரமுமாக பைரவ அவதாரம் போல இருந்தானாம். விழுந்து கிடந்த மெய்க் காப்பாளர்கள், ஏகாங்க படையினர்- அடிபட்டு கிடப்பதைப் பார்த்து மனம் வருந்தி அவர்களுக்கு சிகித்சை செய்யவும், ஓய்வு எடுக்கவும், ஊதியத்துடன் விடுப்பு கொடுத்து அனுப்பினான். அதன் பின் உயிரைக் கொடுத்தும் அரசை காப்பதாக உறுதி எடுத்துக் கொண்ட ஏகாங்க வீர்களுக்கு பல விதமான நிதி உதவிகளைச் செய்தான்.  ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து பாராட்டினான்.  அக்ஷபடலம் என்ற இடத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும்   தளர்த்தினான். வெற்றி வீரனாக திரும்பிய அரச குமாரனுக்கு, உடல் மேல் தைத்திருந்த ஆயுத நுனிகளை நீக்கி சிகித்சை செய்து பாலால் நீராட்டினர்.   162

திரிபுவனன்  திரும்ப வந்து மன்னிப்பு கேட்டவுடன், அவனை மன்னிக்கவும், திரும்ப பதவியில் அமர்த்தவும் அரசன் அனந்தன் ஆணையிட்டதை பலரும் புகழ்ந்தனர்.   தோற்றது தவிர திரிபுவனன் வறுமையாலும் வாடி இருந்தான் என்பதும் ஒரு காரணம்.  ப்ரும்ம ராஜன் என்ற ஒரு உறவினனை பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான். அவன் ருத்ரபாலனுக்கு இணங்காததால் பதவி நீக்கம் செய்யப் பட்டிருந்தான்.  தாமரர்கள் உதவியும், ஏழு  மிலேச்சர்கள் எனப்படும் வெளிநாட்டு அரசர்களின் முக்ய அதிகாரிகள்  தரதா- அசல மங்களா -Darada, achalamangala-  என்பவர்களின் ஆதரவும் பெற்று ஊர் திரும்பி கொண்டிருந்தவனை,  ருத்ரபாலன் க்ஷீரப்ரஸ்தா  இடத்தில் எதிர்த்து தன் படையுடன் தாக்கினான்.  மறுநாள் முறையாக போர் என்று அறிவித்து இரு பக்கமும் தயார் செய்து கொண்டிருந்தனர்.

தரத தலைவன் ஊருக்குள் நுழைந்தவன் எதேச்சையாக  பிண்டாரகன் என்ற நாகர் தலைவனைப் பற்றி கேள்விப் பட்டவன், அவன் இருப்பிடம் சென்று சந்தித்தான்.  தன் போக்கில் எதையும் குறிப்பாக யோசியாமல் சென்று கொண்டிருந்தவன், மற்றவர்கள் தடுத்தும் கேளாமல் நீரில்  துள்ளிக் கொண்டிருந்த ஒரு மீனின் மேல் தன் ஈட்டியை எறிந்தான்.  திடுமென ஒரு நாகர் தலைவன் குள்ளநரி போல வேடத்துடன் நீரில் இருந்து துள்ளி எழுந்தான். முன் யோசனையின்றி அந்த தரத தலைவன் அதையும் வேட்டையாடவே பின் தொடர்ந்தான்.  

கையில் ஈட்டியுடன் ஓடுபவனைப் பார்த்த ருத்ரபாலனின் வீரர்கள்  நாளை போர் துடங்குவோம் என்று சொல்லி விட்டு, இவன் இன்றே அடிக்க வருகிறான், இரு பக்கமும் சேர்ந்து எடுத்த முடிவு, அதை மீறி விட்டான் என சந்தேகித்து அந்த படை உண்மையாகவே போரைத் துவங்கி விட்டது.

அதன் பின் இரு படையினரின் ஆயுதங்களும் பயங்கர ஓசையுடனும், தீப்பொறி பறப்பது போன்ற ஒளியுடனும் மோதிக் கொண்டது  ஏதோ தேவ லோக அழகிகள், இவர்களின் வீர விளையாட்டை ரசிப்பது போல எண்ணி விட்டார்களோ, அல்லது தாங்களே இதோ அந்த உலகம் சென்று நேரில் அந்த அழகிய பெண்களைக் காணப் போகிறோம் என்று மகிழ்ந்தார்களோ என்று கவி வர்ணிக்கிறார். 

ருத்ரபாலன் நிஜ ருத்ரன் போலவே ஆனான். தரத தலைவனின் தலையைக் கொய்து தன் ஆயுதத்தால் தூக்கிப் பிடித்தான்.  அதே வேகத்துடன் மிலேச்ச அதிகாரிகளையும் தாக்கி வதைத்தும் சிறை பிடித்தும் அவர்களின் ஆபரணங்களை கைப்பற்றினான்.  பொன்னும், மணியும், முத்துமாக அலங்கரிக்கப் பட்ட தரத தலைவனின் மகுடத்தை அரசன் அனந்தனிடம் சமர்ப்பித்தான்.  

உதயனவத்சன் என்ற சகோதரன் ஏதோ தகராறு செய்தான்.  தானே தூண்டி விட்டு அந்தணர்களை உண்ணாவிரதம் இருக்கச் செய்தான்.  இதற்குள் லூடா – என்ற தாபஜ்வரம் வந்து ருத்ரபாலன் மடிந்தான்.  அதே தொத்து வியாதியால், மற்ற சாஹி இளவரசர்களும் மறைந்தனர். இவர்களுடன் பாலன் என்ற அடை மொழியுடன் அழைக்கப் பட்டவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். புயல் அடித்து ஓய்ந்தது போல, என்று அனந்தனின் மனைவி ஸூர்யமதி மகிழ்ந்தாள்.  தன் கணவனின்  கண்ணாடி போன்ற தெளிவான உள்ளம் அவர்களின் சகவாசத்தால்  மலினமாகி இருந்தது, அது விலகி தற்சமயம்  பரிசுத்தமானதாக ஆகி விட்டது என்றாள்.   அவளுடைய மற்றொரு பெயர் சுபடா.  கௌரீஸ்வர- என்ற வழிபாட்டு ஸ்தலம் விதஸ்தா ஏரியின் கரையில் அமைத்தாள். உடன் சுபடாமாதா என்ற தேவியின் ஆலயமும் எழுந்தது.   சதாசிவ ஆலயம் பூர்த்தியாகி, யாகங்கள் நடந்தன.  அதன் அங்கமாக நாட்டு மக்களுக்கு ஏராளமான பொருளும், தனமும், பசுக்களும், பொன்னும், ஆபரணங்களும் என்று பலவிதமாக  கொடுத்தாள்.   பல ஏழை அந்தணர்கள் தங்கள் வறுமையில் இருந்து மீண்டனர்.

தன் இளவல், ஆசாசந்திரன் – கல்லனா என்று அழைக்கப் பட்டவன், அவளுக்கு பிரியமான சகோதரன் .அவன் பெயரில் ஒரு மடாலயமும், அக்ரஹாரம் எனும் குடியிருப்பும் கட்டினாள். மற்றொருவன் சில்லானா என அழைக்கப் பட்டவன், அவன் பெயரில் விஜயேச என்ற ஆலயத்தின் அருகில்  ஒன்றும் மற்றொன்று, தன் கணவரின் பெயரில் அமரேச ஆலயத்தின் அருகிலும் மடாலயங்கள் கட்டினாள்.  அதில் த்ரிசூலம், பாணம், லிங்கம் என்ற சிவாலய சிறப்புகளும் பிரதிஷ்டை செய்யப் பட்டன. மறைந்த தங்கள் மகனுக்காக,சதாசிவன் ஆலயத்தின் அருகிலேயே தாங்களும் குடியிருக்கலாயினர்.   இயல்பாகவே தெய்வ நம்பிக்கையும்  நற்குணங்களும் நிறைந்தவள் விஜயேஸ்வர ஆலயத்தில்  பணியில் இருந்த அந்தணர்களுக்கு  நூற்று எட்டு அக்ரஹாரங்கள் கட்டுவித்தாள்.

பழைய அரண்மனைகள், காலம் காலமாக அரச குடும்பத்தினர் வாழ்ந்த இடங்களை விட்டு இந்த மடாலயங்கள், ஆலயங்களில்  வாழ்ந்தனர்.   பின் வந்த அரசர்களும் அதே போல இந்த வீடுகளில் வாழ்ந்தனர்.

அரசனுக்கும் குதிரைகளின் மீது ஈடுபாடு இருந்தது.  அதனால் குதிரைகள் கட்டி வைத்து பராமரிக்கும் சேவகர்கள் பழக்கமாயினர்.  குதிரையேற்றம், அதில் அமர்ந்து போரிடுதல்  முதலிய செயல்களை அறிந்து கொண்டான்.  அவன் பிறக்கும் முன்பே அரண்மனை விகடகவி ஒருவன் அனைவருக்கும் பரிச்சயமானவன் இருந்தான். பிரஜைகளை வற்புறுத்தி தனக்கு தரச் சொல்லி செல்வம் சேர்க்கிறான் என்பது தெரிய வந்தது. டல்லகன் என்ற மத்ய சமவெளி பிரதேசத்தில் இருந்து வந்தவன். 

மாளவ தேசத்தை ஆண்ட போஜ ராஜா  பிரசித்தமான அரசன். தாம்பூல பிரியன். பத்ம ராஜன் என்பவன் அரசனுக்கு இடை விடாது தாம்பூலம் தயார் செய்து அளிப்பவனாக இருந்தான்.  போஜ ராஜன்,  கபாடேஸ்வர என்ற இடத்தில் பாப சூதன என்ற புண்ய தீர்த்தம் வரும்படி குளம் வெட்ட பல பொற்காசுகள் செலவழித்தான்.  – அதன் பாவனமான நீரால் வாய் கொப்பளித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.  இந்த தேவையையும் பத்ம ராஜன் தானே முனைந்து கொண்டு வந்து கொடுத்தான். அதற்காக கண்ணாடி குடுவைகள் தயாரித்து, தினமும் புதிய குடுவையில் நீரைக் கொண்டு வந்து கொடுப்பான்.  அதனால் அரசன் போஜனுக்கு அருகில் அடிக்கடி  செல்வதால்  அரசன் கண்டவுடன் அறிந்து கொள்ளும் அளவு பரிச்சயம் ஏற்பட்டது.  அவன் கொண்டு வந்து கொடுத்த தாம்பூலம் நாகரகண்ட (?) மற்றும் வெற்றிலை முதலியவைகள் கொண்டு தயாரிக்கப் பட்டவைகளுக்கு அரசன் செலவழித்த பணம் கணக்கில் அடங்காது. பொக்கிஷமே காலியாகும் அளவு என்று கவி சொல்கிறார்.  ஐந்து நிலவு போன்ற அமைப்புகள் ரத்தினங்கள் பதித்து செய்யப் பட்ட அரசனது கிரீடத்தையும், அரியாசனத்தையும்  கடன் கொடுத்தவனுக்கு அடகு வைக்கும் படி ஆயிற்றாம்.  அரச சபையில் அமர வேண்டிய நாட்களில் மட்டும் கொண்டு வந்து வைப்பானாம். ஏனெனில் அரச சபையில் அவையின்றி அரசன் நீதி விசாரனைகள் செய்ய முடியாது என்பதால். 

ஸுர்யமதி  என்ற அந்த அரசனின் மனைவி, பத்மராஜன் தான் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டான் என்று அவனை நீக்கி விட்டாள்.   இதற்கு முன் தல்லக என்ற விகடகவியை நீக்கிய பொழுது அரசவையில் எந்த எதிர்ப்பும் இல்லை.  அரசன் அவளுக்கு முழு சுதந்திரமும் அளித்து அரச சபையின் சீர் திருத்தங்களைச் செய்ய அனுமதித்தான்.  தனது கவனமின்மை என்பது தெரிந்து விட்டது.  அவளால் சீர் செய்ய முடியுமானால் தடுப்பானேன்.  அவர்கள் இருவரும் மனம் ஒத்து இந்த ஏற்பாட்டை செய்து கொண்ட பின் அரசன் சிவ பூஜையில் முனைந்து இருந்தான்.  நீராடுதலும், நித்ய பூஜைகளான, அபிஷேக ஆராதனைகளை சிரத்தியுடன் செய்பவனாக அரசன் அனந்த தேவன் தவம் செய்யும் முனிகளுக்கு சமமாக ஆனான்.   

இளவயது கன்னிப் பெண்கள் தங்களுக்கான துணையை கண்டு கொள்வது போன்ற முனைப்புடன் அரச பதவிகளுக்கு அலுவலக பணியாளர்கள் முயன்றனர்.   ஒரு நாவிதன், க்ஷேமா என்பவன், தான் செய்யும் வேலைக்கு ஊதியத்தை போலி கணக்கு, இல்லாத ஆட்களின் எண்ணிக்கை என்பது  போன்ற தகிடு தத்தங்களால் பன்னிரண்டில் ஒரு பாகம் அதிகமாக  பெற்றுக் கொண்டிருந்தான்.

கேசவன் என்ற மந்திரி , நல்லவன் தான், திரிகர்த்த என்ற இடத்திலிருந்து வந்த அந்தணன்   சந்திர ஒளியுடையது என்று சொல்லி அரசனுக்கு குடை பிடிப்பான்.  திடுமென அவன் வறியவனாக , தனியாக நகரில் சுற்றிக் கொண்டிருப்பதை மக்கள் கண்டனர்.  மின்னல் போன்று நிலையற்றது செல்வம் என்று சும்மாவா சொன்னர்கள்.  

செல்வம் அவனவன் வினைப் பயன் என்பர். குடும்பச் சொத்து என்பர்.  தான் தன் முயற்சியால் பெற்றது என்பர்.  எப்படி கிடைத்திருந்தாலும் ஒரு நாள் கை விட்டு போக போவதே.  அதில் வீணாக

பெருமை கொள்வது அறிவுடமை அல்ல. 

கௌரிச, பூதி, வைஸ்ய, என்பவர்களுக்கு ஹலதர, வஜ்ர, வராஹ  என்ற புதல்வர்கள் இருந்தனர். 

ஸூரியமதி இந்த ஹலதரனை பதவியில் அமர்த்தினாள்.  அவனும் நாள் தோறும் பணியில் இருந்து கற்றுக் கொண்டவனாக பதவி உயர்வு பெற்றான்.  சகல அதிகாரங்களுடன் முக்யமந்திரியாக ஆனான்.

அறிவும் ஆற்றலும் உடையவன் ஆனதால் சுற்றியுள்ள தேசங்களையும்  கைப் பற்றி, அரசை விரிவு படுத்தினான். மனவியுடன் அனந்தன் தங்கள் தேவைகளுக்கே  அவனை எதிர்பார்க்கும் நிலை வந்து விட்டது. 

க்ஷேமா போன்றவர்களின் கையாடலை நிறுத்தினான். ஏதோ ஒரு  அரசன் செய்த ஒரு ஏற்பாடு. நாலில் ஒரு பங்கு வரி என்பதை இந்த ஹலதரன் அனைத்து நிர்வாக துறைகளுக்கும் வரியாக வசூலித்து விட்டான்.

பொது மக்களின் சேமிப்பான தங்கத்தை சோதித்து மதிப்பிடுவதாக சொல்லி அந்த தங்கத்தையும் அரசனுக்கு தெரிவிப்பதாக ஒரு சட்டம் இருந்தது. பொருள் கை மாறாது. அரசன் கவனத்தில் இருக்கும்.  இன்னாரிடம் இன்ன சேமிப்பு என்ற கணக்கு. அறிவுள்ள ஹலதரன் அதை மறுத்தான். ஒருவனுடைய சேமிப்பு அவன் உரிமை. அதை சோதிப்பதோ, தண்டிப்பதோ நியாயம் அல்ல.  அதனால் அந்த சோதனையையும், மதிப்பீடலையும் நிறுத்தி விட்டான். பின்னால் எதோ ஒரு அரசன் அதற்கு வரி விதிக்கக் கூடும், அல்லது அபகரிக்க கூடும் என்பதால்.

சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் மூலம் பொது ஜனங்களை ஆசை காட்டி அவர்கள் பணத்தையும், மனைவி மக்களையும் இழப்பதை தடுத்தான்.  எந்த காரணம் கொண்டும்  மற்ற மனிதர்களை ஏமாற்றுவதோ, நிர்பந்தப்படுத்தி பிடுங்குவதோ தவறு என்று ஆணையிட்டான்.

ஆலயங்களில் தகுதி இல்லாதவர்கள், தாங்களாக பணி செய்வது என்ற பெயரில் நியமித்துக் கொண்டு இருந்ததை தடுத்தான்.  விதஸ்தா சிந்து நதிக் கரைகளில் இருந்த ஆலயங்கள், செப்பனிடப் பட்டு, ஒழுங்கான வழிபாடுகளும் உத்சவங்களுமாக ஆயின.  ஆலயங்களின் பொன்னால் ஆன சிலைகள், அலங்காரங்கள் பொன்னின்  ஒளிவீசும்படி சுத்தம் செய்யப் பட்டன.  அதே போல பாடசாலைகள், அக்ரஹாரங்களும் சீராக்கி, சுத்தமாக விளங்கச் செய்தான்.

அதே சமயம் அவன் சகோதரர்களும், புதல்வர்களும் பழகிய தோஷம்,  தற்சமயம் வளமாக வாழ்ந்தாலும், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியவர்கள்,  பழையபடி ஆலயங்களுக்கு வருபவர்களிடம்  பரிசு பொருட்கள், அன்பளிப்பு போன்ற சில்லறைகளை விட முடியாமல் தவித்தனர்.  வராஹனின் மகன் பிம்பன் என்பவன், வாயில் காப்பவர்களுக்கு அதிகாரியாக இருந்தான்.  தானம் கொடுப்பதில், மேகம் நீரை  பொழிவது போல கொடுப்பனாம்.  சிறந்த வீரனும் கூட. டாமர குலத்தினரை ருடன்  சிறிய படையுடன் சென்று அவர்களை வென்றான். காலம்ருத்யு போன்று அவர்களுக்கு பயங்கரமாக இருந்தானாம். அதுவே காசா -खाशा -என்ற இடத்தில்  குறைவான ஆட்படையே காரணமாக தோற்க நேர்ந்தது.  புற முதுகு காட்டாமல், அந்த போரில் உயிரிழந்தான்.

சம்பா என்ற இடத்தில் அரசன் அனந்தனே முன்னின்று போரில் வென்றான். சால என்ற அரசன் போரில் மடியவும், தானே வேறொருவனை அரசனாக அரியணையில் அமர்த்தினான்.  அந்த வெற்றி தந்த உத்சாகம், யோசியாமல் மேலும் பல ராஜ்யங்களை முற்றுகையிட்டு வெற்றி பெற்றான். அதுவே சுற்றிலும் இருந்த சிற்றரசர்களுக்கு குலை நடுக்கம் வரச் செய்தது.

துக்கா என்பவனின் மகன் கலசன் என்பவன்  தனது சைன்யம் வருந்துவதைக் கண்டு பொறுக்காமல் கலகம் செய்தான்.  ஹலதரன் முன் யோசனையுடன் அவனை அந்த வல்லாபுரம் என்ற இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றி விட்டான்.  அரசன் அனந்தன் உரஸா என்ற தேசத்தை தாக்கியபொழுது, எதிரி அரசன் பாதைகளை அடைத்து தடுப்புகள் போட்டிருந்தான்.  சேனைத் தலைவன் அந்த நுழைய முடியாத வழிகளை சமப்படுத்தி, அரசனை பத்திரமாக வெளியேற வழி செய்து விட்டான்.

அனந்தனின் ஆட்சி காலத்தில்  பலவிதமாக இன்னல்கள் முளைத்தன. உட் பூசல், ஏதோ ஒரு காரணமாக கலகம் என்று அவ்வப்போது தோன்றி மறையும்.  அரசனுக்கு ஆதரவாக இருந்த பத்ரேஸ்வரா என்பவனின்  மகன் ராஜேஸ்வரா என்ற எல்லைப் பகுதியின் காவல் பொறுப்பில் இருந்தவனை க்ரமராஜ்யா என்ற தாமரன் கொன்று விட்டான். அத்துடன் மேலும் பல வீரர்களும் அவனால் கொல்லப் பட்டனர்.

நியாயம், தர்மவழி என்று பார்த்தால் இந்த செயல்கள் அத்து மீறல்களாகத் தெரியும்.  அரச அரண்மனையில் பணி செய்யும் சேவகர்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளவே நினைப்பவர்கள்.  இவைகளை எதிர்க்கவா முடியும்? நெருப்புடன் விளையாடுவது போன்றது அரச வாழ்வும். ராஜ நீதியே வேறு.

இந்த அளவு நன்மைகளே செய்த ஹலதரனும் அரசியை அடிக்கடி சந்திக்கிறான் என்பதை வைத்து ஒரு  வதந்தியை கிளப்பி விட்டனர். ஆசாசந்திரன்  போன்ற கைக்கூலிகள் அதை பரப்பினர்.

அரசன் ஹலதரனை சிறைக்கு அனுப்பினான். அவன் பதவி, செல்வம் அனைத்தும் பறி போயிற்று. சீக்கிரமே, அரசன் அவனை விடுவித்து விட்டான். நடுவில் விலகியிருந்த திருமகளின் அருள் பார்வை அவன் பால் திரும்பியதோ எனும்படி பழைய செல்வாக்கை அடைந்தான்.  அதை அடைந்த பின் மற்ற பெருமைகள் தானே வந்து ஒட்டிக் கொண்டன போலும். ஆயினும் கற்ற பாடம், கவனமாக இருந்தான். அரச குலம் ஒரு வினாடி நேரத்தில் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளவும், தண்டிக்கவும் துணியும். மழைக் கால வானம் போல திடுமென கறுத்து மழை பொழிவதும் கொட்டித் தீர்த்த பின் வெளுத்து ஸூரிய ஒளியில் பள பளத்துக் காண்பதும் போல.

நேர் வழி  மட்டுமே அறிந்திருந்த அரசனுக்கு மனைவியின் மூலமே உயர்வும், அவள் காரணமாகவே தொல்லைகளும் அதிகரித்தன.   இதற்குள் மகன் கலசனுக்கு பட்டம் சூட்டவேண்டும் என்ற முனைப்போடு அரசி செயல் பட்டாள்.  ஓயாமல் அதே எண்னமும் பேச்சும்.  ஹலதரன் மற்றும் சில அறிஞர்கள், அரசனிடம் அதிகாரம் மமதையை கொண்டு வரும் என்பதையும், பின்னால் வருந்த நேரிடும் என்பதையும் வலியுறுத்தி வந்தனர்.  அரசி அந்த நிலைக்கு வரக் காரணமே அவள் கை ஓங்கி இருந்ததே. அரசன் பொறுக்க மாட்டாமல் சம்மதித்தான்.  அது மட்டுமா, தானும் தன் மகனிடம் இருந்த பாசத்தால்,அரசுரிமையை அளித்து கலசனை அரியணையில் அமர்த்த சம்மதித்தான்.

அரண்மனை காரியஸ்தன் ரணாதித்யனிடம் முடி ஸூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள்  ஒப்படைக்கப் பட்டன. முப்பத்து ஒன்பதாவது ஆண்டு, கார்த்திகை மாத வளர்பிறை ஆறாம் நாள் அரச குமாரன் மேல் அபிஷேக ஜலம் தெளிக்கப் பட்டது.  அரச மரியாதைகளுடன் அந்த அரச குமாரனை இதோ யுவராஜா அனந்தன் என்று சொல்லிய படியே தந்தையிடம் கொண்டு வந்து சேர்த்தான்.

என்ன நினைத்தோ அனந்த ராஜா வெகுண்டான். வெடுக்கென்று திரும்பி, கன்யா குப்ஜ வழக்கம் இது. இதை ஏன் இங்கும் கொண்டு வருகிறாய்” என்றான்.   

திடுக்கிட்ட  ரணாதித்யன் சொன்னான். ‘ கன்யாகுப்ஜ அரச வம்சம் மட்டுமல்ல பல இடங்களிலும் இது தான் நடைமுறை.  வேறு எப்படி அறிவிப்போம்.    ‘  ராஜ்யத்தை துறந்து முனிவனாக இருந்தவன் தானே. அந்த அரச குலத்து அபிமானம், தற்பெருமை அவ்வளவு சீக்கிரம் விலகுமா என்ன?  

மந்திரியின் தொலை நோக்கு பார்வை அரசனின் மனதைத் தொட்டது.  அந்த சொற்களைக் கேட்ட பின் பதில் சொல்ல வாயெழவில்லை.  

மறுநாளே ராஜாவுக்குரிய மரியாதைகளும், அரச சபையினரின் வண்ணக்கங்களையும் ஏற்றவனாக அரியணையில் அமர்ந்திருந்தான்.   பழைய அரசனை (அனந்தனை) சில முதிய ஏவலர்களே ஸூழ்ந்து இருந்தனர்.

ஹலதரனும் தன் உணர்வை காட்டிக் கொள்ளாமல் அரசனிடம் வந்து பணிவாக, “அரசே ! இந்த பாலகன் மீது இவ்வளவு பெரிய பொறுப்பை சுமத்தி விட்டீர்கள். இளம் வயது சுதந்திரமாக விளையாடவோ அனுபவிக்கவோ ஏற்றது. முதுமையை எட்டிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.  ஆயினும் இது எனக்கு சரியாக படவில்லை. நீங்கள் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மகன் இன்னும் கற்றுக் கொள்ளவும், அனுபவிக்கவும் நிறைய இருக்கிறது. உங்கள் மேற் பார்வையிலேயே வைத்துக் கொள்வது தான் சரி”

அரசனுக்கு இது சம்மதமாக ஆயிற்று. கலசன் பெயரளவில் அரசனாகவும், அரசாட்சி அனந்தனின்  கையிலுமாக  தொடர்ந்தது.  அரச சபையில் அவன் அரியணையில் இருந்து  பொது மக்கள் குறை கேட்பதானாலும், ஆயுத சாலையில் ஆயுதங்களுக்கு வணக்கம் செலுத்துவதானாலும் அவன் முன்னிலையில் அரசன் செய்வதாக ஆயிற்று.  புரோஹிதர் என்ற குரு அருகில் நின்று சொல்ல சிஷ்யன் செய்வது போல தோற்றமளித்தது. 

தன்னடக்கம் இல்லாதவர்கள், சுகம் என்றால் துள்ளி குதிப்பதும், துக்கம் என்றால் முகம் வாடி செயலற்று போவதும் இயல்பே. காரணம் எதுவும் வேண்டாம். இவர்கள் மனதில் திடமாக ஒரே கொள்கை பிடிமானம் இல்லாத குறை தான்.

பிடிவாதம் பிடித்து மகனுக்கு ஆட்சி என்று தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட தாயான அரசி  தன் மதிப்பும், அரசனின் மதிப்பும் தாழ்ந்தது தவிர வேறு எதையும் அடையவில்லை. அதுவே அவளுக்கு தன் தவற்றை சுட்டிக் காட்டியது போல ஆயிற்று.  விளைவு, மகனிடம் அன்பு குறைந்தது.   பொறாமை தீயாக  சுட்டது.  மருமக்கள் அரச உடையை, அலங்காரங்களை, விலையுயர்ந்த ஆபரணங்களை அணிவதைக் கண்டும் அரசனின் இள மனைவிகள் என்ற மதிப்புடன் வளைய வருவதையும்  பொறுப்பாளா?  தன் அறையிலேயே அவர்களுக்கு இடை விடாது ஏதாவது பணி செய்ய கொடுத்து தனக்கு அருகிலேயே இருக்கும்படி வைத்துக்  கொண்டாள். சுத்தம் செய்யும் பணிகளைத் தவிர மற்றவைகளைச் செய்தனர்.

ஒரு நாள் அரசனின் தந்தை வழி சகோதரனான உறவினன்,  விக்ரஹ ராஜனின் மகன் க்ஷிதிராஜன் என்பவன் யதேச்சையாக அரசனைக் காண வந்தான். அவன் தன் மனதை வருத்திய செய்தியை பகிர்ந்து கொண்டான்.  அவன் மகன் புவன ராஜா பட்டத்துக்கு வர விரும்பி கிளர்ச்சி செய்தான். நீலபுரா  என்ற ராஜ்யத்தில் அடைக்கலம் புகுந்து விட்டான்.  தந்தை என்றும் பாராது அவர்களின் படை பலத்துடன் தன்னையே எதிர்த்து போரிட வந்து விட்டான்.  மூடன், நான் எந்த அளவு பாகவதத்தை மதிக்கிறேன், பூஜைக்குரியதாக போற்றுகிறேன் என்பதை அறிந்தும், பாகவத நூலில் வரும் பாத்திரங்களின் பெயர்களை தன் நாய்களுக்கு வைத்தும், அவைகளுக்கு உபனயனம் செய்வித்தும் அவமானப் படுத்துகிறான். அதனால் மனைவி தடுத்தும் கேளாமல் க்ஷிதிராஜன் இயல்பாகவே ஆன்மீக நாட்டமுடியவன் ஆனதால் முழுமையாக துறவி ஆகி விட்டான். 

அரச குடும்பத்திலும் பூசல் ஆரம்பித்தது. அரசனின் முதல் மனைவி ராமலேகா என்பவளின் மகன் தான் மூத்தவன். மூத்தவன்  உத்கர்ஷன் இருக்க இளையவன் ஆட்சி பொறுப்பை ஏற்றது அந்த குடும்பத்தினருக்கு சம்மதமாக இல்லை. ராஜ ரிஷிகள் போல இருந்த பல அரச ஆலோசகர்களும் பதவி விலகி அவர்கள் அனைவரும் தீர்த்த யாத்திரை சென்று விட்டனர்.

பல ஆண்டுகள் அரசன் அனந்தன் பொறுப்புடன் அரசை நிர்வகித்தான்.   பரம வைஷ்ணவன்- பகவான் விஷ்ணுவை பூஜிப்பவன். சக்ரதரன் என்று விஷ்ணுவின் பெயர்.  அந்த பெயரையே தியானித்து நல்ல மனதுடைய அரசன் அனந்தன் ஸ்ரீ விஷ்ணு பதம் அடைந்தான்.

போஜ ராஜனும் நிறைய தானம் செய்தும் தானே அறிவும், கலையுணர்வும் உடையவனாக சிறந்த அரசனாக வாழ்ந்து மறைந்தவன். இருவரும் பல விஷயங்களில் ஒரே விதமான குணங்களால் மக்களின் மதிப்புக்கு ஆளானவர்கள்.  கவிகளுக்கு பந்துக்களாக இருந்தவர்கள். 

தந்தை வழி பங்காளியான ஒரு சகோதரன் அவன் மகன், தன்வங்கன் என்ற அரசன்  அவன் மடியில் தன் பேரனை கிடத்தி ராஜ்யத்தையும் சிசுவையும் பாலிக்கச் சொல்லி வேண்டிக்கொண்டு அனந்த ராஜா விஷ்ணு பதம் அடைந்தான்.  (இடையில் நடந்த சம்பவங்கள் தெரியவில்லை)

தன்வங்கனும் அந்த பொறுப்பை ஏற்று, சிசுவை நல்ல படியாக வளர்த்து, திரும்ப காஸ்மீர தேசம் வந்து அவன் வளர்ந்து பொறுப்பை ஏற்கும் வரை  உயிருடன் இருந்து உதவிய பின்,  சக்ரதர என்ற இடத்திலேயே இயற்கை எய்தினான்.   சக்ரதரன் – சக்கரம் என்ற ஆயுதம் உடைய ஸ்ரீ மகா விஷ்ணுவின் வைகுண்டம் சென்றடைந்தார்.  

இதுவரை காஸ்மீர தேசத்தை ஆண்ட அரசர்கள் நியாயமாகவே ஆண்டனர். துரோகம் என்ற களங்கம் அரச குலத்தை அண்ட விடவில்லை.  ராஜ நீதியை மதித்தவர்கள், பொதுவான அரச போகங்களை அனுபவத்தவர்களாக, எல்லை மீறாமல், ஆண்டனர்.

அனந்த பூபதியின் ஆட்சி காலத்தில் அவ்வப்போது ஏற்படும் இடர்களை, கலகங்களை அடக்கி அரசு இயந்திரம் சீராக செல்ல வேண்டியவைகளைச் செய்து பாதுகாத்து வந்த ஹலதரனும் கால கதி அடைந்தான்.  சக்ரதர என்ற இடத்தில் மரண படுக்கையில் இருந்தவனை அனந்த அரசனும் அரசியும் அருகில் வந்து அது வரை அவன் அரசுக்கு செய்த சேவைகளை பாராட்டி, தங்கள் முனமுவந்த அன்பையும் வெளிபடுத்தி உணர்ச்சி வசப்பட்டனர்.  ”  ஹலதரா! உன்னால் பல முறை நல் வழி காட்டப் பட்டோம். அனாவசியமாக பிற நாடுகளுக்கு படையெடுக்காதே என்றாய்..   உடனடியாக எழும் வேகத்தால், பர பரத்து யோசியாமல் சாகசத்தைக் காட்டாதே.  கலகம் செய்தவனை உன் முன் யோசனையால் வல்ல புரத்து அனுப்பியதும் நன்மைக்கே.   அவன் போன்றவர்கள் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தவர்கள். “  அவன் சொன்னான்.” இதோ, ஜிந்து ராஜன்.  வளர்ந்து விட்டான். வீரமும் துடிப்பும் உள்ள இளைஞன்  தனித் தன்மையுடைவன்.  அவனை கண்காணித்து உன் வசம் வைத்துக் கொள். ஜயாந்தன் தன் மகனுடன்  உங்களுக்குள்  மன வேற்றுமையை,  பிளவை உண்டாக்க நினைப்பவன். “

அதன் பின் வந்த இந்து ராஜன் அவன் மகன்  புத்த ராஜன் அவன் மகன் சித்தராஜா அவன் மகன் மதனராஜன் என்பவன் மிகுந்த வீர்யம் உடையவனாக இருந்தான்.  அது வரை வம்சம்  சிறப்பாக எதுவும் இன்றி அமைதியாக இருந்தது. அடுத்து வந்த ஜிந்துராஜா ஆணவம் மிக்கவனாக இருந்தான்.

 வெளி நாடுகளுக்குச் செல்ல தந்தை அனுமதிக்கவில்லை. தன் புஜ பலத்தில் நம்பிக்கை வைத்தவன் இதனால் மன வருத்தம் அடைந்தவன் உள்ளூற தந்தையை வெறுத்தான்.  அந்த சமயம் தாமர ராஜ வம்சத்தில் உட் பூசல் கிளம்பியது.  அந்த தேசத்து அரசி தாமரர்களின் போர் குணம், அடாவடி அரசியல் இவற்றை வெறுத்தாள்.  ஜிந்துராஜாவின் வீரம், ஆற்றல் இவைகளை அறிந்தவுடன், தானே வந்து அவனை அழைத்துச் சென்று தாமர ராஜ்யத்தின் தலைமை மந்திரியாகவும் சேனாபதியாகவும் நியமித்தாள்.  ஒற்றைக் கண்ணன்- ஒரு கண் தெரியாதவன்-   சோபா என்பவன்  தேக்ராம என்ற பிரதேசத்தில் கலஹம் செய்து கொண்டிருந்தான்.  அவனை ஜிந்துராஜ அடக்கி கப்பம் கட்ட வைத்தான்.  அதே போல சில ராஜ புரியைச் சேர்ந்த சிற்றரசர்கள்  அவர்களையும் அடக்கி கப்பம் கட்ட வைத்தான்.

ஹலதரன் சொன்னது  தான் நடந்தது. ஜயானந்தன் கோணல் புத்திக்காரன். சூழ்ச்சி செய்து அரசன் கலசனை தன் வசம் ஆக்கிக் கோண்டான்.  அவன் அருகில் இருந்த பணியாளர்களும் பொறுக்கி எடுத்த துஷ்டர்கள்.  ஜயாநந்தனின் கையாட்கள்.  அரசனுக்கு சபலம் உண்டாக்கி, தீய வழிகளைக் காட்டினர். பிஜ்ஜா, பித்தராஜா, பாஜா என்பவர்கள் சாஹி வம்சத்தில் வந்தவர்கள்.   பொக்கிஷ அதிகாரியான நாகன் நம்பகமான அதிகாரியாக இருந்தவன்,  அவனை ஜயானந்தன்  குறுக்கு வழிகளில் செல்லவும், தவறான செயல்களை செய்யவும் போதித்தான்.  அமரகாந்த என்ற சிறந்த ஆசிரியர், காலகதி அடைந்து சிவலோகம் சென்ற பின் அவன் மகன்  ப்ரமதகண்டன் ஆசிரியராக வந்தான்.  கலசன் என்ற அந்த அரசன், இயல்பாகவே நற்குணம் இல்லாதவன்.  அவனை குருவாக வந்த அயோக்யன் பலவிதமான செய்யக் கூடாத செயல்களில் ஈடுபடுத்தினான். பெண்கள் சகவாசம் முதலியன.  நல்லது எது  தீயது எது என்று தானாக அறிந்து கொள்ள வேண்டிய அரச பதவியில் இருந்தவன் இந்த சொற்களில் மயங்கினான். தன் மகளையே இந்த தகாத செயலுக்கு அரசனிடன் அனுப்பிய துஷ்டன் என்ன தான் செய்ய மாட்டான்.

ராஜகுரு என்ற உயர்ந்த பதவி. அதை அலங்கரித்தவர்கள் தன்னலமற்ற தியாகிகளாக இருந்தவர்கள்.  தயக்கமின்றி அரசனின் தவற்றை சுட்டிக் காட்ட அவர்களுக்கு மன திடம் இருந்தது. அரசனாக இருந்தவனும் ராஜகுருவின் சொல்லை மதிப்பவனாக இருந்ததால் அரசாட்சி நல்ல முறையில் நடந்தது. பகவான் பைரவ அவதாரமாகவே ராஜ குருவை சொல்வர்.   அப்படிப்பட்ட பதவிக்கு குணமற்ற ஒருவன் வந்து அனைத்தையும் கெடுத்தான்.  ஆசிரியர்கள் மண்டியிட்டு நிற்கும்படி ஆயிற்று. கொடுங்கோலனாக பூணை விற்பவன் போல ? –  சுதந்திரமாக வளைய வந்த ஆலோசகர்கள், தலையில் கை வைத்து வருந்தினர்.

ஒரு சமயம் ஒரு வியாபாரி கறுப்பு பூணையை மடியில் கட்டிக் கொண்டு வந்தானாம். கரும் பூணை அபசகுனமாக கருதப் படும். அதனால் அந்த நிகழ்ச்சி மற்றவர்களுக்கு வினோதமாக தெரிய அதுவே தவறான நடத்தைக்கு மாற்றுச்  சொல் ஆயிற்று.  வழி காட்ட குரு என்ற பதவிக்கு வந்தவனே, தவறான வழியைக் காட்டியதால் சீக்கிரமே அந்த அரசாட்சி  முடிவடைந்தது.  மழை நாளில் கரு மேகம் மறைக்க  பகல் பொழுது வழக்கத்தை விட சீக்கிரம் முடிவது போல.  நெடு நேரம் விழித்திருப்பதும், கண்ட சமயத்தில் அளவுக்கு மீறி உண்பதும், அஜீர்ணம் முதலான கோளாறுகளால் உடல் பெருத்து, கழுத்து இருக்கும் இடம் தெரியாமல் போக,  பலவகையான ரோகங்களால் தாக்கப் பட்டான்.   அரண்மனை கேலி கூத்தாக ஆனதை பொறுக்க மாட்டாமல் ஹலதரனுடைய மகன் கனகன்  தலையிட்டு அந்த பெண்களின் கூட்டத்தை வெளியேற்றி,  வேணு வாத்யம் இசைப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்த விடலை ஒருவனை விரட்டி  கம்பத்தில் கட்டி வைத்து பணியாளர்களை கொண்டு அடித்து விட்டான்.  மூக்குடைந்தாலும் அவன் விலகாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான்.   இப்படி ஒருவன் கையில் நாடு சிக்கி தவித்தது. கல்ஹன கவி ஏன் இதை விவரிக்கிறார் என்றால், ஒன்பது ரசம் என்று காவ்யாலங்கார நியதிகளில் பீபத்சம் -அருவருப்பு என்பதும் ஒன்று.  பெயருக்கு சிறிது கோடி காட்ட நினைத்திருக்கலாம்.  கலசன்

ஒரு நாள் ஜிந்து ராஜாவின் மருமகளைப் பற்றி அறிந்து, அந்த வீட்டிற்குச் சென்று விட்டான். காவல் காப்பவர் யாரோ திருடன் என்று நினைத்து நைய புடைத்து விட்டனர்.  நடு நிசியில் ஊர் நடுவில் விழுந்து கிடந்தான் என்று தூக்கி வந்தனர். வயதான பெற்றோர், ஏற்கனவே மனமுடைந்து போய் இருந்தனர்.  வேறு வழியில்லாமல் அவனை சிறையில் அடைத்து விட்டு  தன்வங்கனின் பேரன் பப்பிகா -Bappika – என்பவனின் மகன் ஹர்ஷன் என்பவனை அரசனாக்க தீர்மானித்தனர்.  விடிந்ததும்  இதைக் கேள்விப் பட்டு கலசனும், அவன் அடியாட்களும் வந்து தடுத்தனர்.  முதியவர்கள் எதுவும் செய்ய இயலாமல் விஜயேஸ்வரம் சென்று விட்டனர்.  கலசன் அரசனானான்.  அங்கும் வந்து கலசன் கலஹம் செய்வதும், பெரியவர்கள் சமாதானம் செய்வதுமாக சில காலம் சென்றது.  அவன் நடவடிக்கைகளும் துர்குணமும் பல வதந்திகளை பரப்பியது. தந்தையை எதிர்ப்பானா மகன் என்றனர். சிலர் ஒரு படி மேலே போய் ராணியின் மகன் பிறந்த உடன் இறந்து விட்டான், யாரோ ஒருவருடைய குழந்தையை மாற்றி வைத்து விட்டனர் என்றனர்.  தந்தை தானே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தார். ஐம்பத்து ஏழாம் ஆண்டு, கார்த்திகை பௌர்ணமியன்று, விஜயேஸ்வர பகவானின் சன்னிதியில் மகனின் குணக் கோளாறால், கண்டிக்க விடாமல் தடுத்த மனைவி, இவைகளால்  மனம் உடைந்து உயிரை விட்டான் . ஒரு மாதமே அதன் பின் வாழ்ந்த அரசியும் தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.  அரச குடும்பத்தினருக்கான மரியாதைகள் எதுவும் இன்றி அவர்கள் வாழ்க்கை முடிந்தது. தற்கொலை என்பதை சொல்லாமல் வயதானவர் தொலை தூரம் பிரயாணம் செய்த காரணத்தால் ரத்த நாளம் வெடித்து இறந்தார் என்ற செய்தியை பரப்பினர்.  கலசன் வருவான் என்று எதிர் பார்த்த ராணியும் ஏமாந்தாள். உடன் இருந்தவர்கள் வர விடாமல் தடுத்து விட்டனர்.  தந்தையின் அந்திம கடமைகளைக் கூட செய்ய வரவில்லை.  அவர்கள் அனைவரையும் அழிவார்கள் என்று சாபம் இட்டாள். விதஸ்தா நீரை குடித்தவர்கள் மேலுகம் செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ராணி உயிரை விட்டாள். அது தான் பலித்ததோ  எனும்படி ஜயநந்தன், ஜிந்து ராஜா அவர்களைச் சேர்ந்த அனைவரும் சீக்கிரமே மறைந்தனர்.

ஒரு சிலர் அரச விசுவாசிகள் அவர்கள் மறைந்த பின் துறவிகளாக வெளியேறினர்.  மற்றும் சிலர் அரண்மனை பணியில் இருந்தவர்களும் அதிக நாட்கள் இருக்கவில்லை.  விஜயேஸ்வர சன்னிதியில் சிலர் தங்கினர். 

இது இயற்கையின் சுழற்சி.  மனித மனம் ஒரு விந்தையான குணம் கொண்டது.  கண்ணாடி குடுவை போன்றது.  அதில் நிரப்பியதை உள்ளபடி காட்டும். அதில் நற்குணங்கள் நிறைந்தால், சரியாக பராமரித்தால்,  தேவ லோக நீர், கங்கை போல பவித்திரமாக ஆகும்.  அதன் போக்கில் விட்டால் விளவு விபரீதம் ஆகும் என்பதற்கு இந்த வரலாறு உதாரணம். அறுபத்தோரு ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்தது. தன்வங்க ராஜாவின் மகன் கள், நாலாம்  நாள் அவ்விருவரின் அஸ்தியை கங்கையில் கரைத்தனர்.   485

பாட்டனாரின் பொக்கிஷமும், பரிவாரங்களுடனும் அரசன் விஜயேஸ்வரம் வந்தான்.  தந்தையுடன் மனஸ்தாபம்.  முதல் முறை இருவருக்கும் இடையே இந்த மனவேற்றுமை தோன்றிய போது  பாட்டனார் ஸ்ரீ விஜயேஸ்வரத்திலும் தந்தை நகரத்தில் எல்லையில் என்றும் இருந்தனர்.  அதிகம் செலவழிக்கிறான் என்று பாட்டனார் மகனை கண்டித்தார்.  அவர் சில திடமான கொள்கைகள் உடையவர்.  மகன் தூதுவர்களை அனுப்பி தந்தையுடன் சமாதானம் செய்து கொண்டான்.  அதன் பின் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர்.  முடிந்தவரை நல் வார்த்தைச் சொல்லி பேரனை திருத்த முயன்றார்.  ஒரு வழியாக இருவரும் சம்மதித்து இணைந்தனர்.  பெரியவருக்கு வழி வழியாக வந்த பொக்கிஷத்தை காக்கவும், அரசாட்சியை நிலை நிறுத்தவும் வேண்டும், தன் மகன் என்ற பாசமும் அவன் நலமாக இருக்கவும் வேண்டியிருந்தது. .  அதனால்  நாள் தோறும்  ஊதியம் போல ஒரு தொகையை தருவதாக ஒப்புக் கொண்டார்.

ஒரு முறை விஜயேஸ்வரம் வந்தவர், எரிந்து போன வீடுகள் அவர் கண்களை உறுத்தின, , மக்களின் ஆதங்கம் கடும் வார்த்தைகளாக செவிகளை சுட்டன.  மகனை அழைத்துக் கொண்டு திரும்பியவர், பொக்கிஷ அறையை பூட்டி, மகன் பெயர் பொறித்த நாணயங்கள் மட்டுமே புழங்குவதாக ஏற்பாடு செய்து விட்டார்.  வயது முதிர்ந்த பின் அரசன் கலசனின் மனம் மாறியது.   தர்ம வழியில் சிந்தனை சென்றது. .  செல்வத்தின் அருமை தெரிந்தது.  வறுமையும் பாடம் கற்பிக்கக் கூடும் போலும்.  பல வழிகளிலும் அறிவு தெளியலாயிற்று. வீண் செலவு செய்வது நின்றது.

செல்யபுரம் என்ற ஊரில் ஒரு சாதாரண இல்லறத்தான், அவன் மகன் ஜய்யக்கா என்பவன் புத்திசாலியாக இருந்தான். தன் முயற்சியால் தாமர Damara- என்ற அளவு உயர்வை அடைந்து விட்டான்.  அவர்களின் நிலத்தில் விளைச்சலும் கணிசமாக இருக்க, வெளி இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்தான்.  திருமகளின் அருள் பெற்றவன் போல தனம் சேரவும் லோபமும் அதிகரித்து சேமித்த தனத்தை பொற்காசுகளாக ஓரிடத்தில் புதைத்து வைத்தான்.    அடையாளத்துக்காக அதைச் சுற்றி தானியங்களை விதைத்தான்.  இரவு நேரத்தில் மேலும் மேலும் டினார்களாக அதில் சேர்த்தான்.  நாளடைவில் இதற்கு உதவி செய்த தொழிலாளர்கள் மேல் சந்தேகம் வர அவர்களைத் தீர்த்துக் கட்டினான்.  ஒரு சமயம் பாங்கில என்ற இடத்துக்கு குதிரை மீது ஏறிக் கொண்டு சென்றான்.  வழியில் ஒரு திராக்ஷை தோட்டம். அதை அடைந்த சமயம் குதிரை முரண்டு பிடித்தது.  உடன் வந்தவர்களிடையில் ஏதோ கலகம் வேறு சண்டையாக வலுத்தது.  காவல் இருந்த சேவகன் வந்து தடுக்க, அவன் கை கம்பினால் தாக்கப் பட்டு ஜய்யக்கா உயிரிழந்தான்.  அவன் மட்டுமே அறிந்த புதையல், வாழ்நாள் சேமிப்பு.  அது அரசன் கையில் கிடைத்து, அவன் அதன்பின் வாழ் நாள் முமுவதும் வறுமை என்பதையே அறியாதவனாக வாழ்ந்தான்.  மண் மூடிக் கிடந்த நாணயங்களை விதஸ்தா ஏரியில் கழுவி எடுத்து அந்த நீரே கலங்கி விட்டதாம். பல மாதங்கள் ஆயிற்றாம் கலங்கிய நீர் தெளிய. 500

தங்கள் உழைப்பால் தேடி சேர்த்த தனத்தை – பொருளை, தங்கள் வாழ் நாளில் தானமோ, போகமோ செய்து அனுபவிக்கத் தெரியாதவர்கள் (கருமி)   பூமியின் அடியில் வாழும் பாம்பும் ஒரே ஜாதி எனலாம்.  யாருக்காகவோ செல்வத்தை காப்பாற்றுகின்றனர்.  பாம்பு நிலத்தின் அடியில் இருந்து கொண்டு காற்றை புசித்து வாழும்.  இருட்டில் ஒளிந்து கொண்டு,  பெண் பாம்புடன் இருக்க   மறைவிடம் தேவைப் படும் பொழுதும்,  அதிக சீதளமான காலத்தில் ஆடை இன்றி தாங்க முடியாமல் போகும் பொழுதும்,  எலிவளை மற்றும் சில சிறு விலங்குகளின் வளையில் வாழ்கின்றன.  படமும், தலை ரத்தினமும் யாருக்காக ? அதற்கு பயன் படாது போவது போல, இந்த அறிவற்ற மனிதர்களிலும் சிலர் தானும் அனுபவிக்காமல், யாருடனும் பகிர்ந்தும் கொள்ளாமல் ஒளித்து வைத்து சம்பந்தமில்லாத மற்று ஒருவர் அனுபவிக்க இடம் கொடுக்கின்றனர். (பாடு பட்டு பணத்தை தேடி புதைத்து வைத்த மனிதர்காள், கேளுங்கள், கூடு விட்டிங்கு ஆவி தான் போயினபின், யாரே அனுபவிப்பார் அத்தனம்-ஔவையார்)    பொருள் இல்லாதவன், பரோபகாரம் செய்தாலே மதிப்பை பெறுகிறான். அவனுக்கு லோபம் என்ற குணம் இடையூறு செய்வதில்லை.

இந்த அரசனின் நல்வினை, மேலும் பல முனைகளில் இருந்தும் பொருள் வந்து சேர்ந்தது.   நதிகள் சமுத்திரத்தில் தாங்களாக வந்து சேருவது போல.  ஒரு சிலருடைய பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்.  நூற்றுக் கணக்கான நன்மைகள்  தானே வந்து சேருகின்றன.    பல திசைகளிலும் பகல் முழுவதும் திரிந்த பறவைகள் மரத்தில் வந்து இரவு அடைக்கலம் அடைவது போல, அருவிகள் வேகமாக பூமியில் விழுந்து வரப் போகும் வேணிற் கலத்துக்காக  பூமியில் நீரை சேர்த்து வைப்பது போல, ( நீர் நிலைகளாக பரவி கிடக்கின்றன).  நிலத்தடி நீர் ஒரு பக்கம், அருவி நீர்  விழுவது ஒரு பக்கம்  பூமியை நீரின்றி தவிக்க விடுவதில்லை.  அது போல, அந்த அரசனுக்கு அனைத்து வழிகளும் திறந்தே இருந்தன போலும்.   நாலா வழிகளிலும் செல்வம் சேர்ந்தது.

தன்னை திருத்திக் கொண்டவனாக கலசன் மக்கள் நலனை கவனிக்கலானான். ஒரு வியாபாரி போல கணக்கு வழக்குகளை திறமையுடன் குறித்து வைத்தான். தன் பார்வையிலேயே வைத்துக் கொண்டான்.  வரவும் செலவும் அவனறியாமல் நடக்காது என்ற நிலை வந்தது.  அரசனாக, தன் பிரஜைகளை தன் புதல்வர்களாக பார்க்கத் தெரிந்து கொண்டான், ஒரு தந்தையைப் போலவே.  பிரஜைகளின் நல் வாழ்த்துக்களும் பெற்றவனாக கலசன் குசலமாக- நலமாக இருந்தான்.  பிரஜைகளின் நல் வினை தானோ,  புத்தி கூர்மையுடன், தானே வணிக கூட்டங்களில் பங்கெடுத்து தீர்மானங்களைச் செய்தான்.  கணித அறிவும் கிடைக்கப் பெற்றான்.  தேவையான செலவுகளை தாராளமாக செய்தான். மக்கள் நலனுக்கு பெரும் பகுதி நிதியை  ஒதுக்கினான். வருங்கால செலவுகளுக்கு திட்டங்கள், ஒரு அரசு அலுவலக அதிகாரி போலவே கவனமாக விவரங்களுடன் எழுத கற்றான். தன் भूर्ज –பூர்ஜ மரத்தின் மட்டைகள் எழுத பயன்படுபவை, அதன் மேல் சாக்கு கட்டியால் எழுதுவது  வழக்கம் – அந்த மட்டையும், சாக்கு கட்டியும் அவன் அருகிலேயே இருந்தனவாம்.  நற்செயல்கள் எதுவானாலும் தாராளமாக செலவழித்தான்.  விலையுயர்ந்த பொருட்களை, பொன்னோ, மணியோ, ஆபரணங்களோ தானே பார்த்து வாங்குவான். இடைத் தரகர்கள் என்ற கூட்டமே நெருங்க விடவில்லை. 

நாளின் மூன்று பாகங்களாக தன் செயல்களை வரையறுத்துக் கொண்டான்.  முற்பகல் அரச பாலனம். பிற்பகல் யாருமறியாமல் எங்கோ சென்று விடுவான்.  தன் தேவை, பிறர் தேவை என்பதை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பவன், அந்த சமயம் ஒற்றர்களுடன் செலவிடுவானாம். ராஜ்யத்தில் அவன் அறியாதது உண்டானால், அது மக்களின் கனவில் வருவது தான். இல்லறத்தான் தன் குடும்பத்தைப்  பற்றி உள்ளும் புறமும் அறிந்திருப்பது போல தன் மக்களை அறிந்திருந்தான் என்றும், அதனால் எவருமே செல்வக் குறைவோ, உடல் நலக் குறைவோ வருந்த விடவில்லை என்றும் சொல்லப் படுகிறது.  512

மனிதர்களின் தராதரம் அறிந்து அருகில் வர அனுமதித்தான்.  பாதையில் குறுக்கிடும் முள் போன்றவர்களை அறவே தவிர்த்து விட்டான்.   எந்த தண்டனையும், திருடனுக்கு கூட மறைவாகவே கொடுத்தான். பகீரங்கமாக யாரும் தண்டிக்கப் படவில்லை என்பதும் ஒரு சிறப்பு.  முன் இருந்த மந்திரிகள் செய்த தவறான நடவடிக்கைகளை தொடராமல் விட்டு விட்டான்.    மந்திரிகளின் தேவைகளுக்கேற்ப அவர்கள் செய்வதையோ, செலவு செய்வதையோ மறுக்கவும் இல்லை.  அவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்திருந்தாலும் திருப்பிக் கொடுத்தான்.  விவாகம், யாகங்கள், யாத்திரைகள், மகோத்சவங்கள் இவை நூற்றுக் கணக்காக நடை பெற்றன. அவைகளுக்கு எந்த இடையூறும், பற்றாக்குறையும் இருக்க விடவில்லை. இவைகள் அவசியமான செலவினங்கள் என ஏற்றுக் கொள்ளப் பட்டன.

மற்ற அரசர்கள் இவைகளைக் கேள்விப் பட்டு அதிசயித்தனர். அவர்களின் உணவிலிருந்து உடை, நடை முறைகளை மந்திரிகளே கவனித்து வந்தனர்.  அவர்கள் இன்றி கூட அரசனால் இருக்க முடியுமா?   அதுவரை இந்த நடைமுறைகளே அரண்மனைகளில் இருந்தன என்பதால் வந்த வழக்கங்கள்.

தன்வங்கனின் மூன்று புதல்வர்களும், தக்கனா முதலியவர்கள், அவர்கள் புதல்வர்கள், குங்கா, மல்லா முதலியவர்கள், மற்றும் முன் மறைந்தவர்களின் இளைய சகோதர்கள்,  அனைவரும் வந்தனர். அவர்களுக்கு தகுந்த வசதிகள் செய்து கொடுத்தான்.  தன் கலைகளால் அமுதத்தை பொழியும் நிலவு போல, தேவர்களோ, பித்ருக்களோ, பூ லோக வாசிகளோ, ஒரே விதமாக குளிர்விப்பது போல எனலாம்.

பழைய சகவாசத்தால், பெண்கள் சபலம் மட்டும் இன்னும் விலகவில்லை.  உல்லி என்ற டக்கன் வெளி தேசங்களிலிருந்தும், துருக்க பெண்களையும் கூட  வாங்கி வந்தான். முன்  தானே கண்டவுடன் அபகரித்தோ, மணந்தோ, கொண்டு வந்த அந்த:புர பெண்களையும்  சேர்த்து எழுபத்திரண்டு மனைவிகள்.   தன் உணவில் மீனைச் சேர்த்துக் கொண்டும், மீன் எண்ணெய்யை அதிகமாக பயன் படுத்தியும்,  உடல் நலத்தை பாதுகாத்துக் கொண்டதாக கவி சொல்கிறார்.

இது சற்று உறுத்தலாக இருக்கவே, பரிகாரமாக,  முன் தீக்கு இரையான விஜயேச என்ற சிவன் கோவிலை, கற் கோவிலாக இருந்ததை, வானளாவிய பொன்னால் ஆன கோபுரத்துடன், பொற் குடை, யானை பிம்பங்கள் இவைகளுடன்  கட்டி முடித்தான்.  த்ரிபுரேஸ்வர கோவிலில் பினாகி எனும் சிவபெருமானுக்கு,   நெல்லிக் கனிகள்  அளவில்  மணிகள் பொன்னால் செய்து மாலையாக அணிவித்தான்.  அதை அடுத்து கலசேஸ்வரா என்ற கற்சிலையால் சிவ பெருமானின் உருவச் சிலையைச் செய்து மிகப் பெரிய கோவிலை, பொன்னால் இழைத்து அலங்கரித்தான்.  கோபுரத்தின் உச்சியில்  தேர்ந்த சில்பிகளால், பொன்னால் ஆன கண்டா மணிகள், மற்றும் பல அலங்காரமான பட்டயங்கள் நிறுவச் செய்தான். அதற்கு மேலும் ஏதோ சேர்க்க எண்ணியவன் அருகில் ஒரு துருக்க தேசத்து சில்பி தான் செய்வதாக சொன்னான்.  ஏற்றுக் கொண்ட பின் தாமிர தகட்டில் பொன் தகடுகளை பொருத்தி ரகசியமாக ஏதோ செய்வதை நோனாகா என்ற மந்திரி, தானே சில்ப கலையை கற்றவர் ஆனதால்  கண்டு கொண்டார்.  அது வரை அரச மரியாதையுடன் விருந்துண்டவன்,  அகப்பட்டான்.  அவனிடம் கொடுத்த வேலை மறுக்கப் பட்டது. வந்த வழியே சென்றான். அரசன் எண்ணிய பெரிய குடை சிறிதளவு பொன்னே பயன்படுத்தி, செய்யப் பட்டது.

அனந்தேச என்ற கோவிலில் பாண லிங்கம் என்பது இருந்தது.  அது போல  பெருமை வாய்ந்த பல கோவில்களை புனருத்தாரணம் செய்தும், இந்திரனை தோற்கடிக்கும் செல்வந்தனாக ஆன அரசன் பல புதிய அலங்காரங்களுடன் அழகுற நிர்மானித்தான்.

அந்த சமயம் ராஜபுரியின் அரசன் இயற்கை எய்தினான். அவன் மகன் சங்க்ராமபாலன் பட்டத்துக்கு வந்தான்.  ஒரு தந்தை வழி உறவினன்  தன் சிசுவான  மதனபாலன் என்ற மகனை பட்டத்துக்கு கொண்டு வர ஸூழ்ச்சி செய்தான்.  இதையறித்த ஸங்க்ராமனின் சகோதரி,  மற்றும் தக்குர  ஜஸராஜா என்பவரும் கலசனிடம் வந்து உதவி கேட்டனர்.  அரசனும் முன்  ஜயநந்தனுடன் இருந்து விவரம் அறிந்த  வீரர்களான  விஜ்ஜன்  முதலியோரை அனுப்பினான். 536

அவர்களும் அங்கு சென்று கலகத்தை அடக்கி அமைதி வரச் செய்தனர். அங்கேயே தங்கி விடுவார்களோ என்று பயந்த சங்க்ராமனின் மந்திரிகள் இவர்களை திருப்பி அனுப்புவதில் மும்முரமாக இருந்தனர்.  எப்படி கிளப்புவது? அவரவர்க்கு தோன்றியதைச் செய்தனர்.  இதை ஊகித்தவன் போல விஜ்ஜா அசையவில்லை.  ராஜபுதன வீர்கள், அவர்களுடைய குணமே பயமின்றி இருத்தல். வீரமும் நேர்மையும் உடையவர்கள்.  விஜ்ஜனுக்கு கோபம் வரும்படி செய்தனர். ஆங்காங்கு கைக்கூலிகளுக்கு பணம் கொடுத்து, நயமாக வேண்டிக் கொள்ளச் செய்தனர்.  சில நாட்கள் பொறுத்து, பின் ஒரு நாள்,  அரச சபையில் தாங்களே விடை பெறுவது போல பேசி, தங்கள் படையில் ஒரு பகுதியை பாதுகாப்புக்காக வைத்து விட்டு, ஊர் திரும்பினர்.

அந்த ராஜபுரி நட்பு நாடாக ஆனதில்  அரசன் கலசன் பல நன்மைகளைக் கண்டான்.  அரச நீதியை உள்ளும் புறமுமாக, அதன் நெளிவு சுளிவுகளோடு  அறிந்து கொண்டு விட்டவன் ஆனதால் மகிழ்ந்தான். 

நாளடைவில் விஜ்ஜா முதலானவர்கள் அரசனின் நன்றிக் கடனாக அரசில் பெரும் பதவி அல்லது ஏதோ ஒரு நன்மையை எதிர்பார்க்கலானார்கள். ஜயானந்தன் உதவியை நாடினர்.

அந்த சமயம் ஜயானந்தன் வயது முதிர்வால் நோய் வாய்ப் பட்டிருந்தான்.   நலம் விசாரிக்க வந்த அரசனிடம் ரகசியமாக ஜயானந்தன்  ஒருவிஷயம் சொல்ல வேண்டும் என்றவன்,  மற்றவர்கள் வெளியேறும் வரை காத்திருந்தான்.  ராஜ புரீ கதையை அனைவரும் விஸ்தாரமாக பேசிக் கொண்டிருந்தனர்.  சில அந்தணர்களுடன் விஜ்ஜனும்  இருந்தான். அரசன் கிளம்பினான்.  விஜ்ஜன் தாம்பூலத்தை துப்ப நகர்ந்த   வினாடி நேரத்தில், வழியனுப்பும் சாக்கில்  ஜயானந்தன் உடன் வந்தான்.  அரசன் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும், நான் கிளம்புகிறேன், என்றவனை கையைப் பிடித்து சங்கேதம் செய்தான்.   நிமிர்ந்து பார்த்து கண்களாலேயே வினவிய அரசனிடம், ரகசியமாக, நிச்சயமாக தெரியவில்லை. ஆனாலும் விஜ்ஜன் இந்த அளவு செய்து காட்டியதன் பின்னணியில் ராஜன்! கவனமாக இருக்க வேண்டும். உனக்கே எதிராக ஏதாவது செய்யக் கூடும். அவன் தன் ஊதியத்துக்கும் மேல் பல பங்கு செல்வம் சேர்த்து விட்டான். கணக்கில் வராத தனம்– இதைச் சொல்லி முடிக்கும் முன் களைத்தவனாக நிறுத்தவும் விஜ்ஜன் அருகில் வரவும் சரியாக இருந்தது.

திரும்ப அரண்மனை வரும் வழியில் அரசனின் கவனம் மாறியிருந்ததைக் கண்டு கொண்ட விஜ்ஜன், தான் வெளிநாடு செல்ல அனுமதி தர வேண்டினான்.  அரசனும் சற்று மறுத்து, நிர்பந்தித்து என்று சந்தேகம் வராமல் பேச்சைத் தொடர்ந்து விட்டு, உள் மனதில் தோன்றிய நிம்மதியை மறைத்துக் கொண்டு அனுமதி தந்தான்.  

தன் வீடு சென்றவன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு தன் சகோதரர்களிடம் விடை பெற்று அரசனிடம் சொல்லிக் கொள்ள வந்தான்.

 கவி சொல்கிறார்: அரசனுக்கும் அந்தரங்க விசுவாசியாக இருக்கும் அடுத்த நிலை அதிகாரிக்கும் இடையில் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும்.  அரச மரியாதைகள், தங்கள் கௌரவம் இவை தடுக்கும். உண்மையான விசுவாசி என்று நேற்று வரை நடந்து கொண்டதற்கும் இன்று வழியனுப்புவதற்கும் இடையில் தோன்றிய பெரும் பிளவு, இருவரும் அதை மறைக்க முயன்று கொண்டிருந்தனர்.  மனப் பூர்வமாக அரசன் தடுத்து நிறுத்தவில்லை.  விஜ்ஜனும் தன் மனத் தாங்கலை காட்டிக் கொள்ளவில்லை. உண்மையாக உழைத்தவன், இவ்வளவு தானா என்ற எண்ணம் வெளிப்பட்டு விடாமல் கவனமாக பேசி விடை பெற்றான். கூடவே நடந்து வந்த அரசனிடம் அட்டகாசமாக பேசுவது போல பேசினாலும் அந்த மனக் குறை விம்மலாக  வெளிப்பட்டது.

இது நடப்பது தான். இறக்கும் தறுவாயில் ஜிந்து ராஜனை ஹலதரன் காட்டிக் கொடுத்தான். அதே போல ஜயானந்தனும் தன் மரணத் தறுவாயில் விஜ்ஜனை மாட்டி விட்டு விட்டான். 554

 ஊர் மக்கள் திரண்டு வந்து விஜ்ஜனை வழியனுப்பினர்.  பலர் அவனை தடுத்து நிறுத்தவும் முயன்றனர். அரச சபையிலிருந்து யாரும் வராதது ஏமாற்றமளித்தது.

அரச சபையில் மற்ற மந்திரிகள் விஜ்ஜன் விடை பெற்ற பின், அரசனிடம் விஜ்ஜன் நாட்டிற்காக நிறைய செய்து விட்டான். என்றும் அவன் புகழ் தங்கியிருக்கும் என்று பேசியவர்கள், சில நாட்களில் அவன் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் எனலாயினர்.  அரசன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவன் சேமிப்பு. அதில் கை வைக்க வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

ஐந்து நாட்கள் தூக்கம் வராமல் அரசன் விஜ்ஜனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கவலையுடன் கழித்தான்.   ஸூரபுரம் சென்ற பின் உடன் சென்றவர்கள் மட்டுமாக திரும்பி வந்தபின் அரசன் தன் சந்தேகத்தை மற்ற மந்திரிகளுடன் பகிர்ந்து கொண்டான்.  ‘விஜ்ஜன் அதன் திறமையால் சங்க்ராமனுக்கு உதவியதும், கலகத்தை அடக்கியதும் அனைவரும் அறிவர்.   அவனுடைய மதிப்பு பொது மக்களிடையே உயர்ந்து உள்ளது.  ஆனாலும் நமக்கு அதுவே நமக்கு கவனமாக இருக்க ஒரு அறிவிப்பு ஆகும்.’  மந்திரிகள் வியந்தனர். அரசனுக்கு விவேகம் இருந்திருக்கிறது. அதனால் தான் நாம் சொல்வதை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்று  அறிந்தனர்.

போகும் இடங்களில் விஜ்ஜனும் அவன் பரிவாரமும் நல்ல வரவேற்பை பெற்றன.  பல இடங்களுக்குச் சென்றான்.  விஜ்ஜன் அரசன் கலசனுக்கு உண்மையாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டவன்.  உண்மையான ராஜபுதன வீரன் ஆனதால்  அது அவன் இயல்பான  குணம். அதிலிருந்து எள்ளளவும் விலகாமல் தன் சேவையை செய்தவன்.  கலசனை தான் வணங்கும் தெய்வத்துக்கு சமமாக மரியாதையுடன் அணுகி இருந்தவன்.

ஜயானந்தன் ஸூர்யமதியின் சாபம் பெற்றவன். சில நாட்களில் கால கதியடைந்தான்.  அதே சமயம் ஜிந்துராஜாவும் அதே போல சாபம் பெற்றவனே, அவன் காலமும் இயற்கையின்  வசம் முடிந்தது.

விஜ்ஜன் பல இடங்களுக்கும் சென்று பலவிதமாக கொண்டாடப் பட்டு, அந்தந்த தேசத்து அரசர்களால் வரவேற்கப்பட்டவனும் கௌட தேசம் வந்த பின் கால கதியடைந்தான்.  திடுமென பரவிய ஒரு  தொற்று நோய் தாக்கி அவனும் அவன் உடன் பிறந்தவர்களும் அடுத்தடுத்து மறைந்தனர். கலசனின் இளமையில் தீய வழியில் அவனை இட்டுச் சென்ற கூட்டத்தில் இருந்த மற்றொருவன் காட்டு வழியில் வன விலங்குகளால் அடித்து கொல்லப் பட்டான்.  மதனன் என்ற ஒருவன் சில காலம் இருந்தான்.  இன்னமும் கெடுக்க நினைத்தவர்கள்.  ஏதோ மீதி இருப்பது போல.

ஜயானந்தனின் புதல்வர்களுக்கு காவலனாக இருந்த வாமனன் என்பவனை அரசன் கலசன் முதன் மந்திரியாக நியமித்தான்.  இந்த அரச சபையில் இருந்த மந்திரிகள், அவர்களின் செயல்கள் பல , முதியவர்கள் வாயிலாக சொல்லி சொல்லிக் கேட்டு மக்களிடையே பரவியது.

அவந்திவர்மன் காலத்தில் அவன் வசம் இருந்த சில கிராமங்கள், அங்கு நிர்மாணிக்கப் பட்ட கோவில்கள்  இவைகளை நிர்வகிக்க அரசன் கலசன் ஒரு தனி நிர்வாக துறையை ஏற்படுத்தினான்.  பேராசையே காரணம்.  அதற்கு கலச கஞ்சா என பெயரிட்டான். (கலசனின் பொக்கிஷம்)

நோனக என்ற மந்திரி பொறுப்பாக நிதி நிர்வாகத்தை செய்து வந்தவர்,  அவர் வரையில் நியாயமாக அரசின் நிதி நிலையை சீராக வைத்துக் கொண்டிருந்தவர்,   அவரையும் கலசன் சந்தேகக் கண் கொண்டு பார்க்கலானான்.  ‘பாதாக்ர’  என்ற உயர் பதவியை கொடுக்காமல் இருந்தான். அவருக்கு மக்களிடையே நன் மதிப்பு இருந்தது  ஒரு காரணம்.

ராஜகலசனின் மகன் கள், ப்ரசாத கலசன் முதலானவர்கள் அரசனுக்கு நெருக்கமாக ஆனார்கள். தன் வாழ்க்கையே படிப்பினையானதால், கலசன் இளைஞர்களை கண் காணித்தான்.  கட்டுக் கடங்காமல் செல்ல விழைந்தவர்களை ஆரம்பத்திலேயே கண்டித்தான், அல்லது விலக்கி விட்டான். 573

இதற்குள் வளர்ந்து விட்ட மதனபாலன், ராஜ புரியின் தலைமையை எதிர்த்தான். பப்படா -Bappatta -என்பவன் தலைமையில் ஒரு சிறு படையை கலசன் அனுப்பினான்.  மதனபாலனுக்கு அந்த உள் நாட்டிலேயே ஆதரவும் இல்லை. எனவே, பப்படா, அவனை சிறை பிடித்து காஸ்மீரம் அனுப்பி விட்டான்.

வராஹதேவனின் சகோதரன் கந்தர்பன் என்பவன் அரச சேனையில் வேரூன்றி விட்டான். எல்லை பகுதியை தாமரர்களிடம் இருந்து பாதுகாக்க  அவனை அனுப்பி வைத்தான்.  அந்த தாமரர்கள் நம்பகமானவர்கள் அல்ல. தங்களுக்கு சாதகமான பக்கம் சாய்பவர்கள்.  அவர்களை சமாளிக்க ஜிந்து ராஜன் கடை பிடித்த கொள்கைகளை உடன் இருந்து அறிந்தவன் ஆதலால் கந்தர்பன் மிகப் பொறுமையாக இருந்து அவர்களையும் பகைக்காமல் எல்லைப் பகுதியின் பாதுகாப்பையும் கவனித்துக் கொண்டான்.  ஜிந்து ராஜனின் ராஜ தந்திரங்கள் அறிந்தவன், தலைமை மந்திரியாக, சேனாபதியாக பதவி வகித்தவன்.  ராஜபுரியை வென்றவன், மேலும் பல பிரதேசங்களை எதிர்த்து போரிட்டவன், தன் தகுதிக்கு இந்த வேலை ஏற்புடையதல்ல என்று  மிகவும் சினந்தான்.  அடிக்கடி பதவி விலகுவதும். அரசன் தலையிட்டு மீண்டு வருவதுமாக இருந்தான்.

மதனனை படைத் தலைவனாக ஆக்கினான்.  அவனும் பல அரச தகுதி, ஆதரவுகளுடன்  தாமரர்களை எதிர்த்து போராடி அழித்தான்.  நகர பாலனாக இருந்த ஸ்யேனபாலன்- கழுகுகளை வளர்ப்பவன், விஜயசிம்ஹன் என்பவனை பல திருடர்களை அவன் பிடித்து தண்டித்தான் என்பதை பாராட்டி.  ஸ்ரீ நகர கமிஷணராக- ஆணையாளராக  நியமித்தான்.   

கந்தர்பன், உதயசிம்ஹ மற்றும் சிலருடன்  பரிவாரங்களோடு சென்று புவனராஜா என்ற அரசனை அவனுடைய நாட்டை விட்டே துரத்தி விட்டான்.  நீலபுரம் என்ற தேசத்து அரசன், கீர்த்திராஜா என்பவன் எதிர்த்தான்.  அவன் மகள் புவனமதி என்பவளை விவாக சம்பந்தம் என்ற முறையில் ஏற்றுக் கொண்டு சமாதானம் செய்து கொண்டான், 582

குங்கா என்பவனின் மகன் மல்லா என்பவனை எல்லக் காவலுக்கு நியமித்து விஜய சிம்ஹனை விடுவித்து விட்டான். மல்லன் ஆடம்பரமாக மணிகள் பதித்த பதவி அடையாளங்களுடன் பெருமையாக வளைய வந்தான்.

உத்தரனுடன்  படை பலம் இன்றி போருக்குச் சென்ற  மகா பாரத அர்ஜுனன்  செயலை நினைவு படுத்திக் கொண்டு தானும் அதே போல, தற் பெருமை, கர்வம் இவைகளுடன், ஐம்பது குதிரை வீர்களுடன் கிருஷ்ணா   நதியை கடந்து சென்று உரசா என்ற பிரதேசத்து Abayaa அபயா என்றஅரசனை வென்றான்.  அந்த அரசன் மேலும் படைகள் வருவதாக நினைத்து பயந்து சரணடைந்து விட்டான்.

இப்படி சென்ற இடமெல்லாம் நயமான நடவடிக்கைகளால் ராஜ்யத்தை விஸ்தரித்து வந்தான்.  அதன் பின், ஒரே சமயத்தில் எட்டு அரசர்கள்  அரசனைக் காண வந்தனர்.   கீர்த்தி, நீலாபுர தலைவன், ஆசாடா சம்பா என்ற பிர தேச ராஜா,  தக்காவின் மகன் கலசன், வல்லபுரம் என்பதை ஆண்டவன்,  சங்க்ராமபாலன் என்ற ராஜபுரி அரசன்,   உத்கர்ஷா லோஹர பிரதேச அரசன்,  ஔர்வசோ என்ற முங்கனின் மகன்சங்கடா  கம்பீராசிஹா காந்தேசம் என்ற தேசத்து அரசன் மற்றும் காஷ்டவாட தேசத்து அரசன், உத்தமராஜா என்பவர்கள்.

விதஸ்தா ஏரி பனியில் உறைந்து இருந்த போதிலும் இவர்கள் அனைவரும் பலவிதமான உபசாரங்களுடன் மகிழ்ச்சியாக சிறிது காலம் வசித்தனர்.  அவர்கள் நினைத்தே பார்த்திராத அளவு வசதிகளையும், நல்ல உணவு, இருப்பிடங்களையும் வாமனன் – முக்ய மந்திரி ஏற்பாடு செய்திருந்தான். வெள்ளம் பெருகி வரும் சமயம் எது எந்த நதி ஜலம் என்பதைக் கண்டு பிடிக்க முடியாமல் போவது போல அரசர்கள் அவர்கள் பரிவாரங்கள், யார் யார் என்பது தெரியாமல் போன போது கூட யாரும் மனத் தாங்கல் அடையாத படி ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன என்று பாராட்டி விட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற பின் அரச அதிகாரிகளில் சில மாற்றங்கள் வந்தன.  மல்லன் பதவி விலகினான்.  கந்தர்பன் எல்லைக் காவல் பதவியை ஏற்றான்.   முக்யமந்திரி எந்த பதவியையும் விரும்பாமல் தானே

தன் சொந்த செலவிலும், படை பலத்துடனும் ஸ்வாபிகா என்ற கோட்டையை கைப்பற்றி விட்டான். அரசன் வேண்டிக் கோண்ட பின்னும் கலசனின் கீழ் எதையும் பெற விருப்பம் இன்றி, ஸ்ரீநகரத்தில்  தங்கி விட்டான். பிரசஸ்த கலசன் அந்த பதவிக்கு வந்தான்.  பொறுமையோ, வாக்கு வன்மையோ இல்லாதவன், எளிதில் கோபமடைபவன், அரசனின் மகன் என்ற தகுதி மட்டுமே என்று வந்தவன்,  தனது என்று தனி படையைச் சேர்த்துக் கொண்டு, தன் தம்பி ரத்னகலசனை எல்லை காவலில் அமர்த்திக் கொண்டான். புலியின் இடத்தை பூணை பிடிக்க முடியுமா? என்ன தான் வேஷம் போட்டாலும், பூணை பூணை தான்.   அரசன் கலசன் இதைக் கண்டு கந்தர்பனையே,   தானே சென்று சமாதானப்படுத்தி அந்த இடத்துக்கு வரவழைத்துக் கொண்டான்.

ஒரு சமயம் ஒரு திருடனை அதிகமாக அடித்ததில் அவன் மரணம் அடைந்து விட்டான். அதனால் பெரிதும்  மனம் வருந்தியவனாக வேலையை துறந்து கங்கை கரைக்கு சென்று விட்டான்.

இவ்வாறாக பல ஏற்றங்களும் தாழ்வுகளும்,  சிறந்த மந்திரிகள் உண்மையாக உழைத்து வளர்ந்த அரசு அதை நிர்வகிக்க வேண்டியிருந்தது.  உடன் நடனம் ஆடும் நாட்டிய கலைஞர்களை ஒன்று கூட்டி சமாளித்து தன் நிகழ்ச்சியை சரிவர அமைக்கும் நடன ஆசிரியர் போல என்று உவமை.

 ஜயவனம் என்ற இடத்தின் ஒரு புதிய, பெரிய நகரத்தை உருவாக்குவதில் முனைந்தான். நிரந்தரமாக அரண்மனை வளாகம்.  அதன் பகுதியாக தன் பெயரைப் பொறித்த மிகப் பெரிய நகரம். மடாலயங்கள், அக்ரஹாரங்கள்,  பெரிய மாளிகைகள், வசதிகள் அனைத்தும் கொண்ட பெரிய வீடுகள். நீர்  நிலையம் அருகில் விசாலமான உபவனங்கள், என்று மிக கவனமாக திட்டமிட்டு வேலைகள் ஆரம்பித்தன.

அந்த சமயம் தான் பிரசித்தமான அரசன்  ஹர்ஷன்  என்ற அரச குமாரன் ஆளுமையும், ஆற்றலும் உடையவனாக மற்ற எந்த அரசர்களிடமும் இல்லாத பல நற்குணங்களோடு பல மொழிகளை அறிந்தவனாக, அனைத்திலும் கவி பாடக் கூடிய திறமையாளனாக, கல்விக் கடல் எனும்படி பல விஷயங்களையும் கற்றவனாக, நாடு கடந்தும் புகழ் பெற்றவனாக  இருந்தான். 610

(தன்வங்கனின் பேரன் பப்பிகா -Bappika – என்பவனின் மகன் ஹர்ஷன் – தனக்குப் பின்  அரசன் ஆக முன் அரசன் அனந்த தேவன் பரிந்துரைத்தும், கலசன் அரசனானான், வரலாற்று  பிரசித்தி பெற்ற ஹர்ஷ சக்க்ரவர்த்தியா என்பது உறுதியாக தெரியவில்லை)

தந்தை ஒரு கருமியாக இருந்தான்.  அரசவையினரில் சிலர், அரசனின்  இந்த குணத்தால் பாதிக்கப் பட்டனர். பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள்,  இந்த சிறுவன் பொறுமை, , வீரம், ஆற்றல் போன்ற நற்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததை கவனித்தனர்.  மகனுக்கே ஊதியம் போல ஒரு தொகை கொடுத்த அரசனிடம் வெறுப்பும் வந்தது.  ஊதாரிகள்,  தேவையின்றி செலவழித்து விட்டு ஒரு நிலையில் செலவை சமாளிக்க முடியாமல் ஒரு வேளை உணவையே தியாகம் செய்ய வேண்டி வந்தது.

அரசனும் இசையை விரும்புபவன் என்பதால்  அரச சபையில் அவன் முன் பாடுவதை ஹர்ஷன் வழக்கமாக கொண்டிருந்தான்.  அதற்கான சன்மானமும் பெறுவான்.  தன் தினசரி தேவைகளுக்கு அது உதவியாக இருந்ததால்,  அரச சபையில்,  அரசன் முன்னிலையில் உத்சாகமாக பாடுவான்.  ஒரு நாள்  அரசன் முன்  பாடிக் கொண்டிருந்த பொழுது,  சபையினர் ரசித்து உத்சாகமாக ஹ ஹா என்ற சமயம், எதேச்சையாக செய்வது போல அரசன் எழுந்து உள்ளறை சென்று விட்டான்.  அவன் சென்றது இயற்கையின் அவசரமாக கூட இருந்திருக்கலாம்.   இது ஒரு அவமானமாக ஹர்ஷனுக்குப் பட்டது. யாரானாலும் நல்ல பாடகன் அல்லது கவிஞன்,  ஏதோ ஒரு கலையில் விற்பன்னன் இவர்கள் இறைவன் அருள் பெற்றவர்களே.  செல்வமோ, ஊதியமோ அவர்களுக்கு இதற்குப் பின் தான். ரசிக மக்களின் தலையாட்டல், ரசனையை வெளிப்படுத்துவது  கோடிக் கணக்காக கொடுப்பதற்கு சமம்.  மகன் தானே, அரசன் ஏன் அலட்சியப்படுத்தினான்?

கோபமும் தாபமுமாக தலை குனிந்து அமர்ந்திருந்தான். தன் அதிகாரி பொறுமையின்றி, தன் ஆற்றலை மதிக்காமல் இருப்பதும்,  நண்பனாக இருப்பவன் உடன் இருந்து ஏமாற்றுபவனாக இருப்பதும், மனைவி கடும் சொல் சொல்பவளாக இருந்தாலும்,  மகன் கர்வியாகவோ, உன்மத்தனாகவோ,  பரிஜனங்கங்கள் – உதவிக்காக வைத்துக் கொண்ட பணியாளர்கள் அலட்சியமாக இருந்தாலோ, இவைகளை பொறுக்க முடியும், ஆனால்,  தன் திறமையை கேட்டு அறிந்து பாராட்ட வேண்டியவர் அவமதித்தால்,  கண்களில் அடி பட்டது போன்ற துயரம், இதயமே உடைந்து விடும் போன்ற அவமானம், தந்தையே ஆனாலும் தாங்க முடியாத துயரம். 

ஒரு பணியாளன் அருகில் வந்தான். விச்சாவட்டன் என் பெயருடையவன்.  விடன்.= குணமற்றவன்.  ‘ஏன் வருந்துகிறாய், ராஜ்யத்தை கைப் பற்றிக் கொள், அரசனை வதைத்தால் ஆயிற்று ‘  பல்லைக் காட்டிக் கொண்டு இளித்தபடி ஏதோ நன்மையைச் சொல்பவன் போல அறிவுரை சொல்லலானான்.  ஹர்ஷனின் துக்கம் கோபமாக மாறியது. அவனை திட்டி இனி இப்படி பேசினாயோ, பார் என்று விரட்டி விட்டான்.  அவன் அருகில் இருந்த தம்மடன் என்பவனிடம் சொன்னான்.

இப்படி ஒரு சிலர் அரச சபைகளில் இருப்பர். தாங்கள் போகங்களை அனுபவிக்க யார் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவதே தொழில்.  அனுதாபமாக பேசுவது போல அருகில் வந்து, இருபக்கமும் சண்டையை தூண்டி விடுவர். வயதான அரசன், இனி அதிகம் எதிர் பார்க்க முடியாது, வரும் கால அரசனுக்கு இச்சகமாக பேசி உள் நுழைவது இவர்கள் வழக்கம்.  விலை மாது போன்ற குணம்.  திரும்பி வந்த அரசன் அவனை பாராட்டி சன்மானமும் அளித்தார்.  பிரியமாக பேசி அருகில் அமர்த்திக் கொண்டு உணவருந்தினார். அடுத்த நாளும் அதே போல அவருடனேயே இருந்து அவருடன்  மதிய உணவையும் சாப்பிட்ட பிறகு தன் வீடு வந்தான்.  போகும் வழியில் விச்சாவடன் அருகில் வந்து அதே விஷயத்தை ரகஸ்யமாக சொன்னான்.  தடுத்தும் கேளாமல்  பின் தொடர்ந்தவனை கோபித்து விரட்டினான். அதன் பின்னும் அவன் தொடர்ந்து வந்து அதையே சொல்லிக் கொண்டிருந்தான். பொறுக்கமாட்டாமல்  ஓங்கி கையால் அடித்து விட்டான்.  அவன் மூக்கில் உதிரம் வழியலாயிற்று.  அதைப் பார்த்து மனம் இளகிய ராஜ குமாரன்,  தன் அணுக்க பணியாளர்களை அழைத்து அவனுக்கு சிகித்சை செய்யச் செய்தான்.   வீடு வரை கொண்டு விட ஏற்பாடு செய்தான்.

 காமினீ எனும் பெண்கள் மென் சிரிப்பாலேயே தங்கள் பக்கம் வரவழைத்துக் கொள்வது ஒரு திறமை என்றால் இது போல கீழ் நிலையில் உள்ள பணியாட்கள் தங்களாகவே முன் வந்து அட்டை பூச்சி போல ஒட்டிக் கொள்தும் அவர்கள் திறமையே.   அவர்கள் வேண்டியதை அடைந்த பிறகு அந்த பூச்சி போலவே விலகி விடுவர். இவர்களுக்கு இடம் கொடுத்தால், அட்டை விலகியவுடன்  உதிரம் பெருக நிற்பவன் கதி தான் ஆகும்.

 யதேச்சையாக சந்திப்பது போல அடிக்கடி எதிர் படுவான்.   சமயம் கிடைத்த பொழுது தம்மடனும் சம்மதிக்கிறான் அவனும் உதவ தயாராக இருக்கிறான் என்று பேச்சு வாகில் சொல்வது போல சொல்வான்.  பாபிகள், அவன் மனதைக் கலைத்து அரசனை கொல்வது தான் வழி என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

சினேகம் என்பது துளி கூட இல்லை, ஆனால் சதா கண்ணில் பட்டுக் கொண்டிருந்தனர். ஹர்ஷனுக்கு விரட்டி அடித்தும் வருவதை தடுக்க சொல்லி சொல்லி அலுத்து விட்டதோ,  மௌனம் சாதித்தான்.  அந்த விச்சாவடன் அரசனிடம் சென்று இதையே தங்களுக்குள் நடந்த பேச்சாக அரசனிடம் தெரிவித்து விட்டான்.  முதியவர் திடுக்கிட்டார்.  அன்றைய தினம் பார்த்து, பயந்தவனாக, மத்யான்ன உணவருந்த அரசவைக்கு வரவில்லை.   தந்தையின் தூதர்கள் வந்து அழைத்த பொழுது கூட வெளி வரவில்லை.

அவனை எதிர் பார்த்து இருந்தவர், வரவில்லையென்றதும் சந்தேகம் விலகியது, ஆனாலும் மகன் வரவில்லையே என்ற துக்கம் தானும் உணவருந்த மனம் வராமல் இருந்தார்.  பரி ஜனங்களும் என்ன காரணம் என்று கலங்கினர்.   தக்கனன் தன் சகோதரனுடன் காண வந்தான், (இருவரும் தன்வங்கனின் மகன் கள்) இருவரும்  மறு நாள் காலை வந்த பொழுது  அவர் மடியில், தலை வைத்து  என் மகனே என்னை கொல்லப் பார்க்கிறான் என்று சொல்லி விசித்து அழுதான். 632

தம்மடன் பற்றி சொல்லி விட்டு, எதுவானாலும் செய்,  என்ன செய்தாலும் சரி எனவும் எங்களிடம் விட்டு விடு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எங்கள் கடமை அது.   உன் ராஜ்யத்தில் ராஜன்! உன் அனுமதி இருக்கும் பொழுது நாங்கள் இருவரும் வரும் ஆபத்தை கடக்க என்றே விரதம் பூண்டவர்கள். என்றனர். வாசலில் காவல் இருப்போம்.  எல்லா திசைகளிலும் காவல் ஆட்களை நியமித்து விடுகிறோம் என்றனர்.  அதே போல தம்மடனையும் அவன் கூட்டாளியும் பிடித்து  விட்டனர்.  ரகசியமாக நாடு கடத்த  வெளியில் தெரியாமல் இருவரையும் நடுவில் நிறுத்திக் கொண்டு  அரசனிடம் கொண்டு வந்தனர்.  தங்கள் சூழ்ச்சி அரசனுக்கு தெரிந்து விட்டது இனி சிரச்சேதம் தான் என்று பயந்த இருவரும் அரசன் காலில் விழுந்தனர்.  அரச துரோகம் மன்னிக்க முடியாதது.  உயிர் பிழைத்தால் போதும் என தாங்களே. நாட்டை விட்டு வெளியேறுவதாக வாக்களித்தனர்.  தன்வங்கனின்  புதல்வர்கள்,  ராஜ்யத்தின் எல்லை தாண்டி இருந்த    ஒரு மடாலயத்தில் சேர்த்து விட்டனர்.  அது ஒரு வித தண்டனை. மடாலயத்தின்  நிர்வாகிகள் அறியாமல் வெளியேற முடியாது என்பதால் சிறை போலத்தான்.    அரச துரோகத்துக்கு தண்டனை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்.  நாட்டை விட்டு விலக செய்வது ஒரு வழி. வழியில் யாராவது அவர்களைக் கொன்று விட்டால் அரசன் பேரில் சந்தேகம் வரும் என்பதால் படை பலத்தோடு அனுப்பி வைத்தனர்.

தன்வங்க புதல்வர்கள் விடை பெற்றுச் சென்றனர். அரண்மனை வெறிச்சோடியதாக அரசன் உணர்ந்தான். மகனை அழைத்து வர ஆணையிட்டான்.  ஹர்ஷனைப் பார்த்து அரசன் சொன்னான்: ‘மகனே, இந்த உலகம் முழுவதிலும் எல்லா இடத்திலும், தந்தை- மகன்  என்ற உறவு தான் நிலைத்து நின்று வம்சமாக ஆகிறாது.  அதைத் தான் பொதுவாக மக்களும் அங்கீகரிக்கிறார்கள்.  அத்ரி மகரிஷியின் மகன் சீதாம்சு என்றே அழைக்கப் படும் சந்திரன்.  மூவுலகிலும் சந்திரனின் ஒளி பரவி அதனால் பெரும் புகழ் அத்ரி மகரிஷிக்கு பெருமை சேர்க்கிறது. மகனே, அதே போலத் தான் உன்னால் நான் பெருமை பெறுகிறேன். என்னை நன்மகனைப் பெற்றவன் என்று போற்றுகின்றனர்.   அதனால் நீ உன் வரை நல் குணம் வாய்த்தவர்களிலும் முதலாக எண்ணப் படுபவனாக,  களங்கமில்லாத புகழ் பெற்று அசட்டு மக்கள் போகும் அத்வான-ம் காட்டு வழியைத் தவிர்த்து உன் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள். இப்பொழுது சொல், எந்த வழியை தேர்ந்தெடுக்கிறாய்?  என் கடமை என் மூத்தோர்கள் பரம்பரையாக சேர்த்த செல்வத்தை ராஜ்யத்தை இம்மியளவு கூட குறையாமல் உன் கையில் ஒப்படைக்க வேண்டும்.  ஏன் எதற்கு என்று கூட விசாரித்து தெரிந்து கொள்ளாமல் தவறாக என்னை குற்றம் சொல்கிறாய்.  அரசன் போதுமான செல்வம் இல்லாமல் இருக்க கூடாது. எந்த செயலும் செல்வம் இல்லை என்பதால் நிறக் கூடாது. அப்படி கையை விரித்தால், பொது மக்கள் மட்டுமல்ல தனக்குத் தானே அவமானமாக உணர்வான்.   இவ்வாறு நினைத்து தான் பொக்கிஷத்தை பாதுகாத்து, செலவை குறைத்து என் ஆட்சியை முடித்து உன் கையில் கொடுக்கும் வரை , இந்த செல்வத்துக்கு நான் உரிமை கொண்டாடவில்லை, பாதுகாக்கும் பொறுப்பைத் தான் செய்து வருகிறேன்.     உனக்கு முடி ஸூட்டி விட்டு நான் வாரணாசி போகிறேன்.  அல்லது  நந்தி க்ஷேத்திரம் போகிறேன்.  ராஜ்யத்துக்கும், ராஜ்யத்தின் அனைத்து செல்வங்களுக்கும் நீ உரியவனாய் ஆவாய். அதிக நாள் காத்திருக்க வேண்டாம்.  என்ன காரணம், இப்படி ஒரு அனார்ய- பெருந்தன்மையில்லாத, அறிவில்லாத  ஒரு செயலை செய்ய முனைந்தாய்?  அந்த துஷ்டர்கள் என்னிடம் சொன்னது தவறாக இருக்கவேண்டுமே என என் மனம் வேண்டிக் கொள்கிறது.  என் மகன்  அப்படி நினைக்க மாட்டான் என்று உள் மனம் சொல்கிறது.  அதனால் உண்மையைச் சொல். இந்த களங்கம் நீங்கட்டும்.  உன்னை தெளிவு படுத்திக் கொள்.  உன் வரையில் தூய்மையானவன், எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டு.  தந்தையிடம்  அன்புடையவன் தான் என்று அறிவேன். எதுவானாலும் தயக்கமின்றிச் சொல். இதற்குள் ஏதோ இருவருக்கிடையில் தகராறு என்று நாட்டிற்குள் வதந்தி பரவினாலும், நாம் இணைந்து பதில் சொல்லியாக வேண்டும். ‘

ஹர்ஷன் திக்கு முக்காடினான். என்ன சொல்வது? தந்தை அழகாக அன்புடன் உணர்ச்சி பூர்வமாக  நிலைமையை கணித்தவராக பேசியது மனதை தொட்டது. வணங்கி விட்டு அதை அவரிடமே பாராட்டி சொன்னான். சொல்கிறேன், உள்ளபடி நடந்ததை நம் இருவருக்கும் பொதுவான நலம் விரும்பிகள் முன் சத்யமாக சொல்கிறேன். இந்த  சம்பவம் முழுவதும் இடையில் புகுந்து கெடுக்க எண்ணிய ஒரு சிலரின் தன்னலமே குறியான செயலே –   என்றவன் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க வெளியேறினான்.

அரசன் உடன் செல்ல அனுப்பிய தூதனையும் விலக்கி விட்டு தன் இருப்பிடம் சென்றான்.  அவனை அந்த துஷ்டர்கள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டுமே, என்ற எண்ணம் வரவும் ஹா மகனே என்று புலம்பிய அரசன் தன் தலையில் அடித்துக் கொண்டு அவனுக்கு ஏதாவது தீங்கு நிகழ்ந்தால் நான் ஏன் இருப்பேன், என்னை கொன்று விடுங்கள் என்று கதறினான்.  அவனை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய வீர்களை அனுப்பினான்.

அரசன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த  ஒருவன், தண்டன் என பெயர் உடையவன்,  தான் வேறு விதமான செயல் திட்டங்களோடு தன் ஆட்களோடு வெளியேறினான்.  ஹர்ஷணின் வீட்டு வாசலில் அரசனின் சேவகர்கள் காவல் இருந்தனர்.  அவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர்.

நுழைந்தவர்கள், ஹர்ஷனை உள்ளே வைத்து வாசல்  கதவுகளை அடைத்து, அரச குமாரனை பார்த்து கடுமையாக பேசினர்.  ‘ ஏன் இப்படி ராஜ துரோகமான செயலைச் செய்கிறாய், உனக்காக உன் தந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார். உன்னை எந்த துன்பமும் அண்டாமல் காவல் இருக்கும் தந்தையை பகைத்துக் கொள்ள என்ன காரணம் படித்தவன் தானே, சாஸ்திரங்கள், சஸ்திரங்கள்  அனைத்தையும் கற்றவன் தானே

‘ என்று நிஷ்டூரமாக பேசினர்.  கண்டபடி பேசினர்.   உன் தாய் என்ன அரச குல பெண்தானா? ஏதோ காரணம் மரணம் நிச்சயம். அவளும் மரிப்பாள்.  எதற்காக தண்டம் வைத்திருக்கிறாய்? எடு உன் ஆயுதத்தை,  உன் தாயை நல்ல க்ஷத்திரிய குலப் பெண்தான் என்று நிரூபி.  வா, நான் முன் செல்கிறேன், விபத்தோ, விஜயமோ உன் திறமை, வீரம் இருந்தால் இதில் காட்டு.  எழுந்திரு. முதலில் நகம், கேசம் இவைகளை சரி செய்து கொள்.  வீரனுக்குரிய உடைகள், கவசம் இவைகளை அணிந்து கொள். உன் மனைவியை மணந்த அன்று அணிந்த மாலையை அணிந்து கொள். ‘ இவ்வாறு சொல்லி அரசனுக்குரிய ஆயுத பலத்தைக் காட்டத் தூண்டினான்.

உள்ளறைக்கு அழைத்துச் சென்ற பின், வெளீயில் நின்ற ராஜசேவகர்களைப் பார்த்து, ‘உங்கள் அரசகுமாரன் எங்கள் வசம் உள்ளான். என்ன செய்வீர்களோ, செய்யுங்கள்’ என்றான்.

துர் தேவதைகள் தாக்கியோ, கிரகங்களின் கோளாறினால் உடல் நலம் கெட்டாலோ, அதற்கான மருந்துகள் சிகித்சைகள் செய்ய வேண்டும். எதிரி வந்து முற்றுகையிட்டால், தன் வீர்களுடன் எதிர்க்க வேண்டும்.  பூமியை ஆளும் அரசன் நாலா திசைகளிலும் பல விதமான அச்டுறுத்தல்களை சமாளிக்க அறிந்து கொள்ள வேண்டும்.   சமயோசிதமான முறைகளால், புத்தியை பயன்படுத்தி எதிரியை அழிக்க

 வேண்டும்.  

அரச சேவகர்கள் போர் புரியும் அட்டகாச ஒலிகளோடு, மாளிகையின் தடுப்புச் சுவர்களின் மேல் ஏறித் தாண்டி குதித்து உள்ள வந்தனர்.  வெளியில் வந்தால் தாக்க வசதியாக அறைகளைச் சுற்றி நின்றனர்.  இரண்டு, மூன்று சேவகர்கள் எந்த வழியிலும் வெளியேறலாம் என்பதால் நடுவில் நின்றனர்.   தண்டனின் ஆட்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.  வாய் வார்த்தையாக ராஜ சேவகர்களை அடிக்க வேண்டாம் என்று எச்சரித்து விட்டு தங்களுக்குள்ளேயே போர் முறைகளை பயிலுபவர்கள் போல யுத்தம் தொடர்ந்தது.  ஒரு சிலர் ஓடி ஸூர்யமதி கௌரீச ஆலயங்களில் சரண் அடைந்தனர்.  சிலர் சதாசிவ ஆலயம் அருகில் கொலை வெறியோடு ஓடினர்.  அரசன் தன் சேவகர்களிடம் கருணை உடையவன், அவன் நம்பிக்கைக்கு பாத்திரமான எவரையும் கொல்லக் கூடாது என்று திட்டமிட்டிருந்தாலும் சகஜன் என்ற ஒருவன் மடிந்தான்.  ராமதேவன் என்ற பண்டிதன், சாஸ்திரம் அறிந்தவன், வீரன், அவனும், கேஸி என்ற மற்றொருவன் இருவரும் கர்ணாட  தேசத்தினர் போரில் அடி பட்டு வீழ்ந்தனர்.  தண்டகனின் ஆட்களில் சிலர் ஆயுதங்களை போட்டு விட்டு ஓடினர்.  சிலர் தங்களை மாய்த்துக் கொண்டனர்.  சிலர் கைதாகினர்.  கோழைகள்.  

அறுபத்து நான்காம் ஆண்டு வளர் பிறை ஆறாம் நாள்,  சில கலக விரும்பிகளால், தந்தை மகனிடையே  மன வேற்றுமையை உண்டாக்கினர்.   அனாவசியமாக அரச குமாரன் சிறைப் பட்டான்.  அதையறிந்த ராணி புவனமதி தானே தன் கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டு இறந்தாள். 677

தேவையற்ற அளவுக்கு மீறிய  ஆடம்பர ஆசை, பிரியமான பெண்ணின் போதனை, துஷ்டர்களின்  சகவாசம்,  பெற்றோர் தங்கள் செயல்களில் மூழ்கி தன் குழந்தைகளிடம் அன்பு காட்டாமல் இருத்தல்,  மந்திரிகளிடம் ஒத்து போகாமை, உடன் பிறந்தவர்களின்  குறுக்கீடு, மாற்றாந்தாயின் பொறாமை, இவை அரச பதவிக்கு காத்திருக்கும் இளம் அரச குமாரர்களை பாதிக்கும்.  பெரும் பாலும் இவர்கள்  செய்வதின் நோக்கம்  தந்தை  மகனுக்கு இடையில் விபரீதமாக சொல்லி, இருவரிடையே பூசலை ஏற்படுத்துவது தான்.

மந்திரிகள் மூலமாக நடந்ததை அறிந்த அரசன், மகன் நிரபராதி, அவனை ஆட்டுவித்த துஷ்டர்கள் விலகி விட்டனர் என்பதால் மன நிம்மதி அடைந்தான். அதன்பின் மகன் குடும்பத்தினருக்கு தேவையானதை தானே முன்னின்று கவனித்து செய்தான்.  அந்தரங்க ஆலோசகன் பிரயாக ராஜனை கூட சந்தேகப் பட்டோமே என்று வருந்தினான்.   நோனகனோ,  நீயே செய் அல்லது யாரையாவது அனுப்பி கண்களை தாக்கு, அல்லது அழித்து விடு  என்று உபதேசித்ததை நினைத்தான்.  அரசன் தன்னையே நொந்து கொண்டான்.  எந்த அளவு இறங்கி இருக்கிறோம், பசுக்கள் போல காமத்தை அடக்க மாட்டாமல், மகனுடைய மனைவிகளை கூட அனுபவித்தோம்.  அவர்களில் ஒருவள் ஸுகலா என்பவள் இதற்கு ஒத்து பாடினாள். அவள் துக்கா என்ற அரசனின் பேத்தி.  நோனகாவும் அவளுமாக ஹர்ஷனுக்கு விஷம் கொடுக்க இரண்டு சமையல் வேலை செய்பவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு திட்டமிட்டனர்.  ஆனால், மற்றொரு சமையல்காரன் ஹர்ஷனுக்கு தெரிவித்து விட்டான். அவன் மெய்க் காப்பாளர்கள், அதை இரு நாய்களுக்கு கொடுத்து பரிசோதித்து அவை இறந்து விட்டன என்று வந்து சொன்னார்கள்.  ஹர்ஷன், இதுவும் தந்தையின் வேலையோ என்றே சந்தேகித்தான்.  அதன்  பின் அரண்மனையிலிருந்து வரும் உணவை கையால் தொட்டு விட்டு வைத்து விடுவான்.  தானே தயாரித்த உணவை ஏதோ சாப்பிட்டு ஜீவித்தான்.  அவன் உணவை சாப்பிடுவதில்லை என்பது அரசன் காதுக்கு எட்டியது.  அவன் சமையல் செய்பவர்களை விசாரித்தான். அந்த இருவரையும்,  அடையாளம் காட்டினான். ராஜா உடனே ப்ரயாகனை வரவழைத்து விசாரிக்கச் செய்தான்.  அவனும் அவர்களை சோதித்து விஷம் அளித்த நிகழ்ச்சியை தானே வந்து அரசனிடம் தெரிவித்தான். அதன் பின் பிரயாகன் தானே கொண்டு வந்து தராவிட்டால் அரச குமாரன் உணவை  தொடுவதே இல்லை.

ஒவ்வொரு நாளும் போவதே ஒரு யுகமாக இருந்தது. அரச குமாரன் தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருந்தான்.

அந்த சமயம் அரசனிடம் பெரும் மாறுதல் தோன்றியது. தன் வாழ் நாள் முடிவை நெருங்கியதாக உணர்ந்தானோ என்பது போல, சில பரிகாரங்கள் செய்யலானான்.  தாம்ரஸ்வாமியை தான் அதனிடத்தில்,இருந்து அபகரித்துக் கொண்டு வந்த தாம்ர மயமான ஸூரியனின் உருவம், அதை அதன் மூல ஸ்தானத்தில் நிறுவினான்.  விஹாரங்களில் இருந்து அபகரித்துக் கொண்டு வந்த பொருட்களை திருப்பிக் கொடுத்தான். மகனோ, மகளோ இன்றி மரித்தவர்களின் சொத்தை அரசுடமையாக்கியதை மாற்றினான்.   ஆரியர்கள் என்ற அறிஞர்கள் அவர்களுக்கு மரியாதையாக கொடுத்து வந்த சன்மானத்தை நிறுத்தி இருந்தான். அதையும் திரும்ப அளிக்க ஏற்பாடுகள் செய்தான்.   697

கர்வமும், தான் என்ற அகம்பாவமும் நிறைந்து இருந்த நாட்களில் செய்த தவறுகள் நினைவுக்கு வந்தன.  ஒரு சாபம்.ஹரன்-சிவன் கோவில் குட முழுக்கு நடந்த சமயம் அவன் மூக்கிலிருந்து வழிந்த உதிரம் கும்பத்தில் விழுந்தது. எதேச்சையாக நடந்தது தான் என்றாலும் அதில் ஈடுபட்டிருந்த பெரியவர்கள் அது நல்ல சகுனம் அல்ல என்றனர். அரசனா தன் தவற்றை ஒத்துக் கொள்வான்.  தொடரச் சொல்லி விட்டான்.  பெரியவர்கள் வாய் விட்டு சொல்லா விட்டாலும் அவர்கள் சாபம் அவன் மேல் விழுந்திருக்கும் என்று நினைத்தான்.  அளவுக்கு அதிகமான சம்போகம். பெண்களுடன் சகவாசம், எந்த தாயார் சபித்தாளோ, மனம் அலை பாய்ந்தது.  வாழ் நாள் ஒரு முடிவது இயற்கை தான் என அமைதியாக இருக்க முடியவில்லை. இன்று விடாது மூக்கிலிருந்து உதிரம் பெருகி பழி வாங்குகிறது என்ற வருத்தம் படுக்கையில் தள்ளியது.  கண்களின் நீரும் வற்றாமல், கிடந்தவன் எலும்பும் தோலுமாக ஆனான். தேய்பிறை சந்திரன் போல நாளுக்கு நாள் தேய்ந்தான். மந்திரிகள் பராமுகமாக இருந்தனர். அரசை ஹர்ஷன் கையில் ஒப்படைத்து விட்டு போக வேண்டும்.   மந்திரிகள் ஹர்ஷனுக்கு ஆதரவாக இல்லை. லோஹராவிலிருந்து உத்கர்ஷனை வரவழைக்க ஏற்பாடு செய்தான்.   அதன்;புரத்து பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் மகனுக்கு பட்டம் என்று போட்டி போட்டனர்.  பொறாமைத் தீ அங்கு பற்றி எரிந்தது.

ஹர்ஷனுக்கு நிறைய செல்வம் கொடுத்து நாடு கடத்தி விடுகிறேன் என்று எண்ணி ஹர்ஷனை வரவழைக்க மந்திரிகளிடம் சொன்னான்.  அவர்களோ,  அரண்மனை பணியாளர்கள் அனைவரையும் மாற்றி தக்குர   என்ற லோஹரா தேசத்து ஆட்களை நியமித்து விட்டிருந்தனர்.  அவர்களோ, ஹர்ஷனை அரண்மனைக்குள்ளேயே ஒரு அறையில் சிறை வைத்து விட்டனர்.

அரசன் தான் செல்லா காசு ஆகி விட்டதை உணர்ந்தான். ஏதோ ஒரு மடாலயம் சென்று உயிரை விடுவேன், தாம்ர ஸ்வாமின் என்ற கோவில் விக்ரகத்தை சிதைத்து  அப்புறப்படுத்தியது உறுத்தியது.  மார்த்தாண்ட கோவில் சென்று பரிகாரமாக வேண்டிக் கொள்வேன் என அவசரமாக , அரண்மனையை விட்டு வெளியேற தீர்மானித்தான். இது தெய்வ கோபம் தான். அந்த தெய்வத்திடமே சரணடைகிறேன் என மனப் பூர்வமாக விரும்பினான்.   

உயர் அதிகாரியாக இருக்கும் வரை மற்றவர்களை விரட்டி, வேலை வாங்குவதே குறியாக, தனக்கு கீழ் இருப்பவர்களை புல் போல துச்சமாக நினைப்பவனே, காலம் வந்தால் உடல் நலிந்தால், அடி மட்ட தொழிலாளியைக் கூட வணங்கத் தயங்க மாட்டான்.  மூர்க்கன், ஆசிரியர்களிடம் மரியாதையின்றி, சரியாக கற்காதவன்,  கடைசி காலத்தில் ஏங்குவதும் அது போலத்தான்.

உயிர் பிரியும் நேரம், சக்திகள் ஒடுங்கி இருக்கும் பொழுது, ஓடி ஓடி ஆணைகளை நிறைவேற்றியவர்கள் வாளா இருப்பர். அரசனே ஆனாலும் அவனது சொல் எடுபடாது. அந்த சமயம் புரியும் இது வரை வாழ்ந்தது கனவு என்று.  அரசனோ, ஆண்டியோ மரணம் தரும் வேதனை ஒன்றே,

மார்கழி மாதம், மூன்றம் பிறையன்று அரசன் அரண்மனையை விட்டு மடாலயம் புறப்பட்டான். பேரி முதலிய வாத்யங்களுடன் அரச சேவகர்கள் உடன் வந்தனர். படகில் ஏறி நீர் வழியாகவே யாத்திரை கிளம்பியது.  மார்த்தாண்ட ஆலயம் வந்து சேர்ந்தனர்.  ஒரு பொற் சிலையை கோவிலுக்கு அர்ப்பணித்தான்.  தன் மூத்த மகனை எண்ணி ஏங்கினான்.  அவன் ஆணையை கேட்பார் இல்லை.  

யாரோ ஒருவன் ஹர்ஷன் பாடிய பாடலை பாடினான். அதைக் கண்ணீர் வழிய கேட்டான். துக்கம் அதிகமாகியது.  உத்கர்ஷனிடம் ,  சில பொருட்களை ஹர்ஷனிடம் கொடுத்து விடு என்று சொன்னான்.  அவன் தானே மூத்தவன். அதைக் கேட்ட நோனகா ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு வந்து கொடுத்தான்.  அதை தள்ளி விட்டு கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தவன், இரண்டரை நாட்கள் அதே நிலையில் இருந்தவன் கையசைத்து  அதே மந்திரிகளை அழைத்தான். அவர்களே அவனை மார்த்தண்டரின் சன்னிதிக்கு கொண்டு போகும் படி செய்து விட்டான்.

நாற்பத்து ஒன்பதாம்  ஆண்டு ஒரு பகல் பொழுதில், மார்கழி மாதம், அறுபத்தைந்து வருஷம்  சஷ்டி திதியில், நிறைவடைந்தான்,  1089 AC

மும்மணிகா முதலான ஏழு ராணிகள், விவாக பந்தத்தால் மனைவி ஆனவர்கள், ஒரு ஆசை நாயகி ஜய மதி அரசனை பின் தொடர்ந்து உயிர் விட்டனர்.  மிகவும் பிரியமான ஒருவள், அரசனிடம் ஏராளமான வசதிகளையும், பொருட்களையும் அனுபவித்தவள் அவனையே மறந்தவள்  போல தன் வழி சென்று விட்டாள்.

உத்கர்ஷனின் மகுடாபிஷேகத்திற்காக ஏற்பாடுகள்  நடந்து கொண்டிருந்தன. நன்றி மறவாத  வாமனன் என்ற அந்தரங்க பணியாளன் தான் அரசனுக்கு நீர் கடன்களைச் செய்தான்.  கோலாகலமான அரச பதவி ஏற்பு வைபவத்தில் ஊர் மக்களும் மறந்தே போனார்களோ எனும் படி அந்த நிகழ்ச்சி ஒருவரும் அருகில் இன்றி நடந்தேறியது.

கலச அரசனின் பத்மஸ்ரீ என்ற மனைவியிடம் பிறந்த விஜய மல்லன் என்பவன், ஹர்ஷனுக்கு  அரசன் கொடுத்த மாதாந்திர ஊதியம் போன்ற ஒரு பங்கு செல்வம், அதை தனக்கு கொடுக்கும் படி உத்கர்ஷனிடம் கேட்டு வாங்கிக் கொண்டான். அதைக் கண்ட கய்யா என்பவளின் மகன் ஜய ராஜனுக்கும் அதே போல வேதனம்  மந்திரிகள் பரிந்துரைத்து கொடுக்கச் செய்தனர்.  அந்த:புர பெண்கள் அனைவரும் பரிதவித்தனர்.  இது பல இடங்களில் கண்டிருந்தாலும் தங்களுக்கு என்று வரும் சமயம் தான் தன் தாக்கம் தெரிகிறது.

ஹர்ஷதேவன், தந்தையின் மரணம் பற்றி அறிந்தவன், அன்றைய தினம் உணவின்றி உபவாசம் இருந்தான். நான்கு சுவர்களுக்குள் அடை பட்டு கிடந்தவன் என்ன செய்வான்.  மறு நாள் உடன் இருந்த லோஹராவிலிருந்து வந்திருந்த தாக்குரர்கள், அவனை வாற்புறுத்தி உணவருந்தச் செய்தனர்.  தங்கள் நாட்டின் அரசை ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள வேண்டினர்.  இரண்டு ராஜ்யங்களும் ஒருவன் கையில் ஏன் இருக்க வேண்டும்? நாங்கள் உதவுகிறோம் என்று வாக்களித்தனர்.

 உத்கர்ஷன் ஆடம்பரமாக ஸ்ரீ நகரம் வந்தவன் தூதர்களை அனுப்பி ஹர்ஷனை  தந்தை மரணத்திற்கு மகன் செய்ய வேண்டிய நீராடல் முதலியவைகளைச் செய்ய அனுமதிக்கச்  சொன்னான்.  நீராடும் சமயம் முடி சூட்டலுக்கான பேரி நாதம் கேட்கவும் ஹர்ஷன்  மனதில் புத்துணர்வு உண்டாயிற்று.  இனி தான் சுதந்திரமானவனே. யாருக்கும் அடங்கியவன் இல்லை என்ற எண்ணம் தைரியம் கொடுத்தது. ஏனோ அந்த வாத்ய இசை இடி போலவும், மழை வரும் என்று உயிர்கள் மகிழ்வது போலவும் அவன் கவி உள்ளம் நினைத்தது.  இது ஒரு சுப நிமித்தம். தாக்குரர்களின் ஆதரவும், தன் முன்னேற்றமும் அந்த சுப நிமித்த செய்தியாக மனதில் மகிழ்ச்சியை அளித்து அடுத்து செய்ய வேண்டியதை நினத்தான்.

அடுத்த நாள் அரசனுடைய அடியாள், போஜனம் கொண்டு வந்ததை மறுத்து விட்டு என்னை சிறையிலிருந்து விடுவிக்கச் சொல், நான் தேசத்தை விட்டு வெளியேறுகிறேன்  என்று சொல்லி அனுப்பினான்.   மறுத்தால் உண்ணாவிரதம் இருந்து மடிவேன் என்றான்.  உத்கர்ஷன்  சம்மதிப்பது போல, நாளை விடுவிக்கிறேன், உணவை ஏற்கச் சொல் என்று சொல்லி அனுப்பினான்.  நாளை என்ற நாள் வரவே இல்லை. கேட்டால் நாளை என்றே சொல்லிக் கொண்டிருந்தான். பயம் ஹர்ஷன் வெளிவந்தால் புரட்சி வெடிக்கும் என்பதை அறிந்தவன்.

தன்னுடைய காதணியை கையில் கொடுத்து பிரயாக ராஜனை விஜய மல்லனிடம் ரகசியமாக செய்தி சொல்லி அனுப்பினான்.  ‘உனக்கு மூத்தவன் ஹர்ஷன் சொல்கிறான், குமார, நீங்கள் அரச போகத்தை அனுபவிக்கும் பொழுது நான் மட்டும் சிறையில் வாடுகிறேனே’ என்று சொல்வது  போல செய்தி. விஜய மல்லன் உண்மையாக வருந்தினான். சகோதரா! உயிரை விடாதே, உன்னை விடுவிக்க நானும் முயற்சி செய்கிறேன் என்று சொல்லி  ப்ரயாக ராஜன் மூலமாகவே பதில் செய்தி அனுப்பி விட்டு யோசித்தான்.

உத்கர்ஷன் பதவி ஏற்றாலும் எந்த செயலையும் செய்யவில்லை. கந்தர்பன் போன்ற மந்திரிகளே ஆட்சியை செய்தனர்.  கவனம் முழுவதும் பொக்கிஷத்திலேயே இருந்தது.  எது எங்கே, என்று அறிந்து கொள்வதிலும், அதில் உள்ளது தனக்கே, அதை எப்படி செலவழித்துக் கொள்வது என்ற திட்டமே அவன் மனதில் இருந்தது. 756 தினசரி வேலையே பொக்கிஷ அறைக்குச் சென்று என்ன என்ன இருக்கின்றன, என்ன எடை, என்ன விலை போகும் என்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வேலையும் செய்யவில்லை என்பதை அந்த;புர மக்கள் அறியாமலா இருப்பார்கள்.   அவர்களுக்கு உணவும் பயத்தம் பருப்புடன் அன்னம் கொடுத்தான். (பயத்தம் பருப்பு மிக எளிமையான பருப்பு. அதை உயர்வாக, ருசியானதாகவோ  சொல்வதில்லை,) கருமி என்ற பெயர்  அவர்கள் மூலம் பரவியது.  உடல் பலமோ, வீரமோ இல்லாதவன்.  பெருந்தன்மையான குணமும் இல்லை. விரைவில் மக்களின் அதிருப்திக்கு ஆளானான். 759 வாக்களித்தபடி விஜய மல்லனுக்கு மாதாந்திர ஊதியமும் தரவில்லை. அதனால் அவன் கோபித்துக் கொண்டு தேசாந்திரம் செல்ல புறப்பட்டான். தனது பாதுகாப்புக்காக   அவன் உடன் இருந்த வீர்களையும் கூட்டிக் கொண்டான். லவனோத்வம்பு வரை சென்றனர். ஒரு இரவு அங்கு தங்கிய பின் புறப்பட்டனர். உடன் வந்தவர்கள் ஒரு சந்தேகத்தை கிளப்பினர்.  தங்கள் எண்ணத்தைச் சொன்னார்கள்.  (சமவெளியில் இருந்து வந்தவர்கள்  அவர்களை மத்ய தேசத்தினர் என காஸ்மீர வாசிகள் சொல்வர். மலை பிரதேசத்தினர் பஹாடி ) ஹர்ஷனை சிறை வைத்துள்ளான். நீயும் ஊரை விட்டு விலகினால் அரசனுக்கு தன் விருப்பம் போல ஹர்ஷனை வதைக்க இடம் கொடுத்தது போலாகும்.  

இதைக் கேட்டபின் விஜய மல்லன் யோசித்தான். இப்படி ஒரு சந்தர்பம் நாமே கொடுத்து விலகினால் ஹர்ஷன் வெளியில் வரவே முடியாமல் நிரந்தரமாக சிறை இருப்பான் அல்லது வதைக்கப் படுவான் என்ற செய்தியில் உண்மை புரிந்தது.  அதனால் விடிந்தவுடன் ஊர் திரும்பி விட்டான். அங்கிருந்த பல தாமர வீரர்களும் உடன் வந்தனர்.  மதுராவட்டன் என்ற சேனாபதி, குதிரைப் படைத் தலைவனின் மகன், முதலியவர்  அரசகுமரனை பின் தொடர்ந்தனர். மத்ய தேசத்து வீரர்கள் அவர்களுக்கும் பின்னால் வந்தனர். அவன் மகன் நாகா  என்ற நெடு நாளைய அரச படைத் தலைவன் பத்மபுரம் என்ற இடத்தில் இருந்தவன்,  ராஜ குமாரனின் உதவிக்காக தன் குதிரை வீரர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான்.  அவன் வந்து சேர்ந்ததும், தாமர வீர்களின் உதவி கிடைத்ததும் அதுவரை  அரசியலோ, பொதுவாக விவரமோ அறியாத அரச குமாரன் அவைகளை நற்சகுனங்களாக நினைத்து மகிழ்ந்தான்.  உத்சாகத்துடன் ஸ்ரீ நகரம் நோக்கி கிளம்பியவன் முன் பின் யோசனையின்றி தீப்பந்தங்களுடன் வந்த வீரர்கள் வழியில்  வீடுகளை தீக்கிரையாக்க சம்மதித்தான். அரண்மனையை சுற்றி நின்று முற்றுகையிட்டனர்.  உத்கர்ஷனின் பக்கம் இருந்த ஜயராஜன் என்ற இளவரசனும் விஜய மல்லன் பக்கம் வந்து விட்டான்.  இரண்டு ராஜ குமாரர்களும் உத்கர்ஷனை பதவி இறக்கம் செய்ய திட்டம் வகுத்தனர்.  புதிதாக கவிதை எழுத முயலும் இரு கவிகள் போல என்று உவமை.

ஹர்ஷ தேவனை விடுவித்தால் தான் நிறுத்துவோம் என்ற முழக்கத்தோடு, யானை குதிரைகளை அவிழ்த்து விட்டு அந்த கொட்டகைகளை தீக்கிரையாக்கினர்.  இடியுடன் பொழியும் பிரளய கால மழை போன்றவன் ஹர்ஷதேவன்.  அவனை விடுவிக்க வேண்டும்.  இந்த அரசன் கசன்- खश-(வணிக ஜாதி) வியாபாரி, கருமி,  செலவழிக்காமல் செல்வத்தை கட்டிக் காப்பது மட்டுமே அறிவான்.  அரச பதவியில் இவன் இருக்கவே விட மாட்டோம்.  அவனை நீக்க வேண்டும் என்ற முழக்கங்கள் அதிகரித்தன.  வழியில் ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.  ஒரு சிலர் ஹர்ஷன் இருந்த சிறைக்குச் சென்று ஜன்னல் வழியாக மலர்களை வீசி வாழ்த்தினர். 

ஹர்ஷன் புரிந்து கொண்டான்.  உத்கர்ஷனுக்கு சைன்யத்தின் ஆதரவும் இல்லை, மக்கள் ஆதரவும் இல்லை. இது தான் சமயம் என்றாலும் தாக்குரர்களை நிதானமாக செயல் பட அறிவுறுத்தினான். புரட்சி செய்பவர்களுக்கும் செய்தி அனுப்பினான். ‘தற் சமயம் நான் சிறைப் பட்டிருக்கிறேன். என்னை முதலில் விடுவியுங்கள்.  நான் வெளியில் வந்த பின் அடுத்து செய்ய வேண்டியதை முடிவெடுப்போம். இல்லாவிட்டால், அரசன் உடனடியாக என்னை கொல்லவே துணிவான்’ .  

இதைக் கேட்டவர்கள் அது சரியே, என்று அந்த மாளிகையின் வாசல் கதவை உடைக்க முற்பட்டனர். தாக்குரர்களே, கதவைத் திறவுங்கள் என்று கத்தினர். ஹர்ஷன் தானே முன் சென்று கதவை உடைத்து விட்டான். கண்களில் மட்டுமே உயிர் இருந்த து போல உடல் பலவீனமான நிலையிலும் அசராது தன் திறமையைக் காட்டினான்.  வாயில் காப்பவர் பதினாறு பேர் இருந்தனர்.  லோஹார தேசத்திலிருந்து  வரவழைத்த சேவகர்கள்.  சமயம் பார்த்து ஹர்ஷனைக் கொல்லவே அனுப்பப் பட்டவர்கள்.  நோனகன் இடை விடாது உத்கர்ஷனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான்.  ஹர்ஷன் தலை உருண்டால் தான் நாட்டில் அமைதி நிலவும் என்பதாக.  ஆனால் கிளம்பிய வீரர்களிடம் உத்கர்ஷன் ரகஸ்யமாக ‘இந்த மோதிரம் உங்கள் கையில் நான் கொடுத்தால் மட்டுமே தாக்குரர்களை எதிர்த்து அழித்து விட்டு ஹர்ஷனை தீர்த்துக் கட்டுங்கள்.  நான் சொல்லும் சமயம்  ஹர்ஷனை சிறையிலிருந்து விடுவித்து விடுங்கள் என்றும் சொல்லியிருந்தான்.  நோனகாவுக்கு சில செயல்கள் ஆக வேண்டி இருந்தன. அவை ஹர்ஷனால் மட்டுமே முடிக்க முடியும். அதனால் பின்னால் தனக்கு தேவை என்பதால் அவனை கொல்லவும் விரும்பவில்லை. உத்கர்ஷனுக்கு இதமாக சொல்லிக் கொண்டிருந்திருக்கிறான்.
அவர்கள் மேலும் சொன்னார்கள். பலமுறை எங்களுக்கு சமயம் வாய்த்தது. ஆனால் அனுமதி மோதிரம் இல்லாமையால்  செயல் படுத்தவில்லை.

ஹர்ஷன் அவர்களை உள்ளே அழைத்து தன் எதிரில் அமரச் செய்தான். ஒவ்வொருவையும் பெயர் சொல்லி அழைத்து தாம்பூலம் கொடுத்து உபசரித்தான். எதிர் பாராத உபசாரம், அதுவும் அரசகுமாரனே அளித்த மரியாதை,  இந்த செயலால் அந்த சேவகர்கள்  வெட்கினர். .  தாம்பூலத்தை ஏற்றுக் கொண்டதே கையிலிருந்த ஆயுதங்களையும், மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட செயலான  கொல்வதையும் கை விடுவதாக வாக்களித்தனர்.  நோனகனுடைய ஏற்பாடு என்றவுடன் ஹர்ஷனுக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது.

गो – கோ என்ற பதம் சமஸ்க்ருத மொழியில் பசுவைக் குறிக்கும், மேலும் பல பொருள்களும் இருந்தாலும் கோ- வாய் சொல்லையும் குறிக்கும்.  இங்கு கவி அந்த ஒரு சொல்லை காமதேனு பசு போல, நல்ல சொல் என்று ஆரம்பிக்கிறார். இரண்டும் வேண்டியதை கொடுக்கும் வல்லமை உள்ளவை.  செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும், புகழை உண்டாக்கும், குற்றங்களை களைந்து விடும், நட்பை வளர்க்கும், விரோதிகளைக் கூட நண்பர்களாக்கி விடும் என்றால் கேட்பானேன்.   வழி நடையில் வழி கேட்டாலோ, ஏதாவது வினவினாலோ பதில் கிடைக்கும்.  நல்ல மனிதர்களுக்கு அனுகூலமாக இருக்கும். எந்த இடுக்கண் வந்தாலும் தடுக்கும்.  வாக்கு வன்மை – இனிமையான சமயோசிதமான சொல் எதைத் தான் செய்யாது?

ராஜ குமாரன் அவர்கள் வெட்கி தலை குனிந்து நிற்பதைப் பார்த்துச் சொன்னான். ‘நீங்கள் ஏன் தலை குனிய வேண்டும். இதில் வெட்கப்படவும் எதுவும் இல்லை.  சொன்னதைச் செய்ய வேண்டியது தான் உங்கள் வேலை.   ஆயினும் சற்று பொறுக்க வேண்டும்.  இந்த திடீர் மாற்றம் எந்த வித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து அடுத்த அடி வைப்போம்.  பல மாற்றங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக கூட வரலாம்.

வானத்தில் சில சமயம் மேகங்கள் பல உருவங்களாகத் தெரியும். யானைகளாக,  பாயும் புலிகளாக, ஊர்வனவாக, குதிரைகளாக பல உருவங்களை நாமே கூட கற்பித்துக் கொள்வோம்.  காலத்தின் கோலமும் அப்படியே. பல ஏற்ற இறக்கங்கள், அது போல சௌம்ய- சாதுவான, க்ரூர, கொடுமையான, நேர் வழி, கோணல் வழி, என்று மனித மனமே பலவிதமாக சிந்திக்கும்.  அதனால், என் மனதில் உடனே எந்த மாறுதலும் தோன்றவில்லை.  நீங்களும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ள வேண்டாம். இது வரை இருந்தது போலவே காவல் வேலையைச் செய்யுங்கள்.  கவனமாக நல்ல நேரத்தை எதிர் நோக்கி இருப்போம். மற்றொரு கலகம் வரும்.  அரியணையில் ஏறத் தயாரான நிலையில் கூட ராஜ குமாரர்களுக்கு ஏதோ ஒரு இடையூறு வந்து தடுக்கும், விஷம் கொடுத்து மகுடாபிஷேகம் நடை பெற  விடாமல்  தடுப்பவரும் உண்டு.  ப்ராண சங்கடம் எந்த இடத்திலிருந்தும் ராஜ குமாரனுக்கு வரலாம்.

வேணிற் காலத்தில் தாபம் அதிகமானால் மழை வரும் அடையாளம். இருள் அதிகமாக தெரிந்தால்,   விடியல் நெருங்கி விட்டதாக அறியலாம்.  ஏதோ ஒரு எதிர் பாராத நன்மை வரும் முன் உயிரினங்கள் பெரும்  துன்பம் அனுபவித்தால், விடிவு நெருங்கி விட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 795

என் உயிர் உடலில் நிலைத்து இருப்பதே ஒரு நல்ல சகுனம் என்று கொள்வோம்.  பலர் பலவிதமான

துன்பங்களை அனுபவித்து முடிவில் நன்மையைக் கண்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

அவர்கள் தாங்களாக சிந்திக்க இடம் கொடுத்தவன் போல சற்று நிறுத்திய பின் ஹரி சந்திரனுடைய கதையைச் சொன்னான். அவர்கள் அமைதி அடைவது ஒரு பலன் என்றால் வெளியில் தெரியாத மற்றொரு பலன் அவர்கள் வெளி உலகத்தில் நடப்பதை அறியாமல் கதை கேட்பதில் ஆழ்ந்திருந்தார்கள்.  அரச குமாரன் ஹர்ஷன் அதை எதையோ பார்த்திருந்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே வெளியில் பல வதந்திகள் பரவின.  அரசு யாருக்கு என்ற விவாதங்கள்,  யார் யாருக்கு நண்பன் அல்லது விரோதி,  தேவி காளி நாடெங்கும் சுற்றுலா செல்வது போல  பல நூறு முறை அலைந்து கொண்டிருந்தாள். (போராட்டங்கள் வெடித்தன, பல நஷ்டங்கள், மரணங்கள்)

உத்கர்ஷன் இதைக் கண்டு பயந்து ஹர்ஷனை விடுவிக்கச் சொன்னான், உடன் இருந்தவர்கள் கொல்வதை ஆதரித்தனர்.  அனுமதி மோதிரம் கொடுத்ததே  மறந்து விட்டிருந்தது.   அந்த உத்தரவை அப்படியே அனுசரித்த காவல் வீரர்கள்  அனுமதி மோதிரம் இன்றி செயல் பட மறுத்து விட்டனர்.

ரஜபுத்திர வீரன் ஒருவன் ஸூர என்பவன் கையில் அனுமதி மோதிரத்தைக் கொடுத்து அனுப்பினான். தெய்வத்தின் செயல் அது உண்மையான மோதிரம் அல்ல. அதே போல மாற்று மோதிரம். அதில் அரச் முத்திரை இருக்கவில்லை.

முன்னொரு சமயம் வ்ருத்த க்ஷத்ரன் என்ற சிந்து தேசத்து அரசன் மற்றவர்களைக் கொல்ல தவம் செய்து ஒரு வரம் பெற்றான். அதே வரம் அவன் தலையையே கொய்தது. இதைத்தான் விதியின் விளையாடல் என்று பெரியவர்கள் சொல்வார்கள். தன் கதையால் ஸ்ருத யுத என்ற அரசனைக் கொல்ல ஓங்கியவன்,  தன் தலையிலேயே அது விழ, தானே மடிந்தான்.  மற்றவன் மடிந்து விழுவான்,  தான் பிழைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவனின் தலையில் விதி வசத்தால் தை என்ற ஆயுதமே  விழுந்தது.

உத்கர்ஷன் தவறாக நினைத்தே பார்த்திராத  படி தவறான மோதிரத்தைக் கொடுத்து தானே தன் நாசத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவன் போல ஆனான்.
 இதற்குள் ஹர்ஷனைச் சுற்றியிருந்த காவலர்கள் அவனுக்கு ஆதரவாகவும்,   உத்கர்ஷ விரோதிகளாக ஆகி விட்டிருந்தனர்.   ஸூரன் பெரும் கோபத்துடன் ஹர்ஷனை கொல்ல வந்தவன் மோதிரத்தை காட்டியவுடன்,  அவர்கள் வெகுண்டு எழுந்தனர். பெயரளவில் ஸூரன், இந்த எழுச்சியை எதிர் பாராத தால் அவர்களுடன் சேர்ந்து தானும் ஹர்ஷனை ஆதரிக்கலானான்.  ஹர்ஷனின் காலில் விழுந்து வணங்கி, சிறையை விட்டு வெளியேறும் படி வேண்டினர்.  அந்த ராஜ குமாரன் அதை நம்பவில்லை. சற்று தாமதித்தான்.  அதே சமயம் ஹர்ஷ தேவனை கொன்று விட்டார்கள் என்ற வதந்தி வேகமாக பரவி விஜ்ய மல்லனின் காதுகளை எட்டியது.   ராஜ தானியையே கொளுத்துங்கள் என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.  நிலைமை கை மீறி போனதை அறிந்த உத்கர்ஷனின் ஆதரவாளர்கள், அரண்மனையில் இருந்தவர்கள், சுகளா என்ற ஹர்ஷனின் முன் மனைவியாக இருந்தவளை, அரசனின் காதணியை ஏந்தியவளாக அவர்கள் முன் அனுப்பினர். அவளைக் கண்டதும் விஜய மல்லனின் படை வீரர்கள் சற்று அடங்கினர்.  நோனகன், ப்சஸ்த கலசன் முதலானோர் ஹர்ஷனுடைய இருப்பிடம் சென்றனர்.  அவன் கை கட்டுகளை அவிழ்த்து, சிறையிலிருந்து விடுவித்தனர்.  அந்த வினாடியே புயல் போல வெளியே வந்த ஹர்ஷன் குதிரையில் ஏறிக் கொண்டு வெளி வரவும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும், மழையாக பொழிந்த மலர்களும் சூழ, விஜய மல்லன் அருகே வந்து நின்றான்.   அவனை சமாதானப் படுத்தி, , பொறு, யோசித்து செய்வோம் என்று சொல்லி, இருவருமாக அரண்மனை நோக்கிச் சென்றனர்.

ஹர்ஷதேவன் விடுவிக்கப் பட்ட செய்தியை அறிந்ததுமே, உத்கர்ஷன், அவனுடைய அடியாட்களான சில மந்திரிகள், பொக்கிஷ அறையில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துக் கொண்டனர்.    

ஹர்ஷ தேவன் அனுபவித்த கொடுமைகளை கேட்டு வருந்தியும், தப்பி வந்ததால் மகிழ்ச்சியும் சேர விஜய மல்லன் உணர்ச்சி வசப்பட்டு நின்றவன், சட்டென்று குனிந்து ஹர்ஷனின் காலில் விழுந்து வணங்கினான்.  யாரோ ஒருவன், விஜய மல்லனுக்கு இது தான் சமயம் நீ ராஜ்யத்தை கைப் பற்ற என்று ரகசியமாக சொன்னதையும், விஜய மல்லன் மறுத்து பதில் அளித்தையும், இங்கிதத்தால்  ஹர்ஷன் புரிந்து கொண்டான்.  ஒரு க்ஷணம், இரு சகோதர்களும் கழுகு போல தன் உடலை வேண்டுகிறார்களோ, தனக்கு படை பலமும் இல்லையே என சிந்தித்தவன், குதிரையின் மேல் அமர்ந்தபடி, சுற்றி வந்து தனக்கு ஆதரவாக வந்து வாழ்த்திய பொது மக்களுக்கு கையாட்டி நன்றி சொல்லிய படி சென்றான்.  இடி விழுந்து நதிக் கரையில் இருந்த மரம் உடைந்தது. அதில் இருந்த மனிதன் தலை குப்புற நதியில் விழுந்தான். விழுந்தவன் நேரே ஒரு முதலையில் வாயின் விழுந்தான், அந்த முதலையுடன் மகா சமுத்திரத்தை அடைந்தான் என்று ஒரு கதை நீளமாக போகும்.  அது போல தன் நிலை ஆகி விட்டதோ – ஒரு வினாடி நேரம் தான்,  ஹர்ஷனைத் தொடர்ந்து வந்த தாமர, தாக்குர வீரர்கள்  அவனருகில் வந்து நின்று விட்டனர்.

விஜய மல்லனுடன் கலந்து ஆலோசித்தபடி அரண்மனை வாசலுக்கு வந்தனர்.  விஜய மல்லன் உள்ளே நுழைய விடாமல் தடுத்தான்.  இப்பொழுது  தான் மரணத்தில் பிடியில் இருந்து தப்பி வந்திருக்கிறாய். திரும்ப அதன் அருகில் ஏன் செல்கிறாய், என்றவன்,  சந்தேகத்துக்கு இடமில்லாமல் சோதித்த பின் உள்ளே நுழைவோம்.  அவனுடைய சேவகர்கள் உள்ளே சென்று சோதித்த பின், உள்ளறையில் இருந்த அரியாசனத்தைக் கொண்டு வரவும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.   உடனடியாக ஹர்ஷ தேவன் அதில் அமர்த்தப் பட்டான்.  தன் சதிச் செயல்களை மறைத்துக் கொண்டு சுகளா அருகில் அமர்ந்தாள், பட்டத்து ராணியாகும் உரிமையோடு.   

பாடுபவர்களும், வாத்யங்கள் இசைப்பவர்களும் கோலாகலமாக வந்து மகுடாபிஷேக வைபவத்தை அறிவிக்கவும், எங்கிருந்தோ பழைய மந்திரிகளும் அலுவலர்களும் வந்து கூடினர். இடி சத்தம் கேட்டாலே, நீர் வரவை எதிர் பார்த்து தாங்களாக நதியில் வந்து கூடும் சாதக பறவைகள் போல. அரியாசனத்தில் அமர்ந்தவனை பொறாமையுடனும் வருத்தத்துடனும் உத்கர்ஷன் பார்த்தான். செல்வம் எவரிடம் நிலைத்து நிற்கிறது?  விஜய சிம்மன் தான் செய்ததை தெரிவித்தான்.

உத்கர்ஷன் எதுவும் நடவாதது போல, தன் பரிவாரங்களோடு வந்தவனை விஜய மல்லன் எதிர் கொண்டான்.  தாக்குர வீரர்கள் ஹர்ஷனுக்கு ஆதரவாக இருந்தவர்களே அரண்மனைக் காவலில் அமர்த்தப் பட்டனர்.  அத்துடன் விஜய மல்லனிடம் தோன்றிய சந்தேகமும் விலகியது.  தன் வீடு செல்லக் கிளம்பியவனை, அரசனின் தூதுவர்கள் அருகில் அழைத்து வந்தனர்.  கை கூப்பி அவனுக்கு நன்றியைத் தெரிவித்த ஹர்ஷதேவன், ‘ என் உயிரையும், உரிமையான அரசையும் உன்னால் தான் திரும்பப் பெற்றேன்’ என்று மனப் பூர்வமாகச் சொன்னவன்.  விஜய மல்லனுக்கு தகுந்த பதவியையும் ஆசனத்தையும் கொடுத்தான்.

இது வரை பட்ட கஷ்டங்களுக்கு மாற்றாக நல் வினையால், அரசனாக பொறுப்பு ஏற்ற ஹர்ஷனால், ஆட்சி மாற்றம் எந்த இடரும் இன்றி நடந்தேறியது.  இன்னமும் சிறை உடையிலேயே இருப்பதைக் கூட எவரும் கவனிக்கவில்லை போல அங்கு மகிழ்ச்சியே நிறைந்து இருந்தது.   விரைவாக தன் வாழ்வில் வந்து விட்ட மாற்றங்களை உள் வாங்க முடியாமல் சற்று நேரம் கண் மூடி இருந்தான்.

உத்கர்ஷன் சிறை பிடிக்கப் பட்டான். என்ன செய்யலாம் என்று தன் ஆலோசகர்களைக் கேட்டவனுக்கு,   நோனகன் கோபத்துடன் பதில் சொன்னான் ‘ நான் படித்து படித்துச் சொல்லியும் நீ கேட்கவில்லை. கோழை நீ. உன் அறியாமை, செயலற்ற தன்மை இவைகளின் பலனை அனுபவிப்பாய் ‘ என்றான்.  நீ அவனுக்கு கொடுத்த அதே சிறை உணவு உனக்கும் காத்திருக்கிறது.  போராடவும் வழியில்லை உயிரை விடவும் வழியில்லை,  பேசிக் கோண்டே போனவனை எவரும் தடுக்கவும் இல்லை, கேட்கவும் இல்லை.    

சகஜா என்ற மனவியுடன் தன் வீட்டினுள் நுழைந்தவன், துணியை வெட்டும் கத்தரிக் கோலால்  திடுமென தானே தன்  கழுத்தை அறுத்துக் கொண்டு விழுந்தான். முன்னால் சென்று விட்ட சகஜா சத்தம் கேட்டு திரும்பியவள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவனைக் கண்டாள்.  வஜ்ரத்தால் அடிபட்ட மலை போல கிடந்தான்.  லோஹாரா அரண்மனைக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது.  நோனகா பதவி விலக மறுத்தவனை வற்புறுத்தி விலகச் செய்தனர்.    சில நாட்கள் காத்திருந்தான்.  நோனகா, சில்ஹர, பட்டாரா, ப்ரசஸ்த கலச என்ற அந்த கூட்டமே சிறைக்குச் சென்றனர்.

ஒரே நாளில் தலை கீழாக மாறி விட்ட ஹர்ஷ தேவனுக்கு எதிரில் கரடு முரடான பாதை காத்திருந்த து. செய்ய வேண்டிய சீர் திருத்தங்கள்,  நேர்மையும், பொறுப்பும் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அரச நிர்வாகத்தை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டவனுக்கு பல கடமைகள்.  வாழ்த்துக்களும், அன்பளிப்புகளும் குவிந்தன.  மற்றொரு பக்கம் ஸூறையாடும் கூட்டமும் கை வரிசையைக் காட்டத் தயாராக இருந்தன.  ஹர்ஷ தேவன் தன்னுடைய மென்மையான உள்ளன்புடன் அணுகியது ஒரு பக்கம் பாராட்டைப் பெற்றது. மறுபக்கம் கடுமையாக தண்டனையும் கொடுத்தான் என்று வரலாறு சொல்கிறது.  உதவியவர்கள் பலர், எதிர்த்தவர்கள் பலர்,  கருணை, சமயங்களில் கண்டிப்பு, அறிவுடையவர்களின் ஆதரவு இருந்தால், அதே சமயம் வறியவர்களின் ஆற்றாமையையும் கேட்க வேண்டி இருந்தது. ஹர்ஷ தேவனின் ஆட்சி காலம் வரலாற்றில் வெகுவாக பரவி போற்றப் பட்டது.  அவனை படைத்த இறைவன் பொறுக்கி எடுத்த நல்ல பரமாணுக்களால் படைத்து விட்டான் என புகழ் பெற்றான். தெய்வ பலம் இன்றி இத்தகைய மகத்தான செயல்களை செய்ய முடியாது என்று சிலர்.  உலகில் அரச பதவியில் அமர்ந்த பலரின் தோற்றமோ, வாழ்வோ எண்ணப் படுவதில்லை. அவர்கள் செயல்களே சாட்சி.  வழி கடுமையானது கரடு முரடானது என்று நதி ஓய்வதில்லை.  கல கலவென்று ஓடும் நதி நதி நீரின்  உத்சாகம் உல்லாசமே நிறைந்து வழி காட்டுகிறது.  உத்சாகம், மனத் தெளிவு தான் அனைத்து நற்காரியங்களுக்கு தாய்.  நீதிகள் தானே அந்த இடத்தில் வந்து அமர்கிறது. சாஸனம் – அரச கட்டளை அதன் மதிப்பை இழக்காமல் உடன் இருப்பவர்களால் கடை பிடிக்கப் படுவதும், அரசனின் கட்டளை அதே விதமாக ஏற்றுக் கொண்டு அனுசரிக்கப் படுவதும் அரசனின் திறமையாலே.  தியாக குணம் செல்வத்தை பகிர்ந்தளிக்கவும், பெற வேண்டிய இடத்தில் பெறவும் அரசனின் மன திடம் தேவையாகிறது.  கருணை சுலபமாக அறியப் படுகிறது. ஹிம்சை- தண்டனை பயங்கரமாக உணரப் படுகிறது. நல்லன செய்யும் போது பாராட்டையும், பாபத்தை வேரறுக்கும் பொழுது  களங்கம் கற்பிப்பதையும் சமமாக ஏற்க மன திடம்  வேண்டும்.  மனதுக்கு உகந்ததை செய்யும் பொழுதே,  வாழ்த்தும், நிந்தனையும் கலந்து தான் வரும்.  பல விதமான மக்கள், பலவிதமான  விருப்பு வெறுப்புகள்.  பலவித எதிர் பார்ப்புகள்.  அரசனின் செயல்களை விமரிசிக்கும் அறிஞர்கள் பெரும்பாலும்  அரியனவை நன்மைகளை மட்டுமே குறித்து வைக்கிறார்கள். மற்றவைகள் நாளா வட்டத்தில் மறக்கப் படுகின்றன.  இவைகளுடன்  ஹர்ஷ தேவனின் வரலாற்றை வர்ணிக்கிறோம். 873

சக்தி வாய்ந்த பரமாணுக்கள் மட்டுமே பயன்படுத்தி படைப்புக் கடவுள் இந்த மனிதனை படைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமேயில்லை. இல்லாவிடில், மனித பிறவி தானே, தாயின் வயிற்றில் பிறந்தவன் தானே, மகத்தான ஆற்றல்களுடன் எப்படி பிறந்திருக்க முடியும்?  மனிதர்களில் மட்டுமல்ல, தேவர்களில் கூட இப்படி ஒரு உருவம் காணமுடியாது. தானவர்களில் இருக்கலாம் ஆனால் அதில் அதிகமாக உயர்வு  நவிற்சியணி – மிகைப் படுத்திச் சொல்வது – என்ற காவியங்களில் பயன்படுத்தும் அலங்கார சொற்களே அதிகம். அதைச் சொல்வதும்  ப்ராஞர்கள் – சாதாரண அறிவை விட பல மடங்கு அதிக அதிக அறிவு உடையவர்கள் –  அவர்கள் தான் நயம் பட சொல்வார்கள்.

தற்கால super man – என்றால் மிகையாகாது.   ஸூரிய ஒளியை மிஞ்சும் ஒளி மிக்க காதணிகள், குண்டலங்கள், தலை மேல் மகுடம் தூக்கித் தெரியும் படி சுற்றிலும் தலைப்பாகை யுடன் இருக்கும்.  சிங்கத்தின் பிடர் மயிர் போல சிலிர்க்கும் அடர்ந்த தாடி, மீசைகள், காளை போன்ற தோள்கள், நீண்ட கைகள்,  கருமையும் சிவந்த நிறமும் கலந்த உடல் நிறம், பரந்த மார்பும், குறுகிய இடையும், மேகத்தின் நாதம் போன்ற குரல், கம்பீரமாக பேசும் தோரணை, துடிப்பும், சமயோசிதமாக பேசும் திறனும் யாவரையும் கவரும்.  

அரண்மனையின் பிரதான வாசல்- சிம்ஹ த்வாரம் எனப்படும்-  அதில் பெரிய மணி கட்டச் செய்தான். யார் வந்து  எதை வேண்டினாலும் அரசன் காதுக்கு எட்டும்படி ஏற்பாடுகள் செய்திருந்தான்.  குறைகளைச் சொல்லி பரிகாரம் தேடுபவர்,  விண்ணப்பங்களை தர வந்தவர்கள்  அதிக நேரம் காத்திருக்க தேவையில்லாமல் இந்த மணி ஓசையே அரசனை எழுப்பி விடும்.  மழை மேகத்தைக் கண்டு மகிழ்ந்து கூடும் சாதக பக்ஷிகள் போல வந்தவர்கள் குறை தீர்ந்து மகிழ்ந்து திரும்புவர். ஆடம்பரமான ஆடைகளோ, ஆபரணங்களோ இன்றி எளிய உடையுடன்,  சிறிய காவல் படையே மெய்க் காப்பாளர்களாக அருகில் இருப்பர்.   அரண்மனையில் தலைப்பாகை இன்றி யாரையும் காண முடியாது. அரசனை அதிகமாக சிம்ஹத்வாரம் என்ற நுழை வாயிலில் தினமும்  காணலாம்.  பலவிதமான மக்கள் அங்கு வந்து அரசனிடம் நேரில் பேசி பலன் பெறுவர்.  உள் நாட்டு வெளி நாட்டு பிரதி நிதிகளை கூட அங்கு காணலாம்.

மந்திரிகள், அந்தரங்க பணியாளர்கள்,  என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் அரண்மனை வளாகத்தில் பொன் வண்ண கை கங்கணங்கள், இடுப்பு பட்டைகள் அணிந்தவர்களாக நிரம்பி இருப்பர்.  சுந்தரன், கண்ணுகினியான் என்றே போற்றப் பட்ட சாம்ராஜ்யாதிகாரி, விஜய மல்லனுக்கு குருவாக மதிப்புக்குரியவனாக திகழ்ந்தான்.  பூமியின் நாயகன் நன்றி மறவாமல் அவனுக்கு அளித்த பதவி அரசனுக்கு இணையான மதிப்பை பெற்றவனாக,  அரண்மணை நிர்வாகத்தில் சுதந்திரமாக செயல் படும் அதிகாரமும் உள்ளவனாக இருந்தான்.  கந்தர்பன் போன்ற தந்தையின்  பழைய விசுவாசமுள்ள மந்திரிகள் தொடர்ந்தனர்.  கந்தர்பன் பழைபடி எல்லையில் பொறுப்பிலும், மதனன்  சேனைத் தலைவனாகவும், விஜயசிம்ஹ தன் பழைய பொறுப்பிலேயே இருக்கும் படி வைத்தான். ஆட்சி மாற்றத்தால் அரச நிர்வாகம் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்பதால்.

சில நாட்கள் பொறுத்து கோப தாபங்கள் குறையவும், ப்ரசஸ்த கலசன் முதலானோர் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.  நோனகனின்  மிக கடுமையான செயல்களுக்கான தண்டனையை குறைக்க முடியாமல், மரண தண்டனையே அளித்தான்.  அதுவும் சங்கடமாகவே மனதை வாட்டியது. நிர்வாகத் திறமை உடையவன். அரசனுக்கு அந்தரங்கமாக இருந்தவன்.  நல்ல புத்தி கூர்மையும், செயல் திறமும் உடையவன்.  அவனால் பல நன்மைகளையும் நாடு அடைந்தது.  நெருப்பு போன்றவன்.  பயனுடையது அது பாதுகாப்பாக கையாளும் வரை. அதுவே வீட்டை எரிக்குமானால் அணைக்கத்தானே வேண்டும்.  தன் மனைவியின் கண்ணெதிரில் அவன் மூக்கையும், காதுகளையும் வெட்டச் செய்தான்,  விச்சாவடன்,  பட்டன் போன்றவர்கள் சூலத்தில் மாட்டப் பட்டனர்.  

அகாரணமாக சிறையில் இருந்த பல சேவகர்களை விடுவித்தான். அவர்கள் கூட்டமாக வெளியேறியதைக் காண  மரப் பொந்துகளில் இருந்து திடுமென குளவிகள் மண்ணிலிருந்து கூட்டமாக வெளியில் வந்தது போல இருந்தனவாம். அவர்களுக்கு நிறைய பணமும் பொருளும் கொடுத்து அனுப்பினான். 893

ரக்கா வின் வம்சத்தில் வந்த க்ஷேமா வின் மகன் வஜ்ரனின் மகன், சுன்னா என்பவனை பதவி உயர்வு கொடுத்து முக்ய மந்திரிகளில் ஒருவனாக ஆக்கினான்.  அவன் சகோதர்களும் பதவிகள் பெற்றனர்.  ஜயராஜா என்பவனின் இளையவன், யாயராஜன் அரண்மனை நிர்வாகத்தில் தலைவனாக ஆனான்.  அரசனுக்கும் அந்தரங்க ஆலோசகனாக ஆனான்.   யாத்திரைகள் போகும் பொழுது அரசனுடன் செல்வதும், அந்த சமயம் ஏற்பாடுகள் செய்வதில் இருந்து, வழியில் ஆங்காங்கு காண வரும் பிரமுகர்களையும், பொது மக்களையும் சமாளிப்பது போன்ற செயல்களைச் செய்யும் மந்திரியாக, அரசனின் சுற்றுலாவில் உடன் வரும் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் நியமிக்கும் பொறுப்பும் அவனை சார்ந்தது.   

கங்கை யாத்திரை சென்ற சமயம் தம்மடன் தன்வங்க குடும்பத்தினர், தன் புதல்வர்கள், சகோதரர்களுடன் வந்து கலந்து கொண்டான்.   உறவினர்களான அவர்களை நல்ல முறையில் உபசரித்தான்.

இதற்கிடையில் சில விஷமிகள் விஜயமல்லனின் மனதை கலைத்தனர்.  கைக்கு கிடைத்த ராஜ்யம், யாருக்கோ கொடுத்து விட்டாய் என்பது போன்ற சொற்கள் விஜயமல்லனின் மனதிலும் சபலத்தை உண்டாக்கியது.  நீ தானே உத்கர்ஷனை ஜயித்தாய் என்றனர்.   கரைப்பார் கரைத்தால் என்பது போல அவன் மனமும் மாறியது. ஒருவரும் இல்லாத சமயம்  மூத்தவனை கொன்று விடுவதாக அவர்களுக்கு வாக்களித்தான். யாகம் என்ற காரணம் சொல்லி அரசனை அழைத்தான்.  இந்த ரகசிய ஆலோசனைகள் அரசன் ஹர்ஷனுக்கு தெரிய வந்தது.  அதனால் தன் அணுக்க சேவகர்கள், மெய்க் காப்பாளர்களிடம் கவனமாக இருக்கச் சொல்லி தேவையான ஏற்பாடுகளுடன் வரும் படியும் ஆணையிட்டான் 902

அரசனின் அணுக்க சேவகர்கள் படைகளை தயார் செய்து கொண்டிருந்த விவரம் விஜய மல்லனுக்கு தெரிய வந்தது. உடனே  குதிரைகளை லாயத்திலிருந்து ஓட்டிக் கொண்டு செல்ல தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.  குதிரைகள் காணாமல் போனதைக் கண்டு அரச சேவகர்கள் திகைத்தனர்.  விஜயமல்லனும் யாகத்தை அவசரமாக முடித்து தன் மனைவியுடன் ஊரை விட்டே வெளியேற கிளம்பினான். அதற்குள் அரச சேவகர்கள் அருகில் வந்து விட்டனர்.   குதிரையில் அமர்ந்தபடி  அரச சைன்யத்துடன் அமானுஷ்யமான பலத்துடன், வீரத்துடன் போரிட்டான்.   எதிர்பாராமல்,  மழை பொழியலாயிற்று. மழைக் காலமோ அல்ல, அப்படி யிருக்கையில், தாரையாக பொழிந்த  மழை.  பூமி அதனால் வெகுவாக பாதிக்கப் பட்டது.  பெரும் ஓசையுடன் காற்று வீசி அடித்து, அதுவே பேரி மிருதங்கம் வாசித்து மழைக்கு ஆதரவு அளிப்பது போல ஆயிற்று.  அம்புகள் ஒரு பக்கம், மழையின் தாரை ஒரு பக்கம் என்று அலைக்கழிக்கப் பட்ட விஜயமல்லன் போர்க் களத்தை விட்டு விலகவே நினைத்தான்.  முன் இவனுக்கு ஆதரவாக இருந்த சண்டகனுடைய புதல்வர்கள் அவனை கொல்லவே முயன்றனர் போல ஆக்ரோஷமாக போரிட்டனர்.

விதஸ்தா- சிந்து என்ற நதிகளின் சங்கமத்தில் அணையின் மேல்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  மனைவியை தோளில் போட்டுக் கொண்டு விஜயமல்லன் நீந்தலானான். அதைக் கண்டு துரத்தி வந்த சைன்யத்து வீரர்கள் தங்கள் குதிரையுடன் நீரில் இறங்கி முன்னேறினர்.  அவர்கள் கண்ணில் படாமல் விஜய மல்லன் தரதர்கள் வசித்த  லாஹரா தேசம் நோக்கி வேகமாக நீந்தலானான். ஓரிடத்தில் கரையேறியவனை பழகிய அவனுடைய குதிரை வரவேற்பது போல அருகில் வந்து நின்றது. அதில் ஏறிக் கொண்டு வேகமாக செலுத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான்.   கந்தர்பன் எல்லைக் காவலன். கோட்டையின் வாசல்கள் பலமான பாதுக்காப்புடன் மூடப் பட்டிருந்தன.   தரதர்கள் வசித்த மலைப் பாங்கான இடம்.  அதன் மேல் சிரமப்பட்டு ஏறிக் கடந்தனர்.   தரத அரசன் வித்யாதர சாஹி அவனை வரவேற்றான்.  ஒரு சில அவனுக்கு ஆதரவான சிப்பாய்கள்  பின் தொடர்ந்து வந்து சேர்ந்து கொண்டனர்.  

இந்த நிகழ்ச்சிகள் ஹர்ஷ தேவனுக்கு கவலையை அளித்தது.  நம்பிக்கைக்கு பாத்திரமான விஜய மல்லனே எதிரியாவானா?  தாமர அரசில் அடைக்கலம் புகுந்து விட்ட விஜய மல்லன் அடுத்து என்ன செய்வான் என்று எப்படி ஊகிக்க முடியும். அதனால் ஹர்ஷனின் சிந்தனை வேறு விதமாக செயல் பட்டது.  போரை தவிர்த்து அந்த நாட்டுடன் நட்புடன் இருப்பதை விரும்பினான்.   பனிக்காலம் முடியும் வரை காத்திருக்கத் தான் வேண்டும். விஜய் மல்லனுக்கும் அதே பிரச்னை. உடனடியாக எதுவும் செய்ய முடியாமல் இயற்கையின்  மாற்றம்,  பனிப் பொழிவு கட்டிப் போட்டது.

ஆனால், பரிதாபமாக உயிரை விட்டான்.  தாமரர்களிடம் இருந்து ஆதரவுடன் படை பலமும் வருவதையறிந்து உத்சாகமாக  புறப்பட்டான்.  பனிப் பொழிவு நின்று, கோடை காலம் இன்னமும் வரவில்லை என்றாலும் சித்திரை மாதம் நல்ல பருவம் தான். காற்று வீசிக் கொண்டிருந்தாலும் பயப்படும்படியாக இல்லை.  வழியில் தங்கிய கூடாரத்தின் தண்டுகள் முறிந்து  அவன் மேல் விழுந்து  தூங்குபவனை மீளா உறக்கத்தில் ஆழ்த்தி விட்டன

தாமரைக் குளத்தில் மொட்டுகளாக நிரம்பியிருக்கும். ஸூரியனின் ஆயிரம் கிணங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவைகளை மலரச் செய்யும்.  அந்தோ பரிதாபம் ஒரு யானை வந்து குளத்தில் இறங்கி ஒற்றைத் துதிக்கையால் அனைத்தையும் அழித்து விடுகிறது.  அது போல ஆபத்து எங்கிருந்து வரும் என்பது முன் கூட்டியா தெரியும்.

 உடனடியாக அபாயம் இல்லை என்று நிம்மதி  அடைய விடாமல்  ஏதோ ஒரு உள் நாட்டுக் கலகம் ஆங்காங்கு தோன்றிக் கொண்டே இருந்தன.  இதற்குள் ஹர்ஷனும் ராஜ்ய நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றவனாக ஆனான்.  அனுபவங்களே பாடமாயின.  அரசன், அருகில் உள்ளவர்களிடம் கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதை அவர்கள் அறிய விடக் கூடாது என்பது முதல் பாடம்.  சிறிய உத்யோகஸ்தர்கள் என்று எவரையும் கண் காணிக்காமல் விடக் கூடாது. இரண்டாவது பாடம்.   அரசனாக அதிகாரம் செய்தாலும், தெரியும் படியாக அந்த அதிகாரம் அளவு மீற விடக் கூடாது.   இயல்பாக எளிமையானவன். ஆபரணங்களோ, பகட்டான ஆடைகளோ கூட இல்லை.  கண்டவுடன் பொறாமை கொள்ளும் படியான எந்த பேச்சோ, தோரணையோ இல்லை. இருந்தாலும்  நாட்டு மக்களிடம் கவனமாகவே இருந்தான்.  காடுகளில் வசந்தம் மலர்களை மலரச் செய்வது போல்  பின்னின்று செய்தே தன் ஆட்சியை நிலையாக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொண்டான்.

அரசனைத் தவிர நாட்டு மக்கள் கேசத்தை விரித்தபடி சுற்றுவர்.  தலைப்பாகையும் கட்டாயம் இல்லை. ஆனால் பதவியில் இருப்பவர்கள் அலங்காரமாக உடை அணிவது வழக்கம்.  பள பளப்பான  இடைக் கச்சுகள், வண்ண மயமான தலைப் பாகைகள்,   அலங்காரமான உடைகள், காலணிகள் இவைகளால் மதிப்பு என்று இருந்த  நிலை மாறியது. அரசனே எளிய உடையில் விரித்த கேசமும், பொன் ஆபரணமோ இன்றி இருந்தால், அவர்களும் மாற வேண்டிவந்தது.  அரசனே அரச அதிகாரி என்பதற்கான உடைகளையும் பரிந்துரைத்து விட்டான்.  மனித மனம் அலங்காரத்தை விரும்புவது. சில மந்திரிகளுக்கு ஏமாற்றமாக கூட இருந்தது.   சேனைத் தலைவன் மதனன், முக்ய மந்திரி ஜயானந்தா பிரகாசமான உடை அதற்கு இணையான மேலாடை என்று கவனமாக விரும்பி அணிபவர்கள்.  ஆடை அதிகாரத்தின் அடையாளம் என நினைப்பவர்கள் உலகில் நிறைய உண்டு.  அனைவருக்கும் பொதுவான ஆடை என்பது ஏற்கத் தக்கதாக இல்லை.

தங்கள் தோற்றத்தில் கர்வம் கொண்ட சிலர் உயர்தரமான ஆடைகளால் மேலும் கவர்ச்சிகரமாக இருப்பதாக நம்பியவர்கள்  அரசனுக்கு பொறாமை என்று கூட நினைத்தனர்.   அரசனோ, பொறாமை ஏன் கொள்கிறான்.  பாராட்டினான்.  பெண் பணியாளர்களைக் கொண்டு ஆரத்தி எடுக்கச் செய்தான்.  (ஆரத்தி என்று சிறு விளக்கை ஏற்றி நிரில் வைத்து திருமணங்களில், உத்சவங்களில்  சம்பந்தப்பட்டவர்  மேல்  கண் த்ருஷ்டி -கண்ணேறு என்பர் – பட்டு விடாமல் தடுக்கும் என்பது ஒரு கருத்து.)  தென்னாட்டில்  கர்ணாடக தேசத்தைச் சுற்றி உள்ள இடங்களில்  பரவலாக உள்ள வழக்கம் என்று கவி சொல்கிறார் –   926

(நாட்டின் தென் பகுதி விந்திய மலைக்கு அப்பால் கர்ணாட என்று குறிப்பிடப் படுகிறது – ஆந்திர, கர்ணாட கேரளா லாட என்ற கோவா வரை உள்ள தேசங்கள் என்று சிலருடைய யாத்திரைகளை  சொல்லும் பொழுது ஓரிரு முறை குறிப்பிட்டிருப்பதைத் தவிர அதிக செய்திகள் இல்லை)

கர்ணாட அரசின் நாணயங்களைப் போல நாணயங்கள் செய்து புழக்கத்தில் விட்டான்.   அரச சபையினரின் உடைகள் கர்ணாடக அரச சபையினரைப் போல அமைத்தானாம்.  தாள மரத்தின் இலைகள் வடிவத்தில் இடை கச்சுகளில் அலங்கரிக்கப் பட்டு, அவைகளில் வாளை உறையுடன் செருகிக் கொண்டு, அடர்ந்த சந்தன பூச்சுகளுடன் வலிமையான தேகத்தினராக, அடர்ந்தகேசத்தைச் சுற்றி தலைப்பாகை அதன் மேல், பொன்னாலான தாழம்பு பத்ரங்கள்- மடல்கள்,  காதின் பின்னும், கழுத்தின் மேலும் இருந்த கேசத்தின் சுருள்கள் அல்லது பின்னலிட்ட கேச நுனிகளில்  மிகச் சிறிய குஞ்சலங்களால் அலங்கரித்திருந்தனர். மணம் நிறைந்த மலர்கள் தொடுத்த நீண்ட மாலைகளுடன், நெற்றியில் திலகங்கள்,  அஞ்சனம் பூசிய கண்கள், மெல்லிய பொன்னால் நெய்யப்பட்ட நூலால் உபவீதம்  எனும் பூணூல்,     இடையிலிருந்து பாதங்கள் வரை நீண்ட   ஆடைகள் தரையைத் தொட்டன.  மேலாடையாக  தோள். புஜங்கள் வழியாக கைகளின் மேல்  மார்புகளின் வளைவுகள் வழி இடை வரை  வேலைப்பாடுகளுடன் கூடிய  கஞ்சுகம் என்ற ஆடை  – அதிகாரிகளும் மற்றவர்களும்  விரும்பி அணிந்து மகிழ்ச்சியாக இருந்ததை அவர்களின் மலர்ந்த முகமே சொல்லியது.  கர்ப்பூரம் போன்ற வெண்மையான மென் சிரிப்பு.   ஆடவர்களின் ஆடை மோகம் ஒரு பக்கம் இதனால் நிறைவேறியது என்றால், பெண்களின் பார்வைகளை – அவர்கள் தங்கள் புருவ அசைப்பால் அதை ரசித்து பாராட்டியது போல  விரும்பி கவனிக்கச் செய்தது அவர்களுக்கு மேலும் மன நிறைவை அளித்தது.

அரச சபையில் பணி செய்ய விண்ணப்பம் அளித்த அனைவருமே தகுதிக்கு ஏற்ப பதவிகளைப் பெற்றனர்.  கடலும் மேகமும்  ஒருவருக்கொருவர் உறு துணையாக ஆவது போல. கடல் நீரால் மேகம் உண்டாவதும், பின் மேகம் மழையாக பொழிந்து உலகை வாழ வைப்பதும் போல என்று உவமை. இருவருக்கும் இடையில் உள்ள பிணைப்பு அரசனுக்கும், மக்களுக்கும் இடையில் இருப்பது சொல்லப் படுகிறது.  பாடகர்கள், இசை கலைஞர்களுக்கு வாரி வழங்கினான். அவர்களே எதிர் பாராத அளவு  பொற்காசுகள் பெற்றனர்.  அதனால் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அரசவையில் பாடியும், வாத்யங்கள் வாசித்தும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அரசனே மெத்த கற்றவன். கவி பாடும் இயல்புடையவன். ஆதலால் கவி பாடுபவரும் கல்வி கற்றவர்களும் மதிக்கப் பட்டனர்.  நல்ல வெகுமதிகள், கவிகளுள் ரத்தினம் போன்றவன், அவர்களுக்கும் உயர் மணிகளே பரிசளித்தான். அவர்களும் குதிரைகள் பூட்டிய வாகனங்கள், பல்லக்குகளில் பிரயாணம் செய்வது, குடைகள் என அரசனுக்கு இணையான செல்வாக்கோடு வாழ வகை செய்தான்

கலசனின் காலத்தில் காஸ்மீர தேசத்தை விட்டு வெளியேறிய பில்ஹனா -Bilhaana-  என்ற கவி கர்ணாடக அரசனிடம் தஞ்சம் அடைந்திருந்தார்.  பர்மாடி என்ற கர்ணாடக அரசன், அவருக்கு வித்யாபதி என்ற பட்டம் கொடுத்து கௌரவித்து இருந்தான். அவர் மட்டுமே அரசனுடைய நகர் வலத்தில் யானை மீது தன் குடையுடன் அமர்ந்து உடன்  செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தார்.   அவர்களும் ஹர்ஷ தேவனின் அறிவையும், உயர் கல்வி கற்ற அறிஞர்களுக்கு அளித்த கௌரவத்தையும் அறிந்த பொழுது வியந்து பாராட்டினர்.  சுகவி பாந்தவான்- நல்ல கவிகளுக்கு பந்து வானவன் என்று புகழ்ந்தனர்.  அரசனே கல்பதரு போல கொடுப்பவனாக இருக்கையில், உபவனங்களில் தனியாக கல்ப தரு எதற்கு?  பொன்னாலான்  நெல்லிக் கனிகள் நிரம்பி இருந்த ( திருமகளின் அருள் பார்வையை கனக தாரா என்று சொல்வது வழக்கம்)  ராஜதானியில், அந்த அரசனின் மாளிகைகள் வானளாவி நின்றனவாம். உலகத்திலேயே அதிசயமான காட்சியாக அந்த ராஜதானி- தலை நகரம் பெயர் பெற்று இருந்தது.  பலவிதமான குறையாத நீர் வளம், என்றும் நிரம்பியிருக்கும் குளங்களும் ஏரிகளும், பறவைகளும், மிருக ஜாதிகளும் பயன் பெறும் படி, நீர் நிறைந்த பம்பா என்ற சரோவரம்- பெயர் பெற்ற பரந்த நீர் நிலையை தோற்றுவித்த அரசன்.  வாசஸ்பதி என்றே பெயர் பெற்றிருந்த அரசன். கல்வி, கேள்விகளும், எந்த அளவு வித்யா – கல்வியின் பல பிரிவுகளில் உண்டோ, அணைத்தும் அந்த ராஜ்யத்தில் ஆதரவு பெற்றன.  சிறிய விவரமானாலும் அதை தானே தெரிந்து கொண்டு விடும் திறமையுடைய அரசன் என்றும்,  அதை விவரித்து சொல்ல சொற்களே இல்லை எனும் அளவு பரந்த அறிவுடையவன். அவனே வாசஸ்பதி – என்ற கல்விக்கு அதிகாரியான தேவன்.  (சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு பெயர் தேவி சீதையினால் கொடுக்கப் பட்டது ஸ்ரீமத் ராமாயணத்தில் சொல்லப் படுகிறது. வாசா தர்மம் அவாப்னுஹி वाचा धर्मं अवाप्नुहि– உன் சொல்லால் தர்மம் தழைக்கட்டும், உன் சொல்லால் புகழ் பெறுவாய் என்று பல பொருள்கள் சொல்வதுண்டு)

தானே இயற்றிய பாடல்களை அரசன் பாடுவதைக் கேட்டு கவிதைகளை இயற்றும் வல்லமை பெற்ற பலரும் வியந்து பாராட்டினர். எதிரிகளே ஆனாலும் அந்த கீதத்தைக் கேட்டு கண்களில் நீர் துளிர்க்க ரசிப்பர்.  தூங்கும் நேரம் மிக குறைவு. இரவில் ஒரு யாமங்களே உறக்கம்.  பின் இரவு வரை விவாதங்களும், கலை என்பதன் அனைத்து பிரிவுகளிலும் தேர்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலும், அவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளும், ஆடலும் பாடலுமாக  அரசனுடைய அரண்மனை கோலாகலமாக இருக்கும். ஆயிரக்கணக்கான விளக்குகளால் சபை ஜோதி மயமாக இருக்கும்.

அதன் முடிவில், தாம்பூலங்கள் மெல்வதால் வரும் ஓசையும், பெண்கள் தலையில் மலர்களுடன்   பாரிஜாதம் மலர்களின் மணமும் அந்த சபையை நிறைக்கும். (शेफाली- பவழ மல்லி – பின் இரவில், இதோ விடியப் போகிறது என்ற சமயத்தில் மலர்ந்து மணம் பரப்பும். இந்த மலரைக் குறித்துச் சொன்னதால் நேரம் சொல்லப் படுகிறது)

மேகம் திரண்டு வருவது போன்ற அரசனின் பரிவாரங்கள்,  ஜுவாலையாக தெரியும் வரிசையாக வைக்கப் பட்ட கை விளக்குகள், பொன்னாலான செங்கோல்கள் மின்னல் போல பளபளக்கும், அவற்றை வீரர்கள் சுழற்றிக் கொண்டு முன் செல்வர். தீயின் ஜுவாலையும், புகையுமாக தெரியும்.   அந்த:புர பெண்கள் அப்சரச -தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட ஒரு படைப்பு என்பர். தேவலோகத்தில் உலவும் பெண்கள்.  போல இருப்பர். மந்திரிகள் ஒளிம் வீசும் தாரகைகள் போல,  ரிஷிகள் கூட்டமே இணைந்தது போல கல்வி கற்ற அனுபவம் மிக்க பெரியவர்கள், கந்தவர்கள் போல அரச பாடகர்கள், தனதன்- யமன் இருவரும் நிரந்தரமாக அந்த நாட்டில் குடியிருந்தனர் போலும்.  செல்வத்தை அளிப்பதில் தனதன்,  தன்னைப் போன்றே  செல்வ செழிப்புடன் வாழ்க்கைத் தரம்,  தானம் அளிப்பதில், அதே சமயம் பயம் – தவறு செய்வதில் பயம், கட்டுபாடுகள், தவிர  நீதி  நியமங்களை காப்பதில் யமன் போன்று உறுதியான நிலைப்பாடு  என்று இருந்தனவாம்.

அரச சபை இரவு நேரங்களில் இந்திரனின் சபையை தோற்கடிக்கும். முழுமையாக வர்ணிக்க ப்ரும்ம தேவனே வர வேண்டும் என்று கவி கல்ஹணன் சொல்கிறார்.  

வெள்ளி, தங்கம் இவைகளால் ஆன நாணயங்கள் வியாபாரங்களில் செலாவணியாக பயன்பட்டன.  சற்று மதிப்பு குறைந்த பொருட்கள் தாமிர நாணயங்கள் கொண்டு பரிமாறிக் கொள்ளப் பட்டன.  சுன்ன என்ற அரச உறவினன் தண்டிக்கும் அதிகாரம் பெற்றவனாக மந்திரி மண்டலத்தில் இருந்தான். குற்றங்களை தவிர்க்கவும், குற்றவாளியகளைத் தண்டிக்கவும் அவன் பொறுப்பாக நல் மதிப்பைப் பெற்றான்.  அந்த நாட்டில் பெருமளவில் பேராசை உள்ளவனே எவருமில்லை.  பற்றாக்குறை இருந்தால் தானே மற்றவன் பொருளையும் அபகரிக்கத் தோன்றும்.

தன் ஊரான ஜய வனத்தில், ஸூர்யாமூலகம் என்ற இடத்திலும், விஜயேஸ்வர என்ற இடத்திலும்  இருந்த மடங்களின் நிர்வாகம் நாளடவில் ஒழுங்கு குறைந்து ஒரு சிலரால், தங்கள் அறியாமை அல்லது சுயதேவைகளுக்காக செலவழித்து விட்டு. பொது மக்களுக்கு, ஏழைகளிடம் கஞ்சத்தனம் – குறைவாக கொடுப்பது, அல்லது எதுவுமே தராமல் விரட்டுவது என்பது நடை முறையாகி விட்டிருந்தது..

பசி, வியாதி, அனாதைகள் இவர்களுக்கு நிவாரணமாக தாராளமான பொருள் வசதிகளுடன் நிரந்தர காணிக்கைகளுடன்  நிறுவப்பட்டவையே  செயல் திறன் இல்லாத, தன்னலமே பெரிதாக நினத்த லோபிகள் கையில் அகப்பட்டு இந்த நிலைக்கு வந்து விட்டன என அறிந்த சுன்னன்,  அங்கு உதவி பெற வேண்டுவோர் தாங்களே நேரடியாக பெற அதிகார பத்திரங்கள் வழங்கி, மேலும் தேவையானவற்றை முறைபடுத்தினான். அதனால் உள் இருந்து சுரண்டுவது முடியாமல் போயிற்று. 953 நந்திகேஸ்வரா என்ற இடத்தில், சம்பகா என்பவனும் ஆண்டில் ஏழு நாட்களே அந்த க்ஷேத்திரத்தில் இருப்பான்.  வந்த சமயம்,ஆண்டு முழுவதுக்குமான தன் ஊதியத்துடன்,  முடிந்தவரை தனக்கு லாபமான  விதத்தில் ஏதோ செய்து தன் செல்வத்தை பெருக்கிக் கொள்வதே கவனமாக இருந்து வந்திருக்கிறான்.

ஹர்ஷ தேவன், அந்தணர்களுக்கு கன்றுடன் பசுக்களையும், கரு நிற மான் தோல் போன்ற அவர்களுக்கு தேவையானதையும் மற்ற தன தானியங்களோடு கொடுத்து, அவர்கள் வசதியாக இருக்கச் செய்தான். அந்தணர்களில் வறுமையால் வாடுபவர் இல்லாமல் செய்து விட்டான்.

வசந்தலேகா என்ற ராணி சாஹி வம்சத்தில் வந்தவள், பல மடாலயங்களையும், அக்ரஹாரங்களையும் ஸ்ரீ நகரத்தில் நிறுவினாள்.  பவித்திரமன த்ரிலோகேஸ்வர சன்னிதியிலும் அதே போல பல வசதிகளை செய்து கொடுத்தாள்.  மஹேஸ்வர பக்தி தான் பிரதானமாக அந்த அரசன் இருந்தான் என்று  சொல்ல முடியாத படி சமூக நலங்களுக்காக அதற்கு மேலும் பல காரியங்கள், பலவகையில் முன்னேற்றம் ஏற்படும் படி அரசனாக ஹர்ஷ தேவன் செய்திருக்கிறான்.  

பழைய மந்திரிகள் அரசனுக்கு ஆதரவாக, அவனைப் போலவே தன்னலமின்றி நாட்டு நலனையே பெரிதாக எண்ணியிருந்தவர்கள் ஒவ்வொருவராக கால கதி அடையவும் புதிதாக வந்தவர்கள் அந்த அளவுக்கு அரசனுடன் ஒத்துப் போகவில்லை.  மயிலின் கால்கள் வளைந்து குஷ்ட ரோகத்தால் பாதிக்கப் பட்டது போல இருந்தாலும், பறந்து சென்று ஓடும் பாம்பை, அதன் எண்னற்ற கால்களைக் கொண்டு வேகமாக சென்றாலும் பிடித்து விடும். விழுங்கும் என்பர்.  சஹஸ்ர கிரணன் என்று ஸூரியனின் பெயர். அவனுடைய அருணன் என்ற சாரதிக்கு இடுப்பு வரை தான் சரீரமே.  அவன் தான் முன்  இருந்து ஸுரியனின் கதியை நிர்ணயிக்கிறான்.  (அருணனுக்கு அனூறு अनूरु – ऊरु – தொடை- அதுவே இல்லாதவன் என ஒரு பெயர்.  அமர்ந்த  நிலையில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை  ஓட்டுபவன்.  வஞ்சகமாக அதிக உடல் பலம் இல்லாதவன், பலசாலிகளை கூட சிலசமயம் ஜயித்து விடுகிறான்.  திறமை இல்லாதவன் முழு பலனையும் அடைந்து வளைய வருகிறான்.  இவை அணைத்தும் எந்த அடிப்படையில் நடை பெறுகிறது, எப்படி என்று யார் சொல்ல முடியும்? தெய்வ செயல் என்று சொல்வோம். 959

இந்த அளவு அறிவும், ஆற்றலும் உடையவன் இப்படி செய்வான் என்று யார் தான் எதிர்பார்த்திருப்பர். தந்தையிடம் இருந்த கோபம் அடங்கவே இல்லை. இடையில் துர் மந்திரிகள் ஒரு சிறிய பிளவை பெரிதாக்கி இருவருக்கிடையில் பூசலை கிளப்பினர் என்பதை ஊகிக்க முடியாதவனா?  பாபசேனன் என்று லோபியான தந்தையை அழைத்தான். செலவழிக்காமல் சேமித்து வைத்திருந்த பொக்கிஷங்களை தன் விருப்பம் போல செலவழித்தான்.  ராஜதானி என்று பெயரிட்டு அவன் நிர்மாணித்திருந்த மடாலயங்களை கூட அழித்தான்.  அந்த:புரத்தில் இருந்த முன்னூற்று அறுபதுக்கும் மேற்பட்ட பெண்களை சந்தேகித்தான்.  இவர்கள் அனைவருமே நல்ல நடத்தையுள்ளவர்களே.  அவர்களுக்கு விருப்பமில்லாத  டோம்ப, சண்டாள பெண்களை கொண்டு வந்து சேர்த்தான், குலஸ்த்ரீகள் அந்த கீழ் மட்ட பெண்களை தங்களுடன் இருப்பதை விரும்பவில்லை என்பதை அறிந்தும் பழி வாங்குவது போல செய்தானாம்.

புவனராஜா லோஹரா தேசத்தை தான்  திரும்பப் பெறுவது பற்றி யோசிக்கலானான்.  தர்பித புரம் என்ற இடத்தில் எல்லை காவலில் இருந்த கந்தர்ப்பனை சந்தித்து  தனக்கு ஆதரவு தேடச் சென்றான்.  கந்தர்பன் தனக்கு எதிராக படை திரட்டுகிறான் என்பது தெரிந்தவுடன் தலை மறைவாகி விட்டான்.  காரணமின்றி அந்த ராஜபுரியை பாலித்த சங்க்ராம்பாலன் இவர்களின் திட்டத்தை அறிந்தவன் போல எதிர்த்தான்.  கந்தர்பன் சமாதானமாக போக விரும்பி படை வீரர்களுக்குள் இருந்த இரு விதமான மன நிலையை ஊகித்து அவர்களிடம் பேசி சமரசம் செய்து கொண்டிருந்தான்.  அதற்குள் அரசன் ராஜபுரி அரசனிடம் இருந்த  மன வேற்றுமை காரணமாக பெரும் படையுடன் சேனைத் தலைவனை அனுப்பி விட்டான்.  968

பெரும் படையுடன் லோஹார எல்லை வரை வந்தவன் ஏதோ யோசித்தபடி ஒன்றரை மாதம் முற்றுகையைத் தவிர்த்தான்.  விரோதிகளின் பலம் அறிந்து  பயந்தானா, இந்த படையெடுப்பே தேவையற்றது தேவையற்றது என நினத்தானா, இதற்குள் ஆஷாட மாதம் வந்து விட்டது.  எந்த நேரமும் மழை வரலாம்.  அரசன் உத்தரவு என்று கிளம்பி வந்தவன் அதற்கு மேல் எதுவும்  முன்னேறாமல் இருந்ததை அறிந்த ஹர்ஷதேவன் கந்தர்பனிடம் வெகுண்டான்.  அவன் தான் தடுத்து நிறுத்தி இருப்பான் என்ற சந்தேகம்.

சம்பந்தமில்லாமல் தன்னை இந்த பிரச்னையில் ஈடுபடுத்தி, குற்றம் சொன்னதை கந்தர்பன் அறிந்தான்.  இந்த பழியை பொறுக்க மாட்டாமல்,   ராஜபுரியை வெற்றி கொள்ளும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு தன் படையுடன் ராஜபுரியை முற்றுகையிட்டான்.  போர் புரிய சாதனங்களும் இல்லை, சரியான பயிற்சியும் இல்லாத வீரர்கள், மலைப் பாங்கான ராஜபுரி, அதன் அடியில் ஆறாவது நாள் தங்கினர். இன்னம் ஒரு யோஜனை தூரமே ராஜபுரி என்ற நிலையில்,  அவன்  படை வீரர்கள் தயங்கினர். தானே கிளம்பினான்.  வாழை மரக் காட்டை துவம்சம் செய்த படி செல்லும் சிங்கம் போல என்று உவமை. (யானை போல என்று சொல்வது வழக்கம். சிங்கத்துக்கு வாழை மரம் எம்மாத்திரம்- எதிரி பலம் அவ்வளவே என எடுத்துக் கொள்ளலாம்)  காவல் தலைவனாக இருந்த புத்தராஜா  வம்சத்தில் வந்த குலராஜா என்பவன்  மட்டுமே உடன் வந்தான்.   ஆகாரம் இன்றி இருந்த கந்தர்பன்  வெளிக் காவலில் இருந்தவர்களை அடித்து நொறுக்கி விட்டு   இருபது முப்பது வீரர்கள் மட்டுமே தொடர  ராஜபுரியின் அரண்மனைக்குள் சென்று விட்டான். வெண் கொற்றக் கொடியால் மட்டுமே அவனை அடையாளம் தெரிந்து கொண்டனர்.   ஹர்ஷனின்  சேனாபதியுடன் வந்திருந்த  முப்பதாயிரம் ஆயுதம் தாங்கிய வீரர்களை ராஜ புரியின் முன்னூறு காலாட்படையினரே தடுத்து நிறுத்தி விட்டனர்.

அந்த போரில் இறந்த காஸ்மீர வாசிகள் இருனூறு பேர். காசா खशा- என்ற பிரிவினர் நானூறு பேர்.  எதிரி பலம் தோற்றதாக அறிவித்து விட்டு அனைவருக்கும் ஒரே இடத்தில் தகனம் – அந்திம சமஸ்காரம்  மறைந்தவர்களுக்கான நீர் கடன்கள் –   ம்ருத்யு- மரணமே தண்டவமாடுவது போல இருந்ததாம். எந்த காரணமும் இன்றி, நேர்மையாக உழைத்த தன்னை தவறாக குற்றம் சொன்ன அரசனின் அலட்சியம் என்ற வேதாளம் ஆட்கொள்ள,  மனம் நொந்து எண்ணற்ற உயிர்கள் வீணானதாக கந்தர்பன்  பெரும் வேதனைக்கு உள்ளானான். சுத்த வீரன். 

ஒரு யாமம் தான் சென்றிருக்கும்.  ராஜபுரி சேனை கந்தர்பனை தாக்க வந்து விட்டனர்.  தோல்வியை ஏற்க மாட்டாத ராஜபுதன வீரர்கள்.  கந்தர்பனின் எண்ணெயில் தோய்த்து எடுத்த அம்புகள் விழுந்த இடத்தில் பற்றிக் கொண்டன. ஆக்னேய அஸ்திரம் என்று பயந்த அந்த வீரர்கள் திரும்ப போருக்கு அழைத்த தங்களையே நொந்து கொண்டு திரும்பி பாராமல் ஓடினர்.

‘தைரியம், உறுதியான கொள்கை, சமயோசிதமான அறிவு, வேகம், திறமை , தான் செய்யும் செயலை முற்றிலும் அறிந்து செய்தல், பலா பலன்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளல், சந்தேகமே இல்லாத திட்டமிடுதல், இவைகள் அனுபவம் மிக்க அறிவும், தூய்மையான உள்ளமும் கொண்ட வீரர்களை  கை விடுவதில்லை.’

மாலை ஆதவன் அஸ்தமிக்கும் நேரம், ராஜதானிக்குள் நுழைந்தவன் மேலும் பல நூறு போர் வீரர்கள் தயாராக நிற்பதைக் கண்டான். எதிர் கொள்ள தானும் தன் ஆயுதங்களை எடுத்த சமயம் ஹர்ஷனின் தண்ட நாயகன்- சேனைத் தலைவன் தன் வீரர்களை உசுப்பி எழுப்பி அழைத்துக் கொண்டு வந்திருப்பதைக் கண்டான்.  கோரமான அந்த யுத்த களத்தைக் கண்ட வீரர்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தனர்.  போர் – இரு பக்கமும் நாசம் விளைவிப்பது. தன்னைச் சார்ந்தவர்கள் விழுந்ததைக் காணும் மக்கள், இரு விதமாகவும் பாதிக்கப் படுவர். சிலர் வீராவேசம் கொண்டு பதிலடி கொடுக்க முனைவர். மேலும் சிலர் பயம் அல்லது வெறுப்பு அல்லது விரக்தி அடைவர்.  மனிதனின் மனதில் எது எந்த நேரம் எப்படி வெளிப்படும் என்பதை யாரே அறிவார்?

குல ராஜா உள் நாட்டு காவல் தலைவன், போரை அறியாதவன், அவனும் நீரில் முழுகிய காகம் போல நடுங்கிக் கொண்டிருந்தான்.  அவனுக்கு குலராஜாவுடன் வந்த சிப்பாய்களின் மனப் பூர்வமான ஆதரவு மட்டுமே துணை. கண்ணுக்கு எட்டியவரை உதிரம் ஆறாக பெருக இருந்த போர்க் களம்.  வேற்று நாட்டில், சைன்யமும் உதவ இன்றி, தன்னாற்றல் மட்டுமே துணையாக, தொடர்ந்து போரிட்டான்.  தோற்றாலும் ராஜ புரி அரசன் கந்தர்பனின் ஆற்றலை சிலாகித்தான். அவனிடம் கப்பம் பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் தன் நாடு  திரும்பினான்.

ஹர்ஷன், வெற்றியுடன் வந்தவனை எதிர் கொண்டழைத்து, மரியாதைகள் செய்தான்.   

அடுத்து பரிகாசபுரத்தில் ஆனந்தன் என்பவன், முன் ஒரு சமயம் அதிகாரியாக இருந்தவன்.  வாமனன் என்பவன் பாதாக்ர என்ற இடத்தில் பொறுப்பாக இருந்தவனை நீக்கி விட்டு பதவிக்கு வந்தவன்.  . கந்தர்பனின் பதவிக்கு ஆசைப் பட்டான். கந்தர்பனின் விரோதிகளான சில மந்திரிகள், அரசு அதிகாரிகளின் உதவி அவனுக்கு இருந்தது. அவர்களுடைய தலையீட்டால் அரசனும் கந்தர்பனை லோஹாரா Lohara பிரதேசத்துக்கு மண்டலேஸ்வரன் என்ற பதவி கொடுத்து மாற்றி விட்டான். 996

நியாயமாக தன் பொறுப்பை நிர்வகித்தவன், அவனை யோசியாமல், இந்த வஞ்சகர்களின் சொல்லைக் கேட்டு அரசன் இந்த செயலை செய்து விட்டான்.  ஆனந்தன் முதலானோர் தங்களுடைய சுய நலம்  காரணமாக அரசனின் அருகில் இருந்து கந்தர்பனை விலக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்ததை, அரசன் அறியாமல் போனான்.

‘சரியான சமயத்தில் சரியான வழி காட்டக்கூடிய வாக் வண்மை மிக்க ஒருவனை அந்த சுயனலமிகள் சொல்வார்கள், ‘இவன் பேசியே மற்ற அரசர்களை வளைத்து விடுவான்’ என்றோ,  இவன் கூர்மையான அறிவுடையவன் உங்களையே கவிழ்த்து விடுவான்’ என்றோ பல முறை சொன்னால்,  சுய அறிவில்லாத அரசர்கள் ஏனோ நம்புகிறார்கள்.  ஒரு நிலையில் அரச பதவி தரும் மமதை அவர்கள் தலைக்கு ஏறி விடுகிறது. தங்கள் அழிவுக்கு தாங்களே வழி வகுத்து விடுகிறார்கள்.’  ந்ருப பசு, ஆறாவது அறிவில்லாத அல்லது ஆறாவது அறிவை இழந்த அரசன் – என்று கவி சொல்கிறார்.

பல நாட்களாக கந்தர்பனுடன் பழகியவன், நலம் விரும்பியாக நெருங்கி இருந்தவன் என்பது கூட காலப் போக்கில் கை முஷ்டியில் மணலை அள்ளியது போல மறைந்து விட்டது.

அத்துடன் விடாமல், அந்த வஞ்சகர்கள், அங்கு போன பின் உத்கர்ஷனின் இரு புதல்வர்கள் அவனுக்கு நெருக்கமாகி விட்டனர். அவர்களுடன் லோஹாரா வின் ஏக போக உரிமையை பெற கந்தர்பன் திட்டமிடுகிறான் என்று மூட்டி விட்டனர்.  அரசனும், உடனே பட்டா என்பவனை படையுடன் அசிதரன் என்பவனையும் பெயர் பெற்ற டக்கா என்பவனையும் உத்கர்ஷனின் புதல்வர்களை சிறை பிடிக்கவோ, முடியவில்லை என்றால் கொன்று விடும்படி உத்தரவிட்டான்.

இந்த விவரம் கந்தர்பனுக்கு தெரிய வந்தது. எழுத்தர் திறமையாக அந்த செய்தியிலேயே மறை முகமாக தெரியப்படுத்தி இருந்தார். எழுத்துக்களை  மாற்றிப் போட்டு படித்தவுடன் உண்மை விவரம் தெரிந்து விட்டது.  மிகவும் வேதனையாக இருந்தது.  எதிரில் வந்து நின்றவனை விளையாட்டாக கையைப் பிடிப்பவன் போல் விரல்களை மடக்கிப் பிடித்து விடாமல் உண்மையைச் சொல் என வினவியவனிடம் வலி தாங்காமல் கிளி போல தான் கேட்டதை ஒப்பித்து விட்டான்.  அரசனாக செய்யவில்லை, அனந்தனின் அருகில் உள்ளவர்கள் போதனை, அரசன் என்னை அனுப்பி உள்ளான் என்று அனைத்தையும் உளறி விட்டான்.

கந்தர்பன் தன் வேதனையை மறைத்துக் கொண்டு’ நான் ராஜ்யத்து ஆசைப் படவில்லை. போய் சொல். என் குடும்பத்தை என்னிடம் கொண்டு வந்து ஒப்படை. நான் கோட்டையை  விட்டு காசிக்கு போகிறேன்’  என்றான். அதே போல அவனுடைய குடும்பத்தினரை அழைத்து வந்து ஒப்படைத்த பின் கந்த்ர்பன்  தன் அதிகாரங்களைத் துறந்து காசிக்கு பயணமானான். 1007   

காஸ்மீர மக்களுக்கு காசி வந்து மறைந்த குல மூத்தோர்களுக்கு ஸ்ரார்தம் என்ற நீர்க் கடன்களைச் செய்ய வரி வசூலிப்பது வழக்கமாகி விட்டிருந்து. முன்னால் இருந்த அரசர்கள் அதை நீக்கச் செய்திருந்தாலும், காலம் செல்லச் செல்ல அது இன்னமும் நடை முறையில் இருந்தது. கந்தர்பன்  முதல் வேலையாக அந்த திருட்டுக் கும்பலை கடினமான ஒரு பாதையில் கூட்டத்துடன் போரிட்டு அழித்தான். அந்த கும்பல் பொது வழியான அந்த பாதையை பொது மக்கள் பயன் படுத்த விடாமல் ஆக்ரமித்துக் கொண்டிருந்தனர்.  அந்த கூட்டத்தை அழித்ததால் ஊர் மக்கள் நிம்மதியாக பயன் படுத்தலாயினர்.  தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த உக்ரமான காட்டுப் புலியை அழித்து நிம்மதியைக் கொடுத்தவன் என்று மதிக்கலாயினர். அந்த இடங்களில் மடாலயங்கள் கட்டி மேலும் வசதிகள் செய்து கொடுத்தான். இந்த செயல்களால் வாரணாசியின் கிழக்கு பகுதியே பிரகாசம் அடைந்து விட்டது.

காஸ்மீரத்தில், கந்தர்ப்பனை பதவி நீக்கம் செய்யும் வரை இணைந்து இருந்த மந்திரிகள், அதன் பின் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அரசாட்சியை சீரழித்தனர்.

செம்மறியாடுகள், தலையை சொரிந்து கொள்ள பாறைகளில் தலையை உரசிக் கொள்ளுமாம். அதுவே பின்னால் ரோகமாகி வருந்துமாம். அரசனின் கதி அது போல ஆகி விட்டது.  ஒரு சிலரின் சுய நலமான ஆலோசனைகள் என்பதை உணராமல் இந்த மந்திரிகளுக்கு இடம் கொடுத்ததே அரசனுக்கு தலைவலியாகி விட்டது. எண்ணி சில நாட்களில்,  அரச போகம், ஏராளமான உணவு, உடை என்று ஆடம்பரங்களில் திளைத்தவர்கள், மதம் தலைக்கேற தங்களுக்குள் அடித்துக் கொள்ளவும், எதிர்த்தவர்களை கொலை செய்யவும்  ஆரம்பித்தனர். அரசனின் கதி  நடுவில் அகப்பட்டுக் கொண்ட ஆடு கதையாகியது. ஒரு நிலையில் அரசனையே தீர்த்து கட்ட முயற்சித்தனர்.  ஒவ்வொருவரும் தாங்களே அரசனாக நினைத்து இப்படி போராடியதை அறிந்த தன்வங்கனின் மகன் தம்மடன்  அங்கு வந்தான்.

ஜயராஜனை தூண்டி விட்டான்.  என்னை பட்டத்து ராணியின் மகன் அல்ல, ஆசை நயகியின் மகன்  என்று விலக்கினார்கள். தற்சமயம் நல்ல வாய்ப்பு. அவனை கொன்று விட்டு நான் பட்டத்துக்கு வருவேன் என்று கிளம்பினான். ஏற்கனவே சபல சித்தம் உள்ளவன். எடுப்பார் கைப் பிள்ளையாக வளர்ந்தவன். ஆசை மட்டுமே – இந்த தூண்டுதல் கிடைக்கவும் தான் செய்வதே சரி என்று எண்ணத் தலைப் பட்டான்.  குறுக்கு வழி தான் அவன் அறிந்தது. அந்த:புரத்து பெண்களில் ஓரிருவரை சந்தித்து தன் பக்கம் உதவச் செய்தான்.  பில்வா என்ற கிராமத்தில் இருந்து ஒரு கொலைகாரனை அழைத்து வந்தான்.  இந்த ஏற்பாடுகளை செய்து விட்டு இதோ தான் அரசனாகி விடுவோம் என்று கனவு கண்டு மனக் கோட்டையில் மகிழ்ந்து இருந்தவனை உசுப்பி எழச் செய்தது, ஒரு பணியாள் கொண்டு வந்த செய்தி. தம்மடனுக்கு இந்த செய்திகளை தெரிவிக்க ஒரு தூதனை ராஜபுரிக்கு அனுப்பி இருந்தான்.  சஹஸ்ரமங்களா என்ற ராணியின் வீட்டில் நல்ல நாள் வரை தங்கியிருந்த ஜயராஜன், திடுமென தங்கள் திட்டம் தோல்வியடைந்ததை கேட்டு திகைத்தான்.  ஒரு உளவாளி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த விவரங்களை  மறைந்திருந்து கேட்டவன் பிரயாக ராஜனுக்கு தெரிவித்து விட்டான்.  உடனே செயலில் இறங்கி தம்மடனை எச்சரித்தவன்,  அரசனிடமும் தெரிவித்தான்.   தம்மடன் இனி தலையிட்டால், குடும்பத்தோடு அழிவோம் என்ற பயத்தால்  அடங்கி விட்டான். ஜயராஜன் மேலும் சில முயற்சிகள் செய்தான். அரசனின் காவலாளிகளுக்கு கண்டிப்பான உத்தரவு இடப் பட்டிருந்தது.  ஜயராஜன் ஊரை விட்டு வெளியேறவே முடியவில்லை.

பிரயாக ராஜா, தம்மடனை வரவழைத்து அரசனின் தனியறைக்கு அழைத்துச் சென்றான்.  அங்கிருந்து ஜயராஜனை அழைத்து வரச் சொல்லி உத்தரவு இட்டான். காவலாளிகள் ஜயராஜனை அழைத்து வந்து அறையில் நுழைந்த பொழுது தம்மடன் மட்டுமே இருந்தான். அவனுக்கு ரகசியமாக உத்தரவு வந்தது. ‘ஜயரானை சிறைப் படுத்து’  அரசனிடம் பிரயாக ராஜா ‘ இவர்களை பிரித்து விட்டு அல்லது ஒருவனை அழித்து விட்டால், அவர்களின் எதிகால நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம் ‘என்று சொல்லி சம்மதம் வாங்கி இருந்தான். அரசன் உள் அறையில் இருந்தது தெரியாமல் இருவரும் உரையாடினர்.

அரசன்  தன்னை சந்தேகிக்கவில்லை, என்ற நம்பிக்கையுடன் தம்மடன் ஜயராஜனிடம் ‘அரசனுக்கு உன் மேல் சந்தேகம். அதனால் உன் வாளை என்னிடம் கொடு. ‘ என்றான். ஜயராஜன் வாள் வீச்சில் தேர்ந்தவன். தம்மடாவிடம் இருந்த நம்பிக்கையா, அவனுடைய முன் வினைப் பயனா, நம்பி வாளைத் துறந்தான். தம்மடனுடன் வந்த துல்லா என்ற மகன் திட்டலானான். ‘ கோழை நீ. கய்யா என்ற உன் தாய், அரசன் கலசனிடம் பெற்ற மகன் அல்ல நீ. ஏதோ ஒரு நாடோடி உன் தந்தை’  தூங்கிக் கொண்டிருந்தவன் மேல் பனிக் கட்டிகள் விழுந்தது போல ஜயராஜன் விழித்துக் கொண்டான்.   விசாரனையின் பொழுது என்ன தோன்றியதோ தம்மடனை காட்டிக் கொடுக்கவில்லை.

சிறைப்பட்டவனை சில நாட்கள் சென்ற பின் தூக்கில் இட்டனர். அவன் உடலை துண்டுகளாக ஒரு பட்டாரதவலா என்ற ஓடையில் வீசினர்.  1095 AC

எழுபத்து ஓராம் ஆண்டு, பாத்ர பத- புரட்டாசி  மாதத்தில்,   தம்மடனை மட்டும் விட்டு வைப்பானேன் என்று அரசன் நினைத்தான்.  லோஹாரா வாசியான, கலச ராஜா என்றே பெயர் கொண்ட தாக்குரன், என்பவனை தொடர்பு கொண்டான்.  பிரயாக ராஜா  தன்னுடைய அந்தரங்க பணியாளனையே அனுப்பச் சொன்னான். இடையில் தடங்கல் வரலாம் என்று சந்ததேகப்பட்டான். அரசன் தயங்கியதையும், கோபம் கொண்தையும் அறிந்து சமாதானமாக  அரசனிடமே சொன்னான்.’ இந்த செயலால் பலவித தவறான விளைவுகள் ஏற்படலாம். மந்திரி சபையின் ஒப்புதலோடு செய்வோம்’ என்றான். மந்திர ஆலோசனை முடிந்து, மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, வாமனன்  எழுந்து மூடியிருந்த கதவில் சாய்ந்து  நின்றபடி, ‘இந்த திட்டம் இந்த அறையை விட்டு வெளியே விடக் கூடாது. எந்த அளவு ரகஸ்யமாக துரிதமாக செய்கிறோமோ அதில் தான்  நமக்கு நன்மை ‘ என்றான்.

அரசனின் ஆணைப்படி பிரயாக ராஜா கலச ராஜனை இரு புதல்வர்களுடன் வரவழைத்தான். 1045

தூதுவர்கள் வேகமாக சென்றனர். கலசராஜனின் ஒரு மகன் கழுகுகளை (falcon) வளர்ப்பதை தன்  பொழுது போக்காக கொண்டவன் உள் அறையில் தன் நண்பர்களுடன் இருந்தான்.  தூதுவர்கள்  முதலில் கலச ராஜனுடன் பேசிவிட்டு பின், புதல்வர்களை சந்தித்தனர்.  அவர்கள் அவனம்பிக்கையுடன் சில விவரங்களைக் கேட்டனர்.  தூதுவர்கள்  பதில் சொன்னார்கள்:  ‘தம்மடன் நலமாக இருந்தால்  வாள் ஏந்தவும்  அவரால்  முடியுமே என்றனர்.  அதை சொல்லி முடிக்கும் முன் அவனுடன் இருந்த நண்பர்கள்  விலகி சென்று விட்டிருந்தனர்.    ஓ தம்மடா, உன் வாள் பயனில்லாமல் போவதா’ என்றான் கலச ராஜா.  கண் மூடி திறக்கும் முன் மூவரும் அடிபட்டு விழுந்தனர். கலச ராஜனின் மூத்த மகன் அடிபட்டாலும் உயிருடன் இருந்தான்.  அவன் தன் வாளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.  தரம் இல்லாத ஆயுதம் அது பயனளிக்கவில்லை. அவனை மேல் மாடியிலிருந்து தள்ளி விட்டனர்.  தன்வங்கனின் மற்ற பேரன்கள், ரல்ஹன, சல்ஹன என்பவர்கள் தாங்களாக வந்து வாளையும் மற்ற ஆயுதங்களையும் அரசவையில்  கீழே வைத்து சரணடைந்தனர்.  அரசன் அவர்களை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டான்.

 Tullaa- துல்லா என்பவனும் அவன் உடன் வந்தவர்களையும் விஜய சிம்ஹன் ஏதோ பொய் காரணம் சொல்லி அழைத்து வந்திருந்தான்.  நீங்கள் என் மகன் கள் போலவே என்று அன்பொழுக பேசியவன்,  உண்மை காரணத்தை மறைத்து விட்டான்.  அவனை நம்புவதற்கில்லை என்று தெரிந்ததும் அவர்கள் அரசனிடமே வந்தனர்.  அரச சபையில் ஒருவர் உங்கள் ஆயுதங்களை அரசரின் முன்னால் வைத்து விட்டு அருகில் செல்லுங்கள் என்றனர்.   அது கையில் இருந்தால்  காவலர்களால் தாக்கப் படுவீர்கள் என்று எச்சரித்தார்.  அதனால் அரசன் முன் வந்ததும் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வணங்கினர்.  அங்கு இருந்த டுல்லன் என்பவன் குடை பிடிப்பவன், குழந்தை பருவத்திலிருந்தே அரண்மனையில் தம்மடனின் கீழ் ஏதோ ஒரு பணியை செய்து கொண்டு வாழ்ந்தவன், அவர்களைப் பார்த்து சிரித்தான்.

நீங்கள் அன்று ஜயராஜனை பார்த்து என்ன சொன்னீர்கள்? நீ கய்யாவின் புதல்வன், கலசராஜவின் மகன் அல்ல என்று சொன்னீர்களே.  உங்களுக்கும் அதே நிலை தான் வந்திருக்கிறது.  உடல் வலிமை இருக்கும் பொழுது, கையில் ஆயுதமும் இருக்கையில் வீரத்தை காட்ட வேண்டியது தானே என சீண்டினான்.  துல்லா அவனை பதிலுக்கு கடுமையாக திட்டி விட்டு, என்ன நினைத்தாய், உன் வேலையைப் பார். நாங்கள் திறமையான தந்தைக்கு பிறந்தவர்கள் தான், எங்களுக்குத் தெரியும் என்று சொல்லி நகர்ந்தனர். புத்தி சொல்ல வந்து விட்டான். அறிவிலி என்று சொல்லி விட்டு  தங்கள் ஆயுதங்களை நீரால் சுத்தம் செய்வது போல போல வாளின் நுனியால் நீரைத் தொட்டு அவைகளின் மேல் தெளித்து விட்டு அவைகளை சுழற்றிக் கொண்டு நடந்தனர்.  ஆனால் விஜய சிம்ஹனின் சூழ்ச்சியால் அரச சேவகர்கள் அவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.  1062

துல்லன் முதலானோர் ராஜ குமாரர்கள். வாசந்திகா மரம் காட்டில் நெடிது உயர்ந்து வளர்ந்து இருப்பது போல உடல் வாகு உடையவர்கள்.  உயர் பதவிகளை ஏற்று திறம்பட செய்யவே எண்ணியிருந்தனர்.   தாங்களே மற்றவர்களை காப்பாற்ற வேண்டியவர்கள் என்ற எண்ணமே அவர்கள் மனதில் மேலோங்கி இருந்து வந்திருக்கிறது.  பாபி பிம்பன் என்பவன், தாக்குரன்,  அவன் யாருக்கோ அடிமை வேலை செய்து இவர்களை சிறையில் இட்டிருக்கிறான் என்பது வரை புரிந்தது.  மேற்கொண்டு யோசிக்கும் முன், அந்த நால்வரும், டுல்லா, விஜயராஜா, வல்லன் மற்றும் குல்லா என்ற ராஜ குமாரர்கள் -தன்வங்கனின் பேரன்கள், இரவில் , யாருமறியாமல், எந்த விசாரணையும் இன்றி தூக்கிலிடப்பட்டனர்.  அவர்கள் ஊரில் அழகன் என்ற பெயருடன் வளைய வந்தவர்கள். நால்வருமே மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தனர். அவர்களின் சௌந்தர்யம்- உடல் வனப்பு பல காலம் வரை கதைகளாக பேசப் பட்டன.  முதியவர்கள் கண்களில் நீர் தளும்ப பேரக் குழந்தைகளுக்கு இவர்களைப் பற்றி சொல்வர்.   வரிசையாக மல்லி மொட்டு போன்ற பல்லின் அழகைச் சொல்வோமா,  குழல் கற்றைகளாக  அசைவதைச் சொல்வோமா, பவள மாலைகளால் அலங்கரித்துக் கொள்வதை பார்க்க கோடிக் கண்கள் வேண்டும் என்பது போல பாடல்கள் பாடுவர்.  அந்தோ, சிறையில் அடைத்தவன் கொடூரன், அந்த கொலையைச் செய்தவன் பாதகன் என்று மனம் உருகி பாடுவர். 

உத்கர்ஷனின் மற்றொரு மகன் டோம்பா Dombaa – என்பவனும்  மர்மமான முறையில்  கொல்லப் பட்டான். விஜயமல்லனின் மகன் ஜய மல்லன் கூர்மையான புத்தியுடன், சாதிக்கும் ஆவலுடன் மகிழ்ச்சியாக இருந்தவன், தீப் பொறி போல காண்பவரை கவரும் குணம் உடையவன் அவனுக்கும் அதே கதி தான்.  தன்னைச் சுற்றி உள்ளவர்களையே சந்தேகித்து முனைந்து அழித்து யாருக்காக அந்த பெரிய ராஜ்யத்தை கட்டிக் காத்தான் –

‘ அரச மரம், தன் உச்சாணி கிளைகளில் தேனீக்களை கூடு கட்ட அனுமதிக்கிறது. பசுமையான  இலைகளும் கிளைகளுமாக பசுமையாக அழகாக  காட்டில் ராஜாவாக இருந்த மரம். சம்பந்தமில்லாத வெளி மனிதன் அந்த தேன் கூடுகளைக் கலைத்து தனக்கு வேண்டிய தேனை எடுக்க மரத்தின் கிளைகளை உடைத்தும், பசுமையான இலைகளை அலட்சியமாக வெட்டியும் அழித்து விடுகிறான். அந்த மரத்தின் அறிவு தான் அரசனுக்கும் இருந்தது போலும்.   தராதரம் அறியாமல் அருகில் வைத்துக் கொண்ட சில கயவர்கள் மூலம் குலமே அழிந்தது. முன் பின் அறியாத ஒருவன் அரியணையை அலங்கரிக்கவா இந்த கொடுமைகள்?

தாயாதிகள், உறவினர்கள் இவர்களை அழித்த புத்தியை இழந்த அரசன், டிம்பன் முதலியவர்களையும், விஷம் கலந்த உணவைக் கொடுத்து மரணமடையச் செய்தான்.  வாமன மகன் க்ஷேமன் இதை அறிந்து கொண்டு விட்டான்.  தன் தந்தையின் விரோதி என்பதால் கவனமாக இருந்தான். பேச்சு வாகில் கலசேஸ்வர கோவிலின் பொன்னாலான கும்பங்கள் பற்றி வர்ணித்தான். அவைகளை கவர்ந்து வர தூண்டினான்.  அரச சபையில் அரசனின் அந்தரங்க மெய்க் காப்பாளன் , ஆலோசகன் என்று இருந்த  பிரயாக ராஜா கர்ம யோகி என்பது போல கடமையே கண்ணாக இருப்பவன். மதம் பிடித்து தாறுமாறாக ஓடும் யானையை வெறுக்காமல் அதை குணப் படுத்தவே முயலும் மாவுத்தன் போல அரசனை காப்பதிலேயே கவனமாக இருந்தான்.  இந்த செயலின் விளைவு மக்கள் மத்தியில் தவறாக பரவும் என்பதால் முளையிலேயே கிள்ளுவது என்பது போல  தடுத்து விட்டான். 

வரலாற்றில் இது போல மனிதர்கள் நிறைய உண்டு.  புல்லுறுவிகள் என்பர்.  ஒழுங்காக சென்று கொண்டிருந்த அரசாட்சியைக் கெடுக்கவே அருகில் வந்து சேருவார்கள்.  வானத்தை வில்லாக வளைப்போம், தாமரை மலரின் இதழ்களை வைத்து ஆடை நெய்வோம்,  கனவில் கண்ட பொற்குவியலை வைத்து கோட்டைக் கட்டுவோம் என பேசுவர்.  அரசன் இவர்களை அருகில் சேர்க்கவே கூடாது.  திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைத்து விடுவார்கள்.  களிமண் போன்ற அறிவு உடையவனாக அரசன் இருந்து விட்டால் தங்கள் இஷ்டத்துக்கு வளைத்து விடுவார்கள்.  இதை ஆரம்பத்திலேயே வெட்டி விடா விட்டால் இந்த விஷ விருக்ஷம் வளர்ந்து அரசனின் பெயரையே கெடுக்கும். ‘1078

உயிர் இல்லாத உடலில் நுழைந்து கொள்ளும் வேதாளம் போல என்று உவமை.  அறிவு இல்லாதவன் உயிரற்ற உடலுக்கு சமமாக சொல்லப் படுகிறது.

க்ஷேமன் போன்றவர்களின் பேச்சு எடுபடாமல் போனது பிரயாக ராஜாவின் கவனமான கண்காணிப்பினால் என்று சொல்லலாம்.  நோயுற்ற குழந்தையை பாதுக்காக்கும் தாய் போல கண்ணும் கருத்துமாக அவர் அரசனை கவனித்துக் கொண்டு இருந்ததால் அரசன் அவர்கள் வலையில் விழாமல் இருந்தான்.

ஒரு சமயம்  ஹலதரனுடைய பெண் வயிற்று பேரன், லோஷ்டதரன்  அரசனிடம் விதஸ்தாவின் மேல் அணை கட்ட வேண்டும். கலசேஸ்வர கோவிலில் பொன்னும் மணியும் வீணாக கிடக்கிறதே.  அவைகளைக் கொண்டு நான் இந்த அணை கட்டும் வேலையை செய்கிறேன் என்றான். பகவானுக்கு என்று கொடுத்த தனம் தானே, அரசன் நினைத்தால் பயன் படுத்திக் கொள்ளலாமே. ஏதோ ஹாஸ்யமாக சொல்வது போல பாவம் கலசேஸ்வரர், இந்த செல்வத்தை கட்டிக் காக்க தானே கட்டுபட்டிருக்கிறார்.  அவரை விடுவிப்போமே.  அரசன் சிரித்துக் கொண்டே, இது என்ன அசட்டுத்தனம் என்றான்.  முன் கலச ராஜா செய்தது தானே. உதபந்தா என்ற இடத்தில் பீம சாஹி என்பவன் ஆட்சி செய்து வந்தான்.  பீம கேசவ கோவிலில் பூசாரிகளுக்குள் தகராறு வந்து பூசை தடைப் பட்டது. கலச ராஜா கோவிலை மூடச் செய்து விட்டார். பல நாட்களாக கோவில் பூட்டியே இருந்தது. பல நாட்களுக்குப் பின் சமாதானம் ஆகி கோவிலைத் திறந்தால் வெள்ளி ஆபரங்கள், உபகரணங்கள் திருடப் பட்டிருந்தன.  அதனால் அந்த கோவிலில் இன்றளவும் விலையுயர்ந்த  பொருட்கள் உள்ள அறைகள் பூட்டியே வைக்கப் பட்டுள்ளன.  அதனால் பகவானை விடுவிப்போம். அவன் மலர்களின் மணத்தையும் வாசனைப் பொடிகளிலும் மயங்கியபடி இருக்கிறார். அந்த கதவுகளைத் திறந்து திருடர்கள் விட்டு வைத்த பொன் வெள்ளி இருந்தால் நாம் பயன் படுத்திக் கொள்ளலாமே. அவனுடைய சொல்லை நம்பி அரசன் அந்த கோவில் கதவுகளைத் திறக்கச் செய்தான்.  விலையுயர்ந்த மாணிக்கம் போன்ற மணிகள்,  பொன், மற்றும் அரிய பொருட்கள் இந்த மனித நடமாட்டமே இல்லாத கோவிலில் இருக்குமானால், பிரபலமான கோவில்களில் எவ்வளவு இருக்கும் என்று மனதில் கணக்கிட்டான்.  ஆனால், கோவிலைச் சேர்ந்த அதிகாரிகளும், பூசாரிகளும் உண்ணாவிரதம் இருந்து கோவில் சொத்தில் கை வைக்க விட வில்லை.

அந்த சமயம் அரசன் அந்த செயலை கை விட்டான். ஆனால் உள் மனதில் இந்த சொத்துக்கள் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. படைகளின் பாதுகாப்புக்கு,  ஆயுதங்கள் செய்ய என்று உபரியான செலவுகள் வரும் பொழுது கோவில் சொத்தான பொற்காசுகளை தயக்கமின்றி எடுத்து செலவழித்தான்.  அதன் பின் உலகில் அரிதான பொருட்கள் பகவானுக்கே உரியது  என்பது போல  முந்தைய அரசர்கள் கொண்டு வந்து சேர்த்த அரிய பொன்னும் மணியும் அரசனின் ஆடம்பரத்திற்கு செலவாகியது.  உடன் இருந்த பேராசைக் காரர்கள் எதோ காரணம் காட்டி திருடிக் கொள்ள வழி

வகுத்தது. 1090

ஹர்ஷ துருக்கன் என்றே அழைக்கிறார் கவி. பாடு பட்டு சேர்த்து கட்டிய கோவில்களின் சொத்துக்கள் மட்டுமல்ல கடவுள் உருவங்களும் சிதைக்கப் பட்டன. யானை கையில் பூவைக் கொடுத்து திருமகளை ஆராதிக்கச் செய்கிறோம். அதே யானை தன்னிச்சையாக குளத்து தாமரை மலர்களை துவம்சம் செய்வதையும் காண்கிறோம்.  எந்த அளவு உயர்ந்தானோ, அந்த அளவு அரசன் ஹர்ஷன் படு குழியில் வீழ்ந்தான். உதய ராஜா போன்றவர்கள் இந்த சிலை உடைப்பு செயலில் முக்கிய பாகம் வகித்தனர்.  ஸ்ரீ நகரத்தின் ரணஸ்வாமின் மற்றும் மார்த்தாண்ட கோவில்களை தொடவில்லை.  புத்தருடைய பெரிய சிலைகள் தப்பித்தன. பரிஹாச புரத்தில் பாடகர்களான  கனக என்பவருக்கும், சமணரான குசலஸ்ரீ என்பவருக்கும்   அவை அன்பளிப்பாக அளிக்கப் பட்டிருந்தன.

இந்த செயலுக்கு அவசியமே இல்லை. பாட்டனாரிடம் இருந்தும், உத்கர்ஷ அரசனிடமிருந்தும், தந்தை விட்டுச் சென்ற செல்வமும் ஏராளமாக இருந்தன.  அப்படி இருந்தும் அளவுக்கு அதிகமான செல்வமும் போதைபொருள் போல புத்தியைக் கெடுக்கிறது.  கடவுள் சிலைகளில் கை வைப்பானேன்.  அரசனின் கட்டுபாடு இல்லாமல் கீழ் நிலை அதிகாரிகள் எந்த தகுதியும் இன்றி நியமிக்கப் பட்டனர். சுற்றி உள்ளவர்களால் அரசன் எந்த அளவு கீழ் தரமாக ஆவான் என்பதற்கு ஹர்ஷ தேவனே உதாரணம் ஆனான்.  அறிவின்மையின் எல்லையில்  இருந்தான் ,

தாள வாத்தியம் இசைக்கும் பீமனாயகனுக்கு ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் கொடுத்தான். சம்பகனின் சகோதரன் கனகன் – பாடுபவன், அவனுக்கு லக்ஷம் டினார்கள்  கொடுத்தான். அவன் மேலும் தீவிரமாக  பயிற்சிகள் செய்து அரசன் முன் பாடினான்.

அரசனின் குணம் கெட்டதால் பல தீமைகள் வந்தன என்பதுடன் நிறுத்திக் கொள்வோம். இதை விவரித்து என்ன பயன்?  அடியாட்கள் கையில் அரசாட்சி சென்றது. சுரண்டல் காரர்கள் தங்கள் மாளிகைகளைக் கட்டிக் கொண்டனர். அந்த;புரத்து பெண்களின் கூட்டம் அதிகரித்து இடைத் தரகர்கள் கை ஓங்கியது. கலசனைப் போலவே மக்களின் வெறுப்பை சம்பாதித்தான்.

திடுமென, பெரும் படையுடன் ராஜபுரியை முற்றுகையிட்டான். வழியில் இருந்த அரசர்கள் திகைத்தனர்.  உலகையே வெற்றி கொள்ள புறப்பட்டு விட்டான் போலும் என நினைத்தனர்.  ராஜபுரியை அடையும் முன் ப்ருதுவி கிரி என்ற இடத்தை முற்றுகையிட்டான்.  மாதக் கணக்கில் முற்றுகை நீடிக்கவும் கோட்டையின் உள்ளே உணவு தட்டுப்பாடு வந்தது. வேறு வழியின்றி  அதன் காவலன் சங்க்ராமபாலன் கப்பம் கட்ட சம்மதித்தான். அது போதாது என்று முற்றுகையை தளர்த்தாமல் நீட்டித்தான்.  அந்த நாட்டு காவல் தலைவனை பரிசுகள் கொடுத்து தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முயன்றான். அவனோ சிப்பாய்களை தூண்டி விட்டு அதிக ஊதியம், அதிக வசதிகள் கேட்டு போராடச் செய்தான். அரசனின் பொக்கிஷம் எங்கோ தள்ளி இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த சமயம் அந்த காவல் தலைவன் மற்றொரு பெரிய பிரச்னையை பற்றிச் சொன்னான். துருக்கர்கள் போரிட வந்து கொண்டிருந்தனர்.  இது அரசனை பின் வாங்கச் செய்தது.   படை வீரர்கள் பல சாதனங்களை ஆங்காங்கே போட்டு விட்டு ஊர் திரும்பவே அவசரப் பட்டனர்.  தோல்வி நிச்சயம் என்றவுடன் அதிக வீரமில்லாத வீரர்கள், நுனி மழுங்கிய வாளை தியாகம் செய்வது போல தங்கள் தலைவனையும், அரசனே ஆனாலும் தியாகம் செய்து விட்டு தங்களை காத்துக் கொள்ளவே முனைவர் என்பது இயல்பு.  சமீப காலமாக தன்னுடைய தவறான நடவடிக்கைகளால் தானே தன் ஆற்றலை இழந்தவன், அவர்களை உண்மையாக விசுவாசியாக  இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால்  நடக்கக் கூடியதா?  சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் குதிரைகள் கூட லாயத்தை விட்டு வெளி வராது.  நரேந்திரன்- மனிதர்களுள் இந்திரன் போன்றவன் என்ற பெயர் பெற்றவன் தன் பெயரை களங்கப்படுத்திக் கொண்டவன், தானே அவர்கள் மதிப்பில் விழுந்து விட்டவன் சொல் எடுபடவில்லை.  எந்த வீரனும் திரும்பவில்லை. போர் சாதனங்களைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி புற முதுகிட்டு ஓடினான் என்ற அவப் பெயர், தகுதியில்லாத படைத் தலைவர்களால் அடைய நேரிட்டது.  ராஜாதி ராஜனாவான் என்பதும் கனவாகியது. 1162

இந்த நிலையில் கந்தர்பனின் நினைவு வந்தது.  அவனுடைய விசுவாசமும், கடமை உணர்ச்சியும் செயல் திறனும் மனதில்  அவனிடத்தில் மரியாதையும், தான் அவனிடத்தில் தவறு செய்து விட்டோம் என்ற உறுத்தலும் தோன்றியது.

கந்தர்பனை அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டான். புதிய காவல் தலைவன் அந்த உத்தரவை புறக்கணித்தான். அரசன் சொல்லுக்கு அவ்வளவு தான் மதிப்பு.  இதற்குள் தன் தவறுகளை உணர்ந்து சற்று மனம் தெளிந்து விட்டிருந்த  அரசன், விதி நியமங்களின் படி அரசன் ஆணையை மதிக்காத அரச அலுவலக சேவகனுக்கு கொடுக்கும் தண்டனையைக் கொடுத்து சிறையில் தள்ளினான்.  கோபத்தால் அல்ல.

தந்திரமான அந்த காவல் தலைவன் தன் உறவினர்களைக் கொண்டு  ஊருக்குள் நுழைந்த அரசனுக்கு தாம்பூலங்களோடு வரவேற்பு அளிக்கச் செய்தான். மரண தண்டனை கொடுக்க வேண்டிய இடத்தில் அரசன் அவனை மன்னித்தான்.  பதவியை திருப்பிக் கொடுத்தது அடுத்த தவறு.  துதி பாடுபவர்களின் கூட்டம் உள் நோக்கத்தோடு அருகிலேயே இருந்தனர். விலக்கினாலும் விலகவில்லை.  GHoSA- என்ற घोष- யாத்திரைக்கு பின் கர்ணன் முதலானோர் கௌரவ அரசனை புகழ்ந்தனராம் –  அது போல என்று உவமை.  

‘பட்டி மன்றத்தில்  தோற்றவன் பிரதி வாதியாக தன்னுடன் வாதம் செய்து வென்றவனை மட்டமான சொற்களால் திட்டுவான்.   தான் செய்த தவற்றை மறைக்க மனைவி, கணவனை குறை கூறுவாள்.   வீண் கலகங்கள் செய்வாள்.  அரச சபையில் நிதி மந்திரி திடுமென நிதி நிலைமை தடுமாறினால், அரசனையே காரணமாக சொல்லி தான் தப்பிக்கவே முயலுவான்.  அதே தான் நடந்தது. மஹத்தமா – தலைமை நிதி மந்திரியாக இருந்த சஹேலா  என்பவன், தனக்கு வேண்டிய மட்டும் அரச செல்வத்தை, பதவியின்  செல்வாக்கை பயன் படுத்திக் கொண்ட பின், தற் சமயம் நிதி குறைந்ததும்  அரசனின் ஆடம்பர செலவுகளே காரணம் என்று அரசனைக் காட்டிக் கொடுத்து விட்டான்.

போதாக் குறைக்கு, அரசனை தரத நாட்டை லாவண்ய என்ற பிரதேச லோஹர வீரர்கள்  உதவியுடன் தாக்கி தனதாக்கிக் கொள்ள அறிவுரை கொடுத்தான்.  அந்த பிரதேசம் கலசன் காலத்திலேயே லக்கணசந்திரன் பொறுப்பில் இருந்தது. அவன் தாமர வீரன். கோட்டைக் காவலன் ஜனகன் என்பவனை அனந்த தேவனின் ஆணையால் அரசனுக்கு தெரிவிக்காமலேயே கொன்று விட்டனர்.  அரசன் அறை வாசலில் அவன் மனைவி ப்ராயோபவேசம் – உண்ணா விரதம் இருந்தாள்.  கலசன் அவளை சமாதானப் படுத்தி அந்த பிரதேசத்தை தரதர்களுக்கு திரும்பக் கொடுத்திருந்தான்.  அதன் பின் தரத என்ற அந்த குழுவினர் பலம் பெற்றனர். பல கிராமங்களில் அவர்கள் செல்வாக்கு உயர்ந்து விட்டிருந்தது. தவறான போதனை – அந்த இடத்தில் எதிர்ப்பு பலமாக இருக்கும். மேலும் முந்தைய அரசனே அவர்களுக்கு திருப்பிக் கொடுத்த பிரதேசம்.  கொடுத்ததை பிடுங்குவது நியாயமும் அல்ல. 1174

அந்த இடத்தில் நீர் வசதி இல்லை என்பதால் பனிக்காலத்தில் விழும் பனிக்கட்டிகளை சேமித்து  வைப்பர். வேணிற் காலத்தில் பனி உருகி நீராகும். நாளடைவில் அங்கு காலாட்படை தங்கும் இடமாக ஆகி விட்டது.  தந்திரமாக அந்த மஹத்தமன் என்ற பதவியில் இருந்தவன் திரும்பத் திரும்ப அந்த இடத்திற்கு படையெடுத்துச் செல்ல தூண்டினான். அவன் உள் நோக்கம் வேறு, திருடன் தனக்கு ஆதாயம் என்ன என்பதைத் தானே பார்ப்பான்.  அரசனும் படையெடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யச் சொன்னான்.  

சம்பகன் என்ற சேனாபதியின் தலைமையில் படை கிளம்ப இருந்த சமயம் வாதகண்டன் என்பவன் அங்கு வந்தான். அவன் கோட்டை காவலாக இருந்தவனை மண்டலேசன் என்ற பதவி கொடுத்து மாற்றி விட்ட அரசனிடம் அவனுக்கு மனத் தாங்கல் இருந்த து.  காவல் தலைவன் என்ற அதிகாரம் மிகுந்த பதவி, அதனால், தன் எதிர்ப்பைக் காட்டினான். அதற்குள் படை மதுமதி நதிக்கரையை அடைந்து விட்டது.  அரசன் சற்று பின் தள்ளியே வந்து கொண்டிருந்தான். 1178

சாமந்தர்கள் என்ற உயர் அதிகாரிகள், படைத் தலைவர்கள்  உடன் வர, அரசன் தானே தலைமை தாங்கியும், நடு நடுவில் படை வீரர்களுக்கு இடையிலுமாக இருந்தான்.  மலைப் பாங்கான இடம். தரதர்கள் பெரும் பாறைகளை தள்ளி விட்டனர்.  காஸ்மீர வீரர்களால் இந்த தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.  இருந்தும் போர் தொடர்ந்தது.

மல்லா குங்காவின் மகன்,  அவனுடைய இரு புதல்வர்களும்  பிரதானமான இடத்தில் நின்றனர்.  அவனுடைய புதல்வர்களுக்கு ராஜ்ய பதவி வசிக்கும் யோகம் உண்டு என்று ஜோதிடர்கள் சொல்லி இருந்தனர்.  உச்சல, சுஸ்சல என்ற அந்த இருவரும் அதற்கான தகுதிகளையே வளர்த்துக் கொண்டவர்களாக எதிர்பார்ப்புடன் இருந்தனர்.  இளையவன் சுஸ்சலன், அரச பதவியில் அதிக நாட்டமில்லாமல் இருந்தாலும்  எதிரிகளின் படை கோட்டை வாயிலை அடைந்த சமயம் தவிர்க்காமல் வந்து கலந்து கொண்டான்.   அரசனின் படை பெரியது.  ஊரின் நிலைமையும் வளமாக இருக்கவில்லை. முற்றுகையை வெகு நாள் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலை.  அந்த நிலையில் இறைவனே அனுப்பியது போல கடும் மழை பெய்தது.

இதுவும் இறைவன் செயலே.  ஒருவனை தூக்கிவிட பயன் படுவது போலவே, ஒருவனை இறக்கவும் இயற்கையே எதோ செய்து விடுகிறது.

கோட்டையை காக்க முனைந்திருந்த தரத வீரர்கள்,  விதியின் கட்டளை என்பது போல ஆனார்கள். பனிக் கட்டிகள் கோட்டையை சுற்றிலும் நிறைந்தன.  ஹர்ஷனின் படை  விழுந்தும் எழுந்தும்  பாறையில் முட்டி திரும்பும் மீன் திரும்புவது  போல் திரும்பினார்கள். அல்லது பந்து விளையாடுவது போல தோற்றம் அளித்தனர்.  துஷ்ட மந்திரிகள், தங்கள் வீடு வாசல் இந்த மழையில் என்ன ஆயிற்றோ என்ற கவலை தலை தூக்க  பின் வாங்கவே விரும்பினர்.   தங்கள் ஆயுதங்கள், சீருடைகள், வாள் உறைகள் என்ற எதையுமே எடுத்துக் கொள்ளாமல் வேகமாக திரும்பி ஓடலாயினர்.  அரசனும், இனி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இழந்தவனாக, பின் வாங்கி போரை நிறுத்தி விட்டான்.

ஓடியவர்களை துரத்திச் சென்ற தரத வீரர்களிடம் தப்ப பலர் வெள்ளத்தில் மூழ்கினர். அவர்களின் வெண் நிறமான ஆடைகளும் குடைகளும் ஹம்சமாக தெரிந்தன. மின்னும் கவசங்களும் உடை வாள் போன்றவை நீரில் விளையும் செடிகளோ, குதிரைகள் மிதந்தது பாறைகளோ, அவர்கள் பாத்திரங்கள் தங்கம் வெள்ளி  போல மின்ன மதுமதி நதி அத்புதமாக இருந்ததாம். 1193-94

எவர் நதியில் விழுந்தனர், எவர் தரத அரசர்களின் வசம் ஆனார்கள் என்ற எண்ணிக்கை தெரியவில்லை.  நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டவர்களின் உடல் கிடைத்தாலும் யார் என்ன என்பதை அறிய முடியவில்லை.  சேனையே அனாதையாக ஆகிவிட்டது போல ஆயிற்று. மல்லாவின் மகன்  உச்சலன் தன் தகுதியால் தனித்து தெரிந்தான்.  அவனும் அவன் சகோதரன் சுஸ்சலனும், உச்சலன் ஆணைப்படி காவல் வீரர்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்க சென்றனர்.  அந்த சமயம் மனிதாபிமானத்தோடு யாராக இருந்தாலும் மீட்டது  அவர்களுக்கு பெருமை சேர்த்தது.    அவர்களை காப்பாற்றியதால், ராஜ்ய லக்ஷ்மியே, மகிழ்ந்து அவர்களை வாழ்த்தி விட்டாள் போலும்.   மாலையில் கையில் ஏந்திக் கொண்டு வரும் ராஜகுமாரி தன் பதியைக் கண்டு கொண்டது போல என்று கவி வர்ணிக்கிறார்.  மக்களும் வாழ்த்தினர். இந்த இருவரும் தான் உண்மையான தன் மானம் உள்ள வீரர்கள்.  ராஜாவாக ஆளும் தகுதி உடையவர்கள். மற்ற அரசர்கள் வெறும் பெயரளவில் அரசர்கள்.  தங்கள் கடமையை செய்த நிறைவோடு நிறுத்திக் கொண்டு விட்ட அரச குமாரர்கள்  அரசன் ஹர்ஷன் நன்றியுடன் பாராட்டியதை பெரிதாக ஏற்கவும் இல்லை.  அவன் தந்த பரிசுப் பொருள்களை ஏற்கவும் இல்லை.  இனி பயம் இல்லை, எதிரிகள் எவரும் இல்லை என்ற மன நிம்மதியோடு அரசன் தன் நகரம் வந்தான்.  மல்லாவின் புதல்வர்களின் புகழ் பரவியது.  ராம லக்ஷ்மணர்கள் போல் என்று பாராட்டு பெற்றனர்.  ஹர்ஷ ராஜன் ராவணன் போல சித்தரிக்கப் பட்டான்.  உண்மையில் அவர்கள் வாயால் சொல்லவில்லை- அரசனே நினைத்தான், அவர்களை எதிர்த்தவன் ராவணன் தானே. சுய பச்சாதாபம், ஏதோ ஒன்று தன்னிடம் இருந்து பறிக்கப் பட்டது போன்ற உணர்வு.  சிறுவர்கள் முன்   தான் தோற்றது வெட்கமாகவும் தன்னையே நிந்தித்து கொள்பவனாக ஆனான். அதுவே கோபமாக வெளிப்பட்டது.  அனாவசியமாக எதற்கு முற்றுகை இட்டோம், நடந்ததை எண்ணி மறுகினான்.  ஆயினும் தன் வீரத்தை நிலை நாட்டவே முயன்றது அடுத்து சில ராஜ்யங்களுடன் படை எடுத்து செல்வதில் தெரிந்தது.   அருகில் வந்து விழுந்த கல்லை நாய் விரோதியாக நினைக்குமாம். அதைக் கடித்து குதறுமாம். அதை தன் மேல் எறிந்தவர் யார் என்பதையா நினைக்கும் என்கிறார் கவி.

மதனன் என்பவன் சேனைத் தலைவன் பதவி கொடுக்கப் பட்டிருந்தான்.  அவனும் அதில் திருப்தியாக விசுவாசமாக இருந்தான். அவன் இந்த தோல்வியை விமரிசித்தான் என்று கோபம். அவன் வந்த சமயம் காண மறுத்து விட்டான். தேவையில்லாத ஒரு புகாரை அவன் மேல் சுமத்தினான்.   ராணியின் ஆணையை ஏற்று சரியாக செய்யவில்லை என்று அல்ப காரணம் சொன்னான்.  மதனன் பயந்து விட்டான்.  Takka – டக்கா என்ற குலத்தினன் லக்ஷ்மீதரன் என்பவனிடம் சென்று தன் ஆற்றாமையைச் சொன்னான்.   மற்றொரு மந்திரியும் மதனனுக்கு ஆதரவாகவே அரசனிடம் பேசினான்.  பொறாமை, அவமானம் போன்றவைகள் மனதில் நிறைந்தால் அறிவு சரியாக வேலை செய்யாது.  ‘ எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தமிழில்  ஒரு பழமொழி, வேண்டாத செயல்களில் ஈடுபடுவர் என்பது இதன் பொருள்.  சம்பந்தமில்லாத ஒரு முடிவு. மதனனை  அவன் மகனுடன் சேர்த்து கொல்லச் செய்தான். சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தானாம்.

அரசனுடைய நமுட்டு சிரிப்பு, அகாலத்தில் மலரும் மரம், வேதாளம் போல – நன்மைக்கல்ல என்பது பொதுவான நீதி. அரசனிடமோ, செல்வந்தனிடமோ, எனக்கு நெருங்கிய நட்பு என்று பெருமை படும்  பலர் இதை உணருவதில்லை. அந்த நட்பு கால நாகத்திற்கு நான் நெருங்கிய நண்பன் என்று சொல்வது போல எந்த நிமிடமும் மாறலாம், தன்னையே அழிக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இதைச் செய்தபின் அரசனுக்கு பயம்- லக்ஷ்மீதரனின் தரப்பிலிருந்து எதிர்ப்பு வரலாம். ஏதோ விசாரணை என்ற பெயரில் உதயா என்பவனை லக்ஷ்மீதரனிடம் அனுப்பினான். வசதியாக இருந்த அரண்மனை. வளமான செல்வ நிலை,  இவைகளைக் கண்டு பொருமியவனை மெய்க் காப்பாளர்கள் சந்தேகத்துடனேயே கண் காணித்தனர்.   தன் வாளில் கை வைத்த உடனேயே,  லக்ஷ்மீதரனின்  அருகில் இருந்த மெய்க்காப்பாளர்களே வதைத்து விட்டனர்.  உதயனுடன் சென்றவர்கள் லக்ஷ்மீதரனை வதைத்தனர்.  அரசனின் மன நிலை, எரிகாரம்- அமிலம் போல அழிக்கவே வந்தது போல அடுத்தடுத்து பல துயரங்கள் தொடர்ந்து வந்தன. 1216

திறமையான திருடன் அரச மாளிகையிலிருந்து தங்கத் தட்டை  யாருமறியாமல் களவாடிக் கொண்டு கூட போகலாம்.  அதுவே ஊருக்குள் பகலில் ஏதோ ஒரு சிறிய குற்றத்திற்காக தண்டிக்கப் படுவதும் நடப்பதே.  

பயங்கரமான தொற்று நோயான பிளேக்  என்பது பரவி மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தனர்.  எங்கும் மரண ஓலம்.  அது நிற்கவும், எழுபத்து ஐந்தாவது ஆண்டு பெரும் வெள்ளம் வந்து கிராமங்களே மூழ்கின, பயிர்கள் நாசமாகி, உணவுப் பொருள் பற்றாக்குறை கடுமையாக வந்தது. அந்த சமயம் ஒரு காரி खारि – ஒரு மூட்டை அரிசி ஐனூறு டினார்கள் என்று விற்கப்பட்டன, இரண்டு பலம் திராக்ஷை ரஸம், ஒரு டினார் என்று ஆகியது.    கம்பளி நூல் -wool-  ஒரு பலம் ஆறு டினார்கள்,   உப்பு, பெருங்காயம், மிளகு என்பவைகளின்  பெயரே கூட  காதில்  விழுவது அரிதாகியது.

இறந்தவர்களுக்கு சரியான அடக்கம் செய்யாமல் விட்டதில் நீரில் உப்பியது போன்ற உடல்கள் நதிகளிலும் அருவிகளிலும் மிதந்தன. காட்டு மரங்களை வெட்டி வீசியது போல அவை இருந்தன.  இதற்கிடையில் எதையும் கவனிக்காத அரசன் அரண்மனையைச் சுற்றி மரங்கள் உயரமாக வளர்ந்து விட்டன. தள்ளியிருந்து பார்த்தால் அரண்மனை கண்ணுக்குத் தெரியவில்லை என்று மரங்களை வெட்ட ச் செய்தான்.  பூவும் பழமுமாக இருந்த மரங்கள், குழந்தைகளுடன் உள்ள குடும்பஸ்தர்கள் போல இருந்தவை வெட்டப் பட்டன.  அறிவை இழந்தவன் போல, ஏற்கனவே பல துன்பங்களில் இருந்த மக்களிடம் ஏராளமாக வரி விதித்து மேலும் சிரமப் படச் செய்தான்.  அவனுடைய அதிகாரிகள், அதற்கும் மேல் சென்று வரி வஸூல் என்று கசக்கி பிழிந்தனர்.

பொறுக்க மாட்டாமல் தாமரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  அந்த ராஜ்யபாலனாக இருந்தவனிடம் அதை அடக்கு முறைகளால், தேவையானால் கொல்லவும் ஆணையிட்டான்.  அவனோ, ஹோலாடா என்ற இடத்தில் இருந்த தாமரர்களை விரட்டினான். மாதவ ராஜ்யத்தில்  இருந்தவர்களை பறவைகளைச் சுடுவது போல அழித்தான்.  மாதவ ராஜ்யத்தில் இருந்த அந்தணர்களைக்கூட விடவில்லை.  நீண்ட சிகையும், காணவே பயங்கரமான தோற்றம் உடையவர்கள் என்றான்.  லாவண்யா என்ற யாத்ரீகர்கள் அந்த பக்கமே வருவதை தவிர்த்து விட்டனர்.  பைரவனின் பயங்கர ஆட்டமாடும் இடமாக  தேசம் ஆகிவிட்டது என்று பொது மக்கள் புலம்பினர்.  (பைரவன்- ஊழிக் காலத்தில் அழிக்கும் தெய்வம்)   அந்த ராஜ்யபாலனே, தான் கொன்று குவித்த லாவண்ய யாத்ரீகர்களின் தலையை அரசனுக்கு அனுப்பினானாம். (அரசன்  இப்பொழுது அழிக்கும் தெய்வமான பைரவன் ஆகி விட்டான் என்பதைக் குறிக்க)   அரண்மனையின் பெரிய வாயிற் கதவுகள் முன்னால் இவை மண் பாண்டங்கள் போல அடுக்கி  வைக்கப் பட்டன. அதைக் கண்ட கழுகுகளும், கங்க எனும் அதைப் போன்ற பறவைகளும் வட்டமிட்டன.  வாயில் தோரணம் போல அவை வரிசையாக அமர்ந்திருந்தன.  அந்த மண்டலமே, மயானம் போன்ற துர் நாற்றம் மிகுந்ததாக ஆகி விட்டதாம்.

பலேரகா என்ற நீர் வீழ்ச்சி இருந்த இடத்தில் இருந்து, லோகபுண்யா என்ற ஊர் வரை அந்த ராஜ்யபாலன், தாரமர்களைக் கொன்று குவித்தான்.   அதையே தொடர்ந்து செய்ய க்ரமராஜ்யத்தில் நுழைந்தான். அங்கு இருந்த பலரும் ஒன்று சேர்ந்து அந்த ராஜ்ய பாலனை எதிர்த்து நின்றதோடு அவன் தலையெடுக்க விடாமல் அடித்து நொறுக்கி விட்டனர்.    அதன் பின் அரசன் பெயரே ஹர்ஷ ராக்ஷஸன் என்றாகியது.  எங்கள் தீர்த்தங்களையும், புண்ய பூமிகளையும் அழிக்க வந்து விட்டான் என்றனர்.

ஓரளவுக்கு மேல் அவர்களை தங்கள் ஊருக்குள் வரவே விடவில்லை.   யமனே தான் என்றனர்.  பகலில் தூங்குகிறான். க்ரூரன். செய்ய வேண்டியதில் கவனமும் இல்லை.  என்று பலவாறாக தூற்றினர். அரசர்கள் மத்தியில் இதுவே பேச்சு பொருளாயிற்று.  இரவில் சஞ்சரிக்கும்  நிசாசரன்- அரக்கன் என பெயர் பெற்றான்.

இதனிடையில் மல்லா புதல்வர்களில் இளையவனான உச்சலன், வாலிபனாக, அந்த வயதுக்குரிய வளர்ச்சியும், வீரமும், சாதிக்க விரும்பும் குணமும் நிரம்பியவனாக மக்களின் அபிமானத்தையும் பெற்றவனாக இருந்தான்.  ராஜ்யத்தை ஆள தகுதியுடையவர்களே  என  இருவரையும்  வாழ்த்தினர்.   பக்கத்து  நாடு லக்ஷ்மீதரனுடையது.  அவன் மனைவி தூண்டினாள்.  இந்த சிறுவர்களை வளர விட்டால் உனக்கு உன் ராஜ்யத்தில் தங்க கூட முடியாது என்று ஓதினாள். கொன்று விடு என்றாள். அவள் விடாமல் நச்சரித்தாலும், மற்ற மந்திரிகளைக் கொண்டு சொல்ல வைத்தாலும், அவன் இந்த வாலிபர்களின் திறமையை அறிந்தவன். செவி சாய்க்கவே இல்லை.

ஆனால் அவன் நண்பன் தர்சனபாலன் இந்த சதிக்கு உடன் பட்டான். மார்கழி மாத இரவில் அவனும் தன் அடியாட்களூமாக காஸ்மீரத்தில் இருந்து புறப்பட்டு, தாமரர்கள் வசித்த உற்றச எனும் இடம் வந்தனர்.

 லாவண்யர்கள்  அரசனிடம் மிகுந்த கோபத்தில் இருந்தனர். அவர்கள் தலைவனும் தன் இளைய சகோதரனை அனுப்பி  உச்சல, சுச்சல சகோதர்களை  அந்த நாட்டில் இருந்து வெளீயேறி பத்திரமாக வேற்று நாட்டில் அடைக்கலம் புகச் செய்தான்.  ராஜ புரிக்கு பெரியவனும், காலிஞ்சர் என்ற இடத்தில் இளையவனுமாக தங்கினர்.  யாருமறியாமல் அவர்கள் சென்று விட்டாலும் அரசனுக்கு சந்தேகம் வந்தது.  சங்க்ராம பாலனை  பணம் கொடுத்து லக்ஷ்மீதரன் மூலமாக அந்த சிறுவர்களை கொலை செய்ய  ஆணையிட்டான்.  சங்க்ராமபாலன் மல்லாவின் ஆதரவாளன். அவன் புதல்வர்களின் வீரத்தை மதித்தவன்.

ராஜபுரி மக்கள் காஸ்மீர அரசனை வெறுத்தனர்.   உச்சலனும் கவனமாகவே இருந்தான். அரசனின் ஆட்கள் அரசனிடம் உண்மையாக இல்லை, ஆனாலும் ஏதோ கெடுதல் செய்ய தாமர தேசத்தின் உள்ளும் புறமுமாக நடமாடிக் கொண்டிருப்பதை அறிந்தான்.   சங்க்ராம பாலனுக்கு இது அரச கட்டளையை மீற தைரியம் கொடுத்தது.   வெளிப்படையாக உச்சலனுக்கு தன் ஆதரவை தெரிவித்து விட்டான்.  தாக்குர தலைவன், கலச ராஜன் என்பவன் அரசனின் தூதுவனாக சங்க்ராம பாலனை சந்திக்க வந்தான்.  இந்த செயலை மட்டும் செய்து இந்த இருவரையும் ராஜபுரி கொலை களத்திற்கே அனுப்பி விட்டால் அரசன் உன்னை பொன்னால் வர்ஷிப்பான். பல நன்மைகளை பெறுவாய் என்றான்.  காச- Khasas- என்ற  இனத்தினரின்  அரசன் சங்க்ராம பாலன்.   அதிக புத்தியுடையவனும் இல்லை. வலிமையும் இல்லாதவன் நடுங்கி விட்டான்.  வந்தவனிடம் ஒத்துக் கொண்டான். எனக்கு அந்த வலிமையோ, உதவியோ இல்லை. நீயே செய் என்று நகர்ந்து விட்டான்.

மறு நாள், உச்சலன் திரும்பி வருவதாக செய்தி கிடைத்து இந்த சதிகாரர்கள் காத்து இருந்ததை சந்தேகப்பட்டு உச்சலனின்  நண்பர்கள் அவனை எச்சரித்து விட்டனர்.  காச ராஜாவான கலசராஜன் தங்கள் திட்டம் தோல்வி அடைந்த விவரத்தைக் கேட்டு ஆத்திரத்துடன், படை திரட்டிக் கொண்டு வந்தான்.

உச்சலன் தன் படையுடன் ஆக்ரோஷமாக வந்தவனைக் கண்டதும் சதிகாரர்களே  வாயடைத்து நின்றனர்.   அவனுடைய கோபம் வெளிப்பட பேசிய  பேச்சில் இருந்த உண்மை சுட்டது.

 வேகமாக உரத்தி குரலில் தான் யார் என்பதைச் சொன்னான். ‘இது என்ன கேள்வி? பாரத்வாஜ குலத்தில் பிறந்த தர்வாபிசார அரசனாக இருந்தான். அவன் மகன் நரவாஹன். அவன் மகன்  புல்லா என்பவன். அவன் மகன் சார்த்தவாகனன்.  அதன் பின் சண்ட,   அவனுடைய இரு புதல்வர்கள், கோபாலன் மற்றும் சிம்ஹ ராஜா.  சிம்ஹ ராஜனுக்கு நிறைய புதல்வர்கள். அவன் மகள் தித்தா க்ஷேமகுப்தன் மனைவியானாள்.  ராணிக்கு தன் மகன் இல்லாததால்,  சகோதரன் உதய ராஜன் மகன்  சங்க்ராம ராஜாவை அரசனாக்கினாள்.  மற்றொரு சகோதரன் காந்திராஜாவின் மகன் ஜஸ்ஸ  ராஜா. சங்க்ராம மகன் அனந்தன், ஜஸ்ஸாவின் மகன் தன்வங்கன்.  அனந்தனின் வாரிசுகளில் கலசன் பட்டத்துக்கு வந்தான்.  மல்லா மற்றொருவனான குங்காவின் மகன்.  கலசனுக்கு ஹர்ஷன் போல, மல்லாவுக்கு நாங்கள் வாரிசுகள்.  அறிவில்லாதவர்களா நீங்கள்? இவன் யார் என்று என்னைக் கேட்கும் முன் நீங்கள் யார் என்று யோசியுங்கள். பூமி தன் நாயகனாக வீரனைத் தான் விரும்புவாள். பரம்பரை என்ன செய்யும்? ஆற்றல் உடையவனுக்கு அவனுடைய இரு கைகள் தவிர வேறு எவன் நண்பனாவான். இறைவன் அருள் தான்,   காஸ்மீர  சிற்றரசர்களின் உள் பூசல்களுக்கு ஆளாகாமல் தப்பினேன். குல துரோகிகள் நீங்கள்.  பார்த்துக் கொண்டே இருங்கள் என் சக்தி என்ன என்பதைக் காட்டுவேன். முடிந்தால் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். சொல்லிக் கொண்டே வெளியேறினான்.நூறு காலாட்படை வீரர்களுடன் வெற்றி முழக்கம் செய்த படி சென்றான். எதிரில் வந்த வேடன் கையில் வேட்டையாடிய முயலைப் பார்த்து, இது நல்ல சகுனம்.  சுயனலமிகளான இந்த துரோகிகள், இவர்களை அழிப்பேன் என்று ஸுளுரைத்தான்.   இந்த முயலைப் போலவே உயிர் இழப்பர்.  வழியில் பல இயந்திரங்களுடன் தொழிற்சாலைகள் இருந்தன, மரம் அறுப்பதும், கற்களை உடைத்து ஏதோ வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவைகளைக் கடந்து ராஜபுரியை அடைந்தான்.  அசதியாக இருந்தாலும் தன் இருப்பிடம் வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது.  ராணிகளும் மந்திரிகளூம் வந்து வாழ்த்தினர்.   இருட்டும் நேரம் கலசராஜனின் படைகள் முற்றுகையிட்டதாக செய்தி வரவும் கிளம்பினான். ராணிகளும் மந்திரிகளும் வாசல் காவலர் கவனித்துக் கொள்வர், நீ ஓய்வு எடு என்று நிறுத்தி விட்டனர்.

விடிந்ததும் போருக்கான உடைகள், கவசங்கள் ஆயுதங்களுடன் தயாராக சென்றான். லோஷ்ட, வட்ட என்ற இருவர் போரில் மரணமடைந்திருந்தனர்.  எதிரிகளின் படை நடுவில் நுழைந்து  உக்ரமாக போரிட்டான். அவர்கள் தோற்று ஓடும்வரை விரட்டினான்.

 குறைந்த சேனையுடன் சித்திரை மாத பௌர்ணமியில் இருந்து வைசாக வளர் பிறை பஞ்சமி வரை தனக்கு ஆதரவாளர்களை ஒன்று கூட்டி, ஏற்பாடுகளைச் செய்தான்.  தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ளச் சொல்லி வாதவன் முதலானவர்களை அனுப்பி வைத்தான். தான் க்ரம ராஜ்யம் வழியாக காஸ்மீரம் நோக்கிச் சென்றான். வழியில் க்ஷேமனின் மகன் கபிலன்  ஆதரவும் கிடைத்தது. 

படையின் தலைவனாக வாளும், தோல் ஆடையும், கவசங்களும் ஆயுதங்களுமாக நடத்திச் சென்றான்.  கபிலனின் மாணவர்களே முன் வரிசையில் இருந்து பர்ணோட்சா என்ற இடத்தில் போர் துவங்கியது.  வழியில் சுஜ்ஜகா என்பவனை வீழ்த்தி நேராக காஸ்மீரம் அடைந்தான்.  கழுகு தன் உணவைக் கண்டால் விரைவாக பறந்து வருவது போல என்று உவமை. 1301

திடுமென தாமரர்களும், பல காசிகா -खाशिका: மலையில் ஒளிந்து இருந்தவர்கள் அவனை சூழ்ந்து  கொண்டனர். ஆகாயத்திலிருந்து குதித்தவனோ,  பூமியில் கர்பத்தில் தோன்றியவனோ  எனும்படி எதிர்பாராமல் வந்து நின்ற உச்சலனைப் பார்த்து ஹர்ஷ தேவன் நடுங்கினான். என்ன செய்வான்?  க்ரமராஜ தேசத்தின்  ராஜ்யபாலனை அழித்து விடுவானோ?  மண்டலேசனை தாக்கினால் என்ன செய்வோம்?  காஸ்மீர தேசத்தில் காலூன்றி விடுவானோ, அதன் பின் யார் அவனை என்ன செய்ய முடியும்.  – இப்படி சிந்தித்து குழம்பினான்.

உடனடியாக செயல் படாமல் உள்ளுர் காவல் சிப்பாய்கள், அவசர கால போர் வீரர்கள் எதுவும் செய்யவில்லையே என கவலைப் பட்டவனாக பட்டா வை பெரும் படையுடன் அனுப்பினான். எதனாலோ அவன் பரபரப்புடன் செயல் படவில்லை. இயற்கையாக அவனுடைய முதுமை காரணமாக வீர்யம் குறைந்து விட்டதா ? முன் போல சதி வேலைகள், சூழ்ச்சிகள் செய்வதில் நாட்டம் குறைந்து விட்டதா,  அவன் மனப் பூர்வமாக இந்த வேலையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.  ஹர்ஷன் மேலும் பலரை அனுப்பினான்.  அவர்களும் பட்டாவை தாண்டிக்  கொண்டு செல்லவில்லை.  இவ்வாறாக, அரசனின் காவல் வீரர்கள் எவருமே உத்சாகமாக எதிர்க்காததால் உச்சலனின் வேலை சுலபமாயிற்று.  வராகமூலம் என்ற இடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தவனை ஒரு வராகம்- பெண் பன்றி எதிர் கொண்டது. அரசனுடைய சொத்து அது.  அதன் உடலில் நன்மைக்கான சின்னங்கள் இருந்தன. தானே வந்து சேர்ந்த வெற்றிச் சின்னம் என்று உச்சலன் மகிழ்ந்தான்.  சுப லக்ஷணங்கள் கொண்ட ஒரு குதிரை எதிர் கொண்டழைப்பது போல அருகில் வந்தது.    மகாவராகம் என்ற கோவிலில் வணங்கிக் கோண்டிருந்த சமயம் அவன் கழுத்தில் விழுந்த மலர் மாலையால் மெய் சிலிர்த்தான்.     வழியில் தடைகள் போடப் பட்டிருந்தன.  காகா என்ற இடம் வைத்ய குலத்தவரும், உயர் அதிகாரிகளூம் வசிக்கும் இடம்.  ஹஸ்கபுரம் – என்ற தலை நகரைத் தாண்டி அதைச் சுற்றிக் கொண்டு க்ரமராஜ்யம் வந்து சேர்ந்தான். (காகா என்ற சொல் இன்றளவும் காஸ்மீரத்தில் மரியாதைக்குரியவர்களை குறிப்பிடுகிறது) 

தாமரர்கள் வெற்றி நிச்சயம் என்று இந்த நல்ல நிமித்தங்களால் ஊக்கம் அடைந்தனர்.   ஏற்கனவே அந்த பிரதேசத்து யசோராஜா என்ற முக்கியமான போர் வீரனை சுற்றி வளைத்தனர்.  அவன் உடன் வந்த படையை சின்னா பின்னமாக்கி விட்டிருந்தனர். அதனால் அவன் பின் வாங்கி தாரமூலகா என்ற இடத்தை அடைந்தான். அங்கும் உச்சலனின் ஆட்களே நிரம்பி இருந்தனர்.  இருந்தாலும் தைரியமாக எதிர்த்தான். உச்சலனுக்கும் இந்த யசோ ராஜனுக்கும்  இடையே மல்யுத்தம் , இரு யானைகள் முட்டிக் கொள்வது போல  நடந்ததாம்.   உச்சலனின் தாய் மாமனான அனந்தன் தன் தாமர படையுடன் மத்வ ராஜ்யம் என்பதை கைப்பற்றி விட்டான்.    வெற்றி முழக்கத்துடனும்  வாத்ய இசைகளுடனும் எண்ணற்ற தாமர வீரர்கள்  வந்து இணைந்து கொண்டனர்.  பனி உருகினால் பெருகி வரும் குளவிகள் கூட்டம் திடுமென வெளிப்படுவது போல இருந்த தாம்.  

அந்த பிரதேச தண்ட  நாயகனும்,  மஹத்தமாவும்  ( பிரதேச ராஜ்யபாலகன் ) ஆக பதவி வகித்தவன் போர் வீரனல்ல.  அதனால் அவனால் எதிர்த்து போரிட  முடியவில்லை.  ஆயுதங்களுடன் எதிர்த்த அவன் அணுக்க வீரர்கள் வரை தோற்கடிக்கப் பட்டனர். ஆயினும் தான் மட்டும் உயிர் தப்ப நினைக்காமல்   மாதவராஜ பிரதேசத்திலேயே இருந்தவன்,  உச்சலனிடம் சரணடைந்தான். ராஜதானிக்குள் அவர்கள் செல்லவும் அனுமதித்தான். இப்படி ஒருவனை நான் கண்டதேயில்லை என்று மனப் பூர்வமாக பாராட்டினான்.  கிராமங்களையும், சிறிய பெரிய நகரங்களையும் படை வீரர்கள்  சுற்றி வந்தனர். அனந்தன் கடுமையாக எச்சரித்திருந்தான். எந்த பொருளையும் தொடக் கூடாது,  அநாகரீகமான செயல்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும்   நல் குடியில் பிறந்தவர்கள் என்று  மதிக்கும் படியாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள்.

அதன் பின் பரிகாச புரத்தில் நுழைந்தனர்.  மலைப் பாங்கான பிரதேசம்.  வெண்ணிற நுரையுடன் நதிகள் பிரவகித்துக் கொண்டிருந்தன. செங்குத்தான சிகரங்கள்.  எங்கிருந்தோ பெருகி வரும் வெள்ளம்.  பாதையே கடுமையானது. மனத்  துணிவும், உடல் பலமும் சேர்ந்தால் எதைத் தான் சாதிக்க முடியாது.  கோழையான ஆமைக்கு தடிமனான மேல் தோல் அதன் உடலை பாதுகாக்க தேவைப் படுகிறது.  சிங்கம் இயல்பாகவே போர் குணம் கொண்டது. அதற்கு பாதுகாப்பு கவசம் போல எதுவும் இல்லை. இறைவனின் லீலை. எளியவனுக்கு உதவும் போதே, வலிமையுடன் சில      பிறவிகளை படைத்து, தன்னைக் காத்துக் கொள்ள அறிவும், பலமும் அளித்து அனுப்பி விடுகிறான், 1329

ஹர்ஷ தேவனுக்கு செய்தி சென்றது. பரிகாசபுர ராஜ்ய பாலன் ‘நான் அவனை ஏமாற்றி, குள்ள நரியை பிடிப்பது போல பிடித்து வைத்திருக்கிறேன். வந்து அவனை வதைக்கவும்’ ஹர்ஷனும்  தன் சிறந்த வீரர்களும், மந்திரிகள், சேனைத் தலைவர்களுடன் மிகப் பெரும் படையுடன் வந்தான்.  வெற்றி அல்லது வீர மரணம் என்ற நிச்சயத்துடன் வந்தான். உயிருக்கே ஆபத்து என்பதால் படஹம் என்ற வாத்தியத்தை இசைத்து நகர மக்களையும் ஒன்று சேர ஆணையிட்டான்.

பயிற்சி அளிக்கப் பட்ட உயர்தர குதிரைகள், மற்ற வாகனங்களில் அவர்களின் படை கடல் அலை போல வந்து கொண்டே இருந்தன.  பாரத பாலம் என்ற இடத்தை அடைந்து விட்டிருந்த உச்சலன் படைகள், தங்கி இருந்த இடம் வந்தனர்.  மண்டலேஸ்வரன் இந்த படை பலைத்தைக் கண்டவுடன் தானும் அதன் மத்தியில் நின்றான்.  உச்சலனின் படை சிதறியது. சில தாமரர்கள் ராஜ விஹாரம் என்ற பவனத்தில் நுழைந்தனர். அவர்களில் ஒருவனான த்ரில்லசேனா  என்பவனை தவறுதலாக உச்சலன் என நினைத்து அந்த ராஜ பவனத்துக்கே தீ வைத்தனர்.

அந்த பெரும்  படை உச்சலனையே சூழ்ந்து நின்றது.  அவனும் தானே  தனியாக எதிர்த்தான். அதில் தர்சனபாலனின் மாமன் சோம பாலனும் இருந்தான். உடன் இருந்து போரிட்டான்.   ஜனக சந்திரன் முதலானோர் உச்சலனைத தள்ளிக் கொண்டே போய் போர் முனையை விட்டு வெளியேற்றி விட்டனர்.   பரிகாச புர போரே யமனுடைய வாய் போலவும் அதிலிருந்து தப்பித்து விட்டது  போலவும் உச்சலன் பிழைத்தான் – விதஸ்தா நதியை நீந்திக் கடந்து, உயர் ஜாதி குதிரை ஒன்றில் ஏறிக் கொண்டு கௌரிகாபால என்ற கிராமத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டான். மீதமிருந்த தாமர வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டனர்.  தார மூலகம் என்ற இடம் வந்தடைந்தனர்.  ஹர்ஷ தேவன், சாதாரண  ஸூதாட்டத்தில்  அறிவில்லாத ஸூதாடி யதேச்சையாக ஆட்டத்தில் வென்றவன்,  வெற்றி வெற்றி என்று கூச்சலிடுவது போல ராஜ்யபாலனை பாராட்டி விட்டு,   இறுமாப்புடன் படையுடன் தலை நகரம் திரும்பினான். எதிரி உயிருடன் தப்பி விட்டான் என்று அறிந்தும் பின் தொடரவில்லை. 

உச்சலனின் பட்சத்தைச் சேர்ந்த தாமரர்கள் திரும்பவும் கூட்டு சேர்ந்தனர்.  உச்சலனும் தன் நம்பிக்கையை இழக்காமல் அடுத்து வந்த ஜேஷ்ட – ஆனி மாதத்துக்குள் சிதறிய படை வீரர்களை ஒன்று கூட்டி பெரும் முயற்சியுடன் படை பலத்தை கூட்டிக் கொண்டான்.  சுத்த வீரன், தன் புஜ பலத்தை  மட்டுமே நம்பியவன்.  இப்படி தனக்கு ஆதரவாளர்களை திரட்டிக் கொள்வது கூட அவன் இயல்புக்கு ஒவ்வாததே. இயற்கை பொய்த்து பஞ்சம் வந்தால் என்ன செய்வோம்.  தனி மனிதனின் திறமை மட்டும் எடுபடுமா? அது போல என்று கவி வர்ணிக்கிறார்.  கடினமான சூழ் நிலையிலும் பரிகாச கேசவனின் உருவத்தை தன் மனதில் நினைத்து வணங்கி வழி பட்டு வந்தான். அந்த மூடன், ஹர்ஷனின் ஆட்கள் அதை உடைத்து விட்டனர்.  அந்த சமயம் ஹர்ஷணின் தலையை துண்டித்து தான் பரிகாரம் செய்வேன் என்று சபதம் செய்தான்.  அவனால் தாங்கவே முடியாத அக்கிரம செயல்.   வானமும் பூமியும் நடுங்கியது போலவும் புகை போல தூசி எழுந்தது போலவும், புறாக் கூட்டம் வானத்தில் நிறைந்து ஆதவனின் ஒளியை மறைத்தது போலவும் இருந்தது.  அவன் மனம் துடித்தது. 1345 ஹர்ஷ தேவனின் தலையை, அவன் அரச பதவியையும் அது மறைக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என உணர்ந்தான்.  

முன் ஒரு சமயம் பனி மூடி இருள் ஸூழ்ந்த ஒரு  பகல் பொழுதில் இந்த புறாக்களின் வெள்ளி  நிற சிறகின் ஒளி பகலவனுக்கு மாற்றாக ஒளி கூட்டியது என்று அந்த மக்களின் நெடுங்கால நம்பிக்கையாக உள்ளது.

பரிகாச புர கேசவன் கோவிலை ஸ்தாபித்த பின் தான் அந்த கடும் பனியால் அவதியுறுவதும் குறைந்தது. அதையா உடைத்தாய், என்று சொல்வது போல , அடுத்த நாற்பத்தைந்து  நாட்கள்  அது போலவே பனி சூழ்ந்து .பகலை இரவாக்கியது.

இதனால் மக்களின் நடமாட்டம் குறையவும், எதிரிகளும் அடங்கி விட்டனர் என ஹர்ஷன் மகிழ்ந்தான்.  அதே சமயம் ஸூரபுரத்தில் சுச்சலன் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.  பகலவனின் திசை மாறி  அந்த திசையில் தோன்றியது போல – கவியின் சொல்.

அவனாக अवनाह – ஊர் பெயர்.  என்ற இடத்தில் இருந்தவனுக்கு தந்தையிடமிருந்து வருத்தத்துடன் எழுதிய செய்தி கிடைத்து விட்டது.  தன் மூத்த சகோதரனை ஆபத்து சூழ்ந்திருப்பதை எண்ணி தான் மேற்கொண்டு செய்ய வேண்டியதை யோசித்தான்.  கல்ஹ என்ற அரசனின் சபையில் இருந்தவன், அரசனின் உதவியுடன், சில குதிரை வீரர்களுடன்,  கிளம்பினான்.   அரசன் கல்ஹன் அவனது சமாதான பேச்சு வார்த்தைகளில் மிக்க மதிப்பு வைத்திருந்தான்.  விடிந்ததில் இருந்து மாலை வரை  வாய் வார்த்தையாக பேசியே,  எதிர்த்து நின்ற மாணிக்கன் என்ற சேனாபதியை சமாதானம் செய்து விட்டிருந்தான்.    அதனால் ஸூர புரத்தில் அவனுடைய மதிப்பும், செல்வமும் நிறைந்தது.  அரசன் தான் ராஜ்யத்தை திரும்பப் பெற்றதும், நாட்டில் அமைதியும் வளமும் கூடியதும் அவனுடைய  அரியதான சொல் திறமையாலே என்று நம்பினான்.  மண்டலேஸ்வரனாக ஆக்கினான்.  தற்சமயம் சகோதரன் உச்சலன் ஆபத்தில் இருக்கிறான் என்பதால் கிளம்புகிறான் என்பதை நினைத்து அனுமதி அளித்தான். சுச்சலன் இயல்பாகவே எடுத்த காரியம், எதைச் செய்தாலும் விரைவாக செய்து விடுவான்.

இதையறிந்த ஹர்ஷன் பட்டா முதலிய மண்டல் அதிகாரிகளை களம் இறக்கினான்.  எதிர்த்த அனைவருமே சுச்சலனின் போர் திறமை, திட்டமிடுதல் இவைகளால் தோற்று விழுந்தனர்.  தர்சனபாலன், தன் தலைவனுக்கே துரோகம் செய்தவன் என பெயர் பெற்றிருந்தவனும் வீழ்ந்தான்.அவனுடன் வந்திருந்த போர் வீரர்கள் பயந்து ஓடி விட்டனர்.  அதன் பின் சஹேலா  என்ற அரசன் லோக புண்யம் என்ற இடத்தில் இருந்தவன், கல்பமே முடிவதாக பயந்த சஹேலாவை எளிதில் வென்று,  வழியில் எதிர்த்தவர்களையும் அதே போல ஓடச் செய்து விட்டு தாரமூலம் என்ற இடத்தில் இருந்த உச்சலனிடம் வந்தான்.

காலாட்படையே பிரதானமாக கொண்டிருந்த தாமரர்கள்,  குதிரை படையைக் கண்டு அஞ்சினர்.  அவர்கள் பயத்தைப் போக்கி, கடினமான லாஹர வழியில் மலைத் தொடர்களைக் கடந்த்து அழைத்து வந்தான்.  உதய ராஜா என்ற ஒரு சிற்றரசனும் உச்சலனை எதிர்த்து தன் மண்டலேஸ்வரனை லாஹர – பிரதேசத்துக்கு அனுப்பி இருந்தான்.

பத்மபுரம் என்ற இடத்தில், மல்ல புதல்வர்களின் தாய் மாமன் தன் படையுடன் அவர்களுக்கு உதவியாக வந்த பின், ஹர்ஷராஜனின் படை வீரர்களே அரச ஆணையை மதிக்க தயாராக இல்லை.   

எனக்கு ஆதரவாக எவருமே இல்லையா என்று ஹர்ஷ தேவன் புலம்பினானாம்.   முன் பிரபலமாக இருந்த ஜிந்துராஜாவின் வழித் தோன்றலான  சந்திர ராஜாவை அனுப்பினான்.  துரோணாச்சரியாரின் மகனை, வேறு வழியின்றி அனுப்பியது போல இவனை  பத்மபுரத்துக்கு  அனுப்பியதாக கவி சொல்கிறார்.  படுக்கையில் படுத்து உயிரை விடுவதை விட போர்க் களத்தில் மரிப்பது மேல் என்ற எண்ணத்துடனேயே சந்திர ராஜா கிளம்பினானாம்.  வெல்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல். அதே போல அவந்தி புர எல்லையிலேயே வளர் பிறை நவமியில் எதிரிகளின் பலத்தின் முன் எதுவும் செய்யத் திறனின்றி மடிந்தான். கோவர்தனதர என்ற இடத்தில் உடன் வந்த சைன்யமும் விலகி ஓடி விட்ட நிலையில் குதிரை வீரர்களை முதன் முதல் கண்டவன் விதஸ்தா வரை கூட முன்னேறவில்லை.  அவன் தலையை மட்டும் ஹர்ஷ ராஜாவுக்கு அனுப்பி விட்டனர்.  அதன் பின்னும் மற்றொரு படையை அனுப்பினான். போர் வீரர்கள் தாங்க முடியாத பனி மழையில் நடுங்கிக் கொண்டு முன்னேறவே விருப்பம் இன்றி தயங்கினர்.  லாஹராவின் ராஜ்ய பாலனின் உத்தரவை தட்டவும் முடியாமல் மெள்ள நகர்ந்த படை திடுமென பெய்த மழையால் மேலும் பாதிக்கப் பட்டது.  வரிசை கலைந்து ஓடலாயினர்.  ஜனகசந்திரனின் தலைமையில் உச்சலனின் வீரர்கள் லாஹர ராஜ்ய பாலனை வதைத்து விட்டனர்.

ஹர்ஷராஜனோ தன் படை வீரர்களையே சந்தேகித்தான்.  சிங்கம் வன ராஜா தான். எதிர்க்க முடியாத சக்தி வாய்ந்தது.  அதுவும் தன் பின்னால் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே போகுமாம். யானையிடம் பயம். முன்னால் வந்தால் அடிக்கலாம், பின்னாலேயே வந்து தாக்கினால், அது போல எங்கிறார் கவி.  விதியின் ஒரு கை – விதியின் ஒரு பங்கு அதன் முன்னால் வெற்றியையும்,  பின்னால்  யானை ரூபத்தில் தோல்வியையும் கொண்டுள்ளது. 

தராசின் இரு தட்டுகள் போல ஏறியும் இறங்கியும்  பொருளின் எடையைக் காட்டுவது போலவே சம மான வீரர்கள் இரு பக்கமும் இருந்தாலும் வெற்றி தோல்வி நிச்சயமில்லாமல் போவது கண்கூடு.  மூன்றாவது நாள் போர். கொட்டும் பனி  மழை தாங்க முடியாமல் படை வீரர்கள் ஓடி ஒளிந்தனர் அல்லது மடிந்து விழுந்தனர்.  வெற்றியோ தோல்வியோ நம் கையில் இல்லை என பேசுபவர்கள் கூட செயலின் பலனை விமரிசிக்க முடியாது.  வெற்றியில் விதி நினைவில் வராது. தோற்றால் மட்டுமே விதி என்பர்.   கஜ்ஜா என்ற அவன் தாயார் அரசனை வேண்டினாள். என் ஒரே மகன், இவனை அனுப்பாதே என்றாள். அரசன் சொன்னான், எனக்கும் ஒரே ஒரு சாகசம் உடைய வீரன் அவன் தான். என்று பதில் சொன்னான். தாயே,  நீ மற்றொரு மகன் இல்லை என்பது போலவே எனக்கும் மற்றொரு வீர சேனைத் தலைவன் இல்லையே. இவன் ஒருவன் தான் எனக்கு ஒரே ஒருவன் நம்பிக்கைக்கு உகந்த வீரன்.  அந்த தாயார், மகனின் எஜமான விஸ்வாசமே  அவனுக்கு பரலோகத்திலும் நன்மையைத்  தரட்டும் என்று வேண்டிக் கொண்டாள். மகனின் இறுதிச் சடங்கில் பங்கு கொண்டாள்.

உச்சலன் ஹிரண்ய புரம் வரை வந்து விட்டான். அங்கிருந்த பெரியவர்களும், ஊர் மக்களும் அந்தணர்களைக் கொண்டு அவனுக்கு அரசனாக முடி ஸூட்டி, நீராட்டினர்.  

அரசன்  ஹர்ஷனுக்கு மந்திரிகள் ஆலோசனை சொன்னார்கள். சிறிது காலம் லோஹராவில் போய்  வசித்து விட்டு வாருங்கள். அங்குள்ளோர் உங்கள் ஆதரவாளர்களே. பின் காலம் நமக்கு சாதகமாக ஆன பின் திரும்பி வரலாம். அரசன் சம்மதிக்கவில்லை. இந்த அரண்மனையை விட்டு,  பொக்கிஷத்தை விட்டு, அந்த:புர பெண்களை விட்டு, அரியணை, அரச போகங்கள் இவைகளையும் துறந்து அங்கு போய் என்ன செய்வேன்.   மந்திரிகள் விடாமல் தொடர்ந்தனர். அந்த:புர ராணிகளை, செல்வங்களை நாங்கள் கொண்டுவந்து  சேர்க்கிறோம்.  அரசன் அதற்கும் சம்மதிக்கவில்லை. அதற்குள் அந்த நாடோடி மகன் – உச்சலன்- (அவன் தாய் அரச குலத்தவள் இல்லை என்பதால்) அரியணையில் அமர்ந்து விடுவான். அரியணையின் மதிப்பே அவ்வளவு தான் என்றாகும். வேறு ஏதாவது உபாயம் சொல்லுங்கள் என்றான்.  மந்திரிகள் சொன்னார்கள், ‘அரசே! இது அரச தர்மம். தன் அரசை உயிருள்ளவரை காப்பதே அவன் கடமை. தன்னையே நொந்து கொள்வதை விட போர் களத்தில் மடிவதே மேல். ‘

அனுசரித்து நடந்து கொள்வதும், தயக்கமும், பயமோ,இரு விதமான யோசனைகளோ,  மந்திரிகளுக்கும், அரசனுக்கும் சுகமோ, துக்கமோ இவைகளுக்கு காரணமாகும். தன் உடன் பிறந்தாரோ, உறவினரோ அல்ல.  அரசன் அனைத்தையும் மந்திரிகளிடம் விட்டு விட்டு தான் செயல் திறன் இன்றி இருந்தால் கண் தெரியாதவன் தன் கைத்தடியை நம்புவது போல ஒவ்வொரு காலடியும்  அவனுடையது அல்ல என்றாகும்.

தன் கை வசம் ஆயுதம் இன்றி  இருப்பவன் அல்பனான எதிரியிடம் கூட தோற்பான். கூர்மையான அறிவு இல்லாதவன், தயங்குபவன், அறிவில்லாதவன்  ஆவான்.  மகேந்திரனாக இருப்பவன் நாளடைவில் அல்பனாக ஆவதும்,  அல்பனாக இருப்பவன் மகேந்திரனாகவும் ஆவது உண்டு.  இவைனை நம்பலாம், இவன் யோக்யனல்ல என்ற தன் உணர்வு

அரசனுக்கு அவசியம். ஒருவனே அனைத்தையும் செய்யவும் முடியாது.  உடன் உள்ள மந்திரிகளை சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாது என்பதால் கூர்மையான புத்தியும், என்னேரமும்  கண்காணிப்புடன் இருப்பதும் அவசியமாகிறது.  சாதிக்க விரும்புபவனுக்கு பயம் எதிரி. அதுவும் உடல் ஊனமும் ஒன்றே.  ஊனமான அங்கங்கள் தனதே ஆனாலும் பயன் படாமல் போவது போல. சர்வ சம்பத்தும் நிறைந்து உள்ளவன் தான் என்றாலும் உடல் ஊனம் அனுபவிக்க விடாது என்பது போல. அது தவிர  அரசன் செல்வாக்குடையவனாக, தானும் சக்தியுடையவனே  என்றாலும்  தான் நம்பும் ஒருவனே  தன் அனைத்து செயல்களையும் செய்ய அனுமதிக்க கூடாது.  

உயர் பதவி, அதிகாரங்கள், ஏராளமான செல்வம், இவை எல்லாம் சுதந்திரம் இல்லாமல் மற்றவனுக்கு அடிமையாக இருப்பவன் எப்படி முழுமையாக அனுபவிப்பான்.   உள்ளூற பயம் இருக்கும்.  எந்த நிமிடமும்  தன் உயர் அதிகாரியோ, அரசனோ, அவமதிக்கலாம்.  தன் செயலில் குற்றமோ, குறையோ சொல்லலாம்.  சிறு விஷயத்தில் கூட மந்திரியிடம் மன வேறு பாடு வரக் கூடும். அல்லது உடன் பாடும் வரலாம்.  தயிரை கடையும் மத்தை இருவர் இரு பக்கமும் இழுத்தால் என்னாகும்.  1400 . 

அரசன்  தன் அரசாட்சிக்கு  எதிராக செயல் படுபவர்களை  நாட்டில் வளர விடக் கூடாது.  உடல் ஊனத்தை ஒருவன் காரணமாக காட்டி அரசனிடம் ஆதரவு கேட்கும் உளவாளிகளும் உண்டு. எதிரிகள் யாருமறியாமல் ஊடுருவி நாட்டுக்குள் வரக் கூடும். போர் என்று வந்தால் அரசனும் பங்கு ஏற்க வேண்டும். படையை அனுப்பி விட்டு தள்ளி நிற்பது வெற்றியைத் தந்தாலும் அரசனுக்கு பெருமை சேர்க்காது. வெற்றி தோல்வியை எதிர்பார்த்தே களத்தில் தன் வீர்களுடன் இறங்கும் தகுதியுடைய வீரனான அரசன். அவனே என்றும் புகழ் பெறுவான்.  யுத்த களத்தில் வீழ்வது வீர சயணம் என்ற பெருமையை பெறும்.   அதை அடைந்தவர்கள் தன்யா: பேறு பெற்றவர்கள் என் புகழப் படுவர்.  அதுவே,  சேனைத் தலைவர்களையே முழுவதுமாக நம்பி வந்தது வரட்டும் என்று இருப்பவன் நல்ல அரசன் அல்ல.  உத்கர்ஷன் போல தன்னை மாய்த்துக் கொள்வது கூட அனுமதிக்கப் பட்டதே.

இதைக் கேட்ட அரசன், ‘நானாக என் உயிரை மாய்த்துக் கொள்ள எனக்கு மன வலிமை இல்லை. உங்களில் ஒருவரே அதை செய்து விடுங்கள்’ என்றான்.  அறிவில்லாத சோம்பேறி போல இப்படி பேசும் அரசனைப் பார்த்து மந்திரிகள் வருந்தினர்.  இவ்வளவு காலம்  அரசனை காக்கவே போரில் உயிரை விட்டவர்களை ஏளனம் செய்வது போல அருகில் இருந்து நாங்களே இந்த செயலை செய்வோமா,  உடல் நிரந்தரமல்ல. ஒரு நாள் மடியத்தான் போகிறது என்று அறியாதவர்களா நாங்கள்.  ஆயினும்  அதை தானே தியாகம் செய்வது  வேறு.   அருகில் இருந்தவர்களே கொன்று விட்டனர் என்றால், எங்கள் உண்மையான சேவகத்துக்கு என்ன மதிப்பு.   நாங்கள் தூற்றப் படுவோம். யார் அறிவர், அரசனின் வேண்டுகோள்  அது என்றால் யார் நம்புவர்.    அரசனை எந்த நிலையிலும் காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டு காவல் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் உயர் அதிகாரிகளும் மெய்க் காப்பாளர்களும். எங்கள் கை அதற்கு எதிராக உயராது.  மனித உருவில் வந்த மிருகங்கள் அரசன் அறியாமல் அவர்களை வளர்த்து விட்டிருக்கிறான் என்பர்.   அந்த இகழ்ச்சி எங்கள் உழைப்புக்கு, எங்கள் தன் மானத்துக்கு இழுக்கு.  எங்கள் பிறவியே வீண் என்றாகும். அதை செய்ய மாட்டோம். வீரனை மணந்த பெண்டிர் உடன் கட்டை ஏறத் தயங்குவதில்லை.  இப்படி கூத்தாடி போல தீனனாக பயந்து நடுங்கும் கோழையாக தங்கள் கணவன் புலம்புவதை அவர்கள் கண்டிருந்தால் இந்த தியாகத்தால் என்ன பயன்.

தங்கள் புதல்வர்கள் பசியால் வாடுவதை காண நேர்ந்த பெற்றொருடைய துக்கமோ,  தன் மனைவியை பிறர் வீட்டில் பணி செய்வதை அனுமதிக்கும் கணவனின் துக்கமோ,  நண்பன் துன்பத்தில் வாடுவதை கண்டும் செயலின்றி இருக்க நேர்ந்தாலோ,  வீட்டுப் பசு உணவின்றி அதற்கான தீவனம் அளிக்க இயலாமல்  ஹூங்காரம் செய்வதை ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தாலோ, பதியை இழந்த  பெண் போலவோ, பெற்றோர் அருகில் இல்லாமல் அவர்களை வெகு தூரத்தில் முதுமையில் தவிக்க விடுவதோ,  தன் தலைவன் போரில் தோற்றாலோ,  .இவைகளை அனுபவிப்பவர்கள் வருந்துவதை விடவா, நரகத்தில் உழலுவதால் ஒருவன் அனுபவிக்கப் போகிறான். 

அரசன் தானே  அறிவில்லாத மிருகம் மனித உருவில் வந்தவன் போல,   வீர செயல்கள் சாகசங்கள் செய்தவனா என வியக்கும் படி ஏதோ துர் தேவதை ஆட்கொண்டு விட்டவன் போல பதில் சொன்னான்.  இந்த விசாலமான ராஜ்யத்தை நான் முழுவதுமாக அனுபவித்து களைத்து விட்டேன். என்னைப் போல ராஜ போகத்தை அனுபவித்தவன் எவருமில்லை.   யமனும், குபேரனும் அரசனின் நாக்கில்- சொல்லில் இருக்கிறான் என்பர். (தண்டனையும், செல்வமும்)  கலி யுகத்தில் இவர்கள் இருவரும் நம் அரசனிடம் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று பாடப் பெற்றேன்.  ருத்ர, உபேந்திரன், மகேந்திரன்  இவர்களுக்கும் இதே வழி தான்.  நீண்டு நெடுக இருந்தாலும் ஓரிடத்தில் வழி முடியத் தான் போகிறது எனும் பொழுது மனிதனாக பிறந்தவன் மரணத்திற்கு ஏன் பயப்பட வேண்டும். 1418

குல வது, கணவனுடன் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லற பெண்ணைப் போல என் நாடு தூய்மையாக மகிழ்ச்சியாக இருக்கும் படி ஆண்டு வந்தேன்.   என் தவறால், அல்லது என் இயலாமையால் அவளை வேறு அரசனுக்கு  பணி செய்பவளாக  காண்பேனா?  இந்த ராஜ்யத்தை தகுதி இல்லாதவன் அடைந்தால்,    குலமோ, குணமோ, ஆற்றலோ இல்லாத  சாதாரண பிரஜை கூட ராஜ பதவிக்கு வர ஆசைப்படுவான். என்னுடைய வெற்றி தானாக வந்தது இல்லை.. மனித முயற்சியால் முடியாது என்ற செயல்களை  கூட முயற்சியால் வென்று முடித்தவன் நான்.  என் அரசு விசாலமாக ஆக பாடுபட்டவன்.  உடலாலும், அறிவினாலும் உழைத்து வெற்றிக் கனி என்ற ருசியை அனுபவித்தவன். ஏதோ ஒரு அல்பன் இதை அடைந்தால்,  கர்வத்தால் நிச்சயம் சிரிப்பான்.  இந்த பாடு பட்டாயே, என்னைப் பார் என்பான்.  செயலை ஆரம்பித்த சமயம் அதன் பலாபலன்களை  அறிவோமா.   எப்படி முடியும் என்பதை உறுதியாகவோ சொல்ல முடியும்.  பொதுவாக மக்கள்,  வெற்றியில் முடிந்தால்  போற்றுவதும், தோற்றால் இகழ்வதும் தான் இயல்பு.   அதை செயல் வீரன் பொருட்படுத்துவதில்லை.

பாற்கடலை கடைவது என்ற செயல் – அதை ஆரம்பித்த சமயம் இரு பக்கத்தினரும் என்ன எதிர் பார்த்தனர்.   இணைந்து செய்யும் செயல்.  கடையும் சமயம் எவனுடைய மரணம் எப்படி வரும் என்று எண்ணவில்லையே.  மரணத்தை வெல்வோம் என்று ஆரம்பித்தனர்.  கடையும் செயல் முடிந்தவுடன் மந்தர மலையை எவரும் லட்சியமே செய்யவில்லை.  அதுவே,  கடையும்  பொழுது மூழ்கிய போது ஒருவரையொருவர் குற்றம் சொன்னார்கள்.

சாஸ்த்ர சம்ப்ரதாயங்களை அறிந்து அனுஷ்டித்தேன்.  ராஜ குலத்தில் பிறந்தவன் அரச குலத்தினன் என்ற தகுதியும் இருந்தது.  என் நாட்டு மக்கள் நலனுக்காக செல்வத்தை செலவழிக்க தயங்கவே இல்லை.  அது கூட என் அறியாமையோ எனத் தோன்றுகிறது.  உச்சலன் அரசனானால் என் செயல்களின் பலனை அனுபவிப்பான். மடையன் அவன். என் விரல் நுனி அளவே அறிவுடையவன். அவன் பல்லும், அவனும்.  அதுவே எனக்கு அவமானம். பயம் அல்ல. என் கை வலிமை குன்றியதால் இந்த மனக் குமுறல் தோன்றியுள்ளது.    என்னைப் பற்றிய பிம்பம்,  திடமான மனதும் , உடல் வலிமையும் கொண்ட அரசன்  என்று மக்கள் மனதில் உள்ளதை தக்கவைத்துக் கொள்ளவே மரணத்தை வரவேற்கிறேன்.  விரைவில் என் மரணம் நிகழுமானால், என் ராஜ்யம் தகுதியில்லாதவன் கையில் சின்னா பின்னமாவதை கண்டு வருந்தாமல் இருப்பேன்.  என் புகழுடம்பு நிலைத்து நிற்கையிலேயே, என் முடிவும் வர வேண்டும்.  அது தான் என் விருப்பம். 

முன் காலத்தில் முக்தாபீடன் அரசனாக இருந்த வரை தலையில் வைத்து கொண்டாடினார்கள். விரோதிகள் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி அவனை ஒடுக்கி விட்டனர். பரிதாபமாக  கெஞ்சும் நிலைக்கு ஆளானான். வட திசை நோக்கி சென்றான். வழியில் சைன்யம் மேற்கொண்டு செல்ல முடியாமல் திகைத்து நின்று விட்டது. உடன் வந்தவர்களின் துரோகம் வழி தெரியாமல்  பாதி பிரயாணத்தில் செய்வதறியாமல் திகைத்து நின்று விட்டான். சல்யன் என்ற ஒரு அரசன் தனது ஏராளமான படை வீரர்களுடன் அவனை சிறை பிடிக்காமல் திரும்ப மாட்டேன் என்று  சபதம் இட்டு அந்த இடத்திற்கு வர கிளம்பினான்.    பதினாறு லக்ஷம் குதிரை வீரர்கள் அவனுடன் வந்தனர்.   சாம தானம் என்ற நால் விதமான உபாயங்களையும் எண்ணி யோசித்து  பார்த்தும் சரியான வழி புலப்படவில்லை.  களைத்து போய், முக்யமந்திரியான பவஸ்வாமி என்பவனை ஆலோசனை கேட்டான்.   கடுமையான மலைப் பிரதேசம்.  சரியான வழித் தடமும் இல்லை.  பழக்கமில்லாத சீதோஷ்ணமும், குளிரும்.  எந்த உபாயம் சரியாக வரும் என்பதை ஆலோசித்து பதில் சொன்னான்.  யோசியாமல் ஆரம்பித்து விட்ட பிரயாணம். நடுக் காட்டில் திக்கு தெரியாமல் திகைத்து நிற்கும் இந்த  நிலையில் உடல் பலமோ, படை பலமோ உதவாது. உங்களுடைய மனோ பலம் தான்  உடனடி தேவை. பரபரக்காமல் நிதானமாக யோசியுங்கள். மனம் தளராமல் என்ன செய்யலாம் என்று யோசிப்போம். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றியே ஆக வேண்டும். இது வரை சேமித்த ராஜ பதவியினால் பெற்ற நற் பெயர், மக்களின் நம்பிக்கை இவற்றை தக்க வைத்துக் கொள்ளவே முயற்சி செய்வோம்.  சாம் ராஜ்ய ஆசை ஒரு பக்கம் இருக்கட்டும்.  தற்சமயம் செய்ய வேண்டியதையே சிந்திப்போம்.    படை வீரர்களை பத்திரமாக நாடு கொண்டு சேர்ப்பது முதல் கடமை.  மரணம் அடைந்தபின் உடலை தகனம் செய்தாலும் சாம்பல் மிஞ்சும்.  ஜீவித்த காலத்தில் செய்த நன்மைகள் வாசனைப் பொடி போல மணம் வீசும்.  அனங்கன்-  உடலைத் தான் இழந்தான். பெண்களின் கடைக் கண் பார்வையில் இன்னமும் ஜீவித்து இருக்கிறான்.  மனிதர்களின் மனமும் வாக்கும்  அரியன செய்தவர்களை மறப்பதில்லை.  எந்த நிலையிலும் தன் இயல்பை விடக் கூடாது. அரசனாக ஆட்சி செய்தவனுடைய பெருந்தன்மை இடுக்கண் வரும் காலத்திலும் அவர்களை காப்பதே.  அப்படி  பிரஜைகளைக் காத்தவன்  இறந்தாலும்  அவன் புகழ் உலகில் பரமாணுக்களாக  நிலைத்து இருக்குமாம்.  பிறவியிலேயே நமக்கு  விதிக்கப் பட்டது தான் நமக்கு கிடைக்கும் என்பதும் ஒரு வாதம்.  விரோதிகளிடம்  அந்த வாதம் பயனற்றது.   அந்த இடத்தில் இயன்றவரை முயற்சியைத் தான் பெரியவர்கள் அறிஞர்கள் அறிவுறுத்துவார்கள்.  அவர்கள் உங்கள் வளர்ச்சியை தடுக்கவே போர் முனைக்கு வந்தவர்கள். 1437

விதாதா- படைப்புக் கடவுள், தன் படைப்பில் முன்னுக்கு வந்தவர்களை தானே கீழே இறக்குவதில் திருப்தி அடைகிறானோ என்று தோன்றுகிறது. . ஏனெனில், தான் பிறந்ததே பத்மத்தில்.- தாமரை மலரில்.  அந்த மலர்கள்  மலர்ந்து நிறைந்துள்ள குளத்தைக் கண்டு நிலவே வெட்குமாம். அந்த அழகுக்கு முன் தான் எம்மாத்திரம் என்று  நினைக்குமாம். ஒரு யானையைப் படைத்து  குளத்தில் அது இறங்கி மலர்களை சிதைப்பதை எப்படி அனுமதிக்கிறான். அது அந்த மலர்களுக்கு  செய்யும் அவமானம் இல்லையா.  அது போலவே சிலரை படைத்து விட்டிருக்கிறான். யானை போலவே புகழ் பெற்று முன்னிலையில் உள்ளவர்களை கீழே இறக்கும் படி பிடிவாதக் காரர்களை பிறப்பித்ததும்   அதே  போலத் தானே. 

இளம் மூங்கில் குச்சிகள் நினைத்து கூட இருக்குமா?  ஒரே பெயரைக் கொண்ட நாம் இருவரும் ஒன்று எனவா பெருமை கொள்ளும்.  வம்சம்- பரம்பரை, மற்றொரு பொருள்- மூங்கில்.  பரம்பரை அரசனைப் போலவா இந்த வம்சத்தின் -மூங்கில் குறுத்தின்-  வாழ்வு அமையும்.  அரச குலத்தினர் கோபித்தால், இதைக் கொண்டு வாசல் காவல் காரர்கள் அனுமதியின்றி வருபவர்களை அடிக்க பயன்படுத்துகிறார்கள்.

அதனால் தேவ! உன் பெருந்தன்மையை, புகழை நிலை நிறுத்திக் கொள்வது தான் தற்சமயம் செய்ய வேண்டியது. எல்லையற்ற ராஜ போகங்கள், விரும்பியவற்றை விரும்பியவாறு பெற்று மகிழ்ந்த அரச வாழ்வு, இதில் மகிழ்ந்து இருப்பாயாக. தண்டிக்க வந்தவன் – அந்த எண்ணமே  ஒரு ரோகம் (தண்டகாலகன் என்பது ஒரு நோய். அது தாக்கினால் மரணம் தான் முடிவு)   தாக்கியது போல என்று நினைத்துக் கொள்.   அரசனாக உன்னை உணர்ந்து கொள்.   அகஸ்மாத்தாக தோன்றிய ஒரு எண்ணம் அதை கைவிட்டு உன் இயல்பான நிலையை அடைவதே சிறந்தது. நாளை சொல்கிறேன், என்ன செய்தால் நலம் என்பதை, என்று சொல்லி விட்டு அந்த மதி மந்திரி விலகி சென்று விட்டார்.  1444

யோசித்தவாறே இரவு முழுவதும் இமை கொட்டாமல் விழித்திருந்த அரசன். களைத்து விட்டிருந்தான். எண்ணெய் ஸ்னானம், சில மருந்துகள் எதுவும் அந்த களைப்பை நீக்கவில்லை. குளிருக்கு அடக்கமாக வைத்யர்கள் தேவையானதைச் செய்தனர்.  அவர்கள் முகக் குறிப்பிலிருந்து தனது முடிவு நெருங்கி விட்டதோ என்ற ஐயம் அரசனுக்கு எழுந்தது.   அந்த சமயம் மதி மந்திரி வந்தார். அரசனின் நிலையை அவருக்குத் தெரிவித்தனர்.  இன்னும் சிறிது நேரம் தான் உயிருடன் இருப்பான் என அறிந்த மந்திரி தானே குளிர் காய மூட்டியிருந்த நெருப்பில் குதித்து விட்டார்.  அரசன் திடுக்கிட்டான்.  தனக்கு செய்ய வேண்டியதை அறிவுறுத்துவதாக சொன்னாரே, சொல்ல விரும்பாமலோ,  அல்லது   எனக்கு சாதகமாக இருக்காது என்று அதைச் சொல்வதை தவிர்த்து விட்டாரோ, விரும்பத் தகாதாக முடிவு என்னவாக  இருக்கும் என்று குழம்பினான்.  எதைச் செய்தால் நன்மை என்று செய்து காட்டி விட்டார் என்று அவரை மனதினுள் பாராட்டினான். தானும் அதே போல தீ குளித்தான்.  இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை,   தண்டகாலக நோய் தாக்கி விட்டது -மரண வாயிலை எட்டி விட்டாய் என்று வெளிப்படையாக சொல்லத் தயங்கி,   அரசனுக்கு  வழி காட்டி விட்டதாக மக்கள் புகழ்ந்தனர்.  

ஹர்ஷ தேவனின் மந்திரி சொன்னார்..    உன் மகன் போஜனை அனுப்பு.  வருங்காலம் அவனுடையது. இளம் வயதினன்.   வெற்றியோ தோல்வியோ  அவனுக்கு அனுபவமே ஆகும்.   அரசனும், தன் மகன் போஜனை மங்கள ஆசிகளுடன் வழியனுப்பினான்.  ஆயினும் காவல் தலைவன் சொல்லைக் கேட்டு திரும்பி வரச் செய்து விட்டான். காவல் தலைவன் சொன்னதை ஆராயாமல் ஒத்துக் கொண்டது ஒரு தவறு. ஒரு காலத்தில் கூர்மையாக இருந்த புத்தி, சாகசம் நிறைந்த செயல்களை விரும்பியவன்,  ஆபத்து என்றாலும் தைரியமாக இறங்கி வென்றவன்,  காலத்தின் மாறுதல்,  நாசகாலம் நெருங்கி விட்டதானால், புத்தி விபரீதமாக நினைக்கும் என்பார்களே, அது தான் போலும்.

திருமகளின் அருள், இடி மின்னல் போல. கீர்த்தி என்ற மேகத்தின் போக்கை அனுசரிக்கும் – இடி ஓசை  போல வீர கர்ஜனைகள், தன் ஆற்றலை காட்டும் சக்கிரங்களும், வில்லும் என ஆயுதங்கள், இவை அனைத்துமே ஒருவனுடைய பாக்கியம் என்பது முன் சென்றால் தான் பின்னால்  அனுசரித்து வரும்.   தான் ஒருவனாக, தன்  ஆற்றலால், புத்தியால், இந்திரனையே எதிர்த்து நிற்பான் என புகழப் பட்டவன்,    தற்சமயம் ஏன் தானே முடிவு எடுக்க முடியாமல் பிறர் சொல்லைக் கேட்கிறான்.  இந்த மூடத்தனம், சேற்றில் மாட்டிக் கொண்ட குருடன் போல.    பாக்யம் கை விட்டதோ, தவறான முடிவை, சேற்றில் காலடி வைத்தது போல, இப்படியும் நடக்குமா என முன் அவனை அறிந்தவர்கள் திடுக்கிட்டனர்.  அதை விட தவறான அடுத்த செயல்- தந்திரம் அறிந்தவர்களின்  கூட்டத்தை  விரோதிகளை கலைத்து விரட்ட ஏற்பாடு செய்தான்.  நாட்டில் சுகமாக இருந்து கொண்டே அவர்கள் சைன்யத்திற்கு அளிக்கப் படும் ஊதியமும் பெற்றனர்.  அரண்மனை ஊழியர்களே, அரசனின் மனப் போக்கை அறிந்தவர்களாக, தங்கள் வேலைகளை உண்மையாக செய்யவில்லை. நாளை அரசனாக வரப் போகும் எதிரிக்கு ஆதரவாக செயல் பட்டனர்.   சிலர் வெளியேறினர். மற்றவர் அரண்மனைக்குள் பெயரளவில் இருந்தனர்.  மேலும் சிலர் செய்வதறியாமல் காற்றோடு அலையும் உலர்ந்த இலை போல வருவதை எதிர் நோக்கி இருந்தனர்.   அரண்மனை நர்த்தகி  அவள்  யார் என்று அறியாமலே  ஜயமதி என்பவளை தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டாள்.  இளம் வயதினள், உல்லாசமான குணமும் கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவள். உச்சலனை விரும்பியவள், செல்வமே குறியாக, செல்வந்தனான ஒரு  மண்டல தலைவனை அடைந்தவள்.   அந்த மண்டல தலைவன் போரில் மடிந்தான்.  திரும்பவும் உச்சலனையே வரித்தாள்.  இதுவும் காலத்தின் கோளாறே எனலாம். உச்சலன் அவளை ஏற்று தன் ராணியாக்கி கௌரவித்தான்.

அரண்மனைக்குள்ளேயே, ஊழியர்கள் உச்சலனை விமரிசிப்பதும் எதிர் காலத்தில் அவன் அரசன் ஆகும் போது என்ன வசதிகளைப் பெறலாம் எனவும் விவாதங்கள்,  செய்தி பரிமாற்றங்கள் செய்து கொண்டனர். அரசனிடம் மதிப்போ பயமோ அறவே அற்றது.  ஊதியம் பெற்று மேற்பார்வை செய்ய வேண்டியவர்கள், தங்கள் தன்னலத்தையே முன் வைத்து அதிகாரம் செய்தனர்.   போர் வீரர்களுக்கு அனுப்ப வேண்டிய உடைகள், உணவில் கூட பெரும் பங்கை தாங்களே எடுத்துக் கொண்டனர்.  கலி காலம் – நேர்மை என்பது அவர்களைப் பொறுத்தவரையில் தன் சுகம் என்றே ஆயிற்று. அரசனின் சொல்லோ, அதிகாரமோ எடுபடாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.  தொற்று நோய் போல இந்த அடாவடி குணம் ஒருவரிடமிருந்து மற்றவனுக்கு என்று பரவியது.

ஸ்ரீலேகாவின் சகோதரனின் மகன் வியத்தமங்களன் என்பவன் மல்லனின் குடும்பத்தினருடன் உறவு உடையவன் என்பதால் அவனை கொல்ல அரசன் ஆணையிட்டான்.  அவன் மனைவி உச்சலனுடைய மாமன் மகள், தானும் தன் மாமியாருமாக இருந்த வீட்டையே கொளுத்திக் கொண்டு  இருவரும் மடிந்தனர்.   மல்லா மனதில் இருப்பதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டான். என்ன திட்டம் வகுத்திருக்கிறான் என்பது செய்த பின் தான் தெரியும். அவன் சம்பந்தப் பட்ட யாரையுமே அருகில் நெருங்க விடாதே என்று அரசன் மனைவிகளான  சாஹி வம்சத்து  ராணிகள்  போதித்தனர்.  ஆனால், மல்லா  உண்மையான யோகி போன்றவன்.  கபடமாக  அரசனுக்கு எதிராக எதுவும் செய்பவனும் அல்ல.  அவனுடைய புதல்வர்கள் அரசனுடன் மோதியதை அவன் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.  ஆசையைத் துறந்த முனிவனாகவே இருந்தான்.  அரசன் படையுடன் அவனை கொல்ல முனைந்த பொழுது. வாசல் கதவை திறந்து வெளி வந்தவன் திடமாக நின்றான்.  அவனுடன் சால்ஹனா மற்றும் சில உச்சலனின்  தாய் வழி சகோதரர்கள், அந்த வீட்டில் இருந்தனர்.  அக்னியை வழிபட்டு துறவியாக வாழ்ந்து கொண்டிருந்தவன், அவனும் தன் தந்தையின் மகனே, தனக்கு சகோதர உறவே என்பதை மறந்து,  ஹர்ஷதேவன், அவனிடம் விரோதம் பாராட்டினான்.  பாதி பூஜையில், அரசனே வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டவன், அதே உடையில் எதிரில் வந்திருக்கிறான்.  உபவீதமும், ஒரு கையின் விரல்களில் ருத்ராக்ஷமாலையும், காவி உடையுமாக  மற்ற கையில் தர்ப்பையை (தர்பை என்ற புல் – பூஜைகளில் பயன்படுவது)  கையில் வைத்து கொண்டிருந்தவன், நெற்றியில் விபூதியுமாக ஜாமதக்னியான பரசு ராமன் போல இருந்தானாம்.  நரைத்த கேசம்,  நீராடி ஈரம் காயாமல் படியாமல் பறந்து  கொண்டிருந்தது.  தேகதியாகம் செய்யத் துணிந்தவர்கள் பிரயாக கங்கையின் நீரை தலையில் வைத்துக் கொள்வது போல இருந்ததாம்.  இடுப்பில் துண்டு போர் வீரனின் இடைக் கச்சாகவும்,  மேலாடையாக அணிந்திருந்த வெண்மையான நூலாடை, விரித்த  குடை போலவும்,  கையில்  தண்டமே உடை வாள் போலவும் இருந்தாலும்  தாரா தீர்த்தம் என்ற இடத்திற்கு செல்லும்  பாத யாத்ரீகனாகவும் காட்சி அளித்தான்.  உடன் இருந்த சில அடியார்கள் பாது காப்பாக அவனை சூழ்ந்து  நின்றனர்.  அரசனுடன் பூஜைகள், அடுத்து போகம் எனும் நிவேதனங்கள் – இறைவனுக்கு படைக்கப்படும் உணவு வகைகள்- இவைகளை உடன் இருந்து அனுபவித்தவர்கள், இப்பொழுது மரணத்திலும் உடன் நின்றனர்.  தேவ மங்கைகளை அனுபவிக்க இருப்பவர்கள் என்கிறார் கவி. நற் செயல்களை செய்து நேர்மையாக உயிரை விடுபவர்களை தேவ லோக மங்கையர் வரவேற்பர் என்று ஒரு செய்தி பொதுவாக நம்பப் படுகிறது. இரு அந்தணர்கள், ரய்யவட்டா, விஜயா என்பவர்கள், சமையல் செய்யும் கோஷ்டகா என்பவன் மற்றும் ஒரு வாசல் காவல் வேலையில் இருந்தவன் இவர்களும் வந்து கூடினர்.  உதயராஜன், அஜ்ஜகன் என்பவர்கள் ஏற்கனவே காயம் பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்கள், அவர்களும் நின்றனர்.

திடுமென மல்லா அந்த படையின் நடுவில் குதித்தான்.  விளைந்த பயிர்களின் மேல்  வாட்களை வீசி அறுவடை செய்வது போலவும், குளத்தில் மலர் தண்டுகளை துண்டிப்பது போலவும், இடை விடாமல் அவர்கள் தலை மேலேயே இடி விழுந்தது போல தாக்கினானாம். . முதுமையால் வெளுத்த உடலும், நரைத்த தலையும்  ராஜ ஹம்ஸம் எனும் அன்னப் பறவை மிதந்து செல்வது போல இருந்ததாம்.  மகா பாரத பீஷ்மர் போலவே தோற்றமும் வீரமும்,  அவரைப் போலவே வீர சயனம் என்பதை அடைந்தான். (போரில் மடிவதை வீர சயனம் என்பர்)   வீரனுக்குரிய மரியாதையுடன் அவனை போற்ற வேண்டியவன்,  தன் படையை சின்னா பின்னமாக்கிய வீரத்துக்குரிய  மரியாதையைத் தராமல், அசட்டு அரசன் ஹர்ஷன் உயிரற்ற அந்த உடலில், தன் வாளால்  தலையை வெட்டி, உடல் மேல் குதிரையை செலுத்தி அட்டூழியம் செய்தான். 

குமுதலேகா என்ற ராணியும், வல்லபா என்ற மல்லாவின் மனைவியின் சகோதரியும், தங்கள் வீட்டிலேயே உடலை தீக்கிரையாக்கி மரியாதை செய்தனர்.  ஆசாமதி, சஹஜா எனற மல்லாவின் மருமக்கள்,  சல்ஹன, ரால்ஹா என்ற அரகுமார்களின் மனைவிகள்,  ராஜா,  அவகால்யா என்ற அரசர்களின் புதல்விகள்  இவர்களும் அந்த தியாகத் தீயில் தங்களை சமர்ப்பித்துக் கொண்டு விட்டனர். அந்த:புரத்து  பணிப் பெண்கள் ஆறு பேர், அவர்களும்  அரசியுடன், அரச குமாரிகளுடன் இருந்தவர்கள்,  பொறுக்கமாட்டாமல் அந்த தீயில் விழுந்து தங்களை மாய்த்துக் கொண்டனர்.  விதஸ்தாவின் கரையில் இருந்த மாளிகை எரிந்த பொழுது, விதஸ்தாவின் நீரே சுட்டதாம். தீயின் ஜுவாலை மட்டுமா, அந்த நிகழ்ச்சியால் வருந்திய மக்களின் கண்ணீரும்  ஜுவாலையாக நீரை கொதிக்க   வைத்ததாம்.  

உயர் குலத்தில், நேர்மையான குலத்தில் பிறந்த நந்தா – உச்சலன்,- வரும் கால அரசனின் தாய், தன் அரண்மனையில் இருந்து தூரத்தில் தெரிந்த புகை மூட்டத்தைக்  கண்டு  திகைத்தாள். தன் மக்களின் வீடுகள் இருந்த திசையை நோக்கினாள். விதஸ்தாவின் வடக்கில் இருந்த மாளிகைகள்.  அதில் அரண்மனை சமையல் அறை புகை மட்டுமே தெரிந்தது.  ஆனால் மருமக்கள், மற்ற இளய வயதினர்  தீக்கு இரையாகவோ, ஹர்ஷனின் வாளுக்கு இரையாகவோ ஆகி விட்ட செய்தியை தாங்க முடியாமல், தானும் தன் வீட்டில் தீ மூட்டிக்  கொண்டாள். உடன் இருந்த தாத்ரி சந்திரிகா என்பவன், தான் வளர்த்த குழந்தைகளின் நிலையால் வருத்தம் தாங்காமல் உடன் இருந்தாள்.  மேல் மாடியில் நின்ற இருவரையும் ஸூழ்ந்து சென்ற தீயின் நாக்குகள் பணிப்பெண்கள் போல உடன் இருந்தன.  பளபளக்கும் இறக்கைகளுடன் வண்டுகள் பறந்தனவோ எனும் படி தீப்பொறிகள் வானத்தில் நிறைந்தன. அவள் மனதார அரசன் ஹர்ஷனை சபித்தாள். ‘என் வயிற்றில் பிறந்த மகன் களே,  வரும் சில நாட்களில், ஜமதக்னியின் மகன் போலவே உங்கள் தந்தையை காரணமின்றி கொன்றவனை பழி வாங்குங்கள்.  உங்கள் தந்தைக்கு மட்டுமல்ல அந்த வம்சத்துக்கே ஒரு களங்கம் அவன்”

தர்சனபாலனையும் கொல்ல முயன்றவனை எது தடுத்தது?  எப்படியோ பிழைத்தான். உசலாடிக் கொண்டிருந்த அவனது உயிருக்கு இன்னும் சில நாட்கள் மீதி இருந்தது போலும்.  மேலும் ஒரு ஆண்டு வியாதிகளோடு போராடிக் கொண்டு இருந்தான். விதி,  இந்த வலியே போதும் அவனுக்கு என்று விட்டு விட்டதோ என்னவோ.

பாத்ரபத மாதம் தேய் பிறை நவமியன்று இந்த செய்திகளை அறிந்த மல்லனின் குமாரர்கள், உணர்ச்சி வசப் பட்டனர். வருத்தமும் கோபமும் ஒன்றையொன்று தூக்கி அடித்தன. படையுடன் வந்த சுஸ்சலன், வழி நெடுக இருந்த கிராமங்களை துவம்சம் செய்து  வஹ்னிபுரகம் என்ற கிராமம் வரை தீக்கிரையாக்கி விஜய க்ஷேத்ரம் நோக்கி முன்னேறினான்.  அரசனின் படையை தலைமை தாங்கிய சந்திர ராஜனுக்கு உதவ யாரும் இல்லை. பட்டா, தர்சனபாலன் இருவருமே விலகி விட்டனர்.  அவர்கள் படைகளும் பின் தங்கி விட்டன.  தன் அதிக திறமையில்லாத வீரர்களுடன் முடிந்த வரை போரிட்டான்.   1500

அக்ஷோட மல்லன், மற்றொருவன் – இருவரும் அரச சபையில்  பணி செய்தவர்கள்.  போதும் அரச சேவகம் என்பது போல அவசரமாக வானுலகம் சென்றனர்.  புழுதி படலம் இருள் போல பரவி நின்றது. வெண் குடையால் மட்டுமே அடையாளம் காண முடிந்த சந்திர ராஜன், அவன் உடன் வந்த இந்து ராஜன் இருவரும் அவர்களைத் தொடர்ந்தனர்.  வீரன், அவனும் மடிந்தானா என்ற ஹர்ஷ ராஜன் பெருமூச்சு விட்டான்.  பட்டா முதலானோர் சுச்சலனும் களம் இறங்கியவுடன், விஜயேச ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர்.   லக்ஷ்மிதரன் என்பவனை தாமரர்கள் சிறை பிடித்தனர், பத்மா என்ற மற்றொரு படை வீரன் யுத்தகளத்தில் மடிந்தான்.  சுஸ்சலா விஜயேச கோவிலுக்கு வந்து அதன் மேல் மாடியில் நின்று உள்ளே உள்ளவர்களை ஆராய்ந்தான்.  பயந்து நடுங்கிய சிறு விலங்குகள் போல அங்கிருந்தவர்களைக் கண்டான்.  தன் மெய்க் காப்பாளனை அனுப்பி, பட்டா, தர்சனபாலன் இருவரையும் அழைத்து வரச் செய்தான். படிகள் இல்லாமல் ஏறத் தயங்கியவர்களை கயிறு கட்டி கிணற்று நீரை இழுப்பது போல மேலிருந்து இழுத்து அழைத்து  வந்தான் அந்த காவலன்.  வெளி நாடு சென்று விடுகிறோம் என்று கெஞ்சியவர்களைப் பார்த்து சுச்சலன்  அடுத்து செய்ததை அறிந்தால் உலகை படைத்தவனே வியந்திருப்பான்.  அசைவ உணவும், அனுசரனையான உபசரிப்பையும் என்னவென்று  புரிந்து கொள்வது  என்பது புரியாமலே இருவரும் உண்டனர். எதிரில் ஒரு ஆசனத்தில் அமர்ந்த சுஸ்சலன், ஜாசடன் என்பவன் ஹர்ஷ ராஜாவுடைய மாமன் மகன்.  உமாதரன், சில ராஜ புத்திர வீரர்கள், மேலும் சில மாவீர்கள் என்று அழைக்கப் பட்டவர்கள்,  தந்திரிகள், சிறந்த அரண்மனை அதிகாரிகளின் புதல்வர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், -இவர்களின் எண்ணிக்கை அறிய முடியவில்லை-  இவர்களைப் பார்த்து, மேல் மாடியில் நின்றவாறு, கையில் வாளும், கடுமையான சொற்களுமாக அவர்கள் குலை நடுங்க நின்றவர்கள்  அவனிடம்  உயிர் பிச்சை வேண்டினர்.  விஜயேஸ்வரன் ஆணையாக கொல்ல மாட்டேன் என்று உத்திரவாதம் அளித்தான்.  அவர்கள் தங்கள் ஆயுதங்களை அர்ப்பணித்த பின் அபயம் அளிக்கப் பட்டனர்.

மறுமுறை கோவில் உச்சியில் நின்றவன் தன் ஆட்களிடம் ஏதோ சொல்லி அனுப்பினான். அவர்களின் கைகளை மட்டும் வெட்டி மூட்டையாக மேலே கொண்டுவந்தனர்.  கைகளில் அணிந்திருந்த ஆபரணங்கள் பளபளத்தன.  அவைகளை தாமரத் தலைவனிடம் பத்திரமாக வைக்கச் சொல்லி விட்டு சுச்சலன் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தான்.  சுவர்ணசாணூர கிராமத்தின் அருகில் அழைத்துச் சென்ற பின் பாட்ட, தர்சன பாலன் இருவரையும் வெளி நாடு செல்ல  அனுமதிக்க ஆணையிட்டான்.  பட்டன் மனைவி ஸூரபுரம் என்ற இடம் வந்து அவனுடன் சேர்ந்து கொண்டாள்.  வெளி நாடு செல்லும் எண்ணத்தை கை விட்டு  அந்த  கிராமத்திலேயே வசிக்கலானான்.  இருவருமாக வெளி நாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பட்டனின் செயலால் தர்சனபாலன் தனித்து விடப் பட்டான்.  அத்துடன்  நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்த அவர்கள் நட்பும் முறிந்தது. சம வயதினர்.  சம மான ஆற்றலும் பதவிகளும் உடையவர்கள் என்பதால் தோன்றிய நட்பு.

சுச்சலன் தளராமல் பல பிரதேசங்களை வென்று அரசனின் அரண்மனைக்கே வந்தான்.  அரண்மனையை தாக்கும் முன்,  அரசகுமாரன், பப்பா – என அழைக்கப் பட்ட போஜ தேவன் எதிர்த்து போரிட வந்தான்.  அந்த;புரத்தில் வளர்ந்தவன் போர் முறைகளை அறியாதவன், தந்தையில் காலடியிலேயே பாதுகாப்பாக வளர்ந்தவன்,  வேறு வழியின்றி வந்து நிற்கிறான். எந்தெந்த யுத்தங்களில் தந்தை, பாட்டனார் முதலாக அரசுக்கு ஆதரவாக போரிட்டனர் என்பதை அறிந்தவனாக இருந்திருந்தால், வீரமோ, உத்சாகமோ இருந்திருக்கும்.   நெருங்கிய உறவனர்களும் அருகில் இல்லை.

அரசியல் என்பதும் ஒரு கலையே. அதை படித்து அறிந்து கொள்வது ஒரு புறம், களம் இறங்கி தானே போர் முறைகளை உணர்ந்து கொள்ள வேண்டும், மற்ற கலைகள் போலவே அனுபவம்  தான் அதிகமாக கற்றுக் கொடுக்கும்.  அரசியல் கற்றவர்கள் விதி முறைகளை அறிந்திருக்கலாம். ஆனால் ஆயுதங்களைத் தூக்கியே அறியாதவன்,  பலர் ஆயுதங்களுடன் எதிரில் நிற்பதைக் கண்டால் எந்த எதிர் வினையை எப்படி மேற்கொள்வான்?  அதனால் பெரும்பாலான அரசர்கள் தங்கள் சந்ததியினரை இளம் வயதிலேயே போர்  களத்துக்கு துணையுடன் அனுப்பி அநுபவம் பெற செய்வர்.   திமிங்கிலம் கடலில் உடல் வாழும் திமி என்ற சிறு மீன்களை விழுங்கி விடும் அது போல  இந்த அரச  குமாரனும் எதிரிகளுக்கு குட்டி மீன் போல எளிதில் வசப்பட்டான்.

தந்தையின் செய் நன்றி மறந்த தவறு,  அதற்கு தண்டனையை அவன் மகன் பெறுவது நியாயமல்ல. எள்ளை செக்கிலிட்டு ஆட்டினால் பிண்ணாக்கு தனியாக, எண்ணெய் தனியாக வரும்.  எண்ணெயின் மணம் தனி.  உலர்ந்த எள்ளின் சக்கை தனியாக  பிண்ணாக்கு எனப்படும்.  இரண்டும் பிரிக்கப் பட்டபின்   எண்ணெய் வந்தது அந்த உலர்ந்த பிண்ணாக்கில் தானே  என்று எண்ணெய்யை வெறுப்போமா. 

தேவேஸ்வரன் என்பவனின் மகன் பித்தன். पित्थ:- என்பது அவன் பெயர்.  அரசன் கொண்டாடி வளர்த்தான். இருந்தும் அவன் எதிரிகள் பக்கம் சேர்ந்து கொண்டான்.  சுச்சலன் படையெடுத்து வந்த சமயம் அரசனிடம்   ஒரு குதிரையை யாசித்தான்.. இன்று என் திறமையை காட்டுகிறேன் பாருங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றான். அரசன் மனம் நொந்தான். அறிவிலி, இவனை நம்பும்படி ஆயிற்றே என்றோ, முன் வளர்த்த பாசமோ, அவன் எதிரிகளின் வாள் வீச்சில் விழுந்தான் என்ற செய்தி கேட்டு சர்வ நாசம் அடைந்ததை விட அதிகமாக வருந்தினான்.  பித்தனின்  நன்றி மறவாமை மனதை தொட்டது போலும்.   செல்வ செழிப்பில் தன்னை மறந்த அரசர்களோ, செல்வந்தர்களோ, பின்னால் தான் உணருகிறார்கள். 

போஜனின் படைகள் சுஸ்சலனை போர் களத்தில் சந்தித்தது.  வெகு நேரம் நடந்த போர்.  திடுமென சுஸ்சலன்  படையுடன்  விலகி லவணோத்சவ என்ற இடம் சென்று விட்டான்.   கடுமையான வேணிற் காலம்,. வியர்வை பெருக களைத்தவனாக, தோட்டத்து வீட்டில் படுக்கையில் விழுந்தான்.  தந்தையிடம் முழு விவரங்களைச் சொல்லி முடிக்கும் முன், தூரத்தில் ஒரு அறிவிப்பு : ‘உச்சலன் வந்து கொண்டிருக்கிறான், கோட்டை கதவுகளை மூடுங்கள். ‘  இதன் பின்னால் நடந்ததை அவர்கள் அறியவில்லை.   சுஸ்சலனுடைய படையில் , ஒரு பிரிவின் தலைவனாக இருந்த ஒரு  துஷ்டன், உச்சலனுக்கு செய்தி அனுப்பி இருந்தான். ‘நீ உடனே வராவிட்டால்  சுச்சலன் அரசை கைப்பற்றி அரசனாக அரியணையில் அமர்ந்து விடுவான் – என்ற செய்தி.  சுச்சலன் இதை அறிந்தான்.  அது தான் அவனை பாதி போரில் விலகச் செய்தது.  

உச்சலனுக்கு தெரிய வந்த து. அவன் படையுடன் வந்து முதல் காரியமாக அந்த தண்ட நாயகன்- சேனைத் தலைவனை தன் வாளுக்கு இரையாக்கினான்.  அதன் பின் நாகா- ஸ்ரீ நகரத்து ஆணையாளராக இருந்தவன் பெரும் படையுடன் வந்து சேர்ந்து கொண்டான்.  ஹர்ஷ ராஜா அவனிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தான்.  பொறுக்கி எடுத்த வீரர்கள் கொண்ட படை அவனிடம்  இருந்தது.   சகோதர்கள் இருவரையும் அறிந்தவன். உச்சலன் அவனிடம் பயந்து கொண்டிருந்தான்.   ஆனால் அருகில் வந்து தன் தலை கவசத்தை கையில் வைத்துக் கொண்டு வணக்கம் செலுத்தியவனைக் கண்டு ஆறுதல் அடைந்தான்.   சமீபத்தில் தண்ட நாயகனின் செயல் தந்த எச்சரிக்கை.  விசாரிக்காமல் உடனே எவரையும் நம்ப விடாமல் தடுத்தது.  தற்சமயம் உங்கள் ஊரிலேயே இருங்கள். தேவையானல் அழைக்கிறேன் என்று மரியாதையாக சொல்லி அனுப்பி விட்டான். 1545

அரசன்  நதியின் கரைக்கு வந்தான்.  தாமரர்கள் பாலத்தில் நிறைந்திருந்தனர்.  இயல்பான கருத்த நிறத்தினர்.  தாவாக்னியில் – காட்டுத் தீயில் எரிந்த மரம் போல.  ஜனக சந்திரனுடைய வெண் கொற்றக் குடையால்  இருளில் தெரியும் வெள்ளி- கிரகம் போல தனித்து தெரிந்தான்.  அந்த பெரிய பாலம் தன் வசதிக்காக அரசன் ஹர்ஷன் கட்டியது. அதில் எதிரிகளும் வசதியாக நுழைந்து  விட்டனர். 

சாஹி வம்சத்து அரசகுமாரிகள் தீக்குளிக்க தயாராக மாளிகையின் மேல் மாடியில் கூடி விட்டனர். தோல்வி நிச்சயம் என்று நினைத்தனரா. ஊர் மக்கள் அலுத்து விட்டனர் போலும். சகோதர்களூக்குள் இந்த கோரமான யுத்தம். அஸ்வயுஜி- ஐப்பசி மாத விழாவை வேடிக்கை காண்பது போல (ஐப்பசி மாதம் சுகமான சீஷோஷ்ணம் கொண்ட பருவம். இந்த தேசத்தில் இந்த மாதம் கோலாகலமான பூஜைகளும், விழாக்களுமாக மகிழ்ச்சியாக கொண்டாடப் படும்.  மக்கள் கூடி இருந்து மகிழ்வர்.)  எந்த கட்சியிலும் சேராமல் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தனர்.  வெற்றி எந்த பக்கம் என்பது தெரியாமல்  நீட்டித்தது. அரசன் தன் மனைவிகளை பொறுத்திருக்கச் சொன்னான். அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அரசனுடைய பட்டத்து யானை அடிபட்டு விழுந்தது.  ஜனக சந்திரனின் சரமாரியான அம்புகள் துளைக்கவும் அந்த பெரிய  யானை அலறிக் கொண்டு தாறு மாறாக  ஓடி தன் பக்கத்து வீரர்களையே துவம்சம் செய்தது.  விதியால் தூண்டப்பட்டது போல  படை  கலைந்து நாலா பக்கமும்  ஓடியும், விழுந்தும் கலைந்தது.  கடல் கொந்தளித்து கலங்கியது போல ஆயிற்று.  குதிரையில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  இந்த எதிர்பாராத திருப்பம், தன் பக்கத்து வீரர்களாலேயே  ஓடும் வேகத்தில் தள்ளி விடப் பட்டு   சேனைத் தலைவர்களே விழுந்தனர்.  எதிரிகள் பாலத்தைக் கடந்து அருகில் வந்து விட்டனர்.  தானும் குதிரையை விட்டிறங்கி ஆயிரம் கதவுகளுடன் தான் கட்டிய அரண்மனை வசலிலேயே வந்து நின்றான் அரசன்.  இரவிலும் தன் ஆடம்பரமான வேஷ பூஷணங்களுடன் இருக்கும் அரசன், உண்ணும் சமயம் கூட விரல் மோதிரங்கள் பளபளக்கத் தான் இருப்பான்.  இதுவரை அவனை அண்டாத பயம், வேணிற்காலத்து வெய்யில் போல சுட்டது. கையிருந்து உறையுடன் வாள் நழுவியது. குதிரையின் கடிவாளத்தை முடிந்தவரை விடாமல் பிடித்திருந்த கைகள் சோர்ந்தன.  நரைத்தாலும் அடர்ந்து இருந்த சிகை காதுகளை உரசின. கரும் நாகம் ஊர்வது போல  வியர்வை பெருகி கழுத்தை நனைத்தன.   உதடுகளை நாக்கினால் ஈரமாக்கிக் கொண்டால்,  முகத்தில் படிந்திருந்த புழுதி நாக்கில் பட்டது.  பிரிய மனைவிகள ஏறெடுத்தும் பார்க்க இயலாமல்  பெண் போல தன் பிரஜைகள் முன் பெண் போல நிற்பதாக நினைத்து மறுகினான்.  மல்ல ராஜனுடைய மாளிகை, மற்றும் அடுத்து இருந்த மற்ற மாளிகைகள் ஜனக சந்திரனின் படை வீரர்களால் எரியூட்டப் பெற்றன.   ராஜதானி தீக்கிரையவதைக் கண்டு போஜ ராஜன் தோல்வி நிச்சயம் என்று உணர்ந்தான்.   எதிரிகளின் ஸூலங்கள் கோட்டை வாசலை துளைத்தன. தானும் குதிரையில்  ஏறி முன் பக்கத்து முற்றத்தில் இருந்து ஐந்து உடன் வந்த மெய்க் காப்பாளர்களுடன் வெளியேறினான்.  லோஹரா நோக்கி அந்த கூட்டம் சென்றது.  அவன் பாலத்தைக் கடந்து செல்லும் வரை கண்ணீர் மறைக்கப் பார்த்துக் கொண்டிருந்த அரசன், சில குதிரை வீர்களூடன் மாளிகை வாசலிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.  எரிந்த வீட்டில் கிடைத்தது ஆதாயம். அரசன் கண் எதிரிலேயே   தாமர போர் வீரர்கள்  மாளிகையில்  நுழைந்தனர்.  உள்ளே புகுந்து முடிந்தவரை அபகரித்தனர்.  முன் கண்டறியாத விலையுயர்ந்த  பொருட்கள், ஆசனங்கள், அரச உடைகள்  என்று அதிசயமாக பார்த்தனர்.    தேவதைகள் போல அலங்கரித்துக் கொண்டு உலவிய பணிப்பெண்கள்  வெற்றி பெற்ற படையினரின் வசம் ஆயினர்.   மாளிகையில் தூண்கள் சட சடவென முரியும் சத்தம், தீ பரவி வெப்பம் மிகுந்த தால், மேல் விதானங்கள்  வெண்மையாக இருந்தவை கருகின.  தன் ராஜ்ய ஸ்ரீ – தான் கவனமாக சேமித்த உயர் தர பொருட்களுடன் திருமகளே தன்னை விட்டு விலகிப் போவதை கண் கூடாக கண்டவன் போல அலறினான்.  ஒரு பழைய கவிதை நினைவுக்கு வர அதையே சொல்லி புலம்பினான். யாரும் அறிய மாட்டார்கள் என நினைத்து தன் அதிகாரம் தந்த மமதையால் தன் பிரஜைகளை அரசன் துன்புறுத்தினால், உயிரினங்கள் அறியாமல் போனாலும்   தீ என்ற தத்வம்  அறியும்.  அரசனின் உயிரை மட்டும் விட்டு அவன் குலம், செல்வம், இவைகளை அழித்து விடும்.

உச்சலன் தாமரர்கள் தொடர ராஜதானி தீக்கிரையாவதை பார்த்துக் கொண்டே வந்தான்.  அவனுடைய படை சேதமாகாமல் அப்படியே இருந்தது. 

தப்பிச் சென்று லோஹாரா வில் தஞ்சம் அடையலாம், அதுவும் நல்லதல்ல  கங்கை கரைக்கு போகலாம்,  அல்லது இருக்கும் சில வீர்களுடன் போரைத் தொடர்ந்து வீர மரணம் அடையலாம் என்று ஆளுக்கு ஒரு உபாயம் சொன்னார்கள். அரசனுக்கு தன் மகன் போஜனைக் காணாமல் உயிர் விடக் கூட மனமில்லை.  ராணிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தீக்குளித்து விட்டனர். பிரயாக ராஜா உண்மயான ராஜ விசுவாசி.  அரசனே நான் ஒருவன் இருக்கும் பொழுதே தப்பித்துச் செல்லுங்கள். என் காலமும் இதோ முடியப் போகிறது என்றான்.  ‘ கோபிக்காதே பிரயாகா, என் மகன் இல்லாமல் எனக்கு திசையே கண்ணுக்குத் தெரியவில்லையே, என்றான்.

சகோதரர்களான சில உறவினர்கள், அணுக்கமாக இருந்த நண்பர்களுடன்  ஐம்பது அரண்மனை காவலர்களுடன்  தப்பிச் செல்ல பாலத்தைக்  கடந்தவன் முடிவில் தாங்கள் ஐந்து பேர் மட்டுமே மிச்சம் என்பதைக் கண்டான்.  ஒரு சிலரை மகனைத் தேட அனுப்பி இருந்தான்.  கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மறைந்து விட்டனர்.

அரசனின் முந்தைய நடவடிக்கைகளை அறிந்தவர்கள், ஆங்காங்கு அறிந்த விவரங்களைச் சொல்லி செல்வம் பெற்றவர்கள் என்று உள் கட்ட அதிகாரிகளே எதிரிகளாக ஆயினர்.   போஜனுக்கு சரியான வழியைக் காட்டவில்லை. நம்பிக்கை துரோகம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த து.   பலர் ஒன்று சேர்ந்து குழலை ஊதினால் ஒரு ஓசையும் வராது என்று ஒரு பழமொழி.  அரசனின் ஆலோசகர்கள் ஆளுக்கு ஒரு விதமாக உபாயங்கள் சொன்னார்கள். 

எதிர்பாராமல் சில நன்மைகள் நினைத்தே பார்த்திராத இடங்களில் இருந்து வருவதை என்னவென்று அழைப்போம். அவனது பாக்யம் என்றா, முன் வினை பயன் என்றா,  விதி என்றா – அது தான் நடந்தது. .  கெடுதல் வந்தால் அவனது போதாத வேளை என்போம். நன்மை வந்தால் அதுவும் அவனது நல்ல காலம் என்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  நல்லதோ கெடுதலோ ஒருவனது வாழ்வில் திருப்பு முனையாக அமைவது.

குதிரை லாயத்தில் குதிரைகளை பேணும் சாதாரண ஊழியன், அரசன் மனதை படித்தவன் போல ஒரு உபாயத்தைச் சொல்ல ஓடி வந்தான். ‘உங்கள் பாட்டனார் செய்தது போல ஏகாங்க – என்று அழைக்கப் படும் மெய்க் காப்பாளர்கள் உங்களுடன் போர் முனைக்கு வருவார்கள். அவர்களுடன் முனைந்து போரிட்டு எதிரிகளை முறியடிக்கலாம். தற்சமயம் அவர்களிடம் இருப்பதும் மிகச் சிறிய படையே’  என்று சேனைத் தலைவர் சொல்லச் சொன்னார்.

அரசன் புத்துயிர் பெற்றவன் போல் ஆனான். விரைவில் தயாரானான்.  குதிரைகளில் எகாங்க வீரர்களும் வந்தனர். அக்ஷ படலம் என்ற இடம் -அவர்கள் தங்கியிருக்கும் பாசறை-  செல்வோம்..  அனேகமாக காலாட்படையே கொண்டுள்ள எதிரிகள், அவர்களை வெல்வோம்.  சிறு பறவைகளை கழுகு துரத்துவது போல துரத்துவோம் என்று முழக்கம் இட்டபடி அந்த படை புறப்பட்டது. நாடகம் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள், திடுமென மழை வந்தால் சிதறுவது போல இருந்ததாம்.  விதஸ்தா வை கைப்பற்றிவிட்ட எதிரிகள். 

சேயராஜா என்பவனின் புதல்வர்களும் வந்து சேர்ந்து கொண்டனர். தோட்ட வேலை செய்பவர்களோ, எளிய கிராம மக்களோ யாரானாலும் வாருங்கள் என்று கூவி அழைத்துக் கொண்டு, மகனுடைய விலையுயர்ந்த நகைகளை செலவுக்கு பயன் படுத்திக் கொள்ள அரசன் கொடுத்தான்.  உத்சாகமாக புறப்பட்டனர்.  அரசன் தன் பொலிவை திரும்ப அடைந்து விட்டவன் போல இருந்தான்.

அரசன் இதற்கு முன் செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த போது விலகிச் சென்ற போர் வீரர்கள்.  கண்டும் காணாதது போல சென்ற முந்தைய மந்திரிகள்.  வாசலோடு சென்றவனை விசாரிக்க கூட முன் வராத ஊர் பிரமுகர்கள். தங்கள் பிரச்னை என்றால் உண்ணாவிரதம் இருக்கும் பொது மக்கள், எவருமே அரசன் அருகில் வரக் கூட விரும்பவில்லை என்ற உண்மை அரசன் மனதை சுட்டது.

கபில என்ற மந்திரியை சிறிதளவு எதிர் பார்த்தான். அவன் உதவக் கூடும் என்று.  லோஹாரா  கோட்டையில் இருந்தவர்கள். அவன் மனைவி வந்து ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் படகில் செல்லுங்கள் என்றாள்.  அவன் மறுத்து விட்டான். அந்த மந்திரியின் புதல்வர்கள் எங்கிருந்தோ எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.  வட்டிக்கு கடன் கொடுத்தவன் வாசல் கதவை தட்டினால் வீட்டார் எதிரிலேயே வர மாட்டார்கள், கதவை பாதி திறந்து வீட்டு பெண்மணி பதில் சொல்லி அனுப்புவாள் என்று கேட்டிருந்தான்,. தான் அந்த நிலைக்கு வந்து விட்டோமா என்று வருந்தியது நினைவுக்கு     வந்தது.   என் தவறு என்று இப்பொழுது  உணர்ந்தான்.  இந்த மந்திரிகளின் சுய நலம் – நிலைமை இந்த அளவு விபரீதமாக போகும் வரை அவனிடம் உண்மையை மறைத்து விட்டது. அடி மட்ட நிலைக்கு வந்த பின் தான் மனிதர்களின் தரா தரம் புரிகிறது.  உலகில் மற்றவர்களும் சுக துக்கங்கள் அனுபவிப்பவர்களே, புத்தியும், திறமையும் உடையவர்களே, உடல் உழைப்பும், வருத்தமும் அனைவருக்கும் பொதுவே, இறைவன் அனைவரையும் கை கால்களோடு, அறிவுடன் தான் படைத்திருக்கிறான் என்று பல விதமான சிந்தனைகள் ஆட்கொண்டன.  முப்பத்தாறு உயர் குலத்தவர்  என்று சொல்லிக் கொள்பவர் எந்த விதத்தில் உயர்வு.  மற்றவர் வசதியாக வாழ்ந்தால் பொறுக்க மாட்டார்கள். பேராசையும், பொறாமையும் அவர்களை கீழே தள்ளி வேடிக்கை பார்க்கவே விழைந்தனர்.  அனந்தபாலன் முதலான ராஜ குமாரர்கள் என்னை தவிர்த்தனர்.   ஒன்றாக கிளம்பிய பின்,ஒவ்வொரு குதிரையாக விலகி, அதன் மேல் இருந்தவனை தள்ளி அழைத்துச் சென்ற காட்சி மனதில் வரை படமாக ஓடியது. உடன் பிறந்தவன், சேனைத் தலைவன், என்று அருகாமையில் வந்து கொண்டிருந்தவர்களே மெள்ள மெள்ள சொல்லாமல் விலகி விட்டனர்.  குதிரை லாயத்தில் குதிரைகளை பராமரித்த  ஸூதன் எனப்படும் பணியாள் மட்டுமே உடன் வந்தான்.  அவனே கடைசி வரை உண்மையாக நண்பனாக இருந்தான். ஜேலகன் என்ற சமையல்காரன், முக்தன் என்ற அவனுடைய உதவியாளன் இருவரும் பின்னால் வந்து இணைந்து கொண்டனர். 

ஜோஹிலா மடாலயம் அருகில் வந்தவன், குதிரையிலிருந்து இறங்கினான்.  இங்கு என் மாமனார் வசிக்கிறார். அவரை பார்த்து  விட்டு வருகிறேன், நீங்களும் இரவு தங்க ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்   என்று சொல்லி உடன் வந்தவர்களை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தான். 

சில நாட்களுக்குப் பின் சில படகு ஓட்டுபவர்களை அழைத்து விதஸ்தாவை தாண்டி ஜய புரம் என்ற இடத்தில் கொண்டு விடச் சொன்னான்.  முன் ஒரு சமயம் பீம தேவ ஆலயத்தில் நுழையும் முன் தன்னை அரச மரியாதையுடன் பீம தேவனின்  சன்னிதிக்கு அழைத்துச் செல்வர் என்று காத்திருந்தான்.  அந்த உச்சல பீமதேவ ஆலய தலைவர், அரசன் வந்தால் அழைத்துச் செல்கிறேன், நான் அரசு பணியாளன் அல்ல, பீமதேவரின் ஆலய சிப்பந்தி என்று முன்னால் வந்து வரவேற்க மறுத்து விட்டான்.  இந்த நினைவு வந்ததும்,  படகைக் கொண்டுவந்த படகோட்டியிடம்  தேவையில்லை என்று சொல்லி அனுப்பி விட்டான்.  பாம்பைக் கண்டாலே போதும், அதன் அருகில் செல்ல தானே உள்ளுணர்வு தடுத்து விடுவது போல உயிருக்கு ஆபத்து  என்றாலும் உள்ளுணர்வு தானே அவனை காத்து விடுகிறது. 1629

முன் ஒரு சமயம் தன்னிடம் அடைக்கலம் கேட்ட தாமரன், நீலாஸ்வ என்ற தேசத்து பிம்பா என்பவன்  அவன் நினைவு வந்தது. மற்றவர்களைப் போல நய வஞ்சகன்  அல்ல. தன் மானம் உள்ளவன்.  உண்மையான மனைவி போல் என்று அரசனுக்கு தோன்றியது. ஏனோ அவனை கண்டு கொள்ளவில்லை.

கண்ணெதிரில் விதஸ்தா நதியில் நீர் மட்டம் உயர்ந்தது.  கரு மேகம் சூழ்ந்து  வரப் போகும் பெரு மழையை எச்சரிப்பது போல.  இதற்கு மேல் தாங்காது இந்த துரோகிகளின் அட்டூழியம் என்று இயற்கையே நினத்ததோ,  பூமியை நீரால் கழுவி சுத்தம் செய்ய  தீர்மானித்து விட்டதோ, எனும் படி இருந்தது.  எவ்வளவு தான் தாங்குவான். கொட்டும் மழை, வெள்ளம், மனித நடமாட்டமே இல்லாத இடம், மழையினால் இருள் பரவியது போன்ற நிலை, உதவவும் எவருமில்லை, எதிரிகள் கண்டால் அதை விட வேறு விணையே வேண்டாம், யாரை நோவது. தேவையில்லாத நினைவுகள் – முன் அறியாத பெயர்கள் மனதில் வந்து மறைந்தன.   

முன் ஒரு சமயம் சோமானந்தா என்பவன் அவனே ஒரு நய வஞ்சகனாக இருந்தவன் தான், விதி வசத்தால் தனியாக காட்டில் சுற்றிக் கோண்டிருந்தான். மயான பூமி என்பதையறியாமல்  அருகில் மரங்கள் அடர்ந்து இருந்த இடத்தில் நுழைந்தான். என்ன ஆனான், நினைவு இல்லை.

சற்று தூரத்தில் ஒரு குடிசை ஒரு துறவி குணா என்பவன் அங்கு இருந்தான். விரகபுஜங்கீ என்று தன் பெயரைச் சொன்னாள்.  இயற்பெயர் பிச்சா -भिश्चा- என்றாள்.  தான் ஏதோ சிறு வியாபாரி என்றாள்.  அதன் அருகில் தான் ப்ரதாப கௌரீச கோவில் இருக்கிறது என்று சொன்னாள்.   அங்கு செல்ல கிளம்பினர்.  கொட்டும் மழையில் மழை தாரைகளுக்கு இடையில் வழி கண்டு கொண்டு முக்தாவை தோளைப் பற்றிக் கொண்டு,  அரசன்,   அவன் தோளை பற்றிக் கொண்டபடி ப்ரயாககா,  என்று  வழியை கண்டு கொண்டு மூவரும் சென்றனர்.   வழக்கமான தலைப்பாகையும் இல்லாமல், எப்படியோ தத்தளித்து அந்த குடிசை வரை வந்து விட்டனர். 

அந்த சமயம் அரசன் கந்தர்பனை நினைத்தான்.  வஞ்சகம் செய்த மந்திரிகள் சொல்லை க் கேட்டு கந்தர்பனை துரத்தியது நினைவு வந்தது.  உத்பலன் ருத்ர தேவனை நினைத்தது போல. முக்தா வாசலில் இருந்த கதவு மேல் ஏறி உட்பக்கம் இறங்கி தாழ்பாளைத் திறந்தான்.  உள்ளே யாரும் இருந்த தாகத் தெரியவில்லை.  இருட்டில் எதிலோ இடித்து காலில் உதிரம் கசிந்தது.  இனி என்ன கெடுதல் வர இருக்கிறது என்று நினைத்தபடி மேலும் நடந்தான். இடுப்பில் தொப்பலாக நனைந்த ஆடையும் நடக்கத் தடையாக இருக்கவும் மெள்ள நின்று நின்றுதான் நடக்க முடிந்தது.  ஒரு பள்ளத்தில்  கால் வைத்து விட்டது போல இருக்கவும் தயங்கி நின்றான். குடிசையின் கதவும் தாழ்பாள் போட்டு மூடியிருந்தது.  இரவு, இருளில் நிற்க மனம் நடுங்கியது. வானம் இடிந்து விழுந்து விடும் போல இடியும் மின்னலும். தரை சேறாகி வழுக்குகிறது. வட திசையை நோக்கினான். ஏன் எனக்கு தூக்கம் வரவில்லை என்று யோசித்தான்.

யார் நான்? எது என்னை மூழ்கடித்து தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது? எங்கு நிற்கிறேன்? யார் என்னை வழி நடத்துகிறான்? என்ன செய்யப் போகிறேன்?  பிச்சை எடுத்து உண்ணும் ஒரு துறவியின் வாயிலில் எதற்கு வந்திருக்கிறேன்? இப்படி அலையலையாக எண்ணங்கள் தாக்க உடல் நடுங்கியது.  என்றோ ஒரு சமயம்  அரசனாக இருந்தேன். என் ராஜ்யம் கை விட்டுப் போயிற்று. மனைவிகள் கண் எதிரில் தீக்குளித்தனர்.  மகன் இருக்கும் இடமே தெரியவில்லை. என்னிடம் எந்த பொருளும் இல்லை. நண்பன் என்று இருந்தவர்களும் உடன் இல்லை.   தன்னைப் போல  அரசனாக இருந்து ஆண்டியான சிலரை அறிவான். 1648

இங்கு, போஜன் தன்னுடன் வந்த இரண்டு மூன்று நபர்களுடன், போய் கொண்டே இருந்தான். ஹஸ்திகர்ணம் என்ற இடம் வந்ததும் நின்றனர்.  நகரத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டிருந்தனர். நம்பிக்கையை இழக்கவில்லை.  ஒரு வாரத்துக்குள் பழகி விட்டது. இந்திரனே எதிர்த்தாலும் நான் எனக்குரிய  ராஜ்யத்தைத் திரும்பப் பெறுவேன் என்று உள் மனதின் குரல் சொல்லியது.  

பிறவியிலேயே அரசனுக்குரிய குணங்கள் வந்து விட்டன. வளர்க்கப்பட்தும் நாளை அரசனாக ஆட்சி கட்டிலில் அமர வேண்டியவன் என்று சொல்லியே வளர்த்தனர். நடுவில் கர்ம- வினைப்பயன் காற்றாக வந்து ஏதோ ஒரு இடர் துரத்தி அடித்தாலும் அதை மூடன் தான் விதி என்பான். முயன்று பயின்றவை, அதனால் பெற்ற உடல் பலமும், மனதின்  ஆற்றலும்   என்னவாயிற்று? கற்ற கல்வியினால்  என்ன பயன்? .

தாய்மார்கள் அவனுக்காக ஒரு பணியாளனிடம் உணவுப் பொருள்களை கொடுத்தனுப்பி இருந்தனர்.  அவன் ரங்கவாடம் என்ற மடத்தின் உள்ளே உங்களுக்காக காத்திருக்கிறான் என்று செய்தியும் கிடைத்தது. அந்த இடத்தை தேடிக் கண்டு கொண்டனர்.   மனித நடமாட்டமே இல்லாமல் அந்த மடம்  ஊருக்கு வெளீயே ஒதுங்கி இருக்கவும் தயங்கினர்.  அதற்குள் அவனே எதிர் கொண்டு வந்து அழைத்துச் சென்றான்.  உள்ளே நுழைந்ததும் சில துரோகிகள் ஒளிந்திருந்து தாக்கினர். அதன் பின் அரச குமாரன் செய்தது அத்புதமாக இருந்தது.   சற்று முன் மனதில் தோன்றிய வைராக்யம், அரச குல ரத்தம், சிங்கம் போல அவர்கள் மேல் பாய்ந்தான். அதே போல சம்ஹாரம் – ஒரே அடியில் வீழ்த்தினான்.  நம்பியவனை ஏமாற்றவா செய்கிறாய்?   நம்பிக்கைத் துரோகம் என்பதையே வீழ்த்துவது போன்ற வெறியுடன்  அங்கிருந்தவர்களை உயிர் இழந்த பின் தான் விட்டான்.  அதில் ஒருவன் மாமன் மகன் பத்மகன், மற்றவன்  கேலா  இதற்கு முன் போரில் பல வீரச் செயல்களைச் செய்தவன்.  போஜனின் காலில் ஆயுத காயங்களுக்கு மருந்தாக தடவும் ஒரு குழம்பு அப்பியது. அதனால் பாதிக்கப் பட்டவனாக அதே இடத்தில் வீர சயணத்தை அடைந்தான்.

அதே இரவு, உஸ்சலன் ஸுர்யமதியை (ஹர்ஷனின் தாய்)  அடக்கம் செய்திருந்த மயானத்தின் பகுதிக்குச் சென்றான்.   லவனோத்சவ என்ற இடத்தில் கடுமையான போர் – அதில் முழுமையாக போரிட்டு களைத்தவனாக அவனும் அவன் சகோதரனுமாக மிகவும் களைத்திருந்தனர்.  போஜனும் இல்லை, ஹர்ஷன் மட்டுமே உயிருடன் இருக்கிறான் என்ற செய்தி அவர்களை எட்டியிருந்தது.   மனதில் குத்தியிருந்த முள்ளை எடுத்துவிட்ட நிம்மதி, ராஜ்யம் கைக்கெட்டும் தூரம் தான் என்ற     மகிழ்ச்சி வந்தது.

விடிந்தது.  முக்தா வெளியில் சென்று ஒரு மருத்துவனை அழைத்து வந்தான்.  அவன் மருந்திட்டு அரசனின் கால் காயத்துக்கு கட்டுப் போட்டு விட்டான். குடிசையின்  வாசலை திறந்தான்.  உள்ளே குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து விட்டு அரசனை அங்கிருந்த புல் முதலியவைகளைக் கொண்டு படுக்கை தயாரித்து அமரச் செய்தான்.  வந்த மருத்துவன், அவன் தான் அந்த குடிசையின் உரிமையாளனான துறவி- . நோயாளிக்கு மன ஆறுதல் தருவதாக பேசும் பேச்சுக்களை பேசினான்.  பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான்.  ப்ரயாகன் தன் ஆடைகளில் ஒன்றை கொடுத்து அதை விற்று முடிந்தவரை உணவு வாங்கி வா என்று சொல்லி அனுப்பினான்.  அவர்கள் மூவரும் முழுமையாக நம்பவும் இல்லை. உணவு தான் வாங்கி வருவானோ, வேறு ஏதாவது உபத்ரவம் தான் கொண்டு வருவானோ என்றே நம்பிக்கையில்லாமலே வேறு வழியின்றி காத்திருந்தனர்.  பேச்சும், செயலும் பழக்கமில்லாத இடமும் பயத்தையே அளித்தது. துறவி தான், ஆனால் காரணத் துறவி. தவம் செய்பவன் இல்லை. யாருடைய உளவாளியோ.நெடு நேரம் சென்ற பின், பிற்பகல் ஒரு பெண் துறவியின் தலையில் வைத்து உணவு பொருட்களுடன் அந்த துறவி-மருத்துவன்  தன் தோளிலும் ஒரு மூட்டையுடன் வந்தான். 

அரசனாக இருந்த ஹர்ஷனுக்கு வெறுப்பாக இருந்தது. முன் கண்டறியாதவள் தான் என்றாலும் பெண்ணின் முன் தலை கவிழ்ந்து நிற்க வெட்கம் பிடுங்கித் தின்றது.  வந்த உணவை பிரயாக இலையில் வைத்து கையில் கொடுத்தான். அவன் திருப்திக்காக  கையால் தொட்டான்.  வாயில் போடத் தோன்றவில்லை.  வெளியில் பிரயாகனும் முக்தனுமாக அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர். அவளோ உரக்க நாடக பாணியில் போஜ ராஜன் கொல்லப் பட்டான்  என்ற செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கிராமத்து பெண் ஏதோ கேட்டதைச் சொல்கிறாள் ,நம்ப வேண்டாம் என்று மற்ற இருவரும் சமாதானம் செய்தாலும் அரசனுக்கு தன் மனது அது உண்மையாகவே இருக்கும் என்று உணர்வதாக  சொல்லி அழுதான்.  எதிரிகள் பலவிதமாக ஏசிய பொழுது கூட கலங்காதவன், எந்த சொல்லையும் ஆராயாமல் ஏற்காதவன்,  பலவிதமான விமரிசனங்களைக் கேட்டும் மனம் மாறாதவன், இந்த கிராமத்து பெண் துறவி சொல்வதை ஏன் கேட்டான்.

தந்தையால் இளம் வயதில் அலட்சியமாக  நடத்தப்பட்டதை நினைத்தான். அதே தானும் தன் மகனையும் அரச குமாரனுக்கான மன உறுதி வேண்டும் என்று சுதந்திரமாக இருக்க விடாமல் வளர்த்தோமோ என்று வருந்தினான். அவன் போரிட்டு தான் வீரனாக எதிரியை அழித்து விட்டுத் தான் மடிந்திருக்கிறான்.  தன் கைக்குழந்தையை யாரோ துன்புறுத்தியது போல வருந்தி அழுதான்.

முத்து மாலைகளும் கங்கணங்களும் அலங்கரிக்க இருந்த சிறுவனாக மகனை நினைத்தான். இளம் வயதினன், அவன் போக,நான் முதியவன் ஏன் இருக்க வேண்டும் என்ற பச்சாதாபம் எழுந்தது.  கோபமும், தாபமும் வாட்ட அன்று இரவு தூங்காமல் தவித்தான்.   விடிந்த பின், காலையிலேயே கிளம்பலாம் அருகில் பகவான் ஆசிரம் உள்ளது அங்கு போகலாம் என்று  பிரயாகா சொன்னான். இரவு முழுவதும் சக்ரவாக பறவைகளுடன் தானும் பிரிவுத் துயரை அனுபவித்தவன் போல இருந்தான்.  பசியினாலும் தாகத்தாலும் தவிக்கிறான் என்று அந்த துறவி, உனவு வகைகளை வாங்கி வரச் சொல்லி உடன் வந்த பெண்னை அனுப்பினான். அவளும் இரு பாத்திரங்களில்  அன்னமும், அதனுடன் சில காய்கறிகளால் செய்த கூட்டு  என்றும் வாங்கி வந்தாள்.  அவளே தயங்கியபடி, ‘ஐயா  யாரோ ஒருவர், பூஜைகள் செய்து விட்டு எளியவர்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து வாங்கி வந்தேன். நீங்கள் உண்பீர்களா’ என்றாள்.  பிரயாகன் பெருமூச்சு விட்டான். அரச குமாரன் இறந்து கிடக்கிறான்.  மக்கள் யாகம், பூஜை என்று தங்கள் வேலையே கவனமாக இருக்கிறார்கள். அவளைப் பார்த்து’ பெண்ணே ஏன் இப்படி கேட்கிறாய். அறியாதவள் போல பேசுகிறாய்.   ஒருவன் உயிரை விட்டால் அவன் காலம் ஆயிற்று போனான்.  மற்றவன்  என்னதான் வருந்தினாலும்   உடன் போக முடியுமா என்ன?  மனிதனுக்கு தன் சுகம் தான் பெரிது. யாரும் எவருக்காகவும் தன் சுகத்தை கை விடத் தயாராக இல்லை’ 1684

உலகின் கண்ணின் ஒளியாக நாள் முழுவதும் பிரயாணம் செய்து விட்டு ஸூரியன் மறைந்தால் இருள் ஸூழ்கிறதே என்று வருத்தமா வருகிறது.  இரவு தூங்கவும், சுகமாக இருக்கவும் தானே.  உலகம் தன் போக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறது. எனக்கு துக்கம் என்று ஒருவன் அமர்ந்து  இருந்தால் உலகமே ஸ்தம்பித்து நிற்பது இல்லை அல்லவா, அதனால் வருந்தாதே. இது தான் உலகம்’ என்று சமாதானமாகச் சொன்னான். அரசனும் ‘நானே உயிருடன் இருக்கிறேனே, என் மகன் வாழ வேண்டிய வயதில் கொல்லப் பட்டான் என்று கேட்டும், திடமாக நிற்கிறேன் பார்.  மற்றவர்களை ஏன் நிந்திக்கப் போகிறேன். இருந்தாலும் பிரயகன், துறவியிடம் உன்னால் முடியுமானால் புதிதாக சமைத்த உணவையே அரசனுக்கு கொடு என்று வேண்டிக் கொண்டான்.  மனோரதன் என்ற ஒரு சகா- இந்த விவரங்களைக் கேட்டவன் வேறு விதமாக சிந்தித்தான். அரசன், என்னதான் தற்சமயம் இப்படி துக்கத்தில் இருக்கிறான் என்றாலும் இவனை அண்டினால் நன்மை பெறுவோம் என்று எண்ணினான் போலும்.  இவனை இவன் உறவினர்களுக்கு காட்டிக் கொடுத்தாலும் ஏதோ சிறிதளவாவது பரிசாக பெறுவோம் என எண்ணினான்.  அவனுடைய பேராசை, ஒருவனிடம் சொல்ல, அவன் மற்றவனிடம் என்று செய்தி இல்லாராஜன் என்பவன் காதுக்கு எட்டியது. சிலர் ஒரு செல்வந்தனான வியாபாரி தான் இல்லாராஜனை சந்தித்து சொன்னான் என்பர்.  துறவியோ அவன் நண்பனோ, அரச சபை வரைக்கும் செல்வது முடியாது என்பதும் ஒரு காரணம். இல்லாராஜன் உச்சலனுக்கு தெரிவித்தவுடன், நீயே பொறுப்பு ஏற்று அரசனை சிறை பிடி என்று உத்தரவு பெற்றான்.   குடிசையின் சிறு கதவு உடைக்கப் படும் சத்தம் கேட்டு யதேச்சையாக வெளியே பார்த்த அரசன் புரிந்து கொண்டான்.  முக்தா, கதவைத் திற என்று சொல்லி விட்டு, கையில் ஒரு குறுவாளை எடுத்துக் கொண்டு கதவின் பின் மறைந்து           நின் றான்.   மாமிசம் தின்னும் வேடனுடன் இருந்தால் அவனுடன் வேட்டைக்கும் போகத்தான் வேண்டும்  என்றான்.  ப்ரயாகன் வற்புறுத்தி ஏதோ சிறிதளவு சாப்பிட வைத்தான். அதுவே போதுமாக இருந்தது. அரசன் தன் உறுதியான மனதையும், உடல் பலத்தையும் பெற.  உதயமாகி விட்டதை, கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் பறவை போல பார்த்தான்.  அந்த சிறிய குடிசையை ஸூழ்ந்து  ஆயுதம் தாங்கிய வீரர்கள் தென்பட்டனர்.  துறவி வேடத்தில் இருந்தவனும் அயோக்யன், தானே கதவை திறந்து விடுகிறான் என்பது புரிந்தது.  ஏஹி, வா என்ற வாசலில் ஆயுதம் தாங்கிய வீரர்களை அழைப்பதும் புரிந்தது.   மெள்ள வாளும்,வில்லும் கவசமும் கொண்ட வீரன் எட்டிப் பார்த்தான்.  சிறிய வாயில், அதில்  தலை குனிந்து உள்ளே வந்தவன்  எதிலோ இடறி தானே விழுந்தான். அரசன் அவனை அடிக்கவில்லை. மல்லன் போல இருந்தவன்,  விழுந்தவனை அடிப்பது சரியல்ல,  முக்தா, நீ தப்பித்துச் செல் என்ற அவனையும் அனுப்பி விட்டு, விழுந்தவன் அருகில் நின்றான். மேற் கூரையை  விலக்கிக் கொண்டு உள்ளே வந்தவன் அசந்து நின்று விட்டான். அரசன் கையில் வாள் இருப்பதே அவனை அச்சுறுத்தியது போலும். ரூரு என்ற சிறு விலங்கு அதைக் கொல்ல பலசாலியாக ஒருவன் வேண்டுமா என்ன?  போர்க் களம் தான் – சிம்ஹ நாதம் இல்லை, பேரி வாத்யம் முழங்கவில்லை,  ஆவேசமான பேச்சுகள் இல்லை,  ஆயுதங்கள் உரசும் ஓசையும் இல்லை,  அரசனின் கடைசி போர் முனை.   பாத்திரத்தில் அகப்பட்டுக் கொண்ட எலியை எட்டிப் பார்க்கும் பூணை போல தாமர வீரர்கள் எட்டிப் பார்த்தனர்.   ஆயுதங்களுடன் ஓசையின்றி குடிசைக்குள் நுழைந்தவர்கள், கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் பிரயாகனை  கொல்வதைப் பார்த்தனர்.  அடுத்து வந்தவன் அரசனின் குறு வாளால் தாக்கப்பட்டான். மேலும் உள்ளே வந்த  ஒருவன்,   அரசன் கை  வாளையே பிடுங்கி எடுத்துக் கொண்டு அவன் மார்பில் பாய்ச்சினான். மரம் வெட்டப்பட்டு விழுவது போல விழுந்த ஹர்ஷ  ராஜன்  மஹேஸ்வரா என்று அலறியபடி உயிரிழந்தான். ஆயினும் அந்த சிறிய குடிலில்,  வாழ் நாளில் சக்கிரவர்த்தியாக ஆண்ட அரசனின் உடல் போரில் அடிபட்டு விழுந்த வீரனின்  மரணமாகவே முடிந்தது.  தகுதி இருந்தும் ஓடி ஒளிய நேரிட்ட போதிலும் தன் இயல்பான வீரமும்,  மன உறுதியுமாக அரசனாகவே மடிந்தான்.   அவனைப் போல வெற்றி வீரனாக வாழ்ந்தவனும் இல்லை,  அவனைப் போல உடன் இருந்து குழி பறித்த  மந்திரிகளால், மற்ற அதிகாரிகளால் வீழ்ந்தவனும்  இல்லை. ஒருவனாக போரிட்டு, தலை வணங்காமலே கடைசி மூச்சு வரை எதிரியை எதிர்த்து  போரிட்டவனாக உயிர் துறந்தான்.  அவனை குற்றம் சொல்ல முடியாது.  தவறான வழி காட்டிய மந்திரிகள், சந்தர்பங்களை  தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசனிடம் சொல்லாமல் மறைத்த உண்மை விவரங்கள், உதவ வேண்டிய சமயத்தில் நழுவிய சேனை வீரர்கள்  இவர்களே தண்டனைக் குரியவர்கள். நிந்திக்கப் பட வேண்டியவர்கள்.

எழுபத்து ஏழாவது ஆண்டு, பாத்ர பத மாதம், வளர் பிறை பஞ்சமி திதியில், தன் வயது  நாற்பத்து இரண்டாவது எட்டு மாதம் ஆன நிலையில் உயிரை விட்டான். 

துரியோதன ராஜா போலவே தன் வம்சத்தினரால் எதிர்க்கப் பட்டவன்.  அவன் பிறந்த குலமே அழியக் காரணமாக ஆகி விட்டான்.  அவன் பிறந்த வேளை என்பர் சிலர்.    கர்கடக ராசியில், அங்காரகனும்,    சனியும் ஐந்தாவது இடத்திலும்,  புதனும்   குருவும், ஆறாம் இடத்திலும், சுக்ரனும், ஸூரியனும் ஏழாம் இடத்திலும்,  சந்திரன் பத்தாவது  இடத்திலும்  இருந்ததாக   அவனது பிறந்த சமயம் கணித்த ஜாதகம் தெரிவிக்கிறது.  

तस्यास्ताम् क्ष्मार्कजौ  जीवबुधौ शुक्रोष्णगू शशी – तनयाजामित्रखेषु कर्कटक जन्मन: || चन्द्र  धैध्येज्यपापेषु स्वमाधामजगेषु यत-  आहु: सुसंहिताकारा: कौरवादीन् कुलान्तकान् ||  – கௌரவ குலத்தை அழித்தவனின் – துரியோதனின் ஜாதகம் போலவே அமைந்த ஜாதகம்.

பிரஜைகள் கூடவா நன்றி மறப்பார்கள் என்பது போல மழை திடுமென கொட்டலாயிற்று.  தங்கள் அரசன் என்ற மரியாதையோ, அவன் மூலம் பல நன்மைகளைப் பெற்ற நாட்டு மக்களுக்கு அவனுடைய அந்திம கிரியைகளைச் செய்யக் கூடவா தெரியவில்லை.  கடல் பொங்குவது போல மழை நீர் பெருகி பூமியே நடுங்கியது.  சற்று முன் மேகமே இல்லாமல் இருந்த வானம், எப்படி இந்த அளவு பெருமழை எங்கிருந்து வந்தது.   வரப்போகும் பெரும் அழிவைக் குறிப்பதாக அறிஞர்கள் நம்பினர்.  அரசனை தலையை மரியாதையுடன் பிரஜைகள் அதற்கான இறுதி மரியாதைகளுடன் நீர்க் கடங்களை செய்யாவிட்டால், இயற்கையின் விபரீதங்கள் தொடரும் என்பது அனுபவம் தந்த பாடம் என்றனர்.  (யுதிஷ்டிரன் காலத்திலும் இந்த நம்பிக்கை இருந்து துரியோதனன் அவன் தம்பிகள் அனைவருக்கும் நீர் கடங்களை செய்தனராம்)  காஸ்மீரத்தில் இயற்கையின் சீற்றம் அடிக்கடி நிகழ்வது தான் என்றாலும்,  அதன் தாக்கம் அரசர்களுடன் அவர்கள் வாழ்வு தாழ்வுகளை நிச்சயிப்பதாகவும்  நம்பினர்.  இது ஒரு அபி சாபம் என்றும் இதன் தாக்கம் பல காலம் நீடிக்கும் என்றும் நம்பினர்.  அந்த தேசத்தில் சுலபமாக தெய்வ சிலைகளை உடைத்து பங்கப் படுத்தினர். அரசனையும் அதே போல தலை தனியாக உடல் வேறாக ஆக்கியதை பொறுக்க மாட்டாமல் இந்த பெரு மழையும் வெள்ளமும் நாட்டை சேதப் படுத்தி விட்டது.

உச்சலனே அதை விரும்பவில்லை. உடல் வேறாக தலை வேறாக தன்னிடம் கொண்டுவந்த பொழுது கண்ணீரால் மரியாதை செலுத்தினான்.    திக்- இது ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் சொல். திக் கஷ்டம்,  திருடனைப் போல தண்டிக்கப் பட்டான் என்பது அவனுக்கே அவமானமாக இருந்தது.  அவன் ஆணை கிடைக்காமல் அபர காரியங்கள் செய்ய தயங்கினர்.  வம்சத்தினர் எவருமில்லாமல், உடன் இருந்த அரசு அதிகாரிகளோ, வேலையாட்களோ கூட இல்லாமல்,  கௌரகன் என்பவன் சமையறையில் வேலை செய்தவன், கண்ணீர் மலக அரச மரியாதைகள் எதுவும் இன்றி அபர காரியங்களைச் செய்தான். ஹர்ஷனுடைய ஆட்சியும், செயல்களும் பல காலம் மக்களிடையே பேசப்பட்டு வந்தன.  வீரன், பல நல்ல செயல்களைச் செய்தவன்.   ராமாயண, மகா பாரத நாயகர்களுக்கு இணையாக ஹர்ஷனின் சரித்திரமும் பிரசித்தி அடைந்தது.   செல்வம் மின்னல் போல. விதி என்ற மேகத்தில் உதிக்கும் – அதே போல வேகமாக மறையும். அது இருக்கும் வரை மனிதன் கர்வமும், போகத்தில் அளவுக்கு மீறிய ஈடுபாடும் கொள்வதும்  இயல்பே. புத்தியினால் தன்னை நடு நிலைமையில் வைத்துக் கொள்ளாதவரை வீழ்ச்சியும் அதே வேகத்தில் நிகழ்வதை எப்படி தடுக்க முடியும்.

ஏராளமான மனைவிகள், ஒருவள் கூட கண்ணீர் விடவில்லை.  அரண்மனை முழுவதும் பணியில்  இருந்து அரசனிடம் பல வசதிகளையும் நன்மைகளையும் பெற்றவர்கள், யாரும் பணியிலிருந்து விலகவும் இல்லை, விரக்தி அடைந்து யாத்திரை செல்லவும் இல்லை.  தன் சுகமே பெரிது என்று இருந்த மந்திரி வர்கங்கள், என்ன நினைத்தனரோ. தங்களுக்கான வீடுகள், வாகனங்கள் என்று குவித்துக் கொண்டவர்கள்  சில நிமிடங்களாவது நினைத்தார்களோ இல்லையோ.   கடைசியில் தங்கள் சுகம் தான், யாருக்கும் எவரிடமும் பரிவோ, அன்போ இருப்பதில்லை போலும். தனக்கு ஆதாயம் என்றால் ஒட்டுதலும், அது கிடைத்தபின் கண் காணாமல் போவதோடு  மனதிலிருந்து கூட விலக்கி விடுவர் போலும். 

ஆதியில் அறியாத வயதிலும் எதுவும் நினைவில்லை. முதுமையிலும் மற்றவர்கள் நினைவில் நிற்பதில்லை.  நடுவில் வாழ்ந்த காலத்தில் அவனுடைய செயல்களே சுகமோ, துக்கமோ, வருத்தமோ, மகிழ்ச்சியோ, உடன் இருப்பவர்களூம் பகிர்ந்து கொள்வர்.  நாடகத்தில் நடிப்பவனும் அதே தானே செய்கிறான்.  மேடையில் இருக்கும் வரை அவன் மகிழ்ந்தால் மகிழும், அவன் அழிந்தால் உடன் வருந்தும் பார்வையாளர்கள் போலத் தான் உறவினரும் நட்புடன் அருகில் இருப்பவர்களும். நாடம் முடிந்தவுடன் திரைக்குப் பின் அந்த நடிகனை  யார் அறிவர்.  அவன் தொழிலோ, குடும்பமோ பொருட்டல்ல.

சாதவாகன குலத்தை வாழ்வித்த திருமகள், உதயராஜ குலத்தை விட்டு விலகி  காந்தி ராஜனிடம் வந்தாள்.  மேரு மலையில் உற்பத்தியாகி இமய மலையின் சரிவுகளில் பிரவகித்து, ஓடி வந்த கங்கையைப் போல தெய்வ சங்கல்பம்  அதிலேயே சங்கமம்  ஆகி விட்டாள்.   

ஒரு சகாப்தம் முடிந்தது.  

(இது வரை ஸ்ரீ காஸ்மீர தேசத்து மகா மந்திரியான சம்பக  ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் ஏழாம்   பாகம்- ஏழாவது  அலை நிறைவுறுகிறது

உதய ராஜனின் துவங்கிய  அரச  வம்சத்தில், ஏழு, எட்டு,ஒன்பது வரையிலான தலைமுறைகளில் வந்த அரசர்கள் பற்றிய வரலாறு சொல்லப் பட்டுள்ளது.

From → Uncategorized

பின்னூட்டமொன்றை இடுங்கள்

பின்னூட்டமொன்றை இடுக