பொருளடக்கத்திற்கு தாவுக

ஸ்ரீமத் பாகவதம்-மூன்றாவது ஸ்கந்தம்

|| ஓம் நமோ பகவதே வாசுதேவாய ||  

காபிலேயோபாக்யானம்  

 அத்யாயம்-1

இதைத் தான் முன் ஒரு முறை மைத்ரேயன் என்ற முனிவரும் என்னிடம் கேட்டார்.  “எதற்காக அந்த ராஜ குலத்தை சேர்ந்தவன் காட்டுக்குப் போனார் ? வசதியாகத் தானே இருந்தார் ?”

ராஜா பரீக்ஷித், “மைத்ரேய முனிவரை அவர் சந்தித்தாரா? எந்த இடத்தில்? விதுரர்  நல்ல குணவான்.  பெரியவரான மைத்ரேயனிடம் என்ன பேசினார்?” – என்றார்.  ஸ்ரீ சுகர் பதில் சொன்னார்?

சகோதரனான கௌரவ அரசன், தன் புத்திரர்கள் செய்வது அதர்மம் என்று தெரிந்தும் அவர்களை தண்டிக்காமல், சுயோதன்  தன்னையே திட்டிய பொழுதும் பேசாமல் இருந்ததும் விதுரரால் பொறுக்க முடியவில்லை. அதனால், கஜாஹ்வயம் என்ற  தீர்த்த ஸ்தானத்திற்கு சென்று விட்டார்.   தியானம், யோகம் என்று நாட்களை கழித்தார்.  புதிய நகரங்கள், புண்ய தீர்த்தங்கள், மலை ப்ரதேசங்கள், தெளிவான நீருடன் குளங்கள், நதிக் கரைகள்,  கோயில்கள் இவற்றை தரிசித்துக் கொண்டு தனியாக சஞ்சரித்துக் கொண்டிருந்தார்.

நாடு முழுவதும் பாத யாத்திரை சென்றார்.  எந்த வசதியும் இல்லாமல், கிடைத்த இடத்தில் தங்கி, ஹரி பஜனை செய்து கொண்டு, பாரத வர்ஷம் முழுவதும் சுற்றியவர்  த்வாரகா அருகில் ஏக சக்ரம்  என்ற இடம் வந்தார்.  அங்கு தான், தன் நண்பனின் மறைவைப் பற்றி கேள்விப் பட்டார்.   பொறாமையால் மூங்கில் காடு பற்றி எரிந்ததும் கேட்டு வருத்தத்துடன் சரஸ்வதி தீரம் வந்தார்.  அங்கு முனிவர்கள் பலர் இருந்தனர். உஸனஸ், மனு, ப்ருது, ஆங்கிரஸ், ஸ்ரார்த தேவர் முதலானோர் குகைகளில் இருந்தனர்.  மேலும் பலர் பகவான் விஷ்ணு            ஸ்ரீ க்ருஷ்ணராக வந்த சமயம் அவர் பாதம் பட்ட இடங்களில் கோவில்களை கட்டியிருந்தனர்.  அவற்றைக் கண்களால் காணவே ஸ்ரீ  க்ருஷ்ண நினைவு வந்தது. 

அதன் பின் செழிப்பாக இருந்த சௌராஷ்டிரம் வந்தார். சௌவீரம், மத்ஸ்ய, குருஜாங்கலம், என்ற இடங்களை கடந்து உத்தவர் இருந்த யமுனா கரை வந்தார்.  உத்தவர், வாசுதேவர் கூடவே இருந்தவர், அமைதியானவர், ப்ருஹஸ்பதியின் முதல் மகனாக அறியப் பட்டவர்,  அவரை இறுகத் தழுவி குசலம் விசாரித்தார்.  தன் சுற்றத்தாரை பற்றி விசாரித்தார். 

புராண புருஷர்கள்,  தன் நாபியில் உதித்த ப்ரும்மா படைத்தது போல சூரசேனன் வீட்டில் அவதரித்தனர். உண்மையான காரணம் பூமிக்கு நன்மையைச் செய்ய. 

கௌரவர்களின் சிறந்த நண்பர் பாமன், சௌரி- சூர சேன வம்சத்தினன்- அவன் சகோதரிகளை தன் சொந்த புத்ரிகளைப் போல பாலித்தான்.  படைத்தலைவன், அவன் நலமா?

யது குல ப்ரத்யும்னன், சுகமாக இருக்கிறானா?   ஸ்ரீ க்ருஷ்ணருக்கும் ருக்மிணிக்கும் பிறந்த மகன்.  

சாத்யகி, வ்ருஷ்ணி, போஜ, மற்றும் தாஸார்ஹர்களின் அதிபதி, அவனை தாமரைக் கண்ணன் ஸ்ரீ க்ருஷ்ணன் தான் அபிஷேகம் செய்து வைத்தான்

ஹரியின் மகன், சாம்பன், ரதத்தில் முன் நிற்பவன், வீரன், நலமா? இவனைப் பெற ஜாம்பவதி ஏராளமான விரதங்களைச் செய்தாள்.  அம்பிகையின் மகன் குஹனை வேண்டினாள்.

அர்ஜுனனிடம் தனுர் வித்தை, அதன் ரகஸ்யங்களைக் கற்ற யுயுதானன் நலமா? இவன் அதோக்ஷஜனான ஸ்ரீ க்ருஷ்ண பக்தன். மற்ற யாதவர்களுக்கு கிடைக்காத அனுக்ரஹம் பெற்றவன்.

இவ்வாறு மற்ற குமார்கள், நண்பர்கள், அனிருத்தன், மற்றும் பலர், இவர்களைப் பற்றியும், நடந்த யுத்தம் அதன் பின் என்ன நடந்தது என்றும் வினவினார்.

அது நாள் வரை நடந்தவைகளை அறியாத விதுரர்,  ஒவ்வொருவரையும் குறிப்பிட்டு, நலம் விசாரிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  முதல் அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-51

 அத்யாயம்-2

விதுரரின் கேள்விகளுக்கு என்ன பதில் சொல்வது என்று உத்தவர் திகைத்தார்.  ஸ்ரீ க்ருஷ்ணரின் உடன் இருந்தவர், அவரின் ஒவ்வொரு செயலையும் கூடவே இருந்து கவனித்தவர் ஆதலால் அவருக்கு பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைத்தது.

காலம் கடந்து, நடந்த விவரங்களை அறியாத விதுரர் அவரிடம்  ஊர் மக்களின் நலம் விசாரிக்கிறார். என்ன பதில் சொல்வது?

ஐந்து வயது சிறுவன், தாய் யசோதா, உணவை கையில் வைத்துக் கொண்டு சாப்பிட அழைத்து கெஞ்சுவாள், விளையாட்டு மும்முரத்தில் அந்த குழந்தை சாப்பிட மறுக்கும் – க்ருஷ்ணனின் கூடவே இருந்த உத்தவர் அந்த காட்சியை நினைவு கூறுகிறார்.  தன் காலம் முழுவதும் அந்த க்ருஷ்ணனுடன் கழித்த நாட்கள், இந்த வயதான காலத்தில் எதை சொல்வார், எதை விடுவார்?  சற்று நேரம் பேசாமல் இருந்தார்.  வந்தவரும் சாமான்யமானவரல்ல.  துறவியாக ஊரை விட்டுச் சென்றவர் எதையும் அறியாமல் விசாரிக்கிறார்.

தன்னை சமாளித்துக் கொண்டு, கண்களில் நீர் வழிய, ஒரு விநாடியில், வைகுண்டத்திலிருந்து பூமிக்கு இறங்கியவர் போல, (ஸ்ரீ க்ருஷ்ணரின் அருகாமையில் திளைத்தவர் தன்னை விடுவித்துக் கொண்டு) கண்களைத் துடைத்துக் கொண்டு பதில் சொல்லலானார்.

உத்தவர் சொல்கிறார்:  க்ருஷ்ணன் என்ற சூரியன் அஸ்தமித்தது.  அதை மலைப் பாம்பு போல காலம் விழுங்கி விட்டது. நலம் என்று எதைச் சொல்வோம்.  செல்வத்தை அளிக்கும் தேவியே விலகி விட்ட நிலையில், வீடுகளில் மீதமிருப்பது என்னவாக இருக்கும்?  உலகம் தன் வளமையை இழந்தது. கூட்டமாக இருந்த யாதவர்களும் போனார்கள். மீதி இருந்தவர்கள் ஹரியை உணரவேயில்லை. குளத்து  மீன்கள் விண் மீன்களை அறியாதது போல. 

அவரைச் சுற்றி பலவிதமாக இருந்தார்கள்.  கண்ணசைவில் புரிந்து கொள்ளக் கூடியவர்கள்,   தன்னம்பிக்கை மிக்கவர்கள், தன்னலமே உருவானவர்கள், தன் சுகமே பிரதானமாக இருந்தவர்கள்,  மற்றும் தூய்மையானவர்கள்,  என்ற அனைத்து விதமான ஜீவன்களையும் ரிஷபம் பாரத்தை தூக்குவது போல தன் தோளில் சுமந்தவன். 

தேவ மாயையால் என்றோ, அசத்தான – நன்மையில்லாத ஒன்றை நம்பியதாலோ, புத்தி தடுமாறுகிறது. அவர் சொல்லை மனிதர்கள் புரிந்து கொள்ளவில்லை. தன்னுள் தானே நிறைந்த ஹரி அவன்.

திருப்தியில்லாத அரசர்கள், தவமோ தகுதியோ இல்லாத அரசர்கள் அவர்களுக்கும் தன் உருவைக் காட்டினான். உலகுக்கே கண்ணானவன்.  அலங்காரத்துக்கே அலங்காரமானவன்,  அளவற்ற ஐஸ்வர்யம் உள்ளவன், தன் யோக மாயையால் தன்னை மறைத்துக் கொண்டு, மனித உலகத்துக்கு ஏற்ற வகையில் தன் உருவத்தை அமைத்துக் கொண்டான்.

தர்மபுத்திரனின் ராஜ சூய யாகத்தில், முதல் மரியாதையை பெற்ற சமயம் (பூர்ண கும்பம் கொடுத்து ), பார்த்த வேத விற்பன்னர்கள், அறிஞர்கள்,  நன்று என்றனர். புகழ்ந்து பேசினர். 

ராஸ லீலையில் அன்பையே கண்ட வ்ரஜ ஸ்த்ரீகள், தங்கள் வேலைகளை விட்டு, அவரது கண் பார்வையால் அழைக்கப் பட்டவர்களாக பின் தொடரவில்லையா?

சாந்த ஸ்வரூபி. மற்றவர்களின் வேண்டுகோளுக்காக இரங்கி ப்ரும்மாவை, அக்னியை தண்டித்தான். எனக்கு என்ன வருத்தம் என்றால், வசுதேவர் வீட்டில் பிறந்தவன் , வ்ரஜ தேசத்தில் வளர நேரிட்டது.  தன் பகவத் ஸ்வரூபத்தை மறைத்துக் கொண்டு பயந்தவன் போல தானே தன்னை அந்த நகரத்திலிருந்து வெளியேற்றிக் கொண்டான்.  அனந்த வீர்யன் அவன். அவனுக்கா பயம்?

அவன் தாய் தந்தையரை வணங்கி “அம்மா, அப்பா,  கம்ஸன் பொல்லாதவன்.  நான் வெளியேறியது அவனுக்குத் தெரிய வேண்டாம்” என்றானாம். இதைக் கேட்டு என் மனம் சொல்லொனா துக்கத்தை அடைந்தது.  இவனை அறிந்தவர்கள் மறக்கவா முடியும். புருவ அசைவினால் பூமியின் பாரத்தை குறைத்தவன்.

ராஜசூய யாகத்தில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். அவனுக்கு விரோதிகளே இல்லை எனும் படி அனைவரும் நல்ல கதியை அடைந்தனர்.  யோகிகள் அவனை கொண்டாடினர். யாரால் இந்த பிரிவை பொறுக்க முடியும்?

யுத்த களத்தில் அவனைக் கண்டவர்கள் புண்யம் செய்தவர்கள்.   பார்த்தனின் அஸ்திரங்களால் பரிசுத்தமாக்கப் பட்டு அவனடி சேர்ந்தனர்.  தானே, தனக்கு உவமையில்லாதவன், மூன்று செயல்களையும் தானே முன்னின்று செய்பவன். அவனுடைய  ராஜ்ய லக்ஷ்மியால்  எல்லா நன்மைகளும் அவனை தேடி வந்தன, சிற்றரசர்கள் தங்கள் கிரீடங்களை அவன் காலடியில் சமர்ப்பித்து வணங்கினர்.

எங்களை பதவியில் அமர்த்தச் சொல்லி உக்ரசேனரிடம் ஆணையிட்டான். அவனுக்கு சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததே எங்கள் பாக்கியம்.

அந்த பூதனா, கொல்லத்தானே நினைத்தாள். மடியில் விஷத்தை வைத்துக் கொண்டு பாலூட்ட வந்தாள்.அவளும் நல்ல கதியடைந்தாள்.  தயாளுவான கண்ணனின் கருணையால்.

போஜராஜாவின் சிறையில் வசுதேவர் தேவகிக்குப் பிறந்தான். தேவகியின் வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் மகனாக வந்தான். கம்சனால் ஆபத்து வரும் என்று வசுதேவர் பயந்தார்.  அதனால் பதினோரு வயது வரை தன் பராக்ரமத்தை மறைத்துக் கொண்டு கோகுலத்தில் வாழ்ந்தான்.  கோபாலர்களோடு, யமுனைக் கரையில், உப வனங்களில் பறவைகளின் கூச்சலுக்கு இடையில் மகிழ்ந்து திரிந்தான். இள வயது பெண்களைச் சீண்டி விளையாடினான். கோகுலத்தில் செல்வம் நிறைந்தது. கோபால சிறுவர்கள் பின் தொடர வேணுவை இசைத்தபடி முன் செல்வான்.

எவ்வளவு பேரை அந்த போஜ ராஜன் அனுப்பினான். அவர்களை விளையாட்டாக பந்தாடினான்.  விஷ ஜலத்தை குடித்த தன் நண்பர்களை காக்க காளியன் என்ற பாம்பு அரசன், அவனை விரட்டி, கோகுலத்துக்கு நல்ல குடி நீர் கிடைக்கச் செய்தான்.  நந்த கோபனின் ராஜ்யத்தை செல்வம் கொழிக்கும் படி செய்தான். யாகங்கள் செய்வித்தான். சிறந்த வேத விற்பன்னர்கள் நிறைந்தனர்.

இந்திரன் யாகத்தை நிறுத்தியதால் கோபம் கொண்ட இந்திரன் அடாது வர்ஷித்தான்.  தன் லீலையால் மலையையே குடையாக்கி கோகுலத்தை காத்தான்.  சரத் காலம் வந்தால் போதும். கோகுலம் கொண்டாடும். பாட்டும், ஆட்டமும், கோகுலத்து சிறுவர்களும் சிறுமிகளும்  சந்தோஷமாக அவனுடன் கழித்தனர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த   காபிலேயோபாக்யானம் என்ற மூன்றாவது  ஸ்கந்தத்தின், இரண்டாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-34

அத்யாயம்-3

உத்தவர் தொடர்ந்தார்:  அவர் எண்ணம் முழுவதும் ஸ்ரீ க்ருஷ்ணரிடமே இருந்ததால் நடந்த நிகழ்ச்சிகளையே தொடர்ந்து கூறலானார்.

அதன் பின் தந்தை இருந்த ஊருக்கே வந்து சேர்ந்தான். பலதேவனுடன்  சேர்ந்து  எதிரிகளை அழித்து, பூமியின் பாரமாக இருந்தவனைக் கொன்றார். சாந்தீபினி குருகுலத்தில் கல்வி கற்ற பின் அவர் விஸ்தாரமாக சொன்ன கதையைச் கேட்டு அவர் புத்திரனை மீட்டுக் கொடுத்தார்.

பீஷ்மக கன்யா (ருக்மிணி) அழைத்தாள் என்று ஸ்ரீ ரூபமான அவளை, காந்தர்வ விதியால் ,  கவர்ந்தான். தன் பங்கு என்று கருடன் செய்தது போல

காளைகளை அடக்கி நக்னஜித் என்ற பெண்னை மணந்தான். அதனால் கோபமடைந்த சிலர் எதிர்த்தனர். அவர்களை போரிட்டு வென்றான். 

தன் மகனை யாரோ கவர்ந்து செல்கின்றனர் என்று தரித்ரி -பூதேவி அலறினாள். தன் சுனாப என்ற சக்கரத்தால் பூமியை துளைத்து அவள் மகனை காத்தான். பின் அவள் மகளை மணந்தான்.

இவ்வாறு தனக்கு அனுரூபமான  எட்டு பெண்களை மணந்தான். ஒவ்வொருவரிடமும் தன்னைப் போலவே பத்து பத்து குமாரர்களைப் பெற்றான்.

போரிட வந்த கால, மாகத சால்வலி போன்றவர்களை வென்று, தன் மக்களின் வீரத்தை வெளிப்படுத்தினான். சம்பரன், த்விவிதன், பாணன், முரன், பல்வலன், மற்றும் தந்த வக்த்ரன், இவர்களையும் வென்றான்.

ஒரே குடும்பத்தின் இரு சகோதரர்களின் புத்திரர்கள் போரிட முனைந்த பொழுது இரு பக்கமும் அரசர்கள் சேர்ந்து கொண்டனர்.  குருக்ஷேத்ரம் என்ற யுத்த களம் – அவர்கள் அதில் தன் படைகளோடு வந்து வீழ்ந்தனர்.

கர்ணன், து:ஸாஸனன், சௌபலீ இவர்களின் தவறான வழிகாட்டலால், மதியிழந்த சுயோதனன் தன் ராஜ்யம், உயிர் இரண்டையும் இழந்து பூமியில் கால் (துடை) உடைந்து விழுந்து கிடப்பதைப் பார்த்து வருந்தினான். 

 த்ரோண, பீஷ்ம, அர்ஜுன, பீம என்ற வீரர்கள், மற்றும் என்னைச் சேர்ந்த யாதவ சேனை என்று அனைவரும் சேர்ந்து பதினெட்டு அக்ஷௌஹிணி  வீரர்கள்.

இந்த சகோதர்கள், மதுவினால் மதி மயங்கி, கண் சிவக்க,  தங்களுக்குள் விவாதித்தனர்.  பூ பாரத்தைக் குறைக்க இதை விட நல்ல வழி இல்லை என்று நினைத்தோ, அனுமதித்தான்.

உத்தரை-அபிமன்யுவின் மகன் கர்பத்தில் இருக்கும் பொழுது த்ரோண புத்ரனின் அஸ்திரத்தால் அடிக்கப் பட்டான். பகவான் தான் காப்பாற்றினார்.

தர்மபுத்திரன் மூன்று அஸ்வ மேத யாகங்கள் செய்தான்.  ஸ்ரீ க்ருஷ்ணரின் அறிவுரைகளின் படி ராஜ்யத்தை ஆண்டான். விஸ்வாத்மாவான பகவானும் உலகில் வேத சாஸ்திரங்களின் வழியில் வாழ்ந்து த்வாரவதி என்ற தன் நகரில், ஞான மார்கத்தை கை கொண்டான்.  மென்மையாக அன்புடன் பேசி, தூய்மையான தன் நடத்தையாலும், உடன் இருந்த ஸ்ரீ கடாக்ஷத்தாலும், இந்த உலகத்தையும் எங்களையும் சந்தோஷப் படுத்திக் கொண்டு, தானும் சுற்றத்தாரோடு சந்தோஷமாக இருந்தான். பல வருஷங்கள் இப்படிச் சென்றன. அவனும் இல்வாழ்க்கையில் நாட்டம் குறைந்து யோக மார்கத்தை அனுசரிக்கலானான்.  யோகேஸ்வரன் என்ற பெயர் பெற்றான்.

ஊருக்குள், ஒரு சமயம் விளையாட்டாக போஜ குமாரர்கள் ஏதோ செய்யப் போக, ஒரு முனிவரின் சாபத்துக்கு ஆளாகினர்.  அதன் பின் வ்ருஷ்ணி, போஜ, அந்தகன் முதலானோர், ப்ரபாஸ நகரம் வந்தனர். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து, பொன், வெள்ளி, வஸ்திரங்கள், படுக்கை போன்ற பல விதமான தானங்களைச் செய்து,  அன்னதானம்  பகவதர்ப்பணம் என்றும் செய்த பின், பூமியில் விழுந்து வணங்கினர்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், மூன்றாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28 

அத்யாயம்-4

உத்தவர் சொன்னார்: ஏகமாக உண்டும், வாருணி என்ற மதுவை குடித்தும், மனம் தடுமாறி, ஒருவருக்கொருவர், தூஷித்துக் கொண்டு, உயிரை விட்டனர்.  மதுவை குடித்து பாதிக்கப் பட்டு மூங்கில் வனம் அழிவது போல ஒட்டு மொத்தமாக அழிந்தனர். 

பகவான் இதையறிந்து, சரஸ்வதி நதிக் கரையில் ஒரு மரத்தடியில் அமர்ந்து விட்டார்.  என்னைப்  பார்த்து நம் குலத்தைக் காக்க, நீ பதரிக்குப் போ என்று ஆணையிட்டார்.  ஆனாலும் அவருடைய எண்ணம் என்ன என்பது தெரிந்து,  அவர் இருப்பிடம் சென்றேன். மரத்தடியில்  லக்ஷ்மீ பதியான ஸ்ரீ க்ருஷ்ணன்,

 அமைதியாக  அருணன் போல (இளம் சிவப்பாக) கண்களுடன்,  நான்கு கைகளுடன், ஸ்யாமள வண்ணன், பீதாம்பரத்துடன், தூய்மையே உருவாக அமர்ந்திருந்தான்.  இடது மடியில் வலது கையை ஊன்றி, அஸ்வத்த மரத்தடியில் இருந்தார்.

அந்த சமயம், மஹா பாகவதரான  வியாசர்,  எதேச்சையாக வந்தார்.  வணங்கி நின்ற அந்த மகரிஷியிடம் பிரியமாக, மென் முருவலோடு சொன்னதை நானும் கேட்டேன்.

பகவான் சொன்னார்:  உன் மனதில் ஓடும் விருப்பத்தை புரிந்து கொண்டேன். யாருக்கும் கிடைக்காத அதை தருகிறேன்.  முன் ஒரு சமயம் வசுக்களின் விஸ்வஸ்ருஜ் என்ற யாகத்தில், நீ வசுவை விரும்பினாய்.  ஸாதோ!  என் அனுக்ரஹம் பெற்று,  இங்கு இரு, நான் உலகை துறப்பதை பார்.

முன்பு நான் ப்ரும்மாவுக்குச் சொன்னேன்.  ஆரம்பத்தில் என் நாபியில் அவர் தோன்றிய சமயம் உலக ஸ்ருஷ்டி ஆரம்பிக்க எண்ணியிருந்த நான், ஞான உபதேசம் செய்தேன்.  பெரியவர்கள் அதை பாகவதம் என்றனர். என் சரித்திரம், மகிமைகள் அடங்கிய செய்திகள். 

எனக்கு மெய் சிலிர்த்தது.  பரம புருஷனின் அனுக்ரஹம், ஒவ்வொரு க்ஷணமும் எனக்கு கிடைத்தது என் பாக்கியம். கண்களில் நீர் வழிய அவரிடம் கை கூப்பி, வினவினேன்.  ஹே! பகவன்! உன் பாத கமலங்களை சரணம் அடைந்தவர்களுக்கு எது தான் துர்லபம்? நான்கு தேவைகளும் தானே வந்து சேரும். (தர்மம்,அர்த்த (பொருள்), காமம், மோக்ஷம்)  இருந்தாலும் எனக்கு அவைத் தேவையில்லை. உன் காலடியில் கிடப்பதையே பெரிதாக நினைக்கிறேன் என்றேன்.

உலகில் இருந்து செய்ய வேண்டியது எதுவும் இல்லை,  என்றும் இருப்பவன் புதிதாக பிறப்பு என்பதும் உனக்கு இல்லை. அடைய முடியாத பொருள் என்பதோ, பெரும் விரோதி, அவனிடம் தப்பித்து ஓட வேண்டும் என்ற அவசியமோ இல்லை. ஏனெனில் நீயே காலாத்மா.  மற்றவர்களுக்கு சரணமாக இருப்பவன் நீ. 

மந்தராலோசனைகளில் என்னை அழைத்து விசாரிப்பாய்.  உனக்குத் தெரியாததையா நான் சொல்வேன்.  அறியாதவன் போல என்னை விசாரித்தாய், ப்ரபோ!  தேவா! அதை நினைத்தால் என் மனம் பெருமிதம் அடைகிறது. பரம ஞானம், யாருமறியாத உன் சரித்திரம் , அதை நீயே சொல்லிக் கேட்டோம், பகவானே! அதைப் பெற தகுதியுடையவனா நான்?  இந்த சம்சாரக் கடலை எப்படித் தாண்டுவோம், அதைச் சொல்லு.

ஆவேசத்துடன் நான் இப்படிச் சொன்னதைக் கேட்ட பகவான், ஆனையிடுவது போல சொன்னார்.  நான் மனப் பூர்வமாக ஆராதித்த தேவன், ஆத்ம தத்வம் என்பதை போதித்தான்.  அவரை வணங்கி, விடை பெற்று இங்கு வந்து சேர்ந்தேன்.  இதோ, பதரி செல்ல இருக்கிறேன். நண்பரே,  அங்கு பகவான் இருக்கிறார். நரனாக, பகவானாக, ரிஷியாக,  பலவிதமாக உலக நன்மைக்காக தவம் செய்கிறான். 

ஸ்ரீசுகர் சொன்னார்:  உத்தவர் வாயால் கேட்டு, மிக வருந்தினார் விதுரர்.   உலகியல் அறிந்தவர்,  தன்னை அடக்கிக் கொண்டு பாகவதரான, உத்தவருக்கு விடை கொடுத்தார்.  யோகேஸ்வரரே!  ஈஸ்வரன் உமக்கு அளித்த அந்த ரகசியமான ஆத்ம தத்வம் என்பதை எனக்கும் சொல்லுங்கள். நானும் விஷ்ணுவின் பக்தனே.  நமக்குள் சொல்லிக் கொள்வதில் தவறில்லை.

விதுரரே! உங்களுக்குத் தெரியாததா? பகவான் உலகைத் துறக்கும் முன் சொன்ன செய்திகளை அவசியம் சொல்கிறேன்.

ஸ்ரீ சுகர் சொன்னார்: இருவரும் பகவானின் கதைகளை பேசிய படியே இரவைக் கழித்தனர். 

ராஜா பரீக்ஷித் கேட்டான் – வ்ருஷ்ணி, போஜ வீரர்கள், அதி ரதர்கள் அனைவரும் போன பின்னும் உத்தவர் எப்படி உயிருடன் இருந்தார் ? பகவானே தானே உலகைத் துறந்ததாகச் சொன்னீர்கள்.

முனிவரின் சாபம் என்ற ஒரு காரணத்தால் யாதவ குலம் அழியும் என்று ஆன பொழுது, அவர்  காலனை வேண்டினார். நான் உலகை துறந்து போனாலும்  நான் உபதேசம் செய்த என் ஞானம் அழியக் கூடாது. உத்தவன் அறிவான். அவன் தான் என்னை முழுதும் அறிந்தவன். அவனை இந்த சாபம் அண்டாமலிருக்கட்டும் எனக்கும் உத்தவருக்கும் அணுவும் வித்தியாசமில்லை. குணமோ, திறமையோ என்னை விட எந்த விதத்திலும் குறைந்தவனில்லை.  அதனால் நான் இல்லாத இந்த உலகை பாதுகாக்க இங்கு இருக்கட்டும் என்றார்.

மூவுலக குரு  சொன்னதைக் கேட்டு,  பதரி ஆசிரமம் வந்து சமாதி யோகத்தால், பகவானை ஆராதித்துக் கொண்டு இருக்கிறார் உத்தவர்.

விதுரர், “ இதுவும் அவன் விளையாட்டு –அவர் செய்த  மற்ற அரிய காரியங்களை மனதில் நினைத்த படி, தேஹ ந்யாசம், உடலை விடுவது கூட, தீரனாக இருந்தால் தான் சாத்யம். மற்ற ஜீவன்களுக்கு இது நினைத்து கூட பார்க்க முடியாது. எதற்காக இப்படி செய்தான்?  மற்றவர்களுக்கு தைரியம் வரட்டும் என்றா? “ என்று நினைத்தார். நினைக்க நினைக்க அடக்கமாட்டாமல் வாய் விட்டு அழுதார்.  காலிந்தி நதிக் கரையில் சில நாட்கள் இருந்தார்.  மைத்ரேய முனிவரை சந்தித்தார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், நான்காவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-36

அத்யாயம்5

 ‘த்யு நதி’ ஆகாயத்திலிந்து வந்த நதி கங்கை, அதன் கரையில் குரு வம்சத்து பெரியவரும், மைத்ரேய முனிவரும் ஸ்ரீ க்ருஷ்ணரின் பிரிவால் அடைந்த மன வருந்தம் குறைய, தங்களுக்குள் பல விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

விதுரர்: தங்கள் சௌக்யத்திற்காக மக்கள் உழைக்கிறார்கள். அவர்களுக்கு சுகம் கிடைக்கிறதா? அல்லது வேறு விதமாக நலன் பெறுகிறார்களா?  அவர் அனுக்ரஹத்தால் ஜீவன்கள் வழக்கம் போல வாழ்கின்றனர். நாம் என்ன செய்வோம்? மனிதர்களின் ஹ்ருதயத்தில் வசிக்கும் பகவான்,  பக்தி செய்யும் அடியார்களுக்கு ஞானத்தைத் தருகிறான்.  அவருடைய அவதார கதைகளைச் சொல்லும் பாகவத புராணம் பற்றி சொல்லுங்கள். உலகை ஸ்ருஷ்டித்து, காத்து பின் கலைத்து பின் எதற்காக  திரும்ப ஏன்  எந்த பொறுப்பும், செயலும் இன்றி, தற்சமயம்   தூங்குகிறான்?  யோகாதீஸ்வரன், அனைத்து ஜீவன்களிலும் அம்சமாக இருந்தவன், யாருமறியாத குகையில் தனித்து இருப்பானேன்?  விளையாட்டாக, வேதம் அறிந்த  ப்ராம்மணர்கள், பசுக்கள், தேவலோக வாசிகள் என்று அனைவரின் க்ஷேமமே – நலனே தன் அவதாரத்தின்  காரணம் என்றான். எவ்வளவு கேட்டாலும் அலுக்காத அவன் சரித்திரம்,

லோக நாதன் அவன்.  . லோக பாலர்களையும்,  வித விதமான தத்வங்களை பயன் படுத்தி பூ லோகம் மட்டுமல்ல சகல லோகங்களையும் ஒவ்வொன்றையும் தனித்தன்மையுடனும், உருவத்துடனும் அமைத்தான். பிரஜைகளுக்கு ,  தன் ரூபம், செயல், பெயர்கள் என்பதையும் அறிவித்தான்.  நாராயணன் தான் விஸ்வஸ்ருட்- விஸ்வத்தை ஸ்ருஷ்டித்தவன், தன் கர்பத்தில் தாங்குபவன் என்பதை சற்று விவரமாக சொல்லுங்கள், முனிவரே. நீங்கள் வியாசரிடமிருந்து நிறைய கேட்டிருக்கிறீர்கள்.  ஏதேதோ விரதங்கள்,  அவரிடம் தெரிந்து கொண்டோம். எதிலும் மனம் ஈடுபடவில்லை. செய்தாலும் திருப்தியில்லை. ஸ்ரீ க்ருஷ்ண கதை தான் பிடிக்கிறது.  தீர்த்தங்கள், யாகங்கள், பெரிய அறிவாளிகளால் தொழப்படும் துதிகள் இவை க்ருஷ்ண கானத்திற்கு முன் பயனற்றவையே. இது தான், காதின் வழி மனதை சென்றடைந்து, வீடு வாசல்களில் ஈடுபாட்டைக் குறைக்கிறது.  உன் சகா வியாசர், பாரதமும் தான் சொன்னார். அரசர்களின் சராசரி மனித குணங்கள், கேளிக்கைகளை வர்ணித்து என்ன பலன்? ஹரி கதைக்கு ஈடு ஆகுமா?  சிரத்தையுடன் கேட்பவர்களின் மற்ற உலகியலில் நாட்டம் குறைகிறது. நிவ்ருத்தி மார்கம் (ஞானமார்கம்-) , சகல துக்கங்களையும் உடனே அழிக்கும் சக்தி வாய்ந்தது. ஹரியின் சரித்திரத்தில் நாட்டமில்லாமல்  பலவிதமாக யோசித்தும், திரும்பத் திரும்ப ஏதோ புதிதாக கண்டு கொள்வதாகச் சொல்வதும் பயனற்றதே. இமைக்காமல் பார்க்கும் தேவர்களின் ஆயுளும் வீணே. ஸ்ம்ருதிகளை நம்பாமல் வெறும் வாதத்திற்காக  படிப்பதும் வீணே.

அதனால்,   ஹரியின் கதையே கதைகளின் சாரம்.  பொறுக்கி எடுத்த புஷ்பங்கள் போல எங்கள் நன்மைக்காக  அவரது கீர்த்தியையே சொல்லுங்கள். உலகை படைத்தும், காத்தும் பின் கலைப்பதுமான தன் செயலுக்காகவே அவதாரங்கள் எடுத்து, மனிதன் போலவே வாழ்ந்து காட்டியதை சொல்லுங்கள்.

 அதன் படியே முனிவரும் மனிதர்களின் நலனுக்காக சொல்ல ஆரம்பித்தார். மைத்ரேய முனிவர் “சாதோ! சரியாக கேட்டாய்.  உலக நன்மைக்காக அதோக்ஷஜன் எனும் ஸ்ரீ க்ருஷ்ணனின் கதையை விவரித்தால் நமக்கும் நல்லதே. க்ஷத்ரியனாக வழ்ந்தாலும், பாதராயன – பராசரரின் மகன் அல்லவா?  நீ இவ்வாறு நினப்பது அதிசயமல்ல.  முழு மனதோடு, ஈஸ்வரனான ஹரியை வணங்குகிறாய்.  மாண்டவ்ய முனிவரின் சாபத்தால், பிரஜைகளை சம்ஹாரம் செய்யும் யமன், பூமியில் பிறக்க வேண்டியிருந்தது.  சத்யவதியின் மகனாக பிறந்தார்.  அதன் பின் பாரத கதை. பணிப் பேண்ணிடம் பிறந்தவன் நீ. ( விதுரர் பராசர முனிவருக்கும்  அரண்மனை பணிப் பெண்ணிற்கும் மகனாக மூன்றாவது குழந்தையாக பிறந்ததாக பாரத கதை.) அரண்மனையில் அனைவருக்கும் பிரியமானவனாக ஆனாய்.  பாகவதன் ஆனதால் உனக்கு உபதேசம் செய்கிறேன். தவிர, பகவானே, கிளம்பும் முன் என்னிடம் சொல்லியிருக்கிறார். உனக்கு உபதேசம் செய்ய சொல்லி. ஆகவே, நீ விரும்பிய படியே, பகவானின் சரித்திரத்தை  சொல்கிறேன். “ என்றார்.

பகவான் ஒருவனே தன்னில் தானே லயித்து இருப்பவன்.

இதன் பின் ஸ்ருஷ்டி பற்றிய விவரங்களை சொல்கிறார். (முன் அத்யாயங்களில் சொன்ன மஹத் தத்வம் முதலானவை)

தேவர்கள் துதி செய்கின்றனர்:

சரணமடைந்தவர்களின் தாபத்தை குறைக்கும் குடை போன்ற உன் பாதக் கமலங்களை வணங்குகிறோம்.  அந்த பாதங்களை யதிகள் வணங்கி தங்கள் சம்சார துக்கத்தை விட்டு விலகி உன் பதத்தை அடைகின்றனர்.

ப்ரும்மா, ஈசன்,  போன்றோரும் எந்த பாதத்தை ஆஸ்ரயித்து, மேன்மையடைந்தனரோ, அதே போல சகல வித்யைகளுடன் கூடிய  உன் பாதத்தின் சாயையில் நாங்களும் சரணடைகிறோம்.   வேதங்களையும், அதன் சாகைகளையும் ரிஷிகள், உன்னிடமிருந்து கற்றார்கள்.  சிரத்தையுடனும், பக்தியுடனும் கேட்டு, தங்கள் ஹ்ருதயத்தில் நிலை நிறுத்திக் கொண்டார்கள்.  வைராக்ய பலத்தாலும், தங்கள் ஞானத்தாலும் வளர்த்துக் கொண்டார்கள். அவர்கள் தீரர்கள் எனப்படுகின்றனர்.  அதனால் நாங்களும் உன் பாத கமலங்களைச் சரணடைகிறோம்.

உலகில் ஸ்ருஷ்டி,ஸ்திதி, சம்ஹாரம் என்ற செயல்களை திறம்பட செய்வதற்காக அவதாரம் செய்தாய். நீ உன்னை சரணடைந்தவர்கள் நினைத்த மாத்திரத்தில் அருளுவாய் என்று அறிவோம். சரீரமே தான்,   தான் என்றும், தன் சுற்றத்தார் என்றும் நம்பும் உலக மக்களிடம் இருந்து நாங்கள் தொலைவில் இருந்தாலும், பகவானே, நீயே எங்களுக்கு சரணம்.

எங்களை உன் ஸ்ருஷ்டி காரியத்தில் சில பொறுப்புகளை கொடுத்து பங்கேற்கச்  சொல்கிறாய்.  ஆணையை சிரமேற்கொள்கிறோம்.   பிறவியற்றவனே! (யாகங்களில்) ஹவிஸ் பெறுவதையும், பதிலுக்கு நாங்களும் உலக ஜீவன்களுக்கு  உணவு தருவதையும் (மழை பொழிதலும், தாவரங்கள் வளருவதுமான செயல்கள்) செய்கிறோம். தேவர்களான எங்களுக்கும் ஆதி தேவன் நீயே.  எங்கள் கண்களில் இருந்து எங்கள் கடமைகளை சரி வரச் செய்ய அனுக்ரஹம் செய்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த  மஹா புருஷ சம்ஸ்தான வர்ணனம் என்பதில் காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஐந்தாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50

அத்யாயம்6

மைத்ரேய ரிஷி சொன்னார்:  இவ்வாறு தன் சக்திகளை அவர்களுக்கு பகிர்ந்து கொடுத்து விட்டு,லோக தந்திரங்களை பற்றியும் சொல்லி அவர்கள்  செய்ய வேண்டிய செயல்களையும் சொன்னார்.

“கால’ என்ற தேவியை  மிகுந்த செயல் திறனுடைய முப்பத்து மூன்று தத்வங்களும் கூட்டமாக உடனே சென்றடைந்தன.  தானும் சேஷ்டா என்ற ரூபத்தில் அந்த கணத்துள் நிழைந்து கொண்டார்.  அது வரை செயலற்றிருந்த அந்த கணம்-கூட்டம் – அனைத்து தத்வங்களும் – உயிர் பெற்றன.  அந்த முப்பத்து தத்வங்களும், பரம புருஷனான பகவானின் சக்தியில் ஒரு அம்ச செயல்திறனை தாங்களும் பெற்றன.

பரபுருஷனாலேயே ஆணையிடப் பெற்ற அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து விஸ்வ ஸ்ருஷ்டியை செய்ய அந்த  தத்வங்களின் கணம்,  பலவிதமாக வெளிப்பட்டு சராசரங்களை உருவாக்க வந்து சேர்ந்தன. (தனியாக இருந்தால் ஒரு திறன், அதுவே மற்ற தத்வங்களோடு சேரும் பொழுது மற்றொரு திறன் என்பதாக)

ஹிரண்மயமான பகவான், ஆயிரம் வருடங்கள், அண்டகோசத்தில் வசித்தார். அண்டம் நீரில் மிதந்து கொண்டிருந்தது.  அவர் தன்னுள் உலகை படைக்க தேவையான சக்தியை, கருவாக வைத்துக் கொண்டிருந்தார். தேவ , மற்றும் தன் சக்திகள் அனைத்தையும் உள்ளடக்கி, தன்னைத் தானே ஒருமுறை, பத்து முறை, மூன்றாக என்று பிரித்தார். இது தான் அனைத்து உயிரினங்களுக்கும் ஆத்மாவாக பரமாத்மா தன் அம்சத்தைக் கொடுத்த நிகழ்ச்சி. எனவே இதுவே முதல் அவதாரம்.  இது தான் அடிப்படை அல்லது ஆரம்பம் என்று கருதப் படுகிறது.

ஆத்மாவின் செயல்திறம், தேவ அல்லது மாறாத இயற்கையின் செயல்திறம், உயிரினங்களின் செயல் திறம் என்ற மூன்று முறை. விராட் ப்ராணன் பத்து முறை,  ஹ்ருதயம் ஒருமுறை- தன்னையே பலவாக ஆக்கிக் கொண்டது. விஸ்வத்தை படைக்க உதவியாக, அவைகளின் விஸ்தீர்ணம் அதிகமாகவும், பரவலாக ஆகும் பொருட்டும், தெளிவான உருவில் இருந்த கோளத்தை, அதோக்ஷஜன்(விஷ்ணு பகவான்) தன் தேஜஸால்

வெப்பமூட்டினார்.  (நீரில் மிதந்த கோளம் அச்சமயம் மற்றொரு மஹத் தத்துவமான அக்னி சேர்ந்தது. ) இந்த வெப்பத்தால் தேவர்களிடம் பல யாக சாலைகள் (பவித்திரமான அக்னி இருக்கும் இடம்)  புதிதாகத் தோன்றின.  வரிசையாக சொல்கிறேன் கேள்.

அந்த அக்னி -ஜீவன்களின்- வாயில் குடி கொண்டது. அக்னி தேவனாக,  லோக பாலனாக பொறுப்பேற்றது.  தன் அம்சத்தின் பலத்தால், வாய் பேசுதல் என்ற செயலை செய்ய, அந்த சொற்கள் மூலம் அவர் யார் என்பதை அறிவிப்பதாகவும் நியமித்தார்.  

அதன் பின் தாலு- வாயின் அடி பாகம், வெளிப்பட்டது. அதற்கு லோக பாலனாக வருணனை பகவான் நியமித்தார்.  அதன் பின்  நாக்கு என்ற உறுப்பு இணைந்தது. இதனால் ரஸம் என்பதையறிய முடிந்தது .

அஸ்வினி தேவதைகள் என்ற  இரட்டையர், பகவானின் கட்டளைப் படி,  மூக்கு என்ற அவயவத்தில் குடி புகுந்தனர்.  நுகர்தல் என்பதை அவர் அம்சத்தால் வாசனையை அறியச் செய்வது அவர்களின் செயலாயிற்று. முச்சு விடுதல் மற்றொன்று..

கண்கள் வெளிப்பட்டன. த்வஷ்டா இதன் அதிகாரியாக நியமிக்கப் பட்டார்.   அவரும் லோக பாலனாக பொறுப்பேற்றார்.  பகவானுடைய அம்சமாக கண் உருவங்களை காண முடிந்தது. 

உயிரினங்களின்  தோலாக காற்று நியமிக்கப் பட்டது.  ஒன்று ப்ராணன், மற்றொன்று ஸ்பரிசம் என்று இரண்டு செயல்கள்.  காற்று-வாயு என்ற தேவனும் லோக பாலனாக நியமிக்கப் பட்டான்.

காதுகள் இணைந்தன.  திசைகள் தங்கள் பொறுப்பாக பதவி ஏற்றனர். ஸ்ரோத்ரம்- காது என்ற அவயவத்தால், சப்தத்தின் தன்மை அறியப் படுகிறது.

 த்வக்- என்ற மேல் தோல்,  ரோமங்களுடனும், இணைந்தது.  அரிப்பு போன்ற உணர்வுகளை அறிய உதவும். இவை  தாவரங்களின் அறியும் திறன் கொண்டவை.

ப்ரும்மா தானே ஜனன  உறுப்பான மேட்ரம் என்ற அவயவத்தில் இணைந்தார். தன் அறிவை அதில் பிரயோகித்தார். ரேதஸ் என்ற அம்சத்துடன் ஆனந்தம் என்பதை வெளிப் படுத்துவதாக அமைந்தது.

குதம் என்ற அவயவத்தில் மித்ரன் என்ற லோக பாலன் பொறுப்பேற்றார். பாயு என்ற அம்சத்துடன் வெளியேற்றம் என்ற செயலை ஏற்றார்.

கைகள் தோன்றின. அவைகளில் தேவ லோக நாயகனான இந்திரன் இணைந்தான்.  பரம புருஷனின் கைகளின் அம்சமாக செயல்கள்  கைகளுக்கு அமைந்தன.  பாதங்கள் தோன்றின. அதில் லோக நாயகனான விஷ்ணு பொறுப்பேற்றார். நடை என்ற தன் அம்சத்தால், அடைய வேண்டிய இலக்கை அடைவது என்பது சாத்யமாயிற்று.

புத்தி தோன்றியது. வாகீசன் என்ற ப்ரும்மாவின் அம்சம் இதில் இணைந்தது. அறிவு என்பதன் அம்சமாக அறிய வேண்டியவைகளை அறிய தேவையான சக்தி வந்தது.

ஹ்ருதயம் என்ற அவயவம் இணைந்தது. இதன் தலைமையை சந்த்ரமா ஏற்றது. மனஸ் என்பதன் அதிகாரியாக சந்திரன் ஆனான்.  மாற்று எண்ணங்கள், பேதங்கள் கொண்ட மனஸ் என்பதின் செயல்களை சந்திரன் நிர்வஹிக்கிறான்.  ஆத்மானம் – தான், தன்னுடைய, தன்னியல்பு என்ற அபிமானம் மனதில் குடி கொண்டது.  கர்மாவின் பலனாக, செய்ய வேண்டியவைகள்  என்பவை இதன் பொறுப்பு.

பரம புருஷனின் தலையிலிருந்து வானம், பாதங்களிலிருந்து பூமி, நாபியிலிருந்து அண்டவெளி  தோன்றின. 

சத்வம் என்ற குணம், மிகச் சிறந்த அறிவு.  சித்தம் என்ற அம்சத்துடன் இணைந்து இது விக்ஞானம் -மேம்பட்ட அறிவு என்ற தகுதியை தருகிறது.  மிகவும் சத்வமான தேவலோகத்தை தேவர்கள் பெற்றனர். ரஜஸ் என்ற குணத்தை பூமியும்,    மூன்றாவது குணமான தமஸ், பகவானின் நாபியில் அடைக்கலம் கொண்ட ருத்ர பார்ஷதர்கள், (ருத்ரனின் உடன் வசிப்பவர்கள் – ஏவலர்கள்) வானத்தையும் இடமாக கொண்டனர்.

முகத்திலிருந்து ப்ரும்மம் தோன்றியது.  அதனால் வர்ணங்களில் முக்யமானது ப்ராம்மணர் என்று ஆயிற்று.  குரு எனப்பட்டனர்.  புஜங்களிலிருந்து வெளிவந்தனர் க்ஷத்ரம்- அதன் வம்சத்தினர் க்ஷத்திரியர்கள் ஆனார்கள். காப்பாற்றுவதே இவர்கள் தொழில், குணம். மற்ற வர்ணத்தினரை பாதுக்காக்கும் பொறுப்பு ,அவர்களின் இடர்களை நீக்கும் வேலை இவர்களுடையது.  நேர்மையான  குணம், சமயோசிதமான செயல் இவைகளுடன்,உலக வாழ்க்கைக்கு பயன் படும் வகையில் வைஸ்யர்களை உத்பத்தி செய்தார். இவர்கள் அவரது துடைகளிலிருந்து தோன்றினர். இவர்கள் அரசர்களுக்கு உதவியாக வாணிபம் முதலியன செய்வர்.

பகவானின் பாதங்களிலிருந்து அடுத்த வர்ணத்தினர் தோன்றினர். தர்ம காரியங்களில் சிறு உதவிகளைச் செய்பவர்கள், இவர்களின் செயல்களால் ஹரி சந்தோஷப் படுகிறார்.

இந்த வர்ணத்தினர் தங்கள் செயல், தொழில் தர்மங்களால் ஹரியை பூஜிக்கின்றனர். எந்த வர்ணத்தில் பிறந்தனரோ அந்த குல தர்மத்தையே சிரத்தையாக அனுஷ்டித்து வந்தனர்,  இதில் க்ஷத்திரியர்கள், பகவானின் தெய்வீக கர்மத்தை செய்ய அவருக்கு இணையானவர்கள்.

தன் யோக மாயா பலத்தில் பகவான் செய்யும் செயலுக்கு நாம் எந்த விதத்தில் சேவை செய்ய முடியும்? இருந்தாலும் சொல்கிறேன். தெரிந்த வரை, நான் கேட்டபடி சொல்கிறேன்.  என் வார்த்தைகள் மற்ற இடத்தில் பொருளில்லாமல், அதாவது அதற்கு மதிப்பு இல்லாமல் போகலாம். அதை ஈடு கட்ட ஹரியின் கீர்த்திகளைப் பாடுகிறேன்.  இப்படி பாடுவதன் ஒரே லாபம், மனிதனுடைய வார்த்தைகள்,  பகவானின் குணங்களை பேசுவது தான் என்று சொல்வர்.  அதை ஸ்ருதி என்ற வேதமே, நிறைய சொல்லியிருக்கிறது.  ஆதி கவி ப்ரும்மாவே, தன் மனதில் பல ஆண்டுகளாக இந்த எண்ணத்தை வைத்திருந்தார்.  யோக மார்கத்தில் பல காலம் பயின்ற பிறகு ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு வெளியில் சொன்னார்.  ஆகவே, பகவானின் மாயா, மாயை அறிந்தவர்களுக்கும் புரிந்து கொள்ள முடியாது. அவருக்கே தெரியாது தான் என்ன செய்யப் போகிறோம் என்பது, மற்றவர்கள் என்ன சொல்ல., நானும் மற்ற தேவர்களும் எங்கும் தேடியும்,  எங்கள்  வாக்கும், மனமும்,  எதையும் காணாமல் திரும்பியதோ, அந்த பகவானுக்கு நமஸ்காரம்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஆறாவது  அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-40

அத்யாயம்7

மைத்ரேய முனிவர் சொன்னதைக் கேட்டு,  த்வைபாயனன்  என்ற பராசரரின்  மகன், விதுரர், பதில் சொன்னார்.  “ப்ரும்மன்!  சின்மாத்ரன் – சித் என்ற உயர்ந்த நிலையில் இருப்பவன் பகவான் என்பர்.  மாறுதல்கள் இல்லாத பரம் பொருள்.  லீலை தான் என்றாலும், நிர்குணன் என்று பெயர் பெற்றவன் குணங்களுக்கு, அதன் செயல் பாடுகளுக்கு ஏன் உடன் படுகிறான் ?  சிறுவர்கள் போல விளையாட்டு.  உலக வாழ்க்கை முறைகளை ஏன் ஏற்க வேண்டும்? நிவ்ருத்தி மார்கம் என்ற ஞான மார்கம் தானே அவருடையது?   ஸ்வத: த்ருப்த: என்பர்- தன்னில் தானே லயித்து இருப்பவர். அதற்கு எதிரான தன் மாயையால் உலகை சிருஷ்டி செய்தார் என்று சொன்னீர்கள். பின் அதே மாயையால் காத்தும் பின் கலைத்தும் ஏன் செய்ய வேண்டும்?  தேசம், காலம் இவற்றைக் கொண்டு தன்னிலிருந்து வேறாக ஒரு உலகை ஏன் படைக்க வேண்டும். நிறைவான அவபோதம்- அறிவும் ஆற்றலும் உள்ளவனுக்கு இது தேவையா?  ஒரே பகவான், எங்கும் நிறைந்திருப்பவன், அவனுக்கு கர்ம பலன் ஏது? செய்த வினையால் துன்பம் என்பதும் ஏது?  பகவானே ! எனக்கு பகவானே இப்படி உலக மாயையில் உழல்வது உவப்பாக இல்லை.  என் மனம் சங்கடப் படுகிறது. “

ஸ்ரீ சுகர் சொன்னார். இதைக் கேட்டு முனிவர் சிரித்தார்.  கேட்டவர் க்ஷத்திரியராக இருந்தாலும் அறிவு தாகம் உடையவர்.  பிறவி ஞானி.  பகவானின் சித்தம் என்பதை எப்படி சொன்னால் இவர் மனம் சமாதானம் அடையும் என்று யோசித்தவர் போல பதில் சொன்னார்.

“நான் என்ன சொல்ல, பகவானின் விருப்பம், அவருடைய மாயை.  பந்தமே இல்லாத ஈஸ்வரனுடைய  தயை. அதனால் கட்டுபடுகிறான்.

நீரில் சந்திரனின் பிம்பம் அலை பாய்வது போல தெரிவது சந்திரனின் தவறா? அவ்வாறே இல்லாத ஒன்று இருப்பதாக தெரிவது காண்பவரின் குணம்.  அது போலத் தான் ஆத்மா, பரமாத்மா என்ற பேதமும். அவனே ஞான மார்கத்தை உபதேசித்தான்.  வாசுதேவனாக வந்த பொழுது கருணையால் அதை பக்தி யோகம் என்பதால் மெள்ள மெள்ள மறைத்தான்.

சுய கட்டுப்பாடின்றி  தன் புலன் களின் வழியே செல்வதையே குணமாக கொண்டவன் கூட தன்னிலிருந்து வேறாக ஹரியை நினைத்து ஈடுபாட்டுடன் பக்தி செய்தால், அவன் கஷ்டங்கள் விலகுவதை கண் கூடாக காண்பான்.  தூங்கி எழுந்தவன் போல அவன் துன்பம் மறைந்து விடும்.

முராரி தன்னைப் பற்றி பாடும் அடியார்களின் அனைத்து கஷ்டங்களையும் தீர்த்து வைக்கிறான்.  ஆத்ம தத்துவம் அறிந்தவர்கள் அவனுடைய பாத தூளியை சேவிப்பதால் எதைத் தான் அடைய முடியாது?

விதுரர்  “நீங்கள் சொல்வது சரியே. என் சந்தேகம் விலகியது. இரு மார்கங்களுமே எனக்கு ஏற்றவையே. ஹரியின் மாயையே.  சரியாக சொன்னீர்கள்.  அடி மட்டத்தில் இருக்கும் மூடனோ,  அறிவிற்சிறந்தவனோ, இருவருக்கும் நன்மையே பக்தி யோகம்.  அதை மறந்தவன் தான் சிரமப் படுவான்.  பொருள் வேண்டுமென பக்தி செய்பவன் கூட,  அவனுடைய சரண சேவையால் அதை அடைவான்.  மது என்ற அரக்கனை அழித்த பகவானின் பாத சேவை எதைத் தான் தராது? நித்யம் ஜனார்தனனை வணங்கி வழிபடுவர்களுக்கு அடைய முடியாதது என்று எதுவுமே இல்லை.

மஹத் போன்ற இயற்கை சக்திகளை தானே சிருஷ்டி செய்தவன்,  நாளடைவில் அதில் சில மேன்மைகளை கூட்டி தானே அதில் பிவேசித்தான்.  அதனாலேயே முதல் புருஷன் என்று சொல்லப் படுகிறான்.  ஆயிரம் பாதங்கள், துடைகள், புஜங்கள் என்று விஸ்வரூபமாக வந்தவனிடம் உலகங்கள் அடைக்கலமாயின.  எவனிடத்தில் பத்து வித ப்ராணங்கள்,  ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்கள் மூன்றாக ஆனதும், வர்ணங்கள் பற்றி சொன்னதையும் மறுமுறை சொல்லுங்கள்.  தன் புத்திரர்கள், பேரன்கள், மருமகன்கள், மற்றும் தாயாதிகள் என்று ப்ரஜைகள்  பல்கி பெருகி பலவிதமாக இருந்தார்களே, யார் இதற்கு மூலமாக இருந்தார்கள் அதைச் சொல்லுங்கள்.  ப்ரஜாபதிகள் என்பவர்களை யார் நியமித்தார்? எப்படி தேர்ந்தெடுத்தார்?  சர்கம், அனுசர்கம் என்பதையும், மனு, மன்வந்தரங்கள், இவர்களின் தலைவர்கள் பற்றியும் சொல்லுங்கள். இவர்களின் வம்சங்கள், வம்ச சரித்திரங்களையும்,  பூமியின் மேல் உலகம், கீழுலகம்  இந்த விவரங்களைச் சொல்லுங்கள்.

இவைகளின் இருப்பு, ப்ரமாணம், பூவுலகம் என்பதையும் வர்ணித்துச் சொல்லுங்கள். கால் நடைகள், மனித, தேவர்கள், ஊர்வன, பறவைகள், இவைகளின் கட்டமைப்பு என்ன என்பதையும், கர்பத்தில் தோன்றுபவை எவை, வியர்வையில் பிறப்பவை, முட்டையிலிருந்து தோன்றும் த்விஜ-இரட்டை பிறப்புடைய பறவைகள். தானே இரண்டாக பிளந்து தோன்றும் ஜீவன்கள், இவை பற்றியும், உலகில் குணாவதாரம் என்பதையும், ஸ்ருஷ்டி,ஸ்திதி,சம்ஹாரம் என்பதையும், ஏற்படுத்திய ஸ்ரீநிவாசனின் உதார, பெருமை மிக்க பராக்ரமத்தையும் விவரித்துச் சொல்லுங்கள்.

வர்ணாஸ்ரம விபாகங்கள், ரூபம்,சீலம் போன்ற ஸ்வபாவங்கள், ரிஷிகளின் தோற்றம், வேலைகள், வேதத்தின் அறிவுரைகள், யாக கர்மாக்கள், அவைகளை சரிவர செய்ய வேண்டிய நியமங்கள். யோக முறைகள், கார்யம் (பலன்) இல்லாத கர்ம யோகம்,  சாங்க்யம் என்ற ஞான யோகம், தந்திரம், இதை பகவானே சொல்லியிருக்கிறார்.

இது தவிர, பாகண்டம் என்ற நாஸ்திக வாதம், அதன் குறைகள், கீழ் நோக்கிச் செல்லும் விஷயங்கள், ஜீவன்கள் செல்லும் வழிகள், எவைகள், எந்த அளவில் குணம், கர்மம் இவைகளிலிருந்து தோன்றுகின்றன,

தர்மார்த்த காம மோக்ஷம் என்ற நான்கு ,  இதன் நிமித்தங்கள், விரோதங்கள், சட்டங்கள், தண்ட நீதி, , விதியின் போக்கு, வேதம் காட்டும் வழி இவைகளையும்,

சிரார்தம் செய்வதன் விதி முறைகள், ப்ரும்மன்! பித்ருக்களின் சர்கம் என்பது என்ன?  க்ரஹ நக்ஷத்திர தாரைகள், இவைகள் காலத்தின் அங்கங்கள் என்று பார்த்தோம், இவை பற்றியும்,

தானம் செய்வதும், தவம் செய்வதும், குளம் வெட்டுவது போன்ற பூர்த்த செயல்கள், அதன் பலன், வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடும் பொழுது, மனிதனுக்கு என்ன தர்மம், பெரும் ஆபத்து வந்த காலத்தில் என்ன செய்ய வேண்டும்?

தர்மத்தின் பிறப்பிடமே என்று பகவானைச் சொன்னீர்கள்,  ஜனார்தனன் எந்த தர்மத்தை செய்தால் மிகவும் மகிழ்வான் ? யாரிடம் மிகவும் சந்தோஷமடைவான் என்பதைச் சொல்லுங்கள். தன் சிஷ்யர்கள், மற்றும் உடன் அனுசரித்து இருக்கும் பிள்ளைகள்,  இவர்கள் கேட்காமலே இவர்களுக்கு உபதேசம் செய்யலாம். நிறைய தத்வங்கள் சொன்னீர்கள். பலவிதமாக பரிணமிப்பவை. இவைகளை எப்படி அறிவது, பயன் படுத்துவது?

புருஷன் என்பவனின் உடலமைப்பு, சரியான இருப்பு என்பது என்ன? ஞானம், வேத பரமான அறிவு, இவைகளை குரு சிஷ்யர்களுக்கு எப்படி போதிப்பது?

நிமித்தங்கள் பற்றியும் சில அறிஞர்கள் சொல்லியிருக்கின்றனர்.  தானாக மனிதர்கள் ஞானம் பெற முடியாதா? சுயமான அறிவு எங்கிருந்து வரும்?  பக்தியோ, வைராக்யமோ, தானாக வருமா?

பல சந்தேகங்கள் நான் கேட்டு தெரிந்து கொள்ள விரும்புவது ஹரியிடம் உள்ள பற்றுதலால் தான், எந்த விதமாக தன் செயல்களை செய்கிறான் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வயதானதால் புத்தி மழுங்கி விட்டது. எல்லா வேதங்களும், யாகங்களும் தவம்,தானம் முதலியவைகளும், ஜீவனுக்கு அபய ப்ரதானம் செய்யும் பகவானுக்கு எதிரில் ஒன்றுமேயில்லை.

ஸ்ரீ சுகர் சொன்னார்: கௌரவ குலத்தின் ப்ரதானமாக இருந்தவன், முனிவர்களில் ப்ரதானமாக இருந்தவரிடம் கேட்டார். பகவத் கதையை சொல்ல வாய்ப்பு கிடைத்தது என்றெண்ணியோ, அவர் மிக்க மகிழ்ச்சியுடன் சிரித்தபடி சொல்லலானார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஏழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-42  

அத்யாயம்8

மைத்ரேய முனிவர்  பாகவதத்தைச் சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.

உலகில் முதன் முதலான ஆதி புருஷனான சங்கர்ஷணன் என்ற தேவன் மிகச் சிறந்த குணங்களுடையவன் என்று பெயர் பெற்றவனாக இருந்தான். சனக, சந்தன என்ற குமாரர்கள், அவரிடம் பர தத்வம் என்பது பற்றி தெரிந்து கொள்ள வந்து சேர்ந்தனர். அவர்களே நல்ல அறிவுடையவர்களே.  கண் முன் பகவான் வாசுதேவனின் அம்புஜாக்ஷம் -தாமரை போன்ற கண்கள் சிறிதளவே திறந்து ஆசிர்வதித்து, பெரும் அறிஞர்களைத் தோற்றுவித்ததைக் கண்டவர்கள்.

தேவ நதியில் ஸ்நானம் செய்து ஈரத்தலையுடன், ஜடை முடி தரித்த தபஸ்விகள் வந்து அவர் பாதத்தில் வணங்கி நிற்பதையும், ஆதிசேஷன் கன்னிகள்  பத்மங்களால் அர்ச்சிப்பதையும்,  கண்டவர்கள்.

அனுராகத்துடன் பாடுபவர்கள். அவர் சஹஸ்ர கிரீடங்களும் ஆதிசேஷனின் படங்களில் ப்ரதிபலிப்பதைப் பார்த்தவர்கள்,  சங்கர்ஷணர் நிவிருத்தி என்ற ஞான மார்கம் என்பதை  ஏற்றுக் கொண்டவர் என்பதை பாகவதர்கள்- பகவத் பக்தர்கள்  அறிவார்கள்.  சனத் குமாரர் கேள்விக்கு அவர் பதில் சொன்னார். தன் வாழ் நாளையே சாங்க்யம் என்ற துறையிலேயே செலவழித்தவர் அவர்.  அதே விரதமாக இருப்பவர்.

சாங்க்யாயனர் என்ற அவர், பரமஹம்ஸர்கள் எனப்படும் உயர்ந்த பண்டிதர்களில் முதல்வராக எண்ணப்படுபவர்.  பகவானின் விபூதிகளை அந்த குமாரர்களுக்கு போதித்தார். அதை அவர்கள் என் தந்தை பராசரருக்கு போதித்தனர்.   பின்னர் ப்ருஹஸ்பதிக்கும் போதித்தார். என் தந்தை, இந்த முதல் புராணம் என்பதை எனக்கு அருளினார். அதை உனக்குச் சொல்கிறேன். வத்ஸ! சிரத்தையுடன் கேட்கிறாய். ஆசார சீலன் என்று அறிவேன். கேள்.

உலகமே ப்ரளய ஜலத்தில் மூழ்கி இருந்தது.   ஆதிசேஷன் என்ற  பாம்புகளின்  அரசனே படுக்கையாக, அதில் பகவான் தூங்கிக் கொண்டிருந்தார்.   அசையாது கிடந்தார்.   மஹா பிரளய காலத்தில் உலகியல் சூக்ஷ்மங்களை, பஞ்ச பூதங்கள் முதலானவைகளை காலம் முதலிய சக்திகளை,  அந்த மாபெரும் வெள்ளத்தில் வீணாகாமல் காக்க தன்னுள் வைத்திருந்தார். , அக்னி மரக்கட்டையில் அடங்கி கிடப்பது போல தன் சக்திகளை மறைத்து இருந்தார்.  நான்கு யுகங்கள், அதே போன்ற ஆயிரம் யுகங்கள், தண்ணீரில் கிடந்தார்.  அதன் பின்  விழித்தவர், தன் சக்தியால் காலா என்ற தேவியை உயிர்ப்பித்தார். அவளிடம் கர்ம தந்திரங்கள் என்பவைகள் இருந்தன.  தன் உடலில் உலகங்கள் நீல வண்ணமாக இருப்பதையும் கண்டார்.

சூக்ஷ்மமான,  பொருள் நிறைந்த தன் கடாக்ஷத்தால்,  உடலினுள் இருந்த ரஜோ குணத்தை, இந்த கால என்ற சக்தியுடன் இணைத்து, உலரச் செய்து, தன் நாபியில் பிளந்தார். அதில் பத்ம கோசம் ( மகரந்தம் நிறைந்த தாமரை மலர்)) உடனடியாக எழுந்தது. காலா என்ற சக்தியின் தூண்டுதலால் தன் பிரகாசத்தால், விசாலமான அந்த நீர் நிலையை சூரியன் ப்ரகாசிப்பது போல. (ஆத்ம யோனி – தானே இரு பாலாராகவும் இருந்து) அந்த லோக பத்மம் – அதில் விஷ்ணுவின் அம்சமாக தானே ப்ரவேசித்தார். அதனுள் தானே வேதமயமான விதாதா- படைப்பவர் -ப்ரும்மா வாக ஆனார். அதனால் அறிஞர்கள் அவரை ஸ்வயம்புவம் – தானே தோன்றியவர் என்கிறார்கள்.

அந்த தாமரை பூவின்  நுனியில் விதை கூட்டில் இருந்தபடி உலகை பார்த்துக் கொண்டிருந்தார். நாலா திசையிலும் கண்களைச் சுழற்றி  பார்த்துக் கொண்டிருந்தவரின் முகம் – திசைக்கு ஒன்றாக நான்காக ஆயின.  அதில் இருந்தபடி யுக முடிவில், அலை வீசும் மாபெரும்  வெள்ளத்தின் நீரால்,  முழுதுமாக தடைப்பட்ட மூச்சுக்  காற்றை நீரின் வேகத்திலிருந்து வலுக் கட்டாயமாக விடுவித்துக் கொண்டு பத்மத்தில் இருந்த சமயம் தன்னையோ, தான்  ஆதி தேவன் என்பதையோ,  தானே ஏற்படுத்திய உலகியல்-லோக தத்வம் என்பதையோ  உணரவில்லை.

யாரது? நான் யார்? பத்மத்தில் இருக்கிறேன்? இந்த பத்மம் எங்கிருந்து வந்தது? எல்லையில்லாத நீர் பரப்பு, இதன் அடியில் என்னதான் இருக்கிறது?  எதன் மேல் இந்த பத்மம் நிலைத்து நிற்கிறது, எதுவுமே புரியவில்லை, என்று இவ்வாறு எண்ணியபடி அந்த பத்மத்தின் தண்டுகளின் வழியாக தண்ணீரை. அடைந்தார். அதன் மூலம் மூலமான நாபியை கண்டு பிடித்தார்.  ஒரே இருட்டு. தேடித் தேடி, அலுத்தார். திரும்பி வந்தார். தன் இடத்துக்கே, பத்மத்திலேயே வந்து யோசித்தார்.  மெள்ள மெள்ள ஸ்வாசம் திரும்பி வரவும் அறிவும் வந்தது. நீள உள் மூச்சு, வெளி மூச்சு வரவும், புத்தி வேலை செய்தது.  அந்த பத்மத்திலேயே சமாதி யோகத்தில் வசதியாக அமர்ந்து கொண்டார்.

காலம் சென்றது. அந்த அஜன், பிறவியற்றவன்,  யோக சாதனையால் ஓரளவு தெளிவு பெற்று, தன்னுள் நோக்கி தேடிப் பார்த்தது. எதுவும் புலப்படவில்லை.  முன் போலவே தாமரைத் தண்டினுள் நுழைந்து புறப்பட்டு, வெண்ணிறமான சேஷ படுக்கையைப் பார்த்து, அதன் வழியே பார்வையைச் செலுத்தி யாரோ அதில் படுத்திருப்பதையும் கண்டது.  யுகாந்த வெள்ளம், படம் எடுத்த பாம்பின் தலையில் இருந்த மணி பிரகாசமாக ஒளி விட, சூழ்ந்திருந்த இருட்டு விலகி , கண்கள் கூச, கீழ் நோக்கி ஆழ்ந்து நோக்கினார். பசுமையான கல் நிறைந்த மலை போன்ற உருவம், சந்த்யா கால வானம் போல, ரத்னங்களின் ஓளி பல வண்ணங்களைச் சிதறியடிக்க, அதிலிருந்து மணம் நிறைந்த பூக்களின் வாசனையுடன் வன மாலை,வேணு, இவைகளை கையில் ஏந்தி, கால்களில் மூவுலகையும் சுருக்கி விசித்ரமான திவ்யாபரணங்களை தரித்தவராக, அருகில் லக்ஷ்மி தேவி அமர்ந்திருக்கும் தேகத்தைக் கண்டார்.

மனிதர்கள், தங்கள் பலவிதமான தேவைகளை நிறைவேற்ற வேண்டி பலவிதமாக அர்ச்சனைகள், வேண்டுதல்கள் செய்து கொண்டும்,  எவருடைய பாத பத்மங்களை சேவிக்கிறார்களோ, அவர்களுக்கு கருணையுடன், சந்திரனின் ஒளிக்கு சமமான தன்  பாதங்களின் நகங்களின் ஒளி விரல்களிடையில் பரவியிருக்கும் அத்புதமான தரிசனத்தை தரும் பகவான்.

முகத்தில் மென்முருவல், அதுவே போதும் பக்தர்களின் தாபத்தை தீர்க்க, குண்டலங்களின் ஒளி கன்னங்களில் ப்ரதிபலிக்க, சிவந்த அதரங்கள், நாசியும், புருவங்களும், கதம்பம், கிஞ்ஜல்கம் , பிசங்கம் என்ற புஷ்பங்கள், போன்ற மஞ்சள் நிற ஆடையுடன், தன்னையே அலங்கரித்துக் கொண்டது போல மேகலை இடுப்பில் அணியும் நகை,  ஒட்டியானம் பளபளக்க, அனந்த தனம் என்ற மாலை, ஸ்ரீவத்ஸம் என்ற மணி மார்பில் துலங்க, மிகச் சிறந்த கேயூரங்கள், ஆயிரம் புஜங்களிலும் துலங்க, வெளியில் தெரியாத மூலம், புவனாங்க்ரிபேந்த்ர,(பூமியின் பாதங்கள்- பாதாளம் அதன் தலைவன் ஒரு நாகம்)  மஹீந்த்ர (தேவ லோகத்து நாகம்)  என்ற போகங்கள், நாகங்கள் சூழ்ந்து மறைத்திருக்க,  சராசரத்திற்கும் ஆதாரமான பகவான்,  நாலாபுறமும் தண்ணீரால் சூழப்பட்டவராக,  பூமியைத் தாங்கும் யானைகள் -திக் கஜங்கள் அருகில் தெரிய,  ஆயிரம் கிரீடங்களால், பொன்மயமான ஸ்ருங்கம், உச்சி பாகம், (தலை) கௌஸ்துப ரத்னத்தை தாங்கியபடி ஆவிர்பவித்தது.

 வேதங்களின் சாரமான தேன் வண்டுகளின் ரீங்காரமே தன் கீர்த்தியை பாடுவது போல லக்ஷ்மீகரமான வனமாலையுடன் ஹரியை, சூரியனோ, சந்திரனோ, வாயுவோ, அக்னியோ காண முடியாத த்ரிதாமம்- என்ற பிரகாசம் சுற்றிலும் சூழ்ந்து இருந்ததைக் கண்டார்.

அதே சமயம், அதன் நாபியிலிருந்து வந்த சரோஜம்- தாமரைப் பூ, நீரில் மூச்சு விட்டது போல, சிறிய சலனம்- அதைக் கண்டார், உலகை படைக்கப் போகும் விதாதா-ப்ரும்மா- அதுவே முதல் வெளிப்பாடு என்று உணர்ந்தார்.  கர்மபீஜம் – ஒரு செயலின் ஆரம்பம், ரஜோ குணத்துடன் கூடியது, ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்ய முதல் அடி எடுத்து வைத்தது போல, பார்த்தவுடன் துதி செய்தார்.  அந்த சிறு சலனத்தையே தனக்கு வழிகாட்டியாக அவர் எடுத்துக் கோண்டார்.  வெளியில் தெளிவாகத் தெரியாத பகவானின் அத்புதமான ஆற்றலை எண்ணி, அவரிடம் தன் மனதை செலுத்தியவராக ஆனார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், எட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-33

 அத்யாயம்9

ப்ரும்மா நா தழ தழக்க  துதி செய்யலானார்: பகவானே!  இன்று நான் உன்னைத் தெரிந்து கொண்டேன். வெகு நாட்களுக்குப் பிறகு, சாதாரண மனிதர்களுக்கு அரிதான காட்சி, இது தான் என்று சுட்டிக் காட்ட முடியாத உன் ஸ்வரூபம். உன்னையன்றி வேறு யார் இருக்கிறார்கள்?   அப்படி ஒருவர் இருந்தாலும்  உன் மாயையின் பல ரூபங்களை  அறிந்தவன் நீ ஒருவனே.

எனக்கு அனுக்ரஹம் செய்யவே வந்தாய். தமஸ் என்ற இருட்டை விட்டு தெளிவு என்பதன் உதயத்தால், என்னை வெளிக் கொணர்ந்து விட்டாய்.  ஆயிரக் கணக்கான அவதாரங்களில் இது முதல் அவதாரம். உன் நாபி என்ற பவனத்தில் நான் பிறந்தேன். இதை விட அதிகமாக, உன் ஸ்வரூப தரிசனம்.  சற்றும் குறைவில்லாத ஆனந்தம் மட்டுமே ஆனது. விஸ்வத்தை ஸ்ருஷ்டி செய்பவனை நான் நேரில் காண்கிறேனா என்று நம்பவே கூட முடியவில்லை.  பஞ்ச பூதங்கள், இந்திரியங்கள் என்ற அனைத்தும் என்னை வந்தடைந்தன.   புவன மங்களா! என் மங்களத்திற்காக என் த்யானத்தில் வந்து தரிசனம் தந்தாய்.  அதை உன் உபாசகர்களுக்கு தருவாய் என்று அறிந்திருக்கிறேன். அந்த பகவானுக்கு நமஸ்காரம்.  உன்னையே வணங்கி வேண்டுகிறன். நீ தயை செய்.

உன் சரணாரவிந்தத்தில் அன்றலர்ந்த தாமரையின் மணம்.  இதை நுகர்பவர்கள், ஸ்ருதியையே கேட்டு பழகிய காதுகள் உடைய பெரியோர்.  அவர்கள் பக்தியுடன் உன்  சரணங்களை வந்தடைந்திருக்கிறார்கள். அவர்களை உன் ஹ்ருதயம் என்ற அம்புஜத்தில் வைத்து பாதுகாக்கிறாய்.  மனிதர்கள் மனதில் பயம் வர காரணம் செல்வம், தன் தேகம், நண்பர்கள் இவர்கள் விஷயமாக கவலை, பிரியம், அவமானம், அதிகமான லோபம்- பேராசை. நான்,  எனது என்ற எண்ணம்- இவையே துன்பங்களின் ஆணிவேர்.   உன் பாதம் தான் அபயம் அளிக்கும். பயத்தைப் போக்கும்.

விதி வசத்தால் புத்தியை இழந்த சிலர் தான் உன்னிடம் பாராமுகமாக இருப்பர்.  உன்னை வந்தடையும் வரை அவர்கள் நம்பும் உலகியல் சுகங்கள் துக்கமே. நாள் முழுதும் பொருள் ஈட்டுவது போன்ற வேலைகள், இரவில் நித்ரை,  இப்படியும் சிலர் உலகில் சஞ்சரிக்கின்றனர்.  இவர்கள் உன்னைப் பற்றி பேசுவது கூட இல்லை.

நீ  வேதம் சொன்ன வழியில் செல்லும் அன்பர்களுக்கு அவர்களின் பாவம், யோகம் இவற்றை உன் ஹ்ருதயத்தில் தரிக்கிறாய்.  எந்த விதமாக உன்னை வழிபடுகிறார்களோ, அதே வழியில் அவர்களுக்கு அனுக்ரஹம் செய்கிறாய்.  தன் காரியமாக உன்னை ஆராதிப்பவர், தேவர்களேயானலும் உன் அருள் அவர்களுக்கு எளிதில் கிடைப்பதில்லை.  சர்வ உயிரினங்களையும் அன்புடன் அரவணைக்கும் ஒருவன் உனக்கு அந்தரங்க சினேகிதனாகிறான்.  சிலர் பலவிதமான யாக கர்மாக்களைச் செய்தும், தானம், தவம் இவைகளையும் உக்ரமான விரதங்களை அனுஷ்டித்தும், பகவத் ஆராதனம் என்றும் பல செயல்களை செய்வர்.

உன் லீலைகளுக்கு நமஸ்காரம். உன் அவதார குண, பெயர்கள், இவற்றை அறியாமல் சொன்னாலும் அதன் பலன் உடனே கிடைத்து விடுகிறது. பிறவியின் துன்பத்தை உடனே கடந்து விடுவார்கள். அந்த அஜன்-பிறப்பில்லாத பரம் பொருளுக்கு நமஸ்காரம்.

 நான், கிரிசன் என்ற மஹேஸ்வரன், தாங்களும் சேர்ந்து இந்த ஸ்ருஷ்டி, ஸ்திதி,லயம் என்ற உன் செயல்களைச் செய்கிறோம். இதையும் பிளந்து ஒரே விருக்ஷமாக- மரமாக- நிற்கிறாய். புவனத்ருமம் ஆன உனக்கு நமஸ்காரம்.

உலகம் தன் சுக சௌகர்யத்திற்காகவே முனைந்து தன் செயல்களை செய்கிறது.  உன்னை அர்ச்சனை செய்வதை விட இந்த ஆசையின் தாக்கம்  பலமாக இருந்தாலும் சிறிதே நினைத்தாலும் அந்த இடரை களைந்து நற்கதி அளிக்கிறாய். அந்த உனக்கு நமஸ்காரம்.

நானும் பயந்தேன். இரவும் பகலும் உன்னை ஆராதித்தேன். பல காலம் தவம் செய்தேன். யாகங்கள் செய்தேன். அந்த அதிமகாய (யாக ரூபன்) உனக்கு நமஸ்காரம்.

உயிரினங்களின் ஜீவன் நீ.  நீயே விரும்பி எடுத்துக் கொண்ட சரீரம் உன் அவதாரங்கள். அந்த புருஷோத்தமனுக்கு நமஸ்காரம்.

உலக க்ஷேமம் என்பதற்காக நீரில் மூழ்கி கிடந்தாய்.  அலை வீசும் பயங்கர பிரளய ஜலம்.  உன் நாபி பத்மத்தில் வந்தவன் நான். எனக்கு உன் அனுக்ரஹத்தால் மூவுலகும் படைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.  ப்ரும்மாண்டத்தையும் வயிற்றில் சுமந்த உனக்கு நமஸ்காரம். யோக நித்ரையில் ஆழ்ந்த உனக்கு நமஸ்காரம். இன்று நான் சகல ஜகத்துக்கும் ஆத்மாவான உன்னை, பவன் பவ்யமாக வணங்கும் உன்னை,  உன் கடாக்ஷ பலத்தில்,  முன் போல் உலகை சிருஷ்டிக்க ஆரம்பிக்கிறேன்.   அடைக்கலம் என்று வந்தவனுக்கு அருளும் உன் துணையுடன் படைக்கும் தொழிலில் மன தூய்மையுடன் செய்கிறேன். வேறு எந்த வித கெட்ட எண்ணமோ, கர்வமோ, என்னை அண்டாதிருக்கட்டும். உன் நாபி குகைக்குள் நான் இருந்த சமயம், அந்த சக்தியின் மேம்பட்ட அறிவாக நான் இருந்தேன். அன்று நான் கண்ட உன் உருவம், என்னால் விவரிக்க இயலாதது.

புராண புருஷணனான  நீ  எல்லையில்லாத கருணையே உருவானவன்,  உலகை புனர் நிர்மாணம் செய்ய எழுந்தவன்,  அன்புடன் கண்களாகிய தாமரையால் தடவிக் கொடுப்பது போல என்னைப் பார்த்து,    மதுரமான சொல்லால் என்னை ஆட்கொண்டாய்.  

மைத்ரேயன் சொன்னார்: தான் உருவானதை விவரித்த பின், மனதார ஸ்ரீ க்ருஷ்ணரை துதி செய்து விட்டு நிறுத்தினார்.  மது சூதனனும், கல்ப பிரளய ஜலத்தில் தான் கிடந்ததை  அவர் மிக வருத்தத்துடன் சொன்னதை புரிந்து கொண்டு, ப்ரும்மாவைப் பார்த்து சொன்னார். “வேத கர்ப, (வேதங்கள் உன்னிடம் அடைக்கலமாகி உள்ளன) ஸ்ருஷ்டி செய்வதை ஆரம்பி. நீ தற்சமயம் கேட்டது அனைத்தையும் உனக்கு முன்பே தந்து விட்டேன்.  திரும்பவும் நிறைய தவம் செய். என் சம்பந்தமான வித்யைகளையும் கற்றுக் கொள். அவைகளைக் கொண்டு மனதின் ஆழத்தில், எப்படி உலகங்கள் அமைய வேண்டும் என்பதைக் காண்பாய்.  அதன் பின், உன் உள்ளும், உலகிலும் பக்தியுடன், ஒரு முகமாக இருந்து என்னைக் காண்பாய். ப்ரும்மன்!  இந்த லோகங்களும், நீயும், என்னில் என்றும் இருப்பவர்கள், என்னைச் சார்ந்தவர்களே.

மரக் கட்டையில் அக்னி போல சர்வ பூதங்களிலும் நான் உறைந்து இருப்பதை, உலகம் அறியட்டும். அதனால் கவலையை விடு.  வகை வகையான செயல் பாடுகளுடன், ஏராளமான பிரஜைகளை ஸ்ருஷ்டி செய். உன் ஆத்மா அதனால் வருந்தாது. பல ஆண்டுகள் என் அனுக்ரஹத்துடன் தொடர்ந்து செய்வாய்.  நீ முதல் ரிஷி. உன்னை ரஜோ குணம் பாதிக்காது.  உன் மனம் என்னிடத்தில் நிலைத்து நிற்குமாதலால், பிரஜைகளை உத்பத்தி செய்யும் சமயத்திலும் பாதிக்கப் பட மாட்டாய்.   உயிரினங்கள், அவர்கள் தேகம் என்பன பற்றி எதுவுமே தெரியாதே என்று தயங்க வேண்டாம்.  என்னை பார். பஞ்ச பூதங்கள், முக்குணங்கள் இவைகளுடன் ஆத்மாவும் சேர்ந்து உருவாக்கு.  ஏற்கனவே நான் காட்டியிருக்கிறேன். தாமரைத் தண்டில் நீ  அடி வரை தேடி வந்தாயே, அந்த சமயம் காட்டினேன்.  நீ இப்பொழுது சொன்னாயே, என் சரித்திரம், துதி செய்தாயே, அதுவும், தவம் செய்தாயே, யோக நிஷ்டையில் ஆழ்ந்து இருந்தாயே, இவையும் என் அனுக்ரஹமே.  உலகங்களை படைத்து ஜயிக்க வேண்டும் என்று என்னை வேண்டி துதி செய்தாய். அதனால் மகிழ்ந்தேன்.  பத்ரமஸ்து தே- உனக்கு நன்மைகள் உண்டாகட்டும். என்னை நிர்குணன் என்றும் குணமயன் என்றும் சொன்னாய்.  இந்த துதி நிலைத்து நிற்கும். 

பூர்த்தம்- குளம் வெட்டுதல் போன்ற சமூக சேவைகள், தவம் – மனதை அடக்கி தன் மேன்மைக்காக தியானம் செய்தல், யாக காரியங்கள், தானம், யோக சமாதிகள், இப்படி பல விதமாக மனிதர்கள் இவை என்னை சந்தோஷப் படுத்தும் என்று விஷயம் அறிந்தவர்கள் சொல்வார்கள்.  ஆத்மா வின் ஆத்மா நான்.  சரீரம் உடைய ஜீவன் களின் உள்ளுறையும் ஆத்மா நானே.   சர்வ வேதமயமான ஆத்மயோனியான நான் அனைத்து உலகிலும் பரவியிருப்பவன் என்பதை நினைத்து உன் ஸ்ருஷ்டி என்ற தொழிலை ஆரம்பி முன் போலவே உலகம் நிறையட்டும். ப்ரதான புருஷன், லோகேஸ்வரன் தன் சுய ரூபத்தையும் காட்டி அனுக்ரஹம் செய்து விட்டு, மறைந்தான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், ஒன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-44

அத்யாயம்10

விதுரர் ஒரு சந்தேகம் என்றார்.   பகவான் மறைந்த பின் ப்ரும்மா தன் படைப்புத் தொழிலை எப்படிச் செய்தார்.  லோக பிதாமஹர் – உலகிற்கே பாட்டனார் ஸ்தானத்தில் என்பர்.  எப்படி பிரஜைகள், எந்த விதமாக, உடல், மனம் என்ற வித்தியாசமான உயிரினங்கள் எப்படி தோன்றின.  வரிசையாக சொல்லுங்கள். உங்களுக்கு தெரியாதது இல்லை.

 மைத்ரேய முனிவர்: விரிஞ்சி – ப்ரும்மா அதன் பின் நூறு ஆண்டுகள் தவம் செய்தார்.  பகவான் சொன்னபடியே, தன் ஆத்மாவை பரமாத்மாவில் வைத்து, கடும் தவத்தில் ஈடு பட்டார்.   நாளடைவில் நீரில் விளையும் தாமரை, இதுவரை அசையாதிருந்தது, வாயு லேசாக தொட்டவுடன்,  மெள்ள நடுங்கியது. இவருடைய தவம் தன்னுள் தான் என்று லயித்து இருந்த சமயம் அவரைச் சுற்றி ஏதோ ஒரு சக்தி வீர்யம் மிக்கதாக தோன்றி வாயுவுக்கு வேகத்தை கொடுத்து, நீரிலும் சலனத்தை ஏற்படுத்தி விட்டது.  அதை பார்த்த அந்த நீர் நிலை, பழைய நினைவு வந்தாற்போல் இப்படித்தான் நானும் ஒரு சக்தியால் அசைக்கப் பட்டேன் என்றது.  பத்ம கோசம் பகவானின் தூண்டுதலால், தன்னைத் தானே உலுக்கி இரண்டாக, மூன்றாக, பதினான்காக,  பிரிந்தது.  இப்படித்தான் உலகில் ஜீவன்கள் பல்கி பெருகின. பரமேஷ்டி- பரம புருஷனுடைய உத்தேசம், சங்கேதமாக சொன்னது போல  இந்த நிகழ்ச்சி அமைந்தது.

விதுரர் ஆச்சர்யத்துடன்,  ஹரியினுடைய அத்புதமான செயல். பின்  காலத்தை எப்படி கணக்கிட முடிந்தது? என்றார்.

முக்குணம் என்பதன் பாதிப்பு அதன் ஒன்றுடன் ஒன்றான சம்பந்தம் ஒரு ஒழுங்கில் வரவில்லை. பகவான்  சுலபமாக, தானே அதை ஒதுக்கீடு செய்து காட்டினர்.  விஸ்வம் ப்ரும்மம் – தன்மாத்ரம் என்ற உணர்வுகள் (பார்வை,கேள்வி,மணம்,ருசி,ஸ்பரிசம்)  விஷ்ணுவின் மாயையால் ஏற்படுவது.   வெளிப்படாத ஈஸ்வர சக்தியால் காலம் பிரிக்கப் பட்டது.  இந்த சமயம் (நிகழ்)  முன்னால்,(கடந்த) பின்னால் (வரும்) என்று பிரித்தார்.  படைப்பும் ஒன்பது விதமாக ஆயிற்று. ஒன்று இயற்கை, மற்றது செயற்கை என்பதாக.

காலம், பௌதிக பொருள்,(த்ரவ்யம்- அடிப்படையான கச்சா பொருள்), குணம் என்பன மூன்று மூன்று விதமாக ஆயின. இரண்டாவது அஹம் என்ற பாவம் (தன்னியல்பு) இதில் பௌதிகமான பொருள், ஞானம் (அறிவு), செயல் – இவைகளின் வெளிப்பாட்டினால் உண்டாவது.

மூன்றாவது உயிரினம் தோன்றுவது, தன்மாத்ரம் என்ற உணர்வுகளும், த்ரவ்யம் என்ற பௌதிக பொருளுடன் சேர்ந்து உண்டாவது. (த்ரவ்யம்- மாறாத இயற்கைத் தத்துவங்கள்)  இதன் சக்தி இணைந்து தோன்றும்.

நாலாவது, இந்திரியங்களுடனான கூட்டு. இது ஞானமும், செயலும் சேர்ந்து ஏற்படும். வைகாரிகம் என்பது தேவர்களின் ஸ்ருஷ்டி. ஐந்தாவது மனம் என்ற தத்துவத்தின் ஆளுமையில் அமையும். 

ஆறாவது தமஸ் என்ற குணம். புத்தியின் உதவியின்றி, படைப்பது. – இந்த ஆறும் ப்ராக்ருத (இயற்கை) என்பன.

வைகாரிகோ என்பவை- ரஜஸ் என்ற குணம் பிரதானமானவை.   ஹரியின் எண்ணத்தில் உதிப்பது. ஏழாவது என்பதில் முக்கியமான படைப்பு, ஆறு பகுதிகளாக உள்ளன.  வனஸ்பதி (காடுகளில் தானே வளரும் மரங்கள்) ஓஷதி எனும் செடிகள், கொடிகள், தடிமனான வெளிப்புறம் (த்வக்- மேல் தோல்) நிறைந்த திடமான மரங்கள், – இவைகளின் உள் புறம் ஈரமாக இருக்கும், புத்தி அல்லது மனம் என்ற தத்துவம் மட்டும் இல்லாதவை. தமஸ் என்ற குணம் விசேஷம்.  உள்ளூற ஸ்பரிசம் என்ற உணர்வு உடையவை.

எட்டாவது படைப்பு குறுக்காக உடலமைப்பு உள்ளவை. (கால் நடைகள்- நிமிர்ந்து நிற்காமல் சஞ்சரிப்பவை) இதில் இருபத்தியெட்டு விதங்கள் என்பது ஒரு கணக்கு.  இவைகளுக்கு அறிவு இல்லை, மிக தாமசமானவை. உணர்வு என்ற தத்துவத்தால் மட்டுமே அறியப் படுபவை.  வாசனை மற்றும் ருசியை அறிபவை. தேனீ  போன்றவை.

காளை, மஹிஷம்,(எருமை), மான், பன்றி, பசுக்கள், (antelope) ஒரு வகை மான், இரட்டை நகங்கள் உடைய மிருகங்கள், ஒட்டகங்கள், குதிரை, கழுதை, கோவேறு கழுதை, காளையில் ஒருவகை, எட்டு கால்களுடன் பனி நிறந்த மலைப் பிரதேசங்களில் காணப்படுவது, யாக் என்ற வளர்ப்பு மிருகம், இவைகள் ஒரு நகம் உடையவை. பாலூட்டிகள்.  

ஐந்து நகங்கள் உடையவை:  நாய், குள்ள நரி, ஓனாய், புலி, பூணை, முயல், முள்ளம் பன்றி, சிங்கம், குரங்கு, ஆடு, ஆமை, உடும்பு, முதலை வகைகள்,  கழுகு, கருடன், கொக்கு,கழுகு ஜாதி ஸ்யேன-பாஸ முதலியன,  கரடி, மயில், ஹம்சம்,  பொதுவான பறவைகள், சக்ரவாகம், காகம், ஆந்தை முதலியன- இவைகள் ஆகாயத்தில் பறக்கும் பறவைகள்.

கீழ் நோக்கி நகருபவை ஒன்பதாவது.  ஊர்வன.

பாலூட்டிகளில் ஒருவித ஜனங்கள், ரஜோ குணமே அதிகமானவர்கள், தன் வேலையே கவனமாக, துக்கத்திலும் சுகமாக இருப்பவர்கள்,

வைக்ருதர்கள் என்பதில் மூன்றுவகையினர். தேவ சர்கம் என்பவர்- பிறப்பில் தேவர்கள், இதிலும் எட்டு வகையினர்.  இவர்கள் அறிவுடையோர். 

பித்ருக்கள், அசுரர்கள்,கந்தர்வர்கள், அப்சரஸ் என்ற ஜாதியினர், சித்தர்கள், யக்ஷ, ராக்ஷஸர்கள், சாரணர்கள், பூத ப்ரேத பிசாசங்கள், வித்யாதரர்கள், கின்னரர்கள், என்ற பத்து பிரிவினர், விஸ்வஸ்ருக் என்ற பகவானால் படைக்கப் பட்டவர்கள். 

 அடுத்து, வம்சங்கள், மன்வந்தரங்கள் பற்றி சொல்கிறேன். ஆத்மபூ என்ற ஹரி தன் ரஜோ குணத்தினால் ஒவ்வொரு கல்பத்திலும்-யுகத்திலும் தன்னைப் போலவே, எல்லையில்லாத தன் சங்கல்பத்தால், தன் ஆத்ம ஸ்வரூபமாக –(தன்னையே நகல் எடுத்தது போல) ஸ்ருஷ்டித்திருக்கிறார்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பத்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29

அத்யாயம்11 

மைத்ரேயர் தொடர்ந்தார்:   நல்ல விஷயங்கள் எல்லையின்றி இருக்கின்றன. முடிவாக அனைத்தையும் இணைப்பது,பரமாணு என்று சொல்லலாம்.   பொருள்களின் அடிப்படை அதுவே. ஒரு பொருளின் உருவம், அதன் செயல்படும் போக்கு இதை எது நிர்ணயிக்கிறது?  ஏதோ ஒன்று இது தான் என்று வரையறுக்க முடியாமல்  மறைந்து அல்லது தொக்கி நிற்கிறது. அதை தான் பரமாணு என்பர்.

இவ்வாறே காலமும், சூக்ஷ்மமோ, ஸ்தூலமோ,  தீர்மானமாக இது தான் என்று அனுமானம் செய்ய இயலாது. பகவானும் அவ்வாறே. வ்யக்தமாக- தெளிவாக கண்ணுக்கு புலப்படாது ஆனால் இருப்பதை அறிய முடியும். காலமும் பரமாணுவே. (அணுவிலும் மிகச் சிறிய அணு)  சத்- மூலப் பொருள் (கச்சா பொருள்-அடிப்படை வஸ்து-எந்த உருவமும் அமைய அதன் மிகச் சிறிய பாகம்  மண் குட த்திற்கு மண் தேவை என்பது போல) காலத்தின் அளவு கோல் பரமாணு என்ற மிகச் சிறிய பாகம்.  

அணு, பரமாணு என்ற இரண்டு. த்ரஸரேணூ – சூரிய ஒளிக் கற்றையில் தூசிகளின் துகல்கள் போல மிகச் சிறிய அளவு.  இதில் மூன்று வகை: வலையில் விழும் சூரிய ஒளி, வானத்திலிருந்து ஆகாயத்தின் ஒரு துளி விழுந்தது போல, – இதிலும் மூன்று வகைகள்: ஒன்று वेध:  लव निमेष  என்பன. त्रुटि -நொடி- இதன் நூறில் ஒன்று வேத:, மூன்று வேதங்கள் லவ, மூன்று லவங்கள் நிமேஷம் – இவைகளின் மூன்று பங்கு ஒரு க்ஷணம். ஐந்து க்ஷணங்கள் – லகு -இவைகளின் கூட்டுப் பகுதி, காஷ்டா (काष्ठा) எனப்படும்.  लघु என்பதன் பதினைந்து பங்கு  ‘ நாடிகா’. அதன் இரு மடங்கு முஹூர்தம்.  ப்ரஹரம், ஷட்யாமம், சப்தயாமம் என்று எண்ணிக்கை தொடரும். பன்னிரண்டின் பாதி -ஆறு என்பது நான்கு விரல்களின் நான்கு பங்கு.  ஒரு லிட்டர் தண்ணீர் உள்ள பாத்திரத்தில், ஒரு உளுந்து அளவு துவாரத்தில் பொன்னாலான குண்டு (mudhdhu) ஒன்றால் தடைக்கல்கொடுத்து, தண்ணீர் முழுவதும் வெளியாக எடுக்கும் நேரம் ஒரு யாமம். நான்கு யாமங்கள், அதன் நான்கு பங்கு அதாவது பதினாறு யாமங்கள் ஒரு நாள்.  ஒரு பக்ஷம்   பதினைந்து நாட்கள்.  இவை சுக்லம் என்றும் க்ருஷ்ண என்றும் இரண்டும் சேர்ந்து மாதம்.  பித்ருக்களுக்கு அது பகலும் இரவும்.  இரண்டு மாதங்கள் ஒரு ருது – பருவ காலம்.  ஆறு அயனங்கள்- தக்ஷிணம், உத்தரம் என்று.  இரண்டும் சேர்ந்து வருஷம் ஆகும்.  நூறு ஆண்டுகள் மனிதனின் ஆயுட்காலம் – பரமாயுள் – என்பர்.

க்ரஹ, உப க்ரஹங்கள், நக்ஷத்ர , என்ற சக்கரம் பரமாணுவிலிருந்து எண்ணப்படும்.   வருஷம், சம்வத்ஸரம், பரிவத்ஸர, இடா வத்ஸர , அனு வத்ஸர, வத்ஸரம் என்று பேச்சு வழக்கு.

க்ருதம், த்ரேதா, த்வாபரம், கலி என்று நான்கு யுகங்கள். தேவர்களின் இருபத்திரண்டு வருஷங்கள் சாவதானம் எனப்படும். நான்கு, மூன்று இரண்டு, ஒன்று என்று க்ருத யுகத்திலிருந்து வரிசையாக எண்ணப்படும். இரண்டு ஆயிரம், இரு பங்கு, நூற்றுக் கணக்கான என்று எண்ணிக்கைகள். சந்த்யா கால இடைவெளிகளில் காலம் கணக்கிடப்பட்டு நூறு நூறு என்ற வகையில் கணக்கிட்டு யுகங்களை நிர்ணயிக்கிறார்கள். க்ருத யுகத்தில் தர்மம் நான்கு கால்களுடன் இருக்கும்.  (அடுத்து வரும் யுகங்களில் குறைந்து கொண்டே வந்து கலி யுகத்தில் ஒரு காலுடன் நிற்கும்) 

 மூன்று உலகிலும் ஆயிரம் யுகங்கள், ப்ரும்மாவின் தோற்றத்திலிருந்து நாளாகவும், விஸ்வக்ருக்- உலகை படைத்தவர் கண் மூடி இருக்கும் காலம் வரை இரவு என்றும் வகைப் படுத்தினர்.  இரவு முடியும் சமயம் லோக கல்பம் ஆரம்பிக்கும்.  மநு என்பவர்கள்  பதினான்கு பகல்களை ஆளுவர். தங்கள் கால நியமங்களை .  அவர்களே நிர்ணயித்துக் கொள்வர். மன்வந்தரங்களிலிருந்து மனிதர்கள். அவர்கள் வம்சத்தினர் ரிஷிகள், தேவர்கள் எனப்படுவர்.  ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் தேவேந்திரன் என்ற பதவியை ஒருவர் ஏற்பார், மற்ற தேவர்களும் அதே போல தேர்ந்தெடுக்கப் படுவர்.

ஸ்ருஷ்டியின் தினசரி என்று ப்ரும்மாவில் தொடங்கி மூவுலகிலும்  நடைமுறையில் உள்ளது. கால் நடைகள்., பித்ருக்கள், தேவர்கள்- இவர்களின் தோற்றம், அவர்கள் கர்ம பலன்.

மன்வந்தரங்களில் பகவான், சத்வமான தன் மூர்த்திகளுடன், உலகை காக்கிறார்.  தாமஸமான குணம் மட்டுமாக, தன்னை அடக்கிக் கொண்டு தின முடிவில் மௌனமாக, செயலின்றி இருப்பார். அவரை அனுசரித்து பூ முதலான மூன்று உலகத்தினரும், நிசி என்ற இரவு வந்தவுடன், சூரிய சந்திரர்களும் இன்றி, சங்கர்ஷண என்ற அக்னி தகிக்கும் அதில் இருப்பர். அச்சமயம் ப்ருகு முதலானோரை, மஹர் லோகம் செல்ல வேண்டுவார்கள்.  

உடனடியாக கல்ப முடிவு என கடல்கள் ஒன்றாக பொங்கி எழுந்து, சண்ட மாருதங்கள் தட தடக்க, ப்ரும்மாண்டமான அலைகள் மேலெழ ப்ரளயமாக மூழ்கடிக்கும். அதன் முடிவில் அனந்தனை படுக்கையாக கொண்டு பகவான் யோக நித்ரையில் ஆழ்வார்.  ஜனங்களும் அலை அலையாக வந்து  துதி செய்வர்.  கால கதி இவ்வாறு தினம் இரவு என்று மாறி மாறி வரவும், இன்று வரை நூறு மனித ஆயுள், அதாவது ஒரு மனித ஆயுள் நூறு ஆண்டுகள், அது போல நூறு பரமாயுள் எனப்படும். அதை முதல் பாதி, பின் பாதி என்று பிரித்தனர். தற்சமயம் நாம் இருப்பது இந்த இரண்டாவது – பரார்தம்- பின் பாதி.

முதல் பரார்தத்தில்- முன் பகுதியில், , ப்ராம்மோ என்ற ஒரு மகான் இருந்தார்.  அச்சமயம் தோன்றிய கல்பம் – அதற்கான ப்ரும்மா சப்த ப்ரும்மா எனப்பட்டார்.  அதன் முடிவில் அடுத்த கல்பம் பாத்மம் எனப்பட்டது.  அந்த சமயம் தான் ஹரியின் நாபி கமலத்திலிருந்து உலகம் என்ற தாமரை உதயமாயிற்று.   அதன் பின் வாராஹ என்ற கல்பம் வந்தது.  அச்சமயம் ஹரி ஸூகர என்ற பன்றி வடிவில் தோன்றினார்.   இதன் மறு பாதியில்,  ஆதியும் அந்தமும் இல்லாத, ஜகதாத்மாவான  பகவானுக்கு பணி செய்ய நிமேஷ என்பவரை நியமித்தனர்.   இந்த சமயம் அல்லது காலம், பரமாணு  முதலியவைகள், இதன் இரண்டாவது பாதியில்  பூமியின் பெருகி வளர்ந்த விஸ்தீர்ணம்,  பல வித மாறுதல்களுடன் விசேஷங்களுடன் சூழப்பட்ட அண்ட கோசம்,  வெளிப்புறமாக ஐம்பத்தைந்து  கோடி வளர்ந்து விட்டிருந்தது.  பத்திற்கும் மேலான பரமாணுவாக அவர் ப்ரவேசித்த அண்ட கோசம், பல கோடி அண்ட ராசிகளாக பெருகி விட்டிருந்தன.  இந்த காரணங்களால், அதை அக்ஷரம் ப்ரும்ம என்றனர்.  இது தான் மஹாத்மாவான பரம புருஷனின் விஷ்ணுவின் தாமம்- இருப்பிடம் ஆயிற்று.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பதினொன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-49

அத்யாயம்12

மைத்ரேயர் தொடர்ந்தார்.  பரமாத்மாவின்  வழி காட்டலில் பகவானின்  காலம்  என்பதைப் பற்றி இதுவரை சொன்னேன்.  வேத கர்ப – தன்னுள் வேதம் அனைத்தையும் வைத்திருப்பவன் என்ற பகவானின் குணம் என்பதை நான் அறிந்தவரை விவரிக்கிறேன்.

படைத்தல் தொழிலை முதன் முதலில் ஆரம்பித்த சமயம், அவித்யா வ்ருத்தி:- அறியாமையின் வெளிப்பாடு என்ற தாமஸம் நிறைந்த உயிரினங்களே தோன்றின.  மஹா மோஹம், போகத்தில் நாட்டம், க்ரோதம், கண்மூடித் தனமான க்ரோதம் , அதன் முடிவில் தானே அழிவேன் என்ற பயம் இத்துடன் தன் முதல் படைப்பைப் பார்த்து ப்ரும்மாவே மகிழ்ச்சியடையவில்லை. பகவானையே நினைத்து மற்றொரு புதிய பிறவிகளை உருவாக்கினார்.  சனகன், சனந்தன், சனாதனன் மற்றும் சனத்குமாரன் என்ற நால்வர்  – பிறவியிலேயே துறவிகளாக, உலக வாழ்வில் நாட்டமில்லாதவர்களாக பிறந்தனர்.  அவர்களைப் பார்த்து ஸ்வயம்பூவான ப்ரபு சொன்னார்,  புத்திரர்களே!  பிரஜைகளை உருவாக்குங்கள், என்றார்.  அவர்கள் அதை விரும்பவில்லை.  பிறவியிலேயே வாசுதேவ பராயணர்களாக இருந்தனர். மறுத்தனர். இதை தனக்கு செய்த அவமானமாக கருதிய அவர், அந்த நிமிஷம் தோன்றிய கோபத்தை அடக்கவே முயன்றார். ஆனால் அது அவர் புருவத்தில் ஒன்றாக கூடி அந்த  கோபமே நீல லோஹிதனான குமாரன் தோன்றி விட்டான். அந்த சிசு  பலமாக அழ ஆரம்பித்தது. தேவர்களுக்கு முன்னோடியான பவன் என்ற பகவான் அவர்தான். ஜகத்குரோ, எனக்கு நிறைய பெயர்கள் வேண்டும்.  தங்கும் இடங்கள் வேண்டும்.  அதைச் சொல்லுங்கள் என்றார்.   

அதைக் கேட்டு பாத்மபுவர்- பத்மத்தில் தோன்றிய ப்ரும்மா, சமாதானமாக பதில் சொன்னார்.  நீ வேண்டியதை அவசியம் செய்கிறேன், என்று அன்புடன் சொல்லி, பெயர் வைக்கிறேன், பிறந்த உடனேயே அழுதாயா, அதையே உனக்கு பெயராக வைக்கிறேன்.  தேவர்களில் சிறந்தவனே, என் மகனே, ஆரவாரித்து அழுதாய், (ரோதனம்-அழுகை) அதனால் உலகில் உன்னை ருத்ரன் என்றே அழைப்பர் என்றார். இந்திரியங்கள், வாயு, ஆகாசம் முதலான பஞ்ச பூதங்கள், சூர்ய சந்திர, அக்னி இவர்களும்,  முன்னமேயே என்னால் ஏற்படுத்தப் பட்டனர் என் மனதில் ஏற்பட்ட, மன்யு-மநு, மஹினசோ, (அசு:-ப்ராணன்), மஹேசான அல்லது மஹான்சிவ,ருத த்வஜ:, உக்ர ரேதஸ், ( தாங்க முடியாத வீர்யம்) பவன், காலன், வாம தேவன், த்ருத வ்ரதன் ,- இவை உன் பெயர்கள்.

ருத்ரனே! உனக்கு,  புத்தி, வ்ருத்தி, உஸனோமா, நியுத்சு:, ஸர்ப்பி, இலா, அம்பிகா, இராவதீ, சுதா, தீக்ஷா, ருத்ராணீ என்று  ஸ்த்ரீகள்.  

இந்த பெயர்களையும்  பதவிகளையும், இந்த பெண்களையும் ஏற்றுக் கொள்.  இவர்களுடன் படைப்பு செயலைச் செய்.  நீ ப்ராஜபதி. நிறைய பிரஜைகளை உருவாக்கு.  இவ்வாறு ப்ரும்மாவின் வழிகாட்டலில், பகவான் நீல லோஹிதன் தன் சத்வ குணத்தால் தனக்கு சமமான பிரஜைகளை படைத்தார். ருத்ரர்கள், ருத்ரனால் படைக்கப் பட்டவர்கள் இவர்களால் உலகம் நிரம்பியது. கணக்கில்லாமல்  இப்படி ருத்ர கணங்கள் தோன்றவும் ப்ரஜாபதி யோசித்தார்.  சுரோத்தமா!  (ருத்ரன் முதல் தேவன் என்பதால்) போதும், போதும். இது போன்ற பிரஜைகள் போதும். சற்று நிறுத்து. நீயும் தவம் செய். உனக்கு நன்மையுண்டாகட்டும். உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் நன்மை உண்டாகட்டும். தவத்தால் தான் முன் ஒருமுறை நீயே உலகை படைத்தாய். தவம் தான் விளக்கு. பரம் ஜோதி. தவத்தால் தான் சகல ஜீவ ராசிகளிலும் அந்தர்யாமியாக இருக்கும் அதோக்ஷஜன் எனும் அவரை மனிதன் அடைகிறான்.

மைத்ரேயர் தொடர்ந்தார்: இவ்வாறு வாகீசன் (ப்ரும்மா) வேண்டிக் கொண்டபின் அவரும் தவம் செய்ய புறப்பட்டார்.  அதன் பின் ப்ரும்மா தன் ஆழ்ந்த தியானத்தால் பத்து பிள்ளைகளைப் பெற்றார்.  உலகில் நல்ல பிரஜைகள் உருவாகவேண்டும் என்பதற்காக. பகவானைப் போலவே சக்தியுடையவர்களாக பிறப்பித்தார். மரீசி, அத்ரி, ஆங்கிரஸ், புலஸ்த்யர், புலஹ:, க்ரது:, ப்ருகு, வசிஷ்டர், தக்ஷன், பத்தாவதாக நாரதர். 

துடையிலிருந்து நாரதர், தக்ஷன் கட்டை விரலில் இருந்து, ஸ்வயம்பூவின் ப்ராணனில் இருந்து வசிஷ்டர், அவருடைய சருமத்திலிருந்து ப்ருகு, கையிலிருந்து க்ரது:, நாபியிலிருந்து புலஹர், காதுகளிலிருந்து புலஸ்தியர், ஆங்கிரஸ் ரிஷி முகத்திலிருந்து, கண்களிலிருந்துஅத்ரி, மரீசி மனசிலிருந்து  என்று பத்து பிள்ளைகள் பிறந்தனர். தர்மம் ஸ்தனங்களிலிருந்து – அந்த இடத்தில் நாராயணர் இருந்தார். அதர்மம் பின் பகுதியில் – அதிலிருந்து உலகம் பயப்படும் ம்ருத்யு வந்தான். ஹ்ருதயத்தில் காமன், புருவத்தில் க்ரோதம், கீழ் உதடுகளில் லோபம், வாயிலிருந்து வாக்கு, கடல்கள் மேட்ரம் என்ற ஜனன உறுப்பிலிருந்து,  நிருரிதி: பாயுவிலிருந்து, நிழலில் இருந்து கர்தமர், இவர் தேவஹூதி என்பவளை மணந்தார்.  மனசிலிருந்தும், தேகத்திலிருந்தும் இவ்வாறு மக்களைப் பெற்றார்.  வாக்கு மகள் தான் ஆனாலும் ஸ்வயம்பூ அவளை விரும்பினார். அவள் விரும்பாவிட்டாலும் அவளை வேண்டினார் என்று கேள்வி.  அதர்மமாக இச்செயலைச் செய்த  தந்தையை, பிள்ளைகள் மரீசி முதலானோர், கண்டித்தனர்.  இது நியாயம் அல்ல. இதுவரை நடந்தது இல்லை, இனியும் நடக்கப் போவதில்லை.  உனக்குப் பிறந்த மகள், அவளை நிர்பந்திக்காதே. ஜகத்குரு என்று பெயர் பெற்ற நீங்கள், உங்கள் மதிப்பை கெடுத்துக் கொள்ள வேண்டாம்  இது தகாது என்றனர்.  உலகம் உங்களைப் பார்த்து தாங்களும் செய்யத் துணிவர். அது நல்லதல்ல. 

அதன் பின் அவர்கள் பகவானை துதித்தனர்.  ஆத்மாவில் உறையும் பகவான் தான் தன் சங்கல்ப ரூப ஞானத்தால் அவர் மனதில் அதர்மமாக தோன்றிய காமத்தை அடக்கினார்.  தர்மத்தை காக்க வேண்டும் என்று உணர வைத்தார். தன் சந்ததிகள் முன் அவமானப் பட்ட ப்ரும்மா, ப்ரஜாபதியாக இருந்த தன் உடலை தியாகம் செய்தார்.  அதை திசைகள் ஏற்றுக் கொண்டன.

அதன் பின் பகவானின் அனுக்ரஹத்தால் வேதங்களை தன் நான்கு முகங்களிலிருந்தும் வெளிவரச் செய்தார். நான் பழையபடி உலகங்களை எப்படி படைப்பேன் என்று யோசித்தார். நான்கு வேதங்கள், உபவேதங்கள், கர்ம தந்திரம், இவைகளுடன் தர்மம் தன்  நான்கு கால்களுடன் (ஸத்யம், தபோ, தயா, தானம் என்று தர்மத்தில் கால்களாக சொல்வர்) ஆஸ்ரமங்கள் நான்கும் அவரை அடைந்தன.

விதுரர்  எந்த முகத்திலிருந்து வேதத்தின் எந்த பகுதி  வந்தது? என்று  வினவியதிற்கு பதிலாக மைத்ரேயர் தொடர்ந்தார்.  ருக், யஜுர்,சாம, அதர்வ வேதங்கள் கிழக்கு முகங்களிலிருந்து, யாக சாஸ்திரங்கள்,  ஸ்தோத்திரங்கள், ப்ராயச்சித்தம் போன்றவைகளை வரிசைக் கிரமமாக விவரமாகச் சொன்னார்.  ஆயுர்வேதம், தனுர்வேதம், காந்தர்வம், தன் வேத ஸ்தாபனம், இந்த முகத்திலிருந்து வந்தன.  இதிகாச புராணங்கள், ஈஸ்வரனின் ஐந்தாவது வேதம் , எல்லா முகங்களிலிருந்தும் வந்தன. இவைகள் பலவிதமான தத்துவங்களைச் சொல்லும் .

பதினாறு வித்யைகள் கிழக்கு முகத்திலிருந்து, மேற்கு முகத்திலிருந்து சில, அதிராத்ரௌ என்ற சில , சகோசவம் வாஜபேயம் என்பவைகளைப் பற்றி விவரித்தார்.  வித்யா, தானம், தவம், சத்யம் தர்ம என்ற பதங்கள், ஆசிரமங்கள்,  அதனுடன் உள்ள கார்ய க்ரமங்கள் இவற்றையும் விவரித்தார்.

சாவித்ரம்,(ப்ரும்மசர்யம்)  ப்ராஜாபத்யம் இல்லறம்- சந்ததி தோன்றுதல்- , ப்ராஹ்ம(உபனயனம் ஆன ஒரு வருஷ முடிவு விரதத்தை முடித்தல்) , ப்ருஹத் (வேதம் சொன்னபடி ப்ரும்மசர்யம் நைஷ்டிகி) , வார்த-சொல். அதன் பாகுபாடுகள், வைகானசா,(சமைக்காமல் கிடைத்ததை உண்பவர்) வாலகில்யா: (புதிய உணவு கிடைத்தால், பழையதை தியாகம் செய்பவர்) உதும்பரா:காலையில் எழுந்தவுடன் எந்த திசையை முதலில் காண்கிறார்களோ அந்த திசையில் கிடைத்த பழங்களை மட்டும் உண்பவர்.  .ஃபேனபா: (  பசியை ஜயித்தவர்கள்).  வனம், வன வாசிகள்.

ந்யாசம்,- துறவு.    குடீசகர்கள், (ஆசிரம வாசிகள்) ப்ரும்ஹவாதோ,(ஞான ப்ரதானிகள்)  ஹம்ஸ (ஞானத்தை அடைய  பயிற்சியில் இருப்பவர்கள்) நிஷ்க்ரியர்கள்,(ஆத்ம தத்துவத்தை உணர்ந்தவர்கள்)

 ஆன்வீக்ஷிகீ, (ஆத்ம விசாரம்) த்ரயீ (கர்ம வித்யா), வார்தா (ஸுவர்கம் முதலான பலங்கள்), தண்டநீதி (பொருளாதாரம்) என்பவை பற்றி சொன்னார்.

பூ: புவ:ஸ்வ – என்பவை வ்யாஹ்ருதிகள் எனப்படும்.   ப்ரணவத்துடன் சேர்த்து  சொல்வது முறை.

காயத்ரி, உஷ்ணிக் என்ற சந்தஸ் – காவ்ய அலங்காரம் பற்றி சொல்கிறார்.   அதற்கான கட்டுபாடுகள்.

சப்தங்கள் ஏழு விதமாக வெளிப் படும் என்பதைச் சொல்கிறார். ஒவ்வொரு எழுத்தும் அதன் உச்சரிப்பு சரீரத்தின் எந்த பாகத்திலிருந்து வரும் என்பது பற்றி விவரிக்கிறார். (க முதலான ஐந்து வரிசைகள்) ஸ்பர்சம் , அகாரம் முதலான உயிரெழுத்துக்கள்- ஸ்வர வர்ணங்கள்; ஊஷ்ம என்பவை ஷஶ்ஸஹ- என்ற நான்கு, அந்தஸ்த என்பவை ய ர ல வ)

நிஷாத, ருஷப, காந்தார, ஷட்ஜ, மத்யம, தைவத பஞ்சம – என்ற ஏழு ஸ்வரங்கள் வந்தன. ப்ரும்மா சப்த ப்ரஹ்ம ஸ்வரூபன்.  வைகரி- வாய் வார்த்தையில் தெரியும் படியும், ஓங்கார ரூபத்தில் வெளியில் தெரியாதவராகவும் இருப்பார்.  

மறுபடியும் ஸ்ருஷ்டி என்ற தன் படைப்புத் தொழிலை எப்படி செய்வேன் என்று யோசித்தார். முன் அத்ரி முதலானவர்களை படைத்தது போலவே மேலும் பலவிதமான ஜீவ ராசிகளை படைக்க ஒரு பெண் பால் வேண்டும் என்பதை நினைத்து தன்னையே இருபாலாருமாக ஆக்கிக் கொண்டார்.  அதில் ஆண் மனு என்ற ஸ்வாயம்புவ மனு,(ஸ்வயம்பூவின் மகன்)  முதல் பிரஜாபதி. அதில் பெண்ணாக தோன்றியவள் சதரூபா.

 சதரூபா என்பவள்  மனுவின் மனைவியானார். அவளிடம் மிதுன தர்மத்தால், ஐந்து பிள்ளைகளைப் பெற்றார்.  ப்ரியவ்ரதன், உத்தான பாதன், மூன்று பெண்கள், ஆகூதி, தேவஹூதி, ப்ரசூதி என்றுபெயர்கள். ருசி என்ற முனிவருக்கு ஆகூதியைக் கொடுத்தார். கர்தமருக்கு தேவஹூதியையும், தக்ஷன் என்ற முனிவருக்கு ப்ரசூதிம் என்பவளையும் கொடுத்தார்.  உலகில் ப்ரஜைகள் நிறைய வேண்டும் என்று விரும்பினார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பன்னிரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-29

அத்யாயம்13

விதுரர் கேட்டார்:   ஸ்வயம்பூ வின் பிரிய புத்ரன் ஸ்வாயம்புவன் சம்ராட்- சக்ரவர்த்தி, மனைவியுடன் எங்கு எப்படி இருந்தான்? ஆதி ராஜா அவன் சரித்திரத்தையும் சொல்லுங்கள் முனிவரே – அவரும் ஹரியை ஆராதிப்பவன் தானே.  (விஷ்வக்-விஸ்வமே, சேனா- ஞான லக்ஷணா)  

தன் மனைவியுடன் , ஸ்வாயம்புவ மனு வேதகர்பன் என்றழைக்கப்படும் ப்ரும்மாவிடம் சென்றார். தந்தையே, தாங்கள் தான் உலகத்துக்கெல்லாம் பிறப்பைத் தருபவர்.  அவர்கள் வாழ்க்கையின் போக்கை நிர்ணயிப்பவர், உங்களுக்கு நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம்? என , ப்ரும்மா சொன்னார்.

“மகனே! மிக்க மகிழ்ச்சி. உங்கள் இருவருக்கும் நன்மை உண்டாகட்டும். நீ இப்பொழுது பூமியின் நாயகன்.  குற்றம் குறையின்றி நியாயமாக ஆட்சி செய். மனப்பூர்வமாக உன்னை ஆசிர்வதிக்கிறேன். முதல் கடமை உன் சந்ததி வளரட்டும். அது தான் மிகப் பெரிய சக்தி.  அவர்களை உனக்கு சமமான குணவான்களாக தயார் செய். பூமியை தர்மமே பிரதானமாக ஆட்சி செய். யாக காரியங்களால் பரம புருஷனான ஸ்ரீ ஹரியை ஆராதித்து வா. இது தான் எனக்கு நீ செய்யும் மிகப் பெரிய கைங்கர்யம்.  பிரஜைகளை நல்ல முறையில் பரி பாலனம் செய்து வந்தாலே, ஹ்ருஷீகேசன் (விஷ்ணுவின் பெயர்) மகிழ்ச்சியடைவார்.  அவரே ஜனார்தனன் யாகமே அவர் அடையாளம். அவர் ஆத்மா திருப்தியடையவில்லையெனில் அனைத்து சிரமங்களும் வீணே.

கட்டளையிடுங்கள், பகவான் விருப்பப் படியே செய்கிறேன். எங்களுக்கு வசிக்க இடம் வேண்டுமே. பூமி அனைத்து ஜீவராசிகளுக்கும் இருப்பிடமாக இருந்து வந்தது. இப்பொழுது நீரில் மூழ்கி விட்டதே. அதை எப்படி வெளிக் கொணர்வேன்? என்றார் மனு.

ப்ரும்மாவும் பூமியை எப்படி வெளிக் கொணர்வோம் என்று சிந்தித்தார்.  நான் தேவ அசுரர்களை படைக்கும் வேலையில் மும்முரமாக இருந்த சமயம் பெருகிய ஜலத்தில் மூழ்கி பூமி ரஸாதளம் சென்று விட்டாள். நான் என்ன செய்வேன்? பகவான் தான் வழி காட்ட வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அவரது நாசியில் இருந்து, கட்டை விரல் அளவு சிறிய வராகம் ஒன்று வெளி வந்தது. பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தரத்தில் இருந்த அந்த வராகம், யானை அளவு வளர்ந்தது.  அத்புதமான காட்சி.மரீசி முதலிய ரிஷிகள், குமாரர்கள், இவர்களுடன் மனுவும், அந்த பன்றி ரூபத்தைப் பார்த்து தங்களுக்குள் என்னவாக இருக்கும் என்று பேசிக் கோண்டனர்.  ப்ரும்மாவும், அஹோ, என்ன இது? என் நாசியிலிருந்து வந்தது, அடுத்த க்ஷணத்தில் பெரிய மலை போல நிற்கிறது, பகவனே தானோ, யக்ஞ ரூபனான ஸ்ரீ ஹரியே, என் வருத்தத்தை உணர்ந்து வந்திருக்கிறார் போலும் என்று வியந்தார். இப்படி தன் பிள்ளைகளுடன் வியந்து அவர் பார்த்துக் கொண்டிருக்கையிலேயெ, பெரிய கர்ஜனை கேட்டது. மலையரசன் போல ஓங்கி வளர்ந்து நின்ற யக்ஞ புருஷன்,  அவரையும், அவர் பிள்ளைகளையும், மற்றும் அங்கு கூடியிருந்த மரீசி முதலான , ரிஷி முனிவர்களையும் ஆறுதல் அடையச் செய்தான். ஜன, தப, சத்ய லோகங்களில் வசித்தவர்கள்,அந்த உறுமலைக் கேட்டு, தங்கள் குறையைத் தீர்க்க வந்து விட்டான் என்று எண்ணி, துதி செய்யலானார்கள். மலைகளின் இடையே தொடர்ந்து கேட்கும் எதிரொலி போல பகவானின் கர்ஜனை அண்ட முழுதும் எதிரொலித்தது.  வேதத்தை முழுமையாக அத்யயனம் செய்து அதன் படியே வாழ்க்கையை நடத்தும் ஞானிகள்,  அவர்களின் எதிர் பார்ப்பை  நியாயப் படுத்துவது போல, யக்ஞ புருஷன் ஜலத்தில் குதித்தான்.  

உயர தூக்கிய வால், வலிமையான உடல், நீண்ட கூர்மையான ரோமங்கள் அடர்ந்த முதுகு பாகம், அதிவெண்மையான பள பளக்கும் பற்கள், பகவான் தன் அழகிய சுய ரூபத்தை மறைத்துக் கொண்டு ஒரு மிருகமாக, ரிஷிகளின் துதிகளை கேட்டபடி, ஒரே தாவலில் ஆகாயத்தை அடைந்து பயனித்தார்.  தன் மூக்கினால் நுகர்ந்து பூமியை தேடுவது போல, இருந்தது. தடாலென்று கடலில்  விழுந்த வேகத்தில் சமுத்திரம் அலறியது. என் மடியில் ஏராளமான ஜீவராசிகள் தவிக்கின்றன. இது என்ன என்று ஆர்பரித்த தன் அலைகளால் கேட்பது போல இருந்தது. யக்ஞேஸ்வரா, பாஹி மாம் என்று அலறுவது போல.

தன் குளம்புகளால் நீரைக் கிழித்து உட் புகுந்த வராகம் பூமியைக் கண்டவுடன், தன் கூரான பற்களால் பூமியை தூக்கிக் கொண்டு நீரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கையில் பயங்கர கோபத்துடன் சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டு தாக்க வந்த ஹிரண்யாக்ஷன் என்ற அசுரனை தாக்கி கொன்றார்.  தமால புஷ்பம் போன்ற நீல வண்ணன், வெண்மையான பல் நுனியில் பூமியை அனாயாசமக ஒரு யானை விளையாடுவது போல தூக்கிக் கொண்டு வருவதை பார்த்த விரிஞ்சி முதலானோர், வாழ்த்துப் படல்களை பாடியபடி அவரை எதிர்கொள்ள வந்தனர்.

ரிஷிகள் வாழ்த்துகின்றனர். ஜிதம் ஜிதம்- வெற்றி, வெற்றி – யக்ஞ பாவன- யாக ருபியான நீ, மூன்று வேதங்களுமே உன் சரீரம்.  ரோமத்தின் அடர்த்தியில் அவைகளை மறைத்துக் கொண்டு, நிஜ  சரீரம் அல்லாமல், காரண (முக்கியமான காரணத்திற்காக) சூகரன்- பன்றி உருவம் எடுத்த உனக்கு நமஸ்காரம்.  

துஷ்டர்கள் உன்னைக் காண்பது கூட அரிது.  இந்த சரீரமோ அவர்கள் பார்த்து நடுங்கும்படி உள்ளது. யாகமூர்த்தியே! உன் சருமத்தின் ரோமங்கள் சந்தஸ் (வேத மந்திரங்கள்) என்றால், . ஆஜ்யம்(நெய்)  உன் கண்கள், பாதங்கள், நான்கு  முக்கிய புரோஹிதர்கள். (யாகத்தில் நால்வர், நான்கு பக்கங்களிலும் அமர்ந்து செய்வது சாதுர்ஹோத்ரம்).  உன் தலையே யாக குண்டம்.   உன் வயிறு அக்னி, காதுகள் (துவாரத்துடன்) கரண்டிகள்,  ஹவிஸ் மீதி உன் வாய், நாசியில் கிரஹங்கள், நீ மெல்லுவது சாதுர்ஹோத்ரம் என்ற யாகம். 

சூகர (பன்றி) உருவமே யாக ஸ்வரூபம் என்று வர்ணிக்கிறார்.

சர்வ யாக கர்த்தாவான உனக்கு நமஸ்காரம். அனைத்து மந்திரங்களுக்கும் அடிப்படையான செயலே பிரதானமான இந்த உன் அவதாரத்துக்கு நமஸ்காரம்.  வைராக்யம், பக்தி இவைகளால், தன்னையே வென்றவர்கள் பெறும் உத்தமமான ஞானமே நீ தான்.  வித்யா குருவும் நீயே.  உனக்கு நமஸ்காரம்.

பல்லின் ஒரு நுனியால் தண்ணீரிலிருந்து வெளிக் கொணர்ந்த பூமி, பிரகாசமாக தெரிகிறாள். வனத்திலிருந்து வெளிவரும் கஜேந்த்ரன் கையில் பூவை ஏந்தியிருப்பது போல உன் கையில் பூதரா-   பூ மாதா தெரிகிறாள்.  (பூதரா – மலைகளையும், மரங்களையும் தாங்குபவள்)  

 இவ்வாறு பலவிதமாக துதி செய்கின்றனர்.  அதை கேட்டபடியே, பகவான் தன் குளம்புகளால் சமுத்திர நீரை சற்று விலக்கி பூமியை ஸ்தாபனம் செய்கிறார்.

ரிஷிகளும் மற்றவர்களும், உலக மக்களுக்கு என்றும் நன்மையை செய்வாயாக என்று  வேண்டிக் கொள்கின்றனர். வராகமாக வந்து பூதேவியை காத்த இந்த வரலாறு படிப்பவர்களுக்கும், கேட்பவர்களுக்கும் பல நன்மைகளைத் தரும் என்று  பலஸ்ருதி (பலன்) சொல்லப் படுகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதின்மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50 

அத்யாயம்14

காரண சூகரன்- காரியத்திற்காக பன்றி உருவம் எடுத்தவன்  எனும் பொருள் பட பகவான் பன்றியாக -வராஹமாக வந்த கதையை விதுரர் – மைத்ரேய முனிவர் சொல்லக் கேட்டார். ஆனால் அவருக்கு சில சந்தேகங்கள் இருந்தன. அதை முனிவரிடம் சொன்னார்.

முனிஸ்ரேஷ்ட! யக்ஞ மூர்த்தியான ஹரியால் முதல் தைத்யன் ஹிரண்யாக்ஷன் கொல்லப் பட்டான் என்று கேட்டிருக்கிறோம். பூமியை தூக்கிக் கொண்டு  பகவான் வெளிவருகிறார், அசுரன் எதிர்படுகிறான், அவர்கள் இடையில் என்ன காரணத்தால்  சண்டை நடந்தது?  

மைத்ரேயர் விளக்குகிறார்.  அது தான் ஹரியின் அவதார கதை. நீ விரும்பி கேட்கிறாய், சொல்கிறேன் கேள். மனிதர்களின் மரண பயத்தை ஒழிக்கும். ம்ருத்யுவின் பாசம் என்பதை (கயிறு)  அறுக்கும்.

இந்த ஹரியின் சரித்திரத்தைச் சொல்லி, குழந்தையாக இருந்த  உத்தான பாதரின் மகன் துருவனை,  பாடும் முனி நாரதர் , அனேகமாக மரணத்தின் வாயிலை எட்டி இருந்த நிலையில் ஸ்ரீ ஹரியின் பதமாகிய வைகுண்ட லோகத்துக்கு போகச் செய்தார்.  இன்றளவும் இந்த இதிகாசம் வர்ணிக்கப் படுகிறது. நானும் ப்ரும்மாவே தேவ தேவர்கள் மத்தியில் சொல்லி கேட்டிருக்கிறேன்.

தக்ஷனின் மகளான திதி, மரீசி முனிவரின் மகனான காஸ்யபர் என்ற தன் கணவரிடம் சந்ததி வேண்டும் என்று வேண்டினாள். சந்த்யாகாலம் என்பதையும் பாராமல் நிர்பந்தித்தாள். அவரோ இன்னமும் தன் அக்னி ஹோத்ர காரியத்தை முடிக்காமல் அந்த யாக சாலையிலேயே இருந்தார்.

திதி கணவனிடம் உரிமையுடன் சொன்னாள்: வித்வன், வாழைத் தோட்டத்தை யானைக் கூட்டத் தலைவன் அலைக்கழிப்பது போல, என்னை காமன் அலைக்கழிக்கிறான்.  மற்ற மனைவிகள் மத்தியில் என்னை நீங்கள் உயர்வாக எண்ணுவது தெரியும். புத்ரனுக்காகத் தானே மணம் செய்து கொண்டீர்கள் என்று வெட்கத்துடன், கீழ் நோக்கி பார்த்தபடியே சொன்னாள்.  என் தந்தை எங்களைத் தனித்தனியாக விசாரித்தார். “குழந்தாய்! யாரை விரும்புகிறாய்” என்றார்.  நாங்கள் பதின்மூன்று பேர். யாருக்கு யாரைப் பிடிக்கிறதோ அவருக்கே மணம் செய்து கொடுத்தார்.  எந்த விதமான ஆசையானாலும் தீர்த்துவைப்பது தானே பதியின் கடமை- என்று இவ்வாறு நிறைய பேசும் மனைவியை, சமாதானப் படுத்தினார்.   நான்கு ஆஸ்ரமங்களில் இல் வாழ்வை தேர்ந்தெடுத்த பின், அதன் கஷ்ட நஷ்டங்களை ஏற்கத் தான் வேண்டும். கடலை நீரில் செல்லும் வாகனத்தில் கடப்பது போல.  மானினீ! நீ என்னில் பாதி – இருவருமாகத்தான் இந்த வாழ்க்கை என்ற வண்டியை ஓட்ட வேண்டும்.  உனக்கும் நான் செய்ய வேண்டிய கடமை உள்ளது. அதனால் நீ விரும்பும் மகனைத் தருகிறேன் என்று சம்மதித்தார்.  ஆனால் இது கோரமான வேளை. நாலா புறமும் பயங்கரமான காட்சிகளைக் காண்கிறேன்.  இது போல சந்த்யாவேளையில் பகவான் பூதபாவன: தன்னுடைய பரிவாரத்துடன், பூதங்களாகிய ஏவல் செய்யும் பூதங்களுடன்,  வ்ருஷபாரூடனாக  சஞ்சரிக்கிறான். அவர் வேஷமே தனி. விரித்த கேசமும், ஜடையும், ஸ்மசான பஸ்மம் பூசிய உடலும்,  மூன்று கண்களாலும் உலகை பார்க்கிறார்.  உன் மைத்துனன் தானே – (தக்ஷனுடைய மற்றொரு பெண் தாக்ஷாயணி பார்வதி, அவளை மணந்தவர் என்பதால் – (ஒரே குடும்பத்தின் மாப்பிள்ளைகள் ஒருவருக்கொருவர் சகோதர்கள் என்பது வழக்கு ) அவருக்கு தன் ஜனங்கள், பிறர் என்ற எண்ணமே கிடையாது.  யாரையும் கொண்டாடவும் மாட்டார், யாரையும் அதிகமாக வெறுக்கவும் மாட்டார். அவரை வணங்குவோம்.  இவருடைய சரித்திரம் தூய்மையானது.  சூழ்ந்து இருக்கும் அவித்தையை அகற்ற புத்திமான்கள், கல்வியில் கரை காண விரும்புபவர் இவரை வணங்கி வேண்டுவர்.  இவர்களைப் பொறுத்தவரை அதிசயமானவர். தன்னைப் பொறுத்தமட்டில் இப்படி அலங்கோலமாக திரிகிறார். என்று சிரிப்பவர்கள் அசத்துக்கள்.  அறிவில்லாதவர்கள். தன்னிலேயே தன்னைக் காணும் இவரை விவரம் தெரியாதவர்கள் வஸ்திர, போஜன, ஆபரண, அனுலேபனம், மாமிச பக்ஷிணிகள் என்று தங்களிஷ்டப் படி இருப்பவர்கள் எப்படி அறிவார்கள் ? விஸ்வமே மாயை தானே.  இதற்கு ப்ரும்மாதிகள் காவலாளிகளாக இருக்கிறார்கள்.  இவருடைய ஆக்ஞை படி  புது ஸ்ருஷ்டி தோன்றுகிறது.  பிசாச வேஷம். ஆனால், செயலோ சரித்திரமோ  நினைத்து கூட பார்க்க முடியாதது.

கர்பவதியான திதி பயந்தாள்.  ப்ராணா யாமம், ஜபம், தபம் என்று இருந்த கணவரிடம் வேண்டினாள். அகாலத்தில் ஜனித்த என் குழந்தையை பூத கணங்கள் எதுவும் செய்து விடக் கூடாது என்று. ருத்ரனை நமஸ்கரித்தாள்.

नमो रुद्राय महते देवायोग्राय मीढुषे । शिवाय न्यस्तदण्डाय धृतदण्डाय मन्यवे| |

மகானான ருத்ரனுக்கு நமஸ்காரம்.  துக்கத்தை நீக்குபவர் – दु:खं द्रावयतीति -रुद्र:  

मीढुषे -सकामेषु फल सेचनकर्त्रे  – பொருளை வேண்டுபவர்களுக்கு பலன்களை வாரி வழங்குபவர்

எதையும் வேண்டாதவர்களுக்கு சிவாய – மங்களமானவர், ந்யஸ்த தண்டாய – ஆயுதங்களை எடுக்க மாட்டார் அதே சமயம் துஷ்டர்களிடம் கையில் ஆயுதத்துடன் காட்சி தருவார்.  சம்ஹாரம் அவரது செயல். அவருடைய மன்யு – கோபத்திற்கு நமஸ்காரம்.  என்று துதித்தா ள்.

 உமை சகோதரி யானதால், அவள் கணவரான பகவான் என்று உரிமையுடன் அனுக்ரஹம் செய்ய வேண்டும் என்றாள்.   சதி பதிகள் நலனை காப்பவர் என்பதால் தம்பதிகள் ருத்ரனை வணங்குவது வழக்கம்.

இப்படி தன்னைத் தானே நொந்து கொள்ளும் மணைவியை கஸ்யபர் சமாதானப் படுத்தினார்.  பிறக்கும் குழந்தைகள் உலகில் துன்புறுத்தும் குணங்களோடு பிறப்பார்கள். அதனால் என்ன? நாம் பகவானை வேண்டுவோம்.   அவர்கள் அக்ரமம் அதிகமானால் பகவான், தானே அவதரித்து அவர்களை அழிப்பார்.

திதியின் வருத்தத்துக்கு எல்லையே இல்லை. எனினும் ஒரு சமாதானம் பகவான் கையால் வதம் செய்யப் படுவார்கள் என்பது.  “அப்படியே இருக்கட்டும். மறு பிறவியாவது நன்மையாக  இருக்கும்”  என்று தன்னை தேற்றிக் கொண்டாள்.

கஸ்யபர் அவள் வருத்ததைப் போக்கும் உத்சாக வார்த்தைகளைச் சொன்னார்.  இந்த புத்திரர்களின் வழி வரும் நம் சந்ததிகள் புடம் போட்ட தங்கம் போல ஞானிகளாக, பக்தர்களாக இருப்பார்கள் என்றார்.  பகவான் கைவிட மாட்டார். நம் பேரன் மகா பாகவதனாக இருப்பான்.  உலகிலும் புகழ் பெறுவான்,  உலகை துறந்து  வைகுண்டம் செல்வான்.  பேராசை இல்லாமல், அடம்பரம் எதுவுமின்றி, நல்ல குணவானாக, எப்பொழுதும் மகிழ்ச்சியாக, மற்றவர்கள் துன்பப் படுவதை சகிக்காதவனாக, இருப்பான். அவனுக்கு சத்ருவே இருக்க மாட்டார்கள்,  கோடை காலத்து கடும் தாபத்திலும் சந்திரன் குளிர்ந்து இருப்பது போல இருப்பான்.  உள்ளும் புறமும் சுத்தமானவனாக, தாமரை மலர் போன்ற கண்களுடன், பகவானே அனுக்ரஹித்த அழகிய ரூபத்துடன்,  உன் பேரன்,  ஸ்ரீயின் பதியான வைகுண்ட வாசியை காணும் அருள் பெற்றவனாக இருப்பான். 

இதைக் கேட்டு திதி சமாதானம் அடைந்தாள்.  தன் துஷ்ட பிள்ளைகளும் ஸ்ரீ க்ருஷ்ணரால் வதம் செய்யப்படுவார்கள் என்பதும் அவள் துக்கத்தைக் குறைத்தது. அமோகமான பேரனின் பிறப்பை எதிர் நோக்கலானாள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதிநாலாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50    

 அத்யாயம்-15

 ஸ்ரீ சுகர் சொன்னார்:  

திதி மிகவும் பயந்தாள். தன் மகன் உலகத்தில் துன்பத்தையே விளைவிப்பான் என்பது அவளைக் கவலைக்குள்ளாக்கியது. அதனால் பிள்ளைப் பேற்றை தானே தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தாள். தேவர்களும் கலங்கினர். என்ன ஆகும்? பலசாலியாக பிறக்கப் போகும் குழந்தை சூரிய சந்திரர்களை கூட மறைத்து விடக் கூடும். இருளில் மூழ்குவோம். இந்திராதி தேவர்கள் தங்கள் செயல்களைச் செய்ய முடியாது என்று சந்தேகித்தனர். எனவே  உலகை சிருஷ்டித்த பகவானை துதி செய்ய ஆரம்பித்தனர்.

“விபோ! நாங்கள் கவலைப் படுவது எதனால் என்று அறிவீர்கள்.  காலத்தால் அழியாத ப்ரபாவம் தங்களுடையது.  கஸ்யபருடைய சந்ததி எங்களை அழிக்கும் என்று பயப்படுகிறோம்.

விக்ஞான வீர்யாய –சிறந்த ஞானியான நீங்கள் உங்கள் மாயையால், முக்குணங்களை உண்டாக்கினீர்கள்.  அவ்யக்தரான- வெளிப் படையாகத் தெரியாத மறை பொருளான-  உங்களுக்கு வணக்கம்.

உங்களைப் போலவே மனதில் எண்ணி புவனத்தை உருவாக்கினீர்கள். நல்லதும் கெட்டதுமாக கலந்து தான்   என்பதை அறிவோம். யோகிகளுக்கும், ப்ராணாயாமம் முதலியன செய்து புலன்களை வென்றவர்களுக்கும் உங்கள் அருளைப் பெற்றவர்களுக்கும் என்றுமே தலை குனிவு ஏற்பட்டதில்லை.

உங்கள் சொல்லால், கயிற்றால் கட்டி வைத்த பசுவைப் போல நாங்கள் கட்டுப் படுகிறோம். லோகத்தில் யாக காரியங்களில் செய்யும் பலி- ஹவிஸ்  – என்பதை பெறுகிறோம்.

ஆகவே, எங்களுக்கு நன்மையை செய்ய வேண்டுகிறோம்.  உலகம் தாமஸ குணத்தில் மூழ்கி விட்டால்,  யாக கர்மாக்கள் நின்று விட்டால், என்ன செய்வோம் என்று கவலைப் படுகிறோம்.

திதியின் கர்பத்தில் வளரும் ப்ரஜாபதி காஸ்யபரின் குழந்தை உலர்ந்த கட்டையில் தீ பிடித்தது போல வேகமாக வளர்ந்து வருகிறது.”

மைத்ரேயர் சொன்னார்:  ப்ரும்மா பலமாக  சிரித்தார்.  சப்த கோசரன் அல்லவா?  பிரியமாக, அவர்களுக்கு ஆறுதலாக பதில் சொன்னார். என் மானஸ புத்திரர்கள்,  உங்களுக்கு முன் பிறந்தவர்கள்.  சனகன் முதலானோர்.  அவர்களுக்கு எதிலும் பற்றில்லை. உலகைச் சுற்றி வந்தவர்கள் ஒரு சமயம் வைகுண்டம் சென்றனர்.   அனைவரும் வணங்கும் இடம் அது. அங்கு இருப்பவர்கள் அனைவரும் வைகுண்ட மூர்த்தி மஹா விஷ்ணு  போலவே உடைகள் ஆபரணங்களுடன் இருப்பார்கள்.  ஹரி ஆராதனை, தர்மத்தை அனுசரித்தல் போன்ற தங்கள் செயல்களால், அந்த இடத்தில் இடம் பிடித்தவர்கள். அங்கு தான், ஆதி புருஷனான விஷ்ணுவுடன் பவனும், வாகீசனும் இருப்பர்.  காமதேனு, மற்றும் பருவ காலம் இன்றியும் பழுக்கும் வித விதமான மரங்களும்  சுகமே உருவாக இருந்த இடம். அந்த இடத்தில் சனகாதி நால்வரும் மெதுவாக ரசித்து ஒவ்வொன்றையும் பார்த்து வியந்தபடி சென்றனர்.

தங்கள் துணைவியருடன் விமானத்தில் சஞ்சரிக்கும் போதும் பாடிக் கொண்டே செல்கின்றனர். வைகுண்டவாசியான மஹா விஷ்ணு அவர்களின் தலைவன். அதே போல ஜலத்தின் அடியில் இன்னும் மலராத மது மாதவி புஷ்பங்களிலிருந்து நல்ல வாசனை வீசுகிறது.  புறாக்கள், சாரஸ, சக்ரவாக, தாத்யூஹ, ஹம்ச, கிளி, தித்திரி, பர்ஹிணீ -மயில்  -என்ற பறவைகளின் கூக்குரல் கோலாஹலமாக இருக்கிறது. நடுவில் ஒரு ப்ருங்கராஜன்- ராஜா தேனீ ஹரிகதையை பாட ஆரம்பித்த சமயம் அவையும் தங்கள் கூக்குரலை நிறுத்தி பாட்டைக் கேட்பது போல இருக்கிறது.

·         மந்தாரம், குந்த (மல்லிகை), குரப, உத்பல, ஸ்தபக, அர்ண, புன்னாக, நாக பகுல, அம்புஜ, பாரிஜாதா: என்ற மலர்கள் துளசி மாலையை அணிந்தவனுக்கு அர்ச்சனை செய்யப் படும்பொழுது, தங்களை தாங்களே பெருமித்துடன் உணர்கின்றன.

ஹரியின் பாதங்களை கண்ட மாத்திரத்தில்,  வைதூர்ய, மரகத, பொன் இவை நிரம்பிய விமானங்களில் வருபவர்கள்,  (அவர்கள் இடுப்பும், உடலும் பெரிதாக இருந்தாலும்,) புன்னகையுடன், வருகின்றனர். மனதில் ஸ்ரீ க்ருஷ்ணனே நிறைந்திருக்கும் சமயம், உடலழகை  பெரிதாக நினைக்கவில்லை போலும்.

லக்ஷ்மி தேவியின் இருப்பிடம்  என்பது எங்கும் தூய்மையாய் இருப்பதில் தெரிகிறது.  பணியாளர்கள் கூட மிக விருப்பத்துடன் பணியை செய்கின்றனர். ஏதோ ஒரு விதத்தில் அங்கு இருப்பதே பாக்யம் என்று நினைப்பது போல.  கிணறுகளில் அம்ருதம் போன்ற தெளிவான நீர் நிறைந்திருக்கிறது.  துளசி வனத்தைப் பார்த்து  அங்கு வரும் லக்ஷ்மி தேவி பகவானை நினைக்கிறாள். அர்ச்சனைக்கு பயன் படுத்துகிறாள்.  இந்த வைகுண்டத்தை காணாதவர்களும், கேளாதவர்களும் ஏதோ வேண்டாத கதைகளை கேட்டு பொழுதை வீணடிக்கின்றனர்.

தங்கள் யோக மாயா பலத்தினால்  சனகன் முதலான குமாரர்கள் அந்த வைகுண்டம் வந்து சேர்ந்தனர்.   விஸ்வகுரு வசிக்கும் இடம். புவனங்களில் உள்ள அனைவரும் வணங்கும் பகவான் இருப்பதாலேயே, விசித்ரமாக மனதை கவர்ந்த அந்த இடத்தை கண்டு அவர்கள் பிரமித்தனர்.  மிக்க மகிழ்ச்சியுடன்  ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே நிதானமாக நடந்தனர். ஆறு நடைகளைக் கடந்து ஏழாவது நடையை அடைந்த பொழுது, இரு தேவர்கள் நின்றிருப்பதைக் கண்டனர். ஒத்த வயதினர், கையில் கதையுடன், விலையுயர்ந்த கேயுரம், குண்டலங்கள், கிரீடங்களுடன் அழகிய அலங்காரங்களுடன் நின்றிருந்தனர்.  மதம் கொண்ட யானையின் மத்தகத்து முத்துக்களால் ஆன வன மாலை தரித்து, உரமேறிய நான்கு புஜங்கள், கைகளை இடுப்பில் வைத்த படி, முகத்தில் புருவம் நெரிய, சிவந்த கண்கள்,  சற்று எதிர்ப்பை காட்டும் முகபாவத்துடன்  தென்பட்டனர்.

முதல் ஆறு நடைகளிலும் தடையின்றி நுழைந்தவர்கள், இங்கும் அதே போல நினைத்து ஏழாவது நடையின் அறையிலும் அதே போல எந்த தயக்கமும் இன்றி நுழைய முற்பட்டனர்.  யாருமே அவர்களை வெளியாளாக பார்க்கவில்லை. அங்கிருந்த முனிவர்களும் மற்றவர்களும் சிறுவர்கள் என்று எண்ணியோ, தடுக்கவில்லை. அங்கும் பெரிய வஜ்ர கதவுகள் இருந்தன. கத்தியால் தடுத்த காவலர்களைப் பார்த்து சிரித்தனர்.  பகவானின் அறை வாசலில் அவருக்கு ப்ரதிகூலமாக நடந்து கொள்கிறார்கள் என்று எண்ணினர்.  அந்த சிரிப்பு காவலர்களை வெகுள வைத்தது.   குமாரர்களும் தங்களை தடுத்த காவலர்களை சற்றே சினத்துடன் நோக்கினர்.

அவர்களைப் பார்த்து, “யார் நீங்கள்? ஏன் எங்களை தடுக்கிறீர்கள்? பகவானை தரிசிக்க வந்த அடியார்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் என்ன காவலர்கள் நீங்கள் ?இங்கு இருப்பவர்களும் தர்மத்தைக் கடை பிடிக்கும் உயர்ந்த ஞானிகள்.  ப்ரசாந்தமான – மிக அமைதியான பர புருஷனின் வாசலில் நிற்கும் நீங்கள் உங்களைப் போலவே எங்களையும் அறிவிலிகள் என்று நினைத்தீர்களா? “

பகவான் இருக்கும் இடத்தில்  தகுதியுள்ளவன், இல்லாதவன் என்ற பாகுபாடே கிடையாது.  உயிரினங்கள் அனைத்தையும் தன் வயிற்றில் வைத்திருப்பவன், மண் பானையில் இருக்கும் ஆகாசமே தான் வானத்திலும் என்று உணர்ந்த தீரர்கள், இங்கு இருப்பவர்கள்.  பூலோக  அரசர்கள் வேண்டுமானால், தன், தனது என்று பேதம் பார்க்கலாம்.  பயம் தான்  பாகுபாடு செய்வதின் அடிப்படை. இங்கு பயம் ஏது? தேவர்களுக்கு சமமான உங்கள் உடைகளும், ஆயுதங்களும், எதற்கு? அவைகளுக்கு ஒரு பயனும் இல்லை. வைகுண்ட நாதனான பகவானின் சன்னிதானத்தில் நின்று கொண்டே தவறு செய்யும் உங்களுக்கு என்ன அபராதம் விதிக்கலாம்? யோசிக்கிறோம்.  காம க்ரோதங்கள் நிறைந்த இடம் பூலோகமே. அங்கு அரசர்களும் தங்கள் உடமைகளை காக்க உங்களைப் போன்ற காவலாளிகளை நியமிப்பர். அங்கு செல்லுங்கள். தன்னுடைய, பிறருடைய என்று என்று வித்தியாசம் பாராட்டுவர். காம, க்ரோத லோபங்கள் தலைவிரித்தாடும் இடம் அது.  இதற்குள் தங்கள் தவறை உணர்ந்த காவலர்கள்,  பயந்து நடுங்கிஅவர்கள் காலில் விழுந்தனர். தவறு செய்விட்டோமே என்று பரிதவித்தவர்கள், குமாரர்களைப் பார்த்து வேண்டினர். “  உங்களை தடுத்தது எங்கள் தவறு.  அதற்கு நீங்கள் சினம் அடை ந்ததும் இயல்பே. பக்தர்களான நீங்கள் தரும் தண்டனையை ஏற்கிறோம்.  எந்த  மட்டமான நிலையில் இருக்க நேர்ந்தாலும், பகவானின் நினைவு மட்டும் எங்களை விட்டு அகலாமல் இருக்கும் படி அனுக்ரஹிக்க வேண்டும்” என்றனர்.

இதற்குள் பகவானே, லக்ஷ்மி தேவியுடன் அங்கு வந்து விட்டார்.  பரம ஹம்ஸ முனிவர்கள் அந்த குமாரர்கள்.  தேடிப் போய் அழைக்க வேண்டியிருக்க, தானே வந்தவர்களை வரவேற்க வந்து விட்டார்.

அப்படி வந்தவரை தங்கள் சமாதி யோக சாதனைகளின் பலனாக கண்ணாரக் கண்டனர். தன் ஏவலர்கள், மரியாதைக் குறைவாக நடந்து கொண்டார்கள் என்று அறிந்து உடனே தானே வரவேற்க வந்தவர்.  ஹம்ஸம் போன்ற வெண்ணிற சாமரங்கள் அனுகூலமாக வீச,   சந்திரனின் குளுமையை ஒத்த வெண்மையான குடை, முத்து மாலைகளின் மேல் குளிர்ந்த நீர்த் திவலைகளை தெறித்த படி, த்வாரபாலர்களையும் சுமுகமாகவே பார்த்தபடி,  எல்லா நல்ல குணங்களும் இவரிடம் தான் உள்ளன எனும்படியான முக பாவம்,  அன்புடன் பார்க்கும் பார்வையே மனதை தொட்டு வருடுவது போல சுகமாக இருக்க, சத்ய லோக பர்யந்தம் பரவிய உலகங்களில் சூடாமணி போல ப்ரகாசிக்கும் வைகுண்டம் என்ற தன் நிவாச ஸ்தானத்தை தன் இருப்பினாலேயே பிரகாசிக்கச் செய்பவராக விளங்குபவர், பீதாம்பரமும், வனமாலையும், புஜங்களில் வளையமும், கருடனின் மேல் வைத்த கையும், மற்றொன்றில் தாமரை மலரை சுழற்றிக் கொண்டும்  வந்தவரைக் கண்டனர்.

மின்னலை பழிக்கும் ப்ரகாசமான மகர குண்டலங்கள் கன்னங்களில் ஒளியைச் சிதற, மணிமயமான கிரீடம், தோள்களில் விலையுயர்ந்த ஹாரமும், மார்பில் கௌஸ்துப மணியும், தன் பக்தர்கள் விரும்பிய வண்ணம் காட்சி தருவதால், இந்த சௌந்தர்யம் அவருடன் இணை பிரியாது இருக்கும் ஸ்ரீ தேவியின் அருகாமையினால் என்பது ஒரு பக்கமிருக்க, என் சௌந்தர்யம் என்று பக்தர்கள் நினைப்பது அவரவர் மனோ பாவமே என்று சொல்வது போல மென் நகையுடன் கூடிய முகம், கண்டவுடன் பணிய வைக்கும் காம்பீர்யம் உடைய அவரைக் கண்டனர்.  இன்னமும் திருப்தியடையாத கண்களுடனேயே அவரை நமஸ்கரித்தனர். 

பாதங்களில் நமஸ்கரித்தவர்களை துளசி மணம் கவர்ந்தது.   அங்கு வீசிய மென் காற்றில் அவர்கள் நாசியை துளைத்தது. தங்கள் சாதனைகளால் புலன்களை வென்றவர்கள் என்ற பிரசித்தி பெற்றிருந்த முனி குமாரர்களும் அந்த மணத்தால் கிளர்ச்சியடைந்தனர் போலும்.  ஒரு நிமிஷ நேரம் பிரமித்தனர். அருண வர்ண அதரங்களில் வெண்மையான மல்லிகை மலர் போன்ற தூய மென்முறுவல் –          ( கவியின் வர்ணனை)  அதுவே ஆசிகளை அள்ளி வீசியது என நினைத்தபடியே குனிந்து அவரது பாதங்களில் வணங்கினர்.  நகங்கள் மணி போல ஒளிர்ந்தன. முழு அழகையும் நம்மால் ஒரே சமயத்தில் கண்ணால் காண முடியாது என்று நினைத்தோ, மனதால் தியானிக்க ஆரம்பித்தனர்.  யோக மார்கத்தில் சாதகர்கள் தியானத்தில் காணும் பரப்ரும்மத்தை நேரில் காணும் பொழுது, அஷ்டைஸ்வர்யம் நிறைந்தவராக அவரை துதி செய்தனர்.

ஹே அனந்த ! தன்  ஹ்ருதயத்திலேயே உறையும் உன்னை அறியாதவர்கள் நீ இருப்பதாக உணர மாட்டார்கள்.  நாங்கள் உணர்ந்திருந்தும் இன்று நேரில் காட்சி தருகிறாய், அஹோ பாக்யம் – என்ன தவம் செய்தோமோ. உங்களிடம் உண்டான எங்கள் தந்தை உபதேசம் செய்தார்.  காணவே முடியாத, ஆத்ம தத்வம்  என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்.  எங்கள் காதுகளின் வழியாக அந்த உருவம் எங்கள் உள்ளத்தில் பிரவேசித்து இருப்பதை உணர்வினால் அறிந்தோம். அந்த பரமாத்ம தத்வத்தை இன்று காண்கிறோம்.  தன்னில் லயித்த முனிவர்கள் கூட ஹரியின் விஷயமாக பேசுவதை விரும்புவர்.  அதிலேயே பரமானந்தம் அடைவதாகச் சொல்வார்கள்.  சாலோக்ய, சாமீப்ய என்ற அருகில் இருபதற்கான பதவிகளையும் கூட மறுதலிக்க கூடியவர்கள்.  அதை விட உன் புகழை பாடுவதே சிறந்த அனுபவம் என்று சொல்வார்கள்.  

(காவலர்களை கடிந்து கொண்டது மனதை உறுத்தியது போல மேலும் வேண்டுகின்றனர்)

வண்டு தேனில் மயங்குவது போல இந்த காவலர்களும் உன் பாத பக்தியை என்றும் அனுபவிக்கட்டும்.  எங்கள் வாக்கும் உன் பாத துளசியைப் போலவே தூய்மையானதாக  இருக்கட்டும்.  அளவில்லாத மகிமையுடைய உங்களை நேரில் காணக் கிடைத்த வாய்ப்பு, அதை காண அனுக்ரஹித்ததாலேயே, எங்கள் கண்கள் புனிதமடைந்து விட்டன.  நாங்கள் என்ன கைம்மாறு செய்வோம். இந்த நமஸ்காரங்கள் தான் – திரும்பத் திரும்ப நமஸ்கரிக்கிறோம் என்றனர்.  

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினைந்தாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-50    

 அத்யாயம்16

இவ்வாறு முனி குமாரர்கள் துதி செய்து பாடியதைக் கேட்ட  வைகுண்ட வாசியான பகவான் ஸ்ரீ ஹரி, அவர்களை வரவேற்றார். 

இந்த இருவரும் என் பார்ஷதர்கள்.  (எப்பொழுதும் அருகில் இருக்கும் காவலாளிகள்)  ஜயன், விஜயன் என்று பெயர்.  எனக்கு உதவியாக என்னை அனுசரித்து இருப்பவர்கள் தான். இன்று உங்களால் கண்டிக்கப்பட்டார்கள்.  அது சரிதான். தன் தகுதியை மீறினால் அபராதம் விதிப்பது தான் நியதி. பெரியவர்களை அவமதித்ததால் நாங்கள் அதை ஏற்கிறோம்.  என் விருந்தினர்களை அவமதித்தால் எனக்கு செய்தது போலத்தான்.  எஜமானரின் நல்ல பெயரை இது போன்ற ஏவலர்களின் தவறான அணுகுமுறை கெடுத்துவிடுகிறது.  வியாதிகள் சருமத்தை நாசம் செய்வது போல.

கேட்கவே அம்ருதம் போல இருக்கும் நிர்மலமான இந்த வைகுண்டத்தின் புகழை கெடுக்கும் இச்செயலை கண்டிக்கிறேன். தபஸ்விகளின் பாத தூளி அனைத்து வித  பாபங்களையும் போக்கும், நற்கதியைத் தரும் என்று நானே அறிவுறுத்தியிருக்கிறேன்.   ஸ்ரீ தேவி என்னை விட்டு அகலாமல் இருக்கிறாள் என்றால் அதற்கு இதுவும் ஒரு காரணம்.  தன் கர்ம பலனையே எனக்கு சமர்ப்பித்து விட்டு பற்றின்றி இருக்கும் அந்தணர்களை திருப்தி என்று சொல்லும் வரை நான் உபசரிப்பது வழக்கம்.  யாக காரியங்களில் தேவர்களுக்கு தரும் ஆஹுதியை ஏற்கும் சமயம் கூட அந்த நிறைவு வருவதில்லை.  என் பக்தர்கள் என்னை நம்பி பலவிதமான அழகான சொற்களால் பூஜிக்கின்றனர். என்னை அழைக்கும் பல பெயர்களை சொல்லி பாடுகின்றனர். எனவே என் ஏவலர்கள் உங்கள் தண்டனையை ஏற்கச் செய்கிறேன். அத்துடன் எனக்கு அருகில் அனுகூலமாக இருந்து வந்தவர்கள், என்னிடம் மதிப்பும் மரியாதையும் உடையவர்கள் ஆதலால் தண்டனை காலம் முடிந்து திரும்ப என் சேவகத்துக்கு வரட்டும் என்று ஆணையிடுகிறேன்.

ரிஷிகள் ப்ரவாஹமாக வேத மந்த்ரங்களை ஓதுவது போலவும், அழகிய,  அன்புடன் சொல்லப் படுவது போல தோற்றமளிக்கும் அவரது மதுரமான சொற்கள், தங்கள் செயலை அங்கீகரிக்கிறாரா அல்லது நிந்திக்கிறாரா என்று சந்தேகம் தோன்ற  ரிஷி குமாரர்கள் தடுமாறினர்.  ஏற்கனவே தங்கள் சினத்தை வெளிப் படுத்தியதற்காக வருந்திக் கொண்டிருந்தவர்கள். பின்னர், அவர் சொல்லில் ஒளிவு மறைவு இல்லை, உண்மையாகத்தான் சொல்கிறார் என்று நம்பிக்கை வர தாங்களும் மகிழ்ந்தார்கள்.

“தேவ, நீங்கள் என்ன சொல்ல வந்தீர்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை. சர்வேஸ்வரன் தாங்கள்.  உங்கள் காவலர் எங்களுக்கு நல்வரவு அளிக்காதது, உங்களுக்கே செய்த அவமானம் என்றும், எனக்கு அனுக்ரஹம் என்றும் நீங்கள் சொல்வது பொருந்தவில்லை. எளிய ரிஷி சிறுவர்கள் நாங்கள்.  ப்ரும்மண்யம் என்பதற்கே தெய்வம் ப்ராம்மணர்கள், அவர்களுக்கும், பகவானான தாங்கள் தான் ஆத்ம தெய்வம்.  சனாதன தர்மம் என்பது உங்களிடமிருந்தே ஆரம்பிக்கிறது, உங்களால் ரக்ஷிக்கப் படுகிறது. தர்மத்தின் பலனே தாங்கள் தான், அதனால் மிகவும் போற்றத்தகுந்த, சக்தி வாய்ந்த அதிகாரி,   சுவர்கம் போன்ற சாதாரண பலன்களை தருபவராக மட்டும் உங்களை நினைக்கவில்லை. நிர்விகாரி- நிலையானவர்.  மாற்றங்களுக்கு அப்பாற்பட்டவர் என்று சொல்லப் படுபவர். அதனால் இந்த வார்த்தைகள், லோக சிக்ஷா- உலகினருக்கு சொல்லப் பட்ட அறிவுரையாகக் கொள்கிறோம் என்றனர்.

உங்கள் தயவால், மரணத்தையும்  அனாயாசமாக வெற்றிக் கொள்கிறார்கள். அதே சமயம் உங்கள் தயவின்றி என்னதான் போராடினாலும் அந்த பரம ஞானம் கிடைப்பதில்லை. அப்படியிருக்க நீங்கள் ‘அனுக்ரஹிக்கப்பட்டேன்’ என்று சொல்வது என்ன நியாயம். யார் உங்களை ஆசிர்வதிக்க முடியும்?  ஒவ்வொரு வேளையும், பொருளை விரும்பும் பக்தர்கள் வந்து சேவிக்கிறார்கள், உங்கள் பாதத்தில் புது துளசியை அர்ப்பணம் செய்கிறார்கள்.  மார்பில் ஸ்ரீ தேவியை தரித்து இருப்பவர், உங்களிடம் மற்றவர்கள் என்ன குறை காண முடியும்?  (ஏதோ அந்தணர்கள் ஆசிர்வாதத்தால் என்று சொன்னால், அவளை தாயாக, தங்களுக்கு முன்னோடியாக வணங்கும் அனைவரும் வருந்துவர்.  அது அந்தணர்களை பாதிக்கும்.) சராசரங்களை மூன்று குணங்களாலும் மனித, தேவர்கள், நன்மைக்காக ஏற்படுத்தி, சத்வ குணத்தால் வரதனாக இருக்கும் தாங்களே அந்தணர்களையும் ரக்ஷிக்க வேண்டும்.  அவர்களை கைவிட்டால், மற்றவர்களும் அதை பின் பற்றுவார்கள்.

உலகத்தில் அனைவருக்கும்  நன்மையே உண்டாக வேண்டும் என்பது உங்கள் விருப்பம். வேத விற்பன்னர்கள் உங்களைப் போலவே சத்வ குணமே பிரதானமாக கொண்டவர்கள்.  வேத மார்கம் அழிந்து விடக் கூடாது என்று இருப்பவர்கள்.   உண்மையாக சிரத்தையுடன் அவர்களை உயர்வாக நினைப்பதில் தவறில்லை. ஆனால் தன்னையே தாழ்த்திக் கொள்ள வேண்டாம். இந்த பிரச்னையை ஆரம்பித்த எங்களுக்கு  தண்டனை கொடுங்கள், என்றனர்.  அல்லது உங்கள் காவலர்கள் தன் கடமையைத் தான் செய்தார்கள், தவறு செய்யவில்லை என்றால் எதுவும் நடக்காதது போல விட்டு விடுங்கள்.   உங்கள் இஷ்டம்.

பகவான் சொன்னார்: இவர்கள் அசுரர்களாக உடனடியாக ஒரு வேலை செய்ய வேண்டியுள்ளது. அந்தணோத்தமர்களே, என் சங்கல்பம் உங்கள் வாயால் தண்டனையாக வந்துள்ளது. அதை புரிந்து கொள்ளுங்கள். பூமியில் பிறந்து இவர்கள்,சமாதி, யோகம் இவைகளை பயின்று சில காலம் இருந்து விட்டு திரும்ப என்னிடமே வருவார்கள். 

ரிஷி குமாரர்களும் சமாதானமாகி, கண்ணுக்கு இனியதான வைகுண்டத்தில் அதில் ஸ்வயம் பிரகாசமாக விளங்கும் வைகுண்ட வாசியான பகவானுடன் இருந்து மகிழ்ச்சியாக இருந்தனர். பின் அவரை ப்ரதக்ஷிண நமஸ்காரங்கள் செய்து விடை பெற்றனர்.  சந்தோஷமாக அந்த கோலாஹலமான அனுபவத்தை தங்களுக்குள் பேசிக் கொண்டே சென்றனர்.  பகவானும் காவலர்களைப் பார்த்து, பயப்பட வேண்டாம், நல்லதே நடக்கும் என்றார். அவர்களை கௌரவித்து அனுப்பி விட்டு ஸ்ரீ தேவியுடன் தன் வாசஸ்தலம் சென்றார். 

ஹரியின் லோகத்திலிருந்து காவலர் இருவரும் முகம் வாடி வெளியேறினர்.  எங்கும் ஹா ஹா என்ற கோஷம் கேட்டது. அவர்கள் தான் தற்சமயம் திதியின் கர்பத்தை அடைந்துள்ளனர். காஸ்யபரின் மகனாக அசுரராக, உண்மையில் யம படர்கள் போல கொடூரமான குணங்களோடு பிறப்பர்.  பகவானின் சங்கல்பம் இது.

விஸ்வத்தை ஸ்ருஷ்டி, ஸ்திதி , லயம் என்று மூன்று விதமாகவும் பரிபாலிக்கும் யோகேஸ்வரன்,  நம்மால் அனுமானிக்க முடியாத மாயை அவனுடையது.   வேத நாயகன் நிச்சயம் நமக்கு நன்மையே செய்வார்.  நாம் விமரிசித்து பேசி என்ன ஆகப் போகிறது.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினாறாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-37  

அத்யாயம் 17 

நூறு ஆண்டுகள் கர்பத்தை தாங்கிய திதி இரட்டையர்களை பிரசவித்தாள்.  அவர்கள் பிறந்த சமயம் நிறைய கெட்ட சகுனங்கள் தோன்றின.  தேவலோகத்திலும், பூமியிலும், ஏதோ மிக பயங்கரமாக நடக்கப் போவதை அறிவிப்பது போல.  மலைகளுடன் பூமி நடுங்கியது.  திசைகள் வெப்பத்தைக் கக்கின.  தூமகேது எனும் உபக்ரஹங்கள் விழுந்தன. இவை கெடுதலை விளைவிக்கும் என நம்பப் படுபவை. வாயு  புயலாக  வீசி பெரிய மரங்களை வீழ்த்தியது.  கருமேகம் சூழ்ந்து வானத்தை மறைத்தது. பெரிய அலைகளின் ஆர்ப்பாட்டம்  தாங்காமல்  கடல் கதறியது.  நதிகளில் நீர் வெப்பத்தின் காரணமாக தள தள என கொதிக்க பங்கஜங்கள் வாடி உதிர்ந்தன.  சுற்றிலும் தூசி படலமாக சூரியனின் ஓளி ராஹு கேதுவினால் தடுத்தது போல மங்கலாக காணப்பட்டது.  மலைகளின் குகைகளிலிருந்து அருவிகள் பொங்கி பெருகின.  கிராமங்களில் ஓனாய்களும், குள்ள நரிகளும் ஊளையிட்டன.  சிங்கங்கள் கூட, அழுவது போலவோ, பாடுவது போலவோ, தலையை மேல் நோக்கி தூக்கி விசித்திரமான ஓசையை வெளியிட்டன.  கழுதைகளின் கர கரவென்ற குரல், கூட்டம் கூட்டமாக சேர்ந்து அலறியது நாராசமாக இருந்தது.  இந்த சத்தத்தைக் கேட்டு பறவைகள் கூட்டிலிருந்து விழுந்தன. அடர்ந்த காடுகளில் பசுக்கள் அடிக்கடி சிறுநீர் கழித்தன.   பசுக்கள் பயந்து பால் வெளிறி நீராக கொட்டியது.  பல பெரிய மரங்கள் வேரோடு சாய்ந்தன. புயலைக் கூட எதிர்த்து நிற்கும் மரங்கள் அவை.  நல்ல க்ரஹங்கள் என்று நம்பப் பட்டவை கூட ஒன்றோடொன்று முரண்டு காணப் பட்டன.  

இந்த சகுனங்கள் என்ன சொல்கின்றன என்பது புரியாமல் நிறைய குழந்தைகள் உள்ள பெற்றோர் தங்கள் குழந்தைகளின் நலனை எண்ணி கவலைப் பட்டனர். பிரளயமோ என்ற பயம் மேலோங்கியது. இதற்கிடையில் திதி பெற்ற பிள்ளைகள் மலையளவு வளர்ந்து விட்டனர்.  வானளாவி வளர்ந்த தைத்யர்கள் (திதியின் மைந்தர்கள்) பொன் மயமான கிரீடமும், திடமான சரீரமும், கைகளில் அங்கதங்கள் பள பளக்க, எடுத்த அடி ஒவ்வொன்றும் பூமியை அதிரச் செய்ய, இடையில் ஒளி வீசிய காஞ்சீ என்ற ஒட்டியானம், சூரிய ஓளியை மிஞ்ச,  நடந்தனர்.  பிரஜாபதி அவர்களுக்கு நாம கரணம் செய்வித்தார்.  முதலில் பிறந்தவன் ஹிரண்ய கஸ்யபன் என்றும் அடுத்தவன் ஹிரண்யாக்ஷன் என்றும் அழைக்கப் பட்டனர்.

ஹிரண்ய கசிபு சீக்கிரமே லோக பாலர்களை தன் வசப் படுத்திக் கொண்டான்.  மரண பயம் இல்லாமல் இருக்க ப்ரும்மாவிடம் வரம் பெற்றான். அவன் இளையவன் ஹிரண்யாக்ஷன், சகோதரனுக்கு  மிகப் பிரியமானவனாக ஆனான். கையில் கதையை எடுத்துக் கொண்டு  உலகைச் சுற்றி வந்தான் எங்கே சண்டை போடலாம் என்பதே குறியாக. அவனைக் கண்ட தேவர்கள் நடுங்கினர்.  அவனுடைய  நடையின் வேகம் மற்றவர்களால் எண்ணியே பார்க்க முடியாமல், அதன் காரணமாக அவன் இடையாபரணங்களும் கால் நூபுரங்களும் அலறுவது போல பெரும் ஓசையை வெளியிட, வைஜயந்தி மாலை ஆட ,  பெரிய கதையை சுழற்றியபடி, மனோ பலம் என்பதை வரமாக பெற்றவன்,  பயமே இன்றி, சற்றும் தயவின்றி அடிக்க கூடியவன் என்பதால் எதிரில் யாரும் நிற்காமல் ஓடி ஒளிந்தனர்.

யாரை போருக்கு அழைக்கலாம் என்றே கதையுடன் கிளம்பியவன் யாருமே எதிர்க்காதலால் கோபம் கொண்டான்.  அவர்களை பலமாக கூவி அழைத்தான். இந்திரன் முதலான தேவர்களை அழைத்தும் வராததால், சமுத்திர ஜலத்தில் மதம் கொண்ட யானை போல நடந்தான்.  அவன் கால் வைத்தவுடன், வருணனின் சேனைகள், கடல் வாழ் பிராணிகள், வந்து சேரும் பெரு நதிகள்,  அவன் அடிக்காமலே, பயந்து ஓடினர்.

பல நாட்கள், வருஷங்கள், இவ்வாறு சென்றன. சமுத்திர ஜலம் அவன்  இடுப்பளவே வந்தது.  அந்த ஜலத்தில் நடை போட்டபடி,கதையை சுழட்டிக் கொண்டு ப்ரசேதஸ் என்ற நீரின் தலவனின் ஊர் வந்து சேர்ந்தான்.   லோக பாலகனான அந்த தேவனை,   கடல் வாழ் உயிரினங்களின் தலைவனை பிடித்து, சிரித்துக் கொண்டே இழுத்து வந்து என்னுடன்  போர் செய்ய வா என்றான்.  அந்த ப்ரசேதஸ் என்ற லோகபாலகன் நல்ல வீரன். தானும் பலமுறை போரில் வெற்றி வாகை சூடியவன். தைத்ய தானவர்களுக்குள் மதிப்பாக இருந்தவன். ராஜ சூய யாகம் செய்து தன் புகழை நிலை நாட்டியவன்.

தற்சமயம் வெறும் உடல் பலத்தால் மதம் கொண்டு போருக்கு அழைத்தவனை பொறுமையாக புத்தி பூர்வமாக பதில் சொன்னான். உடல் பலத்தில் நாம் சமமானவர்கள் இல்லையே. புராண புருஷனான மகா விஷ்ணுவைத் தவிர வேறு யாரும் உனக்கு ஈடாக போர் புரிய தகுதியுள்ளவர்கள் இல்லை.  அவரிடம் போரிடு. போர் விதிகள் தெரிந்தவர்,  உனக்கு சமமாக போரிட சந்தோஷமாக வருவார்.  சம பலம் உள்ளவர்களிடம் தான் உன் திறமையை காட்ட வேண்டும் என்றான்.

அப்படி ஒரு வீரன் இருக்கிறானா என்று ஆச்சர்யத்துடன், நாளைக்கே அவனை வீர சயனத்தில் தள்ளுகிறேன் – ஏன் தெரியுமா, உன்னைப் போன்ற அசத்துக்களை இது போல உயர்ந்த பதவிகளில் வைத்திருக்கிறானே, தனக்கு சமயத்தில் உதவுவான் என்று நினைத்தானோ,  என்று எகத்தாளமாக சொன்னபடி அகன்றான்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், (பதினேழாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்- 39    

அத்யாயம்18 

ஜலேசன், நீரின் நாயகன், ப்ரசேதஸ், பேசியதை கேட்ட ஹிரண்யாக்ஷன் அவனை விட்டு விட்டு, ஹரியை தேட ஆரம்பித்தான். நாரதர் வாயிலாக அவர் ரஸாதளத்தில் இருப்பதாக அறிந்து அங்கு வேகமாகச் சென்றான். அங்கு பூமியை தன் பல்லின் நுனியில் தாங்கியபடி வந்தவரை பார்த்து  பலமாக சிரித்துக் கொண்டு,  அஹோ, காட்டு மிருகம் என்றான்.  அவரை பார்த்து, அறிவிலியே, வா வா, பூமியை கீழே வை. சமமான என்னுடன் போரிடு. இங்கிருந்து நலமாக திரும்ப மாட்டாய். தேவர்களுக்காக இப்படி ஒரு  பன்றி ரூபம் எடுத்தாயா? எங்களுடைய சபத்னி குமார்கள், (தேவர்கள்) – சுய பலம் இல்லாதவர்கள். மாயையால் அசுரர்களை வெல்வார்கள்.  யோக மாயா என்ற அல்ப பௌருஷம் உள்ளவன் நீ அவர்களுக்கு சகாயம்.   உன்னை நம்பி பெரிய பொறுப்பை ஒப்படைக்கிறார்கள். இப்பொழுது பார். என் கதையால் தலை அறுந்து விழப் போகிறாய். அதன் பின் யாகத்தில் பாகம் பெறும் தேவர்களோ, ரிஷிகளோ, யாருமே இருக்கப் போவதில்லை. 

தன் கையில் இருந்த பூமி பயந்து நடுங்குவதைக் கண்டு,  தண்ணீரின் மத்தியிலிருந்து வெளி வந்தார்.  முதலை வாயில் அகப்பட்ட குட்டி யாணை போல  வந்தார்.  அவரை பின் தொடர்ந்து சென்ற ஹிரண்யாக்ஷன் ( ஹிரண்ய கேசன் என்றும் பெயர்) யானையை மீன் குஞ்சு தொடருவது போல இருந்தான்.  கொடூரமான பற்கள், கடுமையான குரல், இவைகளுடன் லஜ்ஜையின்றி, பகவானைப் பார்த்து ஏன் பயந்து ஒளிந்து கொள்கிறாய் என்றான்.

தன் கையிலிருந்து பூமியை நீரின் மேல் வைத்து விழாமல் இருக்க தன் சக்தியை அளித்து நிலை நிறுத்தி விட்டு,   எதிர் நின்ற அசுரன் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, ப்ரும்மா வியந்து பூமாரி பொழிய, பெரிய கதையை கையில் ஏந்தி, நெருப்பின் மறு உருவம் போல,  பொன்னாலான சித்ரங்களுடன் இருந்த ஆயுதத்துடன், பல்லைக் கடித்தபடி அளவற்ற கோபத்துடன் தரமில்லாத வார்த்தைகளைப் பேசும்,  அசுரனைப் பார்த்து சிரித்துக் கொண்டே பதில் சொன்னார், பகவான்.

நாங்கள் வனத்தில் திரியும் மிருக இனமே. உங்களைப் போன்ற கிராமத்து சிங்கங்களை வேட்டையாடுவோம்.  வீரர்களான எங்களுக்கு ம்ருத்யு – மரணம் ஒரு பொருட்டல்ல. உன் வீண் பேச்சைக் கேட்டு பயப்பட.  அல்பனே! நாங்கள்,  இந்த சமுத்திரத்து உயிரினங்களை காக்கும் பொறுப்பை ஏற்றவர்கள். உன்னைப் போல் கையில் கதையை வைத்துக் கொண்டு விரட்டுபவர்கள் அல்ல.   எந்த விதத்திலும் உன்னை பாதிக்காத எளிய உயிரினங்கள்- அவர்களை உன் கதையைக் காட்டி ஓட வைக்கிறாய். இது என்ன வீரம்?  நாங்கள் எதிர்த்து நிற்கிறோம், மஹா பலசாலியான ஒருவனை எதிர்த்து விட்டு எங்கே ஓடி ஒளிய முடியும்.  நீயோ பாதசாரிகளின் (கால்களே ரதமாக நடந்து செல்லும் படை- காலாட்படை) படைத் தலைவன். இனி தோல்வியை சந்திக்க தயாராகிக் கொள்.   உன் பதவியை இழந்து நிற்பாய்.

பகவான் அவனை மட்டம் தட்டி பேசியது பொறுக்காமல் கோபத்தை தூண்டி விட்டது போல கொதித்து எழுந்தான் ஹிரண்யாக்ஷன்.  தன் கதையால் பகவானை அடிக்க ஆரம்பித்தான்.  பெரு மூச்சு விட்டபடி, அடிபட்ட நாகம் போல வேகமாக எதிர்த்து ஓடி வந்தான்.  இருவரும் மதயானைகள் போல ஒருவரையொருவர் தாக்கினர்.  தைத்ய ராஜனும், யக்ஞ புருஷனும் சண்டையிடுவதைப் பார்க்க ப்ரும்மா அங்கு வந்தார்.  ஆதி சூகரம்- பன்றி ரூபத்தில் இருந்தவரைப் பார்த்து, “பகவானே, இவன் மாயாவி. அறிவிலி.  துஷ்டன். எங்கள் யாகங்களை கெடுக்கிறான்.  உலகத்தை சுற்றி சுற்றி வருகிறான். யாரை அடிக்கலாம் என்பதே குறியாக.சிறுவன் பாம்பின் வாலை தூக்கி விளையாடுவது போல இது என்ன காரியம். சந்த்யா காலமானால் இவன் பலம் அதிகரிக்கும். அதற்கு முன் வதம் செய்து விடுங்கள்,  இவன் உங்களை எதிர்த்த நிமிஷத்திலேயே உயிரிழந்தவன் போலத் தான்.  அபிஜித் என்ற இந்த முஹூர்தத்தில் யுத்தத்தை முடித்து உலகில் உயிரினங்களை பயமின்றி வாழச் செய்யுங்கள்.” என்றார்.

 (இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த    காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பதினெட்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-28

அத்யாயம்19 

ப்ரும்மா அன்புடன் தன் கவலையைச் சொல்லவும், பகவான் கடைக்கண்ணால் ஜாடை மூலம் அதை அங்கீகரித்தார்.  அதன் பின் எதிரில் பயமின்றி நின்றவன் ஒருவகையில் உறவினன், ஆனாலும் தற்சமயம் எதிரி, அசுரன் ஹிரண்யாக்ஷன் வராக உருவத்தின்  தாடையில் ஓங்கி அடித்தான்.  அந்த அடி தாங்காமல் பகவானின் கையில் இருந்த கதை கீழே விழுந்தது.  யுத்த தர்மத்தை நினைத்து அசுரனான ஹிரண்யாக்ஷன் இதை நல்வாய்ப்பு என்று நினைக்காமல், கையில் ஆயுதம் இல்லாமல் இருக்கும் எதிரியை அடிக்கக் கூடாது என்ற நியதியின் படி,  பகவானை எதிர்க்காமல், கதையை திரும்ப எடுத்துக் கொள்ளும்வரை காத்திருந்தான். பகவானின் கதை கீழே விழுந்தவுடன் உலகம் திகைத்தது. பகவானோ எதிரியானாலும், தர்மத்தை கை பிடித்தவனை  பாராட்டினார்.

வானத்தில் நலம் விரும்பும் தேவ ரிஷிகளின் ஆசிகளும், இந்த அசுரனை சம்ஹாரம் செய் என்ற வேண்டுகோளும் நிறைந்தன.   தன்னுடைய சக்ரத்தை நினைத்து பகவான் தியானம் செய்யவும் அது அவர்  கைக்கு வந்தது. அவருடைய ஆயுதமான  சக்கரத்தை கண்டதும் கண்கள் நெருப்பாக ஜொலிக்க, பற்களை கடித்தபடி, அதிக கோபத்துடன் அசுரன் அடித்தான். தன் சக்தி தெரியாமல் போருக்கு வந்து விட்டான் என்று நினைத்தோ பகவான் உடனே பதிலடி கொடுத்தார். அவன் கதையும் விழுந்தது.  எடுத்துக் கொள், என்னை ஜயிக்கத்தானே வந்தாய்  என்று சொல்லி சிரித்தார்.  இதை அவமானம் என நினைத்து அந்த வீரன், கதையை விட்டு சூலத்தை எடுத்துக் கொண்டான்.  அந்த அடியை வாங்கிக் கொண்டவர்,  இனியும் காலம் தாழ்த்தக் கூடாது என்று தன் சக்கரத்தால் அதை தாக்கி நொறுங்கச் செய்தார். தன் முஷ்டியை இறுக்கிக் கொண்டு பலமாக அலறிக் கொண்டும் முன்னேறி வந்த அசுரனை பகவான் அசையாமல் நின்று எதிர் கொண்டார். யானையை பூ மாலையால் தாக்கியது போல – அசுரன் தன் மாயா பலத்தால் அந்தர்தானமானான். என்ன நடக்கிறது என்று தெரியாமல் உலகை தூசி படலம் சூழ்ந்தது. ப்ரளயமோ என்று உலகத்தினர் திகைத்தனர்.   பயங்கர புயல் ஒரு புறம், கற்கள் விழுவது போல மழை, அத்துடன் மின்னலும், இடியும் சேர்ந்தால் எப்படி இருக்கும்?  இதனிடையிலும் முஷ்டியால் தொடர்ந்து அடித்த அசுரனின் காதுகளின் அடியில் தன் சக்கரத்தால் அடித்தார். அத்துடன் அவன் மாயையால் ஸ்ருஷ்டித்தவைகளும் அகன்றன. தைத்யன் விழுந்தான்.

திதியின் உள்ளுணர்வு தன்மகனின் முடிவை எண்ணி வருந்தியது. கூடவே பகவான் கையால் மரிப்பான் என்ற வார்த்தைகளும் நினைவுக்கு வந்தன. வராக உருவத்தில் வந்த பகவான் தன் முன்னங்கால்களால் அவனை கிழித்து வதம் செய்தார்.   ப்ரும்மா முதலான தேவர்கள் பகவானின் பாதம் பட்டு இந்த அசுரன் நல்கதியடைந்தான்.  தங்கள்  அறியாமையால் வருவித்துக் கொண்ட  தண்டனையாக  இந்த துர்கதியை அடைந்த அசுரன், மும்முறை தன்னுடன் போரிட்ட  பின்னரே  தன்னையடைவான் என்பது பகவானின் சங்கல்பம். என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

नमो नमस्तेऽखिलयज्ञतन्तवे-स्थितौ गृहीतामलसत्त्वमूर्तये ।                      दिष्ट्या हतोऽयंजगतामरुन्तुदः-त्वत्पादभक्त्या वयमीश निर्वृत

நல்ல வேளை. இந்த அசுரன் மடிந்தான். யக்ஞ புருஷனான உனக்கு நமஸ்காரம்.  உன் பாத பக்தியால் அவனும் நல்ல கதியடைந்தான். பகவானே, நாங்களும் காப்பாற்றப் பட்டோம்

ஆதி சூகரன் ஹரி, இவ்வாறு ஹிரண்யாக்ஷணை வதம் செய்து உலகை காத்தார் என்று மைத்ரேயர் சொல்லவும் கேட்டுக் கொண்டிருந்த விதுரர் மகிழ்ச்சியடைந்தார். மேலும் ஹரியின் அவதார கதைகளைக் கேட்க தயாரானார்.  கஜேந்திரன், முதலை வாயில் அகப்பட்ட கதையை சொல்லுங்கள் என்றார்.

இந்த காரண சூகரன் என்ற வராஹ அவதார கதையை கேட்பவர்களும் பாடுபவர்களும் ஸ்ரீ ஹரியின் ஆசிகளைப் பெறுவர் என்று சொல்லி இந்த பகுதியை முடிக்கிறார்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், பத்தொன்பதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-38

 அத்யாயம்20 

சௌனகர் கேட்டார்:  ஸ்வாயம்புவ மனு மற்ற ஸ்ருஷ்டிகளை எப்படி செய்தார்?  விதுரர் மகா பாகவதர்.    ஸ்ரீ க்ருஷ்ணருக்கு பக்தனாக, நெருக்கமாக இருந்தவர். ஆதலால் மூத்த சகோதரனையும் அவன் சந்ததிகளையும் த்யாகம் செய்து விட்டு விலகி விட்டார்.   மைத்ரேயரிடம் வந்து ஹரி கதையை சொல்ல கேட்கவும், அவருடன் ஸ்ரீ க்ருஷ்ணனின் அவதார கதைகளை கேட்க நமக்கும் வாய்ப்பு கிடைத்தது.  மேலே சொல்லுங்கள்.

மைத்ரேயர் சொன்னார்.  ப்ரும்மா ப்ரஜாபதிகளை உருவாக்கினார்.   மரீசி முதலானோர்களும், ஸ்வயம்புவ மனுவும் ப்ரும்மாவின் வழிகாட்டலில் பூமியில் உயிரினங்களை படைத்தனர். அதை சற்று விவரமாக சொல்லுங்கள். மனைவிமார்களுடன் இருந்தார்கள். ( ப்ரும்மா தான் ஒருவராக முன் யக்ஷாதிகளை ஸ்ருஷ்டி செய்ததை நினைவு படுத்துவது போல, மானச புத்திரர்கள், சரீரத்திலிருந்து தோன்றியவர்கள் என்பது போல)

உயிரினங்களின் நல்ல காலம், பகவான் சிருஷ்டியை தொடங்க நினைத்து, எப்படி செய்வது என்று சிந்திக்கையில், அவருடைய எண்ணங்களில் தோன்றிய சலனம் சத்வ ரஜஸ்,தமஸ் என்ற முக்குணங்களாகின.

முதலில் சத்வ குணம், மஹத் என்ற என்றும் மாறாத இயற்கை சக்தி. ரஜோ குணம் அதனுடன் சேர்ந்து பஞ்ச பூதங்களை ஆகாயம் முதலான ஐந்து தோன்றின. ஒவ்வொன்றும் தனித் தனியாக பௌதிகத்தில் எதையும் செய்ய முடியாது. தேவ யோகத்தால் ஹிரண்மயமான அண்டத்தை ஸ்ருஷ்டித்தன.  உயிரற்ற , அல்லது சலனமற்ற அதை சமுத்திர ஜலத்தில் கிடக்கச் செய்தனர்.  ஆத்மா இல்லாமல். அதில் ஆயிரம் வருஷங்கள் ஈஸ்வரன் வசித்தார்.  அதன் பின் அவரது நாபியில் தோன்றிய பத்மம் ஆயிரம் சூரியனின் ஒளியைக் கொண்டிருந்தது.  அனைத்து ஜீவன்களின் இருப்பிடமான பகவான் தானே அதில் இருந்தார். பகவான் உள்ளே நித்திரையில் இருந்த சமயம் லோகத்தை பழைய படி ஸ்தாபிக்க வேண்டி தன் நிழலில் இருந்து ஐந்து பர்வங்களை உருவாக்கினார். தாமஸ குணங்கள் தாமிஸ்ரம், அந்த தாமிஸ்ரம், தமம், மோகம், மஹா தம: அதனுள் தானே வாசம் செய்தார். அவருக்கு தாமஸ குணம் பிடிக்கவில்லை. அதில் இருந்தபடி படைத்தவர்கள் தான் யக்ஷ ரக்ஷசர்கள், ராத்ரி, பசி தாகம் முதலியவை.  இரவை விரும்பும் தேவர்கள் என்பர்.

தன்னுடைய எந்த உருவத்தில் இந்த நிழல் தோன்றியதோ அதை களைந்தார்.  அதை விட்டு வெளி வந்தார். யக்ஷ ,ரக்ஷஸ என்ற அந்த பிறவிகள், தாமஸ குணம் மேலோங்கி, பசி தாகம், அதிகமாகவும், ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ள ஆரம்பித்தனர். 

ப்ரும்மாவின் மனதில் சத்வ குணம் மேலோங்கி இருந்த சமயம் தேவர்கள் பிறந்தனர். சத்வமயமான உடலுடன் வந்தனர். அவர்களைத் தொடர்ந்து தினம்- பகல் வந்தது.

அவர்  மனதில் காமம் தோன்றிய சமயம் அசுரர்கள் பிறந்தனர். அது சந்த்யா காலம். அதை அசுரர்கள் பறித்துக் கொண்டனர்.  ஸ்த்ரீ ரூபம் அந்த சமயத்தில் தோன்றவும் அசுரர்கள் ப்ரும்மாவை  துரத்தலானார்கள். அவர்களின் அட்டகாசம் தாங்காமல், ப்ரும்மா பகவானை சரணடைந்தார்.  அந்த பெண் உருவம் அழகிய கண்களும், இடையும் வெண் பட்டு உடையும், ஸ்தனங்களும், ஒவ்வொரு அவயவமும் நளினமாக காண அழகாகவும் ஆயிற்று.  அவளைக் கண்ட அசுரர்கள் அனைவரும் அவளை விரும்பினர்.  அஹோ ரூபம், அஹோ தைர்யம், இளம் வயது என்று காமத்துடன் அனுகியவர்களை அவள் கண்டு கொள்ளவேயில்லை. சந்த்யா என்ற அந்த பெண் உருவை, சூழ்ந்து கொண்டு யார் நீ எங்கிருந்து வந்தாய் என்று வினவினர். மேலும் பலவிதமாக அவளை விசாரித்தனர்.   அங்கம் அங்கமாக வர்ணித்தனர். ஒரு நிலையில் அறிவிலிகள் பெண் தானே என்று அவளை பலாத்காரமாக இழுத்தனர். பலமாக சிரித்து, பகவான் அந்த உருவைத் தியாகம் செய்தார். சந்த்யா காலத்தில்  கந்தர்வ அப்சர கணங்களை ஸ்ருஷ்டி செய்தார்.  அந்த அழகிய பெண் –  சந்த்யா என்பவளை விஸ்வாவசு என்பவர் தலைமையிலான கந்தர்வர்கள் கைப்பற்றினர். 

பூத பிசாசங்களை படைத்தார்.  திசைகளே ஆடைகளாக. தலையை விரித்து போட்டபடி, வந்த அவர்களைக் கண்டு தானே கண்களை மூடிக் கொண்டார்.  ப்ரபுவின் ஜ்ரும்பனா என்ற பெண்ணை அவர்கள் பறித்துக் கொண்டனர். (ஜ்ரும்பனம்- கொட்டாவி விடுதல்)  தூக்கம், தாறுமாறான இந்திரியங்களின் போக்கு இந்த பூதங்களின் அடையாளம்.  அதன் பின் பலவந்தமாக தன்னை மறைத்துகொண்டு ஸ்ருஷ்டியை செய்தார். அதனால் தான் பித்ரு காரியங்கள் என்பவை துவங்கின.  ஹவ்யம், கவ்யம் என்பன தங்கள் குல முன்னோர்களை முன்னிட்டு செய்ய ஆரம்பித்தனர். முன்னோர்கள் கண்ணுக்கு தெரியாவிட்டாலும் அவர்கள் அவைகளை ஏற்றுக் கொள்வர்  என்பது நம்பிக்கை.

சித்தர்களையும், வித்யாதரர்களையும் தன்னைப் போலவே  எதிரில் காணவும் முடியும் திடுமென மறையவும்  முடியும் என்ற திரோதான சக்தியால் படைத்தார். .  கின்னரர்கள் கிம்புருஷர்கள் என்பவர்களை தன்னுடைய ப்ரதி பிம்பமாகவே படைத்தார்.  அவர்கள் இருவர் இருவராக பாடுவதும் ( ப்ரதி பிம்பத்தை பார்த்து தானே ரசித்ததால் அதே குணத்தோடு பிறந்தனர் ) உடலை அனுபவிப்பது, மிகவும் எதிர்பார்ப்புகளொடு உறங்கியும் சந்ததி இல்லை என்பதால், கோபத்துடன் அந்த தேகத்தை விட்டனர்.  அச்சமயம் அவர்கள் உடல்களிலிருந்து விழுந்த ரோமங்கள் க்ரூரமான பாம்புகளாக ஆயின.  நாகா: என்ற பெயர் (ஸர்பத: வேகமாக செல்வதால்) வந்தது.

அதன் பின் திருப்தியடைந்தவராக, தன் மனதால் தன்னைப் போலவே மானச புத்திரர்களாக மனு என்பவர்களை ஸ்ருஷ்டி செய்தார். அவர்களுக்கு புருஷாகாரமான தனது உடலையே (புரம்-தேகம்) என்பதையே கொடுத்தார்.  அவர்களும் மகிழ்ந்து நீங்கள் செய்தது மிகச் சிறந்த காரியம் என்று புகழ்ந்தனர்.

அக்னி ஹோத்ரம் முதலான செயல்களைச் செய்து நாங்களும் அன்னம் முதலியவைகளை உண்போம் என்று மகிழ்ந்தனர்.

அதன் பின் தன் தவத்தாலும், வித்யையாலும், யோகம், சமாதி இவைகளைக் கொண்டு ஹ்ருஷீகேசன் ரிஷிகளை தங்களுக்கு பிடித்தமானவர்களான பிரஜைகளாக ஸ்ருஷ்டித்தார்.  அவர்கள் ஒவ்வொருவருக்கும் தன் தேகத்தின் ஒரு அம்சத்தை கொடுத்தார். அவையாவன, சமாதி, யோகம், ருத்தி- அமானுஷமான சக்தி மற்றும், நிறைவு,  ஐஸ்வர்யம், தபஸ், வித்யா, விரக்தி என்பன.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபதாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-52

அத்யாயம்21 

விதுரர் ஸ்வாயம்புவ மனுவின் வம்சம் வளர்ந்த கதையைச் சொல்லுங்கள் என்றார்.  ப்ரியவ்ரதன், உத்தான பாதன்  என்று இரண்டு பிள்ளைகள் பிறந்தனர்.   சப்த த்வீபங்கள் உடைய தன் பூமியை நன்றாக ஆண்டு வந்தார்.  அவர்  மகள் தேவஹூதி.  கர்தமர்  என்ற ரிஷிக்கு மணம் செய்து கொடுத்தார். அவர்களுக்கு நிறைய குழந்தைகள் என்று தெரியும். . அந்த கதையைச் சொல்லுங்கள் என்றார்.

மைத்ரேயர் ஆரம்பித்தார். இது நடந்தது  க்ருத யுகத்தில்.  ப்ரும்மா கர்தமரிடம் ப்ரஜைகளை உருவாக்குங்கள் என்று சொல்லி இருந்தார்.  அந்த சமயம், அவர் சரஸ்வதி நதிக் கரையில் தவம் செய்து கொண்டிருந்தார். பல காலம் சென்றபின்  அவருக்கு ஸ்ரீ ஹரியின்  தரிசனம் கிடைத்து.  பகவானின் சப்த ப்ரும்மம் – சப்த ரூபமான அந்த ரூபத்தை கண்டு பரவசமானார். சூரியன் போன்ற பிரகாசமான அவரை உள்ளன்புடன்  துதி செய்தார்.    – வெண்மையான சரீரத்தில் கருங்குழல் ,  வெண், நீல உத்பல புஷ்பங்களாலான மாலையுடன், கிரீடமும், குண்டலமும், மார்பில் கௌஸ்துப மணியும்,  சங்க சக்ர கதா தாரியாக,  கருட வாகனத்தில் ஆகாயத்தில் நின்றவரின் கண்களின் குளுமையான பார்வை மனதை தொட வீழ்ந்து சேவித்தார். “பகவானே!  கண்கள் செய்த பாக்கியம் உங்கள் தரிசனம் கிடைத்தது. யோகத்திலேயே வாழ் நாளை கழித்த யோகிகளுக்கும்  கிடைக்காத  தரிசனம்.  உன் பாத தரிசனம் சம்சார கடலைக் கடக்க உதவும் படகு போன்றது.  நான் எனக்கு சமமான சீலம் உடைய ஒரு பெண்ணை மணந்து பிரஜைகளை பெருக்க வேண்டும் என்பது ப்ரஜாபதியின் ஆதேசம்-கட்டளை.  எனவே,  உலக ரீதியில் வாழ்ந்து உன் நினைவாகவே தேக தர்மத்தை நிறைவேற்றுவேன்.  சிலந்தி தன் கூட்டைக் கட்ட உடலின் உள்ளே இருந்தே சக்தியைப் பெறுவது போல நானும் என் வம்சத்தை விருத்தி செய்வேன். எனக்கு இடப்பட்ட பொறுப்பு அது. உன் அனுக்ரஹமாகவே இதை ஏற்றுக் கொள்கிறேன். உன்னிடம் நான் வேண்டுவது ஒன்றே. அனுபவித்து அதன் படி உலக நியதிகளை ஏற்படுத்தியவன் நீ. அதனால் உனக்குத் தெரியும்.  ரிஷியாக வாழ்ந்த எனக்கு ஒரு சிறிது காமத்தைக் கொடு. வணங்கத் தகுந்த உன் பாத சரோஜத்தில் இந்த அல்ப விஷயத்தைக் கேட்கிறேன். இப்படி மிகவும் சங்கோசத்துடன் பகவானிடம் வேண்டிய ரிஷியைப் பார்த்து பகவான் அம்ருதம் போன்ற தன் வாக்கால், கண்களால் அன்புடனும், மென் சிரிப்புடனும் சொன்னார்.

“உன் வாழ்க்கை முறையைத் தெரிந்து தான் உன்னிடம் இந்த செயலை ஒப்படைக்கிறேன். எனக்கு சமமாக ப்ரஜாபதியின் மகன் சப்த த்வீபம் என்ற ப்ரும்மாவர்தம் -பூ உலகை  ராஜ்ய பரிபாலனம் செய்து வருகிறான்.  அவன் தன் மனைவி சதரூபா என்பவளுடன் நாளை மறு நாள் இங்கு வருவான். அவனுடைய மகள் நல்ல அழகி. நல்ல சீலமும் குணங்களும் உள்ளவள்.  அவளுக்கு தகுந்த மணாளனைத் தேடிக் கொண்டிருக்கிறான்.  உன்னை அவளுக்கு ஏற்றவனாக நினைக்கிறான். இது வரை மனதை அடக்கி பல காலமாக  தவம் செய்த உனக்கு அந்த ராஜகுமாரி, நல்ல மனைவியாக இருப்பாள். ஒன்பது குழந்தைகளை உனக்குப் பெற்றுத் தருவாள்.  வேத விற்பன்னரான நீ அவளிடம் ஒத்து வாழ்ந்து வருவாயாக. பிறக்கும் குழந்தைகளிடம் தயையுடன் நடந்து கொள். அவர்களுக்கு பாதுகாப்பாக இரு.  என்னிடம் வைத்த உன் மனதுடன் உலகை ரக்ஷிப்பாய்,  உன் உள்ளத்தில் என்னையும் ஸ்மரித்து இருப்பாய். என் அம்சமாக உன் க்ஷேத்ரமான தேவஹூதியிடம், உன் வீர்யத்துடன் மகனாக பிறக்கிறேன்.  சில தத்வங்களை உலகுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு சொல்லி, பகவான் சரஸ்வதி நதியின் பிந்து சரஸ் என்ற இடத்திலிருந்து கிளம்பி விட்டார்.

மனு ஒரு வாகனத்தில் -ரதத்தில் தன் மனைவி, மகளுடன் யாத்திரையாக பூமியை சுற்றிக் கொண்டு வந்து ஒரு நல்ல நாளில், பகவான் சொன்னபடி, சாந்தமாக இருந்த அந்த ஆசிரமத்தையடைந்தார். அந்த இடத்தில் பகவானின் கண்ணீர் விழுந்ததால்  பிந்து சரஸ் என்ற பெயர் வந்ததாக சொல்வர்.  சிவாம்ருத ஜலம் எனப்படும் சரஸ்வதி நதி தீரம். மகரிஷிகள் நிறைய வசித்த இடம். புண்யமான மரங்கள், செடி கொடிகளோடு  பசுமையாக இருந்த இடம்.  மான்களும் மற்ற மிருகங்களும் வளைய வந்தன. எல்லா பருவ காலங்களிலும் புஷ்பங்களோடு வன ராஜ்யம் என லக்ஷ்மீகரமாக விளங்கியது. மதம் கொண்ட யானைகள் கூட்டம், அதே போல மதம் கொண்ட வண்டுகள் ரீங்காரம் செய்தன.  ஆனந்தமாக மயில்கள் ஆட, கோகிலங்கள் அதற்கு இசைய பாடுவது போல இருந்தது. கதம்ப புஷ்பங்களும், சம்பக, அசோக, காரஞ்ச்ச, ஜாபா, பகுல, மல்லிகை மந்தார, குடஜம் . மாம்பூ, இவைகள் அலங்காரமாக இருந்தன. குளங்களில், காரண்டவ, ஹம்ஸ பக்ஷிகள், ப்லவ, குரரம், ஜலத்தில் வசிக்கும் கோழிகள், சாரஸ, சக்ரவாக, இவையனைத்தும் கூச்சலாக கூவின. அதே போல சில மிருகங்கள்- மான்கள், க்ரோட, நாய்கள், பசுக்கள், கவயம் எனும் வகை பசுக்கள், பசு வாலுடன்  சில மான்கள், குள்ள நரிகள், கஸ்தூரி மான் இவைகள் நிறைய தென்பட்டன. 

அந்த தீர்த்த ஸ்தானத்தில் நுழைந்த ஆதி ராஜன், தவ வலிமையால் நெருப்பு போல ஜொலித்த முனிவரைக் கண்டார். பல நாட்களாக தவம் செய்து கொண்டிருப்பதை அவரது உடல் நிலையே காட்டியது. அவர் மனம் மகிழ்ந்தது மெலிந்த உடல், தயை ததும்பும் கடைக்கண் பார்வை,   அம்ருதம் போன்ற வாக்குகள் காதில் தேனைப் பாய்ச்சின,   அவருடைய மலினமான மரவுரி உடையும், பார்த்த மாத்திரத்தில் வணங்கச் செய்யும் சரித்திரமும் அரசனை கவர்ந்தன.  ரிஷி கர்தமர் தன் குடிசைக்கு வந்த அரசனை தகுதியான உபசாரங்கள் செய்து வரவேற்றார். அர்க்யம் முதலின கொடுத்தபின் பகவான் சொன்னது நினைவுக்கு வந்தது. தானாகவே அரசனிடம் தெரிவித்தார். “ அரசனே, பிரஜைகளை பாதுகாக்க நீ செய்யும் நல்ல செயல்களை அறிவேன். சத்தான- நல்ல குடிகளை பாதுகாப்பது போலவே,அசத்தான பிரஜைகளை கண்டிப்பதும் அவசியமே. சூரிய சந்திரர்கள்,அக்னி, வாயு இவர்களை சம தர்மத்துடன் அவர்களுக்கு ரூபங்களையும் ஸ்தானங்களையும் கொடுத்த உனக்கு நமஸ்காரம்.   மணிகணங்கள் அலங்கரிக்கும் உன் தோள்களில்  கோதண்டத்தை தாங்கி,ரதத்தில் மற்ற அசத்துக்களை பயமுறுத்துகிறாய். உன் சைன்யங்கள் உலகை சுற்றி வருகின்றன. சூரியனின் கதியைப் போலவே உள்ளன.  பகவானே ஏற்படுத்திய வர்ணாஸ்ரம தர்மங்கள், ஒருவகையில் பாதுகாப்பான கட்டுப்பாடுகள்.  திருடர்கள்  அதை கலைக்கவே முயலுவார்கள்.  அப்படி செய்ய இடம் கொடுத்தால் அதர்மம் மேலோங்கும்.  காத்துக் கொண்டிருக்கும் மற்ற அரசர்கள் நீ சற்று அசந்தாலும் உன் ராஜ்யத்தை அபகரித்து விடுவர், உலகமே அந்த திருடர்களால் அழியும். அது கிடக்கட்டும், அரசனே! நீ இங்கு வந்த காரணம் என்ன?  தெளிவாக நாம் அதைப் பற்றி மனம் விட்டு  பேசுவோம்.”

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து ஒன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-54

அத்யாயம்22 

முனிவரை பார்த்து அரசன் திகைத்தான். தன்னுடைய அனுஷ்டானத்தில் ஈடுபாட்டுடன் தவம் செய்து வருபவரிடம், லௌகிகமான தன் எண்ணத்தை எப்படி தெரிவிப்பது என்ற யோசனை வந்தது. பின் சமாளித்துக் கொண்டு பின் வருமாறு சொன்னார். “ப்ரும்மா தன் முகத்திலிருந்து தங்களை உருவாக்கினார். வேதத்தை காப்பாற்ற,  சந்தோ -வேதமே உருவாக,  தவம், வித்யா, யோகம் இவை அனைத்தும் ஒரு சேர, தனக்கு உதவியாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்.  நெருப்பு போன்ற தூய்மையான ரிஷி தாங்கள். அதே போல எங்களையும்  உருவாக்கினார். சஹஸ்ர பாத் என்ற பெயருடைய அவர் (ஆயிரம் கைகளும், கால்களும் உடையவர்) அவருடைய இருபது புஜங்களிலிருந்தும்  க்ஷத்திரியர்களாகிய நாங்கள் தோன்றினோம். எனவே தான் ரக்ஷிப்பது அதாவது காப்பாற்றுவது என்ற செயலில் நாங்கள் இருவரும் அன்யோன்யமாக இருக்கிறோம்.  ப்ரும்ம ஞானிகளையும் அவரே தான் உருவாக்கினார்.  உங்களைப் பார்த்தவுடனேயே என் சந்தேகங்கள் விலகி விட்டன. நீங்கள் அந்த பகவானுக்கு சற்றும் குறைந்தவரில்லை.  என் பாக்கியம் உங்களை கண்டு கொண்டேன்.  சாதாரண ஜனங்களுக்கு காணக் கிடைக்காத உங்கள் பாத தரிசனம்,  மங்களகரமான அதில் என் தலை வைத்து வணங்குகிறேன்.  உங்கள் மதுரமான வார்த்தைகள் என் கவலையை தீர்த்து விட்டன.

எனக்கு மிகவும் பிரியமான மகள் விஷயமாக உங்களைக் காண வந்தேன்.   என் மகளை நல்ல முறையில் குணசாலியாக வளர்த்து இருக்கிறோம்.   நாரதர் உங்களைப் பற்றி சொன்னார்,  இவளை உங்களுக்கு கொடுக்கலாம் என்றும் அவர் சொன்னதால் வந்தோம்.  அதனால் மகாமுனிவரே, உங்களுக்கு எல்லாவிதத்திலும் அனுரூபமான மனைவியாக இருப்பாள். இவளை ஏற்றுக் கொள்ளுங்கள்.  இல்லறத்தில் நாட்டமில்லாதவர் என்பதும் தெரியும். பகவானே அனுக்ரஹித்து உங்களை இல்லறத்தில் ஈடுபடவும் உலகியலை அனுசரித்து  நல்ல பிரஜைகளை உருவாக்கச் சொன்னதாகவும் அறிவேன்.   எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல் இந்த விவாகத்தை நடத்த விரும்புகிறேன்”

முனிவர் பதில் சொன்னார். எனக்கு சம்மதமே. உங்கள் மகளை மணந்து கொள்கிறேன்.  எனக்கு அனுரூபமான பெண் உங்கள் அழகிய மகள்,  நீங்கள் விவாக ஏற்பாடுகளைச் செய்யுங்கள், என்றார்.  எனக்கு பல பெண்கள் பிறப்பார்கள் என்றும், உங்கள் மகளை மறுக்காதே என்றும் பகவானே சொல்லியிருக்கிறார்.  விவாகம் விமரிசையாக நடந்தது.  மஹாராணியான சதரூபா, ஏராளமான ஆடை ஆபரணங்களையும், பணியாட்களையும்  மகளுக்கு உதவியாக இருக்க பணியாட்களையும் தந்தாள்.  மகளும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து அரசர் மன நிம்மதியுடன் அவளை அனைத்து ஆசீர்வதித்தார்.  எல்லா தந்தைகளையும் போலவே அவரும் மகளை அனுப்ப கலங்கினார்.  பின் தன் பரிவாரங்களோடு விடைபெற்று சென்றார். 

கர்தமரும் பர்ஹிஷ்மதீ என்ற இடத்தில் குசம், காஸம் என்ற பசுமையான புல் நிறைந்த சூழ்நிலையில் தன் மனைவியுடன் வசிக்கலானர்.  நாளடைவில் குழந்தைகளுடனும் மனைவியுடனும் வசிக்கும் பொழுதும் பாடுபவர்களும் வந்து ஹரி கதைகளைச் சொல்ல நாட்கள் சுகமாக கழிந்தன.  இல்வாழ்க்கை அவரது யோக சாதனைகளையோ, சுய கட்டுபாடுகளையோ பாதிக்கவிடாமல் பகவானின் தியானத்துடனேயே வாழ்ந்தார்.

பகவத் கதைகளை கேட்பதிலும், த்யானம் செய்வதிலும், விஷ்ணு பூஜைகள் செய்வதிலும் பல நாட்கள்

சென்றன.  சரீரமோ, மனசோ, பௌதிகமான தடைகளோ அந்த தவ சீலரை பாதிக்கவில்லை.  கூடியிருந்த சிஷ்யர்களுக்கும், மற்ற முனிவர்களுக்கும் பலவிதமாக பலவிதமான தர்மங்களையும், அரச நீதியையும், வர்ணாஸ்ரம கட்டுப்பாடுகளையும்  விவரித்து உபதேசங்கள் செய்து வந்தார்.  இது தான் ஆதி ராஜனான மனுவின் கதை.  கர்தமரின் குழந்தைகளைப் பற்றி சொல்கிறேன் கேள். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து இரண்டாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-39

அத்யாயம்23 

பெற்றோர்கள் திரும்பிச் சென்ற பின்  இருவரும் பவனும் பவானியையும் போல ஒருவருக்கொருவர் அனுசரித்து வாழ்ந்தனர். பிரியமாக பேசியும், சுய கட்டுப்பாடு -நடத்தை, கௌரவம் கொடுத்தும் பெற்றும், அடக்கத்துடனும், உதவிகள் செய்து கொண்டும், நட்பாக இருந்தனர். காமம், ஆடம்பரம், துவேஷம், லோபம், குற்றம், மதம் – சோம்பல், இவைகள் பாதிக்காத குறைவில்லாத உழைப்பு  இவற்றுடன் தேஜஸே உருவான பகவானை சந்தோஷிக்கச் செய்தனர்.   கர்தமரோ  தேவ ரிஷிகளிலும் முதல்வராக போற்றப் படுபவர் என்பதால் ஏற்படும்  மரியாதையுடனும் சேவைகள் செய்து ஆசிகளைப் பெற்றாள்.  பல காலம் சென்றது. ஓயாத விரதங்கள், வேலைகள் இவற்றால் மெலிந்து விட்ட மனைவியைப் பார்த்து கர்தமர் பிரியத்துடன், குற்ற உணர்வால் வருந்தினார்.   தயையுடன் குரல் தழ தழக்க அவளிடம் சொன்னார். “ உன் சேவைகளாலும் பக்தியாலும் மகிழ்ந்தேன்.  மானிடப் பெண்ணே!  உன் அனுசரனையால்  நான் கௌரவிக்கப் பட்டேன். தன் உடல் நலத்தை தான் பெரிதும் விரும்புவர். அப்படியிருக்க நீ  என் காரணமாக உன்னையே கூட அதிகம் போஷித்துக் கொள்ளவில்லை. ஒரு விதத்தில் நான் என்னுடைய தவம், தர்மம், தவம், சமாதி, வித்யா, ஆத்ம யோகம் என்று அதிலேயே மூழ்கி இருந்து விட்டேன்.  நீயோ எனக்கு சேவை செய்வதே போதும் என்று இருந்து விட்டாய்.

பகவானின் புருவம் நெரிந்ததால் உண்டான  சில தத்வங்கள், உலகியல் சுகத்துக்காகவும் ஏற்பட்டவை,  அந்த சுகமான அனுபவங்களையும் நீயும் குறைவறப் பெறுவாய். சாதாரண மனிதர்களுக்கு நினைத்தே பார்க்க முடியாத,, அரசர்களின் விக்ரமங்களாலும்  கூட பெற முடியாத பல அனுபவங்களையும் அனுபவிப்பாய்.  . அகில யோக மாயா வித்யா விற்பன்னர் என்று பெயர் பெற்ற கணவனா இப்படி பேகிறார் என்று நம்ப முடியாமல் தேவஹூதி ஏறிட்டுப் பார்த்தாள்.

நான் பாக்கியம் செய்தவள். உங்களை கணவனாக அடைந்த நான் வேண்டுவது ஒன்றே. ப்ரும்ம ரிஷி, அமோகமான யோக சாதனைகள் செய்தவர் என்ற பெருமைகள் உடையவர். ஒரு சிறிது உடல் உறவும் இருந்தால் மிகப் பெருமையாக உணர்வேன். பெண்கள் மிக உயர்வாக எண்ணும் தாய்மை வேண்டும்.

பிரியமான மனைவியின் நியாயமான கோரிக்கையை ஏற்று, கர்தமர் தன் யோக பலத்தால் விருப்பப்படி எங்கும் செல்ல உதவும் ஒரு விமானத்தை தயாரித்தார். திவ்யமான, பல விதமான மணிகளால் அலங்கரிக்கப் பட்ட எல்லா பருவ காலங்களிலும் மிதமான தட்ப வெட்பங்களுடன்  கூடிய அழகிய விமானம் அது.  அதையும் விசித்ரமான பட்டு தோரணங்களும்,  மாலைகளும், என அதில் நிறைத்தார்.  பல தளங்கள் உள்ள அந்த விமானத்தில், படுக்கைகளும், சிறு ஆசனங்கள் மென்மையான உறையுடன் தயாராக இருந்தன. பல கலையழகு நிரம்பிய சில்பங்கள் ஆங்காங்கு வைக்கப் பட்டிருந்தன. மகா மரகதம் என்பதால் ஆன தரை.  முத்தும், பவளமும், இந்த்ர நீல மணிகள் பொன் மயமான சிகரத்தில் பதிக்கப் பட்டிருந்தன.  இவைகளைப் பார்த்தும் அவள் அதிகமாக மகிழ்ந்ததாக தெரியவில்லை.  இந்த குளத்தில்குளித்து விட்டு வா, இந்த விமானத்தில் ஏறிக் கொள் என்று அழைத்த பின், அவள் சரஸ்வதி நதியில் குளிக்க இறங்கினாள். அவளை திடுமென பத்து பணிப் பெண்கள் சூழ்ந்து நாங்கள் உனக்கு பணிப் பெண்கள். என்ன செய்ய வேண்டும் என்று ஆணையிடுங்கள் என்றனர். அந்த பெண்கள் தேவஹூதியை ஸ்னானம் செய்வித்து, நன்கு அலங்கரித்து, புதிய ஆடைகள், புது ஆபரணங்கள் அணிவித்து,  அம்ருதம் போன்ற அன்னமும், உயர்ந்த  பானமும் அளித்து, கொண்டு வந்து  சேர்த்தனர்.  ஆகாயத்தில் தாரா கணங்களுடன் இருக்கும் சந்திரன் போல வித்யாதர ஸ்த்ரீகள் பணிவிடை செய்ய பதியுடன் அமர்ந்தாள். 

அந்த விமானத்தில் அஷ்ட லோக நாயகன் விளையாடும் குலாசலம் என்ற மலைப் பகுதிகள், தென்றல் வீசும் சுகமான இடங்களில் சித்தர்கள் வணங்க, பல பனித் துளியால் நிறைந்த ரமணீயமான இடங்களையும் ரசித்தபடி, தனதன் போல மகிழ்ந்தாள்.  தேவர்களின் நந்தன வனத்திலும், புஷ்ப பத்ரம் எனும் இடத்திலும் தடையின்றி உலாவி மகிழ்ந்தனர். பளபளத்த அந்த விமானத்தில் விரும்பியபடி பல இடங்களுக்கு அதை செலுத்தி காற்று உலகில் பரவுவது போல உலகை சுற்றி வந்தனர். பகவானை அனவரதமும் எண்ணி வணங்கும் மனிதர்களுக்கு எது தான் அடைய முடியாத தூரம், அல்லது கஷ்டம்.  பூமி உருண்டையாக இருப்பதை மனைவிக்கு காட்டினார். அவளுடைய ஆச்சர்யத்திற்கு அளவேயில்லை. பலவிதமான இடங்களையும் கண்டு மகிழ்ந்து விட்டு தங்கள் ஆசிரமம் வந்து சேர்ந்தனர். 

தன்னையே ஒன்பது விதமாக பிரித்துக் கொண்டு அவள் ஆசைப்பட்டபடியே இல்லற இன்பங்களை அனுபவித்தார். வருஷங்கள் நிமிஷமாக கடந்தன.  தேவஹூதியும் ஒன்பது பெண்களைப் பெற்றாள்.  அனைவரும் நல்ல அழகிய உடல் வாகும் சிவந்த உத்பலம் போன்று மென்மையாகவும் வளர்ந்தனர். மீண்டும் தன் தவத்தை தொடர கிளம்பிய பதியைப் பார்த்து தேவஹூதி, என் விருப்பத்தை நிறைவேற்றி பெண்களை பெற்றோம். இவர்களுக்கு தகுதியான வரன் பார்த்து மணமுடிப்பதும் நமது கடமையே என்று நினைவுறுத்தினாள்.  இவ்வளவு நாள் பொறுத்தீர்கள். உங்கள் சாதனை தடைபட்டது. எனக்கு உங்களுடைய உயர்ந்த சாதனைகளும் பரமார்த்தம் என்பதும் தெரியாமலே போய் விட்டது. இப்பொழுது உணருகிறேன். ஜீவனின் வாழ்க்கை தீர்தபதன் எனும் பகவானின் பாத சேவையின்றி உயிருடன் இருந்தாலும் மரித்தது போல் தான் என்பதை. பகவானின் மாயை என்னை மறைத்தது போலும். உங்களையும் என்னைப் போலவே பந்தத்தில் ஆழ்த்தி விட்டேன். என்று வருத்தத்துடன் சொன்னாள்.

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின், இருபத்து மூன்றாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57

அத்யாயம்24

இவ்வாறு தன்னையே நொந்துகொள்ளும் மனைவியைப் பார்த்து கர்தமர் சொன்னார். வருத்தப் படாதே. ராஜபுத்ரி நீ, உன்னையே ஏன் தாழ்த்திக் கொள்கிறாய்.  பகவானே உன் கர்பத்தில் வருவார்.  நீயும் பல விரதங்களை செய்து வந்திருக்கிறாய்.  இப்பொழுதும் பொறுமையுடனும், சாந்தமாக ஈஸ்வரனைக் குறித்து தவம் செய்.  பொருள்கள் தானமும் செய்து  வா.  எனக்கு மகனாக வருவதாக சொல்லியிருக்கிறான்.  ப்ரும்ம பாவனமான மகன்  பிறப்பான். உன் மன க்லேசம் விலகட்டும்.  பல காலம் தேவஹூதியும் அதே போல அவர் சொன்ன விஷயங்களை சிரத்தையுடன் செய்து வந்தாள். கர்தமருடைய வீர்யத்தில் மரத்தில் அக்னி இருப்பது போல இருந்து அவளுக்கு மகனாக பிறந்தார்.  அச்சமயம் வானத்தில் துந்துபி முழங்கியது. வாத்யங்கள் இசைக்கப் பட்டன. கந்தர்வர்கள் பாடினர்.  அப்சரஸ்கள் ஆடினர். எங்கும் மகிழ்ச்சி நிறைந்தது. பூமாரி பொழிந்தது.  திசைகள் சுகமாக நீர் நிறைந்து குளிர்ந்தன. ஜனங்களுடைய மனமும் மகிழ்ந்தன. கர்தமருடைய ஆஸ்ரமம் இருந்த சரஸ்வதி தீரத்திற்கு ப்ரும்மாவும், மரீசி முதலிய ரிஷி கணங்களும் வந்து சேர்ந்தனர். பரப்ரும்மமான பகவானை, சத்வாம்சம் நிறைந்தவனாக, சத்ருக்களை அழிக்கும் வீரனாக, தத்வ ஞானம் அளிக்கும் பொருட்டு பிறந்தவனை  காண வந்து சேர்ந்தனர். அவருடைய எண்ணத்தை உள்ளபடி உணர்ந்து அதை மதிப்பவர்களாக மகிழ்ச்சியுடன்  கர்தம ரிஷியை வாழ்த்தினர்.

ப்ரும்மா சொன்னார்: மகனே,  என்னை கௌரவித்து விட்டாய்.  என் சந்ததியை வளர்த்து பெருகச் செய் என்று  நான் வேண்டியதை நிறைவேற்றி விட்டாய்.  தந்தைக்கு மகன் இப்படித்தான் இருக்க வேண்டும்.  தந்தை சொல்வதை ஏற்று அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும்.  இந்த பெண்களும் நாகரீகம் தெரிந்தவர்களாக அழகிகளாக இருக்கிறார்கள். தகுதியுடைய வரன்களுக்கு அவர்கள் மனம் விரும்புவது போல் மணம் செய்து கொடு. உலகில் பிரஜைகள் பெருகட்டும்.   தன் மாயையால் பகவான் ஆதி புருஷன் அவதரித்திருப்பதை நான் அறிவேன்.  மனித உடலில்  கபிலனாக வருகிறான்.  ஞான விக்ஞான யோகத்தால் கர்ம மார்கத்தை மட்டுமே நம்பியிருக்கும் மனிதர்களை தூக்கி விட, ஹிரண்ய கேசன், பத்மம் போன்ற கண்களையுடையவன், பத்மம்  என்ற முத்ரையுடன், பத்மபாதங்களுடன்  வருவான்.

 மனித பெண்ணே! உன் கர்பத்தில் தோன்றியுள்ளவன்  கைடபாரி என்ற மஹாவிஷ்ணுவே.  அவித்யை என்ற சந்தேக சிக்கலை அவழ்த்து பூமியில் ப்ரசாரம் செய்வான். 

இவன் சித்தர்கள் கணங்களின் தலைவன். சாங்க்யம் என்ற ஞான மார்கத்தைச் சொல்லும் ஆசார்யர்களின் சம்மதத்தை பெற்றவன். உலகில் கபிலன் என்ற பெயருடன் உன் புகழை பரப்புவான். 

இவ்வாறு தம்பதியரை சமாதானப் படுத்தி விட்டு குமாரர்கள், நாரதர் முதலானோர், ஹம்ஸ விமானங்களில் தங்கள் இருப்பிடம் சென்றனர். அவர்கள் சென்றபின், கர்தமர் தன் பெண்களை ரிஷிகளுக்கு மணம் செய்வித்தார்.  மரீசிக்கு கலா என்பவளை, அனசூயாவை அத்ரிக்கு, ஸ்ரத்தா என்பவளை ஆங்கிரசுக்கு, ஹவிர்புவா என்பவளை புலஸ்தியருக்கு,கதி என்பவளை புலஹர் என்ற ரிஷிக்கு,  க்ருது என்பவருக்கு சதீ என்ற பெண்ணை, ப்ருகு முனிவருக்கு க்யாதி என்பவளை, அருந்ததி என்பவளை வசிஷ்டருக்கு , அதர்வணர் என்ற ரிஷிக்கு சாந்தி என்பவளை – என்றிவ்வாறு தன் பெண்களை சிறந்த ப்ராம்மணர்களான ரிஷிகளுக்கு மணம் செய்து கொடுத்து அவர்களை தம்பதிகளாக  அனுப்பி வைத்தார்.  விவாக சம்பந்தமான நாந்தி என்ற விடை பெறுதல் என்ற சடங்கையும் முடித்து அவர்கள் தங்கள் இருப்பிடம் சென்றனர். 

பகவானே தன் மகனாக அவதரிக்கப் போகும் விஷயத்தை அறிந்து பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளானார். க்ராம்யமான என் க்ருஹத்தில் உதிக்கப் போகிறார்.  பல ஜன்மங்களில் தவம் செய்து அறிய வேண்டிய பகவான், நமது எளிமையை பொருட்படுத்தாமல் வருகிறான்.  நல்ல சாதனைகள் செய்து யோகம், சமாதி என்று யதிகள் பகவானை தரிசிக்க தவிக்கின்றனர், அவர் என் சூன்யமான குடிலுக்குள் வருகிறார்.  தேவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவார்கள். உலகில் மங்களம் நிறையும்.

பகவானே, உன் சொல்லை காப்பாற்ற என் இல்லத்தில் அவதரிக்கிறாய். பக்தர்கள் பெருமையை காப்பாற்ற அவர்களுக்கு ஞானோபதேசம் செய்ய வருகிறாய்.  உன்  பக்தர்கள் விரும்பும் ரூபங்கள் எதுவானாலும், அந்த  அந்த ரூபத்தில் காட்சியளிக்கிறாய்.   அறிவுடையோர் உயரிய தத்வங்களை அறிய எப்பொழுதும் வணங்கத் தகுந்த உன் பாதங்களை சரணடைகின்றனர். ஐஸ்வர்ய, வைராக்யம், புகழ், அவபோதம் – தெளிந்த அறிவு, வீர்யம், ஸ்ரீ  இவை நிரம்பிய உன்னை சரணடைகிறேன்.

பர புருஷன், ப்ரதான், மஹான், காலம், கவி, மூன்றாக தெரிபவன், லோக பாலன், தன் அனுபவத்தால் ஏற்படுத்திய இந்த ப்ரபஞ்சம், சுதந்திரமான சக்தியுடைய கபிலனை ஆராதிக்கிறேன். ப்ரஜாபதி நீ அவதாரம் செய்யப் போகிறாய் என்பதை அறிந்து மகிழ்ச்சியுடன் சொன்னார்.  எனக்கு இந்த உயரிய தந்தை பதவி உன்னால் கிடைத்தது. உன் நினைவை மனதில் சுமந்து  கொண்டு  சற்றும் துக்கமில்லாமல் நான் நடமாடுவேன்.

ஸ்ரீ பகவான் பதில் சொன்னார்:  நான் முன் சொன்ன சொல் தான்  சத்ய லோகத்திற்கு ப்ரமாணம். அதனால் உன்னில் அவதரிக்கிறேன்.  முக்தியடைய விரும்பும் சாதகர்களுக்கு கூட அரிதாகவே கிடைக்கும் இந்த வாய்ப்பு, உலகில் சாங்க்ய யோகம் என்பதை பரப்புவதற்காக, உலகில் அதன் சிறப்புகளை சொல்வதற்காகவும்,  ஆத்ம தரிசனம் என்பதை சாதகர்களுக்கு அளிக்கவும் இந்த அவதாரம்.   இந்த ஆத்மா பற்றிய அறிவு, வெளியில் தெளிவாக தெரியாத வழி. பல காலமாக யாரும் முயற்சி செய்யாமல் இந்த துறை வெகுவாக நஷ்டமாகி விட்டது.  அதை புனருத்தாரணம் செய்யவே இந்த உடலை நான் தரிக்கிறேன்.  எங்கு வேண்டுமானாலும் போ. என்னிடம் பொறுப்பை ஒப்படைத்து உன் சாதனைகளை தொடர்ந்து செய்.   என்னை பூஜித்து , மரணமில்லாத அமரத் தன்மையை அடைவாய்.

நான் ஸ்வயம் ஜோதியான ஆத்மா, அனைத்து உயிரினங்களிலும் அவர்களது ஹ்ருதய குகையில் வசிக்கிறேன். உன்னிடத்தில் உன்னையே காணும் ஆத்ம வித்யா என்பதை அறிந்து கொள், அதன் பின் உனக்கு சோகமோ, பயமோ தோன்றாது. இந்த ஆத்யாத்மிகா – ஆதி ஆத்மாவான என்னை அறிவது- என்ற வித்யா எல்லா செயல்களுக்கும் பின்னால் உள்ள பயத்தை போக்கும்.  பயத்தை வெற்றி கொள்வாய்.

மைத்ரேயர் சொன்னார்: இவ்வாறு அபயமளித்த கபிலரிடம் விடை பெற்று,  கர்தமர் தென் திசை நோக்கி பயணம் செய்து வனம் சென்றார்.  மௌன விரதம் மேற்கொண்டு திடமான விரதங்களுடன், தனிமையில் துறவியின் நியமங்களை அனுசரித்தபடி இருந்தார்.  மனதில் தியானம் செய்து வந்தார். நல்லது, அல்லாதது எதிலும் பட்டுக் கொள்ளாமல் குணங்களையும் வென்றவராக, பக்தி ஒன்றே என பாவித்து இருந்தார். தானே, அஹம்பாவம் (தன்னியல்பு) அகன்றது.  என்னுடையது என்ற எண்ணமே இல்லாமல் போனது. உயிரினங்கள் அனைத்தையும் சமமாக பார்த்தார். ப்ரசாந்தமான புத்தியுடன் தீரனாக, சமுத்திரத்தின் சாந்தமான  அலை போல இருந்தார்.

சர்வக்ஞன் எனும் பகவான் வாசுதேவனிடத்தில் முழுமையான பக்தி பாவத்துடன், பந்தங்கள் அறுபட்டவராக, தன்னையறிந்தவராக  ஆனார்.

आत्मानं सर्वभूतेषु भगवन्तमवस्थितम् ।अपश्यत्सर्वभूतानि भगवत्यपि चात्मनि ॥ ४६॥

என்றபடி அனைத்து ஜீவராசிகளிடமும் தன்னையே காண்பவராக, உலகில் எல்லா உயிரினங்களிடமும் உள்ளது ஒரே பரமாத்மாவின் அம்சமான ஆத்மாவே என்ற உண்மையை உணர்ந்து அறிந்தார்.

ஆசையோ, வெறுப்போ, இல்லாமல் சமமாக அணுகும் குணம் வந்து சேர்ந்தது.  தன் பக்தி நெறியாலேயே பரம பாகவதர் என்ற தகுதியை அடைந்தார். 

(இது வரை மஹா புராணம் எனப்படும் ஸ்ரீமத் பாகவதத்தில் பெரியவர்கள் தொகுத்து அளித்த காபிலேயோபாக்யானம்  – என்ற  மூன்றாவது  ஸ்கந்தத்தின்,  இருபத்து நாலாவது அத்யாயத்தின்  தமிழாக்கம் ) ஸ்லோகங்கள்-57

|| ஸ்ரீமத் பாகவதத்தில் காபிலோபாக்யானம் என்ற மூன்றாவது ஸ்கந்தம் நிறைவுற்றது || 

ஓம் தத் சத் ||

Subscribe to continue reading

Subscribe to get access to the rest of this post and other subscriber-only content.

அம்ருதாவின் நாவல்

Dissidents of perfection-   பொது விதியும், விதி மீறலும் or விலங்குலகம்-சிலருக்கு தாயகம் எல்லோருக்கும் அல்ல

பகுதி-1

தனியாக நடந்து வந்து ஓரிடத்தில் நின்றபடி சுற்று முற்றும் பார்த்துக் கொண்டிருந்த  நீலா இமைக்கும் நேரத்தில் தன்னைச் சுற்றி திரவமாக  எதோ சூழ்வதை உணர்ந்தாள்.  தானும் அதில் அடித்துச் செல்லப் படுவது போல் இருந்தது. கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டு சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்.  பெரிய காடு – ஆனால் இது வரை இவ்வளவு வண்ணமயமான இடத்தைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.  மரங்கள் புதுமையாக, கிளைகள் வளைந்து வளைந்து மிருகங்களுக்கு வீடாக சிறு சிறு  அடக்கமான பெட்டகங்கள் போல தெரிந்தன,  ஒவ்வொரு மரத்திலும் பொந்துகள், அது தவிர யாரோ, கிளைகளை வளைத்து தனக்கு வீடாக செய்து கொண்டிருந்தனர்.  தரையெல்லாம்  குகைகள். புல் புதர்கள் மூடி மறைவிடமாக இருந்தன.  

ருசியான பழங்கள் பழுத்து தொங்கின.  ஆங்காங்கு அழகான நீரூற்றுக்கள்.  ஓடி வரும் வேகத்தில் நுரைபொங்க, நீர்த் திவலைகளை விசிறியடித்த படி  அந்த இடமே குளுமையாக இருந்தது. அனைத்துக்கும் மேல் வளைந்த நுழை வாயில்கள். விலை உயர்ந்த மணிகளோ, அதே போன்ற வண்ணக் கற்களோ அந்த வளைவுகளை அலங்கரித்தன.  ஒரு பெரிய எலியோ அதன் ஜாதியோ பள்ளம் பறித்துக் கொண்டிருந்தது. இவளை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்து திகைத்து நின்றது.  

ஒரு டின்னர் ப்ளேட்  அளவு கண் விரிய என்று நீலா நினைத்தாள்.  ஒருவழியாக தான் எங்கோ வந்து விட்டிருக்கிறோம் என்பது மனதில் உறைக்க நீலா சுற்றும் முற்றும் பார்த்தாள்.  பூலோகம் அல்ல இது விலங்குகள் வாழும் வேறு உலகம். 

பகுதி-2

எவ்வளவு முயன்றும் அன்று காலை பிக்னிக் என்று ஏதோ ஒரு இடத்திற்கு போவதற்காக தன் பொருட்களைத் தேடி பையில் வைத்துக் கொண்டிருந்தாள்.. அதற்கு முன் நினைவுக்கு வரவில்லை.  

நீலா, எந்த உலகத்தில் இருக்க, அம்மா கூப்பிடுவது கேட்டது.   உன் சாமான்கள் எடுத்து வைத்துக் கொண்டாயா? இதோ நாங்கள் எல்லோரும் தயாராக கிளம்பிவிட்டோம், வா 

நீலா பெருமூச்சு விட்டபடி எழுந்தாள். கையில் இருந்த புத்தகத்தில் அடையாளம் வைத்து அதன் இடத்தில் வைத்தாள்.  இதோ வரேம்மா.. என்றபடி மாடிப் படிகளில் இறங்கி வந்தாள். அம்மா திரும்பவும் அழைத்தாள்.  இரண்டு நிமிஷத்தில் வண்டி வந்து விடும், சீக்கிரம் வா – 

நீலா அவசரம் அவசமாக தன் துணிமணிகள், முக்கியமான சாமான்கள். சில புத்தகங்கள் இவற்றை கிடைத்த சிறிய பெட்டியில் போட்டுக் கொண்டு கீழே வந்தாள்.  காரில் செல்லும் பொழுதும் நீலா கையிலிருந்த புத்தகத்தில் ஆழ்ந்து இருந்தாள்

அவளுக்கு ஊர் சுற்றுவது என்பதே ஆகாது. சிறு  பூச்சிகள் சுற்றும். பழக்கமில்லாத நாடோடி வாழ்க்கை.  ஊர் சுற்றவாம், அதுவும் ஏதோ மலைப் ப்ரதேசத்திற்கு. டென்ட் போட்டுக்  கொண்டு மலை ஏறுவதும், இந்த நகர வாழ்க்கையின் அலுப்பை கழற்றிவிடுவது போல ஒரு நாடகம். 

மற்ற எல்லோருக்கும் உற்சாகமாக இருக்க, இவளுக்கு கிளம்பவே மனமில்லை. சாய்வு நாற்காலியில் கையில் புத்தகத்துடன் தான் அவள் எப்பொழும் இருப்பாள். சில சமயம் பைக்கில் போக பிடிக்கும்.  இறங்கும் இடம் வந்தும் மெதுவாக  தன் போக்கில் காலடியில் சருகுகளை மிதித்து நசுக்கியபடி சுற்றும் முற்றும் பார்த்தாள்.  அவள் நினைத்தது  போலவே அந்த இடம் வெறுமையாக காட்சியளித்தது. 

அவள் அம்மா சர்க்கரை வள்ளிக் கிழங்கு இன்னும் கொண்டு வந்த சில சாமான்களை வைத்துக் கொண்டு சமைத்ததே அமிர்தமாக இருந்தது.   

மாலா சொன்னாள்:  இதைப் பார் அழகான பப்பி-  நாய்க் குட்டி 

எட்டிப் பார்த்த நீலா சின்னஞ் சிறு நாய்க் குட்டி,  இல்லையில்லை இது இளம் செந்நிற ரோமம்  பரவிய உடலுடன்,  ஓநாய் –  காது மடல்கள் விறைத்து இவர்களின்  கூச்சலைக் கேட்டு கண்களில் சற்றே எரிச்சல் தெரிய நின்றிருந்தது.   வலது காது மடல்களில் சிராய்ப்பு தெரிந்தது.  சுற்றிலும் நின்றவர்களை நோட்டம் விட்டபடி உறுமியது.  தனக்குள் சிங்கத்தின் கர்ஜனையாக நினைத்துக் கொண்டதோ என்னவோ.  மாலா அதை வெகு பிரியமாக கட்டி அணைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். அனவருமாக அதற்கு ஒரு இரும்பு கூண்டை தயார் செய்தனர்.  

வெளியில் சற்று காலார நடக்கலாம் என்று நீலா வெளியே வந்தாள்.  மாலாவுக்கு புது வருகையான  பப்பியுடன் சரியாக இருந்தது.  நீலாவோ அதை சந்திப்பதை தவிர்ப்பதே காரணமாக வெளியில் நடந்தாள்.  அப்பாடா என்று ஒரு சிறிய மண் மேட்டின் மீது அமர்ந்தாள்.  அதிக நேரம் அந்த நிம்மதி நீடிக்கவில்லை. நீலாவுக்கு அலுப்பாக இருந்தது.  சுற்று முற்றும் பார்த்தவள் அவளுக்குப் பின்னால், மரங்களின் இடையில் ஒரு நீல வண்ண ஒளி தனித்து தெரிவதைக் கண்டாள்.

யாராவது செல்போனை விட்டுச் சென்றிருப்பார்கள். நாம் செய்வது சரிதானா என்று ஒரு நிமிடம் யோசித்தவள், அடி மேல் அடி வைத்து அந்த ஒளியை நோக்கிச் சென்றாள். செய்/செய்யாதே என்று ஒரு கட்டம் போட்டு எழுதி வைப்பது போல மனதினுள் திட்டமிட்டபடி, அதன் மேல் படர்ந்திருந்த தழைகளை நீக்கிப் பார்த்தாள்.  ஒரு அழகிய நீல மணி சிறப்பாக நால் புறமும் அமையப் பெற்ற மதிப்பு மிக்க நல்மணி.  பக்கங்களிலிருந்து பொன்னிறமும், நீல நிறமும் கலந்து ஒளிச் சிதறலாக தெரிந்தது.  நீலக்கல் என்று அருகில் செல்லச் செல்ல அதன் வண்ணங்கள் கண்களை பறித்தது. அது வரை கண்டிராத அதிசயக் கல். கையில் எடுத்தவுடன் வண்ணங்கள் மாறி மாறி சிவப்பு, நீலம், வெள்ளியின்  வெண்மை, காவி அல்லது ஆரஞ்சு வண்ணம், கருநீலம் , மற்ற வண்ணங்களின் பெயர் அவளுக்குத் தெரியவில்லை. ஆ என்று அலறத் தான் முடிந்தது. 

பகுதி-3

சிரமப் பட்டு முன் நடந்தவைகளை நினைவுக்கு கொண்டு வந்தாள். 

ஒருவரும் இல்லாத பொழுது நீலா கூண்டை திறந்து விட முயன்றாள். யாரோ வரும் காலடி கேட்டு நகர்ந்து சென்றாள். அவளை சந்தேகத்துடன்  பார்த்த அந்த ஜீவன்,  அவளை சற்று நட்புடன் ஏறிட்டது.  நீலா எந்த அனுதாபமும் இன்றி வெளியேறினாள்.  இது என்ன புது உலகம்  – எப்படி வெளியேருவது என்று அந்த ஓநாய் கூண்டுக்குள் வளைய வந்தது.

வெளியில் சற்று காலார நடக்கலாம் என்று நீலா வெளியே வந்தாள்.  மாலாவுக்கு புது வருகையான  பப்பியுடன் சரியாக இருந்தது.  நீலாவோ அதை சந்திப்பதை தவிர்ப்பதே காரணமாக வெளியில் நடந்தாள். ஏனோ அதை கண்டாலே பிடிக்கவில்லை.  Flash light ம் நொறுக்குத் தீனி பொட்டலத்துடனும்  – கவனமாக நடந்தாள்.  ஒரு ஓரத்தில் இருந்த காட்டுப் பல்லிகளை மிதித்து விடாமல் நகர்ந்து சென்றாள்.  அப்பாடா என்று ஒரு சிறிய மண் மேட்டின் மீது அமர்ந்தாள்.  அதிக நேரம் அந்த நிம்மதி நீடிக்க விடாமல் நத்தைகள் கண்ணில் பட்டன. புத்தகத்தைக் கொண்டு வந்திருக்கலாம். காட்டு வாசிகள், இந்த ஜந்துக்கள் ஒன்றும் பிரமாதமாக இல்லை என்று சூள் கொட்டினாள். அட, இந்த நத்தையைத் தான் பார்ப்போமே, அது மெதுவாக நகருவதைச் சற்று நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள்.   என்ன நினைத்தோ அந்த ஜீவன் தன் கூட்டுக்குள் நுழைந்து கொண்டது – சரி போ, நான் போகிறேன் என்று சொல்லியபடி நீலா எழுந்து மண் மேட்டின் மேலேயே நடந்தாள். அங்கும் இங்குமாக ஓடிய அணில்களைப் பார்த்து கை ஆட்டியபடி, ஹலோ என்றும் சொல்லிபடி கையில் கொண்டு வந்திருந்த நொறுக்குத் தீனியை வாயில் போட்டபடி அதற்கும் கொடுத்தாள்.  அவளை ஏறிட்டுப் பார்த்த அணில் அதை தொடவே இல்லை. ஏதோ தெரியாத சாமான் என்று விலகி ஓடியது, நீலாவுக்கு அலுப்பாக இருந்தது.  சுற்று முற்றும் பார்த்தவள் அவளுக்குப் பின்னால், மரங்களின் இடையில் ஒரு நீல வண்ண ஒளி தனித்து தெரிவதைக் கண்டாள்.  

இமைக்கும் நேரத்தில் தன்னைச் சுற்றி திரவமாக  எதோ சூழ்வதை உணர்ந்தாள்.  தானும் அதில் அடித்துச் செல்லப் படுவது போல் இருந்தது. கண்களை மூடி தன்னை நிதானப் படுத்திக் கொண்டு சுற்றிலும் பார்வையை செலுத்தினாள்.  பெரிய காடு – ஆனால் இது வரை இவ்வளவு வண்ணமயமான இடத்தைக் கண்டதுமில்லை கேட்டதுமில்லை.  மரங்கள் புதுமையாக, கிளைகள் வளைந்து வளைந்து மிருகங்களுக்கு வீடாக சிறு சிறு  அடக்கமான பெட்டகங்கள் போல தெரிந்தன,  ஒவ்வொரு மரத்திலும் பொந்துகள், அது தவிர யாரோ, கிளைகளை வளைத்து தனக்கு வீடாக செய்து கொண்டிருந்தனர்.  தரையெல்லாம்  குகைகள். புல் புதர்கள் மூடி மறைவிடமாக இருந்தன.  

ருசியான பழங்கள் பழுத்து தொங்கின.  ஆங்காங்கு அழகான நீரூற்றுக்கள்.  ஓடி வரும் வேகத்தில்

நுரைபொங்க, நீர்த் திவலைகளை விசிறியடித்த படி  அந்த இடமே குளுமையாக இருந்தது. 

அனைத்துக்கும் மேல் வளைந்த நுழை வாயில்கள். விலை உயர்ந்த மணிகளோ, அதே போன்ற 

வண்ணக் கற்களோ அந்த வளைவுகளை அலங்கரித்தன.  ஒரு பெரிய எலியோ அதன் ஜாதியோ பள்ளம்

பறித்துக் கொண்டிருந்தது. இவளை கண்கள் விரிய ஆச்சர்யத்துடன் பார்த்து திகைத்து நின்றது.  

ஒரு டின்னர் ப்ளேட்  அளவு கண் விரிய என்று நீலா நினைத்தாள்.  ஒருவழியாக தான் எங்கோ 

வந்து விட்டிருக்கிறோம் என்பது மனதில் உறைக்க நீலா சுற்றும் முற்றும் பார்த்தாள்.  

பூலோகம் அல்ல இது விலங்குகள் வாழும் வேறு உலகம். 

பகுதி – 4

இது சரியாக இல்லை . ஏதோ தவறு.  மிகப் பெரிய தவறு.  நினைத்தே பார்த்திராத மாபெரும் விபத்து. 

ஆம். விபத்து தான்.  ஜொயி ஃபாக்ஸ்  -அது தான் அந்த பிடிபட்ட ஓநாயின் பெயர்.  மனிதர்கள் 

கையில் பிடிபடுவதாவது – அவர்கள் வீட்டு மிருகம் போல நடத்த அனுமதித்து அடங்கி இருப்பதாவது- குட்டி ஓநாய் நினைத்து நினைத்து பொருமியது.  ஒரு பெரிய பையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த கூண்டே தேவலை – வெளியே பேச்சு சத்தம் கேட்டது.  புரியாத பேச்சு – புரிந்து தான் என்ன ஆகப் போகிறது.  பையின் ஓரத்தை கடித்து கிழித்து பார்த்தது.  எல்லோரும் கவலையுடன் இருப்பதாக பட்டது. ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லப் பட்டதால் கவனித்து கேட்து. நீலா – நீலா – யாரையோ அழைக்கும் விதமாக-

யாரோ நமக்கென்ன, இப்போதைக்கு இந்த பையிலிருந்து வெளியேற வேண்டும். மூச்சு முட்டுகிறது.  பையுடன் தன்னை எங்கு கொண்டு போகிறார்கள்?  மட்டமான ஜீவன்கள். அருவருக்கச் செய்யும் குரலும், உடல் அமைப்பும். மனிதர்கள். எதற்காக என்னை என் வீட்டை விட்டு கிளப்பி தூக்கிக் கொண்டு போகிறார்கள். எல்லாம் அந்த நீலக் கல்லால் வந்த விணை.  எங்கிருந்து வந்ததோ – பள பளவென்று கண்களைப் பறித்தது. தொட்டது தான் தாமதம் நான் இங்கே கிடக்கிறேன். 

சொல்லிக் கேட்டிருந்து. நீல மணி பற்றியும் அதன் எண்ணற்ற வர்ண ஜாலங்களையும் அலுக்காமல் சொல்வார்கள்.  கூடவே ஒரு மஞ்சள் நிற மணி – அது தான் ஜோயியை அந்த மனிதர்களற்ற  ஆழுலக ஜீவன்களின் உலகிற்கு கொண்டு சென்றது.  சொல்லப் போனால் பூமியை விடவும் அந்த ஆழுலகம் நன்றாக இருந்தது. எல்லா புத்தங்களிலும் தேடித் தேடி படித்தேனே, எதிலும் இதன் தோற்றம் பற்றியோ, குணம் பற்றியோ அறிந்தவர்கள் யாருமில்லை. அங்கே இருந்த பெரியவர்கள், அதிலும் பொறுப்பில் இருந்த  முக்கியமான முதியவர்கள்  (Grand Elders)  நியாயமாக விவரங்கள் தெரிந்தவர்கள் என்று பெயர், கேட்டாலே சிடுசிடுத்தனர்.  – வேற  வேலை இல்லை உனக்கு? என்று அதட்டுவர். 

அதுவும் தான் ஏமாற்றமாக இருந்தது.  இவர்கள் என்ன பெரியவர்கள் என்ற பெயர் வைத்துக் கொண்டு அதட்டுவது என்று கோபமாக வந்தது.  ஜோயி தானே படித்ததைக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ந்தது. மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து. திரும்ப ஆராய்ந்து  – இதே தான் வேலை, அனவரதமும் மனதில் இருந்த எண்ணம். ஒருமுறை அவர்கள் அறியாமல் அவர்களுடைய இருப்பிடம் போய் தேடியது. நீர் வீழ்ச்சியின் பின்னால் – ஒரு முறை மழையின்றி உலர்ந்து கிடந்தது.  சில மஞ்சள் நிற காகிதம் போன்ற வஸ்துவில் ஆனி அடித்து மாட்டியிருந்தது.  Fiona Flammingo:how she disappeared  

காற்றில் மிதப்பது போல ஏதோ ஒன்றில் பிரயாணம் செய்கிறோம் என்று ஜோயிக்கு தோன்றியது. மாலா தூக்கிக் கொண்டு ஒரு இடத்தில் கீழே விட்டாள். மட்ட ரக நாய்க் குட்டிகள்,  கழுத்தை சுற்றி பட்டைகளுடன்,  சீ, ஓநாய் நான் என்னையும் இந்த அல்ப ஜந்துக்களையும் ஒன்றாக நினைப்பதா?  போதாக் குறைக்கு அங்குள்ளோர் பப்பி – நாய் குட்டி – என்று தன்னையும் அழைத்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் எரிச்சலடைந்தது.  ஊரில் இருந்த வரை மரியாதைக்குரிய, நம்பகமான ஓநாய் என்று பெயர் பெற்ற தன்னை, இந்த அல்ப நாய்களுடன் சேர்த்து இந்த அவமானம் வேறு – என்  விருப்பமின்றி தூக்கிச் சென்று அடைத்து வைத்ததை விட பெரிய அவமானம்…..ஜோயி அந்த கூண்டுக்குள் ஆக்ரோஷத்துடன் வளைய வந்தது. சுற்று முற்றும் பார்த்து மனித ஜீவன் எதுவும் இல்லை -மீண்டும் உறுதி செய்து கொண்டபின், தன்  சட்டை பையிலிருந்து ஒரு பொருளை வெளியில் எடுத்தது.  அது ஒரு நகல் – தானே யோசித்து மஞ்சள் மணீயை போலவே செய்த ஒரு போலியான மஞ்சள் மணி.  அந்த மணி ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காது. வாழ் நாள் முழுவதும் இதே கவனமாக உழைத்து தயாரித்தது.  அதன் வாழ்வே அதைச் சுற்றியே இருந்து எனலாம். அவனைத் தவிர வேறு யாரும் அந்த மணியைப் பற்றியோ அதன் சக்தியையோ அறிந்தவர்கள். இல்லை. மஹா பெரியவர்கள் கூட அப்படி ஒன்று இருப்பதை உணரவேயில்லை. மணி மற்றும் நகைகள் 101 என்ற விஷயத்தை எடுத்துக் கோண்டு ஆழ்ந்து படித்தும்,  தானே மேற்கொண்டு ஆய்வுகள் செய்தும் கூட ஓரளவு தான் அறிந்து கொள்ள முடிந்தது. 

பொதுவாக எல்லொருக்கும் தெரிந்த விஷயம் – அந்த மணி அவர்களுக்கு உணவை தயாரித்து கொடுத்து வந்தது என்பதே.  அது ஒரு மாயம். அசைவ உணவு, சைவ உணவு இரண்டுமே அவர்களுக்கு கிடைத்தது. Bhindarian Thistle –  (ஒரு தாவரம்).   மாமிச பிரியர்களுக்கு எந்த மிருகத்தையும் கொல்லாமலே, அவர்கள் விரும்பிய ருசியுடன் இறைச்சி போலவே பார்வைக்கும் தெரியும் ஒரு பொருள். அதை உண்டவர்கள் திருப்தி  அடைந்தனர்.   எந்த ஜீவனையும் கொல்லாமல், விளை பொருள்களில் சமைத்த உணவே வேண்டும் என்று விரும்பும் சைவ உணவு பிரியர்களுக்கு அது வேறு விதமாக  காட்சியளிக்கும், அவர்கள் விரும்பும் உணவின் வண்ணம், ருசி எதுவும் குறையாமல் பட்டர் கப் என்ற தாவரத்திலிருந்து தயாரித்ததாக தோன்றும்.

ஊதா நிறத்தில் இந்த உணவு சைவமாக இருக்கும், அதுவே கிளிப் பச்சை நிறத்தில் மற்றவர்களுக்கு தெரியும். மற்ற எதோ ஒரு ஜீவனை துன்புறுத்தி உண்ணுவதை வழக்கம் கொண்ட காட்டு விலங்குகளும் கூட இந்த உணவில் திருப்தியை அடைந்தனர்.  எந்த மிருகமும் நோயினால் வாடவில்லை. நோய் தடுப்பு மருந்தாகவும் அதுவே  பயன்பட்டது. 

 உடனே தன் இருப்பிடமான ஆழுலகம் போக வேண்டும் என்று ஜோயி துடித்தது. தன் கையெழுத் து பிரதியை எடுத்து படித்து பார்த்தது. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும். இங்கு மாட்டிக் கொண்டிருக்கிறோமே என்று வருந்தியது.

தன் ஆராய்ச்சியின் நடுவில் இப்படி ஒரு சோதனை. மஞ்சள் மணியை மேலும் ஆராய்ந்து தன் இனத்தாருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எப்படி நிறைவேறும்.  மற்றும் ஒரு புரட்சி திட்டமும் இருந்தது.

“மனித இனம் நம்மை நசுக்குவதை அனுமதிக்க மாட்டோம்’   என்ற பெயரில். அவர்களால் கண்டு பிடிக்கவே முடியாதபடி  தங்கள் வாழ்விடத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய வேலைகள். முதலில் இந்த தளையிலிருந்து விடுபட வேண்டுமே. ஆகா, தன் வீடு தான் எவ்வளவு சுகம். 

பகுதி-5

ஆ மனித இனம் !

வேண்டாம், வேண்டவே வேண்டாம்

ஏன் தான் கடவுள் மனிதனை படைத்தாரோ

 எப்படி மற்றவர்களிடம் சொல்வேன்- ஒரு மனித ஜீவன் நமக்குள் வந்து விட்டது –   நல்லதல்லவே

அரசாங்கத்துக்கு தெரிவிக்க வேண்டும்-  ஓ ஃபெர்டினண்ட், பேசாமல் இரு- அமர்க்களம் பண்ணாதே.

பூமியிலிருந்து வந்து விட்டதா – எதற்காக, எதுவும் புரியவில்லை

ஃபெர்டினண்ட்- சும்மா இரு 

இது போன்ற கூக்குரல்கள் மரங்களின் பின்னாலிருந்து ஒலித்ததைக் கேட்டாள் நீலா.  மணல் மேட்டிலிருந்து இறங்கி தானும் ஒரு மரத்தின் பின்னால் ஒளிந்து கொள்ளலாமா என்று ஒரு கணம் நினைத்தாள்.  சிங்கங்கள் முதல் குட்டி முயல்கள், மான்கள், மாடுகள், பறவைகள்

அருகே ஒரு குண்டு கோழி அவளைப் பார்த்து ஏய், மனிதப் பெண்ணே, ஏதாவது சொல் – என்றது. என்ன தைரியம்.  குழப்பத்துடன் அவைகளை ஏறிட்டுப் பார்த்தாள்.

நீலா எதுவும் சொல்லவில்லை – எப்படியோ இங்குள்ள மிருகங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை – அவளை ஒரு வித பயம் ஆட்கொண்டது.  புது புது பெயர் தெரியாத ஜீவன்கள்.  சுற்றிலும் மிருகங்கள், ஆனால் அவை பேசுகின்றன.  ஒரு சிறிய முயல் அவளை கிழே தள்ளப் பார்த்து. அதால் முடியவில்லை. நீலா அதை தூக்கி கீழே இருந்த மற்ற மிருகங்களுடன் விட்டாள்.  ஒரு புறா அந்த வழியே சென்றது. அவளிடம் ஜோயி எங்கே? என்றது.

ஜோயியா, யாரது என்று வினவினாள். 

எல்லா மிருகங்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அவளுக்கு பதில் சொல்லாமல் ஓடின, ஒளிந்தன கூக்குரலிட்டன – தங்களூக்குள் ஓசையின்றி பேசிக் கொண்டன. திடுமென  ஒரு நெருப்புக் கோழி அங்கு வந்து ஒரு பன்றியுடன் தீவிரமான  சர்ச்சையில் மூழ்கியது. சில வார்த்தைகள்  மற்றவை கோடிட் ட இடங்களை நிரப்புக என்று பள்ளியில் கேள்வி வருமே, அது போல அவளே நிரப்பிக் கொண்டாள்.  உனக்குத் தெரியுமா… அவன் ஏதோ செய்யப் போவதாக .. இது அக்கிரமம்.  

,  Pyrenean Ibexes – பைரனியம் இபெக்ஸ் –  (சில நாடுகளில் அதிகமாக காணப் பட்ட இந்த வகை மான் இனத்தினர் சமீபத்தில் மறைந்த இனமாக அறிவிக்கப் பட்டுள்ளது) நீலா அதை அடையாளம் கண்டு கொண்டாள்.  ஆகா, இது எப்படி இங்கு இருக்கிறது. இதை ஒட்டு மொத்தமாக உலகில் மறைந்து விட்டதாக அறிவித்தார்களே.   நீலாவின் ஆர்வம் அதிகரித் தது. ஓவ்வொன்றாக கவனித்துப் பார்த்தாள். பல வகையான ஜீவன்கள், மறைந்து விட்டதாக அவள் கற்றது  megalodons in water spheres. Dodo birds screaming, ostrich burying its head in the ground – a beaver chewed on a massivelog- இவையெல்லாம் அதிகார பூர்வமாக அறிவிக்கப் பட்டவை- தற்சமயம் உலகில் இவை இல்லையென்று – அருகே ஒரு குண்டு கோழி அவளைப் பார்த்து ஏய், மனிதப் பெண்ணே, ஏதாவது சொல் – என்றது. என்ன தைரியம்.  குழப்பத்துடன் அவைகளை ஏறிட்டுப் பார்த்தாள். 

சமுத்திரங்களில் மட்டுமே காணப் படும்  ஆக்ரோஷமான கடல் வாழ் ஜீவன்- திமிங்கிலம் போன்றது – கடல் கொள்ளையன் என்றே பெயர் பெற்றது- அதையும் மறைந்த ஜந்துக்கள் என்று நீலா அறிந்திருந்தாள்.  அதைப் பார்த்து, ஹலோ,  நீ மேகா லொடொன் தானே, எப்படி இருக்கிறாய், உன் இனமே உலகில் எங்குமே இல்லை மறைந்து விட்டதாக கேள்விப் பட்டோமே….

அது உங்க ஊர்ல, இங்க நான் சௌக்யமாக இருக்கேன்,  என் பெயர் என்ன தெரியுமா? மிஸ்டர் மேக மெகலோடொன் – ம்.. உங்க ஊர் மாதிரியா இது.. பொல்லாத இடம் அந்த பூமி, யார் இருப்பார் அங்கே..

நீலா எதுவும் சொல்லவில்லை – எப்படியோ இங்குள்ள மிருகங்களுக்கு அவளைப் பிடிக்கவில்லை – அவளை ஒரு வித பயம் ஆட்கொண்டது.  புது புது பெயர் தெரியாத ஜீவன்கள்.  சுற்றிலும் மிருகங்கள், ஆனால் அவை பேசுகின்றன.  ஒரு சிறிய முயல் அவளை கிழே தள்ளப் பார்த்து. அதால் முடியவில்லை. நீலா அதை தூக்கி கீழே இருந்த மற்ற மிருகங்களுடன் விட்டாள்.  ஒரு புறா அந்த வழியே சென்றது. அவளிடம் ஜோயி எங்கே? என்றது.

ஜோயியா, யாரது என்று வினவினாள். 

எல்லா மிருகங்களும் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன. அவளுக்கு பதில் சொல்லாமல் ஓடின, ஒளிந்தன கூக்குரலிட்டன – தங்களூக்குள் ஓசையின்றி பேசிக் கொண்டன. திடுமென  ஒரு நெருப்புக் கோழி அங்கு வந்து ஒரு பன்றியுடன் தீவிரமான  சர்ச்சையில் மூழ்கியது. சில வார்த்தைகள்  மற்றவை கோடிட் ட இடங்களை நிரப்புக என்று பள்ளியில் கேள்வி வருமே, அது போல அவளே நிரப்பிக் கொண்டாள்.  உனக்குத் தெரியுமா… அவன் ஏதோ செய்யப் போவதாக .. இது அக்கிரமம்.  

எதுவும் உருப்படியாக இல்லை.. அவள் கீழே குதித்து அந்த கூட்டத்தின் எதிரில் போய் நின்றாள். அவளை பொருட்படுத்தாமல் எல்லா மிருகங்களும் மூலைக்கு ஒன்றாக சிதறின, ஏதோ உரத்த குரலில்  சொல்லிக் கொண்டே… கவலையுடன் விவாதித்துக் கொண்டன – அப்படிக்கு என்ன நடந்தது ? 

 சில பெருச்சாளிகள் வந்து அவர்களை அந்த மிருகங்களின் கூட்டத்துக்கு வரும்படி அழைத்தன.    தத்தி தத்தி வாத்து நடையில், சில நடந்தன சில பெரு நடையாக (குதிரை போல) சில நீந்தி சென்றன . எங்கே அந்த கூட்டம் நடைபெறுகிறது என்று  தெரிந்து கொள்ள தான் இருந்த மண் மேட்டின் மேலே ஏறி நீலா சுற்றும் முற்றும் பார்த்தாள்.  ஒரு முயல் மென்னடையாக  அருகில் வந்து அதிகாரம் செய்வது போல தோரணையாக ஏய் ஏய், கேள்  என்றது.  நீலா சிரிப்பை அடக்கிக் கொண்டு  நான் என்ன கேட்க ? ஏன் எப்படி இங்கு வந்து மாட்டிக் கொண்டேன்  என்று, குழப்பம் எதுவுமே புரியவுமில்லை, அது சரி, நண்பனே, நீ யார், என்ன சொல்ல வந்தாய்  என்றாள்.  

பேசிக் கொண்ட அந்த முயலைப் பார்த்தாள். மற்றொரு சமயம் ஆனால் அதை கவனித்திருக்கவே மாட்டாள்.  நல்ல ப்ரௌன் நிறம்.  முன்னங்காலில் ஒரு வெட்டுக் காயம், தலையில்  பூ போட்ட துணி போன்ற ஒரு  வளையம்,  அழகுக்காகவோ என்னவோ …

அவள் எதுவும் சொல்லும் முன் அது ஏளனம் செய்வது போல அழகு காட்டி விட்டு, ஒரு குடிசை போல தோன்றிய இடத்தை நோக்கி வேகமாக ஓடியது.  அங்கே மேலும் பல மிருகங்கள் வந்து சேர்ந்திருந்தன.அங்கு வந்திருந்த பல வண்ண  மீன் ஒன்றை அதிசயமாக பார்த்தபடி இருக்க, ஒரு கழுகு, ஒரு பெருச்சாளி என்று அங்கத்தினர்கள் வந்து சேர்ந்தனர். பெருச்சாளி, கழுகுடன் கூட்டத்தைப் பார்த்து ஏதோ  நீளமாக  விளக்கம் சொல்லியது.  சில வாத்துக்கள் சிறு கூட்டமாக கழுகு சொல்வதை கேட்க தயாராக இருந்தன. வண்ண மீன் தன் பங்குக்கு நீண்ட சொற்பொழிவை செய்தது. அதன் கையில் ஒரு அறிவிப்பு – போஸ்டெர் போல இருந்தது. 

ஜோயி பிரச்னை

அடுத்து என்ன நடக்கும்

தயவு செய்து உங்கள் பதிலையும்

மற்றும்

என்ன செய்யலாம் என்பதன் ஆலோசனைகளையும் தெரிவிக்கவும்

நீலாவுக்கு எதுவும் புரியவில்லை. யாரது ஜோயி? நான் எப்படி இங்கு வந்தேன். அதற்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?   ஆமை ஒன்று தன் முதுகில் போஸ்டரை தாங்கியபடி கடந்து சென்றது. 

மனித இனத்தை மறுக்கும் போராட்டம்

நீலா அருகில் போய் என்னதான் நடக்கிறது என்று தெரிந்து கொள்ள விரும்பினாள்.  பெரிய குடிசை போன்ற இருப்பிடம்- அதில் ஒர் ஓநாயின் படம் மாட்டப் பட்டிருந்து. அதே இளம் செந்நிற ரோம் படர்ந்த, மேல் நோக்கி கூரிய காதுகள், ஒரு பக்க காதில் சிராய்ப்பு –   

அவள் வயிற்றை பிசைந்தது.  முதல் முறையாக எங்கோ சென்று, எதையோ தின்று, வயிறு ஏற்காமல், குடைந்து வாந்தி வரும் போல என்று நினைத்து பாருங்கள்.  நாளைக்கே கடைசி நாள், உங்களுடைய அசைன்மெண்டை கொடுத்தாக வேண்டும், ஆனால் எழுதியிருப்பதோ, வலது ஓரத்தில் சில குறிப்புகள் மட்டுமே, உடனடியாக தோன்றும் உணர்வு,  ஆசிரியர் கடுமையாக எச்சரிக்கிறாள், போர்டில் கொட்டை எழுத்தில், எழுதி வேறு வைக்கிறாள்- இந்த அசைன்மென்ட்  அல்லது ப்ராஜெக்ட் உங்கள் அறிவியல் பாட தேர்வில் 80% மதிப்பெண்களுக்கானது – உங்கள் நிலைமை எப்படி இருக்கும்? அதைப் போல ஆயிரம் மடங்கு – எப்படி உணர்வீர்கள்? அது தற்சமயம் நீலாவின் அதிர்ச்சியில் 0.000000000001% பங்கு தான் இருக்க முடியும்.  

பகுதி-6

இந்த  ஓநாய் என் வீட்டில் அல்லவா இருக்கிறது. அவள் பெற்றோரும் தமக்கையும் கட்டி வைத்திருக்கிறார்கள். வாவ், நான் வந்த பொழுது தானாக விரும்பியோ,  எந்த ஒரு கெட்ட எண்ணத்தோடும் வரவில்லை என்பதும் எவ்வளவு உண்மையோ, அதைப் போலவே இவர்கள் மத்தியில் நான் ஏதோ ஒரு கெடுதலை செய்பவள் என்று இந்த கூட்டம் தற்சமயம் நினைக்கப் போவதும் உண்மையே.   என்ன உணர்வு என்று சொல்ல முடியவில்லை. அனைத்தும் எதிர்பாராமல் நடந்ததே – அவள் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப் பட்டிருக்கிறாள்.  காடு, மரங்கள் நிறைந்த அந்த இடத்தில் பதட்டத்தோடு அங்கு வசித்த ஜீவன்கள் இங்கும் அங்குமாக அலைந்தன. வீடுகளுக்கு எதுவுமே போகவில்லை.

நடந்து சென்றாள். ஒரு பெரிய ஓக் மரம் அவள் கவனத்தை ஈர்த்தது.  மிகப் பெரிய கிளைகளுடன் அந்த மரமே அதிசயமாக இருந்தது.  அதன் பெரிய கிளைகளும் உயரமும் ஏறிச் செல்ல வசதியாக இருந்தது அதிசயமே.  அதை விட அதிகமாக அவள் கவனத்தைக் கவர்ந்தது கிளைகள் குவிந்தும், கவிழ்ந்தும் வீடுகள் போன்ற அமைப்பை கொண்டிருந்ததே.  நடு நடுவில் உட்கார வசதியாக தட்டையான இடம், பொந்துகள் அலமாரிகள் போல, பொருள்களை பாதுகாப்பாக வைக்க, அடர்ந்த இலை மறைவில் ஓய்வு எடுக்கலாம் என்று ஒவ்வொன்றாக பார்த்து அதிசயித்தாள். அந்த வீட்டின்  கூரையிலிருந்து தொங்க விடப் பட்டிருந்த பழங்கள் நாக்கில் ஜலம் ஊறச் செய்பவனாக ருசியாக இருந்தன – பறவைகளுக்கான தானியங்கள் -அவ்வளவாக ருசியாக இல்லாவிட்டாலும்  பறவைகள் விரும்பி உண்டன.  நீலா எட்டிப் பார்த்தாள்.  பறவைகளின் படங்கள்  வித விதமாக பறவை இனங்களை அடையாளம் காட்டுவதாக இருந்தன.  அதைப் பார்த்து புன்முறுவலோடு நீலா இறங்கி வந்தாள். 

தரையில் கால் வைத்தவள், மரத்தில் திரை கட்டி மறைத்துக் கொண்டு அணில்கள் வசித்தன போலும். இளம் அணில்கள் உறங்கிகொண்டிருக்க, அந்த அணில்களின் உயரதிற்கே  இருந்த பீப்பாயகளில் அகார்ன் – (ஓரு பழ விதை) நிரம்பியிருந்தன.  அட, இந்த அணில்களின் வீடு எவ்வளவு அழகு- தாங்களே கட்டிக் கொண்டு வேண்டிய வசதிகளையும் செய்து கொண்டு- சின்னச் சின்ன மிதியடிகள், பள பளவென்று பாலீஷ் செய்யப்பட்ட மேசை, அதில் பாதி உண்ட மிச்சம்,  ஓக் மரத்தின் பழங்களைக் கொண்டு தயாரித்த உணவு – 

திடுமென தன் நிணைவு வர, நீலா திடுக்கிட்டாள்.  அனேகமாக எல்லா குட்டி வீடுகளையும் பார்த்தாயிற்று. மேடையை நோக்கிச் சென்றாள்.  பெருச்சாளி இன்னமும் பேசிக் கொண்டிருந்தது.   கூட்டத்தின் நடுவே இடித்து பிளந்துகொண்டு அருகே சென்றாள்.  ஸ்பீக்கர் மாட்டியிருந்த மரத்தின் அருகில் கேட்கும் படியாக அமர்ந்து கொண்டாள். 

“… பிரச்னைகள்..  நாமே தான் அதை தீர்க்கவும் வேண்டும்  நாம் அறிவோம் நம் ஜோயி காணவில்லை. அதன் இடத்தில் ஒரு மனித ஜீவன் நுழைந்து விட்டது.. 

மிகைலா – அந்த பெருச்சாளியின் பெயர். மனித இனம் என்ற வார்த்தை அவள் வாயிலிருந்து வந்தவுடனேயே எல்லா ஜீவன்களும் ஆ வென்று நெட்டுயிர்த்தன.  சில கத்திக் கொண்டு வட்டமடித்தன. இரண்டு சிறிய விலங்குகள் ரோமம் அடர்ந்த உடலுடன் மிங்க் – என்று நினைத்துக் கொண்டாள் – அவை சில நாணயங்களை வைத்து பெட் கட்டின போலும்-  மனிதர்கள் நம்மை ஆக்ரமிப்பார்களா? -மாட்டார்களா – பெட் கட்ட விரும்புபவர்கள் இங்கு கட்டலாம். 

கூட்டத்தின் தலைவி பெருச்சாளி உஷ், அமைதி, அமைதி – எல்லோரும் அமைதியாக இருந்து கேளுங்கள்.பெட் கட்ட வந்தவர்களிடம் வசூலித்துக் கொண்டிருந்த குட்டி விலங்குகளைப் பார்த்து,

மார்கஸ்! மார்தா!  நிறுத்துங்கள். அந்த நாணயங்களை கீழே வையுங்கள்.  முதலில் நாம் செய்ய வேண்டியது – ஜோயி எப்படி காணாமல் போனான் என்று கண்டு பிடிப்பதே.  இந்த விலங்கு உலகத்திலிருந்து காணாமல் போகக் கூட முடியுமா என்பதே பிரச்னை.  அவன் போக் கூடிய ஒரே இடம்..  ஆம், .உங்களுக்கு 

பிடிக்காவிட்டாலும்  நான் சொல்லித்தான் ஆக வேண்டும் – பெருச்சாளி தலைவி நிறுத்தினாள். வரிசையாக கூடியிருந்த பிரஜைகளைப் கூர்ந்து பார்த்து விட்டு, ஒரு பெரு மூச்சுடன் “அ…

அவன் போகக் கூடும் என்று சொல்லக் கூடிய ஒரே இடம் .. பூமி தான்”

நம்ப முடியாமல் ஒன்றையொன்று பார்த்துக் கொண்டன.  திரும்பி பூவுலகம் போவதென்பது அவர்களைப் பொறுத்தவரை, மலையுச்சியிலிருந்து “POTATOES !!!” என்று கத்திக் கொண்டு குதிப்பது போலத்தான். 

ஓரே இரைச்சல், அமைதி, அமைதி என்று தலைவி கத்தினாள். இதுவரை நாம் அறிந்து பூமிக்குச் சென்ற ஒரு பிரஜை Fiona Flamingo – மட்டுமே.  யார் தான் அந்த பயங்கர பிரதேசத்துக்கு விரும்பி போவார்கள்? அதனால் தான் இந்த ப்லெமிங்கொ போனதும் நமது நீல மணி சிவப்பாக ஆகி விட்டது.  யாரோ அதை எடுத்து சிதைத்துப் பார்த்திருக்கிறார்கள்.  ஆனால் தற்சமயம் அந்த நீல மணி அப்படியே இருக்கிறது. நிறம் மாறவில்லை. ஒரே சொல். குறிச் சொல்- ஒரு தீர்க்க தரிசனம் –  மேலும் கேளுங்கள்.  இந்த முன் உணர்ந்து சொல்லும்  சூசக சொல் இதற்கு முன்னும் சில சமயம் பயனுள்ளதாக இருந்திருக்கிறது. யாராவது அந்த சொல்லைக் கேட்டீர்களா? 

Gertrude gopher – முன்னால் வந்து நின்றது. 

நான் கேட்டேன் madam!  நான் பிண்டரியன் திசில் என்ற நமது உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.  அது சொல்லிற்று. 

AN ENEMY SHALL COME, IN PLACE OF A FRIEND,

TO STOP THE TWO SPECIES FIGHTING TILL THE END.

THE ENEMY WILL CURE THE STONE.

AND THE FRIEND SHALL MAKE A CHANGE, NOT ALONE

இது தான். 

ஒரு எதிரி, நமது நண்பனின் இடத்தில் வருவான். 

தமக்குள் சதா சண்டை போடும் இருவரை தடுப்பான்.

மணியை மாற்றி அமைப்பான் அந்த எதிரி

நமது நண்பனும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவான், தனியாக அல்ல 

அவன் மணியின் சிவப்பு ஒளிச் சிதறலில் தான் மறைந்தான்.  வழக்கம் போல் பல வண்ணக் கலவையாக அது இருக்கவில்லை.  அந்த மந்திர ஸ்படிகம் … அது முன்  பியோனா பூமிக்கு போகு முன் நடந்ததே தான்,  எனக்கு நினைவு இருக்கிறது. நான் பார்த்தேனே. – அவள் தெரிந்து தான் போனாள். இந்த பாறை வழியாக போவதை நான் பார்த்தேன். அந்த நிகழ்ச்சி முழுவதையும் திருப்பி நடப்பது போல இந்த மணி காட்டியது. அவள் முகம்.. இன்னும் நினைவு இருக்கிறது. என் கண் முன் நிற்கிறது. இந்த ஜோயியும் அதே போல இளித்துக் கோண்டு தான்  சென்றது.  ஒரு வித்தியாசம். அந்த சிவப்பு ஒளி இல்லை. பியோனா போன போது சிவப்பானது போல இல்லை. ஜோயி அகன்றதும் இது பழையபடி நீல வண்ணமாக மாறி விட்டது.  அந்த ஆமை முழங்காலை கட்டிக் கொண்டு உட்கார்ந்து கொண்டு விட்டது. 

ஓ.. சரிதான். அது நல்லது இல்லையே. கவலை தரும் செய்தி இல்லையா.. நாம் நம்பும் நமது மந்திர ஸ்படிகம் ஏமாற்றி விட்டதே.  நீ சொன்ன வார்த்தைகளில் ஜோயி தான் நமது நண்பன். அந்த எதிரி.. உள்ளே வந்த மனித பெண்.  என்ன மாறுதல்கள் வரும்? எப்படி வரும் நாம் எதுவும் நினைக்க கூட முடியாது. அமைதி, அமைதி – பெரிய மனிதர்கள் நாங்கள் கூடிப் பேசி அந்த மனித பெண்ணையும் விசாரிக்கிறோம்.  நீங்கள் அனைவரும் அமைதியாக இருங்கள்.  நாம் நலமாய் இருக்க ஆவன செய்வோம். கவலை வேண்டாம். 

தலைவியான பெருச்சாளி  சற்று அழுத்தமாகவே நாம் நலமாய் இருப்போம், கவலை வேண்டாம் என்றது.

நீலா சட்டென்று விழித்துக் கொண்டாள்.   அலுப்பை விலக்கி விட்டு நிமிர்ந்து பார்த்தாள். விலங்குகள் தங்கள் இருப்பிடம் நோக்கிச் சென்றன. பெரும்பாலோர் கவலையுடன், மற்றவர்கள் நெடு நேரம் உழைத்த களைப்புடன்,  இதுவரை அவர்களை ஆட்கொண்டிருந்த பெரும் பயம் விலகி விட்டது போல  கலைந்தனர். 

பகுதி -8

இது சரியாக இல்லை . ஏதோ தவறு.  மிகப் பெரிய தவறு.  நினைத்தே பார்த்திராத மாபெரும் விபத்து. 

ஆம். விபத்து தான்.  ஜொயி ஃபாக்ஸ்  -அது தான் அந்த பிடிபட்ட ஓநாயின் பெயர்.  மனிதர்கள் 

கையில் பிடிபடுவதாவது – அவர்கள் வீட்டு மிருகம் போல நடத்த அனுமதித்து அடங்கி இருப்பதாவது- குட்டி ஓநாய் நினைத்து நினைத்து பொருமியது.  ஒரு பெரிய பையில் அடைத்து வைத்திருக்கிறார்கள். அந்த கூண்டே தேவலை – வெளியே பேச்சு சத்தம் கேட்டது.  புரியாத பேச்சு – புரிந்து தான் என்ன ஆகப் போகிறது.  பையின் ஓரத்தை கடித்து கிழித்து பார்த்தது.  எல்லோரும் கவலையுடன் இருப்பதாக பட்டது. ஒரு வார்த்தை அடிக்கடி சொல்லப் பட்டதால் கவனித்து கேட்து. நீலா – நீலா – யாரையோ அழைக்கும் விதமாக-

யாரோ நமக்கென்ன, இப்போதைக்கு இந்த பையிலிருந்து வெளியேற வேண்டும். மூச்சு முட்டுகிறது.  பையுடன் தன்னை எங்கு கொண்டு போகிறார்கள்?  மட்டமான ஜீவன்கள். அருவருக்கச் செய்யும் குரலும், உடல் அமைப்பும். மனிதர்கள். எதற்காக என்னை என் வீட்டை விட்டு கிளப்பி தூக்கிக் கொண்டு போகிறார்கள். எல்லாம் அந்த நீலக் கல்லால் வந்த விணை.  எங்கிருந்து வந்ததோ – பள பளவென்று கண்களைப் பறித்தது. தொட்டது தான் தாமதம் நான் இங்கே கிடக்கிறேன். 

சொல்லிக் கேட்டிருந்து. நீல மணி பற்றியும் அதன் எண்ணற்ற வர்ண ஜாலங்களையும் அலுக்காமல் சொல்வார்கள்.  கூடவே ஒரு மஞ்சள் நிற மணி – அது தான் ஜோயியை அந்த மனிதர்களற்ற  ஆழுலக ஜீவன்களின் உலகிற்கு கொண்டு சென்றது.  சொல்லப் போனால் பூமியை விடவும் அந்த ஆழுலகம் நன்றாக இருந்தது. எல்லா புத்தங்களிலும் தேடித் தேடி படித்தேனே, எதிலும் இதன் தோற்றம் பற்றியோ, குணம் பற்றியோ அறிந்தவர்கள் யாருமில்லை. அங்கே இருந்த பெரியவர்கள், அதிலும் பொறுப்பில் இருந்த  முக்கியமான முதியவர்கள்  (Grand Elders)  நியாயமாக விவரங்கள் தெரிந்தவர்கள் என்று பெயர், கேட்டாலே சிடுசிடுத்தனர்.  – வேற  வேலை இல்லை உனக்கு? என்று அதட்டுவர். 

அதுவும் தான் ஏமாற்றமாக இருந்தது.  இவர்கள் என்ன பெரியவர்கள் என்ற பெயர் வைத்துக் கொண்டு அதட்டுவது என்று கோபமாக வந்தது.  ஜோயி தானே படித்ததைக் கொண்டு மேலும் மேலும் ஆராய்ந்தது. மற்றவர்களிடம் கலந்து ஆலோசித்து. திரும்ப ஆராய்ந்து  – இதே தான் வேலை, அனவரதமும் மனதில் இருந்த எண்ணம். ஒருமுறை அவர்கள் அறியாமல் அவர்களுடைய இருப்பிடம் போய் தேடியது. நீர் வீழ்ச்சியின் பின்னால் – ஒரு முறை மழையின்றி உலர்ந்து கிடந்தது.  சில மஞ்சள் நிற காகிதம் போன்ற வஸ்துவில் ஆனி அடித்து மாட்டியிருந்தது.  Fiona Flammingo:how she disappeared  

காற்றில் மிதப்பது போல ஏதோ ஒன்றில் பிரயாணம் செய்கிறோம் என்று ஜோயிக்கு தோன்றியது. மாலா தூக்கிக் கொண்டு ஒரு இடத்தில் கீழே விட்டாள். மட்ட ரக நாய்க் குட்டிகள்,  கழுத்தை சுற்றி பட்டைகளுடன்,  சீ, ஓநாய் நான் என்னையும் இந்த அல்ப ஜந்துக்களையும் ஒன்றாக நினைப்பதா?  போதாக் குறைக்கு அங்குள்ளோர் பப்பி – நாய் குட்டி – என்று தன்னையும் அழைத்ததை ஏற்றுக் கொள்ளவே முடியாமல் எரிச்சலடைந்தது.  ஊரில் இருந்த வரை மரியாதைக்குரிய, நம்பகமான ஓநாய் என்று பெயர் பெற்ற தன்னை, இந்த அல்ப நாய்களுடன் சேர்த்து இந்த அவமானம் வேறு – என்  விருப்பமின்றி தூக்கிச் சென்று அடைத்து வைத்ததை விட பெரிய அவமானம்…..ஜோயி அந்த கூண்டுக்குள் ஆக்ரோஷத்துடன் வளைய வந்தது. சுற்று முற்றும் பார்த்து மனித ஜீவன் எதுவும் இல்லை -மீண்டும் உறுதி செய்து கொண்டபின், தன்  சட்டை பையிலிருந்து ஒரு பொருளை வெளியில் எடுத்தது.  அது ஒரு நகல் – தானே யோசித்து மஞ்சள் மணீயை போலவே செய்த ஒரு போலியான மஞ்சள் மணி.  அந்த மணி ஒரே இடத்தில் அதிக நேரம் இருக்காது. வாழ் நாள் முழுவதும் இதே கவனமாக உழைத்து தயாரித்தது.  அதன் வாழ்வே அதைச் சுற்றியே இருந்து எனலாம். அவனைத் தவிர வேறு யாரும் அந்த மணியைப் பற்றியோ அதன் சக்தியையோ அறிந்தவர்கள். இல்லை. மஹா பெரியவர்கள் கூட அப்படி ஒன்று இருப்பதை உணரவேயில்லை. மணி மற்றும் நகைகள் 101 என்ற விஷயத்தை எடுத்துக் கோண்டு ஆழ்ந்து படித்தும்,  தானே மேற்கொண்டு ஆய்வுகள் செய்தும் கூட ஓரளவு தான் அறிந்து கொள்ள முடிந்தது. 

பொதுவாக எல்லொருக்கும் தெரிந்த விஷயம் – அந்த மணி அவர்களுக்கு உணவை தயாரித்து கொடுத்து வந்தது என்பதே.  அது ஒரு மாயம். அசைவ உணவு, சைவ உணவு இரண்டுமே அவர்களுக்கு கிடைத்தது. Bhindarian Thistle –  (ஒரு தாவரம்).   மாமிச பிரியர்களுக்கு எந்த மிருகத்தையும் கொல்லாமலே, அவர்கள் விரும்பிய ருசியுடன் இறைச்சி போலவே பார்வைக்கும் தெரியும் ஒரு பொருள். அதை உண்டவர்கள் திருப்தி  அடைந்தனர்.   எந்த ஜீவனையும் கொல்லாமல், விளை பொருள்களில் சமைத்த உணவே வேண்டும் என்று விரும்பும் சைவ உணவு பிரியர்களுக்கு அது வேறு விதமாக  காட்சியளிக்கும், அவர்கள் விரும்பும் உணவின் வண்ணம், ருசி எதுவும் குறையாமல் பட்டர் கப் என்ற தாவரத்திலிருந்து தயாரித்ததாக தோன்றும்.

ஊதா நிறத்தில் இந்த உணவு சைவமாக இருக்கும், அதுவே கிளிப் பச்சை நிறத்தில் மற்றவர்களுக்கு தெரியும். மற்ற எதோ ஒரு ஜீவனை துன்புறுத்தி உண்ணுவதை வழக்கம் கொண்ட காட்டு விலங்குகளும் கூட இந்த உணவில் திருப்தியை அடைந்தனர்.  எந்த மிருகமும் நோயினால் வாடவில்லை. நோய் தடுப்பு மருந்தாகவும் அதுவே  பயன்பட்டது. 

 உடனே தன் இருப்பிடமான ஆழுலகம் போக வேண்டும் என்று ஜோயி துடித்தது. தன் கையெழுத் து பிரதியை எடுத்து படித்து பார்த்தது. இன்னும் எவ்வளவோ செய்ய வேண்டும். இங்கு மாட்டிக் கொண்டிருக்கிறோமே என்று வருந்தியது.

தன் ஆராய்ச்சியின் நடுவில் இப்படி ஒரு சோதனை. மஞ்சள் மணியை மேலும் ஆராய்ந்து தன் இனத்தாருக்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்ற நோக்கம் எப்படி நிறைவேறும்.  மற்றும் ஒரு புரட்சி திட்டமும் இருந்தது.

“மனித இனம் நம்மை நசுக்குவதை அனுமதிக்க மாட்டோம்’   என்ற பெயரில். அவர்களால் கண்டு பிடிக்கவே முடியாதபடி  தங்கள் வாழ்விடத்தை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இன்னும் நிறைய வேலைகள். முதலில் இந்த தளையிலிருந்து விடுபட வேண்டுமே. ஆகா, தன் வீடு தான் எவ்வளவு சுகம். 

ஜோயி தன் முன் வைக்கப் பட்டிருந்த உணவை வெறுப்புடன் பார்த்து, முகத்தைத்  திருப்பிக் கொண்டது.  ஒன்றிரண்டாக  உடைத்த தானியங்கள்.   அடுத்து கஞ்சியை முகர்ந்து பார்த்து அதுவும் பிடிக்காமல், தன் பையில் ரகசியமாக வைத்திருந்த திசில் என்ற தாவர உணவை ஒரு கடி கடித்து  த்ருப்தியாக நகர்ந்தது.  வீட்டுத் தலைவன் போல இருந்த வாட்ட சாட்டமான ஆள் தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல பேசுவான். அவன் ஜோயிக்கு உணவு என்று கொண்டுவந்து வைத்த பையில் சிக்கன் நெடி- ஜோயிக்கு தெரிந்து விட்டது. விலங்குகளை வதைக்காமல் இவர்களால் சாப்பிட முடியாதா? என்று தனக்குள் பேசிக் கொண்டது.  அது நாய்களுக்கான  உணவாம்.  பையில் வெளியில் என்ன  என்ன பொருட்களைக் கொண்டு தயாரித்தது, எந்த ஜீவனையும் துன்புறுத்தவில்லை என்பது போன்ற பிரமாண வாக்கியங்களும் இல்லை.  கொண்டு போய் தோட்டத்தில் கொட்டிவிட்டு, தன் பிண்டேரியன் திசில் – துண்டை கடித்தே பொழுது போக்கியது. அது எவ்வளவு ஆரோக்யமான உணவு. மிக குறைந்த அளவு, ஒரு அங்குலம் தான் இருக்கும்,  அதிலிருந்து கிள்ளி எடுத்து வாயில் போட்டுக் கொண்டது. மனதிற்குள் அருமையான டின்னர் என்று சொல்லிக் கொண்டது. அந்த சிறிய அறைக்குள் ஒரு சுற்று சுற்றி விட்டு அமர்ந்தபடி தன் இருப்பிடத்தை நினைத்து வருந்தியது.  எவ்வளவு அருமையான இடம்.  நான் ஆரம்பித்த செய்தித் தாள் எப்படி யாரால் தொடர முடியும்?  அந்த செய்தித் தாள் மிக பிரபலம்.  நம்பகமான செய்திகளைத் தரும்.  அது தரும் செய்திகள் கண்டிப்பாக ஆதாரபூர்வமாக, தவிர பொழுபோக்கு செய்திகள்.   அந்த விலங்குகளின் உலகத்தில் ஒரு விமரிசனம் செய்பவன்,  மற்ற எல்லா எடிட்டர்களும் அவனிடம் நடுங்குவர். ராய்னா ராகூன், அவனே ஜோயியின் பத்திரிகைக்கு நல்ல விமரிசனம் தருவான். 

திரும்ப வீட்டு நினைவு.  எல்லோரும் நண்பர்களாக, மனம் விட்டு பேசுபவராக, இருப்பர். உணவு இது போல ஒரு பாடாவதி இல்லை. நான் எந்த  அளவு என் ஊரில் மதிக்கப்பட்டேன் என்பது இங்கு யாருக்குத் தெரியும்? தான் மகிழ்ச்சியாக இருப்பதாகவே காட்டிக் கொள்ள விழைந்த து. எனினும் இங்குள்ளோர் ஒரு பெண் நீலா என்பவளை தேடித் தேடி கவலையுடன் காஸர் வுட் (CASSER Woods)  என்ற இடம் பற்றி பேசிக் கோண்டிருக்கிறார்கள்.  அந்த பெயரை கேட்டதுண்டு.  அந்த பெயர்  பலகையை அடையாளம் தெரிந்தது. அவ்வளவு தான்.  அங்கு போய் தேடப் போகிறார்களா. அந்தபெண் நீலா  வாகத் தான் இருக்கும். தனது கூண்டை திறந்து விட முயன்ற பெண்.  தன்னை விடுவிக்க வந்தவள்.  ஆ, அந்த நல்ல மனம் கொண்ட பெண் காணவில்லையா? மற்றவர்களிடமும் என்னை விடுவிக்கச் சொல்லி தோற்றாள். 

திடுமென ஒரு எண்ணம். அந்த மாயக்கல் வருடம் தோறும் ஒரு செய்தியைச் சொல்லும். தான் இந்த பூமிக்கு வரும் முன், சில மாதங்களுக்கு முன் என்பது நமக்குத் தான். அந்த மந்திர ஸ்படிகம் உடனடியாக நடப்பதைத் தான்  சொல்லும்.  மந்திர ஸ்படிகம் – அதற்கு நேரக் கணக்கெல்லாம் தெரியாது.  மற்ற விலங்குகள் போலவே ஜோயியும் அதை பற்றி அதிகம் அலட்டிக் கோண்தில்லை.  இதற்கு முன் நம்ப முடியாத சில செய்திகளை கூடச் சொல்லிற்று. நாளடைவில் பிசு பிசுத்துப் போயிற்று.  ஏதோ சொல்லித்தே  “EVEN THE KINDEST SHALL BE TURNED TO EVIL, AND ALL SHALL ROT”   பிரமாதமாக ஒன்றும் ஆகவில்லை. பாரி (Barry bear)  அதனுடைய ஐந்து காரட்  அழுக்குத் தண்ணியில் விழுந்து வீணாயிற்று. அவ்வளவு தான். அதனால் விலங்குகள் அதன் பெரும்பாலான எச்சரிக்கைகளை பெரிதாக நினைப்பதில்லை.  ஏதோ விளையாட்டுப் பொருள் தொலைந்து போனால் கவலை படுவோமே அந்த அளவு தான் அதன் மதிப்பு. அதனால் தற்சமயம் ஒரு குறிச் சொல் சொன்னதே,  அதையும் ஒரு கவிதையாக எடுத்துக் கொண்டன.  பாட தோதாக இருக்கவே அதை பாடி மகிழ்ந்தனர். 

AN ENEMY SHALL COME, IN PLACE OF A FRIEND,

TO STOP THE TWO SPECIES FIGHTING TILL THE END.

 THE ENEMY SHALL CURE THE STONE,

 AND THE FRIEND SHALL MAKE A CHANGE, NOT ALONE.

ஒரு எதிரி, நமது நண்பனின் இடத்தில் வருவான். 

தமக்குள் சதா சண்டை போடும் இருவரை தடுப்பான்.

மணியை மாற்றி அமைப்பான் அந்த எதிரி 

நமது நண்பனும் ஒரு மாற்றத்தை கொண்டு வருவான், தனியாக அல்ல 

இது வரை அதை அலட்சியமாக எண்ணி, மற்றவர்களைப் போலவே இதுவும் வழக்கமான ஒன்று அழகான வாக்கியங்கள், சுலபமான புதிர்,  என்று எண்ணியிருந்த ஜோயி சிந்தனை வயப் பட்டது.  தன்னையும், இந்த காணாமல் போன சிறுமியையும் பற்றியதோ என்ற கவலை தோன்றியது.  தான் எப்படி அந்த காஸர் வுட் என்ற இடத்திற்கு போனோம் என்று முன் நடந்த விஷயங்களை நினைவுக்கு கொண்டு வந்து யோசித்த து. சம்பந்தமேயில்லையே- காலையில் நடந்து கொண்டிருந்தோம். அந்த மந்திர ஸ்படிகம் ஒளி தெரிந்து அதன் அருகில் போனோம். ஏனோ சற்று பதட்டமாக இருந்த து.  எதையாவது வெளியில் அனுப்ப வேண்டுமென்றால் தான் இந்தக் கல் இப்படி ஓளியை வாரியிரைக்கும்.  இருந்தும் அதை எடுக்கப் போன பொழுது தான் இந்த பாட்டைச் சொல்லியது. இரு ஒரு குறி சொல் என்பது அந்த சமயம் உரைக்கவேயில்லையே. கையால் தொட்ட உடனேயே அதன் நிறம் சிவப்பின் பல வித பரிமாணங்களில் ஒளிச் சிதறல்களாக  மாறியது.   தான் இந்த விலங்குகளின் உலகம் வந்த பொழுது பல வண்ணங்கள் தெரிந்ததையும், தற்சமயம் சிவப்பு வண்ணமே மேலோங்கி இருக்க, தாமரை, ரோஜா போன்ற அதன் பல வகைகளில் மிக அழகாக இருந்தாலும் மனதை கவரவில்லை. காரணம் அது வேறு ஏதோ ஒரு விளைவை  தரும் என்று கவலையே அதிகமாக மனதை அரித்தது. 

“ஓ, நீ அந்த நல்ல பையன் தானே..”

மேற்கொண்டு எண்ண விடாமல் அந்த மனிதன் வந்து விட்டான். அவனைக் காணவே கொடூரமாக இருந்தது.  வந்ததோடு இல்லாமல்  முதுகில் தட்டினான்- அவன் வரையில் பிரியமாக செய்கிறான் போலும் – எனக்கு பயங்கரமான அடி – கூடவே அந்த ருசியான?  உணவு பொருள். 

அரை மனதுடன், நட்பாக சிரித்தாலும், தனக்குள்ளே முடங்கியது.  அவன் அகன்றதுமே, வாயில் அடக்கியிருந்தை துப்பி விட்டு திசில் துண்டை வாயில் போட்டுக் கொண்டது. 

சரி, இது தான் நமக்கு என்று தெரிந்தபின் அதையே நினைத்து பொருமுவானேன்.  அன்று நடந்ததை மேலும் நினைவுக்கு கொண்டு வர முடியுமா பார்க்கலாம்.  ஜோயி தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொண்டு, யோசித்தது.   எப்பொழுதெல்லாம் அந்த மந்திர ஸ்படிகம் வித்தியாசமாக  ஏதாவது செய்து நம்மை திசை திருப்பியது. சட்டென்று ஒரு பொறி தட்டினாற் போல ஒரு எண்ணம்.  ஃப்யோனா ஃப்லெமிங்கொ – தன் கைப்பையில் (சுருட்டி ஒரு சிறு ஓக் பழம் அளவுக்கு வைத்திருந்தது)  ஒரு பத்திரிகை – அதிலிருந்து உருவி தான் பல காலமாக நடத்தி வந்த செய்தித் தாள்- “Critter’s Chronicle” –  க்ரிட்டெர்ஸ் க்ரோனிகிள்- காப்பியை எடுத்து பிரித்து பார்த்தது.  

the Critter’s Chronicle

.  Fiona Flammingo:  disappeared 

விலங்குகளின் வாழ்க்கை- நிகழ்ச்சி நிரல் 

ஃபியோனா ஃப்லெமிங்கொ   காணவில்லை

  நம்முடன் இருந்த  ஃப்யொனா ஃப்லெமிங்கொ சில நாட்களாக காணவில்லை.  அதிக பரிச்சயமில்லாத பறவை தான் என்றாலும், கவலை தரும் விஷயம் இது.  காணவில்லை என்று நாம் சொன்னாலும் உள்ளூர நம் அனைவருக்கும் எப்படி போனாள் என்பது தெரியும்.  ஃப்ரெடெரிக் ஃப்லெம்ங்கொ,மற்றும் ஃபெலிஸ் ஃப்லெமிங்கொ இருவரையும் சந்தித்து பேசினோம்.   அந்த பெண் சற்று அடாவடியாக நடந்து கொள்வதாக சொன்னார்கள்.  தன் இஷ்டப்படி தான் நடந்து கொள்வாள், என்றனர். தெளிவாக எதுவும் சொல்லவில்லை. இந்த ஏரி அவளுக்கு போதவில்லை.  இன்னும் பெரிய நீர்ப் பரப்பு வேண்டும், அவளுக்கு எதிர்பார்ப்புகள் நிறையவே இருந்தன என்றனர்.  

மற்ற உறுப்பினர்களுக்கும் அவளிடம் ஏதோ மனத் தாங்கல் இருந்தது. அதனால் அவளை காணவில்லை என்று பெரிதாக யாரும் வருந்தவில்லை. கொஃபர் தான் அவள் திரும்பி போவதை பற்றி யோசித்தாள் என்பதைச் சொன்னான்.  

அப்படி விரும்பி விலங்குலகை விட்டு போனாள் என்பது நமக்கு பெருத்த ஏமாற்றமே.   அவள் மறைவும், இந்த புதிய குறிச் சொல்லும், அவளை எண்ணி சொன்னது போல தொனிக்கிறது.  அங்குள்ள ஒரு தலைமை பெருச்சாளி- பெரிய கண்ணாடி போட்டுக் கொண்டு, அவளை கண்டு பிடிக்க வேண்டும், விசாரிக்கவேண்டும் என்று முணைந்திருந்ததே – அதற்கும் ஒன்றும் சொல்லும்படி தரவு கிடைக்கவில்லை. 

பகுதி-9

“ஹே, ஹ்யூமன், மனிதப் பெண்ணே, இங்க வா”

Speak of the devil –  நினைத்தேன் – என்ன நடக்கிறது பார்க்கலாம் என்று எண்ணியபடி நீலா அருகே சென்றாள். தலைமை பெருச்சாளி, இடுப்பில் கை வைத்தபடி நின்றிருந்தாள்.  

“நிறைய பேசனும் பெண்ணே, என்னுடன் வா”    என்றாள்.

அந்த சின்னஞ்சிறு பெருச்சாளி முன்னால் நடக்க நீலா வேடிக்கை பார்த்தபடியே நடந்தாள்.  பெரிய்ய்ய்ய மரம்.  அந்த மரத்தில் பல வடிவங்களில் கண்ணாடி ஜன்னல்கள் போல பள பளக்கும் பாறைதுண்டுகள் இருந்தன. ஒவ்வொரு கிளையும் ப்ரும்மாண்டம்.  கிளைகளில் வீடுகள். அதன் இடது பக்கம் ஒரு குளம்.  அதில் பாதி உப்பு நீர்/ அடுத்த பாதி தெளிந்த நன்னீர்.  எங்கு பார்த்தாலும் ஃபௌன்டங்கள் – நீரை  தெளித்தபடி – சிலவற்றில் வண்ணங்களும்  அழகாக இருந்தன.

“உள்ளே வா.  நமக்கு நிறைய பேசனும்”

கண்களைச் சுழற்றிப் பார்த்தாள் நீலா.  தலைமை பெருச்சாளியிடம்  மற்ற விலங்குகள் நட்பாக இருந்தன. ஆனால் அவள் நீலாவை எதிரியாக கண்டாள். ஒரு சிங்கம் அவளிடம் ஏதோ கேட்டது.  கவனமாக கேட்டு,  தலையாட்டி, அதற்கு சிரித்துக் கொண்டே பதில் சொன்னாள்.  உள்ளே நுழைந்த நீலா வியப்புடன் அதன் கட்டமைப்பை நோக்கினாள். பல வண்ணங்களில் பாறை கிரிஸ்டல்கள் கொண்டு மாடிப்படிகள் அமைத்திருந்தார்கள்.  ஒரு படி ஏறி பெருச்சாளியுடன் ஒரு பெரிய அறை போன்ற இடத்தை அடைந்தாள். பெயர் பலகை மாட்டியிருந்தது.  மிகல்யா முஸ்க்ரட்: க்ராண்ட் எல்டெர் –  அவள் பெயரும்,  பெரியவர்களின் தலைமை  –

பள பளத்த மேசையின் பின் தன் இருக்கையில் அமர்ந்த படி கேள்விக் கணைகளை தொடுத்தது. 

“ப்ரொஃபஸி- குறிச் சொல் பற்றி உனக்கு என்ன தெரியும்? “

நீலா திகைத்தாள்.  குறிச் சொல், வருமுன் சொல்லுதல் என்று எதுவுமே அவள் கேட்டதுமில்லை, நம்பியதும் இல்லை. அப்படி இருக்க அவள் ஏதோ ஒரு கெட்ட திட்டத்துக்கு உடன் போனது போல என்ன தீர்மானமாக குற்றம் சாட்டுகிறாள்.

சத்யமாக,  நான் முதன் முதலில் இந்த வார்த்தையை கொஃபர் லேடி சொல்லி கேட்டேன்.  யாரையாவது விசாரிக்க விரும்பினால் நான் அல்ல அது. நீங்கள் தவறான  நபரை சாடுவது சரியல்ல.

பெருச்சாளி உறுமியது. 

இதோ பார். நீதான் அந்த எதிரி. குறிச் சொல் தெளிவாக சொல்லியிருக்கிறதே. நீ எங்களுடன் நட்பாக இருந்து கெடுதலைச் செய்யத் தான் வந்திருக்கிறாய். எனக்குத் தெரியும் இந்த மனிதர்கள் எப்படிப் பட்டவர்கள் என்று. அரிதாக உள்ள விலங்குகளைக் கொன்று, பஞ்சு வைத்து அடைத்து காட்சி சாலைகளில் வைத்து மகிழ்வார்கள்.     

நீலா அந்த பெருச்சாளியை உற்றுப் பார்த்தாள்.  என்ன ஆனாலும் சரி, இந்த மனித பெண் இங்கு இருக்க விட மாட்டேன் என்று தீர்மானமாக இருப்பது தெரிந்தது.

“ஓரு கேள்வி – நீ யார் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?  அந்த சிங்கம் ஏன் உன்னை லஞ்ச் சுக்கு அழைத்தது.   சாதாரணமாக உன்னையே லஞ்ச் ஆக விழுங்குவது தானே அதன் வழக்கம்.  தவிர, ஏதோ   Grand Elders – மூத்தவர்கள் அதிலும் பெரியவர்கள் என்று சொல்வது யாரை அல்லது எவர்களைக் குறிக்கும்?  அந்த முயல் தலையில் எதற்கு அந்த அலங்கார வளையம்?  நீ எதற்கு இவ்வளவு பெரிய மூக்கு கண்ணாடி அணிந்திருக்கிறாய் ? அப்படி ஒன்றும் எடுப்பாகவும் இல்லை- பூணைக் கண் போல, தவிர,   “

“ஊஷ்.. ஒரு கேள்வி என்று தானே சொன்னாய், இப்பொழுது அடுக்குகிறாயே..  என்னை எப்படி புரிந்து கொள்கிறாய் தெரியுமா? அந்த மந்திர ஸ்படிகத்தின் மகிமை.  எங்களிடம் ஒரு சிறப்பான உணவு உண்டு – அதன் பெயர் பிண்டரியன் திசில் – அதை இந்த கல்லின் உதவியால் பெறுகிறோம்.  மாமிச உணவுக்கு அது மாற்று. Leah – அந்த சிங்கம் என்னை லஞ்சு க்கு கூப்பிடவில்லை அது Brunch – காலை உணவை தாமதமாக உண்பது – அது லஞ்ச் அல்ல – எங்களுக்குள்ளேயே சிலரை பொறுக்கி Grand Elders என்று நியமித்திருக்கிறோம்.

காற்று, நிலம், கடல் என்று சில துறைகள், ஒவ்வொன்றும் ஒரு தலைவர் கீழ்.  நான் நிலத்திற்கு பொறுப்பு. Edward Eagle,  வானத்திற்கு ,  Tina Trout, கடல் மற்றும் நீர் நிலைகள்.  தனித்தனியாக  அடையாளம் தெரிய எனக்கு இந்த பூணை கண் கண்ணாடி அந்த முயலுக்கு தலையில் வளையம். – சீருடை என்று மனிதர்கள் சொல்வார்களே, அது போல். புரிந்ததா?  குறுக்கே பேசாதே.

நீலா தன் இருக்கையில் வசதியாக சாய்ந்து அமர்ந்தாள்.

ஓ,  விலங்குகள் உலகில் இவ்வளவு விரிவான அமைப்பு கேட்டதே இல்லையே என்று மலைத்தாள். பெருச்சாளியின் விளக்கம் மேலும் அவள் ஆவலைத் தூண்டி விட்டன.

ஆனால், நீ பெருச்சாளி இனம் தானே. எப்படி நிலத்தையும் நீரையும் சமாளிப்பாய்?  

என்னை நிலத்துக்கு அதிகாரியாக நியமிக்க வேண்டிய் அவசியம்  வந்தது  Fiona Flamingo காணாமல் போன பொழுதான். அது ஒரு சாதாரண விஷயம் அல்ல. எங்களுக்கு தலை குனிவு அப்படி ஒருவர் இங்கிருந்து வெளியேறுவது என்பது.  நில வாழ் விலங்குகள் வோட்டு கணிசமாக குறைந்து விட்டது.  இதெல்லாம் நீண்ட அரசியல்  நிர்பந்தங்கள்.  உன்னைப் போன்ற இளைஞர்களுக்கு கேட்க பொறுமையிருக்காது. 

மர மண்டை ஃபியானோ இப்படி திடுமென தானாக வெளியேறியதும்,  சில கட்டுப் பாடுகள் செய்ய வேண்டியிருந்தது.  ஒவ்வொரு துறைக்கும் குறைந்த பக்ஷம் பத்து பேர் வேண்டும்.  நான் நீர் நிலம் இரண்டின் உறுப்பினர்கள் நலனையும் பாதுகாக்க முடியும் என்று என்னை இந்த Grand Elders கூட்டத்தில் சேர்த்தனர். 

ஒரு கழுகு அறைக்குள் தன் தலையை நுழைத்து ஏதோ சொல்லியது. 

Mikayla தன் சுழல் நாற்காலியை திருப்பி அதனை வரவேற்றது. என்ன விஷயம் எட்? 

Tina  டீனா எதோ சொல்ல வேண்டுமாம்.  அவளை சில விஷயங்களை விசாரிக்கச் சொன்னீர்களே – அது சம்பந்தமாக – மேலும் ஏதோ சொல்ல இருவரும் – ஆ என்றனர். 

இப்பொழுது தான் எட்வர்ட் கழுகு நீலா அங்கு வாயை பிளந்து தன்னை ஆச்சர்யத்துடன்  பார்ப்பதை கவனித்தது . அதனுடைய ப்ரும்மாண்டமான உடல் தான் அவளது பிரமிப்புக்கு காரணம் என்று அதற்கு தெரியுமா? 

“ஹ்யூமன், என் தலையை வெட்டி உன் வீட்டை அலங்கரிக்க வைத்து விடாதே…”

மிகால்யா அதை அதட்டியது ..கண்ணால் ஜாடை காட்டியது.

“சே சே  – சும்மா இரு. இது சாது. கையில் ஆயுதங்களோ, வெடிக்க துப்பாகியோ இவளிடம் இல்லை .”

இவ்வளவு சொல்லியும் எட்வர்டின் பயம் அகலவில்லை.  தரை விரிப்பின் அடியில் முகத்தை ஓளித்துக் கொள்வது போல முகத்தை கவிழ்த்த படி நின்றது. 

அங்கு வந்த டீனா – என்ற மீன்  தான் சொல்ல வந்ததை சொல்லிற்று.  சில சாமான்கள் வேண்டும் – தேங்காய், இன்னும் சில சாமான்கள்… பாதியில் நிறுத்தி “இந்த மனித சிறுமி ஏன் இன்னும் இங்கு இருக்கிறாள் ?” 

எட்வர்ட் கழுகையே பார்த்துக் கொண்டிருந்த நீலா அது ஓட்டமும் நடையுமாக விரைந்து அகன்றபின், அந்த சிறிய பெருச்சாளியை நோக்கி திரும்பினாள்.

“நான் போகட்டுமா?”

“ஓரே ஒரு கடைசி கேள்வி – நீ எப்படி இங்கு வந்தாய்”?

“அங்கேயும் ஒரு பொருள் இந்த நீல மணி போலவே இருந்தது.  நான் தொட்டவுடன் பட்டென்று வெடிப்பது போல பல வண்ணங்கள் சிதற – அவ்வளவு தான் எனக்குத் தெரியும் – அடுத்த நொடியில் நானே அதன் வண்ணங்களில் ஒன்றாக ஆனது போல இருந்தது. என்னை இழுத்துக் கொண்டு வந்து இங்கு சேர்த்தது.

மிகல்யா அவள் சொன்னதை திருப்பி தானும் சொல்லி பார்த்தாள். 

“இங்கு வந்தபின் அந்த மணியைப் பார்த்தாயா?” 

“இல்லை. நான் கண்டதெல்லாம் சில விலங்குகள்.  சில கத்தின, சில உறுமின..”

மிகால்யா திடுமென நினைவு வந்தது போல நிமிர்ந்து பார்த்து கேட்டது.

“அந்த மணி என்ன வர்ணம், சொல்ல முடியுமா? வெடித்து வண்ணங்கள் சிதறியதாகச் சொன்னாயே, அவை என்ன வண்ணங்கள்?  சிவப்பா? அல்லது வான வில் போல பல வண்ணங்களா?”

“நீலமும்  வான வில்லும்”

மிகைலா பயமா, ஆச்சர்யமா, இரண்டும் கலந்ததா ? என்ற உணர்ச்சிகளின் கலவையாகத் தெரிந்தாள். 

“நிஜமாகவா சொல்கிறாய்”  அது ஃபியொனா வின் தலையை அல்லது வேறு எதையாவது காட்டியதா?”

“இதோ பார் மிகைலா – நான் பயந்து அலறிக் கோண்டிருந்தேன்.  யாரோ என்னை அபகரித்துக் கொண்டு போகிறார்கள் என்று தெரிந்தது.  அடுத்து என்னவாகும் என்று புரியாமல் கண் மூடியதை இங்கே வந்து தான் திறந்தேன். ஆனால், இது வரை நிச்சயம். ஃபிலமெங்கோ தலையெல்லாம் இல்லை. 

மிகைலா எதுவும் பேசும் நிலையில் இல்லை. மேலும் கேள்வி கேட்கவும் இல்லை. 

“அப்ப சரி, நீ போகலாம்.”  இரு இரு ஒரு கடைசி கேள்வி. ஜோயி பற்றி ஏதாவது தெரியுமா?  அவன் இங்கிருந்து போனது பற்றி தெரியுமா? 

நீலா பிரமித்தாள். நடுக் காட்டில் தனியாக நடந்து கொண்டிருந்த குட்டி மான், திடுமேன ஹெட்லைட் கண்ணில் பட்டாள் மிரளுமே, அது போல. 

“ம்ம்  ..இருக்கலாம்”

சற்று முன் ஏமாற்றத்தில் முகம் வாடி இருந்த மிகைலா இதைக் கேட்டு துள்ளினாள். பசித்த எலி சீஸ் கட்டியைப் பார்த்து துள்ளுமே, அது போல. 

“ என்ன அர்த்தம்? – இருக்கலாம் என்றால்?”  உனக்கு என்ன தெரியும்”?

அவன்  என் வீட்டில் இருக்கிறான்.  என் பெற்றோர் அதை கண்டெடுத்து வளர்ப்பு நாயாக வீட்டில் வைத்திருந்தனர்.  இப்பொழுது நிச்சயமில்லை- அங்கு இருக்கிறதோ, அல்லது தப்பி விட்டதோ.” ஒரே மூச்சில் ஒப்பிப்பது போல் சொல்லி முடித்தாள். 

நம்ப முடியாமல், வாயை பிளந்தபடி மலைத்து நின்ற, மிகைலா ஒரு வார்த்தை சொன்னாள். நீ போகலாம்.

“நல்ல காலம் என்று எண்ணியபடி நீலா வேகமாக வெளியேற கிளம்பினாள். போகும் பொழுது மிகலாவின் 

மேசையில் இருந்த ஓரு நிகழ்ச்சி நிரல் அல்லது ஒரு முக்கியமான கூட்டத்தில் பேச வேண்டிய விஷயங்கள் வரிசைப் படுத்தியது போல ஒரு டாகுமெண்ட் கண்ணில் பட்டது.  

Organize a meeting for community spirit…Fiona coming from a rich and pampered life in Earth…thinks she wants to go back…Buy the black glassesin Gayle’s Glasses –

துண்டு துண்டாக தலையங்கங்கள்  – நம் குழுவின் அவசரக் கூட்டம்  – ஃபியோன ஃப்லெமிங்கோ செல்வாக்காக வாழ்ந்தவளாம்- திரும்பி போகத் தான் விரும்பினாளாம்-   மிதியை படிக்க இந்த கண்ணாடி வாங்கிக் கொள்ளுங்கள்

நீலா அதை படித்ததும் நின்றாள். சில நாட்களுக்கு முன்  Patriot Tribune- என்ற பத்திகையில் படித்த ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது. மிகப் பெரிய, அரிதான ஒரு ஃப்லெமிங்கொ என்ற தலைப்பில் அதன் படம் வெளியாகியிருந்தது.  மிகவும் கொண்டாடி வளர்க்கப் பட்ட ஒரு பறவை, அதே தான் – அவள் காட்டில் பார்த்த பறைவையின் படம்.  அது திரும்பி வர விரும்புகிறதா? ஏன்? அந்த படத்திலும் பள பளக்கும் ஒரு நீல மணி – ஏதோ சம்பந்தம்  – என்னவாக இருக்கும்? 

பகுதி -9

ஜோயி விருப்பமின்றி நடை பழகச் சென்றது.  இது வரை  தான்  கொண்டு வந்த  இருந்த திசில் துண்டு பசியை அடக்க போதுமானதாக இருந்தது.  அதே அலுப்பைத் தரும் தினசரி.  நாயைக் கட்டிப் போட்டு, பின் நடக்க வைப்பது என்று தானும் கூடவே வந்து  நடக்க வைக்கிறார்களாம். அது வீட்டு நாய்களுக்கு சரி.  நான் யார் தெரியாதா? இது அவமானம்.  அதில் ஒரு நன்மை. ஒரு பூணையின் பரிச்சயம் கிடைத்தது.   பொல்லாத பூணை – இங்கேயே பிறந்து வளர்ந்தது. தனக்கு லாபம் இல்லாத வரை ஒருவருக்கும் ஒரு உதவியும் செய்யாது. ஜோயி நாய் உணவை அதற்கு கொடுத்தது.  ஷ் .. என்ன வாழ்க்கை.. போர்… போர்…அதற்கு சம்மதமில்லாவிட்டாலும் வீட்டினர் அதை தங்கள் வளர்ப்பு நாயாகத் தான் எண்ணியிருக்கின்றனர். ஜோயி பொழுது போகாமல் புத்த அலமாரியின் பின்னால் ஒளிந்து கொண்டு அவர்கள் பேச்சை ஒட்டுக் கேட்டது. 

தன்னை குட்டி நாய் என்பதை கூட பொறுத்துக் கொண்டது.  இன்னொரு செல்ல வார்த்தை புரியவில்லை. திட்டுவது போல இருந்தது. ‘pip-squeak’  புரியாதவரை நல்லது. மெக்சிகன் நாய் கண்கள் துறுத்திக் கொண்டிருக்கும், அதன் பெயரான சிகுவா  அது கேள்விப் பட்டவரை கிண்டல்.  மட்டம் தட்ட பயன் படுத்துவர்.  தான் சிறிய உருவம் உடைய ஓநாயாக இருப்பதை கேலி செய்கிறார்கள். வேறு என்ன?   ஜோயி எம்பி நின்றால் கூட பத்து வயது பையனின் முழங்கால் வரை தான் வரும்.  அந்த அறையில் அடுக்கி வைத்திருந்த  பெரிய உலக வரலாறு புத்தகங்களின் பின்னால் வசதியாக கண்கள் மட்டும் தெரியும்படி நின்று கொள்ளலாம். 

பேச்சுக் குரல்… “எங்குமே இல்லை.-   காஸர் வுட் – அங்கும் இல்லை- “நன்றாக தேடினீர்களா? 

நிச்சயமா? மூலை முடுக்குகள்…”? 

அட டா – அந்த பெண் நீலாவைத் தேடுகிறார்கள். ஜோயிக்கு சந்தேகமேயில்லை. 99.999% நிச்சயம். நீலா விலங்குலகில் தான் இருக்கிறாள்.  அந்த குறிச்சொல், ப்ரொஃபஸி – அதன் பொருள் இப்பொழுது தெளிவாக ஆகி விட்டது.  அதன் படி தானும் ஏதாவது செய்ய வேண்டுமே- இங்கே மாட்டிக் கொண்டு நான் என்ன மாற்றத்தைக் கொண்டு வர முடியும்-  இந்த மனிதர்கள் ஏற்கனவே வசதியாக வாழ்கிறார்கள். நான் புதிதாக என்ன செய்யப் போகிறேன்.   அந்த தடிமனான புத்தகத்தை விட்டு சற்று விலகியதும் ஏதோ நழுவியது போல – அட ஒரு பழைய செய்தி தாள் –

அழகிய ஃபியோனொ ஃப்லெமிங்கொ திரும்பி வந்து விட்டது.  அதோ இருக்கிறாளே.. சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்கிறாள்.—அது என்ன? பழைய நகைகள். மஞ்சள் மணியை மறைக்க முயன்று கொண்டிருக்கிறாள்.மறைக்கவா, ஏன்?   கைகளால் சுவற்றில் பிறாண்டும் சத்தம். எட்டிப் பார்த்து. சுவற்றின் மறுபக்கம் – அட நீயா,  குட்டிப் பெண்ணே, 

மேலும் தொடரவிடாமல்  வீட்டுப் பெண்மணி, அவனை தூக்கிக் கொண்டு போய் அந்த பழைய க்ளோசெட்-ல் விட்டாள்.  அதை விட மோசம் உணவு என்று ஒரு பெரிய பொருளை கொண்டு வைத்தாள்.  மனம் முழுவதும் அந்த போட்டோவிலேயே இருந்தது. 

அதில் இருந்த ஒரு பொருள், விலங்கு உலகில்  யாராலும்  நினைத்து கூட பார்க்க முடியாதது. கனவில்  கூட காண முடியாதது. காமிராவில் அதை எப்படி பிடிக்க முடிந்தது ?  ஜோயி மேலும் யோசிக்கலாயிற்று.  எப்படி?ஏதோ ஒன்று பொருந்தாமல் – சாதாரணமாக அது யார் கண்ணுக்கும் அகப்படாது. ஏதாவது விசேஷ மாக நடக்கும் பொழுது தான் அதன் இருப்பே தெரிய வரும். இந்த படத்தில் அது மிக நல்ல நிலைமையில் உள்ளது.  தன் கையில் இருந்த கனமான ரொட்டி போன்ற ஒன்றை முகர்ந்து பார்த்தது.  யாருமறியாமல் அதை குப்பை தொட்டியில் போட போனது.  அந்த காரிய வாதியான பூணை ஒளிந்து இருந்த இடத்திலிருந்து எட்டிப் பார்த்தது. ஜோயி பூணைகளை அறிந்தவரை அதன் கண்களில் காரியமாகத் தான் வந்திருப்பது புரிந்தது.

“ஓநாயே, இங்கே அருகே வா.. “

ஜோயி உடனே அடிபணிந்து ஜன்னல் அருகில் சென்று எட்டிப் பார்த்தது.  வேலியருகில் நின்று இளித்த பூணை, .  “நான் நீ தெரிந்து கொள்ள  தவிக்கிறாயே அந்த ஃப்லெமிங்கொ பற்றிய செய்திகள் வந்த சமீபத்திய செய்தி தாள்களை கவனமாக சேர்த்து கொண்டு வைத்திருக்கிறேன்.  எங்க வச்சேன் – அது தான் மறந்து விட்து. நீ உன் உணவை கொடுத்தால் ஒரு வேளை அது என் நினைவைத் தூண்டி விடலாம். “

ஜோயி முறுவல் பூத்தது.   இந்த பூணை பல  கேள்விகளுக்கு பதிலாக இருக்க கூடும். தனக்கோ அந்த டாக்ஃபுட்  – பிடிக்கவில்லை.  இதற்கு பிடிக்கிறது.  இதற்கு பதிலாக எனக்கு தேவையான விஷயங்கள் கிடைக்குமானால், எவ்வளவு நல்லது. 

ஜோயி பேரம் பேசியது. நீ தினமும் இது போல செய்தி தாள்களை கொண்டுவந்து கொடு- நான் என் உணவை உனக்குத் தருகிறேன். 

“எழுதி தருவாயா?”

ஜோயி துண்டு பெப்பரில் எழுதி நீட்டியதும் அந்த பொல்லாத பூணை தன் மடியிலிருந்து கட்டு செய்தி தாள்களை எடுத்து கொடுத்தது.

அதோடு, என் பெயர் Matt – என்று சொல்லிக் கொண்டே ஓடி விட்டது.

ஜோயி நிதானமாக செய்தி தாள்களைப் பிரித்து புரட்டிப் பார்த்தது.

எதிர்பார்த்த படி அதில் தான் தேடிய  மஞ்சள் மணியை பற்றிய விவரங்கள் மிகக் குறைவாகவே இருந்தன. உண்மையில் இந்த மனிதர்கள் விசித்திரமானவர்கள்.  எதற்கும் உதவாத தன்மைகள்.  வேண்டாத செய்திகள்:  ஃபியொன ஃப்லெமிங்கொ தன் தலையில் கட்ட ஒரு ஊதா நிற ரிப்பனை தேர்ந்தெடுத்தாள்.   அல்லது கதா நாயகிகள் அவளது உடல் நிறமான பிங்க் நிறத்தில் 50 ஆயிரம் டாலர்கள் கொடுத்தாவது தங்கள் உடைகளை, அதுவும் டவல்களை வாங்கத் தயாராக இருக்கிறார்கள்,  ஏன்தெரியுமா?  அல்பங்கள். அதில் கோடிக் கணக்கான

சமீபத்திய முக்கிய செய்திகள் இருந்தாலும் ஜோயியின் கவனம் அவைகளில் செல்லவில்லை. ஒரே ஒரு செய்தி தான் வேண்டும். எப்படி ஃப்லெமிங்கொ திடுமென மறைந்தாள் என்பது தான். 

பகுதி-10

க்ளோசெட்டின் கதவு திறக்கப்படும் ஓசை கேட்டு நிமிர்ந்தால் – கையில் ஒரு சிவப்பு பந்துடன் வீட்டுப் பெண்மணி நின்று கொண்டிருந்தார்.  தன்னை வெளியில் வரும்படி அழைக்கிறார் – இந்த பந்தைக் கண்டவுடன் ஓடி வந்து விடுவேன் என்ற அவரது கணிப்பை எண்ணி சிரித்துக் கொண்டது.  ஆர்வமாக அந்த பந்தைக் கண்டு ஓடாவிட்டால், மறு நாள் தன்னை அந்த விலங்கு வைத்யரிடம் கூட்டிசென்று விடுவார்கள் என்ற பயம் காரணமாக  அந்த விளையாட்டுக்கு உடன் பட்டது.  அங்கு போனால் பணிவாக இருக்க கற்றுக் கொடுப்பார்கள்.  யாருக்கு வேண்டும் அந்த பாடங்கள்.  மகா கஷ்டம்.

எனவே, ஜோயி அந்த பந்து தான் உலகிலேயே அதற்கு பிடித்தமான பொருள் என்பது போல முகபாவத்துடன் அவளிடம் சென்றது.  சிறிது நேரம் அந்த விளையாட்டு. பின் அந்த பெண்மணி கழுத்தை சுற்றி ஒரு தோல் வளையம் அத்துடன் இணைத்த நீண்ட கயிறு இவற்றுடன் , ஜோயிக்கு கொஞ்சம் கூட பிடிக்காத நடை பழக அழைத்துச் சென்றாள்.  தன் இனத்துக்கே அவமானம் என்று ஜோயி கருதியது அவளுக்கு எப்படித் தெரியும், அது போதென்று ஒரு குட்டி நாய் அடர்த்தியான ரோமத்துடன் -அதனாலேயே மிகவும் விரும்பப்பட்ட ஜாதி –  பெயர் ஃபூஃபி யாம் – நீ யார்,  என்ன ஜாதி,  கலப்பினமா? என்று கேட்டது.  என்ன தைரியம். நல்லவேளையாக வீட்டுக்கார பெண்மணி காஸர் வுட் போகும் எண்ணத்தில் இருந்தாள்.  அந்த இடம் வந்ததும் ஜோயி அடையாளம் கண்டு கொண்டது.  அதே இடத்தில் தான் நீலா காணாமல் போனாள்.  ஏனோ, அந்த பெண்மணி ஜோயியை ஓட விட்டாள். அவளை நன்றியுடன் பார்த்து விட்டு, ஜோயி தன்னை கொண்டுவது இந்த பூமியில் தள்ளியதும்  அதே சக்திதான் என்பதால் ஏதாவது தடையம் கிடைக்குமா என்று பூமியை முகர்ந்தபடி சென்றது. வெகு தூரம் வந்து விட்டோமோ, கால்கள் தள்ளாடுகின்றன என்று நினைத்து ஒரு மண் மேடு மேல் அமரச் சென்றது.  அதே நேரம் அங்கு ஒரு பரிச்சயமான முகம், குரல் கேட்டு திகைத்து நின்றது. ஜோயி, ஜோயி ஃபாக்ஸ் – ஜோயி ஓநாய் தானே  – இந்த இடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாய்?   நான் என்னுடைய ஓட்டுக்குள் கிடந்து திண்டாடுகிறேன், நீ என் மேலேயே வந்து உட்காருகிறாய் –  என் மாணவன் தான் – எனக்கு பிடித்த மானவன் கூட – ஆனால்,   அதற்காக நீ என்னை ஒரு நாற்காலியாக  நினைத்து ஏறி உட்காரச் சொல்வேனா? 

ப்ரொஃபஸர் திமோதி – எப்பொழுதும் எரிச்சல் தெரிய பேசுவதில் வல்லவர்.  

ஜோயியின்  பழைய ஆசிரியர் அந்த திமோதி ஆமை.  அவர் தான்  Alchemy and Stone 101   சொல்லிக் கொடுத்தார்.  அவருக்கு அந்த துறையில் மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய ஆசை. அதனாலேயே விவரமாக சொல்லி கொடுத்தார்.  பாதி வகுப்பிலேயே ஏதாவது புது ஐடியா வந்தால் உடனே வகுப்பை மறந்து தன் ஆராய்ச்சி சாலைக்குச் சென்று விடுவார்.  நான் உங்களுக்கு சொல்லித் தருவதெல்லாம்  இலக்கை அடைய ஒரு பாதை  மட்டுமே- இப்படி இருக்கலாம் என்ற  ஒரு அனுமானம். அதில் நீங்களே அலைந்து திரிந்து கண்டு பிடியுங்கள்.  

ஏனென்றால் எதுவும் நிச்சயமாகத்  தெரியாமல்  கண்டபடி நினைத்து குழம்பும்  இளவட்டங்கள் – அவர்கள்  மூளைக்கு ஒரு பிடிமானம் ஒரு இலக்கு வேண்டும் – அப்படி ஒரு இலக்கு இல்லாவிட்டால், வெட்டியாக சுற்றவும், மற்றவர்களை  சீண்டுவதுமாக பொழுதை கழிக்கும்.

ம்ம்ம்…ப்ரொஃபஸர் டிம்,  நீங்கள் எப்படி இந்த பூமிக்கு வந்தீர்கள்?  நீங்கள் இங்கு சொல்வதை நான் எப்படி புரிந்து கொள்வேன். இங்கு நான் பூணைகளின் மொழியை மட்டும் தான் புரிந்து கொள்கிறேன்.

திமோதி யோசித்தார். 

“ நீ இன்னும் நிறைய மொழிகளை கற்றுக் கொள்ள வேண்டும், மகனே.  நீ இதுவரை நான் சொன்னதை புரிந்து கொண்டது எப்படி தெரியுமா?  என்னிடம் ஒரு மாற்றுக் கல் உள்ளது.  அதற்குள்,  அது என்ன என்று கேட்காதே. மறந்திருக்க மாட்டாய்.  நீ எப்படி வந்தாய்? அதே போலத் தான் நானும் வந்தேன். நான் ஒரு மாற்று  மந்திர ஸ்படிகம் கண்டு பிடிக்க ஆய்வுகள் செய்து வந்தது தான்  உனக்குத் தெரியுமே. எதிர் பாராத விதமாக அது சிவப்பாக ஓளி விட்டது.  அதிலிருந்து அருவி போல ப்ராஃபஸி கொட்டியது. எல்லா விவரங்களும், ஃபியோனா வெளியே என்ன செய்தது, எல்லாமே  அந்த அறிவிப்பு மழையில் வந்து விழுந்தன.  இதோ நான் இங்கு நிற்கிறேன். 

ஜோயி பிரமித்தது.  இப்படி விலங்குலகிலிருந்து விலங்குகள் பூமிக்கு வருவதும், அதன்  குறிச்சொல், இனி வருவதைச் சொல்வது- இவை தவறாது நடக்கும் என்ற நம்பிக்கை பொய்த்தால்,  ஒரே ஒரு காரணம் தான் இருக்க முடியும். அந்த மந்திர ஸ்படிகம் தன் சிறப்புத் தன்மையை இழந்து விட்டது அதில் விரிசல் கண்டிருக்கலாம்.    அதன் பலனாக மன நிலை சீராக இல்லாமல் தடுமாறியிருக்கலாம்.  இந்த மன நிளையில் அந்த மந்திர ஸ்படிகம் செயல் பட்டால், எல்ல விலங்குகளூம், மனிதர்களும் இட மாற்றம் செய்யப் படலாம். இது ஒரு பெரும் பிரச்னை.  

பகுதி -11

BLAARGH – (one has absorbed or is emitting a quantum of unhappiness.)  இது தற்காலத்தில் அதிகமாக பயன்படுத்தப் படும் சொல் – மிக அதிகமாக மன வருத்தம் அல்லது பசி போன்ற உடல் உபாதைகள்) 

இந்த வார்த்தையே போதும் – நீலாவின் தற்போதைய நிலையை வர்ணிக்க.    யப் –  அவளுக்கு பசித்தது – செய்வதற்கு எதுவுமில்லாமல் போரடித்தது – எங்கு இருக்கிறோம் என்ன செய்யப் போகிறோம் என்று எதுவும் தெரியாமல் கலக்கமாக இருந்தது. எல்லாம் சேர்ந்து யாரிடம் என்று இல்லாமல் கோபம் வந்தது. ஒரு பாறையை காலால் எத்தி தள்ளினாள். திரும்பவும் அதே போல எத்தினாள்.  காலை வருடிக் கொடுத்தாள்.  அந்த பாறை காலை பதம் பார்த்து விட்டது. ஒரு இரவு, ஒரு பகல், எதுவுமே சாப்பிடாமல் – நொறுக்குத் தீனி பொட்டலம் தவிர-  அருகில் பறந்து சென்ற வண்டை பார்த்து கத்தினாள். 

ஏய், வண்டே, அறிவில்லையா, உனக்கு! யார் நீ, யாராக இருந்தாலும் நீ செய்வது சரியில்லை.  வண்டுக்கு என்ன தெரியும் , மனித சிறுமியிடம் எப்படி நடந்து கொள்வது என்று. “ நான் இந்த விலங்குலகில் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.  பசிக்கிறது – எதை சாப்பிடுவது, மரப்பட்டையா?  விலங்குகள் எல்லாமே முரடுகள்.  எனக்கு பசிக்கிறது. உன்னால் என்ன செய்ய முடியும். நீ எப்படி சமாளிக்கிறாய் இந்த முரட்டு ஜீவன்கள் இடையில்?  இங்கேயே இருந்து உனக்கு என்று ஒரு வழி, பசித்தால் ஏதாவது சாப்பிட கற்றுக் கொண்டு விட்டாய் போலும்?   உன் வாழ்க்கை -அதை நீயே அழகாக செய்து கொண்டு விட்டாய்.  என்னைப் போலவா-  இந்த அமானுஷ்ய உலகில் எப்படியோ வந்து மாட்டிக் கொண்டிருக்கிறேன். நீ அதிர்ஷ்டசாலி, சிறு பூச்சியே.  நானும் உன்னைப் போலவே கவலையின்றி சுதந்திரமாகத் திரிந்து கொண்டிருந்தேன்.  ஆனால், ஓ  .. ஒரு அசட்டு மாயக்கல், என்ன நினைத்தோ என்னை இங்கே கொண்டு வந்து போட்டது. நான் கேட்டேனா? இல்லவே இல்லை. இப்ப பார்  ஏதோ ப்ரொஃபஸியாம் – என்னை சுற்றி வளைத்து இங்கே தள்ளியிருக்கிறது.  ஐ டோண்ட் கேர் —  நீ போய் வா, உன் தேவைக்கு கிடைப்பதை பொறுக்கு – சந்தோஷமாக இரு, ஹை  !

அந்த வண்டு ( அதன் பெயர் Bonnie என்பதாம்)  இந்த மனித பெண்ணை லட்சியம் செய்யவில்லை.  ஏன் இவ்வளவு உரத்த குரலில் பேசுகிறாள் என்று எண்ணியவாறு விரைந்தது. அதன் கவலை அதற்கு.  இலைகள் விற்கும் இடம் போனால் அதன் சினேகிதி  Gabby Gnat இருப்பாள். பேசலாம்.  திடுமென திசில் பாக்கெட்டுகள் சிறியதாகி விட்டன. அது பற்றி கேட்கலாம்.  நீலாவை தன் நேரத்தை வீணாக்கியதாக சிடு சிடுப்புடன் பார்த்து விட்டு வேகமாக பறந்தது. அந்த கடை வாசலில் கூட்டம் வேறு சேர்ந்திருக்கும். லைன் பெரிதாக இருக்கும். பல விஷயங்கள் அவள் கவனிக்க வேண்டியதாக இருக்க இந்த அசட்டு மனித பெண் ஏன் இங்கு வந்து கூக்குரலிடுகிறாள் என்பது பற்றி நினைக்கவே நேரமில்லை. இந்த விலங்குகள் உணவு இந்த அளவு குறைந்ததேயில்லை.  தட்டுப்பாடு வந்ததே கிராண்ட் எல்டெர்ஸ் – மூத்த பெரியவர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப் பட்டு வந்த பின் தான்.   அதுவரை  அந்த  Bindarian Thistle in Esme’s Leaves & Thistle! Meh கடைகளில் நிச்சயம் ஸ்டாக் இருக்கும்.  தட்டுபாடு என்பதே இல்லை. உடனடி கவலையெல்லாம் அந்த கடையில் தான் போய் சேருமுன் திசில் தீர்ந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதே..  கூட்டமாக வேறு இருக்கும் – நீளமான வரிசையில் காத்து நிற்க வேண்டியிருக்கும்.

அந்த வண்டை உற்றுப் பார்த்த நீலாவுக்கு தான் பசியுடன் இருப்பது நினைவுக்கு வந்தது. இவைகள் புகழ்ந்து சொல்லும் திசில் பிடிக்கவும் இல்லை.  இதுவரை சாப்பிட்டு பழகிய தன் தாவர உணவுக்கு ஈடாகாது. அவளால் மாமிசத்தை ஏற்கவே முடியாது.  எதைத் தின்பது? பசி பசி பசி பசி – இதை தவிர வேறு எதுவுமே அவளுக்குத் தோன்றவில்லை.  திரும்பத் திரும்ப மனம் வேறு எதிலும் லயிக்காமல் சண்டி பண்ணியது.  சட்டென்று நீலா யோசித்தாள். நேரம்?  மலை போல குவித்து வைத்துக் கொண்டு சாப்பிட தயாராக இருந்தவள், சிந்தனை மாறியது.  ஃப்லெமிங்கொ பற்றி செய்தியை படித்தது ஒரு ஆண்டு முன்பு. இங்கு இவர்கள் ஏதோ சில மாதங்களுக்கு முன் நடந்ததாகச் சொல்கிறார்கள்.  விசித்திரமான விலங்குகள்.  ஒரு ஓடை தென்பட்டது. அதன் கரையில் அமர்ந்து சாக்லெட் ஐஸ்க்ரீம் பற்றி நினைத்துக் கொண்டாள். மனதிற்குள் கற்பனை வளர்ந்தது.  ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தாள். வனில்லா ஐஸ்க்ரீம்,  சின்னமான் (இலவங்க பட்டை) குக்கீ, – அவளுக்கு பிடித்தமான எல்லாமே வரிசையாக – நினைத்துப் பார்த்தே ரசித்தாள். – ஓ எவ்வளவு சந்தோஷமான நாட்கள்.  கனவை கலைத்தது அங்கு வந்த தலைமை பெருச்சாளி – மனதுக்குள் திட்டினாள். சனி…

அதே எரிச்சல் நிறைந்த பார்வை.  “வா, வா உன்னை தலைமை அலுவலகத்தில் கூப்பிடுகிறார்கள். இத பார் –  எதுவானாலும் மறைக்காதே.”

“ஓ…கே ?”

அந்த சமயத்தில் அந்த பெருச்சாளி வாயை அடக்கி சமாதானமாக போவது தான் மேல் –  அதன்  தோரணையும் வரட்டு அதிகாரமும் –   

நீலா எழுந்தாள். மெதுவாக அந்த விசித்திரமான காட்டு விலங்கை பின் தொடர்ந்து தலைமை அலுவலகம் சென்றாள்.  அந்த பொல்லாத சிறு விலங்கு ஒவ்வொரு தப்படிக்கும் நின்று திரும்பி பார்த்தது – வருகிறாளா என்று உறுதி செய்து கொள்ள – இந்த பெருச்சாளிகளுக்கு இப்படி கூட சக்தி உண்டா என்ன என்று வியந்தபடி அதை கவனித்து பார்த்தாள்.  அல்பத்துக்கு பவிஷு வந்தால் என்ற பழமொழி தமிழில் சொல்வதானால். 

அந்த பெருச்சாளி அணிந்திருந்த அளவுக்கு மீறிய பெரிய பூணைக்கண் கண்ணாடி- அதன் ஓரங்களில் அலங்காரமாக போலி வைர மணிகள் பதிக்கப் பட்டு இருப்பதும் அதனுடைய இயல்பான கொடூர பார்வைக்கு சற்றும் பொருந்தவில்லை என்று நினைத்தாள்.  சில அடிகள் நடப்பதும், திரும்பி ஏதோ திட்டுவதுமாக அது முன் வழி காட்டிச் சென்றது. அவர்கள் ஒரு மிகப் பெரிய , ப்ரும்மாண்டமான மரத்தடியை அடைந்தனர்.  அதன் அருகில் ஒரு குளம், சுற்றிலும் புல்தரை. சிறு சிறு வட்டங்களாக நீர் தேங்கியிருக்க, அதில் டூனா ஜாதி போன்ற சிறிய மீன்கள் துள்ளின.  நீலா திகைத்தாள். இவ்வளவு அழகான ஒரு இடத்தை தான் பார்த்ததேயில்லை – நம்பவே முடியாத மாயா ஜாலமாக இருந்தது அந்த இடம்.  சித்திரங்களில் கற்பனையாக வரையலாம்.  அந்த மரமே மிகவும் உயரமாக வானளாவி நின்றது. அந்த உயரமே மதிப்புக்குரியது என்ற தோற்றம் அளித்தது.  உள் பக்கம் திரைச் சீலைகள் வெல்வெட்டால் ஆனது.  உள்ளே நுழைய நுழைய அவள் ஆர்வம் அதிகரித்தது. ஒரே மரத்தில் இவ்வளவு வகை பூக்கள், பழங்கள்,  இவை உண்மையானது தானா என்ற ஐயம் எழுந்தது.  மாயமா, மந்திரமா, செப்பிடு வித்தையா (மாஜிக்) –  இலவங்கபட்டை (cinnamon), வாசனையா, பெர்ரி பழ வாசனையா மற்றொரு வாசனை பெயர் தெரியவில்லை எல்லாம் சேர்ந்து ஆஹா – என்று சொல்ல வைத்தது – சுகமான ஒரு அனுபவம். இது போல அனுபவம் குளிர் நாளில் மத்யான மிதமான வெய்யிலில் அமர்ந்து நல்ல புத்தகத்தை படிக்கும் பொழுது மட்டுமே கிடைக்கும்.  கிளைகள் எல்லாம் மாடிப் படிகள். ரோஜா செடியின் கிளைகள் அந்த படிகளின் ஊடாகச்  சென்றன. வெளிச்சம் வர விளக்குகளும், ஜன்னல்களும் இனிய ஓசை எழுப்பும்  பல வண்ணங்களிலான  முத்தோ, பாறைகல்லோ போன்ற மணிகள் கோர்த்து செய்து தொங்க விட்ட wind chimes- காற்றில் ஆடும் மணி – அபூர்வமான பள பளக்கும் பாறை தகடுகள் கொண்டு பால்கனிகள் அலங்கரிக்கப்பட்டிருந்தன.  மிக மெல்லிய சரங்களாக  சொக்கத் தங்கம்  மரத்தின் அடி பாகத்திலும் கிளைகளிலும் கண்ணைப் பறித்தன.  அந்த குளத்தின் நடுவில் ஒரு தடுப்பு –  பாறை ஒன்று குளத்தை இரு பகுதிகளாக பிரித்தது.  அபலோன் ஷெல் – என்ற கடல் வாழ் ஜீவன்களின் கூடு – பல வண்ணங்களிலும் இருக்கும் – அவைகள் அந்த  பாறையில் விரவிக் கிடந்தன. வெளிச்சத்தில் அவை பளீரென்ற ஓளிச் சிதறலை வெளியிட்டன. அவைகள் இயல்பாக அமையாமல் செயற்கையாக ஒட்டப்பட்டிருந்தால் மெச்சத்தகுந்த ஒழுங்கில் கட்டமைக்கப் பாட்டிருந்தன என்பதில் ஐயமில்லை-  நீலா வியந்தபடியே பார்த்திருந்தாள். எதற்கு என்பது இன்னமும் புரியவில்லை.  பின் கவனித்துப் பார்த்து ஒரு பக்கம் உப்புத் தண்ணீர். மறு பக்கம் சுத்தமான தண்ணீர்.  மீன்கள் துள்ளி துள்ளி சுழன்று செல்லும் சமயம் கோலம் போட்டது போல நீரில் அலைகள் வட்டமடித்தன.  இடைவிடாது சிறு நீர் வீழ்ச்சிகள் தண்ணீர் அளவை குறையாமல் கட்டுப்படுத்தின    ஆங்காங்கு ஃபௌன்டன் கள்  திடீர் தீடீரென்று வெடித்தது போல – நடந்தபடியே நீலா புல்வெளியை அடைந்தாள். இது மற்றொரு மாய உலகம்.  எல்லா விதமான காட்டு மலர்கள் பூத்திருக்க, பெர்ரி செடிகள் அடர்ந்து கிடந்தன.  சிறு விலங்குகள் அதனிடையில் ஓடி விளையாடின. பூக்களை மட்டுமே நாள் பூரா பார்த்துக் கொண்டிருக்கலாம்.  அந்த பகுதியே பூக்களின், சிவப்பு, மஞ்சள், நீலம், ஊதா என்று எண்ணற்ற வண்ணங்களில் ஜொலித்தது.   அதைச் சுற்றிலும் வேலி போட்டது போல உயரமான  என்றும் பசுமையான  மரங்கள்.  மெல்லிய பூக்களுடன் கொடிகள் அதைச் சுற்றி படர்ந்து மேலேறிக் கொண்டிருந்தன. ஒரு ஓக் மரத்தை சுற்றிலும், அருகே கிடந்த மணல் மேடு எதையும் விடவில்லை அந்த காட்டுக் கொடிகள்.  என்ன வாசனை- அந்த புல் வெளியே மணத்தது, தேவதாருவா, தாழம்பூவா, லாவெண்டெர் – மருகு , போன்ற அவளுக்குத் தெரிந்த எல்லா பூக்கள் வாசனையும் கலந்து வந்தது.  எலுமிச்சையின் புளிப்பு கலந்த வாசனையையும் கண்டு கொண்டாள். எப்படி அனைத்தும் சேர்ந்து மூக்கை துளைக்கின்றன, நீலாவுக்கு அதிசயமாக இருந்தது, சுவர்கம் என்பது இது தானோ.. 

Abalone shells are flat shells that have few whorls. (A whorl is one complete turn of the tube of the gastropod shell around its imaginary axis). The Abalone is a gastropod. (A gastropod is a mollusk with head-bearing tentacles and eyes, a foot, and a one-piece shell(sometimes no shell).

மிகைலா பெருச்சாளியை தொடர நீலாவுக்கு பிடிக்கவேயில்லை.  வேறு வழியில்லாமல் இங்கு வந்து மாட்டிக்கொண்டோமே என்ற வருத்தத்துடனே நடந்தாள்.  அந்த தன் ஆஃபீஸ் அறைக்கு அழைத்துசென்றது.  நல்ல செர்ரி வுட் டெஸ்க் – அதற்கு ஒரு நாற்காலி ,  பின்னால் குஷன் வைத்து தைக்கப் பட்டு – பல்லைக் கடித்தாள் நீலா, இவள் பெருமையை, பதவியை காட்டத் தான் கூட்டி வந்தாளா?  மிகைலா பெரிய லெதர் சுழல் நாற்காலியில் அமர்ந்தாள்.  ஒரு சாதாரண மர நாற்காலியைக் காட்டி அதில் உட்கார் என்று கை காட்டினாள். 

முதலில், buddy, உனக்குத் தெரியுமா? இந்த Bindarian Thistle ( ஒரு தாவரம்- அதுவே உணவாகும்)  திடுமென குறைந்து விட்டது என்பது?

பிண்டரைன் திசில் – அந்த விசித்திரமான ஊதா நிற பட்டர் கப் – போன்றது- உங்களுக்கு மாமிச உணவை சாப்பிட வேண்டும் என்று தோன்றினால் அதை எடுத்துக் கொள்வீர்கள் …

யா, யா – அதே தான். ஊதா நிறம்- நீ என்ன சொன்னாய்? பட்டர் கப் என்றா? 

அதே தான். நான் சொன்னேன்.  நீங்கள் எல்லோரும் அதை பட்டர் கப் என்று தானே குறிப்பிடுகிறீர்கள்.

மிகல்ய பாதியில் நிறுத்தினாள். அவள் கண்கள் டின்னர் ப்ளேட் அளவுக்கு விரிந்தது.  அவள் திறந்த வாய் ,மூடாமல் என்ன யோசிக்கிறாள் என்பது நீலாவுக்கு புரியவில்லை.  ஏதோ டினௌசர் எதிரில் வந்து  எதையோ உமிழ்ந்து விட்டது போல … 

எவ்வளவு நேரம் ? அலுப்பாக இருந்தது. வெளியில் பார்த்தாள். ஜன்னல் வழியாக ஒரு நடன நிகழ்ச்சி, அதில் ஒரு டினௌஸர்-  அதுவும் நடனம் ஆடிக் கொண்டிருந்தது.  நீலா மனதுக்குள்,  “ஓ, என் உவமையை திரும்ப வாங்கிக் கொள்கிறேன் – என்று சொல்லிக் கொண்டாள்.”

மிகைலா, என்ன இது?  – இது என்ன பெரிய விஷயம் – நானும் பார்த்தேன் உங்கள் திசில் என்ற தாவரத்தை, அது என்ன தலை போகிற விஷயம்? 

“நீலா “ – மிகைலா ஏதோ சூடான ஒன்றை வாயில் போட்டுக் கொண்டு விழுங்க முடியாமல் தவிப்பது போல முகத்தை வைத்துக் கொண்டு, நீங்கள் அந்த விலங்கை எதுவும் செய்து விட வில்லையே, என்றாள்.

இல்லையே- ஏன் எதற்காக நான் உங்கள் இனத்தை துன்புறுத்தப் போகிறேன்- மிக அருகில் ஐந்து மீட்டர் தூரத்தில் இருந்தாலும் கூட எனக்கு என்ன வந்தது? 

சட்டென்று நீலா கவனித்தாள் அவள் ஒரு மீட்டர் தூர இடைவெளியில் அந்த பெருச்சாளியுடன் இருக்கிறாள்.

அதே சமயம், எட்வர்ட் கழுகு அங்கு வந்து மூக்கை நீட்டியது.  நீலாவை பார்த்ததும் கிறீச்சிட்டுக் கொண்டு தலையை இழுத்துக் கொண்டது.  

“எட், பயப்படாதே, இந்த ஹுயூமன் விலங்குகளை துன்புறுத்துவது இல்லை “

எட் என்ற கழுகு, திரும்ப கூக்குரலிட திறந்த வாயை மூடிக் கொண்டு, மிகைலாவை பார்த்தது. 

“இரு இரு, என்ன விஷயம்?”

எட்வர்ட் நீலாவை நம்பிக்கையில்லாமல் நோக்கியது. அவள் எதோ செவ்வாய் கிரகத்தை சேர்ந்தவள் போல

“ம்..  இவள் இறைச்சி சாப்பிடுபவள் இல்லையா?   நான் சொன்னேனே – மனிதர்கள் அனேகமாக எல்லோருமே அனாவசியமாக விலங்குகளை வருத்துபவர்கள். தான். மீன், மற்ற மிருகங்களை சாப்பிடாமலே வெறுப்பார்கள்.இவர்களோடு பேசிப் பயனில்லை” 

“எட், நீ சொன்னயே அனேகமாக என்று,  அது சரி.  விதி விலக்கும் உண்டு – இந்த சிறுமி அப்படி ஒரு விதி விலக்கு”.

“விதி விலக்கா?  என் கால் நகம் (my foot- கழுகானதால் என் நகம்) 

“எட்வர்ட்  பார்தொலொம்யூ ஈகிள், – கழுகே, இவள் பார்த்த திசில்  ஊதா நிறம்- இளம் பச்சை இல்லை. 

ஓ, நான் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.  

“ஹே, இவள் சொல்வதை நம்பியா?

ஆமாம், ஒரு மனித ப் பெண் சொன்னதை வைத்தா? “

“ஷ், அவள் தான் சொன்னாள். “

“நான் ஒன்றும் ஷ் க்கு அடங்க மாட்டேன்

எட், இவளை மட்டமாக நினைக்காதே. இவள் ஒன்றும் அறியாதவள் இல்லை.  விலங்குகளிடம் இவளுக்கு விரோதமும் இல்லை. கொஞ்சம் யோசி. பிடிவாதமாக நீ சொன்னதையே சாதிக்காதே. 

“மிகைலா பெருச்சாளியே, நீதான் சாதிக்கிறாய்.  மனிதர்கள் எல்லோருமே முட்டாள்கள் தான். “

இவர்கள் இருவரும் இவ்வாறு வாக்குவாதம் செய்தொண்டிருக்கையில் நீலா மிகைலாவின் டெஸ்கில் இருந்த ஒரு சிறு கிண்ணத்தில் இருந்த மிட்டாய் போல இருந்த ஒன்றை எடுத்து வாயில் போட்டுக் கோண்டாள்.  எலுமிச்சை வாசனையுடன் அது நன்றாக இருந்தது. வாயில் அது கரைந்து அடங்கிய சமயம் இவர்கள் வாக்கு வாதமும் முடிந்து இருவரும் அமைதியானார்கள். . 

“தன் பதவி தோரணையை காட்டும் விதமாக மிகைலா நீலாவை அதட்டும் குரலில் “நீ விலங்குகளை வதைக்க மாட்டாய் என்றவரை சரி. அதற்காக உன்னை அவ்வளவு சுலபமாக போக விட மாட்டோம். ரொம்பத்தான் தலை கனம் பிடித்து ஆடாதே. உட்கார்” என்றாள், ஏற்கனவே நீலா அந்த ஓட்டை நாற்காலியில் அமர்ந்து தான் இருந்தாள் என்பதை கவனிக்காமலே. 

“ஸரி, இன்னொரு தடவை கேட்கிறேன். ஏன் இந்த தட்டுபாடு வந்தது,  இது பற்றி உனக்கு என்ன தெரியும்? “

“ஓன்றும் தெரியாது”

மிகைலா தன் ஏமாற்றத்தை மறைக்க, பெரிதும் முயன்றாள்.   “ ஏன் என் இனிப்பு மிட்டாயை காலி பண்ணுகிறாய்” என்றாள். 

“நீலா பதில் சொல்லும் முன் ஐந்தாவது மிட்டாயை எடுத்து வாயில் போட்டுக் கொண்டாள். “ஏன்னு கேட்டா, எனக்கு பசிக்கிறது”

“பசிக்கிறதா? இங்கு உணவுக்கு என்ன பஞ்சம். மார்க் மஞ்ச்சீஸ் என்று ஒரு கடை, நிறைய பச்சிலைகள் கொண்டு வந்து நிரப்பியிருக்கிறான்.  எரிக் கடையில் மரப் பட்டையிலிருந்து ஒரு ஸ்வீட் பண்ணியிருக்கிறான். அதை விட இந்த பினாகா ப்லாக் பேர்ட், பெர்ரி பழங்கள் வத்திருக்கிறான்- கொஞ்சம் விஷம் கலந்திருக்கும். எங்களுக்கு பிடிக்கும். இவ்வளவு இருக்க நீ ஏன் பட்டினியாக திண்டாடுகிறாய்?”

நீலா சற்று நேரம் மிகைலாவை கூர்ந்து பார்த்தாள். அவள் தான் யார் என்பதை, அவள் நினைவு படுத்திக் கொள்ள அவகாசம் கொடுப்பது போல. –

  இதுவரை நீ சொன்னது எல்லாமே இந்த விலங்கு உலகத்தில் தான் உணவு என்று பெயர் பெறும் என்பதை. 

ஓ, நீங்கள் எண்ணெயில் பொரித்த பண்டங்கள் தானே விரும்பி சாப்பிடுவீர்கள்.   ஆனால் சர்க்கரை சேர்த்த மரப் பட்டைகள் பிடிக்காது- அப்படித்தானே, பாவம், என்ன வாழ்க்கை” ஏளனம் தெரியும் குரலில் …தொடர்ந்திருப்பாள். 

நீலா அவளுக்கு சரியான பாடம் கற்பிக்கும் விதமாக சூடாக பதில் சொல்லியிருப்பாள், எட், கழுகு வந்து விட்டது.  போனில் பேசிக் கொண்டிருந்தது.  ஏதோ நல்ல செய்தியில்லை.  பர பரப்பாக  வந்து உளறி கொட்டியது.

“திமோதி டர்ட்டிளை – காணோம்” ஆமையார் டிமோதியைக் காணவில்லை 

பகுதி- 12

இப்படித் தான் குப்பையாக வைத்திருப்பாயா ? வசிக்கும் இடம் சுத்தமாக, ஒழுங்காக இருக்க வேண்டாமா?  இந்த செய்தித் தாள்கள் துண்டு துண்டாக எதற்கு?   பையா, தானும் தன் இடமும் பெருமை தரும் படி இருக்க வேண்டும்..புரிகிறதா? 

ஜோயி விழித்தது. இந்த ஆமையை உள்ளே விட்டது தவறோ?   அந்த அலமாரி முழுவதும் ஆக்ரமித்துக் கொண்டு விட்டதே.  மேலும் காலையில் 5:00  க்கே தானும் எழுந்து ஜோயியையும் எழுப்பி, அந்த இடத்தை  துடைக்க வைக்கும். துடைத்து துடைத்து பள பளவென்று ஆகும் வரை, பின் தலையில் ஒரு புத்தக சுமையோடு அந்த சிறிய இடத்தில் சுற்றி சுற்றி வர வேண்டும்.   ஜோயி தினசரி உடற் பயிற்சி செய்து பலசாலியாக ஆக வேண்டுமாம். 

“என்ன நடந்தது, ஏன் என்று தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், நீ அனைத்தையும் திட்ட வட்டமாக  செய்ய கற்றுக் கொள்ள வேண்டும்” 

நாக்கு நுனி வரை வந்து விட்ட ஒரு தகவலை, ஜோயி கஷ்டப்பட்டு அடக்கி கொண்டது. எப்பவோ ஒரு முறை கச முசாவென்ற சூழ்நிலை தான் மிகச் சிறந்த இடம் என்று தன் இருப்பிடம் குப்பை கூளமாக இருந்த பொழுது சொல்லி இருந்தது  

“எஸ் ஸார், இதோ இந்த செய்தி தாள்களை தேதி வாராக அடுக்கியிருக்கிறேன், ஸார். “. 

“அடுக்கி வைத்திருக்கிறாயா, அப்படித் தெரியவில்லையே”

 ஜோயீ, அந்த பெண் மாலாவோ என்னவோ, அவளை பெற்றோர்கள் இப்படித்தான் ஏதாவது சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். பாவம் “  என்று நினைத்து பரிதாபப் பட்ட து. 

ஜோயி சற்று நிதானமாக யோசிக்க விரும்பியது. என்ன நடக்கிறது இந்த விலங்குலகில்? இந்த ஆசிரியர் ஆமை இங்கு வந்து விட்டது. அந்த பெண் அதற்கு பதில் காணாமல் போயிருக்கிறாள்.  அவள் அங்கு என்ன செய்கிறாளோ? இது இங்கே சுத்தம் செய்கிறதாம்.”

“மிஸ்டர்   T,  நான் பார்த்துக் கொள்கிறேன், அடுக்கி வைப்பதை..”

“ஓ, நீ செய்கிறாயா- நல்லது.  இந்தா சாப்பிடு “என்று திசில் துண்டை நீட்டியது.

ஜோயி அரை மனதோடு அந்த திசில்  துண்டை  வாயில் போட்டுக் கொண்டது.  சாதாரணமாக விரும்பி சாப்பிடும் பொருள்.  இன்று முதல் தடவையாக கடனே என்று விழுங்கியது.  என்ன நடக்கும், நடக்கிறது. இந்த பெண் அங்கு இருக்கிறாள். எந்த நிமிஷமும் திரும்பி வரலாம். அவளும் வரத்தான் விரும்புவாள். அந்த கட்டுரை என்னவாகும்? மனித குலத்தின் அவசியம்?  ஏன் அவர்கள் இருப்பதை அங்கீகரிக்க வேண்டும்? அவர்களுக்கு மூளை என்ற ஒன்று இருக்கிறதா? 

ஆனால், இந்த மனித குலம் இல்லாவிட்டால், இந்த பூமியில்… “ஓ ஓநாய் நண்பனே! “ 

அந்த பூணை வந்திருக்கிறது. அதன் கையில் கட்டு செய்தி தாள்கள். “ சில புதிய தாள்கள், அதனால், 

“இதோ வருகிறேன், மேட்” 

பூணை அருகில் வந்ததும் டாக் ஃபுட் – அதன் கையில் திணித்தான் – 

ஜோயி, இந்த தாள்களில் ஏதோ ஒரு விஷயம் முக்கியமானதாக உள்ளது போலும்.  முழுவதும் படி. வரிசையாக அடுக்கி வைத்துக் கொண்டு படி.  

ஜோயி அந்த கட்டை அள்ளி எடுத்துக் கொண்டு தன் அலமாரிக்கு வந்து அமர்ந்து கொண்டு புரட்டி பார்த்தது.  வசதியாக ஒரு இடத்தில் படிக்க அரம்பித்தது.  முதல் கட்டுரை- ஏன் ஃப்லெமிங்கொ ரோஜா நிறத்தில் இருக்கிறாள்?  ஃபியோனோ ஃப்லெமிங்கொ வின் சிறந்த நகைகள்.  அவளுடைய கூண்டிற்கு வரும்படி ஒரு அழைப்பிதழ்.  அங்கு வந்தால் ஃப்லெமிங்கோவின் உயர்தரமான உடல் அழகையும், அவள் நடப்பதையும் பார்த்து மகிழலாம். அந்த இடத்தின் வரை படம். அட இது விலங்குலகின் வரை படம். அதன் பின்னால் ஒரு குறிப்பு தனியாக – ஜோயி ஆச்சர்யத்தை அடக்க மாட்டாமல் படிக்க ஆரம்பித்த து. 

“ ஜோயி, நீ இதை படிக்க நேரிட்டால், நானும் மிகைலாவும் சேர்ந்து  இதை அனுப்பியுள்ளோம்.  நீ இருக்க் கூடும் என்று தோன்றிய இடங்களில் இதை உன் கண்ணில் படும் படி கொண்டு சேர்த்துள்ளோம். மந்திர ஸ்படிகம் உதவியால் என்று சொல்லத் தேவையில்லை.  நீ இதை கையில் வைத்துக் கொண்டிருக்கிறாய் என்றால், மற்ற செய்தி தாள்கள் இதற்குள் அழிந்திருக்கும்.  அது கிடக்கட்டும். அந்த மனித பெண் இங்கிருக்கிறாள்.  ப்ரொஃபெசொர் டீ யை காணவில்லை.  அங்கு நீ பார்த்தாயா? உனக்கு சிறு பை நிறைய திசில் உணவை அனுப்பியிருக்கிறோம்.  சில முக்கியமான செய்திகள்: அந்த மந்திர ஸ்படிகம் நம்பகமாக இல்லை. திசில் கொஞ்சம் குறைந்து விட் ட தால்  தட்டுபாடு ஏற்பட்டது வாஸ்தவம்.  சில மாதங்கள் தான் தாக்குப் பிடிக்க முடியும். பின்னால் வரை படம் அனுப்பி இருக்கிறோம். தற்போதைய திசில் கையிருப்பை அது சொல்லும்.  அங்கு நீ நலமா? மனிதர்களால் உனக்கு சிரமம்  எதுவுமில்லை என்று நம்புகிறோம்.  இங்குள்ள நிலவரம் பற்றி தொடர்ந்து செய்திகள் அனுப்புகிறோம்.

எட்

ஜோயி அதை கடைசி முறையாக பலமாக படித்தது.  அதன் பக்கங்களை புரட்டிப் பார்க்க பிண்டரியன் திசில்  வைக்கப் பட்டிருந்ததை கண்டு யோசித்த து.  திசில் தட்டுப்பாடு மாமிச உணவை நம்பியிருக்கும் விலங்குகளுக்கு ஆபத்து.  வேறு வழியில்லாமல் அவை பழைய முறையில் உணவைத் தேடும். பழைய முறை என்பது ..வேட்டையாடுதல்.  உயிர் பிழைத்திருக்க உணவு வேண்டும் . அதன் பொருட்டு வேட்டையாடுதல் ஜோயிக்கும் சம்மதமே. ஆனால் வெறும் விளையாட்டுக்காக, அல்லது தன் பலத்தை க் காட்டுவதற்காக வேட்டையாடுதல் தான் அதற்கு சம்மதமில்லை. அதை நிர்ணயிப்பதும் நடைமுறைப் படுத்தலும் மிகவும் சிரமம்.  அதை விட விலங்குலகில் வேட்டையாடுவது இல்லை என்ற இந்த தற்போதைய சட்ட திட்டங்களே தான் தொடரவேண்டும். மிகைலா இந்த பிரச்னை பற்றி ஒரு சொற்பொழிவு செய்தாள்.  ஜோயி அதை  நினைவு படுத்திக் கொண்டது. 

மிகைலா ஒரு  சிறிய மேடையில் நின்றபடி மைக்கை அட்ஜஸ்ட் செய்து கொண்டாள்.

“ நாம் எதற்காக இங்கு கூடியிருக்கிறோம்? நான் ஏதோ உபதேசங்கள் செய்யப் போவதில்லை. ஆன்மீக சொற்பொழிவும் இல்லை.  நாம் ஏன் இந்த விலங்குலகில் வாழ்கிறோம்?  ஏனெனில் மனிதர்கள் நம்மை தரக் குறைவாக நடத்தினார்கள்.  மனித உலகில் மறைந்து விட்டது, அதாவது அந்த இனமே இல்லை என்று சொல்லப்படும் விலங்குகள் இங்கு வந்தன.  அவை ஏன் வந்தன தெரியுமா? மனிதர்கள் அவைகளை துன்புறுத்தினர்,  மட்டமாக நினைத்து ஏவல் செய்தனர், அதனால் பாதுகாப்பு கருதி இங்கு வந்தன.  தற்சமயம், வேட்டையாடுதல் என்பது  பெரிய பிரச்னை இல்லை. ஒரு சிங்கம் வேட்டையாடும். ஒரு பூமா வேட்டையாடும் (பூமா- புள்ளியுள்ள தோலுடன், பூணை இனத்தைச் சேர்ந்த பெரிய உருவமுடைய காட்டுப் பூணை அல்லது புலி.) மனிதர்கள் ஏன் வேட்டையடக் கூடாது.  மனிதர்கள் பல வகையினர். உணவிற்காக இறைச்சி தான் என்று இருப்பவர்கள் வேட்டையாடட்டும்.  ஆனால் நம் விலங்குகளைப் பிடித்துக் கொண்டு போய் செல்லப் பிராணிகள், வளர்ப்பு மிருகங்கள் என்ற பெயரில் கட்டிப் போட்டு துன்புறுத்துகிறார்கள்.  அதன் உடலில் பஞ்சு அடைத்து மிருக காட்சி சாலை என்று வைப்பது, தோலை தங்களுக்கு உடையாக செய்து கொள்வது – இவை வெறுக்கத் தக்கவை.   மீன் பிடித்தல் ஒரு போட்டிக்காக.  அது தவிர, வேட்டையாடுதலை ஒரு விளையாட்டாக சொல்வது அதை விட மோசம்.  அந்த விளையாட்டுக்கு அவர்கள் பயன்படுத்துவதும் குதிரைகள், மற்றும் சில விலங்குகளே. இது என்ன நியாயம்?  விலங்குகளை வளர்ப்பது, அவை நன்கு கொழுத்த பின் வெட்டி உண்பதற்காக, என்பதை நாங்கள் கண்டிக்கிறோம்.  மிகவும் கொடூரமானது. அருவருப்பானது. இன்னும் நிறைய சொல்லலாம். ஆனால் நமக்கு நேரம் இல்லை.  உணவிற்காக வேட்டையாடுவது சரி.  ஆனால், விலங்குகளை தரக் குறைவாக நடத்துவது, வெறும் பொழுது போக்குக்காக அவைகளை கொல்வது, அதை விட மோசமானது, இவர்களின் மீன் பிடிக்கும் வலைகளில் தப்பித் தவறி மாட்டிக் கொண்டு விட்ட sharks போன்றவைகளை அங்கேயே வெட்டிப் போடுவது போன்ற செயல்களை கண்டிக்கிறோம். அப்படியானால், இந்த விலங்குலகில் நாம் ஏன் வேட்டையாடுவதை அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது அல்லவா?  மனிதனைத் தவிர மிருகங்கள், தங்கள் உணவுக்காக மட்டுமே வேட்டையாடுகின்றன.   அது தவிர நாம் சில பழைய வழக்கங்களையும்  விட்டு விட்டோம். யாரது? ஏர்கோ வா, என்ன கேட்டாய்? ஒகே – நம் உணவிற்காக வேறு வழி கிடைத்தால் நாம் நம் இனத்து மிருகங்களையே கொல்வது என்ற கொடூரமான செயலை விட்டு விடுவோம். வேறு மாற்று என்ன சொல்வாயா?  மில்லி, இந்த கேள்வி கேட்டதற்கு நன்றி, “

பலமான கைதட்டல்கள்.  சில நிமிஷங்கள் தொடர்ந்தன.  

பகுதி- 13

மிகைலா பெருச்சாளிக்கு நீலாவிடம் கேட்க நிறைய விஷயம் இருந்தது. நேர்காணல் என்ற பெயரில் அழைத்த வண்ணம் இருந்தாள். நீலா அதை நேர்காணல் என்பதில்லை – அவளைப் பொறுத்தவரை அது ஒரு படுத்தல். 

“நாம் ஜோயிக்கும், திமோதிக்கும் ஒரு செய்தி அனுப்பினோம்”

“செய்தி அனுப்ப முடிந்ததா?  எப்படி? செய்தி அனுப்ப முடிந்தால் நீங்களே போயிருக்கலாமே. தவிர, யார் அந்த திமோதி ?

மிகைலா விழிகளை சுழட்டினாள். 

“இரண்டாவது கேள்விக்கு பதில் முதலில்.  திமோதி என்பவர் ஒரு டர்டில் – ஆமை.  மாணவர்களுக்கு பாடம் சொல்லித் தருபவர். கொஞ்சம் அலட்டல்.  நாங்கள் செய்தி அனுப்பியது ஒரு தேடி கண்டு பிடிக்கும் கருவி மூலமாக. (tracking device.)  ஜோயியோ, திமோதியோ கையில் எடுத்தவுடன், மற்ற இடங்களில் அது இயங்காது. மந்திர ஸ்படிகம் மூலமாகத் தான் அனுப்பினோம். அந்த வகையில் மந்திர ஸ்படிகம் உதவி செய்தது. 

“ஓ – கூல்”

“இல்லை. கூல் இல்லை. அதன் மூலம் ஒரு ப்ராப்ளம் வந்து விட்டது.   இந்த பிண்டைரன் திசில் காலியாகிக் கொண்டிருக்கிறது. அதனால் பாதிக்கப் படுபவர்கள் இறைச்சி சாப்பிடுபவர்கள் தான்.  நீ சும்மா சுத்தி சரித்திர ஏடுகளை புரட்டிப் பார்க்கிறேன் என்று நேரத்தை வீணாக்காமல், இருந்தால், நான் சொல்கிறேன், என்ன நடக்கும் என்று.  உணவு இல்லையெனில் அவை என்ன செய்யும். வேட்டையாடும்.  இந்த Bindarian Thistle க்கு மாற்றும் இல்லை.  மற்றொரு மந்திர ஸ்படிகம் இந்த விலங்குலகில் தற்சமயம் இல்லை. நீ அந்த நாலாவது மணல் மேட்டில் ஏறினாய். அதன் பொருள் நீ நிலத்தை சேர்ந்தவள்.  நிலம், கடல்,காற்று…நீ பூமியில் இருக்க வேண்டியவள் தான்.  ஆனால் இப்பொழுது நீ கலப்படமாகி விட்டாய்.  இருக்கட்டும், இப்பொழுதுள்ள பிரச்னைக்கு தீர்வு என்ன என்று பார்ப்போம்.  இருப்பு குறையாமல் இருக்க வேண்டும். தேவை அதிகமாகி, இருப்பு குறைந்தால் வேட்டை தான் வழி. நம்மை நாமே அடித்துக் grand elders பிடி கொடுக்காமல், நீலா விழித்தாள். சுற்றி வளைத்து ஒரு பதிலைச் சொன்னாள்.

“ஓஹோ,ஓஹோ” 

“நீ ஒன்றும் மர மண்டை இல்லை, நான் சொல்வதை புரிந்து கொள்ளாமல் போக – உன்னால் முடியும், ஏதாவது செய், அல்லது கிளம்பி போ” 

“நான் ஏன் உதவி செய்ய வேண்டும் எனக்கு என்ன செய்தீர்கள்? அந்த மந்திர ஸ்படிகம் மூலம் நான் தப்பித்து போக முடியும்.  நீங்கள் என்னிடம் இவ்வளவு பாரபக்ஷமாக நடந்து கொள்வதற்கும், அதட்டுவதற்கும் நான் பதிலுக்கு உதவி செய்ய வேண்டுமா” ?. 

மிகைலா நீலாவை கூர்ந்து பார்த்தாள். – ஒரே வார்த்தை “One word. Payment”

 Payment -?  யார், யாருக்கு? என்ன பொருள்? 

நீலா கேள் – நாங்கள் ஏன் இங்கு வந்தோம் என்று யோசித்திருக்கிறாயா?  இங்குள்ள ஒவ்வொரு விலங்கும் ஏதோ வகையில் அடிமை படுத்தப் பட்டு, தவறாக நடத்தப் பட்டவர்களே.  அவர்களை துன்புறுத்தி வருந்தச் செய்திருக்கிறார்கள்.  வாழ்க்கைத் தரம் அங்குள்ளதை விட இங்கு நலமாக உள்ளது.  நீ நினைப்பது புரிகிறது.  ஃபியோனா – அது ஒரு விதி விலக்கு.   அவளை நன்றாகத் தான் கவனித்து பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள்.அவளுக்கு அது போதவில்லை.  பேராசை.  அதுவல்ல நாம் இப்பொழுது பேசப் போவது..  நான் சொல்ல வந்தது  மனிதர்கள் இந்த விலங்குகளிடம் மிகக் கொடூரமாக நடந்து கொண்டனர் என்பதே.  தூசி தும்பு போல் அலட்சியமாக நினைத்தனர்.  உங்கள் ஊரில் கற்காலம் என்றும் அக்காலத்தில் நாகரீகம் வளராத அந்த காலத்தில் மனிதர்கள் விலங்குகளை அடித்துக் கொன்று சாப்பிட்டார்கள் என்றும் சொல்வீர்கள். அந்த காலத்துக்கு அது சரி.  அவர்கள் உணவு இரண்டும் கலந்தது. பயிர் பச்சைகளைக் கண்டு பிடிக்கும் வரை எதுவானாலும் பசி அடங்கினால் சரி என்ற கொள்கை. அதை குற்றம் சொல்லவில்லை. காரணமில்லாமல் விலங்குகளைக் கொல்வது என்ன நியாயம்?  வீட்டில் வளர்ப்பது ஒரு நாள் அதைக் கொன்று சாப்பிட என்பது சரியல்ல.  வேட்டையாடி மிருகங்களைக் கொல்வது அதன் தோல் மட்டுமாக உள்ளே எதையோ வைத்து அடைத்து, இது தான் அந்த மிருகம் என்று சொல்வது உங்களுக்கு  அலங்காரம்.- எங்களுக்கு அவமானம்.   அதை விட மோசம் வேட்டையை ஒரு விளையாட்டாக, போட்டியாக செய்வது.  இதைத் தடுப்பது அவ்வளவு சுலபமல்ல. உன்னால் முடிந்தால் அந்த அநியாயத்தை தட்டிக் கேள்.  இது உனக்கு ஒரு சவால். உனக்கு கிடைத்த மிகப் பெரிய சந்தர்பம். இந்த விலங்குலகில் ஒரு மனித வாடையும் வர விட மாட்டோம்.  ஏதாவது மிகப் பெரிய காரண காரியத்திற்காக அன்றி… உனக்கு கிடைத்துள்ள இந்த நல்ல …

அவளை  இடை மறித்து தடுத்து, நீலா பேசினாள். “ஓகே, ஓகே,! கொள்கையளவில் நான்  இதற்கு சம்மதிப்பதாக வைத்துக் கொள்வோம்.  உலகில் – இரண்டு உலகங்களில் நான் என்ன செய்ய வேண்டும், கொள்கையளவில்? 

மிகைலா மெல்ல புன்னகைக்க முயன்றாள்.  சற்றே நட்புடன் மென்மையாக பேசினாள்.

“குழந்தாய்,  இப்பொழுது  தெளிவாக புரிந்ததா ?  அந்த ப்ரஃபஸியை அதிகம் நம்பவில்லை. ஆனால் மாயக்கல்லை அப்படி விட முடியாது.  எங்கள் லைப்ரரிகளைப் பார்த்தாய் அல்லவா?  எங்களுடைய சரித்திர புகழ் வாய்ந்த அலுவலகங்கள்.   அந்த கட்டிடங்களில் உள்ள அனைத்தும் இந்த மந்திர ஸ்படிகம் பற்றி பேசுகின்றன. ஏன் அந்தக் கல் இப்படி தவறாக நடந்து கொள்கிறது, எப்படி என்பதை கண்டுபிடிக்க அதன் சரித்திரம் உனக்குத் தெரிய வேண்டும். “

ஆமாம். அது உதவக் கூடும். நான் அருமணிகளைப் பற்றி அறிந்தவள் இல்லை. சில அடிப்படை தத்துவங்களை மட்டும் அறிவேன்.  

உண்மையில் இந்த செய்தி ஆர்வமூட்டுகிறது. “நான் முயற்ச்சிக்கிறேன்.  நீங்களும் சில விஷயங்களை விளக்கிச் சொல்ல வேண்டும்.  நாலாவது மணல் குன்று என்பது பற்றி குறிப்பிட்டீர்களே- அது என்ன? 

மிகைலா மெல்ல நகைத்தாள். ( நகைத்தாளா, அல்லது அரை மனதுடன் புன்னகைத்தாளா? ) பாதி கூட இல்லை கால் பங்கு ? அதுவும் இல்லை ஓரளவு புன்னகைக்க முயன்றது தானா)

“அதுவா, பெரிய கதை.  இந்த விலங்குலகம் –”

“விலங்குலகமா? நிஜமாகத் தானா?  என்ன ஒரு நூறு ஆண்டுகள் ஆகியிருக்குமா , உங்களுடைய இந்த உலகம், இதன் நடை முறைகள்.. விலங்குலகம் என்று சொல்வது சற்று அதிகம் ..” நீலா இடை மறித்தாள். பல வருஷங்களாக நீங்கள் இங்கு முயன்று சிருஷ்டி செய்தீர்கள் என்பது நம்ப முடியவில்லை.  நாங்கள் மனிதர்களும் சில சமயம் அவ்வளவு நாகரீகம் இல்லாத மக்களிடமிருந்து விலகி வந்திருக்கிறோம். அதை அவர்களின் அதிகார வரம்பு என்போம்.  அதாவது ஒரு குறிப்பிட எல்லை வரை அவர்கள் ஆட்சி செல்லும். நீங்கள் அதை உலகம் என்று சொல்கிறீர்கள்.  வார்த்தை தான் – என்றாலும் நீங்களும் விலங்குகளின் இருப்பிடம், அதிகாரத்தின் எல்லை எனலாம். – அல்லது உங்கள் மொழியில் வேறு ஏதாவது..”

“மகளே, நீட்டி முழக்கி விலங்குகளில் உலகம் என்று சொல்வது அதிகமாகத் தான் தெரிகிறது. ஆனால் நான் இங்கே சொல்ல விரும்புவது ஒரு கதை. ஷ்.. குறுக்கிடாமல் கேள்.  இந்த விலங்குலகத்திற்கு நான்கு எல்லைகள்.  ஒவ்வொன்றும் ஒரு விதமான விலங்கு வகைக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. நிலம், நீர் அல்லது காற்று அல்லது வானம்.   ஒரு குளம் இரண்டாக பிரிந்து , ஒரு பக்கம் உப்புத் தண்ணீர், ஒரு பக்கம் சுத்தமான தண்ணீர் என்று – அதனை நடுவில் பிரிக்கும் மணல் குன்று அது தான் நீர் பௌல்டர் – Water boulder – நீ அந்த பெரிய மரத்திற்கு வந்த சமயம் பார்த்தாயே-  சில மீன்கள் மற்றும் நீர் வாழ் உயிரினங்கள் உப்புத் தண்ணீரிலும், சில சுத்தமான நீரிலும் வாழும். அதனால் தான் அந்த இடையில் உள்ள நீர் மணல் குன்று இருபக்கமும் நீர் வாழ் உயிரினங்கள், வசதியாக தங்கள் இயல்புக்கு ஏற்ற பகுதியில் நிம்மதியாக வாழ வகை செய்து தருகிறது. 

அடுத்து காற்று..

“போனை எடுத்துக் கொள். இந்த மணல் குன்று சிறப்புத் தன்மை கொண்டதா இல்லையா என்பதை சோதித்து பார். “நீலா, உங்களுக்கு முகத்தின் இரு புறமும் வசதியாக இரு உறுப்புகள் உள்ளனவே, காதுகள் என்று, அது மிக விசேஷமான உறுப்பு.  அதை வைத்து என்ன செய்கிறீர்கள். நீங்கள் கேட்கிறீர்கள்.  அதன் எல்லை மிக விரிவானது. ஒரு சிறு கொசுவின் ரீங்காரம் கூட கேட்கும் அளவு அதிசயமான ஒரு ஏற்பாடு.  ஆயினும் நீ கேட்டது நல்ல கேள்வி.  இந்த சிறப்புத் தன்மையுடைய குன்றுகளில் ஒரு சின்னம்- அதன் தற்போதைய தலைவருடைய உருவில் இருக்கும் – மூவரில் ஒருவர். (grand elders)  இந்த காற்று அல்லது வானம் என்பதன் மணல் குன்று, பறவைகளுக்கானது.  மூன்றாவது நிலம்- இதற்கான மணல் குன்று அந்த புல்வெளியில் உள்ளது.   நான்காவது அந்த கோடியில் உள்ளது. அது விலங்குகளுக்கானது.  அது சாதாரணமானது.  பெரிய ஸ்லாப் – தரை போன்ற பாறைத் துண்டு.  ஆனால் ஃப்லெமிங்கோ நிகழ்ச்சிக்குப்  பிறகு அதன் வீர்யம் குறைந்து விட்டது.  ஏன் என்பது புரியவில்லை. ஒவ்வாமை – அதில் தான் நீ மாட்டிக் கொண்டாய், சரியா?”

“யா “

“ம்ம்  ,, இது தான் நாலாவது மணற் குன்றின் கதை.  உனக்காகவே அது தோன்றியதோ எனும் படி இருக்கிறது, எனக்கும் தெரியவில்லை.  மிகைலா மேலும் சொன்னாள். “நல்லவேளையாக உனக்கு பொழுது போக ஒரு லைப்ரரி உள்ளது. வா, நானும் வருகிறேன்”

அந்த சிறிய உருவம் உடைய பெருச்சாளி, நாற்காலியிலிருந்து இறங்கி வாசற்கதவை நோக்கி நடந்தது. 

“ஏன் அங்கேயே நிற்கிறாய், வா” 

“நீலா ஏதோ யோசிப்பவள் போல், சற்று கோபம் முகத்தில் தெரிய அவள் அருகில் வந்தாள்”  இன்னும் சில கேள்விகள்”

“யா யா – என்ன கேள்வியானாலும் விடை உனக்கு அந்த லைப்ரரியில் கிடைக்கும்.  நானென்ன  செய்தி அறிவிப்பாளரா”

மிகைலா நீலாவை அழைத்துக் கொண்டு அந்த பெரிய மரத்திலிருந்து வெளியே சென்றாள். 

நீலா திரும்பி அந்த பெரிய மரத்தைப் பார்த்தாள். ஏனோ, இப்பொழுது அது பிரமிப்பாக இல்லை. 

பகுதி-14

ஜோயி தன் கையிலிருந்த வரை படத்தைப் பார்த்து பெருமூச்சு விட்டது.  ரொம்ப மோசம். திரும்ப வரை படத்தைப் பர்த்து, மோசம், மோசம் என்றது.  திரும்பத் திரும்ப இது நல்லதல்ல, என்று சொல்லியபடி அந்த வரை படத்தை பார்ப்பதும், இப்படியாயிற்றே என்று வருந்துவதுமாக இருந்த து.  அப்படி என்ன நடந்து விட்டது.   Bindarian Thistle செடிகள் வாடி விட்டன.  சேமிப்பு கிடங்குகளில் இருப்பு குறைந்து கொண்டே வருகிறது. போதாத குறைக்கு இந்த மனிதர்கள், வீடுகளில் வளர்ப்பு மிருகங்களுக்காக zoos என்ற இடங்களுக்கு படையெடுக்கிறார்களாம்.  இதற்காக தனியாக zoos – அக்கிரமம்.  ஏதோ கைவினைப் பொருட்களைப் போல விலங்குகளை விற்பார்களோ . இதற்கு ஏன் நம்மவர்கள் ஒத்துக் கொள்ள வேண்டும்.

பேச்சுக் குரல் கேட்டது.  வீட்டில் எல்லோருமாக ஃப்லெமிங்கோ வை பார்த்து விட்டு வந்திருக்கிறார்கள். ஆ, இது இன்னும் அக்கிரமம். அக்கிரமம் என்ற வார்த்தையை விட அதிக அளவில் அக்கிரமம்.  

“மிஸ்டர் டிம், எழுந்திருங்கள். ஸார்”

“திமோதி ஒரு கண்ணை மட்டும் டிறந்து பார்த்தார். என்ன விஷயம், மகனே”

“ஸார், அவர்கள் நம்மையும் ஃபியோனோ ஃப்லெமிங்கொ வை பார்க்க அழைத்துப் போகப் போகிறார்களாம்”

“திமோதியின் தூக்க கலக்கம் போய் விட, இரு கண்களையும் அகல விரித்து, “என்ன” என்றது.

இந்த காலத்து இளைஞர்கள் பேசுவதே இப்படித்தான். ஓ, ஆமாம், அதற்கென்ன? மெதுவாக ஜோயி சொன்னது புத்தியில் உறைத்தது.  பையா, நீ போய் பார்த்து விட்டு வா.   என்ன நடக்கிறது என்ற விஷயம்  தெரிந்து கொள். இந்த மனிதர்கள் என்னை கூட்டிச் செல்ல மாட்டார்கள்.  போய் விட்டு வா. நான் சொல்லிக் கொடுத்த திறமைகளை உபயோகித்து, புது செய்திகளை கிரஹித்துக் கொண்டு வா, புரிகிறதா? 

“ஓரு வேளை,ஸார், நான் சொல்ல வந்தது, ஸார், ஆனால்…”

“ஆனால் எல்லாம் வேண்டாம். இந்த ஃப்லெமிங்கொ விடம் நிறைய செய்திகள் கிடைக்கும். அவளே  செய்திகளின் ஊற்றுக் கண்.  பார்த்து போ, பையா, போய் வா” 

ஜோயிக்கு சற்று ஏமாற்றமாக இருந்தது.   இங்கிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்வார் என்று நினைத்திருக்க, தான் போய் ஃபியோனாவைப் பார்த்து செய்தி சேகரிக்க வேண்டுமாம்.  அவளுக்கு என்னவோ தெரியுமாம் அந்த மந்திர ஸ்படிகம் பற்றி, ஜோயிக்கு அலுப்பாக இருந்தது.   நேரம் இருந்திருந்தால், சற்று சிந்தித்து, விவரங்கள் சேகரித்துக் கொண்டு, தனக்குள் ஆராய்ந்து ஒரு ஏற்பாடு செய்து கொண்டு,  செயலில் இறங்கியிருப்பான்.   துரதிருஷ்ட வசமாக அந்த உயரமான வீட்டுக்கார அம்மாள், சிவப்பு பந்தை எடுத்துக் கொண்டு வந்து விட்டாள்.  ஜோயி தானாக ஏற்படுத்திக் கொண்ட உற்சாகத்துடனும், மேல் பார்வைக்கு  சொன்னதை எல்லாம் கேட்கும்  அசட்டுத் தனத்துடனும், அவர்களுடன் செல்ல காரில் அமர்ந்தான்.  மனதுள் திமோதியிடம் எரிச்சல் எரிச்சலாக வந்தது . திமோதி நிச்சயமாக ஒரு வழி கண்டு பிடித்திருக்க வேண்டும் ஃபியோனாவை தவிர்க்க – அவருக்கு  ஒரு வேளை தான் என்ன செய்யவேண்டும், செய்கிறோம் என்று ஒரு திட்டம் இருக்கலாம்

தவிர, ஜோயி க்கும் அந்த ப்ரொஃபஸி படி ஒரு ரோல் இருந்தது அதை ஒருவேளை மாற்றியமைக்க எண்ணியிருக்கலாம்

என்னவாக இருக்கும், ஒரு விதமான தடயமும் இல்லை.  அப்படியும் அவரால் பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்திருக்க முடியாது. அந்த ஹ்யூமன் விலங்குலகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாளோ,  அவள் அந்த இடத்தை பாதுகாக்க ஏதாவது செய்தாளா? 

அந்த ப்ரொஃபஸி யில் அப்படித்தானே இருந்தது.  தான் தனியாக எதுவும் செய்ய முடியாது என்று.

ப்ரொஃபஸர் ஸார் எப்படியும் உதவி செய்வார் என்று நம்பலாம் என்றது

விலங்குலகில் இந்த பெண் போய் என்ன சாதிக்கப் போகிறாள்?  அந்த மந்திர ஸ்படிகம் நீங்கலாக, அந்த இடம் தன் இயல்பில் ஒழுங்காகத் தானே இயங்கிக் கொண்டிருக்கிறது. 

அந்த ஹ்யூமன் தப்பித்திருக்கலாம்.   அது அவ்வளவு சுலபமல்ல.    அவ்வாறு நடக்கவில்லையெனில்,  ஒன்று அது படு முட்டாளாக இருக்க வேண்டும் அல்லது அங்கு போன பின் விலங்குகளைக் கண்டு பச்சாதாபப்பட்டிருக்கும்.  அதுவும் அவ்வளவு எளிதல்ல. இந்த ஹ்யூமனைத் தவிர யோசிக்க நினைத்தாலும் மனம் அங்கேயே சென்று நின்றது. கார் நின்றது.

என்ன மனிதர்களோ, போட்டோ, போட்டோ – எடுத்து தள்ளினர்.    ஒரு முறை எடுத்த போட்டோவையே திரும்பவும் எடுத்தனர்.  வேறு ஒரு விதமாக. ஜோயி நினைத்தது உண்மையில் இது வேஸ்ட்-  நேரமும் விரயம்..  ஜோயி வந்த காரியத்தை நினைத்து பார்த்தது, தன் போக்கில் விட்டிருந்தால்  ஃபியோனவையாவது பார்த்து பேசியிருக்கலாம்.  அப்பாடா – அந்த சமயம் பார்த்து ஒரு வண்டி,  நிறைய தின்பண்டங்களோடு வந்து நின்றது.  வகை வகையாக எண்ணெயில் பொரித்த பொருட்கள். ஜோயி காதுகளில் அவர்கள் ஹாட் டாக் வாங்கலாம் என்று தீர்மானித்தது விழுந்தது தான் தாமதம்  மெதுவாக நகர்ந்து நகர்ந்து ஒரு தடுப்பின் பின்னால் மறைந்து கொண்டது.   யாரோ சொல்வது காதில் விழுந்தது. ஒரு கனமான குரல், “போட்டோக்கள் எல்லாம் கிஃப்ட் கடையில் கிடைக்கும்”  ஆ ஒரு ஃப்லெமிங்கொ ஜோயியை கூர்ந்து பார்த்தபடி,   முகத்தில் அலுப்பு தெரிய, அமர்ந்திருந்த து.  இது, இது தான் ஃபியோனா ஃப்லெமிங்கோ . அடையாளம் தெரிந்தாலும்.

பகுதி – 15

ஜோயி விலங்குகளின் வரையறைக்குள் இருந்த பொழுது, அதனுடன் பேசியதே இல்லை. 

“ஊம்,,, நான் இந்த போட்டோவுக்காக வரவில்லை.  நான் வந்து… எதற்கு என்றால்…

“ஏன் போட்டோவுக்காக வரவில்லையா ? அதிசயமாக இருக்கே… ஆட்டோக்ராஃப் வேணுமா?”

“அதுவும் வேண்டாம்.  நான் வந்து…”

“ஆட்டோக்ராஃப் ம் வேண்டாமா? பின் எதுக்காக என் நேரத்தை வீணடிக்கிறாய்? ஜோயி சொல்ல நினைத்தது “ மன்னிக்கவும். நான் சொல்ல வந்த து, ஏதோ நான் உங்கள் நேரத்தை வீணடிக்கிறேன் என்று கேட்டதற்கு பதில் சொல்லத் தான் விரும்புகிறேன்.  ஆனால் நீங்கள் விட்டால் தானே.  ஓ, செய்தி சுருக்கம். அன்பான பறவையே, இந்த உலகம் உங்களைச் சுற்றி மட்டுமே இல்லை” என்று. சொன்னதோ, “நான் மன்னிப்பு கேட்கிறேன். சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன், நீங்கள் பதில் சொல்வீர்களா?”

ஃபியோனா இதை எதிர் பார்க்கவில்லை. புருவங்களை உயர்த்தி” நான் எதற்காக உனக்கு பதில் சொல்ல வேண்டும்”

“உங்கள் பதில் விலங்குகளுக்கு உதவியாக இருக்கும். விலங்குலகம் காப்பாற்றப் படும்”

“நான் கேட்டது, இதில் எனக்கு என்ன லாபம்?

ஜோயி இந்த பறவையைப் பற்றி கேட்ட பொழுது, ரொம்ப ரூட்  rude, தன் காரியமே குறி, – அதை அப்படியே நம்பவில்லை. மிகைப் படுத்துகிறார்கள் என்று தான் நினைத்திருந்தது. இப்பொழுது  – நம்பியது – “இல்லை, குறைவாகவே சொல்லியிருக்கிறார்கள். அதைவிட பன்மடங்கு அதிகம். “

தன் குரலில் எதுவும் வெளிப் படாமல், கவனமாக பேசியது.  “ஓ கமான், விலங்குலகுக்கு உதவி செய்வதில் உனக்கு என்ன தயக்கம்?”

ஃபியோனா சில நிமிடங்கள் ஜோயியை கூர்ந்து பார்த்தாள். அவள் முகத்தில் நிறைந்திருந்த போர்-அலுப்பு உணர்வு-மெள்ள மெள்ள மறைந்தது – கண நேரத்தில் அதன் இட த்தை சீற்றம் ஆக்ரமித்தது.  

“உனக்கு தெரிந்து கொள்ளத்தான் வேண்டுமா? கேள்.   ஏன் நான் உதவி செய்ய தயாராக இல்லை என்று. அங்கு இருந்த பொழுது நான் அறியாதவளாக, மன வளர்ச்சி குன்றியவளாக இருந்தேன்.  பித்து என்பர். ஆ  ஆனால், அது கூட சரியான வார்த்தை அல்ல.  எல்லா உணர்ச்சிகளும் கலந்த கலவையாக…எதற்காகவோ யாரோ தூண்டியது போல கோபம், யாரிடமோ வெறுப்பு, அல்லது வெறும் அலுப்பு – தன் மீதே, தன் செயலற்ற, செய்ய இயலாத  தன்மை,  எல்லாம் சேர்ந்து விலங்குலகமே ஒரு பயங்கரமான பொறியாகத் தெரிந்தது.  எதையும் சுதந்திரமாக செய்ய விடாத ஒரு தளை.  அங்குள்ள அனைவருமே தானியங்கி ரோபோக்கள்.   உண்மையில், ஒவ்வொரு மிருகமும் அந்த உலகில் தன் பங்குக்கு ஒரு வேலையை செய்கிறது.  முதல் பார்வையில் அது பாராட்டத் தக்கதாக தோன்றலாம்.   ஆனால், இந்த இடம் அவர்கள்  தங்கள்  பிறவி இயல்பை தொலைத்து விட்டவர்களாக, தங்கள் தனித் தன்மையை இழந்தவர்களாகவே எனக்குத் தெரிந்தார்கள்.   சிருஷ்டியின் அடிப்படி சட்டங்கள், நியமங்கள், முற்றாக விடப் பட்டுள்ளன. ஒரு சிங்கமும் மானும் கால நிலை பற்றி விவாதிக்கலாம்.  அந்த மான் தான் உண்ணப் படுவோமோ என்ற பயம் இன்றி சிங்கத்தோடு பழகலாம்.  தோட்டிகள் – இயற்கையின்  scavengers- என்று சொல்லப் படும் கழுகுகள், தற்போது புகழ் பெற்ற  Bindarian Thistle நல்லது தான். ஆனால் நமது கழுகு நண்பன், வின்னீ, அவளுக்கு பிடிக்காத, விசித்திரமான மாஜிக், மாய உணவை உண்ண கட்டாயப் படுத்தப் படுகிறாள்.  பிற விலங்குகளை கொன்று தின்னும்  சிங்கம் போன்றவை அதுவே அவர்களுக்கு பிடித்த, ஒத்துக் கொள்ளும் உணவு என்று இருக்கையில்,  தங்களுக்கு முற்றிலும் திருப்தியளிக்காத உணவை அந்த காட்டில் சாப்பிட வேண்டுமா?  அந்த அடர்ந்த காடு மற்ற இடங்களை விட பல மடங்கு மேல். இந்த பூமியில் உள்ளதை விட விலங்குகள் சந்தோஷமாக இருந்தன.  பூமியில் வாழும் மிருகங்கள் படும் அவஸ்தையைப் பார்க்க பல மடங்கு மேல்.  தற்சமயம், விலங்குலகில் ஒரு அங்குல அளவு மனிதர்களின் குணாதிசயங்களை கொண்டு வந்து விட்டார்கள்.   அவர்களைப் பற்றி நான் பல துண்டு பிரசுரங்கள், புத்தகங்கள் மூலம் அறிந்து கொண்டேன். மேலும் துருவித் துருவி விலங்குகள் தோன்றிய வரலாறும் படித்தேன்.  அபத்தம். மொத்தமும் அபத்த களஞ்சியம்.  Shrimp ஒரு வகை மீன்.  நான் இதை சாப்பிடுகிறேன். ஒரு ஆடு புல்லை எந்த உணர்வோடு சாப்பிடுகிறதோ, அதே உணர்வு தான் எனக்கும் இந்த வகை மீன் களைப் பார்க்கும் பொழுதும் சாப்பிடும் பொழுதும் வருகிறது. அங்கு இருக்கும்.  Lionel, – நமது நண்பன் தெரியுமில்லையா? அது ஒரு மானை பார்க்கும் பொழுது ஒரு மனிதன் தன் உணவை எப்படி அணுகுவானோ அதே முறையில் தான் அணுகுகிறது. அதற்கும் மான் ஒரு தட்டு நிறைய மாவுப் பண்டமே.  அதுவே, savannah நதிக் கரையில் இருக்க  நேரிட்ட  சிங்கமும் இந்த காட்டையே கனவு காணும்.  நான் அந்த zoo வில் – மிருக காட்சி சாலையில் இருந்தேனே.  அது எனக்கு பழகிய இயற்கையான இடம் அல்ல. நான் எப்படி உணர்ந்தேன் தெரியுமா “அடைக்கப் பட்டது போல”   அது தவிர  மற்றொன்று எனக்கு சற்றும் பிடிக்கவில்லை.  என்ன தெரியுமா? என்னை பார்க்க வந்த மனிதர்கள். என் அபிமான ரசிகர்கள்.  போட்டோ, போட்டோ வாக எடுத்து தள்ளினர்.  முதலில் அந்த கவனமும் பாராட்டும் பிடித்திருந்தன என்பதில் சந்தேகமில்லை.  எனினும் அது நம் வீடு அல்லவே.  நம் இடமா?  அந்த சமயம் தான் மந்திர ஸ்படிகம் வந்தது.  நான் எண்ணியது என்னவென்றால், விலங்குகள் உலகம் நிச்சயம் இதை காட்டிலும் மேலாக இருக்கும் என்று.   என்ன ஏமாற்றம்… சொல்லி ,முடியாத துக்கம்.  அந்த மந்திர ஸ்படிகம் மறு முறையும் என்னிடம் வந்தது. திரும்ப இந்த பூமிக்கு கொண்டு வந்து விட்டது.  வெறும் இயந்திரத் தன்மையான வாழ்க்கை. ஒவ்வொன்றும் கீ கொடுக்கப் பட்ட பொம்மையே. யாருமே தங்கள் பிறவிக் குணங்களை,  செயல்களை நினைவில் கொள்ளவேயில்லை.  உணவுக்காக வேட்டையாடுவது இல்லையெனில் வேறு என்ன வேலை?  நான் என்ன நினைக்கிறேன் என்றால், அந்த தலைமை பெருச்சாளி,  மைகாவா, மாயாவா, ..ஓ மிகைலா, அவள் தான் தலைமை வகித்தாள். நல்ல குணமுடையவள் தான். ஆனால் அவள் கொள்கை, எதையுமே அதிகமாக ஆசைப் படக் கூடாது.  அவளுக்கு நான் எங்கோ தடுக்கப் பட்டு, செயல் திறமையை இழந்து விட்டேன் என்று தீர்மானமாக எண்ணம்.  அதனால் நான் என்னைத் தவிர மற்றவைகளை பொருட்படுத்துவது இல்லை என்று நம்பினாள்.  அது ஓரளவு சரி எனலாம். ஏனெனில் நான் எதுவானாலும் அதனால் எனக்கு ஏற்படும் பலா பலன் களைத் தான் முதலில் கவனிப்பேன்.  யோசித்து பார், தன் சொந்த இடத்தை விட்டு வெகு தூரம் வந்து ஒரு zoo வில் அடைக்கப் பட்டு, உன் சுதந்திரம்  அடியோடு மறுக்கப் பட்டு, இறக்கைகளை துண்டித்தாற் போல,  வாழ நேர்ந்தால், இது போன்ற தன், தான், தனக்கு லாபம் என்ற வகையில் தான் எண்ணங்கள் போகும். அது இயற்கை.  ஆனால் அதை விட அதிகமாக நான் வெறுத்தது,  விலங்குலகம் அடிப்படை படைப்பின் சட்ட திட்டங்களை மதிக்காமல்,  தான் தோன்றித் தனமாக புதிய சட்ட திட்டங்களை திணிக்கும் வகையில் உயிரற்றதாக உள்ளது என்பேன்.   அதன் எதிரொலி தான் நான் அங்கு சந்தோஷமாக இல்லை. வசதியாக இருக்க எண்ணி வந்த இடம் அதன் மென்மையை இழந்த , அடர்ந்த வனத்தின் ரசிக்கத் தகுந்த  ஓரளவு கொடூரமும் கலந்த  தன்மையை கரைந்து நீர்க்க செய்து விட்டதாக உணர்ந்தேன்.  பிறவியிலேயே சிடு சிடுப்பான ஃப்லெமிங்கோ நான்.  எனக்கு போதும் என்ற திருப்தியே இருந்ததில்லை.   அதுவும் போதாமல், அந்த மிகைலா பெரிய லெக்சர் அடித்தாள்.   உணவுக்காக  மட்டும் பிராணிகளைக் கொல்வது ஓகே. ஆனால், விளையாட்டு என்று துன்புறுத்துவது கொடுமையாம்.  அது அந்த மனிதர்களுக்குத் தான் சொல்கிறாள். அது நம்மையும் ஏன் பாதிக்க வேண்டும்?   நமக்கு எதற்கு அந்த உப்பு சப்பில்லாத திசில் உணவு.  அது ஒரு அவசர தேவைக்காக மனிதர்கள் தயாரித்து பெட்டிகளில் அடைக்கும் உணவு. நமக்கு ஒவ்வாத மனிதர்களின் நடவடிக்கைகளை நாம் ஏன் காப்பி அடிக்க வேண்டும்?  இப்பொழுது சொல், என் கேள்வி, அவ்வளவு பொருத்தமானது,  நான் எதற்கு உங்களுக்கு உதவி செய்ய வேண்டும்? 

பகுதி-16

அந்த புத்தகச் சாலை நிரம்பி வழிந்தது.  வித விதமான் ஃபைல்கள், ஏதேதோ கை வினைப் பொருட்கள், பெரிய பெரிய அலமாரிகள், அது நிரம்ப புத்தகங்கள்.  அனால் எதிலுமே சரியான, தேவையானவர்களுக்கு திருப்தி தரும் வகையில் எதுவுமே இல்லை. மிகைலா கேட்டது அந்த ப்ரொஃபஸி பற்றிய நம்பகமான செய்தி.  அவள் ஆணையிட்டிருந்தாள். தயாராக எடுத்து வைக்கச் சொல்லி.  அங்குள்ளோர் அதைச் செய்யவில்லை என்பதை கண்டித்தாள்.  

நீலாவிடம் “இங்கு கிடைக்கவிட்டால், பெரிய புத்தகச் சாலை ஒன்று இருக்கிறது. அங்கும் பார். முக்கியமாக அந்த  Bindarian Thistle ஏன் குறைகிறது, எப்படி ஈடு செய்வது, அந்த ப்ரோஃபஸிக்கும் அதற்கும் என்ன தொடர்பு – இவைகளைத் தெரிந்து கொள். எதுவும் உடைந்து விடாமல் கவனமாக இரு”

ஒரு  quail (கௌதாரி  போன்ற பறவை) மற்றும் ஒரு badger (வளையில் வாழும் ஒரு விலங்கு) அவள் அருகில் வந்து அமர்ந்தன.  தமக்குள் பேசுவது போல இந்த திசில் உணவைப் ப்ற்றி விவாதித்துக் கொண்டன.  சற்று நேரம் சுற்றி வளைத்து,  வெதர் – கால நிலை, எதனால் பற்றாக் குறை ஏற்படுகிறது, இதில் அந்த ஃபியோனா ஃப்லெமிங்கோ வுக்கு ஏதாவது சம்பந்தம் இருக்குமா?  நீலாவின் கவனம் அவர்கள் பேச்சில் சென்றது. இரண்டும்  துன்புறுத்தும் வகை அல்ல என்பதை நிச்சயித்துக் கொண்டு, அவைகளிடம் பேச முற்பட்டாள். ஆனால் அவை பயந்து அலறி பறந்தும், மற்றொன்று ஓடியும் மறைந்து விட்டன. ஒரு விஷயம் தெளிவாகியது. காடு முழுவதும் இந்த பயம் பரவியிருக்கிறது.  சுலபமாக கிடைத்து வந்த உணவு தீர்ந்து விடுமோ.    கௌதாரியின் பெயர்  Quentin) and the badger (named Blake) என்னைக் கண்டு ஏன் பயப்படுகின்றன. அவளை எதிர் கொண்ட காட்டு வாசிகளான விலங்குகள் எல்லாமே ஓடி ஒளிந்து கொண்டன என்பது மனதில் உரைக்க என்ன செய்வது என்று வருந்தினாள். அந்த லைப்ரரியில் உருப்படியாக எதுவும் கிடைக்கவில்லை.  அவளுக்கு வேண்டிய செய்தி நாலாவது மணற்குன்று, மற்றும் அந்த ப்ரொஃபஸி பற்றி- ஓரிடத்தில் மந்திர ஸ்படிகம் சொல்வது எல்லாம் உண்மையும் அல்ல, பொய்யுமல்ல. சில சமயம் பலிக்கும். அந்த அலமாரியில் மேலும் தேட ஆரம்பித்தாள். 

மிகைலா , பயமும் பதற்றமுமாக ஓடி வந்து கொண்டிருந்தாள். 

“ஹயூமன், நமது    Bindarian Thistle  தீர்ந்து விட்டது.  குரலை தழைத்துக் கொண்டு ரகசியம் சொல்வது போல 

முழுவதும் என்றாள். துளிக் கூட இல்லை. ஓரிரு துண்டுகள் தான் பாக்கி. எட் ஒவ்வொரு கோடௌனிலும் பார்த்து விட்டு வந்து சொல்கிறது. இதுவரை யாருக்கும் தெரியாது.  அந்த மந்திர ஸ்படிகம் அது ஏற்கனவே பித்தாகி, நம்பத் தகாதபடி நடந்து கொண்டு விட்டது.  உனக்கு ஏதாவது புரிகிறதா? உன்னால் கணிக்க முடிகிறதா? “

“ம்… இல்லையே” என்றாள், என்ன சொல்வது என்று தெரியாமல் குழப்பத்துடன்

“அப்படியா,  நல்லது. எல்லாம் நன்மைக்கே, “ என்று மிகைலா மிகையாக வருவித்துக் கொண்ட உரத்தக் குரலில் “நீ என்ன நினைக்கிறாய்” என்றாள். 

“ஹியா, மிகைலா” என்று யாரோ அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினாள். ஒரு காட்டு விலங்கு எலி ஜாதிக்கு பெரிது, முயல் போலவும் இல்லை,  முகம் முழுவதும் சிரிப்பாக, தலையில் ஒரு வளையம், இடை மறித்த து.  “ஸோ, எனக்கு ஒரே பயமாகி..யூ நோ, இந்த திசில் தாவரம் யூ நோ, குறைந்து போச்சாம் யூ நோ, நான் போய் ஜென் கிட்ட கேட்டேன், தெரியாதுன்னுட்டா… அதனால ‘கே’ கிட்ட போய் விசாரிச்சா, அதுவும்  தெரியாதுன்னா, கடைசில ‘மியா’ வை,  இன்னும் சில பெயர்களைச் சொல்லி அவர்களிடமும் கேட்டேனா, அப்ப தான் ஆமாம், திசில் முன் போல நிறைய இல்லை ன்னு சொன்னா” மூச்சிரக்க அந்த மந்திர ஸ்படிகம் ஏதோ விஷமம்- இல்ல இல்ல அந்த் ஃப்லெமிங்கொ தான் ஏதோ குளறுபடி பண்ணிட்டா போல .. சரின்னு கடைக்கே போனேன்.  அங்க எதுவுமே இல்லை.. காலி. அதான் ஓடி வந்தேன், மிகைலா உங்கிட்ட ஏதாவது பாக்கி இருக்கா, சேர்த்து வச்சிருக்கியா, கூல், இல்லன்னா என்னாகும், எனக்குத் தெரியல்ல “ 

அந்த எளிய பிராணிக்கு என்ன சொல்லி புரிய வைப்பது , மிகைலா சற்று யோசித்தாள். 

ஃபெலிஸ்!

இப்ப என் பெயர் லீஸி     Pronounced LEE-SEE!” Felice/Lecie said, enunciating the ‘E’ sounds rather loudly. “But it’s spelled L-E-C-I-E!”

“சரி லீ ஈஈஈஸி!” 

“ம்ம்- ஹூம்”

ஆது கிடக்கட்டும், லீஸி,  Bindarian Thistle, என்ன சொல்ல, முழுவதுமாக தீர்ந்துவிட்டது. மிச்சமே இல்லை.

“ஓ  ஓ  – அப்படியானால், ..நான் என்ன சாப்பிடுவேன்,, புல்லையா? ஓ  இது ரொம்பவுமே மோசம்.. இரு மிகைலா! எங்களுக்கு செடி, கொடிகளைச் சாப்பிட்டு பழக்கமும் இல்லை.  மிகைலா, நான் வேட்டையாடனுமா? வேட்டை என்றால், என் BFF (என்னுடைய இணை பிரியா தோழி) மில்லி, மில்லி அதான் அந்த எலி,  அவள் தான் முன்னால் எனக்கு இரையாக இருந்தாள்.  ஓ, கஷ்டம், கஷ்டம், அவளையா அடித்து தின்பேன்?  இது கொஞ்சம் கூட சரியில்ல – அப்ப  -..”

இத பாரு ஃபெலீஸ், இல்ல லீஸீ.-  ஸாரி.  இந்த நிலைமை மோசம் தான், ஆனால் இந்த நீலா உதவுவாள்.

திடுக்கிட்டாள் நீலா, அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள், தன் பெயர்  மிகைலா வாயில் வந்ததும் உஷாரானாள்.  என்ன இது, என்ன சொல்ற, நான் இவர்கள் அனைவரையும் இந்த பிரச்னையிலிருந்து காப்பாற்றப் போகிறேனா? 

கண்களால் ஜாடை காட்டினாள், மிகைலா-  “நாங்கள் எல்லோரும் கூடி பேசினோம்”   குரலைத் தழைத்து ரகசியமாக மேலும் சொன்னாள்.   நீயும் அந்த ப்ரொஃபஸி- குறிச்சொல்லில் ஒரு பங்கு வருகிறாய். சற்று பொறு. நான் உதவி செய்கிறேன்”

ஃபெலீஸ், இல்லை லீஸீ, அமைதி அமைதி. பயப்படாதே.  மிகைலா நேருக்கு நேர் அந்த சிறிய பிராணியைப் பார்த்து, “நான் அறிவேன். நாம் தற்சமயம் மிக கடினமான சூழ்நிலைக்கு தள்ளப் பட்டு விட்டோம்.  பயப்படாதே, சீக்கிரமே ஒரு வழி கண்டு பிடிப்போம்.  ஏம்மா, அழற, அழாதே, இவ்வளவு நாள் என்ன சொல்வீர்கள்,, Chillax – நீங்களே உண்டாக்கிய வார்த்தை.  உற்சாகமாக இரு என்பது தானே அதன் பொருள்.  அப்படியே இருங்கள்.  நோ.நோ. நோ. அழாதே. நான் அனேகமாக சரியாகிவிடும் என்று சொன்னேனா, கண்டிப்பாக சரியாகி விடும் என்று சொல்கிறேன். இதோ , இந்த ஹ்யூமன் நம்ம கிட்ட வந்திருக்காளே, அதுவே நல்லதுக்குத் தான்.  அழாதே, கொஞ்சம் பொறுமையாக இரு,  சொல்வதைக் கேள், இந்த தட்டுப் பாடு இப்படியே இருக்காது, சீக்கிரமே நமது பண்டசாலைகள் நிரம்பி வழியப் போகின்றன பார்.  ..

நீலா அதிசயத்துடன் மிகைலாவைப் பார்த்தாள். இந்த தலைமை பொறுப்புக்கு ஏற்றவள் தான், ஏதோ குட்டி என்று விடாமல் தொடர்ந்து சமாதானம் செய்கிறாளே.. பாவம் கண்களை மூடிக் கொண்டு ஏதோ சொல்கிறாளே “ஏன் எனக்கு இந்த சோதனை”

வா, வா, பசிக்கிறதா? இங்க தேங்காய் பால் இருக்குமே, எடுத்து தருகிறேன் வா, என்று   ferret என்ற அந்த காட்டு விலங்கை அழைத்துச் சென்றாள்.

திரும்பி, நீலாவைப் பார்த்து, “இன்று இரவுக்குள் ஒரு வழி கண்டு பிடிக்கப் பார்” 

நீலா யோசித்தாள். மணி  மாலை 4:00 ஆகியிருக்கிறது. இரண்டு மணி நேரத்திற்குள் என்ன செய்வேன், யோசித்தபடியே நடந்தாள். 

பகுதி-17

ஓ, ஓ, இது என்ன? இந்த விலங்குலகமும் மனிதர்கள் வாழும் பூமி போலவே நடந்து கொள்கின்றதே,  ஜோயி மனதினுள் யோசித்த து.  Bindarian Thistle காட்டு மிருகங்களின் உண்ணும் உணவை மாற்றியமைத்து விட்டதா? திடுமென அது விலங்குலகிற்கு இல்லையென்றானதும் அவைகள் திகைத்து விட்டன போலும்.  திசில் நல்லது தான்.   என்ன நடக்கிறது? ஜோயி மேற்கொண்டு என்னவாகும் ?…யோசனையில் ஆழ்ந்தது.

மனிதர்களாக மாற முடியாது, மாற்றவும் முடியாது.  இப்பொழுது ஒரு மானிடம் போய் -, அதன் நண்பனாகி விட்ட சிங்கம், இரண்டும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, இதோ பார், இந்த சிங்கம் இனி உன் நலன் விரும்பும் நண்பனல்ல-  இயற்கையின் நியதி படி நீ அவனுக்கு உணவு ஆவாய் என்றால் அதன் பாதிப்பு எப்படி இருக்கும்?    கொடூரம் என்று நாம் நினைத்த சில நியதிகள் வேண்டாம் என்று வரையறுத்து வன விலங்குகள் இனி வேட்டையாடுவதை தவிர்க்க வேண்டும் என்றோம்.   ஆனால் மனிதன் போல் வேடமிடலாம்,  முழுவதுமாக மாற முடியுமா? .  அது நல்லதல்ல .. நடைமுறைக்கு ஏற்றதல்ல.   அச்சுறுத்தும் உண்மை – என்ன செய்யலாம் – ஏதாவது ஒரு வழி பிறக்கும்.. மனிதனைப் போல சாகாஹாரி- பயிர் பச்சைகளை  ஆகாரமாக ஏற்றுக் கொண்டவர்-  ஆகவும் வேண்டாம்- இயற்கை வழி என்று வேட்டையாடவும் வேண்டாம்.  அதிக துன்பமோ, விரயமோ இன்றி இந்த இக்கட்டிலிருந்து மீள வேண்டும்.   திசில் உணவு மாமிசத்திற்கு மாற்றாக இருந்தது. வாஸ்தவம்.  எப்படி அதை வளர்ப்பது, பாது காப்பது என்பதை நாம் கற்றுக்  கொள்ளவேயில்லை.  அதை விலங்குகளே தயாரிக்கும் பக்ஷத்தில் எப்படி இருக்குமோ, முற்றிலும் வேறாக கூட இருக்கலாம். அந்த பெரிய விலங்குகள் கூட இந்த விலங்கு சாம்ராஜ்யத்தில் நுழையும் முன் அந்த நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டன. ஒன்றோடொன்று சண்டையிடுவதில்ல,  வெற்றி பெற்றவர்,  தோற்றதன் குட்டிகளை கொல்வது என்ற வழக்கம் அடியோடு கைவிடப் பட்டது.  தற்சமயம் இந்த விலங்குகள் சாம்ராஜ்யம் நிறைய நன்மைகளை செய்துள்ளது. அதில் ஒன்று தான் ஒவ்வொரு ஜீவனுக்கும் வாழும் வயது வரம்பு முப்பது  ஆண்டுகள் கூட்டப் பட்டது. தானாக இந்த விலங்குகள் இப்படி சிந்திக்கவோ, செயல் படுத்தவோ முடிந்திருக்காது. ஃபியோனா சொன்னாளே,  அந்த ப்ரோஃபஸி சொன்னதோ, மந்திர ஸ்படிகத்தின் குறிச் சொல்லோ  எதை குறிக்கிறது என்று அவளுக்குத் தெரியுமாம்.   அவளுக்குத் தெரியும் என்று ஜோயியும் நம்பினான்.  அவள் உதவலாம். ஆனால் மறுத்துவிட்டாள்.  இந்த விலங்குலகமும் வர மாட்டாளாம்.  எல்லாமே வெறுத்துப் போய், மந்திர ஸ்படிகமும் வேண்டாம், உங்கள் சங்காத்தமும் வேண்டாம் என்பது போல பேசினாள். ஒருவேளை, 

ஜோயி அந்த சந்திப்பையும் தாங்கள் இருவர் பேசிக் கொண்டதையும் மனதில் அசை போட்டது.

“ஹலோ, டூட், Dude, நீ நான் சொன்னதையெல்லாம் நினைத்துப் பார், ஷ் … இப்பொழுது நீ எனது நேரத்தை வீணாக்கியதற்கு மன்னிப்பு கேட்கப் போகிறாய்.  நானும் சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்.  நீ போகலாம், நானும் கிளம்புகிறேன்.”  கெட் ஔட் .

“நீ கொஞ்சம் விவரமாக சொல்கிறாயா, அந்த ப்ரோஃபஸி உண்மையில் என்ன தான் சொல்லியது. நீ எப்படி வெளியே வந்தாய்?- ஜோயி

“அட டா, இப்பதானே அவ்வளவு பெரிய லெக்சர் கொடுத்தேன்,. நான் ஏன் ஒரு உதவியும் செய்ய மாட்டேன் என்பதையும் சொன்னேனே”

“அதை சொல்வதால் உனக்கு ஒரு கெடுதலும் வராது, பின் ஏன்?”  ஜோயி தயக்கத்துடன்  கேட்டது.

ஃபியோனா முகத்தில் களைப்பு தெரிந்தது.  “ஏன் இன்னும் இங்கு நிற்கிறாய். நான் தான் சொன்னேனே.  எனக்கு எரிச்சலூட்டுகிறாய்.  பொறு… அந்த ஆமை, அதன் பெயர் என்ன? திமோதி, அது தானே உன்னை இங்கு அனுப்பியது? கேட்டுக் கொண்டு வரச் சொல்லியது? தானும் எப்படியோ இங்கு கிளம்பி வந்து விட்டதே.  கொஞ்சம் அலட்டல் பேர்வழி..இருந்தாலும் நல்லது செய்யும் குணம். “

“ஆங்.. ஆமாம்… எப்படித் தெரிந்து கொண்டாய் ?”

“எனக்கு என் வழிகள்… திரும்பச் சொல்கிறேன்,  உன்னுடனோ, உன் கூட்டத்தோடோ எனக்கு எந்த தொடர்பும் வேண்டாம்.  புரிகிறதா? அவுட்.. “

ஜோயி வெளி நடக்கவில்லை.  “புரிகிறது.  அதை எனக்கு சொல்வதால் உனக்கு ஒரு குறைவும் வராது. பாதிக்கப் பட மாட்டாய் எனும் பொழுது சொன்னால் என்ன ? நான் சொல்ல வந்தது,  அதை மட்டும் சொல்லிவிட்டு நீ உன் வழியில் போ, நான் குறுக்கிட மாட்டேன், மற்றவர்கள் குறுக்கிடவும் விட மாட்டேன், நிச்சயம்?”

“கடவுளே, யாராவது கெட் அவுட் என்று சொன்னால், அதன் பொருள், சம்பந்தப் பட்டவன் வெளியே போக வேண்டும். “ ஃபியோனா தொடர்ந்தாள்… சும்மா நாடகமாடாதே. ஏதோ நான் உன்னை விரட்டுவதாக காட்டிக் கொள்ள, வேண்டாத விருந்தாளியாக கருதுவதாக, வேஷம் போடுகிறாய். உண்மையில் வேண்டாத விருந்தாளி தான், அது அல்ல இங்கு விஷயம், ..அவுட்” கத்தினாள். 

சரிதான். இந்த சம்பாஷணையால் எந்த லாபமும் இல்லை. அவள் மட்டும் அந்த புதிரைப் பற்றி தான் தெரிந்து கொண்டதைச் சொல்லியிருந்தால், எவ்வளவோ நன்மைகள்  – விலங்குகள் சாம்ராஜ்யம் பிழைக்கும்.  அந்த வீட்டுக்கார பெண்மணி வந்து கொண்டிருக்கிறாள்,  நல்லது.

இனி அந்த புதிரை விடுவிக்க எந்த வழியும் இல்லை. இன்னும் ஒரு படி மேல். அந்த பெண்மணி ஜோயியின் கழுத்தில் பட்டையை கட்டி விட்டாள்.  இது அதற்கும் மேல். பார்த்துக் கொண்டிருந்த ஃபியோனா கண்கள் குளமாயின. “ஜோயி காதில் விழும்படி பலமாக கத்திச் சொன்னாள். “நான் சொன்ன  வார்த்தைகளை யோசித்துப் பார். உனக்கே புரியும். என் பிரச்னை என்ன என்று. , ம் என்ன தெரியுமா?  இன்று  என் மனம் இலகுவாகி விட்டது போல  உணருகிறேன்.  மனத்தின் பாரத்தை இறக்கி வைத்து விட்டது போல். அந்த வரிகளை நினைவு படுத்திக் கொள். “.Verses and illustrations combined shall give you what you came to find.There! If you still don’t know.. what it means, then too bad.”  –

“கவிதைகளையும், படங்களையும் இணைத்துப் பார். உனக்கே புரியும். அப்படியும் புரிந்து கொள்ள வில்லையா, சட், உன் விதி.”

நடந்ததை தன் மனத் திரையில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்த ஜோயி சட்டென்று பொறி தட்டினாற் போல் எதையோ உணர்ந்தது.  எங்கு இந்த வரிகளைப் படித்தோம். ? ஃபெலிங்கோ இந்த வரிகளில் என்ன சொல்ல விரும்பியது?   இது தான் புதிருக்கு விடையா?  அந்த வரிகளுக்கு என்ன பொருள்? ஓ மை குட்னெஸ்.”

பகுதி-18

நீலா அனேகமாக எல்லா புத்தகங்களையும் படித்து விட்டாள்.  மந்திர ஸ்படிகம் பற்றி மிகைலா சொன்னது போல விவரங்கள் சேகரிக்க வந்தவள், அதே வேலையாக இருந்தாள்.  ஏதாவது முன்னேற்றம்?  ஊஹூம் ..  அப்படித் தான் அது சுவாரஸ்யமாக இருந்ததா? அதுவும் இல்லை.  அவள் உண்மையில் விரும்பியா செய்கிறாள்?  அது.. போரடிக்கிறது ..அதை விட அதிகம் …  அந்த சிறு விலங்குகள் அவளைக் கண்ட போதெல்லாம்  அலறுவது …   ஏனோ அசட்டு பயம்..அவைகளைப் பார்க்கும்  பொழுது நீலாவுக்கு ஒரு உணர்வு- ஏதோ தான் வேண்டாத இடத்தில் தவறுதலாக மாட்டிக் கொண்டு விட்டோம்  என்பது போல – அந்த சிறு பிராணிகள் மேல் பச்சாதாபம் தான்…அவைகளிடம் ஒரு வித ஒட்டுதலும் வந்து விட்டது.. படித்துக் கொண்டே இருந்தாள். எங்கு என்ன இருக்கிறது என்பது தெரியாமலே, எல்லாவற்றையும் புரட்டி பார்த்துக் கொண்டு…

“அப்பாடி, ஒருவழியாக  அந்த ஃபெலிஸ்- ஐ சமாதானப் படுத்தி விட்டேன்” என்று சொல்லிக் கொண்டே மிகைலா வந்தாள்.  என்ன படிக்கிறாய் என்று அவள் படித்துக் கொண்டிருந்த புத்தகத்தை எட்டிப் பார்த்தாள்.  இரண்டு மணி நேரம் தான் அவகாசம் நமக்கு. அதற்குள் ஏதாவது செய்ய வேண்டும். நீ ஏதாவது கண்டு கொண்டாயா – ஏதாவது உபயோகமா”

“ஊம்…நான் என்ன கண்டு கொண்டேனா..எனக்கே இன்னும்  பிடிபடவில்லை.  இதற்கு ஏதோ பொருள் உள்ளது போல தெரிகிறது.  ம்ம் அவள் பெயர் லீஸி ன்னு சொல்லல்ல?

“ஆமாம், இந்த பெயர் தான் நினைத்தவுடன் வாயில் வருகிறது. அது கிடக்கட்டும்.. நீ என்ன சொன்னாய்?”

இது தான்” என்று ஒரு பழுப்பு நிற காகிதத்தை கொடுத்தாள்.  அதில் ஒரு மந்திர ஸ்படிகத்தின் படம்.  ஏதோ ஒரு மொழியின் எழுத்துரு  – அதில் பொதுவாக அந்த கல்லும், அதைவிட தெளிவில்லாத விவரமும்,  நீலா ஊகித்தாள் அந்த திசில் பற்றியது என்று….. நீலா மிக சாதாரண விவரம் என்று கடந்து போயிருப்பாள், அதன் தலைப்பு அவளை கவனிக்க வைத்தது.  அதில் கொட்டை எழுத்துக்களில், ஒரு தலைப்பு. “மந்திர ஸ்படிகத்தின் ரகசியங்கள்”  நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனால் கல்லின் ரகசியம் என்று தலைப்பு.  ஒரு புதிர் வேறு. அது தான் என்னை யோசிக்கச் செய்கிறது என்று சொல்லியபடி அந்த பழுப்பு காகிதத்தை மிகைலாவிடம் தந்தாள். 

மிகைலாவின் கண்கள் விரிந்தன. திறந்த வாய் மூடவில்லை.  சில நிமிஷங்கள் ஆயின அவள் தன்னை சமாளித்துக் கொள்ள…

“ஓ, goodness. Goodness, goodness, gracious. ஆஹா, அருமை, அருமை.   என்னருமைப் பெண்ணே,  எப்படி நன்றி சொல்வேன், இது தான், இதே தான். இதை அழித்து விட்டார்களோ என்று பயந்தேன்.   நல்லது, நல்லது.  மிக்க நன்றி. நீலா , இது ஏதோ புதிர் அல்ல, வருவதை சொல்லும் குறிச் சொல்லும் அல்ல. இது தான் அந்த மந்திர ஸ்படிகம் பற்றிய விவரம் சொல்லும்.  யா யா, அட சட், அனாவசியமாக அந்த பெண் லீ ஸீ யுடன் செலவழித்தேன்.  ஃபியோனா ஃப்லெமிங்கோ  விபத்துக்குப் பிறகு யாருமே இதை பொருட்படுத்தவில்லை.  ஆனால் உண்மையிலேயே மிகவும் அருமையான சுவாரஸ்யமான தகவல்.  தவிர, இந்த புதிரை விடுவிக்க முடியுமானால், அது நமக்கு வழி காட்டும்.  .நீ உன் வீடு செல்வாய். பிண்டரைன் திசில்   எங்களுக்கு கிடைக்கும்.  ஜோயி, டிம் இருவரும் திரும்பி வருவார்கள்.  

மிகைலாவின் பதற்றம் மிக்க சொற்கள் கேட்கவே ஆனந்தமாக இருந்தன.

“இதற்கு முன் யாராவது இந்த புதிரை விடுவித்து இருக்கிறார்களா?”

மிகைலாவின் மகிழ்ச்சி நிறைந்த  முக பாவம் சட்டென்று மாறியது, ஒரு வேதனையா, கோபமா என்று சொல்ல முடியாதபடி ஒரு உணர்ச்சி பரவியது. 

“ஆமாம், ஃபியோனா”

“நீலா ஆச்சர்யத்துடன் “ என்ன? ” என்றாள். எதற்கு அவள் இந்த புதிரை அவிழ்க்கவும் விடையை அறிந்து கொண்டும் அவளுக்கு என்ன லாபம்?

ஃபியோனா இந்த புதிருக்கு விடை அறிவாளா? எப்படி?  “இந்த புதிர் விலங்குலகம் ஏற்படும் முன்பே இருந்ததா?   அல்லது சமீபத்தில் தான் வெளிப் பட்டதா, அதாவது ஃபியோனா வெளியேறும் முன். யார் எழுதினார்கள்? அந்த கல்லா” நீ ஏன் இப்படி யாரைத் திட்டுகிறாய்?

மிகைலா சொன்னாள். யாருக்கும் கேட்காத குரலில் திட்டுவது போல நீலா உணர்ந்தாள். “வேணும் எனக்கு.  என்னை விட சிறியவர்களிடம் பதில் சொல்ல வேண்டி வருகிறது.  அவர்கள் ஆர்வம் அவர்களுக்கு, ….”

“நீலா, இதை எழுதியது யார் என்பது தெரியாது.  எப்பொழுது எழுதப் பட்டது என்பதும் தெரியாது.  தெரிந்து கொள்ளவும் எனக்கு விருப்பமில்லை. இந்த சமயம் இந்த புதிரின் பொருள் மட்டும் தான்  தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.  அது தெரிந்தால், நாம் மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று யோசிக்கலாம்” 

“ஃபியோனா எதற்கு இதன் பொருளை ஏன் தெரிந்து கொள்ள வேண்டும், “?

மிகைலாவின் முக பாவம் மாறியது.   யாரையோ நையப் புடைக்க வேண்டும் என்ற வெறி – என்று நீலா நினைத்தாள்.

“ஆது ஒன்றும் அவ்வளவு முக்கியமான செய்தி அல்ல”- மிகைலா

“முக்கியமான செய்தி தான்.  சொல்லு”- நீலா

மிகைலா சமாளித்துக் கொண்டு விட்டாள் என்பது முகத்தின் ப்ரகாசத்தில் தெரிந்தது.

“ஃபைன், ஸோ,     ஃபியோனா திரும்பி பூமிக்கு போக வேண்டும் என்றாள், சில்லறை காரணங்களுக்காக..”

“என்ன காரணம்?”

“இடை மறிக்காதே.   என்னவோ காரணம். ஆனாலும் திரும்பிப் போனாள். எப்படி இருந்தாலும் அவள் ஏதோ மந்திரம் சொல்லி அந்த கல் அவளை திரும்பி போக செய்திருக்காது. அதன் ரகசியம் தெரிந்ததால்,  அவள் அந்த கல்லை தனக்கு அனுகூலமாக செய்ய வைத்திருக்கிறாள்.  அவள் கைக்கு எப்படி கல்லின் ரகசியம் கிடைத்தது என்பது நமக்கும் புரியாத புதிராகத் தான் இருக்கிறது.  அதை வைத்துக் கொண்டு மிரட்டியோ, என்ன செய்தோ,  மந்திர ஸ்படிகம் அவளை திருப்பி அனுப்ப செய்து விட்டாள்.  அவ்வளவு தான்.  சரி, இனி நம் வேலையைப் பார்க்கலாம்.” 

“யா, யா “  

நீலா வெகு நேரம் அந்த பழுப்பு நிற காகிதத்தை ஆராய்ந்து பார்த்தாள்.   கண்கள் அருகில் வைத்து படிக்க முயன்றாள்.  கையெழுத்து போலவும் சில இடங்களில், அதற்கான ப்ரத்யேக பேனாவால் எழுதப் பட்டிருந்தது.  அந்த பத்திரத்தின் சில வரிகள் மேல் சுருள் சுருளாக வளையங்கள்..எதற்கு?  அதைத் தவிரவும் இன்னொரு அடையாளம் போல சிறு நூலிழைகள் கோத்து ஏதோ  நெய்யப் பட்டிருந்தது.  துணி போல ஒன்று ஒவ்வொரு  கையெழுத்தையும் சுற்றி, பாதுகாப்புக்காகவோ?  பிண்டரைன் திசில் படமும் காணப்பட்டது.  சற்றே வித்தியாசமாக.   நூலிழைகளால், அந்த எழுத்துக்கள்  எம்ப்ராய்டெரி (வண்ண நூல் வேலை) போல திரும்பவும் கைகளால் வேயப் பட்டிருந்தது.  நீலா அந்த சுருள் எழுத்துக்களை புரிந்து கொள்ள முயன்றாள். பக்கங்களை புரட்டினாள்.  அடுத்த பக்கத்திலும் அதே சுருள் எழுத்துக்கள்.  கண்களை அந்த எழுத்துருவுக்கு பழக்கிக் கொண்டபின் அவளால் படிக்க முடிந்தது.  “கவிதைகளையும் படங்களையும் இணைத்து  பார். உனக்கு வேண்டியதை அறிவாய்”  தற்சமயம்,  அவள் கண்களை யாராவது பார்த்திருந்தால் டின்னர் ப்ளேட்டுக்கள் என்று நினைத்திருப்பர். 

“மிகைலா! வா, வா, இங்க பார்” இது …”

மிகைலா அதை வாங்கி பார்த்தாள்.  அவள் கண்களும் நீலாவின் கண்களுக்கு இணையாக விரிந்தன.           

நீலா,  இந்த  வரைபடத்தை நான் அறிவேன்.  ஓ மை குட்னெஸ்”

“ஸமுத்திரத்தின் அலைகள் போன்ற ஒன்று” 

“ஆமாம். இது போல இன்னொரு பழைய பத்திரம் உண்டு.  அதை நான் பார்த்திருக்கிறேன்.      இரு நான் போய்  தேடிக் கண்டு பிடிக்கிறேன்.” மிகைலா அந்த பத்திரத்தை நீலாவின் கையில் திணித்து விட்டு நூலகத்தின் மற்றொரு பகுதிக்குச் சென்றாள். 

நீலா மேலும் அந்த பத்திரத்தைப் படிக்க முயன்று ஓரளவு புரிந்து கொண்டாள்.   நான்கு மணி நேர போராட்டத்திற்கு பலன் கிடைத்தது.  கடைசி பத்து நிமிஷங்களில்  அதிக அளவில்  புரிந்து கொண்டாள். ஜன்னல் வழியே வெளியே பார்த்தாள். தன் கடிகாரத்தையும் பார்த்து ஆஸ்வாசம் அடைந்தாள். இன்னும் நேரம் இருக்கிறது. இன்னும் இருட்டவில்லை.  அந்த விலங்குலகில் இரவு என்பது எப்பொழுது இரவு சஞ்சாரம் செய்யும் ஜீவன் கள் வெளி வருகின்றனவோ, அதுவே கணக்கு.  அவை வெளியே வந்தவுடன் பசி, உணவு பிண்டரைன் திசில் தானே- அதைக் கேட்கும்.  அது இல்லையெனில் என்ன செய்யும்.? திரும்ப தன் கையிலிருந்த பத்திரத்தை பார்த்தாள்.  கண்டிப்பாக ஏதாவது செய்ய வேண்டும். மிகைலா வேறு இங்கும் அங்குமாக ஓடிக் கோண்டிருக்கிறாள். கை நிறைய காகிதங்களுடன்.

“பார், இந்த பத்திரங்களைப் பார்.  வட்ட மேசையில் வைத்து அலசி பொறுக்கிக் கொண்டு வந்தேன்.  இவைகளிலும் அதே போல கையெழுத்து, நூலிழைகளால் ஆன கடல் ஓவியம். படிக்க நேரமில்லை. எடுத்துக் கொண்டு வந்து விட்டேன்.  நீயும் பார்” என்றாள் மிகைலா முச்சிரைக்க. 

அந்த பெருச்சாளி கொண்டு வந்த பத்திரங்களை பரத்தி வைத்துக் கொண்டு இருவருமாக ஆராய்ந்தனர்.  அதில் சற்று புதிதாக தோன்றிய ஒன்றை நீலா கையிலெடுத்தாள். சமீபத்தில் எழுதியதாக இருக்கலாம் என்று ஊகித்தாள். மந்திர ஸ்படிக ரகசியம் என்பதை விட அதிக முக்கியமான ப்ரொஃபஸி பற்றியது. இது அந்த கல் சொல்லியது.  அதன் மூலையில் நடப்பு ஆண்டின் தேதி இருந்தது.  மற்றதில் தேதி பல ஆண்டுகளுக்கு முன்னால் என்பது தெரிந்த து.  மற்றொன்று சென்ற வருஷ தேதி குறிப்பிட்டு… அத்துடன் இருந்த விளக்க உரை மூன்று ஆண்டுகளுக்கு முன்றைய தேதியிட்டு இருந்தது. 

“Heavens to Betsy- என்றாள் மிகைலா ( இது ஒரு அமெரிக்கன் சொல்தொடர்.  ஆச்சர்யம், திடுக்கிடல் இரண்டையும் குறிப்பது) 

 இதெல்லாமும் குறிச் சொற்களே, ப்ரொஃபஸி களே.  நாங்கள் அவை உபயோகமற்றவை என்று நினைத்தோம்.  அதனால் பொருட்படுத்தவே இல்லை.

“கொஞ்சம்  பொறு. எனக்கு சில சந்தேகங்கள்” 

“ஓகே, சொல்லு, உடனே, “ என்றாள் மிகைலா.

நீலா அந்த வித்தியாசத்தை கண்டு கொண்டாள். ஒரு வாரம் முன்பு என்றால், அவள் அப்படி உடனே சம்மதித்து இருக்கவும் மாட்டாள், கண்களை சுழட்டி தோரணையாக, வேண்டா வெறுப்பாக சொல்லு என்பதற்கான மட்டமான  ஒரு வார்த்தையை பயன்படுத்தி இருப்பாள். இப்பொழுது  சந்தோஷம் .. பதட்டம், …”

இந்த ப்ரோஃபஸிகளை யார் எப்படி ப்ரதிகள் எடுத்திருப்பார்கள்?  தானாக வந்திருக்க முடியாது. 

“நீலா, உன் குலப் பெயர் என்னவென்று எனக்குத் தெரியாது.   எதற்காக மனிதர்கள் தனது பெயருடன் குலப் பெயரைச் சேர்த்துச் சொல்கிறார்கள் என்பதும் எனக்கு புரியாத விஷயம்.  அது என் அறிவுக்கு எட்டாதது என்பதோடு  நிறுத்திக் கொள்கிறேன்.   விஷயத்துக்கு வருகிறேன். இந்த விலங்குலகம் என்பதே ஒரு கற்பனை வாதம். மாயம்  அல்லது மந்திரம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.  எல்லாமே அந்த மந்திர ஸ்படிகத்தின் வேலை.  அதன் பலத்தில் தான் இந்த விலங்குலகம் இயங்குகிறது.  நீ என்ன நினைக்கிறாய்? எப்படி இந்த ப்ரோஃபஸிகள் ப்ரதிகள் வந்திருக்கும்?

“மந்திர ஸ்படிகத்தாலா?”

“யப். ஆமாம், அது தான் செய்கிறது. யாருக்கும் எப்படி என்று  தெரியாது. ஆனால் அது தான் உண்மை. வேறு சந்தேகங்கள்? கேள்விகள்?” 

“ யா. நீ சொன்ன  “Heavens to Betsy – ஒரு பழமையான சொல் தொடரா?

“நானே பழமை தான்”  மிகைலா ஒரு கிண்டலான குரலில் சொன்னாள். 

நீலா அங்கு கிடந்த ஒரு நாற்காலியை எடுத்து போட்டுக் கொண்டு அமர்ந்தாள்.  பத்திரங்களை ஆராயத் தொடங்கினாள். வரிசைப் படுத்தி எடுத்துக் கொண்டு   சமீபத்தில் என்று, தொடங்கி, தொடர்ந்து அதன் கால வரிசையாக வைத்துக் கொண்டு பழையவை, சமீபத்தியவை என்று பிரித்து வைத்துக் கொண்டாள். இப்பொழுது அவைகளை ஒப்பிட்டு பார்ப்பது எளிதாயிற்று.  எல்லாமே ஒரே விஷயம், ஒரே எழுத்துரு, ஒரே வடிவம்.  நேரம் ஓடிக் கோண்டிருக்கிறது என்று உள் மனம் எச்சரித்தது.  மிகைலாவின் உதவி இல்லாமல் அதை பொருள் கொள்வதும் தன்னால் முடியாது என்பதும் உணர்ந்தாள். கண்டிப்பாக, உடனடியாக ஏதாவது செய்து தான் ஆக வேண்டும்… என்ன செய்வது?

பகுதி -19

ஜோயி நிலை கொள்ளாமல் அந்த சிறிய அறைக்குள்  சுற்றிச் சுற்றி நடந்தது. பிண்டரைன் திசில் இருப்பு பற்றிய வரை படத்தை பார்த்ததிலிருந்து இதே எண்ணம் தான்.   இனி அது உதவாது. மொத்தமே ஐந்து அல்லது ஆறு துண்டங்கள் தான் மீதி.  விலங்குலகில் இரவு நேரம் என்பதை கணக்கிட்டுக் கொண்டது.  அந்த மனித பெண் ஏதாவது கண்டு பிடித்தோ,  தானாகவோ, எதுவும் செய்திருக்க வேண்டும்.  இல்லாவிட்டால்  அங்கு ஒரே களேபரமாகி விடும்.  நெருக்கடியான நேரம்.  அந்த ப்ரொஃபஸி சொன்னபடி, அந்த ஹ்யூமனுக்கு ஒரு பாகம் இந்த ஆட்டத்தில் இருக்கிறது.  அதே நேரம் என்னுடைய பங்கையும் நான் சீக்கிரமே செய்தாக வேண்டும்.  என்னையும் ஏதோ மாற்றத்தை கொண்டு வருவேன் என்று சொல்லியது.  அது என்ன என்று கூட தெரியாமல் நான் தவிக்கிறேன்.  துளிக் கூட அது பற்றி ஐடியாவே இல்லை. இந்த திமோதி ஆமையார், காது செவிடாகும் படி குறட்டை விட்டுக் கொண்டு தூங்குகிறது. அதற்கு சுகமாக வசதியாக ஒரு ஸ்வெட்டர் வேறு கிடைத்து விட்டது.   அதன் உதவி தேவை. ஃப்லெமிங்கோ ஆரவாரமாக கூச்சலிட்டுக் கொண்டு சொன்ன வார்த்தைகள்  இந்த ப்ரொஃபெஸர் பதம் பிரித்து பொருள் சொல்வார். அவரால் தான் முடியும். உண்மையில், ஒரு சாதாரண ஓநாய், தன் சிறு மூளையை கசக்கி பிழிந்தாலூம் இது போன்ற புதிர்களுக்கும், வினோதமான வார்த்தைகளுக்கும் அர்த்தம் கண்டு கொள்ள முடியுமா, அதையும் அந்த ஃப்லெமிங்கோ, நேரடியாகச் சொல்லாமல் ரகசியமாக இடைச் செருகல்கள் போல சொன்னாளே.   இவளும் அந்த மந்திர ஸ்படிக கல்லும் ஒன்று. நேரடிப் பேச்சே கிடையாது. எதையெடுத்தாலும் ஒரு புதிர் போல சொல்லி நீயே அந்த புதிரை விடுவித்துக் கொள் என்று.  ஓ, அது என்னவோ மனித மயமாக்குகிறது என்று சொல்லிற்றே.. அறிவில்லாத செயல் என்று எண்ணியது என்பது வரை புரிந்தது, எதைச் சொன்னாள் என்பதும் புரியவில்லை.  அது அல்ல தற்சமயம் அவசரமாக செய்ய வேண்டியது.  ஜோயிக்கு வேறு பிரச்னைகள் தலைக்கு மேல் இருந்தன.  நினைக்க நினைக்க ஃபியோனா தவறாக சொல்கிறாள் என்ற முடிவுக்கு வந்தது.  அவள் நம்பட்டும், பிண்டரைன் திசில், மந்திர ஸ்படிகம் எல்லாமே வெறும் செப்படி வித்தை, கண் மூடித் தனமன நம்பிக்கை தவிர வேறொன்றுமில்லை  என்கிறாள் போலும்.  அவைகள் இயற்கையின் அழகை,  விலங்குகளின் தன்னிறைவை,  அவற்றின் இயல்பை இழக்கச் செய்து விட்டது என்பது போல ஏதோ சொன்னாள்.  ஹ ஹ

சிந்தனை நடையின் வேகத்தை குறைத்தது,  சற்று நின்ற பின் ஜோயி தன்  இடமும் வலமுமாக நடப்பதைத் தொடர்ந்தது.      ஓகே, நான் ஒரு மாற்றத்தை கொண்டு வருவேனா?  எந்த விதமான மாற்றம்?  எப்படி இந்த ப்ரொஃபெஸர் டிம் எனக்கு உதவி செய்யக் கூடும்.  அட நன்றாக இருக்கிறதே. ஹ ஹ, திரும்பவும் அந்த ப்ரோஃபஸியை படித்து பார்க்க வேண்டும். என்ன  மாற்றம், யாரை எப்படி பாதிக்கும் என்பதை தெரிந்து கொள்ள.  யப், அந்த ப்ரொஃபஸிதான் அடிப்படை அனைத்துக்கும். ஃபியோனா தெரிந்து கோண்டாள்.  அவள் நேரடியாகச் சொல்லாமல் அதை ரகசியமாக அசந்தர்பமாக வந்த வார்த்தை போல என்னிடம் சொல்லியிருக்கிறாள்.  அந்த வரி… என்னவாக இருக்கும் அதன் பொருள்?  கவிதைகளும், வரை படங்களும் சேர்ந்து. ஹ ஹ ..திரும்பச் சொல் … அட டா, இந்த ப்ரொஃபஸியை இன்னும் நெருக்கமாக வைத்துக் கொண்டு பார்த்தால் நான் புரிந்து கொண்டிருப்பேனோ. அல்லது யாராவது ஒரு எக்ஸ்பெர்ட் – இந்த விஷயத்தில் தேர்ந்த அறிவாளி. பழைய பத்திரங்களை படித்து புரிந்து கோள்ளக் கூடியவர், க்ரிஸ்டல் கற்களை ஆராய்ந்து பலன் சொல்பவர்,  படிகங்கள், ஏட்டுச் சுருள்கள் இவைகளை உள்ளங்கை நெல்லிக் கனி போல உடனுக்குடனே கண்டு சொல்பவர்.  வாழ் நாளையே இந்த  ஆராய்ச்சியில் செலவிட்டவர்.  மிஸ்டர் டிம், ஜோயி தன்னையறியாமல் தூங்கும் ஆமையாரை, ப்ரொஃபஸரை காலால் இடறியது.  மிஸ்டர் டிம், நீங்கள் எப்பொழுதாவது பத்திரங்கள், அதில்  சில புதிர்கள் என்று படித்திருக்கிறீர்களா?  ஜோயி ஆவலுடன் கேட்டது,  தூக்க கலக்கம் இன்னும் விலகாமலே ஆமையார் ஜோயியை வினோதமாக பார்த்தார்.  “பொறு…திரும்பச் சொல். எனக்கு தெளிவாக கேட்கவில்லை” 

ஜோயி விவரமாக ஆரம்பித்தது. ஸார், வந்து என்ன விஷயம் என்றால், நான் அதனுடன் பேசி விட்டு கிளம்பும் முன் ஃப்லெமிங்கோ ஏதோ சத்தமாக சொன்னாள்.  ஏதோ விடை போலத் தான் இருந்த து. விடை தானோ, புதிரோ.  ஸார், உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்”

“பையா, நீ யாரிடமாவது தெரியுமா என்று கேட்கும் முன், உங்களுக்கு நினைவிருக்கிறதா என்று கேள். அவர்களுக்கு என்ன தெரியும் என்பது, நினைவில் இருப்பதைத் தானே கேட்கிறாய்?”

“ஓ, மன்னிக்கவும், ஸார்.  நான் குறிப்பிட்டது அந்த ப்ரோஃபஸி  யை.  ஃபியோனா கூக்குரலிட்டபடி சொன்னது, சில கவிதைகளும் வரை படங்களூம் சேர்ந்து.. இன்னும் ஏதோ”

“சொல்கிறேன். எனக்குத் தெரியும்.  அது தான் அந்த மந்திர ஸ்படிகத்தின் ரகசியம். அதற்கு என்ன?”

“மந்திர ஸ்படிகத்தின் ரகசியம்… ஸார், என்ன சொல்கிறீர்கள்,  அது என்ன செய்யும் ?  எப்படி செய்யும்? என்ன செய்யும்? அது ஒரு புதிர் போல இருக்குமா? அந்த புதிருக்கு விடை என்ன? நீங்கள் என்ன அது என்பதை கணித்துவிட்டீர்களா?  எப்பொழுது..? 

“பையா, பதறாதே.  இப்பொழுது கேள். கவனமாக கேள். அந்த கல்லின் ரகசியம் என்பது ஒரு பத்திரம். நெடுங்காலத்துகு முன்  இந்த விலங்குலகம் ஆரம்பமான சமயம் – நான் சில ஆண்டுகளுக்கு முன் தெரிந்து கொண்டேன். மூளையை போட்டு குழப்பிக் கோண்டேன். அதன் பொருள் புரியவே இல்லை.  நிறைய பேர் அது ஏதோ தூசு படிந்த ஏட்டுச்  சுருள் என்று நினைத்து விட்டனர்.  ஆனால் அது மிக அரிதானது, முக்கியமானது.  அதனுடைய  குறியீடுகளை கண்டு கொண்டேன்.  சுருள் வளையம் வளையமான எழுத்துரு முன் பக்கமும்  பின் பக்கமும் என்ன என்பதை நான் இன்னமும் கண்டு கொள்ளவில்லை.  ஏன் நிறுத்தினேன் எங்கிறாயா, தவறு தான். ஆனால், பையா, அந்த ஏட்டுச் சுருளும், அதன் உள்ளடக்கமுமே நம்மை காப்பற்றக் கூடும் .. இப்போதுள்ள நிலையில் அது தான் தேவை.  சில ஆண்டுகள் முயற்சி செய்த பின் அதை புரிந்துள்ள நான் முயற்சிக்கவில்லை.  எந்த பிடிமானமும் இல்லாமல் எப்படி முடியும்?  அதனால் நான் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்தலானேன்.  அந்த கல்லின் ரகசியம் என்பதை என்னால் பதம் பிரித்து அறிய முடிய வில்லை , ஆனால். ஓரளவு புதிரை விடுவித்தேன்.  அதுவும் மற்ற ப்ரோஃபஸிகளுடன் இணைந்து தான் பொருள் படும் என்பதை  — அதன் பின் தான் ப்ரோஃபஸிகள் வந்தன.  அனைத்து ப்ரோஃபஸிகளும் சொல்வது என்ன என்பது, ஒரு முறை கல்லின் ரகசியம்  என்ற பத்திரத்தின் எழுத்துக்களை பதம் பிரித்து புரிந்து கொண்டால் மிக எளிதாகும்.  அதாவது நாம் உடனடியாக செய்வது, அதை பதம் பிரிந்து பொருள் கொள்வது தான்.”

ஜோயி திடுக்கிட்டது.  மலை போல கண் முன் எழுந்து நின்றன பொறுப்புகள், வேலைகள். முதல் வேலை டிம் ப்ரொஃபஸருடன் சேர்ந்து அந்த புதிரை விடுவிக்க வேண்டும்.  இல்லையெனில்  KABOOM – டமாலென்று வெடி  வெடித்தது போல்  அனைத்தும் தவிடு பொடியாகும்.  பூம் பூம் –  

“ஸார்,  மற்ற ப்ரோஃபஸிகளுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?”

“அந்த விஷயம் தான் எனக்கும் நெரடுகிறது.  பையா, நீ பார்த்திருப்பாயே, நான் பலவிதமான காகிதங்கள், பத்திரங்களை வைத்துக் கொண்டு படித்துக் கொண்டே இருந்தேனே, அது தான். படித்தேன், திரும்பவும் படித்தேன், மற்றொருமுறை படித்தேன்,  திரும்பவும் படித்தேன்,  எதுவுமே எனக்கு தெளிவாகவில்லை. இது தான் என்று அறுதியிட்டுச் சொல்ல எனக்கு சரியான விடை கிடைக்கவில்லை. 

“உங்களுக்கு  அந்த புதிர் நினைவிருக்கிறதா, மிஸ்டர் டிம்?”

“ம் , இதோ சொல்கிறேன். இது போலத் தான்…

ஒரு சுதந்திரமாக பறக்கும் பறவை தான் விரும்பியபடி எங்கும் பறக்கும், 

ஒரு மிருக காட்சி சாலையில் அடைத்து வைத்து கட்டாயப் படுத்த முடியாது

அப்படி ஒரு நாள் வந்தால், அது நிலைக்காது.

சிலருக்கு வீடு, பலருக்கு அப்படியில்லை

அந்த சமயம் என்ன சொல்கிறது என்பது புரியவில்லை. இப்பொழுது தெளிவாக புரிகிறது.  ஆமாம். ஏன் புரியவில்லை?”

“இது ஒரு வருவதைச் சொல்லும் குறிச் சொல் தானா, அல்லது எச்சரிக்கையா? அந்த கடைசி வரி, சிலருக்கு வீடு, பலருக்கு அப்படி இல்லை என்பது என்ன  ?  ஏதோ பொதுவாக சொன்னது போலத் தானே உள்ளது.

“பையா, அது தான் வேடிக்கை.  நான் இங்கு வருவதற்கு ஒரு வாரம் முன்பு கண்டு பிடித்தேன். அந்த பகுதி வெளிப் பட்டது.  அப்பொழுதான்  எழுதி சேர்த்தது போல இருந்தது.   ஏன், யாரால், எதற்கு என்று ஒன்றும் புரியவில்லை. யாருக்கோ எச்சரிக்கை என்பது போல், யாரை எச்சரிக்க,  அதுவும் நிச்சயமில்லை. ஆனால், இது எச்சரிக்கை தான். 

பகுதி – 19

நீலா ஆரம்பத்தில் நினைத்தது போல அந்த புதிருக்கு விடை காண்பது சுலபமாக இல்லை.  அந்த கல் சுலபமாக புரியும்படி எழுதக் கூடாதா? உஃப் , தான் ஏதோ புரியாத புதிரைச் சொல்கிறோம் என்று நாடகமாடுகிறது. தனக்கு ஒரு முக்யத்வம் கிடைக்க.  இது நடக்குமா” ஒரு கல், என்னதான் மந்திர ஸ்படிகம் தான் ஆனாலும்,  குழப்பங்கள் நிரம்பிய வகையில், ஒரு காகிதத்தில், – அதுவும் புரியாத சிணுங்கல்களாக ?அரையும் குறையுமாக, அமா, அது தான் செய்ததா?   இல்லை. அது தன் போக்கில் ஏதோ எழுதிவிட்டது- ஒரு நாள், துரதிர்ஷ்ட வசமாக ஒரு மனிதப் பெண் வந்து குழம்பட்டும் என்று- அலுக்கும் வரை முயற்சி செய்யட்டும், போரடித்து திண்டாடட்டும் என்று..   ஏற்கனவே இந்த இடத்தை விட்டு எப்படா கிளம்புவோம் என்று இருந்த அந்த பெண்ணின் மன நிலை இன்னும் ஒன்றரை பங்கு அதிகமாகி தவிக்கட்டும் என்று…  சட்… இப்படி ஒரு இடத்துக்கு போனோம், இந்த அனுபவங்கள் எல்லாம் நடக்கவேயில்லை என்பது போல மறந்து விட நினைத்தாள் அல்லவா? .. கணித கணிப்புகள் உதவவில்லை. ஆனால் மாஜிக் என்று சொன்னபின் அது எந்த வரையறைக்கும் உட்படாது என்பது தானே பொருள்.   ஏதோ ஒரு மாஜிக் தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி வைக்கிறதாம், அதை நான் வைத்துக் கொண்டு நேரத்தை வீணடிக்கவாம் .. சட்   பத்து நிமிஷங்கள் இப்படி சென்றது. நீலா கண்டு கொண்டதெல்லாம் புதிர்கள், ப்ரோஃபஸிகள். வருமுன் சொல்லும் குறிச் சொற்கள் எல்லாமே வெறும் வீண் வார்த்தை ஜாலங்களே.   சுவாரஸ்யமற்றவை, புரிந்து கொள்வதும் கடினம்.  யார் இதைக் கண்டு பிடித்தார்கள்,  வேடிக்கை வினோதம் என்று கொண்டாடினார்கள்.  ஒ.. தன் கையில் இருந்த தூசு படிந்த கோப்பை -ஃபைல்-  வைத்து விட்டு நிமிர்ந்தாள். மிகைலா தான் சொன்னாள்.  இது சுவாரஸ்யமாக இருக்கும் என்று.  மிகைலா ஒரு வினோதமான பிறவி.  எப்படித் தான் எல்லா ஃபைல்களையும் தேடி கண்டு பிடித்து ப்ரோஃபஸிகள், புதிர்கள் என்று படித்து படித்து கொண்டு வந்து கொடுத்தாள்.  என்னவோ அவள் வாழ்க்கையே இவைகளை தான் சார்ந்திருக்கிறது என்பது போல. இருக்கலாம். திரும்பவும் அந்த ஏட்டு சுருளை கையில் எடுத்தாள். வேண்டா வெறுப்பாக புரட்டினாள். 

“மிகைலா, நாம் செய்வது சரிதானா? ஏதோ தவறு.   எந்த பிரச்னையைத் தீர்க்க  நினைக்கிறோம். அந்த பிண்டரைன் திசில் விஷயம் தானே.   அதனால், நாம் நமது கவனத்தை அந்த  மாயக்கல் பற்றிய விஷயம், ரகசியம் என்று சொன்னதை தீவிரமாக ஆராய்ந்தால் ஒருவேளை பலன் இருக்கலாம்.  அந்த கல் தானே திசில் என்ற உணவை உண்டாக்கியது.  ஸோ, நாம் கவனமாக அந்த கல் எங்கே இருக்கிறது, என்ன செய்கிறது, யாரிடம் இருக்கிறது என்ற வழியில் யோசிப்போம், என்ன? நான் சொல்வது சரி தானே? “

“ஸரி தான்.  அதுவும் ஒரு நல்ல வழி தான். ஆனால், நமக்கு முதலில் தெரிய வேண்டியது இந்த ப்ரோஃபஸி என்ன சொல்கிறது என்பதை தான்.  நன்றாக அலசி ஆராய்ந்து பார்த்து விட்டேன். இது சாதாரணமானது அல்ல.  ப்ரோஃபஸி தானா ? அதை விட அதிகமாக புதிராக எனக்குப் படுகிறது.  நான் நினைப்பது..”

“எல்லா ப்ரோஃபஸிகளுமே புதிராகத் தானே இருக்கின்றன”

“அதுவல்ல நான் சொன்னது. விஷயம் இதில் தான் – இது எதையுமே முன்கூட்டி சொல்வதாகத் தெரியவில்லை.  பொது கருத்தை கவிதையாக சொல்லியதோ, கவனித்து கேள்.

“ஒரு சுதந்திரமான பறவை தன் விருப்பம் போல எங்கு வேண்டுமானலும் பறக்கும். அதை ஒரு காட்சி  சாலையில்  வைத்து  பறக்கச் சொல்லி கட்டாயப் படுத்த முடியாது. ஆனால் ஒரு நாள் வரும்.  அந்த நாளை திரும்ப காண முடியாது. அந்த நாள் வந்து விட்டது. ‘ இதை ஒரு ப்ரோஃபஸி என்று சொல்லலாம். எதையோ முன் கூட்டி சொல்கிறது.”

சின்ன பெண்ணே, கேள். அந்த கல்லின் ரகசியத்தில் என்ன சொல்லிற்று, if. – அதாவது ஒருவேளை …அதற்கே தெரியாது இந்த செயல் நிச்சயமாக  நடக்குமா நடக்காதா,  தெரியாது நடக்கலாம், நடக்காமலும் போகலாம்.   “

“ஓ அது சரி – ஆனால் அது என்ன ?”

“உண்மையாகவே நிச்சயமாக தெரியவில்லை.  மிகைலா சொன்னாள். “ அது சூரிய ஓளியையோ, வானவில்லையோ சொல்லவில்லை என்பது வரை புரிகிறது. “

“ நம்மை எச்சரிப்பதாக இருந்தால் ?  அந்த ப்ரோஃபஸி , இல்லை புதிர், எச்சரிப்பது போலவும் தெரிகிறது.  நான்கு வரிகளே இருப்பது போல வெளிப் பார்வைக்கு இருந்தாலும், இதன் உள்ளடக்கம்  ஆழமானது.  அச்சம் தரும் விளைவுகளாக இருக்கலாம் என்றும் படுகிறது. “

“அப்படியா?” மிகைலா கேட்டாள்.  எதைப் பற்றி?”

“ நிச்சயமாக தெரியவில்லை.  ஆனால் அந்த பறவை என்பது ஒரு உருவகமாக – எதையோ குறிப்பிடுவது போல  – நடக்கும் ஒரு நிகழ்ச்சியையோ, நடந்ததோ,  சந்தோஷமாக இருப்பதாக இல்லை. நீ சொல்வது சரியே” 

திரும்பவும் நீலா அந்த பத்திரத்தைப் பார்த்தாள். ஒரு நிமிஷம். ஒரு எண்ணம் அவள் மனதில் தோன்றியது. திரும்பவும் பத்திரத்தை படித்தாள். அந்த எண்ணம் வளர் பிறை, தேய்பிறை போல தோன்றுவதும் மறைவதுமாக இருந்தது.  ஒரு உருவமில்லாத  ஒரு குமிழ், தானே உருவம் கொள்ள முயலுவது போல, மேலும் ஏதோ ஒன்று, அந்த எண்ணத்திலிருந்து மற்றொன்று கிளம்பி  வேறு ஒன்றை ஒளியூட்டியது. அந்த புதிய எண்ணம் மற்றொன்றுக்கு உயிர் கொடுத்தது.  பிறகு..வெறும் எண்ணமாக இருந்தது,  ஒரு கருத்தாக உருப் பெற்றது. அந்த தெளிவில்லாத உருவம் மேலும் மேலும் வளர்ந்து ஒரு வடிவம் கொண்டது.  அந்த கருத்து கூர் கொண்டது.  மேலும் தெளிவு, மேலும் தெளிவு..இன்னமும் கூர்மையாக, ஒளியுடையதாக, ஆழ்ந்த பொருளுடையதாக, .. நீலா அதை வெளிப் படுத்தினாள்.  ஒருவருடைய மனதில் பிறந்த கருத்து மற்றொருவரின் மனதில் பதியச்  செய்து  அவரும் உணர்ந்தால் தானே அது பொது கருத்தாக  வளர முடியும். 

“மிகைலா, எனக்கு ஒரு வினோதமான எண்ணம். இப்படி இருந்தால், அந்த கல் தான் அந்த பறவை என்று வைத்துக் கொண்டால், அது ஒரு தீர்வைத் தரும்.  இல்லையா? எல்லாமே அந்த புதிரை தொடருகின்றன. அந்த மந்திர ஸ்படிகம் தான் ஒருவித சுதந்திரமான பறவை. .  அது விலங்குகளின் போக்குவரத்துகளை பொறுப்பேற்று நடத்துகிறது.  உங்கள் உணவான பிண்டரைன் திசிலை வளர்க்கிறது.  திடுமென ஒரு தடங்கல், வேண்டாத ஒன்று நடைபெறுகிறது.  பல மாறுதல்கள் தொடருகின்றன.  அதிலிருந்து என்னுடைய எண்ணத்தின் இரண்டாம் பாகம் எழுந்தது.  ஒருவேளை நாம் ஃபியோனா செய்ததை திரும்பவும் ஆராயவேண்டும்.  அவள் ஏதோ செய்து அந்த மந்திர ஸ்படிக கல்லை தடுமாற செய்திருக்கிறாள். இதுவரை ஃபியோனா வின் செயல் நமது   கவனத்துக்கு வரவில்லை.  அதில் சிறப்பாக  நாம் எதையும் காணவில்லை.  அவள் வந்ததும், மறைந்ததும், அது பற்றி மேலும் தேடுவோம்.  ஒரு வேளை, ஒரு வேளை தான், நமக்கு ஏதேனும் ஆதாரம் கிடைக்கலாம். என்ன நினைக்கிறாய்”

மிகைலாவின் முகம் உணர்ச்சிகளின் குவியலாக இருந்தது. வெறுப்பா, எரிச்சலா, கோபமா எல்லம் கலந்ததா? இந்த மனிதர்களும் இவர்களது எண்ணப் போக்கும், அபத்தமான கருத்துகளும், தலையை ஆட்டியபடி வெளியேறினாள். நூலகத்தை விட்டே வேகமாக சென்றாள்.  எதுவானாலும் பதில் கூட சொல்லாமல்..நீலாவுக்கு என்னவோ போலிருந்தது.  பரவாயில்லை, இப்படி நடந்து கொள்வது மிகைலாவுக்கு புதிதல்ல.  ஒரு நிமிஷம் வெகு நேரம் போல கடந்தது. மிகைலா திரும்பி வந்தாள். அவளது சுபாவமான எரிச்சலுடன் கூடிய முக பாவம்.  கையில் ஒரு பெரிய ஃபைல் –  அதன் மேலட்டையில் கொட்டை எழுத்தில்  அழுத்தமாக சிவப்பு மார்க்கரால் ஃபியோனா என்று எழுதியிருந்தது.  

“இந்தா, என்றபடி மிகைலா அந்த கனமான ஃபைலை மேசை மேல் தொப்பென்று போட்டாள். உனக்கு வேண்டிய ஃபியோனா கதை பூரா இதில் இருக்கிறது. ஒரு பகுதி அவள் மறைந்த பிறகு எழுதப் பட்து போல இருக்கும். 

நீலா ஃபைலை திறந்தாள். பல பக்கங்கள்  சுவாரஸ்யமாக எதுவும் இல்லை. வேகமாக ஓட்டிக் கொண்டு போனாள்.  பிறகு ஃபியோனா மறைந்தது பற்றிய விவரங்கள், பலருடைய கருத்துக்கள், அதன் பின், சமீபத்தில் சேர்த்தாக அவளுக்குத் தோன்றிய ஒரு பேப்பரை கையில் எடுத்தாள்.   பழகிய கையெழுத்து- யாரோ மந்திர ஸ்படிகத்தின் ரகசியம் என்பதை நகல் எடுத்திருக்கிறார்கள்.  சில இடங்களை வட்டமிட்டோ, வர்ணமடித்தோ பார்த்தவுடன் கவனத்தை கவரும்படி – அருகிலேயே படித்தவரின் குறிப்புகள்.  நீலா பக்கத்தை புரட்டினாள்.  அதே கட்டுரையில் பிண்டரைன் திசில் பெரிய அளவில் வரையப் பட்டிருந்தது. அத்துடன்  அதை படித்தவர், தனக்கு ஏற்பட்ட சில கேள்விகளை எழுதி வைத்திருந்தார். முக்கியமாக அந்த புதிரின் விடைக்கும் பிண்டரைன் திசில் தாவரத்துக்கும் உள்ள உடன்பாடுகள், எப்படி ஒன்றையொன்று ஆதரிக்கின்றன என்பது பற்றிய விளக்கம்.  அடுத்த பக்கத்திலும் அப்படியே. அடுத்த முன்றாவது பக்கத்தின் முடிவில் திரும்பி “என் வீட்டிற்கு திரும்பி போகிறேன்” என்ற வாசகம் காணப் பட்டது. மேலும்  சில விவரங்கள்- எப்படி விலங்குலகும் மனிதர்களின் பூ லோகம் போலவே  மாறி வருகிறது, அது தொடர்ந்தால் விலங்குலகம் அழியும் என்பதாக ஒரு வாக்கியம்.  இது என்ன புதுமையான எண்ணம்- முரட்டுத் தனமான சிந்தனை. அதை விட அதிக வித்தியாசமான, எதிர் பாராத ஒரு தலைப்பில் ‘Home to some But nor for all’ என்ற வாசகம் – நீலா இந்த வாசகத்தை நினைவு கூர்ந்தாள். அத்துடன் அந்த கையெழுத்தையும் தான் ஏற்கனவே பார்த்திருப்பதாகவும் அறிந்தாள்.  எங்கே, எங்கே ….ஓ கோஷ்..முன் படித்த ‘மந்திர ஸ்படிகத்தின் ரகசியம்’ என்ற பத்திரத்தின் கையெழுத்தும் இதே  தான்   .. இரண்டும் ஒருவருடைய கையெழுத்தே…

“மிகைலா, இதைப் பார்,  இரண்டும் ஒரே கையெழுத்து தான். ஃபியோனா தான் இந்த குறிப்பை எழுதியிருக்கிறாள்., நான் என்ன நினைக்கிறேன்…

மிகைலா அதை வாங்கி படித்தாள். பிரமிப்பும், இன்னும் சில உணர்ச்சிகளும் அவள் முகத்தில் நடனமாடின.  முக்கியமாக ஆச்சர்யம்.  “இது ஃபியோனாவின் கையெழுத்து தான்.  எதற்காக இப்படி புதிர் போட்டு எழுதவேண்டும். “ மிகைலா பலமாகவே யோசித்தாள்.  “என்ன நினைத்து..நாம் பார்க்க வேண்டும் என்று எண்ணியா?  என்ன பொருள் இதற்கு? சிலருக்கு வீடு, பலருக்கு இல்லை – என்ன புதிர் இது. அந்த மந்திர ஸ்படிகமா? நா ..இல்லை இல்லை அதில் அர்த்தமே இல்லை.  வீடு என்று எதைச் சொல்கிறாள்? 

“ஓரு தடையமும் இல்லை.  நான் நினைப்பதை வெளிப்படையாகவே சொல்கிறேன்.  இன்னமும் குழந்தைத் தனமான ஐடியாவாகவே எனக்குத் தோன்றுகிறது.  அவள் சொல்லும் வீடு இந்த விலங்குலகம் தானா” அப்படி இருந்தால்.. இருக்காது.  இங்குள்ள அனைவருக்குமான வீடு. –  இந்த இடம் அவளுக்கு வீடு இல்லையாமா, போகட்டும் இது உங்கள் அனைவருக்குமான வீடு.  “மிகைலா களைத்து ஓய்ந்தாள். 

பகுதி-20

ஓகே.  இது ஒரு எச்சரிக்கையாகத் தான் வந்திருக்கிறது.  ஆஹா, அருமை.  இந்த எச்சரிக்கை எதற்காக, எதை குறித்து?  நிச்சயமாக நன்மையை குறிப்பதல்ல. அதனால், ஜோயி நினைத்தது.  இதை பொருட்படுத்த வேண்டாம். முன் அறிவிப்பாக அமைதியும், செல்வ செழிப்பும், உலகம் நலமாக இருக்கும் என்பது போன்ற ஊகங்களை வெளியில் சொன்னால் போதும்.  இது ஒரு புதிர், இதுவரை யாரும் விடை காணாத, காண முடியாத ஒரு புதிர், இது ஏதேதோ சொல்வதை நம்ப வேண்டுமா?   பொறுமை இருப்பவர்கள் கண்டு சொல்லட்டும்.  இன்னமும் புலனாகாத கேள்வி மனதை குடைந்தது. யார் அந்த பறவை?  முதலில் ஜோயி எண்ணியது, இது  ஒரு உருவகம் அல்லது உவமை. விலங்குலகை  பறவையாக உருவகப் படுத்துவது.   விலங்குலகை ஒரு பறவையாக வைத்து.. என்பதாகதான் புரிந்து கொண்டது.   ஒருவேளை வெறும் கவிதை  சாதுர்யமாக இருக்கலாம். எதுவும் குறிப்பிட்டு சொல்லவில்லை.  ஒரு வேளை ஏற்கனவே நடந்ததை கவிதையாக எழுதியிருக்கலாம்.  நடந்ததா ? அதுவும் நினைக்கவே பயங்கரமாக – என்ன நடந்தது?  ஃபியோனா அவ்வளவு நீண்ட உரையில் என்னதான் சொன்னாள்.  அவளுக்கு விலங்குலகம் பிடிக்கவில்லை என்பது ஒரு விஷயம்.  அப்படியிருக்க ஏன் திரும்பி போக விரும்புகிறாள். ? சில  விலங்குகள் அந்த இடத்தை விரும்புகின்றன, தனக்கு இல்லை என்றாள்.  ஃபியோனா இன்னும் ஒன்று சொன்னாள். அவள் தாய் வீடு போக வேண்டும் என்றாள்.  ஜோயியை பொறுத்தவரை விலங்குலகம் வசிக்கத் தகுந்த இடமே. பிண்டரைன் திசில் நல்லதொரு  மாற்று உணவு. மாமிச உணவை தவிர்க்கலாம். தானே மாமிச பக்ஷிணி என்று இருந்தாலும் மற்ற சாகபக்ஷிணிகளான எல்லோரிடமும் நட்பாகத் தானே இருந்திருக்கிறேன். நல்ல இடம். மாஜிக், மாயம் ஒரு புறம். அடர்ந்த காட்டு விலங்குகளின் கொடூரம் ஒரு புறம், ரசிக்கும் படியான கலவையாக ..அது ஏன் ஃபியோனாவுக்கு பிடிக்கவில்லை.  அடர்ந்த வனம்,  வன விலங்குகள்,  அணுக முடியாத   அதன் கொடூரமாகவே இருக்க வேண்டும் என்கிறாளா?  திரும்ப அவள் பேச்சை அசை போட…அவள் சொல்ல வந்த முக்கியமான விஷயம் அவளுக்கு அந்த விலங்குலகம் பிடிக்கவில்லை, அது அவள் இடம் அல்ல- மற்ற விலங்குகள் பிடித்தால் இருந்து விட்டு போகட்டும் அவள் தன் வீட்டிற்கு செல்வாள்.  அவள் வீடு? எது?  தன் கையிலிருந்த பேப்பரை பார்த்து,  Home to some But not for All.  என்று திருப்பி திருப்பி சொல்லி பார்த்துகொண்டது.   

….

கேள்வியே புரியாத பொழுது, அதன் விடையை எப்படி கண்டு கொள்வது, சிரமமான வேலை – பலவிதங்களில் அந்த விடை கிடைக்கலாம். எதையோ தீவிரமாக தேடி கண்டுபிடிக்க , மனம் முழுதும் அதே எண்ணமாக இருக்க,    எதிர் பாராத விதமாக ஒரு தீர்வு வரலாம். அல்லது மற்ற எதையோ அலசி ஆராயும் பொழுது, புதிதாக ஒரு பிரச்னைக்கு தீர்வு முளைத்து எழலாம்.   ரொம்ப கஷ்டமான கேள்வி இது, ஒருவராலும் கண்டு பிடிக்கவே முடியாது என்று அடித்து சொல்லி,  அந்த கேள்விக்கு  பதில் தேடுவதே போர், வீண் வேலை என்று முயற்சியையே கை விடலாம்.  மற்றொரு சமயம் சுலபம் என்று நினைத்து செயலில் இறங்கி, அனாவசியமாக குழம்பி, வெகு நேரம் மன்றாடிய பிறகு கண் முன்னே இருந்திருக்கிறது இதன் தீர்வு, தெரியவில்லையே என்றும் நடக்கலாம். அப்படி ஒன்று நிகழ்ந்து விட்டால், மற்ற மலை போல தொன்றிய அத்தனையும் பொல பொலவென்று  தானாக விழுந்து அதனதன் இடத்தில் இருப்பது புலனாகலாம். அது தான் ஜோயியுக்கு நிகழ்ந்தது.  

அது தான் அந்த காகிதத்தில் இருந்தது.  சிலருக்கு  வீடு, எல்லோருக்கும் அல்ல.  அந்த விலங்குலகம் சிலருக்கு வீடு போன்று மகிழ்ச்சியாக இருக்கிறது.  எல்லோரும் அவ்வாறு மகிழ்ச்சியாக இல்லை.  பொறு, ஒரு  நொடி,  அவளுக்கு அது.வீடு இல்லையாமா? விலங்குலகம் அங்குள்ளோர் அனைவருக்கும் தன் சொந்த வீடு போல பாதுகாப்பானது. அப்படித்தான் இதுவரை அவன்  நினைத்திருந்தான்-  அப்படி இல்லையா, எல்லோரும் அங்கு மகிழ்ச்சியாக இல்லையா?  சில விலங்குகளுக்கு அதன் மாஜிக் மாயம், என்பதும்,  வனப்பகுதியின்  தனித் தன்மையும் நம்ப முடியாதபடி இருந்தாலும் ஏதோ ஒன்று அவர்களை அதை விரும்பி ஏற்று கொள்ள வைத்துள்ளது என்பது உண்மை.  அப்படி விரும்பாத சிலரும் அங்கு இருந்திருக்கலாம் என்று எண்ணவேயில்லை.  ஃபியோனா அதைத் தான் சொன்னாளோ, நினைக்க நினைக்க ஏதோ புரிவது போல இருந்தது.  பொறு, ஃபியோனா விலங்குலகம் தனக்கு சொந்த வீடு போல இல்லை என்றால், மற்றும் சிலரும் அதே போல நினைக்கிறார்களா,  அதுவா அவள் சொன்னதன் பொருள்.  ஃபியோனா திரும்ப பூமிக்கு சொல்லாமல் போன பின், என்ன நடந்தது.?  மிகைலா, எட்வர்ட்,  டீனா மூவரும் சேர்ந்து ஒரு கணக்கெடுத்தனர்.  இதே கேள்வி தான் அங்கு வசிப்பவர்களிடம் கேட்கப் பட்டது. விலங்குலகம் உங்களுக்கு வசதியாக உள்ளதா? பிடித்ததா? 95% – பிடித்தது, வசதியாக இருக்கிறோம் என்றன.  ஓ அந்த 5% அவர்கள் என்ன சொன்னார்கள்? அந்த பறவை என்ற  சொல் ஒரு மறை பொருள் கொண்டது.  அது ஒரு உருவகமே.  கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு அலங்கார வார்த்தை. என்ன சொல்ல வந்தது அந்த ப்ரொஃபஸி?   ஏதேதோ சொற்கள், எனக்கு சரியானபடி புரியவில்லை தான். சுதந்திரம், அதை பிடித்து வைக்க முடியாது, இதெல்லாம் எதை அல்லது யாரை குறிக்கின்றன. இதுவரை விலங்குலகமே பறவையாக குறிப்பிடப் பட்டது என்று தான் நினைத்தது சரியல்ல என்று முதன் முறையாக ஜோயி ஒத்துக் கொண்டது.  மாயக்கல்லின் குறிச் சொல்லில், வீடு, அதுவும் சொந்த வீடு என்று எதுவும் சொன்னதாக தெரியவில்லை.  யாரோ விலங்குலகை ஒரு மிருக காட்சி சாலை போல அடக்கி வைத்திருப்பார்களா? அப்படியானால் யாரது? ஏன்? ஒரே ஒரு விஷயம் இங்குள்ளோர்  விரும்பியோ, விரும்பாமலோ ஏற்றுக் கொள்ள கட்டாயப் படுத்தப் பட்டார்கள் என்றால் அது அந்த மந்திர ஸ்படிகம் மட்டுமே. 

அந்த கல், மந்திர ஸ்படிகம்.  அது தான் அந்த புதிரின் பேசு பொருள்.  ஃபியோனா அந்த கல்லை நிர்பந்தப் படுத்தி தான் வெளியேற உதவ வைத்திருக்கிறாள். அதற்கு அவள் என்ன செய்திருப்பாள்.  அந்த கல்லின் உதவி இன்றி வெளியுலகம் செல்ல முடியாது என்று விலங்குலகம் நம்ப வைக்கப் பட்டிருக்கிறது என்று தானே ஆகிறது. அதில் ஒரு இடை வெளி, ஒரு விதி விலக்கு உள்ளதா? என்ன செய்து அவள் வெளியேயிருப்பாள். ஆகா, நான் நினைப்பது மட்டும் சரியானால்… 

பகுதி-21

‘மானிடர்கள் போல மாற்றுவது’ இதற்கு என்ன பொருள் ? 

மிகைலா, நீலா கையிலிருந்த காகிதத்தை வாங்கி பார்த்தாள். அவள் முகமும் நீலா போலவே குழம்பிய உணர்ச்சியையே காட்டியது. ஃபியோனா. ஏதோ காரணத்திற்காக எழுதியிருக்கிறாள் ‘HUMANIZATION… GLAD I’M LEAVING.BINDARIAN THISTLE, MY WING… IT’S HORRIBLE, THAT’S WHAT IT IS… THE WILD’S BEING STRIPPED AWAY.’.  என்ன சொல்ல வருகிறாள்.. விலங்குலகம்…தன் தனித் தன்மையை இழந்து விட்டது, மனிதர்களைப் போல ஆகி விட்டது என்கிறாள். அது அவள் கணிப்பு . இருக்கட்டும் அடுத்தது, சந்தோஷமாக வெளியேறினாள். பிண்டரைன் திசில் – அவளை என்ன செய்தது. அதை ஏன் குறை கூறுகிறாள். வனாந்திரம் – இந்த அடர்ந்த காடு -இதற்கு என்ன குறையாம்? என்ன ஆயிற்று?

“யா..நீலா அந்த நூலகத்தை சுற்றி நிமிந்து பார்த்தாள். இந்த இடம் எப்படி மனிதர்கள் போல ஆக்கப் பட்டது என்கிறாள்.  எதை வைத்து?  யாரும் எதையும் மாற்றவில்லை.  மனிதர்கள் போல …என்ன பொருள் இந்த வார்த்தைக்கு?  நோப்”

“நான் என்ன நினைக்கிறேன் என்றால், இந்த நூலகம் வைத்து பராமரிக்கிறோமே, அதைச் சொல்கிறாள் போலும். அவள் மாஜிக்  ஒரு புறம்,  வானாந்தரத்தின்  கொடூரம் ஒருபுறம் இரண்டையும் இணைத்து  வைத்திருப்பது மனிதர்கள் செயல் போல உள்ளதாக நினைக்கிறாளா?  பார்க்கப் போனால்,  ..மிகைலா ஃபியோனாவின்  குறிப்பை மேலும் புரட்டினாள். அவள் தேடிய குறிப்பு கிடைத்து விட்டது.  அதை படித்தாள்.” உண்மையில் இந்த பிண்டரைன் திசில் என்பது மனிதர்களின் பக்குவப் படுத்தப் பட்ட இறைச்சியே.  PROCESSED MEAT – “ மிகைலா அதை ஏற்கவில்லை. அது ஒன்றும் பக்குவப் படுத்தப் பட்டதல்ல.  அவள் எதிர்ப்பது வனாந்தரத்தின் ஏக போகமான கொடூர இயல்பும், மந்திர ஸ்படிகத்தின் மாஜிக்கும் இருவேறு துருவங்கள். அதை இணைத்து விட்டோம் என்று நாம் நினைக்கிறோம், அவளுக்கு அது சம்மதமில்லை போலும். அவள் வரையிலான தனிப்பட்ட கருத்து.  ஏதோ காரணமும் இருக்கலாம்.

“ஸோ, என்ன சொல்கிறாய், வனாந்திரம் அதன் பழைமையான கொடூரங்களுடனேயே இருக்க வேண்டுமா?  விலங்குலகம் என்று வேண்டாமா?”

“யா-  விலங்குலகம் இன்னமும் வனாந்திரத்தின் ஒரு பகுதி தான். நாம் சில வழக்கங்களை  மாற்றி இருக்கிறோம். சில செயல் மரபுகளை விட்டு விட்டோம்.  சில பொருட்கள் தேவையில்லை என்று நிறுத்தி விட்டோம். இது ஒரு சுகமான இருப்பிடமாக விலங்குகள் கருத வேண்டும் என்று நினைத்து இந்த மாறுதல்களைச் செய்தோம்.  ஆனால், ஃபியோனா விரும்பியது அசல் வனாந்திரம் அதனுடைய இயல்பான கொடூரங்களுடன்.  அங்கு இந்த மந்திர ஸ்படிகம் இருக்காது. பூமி…”

“ஓரு வார்த்தைக்கு இப்படி சொல்வோம்,  ஃபியோனா மட்டுமல்ல – இன்னும் சிலர் விலங்குலகை உண்மையாகவே விரும்பவில்லை என்று வைத்துக் கொள்வோம். இருக்க  கூடும்  என்று தோன்றவில்லை.  ஒரு வேளை, எனக்கு தீர்மானமாக தெரியவில்லை, இருந்தாலும் ஃபியோனா மட்டும் தான் விலங்குலகை விரும்பவில்லை, என்பது சந்தேகமாக இருக்கிறது.  மேலும் சிலர் இருக்ககூடும்  அவள் அளவுக்கு வெறுப்பு இல்லையெனிலும், மிக உயர்வாக நினைக்காமல் இருக்கலாம்.  அதனால் நான் குற்றம் சொல்வதாக நினைக்க வேண்டாம். நான் பார்த்தவரை இது மிக அமைதியான இடம். “

மிகைலா ஏதோ  கண்டிக்கும் குரலில் சொல்ல நினைத்தாள் போலும், பாதியில் நிறுத்தி, யோசனையில் ஆழ்ந்தாள்.  புதியதொரு செய்தியை நினைவு கூர்ந்தவள் போல …

“ஐந்து சதவிகிதம்!  95% , அன்பான பெண்ணே, நீ சொல்வது சரியே. முழுமையான ஐந்து சதவிகிதம்! அது ஏதோ கோளாறு என்று அதிகமாக மதிப்பு கொடுக்கவில்லை.  ஆ, என்ன மெத்தனம், அதை பற்றி சிந்திக்காமல் விட்டது. … என் அருமை பெண்ணே

நீலா மிகைலாவையே பார்த்துக் கொண்டிருந்தாள். திடுமென அவளுக்கு இரண்டாவது தலை முளைத்து, அது ஷேக்ஸ்பியரின் மூளையைக் கொண்டிருக்குமோ… அதில் க்ரேக்க மொழியின் தனித்வமான சொற்கள் முளைத்திருக்குமோ…

“எது 5% எது 95% – ?”

“இந்த ஃப்லெமிங்கோ  நிகழ்ச்சிக்கு,  அதாவது அவள் வெளியேறிய பிறகு, the grand elders பெரியவர்கள், நான் உட்பட ஒரு கணக்கெடுத்தோம், விலங்குலகில் யார் யார் ஆதரிக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள. 95% திருப்தியாக இருப்பதாக சொன்னார்கள். அத்துடன் விட்டு விட்டோம். மீதி ஐந்து சதவிகிதம் ஆதரிக்கவில்லை என்பதை ஒரு பொருட்டாக நினைக்கவில்லை.  

“யா, வினோதமான பிரச்னை.  இந்த இடம் அருமையாக இருக்கிறது. நீங்கள் பிண்டரைன் திசில் என்பதை கண்டு கொண்டீர்கள். நட்புடன் விலங்குகள் வளைய வருகின்றன.  எல்லாமே பாராட்டுக்குரியனவே.  “

“ஆம். இப்பொழுது புரிகிறது, அந்த ஐந்து சதவிகிதத்தினருக்கு திசில் உணவு ஏற்புடையதாக இல்லை. அவர்கள் வனாந்தரத்தின் இயல்பான வேட்டை முதலான கடும் செயல்களை விரும்பலாம். ஓ, என்ன ஒரு பொறுப்பின்மை.  உடனடியாக செய்யவேண்டியதைச் செய்து விட்டு அந்த விஷயத்தை கவனிக்கிறேன்.”

“ நீலா   அது சரி என்பது போல தலையசைத்தாள். திரும்பவும்  அதே ஃபியோனா குறிப்பை ஆராய்வோம் என்று கிளம்பியபின் அவள்  சிந்தனை வயப்பட்டாள். வேறு ஏதொ நினைவு, அவள் புருவத்தை நெரிப்பதிலும், உதட்டை கடிப்பதிலும் தெரிந்தது.”

“நமக்கு இருப்பது அரை மணி நேரத்திற்கும் குறைவாகவே. அதற்குள் பிண்டரைன் திசில் இங்குள்ளோருக்கு கிடைக்கச் செய்ய வேண்டும்.  எப்படி? மிகவும் சங்கடமான நிலைமை. இதை எப்படி சரி செய்யப் போகிறோம். எவ்வளவு கடினமான செயலானாலும் நாம் செய்யத் தயார். ஆனால் அந்த மந்திர ஸ்படிகம் திசில் உணவை தயாரிக்கச் செய்வது நமது சக்திக்கு அப்பாற்பட்டது.   மாயக்கல்லை நிர்பந்திக்க முடியுமா?”

“மிகைலா திகைத்தாள். கவலை, செய்வதறியாத குழப்பம் அவள் முகத்தில் படர்ந்தது.   கையிலிருந்த குறிப்புகள் அடங்கிய கோப்பை ஒரு முறை பார்த்தாள். பின் நிமிர்ந்து “நீ.., நீ சொல்வது சரி.   எனக்கும் அது பற்றி அறிவு இல்லை. திசில் உணவு தாவரத்தை திரும்ப வளரச் செய்வது எப்படி?  ஆனால் இதுவரை நாம் பல விஷயங்களை தெளிவாக புரிந்து கொண்டுள்ளோம். “

“ஏதுவுமே புலானகவில்லை.  பிண்டரைன் திசில் தாவரம் திரும்ப வளர்த்து விட்டோம் என்றாலும் அது மட்டுமே, நாம் எதிர்பாராத  வித்தியாசமான  தற்போதைய நிலைமைகளை சரியாக்கி விடுமா ?”

மேலும் ஏதோ சொல்ல நினைத்தவள் நிறுத்திக் கொண்டாள். “மாயக்கல்லின் ரகசியம்” என்பதை தெரிந்து கொண்டு விட்டோம் அல்லவா? 

“முழுவதுமாக இல்லை.  அப்படி அதை தெரிந்து கொண்டும் ஒன்றும் பயனில்லை. இதுவரை”

“ஓ, வா, வா முழுவதுமாக சொல்லு..  தப்பையே கண்டு சொல்லும் ஒரு பாத்திரம், பிரசித்தமான நாவலில்  வருமே, அது போல பேசாதே. Debbie Downer தானே அது?

“ நான்  Practical Penny.”  அந்த Debbie Downer போல குறையே சொல்பவள் அல்ல.

“What’s a Practical Penny?” மிகைலா கேட்டாள்.

“தெரியாது. நீ சொன்ன Debbie Downer என்பது என்ன?

“உனக்குத் தெரியும் .. அளக்காத” 

“அப்போ உனக்கும் தெரியும் நான் சொன்னதும்.

இருவரும் சிரித்து விட்டனர். சூழ் நிலையின் இறுக்கம் குறைந்தது போல 

“ஓகே, Practical Penny.”  நாம் என்ன செய்ய வேண்டும்?

“ம்… ம்… ம் ..அந்த புதிர் முழுவதையுமே திரும்ப பார்த்து விடை காண முடியுமானால்…”

மிகைலா சற்று யோசித்தாள். “இந்த ஐடியாவும் ஒகே – பலன் தரலாம்”

“ஆமாம்.  இது தான் நாம் செய்ய வேண்டியது”

மிகைலா அந்த புதிரை தான் சற்று நேரம் பார்த்து ஏதொ மனதில் தோன்றியதை வெளியே கேட்காமல் முனு முனுப்பாக சொன்னாள்.  அதை இன்னமும் தன் குழப்பம் தீராமலே, நீலாவின் கையில் கொடுத்தாள். அவளும் அதை பார்த்து மிகைலாவைப் போலவே குழம்பினாள்.  தலையை அசைத்து அதை வாங்கி படித்தவள், எதுவும் பேசாமல் திருப்பிக் கொடுத்தாள்.  இருவரும் மாறி மாறி படிப்பதும், திரும்ப படிப்பதும், குழப்பம்  தெளிவு பெறாமலே, நேரம் சென்றது.   கடைசி வரிகளில் தான் ஏதோ இருக்கிறது.

“பார்க்கலாம். இதற்கும் ஃப்லெமிங்கோ வுக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? “

“என்ன சொல்கிறாய்.  இந்த பத்திரங்கள், புதிர்கள் மிக பழையவை. ஃப்லெமிங்கொ சம்பவம் சமீபத்தில் நடந்தது.  இது ஏதோ ஜோதிடம் போல வரப் போவதை முன் கூட்டியே சொல்லும் செய்தி  என்று வைத்துக் கொண்டால் சரி எனலாம். அப்படி எதுவும் இல்லை. அதனால் இது ஃப்லெமிங்கொ பற்றி சொல்லவில்லை.

“நானும் அப்படித்தான் ஊகித்தேன். ஆனால், இது ஒரு எச்சரிக்கை என்று எப்படி சொல்கிறாய்?  பொதுவாக ஒரு எச்சரிக்கையாக, இது போல ஒரு  சிறு பான்மை விலங்குகள் நினைக்க கூடும் இது போல வெளியேறுதல்கள்  சாத்தியமாகும்  என்று இருக்கலாம்.

“ம்..சரி, நாம் இன்னும் சற்று பின்னோக்கி செல்வோம்.  முதலில் எண்ணியபடியே பறவை தான் இந்த புதிரின் ஐடியா என்றே வைத்துக் கொள்வோம்.   அதை புதுப்பிக்க முடியாது.  ஃபியோனா நிர்பந்தப் படுத்தி அந்த கல்லை தன் இஷ்டப் படி செய்ய வைத்திருக்கிறாள்.  அதனால் தான்  மாயக்கல்லை புதுப்பிக்க முடியாது .   இந்த கொள்கை சரி வருமா? “

“எனக்கும் அது சரி என்று தோன்றுகிறது. ஆனால் ஃபியோனா என்ன செய்து அந்தக் கல்லை சம்மதிக்க வைத்தாள்? இது மிகவும் முக்கியமான செய்தி.   பலமுறை முயன்றும் முடியாமல் போக, அவள் மந்திர ஸ்படிகத்துக்கு தெரியாமல் கடந்து போயிருப்பாள்  என்றால்,  “

“இந்த செய்தியில் என்ன இருக்கிறது?  எப்படி நமக்கு பயன் படும்?

“அது தெரிந்தால், நாமும் உன்னை உன் வீட்டில் கொண்டு சேர்க்கலாம். “ மிகைலா தொடர்ந்தாள்.  அப்படியில்லையெனின் அந்த மந்திர ஸ்படிகம் ஏன் பதறியடித்துக் கொண்டு இப்படி தட்டுப்பாட்டை கொண்டு வந்திருக்கிறது.

“இருக்கலாம்.  அதே கல் என்னை என் வீட்டில் கொண்டு விட ஓத்துழைக்குமா?  இந்த சமயம் அதில் ஈடுபட வேண்டுமா? பின்னால் பார்த்துக் கொள்வோமா? 

“  நிச்சயமாக இது ஒரு நல்ல பேரமாக இருக்கும்”  

“ஒக்கே.. “

திரும்பவும் அந்த புதிருக்கே வந்தார்கள். திரும்பவும் முதலில் இருந்து படித்துப் பார்த்தார்கள்.  நீலாவும், மிகைலா கையிலிருந்த பத்திரத்தை பார்த்தாள். 

“நாம் அவர்களுக்கு ஒரு சந்தர்பம் தருவோம். கல்லின் மூலமாக –“  

“என்ன”?

“கோபமடைந்த மிகைலா , அப்படியா செய்தி, இதோ வருகிறேன் என்பது போல நாக்கை சுழற்றினாள். இதை பார், சிலருக்கு வீடு, பலருக்கு இல்லை—இதை பரீக்ஷை  செய்து பார்க்க வேண்டும். இந்த ‘பலர்” யார் யார் என்று தெரிந்து கொள்ள

என்ன நடக்கப் போகிறது என்பது நீலாவுக்கு புரிந்தது.  அவர்களுக்கும் ஒரு சந்தர்பம் கொடுக்க வேண்டும். 

பகுதி-22

பையா, எழுந்திரு.  வா,வா   எழுந்திரு !  ஐந்து நிமிஷமாக எழுப்பிக் கொண்டிருக்கிறேன்.  முழுசா ஐந்து நிமிஷங்கள்.  என்னப்பா நீ, எழுந்திருப்பா… இப்போ எழுந்திருக்கப் போகிறாயா இல்லையா? கண்களை திறப்பதே கஷ்டமாக இருக்கிறதா?  பையா, நேரம் வீணாகிறது, எழுந்திருப்பா..   வா, வா, எழுந்திரு!.  

ஜோயி அதை பொருட்படுத்தாமல் தூங்கவே விரும்பியது. அந்த குரல் மேலும் மேலும் காதில் ஒலித்த போதிலும், காதருகே வந்து சப்தமிட்ட போதிலும், அந்த குரலை கேட்கவே இல்லை என்று புறக்கணிக்கவே முயன்றது.  எழுந்து என்ன செய்வது. திரும்ப அதே பிண்டரைன் திசில் பிரச்னை  மனதை குடையும்.  அடித்து நொறுக்கப் பட்ட நிலையில் தான் இருப்பதாக ஒரு எண்ணம்.. தான் இந்த பூமியில் கட்டுண்டு எதையும் செய்ய முடியாமல் கிடப்பதாக… அந்த கல் தன் கையில் மட்டையை வைத்துக் கொண்டு நிற்பது போலவும், எதையுமே நடந்ததை எண்ணிப் பார்த்து முடிவெடுக்க முடியாத தன் நிலைமை.. அந்த ஃப்லெமிங்கொ கடைசி நிமிஷத்தில் கத்தி என்னவோ சொன்னாளே அந்த வார்த்தைகளுக்கு என்ன பொருள், என்னை என்ன செய்ய வேண்டும் என்று எதிர் பார்த்தாள், ..எழுந்திருப்பது என்பது திரும்பவும் அலைக்கழிக்கும் எண்ணங்களோடு அந்த பிரச்னைகளை எதிர் கொள்ள வேண்டியிருக்கும். தூங்குவது போல கிடப்பது எவ்வளவு சுகம்?  இப்படியே கிடப்போம் ….எழுந்திருக்க எண்ணினாலும் உடல் இடம் கொடுக்கவில்லை. என்னதான் முயன்றாலும் தன்னால் வளர்ப்பு நாயாக போட்டிகளில் கலந்து கொண்டு வேடிக்கை காட்ட முடியாது என்பது போல.. தானே தன் உவமையை நினைத்து சிரித்துக் கொண்டு எழுந்தது.  செய்யாமல் விட்டால் மட்டும் என்ன புதிதாக நடந்து விடப் போகிறது என்று தனக்குத் தானே உபதேசமும் செய்து கொண்டு எழுந்து எதிரே  மிஸ்டர் டிம்  தன்னையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதை கண்டது.  அப்பாடி எழுந்தாயா, என்று மகிழ்ச்சியுடன் மிஸ்டர் டிம் கேள்விக் கணைகளைத் தொடுத்தது.  

“பையா, ஃப்லெமிங்கொ உன்னிடம் சொன்னதை அப்படியே சொல்லு”

“சரி, சொல்கிறேன். முதலில் ஃப்லெமிங்கொ என்னிடம் மிக ஆத்திரத்துடன் கடுமையாக பேசினாள்.  நான் பொறுமையாக ஏன் உதவ மாட்டாய், என்று கேட்டதும் நீண்ட சொற்பொழிவு போல எதேதோ சொன்னாள். விலங்குலகம் மனிதர்கள் போல ஆகி விட்டது.  அவளுக்கு அந்த பழைய வனாந்திரமும் கட்டுப் பாடில்லாத சுதந்திர வாழ்வும் தான் பிடித்திருக்கிறது. தற்சமயம் விலங்குலகில் அந்த சுதந்திரமும், உண்மையான வன வாழ்வும் இல்லை.  மேலும் சொன்னாள்: அந்த விலங்குலகம் அவள் தாய் வீடு அல்ல. அது ஏதோ செயற்கையாக  இருப்பதாக அவளுக்குத் தோன்றியது.   பிண்டரைன் திசில்  இயல்பான உணவாக இல்லை. அது மனிதர்கள் செய்யும் ப்ராஸஸ்ட் – பக்குவப்படுத்தப் பட்ட இறைச்சியே என்றாள். மேலும் நான் எதோ வினவ, அவள் ஏற்கனவே அனைத்தையும் சொல்லி விட்டேனே  என்றாள்.  எனக்கு என்ன தோன்றுகிறது என்றால், அவளுக்கு விலங்குலகம் வசதியாக இல்லை, தன் வீட்டில் இருப்பது போல சுதந்திரமாக இல்லை. மற்றவர்கள் வேண்டுமானால் அப்படி நினைக்கலாம் என்றாள்.   உங்களுக்குத் தெரியுமே ‘that home for some but not for all business. Oh, then she said that verses and illustrations combined shall give you what you came to find’ – இந்த வாசகத்தையே  திருப்பி சொன்னாள்.  ஒன்றும் புதிதாக சொன்னது போல இல்லை. உண்மையில், நான் சொல்ல என்ன இருக்கிறது, அந்த மாயக்கல்லின் ரகசியம் புதிர் தான் மறுபடியும், அதில் பெரிதாக நமக்கு எதுவும் இல்லை, அப்படித்தானே?

ஆமாம்.  நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.   நாம் இன்னும் அதைப் பற்றி முழுவதும் விசாரிக்கவில்லை.   அவள் பேசியதை  அப்படியே  சொல்லு-  சரி, சரி, விலங்குலகம் சிலருக்கு வீடு மாதிரி உள்ளது,  எல்லோருக்கும் இல்லை – இது தானே ஃப்லெமிங்கொ சொல்ல நினைத்தது.

ஜோயி தான் கண்டுபிடித்த சில விஷயங்களை இன்னும் மிஸ்டர் டிம் உடன் பகிர்ந்து கொள்ளவில்லை என்பதை உணர்ந்தது.  

“யா- அது தான் ஃப்லெமிங்கொ சொன்னது.  அவளே தான் அந்த மந்திர ஸ்படிக கல்லின் ரகசியம்- என்ற பத்திரத்தில் எழுதியிருக்கிறாள்.  ஒருவேளை அது தான் மிக முக்கியமான விஷயம் என்று அவள் கருதுகிறாள் போலும். உங்களுக்குத் தெரியுமா, அதை எப்படி சரி செய்வது என்பது?  ஸார், எனக்கு துளிக் கூட ஐடியாவே இல்லை- சிலருக்கு வீடு, எல்லோருக்கும் இல்லை என்பதை எந்த  ஆதாரத்தில் சொல்கிறாள். என்ன என்று கண்டு பிடிப்பது சுலபம். அதை சரி செய்வது எப்படி என்று செயலில் இறங்குவது மிக கடினம்.  உங்களுக்கு ஏதாவது ஐடியா உள்ளதா, ஸார்.”

திமோதி யோசனையில் ஆழ்ந்தது.  இல்லை என்று தான் சொல்லப் போகிறார் என்று ஜோயி தீர்மானித்த நிமிஷம், அவர் முகம் பிரகாசமாக நிமிர்ந்து அமர்ந்தார். 

“வெல்,பையா. முழுவதுமாக தீர்க்க என்னிடம் ஐடியா இல்லை. மந்திர ஸ்படிகம் பகுதியை நான் தீர்க்க முடியும். அது ஒரு பெரும் பகுதி இந்த பிரச்னையை தீர்க்கும்.  எங்கேயோ இடிக்கிறது, இருந்தாலும், பையா, நான் சொல்வதை குறித்துக் கொள்.  நிச்சயமாக சொல்லவில்லை. என் அனுமானம் இது. பிராணிகளை விலங்குலகுக்கு கொண்டு செல்வதும் வெளியேற்றுவதும் அந்த கல்லின் செயல்.  இப்பொழுதுள்ள சில விலங்குகள் அங்கு இருக்க பிரியப் படவில்லை. அதற்கு மந்திர ஸ்படிக கல்லின் உதவியை நாடியிருக்கலாம்.”

திரும்ப படுத்து தூங்கலாமா என்று ஜோயி படுத்து மேல் முகட்டை பார்த்துக் கொண்டிருந்த பொழுது, ஒரு எண்ணம் உருவாயிற்று.  சட்டென்று எழுந்து உட்கார்ந்தது.   திரும்ப கடைசி வரியை படித்து யோசித்த பின், ஏதோ புரிந்த மாதிரி இருக்க, திமோதி ஸாரிடம், எல்லா பிராணிகளும்  விலங்கு சாம்ராஜ்யம் என்ற அமைப்பைத் தானே விரும்பவில்லை. அவர்கள் அந்த இயற்கை வனப் பகுதியைச் சொல்லவில்லையே …

அந்த கல் சிலரை அங்கிருந்து வெளியே செல்லவும், வேறு சிலரை உள்ளே அழைத்து வரவும் உதவி செய்கிறது என்று டிம் ஸார்  சொன்னாரே.   அந்த கல் ஏதோ விஷமம் செய்கிறது, சந்தேகமேயில்லை.  அதைத் தான் ஆராய வேண்டும். அதன் அதிகாரம் என்ன? எதற்காக செய்கிறது. இப்படி ஒரு புதிர் போடுவானேன்.  ஒன்று – அந்த மாயக்கல் நிரந்தரமல்ல – அதை மாற்றலாம். புதுப்பிக்கலாம். நடுவில் புகுந்து விலங்கு சாம்ராஜ்யத்தில் குழப்பம் விளைவிக்கிறது. சிலர் துணையோடு. 

“ஸார்,  சாய்ஸ், சந்தர்பம், நமக்கு, இங்குள்ள விலங்குகள், மற்ற பிராணிகளுக்கு”

திமோதி ஜோயியை நிமிர்ந்து பார்த்து, எதோ புது விஷயம் அதற்கு தோன்றியிருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். ஆவலுடன் அதையே பார்த்தார். 

“ எனக்குத் தெரியும் நீ கண்டு பிடிப்பாய் என்று, பையா, சொல்” 

ஜோயி எதேச்சையாக கையிலிருந்த  திசில் தாவர வளர்ச்சியைக் குறிக்கும் வரை படத்தை பார்க்க, முன்னை விட அதிகமாக சந்தோஷத்துடன் குதித்த து. காரணம் திசில் தாவரம் பிழைத்து விட்டது.

பகுதி-23

நிச்சயம் !  மற்ற விலங்குகளும் கேட்கப்பட வேண்டும்.  … குட்னெஸ் … அதுதான் சரியான முறை. நீலா ஏன் இதுவரை மற்றவர்கள் இது பற்றி நினைக்கவில்லை என்று ஆச்சர்யப்பட்டாள்.  இன்னும் எப்படி தொடருவது என்பது தீர்மானிக்க முடியவில்லை. ஆனால் அதை  அந்த சமயத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

‘நீ சொல்வது சரி. அதுதான் அந்த மந்திர ஸ்படிகம்  புதிர் சொல்ல நினத்ததோ என்னவோ,  இது அற்புதமான எண்ணம். எப்படி செய்யப் போகிறோம். “

“எதை என்ன செய்யப் போகிறோம்”

“அந்த கல் மூலம்   மற்றவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்க செய்வது”

“இது ஒரு அற்புதமான ஐடியா.  அந்த கல்லை நமக்கு சாதகமாக செய்யச் சொல்ல வேண்டும், அது தான் எப்படி?

மிகைலா என்ன நினைத்தாள் என்பதை அவள் முகக் குறிப்பிலிருந்து கண்டு கொள்ள முடியவில்லை.

“எனக்கு  இன்னமும் முழு நம்பிக்கை வரவில்லை”

எங்கிருந்தோ ஃபெலிஸ் – இல்லை லீஸி வந்தது.  வாய் முழுக்க பல்லாக இளித்துக் கொண்டு. உலகமே அவளுக்கு துச்சம் என்பது போல.

“ஹியா மிகைலா!  என்ன செய்கிறாய் ? கையில் இருந்த திசில் துண்டை கடித்தபடி …

“ஓ ஃபெலிஸ், இல்லை இல்லை லீஸீ,  எது உனக்கு பிடிக்கிறதோ அது,, போதுமா… எங்கிருந்து இந்த பிண்டரைன் திசில் கிடைத்தது ? ஸ்டாக் இருக்காமா? 

“ஊ, இது எல்லா இடத்திலும் தடையில்லாமல் கிடைக்கிறது. எனக்கு டிஃப் கடையில் கிடைத்தது, டிஃப்ஃபனி டர்டில்- அவள் கையில் வைத்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நான்  வந்து,  வந்து எனக்கும் என்று கேட்டவுடன்  இந்தா என்று நிறையவே தந்தாள்.  கேட்டேன், எங்கே கிடைக்கிறது?  அவ சொல்றா,  வீட்டில், நீ என்ன தூங்கிக் கொண்டிருந்தாயா?  நான் சொன்னேன், தூங்கவே இல்ல… இத திசில் கிடைக்கல்ல – அதனால – நான் முடிக்கவேயில்லை அவ  இந்தா ன்னு  நிறைய குடுத்தா…  

“என்ன நடந்திருக்கும் என்று கணிக்க வழக்கமான ஐந்து செகண்ட் கூட எடுத்துக் கொள்லவில்லை மிகைலா.   ஃபெலிஸ் அல்லது லீஸி, முடிக்கும் முன் அவள் கண்கள் விரிந்தன. 

“என்ன சொன்ன?” எல்லா இடத்திலும் இருக்கா? எப்படி வந்தது எல்லா இடத்துக்கும்?

எனக்கு தெரியாது, தோளை குலுக்கி  கொண்டு மேலும் எதுவும் கேட்குமுன் ஓடி விட்டது. 

“மிகிலா.. எங்கிருந்து வந்திருக்கும், எப்படி அவளுக்கு… திசில் கிடைத்திருக்கும்…? என்ன?”

மிகைலாவும் அதே போல் தான் திகைத்தாள்.  நீலாவை விட இன்னும் அதிகமாக…

எனக்கும் திகைப்பாகத்தான்  ..எப்படி வந்திருக்க முடியும்? திடுமென வளர என்ன காரணம்?

“நீலா ஜன்னல் வழியாகப் பார்த்தாள்.  எங்கும் பிண்டரைன் திசில் கொடிகள் வளர்ந்து கொண்டிருந்தன. சர்வ சாதாரணமாக…. எதுவுமே நடக்கவில்லை போல, இத்தனை கவலைகளும், இருப்பு இல்லை காலி என்று திகைத்ததும் ஒன்றும்  உண்மையில் நடக்கவில்லை என்பது போல…  நன்றி நன்றி… மிக்க நன்றி, கடவுளே கடவுளே…”

“ஊகிக்க முடிகிறதா?  மிகைலா கேட்டாள்.

நீலா தலயசைத்தாள். திகைப்பு, அதே சமயம் சந்தோஷம் … தீராத குழப்பம்… “

“ஓகே, அந்த கல் எதோ செய்திருக்கும் என்று நினைக்கிறாயா”

“இருக்கலாம், இரு யோசிக்கிறேன்..   அதுவரை நம்பகமாக இருந்த மந்திர ஸ்படிகம்   ஃ பியோனா சம்பவத்திற்கு பிறகு தாறு மாறாக நடந்து கொள்கிறது. சரிதானே? “

“ ஏன்?  இப்பொழுது மட்டும் எதிர்பாராத விதமாக நடந்து கொள்ள என்ன வந்தது? நான் கம்ப்ளெயிண்ட் -குற்றமாகச் சொல்லவில்லை.  திடுமென நடப்பதால் சந்தேகமாக கேட்கிறேன்.”

“ யா..ம்ம்..அந்த மந்திர ஸ்படிகம் ஒருவேளை உணர்வுடன் , அதாவது, உணர்வூட்டப்பட்டதாக ஆகியிருந்தால்… அசத்தலான எண்ணம் தான் ..  ஆனால் அப்படி இருந்தால், ஏதோ காரணத்தால். செயலிழந்து கிடந்தது  இப்பொழுது செயல் படுகிறது என்று வைத்துக் கொண்டால்?…  

“ஸோ, ஃபியோனா திரும்ப பூமிக்கு போனதால் அது செயலிழந்து விட்டதா? “

“யா… “ நீலா  சொல்லிவிட்டு, மிகைலாவுக்கு சைகை காட்டினாள், மேலே சொல்லு”

“ஆனால், அந்த கல்லின் பார்வையில் இதைப் பார்ப்போம்…”

“அந்த கல் என்ன யோசிக்கும் என்றா” 

“யா.. ஆமாம் அந்த அந்த கல்லின் கோணத்திலிருந்து,  அதன் சிந்தனை எப்படி போகும் ?  ஒருவேளை.. அதுவே முழம்பி போயிருக்கலாம், அல்லது வேறு ஏதோ..?”

“ஏதோ ஒன்று.. ஓகே, அது குழம்பி போய் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.  அதனால் அது விரிசல் கண்டிருக்குமா?”

“ஓருவேளை,  இருக்கலாம்… அந்த விரிசலுக்கும் தற்போதைய நடத்தைக்கும் சம்பந்தம் இருக்கிறதா, பார்ப்போம்”

“ஓரு நிலையின்றி , நம்ப முடியாதபடி திடுமென அதன் செயல் இருக்க காரணம், அதுவே குழப்பத்தில் இருக்கலாம், என்ன செய்வது என்பது தெரியாமல் இருக்கலாம்”

“செய்வதறியாது திகைத்திருக்கலாம் –  நீ சொல்வது சரியே… அது உணர்வுடையது என்றால், தற்சமயம் குழப்பத்தில் இருப்பதும் நியாயமே..  தன்னை மீறி ஏதோ நடக்கிறது என்பதால் அந்த குழப்பம்.  ஃபியோனா பூமிக்கு திரும்பியதில் அதற்கு சம்மதம் இல்லாமல் இருந்திருக்கலாம்..நான் சொல்ல வந்ததது, உங்களுக்கு பூமியை ஒரு சுற்றுலாவாகக் கூட போக பிரியமில்லையே. “

“அதே தான். இப்படி இருந்தால், அந்த சம்பவம் எப்படி நடந்தது தன் அனுமதி இன்றி என்று துப்பறிய முயன்றிருக்கலாம் – என்ன செய்வது என்று முடிவெடுக்க முடியாததால் தான் இந்த தடுமாற்றம்…”

“ மேலும், இப்பொழுது பழையபடி ஆகியிருக்கும் என்றால்…”

“ ம் ம் ..எப்படி, எதுவும் தெளிவாக தெரியவில்லையே..” 

“ம் ம் ..நாம் இருவரும் இதுவரை சற்று வினோதமாக கூட, இப்படி இருக்கலாம் என்று அலசிப் பார்த்தோம். இது எப்படி இருக்கிறது..நான் சொல்கிறேன்…அந்த மந்திர ஸ்படிகம் உணர்வுடன் செயல்படும், மாஜிக் – செப்படு வித்தையோ, மாயமோ இல்லை என்றால், நிச்சயமாக நடப்புகளை வைத்து எங்கே பிழை என்று தெரிந்து கொண்டிருக்கும். விடை கிடைத்திருக்கலாம். கவனி, நாம்  மற்ற விலங்குகளுக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம் என்று தீர்மானம் செய்யவும், பிண்டரைன் திசில் வளருவதும் வெறும் தற்செயலாக இருக்க முடியாது. …”

“யா..நீ சொல்வது, நாம் அதற்கு ஒரு பதிலை தந்து விட்டோம்..”

“அப்படித் தான் ஊகிக்கிறேன்”  

“ஸோ,  நாமறியாமலே, அந்த கல்லுக்கு ஒரு வழி,  அது தேடிக் கொண்டிருந்த பிரச்னைக்கு விடை காட்டி விட்டோம்.  அதனால் தடை நீங்கி பிண்டரைன் திசில் வளரத் தொடங்கி விட்டது.  மேலாக பார்க்க பழைய படி நிலைமை சீராகி விட்டது”

“யெப்.. சரியாக புரிந்து கொண்டாய்”

சில நிமிஷங்கள் மௌனமாக  சிந்தனையில் கரைந்தன.   ஒரு வௌவால், பறந்து வந்தது.  ஒரு தடிமனான புஸ்தகம் The History of the Discovery of the History of Fossilology byIsaac Newt .. அதை எடுத்துக் கொண்டு பறந்து விட்டது.   ஹிஸ்டரி- சரித்திரம் அதுவும் பழைய ஐஸக் நூடன் எழுதியது-  பாசிகள் இயல்பு பற்றி-  வினோதம்… வெளியே எட்டி பார்த்து மிகைலா சிரித்தாள்.  சில நிமிஷங்கள் சென்றன. ஒரு ஆந்தை        வந்தது.  புத்தகங்களின் அடுக்கை துருவி துருவிப் பார்த்தது.  தலையசைத்து  சட், இங்க எனக்கு வேண்டியது  இல்லை – என்ன நூலகம்- சற்றே கோபத்துடன் , அங்கு எதுவுமே அதன் தேவைக்கு இருக்காது என்பது போலவும், தன் கற்று அறியும் தேவைக்கும், பாடத் திட்டத்துக்கும் இந்த நூலகம் உபயோகமேயில்லை என்பது போல ஒரு பாவனையுடன்  வெளியே சென்றது.  நீலாவுக்கு தோன்றியது, தானும் மிகைலாவும் இதுவரை நம்ப முடியாத விசித்திரமான கோணங்களில் கூட ஆராய்ந்தது நன்றே – நடக்க கூடியவையே ..உண்மையில் அந்த கல் இயங்க ஆரம்பித்து விட்டது.  ஏனெனில்  பிரச்னைக்குத் தீர்வு அந்த விலங்குலக பிராணிகளுக்கு அவர்களே ஏற்றுக் கொள்ளும்படி ஒரு வாய்ப்பு கொடுப்பதே என்பதை  புரிந்து கொண்டு விட்டது.  கூல்

அது சரி,  நான் எப்படி திரும்பி போவது? ஒரு வழியும் புலப்பட வில்லை.  அந்த ஓநாயும், ஆமையும் அங்கே இருக்கின்றன.. மற்றபடி இந்த இடம் எல்லா விதத்திலும் சிறப்பாக இருக்கிறது Superb என்று -அவள் களைப்புடன் போதும் என்று நினைத்த சமயம்  ஏதோ பறப்பது போல இருக்க, கூர்ந்து பார்த்தாள்.  அந்த நீல நிற கல்  யாரும் எதிர்பாராத சமயம்  விடுவிடுவென்று  உள்ளே நுழைந்து, தன்னுடைய புகழ் பெற்ற  ஆகாய வண்ண பிரகாசமாக தென்பட்டது.   அவளுடைய களைப்பு பறந்தது.   உடல் அயர்ச்சி மறைந்தது. மன உளைச்சல் ஓய்வு எடுத்துக் கொண்து போல விலகியது.     அலுப்பும் சலிப்பும் சுற்றுலா கிளம்ப, புத்துணர்ச்சி உடலெங்கும் பரவியது.    மிகுந்த கவனத்துடன் பார்த்தாள்.  அதே தான்… யோசிக்கிறதா? அதன் பின் இதை விட அதிசயமான ஒன்று நடந்த து. அந்த நீல மணி தன் தோளை குலுக்கியபடி ஏதோ சொல்வது போல இருந்தது.    

 அசரீரியாக அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் ‘மே,  நீ உன் இடத்துக்கு, பூமிக்கு போகிறாயா? – திடுக்கிட்டு இது என்ன அதிசயம் என்றபடி நீலா நிமிர்ந்தாள்… எதிரே மிகைலா  கண் திறந்தாள்.  

“நீ திரும்பி பூமிக்கே போகிறாயா? மிகைலா கேட்டாள். நீலா அந்த மந்திர ஸ்படிகத்தை  அதிசயத்துடன் பார்த்தபடி இருந்த சமயம் – 

“ஆமாம்- அந்த பொருள் மனது வைத்தால்” 

தன்னை மந்திர ஸ்படிகம் என்று சொல்லாமல் அந்த பொருள் என்று சொன்னது பிடிக்கவில்லயோ என்பது போல வண்ணங்கள் ஒவ்வொன்றாக சற்றே தங்கள் மறுப்பை காட்டுவது போலவும், அலையடித்தது ஓய்வது போலவும் மறைய, மந்திரக ஸ்படிகம் மெள்ள மெள்ள தன் இயல்பான அமைதி நிலைக்கு திரும்பியது.

“மிகைலா குதூகலத்துடன் ஆஹா,லவ்லி என்றாள்.  நீ அனைத்தும் சேர்ந்த கலவையானவள். சிலசமயம் ஆத்திரமாக, என்னை ஆத்திரமூட்டுவதாக, இது என்ன இடைஞ்சல் என்று கூட நினைக்கும் படி இருந்தாலும் நீ மிகவும் அழகான. இனிமையான பெண். மனித பெண்ணாக இருந்தும்  கூட ..”, .

ம்ம் ..தாங்க்ஸ்… நீயும் தான் மிகவும் அமைதியான பெருச்சாளி….நான் பேசியதே முதன் முதல் உன்னுடன் தான் – ஏனெனில் நீதான் முதல் பெருச்சாளி நான் பேசி பழகியதும். ஆனால் எனக்கும் அதே போல இனிய சினேகிதி..

மிகைலா, மிகையான அடக்கத்துடன் அந்த புகழுரையை ஏற்றுக் கொள்வது போல பாவனை செய்தாள். நீலாவுக்கு வேடிக்கையாக இருந்தது, இளித்துக் கொண்டே இருக்கும், திடுமென தோரணையாகவும் பேசும், இதற்கு  எப்படி முடிகிறது என்று  அதிசயித்தாள்.  அந்த இடமோ ஆந்தைகள் வந்து போகும் இடம். ஆடம்பரமாக வளைய வந்து, புத்தகங்களைத் தேடுவது போலவும், அந்த நூலக எழுத்தர், பயனில்லை என்று  அறிந்தும் தன்னாலான உதவியை செய்வது ஒன்றுமேயில்லை என்பது போல அவரை அலட்சியமாக பார்க்கும்  காட்சியும் கொண்ட  நூலகம்.  

ஸோ, யெஸ் – இப்படி ஒரு காட்சி நடக்கலாமானால், இதுவும் சாத்தியமே..  மந்திர ஸ்படிகம் பொறுமையின்றி காட்சியளிப்பதாகத் தோன்ற அதில் கவனத்தைத் திருப்பினாள்.  அந்த விநாடியே பூமிக்கு அனுப்ப தயாராக இருப்பதாகப் பட்டது. பின் தன் முடிவை மாற்றிக் கொண்டது போல – எதையோ நினைத்து யோசிப்பது போல, நமக்கென்ன என்று கை கழுவியது போல அவள் உணர்ந்தாள்.

“மிகைலா”

“யா”

“நமக்கு இன்னும் சில புதிர்கள் விடுவிக்க வேண்டியிருக்கிறதே, நான் இப்பொழுது திரும்பி போகவில்லை, “

“ஹ்யூமன், கோ ஹோம் – மனித பெண்ணே, திரும்பிச் செல்.  நான் பார்த்துக் கொள்கிறேன்.  மற்றவை அந்த அளவு கடினமும் அல்ல. எனக்கு ஒழிந்த பொழுது பார்த்துக் கொள்கிறேன்.  கவலைப் படாதே. அனைத்தும் சீராகிக் கொண்டு வருகிறது. பழைய படி இந்த இடமும் மாறிக் கொண்டு வருகிறது. அது ஏதோ, வருங்கால அறிவிப்பு போல- அதைப் பற்றி கவலை வேண்டாம். முழுவதுமாக மறந்து விட்டு சந்தோஷமாக போய் வா..நாங்கள் நலமாக இருக்கிறோம், சரியா?

இப்படிச்  சொன்னாலும் மிகைலாவின் கவனம் அந்த மந்திர ஸ்படிகத்திலேயே இருந்தது.   ஒரு அவநம்பிக்கை , தான் சொல்வது சரியா என்பது போல.  அந்த மந்திர ஸ்படிகம் தலையசைத்ததோ… அதைச் சுற்றியிருந்த ஒளி குறைந்து கொண்டே வந்து அணைந்தது.  “ இதை பார், அந்த கல்லும் ஒத்துக் கொண்டு விட்டது”

நீலா தலையசைத்தாள். திரும்ப அந்த மந்திர ஸ்படிகத்தைப் பார்த்தாள். பழையபடியே, வண்ணக் கலவைகள் அணிவகுத்து முன் செல்ல, தன் இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தது.  கண்களை  கூசச்செய்யும் ஓளி,  வண்ணங்கள்,  சுழன்று செல்லும் வேகம், இவைகளால்  நீலாவின் பார்வை சற்று தடை பட்டது. அனேகமாக மிகைலாவின் இரட்டை வேடம் காட்டும் முக பாவத்தை தவற விட்டாள்.   ஒரே நபர் எப்படி இரு வேறு குணங்களை பிரதிபலிக்க முடியும் என்பது நீலாவுக்கு புதிராகத்தான் இருந்தது,  ஆனால், ஒரு ஆந்தை அட்டகாசமாக நூலகம் வருவதும், புத்தகங்களைத் தேடி தேடி அலைவதும் கடைசியில் அந்த எழுத்தர் பணிவாக அது தேடிய புத்தகத்தை தேடிக் கொடுத்து உதவியதும் அல்லாமல், நூலக குறிப்பில் பதிவு செய்வதும், அந்த ஆந்தை மெத்தனமாக  கையில்  Peas a chance  என்ற புத்தகத்துடன் நூலகத்தை விட்டு சந்தோஷமாக வெளியேறுவதையும் பார்த்த பின், இந்த இடத்தில் எது தான் நடக்காது- அடி மட்ட குணங்களான பணிவும், குழைவும்,  உயர் அதிகாரிக்கான மிடுக்கும், நமட்டுச் சிரிப்பும் ஒரு சேர ஒரே நபரிடம், இங்கு மிகைலா- காண்பதும் சாத்தியமே என்ற முடிவுக்கு வந்தாள்.

பகுதி-24

“ஸார், இதை பாருங்கள், திசில் திரும்ப வந்து விட்டது”

“ஏன்? …ஏன் – ஆமாம் வந்து விட்டது”

“ஆனால், எப்படி?”

“என் ஊகம், அந்த மந்திரக் கல் உன் பதிலுக்கு காத்திருந்தது போலும். “ மெல்லிய புன்னகையுடன் மேலும் “பையா, உன்னைவிட பல வருஷங்கள் முன்னால் பிறந்து இந்த உலகில் வாழ்ந்தவன். எனக்குத் தெரியாதா, எப்படி எது வேலை செய்யும் என்பது, நம்பு என்னை”

அதன் பின் அந்த மந்திர ஸ்படிகம் எதிரில் தோன்றியது.

அதைப் பார்த்து ஜோயி நடந்து கொண்டதும், மிஸ்டர் டிம்  நடந்து கொண்டதும் இரு துருவங்கள் – மிஸ்டர் டிம்,  பழைய சினேகிதனைக் கண்டது போல சந்தோஷமாக சிரித்தார், ஜோயி பிளந்த வாயை மூடாமல் , டின்னர் ப்லேட் அளவு விரிந்த கண்களுடன், அடிக்கடி தன்னையே கிள்ளிக் கோண்டு நிஜம் தானா , கனவா என்று அலை பாயும் மனதோடு நின்றிருந்தான். 

“எப்படி இருக்கிறாய், நண்பனே, என்றார் டிம்.”  ஜோயியின் ஆச்சர்யத்திற்கு எல்லை இல்லை. கண்கள் மேலும் விரிய இடம் இல்லை,  திறந்த வாய் முடவில்லை.  தான் மட்டும் தான் இந்த சந்திப்பை எதிர் பார்க்காமல் இருந்தது என்பது ஜோயிக்கு புரிந்தது.  மந்திர ஸ்படிகம் தலையசைத்து திமோதிக்கு நலமே என்று பதில் சொல்லியது. அதன் பின் நடந்தது தான் எதிர் பாராத ஆச்சர்யம். மந்திர ஸ்படிகத்தின் மேல் சூழ்ந்திருந்த வண்ணங்களின் ஓளி வட்டம், கண் சிமிட்டுவது போல, குறைந்தும் கூடியும் , தங்கள் வண்ணங்களை மாற்றிக் கொண்டும், ஓரிரு நிமிஷங்களுக்குப் பின் நிலைத்து ஒளி ஊடுருவவும் முடியாத இயல்பை அடைந்த து.  அதன் பின் டிம் அந்த மந்திர ஸ்படிகத்துடன் பேசினார். ஜோயி, எத்தனையோ அதிசயங்கள் நம்ப முடியாத நிகழ்ச்சிகள் பார்த்து விட்டோம், இது எல்லாவற்றையும் தூக்கி அடிக்கிறது. என்று எண்ணியது.  “ உண்மையா, நிஜமா/ இரண்டுமே அதிசயம் தான்- சரியான வார்த்தை வேறு உண்டா என்னா?  

உங்களுக்கு இதன் பொருள் புரியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா?  ஓ கமான், அப்படி பார்க்காதே, நீ   நீ தான் சந்தேகமேயில்லை.  இந்த புதிரை விடுவிக்க உன்னால் கண்டிப்பாக முடியும். அந்த திட்டமே இரிடியம் அல்லது ஓஸ்மியம் போன்று கடினமான இராசயண பொருட்களுக்கு சமானமானது. ஓ நீ தான் என்னிடம் கேட்கவில்லையே,  பரவாயில்லை இது  சுதந்திரமான  உலகம்,  நீ இன்னும் அந்தக் காலத்திலேயே இருக்கிறாயா, இது புது உலகம் சுதந்திரமான உலகம்..

ஜோயி அசந்து போய் செய்வதறியாது நின்றது.  

“ஸார், நீங்கள் அந்த மந்திர ஸ்படிகத்துடன் பேசுவீர்களா?” முடியுமா”

“இப்போ, பையா கமான், பேசுவது என்பது  ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளும் பழைய  கால முறை.   நானும் பேசுவேன்..  அனால் இந்த buddy கூட பேசும் பொழுது இருவரும் செய்தி பரிமாறிக் கொள்வது மனதாலேயே. 

அதற்காக மனதை படிப்பது என்பதல்ல,  நினைவிருக்கட்டும், இது ஒரு முறை, கேட்பதில் நேரம் செலவாகாது.  முதலில் தொடர்பு கொள்ள நேரம், பின் அதை கேட்பவர் மனதில் உள் வாங்கி  பதில் சொல்ல வேண்டும் – இது தற்சமயம் கடினமான அனாவசியமாக கருதப் படுகிறது. வாயால் மற்றவரிடம் பேசுவதையே குறைத்துக் கொண்டு விட்டேன்.  மனதில் தான் உரையாடுகிறேன்.  நான் எண்ணுவதை அவர் தன் மனதாலேயே அறிந்து கொள்வார். 

ஆமாம், ஜோயி நினைத்த து சரிதான். இது இன்னும் சிக்கலான பது விஷயம்.

“ஆனால், எப்படி நீங்கள் இந்த முறையை அறிவீர்கள், எங்கு கற்றீர்கள்? எப்பொழுது? யாரிடம்?

“எல்லாம் பின்னால் சொல்கிறேன் – நாம் முதலில் வீடு போய் சேருவோம், பையா.,வா”

“ நம்ம வீட்டுக்கு போவோமா? இந்த மந்திர ஸ்படிகம் வேறு எங்காவது கொண்டு  சேர்த்தால்,  யூனிகார்ன்  போன்றவை இருக்கும் இடத்திற்கு… “நாம் ஏதாவது விளையாட்டை பார்த்துக் கொண்டிருக்கும்  போது நம்மையறியாமலே வேறு இடத்திற்கு கொண்டு போய் விட்டால்?”

மிஸ்டர் டிம் ஜோயியை கூர்ந்து பார்த்தார். 

“ஜோயி அந்த பார்வையை தாங்க மாட்டாமல், “நீங்கள் சொன்னால் சரி, ஸார்.   அப்படி எதுவும் நடக்காது“

“பையா, நீ சொல்வது சரி அப்படி எதுவும் நடக்காது,  இப்பொழுது, வா, கமான், ஒரு முறை விஸிட் செய்ய பூமி நல்ல இடம் தான்.  ஆனால் நான் அதற்கு  ஃபைவ் ஸ்டார் ரேட்டிங் குடுக்க மாட்டேன்.  “

“மிஸ்டர் டிம், மந்திர ஸ்படிகத்தை சற்று தள்ளியது. இரண்டு விதமான காட்சி படங்கள் தெரிந்தன, ஒன்று உலர்ந்த மணல் பிரதேசம், ஆங்காங்கு சில களைச் செடிகள், மற்றொன்று விலங்குலகம்.  “

“ பரவாயில்லையே, நண்பனே, பரவாயில்லை.  இப்படித்தான் நீ வேலை செய்கிறாயா? நல்ல கற்பனை.” ம்ம்

மந்திர ஸ்படிகத்தின் ஒளி  நிழலாடியது.  அது தன் கையை விலங்குலகம் என்னும் இடத்தில் வைத்து அழுத்தியது. ஜோயி தயக்கத்துடன் அந்த காட்சி படத்தை எட்டி பார்த்த து.   திரும்பவும் இரண்டு உலகங்கள். ஒன்று விலங்குலகம், அதனுடைய வனாந்திரம், மரங்கள் பசுமையாக, தன் பாதத்தை விலங்குலகம் எனும் இடத்தில் வைத்து அழுத்தியது.  உள்ளே நுழையும் பொழுது, நீலா, வந்து விட்டாயா என்ற குரல் உரத்துக் கேட்டது. 

ஜோயியின் முறுவல் முகம் முழுதும் நிறைந்த து. புல் தரை, ஓ தான் தன் வீடு வந்து விட்டோம்.

….

மாலை நேரம். ஃபியோனா அப்பொழுது தான் உறக்கத்திலிருந்து மீண்டாள். ஒரே போர் என்று உணர்ந்தாள்.  சரி இருக்கட்டும் என்று தன் வழக்கமான  தினசரியைத் தொடர்ந்தாள். எழுந்து சிறிது நடந்தாள். ஏதோ உணவு கொண்டு வந்ததை சாப்பிடுவதாக பாவனை செய்தாள். திரும்ப நடந்தாள். சுற்றிலும் வேடிக்கை பார்க்க வந்திருந்த மக்களிடம் கையசைத்தாள்.  சற்று புன்னகை, கையசைத்தல், ஒரு ladybug கூடவே வந்து பேச்சு கொடுத்தது. இப்பொழுது ladybug மொழி நன்றாக புரிகிறது.  அந்த நாள் ஓடி விட்ட து,  ஸோ, ஒரு நாள் பொழுது முடிந்தது.  தூக்கம் கலைந்தது. லூனா என்ற ladybug வந்து அரட்டை அடித்தது. அது நகர்ந்ததும்,  ஏதோ புதிதாக நடந்தது.  இனி கிடையவே கிடையாது, நமது வாழ்வில் என்று நினைத்து மறக்க முயன்ற விஷயம்… அவள் தினசரியை மாற்றி அமைக்கும் விதமாக அந்த மந்திர ஸ்படிகம்  அவள் முன் தோன்றியது.  அதிலும் சற்று புதுமையாக ஒரு குறிப்பு அதன் மேல் இருந்தது.  அந்த வழ வழப்பான க்ரீம் கலர் பேப்பரில் .அழகான ஆனால் அவசரத்தில் எழுதியது போன்ற கையெழுத்தில், யாரோ, எழுதியிருக்கிறார்கள்:  

A long-overdue debt finally paid. Hang in there. –Joey –

ஃபியோனாவின் கண்கள் பனித்தன.  அவள் திறந்த வாய் மூட மறந்தது. தன் கால் நகத்தை  அந்த கல்லின் மேல் வைத்தாள்.  உடனே அவள் விலங்குலகத்துக்கு  போய் சேரவில்லை. அதற்கு பதில்  தெளிவாக இரண்டு படங்கள், ஸ்படிகம் போல தெளிந்த நீரில் இரண்டு காட்சி படங்கள்.  ஒன்று அவள் இருந்த விலங்குலகில் இருந்த குளம், மற்றொன்று … அவள் குழந்தையாக இருந்த பொழுது விளையாடிய இடம், அவளை திருடிச் சென்றனர்… அந்த இடத்தை தினமும் கனவில் காண்கிறாள்… எப்பொழுதாவது சில பத்திரிகைகளில் அந்த படம் வருவதுண்டு, அதை மார்போடணைத்து மகிழ்ந்திருக்கிறாள்… அது தான் அவள் வீடு.  அவளுடைய இயல்பான இருப்பிடம்.  ஆனால், எப்படி, சட்டென்று நினைவு வந்தவளாக அந்த காட்சிப் படம் தனக்கு இரண்டு வாய்ப்புகளைத் தருகிறது, அவளே தீர்மானித்துக் கொள்ளலாம் – ஓ அந்த மந்திர ஸ்படிகம் இப்பொழுது தன் நடவடிக்கைகளை மாற்றிக் கொண்டு விட்டதோ,                        விலங்குகளுக்கும் மற்ற பிராணிகளுக்கும் ஒரு வாய்ப்பை தருகிறது.  ஒரு வாய்ப்பு, விலங்குலகம் அல்லது தனது இயல்பான இருப்பிடம்… அவள் அந்த கல்லின் ரகசியம் பத்திரத்தில் எழுதிய குறிப்பு பலன் தந்துள்ளது… இரண்டு காட்சி படங்களும் பொறுமையிழந்து ஆடின,  ஃபியோனா தன்னை தன் நினைவுகளிலிருந்து விடுவித்துக் கொண்டாள். திருப்தியான புன்னகையுடன், தன் இறக்கையால் தன் தாய் வீடான படத்தில் தொட்டாள்.  அவளுக்கு பழக்கமான வண்ணங்கள் ஓளி வட்டம் சுழலுவதும், தான் எதிலோ மூழ்குவது போன்ற உணர்வும், திடுமென ப்ரகாசமான வெளிச்சம் நிறைந்த அவளுடைய இடத்துக்கு, இதுவரை தன் வீடு என்று அறிந்து மனதிலேயே வாழ்ந்த இடம் .. 

…..

ToSrinivasan Krishnan@gmail.com
CcRekha krishnan@gmail.com
Bccramankrishnan@gmail.com
SubjectAmruta’s book

ஸ்ரீமத்  பகவத் கீதை

(ஜானகி க்ருஷ்ணன்)

முன்னுரை:

 

ஸ்ரீமத் பகவத்கீதையை முதல் முறை படிக்கும் பொழுது தோன்றுவது – இது நமக்கில்லை, யாரோ போர்வீரனுக்கு, அல்லது சன்யாசிக்கு, அல்லது யோகம் பயிலும் மாணவனுக்கு, அல்லது நீயே எல்லாம் என்று வணங்கும் பக்தனுக்கு என்று தோன்றும்.  அன்றாட வாழ்க்கைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. என்பதே பெரும்பாலோர் நினைப்பது.

ஆனால், வயதான பிறகு படித்துக் கொள்ளலாம், வேதாந்தம் தானே என்று நினைப்பவர்களுக்கு ஒரு செய்தி. இது பள்ளி நாட்களிலேயே தெரிந்து கொள்ள வேண்டிய பல அறிவுரைகளை உள்ளடக்கியது.

முதன் முதல் பள்ளிக்கு குழந்தையை அனுப்பும் பெற்றோர் சொல்லும் பயப்படாதே என்ற உபதேசம் – முரட்டு சிறுவர்களோ, சிறுமியோ, உன்னை படுத்தினால் பயப்படாதே, டீச்சரிடம் சொல்லு என்று சொல்லுகிறோமே-அத்துடன் யோசி, உனக்கு சரியென்று தோன்றினால் மட்டுமே செய் என்று கீதை உபதேசிக்கிறது.

எடுத்த காரியத்தை பாதியில் விடாதே, செய்வதை திருந்தச் செய் என்ற உபதேசம் அனைவருக்குமே.

குருவை அடைந்து, மரியாதையுடன் கற்றுக் கொள், கற்றதை மனனம் செய்து உருவேற்றிக் கொள் என்பது எல்லா மாணவர்களுக்கும், கலைஞர்களுக்கும், தொழில் நுட்பத்தை தெரிந்து கொள்ள  முனையும் மற்றவர்களுக்கும் உரிய உபதேசம்.,

சந்தேகப்பிராணியாக இருக்காதே, எதிலுமே சாதிக்க மாட்டாய் என்ற அறிவுரை.,  எது உன் வழி என்பதை தெரிந்து கொள்- அந்த பாடத்தை படி,  உன் மனதுகுகந்த தொழிலை செய் என்று நாம் சொல்ல ஆரம்பித்திருக்கிறோமே, அதையே தான் கீதாசாரியனும் சொல்லியிருக்கிறார்.

மன வலிமை பெற உடல் வலிமையும் தேவை என்பதை வலியுறுத்த யோக சாதனைகள்.

பொதுவாக வாய் மொழியாக பேசுவதிலிருந்து எது நாகரீகம் என்பதையும், ,

நம்பினோர் கைவிடப் படார் என்ற உறுதி மொழியும் நாம் அன்றாட வாழ்க்கையில்  ,மனதில் கொள்ள வேண்டிய வழிமுறைகளே என்பது புரியும். .

ஸ்ரீ ஆதி சங்கராசார்யருடையது தான் முதன் முதல் பகவத் கீதைக்கு உரை என்று நமக்கு கிடைத்துள்ளது என்கிறார்கள். அவருடைய விளக்கங்கள் மூலம் – அவருடைய வார்த்தைகளிலேயே இந்த மாபெரும் காவ்யத்தை நாம் அறிந்து கொள்வோம்.

யத்ர யோகேஸ்வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ தனுர்தர: |

தத்ர ஸ்ரீர் விஜயோ பூதிர்  த்ருவா நீதிர்மதிர்மம  ||

यत्र योगेश्वर: कृष्णो यत्र पार्थो धनुर्धर: | तत्र श्रीर् विजयो भूतिर् ध्रुवा नीतिर् मतिर्मम ||

இந்த ஸ்லோகத்துடன் கீதையை முடிக்கிறார்.  எந்த இடத்தில்  யோகேஸ்வரனான க்ருஷ்ணன் இருக்கிறானோ, உடன் கையில் வில்லுடன் பார்த்தன் இருக்கிறானோ, அங்கு லக்ஷ்மி தேவி தானே வாஸம் செய்வாள்.  விஜயா-வெற்றியும்  நிறைந்த செல்வ செழிப்பும், அழியாத நீதியும் என்றும் ஓங்கி விளங்கும்.

 

ஜானகி க்ருஷ்ணன்

***********

 

 

 

தியான ஸ்லோகங்கள்:

ஓம் பார்தாய ப்ரதிபோதிதாம் பகவதா நாராயணேன ஸ்வயம் |

வ்யாஸேன க்ரதிதாம் புராண முனினா மத்யே மஹாபாரதம் |

அத்வைதாம்ருத வர்ஷிணீம் பகவதீமஷ்டா தஶாத்யாயினீம் |

அம்ப த்வாம் அனுஸந்ததாமி பகவத்கீதே பவத்வேஷிணீம் ||

ऊँ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयम् |

व्यासेन ग्रथितां पुराण मुनिना मध्ये महाभारतम् |

अद्वैतामृत वर्षिणीं भगवतीमष्टादशाध्यायिनीम् |

अम्ब त्वामनुसन्दधामि भगवत्गीते भवद्वेषिणीम् || -1

நமோஸ்து தே வ்யாஸ விஶால புத்தே புல்லாரவிந்தாயத பத்ர நேத்ர ||

யேன த்வயா பாரத தைல பூர்ண: ப்ரஜ்வாலிதோ ஞானமய ப்ரதீப: ||

नमोस्तु ते व्यास विशाल बुद्धे फुल्लारविन्दायत पत्र नेत्र |

येन त्वया भारत तैल पूर्ण: प्रज्वालितो ज्ञानमय प्रदीप: ||-2

ப்ரபன்ன பாரிஜாதாய தோத்ர வேத்ரைக பாணயே |

ஞான முத்ராய க்ருஷ்ணாய கீதாம்ருத  துஹே நம: ||

प्रपन्न पारिजाताय तोत्र वेत्रैक पाणये | ज्ञान मुद्राय कृष्णाय गीतामृत दुहे नम: || -3

ஸர்வோபனிஷதோ காவோ, தோக்தா கோபால நந்தன: |

பார்தோ வத்ஸ: ஸுதீர் போக்தா துக்தம் கீதாம்ருதம் மஹத் ||

सर्वोपनिषदो गावो, दोग्धा गोपाल नन्दन: | पार्थो वत्स: सुधीर्भोक्ता दुग्धम् गीतामृतं महत् ||-4

வஸுதேவ ஸுதம் தேவம் கம்ஸ சாணூர மர்தனம் |

தேவகீ பரமா நந்தம் க்ருஷ்ணம் வந்தே ஜகத்குரும் ||

वसुदेवसुतं देवं कंस् चाणूर मर्दनं | देवकी परमानन्दं कृष्णं वन्दे जगत्गुरुम् || -5

பீஷ்மத்ரோண தடா ,ஜயத்ரத ஜலா ,காந்தார நீலோத்பலா |

ஶல்யக்ராஹவதீ க்ருபேண வஹனீ , கர்ணேன வேலாகுலா||

அஶ்வத்தாம விகர்ண கோர மகரா துர்யோதனாவர்தினீ ,

ஸோத்தீர்ணா கலு பாண்டவைர் ரண நதீ, கைவர்தகே கேஶவே ||

भीष्मद्रोणतटा जयद्रथ जला गान्धार नीलोत्पला |

शल्यग्राहवती कृपेण वहनी कर्णेन वेलाकुला |

अश्वत्थाम विकर्ण घोर मकरा दुर्योधनावर्तिनी |

सोत्तीर्णा खलु पाण्डवैर्रणनदी कैवर्तके केशवे ||-6

பாராஶார்ய வச: ஸரோஜமமலம்  கீதார்த கந்தோத்கடம் | நானாக்யானக கேஸரம் ஹரிகதா ஸம்போதனா போதிதம் ||

லோகே ஸஜ்ஜன ஷட்பதைரஹரஹ: பேபீயமானம் முதா |

பூயாத் பாரத பங்கஜம் கலிமல ப்ரத்வம்ஸி ந: ஶ்ரேயஸே ||

पाराशर्य वच: सरोजममलं कीतार्थ गन्धोत्कटम् |

नानाख्यानक केसरं हरिकथा सम्बोधना बोधितम |

लोके सज्जन षत्पदैरहरह: पेपीयमानं मुदा |

भूयाद्भारत पङकजं कलिमल प्रध्वंसि नस्श्रेयसे || -7

மூகம் கரோதி வாசாலம் பங்கும் லங்கயதே கிரிம் |

யத் க்ருபா தமஹம் வந்தே பரமாநந்த மாதவம் ||

मूकं करोति वाचालं पङगुम् लङगयते गिरिम् | यत्कृपा तमहं वन्दे परमानन्द माधवम् ||

யம் ப்ரஹ்மா வருணேந்த்ர ருத்ர மருத: ஸ்துன்வந்தி திவ்யை: ஸ்தவை: | வேதை: ஸாங்கபத க்ரமோபனிஷதை: காயந்தி யம் ஸாமகா: | த்யானாவஸ்திதேன மனஸா பஶ்யந்தி யம் யோகினோ | யஸயாந்தம் ந விது: ஸுராஸுர கணா: தேவாய தஸ்மை நம: ||

यं ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुत: स्तुन्वन्ति दिव्यै: स्तवै: |

वेदै: साङगपद क्रमोपनिषदै: गायन्ति यं सामगा: |

ध्यानावस्थितेन मनसा  पश्यन्ति यं योगिनो |

यस्यान्तं न विदु: सुरासुर गणा: देवाय तस्मै नम: ||

இதி த்யானம் – इति ध्यानम् ||

 

ஸ்ரீமத் பகவத் கீதை

அத்யாயம்-1 அர்ஜுன விஷாத  யோகம்

 

துரியோதனன் முதலிய நூற்றுவரின் தந்தை த்ருதராஷ்டிரன். குரு குலத்து அரசன். அதனாலேயே அவன் வம்சத்தினர் கௌரவர்கள் என்று அறியப் பட்டார்கள்.   அவருடைய இளைய சகோதரன் பாண்டு. பாண்டுவின் மக்கள் ஐவர் பாண்டவர்கள்.  சகோதர்களுக்கிடையே நடந்த பூசல் வளர்ந்து யுத்தம் என்று முடிவாகி விட்டது.

வேதவியாசர் எழுதிய பாரதத்தின் நடுவில் வரும் பகவத் கீதை ஒரு உபதேச நூல்.   யுத்தகளத்தின் நடுவில் ஸ்ரீ க்ருஷ்ணரால், அர்ஜுனனுக்குச் சொல்லப் படுகிறது. அதன் பிண்ணனியை முதல் அத்தியாயத்தில் காண்கிறோம். என்னதான் தந்தையாக மகனின் முடிவை, அவன் அரசனாக எடுத்த முடிவை ஏற்றுக் கொண்டாலும் த்ருதராஷ்டிரனின் மனம் தம்பி மகன் மற்றும் குலத்தின் மற்ற வாரிசுகளுக்காகவும் வருந்துகிறது. சஞ்சயன் கண் தெரியாத   பேரரசருக்கு உற்ற துனைவன்.  அவருக்கு நடப்பதை நடந்தபடி சொல்ல என்றே வியாசர்  அருள் செய்திருக்கிறார். அரண்மனையில் அரசனுக்கு அருகில் இருந்தபடியே யுத்தகளத்தில் நடப்பதை சஞ்சயன் காண்கிறான் – உடனுக்குடன் அரசருக்குத் தெரிவிக்கிறான்.

கீதையின் ஆரம்பம் பேரரசர் த்ருதராஷ்டிரன் சஞ்சயனிடம் கேட்கிறார்.

யுத்தம் என்று முடிவு செய்து விட்டார்கள்.  இரு தரப்பினரும் யுத்த வெறி கொண்டு யுத்த களத்தில் வந்து சேர்ந்து விட்டார்கள். ஒரு தரப்பில் என் மக்கள்,   எதிரில் பண்டவர்கள் –  இரு பக்கத்தினரும் என்ன செய்கிறார்கள், சஞ்சயா?

சஞ்சயன் பதில் சொல்கிறார். அரசே, தங்கள் மகன் துரியோதனன் பாண்டவர்களின் படை அணி வகுத்திருப்பதைப் பார்த்து விட்டு ஆசாரியர் த்ரோணரிடம் வருகிறான்.

அவரைப் பார்த்து,  ஆசிரியரே,  எதிர் அணியை பார்த்தீர்களா?     த்ருபதன் மகன் உங்கள் மாணவன்  தானே? – அணி வகுத்திருக்கிறான் பாருங்கள்.  அந்த அணியில் சூரர்கள்  நிறைய – பீமன், அர்ஜுனன் – இவ்விருவருக்கும் இணையான பல வீர்கள். மஹா ரதிகள் – என்ற முதன்மை வீர்கள், விராடன், த்ருபதன் , த்ருஷ்ட கேது,  மற்றும் பலர். அனைவருமே நல்ல வீரர்கள்.   நம் தரப்பில் யர் யார் – சொல்லவா ?   தாங்கள், பீஷ்மர், கர்ணன், மற்றும் பலர். அனைவருமே சிறந்த வீரர்கள். எனக்காக உயிரையே கொடுக்கத் தயங்க மாட்டர்கள்.

(இந்த இடத்தில் விதி அவன் வார்த்தையில் விளையாடியதாக சொல்வார்கள்.  எனக்காக உயிரைக் கொடுப்பார்கள் என்று சொல்ல வந்தவன் – எனக்காக உயிரை விட்டவர்கள் என்று பொருள் படும்படி – த்யக்த ஜீவிதா: – உயிரை விட்டவர்கள் என்று சொல்லி விடுகிறான்.)

பீஷ்மரின் தலைமையில் கூடிய நமது தரப்பில் வீர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது, பீமன் தலைமையில் அவர்கள் எண்ணிக்கை அதன் எதிரில் ஒன்றுமேயில்லை. எனவே ஆசிரியரே, வீரர்களே எந்த நிலையிலும் பீஷ்மரை காக்க வேண்டியது உங்கள் பொறுப்பு.

அவன் மகிழ்ச்சியை மேலும் கூட்டுவது போல  அதே சமயத்தில் குரு வம்சத்தின் பிதாமஹர் எனும் குல மூத்தவர், பீஷ்மர் சங்கத்தை எடுத்து ஊதினார்.  சிம்ஹ நாதம் போன்று ஒலித்த அந்த நாதத்தைத் தொடர்ந்து மற்றும் பலரின் சங்க நாதங்கள் ஒலிக்கத் தொடங்கின.   பேரி எனும் வாத்யங்கள் முழங்கின. பணவான், கோமுகம் எனும் வாத்யங்களும் ஒலித்தன- ஒரே சமயத்தில் எழுந்த இரைச்சல்.

அதே சமயம் பாண்டவ  வீரர்களும், க்ருஷ்ணரும் வெண் புரவிகளில் வருகிறார்கள்.  ஹ்ருஷீகேசன் -ஸ்ரீ க்ருஷ்ணர் பாஞ்சஜன்யம் என்பதையும், தனஞ்ஜயன் – அர்ஜுனன் அதே போல தன் தேவதத்தம் எனும் சங்கத்தையும் எடுத்து சங்க நாதம் செய்கிறான்.  ஒவ்வொருவரும் அவரவர் சங்கத்தை ஊதுகிறார்கள், பீமன் தன்னுடைய சங்கம் பௌன்ட்ரம் என்பதை ஊதுகிறான். , யுதிஷ்டிர் அனந்த விஜயம், நகுல சஹதேவர்கள், சுகோஷ, மணி புஷ்பகம் என்ற பெயர்களுடைய சங்கங்களை ஊதுகிறார்கள்.

காசி ராஜா, சிகண்டி, த்ருஷ்டத்யும்னன், விராடன் மற்றும் அவர்கள் தர்ப்பில் உள்ள பெரும் வீர்கள் அனைவரும் தயார் என்பது போல தங்கள் சங்கங்களை ஊதுகிறார்கள். ஏக காலத்தில் எழுந்த ஒலி, தார்தராஷ்டிர்கள்- உங்கள் மைந்தர்களை நிலை குலைய செய்து விட்டது போலத் தோன்றுகிறது அரசே.  கௌரவர்களின் தரப்பு வீரர்களை பார்த்தவாறு, தன் ரத சாரதியான க்ருஷ்ணரிடம், அர்ஜுனன் ஏதோ சொல்கிறான்.  அவனுடைய கொடியில் கபி-குரங்கு தெரிகிறது. (ஆஞ்சனேயர் கொடியில் அமர்ந்தாக பொருள்)

அர்ஜுனன்  சொல்கிறான்:-

யுத்தகளத்தின் நடுவில் நின்று எதிர் தரப்பினரை பார்த்த அர்ஜுனன் மனம் தடுமாறுகிறது – என்ன செய்யத் துணிந்தோம் – நம் பாட்டனாரும், சகோதர்களும், மாமன், மருமகன் போன்ற உறவினர்களும், குரு நாதர்களும்  எதிர்  தரப்பில்– இவர்களையா கொல்லத்துணிந்து போர்  செய்யப் போகிறோம்  – க்ருஷ்ணா , வேண்டாம் – என்னால் முடியாது என்று  கண்ணீர் மல்க வேண்டியபடி தேர் தட்டில் அமர்ந்து விட்டான்.

யுத்தகளத்தில் தன் படை வீரர்கள் எண்ணிக்கையில் எதிரி சேனையை விட அதிகமாக இருப்பதைக் கண்டு இறுமாப்பு கொள்கிறான் துரியோதனன்.   அதே காட்சியைக் காணும் பாண்டவ வீரன் பார்த்தனோ பதறுகிறான்.

மனித மனத்தின் இரு எல்லைகள் இதுவே. ஒரே விஷயத்தை அல்லது செயலை பார்க்கும் இருவரின் கண்ணோட்டம் எவ்வாறு வேறு படுகிறது. இதுவே கீதை பிறக்க காரணமாக இருந்த குருக்ஷேத்ர யுத்த களம்.

பீஷ்மர் சங்க நாதம் செய்து ஆரம்பித்து வைக்கிறார். மற்ற அனைவரும் தாங்களும் தயார் என்பது போல சங்கங்களை ஊதுகிறார்கள்.   அர்ஜுனன்  ரதத்தை நடுவில் நிறுத்து, நான் யார் யார் , துரியோதனுக்காக யுத்தம் செய்ய வந்துள்ளார்கள் என்பதைப் பார்க்கிறேன் என்றான்.  ரத சாரதியாக வந்துள்ள க்ருஷ்ணனும் அவ்வாறே செய்கிறான்.

சஞ்ஜயன் அரசருக்கு விவரிக்கிறான். அரசே, சாரதியும் அவ்வாறே பீஷ்ம துரோணர்  மற்றும் கௌரவ சேனை நடுவில் ரதத்தை நிறுத்தினான்.   சுற்றிலும் இருப்பவர்கள் அனைவரும் உறவினர்களே – பாட்டனார், ஆசிரியர்கள், மாமன்  மச்சான் உறவு முறை கொண்டவர்கள்,  சகோதரர்கள், நண்பர்கள், மகன், பேரன் என்று குலத்தின் இளையவர்கள், பெண் கொடுத்த சம்பந்திகள்,  அனைவருமே என் நலனில் கருத்துடையவர்கள்.  என் சுக துக்கங்களை பகிர்ந்து கொண்டவர்கள்.

இவர்கள் பேராசை, இந்த இழிந்த செயலைச் செய்யத் தூண்டுகிறது என்றால் நாமும் அதைச் செய்ய வேண்டுமா?

குலம், அழியும். ஒரு குலம் அழிவதால் ஏற்படும் தோஷம், மித்ர துரோகம் என்பதை விடக் கொடியது. அண்டியவனை அழித்தல், நம்பினவனை கைவிடுதல் போன்ற பாபங்கள் இதற்கு எதிரில் ஒன்றுமேயில்லை எனும் அளவு கொடியது.  நாம் இந்த பாபத்திலிருந்து எப்படி விடு படுவோம். என்ன செய்வோம்?  ஜனார்தனா ! குலமே அழியும் என்று அறிந்த பின் இந்த செயலை நாம் ஏன் செய்ய வேண்டும்.

குலம் அழிந்தால் குல தர்மம் அழியும். அதர்மம் தலை விரித்தாடும்.

இதனால் துன்பப்படப் போவது  நம் குலப் பெண்களே.  பாதுகாப்பின்றி பெண்கள் என்ன செய்வார்கள்? பெண்களின் நிலை பரிதாபமாகும்.  இவர்களை அதர்மமாக பயன்படுத்தினால்  குலம் என்று முழுதுமாக இருக்குமா? வாரிசுகள் எப்படி வளரும்?  குடும்பம் என்ற ஒழுங்கை குலைத்து அழிப்பவனும், நரகத்துக்கே போவான்.  இப்படி முறையற்ற ஒரு நிலையை அடைந்தவர்களும் என்ன செய்வார்கள்?  அவர்களும் நிரந்தரமாக நரகத்துக்கு சமமான வாழ்வையே வாழ்வார்கள்.

காலம் காலமாக வந்த மனித தர்மம் அழியும். பித்ருக்களுக்கு – முன்னோர்களுக்கு பிண்டம் போடுவது நிற்கும். (நீரளிப்பது) நிற்கும்.  அவர்கள் தவிப்பார்கள். ஜாதி தர்மாவது, குல தர்மமாவது, எதுவுமே இருக்காது.

(வ்ருஷ்ணி வம்சத்தில் வந்தவனே – வார்ஷ்ணேயா! கோகுலத்தில் பெண்களை கம்ச ராஜா வருத்தியதை நீ அறிவாய். தனக்கோ, தன் குழந்தைகளுக்கோ, மற்றவர்களுக்கோ எதுவும் மீதி வைக்காமல் கோகுலத்து  பெண்கள் மதுரா அரசனான கம்சனுக்கே  கோகுலத்து பசுக்கள் மூலம் கிடைத்த பால் முதலான அனைத்தையும் கொடுக்க வேண்டியிருந்தது.  கம்சனிடம் இருந்த பயத்தால் அவர்கள் தொடர்ந்து பால் தயிர், வெண்ணெய் முதலியவைகளை  மதுரா கொண்டு சென்றனர்.  அதைத் தடுக்கவே. வெண்ணெய் உண்பவனாக மற்ற கோகுலத்து சிறுவர், சிறுமியர்களையும் கூட்டி வெண்ணெயை அபகரித்தாய்.

கோகுலத்துப் பெண்களை கம்சனின் அரச குலத்தோர், சிறுமை செய்வதை தடுத்தவன் நீ.  அந்த வகையில் பெண்கள் உரிமை என்பதை முதன் முதலில் பேசியவனும் நீயே. எனவே குலம் அழிந்து போவதால் பெண்கள் துன்பமடைய பொறுப்பாயா)

 

அஹோ – (அலறுகிறான்)  – பெரும் பழிச் செயலை செய்வோமா? ராஜ்ய சுகம் அவ்வளவு பெரிதா? என்ன பேராசை?  தன் மக்களை அழித்து அரசனாவோமா?

இப்படி பலவும் எண்ணிய அர்ஜுனன்  என்  தேகம் நடுங்குகிறது.  இவர்களைக் கொன்று நான் வெற்றியைக் கொண்டாடுவேனா? என்னால் முடியாது  என்று சொல்லியபடி  ரத தட்டில் அமர்ந்து விட்டான்.

எனக்கு வெற்றி வேண்டாம். நாம் இந்த வெற்றியை எப்படி கொண்டாடுவோம்.  நாம் பெற்ற வெற்றியை பகிர்ந்து மகிழ்ச்சி கொள்ளும் உறவினர்கள், நண்பர்கள், சம்பந்திகள், இளையவர்கள் அனைவரும்  எதிர் தர்ப்பில். இவர்களைக் கொன்று நான் எதை சாதிக்கப் போகிறேன். இதனால் என் குலமே அழியும்..  பிழைத்தவர்கள் மத்தியில் என்ன பேச்சு இருக்கும். என்னை தூற்றுவார்கள். வேண்டாம்.  யாராவது அம்பெய்தி என்னை கொன்று விட்டால், நான் மகிழ்வேன்.

இவ்வாறு சொன்னவன், தன் வில்லை கீழே வத்து விட்டு ரதத் தட்டில் அமர்ந்து விட்டான்.

(இது வரை   உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்யா எனப்படும் பகுதியில், யோக சாஸ்திரத்தில் க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை –  எனும் முதலாவது அத்யாயம்)

 

 

ஸ்ரீமத் பகவத் கீதை-அத்யாயம் 2– சாங்க்ய யோகம்

சஞ்சயன்:

அரசே, இப்படி தன் மக்கள், என்று கருணையால் கண்களில் நீர் பெருக மனம் வாடும் அர்ஜுனனைப் பார்த்து மதுசூதனன் ஏதோ சொல்கிறான்.   இருவரும் பேசுவதை கேட்டு, அட்சரம் பிறளாமல் அரசரிடம் தெரிவிக்கிறான்.

(சஞ்சயன் த்ருதராஷ்ட்ர ராஜாவுக்கு நடந்ததை நடந்த படி சொல்லும் தகுதியை பெற வியாசர் அருளால் அதற்கான விசேஷ கண் பார்வையை பெற்றவர்.)

அர்ஜுனன்:

எப்படி நான் பீஷ்மர் பேரில் அம்பை விடுவேன்?  துரோணர் எனக்கு வில் வித்தயை கற்பித்தவர். அவர் மேல் தான் எப்படி என் அம்பை செலுத்துவேன்?    இவர்கள் என் மதிப்புக்குரியவர்கள் க்ருஷ்ணா –  இப்படி  என் குரு, பாட்டனார்  இவர்களைக் கொன்று நான் என்ன நன்மையை அடைவேன்?   இவர்கள் அடிபட்டு ரத்தம் சொட்ட இருக்கும் பொழுது நான் நிம்மதியாக சாப்பிடவா முடியும்? இதில் யார் ஜயிப்போம், யார் தோற்போம் என்றும் தெரியாது. எவரின்றி நாம் வாழவே விரும்ப மாட்டோமோ அவர்கள் தான் யுத்த களத்தில் எதிரில் நிற்கிறார்கள். என் மனம் நடுங்குகிறது, செய்வதறியாது தவிக்கிறேன். க்ருஷ்ணா! நீ தான் சொல், நான் என்ன செய்ய? இதில் எதில் நன்மை, உன் சிஷ்யனாக இருந்து கேட்கிறேன்.  எனக்கு கட்டளை இடு.

இப்படித்தான் ராஜ்யம் பெற வேண்டுமா? என் மனமே வருந்தி தவிக்க, எனக்கு துளிக் கூட சம்மதமில்லாமல்   ஒரு செயலைச் செய்து, எதிரிகள் இல்லாமல் தேவ ராஜ்யமே கிடைத்தால் கூட நான் எப்படி மகிழ்ந்து இருப்பேன்.

சஞ்ஜயன்:

அரசே! இப்படி சொன்னவன், நான் சண்டை போட மாட்டேன் என்று சொல்லி விட்டு, மௌனமாக இருந்து விட்டான்.  அவனைப் பார்த்து, பாட்டனார் முதல் சகலரும் எதிரி தரப்பில் உள்ளது தெரிந்தது தானே, கண் எதிரில் காணும் போது தடுமாறுவது சகஜம் தான் என்று நினைத்தோ, சற்றே சிரித்தபடி, இரு சேனைகளுக்கும் இடையில் நின்றபடி ஹ்ரிஷீகேசன்  பதில் சொல்கிறார்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

 

குழம்பிய மனதுடன்  அமர்ந்துவிட்ட அர்ஜுனுக்கு கண்ணன்  சமாதானம் செய்கிறார்.  வேண்டாத விஷயங்களை நினைத்து, தேவையற்ற வருத்தம் அடைகிறாய்.   பெரிய அறிவாளி போல வேறு பேசுகிறாய்.

சங்கர பாஷ்யம் : இந்த குழப்பம் துரோணருக்கும், பீஷ்மருக்கும் கூட வர வேண்டிய குழப்பம் தானே. அவர்களும் தான் உன் குருவும், பாட்டனாரும் ஆவர்.  எடுத்து வளர்த்த குழந்தைகளை எதிர்த்து நிற்கிறோமே என்று அவர்கள் வருந்தவில்லை.    ஏன் தெரியுமா? இருவருமே ஆத்ம ஞானம் அடைந்து  ப்ரும்ம தன்மையை அடைந்து விட்டவர்கள். உலகியலில் உள்ள இன்ப துன்பங்களை கடந்து விட்டவர்கள்.

நீ இந்த சமயம் பின் வாங்குவது உன் குலத்திற்கும் அழகல்ல, யுத்தத்தில் மரணமடைந்து பெறும் ஸ்வர்கமும் கிடைக்காது, உனக்கு புகழும் தராது. உயிருடன் இருப்பவன்,  மரணமடைந்தவன் என்று,  விஷயம் அறிந்தவர்கள் கவலைப் படுவதில்லை.

இதற்கு முன் நான் இருந்தேனா ? நீ தான் இருந்தாயா, அல்லது இந்த வீரர்கள், தலைவர்கள் இருந்தார்களா? நாம் அனைவருமே இன்னும் வரும்காலத்திலும் இருப்போமா?

பிறந்த அனைவரும், குழந்தை பருவம், இளமை, முதுமை என்று மாறுவது போலவே அடுத்த நிலையாக உடலைத் துறந்து செல்வதும் இயற்கையே. குழந்தையாக இருந்த உடலா தற்சமயம் உள்ளது ?

நடுக்கும் குளிர், வாட்டும் கோடைக் காலம், இவை சரீரத்தை பாதிக்கின்றன.  சுக துக்கங்கள் மனதை வருத்துகின்றன. வருவதும் மறைவதுமாக இருக்கும் இது போன்ற இரு எதிர் நிலைகள், இவைகள் நிரந்தரமல்ல.  போகிற போக்கில் நம் மேல் படும் தொடு உணர்வே – அதற்கு மேல் அவை நிரந்தரமல்ல.   இந்த உணர்வை இயல்பு என்று எண்ணி அதிகமாக அலட்டிக் கொள்ளாமல் இருப்பதே நன்று.  இவ்விரண்டு விதமான தன்மைகளிலும் சமமாக இருப்பவன் – அதாவது துக்கம் என்று ஒரேயடியாக வருந்தாமலும், சுகம் என்பதில் ஒரேயடியாக திளைக்காமலும் இருப்பவன்- அமரத்வம் அடைகிறான்.

அது எப்படி சாத்யம் என்பதை விளக்குகிறார் ஸ்ரீ சங்கரர் தன் பாஷ்யத்தில்.    உண்மையில் இவைகள் – குளிர், அல்லது வெப்பம் எனும் உணர்வுகள் மற்றொன்றின் வெளிப்பாடே – நமது மனம் உணர்ந்து நாம் அனுபவிப்பது. ஒருவருக்கு குளிர் மற்றொருவருக்கு அதே அளவு பாதிக்காமல் இருக்கலாம். வெப்பம் என்று உணர்வதை மற்றொருவர் சுகமாக நினைக்கலாம்.  எனவே இதன் அடிப்படை வேறு.

சுகம், துக்கம் என்று நீ அனுபவிப்பதும் அவ்வாறே.  இதுவும் எல்லோருக்கும் ஒரே விதமாக இருப்பதில்லை.  அவரவர் மனப் பான்மையை, சந்தர்பத்தை பொறுத்து சுகம் என்றோ, துக்கம் என்றோ அனுபவிக்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக கயிற்றில் பாம்பை காண்பதை சொல்கிறார்கள். இருட்டில் கயிறு பாம்பாக தோற்றமளிக்கிறது. அதைக் கண்டு ஏற்படும் பயம் உண்மை. அதுவே வெளிச்சத்தில் கயிறு என்று தெரிந்தவுடன் வரும் மன அமைதியும் உண்மையே.  கயிறு இருக்கிறது. அதைக் கண்டு மிரண்ட பாம்பு இல்லை. ஆனால் பாம்பு என்ற நினைவு இருந்தவரை அனுபவித்த பயம் உண்மையே.  எனவே நமது அறிவு ஒரு எல்லைகுட்பட்டதே. உண்மை தெரிந்து ஆஹா , வெறும் கயிறு, இதைப் பார்த்தா பயந்தோம்  என்ற அறிவு-  ஞானம்  வரும்போது சாதாரண மனிதன் அடையும் நிம்மதியை, உலகையே வெறும் தோற்றமே எனக் காணும் பேறு பெற்ற ஞானிகள் , அடைகிறார்கள். அவர்களே அமரத்வத்தை அடைகிறார்கள்.)

नासतो विद्यते भाव: नाभावो विद्यते सत: | उभयोरपि   दृष्टोऽन्तरनयो:  तत्व दर्शिभि: ||

இது சற்று கடினமான அர்த்தம் கொண்ட ஸ்லோகம்.  நம் அறிவுக்கு புலனாவது ஒன்று. அதன் இயல்பான நிலை ஒன்று.  இரண்டையும் அறிந்தவர்கள் தத்வ தர்சிகள் – அதாவது உண்மையான ஞானத்தை அடைந்தவர்கள்.

இவையனைத்தயும் படைத்தும், செலுத்தியும் வருவது- ஒரு சக்தி – ப்ரும்மம் -அது அழியாதது என்று அறிவாய்.

குழம்பாதே,  உலகில் பிறந்த உயிரினங்கள் ஒரு நாள் மறையத்தான் வேண்டும். இது தான் இயற்கை என்பதை அறியாதவனா நீ.  நீ அழிக்கப் போவது உடலையே. அதனுள் உறையும் ஆத்மா அழிவில்லாதது. அதனால் தயக்கம் எதுவுமின்றி போர் செய். எழுந்திரு.

அழிப்பவன்  தான் அழித்து விட்டதாக சொல்வதும் அவன் உடலையே, ,  அழிபவனும் உடலைத் தான் விடுகிறான்.,   ஆத்மா விடுதலை அடைகிறது. காலம் அதை அழிக்காது  அடிபட்டாலும் உடல் வலி அதற்கு இல்லை. ஆத்மா அழியாதது – பிறவியற்றது, என்றும் உள்ளது எனும் பொழுது  எவரும் கொலை செய்வதும் இல்லை, கொலை செய்யப்படுபவனும் இல்லை.

குழந்தை பருவம், யௌவனம், முதுமை என்று மாறும் உடல், காலம் வரும் பொழுது இந்த உடலையே தியாகம் செய்து விடுகிறது.  பழைய நைந்த ஆடைகளை மனிதன் களைவது போல நைந்த  உடலை துறந்து  விட்டு புது  உடலை கண்டடைகிறது.  நீ கொல்லப் போவதாக நினைத்து கலங்குகிறாயே அது அந்த ஜீவனின் உடலையே – அதன் ஆத்மா விடுதலை பெற்று விடுகிறது. பரமாத்மாவுடன் இரண்டற கலந்து விடுகிறது.   பரமாத்மாவின் அம்சமே ஜீவன்களில் ஆத்மாவாக உள்ளது.

அக்னியோ, வாயுவோ, அல்லது மற்ற இயற்கை சீற்றங்களோ அதை வாட்டாது. கத்தி முதலான ஆயுதங்களால் பாதிக்கப்படாது.  உடலில் படும் காயங்கள் ஆத்மாவை பாதிக்காது.

அதனால் ஜீவன்களின் பிறப்பும் இறப்பும் நம் கையில் இல்லை. நாம் செய்யக் கூடியதும் எதுவும் இல்லை. இதை உணர்ந்து க்ஷத்திரியனாக, யுத்தம் செய்ய வந்தாய், அதைச் செய்.

பிறக்கும் முன் என்னவாக இருந்தோம்? தெரியாது, இறந்த பின் என்னவாக ஆவோம் – அதுவும் தெரியாது. இடைப் பட்ட இந்த நிகழ் காலத்தையே நாம் அறிகிறோம்.

ஏதோ எண்ணி கலங்கி செய்ய வேண்டியதை செய்யாமல்  விட்டால் உன் கடமையை மறந்தவனாகிறாய். க்ஷத்திரியனாக  உனது கடமை – அதை செய்து தான் ஆகவேண்டும்.   மிஞ்சிப் போனால் என்ன  நடக்கப் போகிறது ? ஜயித்தால் ராஜ்யத்தை  திரும்ப பெறுவாய் – தோற்றால் யுத்தத்தில்  உயிரை விட்டு வீர சுவர்கம் அடைவாய்.  யுத்தம் செய்து மரணம் அடைவது க்ஷத்திரியர்களுக்கு உகந்ததே.  பற்றின்றி உன் கடமையை செய்,  நமக்கு விதிக்கப் பட்ட கடமையை  செய்வது வரை  தான் நமது பொறுப்பு – பலன் என்ன என்று முன் கூட்டியே எதிர் பார்த்தால் , அது கிடைக்கலாம், கிடைக்காமலும் போகலாம்  – அதுவும் யுத்தம் செய்யும்போது வெற்றி தோல்வி இரு சாராருக்கும் பொதுவே.

இவ்வளவு தூரம் வந்து விட்டு யுத்தம் செய்ய மறுத்தால் கோழை என்று தூற்றுவார்கள்.   மரணத்தை விட கொடியது அது.  மதிப்போடு வாழ்ந்தவனுக்கு இந்த இகழ்ச்சி பொறுக்க முடியாது.  பயந்து ஓடி விட்டான் என்பர். தேவையா இந்த கெட்ட பெயர்? யோசித்துப் பார்.

சுகம், துக்கம், லாபம் நஷ்டம் என்ற கணக்கெல்லாம் வேண்டாம். யுத்தம் செய்ய வந்தாய், அதை முழு மனதோடு செய்.

இது வரை சொன்னது சாங்க்யம் எனும் யோக முறையில் பர தத்வத்தை புரிந்து கொள்வது.  அதுவே புத்தி யோகம் –  .   புத்தி அல்லது ஞானம்.

மனதில் சஞ்சலம் வரும்.  அதில் கட்டுபடாதே. பயப்படாதே.  உழைப்பு தான் மன குழப்பத்தை தீர்க்கும்.  புத்தி யோகம்  அதாவது செய்யும் செயலில் ஈடுபாடு- மோக்ஷத்துக்கு வழி காட்டும். இதில் நஷ்டம் எதுவுமில்லை.   முதல் காரியமாக பயம் போகும், மனதில் தெளிவு உண்டாகும்.  குரு நந்தனா!  யோக சாதனையே பரமானந்தத்தைத் தரும்.   பலவிதமான வழிகள், கொள்கைகள்,  மோக்ஷத்துக்கு வழி காட்டுவதாக சொல்லும். அவை நம்பத் தகுந்ததல்ல.

பதவிக்கும், அதிகாரத்துக்கும் ஆசைப் பட்டு இனிமையான வார்த்தைகளால், வேதமே ஆனாலும் அதன் உட்பொருளை அறியாமல் கண் முன் தெரியும் இந்த உலகமே உண்மை என்பர்.  சுக துக்கங்கள் வினைப் பயனே –  வினை அல்லது ஒருவனின் கர்மாவே பலன் அளிக்க வல்லது.  நல் வினையின் பயன் ஸ்வர்கமே என்பர். இது அவர்களின் அறிவின் எல்லை என்று கொள்ளலாம்.   இவர்களுக்கு சாதனையில் மனம் செல்லாது.

அறிவு என்றும் உடன் இருப்பது. திருட்டு போகாது. எதிர் காற்று வந்து அடித்துக் கொண்டு போகாது. (இந்த கஷ்டங்கள் விவசாயிகள் அனுபவிப்பது- விளைந்த பயிரை முழுவதுமாக அறுவடை செய்யும் முன் இந்த இடையூறுகளை அனுபவிக்கிறார்கள்)

வேதம் மூன்று குணங்களைப் பற்றி பேசுகிறது. ப்ரும்ம ஞானம் இந்த மூன்றையும் விடச் சொல்கிறது. (மூன்று குணங்கள்- சத்வ, ரஜஸ், தமஸ் என்பவை) உடல் சம்பந்தமான அனுபவங்களை தாண்டி வா. அவைகள் க்ஷண நேர அனுபவங்களே – ஒரே நிலையில் மனதைக் கட்டுப் படுத்தி என்றும் உண்மையாக, நேர்மையாக இரு.

அடுத்த ஸ்லோகமும் கடினமானதாகத் தோன்றியது.  காஞ்சி மஹா ஸ்வாமிகளின் விளக்கம் தெளிவாக புரிய வைத்தது.

வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது அல்லது மிகப் பெரிய நீர் நிலை, அதில் தளும்ப நீர்.  அதன் அருகில், சிறு குளம்- ‘உதபானே ‘என்பதற்கு குறைவான நீர் கொள்ளும் ஒரு பாத்திரம்- குளமாகவும் இருக்கலாம் அல்லது கையில் வைத்திருக்கும் குடம் நீராகவும் இருக்கலாம்.

சுற்றிலும் நீர் நிறைந்துள்ள இடத்தில் கையிலுள்ள குடம் நீருக்கு என்ன மதிப்பு? அல்லது பயன்.  குடிக்கலாம் என்று கொண்டாலும், அதே நீர் தான் இதிலும்.   அந்த அளவே வேத சாஸ்திர விற்பன்னர்களின் அறிவு ப்ரும்ம ஞானத்தின் முன்.

यावानर्थ उदपाने सर्वथ: सम्प्लुतोदके | तावान् सर्वेषु वेदेषु  ब्राह्मणस्य विजानत: ||

யாவானர்த்த உதபானே சர்வத: ஸம்ப்லுதோதகே |

தாவான் சர்வேஷு வேதேஷு ப்ராம்மணஸ்ய விஜானத: ||

ச.பா: வெள்ளம் பெருக்கெடுத்து வரும் பொழுது, நீருக்காக அதன் அருகில் குளம், கிணறு வெட்டுவோம் என்று முனைய மாட்டார்கள். ராஜ்யத்தையே வெற்றி கொள்ள புறப்படும் அரசன், ஒரு துண்டு நிலத்துக்கு ஆசைப் பட மாட்டான்.  அதே போல ப்ரும்ம ஞானம் பெற விரும்பும் சாதகன், சாதனையின் நடுவில் பெறும் சிறு நன்மைகளை பொருட்படுத்தக் கூடாது,

வேதம் படித்தவனும் அந்த கல்வியில் கரை கண்டவனே. அவர்கள் கர்ம காண்டமான – யாக யக்ஞங்களை வலியுறுத்துகிறார்கள்.  ஸ்வர்கம் அடையலாம் என்பது இதன் பலன் – பலனை எண்ணியே இந்த யாக யக்ஞங்களை செய்கிறார்கள்.  அதுவும் அத்யாவசியமான செயலே. அது பல வழிகளில் ஒரு வழியே.  அதன் மூலமும் என்னை அடையலாம் என்கிறார்.

ச,பா:  செயல்களின் பலன் அவித்யை அல்லது அறியாமையை அகற்றும் அவ்வளவே.    ஒருமுறை செய்த செயலின் நினைவு, எதிர்பார்ப்பு, அதில் கிடைத்த பலன் , தவறுகள், திருத்த வேண்டியவை எவை என்ற   விவரங்களே அனுபவம் என்பது.  ஒவ்வொருமுறையும் இந்த அனுபவம் செயலை இன்னும் மேம்படுத்திச் செய்ய  உதவும்.

அடுத்த ஸ்லோகம் பலனையே எண்ணி செயல்களைச் செய்யாதே.

 

कर्मण्येवाधिकारस्ते  मा फलेषु कदाचन | मा कर्म फलहेतुर्भू: मा ते सन्गोऽस्त्वकर्मणे ||

கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன  |

மா கர்மபலஹேதுர்பூ: மா தே சங்கோஸ்து அகர்மணே ||

சாதாரணமாக நாம் விரும்பும் செயல்களைச் செய்யும் பொழுதே,  அதைச் செய்வது வரை தான் ஒருவன் தன் மனம் விரும்பியபடி செய்யலாம்.  அதன் முடிவு எப்படி வரும் என்பதை ஓரளவுக்கு மேல் அனுமானிக்க முடியாது.  அதிகமான பலனை எதிர்பார்த்து கிடைக்கவில்லையெனில் ஏமாற்றமும், மன சோர்வும் தான் மிஞ்சும்.  அதற்காக செய்யவே வேண்டாம் என்று விடவும் முடியாது.

மனமார்ந்த நம்பிக்கையுடனும், நல்லெண்ணத்துடனும் விதி முறைகளை அனுசரித்து நேர்மையாக உன் கடமையைச் செய். தனஞ்ஜயா!  வெற்றியா தோல்வியா என்ற கவலை இல்லாமல் யோகத்தில் இருந்து செய். இந்த இரண்டையும் வெற்றி அல்லது தோல்வி- சமமாக பார்ப்பது யோகம் -devotion- அல்லது ஈடுபாடு எனப்படும்.

தொலை நோக்கோடு பார்.  புத்தியை பயன்படுத்தி எது தேவை எது தேவையில்லை என்பதை உணர்ந்து கொள்.

 

உயிரினங்கள் பிழைத்திருக்கவும், கவலையின்றி வாழவும் வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு யாக யக்ஞங்கள் செய்யப் படுகின்றன. இதனால் மனித குலம் பெறும் நன்மையும் அளவில்லாதது.

இந்த ஸ்வர்கம் எனும் ஆசை கூட இல்லாமல் நீ உன் கடமையைச் செய்.  எந்த சபலத்துக்கும் நீ காரணமாக இருக்காதே. கடமையை செய்யாமல் இருக்கவே வேண்டாம்.

செயல் நன்மையாக முடிந்ததா, தவறா  என்று யோசிக்காதே. இந்த இரண்டும் பாதிக்காத மன நிலை தான் யோகியுடையது.  தனஞ்ஜயா!   கடமையை செய்யும் வரை தான் உனக்கு அதனுடன் உள்ள தொடர்பு. அதனால் யோகியாக செயல் படு.

யோகம் என்பது என்ன?  செய்வன திருந்தச் செய் – அவ்வளவே.  ஞானத்தை அடைந்தவன் வினைப் பயன் என்ற ஒன்றை நம்புவதில்லை.  அவர்களுடைய நாட்டம் பரப்ரும்மத்தை அறிவதே.  பிறவி எனும் பெருங்கடலை கடப்பதேயாகும்.

இதுவரை நீ அறிந்ததிலும், செயல்களிலும் அலுப்பு தட்டும் பொழுது அடுத்து என்ன என்று யோசிப்பாய்.  இன்னமும் நாம் அறியாதது உள்ளது என்று உணர்வாய். ஆத்ம விசாரம் – தான் யார்? நான் என்பது என்ன என்று யோசிக்கத் துவங்குவாய். ஆழ்ந்து ஆராயத் தொடங்குவாய்.  வாழ்வில் இது நாள் வரை செய்த எதுவும் முழு திருப்தியை தராத நிலையில் என்ன செய்தால் மன சாந்தி கிடைக்கும் என்ற எண்ணம் வரும். திடமான மனதுடன் சாதனை செய்யும் யோகிகள் போல ஆவாய்.  தியானத்தில் மனம் அமைதி அடையும்.

அர்ஜுனன் வினவுகிறான்.

திடமான மனதுடையவர் யாவர்? அவர்கள் மொழி என்ன?  தியானத்தில் மனதொன்றி இருப்பது எப்படி சாத்யம்? அதன் பொருட்டு என்ன விதிகள், நியமங்கள் உள்ளன?  ஸ்தித தீ: -அசையாத மனதுடையவர் என்று சொல்லப்படும் சாதகன் அந்த சமமான மன நிலையை எப்படி அடைகிறான்? அதனால் அவர் பெறுவது என்ன?

பகவான் பதில் சொல்கிறார்.

தனக்கென்று எந்த ஆசையும் இன்றி, அனைத்தையும் துறந்தவன்.  தன்னிடம் இருப்பதிலேயே திருப்தி அடைபவன்.  அவனே ஸ்தித ப்ரக்ஞன்.

துக்கம் என்று அவன் மனம் வருந்தாது.   சுகம் என்று துள்ளி குதிக்கவும் மாட்டான்.   ஆசை, பயம், க்ரோதம் போன்றவை அவனை அலைக்கழிக்க விட மாட்டான்.   அவனே திட மனத்தினன்- ஸ்தித தீ:

அனைவரிடமும் ஒரே விதமான சினேக பாவத்துடன் இருப்பவன். அந்தந்த நேரங்களின் சுபமோ, சுபம் அல்லாததோ அப்படியே ஏற்றுக் கொள்வான்.  யாரையும் வெறுக்க மாட்டான். எவரையும் அளவுக்கு அதிகமாக நேசிக்கவும் மாட்டான்.

ஆமை தன் அங்கங்களை சுருக்கிக் கொள்வது போல தன் புலன்களை அடக்கிக் கொள்வான்.

ஆகாரத்தை விட்டு, விரதம் இருக்கும் மனிதர்கள் கூட அந்த ஆகாரத்தின் வாசனையை மறக்க முடியாது, மறப்பதும் இல்லை. விரதம் முடிந்தவுடன் அதே, முன் சுவைத்த   ருசியான உணவுகளைத் தான் தேடுவார்கள்.  ப்ரும்ம ஞானம் அடைந்த பெரியவர்கள், அந்த வாசனையையும் துறந்தவர்கள்.

புலன்கள் அனுபவிப்பதை துறப்பது என்பது எளிதல்ல. கௌந்தேயா! முயன்று தோற்றவர்களே அதிகம்.  உலக விஷயங்களில் பற்று அதிக சக்தியுடன் மனிதனை மாற்றக் கூடியது. அதை வெல்வது என்பது மிக் கடினம்.

(ப்ரும்ம ஞானம் என்பது அஹம் ப்ரும்மாஸ்மி – அந்த ப்ரும்மும் நானே என்ற மனப் பக்குவத்தை அடைந்தவர்கள். உலக ஆசையை அறவே விட்டவர்கள்.  அவர்களால் என்ன லாபம்?  அந்த மனப் பக்குவத்தை அடைந்தவர்கள், மற்ற சாதாரண ஜனங்கள் போலவே தோற்றத்தில் இருந்தாலும் உலக நன்மைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களாக இருப்பர்.  இது பற்றியும் பின்னால் விவரமாக சொல்கிறார் பகவான்.)

இதையும் என்னிடத்தில் நம்பிக்கை வைத்தவன் சாதிக்கிறான்.  மன அடக்கம் உள்ளவனே புலன்களையும் அடக்குகிறான். அவன் புத்தி தான் ஸ்திரமானது என்கிறோம்.

அதில் என்ன தப்பு என்று கேட்கிறாயா? உலகில் பிறந்தவர்கள் கண் பார்ப்பதையும், காதுகள் கேட்பதையும், வாய் ருசியை விரும்புவதையும் ஏன் மறுக்க வேண்டும்?

இது ஒருமுறை அனுபவித்தால் அடங்காது. மேலும் மேலும் ஆசையை வளர்க்கும்.  கிடைக்காத பொழுது கோபத்தைக் கிளறும். கோபம் தாபத்தை கொடுக்கும். புத்தி அதே நிலையில் இருந்தாலும் மேற்கொண்டு அறிவு வளர்ச்சியோ, சாதனைகளோ செய்ய முடியாது. அதனால் தான் நிம்மதி வேண்டுமானால், ஆசையை அடக்கு என்று சொல்கிறோம்.

சாந்தமாக இருந்து சிந்திப்பவன் புத்தி நல்ல வேலை செய்யும். அவனால் பல காரியங்களை உலக நன்மைக்காக செய்ய முடியும். அதுவே தன்னிஷ்டப்படி நடப்பவன், தன் சுகங்களையே பெரிதாக நினைப்பவன் செய்ய நினைத்தாலும் நற்காரியங்களை செய்ய விடாமல், காற்று வீசும் போக்கில் செல்லும் ஓடம் போல ஆவான்.

அடுத்த ஸ்லோகமும் கடினமானது.

या निशा सर्व बूतानाम् तस्याम् जाग्रति सम्यमि | यस्यां जाग्रति भूतानि सा निशा पश्यतो मुने: ||

யா நிசா சர்வ பூதானாம் தஸ்யாம் ஜாக்ரதி ஸம்யமீ |

யஸ்யாம் ஜாக்ரதி பூதானி சா நிசா பஸ்யதோ முனே: ||

உயிரினங்கள் அனைத்தும் உறங்கும் இரவு, தன்னை உணர்ந்த முனிவனுக்கு பகல்.  அவை விழித்திருக்கும் நேரம் அவனுக்கு இரவு.

ச.பா: இரவு இயல்பாகவே தாமஸம் என்னும் அறியாமை. அதனால் பொருள்களை சரிவர புரிந்து கொள்ள முடியாமல் போகிறது.  அறிவு உள்ளவன், அந்த இருட்டிலும் கண்டு கொள்கிறான்.  மிகப் பெரிய உண்மை- பர ப்ரும்மம் என்பது இருட்டுக்கு உதாரணமாக சொல்லப் படுகிறது. இது சாதாரணமாக இருளில்- அறியாமையில் மூழ்கி இருப்பவர்களுக்குத் தெரியாது.  ஆனால் ப்ரும்ம ஞானி அறிகிறான் அதாவது விழித்திருக்கிறான்- எனவே அது அவனுக்கு பகல். .

அறியாமையில் மூழ்கி இருப்பவன் இருளில் இருப்பவன். அதே நேரம் மெய்யறிவு அடைந்தவன் அந்த இருளில் வாடுவதில்லை.  உலக இயலில், பொருள் ஈட்டுவதிலும், சிற்றின்பங்களிலும் ஈடுபடுபவன், விழித்திருப்பதாக வைத்துக் கொண்டால் அதில் நாட்டம் இல்லாத மெய்யறிவுடையவன் இருளில் இருக்கிறான்.

அது எப்படி என்றால், மேலும் மேலும் நீர் வந்து நிரம்பிக் கொண்டிருக்கும் சமுத்திரம் அசைவற்று அவைகளை ஏற்றுக் கொள்கிறது. அதே போல காமங்கள்-ஆசைகள் மற்றும் தேவைகள் அந்த ஞானியிடம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்துவது இல்லை. அவனிடம் அடங்கி விடுகிறது. சாதாரண மனிதர்கள் அதில் வசமாக மாட்டிக் கொள்கிறார்கள். தான் என்ற அகங்காரம் இன்றி உலகில் இயல்பாக நடந்து கொண்டிருக்கும் சாதகன் தான் மெய்யறிவை பெற்று சாந்தமாக இருக்கிறான்.

பார்த்தா!   இது தான் ப்ரும்ம ஞானம் அதாவது மெய்யறிவு, அதை அடைந்தவன் எப்பொழும் ஆனந்தமாக இருப்பான். துன்பம் அவனை அணுகாது.  வாழ்வின் இறுதி காலத்திலும் ப்ரும்ம நிர்வாணம் எனும் நிலையை அடைகிறான்.

(இது வரை ப்ரும்ம வித்யா எனப்படும் உபனிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், க்ருஷ்ண அர்ஜுன சம்வாதம் -சம்பாஷனை – என்பதில் சாங்க்ய யோகம் எனும் இரண்டாவது அத்யாயம்)

 

ஸ்ரீமத் பகவத் கீதை

அத்யாயம்-3  கர்ம யோகம்

 

பரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா !  விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்? நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,

ஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார்.   உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி.  உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும்.  அதிலும்  பலனை  நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.

ஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள்  வைத்திருப்பான் – என்று  “ஸ்தித தீ: “  என்று சாதகணை வர்ணிக்கிறார்.

பயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.

அத்யாயம் -3

சாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான  பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது   கடமையை ஏன் செய்ய வேண்டும் ? மனிதனின் வாழ்வின் தேவைகள்  பல  – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது.  அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன்,  தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே.  இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும்  ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது.  அதன் பொருட்டு  சாமான்ய கடமைகளை விட்டு  தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே.  இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும்  சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.

இந்த இரண்டில் எது உயர்ந்தது?   தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா,  அல்லது தன்  அறிவின் மேம்பாட்டுக்காக  ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா?  ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .

என்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம்.  ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே.  ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து  தன்னையறிவார்கள்.  தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை.  தத்வமஸி  என்ற வேத வாக்யம்.

சங்கர பாஷ்யம்: ஞானம்  கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது.  சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம்.  ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு  எதிராக ஒன்றைச் சொல்வதால்  அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான்.  இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது?  வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது.  கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.

இதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.

எந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும்,  நான் சன்யாசி என்று மட்டும்  சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.

ச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால்  தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.

இந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள்.  அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம             பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.

ஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள்  இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.

கர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.

உலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று.  யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார்.  யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது  போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.

யாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான்  கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.

அடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.

अन्नाद्भ्वन्ति भूतानि  पर्जन्यादन्नसम्भव: |   यज्ज्ञाद्भवति पर्जन्यो यज्ज्ञ कर्मसमुद्भव: |

कर्म ब्रह्मोद्भवम् विद्धि  ब्रह्माक्षर समुद्भवम् | तस्माद्सर्वगतम् ब्रह्म नित्यम् यञ्जे प्रतिष्टितम् ||

அன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது.  அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில்,  ப்ரும்ம அக்ஷர சம்பவம்  – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்த சக்கரம்   சுழன்று கொண்டே இருக்கும்.  வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர்.  ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம்.  அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள்.  ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.

ச.பா:  ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.

ஜனகர் போன்ற அறிஞர்,  நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது.  அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர்  அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர்.  செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர்.  அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும்  மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.

அர்ஜுனா! நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.

அரசனாக, அல்லது  எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.

பார்த்தா! எனக்கு மூவுலகிலும்  ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை.  இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

நான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும்.  உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.

ஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம்  இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.

இப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள்.  இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை.  கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன்.  இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான்.  தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்),   குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.

இயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும்.  மற்றவர்களுக்குத் தெரியாது.

என்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு.   நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.

இது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள்.  சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.

ஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன்?  தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.

ச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும்? இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.

விருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன,    இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.

ச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும்.  விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும்.  நடுவழியில் எதிர்படும் திருடன் போல  நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல  மனோதிடம் வேண்டும்.  இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது,  எதையோ பின்பற்றி,  தன்  தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.

தனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம்  – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி  மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.

அர்ஜுனன் கேட்கிறான்:  பாபம் செய் என்று தூண்டுவது யார்? அல்லது எது? பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன?

ஸ்ரீ  க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம்  அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட?  இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை.  இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.

ச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத்  தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது.  அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.

புகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது.  அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும்.  அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.

இதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன?

அறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள்.  ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை  தெரிந்து விடும்.

ஆசை மறைத்திருப்பது அறிவை.  ஞானம் சுலபமாக அடைய முடியாதது.  பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள்  உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.

இதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி.  புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து.  இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.

இந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை.  உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும்  இயங்கக் கூடியவை.  இதை விட அதிக நுணுக்கமானது மனம்.  எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன.  மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள்  ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.

இவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள்.  பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).

 

ஸ்ரீமத் பகவத் கீதை

 

அத்யாயம்-3  கர்ம யோகம்

 

பரமார்தம் என்றால் என்ன – க்ருஷ்ணா !  விவரமாக சொல்லு- அதை அறிய நான் என்ன செய்ய வேண்டும்? நீயே என் குரு – உபதேசம் செய் எனவும்,

ஸ்ரீ க்ருஷ்ணர் விவரமாக சொல்கிறார்.   உன்னையே உணர்ந்து கொள் – அதற்கான தகுதியை பெற புலன்களை அடக்குவதே முதல் படி.  உலகில் பிறவி எடுத்தவன் ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு – அதை சரிவர செய்ய வேண்டும்.  அதிலும்  பலனை  நினைக்காமல் செய்வதே நன்மை தரும் – அதன் பின் சாதகனாக ஒருவன் எப்படி இருப்பான் என்பதை விவரிக்கிறார்.

ஆசை, பயம், கோபம், இவற்றை விட வேண்டும். புலன்களை அடக்கி மனதை ஸ்திரமாக கட்டுக்குள்  வைத்திருப்பான் – என்று  “ஸ்தித தீ: “  என்று சாதகணை வர்ணிக்கிறார்.

பயப்படாதே, எடுத்த காரியத்தில் பின் வாங்காதே – என்பது தான் இரண்டாவது அத்தியாயத்தின் சாரம்.

அத்யாயம் -3

சாஸ்திரங்களிலும் மற்றும் வழக்கில் உள்ளதுமான  பல கடமைகளைப் பற்றி இந்த அத்தியாயத்தில் சொல்லப் படுகிறது. ஒவ்வொருவருக்கும் இந்த சமூகத்தில் ஒரு கடமை உள்ளது   கடமையை ஏன் செய்ய வேண்டும் ? மனிதனின் வாழ்வின் தேவைகள்  பல  – அதை நிறைவேற்ற உழைக்க வேண்டியது பொதுவானது.  அது தவிர, தன் நலன், சமூக நலன், தேசத்தின் நலன்,  தெய்வ , முன்னோர்கள் – இவர்களுக்கு செய்ய வேண்டியவை இவைகளும் கடமைகளே.  இது தவிர ஆத்யாத்மிகமாக , யோக சாதனைகள் செய்வதும் , அறிவை வளர்த்துக் கொள்வதும்  ஒரு சிலரேனும் ஏற்று செய்ய வேண்டியுள்ளது.  அதன் பொருட்டு  சாமான்ய கடமைகளை விட்டு  தவம் செய்வது, சன்யாசம் மேற்கொள்வது போன்றவைகளும் அவசியமாகிறது. இரண்டுமே யோகம் – முனைந்து செய்யப் படுவதே.  இவையே, கர்ம யோகம் என்றும், ஞான அல்லது சன்யாச யோகம் என்றும்  சொல்லப்படுகின்றன.

இந்த இடத்தில் அர்ஜுனன் தன் சந்தேகத்தை கேட்கிறான்.

இந்த இரண்டில் எது உயர்ந்தது?   தனக்கு விதிக்கப்பட்ட செயலை விடாமல் செய்யும் கர்ம யோகமா,  அல்லது தன்  அறிவின் மேம்பாட்டுக்காக  ஏற்றுக் கொள்ளும் சன்யாஸமா?  ஏதோ ஒன்றை நான் ஏற்று நடக்க வேண்டும் என்று தீர்மானமாக சொல் – என் மனம் குழம்பி இருக்கும் நிலையில் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார் .

என்னைப் பொறுத்தவரை , இந்த உலகில் இரண்டு விதமாகவும் பகவானை அல்லது பரப்ரும்மத்தை அடையலாம்.  ஒன்று சாங்க்யம் என்ற ஞானம் மற்றொன்று கர்மம் அல்லது செயல், கடமையைச் செய்தல் – இரண்டுமே நல்ல வழிகளே.  ஞான மார்கத்தில் செல்பவர்கள் சாங்கயம் என்ற சாதனைகளைச் செய்து ஞானம் பெறட்டும். யோகிகள் கடமையைச் செய்து அதே ஞானத்தை அடைந்து  தன்னையறிவார்கள்.  தன்னையறிவது, என்பது தான் ப்ரும்ம நிலை.  தத்வமஸி  என்ற வேத வாக்யம்.

சங்கர பாஷ்யம்: ஞானம்  கடமையை செய்வதை விட உயர்ந்தது, என்று அர்ஜுனன் நினைப்பது போல இந்த கேள்வி உள்ளது.  சன்யாசிகளுக்குத் தான் ஞான யோகம் என்பதும் பொதுவான எண்ணம்.  ஆனால் பகவான் அப்படியல்ல எங்கிறார். இரண்டு வித்தியாசமான மனோ பாவம் கொண்ட மனிதர்களுக்கு இரண்டு விதமாக வழிகள் உள்ளதாகச் சொல்கிறார். அர்ஜுனனை கடமையைச் செய் என்றும், யுத்தம் செய் என்றும் வற்புறுத்திச் சொன்னவர், அதற்கு  எதிராக ஒன்றைச் சொல்வதால்  அர்ஜுனன் விளக்கம் கேட்கிறான்.  இரண்டு எதிரெதிரான வழிகள், ஒரு மனிதனால் இரண்டையும் கை கொள்ள முடியாது என்பது தெளிவு. நான் எதைத் தேர்ந்தெடுப்பது?  வழிகள் வெவ்வேறானதால் சென்றடையும் இலக்கும் வேறு என்றாகிறது.  கடமையைச் செய்து, அனுபவம் பெற்று ஞானம் அடைந்து பெறும் நன்மையை, ஞானம் பெற சாதனைகள் செய்தும் அடையலாம்,. முதலாவது சுற்று வழி, இரண்டாவது நேர் வழி. ஆனால் முதலாவது எளிது, இரண்டாவது கடினம்.

இதை அடுத்த ஸ்லோகத்தில் பகவான் சொல்கிறார்.

எந்த கடமையையும் செய்யவே ஆரம்பிக்காமலும்,  நான் சன்யாசி என்று மட்டும்  சொல்லிக் கொள்வதாலும், ஒருவன் சித்தியை அடைய முடியாது.

ச.பா: கர்மா என்று இங்கு சொல்லப் படுவது வேத சாஸ்திரங்களில் சொல்லப் பட்ட யாகம் முதலானவை. முன் பிறவியில் செய்த பாபங்களைத் தொலைக்கவும், மனதை தூய்மையாக்கிக் கொள்ளவும் இவைகளைச் செய் என்று வேத சாஸ்திரங்கள் வகுத்துள்ள நெறிகளே இவை. மனம் தூய்மையானால்  தெளிவான புரிதலும், அதைத் தொடர்ந்து நல்ல குணங்களும், அறிவும் வரும்.

இந்த கர்மாக்கள் சன்யாசிக்கு இல்லை. அதனால் சன்யாசி நைஷ்கர்ம்யன் – கர்மா என்ற பந்தம் இல்லாதவன் என்கிறார்கள்.  அதைத் தான் ‘கர்மணாமனாரம்பாத் ‘ எந்த செயலையும் செய்யவே ஆரம்பிக்காமல், நான் கர்ம             பந்தத்தை தொலைத்து விட்டேன் என்பது அபத்தம் என்கிறார்.

ஒரு க்ஷண நேரம் கூட ஏதாவது செய்யாமல் மனிதன், மற்ற உயிரனங்கள்  இருப்பதில்லை. அவனவன், அதனதன் இயல்பு படி ஏதோ செய்து கொண்டேயிருப்பதை அறிவோம்.

கர்மேந்திரியங்கள்- அவயவங்கள், கண் முதலானவை இவற்றை அடக்கி விட்டு மனதால் நினைத்துக் கொண்டே இருந்தால் அவன் செய்வது மித்யாசாரம்- ஏமாற்று வேலை எங்கிறார்.உண்மையாக செய்பவன் முதலில் மனதை அடக்க வேண்டும்.

உலகில் வாழவே, ஏதோ செய்து தான் ஆக வேண்டும். ஒன்றும் செய்யாமல் இருப்பதை விட தனக்கு முடிந்தை செய்வதே நன்று.  யாக யக்ஞங்கள் செய்வது ஒரு பக்கம்- அதை வேத சாஸ்திரங்கள் அறிந்தவர்கள் செய்வார்கள். மற்றபடி சாதாரண மக்கள் செய்ய வேண்டியதும் சில உண்டு. ப்ரஜைகளை ஸ்ருஷ்டி செய்த ப்ரஜாபதி யக்ஞங்களை செய்து தேவதைகளை திருப்தி செய்யுங்கள். அவர்கள் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்வார்கள். பரஸ்பரம் உதவி செய்து கொண்டு இஷ்ட காமங்களை அனுபவியுங்கள் என்றார்.  யாக யக்ஞங்கள் மூலம் தேவதைகள் மகிழ்ச்சியடைவார்கள். மழை பொழிவது, கால் நடைகள் பெருகுவது, பயிர் செழிப்பது  போன்ற செயல்கள் தேவதைகள் அருளால் நடப்பது. இவைகளைப் பெற்றுக் கொண்டு தன் பங்கு செயலை- யாகத்தில் தேவதைகளை அழைத்து ஹவிஸ் என்பதைத் தருவதும், அதை அக்னி கொண்டு அவர்களிடம் சேர்ப்பிக்கும் என்பதும் யாகத்தில் ஹோமம் செய்வதன் பொருள். – செய்யாமல் விடுபவனை திருடன் என்கிறார்.

யாகத்தில் தேவதைகளுக்கு ஹவிஸ், மற்ற ஜீவன்களுக்கு அன்ன தானம் முதலியவை செய்து மீந்ததைத் தான்  கர்த்தாவான வேத வித்துக்கள் உண்பார்கள். அதனால் அவர்கள் தூய்மையாகிறார்கள். அதுவே, தன் பொருட்டு மட்டும் சமைத்து உண்பவன், பாபத்தை உண்பவனாகிறான்.

அடுத்து உலகமே ஒரு சக்கரமாகவும், அது சுழலுவதையும் விளக்குகிறார்.

अन्नाद्भ्वन्ति भूतानि  पर्जन्यादन्नसम्भव: |   यज्ज्ञाद्भवति पर्जन्यो यज्ज्ञ कर्मसमुद्भव: |

कर्म ब्रह्मोद्भवम् विद्धि  ब्रह्माक्षर समुद्भवम् | तस्माद्सर्वगतम् ब्रह्म नित्यम् यञ्जे प्रतिष्टितम् ||

அன்னம் – உணவே ஜீவன்களை வாழ வைக்கிறது.  அன்னம் மழையினால் பெறப் படுகிறது. மழை வர யக்ஞங்கள் செய்யப் படுகின்றன- யக்ஞம் கர்மத்தை அடிப்படையாக கொண்டுள்ளது -கர்மா ப்ரும்மத்தில்,  ப்ரும்ம அக்ஷர சம்பவம்  – இந்த சக்கரம் இடைவிடாது சுழன்று கொண்டே இருக்கிறது.

இந்த சக்கரம்   சுழன்று கொண்டே இருக்கும்.  வேத வித்துக்களான அறிஞர்கள் மட்டுமன்றி, அனைவருமே இந்த சுழற்சியை பாதுகாக்கின்றனர்.  ஆத்மாவை அறிந்தவன், தனக்குள்ளேயே வாழ்பவன். அவனுக்குத் தான் செயல் என்று எதுவுமில்லை. அப்படி இருப்பவன் சன்யாசி அல்லது சாங்க்யன். எந்த செயலிலும் அவனுக்கு நாட்டமில்லை, பெறும் பலனும் இல்லை. எதைச் செய்யாமல் விடினும் நஷ்டமுமில்லை. நீ இன்னும் அந்த நிலையை எட்டவில்லை. அதனால் பற்றின்றி உன் செயலை செய். பற்றின்றி செயல்களைச் செய்தும் நல்ல கதியை அடையலாம்.  அப்படி சித்தி அடைந்தவர்கள் ஜனகர் போன்றவர்கள்.  ராஜரிஷி என்று அழைக்கப்படுபவர். தன் கடமையை விடாமல் செய்து மேன்மையடைந்தவர்கள் அவரைப் போன்றே வேறு சிலரும் உண்டு.

ச.பா:  ஜனகர் ஏன் தன் கடமையை விடாமல் செய்தார், ப்ரும்மத்வம் எனும் மேல் படியை அடைய முயற்சிக்கவில்லை என்பதற்கு, சாந்தோக்ய உபனிஷதிலிருந்து மேற்கோள் காட்டியிருக்கிறார் ஸ்ரீ சங்கரர்.

ஜனகர் போன்ற அறிஞர்,  நான்காவது வர்ணமான சன்யாசத்தை மேற்கொள்ள முடியாது. (பால்யம், யௌவனம், க்ருஹஸ்தம், சன்யாசம் என்ற நான்கு). க்ஷத்ரியர்களுக்கு அதற்கான ஒப்புதல் கிடையாது. ப்ராரப்த கர்மா-முன் வினை தான் ஒரு ஜீவனின் பிறப்பை நிச்சயிக்கிறது.  அவருடைய முன் வினை காரணமாக ,க்ஷத்திரியனாக பிறந்தவர்  அதே முன்வினையில் செய்த நற்காரியங்களின் பலனாகவோ, சாதனைகளாலோ ஞானத்துடன் பிறந்தவர்.  செய்யும் செயலை திருந்தச் செய்து தன் கடமையை செய்யும் பொழுதே அந்தராத்மா சுத்தமாக. ஆத்ம விசாரமும் செய்து வந்திருந்தவர். கடமையை அவர் விட்டால், மற்ற பிரஜைகளும் அவரை பின்பற்றுவர்.  அதனால் அவர் ப்ரும்மத்வம் என்ற அமரத்வம் அடையா விட்டாலும்  மோக்ஷம் அடைவதில் தடங்கல் எதுவுமில்லை.

அர்ஜுனா! நீயும் க்ஷத்ரியன் – அதனால் எந்த காரணம் கொண்டும் ப்ரஜா ரக்ஷணம் என்ற செயலை விட முடியாது.

அரசனாக, அல்லது  எதோ ஒரு துறையில் ஸ்ரேஷ்டனாக – முன்னிலையில் இருப்பவன் எதையெல்லாம் செய்கிறானோ, அதைப் பார்த்து சாதாரண ஜனங்கள் பின் பற்றுவார்கள். அவன் இது ப்ரமாணம்- இது நம்பத்தகுந்தது என்றால் அவர்களும் நம்புவார்கள்.

பார்த்தா! எனக்கு மூவுலகிலும்  ஆக வேண்டிய காரியம் எதுவுமில்லை.  இது வரை கிடைக்கப் பெறாததை இனி பெற வேண்டும் என்ற ஆசையும் இல்லை. ஆனாலும் நான் கர்ம மார்கத்தில் தான் இருக்கிறேன், செயல்களை செய்து கொண்டு தான் இருக்கிறேன்.

நான் எதுவும் செய்யாமல் விட்டால், உலகத்தார் என்னைப் பார்த்து பின்பற்றுவார்கள். உலகமே அழியும்.  உலகம் நிர்மூலமாக நானே காரணமாவேன்.

ஒரு விஷயத்தில் பற்று வைத்து உண்மையாக அதை நல்ல முறையில் செய்ய முயலும் சாதாரண மனிதனைப் போலவே சாதகனாக ஞான மார்கத்தில் உள்ளவனும் அந்த செயலைச் செய்ய வேண்டும். ஆனால் அவன் எதை எண்ணி செய்கிறானோ அந்த பற்றுதல், சுய நலம்  இல்லாமல் செய்ய வேண்டும். அதனால் என்ன லாபம் என்றால், உலகத்தில் நன்மை பெருகும்.

இப்படி ஒரு முனைப்போடு செய்து காட்டினால், அதை பின் பற்றும் மற்றவர்கள் அதன் மதிப்பை உணர்வார்கள்.  இதில் அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதும் தேவையில்லை.  கடமையை செய்வார்கள் என்பதே பெரிய பலன்.  இயல்பாக செய்யும் செயல்களையும் கூட அக்ஞானி தான் செய்தேன் என்று சொல்லிக் கொள்வான்.  தத்வம் அறிந்தவர்கள், குணங்கள் (சத்வ, ரஜஸ், தமஸ்),   குணங்கள், செயலை ஊக்குவிக்கின்றன, ஏதோ தானே செய்தாகச் சொல்கிறான் என்று அதை பொருட்படுத்துவதும் இல்லை.

இயல்பாக பிறவியில் வரும் குணம் சத்வமோ, ராஜஸமோ, தாமஸமோ அதற்கேற்ப அவனவன் செயல் இருக்கும். முற்றும் அறிந்தவனுக்கு அதன் பலா பலன் அல்லது உயர்வு, தாழ்வு தெரியும்.  மற்றவர்களுக்குத் தெரியாது.

என்னிடத்தில் உன் செயல்களை முழுவதுமாக ஒப்படைத்து விடு.   நான் சேதனன், பரம் பொருள் என்னை ஆட்டுவிக்கிறது, என்ற அத்யாத்ம எண்ணத்துடன், யுத்தத்தைச் செய். எந்த பயமும், தயக்கமும் வேண்டாம்.

இது தான் என்னுடைய கொள்கை. இதை அறிந்து பின் பற்றுபவர்களும் நல்ல கதியை அடைவார்கள்.  சம்சார பந்தத்திலிருந்து விடுபடுவார்கள். அதுவன்றி, இதில் குற்றம் காண்பவர்கள், என் கொள்கையை ஏற்காதவர்கள், ஞானமும் பெறாமல், மூடனாக, அழிவார்கள்.

ஞானியானாலும் பிறந்த பிறப்புக்கு ஏற்றவாறு செயல்களைச் செய்கிறான். அவனை நிர்பந்தித்து என்ன பயன்?  தன் போக்கில் இயற்கையை அடைகிறான்.

ச.பா: பிறப்பிலேயே அதனதன் இயல்பு தீர்மானிக்கப் பட்டு விடுகிறது, அதன்படி தான் நடக்கும் என்றால், மனித முயற்சி என்பதும், சாதனைகளும் என்ன பலன் தரும்? இந்த கேள்விக்கு அடுத்த ஸ்லோகத்தில் பகவான் பதில் சொல்கிறார்.

விருப்பும், வெறுப்பும் புலன்கள் மூலமே உணரப் படுகின்றன, செயல்களில் வெளிப்படுகின்றன,    இவை தான் முதல் எதிரி, இதை அடக்க பழக வேண்டும்.

ச.பா: இந்த இரண்டு இடையூறுகளையும் அடக்கியவனே, அடுத்து என்ன என்று அறிய முயலுவான். அந்த சமயம் குரு உபதேசமும், சுய கட்டுப்பாடும் அவனை உயர்த்தும்.  விருப்பும், வெறுப்பும் அதைச் சார்ந்த கோபமும், லோபமும் ஒவ்வொன்றாக கழண்டு போக அவனுக்கு உபதேசத்தின் பலன் மனதில் உறைக்கும்.  நடுவழியில் எதிர்படும் திருடன் போல  நன்மையை நோக்கிச் செல்லும் மனிதனின் சாதனையில் இந்த இரண்டு குணங்களும் எதிரில் வரும். அதைத் தவிர்த்து மேற் கொண்டு செல்ல  மனோதிடம் வேண்டும்.  இந்த மனோ திடம் வரும் வரை இயல்பான ஆசை, மற்ற உலகியல் ஈர்ப்புகள், தர்மம் என்பதை தவறாக புரிந்து கொள்வது,  எதையோ பின்பற்றி,  தன்  தர்மத்தை விடுவது போன்ற இடையூறுகள் வரும்.

தனக்கு விதிக்கப் பட்ட கடமையை செய்வது தான் தர்மம். பர தர்மம்  – மற்றவர்கள் நன்மையை பெறுகிறார்களே, நாமும் அதை பின் பற்றுவோம் என்று வழி  மாறிச் சென்றால் நன்மையைத் தராது. தன் கடமையை செய்து அதில் மரணமே வந்தாலும் நல்லது, மற்றவனின் தர்மத்தை அனுசரிப்பது அதை விட அதிக துன்பம் தரும்.

அர்ஜுனன் கேட்கிறான்:  பாபம் செய் என்று தூண்டுவது யார்? அல்லது எது? பலமாக இழுத்து பாப காரியத்தில் ஈடுபடுத்துகிறதே ஏதோ ஒரு சக்தி, அது என்ன?

ஸ்ரீ  க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்: இதோ, காமம்  அதாவது ஆசை, என்ற ஒன்று க்ரோதம் – ஆத்திரம் என்ற ஒன்று- இவை போதாதா மனிதனை பாபம் செய்யத் தூண்ட?  இரண்டுமே ரஜோ குணத்தில் பிறந்தவை.  இவைகளுக்கு தீனி போட்டு கட்டுப் படியாகாது – திருப்தியே அடையாத குணங்கள். பெரும் தீமையே உருவானவை. முதல் எதிரி இவை தான்.

ச.பா: உலகில் எல்லா தீமைகளுக்கும் காரணம் ஆசை தான். ஆசை நிறைவேறவில்லையெனில் கோபமாக, க்ரோதமாக மாறுகிறது. வாஸ்தவத்தில் ரஜோ குணம் செயலில் ஈடுபடத்  தேவையே. ஆசையின்றி ஒரு செயலும் துவங்கப் பட மாட்டாது.  அதிகமாகும் பொழுது ஆசையே விபரீதமாகிறது.

புகை மண்டி இருக்கும் இடத்தில் அக்னி இருப்பது முதலில் தெரியாது.  அருகில் செல்லச் செல்ல புகை விலகி அக்னி கண்ணுக்குத் தெரியும்.  அதே போல புழுதி படிந்த கண்ணாடி அதன் குணம் தெரியாமல் புழுதி மறைக்கும் – சுத்தம் செய்தால் கண்ணாடி நம்மை ப்ரதி பலிக்கும். கருவை காக்கும் கருப்பை இயற்கை அளித்த பாதுகாப்பு. இவைகளை முதன் முறை காணும் பொழுது தென்படவில்லை.

இதம் ஆவ்ருதம்- இது சூழப் பட்டுள்ளது – இந்த ‘இதம்’ என்ற சொல் குறிப்பது என்ன?

அறிவுள்ளவன் இதை புரிந்து கொள்வான்- தன்னை ஆட்டுவிப்பது ஆசையே என்பதை. சாதாரண மனிதர்கள் உணர மாட்டார்கள்.  ஆசைப் பட்டு ஒரு பொருள் கிடைத்தவுடன் அடையும் மகிழ்ச்சியே பொதுவாக அனைவரும் அறிவோம். அடுத்த கட்டமாக பேராசை தான் கெடுதல் என்று சொல்வோம். ஆனால், ஆசையை கட்டுப் படுத்த நினைக்கும் சாதகனுக்கு ஆரம்பத்திலேயே இதன் தன்மை  தெரிந்து விடும்.

ஆசை மறைத்திருப்பது அறிவை.  ஞானம் சுலபமாக அடைய முடியாதது.  பிறவியிலேயே ஓரளவு ஞானம் உள்ளவர்கள்  உடனே தன்னை சுதாகரித்துக் கொள்வர்.

இதன் அடிப்படையாக அல்லது இருப்பிடமாக உள்ளவை புலன்கள், மனம், புத்தி.  புகை போல சூழ்ந்துள்ளவை. எனவே, பரத குலத்து வீரனே, முதலில் இந்த இந்திரியங்களை கட்டுபடுத்து.  இவைகள் தான் ஞானம், அதற்கு மேல் விக்ஞானம் என்பதை நாசம் செய்யும் இடர்.

இந்திரியங்கள் அதாவது புலன்கள் ஐந்தும், கேட்பது போன்ற உணர்வுகள், பௌதிகமான உடலை விட நுணுக்கமானவை.  உடல் இயங்குவதை விட வேகமாகவும் பரவலாகவும்  இயங்கக் கூடியவை.  இதை விட அதிக நுணுக்கமானது மனம்.  எண்ணம், நினைவாற்றல், விருப்பு வெறுப்புகள் மனதின் கட்டுப் பாட்டில் உள்ளன.  மனதில் சந்தேகங்கள், தவறுகள், ஆசைகள்  ஏற்படலாம். மனதையும் ஆட்டி வைப்பது புத்தி. புத்தி தீர்மானமாக ஒரு வழியைச் சொல்லும். புத்தியைக் காட்டிலும் அதிக வல்லமையுடையது மனிதனது சரீரத்திலேயே உறையும் பரம் பொருளின் அம்சமான ஆத்மா.

இவ்வாறாக, வரிசையாக புத்தியின் தன்மையை உணர்ந்து, ஆத்ம சக்தியை உணர்ந்து கொள்.  பிறகு எதிரியான ஆசைகள் போன்றவைகளை முறியடிப்பாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையில் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் கர்ம யோகம் என்ற மூன்றாவது அத்யாயம்).

 

அத்யாயம் -4  ஞான கர்ம சன்யாச யோகம்

ஸ்ரீ பகவான்  தொடர்ந்தார் :-

இந்த யோகம் என்று இதுவரை நான் சொன்னதை ராஜ ரிஷிகள் அறிவார்கள்.  பரம்பரையாக வந்த ஞானம் இது. முதன் முதலில் நான் விவஸ்வான் என்னும் பெயர் பெற்ற சூரியனுக்கு உபதேசித்தேன். அவர் மனுவுக்கு சொன்னார்.  மனு இக்ஷ்வாகு அரசனுக்கு சொன்னார்.  காலக்ரமத்தில் பல யோக முறைகள் அழிந்து விட்டன.  அதையே  முன் விவஸ்வானுக்கு சொன்னபடி இன்று உனக்கு சொல்கிறேன். நீ என் பக்தன், சகா – நன்பன் என்பதால்.  உத்தமமான இந்த யோகம்  பரம ரகஸ்யமாக  காப்பாற்றப் பட்டு வந்துஇருக்கிறது. -1

அர்ஜுனனுக்கு சந்தேகம்.  கேட்கும் அனைவருக்குமே வரக் கூடியது தான்.நீ பிறந்து வளர்ந்தது வேறு யுகத்தில்,  விவஸ்வான் இருந்து கேட்டதாகச் சொல்கிறாய்.  அவருடைய காலம் வேறு – இது எப்படி சாத்தியம்? -2

(நான் அறிந்தவரை நீ வசுதேவரின் மகனாக சமீபத்தில் வந்தவன். விவஸ்வானுடைய காலமோ சிருஷ்டி ஆரம்பத்தில் என்று கேட்டிருக்கிறோம்.  வாசுதேவனாக அவதரித்தவன் பர ப்ரும்மமே என்பதை அறியாத நிலையில் வரும் சந்தேகமே )

ஸ்ரீ பகவான் பொறுமையாக பதில் சொல்கிறார்.

பல ஜன்மங்கள், பிறவிகள் கடந்து விட்டன அர்ஜுனா! எனக்கும், உனக்கும் தான்.   அவை அனைத்தையும் நான் அறிவேன்.  ஆனால் நீ அறிய மாட்டாய். -3

நான் அஜன் – அதாவது பிறவி அற்றவன்.  அழிவில்லாத பரமாத்மா.  ஜீவன் களின் ஈஸ்வரன்.  இந்த உருவை நானே ஏற்றுக் கொண்டு என் மாயா சக்தியால்,  சம்பவாமி – தோன்றுகிறேன். -4

யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத |

அப்யுத்தானம் அதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம். ||

பரித்ராணாய சாதூனாம் வினாஸாய ச துஷ்க்ருதாம் |

தர்ம ஸம்ஸ்தாபனாய ஸ்ம்பவாமி யுகே யுகே||

यदा यदा हि धर्मस्य ग्लानिर् भवति भारत | अभ्युथ्थानम् अधर्मस्य तदात्मानम् श्रुजाम्यहम् ||

परित्राणाय साधूनाम् विनाशाय च दुश्क्रुथाम् | ध्र्म सम्स्थापनाय सम्भवामि युगे युगे ||

இந்த இரண்டு ஸ்லோகங்களும் ப்ரசித்தமானது.

தர்மத்திற்கு புறம்பாக உலகில் ஜனங்களின் நடத்தையோ, அல்லது தீய செயல்கள் அதிகமாகி கஷ்டங்கள் அதிகமானாலோ, நான் அவதரிக்கிறேன். (என்னை நானே சிருஷ்டி செய்து கொள்கிறேன்)

தீய செயல்கள் செய்பவரும் உலகில் பிறந்தவர்களே. அவர்களால் அவதிப் படுபவர்கள் சாதுக்களே. அவர்கள்   தர்ம வழியில் நடப்பவர்கள்.   அவர்களை காக்க நான் வருவேன்.  யுகம் யுகமாக  நான் அவதரித்து தர்மத்தை ஸ்தாபனம் செய்கிறேன்.

இப்படி நான் அவதரிப்பதை  புரிந்துகொண்டவர்கள் – என் மாயை அது என்பதை அறிவார்கள்.  இவ்வாறு ,  என் செயல்களையும், என்னையும் தெளிவாக தெரிந்து கொண்டவர்கள்  இந்த ஜன்மத்தில் மரணம் அடைந்தபின் திரும்ப பிறப்பதில்லை.  மறுபிறவி எனும் பந்தத்தில் இருந்து  விடுபடுகிறார்கள்.

ஆசை, பயம், க்ரோதம்  இவைகளை விட்டவர்கள் என் நினைவாகவே இருந்து, என்னையே உபாசித்து வருபவர்கள் பலர். தவம் செய்வதிலும், ஞானம் பெறவுமே காலத்தை செலவழித்தவர்கள்.  இந்த ஞானமும், தவமும் அவர்களை பரிசுத்தமாக ஆக்கி விடுகிறது.  எனக்கு சமமாக ஆகி விடுகிறார்கள்.

(ஞானம் பெறுவது தான் மோக்ஷம் பெற வழி.  ப்ரும்மத்தை உணர்வது தான் சாதகனின் தவம்.   யோக சாதனைகளைச் செய்து நானே ப்ரும்மம்- அஹம் ப்ரும்மாஸ்மி   என்ற நிலையை அடைகிறார்கள். )

ஏதோ சிலருக்குத் தான் உன் அருள் கிடைக்குமா?   அதற்கு பதிலாக அடுத்த ஸ்லோகம்.

யோ யதா பஜந்தே மாம் தான்ஸ் ததைவ பஜாம்யஹம் |

மம வர்த்மானு வர்த்தந்தே  மனுஷ்யா: பார்த சர்வஸ: ||

ये यथा भजन्ते माम् तान्स्तथैव भजाम्यहम् | मम वर्त्मानुवर्तन्ते मनुष्या: पार्थ सर्वश: ||

பார்த்தா!    என்னை யார் எப்படி நினைக்கிறார்களோ, அவர்களுக்கு அதே விதத்த்தில்  தென்படுவேன்.   நான் செய்வதை மனிதர்கள் அப்படியே அனுசரிக்கிறார்கள்.   வேண்டுபவர்களுக்கு தேவையானதை நான் தருகிறேன்.

தேவதைகளை திருப்தி செய்தால் தேவையானதை பெறலாம் என்று ஜனங்கள் யாகம் செய்கிறார்கள்.  மனித உலகில் கர்ம பலன் சீக்கிரமே கிடைத்து விடும் என்பது நடைமுறை.

(முன்னால் பரஸ்பரம் உதவி செய்து கொண்டு க்ஷேமத்தை அடைவீர்கள் என்று ஸ்ருஷ்டி ஆரம்பத்தில் சொன்னார் என்று பார்த்தோம்)

நான்கு வர்ணங்கள் என்று ஏற்பாடு செய்தும் நானே அதை தவிர்த்ததும் நானே.   பிறவி குணம், செயல் இவைகளின் அடிப்படையில் நான் இந்த பாகுபாட்டை செய்தேன்.  அவ்யயன் -நான் – எனக்குத் தோற்றமோ, முடிவோ கிடையாது.  தேவைகளும் இல்லை.   மற்ற உலகங்களில் இல்லாத இந்த  வர்ண பிரிவினை , மனிதனின் இயல்பின் அடிப்படையில்  அமைப்பது அவசியம் ஆயிற்று.

கர்மா அல்லது வினைப் பயன் என்னை பாதிக்காது. வினையின் பலனில் எனக்கு அக்கறையும் இல்லை.  இதை உணர்ந்தவர்கள் என்னை அறிந்தவர்கள். எனவே அவர்களும் வினைப் பயனால் பாதிக்கப் படுவதில்லை..

இப்படி என்னை அறிந்தவர்களும் யாகம் முதலான கர்மாக்களை விடாமல் செய்தனர். மோக்ஷத்தை விரும்பி செய்தனர்.  நீயும் அந்த பெரியவர்களையே பின் பற்றி உன் கடமையைச் செய்.

எது கர்மா- (கடமை) எது அகர்மா  (எந்த செயல் பயனற்றது) என்பதை தீர்மானிக்க முடியவில்லை.  பல அறிஞர்களும் ஆராய்ந்து தெ3ளிவாக எதுவும் சொல்லவில்லை.

அதனால் எது கர்மா அல்லது கடமை. எது தேவையற்றது.  செய்யக் கூடாதது எது ? இவை அனைத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.

இந்த கர்மா என்பது பல விதமாக விளக்கப்பட்டிருக்கின்றன.

கடமையை செய்யும் பொழுதே, தேவையற்றதை அறிந்து விலக்குபவனை புத்திசாலி எனலாம்.

(ஓருவருக்கு அவசியமாக தோன்றும் செயல் மற்றவருக்கு தேவையே இல்லாமல் இருக்கலாம். இதை நாம் பொதுவாக உலகில் பார்க்கிறோம். அவரவர் அளவில் அந்த செயலின் நன்மையோ தீமையோ அனுபவிக்கிறார். அதன் பொருட்டு வருந்துவதோ, மகிழ்வதோ அந்த ஒருவரின் செயல். லாபமோ நஷ்டமோ. அவரது தனிப்பட்ட அனுபவம்.    அப்படி இருக்க எதை குறிப்பிட்டு நல்ல செயல் என்றும் தீய செயல் என்றும் பெயரிட்டு அழைப்பது.  இந்த விவாதம் முடிவில்லாதது.)

அடுத்த ஸ்லோகத்தில் ஓரளவு பதில் சொல்கிறார்.

எவனுடைய செயலில் சுய நலம் இல்லையோ, ஆசைகளோ பெரிய எதிர்பார்ப்புகளோ இல்லையோ,   தனது அறிவால் , சாதனையால், மேம்பட்டு கடமையை கடமைக்காக மட்டுமே செய்கிறானோ, அவன்  ஞானி, பண்டிதன் என்று பெரியவர்கள் சொல்கிறார்கள்.

அவன் நித்ய திருப்தன், எப்பொழும் திருப்தியாக இருப்பான். பந்தங்கள் எதுவும் இல்லாமல், செயல்களை செய்யும் பொழுதே அதன் பலனில் பற்றில்லாமல் செய்வதால், எதுவுமே செய்யாதவன் போல கவலையற்று இருப்பான்.

(அலட்டிக் கொள்ளாமல் அனாயாஸமாக பெரும் செயல்களைச் செய்பவன் பொதுவாக போற்றப்படுகிறான்)

இந்த நிலையை அடைந்த ஞானி தன் உடலைக் காக்க அவசியமானதை மட்டுமே செய்வான்.  ஏனெனில் ஞானி என்பவன் நித்ய திருப்தன்-  தன்னிடம் உள்ளதில் எப்பொழும் திருப்தியாக, ஆனந்தமாக இருப்பவன் – புதிதாக எந்த தேவையும் இல்லாதவன். எந்த கட்டுப்பாடும் இல்லாததால் தேவைகளும் இல்லை.  அவன் தன்  உடலை பாதுகாக்க வேண்டி செய்யும் தேவையான குறைந்த பக்ஷ செயல்களால் பாதிக்கப்படுவதில்லை.

( சங்கர பாஷ்யம்:  கேள்வி -1

இந்த பதிலால் என்ன  பெறுகிறோம்.  சரீரத்தால், உடலால் செய்யும் செயல்கள் ஞானியை பாதிப்பதில்லை – செயல்கள் அதன் விளைவை ஏற்படுத்தியே தீரும் என்ற சாஸ்திர வாக்கியங்கள் என்னாகும்?

  1. உடல் உழைப்பு மட்டும் – சாரீரம் கேவலம் – என்றால் எந்த செயலையும் – அது தர்மமோ, அதர்மமோ – செய்யலாமா? உடல் தானே செய்கிறது என்பது எந்த விதத்தில் சரியானது?
  2. அவன் செயலால் ஏற்படும் தீமையோ, நன்மையோ, அவனை மட்டுமா, மற்றவர்களையும் தானே பாதிக்கும்.

ச.பா: விளக்கம்.  உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்த பக்ஷ செயல்கள் –

நான் செய்கிறேன் என்ற எண்ணம் இல்லாமல் மனம், சொல், உடல் இவைகளால் மற்ற செயல்களை செய்தும், தனக்காக செய்வது உடலைப் பேணுவது மட்டுமே. என்று இருப்பவன்- ஞானி.

முன்னமே சொன்னபடி அவன் செயல்கள் சமூகத்துக்கு தேவையும் ஆகும்.  சன்யாசி என்று வீட்டை தியாகம் செய்த பின், தான்  உண்ணவும் உடுக்கவும் , தங்கவும் ஏதோ செய்து தானே ஆக வேண்டும்.  அதைத் தான் சாரீரம் கேவலம் – என்று சொல்கிறார்.

22)  கிடைத்ததில் திருப்திடைவது மட்டுமில்லாமல் இந்த வரை கிடைத்ததே என்று மகிழ்கிறான் ஞானி.  விருப்பு வெறுப்பு இல்லாமல், பேராசையோ, பொறாமையோ இன்றி,  செயல்களால் கிடைக்கும் பலன் எவ்வாறு இருந்தாலும், வெற்றியோ, தோல்வியோ, அதற்காக அலட்டிக் கொள்ளாமல் தொடர்ந்து செய்பவன், அதனால் அவனை வினைப் பயன் என்பது வாட்டாது.

23)  ஞானி யாகம் முதலிய கர்மாக்களைச் செய்யும் பொழுதும் பற்றின்றி செய்கிறான். அவன் மனம், வாக்கு, காயம் என்று மூன்றும் ஒருமித்து, ஞானத்திலேயே அமைகிறது.  அதனாலும் வினைப் பயன் அவனை அண்டாது.

24)  ப்ரும்மார்ப்பணம் ப்ரும்மாக்னௌ ப்ரும்மஹவிர் ப்ரும்மணா ஹுதம் | ப்ரும்மைவ தேன கந்தவ்யம் ப்ரும்ம கர்ம சமாதினா ||

ब्रम्हार्पणम्  ब्रह्माग्नौ ब्रम्ह हविर् ब्रम्मणा हुतम् | ब्रह्मैव तेन गन्तव्यम् ब्रह्म कर्म समाधिना ||

ஞானியானவன் தானே ப்ரும்மமும் என்பதை  உணர்ந்தவன். அவன் செய்வதும் (யாகம் முதலான கர்மாவும்)  ப்ரும்மத்துக்கே அர்ப்பணம். ப்ரும்மமே அக்னி,  அதில் போடப்பட்ட ஹவிஸ், (பொருட்கள்) முதலானவைகளும் ப்ரும்மமே.  செய்யும் கர்த்தாவும் ப்ரும்மாவே. அவன் அடைந்திருப்பதும் ப்ரும்ம கர்ம சமாதி என்ற நிலை. அவனது லட்சியமும் ப்ரும்மத்தை அடைவதே.

ச.பா: முன் சொன்ன ஸ்லோகங்களில்  ஞானியை வினைப் பயன் அண்டாது  என்றவர் ஞானி என்பவன் யார் என்பதை விளக்கும் வகையில் ப்ரும்ம ஞானம் அடைந்தவன் செய்யும் செயல்கள் தான் அவனை பாதிக்காது என்று சொல்கிறார்.

சாதாரண ஜனங்கள் ஹோமத்தில் இடுவது வெள்ளி என்றோ, முத்து என்றோ (வெண்மை நிறம் காரணமாக) நினைப்பது உண்மையில் கடவுள் சிருஷ்டியில் ஒன்றே, அதன் அடிப்படை ப்ரும்ம தத்வமே.  ஏனெனில் நிலம் நீர்,வாயு, அக்னி, ஆகாயம் எனும் பஞ்ச பூதங்களும்  ப்ரும்மமே.

யாகம், ஹோமம் முதலானவை என்று மட்டுமல்ல விக்ரஹத்தில் ஆவாஹனம் செய்து பூஜிப்பது, தெய்வ காரியங்கள் என்று சாஸ்திரங்களில் சொல்லப்பட்டவை அனைத்துமே இந்த ஸ்லோகத்தால்  பர ப்ரும்மம் , பரமாத்மா பரதத்வம் என்ற  வார்த்தைகளால் வர்ணிக்கப் படுபவையே.

24) இதன் அடுத்த நிலையே ஆத்ம சமர்ப்பணம் என்றும் தான் என்றும் நான் என்றும் நினைப்பதை தியாகம் செய்வதே –

சிலர் யாக ஹோமாதிகளில் தெய்வத்துக்கு சமர்ப்பணம் என்ற எண்ணத்துடன் செய்கின்றனர். மற்றும் சிலர் தான் என்ற உணர்வையே ஆஹுதியாக ப்ரும்மாக்னியில் சமர்ப்பிக்கின்றனர்.

(ப்ரும்மம், ப்ரும்ம ஞானம், புத்தி, பரமானந்தம் என்பவை நம் அறிவுக்கு எட்டும் விதமாக விவரமாக பல அறிஞர்களால் பலவிதமாக நிரூபிக்கப் பட்டுள்ளன.  ஸ்ரீ சங்கரே பல மேற்கோள்களை காட்டியிருக்கிறார்.

பலவிதமான தளைகளுடன் உள்ள ஆத்மா, எந்த வித தளையும் இல்லாத பரப்ரும்மத்தின் ஒரு அம்சமேயாகும்.

காஞ்சி பெரியவர் ஸ்ரீ பரமாசார்யர்கள் குறிப்பிடும் பொழுது இந்த நிலை லட்சத்தில் கோடியில் ஒருவருக்குத் தான் கை கூடும்- ஆனால் அந்த ஒரு ஞானி மூலம் லோகமே க்ஷேமத்தை அடையும் என்பார். )

25) யாக கர்மாக்களைச் செய்பவர்கள் பொதுவாக தெய்வ காரியமாக நினைத்து பொருட்களை தியாகம் செய்கின்றனர்.    ப்ரும்ம ஞானம் அடைய விரும்புபவர் தன் நான் என்ற எண்ணத்தையே தியாகம் செய்கின்றனர்.

சங்கர .பாஷ்யம்:  ப்ரும்மத்தை அறிவது எளிதல்ல. இது அல்ல , இது அல்ல என்று விலக்கி விலக்கி ஒரு சித்தாந்தம் – நேதி நேதி  ( नेति, नेति – न इति ) என்றே சொல்லி கடைசியில் கண்டு கொள்வது. இதற்கான சாஸ்திர அறிவும், அனுபவ அறிவும் , குரு அருளும் உள்ளவர்களே உணர முடியும்.  உபனிஷத்துக்கள் பல கதைகள் மூலமாக சொல்கின்றன.

26)  செவி முதலான புலன் களை (ஐந்து- மற்றவை கண், நாசி, வாய், தோல்) ஸம்யமம் – அடக்கம் என்ற குணத்தால் ஜயிக்கிறார் – சப்தம் முதலான – புலன் களின் வேலையான ஒலியை கேட்டல், பார்த்தல், நுகர்தல், வாய் –   ருசியை அறிதல், தொடு உணர்ச்சி   இந்த செயல்களை கட்டுப்படுத்துவதன் மூலம் ஜயிக்கிறார்.

27) இந்த புலன் களின் செயலையும், ப்ராணன் என்ற உயிரின் ஓட்டத்தையுமே (உடலின் இயக்கமான ப்ராண வாயு சுருங்குவதும், விரிவதுமான செயல்) ஆத்ம சம்யமம்- தன்னடக்கம் – இதுவும் ஒரு யோக சாதனையே. – மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் – என்பதே அக்னியாக அதில் ஆஹுதி செய்கின்றனர் கரைத்து விடுகின்றனர். இதற்கு அவனுடைய ஞானம் அல்லது அறிவு,  விளக்குத் திரி எரிய உதவும் எண்ணெய் போல உதவியாக இருக்கிறது.

 

(தன்னடக்கம், மனதை தன் வசத்தில் வைத்திருத்தல் என்பது யோக சாதனையின் பலனாக பெறக் கூடியது. இந்த சாதகன் தன் புலன்களை அடக்குவதோடு, ப்ராணனையும்  சமன்வயப் படுத்திக் கொள்கிறான். மூச்சை அடக்கி ப்ராணாயாமம் செய்து சித்திகளை அடைகிறான்)

28)  யாகம் செய்வோர் பல வகையினர்.  வசதியற்றவர்களுக்கு  பொருள் தானம் செய்வோர் சிலர்.  தவம் செய்பவர், ப்ராணாயாம், ப்ரத்யாஹாரம் என்ற யோக சாதனைகளைச் செய்பவர்,  சாஸ்திரங்களைப் படித்து அதன் படி கர்மாக்களைச் செய்பவர் சிலர்.

இது தவிர ஸ்வாத்யாயம் – தன்னை அறிதல் என்ற ஞானத்தை அறிய செய்யும் யாகம். இந்த யாகத்தை செய்பவர் விரதங்களை, யாகத்தின் கட்டுப் பாடுகளை அறிந்து முழுமையாக அனுசரிப்பர்.

எந்த செயலானாலும், ஈடுபாட்டுடன் செய்வது ஒரு யாகமே என்பது பொருள்.

29) ப்ராணாயாமம் செய்வதில் பல வகை. சிலர் ப்ராணனை பூரகம் – உள் இழுத்து நிரப்புதல் என்ற முறையிலும்,  சிலர் ரேசகம் – முற்றிலும் வெளியேற்றி வெற்றிடமாக்குதல் என்ற முறையிலும், சிலர் கும்பகம் என்ற முறையில் ஒரு பக்க நாசி துவாரத்தை மூடி,  மற்ற நாசித் துவாரம் வழியாக  வெளிக் காற்றை உள்ளே செலுத்தி , முடிந்தவரை உள்ளேயே  நிறுத்திக்  கொண்டு பின் மற்றொரு நாசி த்வாரம் வழியாக வெளியேற்றுதல் –

30) மற்றும் சிலர் ஆகார நியமங்களை அனுசரிக்கின்றனர். ப்ராணாயமம் செய்கின்றனர்/ இவர்கள் எல்லோருமே யாக நியமங்களை அறிந்து செய்தவர்கள், அதனால் தூய்மை அடைந்தவர்கள்.

31)  யாகத்தில் செலவிட்டது போக மிச்சத்தை தான் அனுபவிப்பவர்கள்.  இவர்கள் பழமையான ப்ரும்ம பதத்தை அடைகின்றனர்.   இடையிடையில் ப்ரஸாதம் – யாகத்தில் அர்ப்பணம் செய்த மீதி உணவு முதலியவை – இது தான் அம்ருதம் என்று உட்கொள்கின்றனர்.

32) இவ்வாறு பலவிதமாக யாக யக்ஞங்கள் ப்ரும்மா அறிவித்தார்.  இவை எல்லாமே கர்மா எனும் வகையைச் சேர்ந்தது.   வேதத்தில் சொல்லப்பட்டவையே.  இந்த செயல்களே சம்சார பந்தத்தை விட்டு வெளி வர, தன்னை அறிய உதவும்.

33)  தானம் முதலானவைகளை விட ஞானம் சிறந்து. எதைச் செய்தாலும் அது முடிவில் ஞானத்தில் கொண்டு சேர்க்கும்.

34) நல்ல குருவை நாடி, அவருக்கு பணிவிடை செய்து, பணிந்து குறைவின்றி அவரிடம் பாடம் கேள்.  தத்வ தரிசிகளான ஞானிகள் உனக்கு உபதேசம் செய்வார்கள்.

தத்வித்தி ப்ரணிபாதேன பரிப்ரஸ்னேன சேவயா |

உபதேக்‌ஷ்யந்தி தே ஞானம் ஞானினஸ் தத்வ தரிசின: ||

तद्विध्धि प्रणिपातेन परिप्रश्नेन सेवया | उपदेक्ष्यन्ति ते ज्ञानम् ज्ञानिन:  तत्व दर्शिन: ||

(இது ஒரு நல்ல ஸ்லோகம். மாணவர் ஆசிரியரிடம் எப்படி பாடம் கேட்க வேண்டும் – என்பதை விளக்கும். எந்த காலத்துக்கும், எந்த கலையை கற்கவும் பொதுவானது)

35) பேரறிஞர்களிடம் உடனிருந்து கல்வி கற்பதில் பல நன்மைகள்.  எதைக் கற்றால் உன் மனக் குழப்பம் தீருமோ அதை அறிவாய்.  அதன் பின் நீ உலகை காண்பதே மாறும். ஜீவன்கள் அனைத்தும் உன் அந்தராத்மாவில் உறையும் பர ப்ரும்மே -என்று உணர்வாய். அதன் பின் என்னைத் தெரிந்து கொள்வாய்.

ச.பா:   அவர்கள் உபதேசிப்பதை சிரத்தையாக கேட்டு. அதில் உன் மனதில் தோன்றும் வினாக்களை வெளிப் படுத்தி உடனுக்குடன் தெளிவு படுத்திக் கொள்ளலாம். முடிவில்          நீயே  அது –    ப்ரும்மா முதல் புல் பூண்டு வரை உன்னில் உறையும் ஆத்ம   தத்வமே, – பரமாத்மாவே – அந்த பரமாத்மாவும் தானே என்று அறிவாய் –  அதன் பின் என்னையும் அறிவாய் – அனைத்தும் வாசுதேவனான நானே – என்பதை தெரிந்து கொள்வாய்.

36) இந்த ஞானம் உன்னை எல்லா விதமான பாப எண்ணங்களில் இருந்தும் காக்கும். பாப செயல்களின் பலன் என்று நீ நினைப்பதில் இருந்தும் விடுவிக்கும்.  படகில் ஏறி பெரிய கடலைக் கடப்பது போல சம்சார சாகரத்தை கடந்து செல்வாய்.

37) விறகு முதலான எரியக் கூடிய பொருட்களை அக்னி எரித்து அழிப்பது போல ஞானம் என்ற அக்னி உன் வினைப் பயன்களை எரித்து அழித்து விடும்.

ச.பா:  வினைப் பயன்கள் – முன்வினை, இப்பிறவியில் செய்பவை இன்னும் அறியாமையால் செய்யக் கூடியவை அனைத்தையுமே ஞானம் என்ற அக்னி  அழித்து சாம்பலாக்கி விடும்.

38) ஞானத்துக்கு சமமான பவித்ரமானது மற்றொன்று இல்லை. இதை நீ செய்யும் சாதனைகள் மூலமாக உணர்ந்து கொள்வாய்.

39) இந்த ஞானம் யாருக்கு கிடைக்கும்? – சிரத்தையுள்ளவன் அடைவான்.  இந்த ஞானம் பெறுவதே குறிக்கோளாக  புலனடக்கம் முதலான சாதனைகளைச் செய்பவன் அடைவான்.   அப்படி ஞானம் அடைந்து விட்டான் என்பது அவன் அடையும் பெரும் அமைதியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

ச.பா: – குரு க்ருபையாலும், தன் முயற்சியாலும் ஞானம் அடைந்தவன் அமைதியாகி விடுவான். அதன் பின் குருவுக்கு பணிவிடை போன்ற செயல்களின் தேவை கூட இருப்பதில்லை. மோக்ஷம் அடைகிறான்.

(ஞானியானவன் மற்ற உயிர்களிடம் அன்பாகவும், மனிதர்களுக்கு வழி காட்டியாகவும் இருக்க வேண்டும் என்று ஒரு எதிர்பார்ப்பு உள்ளதே,

அவனுக்கு செயல்கள் தேவையில்லை என்றால் அவன் ஞானத்தால் உலகுக்கு என்ன நன்மை? இந்த கேள்விக்கு வரும் அத்யாயங்களில் பதில் சொல்கிறார். )

40) நம்பிக்கை இல்லாதவன், அறியாமையில் மூழ்கி இருப்பவன், எதிலும் சந்தேகம் கொள்பவன், அழிவான். அவனுக்கு இந்த உலகிலும் நன்மை இல்லை, பரலோகத்திலும் இடம் இல்லை.

41) உன் செயல்களை யோகத்தில் ஈடுபடுத்து.  உனக்கு வரும் சந்தேகங்களை ஞானம்- அறிவினால் தெளிவாக்கிக் கொள்.  இவ்வாறு ஆத்மாவை அறிந்து கொண்டவனை வினைகள், வினைப் பயன்கள் தொடராது என்பது நிச்சயம்.

42)   உன் மனதில் எழும் இந்த சஞ்சலமும், குழப்பமும் அறியாமையால் வருவதே.  ஞானம் எனும் வாளினால் இந்த சந்தேகங்களை வெட்டி வீழ்த்தி எழுந்திரு.  யோக மார்கத்தை கை கொள்வாய்.  வீரனாக எழுவாய் பாரதா.

ச.பா: ஆத்மன: என்ற சொல்லால் இதுவரை சொன்ன ஆத்ம ஞானம், தான் என்ற அறிவு என்பதையே குறிப்பிடுகிறார்.

 

(இதுவரை ஸ்ரீமத் பகவத்கீதா என்ற உபனிஷத்தில், ஸ்ரீ க்ருஷ்ணனுக்கும் அர்ஜு னனுக்கும் இடையிலான சம்பாஷணையில் ஞான, கர்ம, சன்யாச யோகம் என்ற நாலாவது அத்தியாயம்)

 

அத்யாயம் -5  கர்ம சன்யாச யோகம்

 

சங்கர பாஷ்யம்: கேள்வியும் பதிலும்.

சென்ற அத்யாயத்தில் ஸ்ரீ பகவான் விவரமாக  ஞானமே  உயர்ந்தது என்றும், மோக்ஷம் பெற ஞானமே வழி என்றும் நிறையவே சொன்னார். திடீரென்று நினைத்து கொண்டவர் போல கேள்வி கேட்கும் அர்ஜுனனின் தற்கால நிலையை நினைத்தவர் போல -போர் முனையில் நிற்பவன், மனம் குழம்பி இருப்பவன் – இவனிடத்தில் மன அடக்கமோ, துறவோ  சொல்லி பயனில்லை என்பது போல அடுத்த விஷயமாக குருவின் அவசியமும், செயல் என்பதன் அவசியமும் பற்றிச் சொல்கிறார்.    கர்ம யோகி ஆகச் சொல்கிறார்.  செயலில் ஈடுபாடும், துறவும்  இரு வேறு நிலைகள்.

எனவே இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே அர்ஜுனனின் கேள்வி,

, முதன் முதல் யோகம் பற்றி அறிபவன், இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்   இரண்டில் எது நல்லது என்று தெரிந்தால் தானே தொடர்ந்து அந்தந்த யோக மார்கத்தில் முன்னேற முடியும்.

  1. அர்ஜுனன் கேட்கிறான்:

ஸன்யாசம் என்றும், கர்மா- செயல் என்றும் சொன்னாய், பின் யோகம் என்றும் சொல்கிறாய். இவற்றில் எது நல்லது. தீர்மானமாகச் சொல்லு. எதை அனுசரிப்பதால் எனக்கு நன்மை ?

ஈடுபாட்டுடன் கடமையை செய்யவா, அல்லது புலனடக்கி துறவு கொள்வதா? இரண்டும் வெவ்வேறு வழிகள்.

  1. ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

ஸன்யாசம், கடமையைச் செய்தல் இரண்டுமே நல்லதே – இரண்டு வழியிலும் மோக்ஷத்தை அடையலாம்.  ஆனால் கடமையை விட்டு துறவு கொள்வதை விட ஈடுபாட்டுடன் செயலை, கடமையை செய்வதே உயர்ந்தது.

ச.பா:  சன்யாசம், கர்ம யோகம் இரண்டும் வெவ்வேறு மன நிலையில் , சூழ் நிலையில் உள்ள மனிதர்களுக்காக ஏற்பட்டது. உண்மையில் இரு முனைகளில் எதிரும் புதிருமாக இருப்பவர்கள்- இந்த இரண்டு கொள்கைகளும் அவ்வாறே தனித் தனியாகவே நடைமுறையில் சாத்தியமாகும்.  எனவே அவற்றின் லட்சியமும், முடிவும் வெவ்வேறாகவே இருக்க முடியும். இரு வழியும் மோக்ஷத்தை தரும் என்பது எப்படி சரியாகும்.

  1. ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

சாங்க்யம் ஞானம் = கர்ம யோகம் –  இரண்டும் வெவ்வேறு என்று பண்டிதர்கள், அறிஞர்கள் சொல்வதில்லை.   சிலரே,  சிறுவர்கள் போல  இந்த பேத உணர்வை கொண்டுள்ளார்கள்.  யோக முறைகள் இரண்டிலும் ஒரு யோகத்தில் சிறப்பாக  பயின்று முழுமையாக அறிந்தவன் இரு வகை யோகங்களின் பலனையும் அடைகிறான். அல்லது இரண்டின் முடிவான நிலையை அடைகிறான்.  செல்லும் வழி தான் வேறு. லட்சிய சித்தி ஒன்றே.

ச.பா:   இது வரை ஞான யோகம் என்று சொல்லி வந்தவர் இப்பொழுது சாங்க்யம் என்ற சொல்லை பயன் படுத்துகிறார்.

என்ன வித்தியாசம்?

அர்ஜுனன் பொதுவான சன்யாசம், கடமை என்று பேசினான்.  பகவான் சொல்லும் பொழுது அதன் சிறப்புகளை விளக்கும் சாங்க்யம், யோக என்ற சொற்களைச் சொல்கிறார். சாங்க்யம்- ஞானம் என்றும் யோக என்பது கர்ம யோகம் – செயல்-கடமை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு பதில் சொல்வது போலவே, பகவான் தொடர்கிறார்.

சாங்க்யம் என்பதில் அடையும் பலனை  யோக முறையிலும் அடையலாம்.  இரண்டும் ஒரே பலனைப் பெற இரு வழிகள் என்று அறிவதே அறிவுடையவன் செயல்.

ச.பா:   சாங்க்யர்கள் என்பவர்கள் உலகைத் துறந்தவர்கள். ஞானம் பெறுவதே அவர்கள் குறிக்கோள்.  சாங்க்யம் என்பது கணக்கு என்று பொருளுடையது.  ஆராய்ச்சி செய்பவர்கள் என்றும் சொல்லலாம்.  அவர்கள் தன் ஆராய்ச்சியில் வெற்றி பெறுவது என்பதே மோக்ஷம்.  இந்த நிலையை கடமையைச் செய்து, யாக யக்ஞங்களைச் செய்யும் கர்ம யோகியும் அடைகிறான்.

(அது ஒரு சுற்று வழி என்று வேண்டுமானால் சொல்லலாம்.  தொடர்ந்து செய்வதால் பெறும் அனுபவம், அதன் கஷ்ட நஷ்டங்களை அறிந்து முன்னேற வேண்டும்.   செயலில் இருந்து அதன் பல நெளிவு, சுளிவுகளை அறிந்து கொள்கிறான் – அனுபவம் தந்த பாடம் – அதே காரியமாக ஆராய்ந்து தெரிந்து கொள்வதற்கு சற்றும் இளைத்ததல்ல என்று நாம் நடை முறையில் பார்க்கிறோம்).

  1. சன்யாசம் என்பது சுலபமல்ல. சாதனைகள் செய்த முனிவர்கள் அறிவார்கள். யாக காரியங்களை வேதம் சொல்லும் முறையில் இடைவிடாது செய்து பக்குவப் பட்டவர்கள் தியாகம் என்பதை அனுபவ பூர்வமாக செய்கிறார்கள்.  அவர்கள் கூட பலகாலம் முயன்ற பிறகே சன்யாசம் என்பதை முழுமையாக அறிகிறார்கள்.

ச.பா:  ந்யாசம் என்பது ப்ரும்மமே – அதில் சம் – முழுமையாக மனம் ஒன்றுவது.  ஈஸ்வர தியானமாக யாகங்கள் செய்பவர்கள் நாளா வட்டத்தில் எந்த விருப்பமும் இல்லாமல் யாகம் யாகத்திற்காகவே என்ற உணர்வோடு செய்கிறார்கள்.  மனனம் – இடைவிடாது சிந்திப்பவர்கள் என்பதால் முனி எனப் படுபவர்கள்- உயர்ந்த ஞானமாகிய ப்ரும்ம வித்தையை தியானம் செய்து அதே நினைவாக மனனம்  செய்து உணர்வது  பரப்ரும்ம தத்வம்.

சன்-நியாசம் என்பது ப்ரும்மமே என்பது ஸ்ருதி என்ற வேத வாக்யம்.  அனைத்துக்கும் அப்பாற்பட்ட , அனைத்துக்கும் காரணமான பரப்ரும்மம் என்றும் பரமாத்மா என்றும் அழைக்கப்படும் பரம் பொருள். சன்யாசத்தின் பயன் இந்த அறிவே.

யோக சாதனையை செய்யும் முனிவன் உண்மையான பக்தியுடன், ஈடுபாட்டுடன்  கடமையை செய்து ப்ரும்மத்தை அறிகிறான். எனவே கர்ம யோகம் சிறந்தது என்றேன் – என்று பகவான் சொல்கிறார்.

  1. இவ்வகையில் யோக சித்தி அடைந்தவர்கள் சுத்தமான ஆத்மாக்கள். புலனடக்கம் கொண்டவர்கள். எல்லா                      உயிரினங்களிலும் தன்னையே  காணும் அளவுக்கு சித்தி பெற்றவர்கள்.  இவர்கள் செயலில்- கர்மாவில் உழன்றாலும் களங்கம் இவர்களை அண்டாது. வினைப் பயன் தொடராது.

ச.பா: யோகி  தன்னை அறிந்து கொள்வதோடு, உலகில் புல் பூண்டு முதல் ப்ரும்மா வரை ஒரே பரப்ரும்மத்தின் அம்சமே என்பதை மனப் பூர்வமாக நம்புகிறான். உலகில் மற்றோருக்கு உதவும் வழிகாட்டியாக இருப்பான்.

7.&8 எதுவுமே செய்ய மாட்டேன் என்று என்று ஒருவன் இருக்க முடியுமா? அதே தான் ஞானம் அடைந்தவனும் உலகில் இருக்கும் வரை, பஸ்யன்- பார்த்துக் கொண்டும்,  ஸ்ருண்வன் – கேட்டுக் கொண்டும், ஸப்ருஸன், தொடுதலும் , ஜிக்ரண் – முகர்ந்தும், அஸ்னன் – உண்பதும்,  கச்சன். நடந்து போய்க் கொண்டும்,   ஸ்வஸன், மூச்சு விட்டுக் கொண்டும், ஸ்வபன்- தூங்கியும், ப்ரலபன்- ஏதேதோ  பேசியும், விஸ்ருஜன்- விட்டும், க்ருஹ்ணன்- பிடித்தும், கண் இமைகளை மூடியும், திறந்தும் – இந்த செயல்களை செய்யத் தான் வேண்டும்.  இவை இந்திரியங்களின் செயல்பாடுகள். ஆனால் சாதாரண மக்கள் இவைகளையே பெரிதாக நினைக்கும் பொழுது, ஞானி, இது இவைகளின் நியமிக்கப் பட்ட செயல்- செய்கின்றன என்று தான் ஒதுங்கி நின்று கவனிப்பான்.

ச.பா:  கானல் நீரைக் கண்டவன், மறுமுறை அதனருகில் நீர் அருந்த செல்ல மாட்டான். அது போலவே  யோகிகள் இந்த புலன்கள் பற்றி அறிந்த பின் அதன் செயலில் மயங்க  மாட்டார்கள்..

  1. இது போல கர்ம மார்கத்தில் செல்பவர்கள், சுற்றம், முதலிய எந்த தளையிலும் கட்டுப் படாமல், தாமரை இலைத் தண்ணீரைப் போல ஒதுங்கியே இருப்பர். பாபம் இவர்கள் மேல் படியாது.
  2. உடலால், வாக்கினால், மனதால் நினைத்து செய்யும் செயல்களை இவர்களும் செய்வார்கள், ஆனால் தனித்தே இருப்பர். பார்த்தும், கேட்டும், புலன்களை பயன் படுத்துவதும் தன் ஆத்மாவை பரிசுத்தம் செய்யும் விதமாகவே இருக்கும்.
  3. இப்படி யோகிகள் செயல்களை செய்யும் பொழுதும் பலனை எண்ணாமல் செய்வதால் சாந்தமாக இருப்பார்கள். அதுவே மற்ற சாதாரண ஜனங்கள் பலனைப் பற்றியே எண்ணிச் செய்வதால் கட்டுப் படுகிறார்கள்.

ச.பா:  ஈஸ்வரார்ப்பணம் என்று எண்ணி செய்வதற்கும், நான் செய்கிறேன் என்று செய்வதற்குமான வித்தியாசம் இதுவே.         செயலில் நேர்மை, புதியன தெரிந்து கொள்வது,  அப்படி பெறும் அறிவையே பெரிதாக நினைப்பது இவை உயர்ந்த குணங்கள். இதைச் செய்வதால் பெறும் லாபத்தையே எண்ணி இருப்பவன் கட்டுப் படுகிறான்.

(பலே சக்தோ நிபத்யதே –   பலனில் கண் வைத்தால் கட்டுப்படுவாய் என்பது ஒரு நல்ல உபதேசம். இதையே தமிழில் பேராசை பெரு நஷ்டம் என்றனர். )

  1. மனம் தான் ஆசைக்கும் மற்ற லௌகிகமான பற்றுதல்களுக்கும் காரணம். மனதை அடக்கியவனே உண்மையில் பற்றைத் துறந்தவன். அவன் தன் உடலால் தானும் எதுவும் செய்வது இல்லை மற்றவர்களையும் செய்ய விடுவதில்லை.

ச.பா:  உண்மையான துறவி மனதளவிலும் சன்யாசம்- துறவை ஏற்க வேண்டும். அவன் செய்யும் செயல்கள் , மற்றவர்களைக் கொண்டு செய்விக்கும் செயல்கள்  அவனளவில் சுக துக்கங்களுக்கு காரணமாகாது.

  1. சிருஷ்டி செய்யும் பொழுதே, இப்படி ஒருவன் செய்பவன், இது இவன் கடமை என்று பகவான் திட்டமிட்டு செய்யவில்லை. வினைப் பயன், என்பதும் அதனால் ஏற்படும் சுக துக்கங்கள் முதலிலேயே தீர்மானிக்கப் பட்டதுமல்ல.   இயற்கையில் செயலுக்கும், பலனுக்கும் உள்ள சம்பந்தம் அதனதன் இயல்பே.
  2. ப்ரபுவான பகவான் யாரையும் பாபியாக, குற்றம் செய்தவனாக பிறக்கச் செய்வதில்லை. அல்லது யாருக்கும் பாபம் பிறப்பினால் வருவதல்ல. ஒருவனுடைய சுக்ருதம் – நல்ல செயல் என்பதும் உடன் பிறப்பதல்ல. அக்ஞானம்- அறியாமை  என்பதில் மூழ்கி இருக்கும் ஜீவன்கள் – அதனாலேயே மோஹத்தை அடைகிறார்கள்.

ச.பா:  நீ சுகமாக இரு, நீ கஷ்டத்தை அனுபவி என்று திட்டமிட்டு சிருஷ்டியை பகவான் செய்வதில்லை.  அக்ஞானம்- அறியாமை கண்களை மறைக்கிறது.  அதனால் ஒரு தவறு, அதன் மேல் மற்றொன்று என்று தொடர்ந்து செய்து மோக வசம் சிக்குகின்றன ஜீவன்கள்.

  1. ஒரு சிலர் அறிவினால், தங்கள் அறியாமையை போக்கிக் கொள்கிறார்கள். அவர்களுக்கு ஆதித்யன் இருளை ஒழித்து ஒளியைத் தருவது போல ஞானம்- அறிவு ப்ரகாசத்தை கொடுக்கிறது.
  2. இப்படி புத்தியுடையவர்கள் ஒன்றேயான பரம் பொருளை கண்டு கொள்கிறார்கள். மனப் பூர்வமாக நம்புகிறார்கள்.  மாற்று எண்ணம் இன்றி அதனிடம் பணிகிறார்கள் (நிஷ்டா: -ஸ்திரமாக இருத்தல்) அதுவே தியானமாக, ததாத்மா , தானும் அதே ஆத்மா என்ற உணர்வோடு இருந்து, ஞான ஒளியினால் பரிசுத்தமாகி மறு பிறவியற்ற நிலையை அடைகிறார்கள்.

(எப்படி இது சாத்தியம்.   ஜீவன்களைச் சூழ்ந்த அறியாமை அவர்களுக்கும் தானே.  இது அக்ஞானம்  இது அறிவு என்று எப்படி தெரிந்து கொள்வார்கள். அவர்கள் ஞானம்- அறிவை கண்டு கொண்டவர்கள் என்பதை மற்றவர்கள் எப்படி அறிவார்கள்?)

இதற்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்:

18) கல்வியில் சிறந்த அறிஞர்கள், வினயம் உடைய பெரியவர்கள், ப்ராம்மணனோ, பசுவோ, யானையோ, திரியும் நாயோ, அந்த நாயையே தின்னும் வேடன் போன்றவர்களோ, அவர்கள் பார்வையில் ஒன்றே. அவர்களே பண்டிதர்கள்.

19) இவர்களுடனே இருந்து பழகுபவர்கள் கூட இந்த தன்மையை உணர முடியாது.  எல்லோரிடமும் சகஜமாக நடந்து கொள்வதில் நட்பும் அன்பும் வெளிப்படும்.  ப்ரும்மம் களங்கமற்றது.  அந்த ப்ரும்மா என்ற பாவத்திலேயே இருப்பவர்கள்.

20) வெளிப்படையாக மற்றவர்கள் காண்பது சுகம் என்று துள்ளி குதிக்காமலும், துக்கம் என்று வீழ்ந்து விடாமல் இருப்பதுமான பண்பு.  எதிலும் தங்கள்  ஸ்திர புத்தியை இழக்காமல்,  கலங்காத தன்மையுடன்  இருப்பதற்கு காரணம் அந்த ப்ரும்மத்தில் கலந்திருப்பதே.

  1. சாதாரண ஜனங்கள் உலகியலில் அடையும் மகிழ்ச்சியை இவர்கள் ப்ரும்மத்தை தேடுவதில் அடைகிறார்கள். ப்ரும்ம ஞானம் என்பதே பேரானந்தம். இந்த சாதனையில் ஈடுபடும் யோகிகள் உலகியல் வாழ்க்கையில், நாட்டம் இல்லாமல் அதைக் கடந்து சென்று, இந்த பேரானந்தத்தை பெற்ற பின் அதன் (உலகியல் இன்பங்கள்) தேவையே இல்லாமல் ஆகி விடுகிறது.

ச.பா: அந்த:கரணம் அதாவது ஆத்மா.  ஸப்தம் முதலான புலனால் அறிந்து கொள்வதையும் அதன் மூலம் பெறும் உணர்வையும் அந்த:கரணம் – மனசாட்சி அல்லது ஆத்மா அனுபவிப்பதில்லை. அதைத் தாண்டி தன் லட்சியமான ப்ரும்மானந்தத்தை தேடுபவன் சாதகன் – அவனுக்கு இந்த சுகங்கள் பொருட்டல்ல.

22.ஸ்பர்ஸம் முதலான புலன்களால் பெறும் சுகம் முடிவில் துக்கத்தையே கொடுக்கும்.  ஆரம்பத்தில் சுகமாகவும், போகப் போக  வேறு விதமாகவும் ஆகும். எனவே புத்திமான்களான பெரியவர்கள் இதில் லயிப்பதில்லை.

  1. தன் அத்யாத்ம தேடலுக்கு ஊறு விளைவிக்கும் இந்த உணர்ச்சிகளை ஆரம்பத்திலேயே தெரிந்துகொண்டு கை விட்டவன் சம்சாரத்தில் சாரம் இல்லை என்கிறான். அத்யாத்ம வழியில் செல்பவன் தன்னடக்கம் கொள்கிறான். இந்த உலகிலேயே, தன் வாழ் நாளிலேயே காமம், க்ரோதம் இவைகளை அடக்கியவன் தான் யோகி அவன் தான் சுகி- சுகமாக இருப்பவன்.
  2. தன்னுள் ஆத்மாவைத் தேடி கண்டு கொண்ட பின் ப்ரும்ம ஜோதி என்பதை காண முடிகிறது. இதற்கு அடுத்த நிலை ப்ரும்மமே ஆவது. ப்ரும்ம நிர்வாணம் என்பது இதுவே.
  3. இந்த நிலையை ரிஷிகள் தவம் செய்து அடைந்துள்ளனர். மாசில்லாத மனதுடன், சுகம் துக்கம் போன்ற இரட்டைகளிலிருந்து விடுபடுகிறார்கள். பாரபக்ஷம் இல்லாமல் ஜீவன் கள் அனைத்தையும் நேசிக்க இவர்களால் முடிகிறது.

26, ஆசை, கோபம் இல்லாமல் இருப்பதால் இந்த யதி-ரிஷிகள், தங்களைச் சுற்றி இருக்கும் பொதுவான விஷயங்களிலேயே பேரானந்தம் அனுபவிக்கிறார்கள்.

அடுத்து தியானம் செய்வது எப்படி என்பதை விளக்குகிறார்.

  1. & 28) புற உலகை நினைக்காமல், புருவங்களூக்கு இடையில் பார்வையை இறுத்தி, ப்ராணன், அபானங்களை சமமாக இருக்கச் செய்து, நாசி துவாரங்களின் வழியே மூச்சை முறையாக செலுத்தி, சீராக மூச்சை விட்டு, ஐந்து இந்திரியங்கள், மனம், புத்தி இவற்றின் செயலை கட்டுப்படுத்தி, வேறு எதையும் எண்ணாமல், இடையில் தோன்றும் காமம், க்ரோதம் முதலியவைகளுக்கு இடம் கொடுக்காமல், ஒரே தியானமாக சாதனை செய்ய வேண்டும். இப்படி செய்பவன் எப்பொழுதும் சுதந்திரனாக இருக்கிறான். நாளடைவில் (பர வாசு தேவனான) என்னை யார் என்று அறிகிறான்.

29) போக்தாரம் யக்ஞ தபசாம் சர்வலோக மஹேஸ்வரம் | சுஹ்ருதம் சர்வ பூதானாம் க்ஞாத்வா மாம் சாந்திம் ருச்சதி ||

भोक्तारम् यज्ञ तपसाम् सर्व लोक महेश्वरम् | सुह्रुदम् सर्व भूतानाम्  ज्ञात्वा माम् शान्तिमृच्छति ||

சர்வ லோக மஹேஸ்வரன் நானே.  யக்ஞம் தவம் இவைகளின் உட்பொருளும் நானே.  யாகங்களில்  ஹோமம் செய்யப்படும் பொருள்கள் என்னையே வந்தடைகின்றன.  எல்லா உயிர்களுக்கும் நண்பன் நானே.  இவ்வாறு என்னை அறியும் யோகிகளும் தவம் செய்யும் ரிஷிகளும்  நிறைவான மன சாந்தியை அடைகிறார்கள்.

 

(இது வரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷணையில், கர்ம சன்யாச யோகம் என்ற ஐந்தாவது அத்தியாயம்).

 

அத்யாயம்-6 ஆத்ம சம்யம யோகம்

 

முன் அத்யாயத்தில் சொன்ன தியான யோகம் மேலும் விவரமாக சொல்லப் படுகிறது.

சங்கர  பாஷ்யம் : த்யானம் செய்வதன் மூலம் தன்னை அறிவது என்பது ஒரு வழி. க்ருஹஸ்தன் – இல்லறத்தான் தன் கடமைகளை செய்வதன் மூலமே நல்ல கதியை அடைகிறான் என்று சொன்ன பின் அவனுக்கு தியானம் எதற்கு? என்ற கேள்வி:

கடமையை செய்பவன் அதன் மூலமே உயர் கதியை அடைவான் என்பதில்  மாற்றமில்லை.  அதற்கு மேலும் இல்லறத்தான் ஒருவன்  தன்னை மேம்படுத்திக் கொள்ள தியானம் உதவும். தியானத்தால் உடலும் உள்ளமும் உறுதியாகும் என்பது  அதன் பலன்.

தொடர்ந்து  அக்னிஹோத்ரம் முதலான கடமைகளை முறையாக செய்து வரும் பொழுது அதன் பலனில் பற்று விடுபடுகிறது என்று பார்த்தோம்.   வேத மந்திரங்களும்  சாஸ்திரங்களும்  சொல்லும் பல பல செயல்களை அப்படியே ஏற்று செய்யும் க்ருஹஸ்தர்கள்,  அதற்கான பலனை பெற வேண்டும்.  பகவான்  அதை மறுக்கவில்லை. அடுத்த வகுப்புக்கு செல்லும் மாணவன் போல சித்த சுத்திக்கு தியானம் என்று சங்கர பாஷ்யம் சொல்கிறது.

(செய்யும் தொழிலே தெய்வம் என்று பாரதியார் சொன்னது கடமையைச் செய் என்று பகவான் சொன்னதும் ஒன்றே.     அந்த முறையில் இல்லறத்தான் அற வாழ்க்கையை மேற்கொண்டு நல்லறம் நடத்தி வரும் பொழுது அவனும் ஞானியும் ஒன்று என்றார்.  இந்த கருத்தையே நமது புராணங்களும், இதிகாசங்களும் கூட வலியுறுத்துகின்றன. இப்பொழுது தியானம் என்பது பற்றி விவரிக்கிறார்.  )

முதல் ஸ்லோகம் இதையே சொல்கிறது.   எந்த செயலும் செய்யாமல் இருப்பவனோ, அக்னி ஹோத்ரம் முதலிய தெய்வ காரியங்களை செய்யாமல் சன்யாசி என்று சொல்லிக் கொள்பவனோ  கர்ம யோகி என்றோ சன்யாசியோ ஆக மாட்டார்கள்.

பற்றின்றி செய் என்றால், அதனால் என்ன பயன், நான் செய்யாமலே இருக்கிறேன், அதனால் எதிலும் எனக்கு பற்றில்லை என்று  வாதம் செய்பவன்,

சன்யாசிக்கு அக்னி காரியம் இல்லை- நான் அந்த அக்னி காரியம் முதலான பந்தங்களை விட்டு விட்டேன் அதனால் நான் சன்யாசி, என்பவனோ,

உண்மையில் சன்யாசியுமல்ல, கர்ம யோகியுமல்ல.

  1. சன்யாசம் என்று எதை சொல்கிறோமோ அதுவே யோகம். பாண்டவா, இதை எண்ணி செய்கிறேன், எனக்கு இந்த பலனைக் கொடு என்று சங்கல்பம் செய்து தான் வேத பாராயணமோ, பூஜையோ, யாகம் முதலிய செயல்களோ- செய்யப் படுகின்றன. உலக க்ஷேமத்திற்காக எனும் பொழுதும் சங்கல்பம் உண்டு.   செயல் தான் தியான யோகத்திற்கு முதல் படி.
  2. யோகம் என்பதை தெரிந்து கொள்ளவே கடமை அல்லது செயல்- கர்மாவை தெரிந்துகொள்ள வேண்டும். சாதனை என்ற படிகளில் ஏற கர்ம யோகம் காரணமாக இருக்கும். அதுவே அந்த யோக நிலையை எட்டி விட்டவனுக்கு அடக்கம் காரணமாக சொல்லப் படுகிறது.
  3. யோக நிலையை எட்டி விட்டவன் என்பவன் யார்? என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார். புலன் அடக்கியவன், எந்த செயலையும் சுய நலமாக செய்யாதவன், சங்கல்பம்- தேவை எதுவும் இல்லாதவன் யோக நிலையில் ஏறி விட்டவன் எனப்படுகிறான்.

ச.பா:  தான் எதுவாக இருக்க வேண்டும் என்று மனதில் நினைக்கிறானோ அதுவாகவே ஆகிறான். அதை அனுசரித்து அவன் செயல்கள் இருக்கும் என்று  உபநிஷத்.

(உலகியல் படி யோசித்து பார்த்தாலும் இதுவே சரி.  உபநிஷத் வாக்கியம் அதிக பொருத்தமாக தெரிகிறது.)

ச.பா: கேள்வி:

சங்கல்பமே இல்லை என்றால் ஏன் செயலை செய்கிறான்.  எண்ணங்களே இல்லையென்றால், அடுத்து  என்ன செய்வது என்று ஏன் யோசிக்கிறான்.  ஒரு பொருளில் ஈடுபாடு தான் அதை பெற வழிகளைத் தேடும், அதை அடைய முயற்சிகளைச் செய்யும். எந்த பொருளும் தேவை இல்லாதவன் வாழ் நாளில் என்ன சாதிப்பான்?

மிக விரிவாக இதற்கு சமாதானம் தரப் பட்டுள்ளது.

  1. இது ஒரு நல்ல ஸ்லோகம். தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்.

உத்தரேதாத்மனா ஆத்மானம் -நாத்மானமவசாதயேத் | ஆத்மைவ ஹ்யாத்மனோ பந்துராத்மைவ ரிபுராத்மன: ||

उद्ध्रेदात्मनात्मानम्  नात्मानमवसादयेत् | आत्मैवात्मनो बन्धुरात्मैव रिपुरात्मन: ||

தன்னைத் தானே தான் உயர்த்திக் கொள்ள வேண்டும் தான் எதை சாதிக்க நினைக்கிறானோ, அந்த வழியில் முன்னேற  தடைகளை களைந்து செல்ல உத்ஸாகம் வரும். தன்னை குறையுள்ளவனாக நினைத்து கலங்க கூடாது. தானே தான் தனக்கு நண்பன்.  பந்து. தானே தனக்கு எதிரியாவதும் உண்டு.

ச.பா: கடலில் மூழ்கியவன் கரையேற முயல்வது போல மனிதன் சம்சார கடலைக் கடக்க தானாகவே உகந்த வழியை தேந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

  1. இப்படி தானே நண்பன், பந்து-உறவினன் என்று சொன்னபின் அந்த நண்பன் அல்லது உறவினன் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்கிறார். சம்சாரக் கடலைக் கடக்க உதவும் நண்பன்வெளியாளாக இருந்தாலும் சரி தானேயானாலும், தன் ஆத்மாவை தானே ஜயித்தவனாக இருக்க வேண்டும். தன்னையறிந்த யோகி. அப்படியின்றி தன்னையறியாதவன் தான் தனக்கே எதிரி.

(தானே தனக்கு உதவி என்றாலும், தன்னையறியாதவரை குரு என்று ஒருவரை நாடி, யோக சாதனைகளைக் கற்றுக் கொள்வதே நல்லது.  அறியாமல்  தனக்குத் தானே தீங்கு இழைத்துக் கொள்வதைத் தவிர தனியாக இருந்து பெறும் நண்மை எதுவும் இல்லை.)

  1. பனி, வெய்யில் என்று அந்தந்த பருவ காலத்தில் அதிக குளிரோ, உஷ்ணமோ உடலை வாட்டுவதைப் போல சுக துக்கங்கள் மனிதனை வாட்டுகின்றன. அதைவிட அதிகமாக மனதை, மற்றவர்கள் செய்யும்மான, அவமானங்கள் அலைக்கழிக்கின்றன.  மான- மதிப்பை பெறும் பொழுது மகிழ்ச்சியும், அவமானத்தால் வருத்தமும் தவிர்க்கமுடியாத உணர்வுகள்.

இந்த உடலை பாதிக்கும் சீதோஷ்ணமோ, மனதை பாதிக்கும் மான அவமானங்களோ யோகி எனும் நிலையை அடைந்த  சாதகனை வருத்தாது.  அப்படி உள்ள  சாதகனே

ஜிதாத்மா- தன்னையறிந்தவன் – தன் ஆத்ம சக்தியை உணர்ந்தவன் -அமைதியாக இருப்பான்.   ப்ரசாந்தாத்மா.  ஏனெனில், அவனிடத்தில் பரமாத்மா உள் உறைகிறார்.

(இது ஒரு அழகான ஸ்லோகம்.  நடு நடுவில்   பகவான், தான் யார் என்பதை கோடி காட்டி தெரிவிக்கும் விதமாக இப்படி ஒரு வார்த்தையால் விளக்கி விடுகிறார். ஏதோ சொல்கிறார் என்று கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே  ஜிதாத்மா – பரமாத்மா என்ற சொற்கள் அமைந்திருப்பது அழகு.

தியானம் பற்றி சொல்ல வந்தவர்,  தானே தனக்கு எல்லாம் என்று எண்ணி இறுமாந்து இருக்க விடாமல், தன்னையறிந்தவனுக்குத் தான் அது – தானே தனக்கு பந்து என்றார். அப்படி தன்னையறிந்தவன் என்ன உயர்வு என்ற கேள்விக்கு பதிலாக அவனிடத்தில் பரமாத்மாவாக (தானே) உறைகிறா(றே)ன் என்கிறார்.

  1. அப்படி தனியாக இருக்கும் தகுதி பெற்ற சாதகன், ஞானம், அறிவதிலும், மேன்மேலும் தன் அறிவை வ்ருத்தி செய்து கொள்வதிலும் கவனமாக இருப்பான். அவன் தனிமையில் இருந்தாலும், புலன் அடக்கியவன் . அவனுக்கு காஞ்சனம் எனும் தங்கமோ, ஓட்டாஞ்சில்லோ ஒன்றுதான்.
  2. சினேகிதன், நண்பன் (சுஹ்ருத்- மனதுக்குகந்த நண்பன் என்றும் மித்ரன்- நண்பன் என்றும் பொருள்) உதாசீனம் செய்பவன், மதிப்பவன், நடு நிலையாக இருப்பவன், விரோதம் பாராட்டுபவன், பந்து, உறவினன், சாதுவோ, பாபியோ, எல்லோரிடமும் சமமாக இருப்பவன்- அப்படிப் பட்டவன் தான் சிறப்பிக்கப் படுகிறான்.
  3. சன்யாசி என்றும் யோகி என்றும் சிறப்பித்துச் சொல்லும் சாதகன் தனிமையில் தன் சாதனையை செய்கிறான். குறைந்த பக்ஷ வாழ்வாதாரங்களேபோதும் என்று தன் தேவைகளைக் குறைத்துக் கொண்டு வாழ்கிறான்.

11.சுத்தமான இடத்தில் அதிக உயரமும் இல்லாமல், தாழ்வாகவும் இல்லாமல் தனக்கு உகந்த திடமான ஆசனத்தில், துணியோ, மான் முதலிய மிருகங்களின் தோலோ, வெறும் குசம் எனும் புல்லோ விரிப்பாகக் கொண்டு, தியானம் செய்ய வேண்டும்.

  1. மனதை ஒருமுகப் படுத்தி, புத்தி அலைபாயாமல், வசதியாக அமர்ந்து தியானத்தை ஆத்ம சுத்திக்காக செய்ய வேண்டும்.
  2. உடல் நேர்க் கோட்டில் இருக்கும்படி நிமிர்ந்து உட்கார்ந்து கழுத்தின் மேல் தன் தலை நேராக இருக்க, சுற்றும் முற்றும் பார்வையை செலுத்தாமல், தன் நாசி நுனியையே பார்த்தபடி அசையாமல்
  3. சாந்தமான ஆத்மா, பயம் இன்றி, ப்ரும்மசாரி விரதம் மேற்கொண்டவனாக, என்னிடத்தில் மனதை வைத்தவனாக, என்னையே தியானம் செய்தபடி அமர்ந்து யோக சாதனையை செய்ய வேண்டும்.
  4. இப்படி மனப் பூர்வமாக என்னையே நினைத்து, யோக சாதனையை விடாமல், செய்பவன் என்னையே அடைகிறான்.
  5. அதிகமாக உண்பவனுக்கும் யோகம் கை வராது. பட்டினி கிடப்பவனும் யோக சாதனையை முனைப்புடன் செய்ய முடியாது. கனவுலகிலேயே இருப்பவனோ, தூக்கத்தையே விட்டவனோகூட யோக சாதனையில் வெற்றி பெற முடியாது.

 

  1. யோக சாதனையே கஷ்டமானது தான். சுலபமாகதேர்ச்சி பெற முடியாது. ஆகவே, அளவாக உண்டு, அளவாக உறங்கி. உடலை அளவுக்கதிகமாக போஷிக்கவும் வேண்டாம், வருத்தவும் வேண்டாம். இப்படி சாதனையை செய்பவனுக்கு யோகம் துன்பத்தை விலக்கி  மகிழ்ச்சியையே அளிக்கும்.
  2. யோகி சாதனையை செய்யும் நிலையை, காற்று இல்லாத இடத்தில் விளக்கு ஒரே நிலையில் ஆடாது அசையாது எரிவதைப் போல என்று உவமானம் சொல்கிறார்.
  3. இப்படி யோக சாதனையை முறையாக செய்தால் மனம் ஆழ்ந்து சிந்திக்கும் தன்மையைப் பெறும். இயல்பான பார்வை முதலானவைகளே கூர்மையாகும். தன்னுள் உறையும் ஆத்மசக்தியை உணர்ந்து மகிழ்ச்சி கொள்வான்.  பேரானந்தம்   என்பது இதுவே.
  4. & 21. எண்ணங்கள் சீராக இருக்கும். தன் ஆத்மாவை அறிந்ததால் மனம் விருப்பு வெறுப்புகள் அற்று எப்பொழும் மகிழ்ச்சியான நிலை எய்தும்.   பேரானந்தம் கை கூடிய பின் வேறு தேவைகள் ஏது ? செயலிலும், வாக்கிலும் உறுதியாக இருக்க இயலும். பெரிய இழப்புகளோ, துக்கமோ அசைக்க முடியாது.

22 & 23.24.  உலகியலின் அல்ப சந்தோஷங்களைத் துறந்து – யோகம்- என்ற சொல்லின் பொருள் இணைத்தல்- இங்கு அதுவே விடுவித்துக் கொண்டு என்ற பொருளில் உலகியலில் நாட்டம் கொள்ளாமல், பேரின்பத்தோடு இணையச் சொல்லப் படுகிறது.

  1. சஞ்சலமான மனதின் கட்டுப்பாட்டில் இருந்து விலக விலக, புத்தியை தன் பக்கமாக ஆத்ம விசாரம் செய்ய பயன்படுத்துவது எளிது. மெள்ள மெள்ள இந்த மாற்றம் நிகழும். புத்தியால் த்ருதி – உறுதி – (அனுமனின் குணங்களில் ஒன்று) இழுத்து பிடித்து தன் வசம் ஆக்கிக்  கொண்ட பின், பிற சிந்தனைகள் தானே விட்டுப் போகும்.
  2. இவ்வளவு சிரமப் பட்டு அடைந்த ஸ்திரமான மன நிலையை காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டும். அதனால் சாதனைகளை விடாமல் செய்தபடி மனதை எங்கும் அலைய விடாமல் தன் வசத்திலேயே வைத்திருக்க வேண்டும்.
  3. ப்ர சாந்தம் – அத்யந்த சாந்தமான மனதை அடைந்தவனை, யோக மார்கத்திலேயே இருப்பவனை, அந்த யோகி தற்சமயம் சாந்த ரஜஸ் – ரஜஸ் என்ற குணத்திலிருந்து விடுபட்டவன். (ரஜோ குணம் துடிப்பான செயல்களுக்கு ஆதாரம் என்பதோடு காம, க்ரோதங்களுக்கும் காரணம்) அதனால் காமக் குரோதங்கள் அடங்கி விலகி விட்டன. அகல்மஷம் – மாசுகள் இல்லாதவன்,ப்ரும்ம பூதம்- தானே ப்ரும்மம் என்று உணர்ந்தவன். – இப்படிப் பட்டவனை, எல்லா உத்தமமான சுகங்களும் தேடி வரும்.
  4. ப்ரும்ம ஞானம் அடைந்தவன் கவலையின்றி சதா ஆனந்தமாகவே இருப்பான்.
  5. எல்லா உயிர்களிலும் தன்னைக் காண்பான். தன்னில் மற்ற உயிர்கள் அனைத்தும் உள்ளன என அறிவான். அனைத்தையும் சமமாகநினைப்பான்.
  6. யோ மாம் பஸ்யதி சர்வத்ர, சர்வம் ச மயி பஸ்யதி |

தஸ்யாஹம் ந ப்ரணஸ்யாமி, ஸ ச மே ந ப்ரணஸ்யதி ||

यो माम् पश्यति सर्वत्र सर्वम् च मयि पश्यति | तस्याहम् न प्रणस्यामि स च मे न प्रणस्यति ||

இது போல எவன் என்னையே எங்கும் காண்கிறானோ, உலகனைத்திலும் என்னைக் காண்கிறானோ,  அவனுக்கு நான் என்றும் உடனிருப்பேன். அவனும் என் மீதான அன்பை அல்லது நம்பிக்கையை விட மாட்டான்.  அழிவின்றி இந்த பந்தம் தொடரும்.

  1. எல்லா பூத- பிறப்பையடைந்த ஜீவன்களிலும் என்னையே காண்பவன், எந்த இடத்தில் வசித்தாலும் என்னிடத்தில் இருக்கிறான்.
  2. அர்ஜுனா! காணும் உயிர்கள் அனைத்தையும், தன்னுடன் ஒப்பிட்டுதன்னைப் போலவே இருப்பதாக கண்டு கொள்பவன் – அடுத்தவர்களின் சுகமோ, துக்கமோ, தானும் அதே போல உணருபவன் யாரோ, அந்த யோகி சிறந்தவன்.

இதுவரை கேட்டு வந்த அர்ஜுனுக்கு சந்தேகம் வருகிறது.

33.மது சூதனா! இது வரை நீ விவரித்த யோகம் – நடை முறையில் சாத்யமா? மனதை அடக்குவது மிக கஷ்டமான செயல் அல்லவா?  ஸ்திரமாக இருப்பது எப்படி?

  1. க்ருஷ்ணா! சஞ்சலம் கொண்ட மனதை கட்டுபடுத்துவது காற்றை அடக்குவது போல – அடங்குமா? முடியும் என்று எனக்கு தோன்றவில்லை.

ஸ்ரீ பகவான் பதில்  சொல்கிறார்.

சந்தேகமில்லாமல் இது கஷ்டமான செயலே.  மனதைக் கட்டுப்படுத்துவது சுலபமல்ல.  மஹாபாஹோ என்று அர்ஜுனனை அழைத்து (பலசாலியே, உன்னால் முடியாதா என்பது போல ) பயிற்சியாலும், வைராக்யத்தாலும் மனம்  அடங்கும்.   முயன்று பார்.

(பயிற்சி என்பது ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப நினைத்தும், செய்தும் அதில் திறமையை வளர்த்துக் கொள்ளுதலாகும். இதில் வைராக்யம் என்பது அப்படி செய்யும் பொழுது அலுப்போ சலிப்போ வந்தாலும் தன் பயிற்சியை விடாது செய்யத் தேவையான மன திடம்)

  1. விடா முயற்சியின்றி யோகம் வராது. வழக்கமான சில செயல்களை விடுவதால் அன்றாட தேவைகளுக்கு உழைக்க முடியாமல் போகலாம். அந்த சமயம் தேவைகளை குறைத்துக் கொள்ள பழக வேண்டும். இப்படி சிரமப் பட்டு தான் தன் இலக்கை அடைய முடியும். இப்படி உழைப்பவனுக்கு சுலபமாக யோகசித்தி அமையும் என்பதே என் கருத்து.
  2. 37. அர்ஜுனுனக்கு சந்தேகம் : இப்படி சிரமப் பட்டு தியாகங்கள் செய்தும், சித்தி கிடைக்கவில்லை, என்றால் என்ன செய்வது. அந்த சாதகன் பாதி கிணற்றைக் கடந்தவன் போல அழிவானா (சின்னாப்ரமிவ – வானம் இடிந்து விழுந்து போல என்று பதத்தின் பொருள்- தமிழில் இதற்கான பழமொழி இது)  இதுவரை கடை பிடித்த சாஸ்திர சம்மதமான செயல்களிலும் இனி இடம் இல்லை. யோகம் சலித்து விட்டது.  உலகில் என்ன செய்வான்? காலமும் கடந்து, யோகம் சித்தி என்று எண்ணி செலவழித்த உடல் உழைப்பும் வீண் என்றால் வாழ்க்கையே வீண் தானா?
  3. க்ருஷ்ணா! நீ தான் இந்த சந்தேகத்தை தீர்த்து வைக்கவும் வேண்டும். நான் வேறு யாரிடம் போவேன்.
  4. ஸ்ரீ க்ருஷ்ண பகவான் பதில் சொல்கிறார்.

பார்தா! (அர்ஜுனனின் பெயர்) – இந்த உலகிலும் சரி, மறு உலகிலும் சரி அவனுக்கு துன்பமே வராது.  நல்ல செயலைச் செய்பவன் என்றுமே கஷ்டப் பட மாட்டான்.

நல்ல இடத்தில் பிறப்பான்.  புண்யம் செய்து நற்கதி அடைந்தவர்கள்  நட்பு கிடைக்கும். நீண்ட காலம் நல்ல படியாக வாழ்வான்.

(‘ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் கச்சதி’ – न हि कल्याणकृत् कस्श्चित् दुर्गतिम् तात गच्छति || – நன்மை தரும் செயல்களைச் செய்பவன் என்றும் துன்பத்தையடைய மாட்டான்)

 

இது ஒரு நல்ல ஸ்லோகம்.  தனக்குரிய அந்தஸ்தை பெறவில்லை என்பதற்காக செய்து வரும் நற்செயல்களில் கவனம் குறைவது இயல்பு. அப்படிப் பட்டவர்களை உத்ஸாகப் படுத்தும் )

அல்லது புத்திமான்கள் நிறைந்த குடும்பத்தில் பிறப்பான். இம்மாதிரி பிறப்பு அமைவதும் அரிதே.  அந்த சூழ்நிலையில் முன் பிறப்பின் விட்ட குறையாக அவனது ஆர்வம் சாதனையில் செல்லும்.  முன் பிறவியில் செய்த பயிற்சிகள் கை கொடுக்கும்.  அவனே அறியாமல் விட்ட  இடத்திலிருந்து தொடருவது போல அவனது சாதனைகள் எளிதாக இருக்கும்.

ச.பா:  பிறப்பிலேயே அமைந்த அதீத அறிவும், திறனும் சரியான வழி நடத்தல் இல்லையெனில் அதர்மமாக கூட போகும் வாய்ப்பு உள்ளது. அந்த சமயம், ப்ரும்மம் என்ற சொல் காதில் விழுந்தாலே போதும், பழைய சாதனையின் பலம் அவன் அதர்மத்தில் செல்லாமல்  நல்வழிப் படுத்தும்.

அவனது தேடல் ப்ரும்ம வித்தையாகவே இருப்பதால், முந்தைய பல பிறவிகளில் செய்த முயற்சிகள் அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும். எனவே மிகச் சிறந்த சாதகனாக உயர்வான்.

ஏதோ ஒரு பலனைக் கருதியோ, கருதாமலோ தவம் செய்பவன் சிறந்தவன்.  ஞானம் தான் பெரிது என்பவன் ஒரு படி மேல்.  கர்ம  மார்கி-  அல்லது யாகாதி காரியங்களை நியமத்துடன் செய்பவன்  அதை விட மேல்.  அதையும் விட யோகி சிறந்தவன் என்பது என் கருத்து. எனவே, அர்ஜுனா! யோகி ஆவாய்.

அதிலும் யோகியானவன் எவன் என்னிடம் சிரத்தையுடன் பூஜித்து,என்னிடத்திலேயே முழுமையாக நம்பிக்கையுடன் இருக்கிறானோ, அவன் மிகச் சிறந்த யோகி என்று நான் ஏற்கிறேன்.

(இதுவரை  உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தை என்ற யோக சாஸ்திரத்தில், க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஆத்ம சம்யம யோகம் என்ற ஆறாவது அத்தியாயம் )

 

அத்யாயம் 7 – ஞான விக்ஞான யோகம்

ஸ்ரீ பகவான் க்ருஷ்ணர் தானே பேசிக் கொள்வது போல அர்ஜுனன் எதுவும் கேட்காமலே

தொடர்ந்து சொல்லலானார்.

1.என்னிடம் ஈடுபாடு கொண்டவர்கள், யோக மார்கத்தில் முயற்சியுடையார், என்னையே நம்பி இருப்பவர், அவர்கள் என்னை எப்படி, எந்த விதமாக அறிகிறார்கள் என்று சொல்கிறேன், கேள்,

  1. அதைப் பற்றி முழுவதுமாக இப்பொழுது உனக்கு சொல்லப் போகிறேன். இதைக் கேட்டபின் உன் சந்தேகங்கள் தீரும். அதன் பின் நீ அறிய வேண்டியது எதுவும் இருக்காது.
  2. பல்லாயிரக் கணக்கான மனிதர்களில் ஒரு சிலரே என்னை அறிய முயற்சிக்கின்றனர். அவர்களிலும் ஒரு சிலரே என்னை உணர்ந்து கொள்கிறார்கள்.
  3. பூமிராபோரனலோவாயு: கம் மனோ புத்திரேவ ச | அஹங்காரம் இதீயம் மே பின்னா ப்ரக்ருதிரஷ்டதா || (1)

भूमिरापोऽनलोवायु: खं मनो बुद्धिरेव च | अहंकारं इतीयं मे भिन्ना प्रकृतिरष्टदा ||

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் என்ற எட்டும் என் ப்ருக்ருதியே.

பஞ்ச தன்மாத்ரங்கள் என்ற இந்த பஞ்ச பூதங்கள்,  எண்ணங்களைக் கொண்ட மனது, அறிவு- புத்தி, அஹங்காரம் தான் எனும் உணர்வு.

இவை எட்டும் நானே, அல்லது என்னிலிருந்து தோன்றியவையே.

  1. இதைத்தவிர இன்னொன்று உண்டு. மஹா பாஹோ! அதுவும் என் ப்ரக்ருதியே-இயல்பே.

இதனால் உலகில் உயிர்த் தத்துவம் தோன்றியது, வளர்ந்து நிலைத்து இருக்கிறது.

  1. இந்த உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தாயின் கருவிலிருந்து வெளிப்படுவதே என்று அறிந்திருப்பாய். அதன் மூலம்-அடிப்படை நானே. அதன் வளர்ச்சியும், இருப்பும், பின் அழிவதும் என் செயலே.

 

  1. என்னிலிருந்து மாறுபட்ட பொருள் எதுவுமே அண்ட சராசரங்களிலும் இல்லை. உயர் மணிகளை உள் இருந்து இணைத்து மாலையாக்கும் நூல் அல்லது கயிறு போன்று இந்த சராசரங்களை ஒன்றாக இருக்கும்படி கட்டி வைத்திருக்கிறேன்.

 

  1. கௌந்தேயா, மேலும் கேள்: நானே

தண்ணிரில் சுவையாக இருப்பவன் , சந்திர  சூரியர்களின் ஒளியாக இருப்பவன், வேத மந்திரங்களில் பிரணவமாக, ஆகாயத்தில் ஒலியாக, மனிதர்களில் சக்தியாக,

  1. பூமியில் உள்ள புண்யமான வாசனையாக, நெருப்பில் (விபாவசு) – உஷ்ணமாக, ஒளியாக, உயிர்களில் ஜீவனாக, தவம் செய்பவர்களின் தவமாக,
  2. அழியாத, பரம்பரையான அனைத்திற்கும் தாவர, ஜங்கம – எனும் அசையும் அசையா பொருட்களின் பீஜம் – விதையாக, நான் இருக்கிறேன் என்று அறிந்து கொள். பார்த்தா! புத்திமான் என்பவர்களின் புத்தியாக, தேஜஸ்வி- ஆற்றலுடையவனின் ஆற்றலாக,
  3. பலசாலி என்பவனின் பலமாக, இதிலும் ஆசையோ, ஈடுபாடோ அன்றி இருப்பவன், தர்ம சம்மதமான ஜீவன்களின் காமமாக, இவை தவிர,
  4. பரதர்ஷப, (பரத வம்சத்து அரசர்களுள் காளைக்கு சமமான வீரனே) உலகில் சாத்விகமான பாவங்கள், ராஜஸ, தாமஸ எனும் குணங்கள், இவை என்னிடமிருந்தே பிறந்தவை. என்னிடமிருந்து தோன்றியவை என்பதால் நான் அதனிலும் இருப்பதாக எண்ணாதே. அவை தான் என்னிடம் அடங்கும். நான் குணங்களுக்கு அப்பாற்பட்டவனே.

 

  1. இந்த உலகை இயக்குவதே இந்த மூன்று குணங்களும் தான். இந்த முக்குணங்களும் தெய்வீகமானவை. அறியாதவர்கள் உலகம் தன்னாலேயே இயங்கும் – இயற்கையில் உள்ள பரிணாம வளர்ச்சியே என்பர்.    இந்த பரணாம வளர்ச்சிக்கும் ஆதாரமான  பர தத்வம் நான் என்பதை உணர்ந்து கொள்.  அவர்கள் அறிவை மறைப்பதும் மாயையே.  என்னையே நம்பி வணங்குபவர்கள் தான் இந்த மாயயை  கடந்து செல்வர்.

 

(மம மாயா துரத்யயா – என் மாயை – அதை சாதாரணமாக கடக்க இயலாது. இதையே  தேவி மாஹாத்ம்யம்-

 

ஞானினாமபி சேதாம்ஸி தேவீ பகவதீ ஸா | பலாதாக்ருஷ்ய மோஹாய – மஹா மாயா ப்ரயச்சதி || ஞானியேயானாலும்  பகவதியான இந்த தேவி.   பலவந்தமாக அவர்களின் மனதை அபகரித்து  தன் மாயையிடம்  கொடுத்து விடுவாள்)

ज्ञानिनामपि चेतांसि देवी भगवती सा | बलादाकृष्य मोहाय महा माया प्रयच्छति ||

 

  1. அதில் என்ன கஷ்டம், உன்னை நம்பி பயனை அடையலாமே என்றால், அதற்கு பதில் சொல்வது போல பகவான் தொடருகிறார்.

அது அவ்வளவு சுலபமல்ல.   அதமன் எனும் படியான பிறவிகள் என்னை வணங்குவதில்லை.  அவர்கள்  மூடர்களாய் அசுரத் தன்மையை அடைந்து விடுகிறார்கள். யார் இவ்வாறு இருப்பவர்கள் என்று பார்த்தால் துஷ்க்ருதின: – தவறான. பிறருக்குத் துன்பம் விளைவிப்பதான செயல்களை செய்தவர்கள்,     ஓரளவு ஞானம் உள்ளவர்களும், என்னை அறிவதில்லை.  மாயை அவர்கள் ஞானத்தை அபகரித்து விடுகிறது .

 

  1. சுக்ருதின: – நற்செயல்களை செய்தவர்களும் நான்கு விதமாக என்னை நினைக்கிறார்கள்.

 

சதுர்விதா பஜந்தே மாம் சுக்ருதினோ அர்ஜுனா |  ஆர்த்தொ, ஜிக்ஞாசுர்  அர்தார்தி,  ஞானி. சைவ பரந்தப||

 

चतुर्विदा भजन्ते मां सुकृतिनोऽर्जुन | आर्तो जिग्ज्ञासुरथार्ति ज्ञानी चैव परंतप ||

 

  1. மிகுந்த கஷ்டத்தில் இருப்பவன், புதிதாக அறிந்து கொள்ள விரும்புபவன், கல்வியறிவு பெற விரும்புபவன், கலையோ, தொழிலோ கற்றுத் தேற விரும்புபவன், செல்வம் வேண்டுபவன்,  கடைசியாக ஞானம் பெற சாதனை செய்பவன்.

16&17.   இந்த நால் வகையினருமே  உதாரா: – நல்லவர்களே.  ஏதோ ஒரு விதத்தில்  என்னை ஏற்றுக் கோண்டவர்கள்.  ஆனாலும், . இவர்களில் ஞானி எனக்கு அதிக நெருக்கமானவன்.   ஞானியின் சாதனையும், பக்தியும் எனக்கு பிடித்தமானவை.  ஞானி நானே என்பதும் காரணம்.

 

  1. பல பிறவிகளின் முடிவில் ஜனங்கள் என்னை அறிகிறார்கள். அவர்களிலும் எல்லாம் வாசுதேவனே என்ற எண்ணம், நம்பிக்கை ஒரு சிலருக்கே அமைகிறது.

(தான் யார் என்று தன்னை வெளிப் படுத்திக் கொள்வதாக அமைந்த மற்றொரு இடம்.)

  1. அந்தந்த சமயங்களுக்கு ஏற்றாற் போல ஜனங்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்பும் மாறுகின்றன. வெவ்வேறுதேவதைகளை வணங்கி தங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள விழைகிறார்கள். அதற்கான சடங்கு சம்பிரதாயங்களை நியமமாக செய்வார்கள்.

20)&21) ஆனால் அவர்கள் அறியாதது, –  யார் யார் எந்த விதமாக நம்பிக்கையுடன் எந்த தெய்வத்தை வணங்குகிறார்களோ, அதற்கான சிரத்தையை நான் அளிக்கிறேன் என்பது.   சிரத்தையுடன் செய்வதால், அதற்கான பலனை அடைகிறார்கள்.  அந்த பலன் என்பதும் என் அருளாலேயே சித்திக்கிறது.

22) இந்த நடவடிக்கைகளும், அதனால் பெறும் பலனும் ஒரு நாள் முடியும்.  அதை நாடியவர்கள் அல்பமான புத்தியும், ஆசையும்  தானே வேண்டினார்கள்.  தேவதைகளை வேண்டி அதற்குண்டான பலன் பெற்றார்கள். என்னிடம் பக்தியுடையவர்கள் என்னையே அடைவார்கள்.

23)  கண்ணுக்குத் தெரியாமல் எங்கோ இருந்தவன், அவதாரம் எடுத்து கூடவே இருக்கும் பொழுது என்னை அறியாமல் புத்தியற்றவர்கள், விமர்சிக்கிறார்கள்.    என்னுடைய பரத் தன்மையை எப்படி அறிவார்கள்.  நான் அவ்யயன் அழிவற்றவன் என்பதும்  இந்த  அவதாரம்  என் சங்கல்பமே என்பதும் ஞானிகளே அறிவார்கள்.

24) கண்ணெதிரில் காணும் பொழுதும் ஏன் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்?  என்ற கேள்விக்கு பதிலாக,  அனைவருக்கும் நான் தென் படுவதில்லை.   மூடர்கள். அறிவில்லாதவர்கள்.  இவர்கள் எதிரில் நான் என் யோக மாயையால்  என் பர தத்வத்தை மறைத்துக் கொள்கிறேன்.

25) அர்ஜுனா! நடந்ததும், நடப்பதும், நடக்கப் போவதையும் நான் அறிவேன்.  என்னை அறிந்தவர்கள் எவருமில்லை.

26) அசை, துவேஷம் நிரம்பியிருக்க, சுக துக்கங்கள் போன்ற இரட்டைகள், தொடர்ந்து அலைக்கழிக்க இது தவிர மோஹம்-  இந்த குணங்கள் கண்களை மறைக்க ஜீவன்கள் என்னை மறக்கிறார்கள்.  திரும்பத் திரும்ப பிறப்பதும், மறைவதுமாக இருப்பதும் அதனால் தான். .

27) ஒரு சிலர் சாதனையால் அடைந்த ஞானம் கை கொடுக்க, நல் வினைகளாலும், மனத் திண்மையாலும், சுகம் துக்கம் போன்ற இடையூறுகளைக் கடந்து, முன் செய்த தீவினைப் பயன் தீர, பக்தியுடன் என்னை பஜிக்கிறார்கள்.

(யேஷாம் அந்த கதம் பாபம் – சிறிது சிறிதாக கரைத்து முடிவில் தீர்ந்தது எனும் கருத்து. பஹூனாம் ஜன்மனாம் அந்தே என்றாரே முன்னால்.  அதன் படி ஒவ்வொரு பிறவியிலும் நல் வினை செய்து கடந்த கால தீவினையை கழித்துக் கொண்டே வர  ஞானம்  வந்து இணைந்து கொள்கிறது.   தீவினையின் பலன் இனி இல்லை என்பதால். )

28) முதுமை, மரணம் இவற்றிலிருந்து விடுபட சிலர் என்னை பஜிக்கிறார்கள்.   அதன் பலனாக ,  அவர்கள், ப்ரும்மம் என்பதையும், தன் ஆத்மா, பரமாத்மா  என்பவைகளையும். அத்யாத்மா,  கர்மா- கடமை என்பதன் முழு பரிமாணத்தையும் அறிந்து கொள்வார்கள்.

அவர்கள் என்னை  (ஸ) அதி பூதம், (ஸ) அதி தைவம். (ஸ)அதி யக்ஞம் – பௌதிக உலகில் இருக்கும் என்னையும், தெய்வீகமாக என் நிலையையும், யாக கர்மாவில் என் ரூபத்தையும் தெரிந்து கொள்கிறார்கள்.  உடலைத் துறந்து செல்லும் அந்திம காலத்திலும் என்னை அதே போல நினைவில் இருத்திக் கொள்கிறார்கள்.

(ஸ என்ற பகுதி உடன் எனும் பொருளில் வரும்.  பௌதிகத்துடன் கூடிய எனலாம்.)

(இது வரை, உபநிஷதான் ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்தையின், யோக சாஸ்த்ரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஞான விக்ஞான யோகம் என்ற ஏழாவது அத்தியாயம்)

 

அத்யாயம் -8 அக்ஷர ப்ரும்ம யோகம்

சென்ற அத்யாயத்தில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணர் நிறைய விஷயங்கள் சொன்னார்.   அர்ஜுனனுக்கு சந்தேகமும் நிறையவே – சரமாரியாக கேட்கிறான்.

கிம் தத் ப்ரம்ம ?  கிம் அத்யாத்மம் ? கிம் கர்ம?  அதிபூதம் ச கிம்?  அதிதைவம் கிமுச்யதே ? அதி யக்ஞம் கதம்? ப்ரயாணகாலே ச கதம் க்ஞேயோ (அ) ஸி?

किं तद्ब्रह्न ? किं अध्यात्मं ?किं कर्म ?अधिभूतं च किं? अधि दैवं किमुच्यते ?

अधि यज्ञं कथं ? प्रयाण काले च कथं ज्ञेयोऽसि ?

ஏழு கேள்விகள்.  பகவானும் சளைக்காமல் அதே போல பதில் சொல்கிறார்.

1.அக்ஷரம் பரம் ப்ரும்ம  2.  ஸ்வபாவம்  என்ற இயல்பு தான் அத்யாத்மம்  3.  பூத -பாவோத்பவ கரோ – உயிர்கள் தோன்ற காரணமாக இருக்கும் பீஜம் அல்லது விதை – முளைப்பது முதல், உலகில் நடக்கும் யாக யக்ஞாதி செயல்கள் கர்மம் என்பதில் அடங்கும்.

  1. அதி பூதம் என்பது பௌதிகமான உடல் அழியக் கூடியது. 5. புருஷன்- ஆத்மா என்பது அழியாதது. அது தான் அதி தைவம் .6. மனித உடலில் அதி யக்ஞம் என்பது நானே. 7. மரணத் தறுவாயில் என்னை எப்படி அறிவது என்பதையும் சொல்கிறேன்.

சங்கர  பாஷ்யம்:   அதி பூதம் என்ற உடல் அழியக் கூடிய வஸ்துக்களால் ஆனது.  சிருஷ்டியில் அனைத்து உயிரினங்களும் இதில் அடங்கும்.

புருஷ – என்ற சொல் – அதன் பொருள் படி – நிரப்பும் ஒரு வஸ்து –  எது ஒன்று உலகை நிறைவாக செய்கிறதோ – (ப்ரு என்ற தாது – நிரப்புதல்) பௌதிகமாக உண்டான உடலை நிரப்பும் வஸ்து- ஆத்மா – ஹிரண்ய கர்ப எனப்படும், சூரிய ஒளியில் இருப்பவன், பரமாத்மா, ஒவ்வொரு உயிருக்கும் சக்தியை அளிப்பவன்.  புலன்கள் வேலை செய்வதும் இதன் தூண்டுதலால்,  அனைத்து ஜீவன்களிலும் உயிரை உடலில்  நிலை  நிறுத்தி காப்பவன்,   யாக புருஷன் எனப்படும் விஷ்ணு.  வெளி உலகில் யாக கர்மாக்கள் என்றால், உடல் இயங்குவதே ஒரு யாகம், அதன் கர்த்தாவும் விஷ்ணுவே- அதாவது நானே.

  1. தன் இறுதி காலத்தில், மரணத் தறுவாயில் என்னை நினைத்து உயிரை விடுபவன் என்னை அடைகிறான். இறுதி காலத்தில் எதைநினைத்து. எந்த மனோ பாவத்துடன் இறக்கிறானோ அதை, அந்த பாவத்தை மறு பிறவியில் அடைகிறான்.
  2. அதனால் அர்ஜுனா! எப்பொழுதும் என் நினைவாகவே இரு. இறுதிக் காலம் எப்பொழுது வரும் என்பது தெரியாது. அதனால் சதா சர்வ காலமும் மனதில் என் நினைவாகவே இரு. என்னிடம் உன் மனம், புத்தி இவைகளைசமர்ப்பித்து விடு.  என்னையே வந்தடைவாய்.
  3. அது எப்படி முடியும்? எப்பொழுதும் நினைக்க முடியுமா? மற்ற எண்ணங்கள் வராதா? என்ற கேள்விக்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்.
  4. அர்ஜுனா! யோக சாதனைகளை ஒரே முனைப்புடன் செய்து பழகிக் கொள். மனதை அலைபாய விடாமல் கட்டுப்படுத்து.  திரும்பத் திரும்ப நினைத்து மனதில்  உருவேற்றிக் கொள்.  திவ்யமான  பரப்ரும்மத்தை அடைவாய்.

ச.பா:  தியானம் என்பது அதுவே.  பயிற்சி – ஒரே குறிக்கோளுடன் திரும்பத் திரும்ப செய்து மனதில் இருத்திக் கொள்வதே யோகம்.  யோகியானவன்  குருவிடம் கற்றதை, சாஸ்திரங்களில் படித்துத் தெரிந்து கொண்டதை  இடை விடாமல் மனனம் செய்து வருவான். தன் யோக சக்தியால்,  அழிவில்லாத பெரும் சக்தியும்,   சூரியனின் ஆதிக்கத்துக்குள் வரும் பேரண்டத்தின்   மூல  புருஷணுமான (என்னை) அடைகிறான்.

9.&10.  புருஷன் என்ற சொல் முன்பு சொன்னதையே மேலும் விவரிக்கிறார்.

கவிம் புராணமனுசாஸிதாரம் அணோரணீயாம்சம்  அனுஸ்மரேத் ய:|

சர்வஸ்ய தாதாரமசிந்த்ய ரூபம் ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத் ||

ப்ரயாண காலே மனஸாசலேன  பக்த்யா யுக்தோ யோக பலேன சைவ |

ப்ருவோர்மத்யே ப்ராணமாவேஸ்ய ஸம்யக் ஸ தம் பரம் புருஷமுபைதி திவ்யம்||

कविं पुराणमनुशासितारं अणोरणीयांशं  अनुस्मरेद्य: | सर्वस्य दातारमचिन्त्य रूपं  आदित्य वर्णं तमस: परस्तात् ||

प्रयाण काले मनसाचलेन भक्त्या युक्तो योग बलेन चैव | भ्रुवोर्मध्ये  प्राणमावेश्य संयक् स तं परं पुरुषमुपैति दिव्यम् ||

கவி- இந்த பதத்திற்கு பல பொருள்கள் உண்டு. இந்த இடத்தில் குரு.   கட்டளையிடுபவன்- உலகில்  அசையும்  அசையா பொருட்கள் அனைத்தும் எங்கு எப்படி எந்த உருவத்தில் இருக்க வேண்டும் என்பது வரை ஆணையிட்டு நடத்துபவன்,  அணுவிலும், அணுவாக இருப்பவன்,  நினைத்து பார்க்க முடியாத அத்புதமான ரூபம், வேண்டிய அனைத்தையும் தருபவன், ஆதித்யன் போன்ற நிறம்,  இருட்டு அல்லது அறியாமை நெருங்க முடியாதா பெரும் ஜோதி.

இவனை அருகில் இருப்பது போல எண்ணி, தன் வாழ்வின் இறுதி காலத்தில் நினைக்க வேண்டும்.  பக்தியுடன், யோக பலமும் சேர,   புருவங்களின் இடையில் ப்ராணனை  நிறுத்தி, (யோகம்)  நல்ல முறையில் கற்றதை நினைவு கூர்ந்து ப்ராணத் தியாகம் செய்பவன் அந்த பர புருஷனை சென்றடைகிறான்.

  1. எந்த அக்ஷரத்தை – ஓம் எனும் ப்ரணவாக்ஷரம் –அல்லது அழிவில்லாத பரம் பொருள், வேதம் அறிந்தவர்கள் ஓதிக் கொண்டே இருக்கிறார்களோ, ஆசைகளை அடக்கி தவம் செய்த யதிகள் எதனுள் ஐக்கியமாகிறார்களோ, எதை விரும்பி ப்ரும்மசர்யம் – ப்ரும்மத்தை அடைய சாதனைகள் செய்கிறார்களோ- அந்த பதவியை சுருக்கமாக சொல்கிறேன் கேள்.

12 &13.  புலன் களின் வாயிலை அடைத்து- புலன் களை கட்டுப்படுத்தி, ஹ்ருதயத்தில் மனதை நிறுத்தி,   உச்சந் தலையில் ப்ராணனைக் கொண்டு சென்று,  யோக தாரணை என்பதை செய்து கொண்டு,  என்னை மனதில் நினைத்தபடி, ப்ரும்மமேயான  ஓம் எனும் ஒரு அக்ஷரத்தை உச்சரித்துக் கொண்டு,  பிராணனை விடுபவன் பர கதியை அடைகிறான்.

  1. நித்யம் சாதனைகள் செய்து யோகியானவன், மாற்று கருத்து எதுவுமின்றி, என்னை நம்புபவன், என்னையே சகலமும் என்று நினைத்திருப்பவன் யாரானாலும் அவனுக்கு நான் சுலபமாக காணக் கிடைப்பேன்.
  2. என்னை அடைந்தவன், நிலையற்ற, துக்கம் நிறைந்த இந்த உலகில் மறு முறை பிறவி எடுக்க மாட்டான். அவன் மஹாத்மா எனப்படுபவன். எந்த துக்கமும் அவனை அண்டாது.   உயர்ந்த நிலையான  சம்சித்தியை அடைவான்.

 

  1. ப்ரும்மா முதலான உலகில் அனைத்தும் மாறிக் கொண்டே இருக்கின்றன. பிறப்பும் இறப்பும் ஒரு சுழற்சியாக தொடர்ந்து வருவது. என்னை அடைந்தவன் இந்த சுழலிலிருந்து விடுபடுகிறான்.

 

17..  ஆயிரம் யுகங்கள் பகலும், ஆயிரம் யுகங்கள் இரவுமாக ப்ரும்மாவின் ஒரு நாள்.  அவரது இரவின் முடிவில் யுகாந்தம்  – ஒரு யுகம் முடிவடையும்.

கணிதம் அறிந்தவர்களின் கணக்கு இது. இதை எப்படி கணக்கிடுவது.

 

  1. இரவில் மறைந்திருக்கும் அனைத்தும் பகலில் தென்படும். மறுபடியும் இரவில் மறைந்து பகலில் வெளிப்படும். இதுவே தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

 

அவ்யக்தாத் வ்யக்த்ய: சர்வா: ப்ரபவந்த்யஹராகமே |

ராத்ரியாகமே ப்ரலீயந்தே த த்ரைவ (அ)வ்யக்த சஞ்ஞகே ||

अव्यक्तात् व्यक्तय: सर्वा: प्रभवन्त्यहरागमे | रात्र्यागमे प्रलीयन्ते तत्रैवाव्यक्त सज्ञके ||

 

சங்கர  பாஷ்யம்:

ப்ரும்மா – ப்ரஜாபதி.   சிருஷ்டிகர்த்தா எனப்படுபவர்.   அவருடைய இரவில்  அவர் தூங்கும் நேரம், மறைந்திருக்கும் சராசரம், அசையும் அசையா பொருட்கள், பகலானதும் தெளிவாக வெளி வரும்

அனைத்தும் என்றால்,

சாஸ்திரங்கள், பந்தம் என்றும் விடுதலை என்றும் சம்சாரத்தை சொல்வதன் பொருள் இதன் மூலம் மறுக்கப்படுகிறதே-  அனைத்தும் ப்ரும்மாவின் நித்ரையுடன் மறையும், அனைத்தும் அவரது விழிப்புடன் அதே போல தோன்றும் என்றால்,  சம்சார பந்தம் என்பது என்ன?  உலகில் இருக்கும்வரை செய்த நல்வினை, தீவினை  இவைகளுக்கு எந்தவித பலாபலனும் இல்லை என்றாகிறதே – இந்த கேள்விக்கு பதில் சொல்வது போல  அடுத்த ஸ்லோகம்:

 

  1. இது தான் சக்கரம் சுழலுவது போல சுழன்று கொண்டேயிருக்கும் – பலவிதமான உயிரினங்கள், தாவரங்கள், ஒட்டு மொத்தமாக மறைவதும் பின் தோன்றுவதுமாக இருக்கின்றன.

 

ச. பா: இதில் அந்த ஜீவன்களின் விருப்பமோ, வெறுப்போ பொருட்டல்ல.  இது ஒரு நியதி.  இதிலிருந்தும் யோகி விடுபடுகிறான் என்பது தாத்பர்யம்.

 

20.. இந்த சுழற்சியில் அகப்படாமல், சனாதனமான ஒரு பரம்பொருள் உண்டு.  அவ்யக்தமோ, வ்யக்தமோ,  பாதிக்கப் படாமல் மற்ற அனைத்தும் அழியும் பொழுதும் தான் அழிவதில்லை.

 

  1. புலன் களுக்கு புலப்படாத அந்த பரம் பொருளைத் தான் அக்ஷர என்கிறார்கள். க்ஷர – குறையக் கூடியது, அக்ஷர – என்றும் நிறைவானது. அழிவற்றது –  எதை அடைந்தபின் திரும்பி வருவதில்லையோ அந்த ஒளி மயமான இடம் தான் என்னுடையது.

 

22)  மாற்று எண்ணமில்லாத பக்தியால் அந்த பர தத்வத்தை, புருஷன் என்றும் பரம் பொருள் என்றும் போற்றப் படும் பரமாத்மாவை உணரலாம்.  அண்ட சராசரங்களும் அதனுள் அடக்கம்.  இவற்றை உருவாக்கியதும் அதுவே.

23 & 25) யோகிகள் ப்ராணத்யாகம் செய்வதற்கும் சில வரை முறைகள் உள்ளன. அது பற்றி சொல்கிறேன் கேள்.

உத்தராயணம் என்பது ஆறுமாதங்கள்,  அந்த சமயம் பகல் நேரம் அதிகம்.  அதில் சுக்ல பக்ஷம், பகல் நேரம் உயிரை விடுபவன், ப்ரும்ம லோகத்தை அடைகிறான் என்று ப்ரும்மத்தைப் பற்றி அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.

புகை மண்டி இருப்பது போல் சூரிய ஒளி குறைந்த சமயம், இரவு நேரம் அதிகமாக இருக்கும் தக்ஷிணாயணம். அதில், க்ருஷ்ண பக்ஷம், இரவு நேரத்தில்,  சந்திரனின் ஒளியில் உயிர் துறப்பவன்  திரும்பி வருகிறான், மறு பிறவியை அடைகிறான்.

  1. சுக்ல பக்ஷம் அதாவது வளர்பிறை, க்ருஷ்ணபக்ஷம் – தேய்பிறை என்பது சந்திரனின் கதியை வைத்து உருவான கால அளவுகள். சாஸ்வதமானது. மாற்றமில்லாத இயற்கையின் நியதி. இதன் வளர் பிறையில் மறைந்தவன் திரும்பி வருவதில்லை, தேய்பிறையில் சென்றவன் திரும்பி பூமியில் பிறக்கிறான். தியானம் செய்து யோகியானவர்கள் இந்த உண்மையை அறிவார்கள்.  அர்ஜுனா! தியானம் செய். யோகியாவதே உனக்கு நன்மை.

ச.பா: இவற்றை தேவ யானம், பிதுர் யானம் என்றும் அழைப்பர்.  யானம்- வாகனம்.  தேவ யானத்தில் செல்பவன் தெய்வ லோகமான  ப்ரும்ம லோகத்தையும்,  பிதுர் யானத்தில் செல்பவன் பித்ருக்கள்- முன்னோர்கள்  உலகம் – சென்றடைகிறார்கள்.  தேவ லோகம் போகும் வழி ப்ரகாசமாக – ஞான மார்கம் ப்ரகாசமாக உருவகப் படுத்தப் படுகிறது – இருக்க பிதுர் மார்கம் – ஒளியின்றி காணப்படும். காரணம் இங்கு ஞானம் ப்ரதானமாக இல்லை.

  1. வேதங்களில், யாக கர்மாக்களில், தானம் முதலான நல்ல காரியங்களில், புண்யம் என்று எதைச் சொல்கிறோமோ, அவற்றை, தியானம் செய்து யோகியானவனும் அடைகிறான்.

வேதத்தை முறையாக கற்றுத் தேர்ந்தவன், யாக கர்மாக்களை சாஸ்திர விதிப்படி சிரத்தையாக செய்பவன், பாத்திரம் அறிந்து தானம் செய்பவன் இவர்கள்  உலகில் சிறந்தவர்களாக கருதப் படுகிறார்கள். தியானம் செய்து தன்னையே உயர்த்திக் கொண்டு ப்ரும்ம ஞானம் அடைந்தவனும் இவர்களுக்கு தாழ்ந்தவனல்ல.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதை என்ற ப்ரும்ம வித்யையில், யோக சாஸ்திரம் என்ற பகுதியில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் அக்ஷர ப்ரும்ம யோகம் என்ற எட்டாவது அத்யாயம்.)

 

 

அத்யாயம் -9  ராஜ வித்யா ராஜ குஹ்யோ

ராஜ வித்தை- வித்தைகளுக்குள் சிறந்த வித்தை. மிக ரகசியமானதும் கூட

சென்ற அத்தியாயத்தில் தாரணா- என்ற சாதனை வலியுறுத்தப் பட்டது.  அதாவது கற்றதைத்திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல்.  அப்யாஸ யோகேன – பயிற்சி செய்து என்று பகவான் குறிப்பிட்டது தான் தாரணா, மனனம் என்றும் சொல்லப் படுவது. ப்ரும்மத்தை அறிவதற்கான உடல் பயிற்சி,  புருவங்களுக்கு இடையில் ப்ராணனை நிறுத்தி – என்பது போன்ற விஷயங்கள் சொல்லப் பட்டன.  இதை நாடி –(நரம்பு) வித்யா என்றும் சொல்வர்.

இப்பொழுது பகவான் சொல்கிறார்.

இதோ உனக்கு புதிதாக ஒன்று சொல்கிறேன்.  அசூயை இல்லாதவனே! அர்ஜுனனை இந்த பெயரால் அழைக்கிறார்.

ஞானம், விக்ஞானம் இரண்டும் கலந்தது – அசுபம்- கெடுதல் எதுவும் உன்னை அண்டாமல் காக்கும் அறிவு இது தான்.  ராஜ வித்தை – வித்யைகளுக்குள் – கல்வி, கலைகளுக்குள் தலையானது.  இதை அறிந்தவர் மிகச் சிலரே.  அதனால் ரகசியமாக உள்ளது.   எளிதில் புரிந்துகொண்டு நீ சுலபமாக செயலில் கொண்டு வர முடியும்.

ச.பா:  ப்ரும்ம ஞானம் தான் சிறந்த ஞானம் – வி ஞானம்- விசேஷமான அறிவு.  ரகசியம் – புடம் போடுவது – தங்கத்தை புடம் போடுவதால் அதன் உண்மையான  ப்ரகாசம்  வெளிப் படுவது போல இதை அறிந்தவனின் காம க்ரோத எனும்  பலவீனங்களை  புடமிட்டு – நெருப்பில் இடுவது போல – சுத்தம் செய்து  மனதை தூய்மையாக்கி  ப்ரும்ம ஞானம் தங்க இடம் தயார் செய்வது செய்து விடும். கர்ம வினை அகன்று விடுவதால் ப்ரத்யக்ஷமாக காணுவது போல தெளிவாக புரிந்து கொள்வாய்.  சுகம் என்ற ஒன்றை நீ உணருவது போல உணர்ந்து கொள்வாய். புலன் களால் அனுபவிப்பதில் சுகம் இருந்தாலும் சில சமயம் அதர்மம் இருக்கலாம். ஆனால் ப்ரும்மானந்தத்தில் அந்த பயம் இல்லை.  மிகுந்த சிரமப்பட்டு கற்க வேண்டுமா என்றால், அதுவும் இல்லை.  பலவிதமான கற்களின் இடையில் மாணிக்கம் கிடந்தால் உடனே  தெரிவது போல தெளிவாக விளங்கிக் கொள்வாய்.  சாதாரணமான ஒரு கலையை அறியவே மிகுந்த ப்ரயத்னங்கள் தேவைப் படும் பொழுது இதை சுலபமாக கற்க முடியுமா?  ப்ரும்ம வித்தை என்பது கடினமில்லையா?   சுலபமாக கற்றால் அதன் மதிப்பும் அதே அளவில் அழிந்து விடுவதில்லையா?   நுணுக்கமாக கற்றுக் கொள்ள உழைப்பும் அதிகம் தேவை என்று தானே சொல்வார்கள். அப்படியிருக்க, அழிவில்லாத ப்ரும்ம வித்தை அவ்வளவு சுலபாக கைகூடுமா?  பகவான் சொல்கிறார்- ஆத்மாவை அறிந்து கொள்வது என்றும் நிலைத்து நிற்கும். எப்பாடு பட்டாயினும் கற்க வேண்டியதே. மேலும்,

  1. இது ஒரு கோட்பாடு -இந்த விஷயத்தில் ஈடுபாடு இல்லாமலோ, நம்பாமலோ இருப்பவர்கள் என்னையும் அறிவதில்லை, பிறவிக் கடலை கடப்பதுமில்லை.
  2. என்னால் உருவாக்கப் பட்டதே இந்த உலகம் அனைத்தும். அது என் பரதத்வம். உயிரினங்கள், அண்ட சராசரங்கள் என்னில் அடக்கம். ஆனால் அவைகளில் என்னைக் காண முடியாது.

ச.பா:  முன்னமே சொல்லியபடி ஜீவன்களின் உள்ளுறையும் ஆத்மா நானே.   ஆத்மா தனித்தே இருக்கும். உலகியலின் தாக்கம் அதற்கு கிடையாது.

  1. பஞ்ச பூதங்களும் என்னுள் அடங்கும். ஆனால் அவைகளுல் நான் இல்லை. இது என் தெய்வீகமான யோகம். (இந்த   இடத்தில் யோகம் – தொடர்பு என்ற பொருளில் வருகிறது) அசையும், அசையா பொருட்களை உண்டாக்கி அவை இயங்கும்படி செய்வது நான் தான். நான் காரணம் மட்டுமே.

ச.பா: ப்ரும்மா முதலான ஜீவ ஜந்துக்கள், என்னிடம்  இருந்து தோன்றினாலும் நான் அவைகளுக்கு இருப்பிடம் இல்லை.   இது தான் தெய்வீகமான ரகசியம். அவைகளிடம் எனக்குத் தொடர்பும் இல்லை.  ஆனால், உலகில் இயக்கம் – உயிரினங்கள், மற்றும் தாவரங்கள், சிருஷ்டியின் அனைத்து வகைகளும் தோன்றியது முதல் முடிவு வரை என் மூலமே நடைபெறுகிறது.

  1. அது எப்படி சாத்யம் என்பதை உதாஹரணம் மூலம் விளக்குகிறார். எப்படி ஆகாயத்தில் இருக்கும் வாயு, உலகம் முழுவதும் வியாபித்து இருக்கிறதோ, அது போல நானும் உலகம் முழுவதிலும் வியாபித்து இருப்பதால், எல்லா பிறவிகளும் என்னிடம் அடங்குகின்றன.
  2. கல்ப முடிவில் உலகம் அதன் அனைத்து உயிருள்ளவை, மற்றவை உட்பட, என்னுள் அடங்கி நானாகவே ஆகின்றன. மறுபடியும் அடுத்த கல்ப ஆரம்பத்தில் அவைகளை நான் விடுவிக்கிறேன்.
  3. என் ப்ரக்ருதி – என் இயல்பு – நான் ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பு. என்னிடத்தில் ஒடுங்கிய அனைத்து ஜீவ ராசிகளையும் விடுவிக்கிறேன்.  ஒரு கல்பம் முடிந்து அடுத்த கல்பம் துவங்கும் சமயம் புதிதாக அதே ஜீவ ராசிகள் தோன்றுவது இதனால் தான்.  அந்த ஜீவ ராசிகள் தன்னிச்சையாக எதையும் செய்யும் நிலையிலும் இருப்பதில்லை. எனவே, இதை என் பொறுப்பு என்று ஏற்றுக் கொண்டுள்ளேன்.
  4. இவ்வாறு செய்யும் பொழுது தானும் கர்மா- வினை என்பதன் சாதக பாதகங்களை அனுபவிக்கத்தானே வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக அடுத்த ஸ்லோகத்தில்,

தனஞ்சயா!  இந்த செயல்கள் என்னை கட்டுப் படுத்துவதில்லை.  பற்றின்றி செய்வதால் வெளிப் பார்வைக்கு நான் செய்வது போல இருந்தாலும், அதன் பலாபலன்களில் என் பங்கு எதுவுமில்லை.

  1. என் தலைமையில் உலகம் மாறி மாறி சுழல்கிறது. சராசரங்கள் இடம் பெயருவதும், வளர்ந்து, மறைவதும் தொடர்ந்து கொண்டே இருப்பதும் என் சங்கல்பத்தாலேயே.

ச.பா:  நான் சாக்ஷி மாத்திரமே.  ஜீவராசிகள், சுகம் என்றும் துக்கம் என்றும் அனுபவிப்பது அவர்களின் உள்ளுணர்வே. மனம், புத்தி இவைகளால் உணர்ந்து அனுபவிக்கிறார்கள். எந்த விதமான பந்தமும் தனக்கு இல்லையென்றால், மறுபடி மறுபடி சிருஷ்டி எதற்கு?  ஈஸ்வரன்- தலைவன் என்று ஒருவர் இருந்து இந்த செயலை செய்வதன் – நாடக பாத்திரங்கள் போல ஜீவ ராசிகளை உலவ விடுவதில் என்ன லாபம் ?

இதற்கு பதில் சொல்வது போல அடுத்த ஸ்லோகம்

ச.பா: நான் ஆதியும் அந்தமும் அற்றவன், மாசில்லாத பரம் பொருள் தான். உலகை வியாபித்து உள்ளவன். ஞானிகள் என்னை வணங்கி ஆராதிக்கின்றனர் என்றாலும் நான் ஸ்வதந்திரமானவன்.

  1. ஆகாயம் போல் நான் வியாபித்து உள்ளேன். என்னை அறியாதவர்கள் நான் அவதாரம் எடுத்து வந்தால் மனிதனோடு மனிதனாக நினைத்து அவமரியாதை செய்கின்றனர். என் பரதத்வத்தை உணராத மூடர்கள். இவ்வாறு என்னை தூஷிப்பதாலேயே துர்கதியை அடைகிறார்கள்.

11.அவர்களின் நம்பிக்கையும் மோகமே- நிலையானதல்ல. அதனால் செய்யும் செயல்களும்  நேர்மையானவையாக இருப்பதில்லை. அறிவின்மையால் ஞானம் என்பது எது என்று தெரியாமல் எதையோ அறிவு என்று நம்புகிறார்கள். ராக்ஷஸர்கள், அசுரர்கள் எனப் பிறவி பெறுகிறார்கள்.  இயல்பான நல்ல குணங்கள் எதுவும் பெறாமல் வீணாகிறார்கள்.

  1. அதுவே அறிவுள்ள சிலர் என் உண்மை நிலையை அறிவார்கள். பார்த்தா! அவர்கள் மகாத்மாக்கள். என் ஈஸ்வரத் தன்மையை புரிந்து கொண்டவர்கள். மாற்று எண்ணம் இன்றி என்னை முழுமுதற் கடவுளாக என்னை வணங்கி  வழிபடுவர்.  நான் அழிவற்றவன், ஆதியும் அந்தமும் இல்லாத பரம் பொருள் என்று அறிவார்கள்.
  2. எப்பொழும் என் நினைவாக இருப்பர். பாடல்களைப் பாடுவர். யாக காரியங்களை எனக்கு அர்ப்பணமாக செய்வர். அன்புடன் வணங்கி தியானம் செய்வார்கள்.
  3. மற்றும் சிலர், யாக, யக்ஞங்கள் செய்து என்னை உபாசிக்கின்றனர். தனிப்பட்ட தெய்வ வழிபாடுகள் என்று சிலர், பலர் சேர்ந்து பஜனையாக சிலர், விஷ்ணுவாக அல்லது பரப்ரும்மாக நினைத்து என்று பலவிதமாக வணங்குவர்.

ச.பா: பலவிதமாக வணங்குகிறார்கள் என்றால், ஒரே தெய்வமாக உன்னை ஏற்றுக் கொண்டதாக ஆகுமா?

இந்த கேள்விக்கு பதிலாக அடுத்த சில ஸ்லோகங்கள்;

  1. நானே க்ருது, நானே யக்ஞம், ஸ்வதா வும் நானே, ஔஷதமும் நானே, மந்த்ரமும், ஆஜ்யமும் நானே, அக்னியும் அக்னியில் செய்யப்பட்ட அஹுதியும் நானே.

க்ருது – அக்னியில் ஹோமம் செய்வது, யாகம் – ஸ்ம்ரிதிகளில் சொல்லப் பட்ட விதிகளுடன் கூடிய யாகம், ஸ்வதா -பொதுவான ஆகாராதிகள், ஔஷதம் – மருந்து, மந்திரம் உச்சரிப்பதும்,  உச்சரித்துக் கொண்டே அக்னியில் போடப் படுவது ஆஜ்யம்,  யாகத்தீயும் அதில் போடப் பட்ட-ஆஹுதியான வஸ்துவும் –  இவையனைத்தும் யாக சம்பந்தமானவையே.

  1. உலகம் முழுவதற்கும் தந்தை நானே, நானே தாயார், சிருஷ்டி கர்த்தா என்றும் பிதாமஹர் – பாட்டனார், என்றும் அழைக்கப் படும் ப்ரும்மாவும் நானே. பவித்திரமான வேத மந்திரங்களும், ஓங்காரமும், ருக், சாம, யஜுர் வேதங்களும் நானே.
  2. அடைய வேண்டிய இலக்கும் நானே. பர்த்தா – போஷிப்பவனும் நானே. ப்ரபு:- தலைவனும், ஜீவ ராசிகளின் செயலுக்கு சாக்ஷியும் நானே.  இருக்கும் இடமும், புகலிடமும், ஆபத்துக்கு உதவும் நண்பனும் நானே.
  3. ஆற்றல் உடையவன், எடுத்த காரியத்தை முடிக்க உதவுபவன்- ப்ரலய: ப்ரலயமாக வந்து அழிப்பவனும் நானே. ஸ்திரமாக இருப்பவன், செல்வங்களின் கருவூலம், பீஜம் -விதைகள், (தாவரங்கள், உயிரினங்கள்மற்றும் அனைத்து உருவங்களும் தோன்றக் காரணமானவன்),அழிவற்றவன்.
  4. அர்ஜுனா! ஆதித்யனாக இருந்து ஒளியும், வெப்பமும் தருபவன், நானே மழையாக நின்று நீரைப் பொழிபவன், இழுத்து நிறுத்துபவனும் நானே, இறுகி இருப்பதை வெளிக் கொணருபவனும் நானே.  அம்ருதமும் நானே, ம்ருத்யுவும் நானே. சத் அஸத் – நல்லது, பொல்லாதது என்பதும் நானே.

ச.பா:   நிக்ருஹ்ணாமி உத்ஸ்ருஜாமி ச  – என்பதற்கு விளக்கம். ஒளி தருவதும், வெப்பம் அளிப்பதும் சூரியனே ஆனாலும் வெவ்வேறு கதிர்கள்.  சில நாட்கள் அதிக வெப்பமும், சில நாட்களில் குறைவாக இருப்பதும் அந்த கதிர்கள் என்னால்  இயக்கப் படுவதால் அல்லது என் வசத்தில் இருப்பதால் தான். அதே போல மழை சில மாதங்களில் மட்டும் பெய்வதும்.

இதுவரை ஒரே தெய்வமா என்ற வினாவிற்கு தான் யார் என்ற விளக்கங்கள்.

  1. மூன்று வேதங்களையும் அறிந்தவர்கள் யாகங்கள் மூலமாகவே என்னை துதிக்கிறார்கள். ஸ்வர்கத்தை அடைவது தான் அவர்களது குறிக்கோள். புண்ய பலனாக, ஸ்வர்கம் சென்று திவ்யமான போகங்களை அனுபவிக்கிறார்கள்.

ச.பா: இந்திரன் நூறு யாகங்களை செய்து இந்திர பதவியை அடைந்தான் என்பது தெரிந்திருக்கும்.  இவர்கள் ஆசையும் அதுவே.

  1. அங்கு சென்று இந்திரனுக்கு சமமான சுகங்களை அனுபவித்து விட்டு புண்யம் தீர்ந்தவுடன் திரும்ப பூமியில் பிறக்கிறார்கள். இவ்வாறாக த்ரயீ எனும் வேத மார்கங்களை அனுசரித்தவர்களும் தாங்கள் விரும்பிய பலனை பெறுகிறார்கள்.
  2. அநன்யா:ஸ்சிந்தயந்தோ மாம் யே ஜனா: பர்யுபாஸதே| தேஷாம் நித்யாபியுக்தானாம் யோக க்ஷேமம் வஹாம்யஹம் ||

மாற்று எண்ணமின்றி என்னையே நம்பி வணங்குபவர்களின் யோக க்ஷேமங்களை நான் பார்த்துக் கொள்கிறேன்.  அவர்கள் என்றும் என் பக்தர்களே.

  1. மற்ற தெய்வங்களை பக்தியுடன் துதிப்பவர்களும் அவர்கள் அறியாமலே என்னையே துதிக்கிறார்கள். கௌந்தேய! (அர்ஜுனனின் பெயர்) அறியாமை தான் காரணம்.
  2. யாக யக்ஞங்கள் போற்றும் தெய்வமும் நானே, அதில் செய்யப்படும் தானம் மற்றும் ஹோம திரவியங்களை ஏற்பவனும் நானே, என்பது தெரியாமல் செய்கிறார்கள் சிலர்.
  3. தேவதைகளை வணங்கி வேண்டுபவர்கள் தேவ லோகம் செல்கிறார்கள். பித்ருக்களை – முன்னோர்களை வேண்டுபவர்கள் பித்ரு லோகம் செல்கிறார்கள். பஞ்ச பூதங்களை  வணங்குபவர்கள்,  உலகியல் சுகங்களை நாடி பெறுகிறார்கள். என்னை வணங்குபவனும் என்னையே அடைகிறான்.
  4. என்னை பூஜிக்க சிரமப் பட வேண்டாம், பத்ரம்-இலை, புஷ்பம், பூ, பலம்- பழங்கள், தோயம்- தண்ணீர் – இவைகளில் எதை பக்தியுடன் அளித்தாலும் நான் திருப்தியாக ஏற்றுக் கொள்கிறேன்.

பத்ரம் புஷ்பம் பலம் தோயம் யோ மே பக்த்யா ப்ரயச்சதி |

ததஹம் பக்த்யுபஹ்ருதமஸ்னாமி ப்ரயதாத்மன: ||

  1. அவ்வளவு ஏன்? நீ செய்யும் செயல்களை, உண்ணும் உணவை, தியாகம் செய்வதையும் (யாக கர்மாக்களில்) தானம் செய்வதையும், தவம்செய்வதானால் அதையும் எனக்கு அர்ப்பணம் செய்து விடு.
  2. இச்செயல்களின் பலனான சுபமோ, அசுபமோ உன்னை அண்டாது. – (இவைகளும் உன் இலக்கை அடைய தடைகளே- ) சன்யாச யோகம் – துறவியின் சம நிலை இதுவே. அதன் பின் விடுபட்டவனாகஎன்னை அடைவாய்.
  3. சகல ஜீவ ராசிகளும் எனக்கு ஒன்றே. அனைவரையும்நான் சமமாகவே பார்க்கிறேன். எனக்கு த்வேஷி என்றும் ப்ரியன் என்றும் பாகுபாடு கிடையாது. என்னை பக்தியுடன் வணங்குபவன் உள்ளத்தில் நான் இருப்பேன். அது போலவே அவனும் என் உள்ளத்தில் இருப்பான்.
  4. துராசாரன் எனப் படுபவன் கூட என்னை வணங்கினால் தன் துஷ்டத்தனத்தை விட்டு நேர்மையாவான். அவனும் சாது நல்லவன் என்று எண்ணப்படுவான்.

31.நாளடைவில் தர்மாத்மாவாக நல்ல செயல்களைச் செய்து மன சாந்தி பெறுவான்.  கௌந்தேயா! நினைவில் வைத்துக் கொள், என் பக்தன் என்றும் நாசம் அடைய மாட்டான்.

கௌந்தேய ப்ரதி ஜானீஹி ந மே பக்த: ப்ரணஸ்யதி ||

  1. பிறப்பினால் தாழ்ந்தவர்கள் என கருதப்படும் ஜீவன் களும் (பெண்கள், வைஸ்யர், சூத்ரர் – இவர்கள் வைதீக காரியங்களில் ஈடுபட அனுமதி மறுக்கப் பட்டிருந்தது) என்னை வணங்கி நல்ல கதி அடைந்துள்ளனர்.
  2. அவ்வாறிருக்க, அறிவுள்ள ப்ராம்மணர்களும், நீதி தவறாத க்ஷத்திரியர்களும் பக்தர்களான ராஜ ரிஷிகளும், என்னை வணங்கி நல் கதியடைவதில் சந்தேகமென்ன?
  3. மன்மனா பவ மத்பக்தோ மத்யாஜி மாம் நமஸ்குரு | |மாமைவேஷ்யஸி யுக்த்வைவாத்மானம் மத்பராயண: ||

மனதில் என் நினைவுடன், என் பக்தனாக, என்னையே துதிப்பவனாக, வணங்கி , என்னையே அடைக்கலமாக எண்ணி இரு.  நீ என்னையே வந்தடைவாய்.

ச.பா:  வாசுதேவனான நானே பரப்ரும்மம்.  செய்யும் செயல்களை – க்ருஷ்ணார்ப்பணம் என்று செய்து விடு.

(இதுவரை உபநிஷதான   ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையின் யோக சாஸ்திரம் என்பதில் ஸ்ரீ க்ருஷ்ணனும் அர்ஜுனனுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையில் ராஜ வித்யா, ராஜ குஹ்யோ என்ற ஒன்பதாவது அத்யாயம் )

 

அத்யாயம்-10  விபூதி யோகம்

 

இதற்கு முன் 7,9 அத்யாயங்களில் பகவான் ஸ்ரீ க்ருஷ்ணரின் உபதேசங்கள் எதை எப்படி செய்வதால் என்ன பலன் என்ற விஷயங்கள் சொல்லப்பட்டன. 9 வரை ஒரு விதமான உபதேசம் –  செய், கடமையை செய், யோகம், அதனுடைய வகைகள், மரணத்திற்கு பின்னும் முன்னும்- எல்லாமே செயல் செயல் -செயல் தான்.  உட்காராதே, எழுந்திரு, இதை செய், அதைச் செய் என்று பெற்றவர்கள் கூறுவது போல – தஸ்மாத் யுத்யஸ்வ – ஒவ்வொரு விஷயமும் கடைசியில் இந்த வாக்கியத்தோடு முடியும்- அதனால் சண்டை போடு. உறவினர்களைக் கொல்வதா என்று குழம்பிய மனதை தெளிவுபடுத்த சொல்லிக் கொண்டே வரும் பொழுது ஏதோ கதை கேட்பது போல கேட்டு விட்டு அதோடு விட்டு விடக் கூடாது என்பது போல கடமையைச் செய் – என்றதோடு நிற்காமல், யுத்யஸ்வ – யுத்தம் செய் என்று நினைவு படுத்திக் கொண்டே வந்தார்.

முன் அத்யாயத்தில் – “மன் மனா பவ”   என்று சொன்னதன் தொடர்ச்சியாக தன்னை வெளிப் படுத்திக் கொள்கிறார்.  நீ யார், உன்னால் எப்படி காப்பாற்ற முடியும்? என்ற கேட்டு விட்டால், என்பது போல தன் ஸ்வரூபத்தை விவரிக்கிறார்.

மறுபடியும் சொல்கிறேன், உன் நன்மைக்காக என்று தொடங்குகிறார்.

1-3.  என் சக்தி அல்லது ப்ரபாவம் என்ன என்பதை தேவர்களோ, மஹரிஷிகளோ கூட முழுமையாக அறிய மாட்டார்கள்.  நான் தான் தேவர்களுக்கும், மஹரிஷிகளுக்கும் முதன்மையானவன்.

நான் ஆதியோ அந்தமோ இல்லாதவன். அதனால் பிறப்பும் இறப்பும் இல்லை.  உலகின் நாயகன் –  இவ்வாறு என்னை அறிபவன் தான் அறிவுடையவன். மனிதர்களுள் இந்த அறிவுடையவர்களே, பாபம் அகல, முக்தி அடைகிறார்கள்.

4-5. பல விதமான குணங்கள்- புத்தி,ஞானம், மோகமின்றி இருத்தல், பொறுமை, சத்யம், அடக்கம், வணங்கி இருத்தல்,

சுகம், துக்க, நிறைவாக இருத்தல், இல்லாமை, பயம், பயமின்றி இருத்தல்,

அஹிம்சை, அனைவரையும் சமமாக எண்ணி நடத்துதல், மனதில் சந்தோஷம், தவம், தானம், புகழ், இகழ்,

இவையனைத்தும் உலகில் உள்ளோர்களை ஆட்டிப் படைக்கும்  உணர்வுகள்.  இவையனைத்தும் என்னிடமிருந்தே தோன்றுவதே.

  1. சப்த ரிஷிகள், மனு புதல்வர்களான நால்வர் – இவர்கள் என் மானஸ புத்திரர்கள். இவர்கள் தான் உலகில் பிரஜைகள் தோன்றக் காரணமானவர்கள்.
  2. என் விபூதியையும், யோக சாதனைகளையும் அறிந்தவர்கள், அசைக்க முடியாத யோக பலம் பெற்றவர்கள் ஆவார்கள்.

ச.பா:  ப்ருகு  முதல் வசிஷ்டர் வரையிலான ஏழு ரிஷிகள்  தான் பரம்பரையான ஆசிரியர்கள்.  இவர்கள் மூலம் தான் வேதங்கள், பரம்பரையான சாஸ்திரங்கள்  கற்பிக்கப் பட்டன.  மனுவின் வழியில் தான் அரச குலம் வந்தது. அவர்கள் தான் தலைவர்கள். நேரடியாக பகவானிடமே உபதேசம் பெற்றவர்கள். பகவான் விஷ்ணுவின் அம்சமாகவே கருதப் படுபவர்கள்.  அந்த அளவு ஞானமும், ஆற்றலும் பெற்றவர்கள்.   தற்கால மனித பிறவிகள் அவர்கள் வழித் தோன்றல்களே.  மனித இனத்தின்  புத்தியும், செயல் திறனும் அவர்களிடமிருந்து வந்ததே.|

  1. பர ப்ரும்மமே வாசுதேவனான நான் – ஸ்ருஷ்டி கர்த்தா நான்- அளவற்ற பிரபாவம் உடையவன்- என்னிடமிருந்தே அனைத்தும் உற்பத்தியாகி பெருகி தொடர்ந்து வருகின்றன என்பதை அறிந்து ஞானிகள் துதிக்கிறார்கள்.
  2. இவர்கள் என்னைப் பற்றிய செய்திகளை உலகில் கதைகளாக, பாடல்களாக, ஆடல்களாக பரப்புகின்றனர். இவர்களுக்கு என்னைத் தவிர வேறு சிந்தனையே இல்லை. இதிலேயே சந்தோஷம் திருப்தி இவர்களுக்கு.
  3. இப்படி என் சிந்தனையாகவே உள்ள பக்தர்களுக்கு நானே புத்தி யோகம் அருளுகிறேன்.
  4. இவர்களுக்கு அக்ஞானம் என்பதே இல்லையா என்றால், பகவான் சொல்கிறார், உண்டு. சில சமயங்களில் அந்த அறியாமை வெளிப்படும் பொழுது நான் ஞான தீபத்தால் அந்த அக்ஞான இருட்டை போக்கி விடுவேன்.

ச.பா: அறியாமை வெளிப் படுவது என்பது எப்படித் தெரியும்?  நான் அவர்கள் அந்த:கரணம் என்ற ஆழ் மனதிலேயெ உறைகிறேன். அதனால் அவர்கள் சித்தம் செல்லும் வழி தெரிந்து விடும்.  அவர்களின் பக்தியே எண்ணெய்,  தியானமே திரியாக அந்த ஞான தீபம் எரியும்.  முன் சொன்னபடியே, தியானமும், ஒரு முனைப்பாடும் அவர்கள் புலன்களை வெல்ல உதவியிருக்கும்.

அர்ஜுனன் தன் சந்தேகத்தை சொல்கிறான்:

க்ருஷ்ணா! வசிஷ்டர் முதலான ரிஷிகள், நீதான் பர ப்ரும்மம்,  மிகச் சிறந்த ஆற்றலும் பெருந்தன்மையும் உடையவன். , மாசில்லாதவன், சாஸ்வதமான ஆதி புருஷன், விபு, என்றெல்லாம் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  தேவரிஷி  நாரதரும்,  அஸித், தேவலன், வியாசன்  போன்ற பெரியவர்களும் சொல்லக் கேட்டிருக்கிறேன்.  இப்பொழுது நீயும் சொல்கிறாய். அதனால் இவையெல்லாம் உண்மையாக இருக்கும் என்று நம்புகிறேன்.  ஆனால் உள்ளபடி உன்னை தேவர்களோ, தானவர்களோ அறிந்ததாகத் தெரியவில்லை. உன்னை உள்ளபடி நீயேதான் அறிவாய்.

புருஷோத்தமா! ஜகத்பதே! தேவ தேவா!   இந்த உலகை ஸ்ருஷ்டித்து, காப்பவனும் நீயே.

உன்னுடைய விபூதியை நீயே தான் எனக்கு விளக்க வேண்டும்.  உலகில் உன்னைக் காண முடியுமா? எந்த ரூபத்தில் நான் காண்பேன்?  உலகம் முழுவதும் வியாபித்துள்ளேன் என்றாய்? எப்படி? சதா நினைத்து பார்த்துக் கொண்டிருக்கிறேன், எப்படி உன்னை கண்டு கொள்வேன்,  எந்தெந்த  இடத்தில்  எப்படியெப்படி  இருப்பாய் ?

நீ சிறந்த யோகி என்று தெரிந்து கொண்டேன், உன்னை நினைத்து தியானம் செய்ய விரும்புகிறேன். எந்த விதமான ரூபத்தில் நான் தியானம் செய்ய வேண்டும் என்று சொல்.

உன்னுடைய யோக சாதனகளையும், விபூதியையும் பற்றி இன்னும் நிறைய சொல்லு. (விபூதி என்பது ஐஸ்வர்யம் என்று பதத்தின் பொருள். பதவி அல்லது தகுதி என்று எடுத்துக் கொள்வோம்)  கேட்கவே அம்ருதமாக இருக்கிறது. கேட்க கேட்க திகட்டாமல் அம்ருதம் உண்டது போலவே உணருகிறேன்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

சொல்கிறேன், கேள்.  முக்கியமானவற்றை சொல்கிறேன். என் விபூதிகள் அனந்தமானவை.  சொல்லச் சொல்ல விரியும்.

குடாகேசா!  ஜீவராசிகளின் ஹ்ருதயத்தில் ஆத்மாவாக வசிக்கிறேன்.  அனைத்து சரா சரங்களிலும் ஆதியும், அந்தமும், மத்தியிலுமாக இருப்பது நானே.

ஆதித்யர்களில் நான் விஷ்ணு.  க்ரகங்களில் ஓளியைத்தரும் ரவி-சூரியன். மருத் என்ற தேவதைகளுள் நான் மரீசி.  நக்ஷத்திரங்களுள் நான் சந்திரன்.

வேதங்களில் நான் சாம வேதம். தேவர்களில் இந்திரன். இந்திரியங்களில் மனம். ஜீவராசிகளில் சேதனா எனும் அறிவு.

ருத்ரர்களுள் சங்கரன். யக்ஷ ராக்ஷஸர்களுள் குபேரன். அஷ்ட வசுக்களில் நான் பாவகன் என்ற அக்னி. உயர்ந்த மலைகளில் நான் மேரு.

புரோஹிதர்களில் முக்யமான ப்ருஹஸ்பதி நானே. சேனைத் தலைவர்களில் நான் ஸ்கந்தன். நீர் நிலைகளில் சாகரன்.

மஹர்ஷிகளில் ப்ருகு. எழுத்துக்களில் ஏகாக்ஷரமான ப்ரணவம். யக்ஞங்களில் ஜபமாக அசையாத மலைகளில் ஹிமாலயமாக,

மரங்களில் அஸ்வத்த என்ற அரச மரம்.   தேவ ரிஷிகளில் நாரதர்.  கந்தர்வர்களில் சித்ர ரதன்.  சித்தர்களில் கபிலன் என்ற முனிவன்.

குதிரைகளில் உச்சைஸ்ரவஸம் –   யானைகளில் நான் ஐராவதம். இவை இரண்டும்  அம்ருத மதன சமயத்தில் பாற்கடலில் தோன்றின. மனிதர்களுள் நான் அரசன்.  (நராதிபன்)

ஆயுதங்களில் நான் வஜ்ரம். பசுக்களில் காமதேனு. கந்தர்பன் என்ற மன்மதன் நானே. சர்ப்பங்களில் வாசுகி.

நாகங்களில் அனந்தன்.  நீர்  சம்பந்தமானவைகளில் வருணன். பித்ருக்களில் அர்யமா  (அர்யமா என்பவர் பித்ரு லோகத்தின் அரசன்)

தைத்யர்களில் நான் ப்ரஹ்லாதன்.  ஓயாமல் நகர்ந்து கொண்டேயிருப்பதில் நான் நேரம்.  மிருகங்களில் நான் சிங்கம் (ம்ருகேந்த்ரன்)  பக்ஷிகளில் வைனதேயன்.

பரிசுத்தம் செய்யும் வஸ்துக்களில் நான் பவனன் என்ற வாயு. சஸ்திரம் தரித்தவர்களில் நான் ராமன். நீர் வாழ் ஜந்துக்களில் நான் மகரன்.  ஓடி வரும் நதிகளில் நான் ஜாஹ்னவி -கங்கை.

ஸ்ருஷ்டியின் ஆதி, மத்யம், அந்தம் நானே. வித்தைகளில் அத்யாத்ம வித்யா. விவாதங்கள் என்பதில் நான் வாதம். (பேச்சு பொதுவானது. ஏதோ ஒரு விஷயத்தில் உண்மையை கண்டு பிடிக்க ஆதாரங்களுடன் பேசுவது விவாதம்.)

அக்ஷரங்களில் நான் அகாரம். சமாஸம் என்பதில் நான் த்வந்த ( ஸம்ஸ்க்ருத இலக்கணத்தில் சமாசம் என்று ஒரு பிரிவு. அதில் நான்கு வகையுண்டு.)

என்றும் மாறாத அளவுகளில் க்ஷணம் என்பது காலத்தின் மிக குறைந்த பக்ஷ அளவீடு.  உலகத்தின் முகமாக – ப்ரதானமாக இருக்கும் தாதா – ப்ரும்மா.

அபஹரிக்கும் பொருட்களில் நான் ம்ருத்யு.  செல்வத்தை அபஹரிப்பவனும், அளிப்பவனும் நானே.  பெண்களில், கீர்த்தி, ஸ்ரீ, வாக் என்ற மூன்று பெண்களும் நானே.  ஸ்ம்ருதி என்ற நினைவாற்றல், மேதா என்ற சாமர்த்யம்,(ஆற்றல்) த்ருதி: எனும் த்ருடமான கொள்கை பிடிப்பு, க்ஷமா- பொறுமை.  இந்த குணங்களும் நானே.

ஸாம வேதத்தில் ப்ருஹத் சாமா என்பதாகவும், சந்தஸ் எனும் காவ்ய அமைப்பில், காயத்ரி சந்தஸாகவும், மாதங்களில் மார்கசீர்ஷம் என்ற மார்கழியாகவும், ருதுக்களில் பூக்களை மலரச் செய்யும் வசந்தமாகவும் இருக்கிறேன்.

ஏமாற்று வித்தைகளில்   த்யூதம்- சூதாட்டம் .  தேஜஸ்வி என்பவர்களின் தேஜஸ்.  உழைப்பும் நானே, வெற்றியும் நானே.  சாத்வீகமானவைகளின் சத்வ குணமும் நானே.

வ்ருஷ்னீ என்ற சமுகத்தில் நான் வாசுதேவன். பாண்டவர்களில் தனஞ்ஜயன். முனிவர்களில் வ்யாஸன். கவிகளில் உசனஸ் என்ற கவி (கவி என்ற சொல் வேதங்களில்  முனிவன் என்ற பொருளில் பயன்பட்டதாம்.   அதிகம் கேள்விப் படாத உசனஸ் என்பவரைப் பற்றி ஏன் சொன்னார்  என்பது பற்றி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகள் செய்துள்ளனர். தமிழின் தொல்காப்பியர் இவர் வழி வந்தவராக சொல்லப் படுகிறது.)

தண்டனைகள் என்பதில் நான் தண்டம் – தடி – அடிக்க பயன்படுவது. ஜயித்து ஆள வேண்டும் என்று விரும்புபவர்களில் நீதி என்ற சாஸ்திரமாவேன்.  ரகசியமாக சாதனைகள் செய்பவர்களின் மௌனம். ஞானிகளில் ஞானம்.

எந்த பொருளானாலும் அதன் கருப் பொருளாக இருப்பது நானே. சராசரங்களிலும் நான் இல்லாதது என்று ஒரு பொருள் இல்லவே இல்லை.

என் விபூதிகளுக்கு முடிவே கிடையாது. உத்தேசமாக ஒரு சிலவற்றை சொன்னேன்.  சொல்லி விளக்க முடியாத அளவு விஸ்தாரமானது என்ற வரை தெரிந்து கொள்.

சிறந்தது, சத்வமானது, லக்ஷ்மீகரமானது.  தீர்வானது, என்று கண்டால் அதில் என் தேஜஸின் ஒரு அம்சம் இருப்பதாக தெரிந்து கொள்.

அல்லது இப்படி தெரிந்து என்ன ஆகப் போகிறது. அர்ஜுனா!  நான் ஒருவனே அனைத்திலும் வியாபித்து இருப்பவன் – என் அம்சமே ஜகத் – உலகமாக உருப் பெற்று  நிலைத்துள்ளது.

(இதுவரை உப நிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷணையில் விபூதி யோகம் என்ற பத்தாவது அத்யாயம்.)

 

அத்யாயம் -11 விஸ்வரூப தர்ஸனம்

என் ஒரு அம்சமே உலகம் முழுவதும் வியாபித்து காக்கிறது, என்று பகவான் சொன்னதை அடுத்து அர்ஜுனன் அந்த ரூபத்தை நான் காண வேண்டுமே என்று தன் விருப்பத்தை தெரிவிக்கிறான்.

அர்ஜுனன் கேள்வி:  எனக்காக எனக்கு அனுக்ரஹம் செய்ய என்றே அரிதான  அத்யாத்ம  விஷயங்களை விளக்கிச் சொன்னாய் க்ருஷ்ணா! என் மோகம் விலகியது. உன் வாயாலேயே உன் பெருமையை கேட்கும் பேறு பெற்றேன்.  அழிவற்றவன் நீ. உலகின் ஜீவராசிகளுக்கு உன்னுடைய கருணையும் அளவற்றது.

அவ்வாறு  நீ உன் சுய ரூபத்தை சொல்லக் கேட்டபின் அந்த ரூபத்தை காணவும் என் மனம் விழைகிறது. புருஷோத்தமா! அது முடியுமா? யோகேஸ்வரா,  ப்ரபோ!  எனக்கு அந்த திவ்ய ரூபத்தைக் காட்டு.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

பாரேன். என் திவ்யமான  ரூபங்களையும், நூற்றுக் கணக்காக, ஆயிரக் கணக்காக, பல வண்ணங்களிலும், உருவங்களிலும் இருப்பதை காணுவாய்.

ஆதித்யர்களை, வசுக்களை, ருத்ரர்களை, அஸ்வினி குமார்களை, மருத் கணங்களை,  இது வரை காணாத பல ரூபங்களை, ஆச்சர்யம் அளிக்கும் விஷயங்களை காண்பாய்.  இருந்த இடத்தில் இருந்தபடியே உலகம் முழுவதையும் சரா சரங்களையும் இன்னும் என்ன வேண்டுமோ அனைத்தையும் என் உடலில் காண்பாய்.

ஆனால்,

தெய்வீகமான என் யோக ரூபத்தை இந்த மனித கண்களால் காண இயலாது.  தெய்வீகமான கண்கள் தருகிறேன்.  பார்.

தான் கேட்டதையும் கண்டதையும்  உடனுக்குடன்  அரசனான திருதராஷ்ட்ரனுக்கு தெரிவித்துக் கொண்டிருந்த சஞ்சயன், சொல்கிறான்

(இதுவரை பகவான் சொன்னார் என்றும் அர்ஜுனன் கேள்விகள் நமக்கு சொல்லவே என்பது போல ஒரு மன நிலையில் இருந்தோம். சஞ்சயன் வந்தான்- அரசனுக்குத் தான் முதல் காட்சி என்பது போல அவனது வர்ணனைகள் மூலமே திவ்ய ரூபத்தைக் காணப் போகிறோம்)

ராஜன்! பரம யோகேஸ்வரன் ஸ்ரீ க்ருஷ்ணன். தன் தெய்வீகமான ரூபத்தை பார்த்தனுக்கு காட்டுகிறான்.

சஞ்சயன் பிரமிப்பு அகலாத குரலில், ஆஹா,  எத்தனை முகங்கள், வாய்கள், கண்கள், எவ்வளவு அத்புதமான காட்சி.  எவ்வளவு திவ்யமான ஆபரணங்கள். அனேக திவ்ய ஆயுதங்கள்.

இது ஒரு நல்ல ஸ்லோகம்:

திவி சூர்ய சஹஸ்ரஸ்ய பவேத் யுகபதுத்திதா |

யதி பா: சத்ருஸீ ஸா ஸ்யாத் பாஸஸ் தஸ்ய மஹாத்மன: ||

दिवि सूर्य सहस्रस्य भवेद्युगपदुथिता | यदि   भा: सदृशी सा स्यात् भासस्तस्य महात्मन: ||

ஆகாயத்தில் திடுமென ஆயிரம் சூரியர்கள் ஒரே நேரத்தில் தங்கள் தன் முழு ஓளியுடன் உதித்தால் எப்படி இருக்கும். இந்த மகானின் தேஜஸ் அதற்கு இணையாக உள்ளது.

அங்கு ஓரிடத்தில் இருந்து உலகம் முழுவதும் வியாபித்த, பல விதமாகவும்,  தனித் தனியாகவும் தேவ தேவனின் சரீரத்தில் பாண்டவனான அர்ஜுனன் கண்டான்.

நிற்க முடியவில்லை. மயிர் கூச்செரிய ஆச்சர்யத்துடன் கூப்பிய கரங்களுடன் தலை வணங்கி அர்ஜுனன் துதிக்கலானான்.

தேவ தேவா, உன் சரீரத்தில் அனைத்தையும் காணுகிறேன். ஜீவராசிகளின் விசேஷமான கூட்டங்கள்.  இதோ ப்ரும்மா, கமலாஸனத்தில், ரிஷிகள், திவ்யமான நாகங்கள்.

சங்கர பாஷ்யம்: முதலில் சிருஷ்டிக்கு காரணமான ப்ரும்மா,  கமலாஸனத்தில், கையில் கலசத்துடன் –  பூமியின் நடு பாகத்தில், மேருவே விதைகள் நிரம்பிய கலசமாக -பூமியே கமலம் என்ற தாமரை – வசிஷ்டர் முதலான ரிஷிகள், வாசுகி போன்ற நாகங்கள் சூழ)

கணக்கில்லாத புஜங்கள், வயிறு, வாய், கண்கள் இவற்றுடன் அனந்தமான ரூபத்தைக் காண்கிறேன்.  ஆதியோ, மத்யமோ, முடிவோ தெரியவில்லை. விஸ்வேஸ்வரா, உன் விஸ்வரூபம் இது.

கிரீடம், கதை, சக்ரம் இவைகளை காண்கிறேன். உன் தேஜஸ் அண்டாண்டங்களையே ஒளி மயமாக ஆக்கி இருப்பதைக் காண்கிறேன். அந்த ஒளி வெள்ளத்தில் உன்னை காண முடியாமல் கண் கூசுகிறது. கொழுந்து விட்டெரியும் நெருப்போ, சூரிய ப்ரகாசமோ, அதனுள் அளவில்லாத உன் தேஜஸை காண்கிறேன்.

இந்த காட்சி எனக்கு உன் யோக சக்தியை உணரச் செய்கிறது.

உலகில்அறிய வேண்டிய பொருள் நீயே, குறைவற்றவன்- அக்ஷரன், இந்த உலகின் ஆதாரம் நீயே. அழிவற்றவன் நீ. சாஸ்வதமான தர்மத்தை காப்பாற்றுபவன். என்றும் வாழ்ந்திருக்கும் புருஷோத்தமன் நீதான் என்று தெரிந்து கொண்டேன்.

ஆதி, மத்யம், அந்தம் இல்லாதவன், அளவில்லா பராக்ரமம்  உடையவன்.  பராக்ரமம் மிக்க நீண்ட புஜங்கள், சந்திரனும் சூரியனும் கண்களாக,  வாயில் ஒளிப் பிழம்பாக  ஹுதாஸனன் என்ற அக்னி, உலகமே உன் தேஜஸால் ப்ரகாசமாகத் தெரிகிறது.

வானமும் பூமியும் ஒன்றாக ஆகும் படி இணைந்து உன் உருவம் வளர்ந்து பூமியை வியாபித்து, திசைகள் எல்லாம் பரவி இருக்க உன் உருவம் அத்புதமாக இருக்கிறது. மூவுலகத்தாரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.

தேவர்கள் கூட்டம் தள்ளி நின்று பார்த்துகொண்டிருக்க, சிலர் பயந்து கைகூப்பி நிற்க, மஹர்ஷி சித்தர்கள் கூட்டம் சற்றே தைரியம் வந்தவர்களாக, கை கூப்பி துதிக்கிறார்கள்.

ருத்ர, ஆதித்ய, வசுக்கள் மற்றும் சாதுக்கள், அஸ்வினௌ, (இருவர்) மருத் என்ற கூட்டம், உஷ்மபா என்ற பித்ரு தேவதைகள், கந்தர்வர்கள், (ஹா ஹா  ஹூஹூ போன்றவர்கள்) யக்ஷ,(குபேரன் போன்றோர்)  அசுர, (விரோசனன் போன்றோர்) சித்தர்கள்  (கபிலர் போன்றோர்) கூட்டம் என்ன நடக்கிறது என்று புரியாத பாவனையுடன் கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்த ரூபம் கண்டவரை கலக்குகிறது. என்னையும் தான். பெரிய உருவம், கணக்கில்லாத கண்களும் முகமும், புஜங்களும் , பெரிய பற்களும், உதரமும் ஒருவன் தானா என்ற ஐயமும் எழுகிறது.

என் மனம் தடுமாறுகிறது, பூமிக்கும் வானத்துக்குமாக எழுந்து நிற்கும் பல வண்ணங்கள் மிளிர, பெரிய முகத்தில் விசாலமான கண்களும், பயங்கரமான பற்களும், காலானல – ப்ரலய காலத்தீ போல ஜ்வலிக்கும் முகங்கள்  (வாய்) – இந்த ஒளியில் என்ன திசை என்று தெரியவில்லை.  ஜகன்னிவாஸா! தேவேஸ! ப்ரஸீத கருணை செய்வாய்.

இது என்ன காட்சி. த்ருதராஷ்ட்ரனுடைய புத்திரர்கள், அவர்களைச் சார்ந்த அரசர்களுடன் கூட , பீஷ்மரும், த்ரோணரும், சூத புத்ரனான கர்ணனும், நம் பக்கத்து அரசர்கள் மற்றோரும் சேர்ந்து வேக வேகமாக உன் வாயில் வந்து விழுகிறார்கள். சிலர் வாய் உள்ளே நுழையும் முன் கடைவாய் வழியாக தொங்கியபடி தலை எது, உடல் எது- நசுக்கப் பட்டவர்களாக  தெரிகிறார்கள்.

வேகமாக ப்ரவகித்து ஓடும் நதி நீர், கடலை நோக்கியே செல்லுவது போல  இங்கு மனிதனாக வீரன் என்று பெயர் பெற்ற அரசர்கள், தகிக்கும் உன் வாய்க்குள் வந்து விழுகிறார்கள்.

எரிந்து கொண்டிருக்கும் விளக்கை தானே நாடி வந்து விழுந்து நாசம் அடையும் விட்டில் பூச்சிகளைப் போல வேக வேகமாக வந்து நாசமாகிறார்கள். அருகில் வரும் பூச்சியை இழுத்துக் கொள்ளும் ஜந்துவைப் போல உன் நாக்குகள் அவர்களை இழுத்து விழுங்குகின்றன.

இந்த உக்ர ரூபம் எதற்கு? எனக்கு புரியவில்லையே. தேவ தேவனே, ப்ரசீத, கருணை செய் –  முழு முதற் கடவுள் நீ தானே- உன் மன ஓட்டம் என்னால் அறியக் கூடுமா – நீயே எனக்கு புரியும்படி சொல்லு.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

நான் காலரூபன். லோகம் முடிவடையும் பொருட்டு வந்துள்ளவன். உலகை சுருட்டி எடுத்துச் செல்ல வந்தவன். இந்த யுத்த பூமியில் யோத்தா என்று சண்டையிட வந்தவர்களில் உன்னைத் தவிர வேறு எவரும் மிஞ்சப் போவதில்லை.

அதனால், எழுந்திரு.  எதிரிகளை வென்று, ராஜ்யத்தை அடைந்து புகழ் பெறுவாய்.  சவ்ய சாசின்! (அர்ஜுனனின் பெயர்) நிமித்தம் தான் நீ, என்னால் முன்னாலேயே இவர்கள் காலம் இது வரை தான் என்று உறுதி செய்யப் பட்டு விட்டது.

த்ரோணர், பீஷ்மர், ஜயத்ரதன், கர்ணன் மற்றும் யுத்தம் செய்ய வந்துள்ள வீரர்கள் என்னால் ஹதம் செய்யப் பட்டு விட்டார்கள்.  பெயரளவுக்கு தான் யுத்தம்.  அவர்களை நீ சுலபமாக வெற்றி பெறுவாய்.

சஞ்சயன் சொல்கிறான்.

அரசே, இதைக் கேட்டு அர்ஜுன ன் நடு நடுங்கி விட்டான். கை கூப்பி வணங்கி குரல் தழ தழக்க பயந்த படி திரும்பவும் வணங்கி ஏதோ  சொல்கிறான்.

அர்ஜுனன்:  ஹ்ருஷீகேஸ! உன் புகழை உலகத்தார் மகிழ்ந்து பாடுவது ஏற்றதே. ராக்ஷஸர்கள் கூட்டம் திசைக்கொன்றாக பறந்து விட்டது.   விஷயம் அறிந்த சித்தர்களும் மற்றவர்களும் வணங்குகிறார்கள்.

ஏன் வணங்க மாட்டார்கள்?  மஹாத்மன்! ப்ரும்மாவுக்கும் முந்தைய ஆதி புருஷன் நீ.  ஜகன்னிவாஸ –  ஜகமெல்லாம் உன்னுள் அடக்கம். தேவ தேவன், முடிவில்லாத, அக்ஷரன். சத் அஸத் இவைகளுக்கும் அப்பாற்பட்டவன்.

ஆதி தேவனான புருஷன், முழு முதற் கடவுள், விஸ்வம் எனும் உலகங்கள் அனைத்துக்கும் ஆதாரம். நீ அறியாதது எதுவும் இல்லை. அநந்த ரூபனே, நீயே வடிவமைத்ததே இந்த உலகங்கள். பரந்தாமா!

வாயு, யமன், அக்னி, வர்ணன், சந்திரன், ப்ரஜாபதி அனைத்தும் நீயே. பாட்டனுக்கு பாட்டனும் நீயே. பல்லாயிரம் நமஸ்காரங்கள்.  திரும்பத் திரும்ப நமஸ்காரங்கள்.

முன்னும் பின்னும், சுற்றிலும் என்று உன் தோற்றத்துக்கு வணக்கங்கள்.  சர்வமும் நீயே, அளவில்லாத விக்ரமம் உடைய நீ வேண்டியதை அடைவதில் சந்தேகமென்ன.

சகா, நண்பன் என்று யோசியாமல் சொன்ன வார்த்தைகளை மன்னிப்பாய். ஹே யாதவா, ஹே க்ருஷ்ணா, நண்பனே என்று பல முறை உன் மகிமை  தெரியாமல் அருகாமை காரணமாக அன்பினால் சாதாரணமாக எண்ணி அழைத்தேனே, அது என் பிழை.

(இதையே ஆண்டாளும் தன் பாசுரத்தில் – அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்னை சிறு பேரழைத்தனையும் சீறி யருளாதே என்கிறாள்)

அலட்சியமாக பேசியிருந்தாலோ, விளையாடும் பொழுதும், கூடியிருந்து உண்ணும் பொழுதும், ஒரு முறையோ, பல முறையோ அனைத்தையும் மறந்து மன்னிக்க வேண்டுகிறேன்.

உலகத்தின் தந்தை ஸ்தானத்தில் உள்ளவன். சரா சரத்திலும் பூஜிக்கத் தகுந்தவன். சிறந்த குரு. உன்னைத் தவிர இந்த தகுதி வேறு யாருக்கு உண்டு.

அதனால் உன் கால் தொட்டு வணங்குகிறேன்.  வணங்க வேண்டிய ஈஸ்வரன்  நீயே என்று உணர்ந்து கொண்டேன். அதனால் மகனிடம் தந்தை போலும், பிரியமான நண்பனிடம் நண்பன் போலும், அன்புடையவனிடம் அதே போல அன்பு வைத்தவன் போலவும் என்னை பொறுத்தருள்க.

முன் காணாத  ரூபம், இதைக் கண்டு மகிழ்ந்தேன். பயமும் கூட. மனம் நடுங்கி விட்டது.  பழைய ரூபத்தையே காட்டு,  தேவேஸ, ப்ரசீத.

கிரீடம் அணிந்து  நான்கு புஜங்களிலும் கதையும் சக்கரமும்,  ஆயிரம் கைகளுடன்  என் எதிரில் வர வேண்டும், விஸ்வமூர்தே.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

நானே விரும்பி இந்த ரூபத்தை உனக்கு காட்டினேன். ஒளி மயமான உலகங்கள் அனைத்தையும் என் யோக பலத்தால் காணச் செய்தேன்.  உன்னையன்றி வேறு எவரும் கண்டிராத காட்சி இது.

வேத அத்யயனங்களை  முழுமையாக செய்தவர்களும் கண்டிலர். தானம் செய்து உயர்ந்தவர்களும் கண்டிலர். கர்ம மார்கத்தை கிரமமாக அனுஷ்டித்தவர்களோ,  உக்ரமான தவம் மேற்கொண்டவர்களோ கூட இந்த ரூபத்தைக் கண்டதில்லை. நீ ஒருவன் தான் என் அருளால் காண முடிந்திருக்கிறது.

(வேத மார்கத்தை அனுஷ்டிப்பதால் பலன் இல்லையென்றோ மற்ற தானம் தவம் முதலானவை பயனில்லை என்றோ பொருள் இல்லை. இந்த ரூபம்- விஸ்வரூபமான இந்த ரூபம் கண்டதில்லை.

மயா ப்ரஸன்னேன தர்ஸிதம் – நானே மனம் உவந்து உனக்கு கொடுத்த காட்சி இது.  மற்ற சாதகர்களுக்கு கொடுத்த காட்சியோ, அனுபவமோ வேறு பட்டிருக்கலாம். )

இந்த பயங்கரமான ரூபத்தைப் பார்த்ததால் என்னிடம்  நீ பயப்படவோ தயங்கவோ  வேண்டாம்.  பழையபடி என் உற்ற தோழனாக அன்புடன் இரு.

சஞ்சயன் சொல்கிறான்:  இப்படி சொல்லி விட்டு, வாசுதேவன் தன் பழைய ரூபத்தையே எடுத்துக் கொண்டான். மஹாத்மா அவன்.  சௌம்யமான தன் பழைய உருவில் வந்து பயந்து போன          அர்ஜுன னை சமாதானப் படுத்துகிறான்.

அர்ஜுனனும் சமாதானம் அடைந்து அப்படி, இந்த மனித உருவம் திரும்ப காணக் கிடைத்ததே என்று தன் மகிழ்ச்சியைத் தெரியப் படுத்தினான்.  என் பழைய புத்தியும், இயல்பும் திரும்பப் பெற்றேன் என்றான்.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொன்னார்.

மிக அரிதான இந்த காட்சியை தேவர்களும் காண விரும்புவார்கள். முன்னே சொன்னபடி, வேத ஞானமோ, தவம், தானமோ செய்து கரை கண்டவர்கள் கூட நீ இப்பொழுது பெற்ற காட்சியைக் காண முடியாது.  என்னிடம் அபரிமிதமான பக்தி, நம்பிக்கையை வைத்தவர்கள் அன்றி, எனக்கு நெருக்கமானவர்கள் யாரும் இல்லை.  என்னை அறியவோ, காணவோ, என்  தத்வத்தை புரிந்து கொள்ளவோ , என்னிடமே ஐக்யமாகவோ, பக்தி தான் சாதனம்.

அடுத்து வரும் ஸ்லோகம் கீதையின் சாரமாக கருதப் படுகிறது.

மத்கர்மக்ருத் மத்பரமோ மத்பக்த: சங்கவர்ஜித: | நிர்வைர: சர்வ பூதேஷு ய: ஸ மாமேதி பாண்டவ||

मत्कर्मकृत् मत्परमो मद्भक्त: संग वर्जित: | निर्वैर: सर्व भूतेषु य: स मामेति पाण्डव ||

பாண்டவா!   என் சம்பந்தமான செயல்களையே செய்பவன்,  என்னையே அனைத்தும் என்று நம்புபவன், என் பக்தனாக வேறு எந்த தொடர்பும் தேவையில்லையென்று இருப்பவன்,  உலகில் அனைத்து ஜீவராசிகளிடமும் விரோதம் இன்றி அன்புடன் பார்ப்பவன், அவன் என்னை கண்டிப்பாக வந்தடைவான்.

ச.பா:  ஒருவரிடம் வேலை பார்ப்பவன் அவரிடம் மதிப்புடையவனாக இருக்கலாம். ஆனால் அவரே தனக்கு எல்லாம் என்று நினைக்க மாட்டான்.  ஆனால் என் பக்தர்கள் என்னையே தங்கள் ஆதர்ஸமாக எண்ணுவர்.  என்னிடம் தங்களையே அர்ப்பணித்து இருப்பர்.  செல்வமோ, உற்றார், உறவினரோ, அதற்கு பின் தான்.  அதன் காரணமாக உலகம் அனைத்தும் என் சிருஷ்டி என்பதை உணர்ந்து எந்த ஜீவனிடமும் விரோதம் பாராட்ட மாட்டார்கள்.  அப்படி இருப்பவர்கள் என்னிடமே ஐக்யமாகிறார்கள்.  இதுதான் உனக்கு நான் செய்யும் உபதேசம்.

 

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையின் யோக சாஸ்திரத்தில், க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், விஸ்வரூப தரிசன யோகம் என்ற பதினொன்றாவது அத்யாயம்)

 

அத்யாயம்-12 பக்தி யோகம்

அர்ஜுனனின் சந்தேகம் – எது உயர்ந்தது?  பகவானிடம் பக்தியா? ப்ரும்ம ஞானம் பெற்ற ஆத்மா பரமாத்மா என்று அறிந்து கொண்ட யோகியா?

எப்பொழுதும் உன்னிடம் பக்தியுடன் உன்னை வணங்கி இருப்பவர்கள்  ஒரு பக்கம். மறு பக்கம் அவ்யயம், அக்ஷரம் என்று ப்ரும்மத்தை தேடும் யோகிகள் – இவர்களில் யார் சிறந்தவர்?

ஸ்ரீ பகவான் சொல்கிறார்.

முதலில் பக்தர்களைப் பற்றிச் சொல்கிறேன்.  என்னை ஆஸ்ரயித்து,  சிரத்தையுடன், பக்தி செய்யும் பக்தர்கள் எனக்கு உகந்தவர்கள். அதே போல அக்ஷரம், அனிர்தேஸ்யம், அவ்யக்தம் – அழியாத, இதுதான் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாத, குறையாத ப்ரும்மம் என்று பூஜிக்கிறார்களோ அவர்களும்.  என்னை அனைத்திலும் காணக் கூடியவர்கள், அதே சமயம் காணக் கிடைக்காத பர ப்ரும்ம ஸ்வரூபமும் நானே, ரகசியத்துள் ரகசியமாய், எதற்கும் கலங்காத (அசையாத) உறுதி படைத்தவனும், த்ருவம் என்றும் மாறாதவன் (சலனமில்லாதவன்) என்றும் அறிவர்.

முன்னமே நான் சொன்னபடியே, புலன் களை அடக்கி, ஜீவராசிகள் அனைத்தையும் சமமாக பார்க்கத் தெரிந்தவர்களாக,  (இப்படி மனதில் எண்ணி எண்ணி துவேஷம் என்பது அறவே இல்லாதவர்களாக பரிணமிக்கிறார்கள்)  உலகில் உள்ள உயிர்கள் அனைத்துக்கும்  நன்மையே நாடுபவர்களாக  இருப்பதால் சிருஷ்டி செய்த எனக்கு மகிழ்ச்சி.  அதனாலும் எனக்கு பிரியமானவர்கள்.

அவ்யக்தம் என்ற அருவமான கொள்கையை மட்டும் பின்பற்றி சாதனை செய்பவர்களுக்கு உடல் க்லேசம் அதிகம்.  சாதாரண  மனிதர்கள், உருவத்துடன் உள்ள தேவ தேவியரை சுலபமாக வழிபட முடியும்.

இப்படி கண்ணால் கண்டும் அறிந்து கொள்ளக் கூடிய வகையில் என்னை தியானித்து அனுசரிப்பவர்கள், தங்கள் செயல்களை எனக்கு அர்ப்பணித்து விடுகிறார்கள். மாற்று எண்ணமின்றி என்னை நினைத்து தியானம் செய்தும் வழிபடுகிறார்கள். இவர்களை நான் சீக்கிரமே சம்சார பந்தத்திலிருந்து விடுவிக்கிறேன்.

அதனால் என்னை வழிபடு. மனதையும் புத்தியையும் என்பால் செலுத்து. என் அருகிலேயே இருப்பாய். இதற்கு மேல் என்ன வேண்டும்?  சந்தேகமே வேண்டாம்.

புத்தியை ஓரிடத்தில் நிலைத்து நிறுத்தி யோக சாதனையை செய்ய முடியவில்லையெனில் பயிற்சி செய்,  பயிற்சியும் ஒரு யோகமே. செய்ய முடியாது என்று மலைப்பாக தெரியும் செயல்களையும் இடைவிடாத பயிற்சியினால் செய்து விட முடியும். உன் மனதில் அதற்கான விருப்பம்- வேண்டும்.

(என்னை அடைவது உன் குறிக்கோளானால் அது விஷயமாகவே உன் தேடல்கள் அமையும். சரியான வழியை கண்டு கொள்வாய். முயற்சிகள் செய்வாய். )

அப்படி திரும்பத் திரும்ப தியானம் முதலியவற்றை செய்ய முடியாவிடில் என் சம்பந்தமான செயல்களைச் செய்.  தேவ பூஜைகள், யாக யக்ஞங்கள் அதற்காகவே சொல்லப் பட்டுள்ளன.  எனக்காக செய்யும் செயல்களும் சித்தியை அளிக்கும்.

அதுவும் செய்ய முடியவில்லையா, செய்யும் செயல்களை எனக்கு அர்ப்பணித்து விடு. பலனை எதிர்பாராமல் உன் கடமைகளில் சிரத்தையுடன் ஈடுபடு.

வரிசைக் கிரமமாக பார்த்தால்  அப்யாசம் -பயிற்சி என்பதை விட ஞானம் சிறந்தது. ஞானம் லயிக்க வேண்டுமே – அதை விட த்யானம் சிறந்தது.  தியானத்தை விட செய்யும் கர்ம பலனைத் தியாகம் செய்வது சிறந்தது. தியாகமே மற்ற எல்லாவற்றையும் விட சிறந்தது.  ஏனெனில் தியாகத்தில் தான் மன சாந்தி  உள்ளது.

என் பக்தர்கள் அல்லது என்னை அனுசரிப்பவர்கள் எனக்கு பிரியமாக ஆகிறார்கள் என்று சொன்னதை மேலும் விளக்கமாக சொல்கிறார். அதற்கான தகுதியாக சில குணங்களை  அவர்களிடம் எதிர்பார்க்கிறார்.  அவையாவன:

அத்வேஷ்டா – த்வேஷம் இல்லாதவன்,  சர்வ பூதானாம் மைத்ர:- ஜீவராசிகள் அனைத்திடமும் நட்பு-  கருணை, தான் என்ற எண்ணமோ, அஹங்காரமோ இல்லாதவன், துக்கமோ, சுகமோ சமமாக நினைப்பவன், பொறுமையுடையவன், திருப்தியுடன் எப்பொழுதும் யோக சாதனைகளைச் செய்பவன்,  எதையும் செய்து பார்க்கும் துணிவு உடையவன், தன் கொள்கையில் மாறாத பிடிப்புடையவன்,  என்னிடம் அர்ப்பித்த மனமும், புத்தியும், நம்பிக்கையும் உள்ள பக்தன் – அவன் எனக்கு பிரியமானவன்.

கோபம், பயம்,  உத்வேகம் இவற்றை தன் கட்டுக்குள் வைத்திருப்பவன், தேவைகள் அதிகம் இல்லாமலும், தன்னைப் பொறுத்தவரை சுத்தமாக, ஒழுக்கம் நிரம்பியவனாக, தயை யுடையவன், கவலையில்லாதவன், தானாகவே ஆடம்பரத்தை தவிர்த்து வாழ்பவன், எனக்கு பிரியமானவன்.

த்வேஷம் இல்லாதவன், எதையும் விரும்பி கிடைக்கவில்லையென்றாலும் வருந்தாதவன்,  நல்லது, கெட்டது என்ற பாகுபாடு இல்லாதவன், என்னிடம் பக்தியுடையவன் எனக்கு பிரியமானவன்.

சத்ரு, மித்ரன் எல்லோரிடமும் ஒரே விதமாக பழகுபவன், மானம் அவமானம் என்றும் ஒதுங்க மாட்டான், சீதோஷ்ணங்கள்  அவனை பாதிக்காது. அவனை புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் மௌனமாகவே இருப்பான், கிடைத்ததில் திருப்தியுடையவன்,  நிலையான புத்தியுடையவன், என் பக்தன், எனக்கு பிரியமானவன்.

இதுவரை நான் சொன்னதைக் கேட்டு நடப்பவர்களும் எனக்கு பிரியமானவர்களே.

(இதுவரை உப நிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்யையில் யோக சாஸ்த்ரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், பக்தி யோகோ என்ற பன்னிரண்டாவது அத்யாயம்.)

அத்யாயம் -13 க்ஷேத்ர  க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்

 

பன்னிரண்டாவது அத்யாய இறுதியில் தன் பக்தன் என்பவனுக்கு வேண்டிய நல்ல குணங்களை பட்டியலிட்டுச் சொன்ன ஸ்ரீ க்ருஷ்ணன்,  அர்ஜுனனிடம் ஒரு சந்தேகத்தை கிளப்புகிறார். இவ்வளவு நல்ல குணங்கள் இருந்தால் தான் பக்தி சாத்யமா? பகவானுடைய அருள் அவர்களுக்கு மட்டும் தான் கிடைக்குமா? அதற்கான விடை இந்த அத்யாயத்தில் விவரிக்கிறார்.

கௌந்தேயா ! இந்த சரீரம் க்ஷேத்ரம் (பதத்தின் பொருள் நிலம் – இங்கு மூலப்பொருள்  base)  இதை அறிந்த ஞானி அல்லது அறிவாளி  –       க்ஷேத்ரக்ஞன்  க்ஷேத்ரத்தை அதாவது நிலத்தை அறிந்தவன். அடிப்படை என்பதை அறிந்தவன்.

சங்கர பாஷ்யம்:  இந்த க்ஷேத்ரம் என்று சொல்வதில் ஒரு விசேஷம்.  இந்த நிலம், இந்த உடல், அல்லது இந்த மூலப் பொருள்- இது அழிக்க முடியாதபடி பாதுகாக்கப் பட்டது என்றோ, அது எளிதில் தாக்கப்பட்டு அழியும் என்றோ, இது தானாகவே காலம் வந்தால் அழுகி நாசமாகும் என்றோ புரிந்து கொள்ள முடியும்.  உதாரணமாக ,  நிலத்தில் விளைந்து நமக்கு கிடைக்கும்  பொருட்கள், பழங்கள் போன்றவை அழுகி வீணாவதை கண்டிருக்கிறோம். Matter – என்ற பருப்பொருள் இதை முயன்றால் தாக்கி அழிக்கலாம்.   தாதுக்கள் நிரம்பிய வெறும் பூமி எதையும் தாங்கும் என்றும் அறிவோம்.

உடலை, பூமி, விளைநிலம், ஆதாரமாக விளங்கும் பருப்பொருள் என்று புரிந்து கொண்டவன்  அதனிடம் தோன்றிய எதுவானாலும், முற்றிலுமாகத்  தலையிருந்து கால் வரை புரிந்து கொள்ள முடியும்.

பௌதிகமாக காணும் இந்த உடல் உண்மையில் ‘தான்’ அல்ல- இயற்கை அல்லது மற்ற எவராலோ அல்லது எதாலோ ஆனது என்பதை உணர்ந்து கொள்வான். அவன் க்ஷேத்ரக்ஞன் எனப் படுகிறான்.  இந்த பூமியில் இது விளையும் என்று அறிந்து கொள்ளும் விவசாய விக்ஞானி அறிந்து கொள்வது அவனது அனுபவத்தாலும், கற்றுத் தெரிந்து கொண்டதாகவோ,  இருக்கலாம்.  விளை நிலத்தின் தன்மையை அறிந்தவன் விவசாய விக்ஞானி, பருப் பொருட்களைப் பற்றி அறிந்தவன்  பௌதிக விக்ஞானி. என்பது போல இந்த இடத்தில் சரீரம்-க்ஷேத்ரம் என்ற விஷயத்தை பகுத்து அறிந்தவனே க்ஷேத்ரக்ஞன்.

என்னை அது போன்ற க்ஷேத்ரக்ஞன் என்று பார். சாதாரண ஜனங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் தேர்ச்சி பெற்றிருக்கலாம், நான் அறிந்தது அனைத்தையுமே.  சிருஷ்டியின் அடிப்படை எது என்பதும் அதன் மூலம் உருவாவது எது என்றும் நான் அறிவேன்.

ச.பா: நான் இந்த உலகைச் சேர்ந்தவனல்ல. அதன் காரண கர்த்தா – The Supreme Lord- முழு முதற் கடவுள். அந்தந்த பிரிவும் அதில் கரை தேர்ந்த அறிவாளி- அந்த விஷயம் சம்பந்தமாக முற்றும் உணர்ந்தவன் – என்று வைத்துக் கொண்டால்-  ப்ரும்மா முதல், புல், எறும்பு வரை தனித் தனியாக  சத் என்றோ, அசத் என்றோ,  புலன்களால்  அறிய முடிவது, முடியாதது என்றோ பகுக்கப் பட்டது அல்ல.  பூமி,விளை நிலம்,பருப்பொருள் -என்பதை ஸ்தூலமாக கண்டால் நாம் அறிவது இது பூமி, இது விளை நிலம், இது ஒரு பொருள்  என்பது மட்டுமே. அதிலிருந்து பெறக்கூடியது எது என்ன, எவை என்பது உடனடியாகத் தெரியாது. அது போலத் தான் ‘க்ஷேத்ரக்ஞன்‘ஆன நானும்.  மனிதனாக அவதார காலத்தில் பார்வைக்குத் தெரிந்தாலும், நான்  ஈஸ்வரன்.

கேள்வி: ஒரே ஒரு வ்யக்தி,ஈஸ்வரன்  எல்லா க்ஷேத்ரங்களிலும் இருப்பதாகக் கொண்டால், வேறு எதுவுமே இல்லை- அவனைத் தவிர இவையனைத்தையும் ஆள்பவன் அல்லது அனுபவிப்பவன் அவன் ஒருவனே- என்றால், ஒன்று அவன் தான் சம்சாரி- அதாவது உலகில் இருப்பவன், அல்லது வேறு யாருமே உலகில் இருந்து நல்லது, கெட்டதுகளை அனுபவிக்கிறான் என்றோ, சுக துக்கங்களால் வாடுகிறான் என்றோ ஆகாது. அல்லது அப்படி மற்ற ஒன்று அல்லது ஒரு வ்யக்தி இல்லையென்றால், சம்சாரம் என்ற ஒன்று இல்லவே இல்லை.

இதன் தொடர்ச்சியாக, உலகில் வேதமும் சாஸ்திரங்களும் திரும்பத் திரும்பச்  சொல்லும் பந்தம் என்றும் அதிலிருந்து விடுதலை என்றும் அதற்கான காரண காரியங்கள், செய்ய வேண்டிய வேண்டாத செயல்கள், – எதுவுமே பொருள் உடையதாக ஆகாது.

ப்ரத்யக்ஷமாக காண்பது, புலன் களால் அறிவதும் உணர்வதும் உண்மையில்லையென்றாகும்.  முதல் கட்டமாக சுகமும், துக்கமும், வலியும் அதன் காரணமும் -இவையனைத்தும் சேர்ந்து தானே சம்சாரம்.  தர்மம் என்றும் அதர்மம் என்றும் வாழ்க்கை நெறிகள் என்றும் நமக்கு சொல்லப் பட்டவை அனைத்தும் பொருளற்றதாக ஆகும்.

இந்த தத்வம் ஆத்மாவும் ஈஸ்வரனும் ஒன்றே, மனிதனும், கடவுளும் ஒன்றே என்பதை ஏற்றுக் கொள்வதில் இந்த முரண்பாடுகள் உள்ளனவே.

பதில்: அப்படியில்லை. ஞானம் என்பதற்கும் அக் ஞானம் என்பதற்கும் இடையில் வேறு பாடு உள்ளது. இரண்டும் கொண்டு செல்லும் பாதைகள் வெவ்வேறு. அதன் பலாபலன்கள் வெவ்வேறு . முடிவு தருவது எதிர்மறையான பலன்களே.

அறியாத வரை ப்ரத்யக்ஷமாகத்  தெரியும் சரீரமே உண்மை. மற்றவர்களிடம் அன்போ, விரோதமோ அவனுக்கு பெரிய விஷயமே. இது நன்மை, இது கெடுதல் என்ற அவன் அனுபவமே பாடம்.  பிறப்பு, இறப்பு என்பது இயற்கை நடை முறையே.

இதுவே சாதகன், ப்ரும்ம ஞானம் பெற்றபின் இதன் பொருளற்றத் தன்மையை உணருகிறான்.  உடலைத் தனிதனி பருப் பொருளாக எங்கும் உள்ள ப்ரும்மாண்டத்தின் ஒரு துகலாக அறிந்த பின், (இந்த அளவு ஞானம் பெற்ற பின்,) சுக துக்கங்கள், பொருட்டல்ல, தர்ம அதர்மங்கள் என்பதும் பொருட்டல்ல, அன்பும், வெறுப்பும் அவனை விட்டு விலகும்- அந்த நிலையை எய்தியவர்கள் மிகச் சிலரே.

சாதாரண ஜனங்கள் இருட்டில் ஒரு தூணைக் கண்டு அதை யாரோ ஒரு மனிதர் என்று நினைப்பது – அதில் மனிதனின் தவறும் இல்லை. அவன் அறிவு இதனால் குறைவு படுவதும் இல்லை.  இதே போல இன்பம் என்றும் துன்பம் என்றும் நினைப்பது அவன் மனம் அல்லது புத்தியின் செயலே. அருகில் சென்ற பின் இந்த உணர்வுகள் மாறக் கூடும்.

அழிவு என்று மனிதன் நினைப்பதும் இதே போல உண்மையல்ல. க்ஷேத்ரம்- அடிப்படை என்று புரிந்தால், அதனால், அல்லது அதிலிருந்து உண்டான அனைத்தும் திரும்ப அதே இடத்தில்  தோன்றுவது புரியும்.

இந்த விஷயமாக சங்கர பாஷ்யம் பல ஆதாரங்களுடன் வாத விவாதங்கள்  அளித்துள்ளது.

அடுத்த ஸ்லோகத்தில் க்ஷேத்ரம் என்பதை மேலும் விவரிக்கிறார்.

க்ஷேத்ரம் என்று இங்கு சொல்லுவது இந்த சரீரம் – என்று. அதன் பண்புகள் என்று எதைச் சொல்வோம், எப்படி மாற்றங்கள் வரும் இதை எல்லாம் விவரமாக சொல்கிறேன் இது ரிஷிகள் பலவிதமாக பாடலாக எழுதி பாடியிருக்கிறார்கள். வேதத்தின் சந்தஸ்– இது பற்றி பேசுகிறது. பலவிதமாக ப்ரும்ம சூத்ரத்தில் விளக்கப் படுகிறது. காரணங்கள், எடுத்துக் காட்டுகள் மூலம் நிச்சயமாக சொல்லப் படுகிறது.

மஹாபூதானி (the great elements)  –  (பத்து உணர்வுகள், மற்றும் மனம் , அஹங்காரம் – ) , இவை தவிர அவ்யக்தம் என்ற மறை பொருள், –  பத்து இந்திரியங்கள்,  புத்தியுடன் சேர்த்து பதினொன்று, – புத்திக்கு காரணமே அவ்யக்தமான – வெளியில் தெரியாத ஈஸ்வர சக்தி.

ச.பா: இந்திரியங்கள் 10 என்பது, புத்தி இந்திரியங்கள் 5 – செவியின் கேட்கும் குணம், இது போல மற்ற கண், வாய்.மூக்கு – இவைகள் மூலம் புது செய்திகளை தெரிந்து கொள்வதால் – ஞானேந்திரியங்கள் எனப்படும்.  மற்ற ஐந்து கைகள், கால்கள், வாய், (பேச்சு, ருசியறிதல்)   இவைகள் செயல் இந்திரியங்கள் – இவைகள் செயலுக்கு காரணமாக இருப்பதால்-கர்மேந்திரியங்கள்,-5 இத்துடன் மனது – எண்ணங்களுக்கும், சங்கல்பங்களுக்கும் காரணம். ஐந்து இந்திரியங்கள் மூலம் பெறப்படும் சப்தம், முதலியவைகளைச் சேர்த்து 24 தத்வங்கள் சொல்லப் பட்டுள்ளன.

மேலும் ஆத்மாவின் இயல்பான உணர்வுகளான ஆசை- த்வேஷம், சுகம்-துக்கம்,  இவைகள் வெளியில் தெரிபவை. புத்தி  என்பது  மனம் மூலம்  வெளிப்படுவது – உடலும் உள்ளமும் இணைந்த நிலை, (நெருப்பு எரிவது கண்ணுக்குத் தெரிவது போல தெரிவது – எரி பொருளும், அக்னியும் போல – இரண்டும் சேர்ந்தால் தான் ஜ்வாலை  உண்டாவது போல)  த்ருதி – தைர்யம்.

ஞானம் பெற தேவையான குணங்களைச் சொல்கிறார்.

அமானித்வம்-  தன்னைப் பற்றி அளவுக்கு அதிகமாக நம்புவது- அதன் எதிர் பதம் – தன்னடக்கம்,  அதம்பித்வம்- தற்பெருமை – தன்னைப் பற்றித் தானே பெருமையடித்துக் கொள்ளாமை- அஹிம்சா- ஜீவ ஹிம்சை செய்யாமை, க்ஷாந்தி- அமைதி, ஆர்ஜவம்- நேர்மை, ஆசார்யோபாசனம்- குருவை வணங்கி மரியாதையுடன் இருத்தல், சௌசம்- உடல், மனது சுத்தம்,  ஸ்தைர்யம்- திடமான கொள்கை பிடிப்பு,  ஆத்ம வினிக்ரஹ:  தன் மன ஓட்டத்தை கட்டுப்படுத்துதல்.

வலி என்பது ஒரு உபாதை அல்லது துக்கம்.  பிறப்பே ஒரு வலி.  பிரசவம் என்பதே ஒரு துக்கம். அதே போல் மரணமும். வயதானால் ஒரு வித துன்பம், உடல் வலி. வியாதி என்றால் கேட்கவே வேண்டாம்.  இந்த துன்பங்களை அலசி ஆராய்ந்தால், எதனால் துக்கம் என்று உணருகிறோம், ஏன் இவைகளை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டிருக்கிறோம் என்ற கேள்விகள் அத்யாத்ம விஷயங்கள் பற்றி அறிந்து கொள்ள தூண்டும். வைராக்யம், அஹங்காரம் அழிவது என்பது வரை கொண்டுச் செல்லும்.

ச.பா: பிறக்கும் பொழுது ஜீவன் அனுபவிப்பது வலியானாலும் பின்னால் அதனால் மகிழ்ச்சியே. அதே போலத்தான் மரணமும் – ஒருவகையில் விடுதலை என்பது துன்பம் அல்ல.

புத்ர, தார, க்ருஹம் முதலியவைகளில் அதிக அன்பும், தன்னுடையது என்ற ஈடுபாடும், பிடித்தமானது, பிடிக்காதது, என்றும் பாகுபாடுகள், இவை இல்லாமல் இருந்தாலே உலகில் அறிவை வளர்த்துக் கொள்ள தூண்டுதல் வரும்.  என்னிடம் மனம் லயிக்கும். இந்த devotion – பக்தியே ஒரு விதத்தில் ஞானம்.

ச.பா: வெட்ட வெளிகளில், மலைகள், நீர் நிலைகள் போன்ற இயற்கையின் மடியில் மன அமைதி உண்டாவதைக் கண்டிருக்கிறோம். இது போன்ற  இடங்களில் தனிமையில் தியானம் செய்வது பலனளிக்கும். அதே போல ஜனசம்சதி- ஜனங்களின் கூட்டத்தில் – பாமர ஜனங்களேயானாலும் அவர்கள் நடுவில் இருந்தாலும் மனம் வைராக்யம் கொள்ளும். ஞான மார்கத்தில் செல்லத் தூண்டும்.

(இந்த ஜனசம்ஸதி- என்பது தான் திருவிழாக்கள், ஊர் கூடி தேர் இழுத்தல், பஜனைகள் என்பவைகளின் அடிப்படை காரணமாக இருக்கலாம்.)

அத்யாத்ம ஞானம் ஒருவருக்கு சித்தியானால் அது நிரந்தரமாக இருக்கும்.  எந்த விஷயத்திலும் உண்மையைத் தேடி கண்டு கொண்டால் அதுவும் நித்யமாக இருக்கும். தரிசனம் என்பது கண்டுகொள்வது.  கலையானாலும், கை வேலையானாலும்,  கல்வியானாலும் அதன் இறுதி வரை கற்று தெரிந்து கொள்வது ஞானம்.  இதற்கு மாற்றானது எல்லாம் அக்ஞானமே.

எதையெல்லம் அறிய வேண்டும் என்பதை சொல்கிறேன், கேள்.  இதையறிந்தால்  அம்ருதம் உண்டது போல மகிழ்வாய்.  ஆதியந்தமில்லாத, என்னைப் பற்றிய ஞானம் ப்ரும்ம ஞானம். சத் – இருப்பது, அசத்- இல்லாதது – ஒரு பொருளைக் கண்டு கொள்வது, அல்லது அப்படி ஒரு பொருளை கேட்டோ, நுகர்ந்தோ, ருசித்தோ, தொடுகையாலோ – அறிந்து கொள்வது. மற்றொன்று மனதால், புத்தியால் உணர்ந்து கொள்வது. இது ஒரே விதமாக அனைவராலும் தெரிந்து கொள்வது சாத்யமில்லை. ஒவ்வொருவருடைய மன நிலை, அறிவு, அனுபவம் பொறுத்து மாறக் கூடும்.

ச.பா:  உபனிஷதுகளும் ப்ரும்ம சூத்ரமும் இது அல்ல இது அல்ல, (நேதி, நேதி) என்று அனைத்தையும் தவிர்த்து ‘எதை அடைய முடியாமல்,  வார்த்தைகள், மனதுடன் திரும்பி வருகின்றனவோ’   என்று முடித்து விட்டன. இது பற்றி வாத விவாதங்கள் நிறைய உள்ளன.  பாஷ்யக்காரர் உபனிஷத், ப்ரும்ம சூத்ரம்  இவைகளிலிருந்து மேற்கோள்களுடன் நிறைய எழுதியுள்ளார்.  முடிந்தவர்கள் படித்து புரிந்து கொள்ளலாம்.

சர்வத: பாணிபாதம்  தத்  சர்வதோ (அ) க்ஷி சிரோ முகம் |

ஸர்வத: ஸ்ருதிமன் லோகே சர்வமாவ்ருத்ய திஷ்டதி ||

सर्वत: पाणिपादम् तत् सर्वतो ऽ क्षि शिरो मुखं | सर्वत: श्रुतिमन् लोके सर्वमावृत्य तिष्टति ||

படித்தவுடன் ஏதோ riddle -விடுகதை போல தோன்றும் இந்த ஸ்லோகம். வாக்யார்தம்:

அது எங்கும் கால், கை, உடன் கூடியது.  எங்கும் கண், தலை வாய் உடையது. எங்கும் செவியும், அனைத்தையும் சுற்றி படர்ந்தும் உள்ளது.

ச.பா:  ப்ரும்மம்  என்பதை தெரிந்துகொள்ள  என்ன வழி ? உருவமா, அருவமா என்பது கூட நமக்குத் தெரியாது.  அதனால் அப்படி ஒன்று இல்லவே இல்லை என்று முடித்து விடக் கூடாது. எனவே ஸ்ரீ பகவான் தன் பதிலில், ப்ரும்மம் சத்யமே என்பதை நமக்கு விளக்க சில விஷயங்களைச் சொல்கிறார். அவை:1. அந்தராத்மா – (ப்ரத்யக்ஷம்) 2. ஏதோ ஒன்று நமது  புலன்களை செயல் பட வைக்கிறதே- உடலின் உள்ளேயே இருந்து கொண்டு அந்த அடிப்படைத் தத்வம் 3. நமது புத்தியை தேவையான விதத்தில் தட்டி எழுப்புகிறதே ஒரு சக்தி, இது துக்கம், இது சுகம், இது உஷ்ணம், இது சீதளம் என்ற இரட்டைகளால் ஆன உணர்வுகள், இவைகள் தெரியக் காரணம் புத்தி என்று அறிவோம், அந்த புத்தியையும் இயக்குவது 4. உலகம் முழுவதும் பரவியிருக்கும் ஈஸ்வரன், இறைவன் என்று நாம் அறிவது.

முதன் முதலாக நமக்கு சொல்வது அந்தராத்மாவைப் பற்றி.  ஏதோ ஒரு கொள்கை இருக்க வேண்டும் பின்னின்று இயக்கும்  ஒரு சக்தி – அதற்கு ஒரு பெயர் சூட்டியிருக்கிறார் ப்ரத்யக்ஷ சேதனா – புத்தி, உணரும் அறிவு.  பௌதிகமான உடல் இயங்க  கால்கள் நடக்கவும், கைகள் செயலைச் செய்யவும், ஒரு வண்டி நகர வேண்டுமானால், அதன் சக்கரம் சுழல வேண்டும், ஒரு ஓட்டுபவர் வேண்டும் என்பது போல நமது உடலே தான், நமது உடல் பாகங்களேயானாலும்  அது வெறும் சக்கரம் மட்டுமே, சுழல வைக்க ஒரு ஓட்டுனர் வேண்டும் – அது தான் அந்தராத்மா –

இந்த ப்ரும்மம் எங்கும் தன் கைகளையும் கால்களையும் நீட்டி வைத்துள்ளது – இதன் பொருள் கை கால் உள்ள ஜீவன் கள் அனைத்தும் நடக்கவும் மற்ற வேலை செய்யவும் பின்னின்று இயக்குகிறது. அதே போல உலகெங்கும் கண்கள், ஜீவராசிகள் பார்க்க, தலை, வாய்- உண்ண, காதுகள்- கேட்க , என்று உலகையே வியாபித்து உள்ளது.  முன் சொன்ன க்ஷேத்ரம் – உடல் ,  இப்படி கை கால்களாக, கண்களால்.செவிகளால், நாசியால், வாயினால், உணர்ந்தும், கண்டும் கேட்டும் , ருசித்தும், நுகர்ந்தும், அனுபவிப்பது தன்னிச்சையால்  அல்ல, அதை இயக்கும் ப்ரும்மத்தால் –க்ஷேத்ரக்ஞன் –  அது உருவும் அல்ல அருவும் அல்ல

உண்மையிலேயே ப்ரும்மம் எண்ணற்ற கை கால்கள் உடையதோ என்று எண்ணி விடக் கூடாது என்பது போல அடுத்த  ஸ்லோகம்.

புலன்களின் குணங்கள் உடையது. ஆனால் தனக்கென்று புலன்கள் கிடையாது. எந்த உறவும் அதன் சம்பந்தமான பாசம் பந்தம் கிடையாது.  ஆனால், அனைத்தையும் காத்து பாதுகாக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டது.  குணம் என்று தனியாக எதையும் (ஸத்வ, ரஜஸ், தமஸ் என்ற குண பேதங்கள்)  ஆனால் இந்த குணங்களின் வெளிப்பாட்டை தானும் உணர முடிவது.

ச.பா:   எல்லா உயிரினங்களும் இயங்குவது,  கை, கால்களில் இருந்து ப்ரும்மமே இயக்குவதாகச் சொன்னதை விவரிக்கிறார்.  தானே அந்தந்த உடல் உறுப்புகளிலோ, அந்த;கரணத்திலோ உள் நுழைந்து செய்வதாக பொருள் கொள்ளக் கூடாது.

ஜீவராசிகளின் உள்ளும் புறமும், அசையும், அசையாதவையும்,  தொலைவில் இருப்பதும், மிக அருகிலேயே தென்படுவதும்,  மிகவும் சூக்ஷ்மமானது என்பதால் அறிய முடியாதது.   ப்ரும்மம் எங்கும் பரவியிருப்பது. அந்த:கரணம் மட்டுமல்ல,  வெளி உறுப்புகள்,  தோல் உள்பட என்றாலும், மிக மிக சூக்ஷ்மமானது.

பலவகை உருவங்களுடன் உள்ள ஜீவராசிகளில் இருப்பதாகச் சொன்னால் அதன் உருவம் என்று ஒன்று உண்டா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.  ஒன்றாக இருந்தாலும்  பல வகையான ஜீவன்களில் பலவாகத் தோற்றமளிப்பது.    ஜீவ ராசிகளைக் காப்பவன் என்று தெரிந்து கொள்.  அவைகளை மறைப்பதும் , மறுபடியும் சிருஷ்டி செய்வதும்,  ப்ரும்மமே.

ச,பா: உருவம் இல்லை. ஆகாயம் போல பரவி இருப்பது. எந்த புலனாலும் அறிய முடியாது ஆனால் வியாபித்து உள்ளது.

ஜோதிகளில் சிறந்து விளங்குவது. தமஸ் என்பதை கடந்தது.  ஞானம் அறிவு என்பதும், அந்த ஞானத்தை பயன்படுத்தி அறிய வேண்டியதும், சாதனையின்  முடிவான ஞானமும் அதாவது ‘அது’ ‘தத்’ என்பதும் அனைவரிடமும்  ஹ்ருதயத்தில் வேறூன்றி உள்ளது.

தத் என்ற ப்ரும்மம் ஹ்ருதயத்தில் விளக்கு போன்று இருப்பதே. அதை அந்தராத்மா  ஞானம் என்ற திரி, எண்ணெயிட்டு ஏற்ற வேண்டும் – ஒளியை பெற.

அடுத்த  ஸ்லோகத்தில் முடிவாக  இது தான் க்ஷேத்ரம், ஞானம், அறிய வேண்டியது முதலிய விஷயங்கள். என் பக்தன், இவைகளைத் தெரிந்துகொண்டு என்னிடமே ஐக்யமாகிறான்.

ச.பா: இத்துடன் க்ஷேத்ரம் என்பது, பொதுவான  தனிமங்கள் (great elements) என்பதிலிருந்து, திடமான ஞானம் – சத்யம் தான் ஞானம் –  இதற்கு மேல் எதுவும் இல்லை என்று, வார்த்தைகள், மனதுடன் திரும்பி வருகின்றன – என்று வேதம் சொல்லும் உரையுடன் சுருக்கமாகச் சொல்ல பட்டது.

இந்த ஞானம் பெற என்ன தகுதி இருக்க வேண்டும் என்ற கேள்விக்கு பதிலாக, என் பக்தன் என்கிறார்.  பர ப்ரும்ம மான நான், வாசுதேவனாக இவ்வுலகம் உய்யவே அவதரித்து வந்துள்ளேன் என்று அறிந்து என்னிடம் பக்தி செய்பவன் யாரானாலும் சத்யத்தை அடைய முடியும். நானே பரப்ரும்மம், எங்கும் வியாபித்து உள்ளவன், முதல் குரு, உயிரினங்களில் ஆத்மாவாக இருக்கும் பரமாத்மா, வாசுதேவன்-  இந்த பதத்தின் பொருளே, எவனிடம் அனைத்தும் உள்ளதோ (வசு – செல்வம்.  பலவகைப் பட்ட செல்வங்கள், தனம், தானியம் , கலை, கல்வி, மக்கட் செல்வம், வாகனம் -மாடு, கன்றுகள், குதிரை  முதலியவை -செல்வமாக கருதப் பட்டவை. வெற்றி,  காரிய சித்தி, மோக்ஷம் அனைத்தும் செல்வங்களே- எட்டு லக்ஷ்மிகளாக உருவகப் படுத்தப் பட்டவை.  வாழ்வில் அடைய வேண்டும் என்று மனித குலம் விரும்புவது அனைத்தும் இந்த எட்டில் அடங்கும்)

पुत्रपौत्र धनं धान्यं हस्त्यश्वादिगवे रथम् 
प्रजानां भवसि माता आयुष्मन्तं करोतु 

सिद्धलक्ष्मीर्मोक्षलक्ष्मीर्जयलक्ष्मीस्सरस्वती 
श्रीलक्ष्मी र्वरलक्ष्मीश्च प्रसन्ना मम सर्वदा ॥२९॥ ஸ்ரீ சூக்தம்

என்றபடி என்னை நம்பிய என் பக்தன் இறுதியில் மோக்ஷம் அடைவான்.

இரண்டு ப்ரக்ருதிகள் சொல்லப் பட்டன – க்ஷேத்ரம் என்றும், க்ஷேத்ரக்ஞன் என்றும் – இவையிரண்டும் தான் சிருஷ்டிக்கு ஆதாரமா என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.

ப்ரக்ருதி – இயற்கை, புருஷன்- ஈஸ்வரன் இரண்டுமே அனாதி- எப்பொழுது தோன்றியது என்று வரையறுத்துச் சொல்ல முடியாதவை.  இதில் மாற்றங்களும், குணங்களும் ப்ரக்ருதி சார்ந்தவையே.  இதுவும் ஈஸ்வர ஸ்ருஷ்டியில் அடங்கும்.

செயல்களும், அதைச் செய்யும் கரணங்களும்- கை கால் முதலியவை, யார் செய்வது என்பதும்,  ப்ரக்ருதி- இயற்கை என்பதில் வரும்.  புருஷன் என்பது சுக துக்கங்களை அனுபவிப்பவன்.  சம்சாரம் எனும் உலக வாழ்க்கைக்கு காரணம்,  இந்த நாலும் புருஷன், க்ஷேத்ரக்ஞன், போக்த்ரு-அனுபவிப்பவன், ஜீவன்- உயிருடைய பிராணி சேர்ந்து தான்

புருஷன் என்று இங்கு சொல்லப்பட்டது பரமாத்மா என்ற பொருளில் அல்ல. புருஷன் உலக வாழ்க்கையின் சுக துக்கங்களையும், குணங்களையும்  ஏற்று அனுபவிக்கிறான்.

தள்ளியிருந்து பார்க்கும் உபத்ருஷ்டா – கண்காணிக்கும் என்று சொல்லலாம். சமயங்களில் அனுமந்தா – அனுமதியளிப்பவன்,  காக்கும் பொறுப்பை ஏற்றவன், அனுபவிப்பனும் தானே என்ற மஹேஸ்வரன்.  பரமாத்மா என்றும் இந்த உடலில் இருக்கும் பரம புருஷன்.

ச.பா: யாகங்களில் யாகம் செய்யும் கர்த்தா ஒருவர் யாக காரியங்களில் ஈடுபட்டிருக்கும் பொழுது, யாக விஷயங்களில் விவரம் அறிந்தவர், அனுபவசாலியான ஒருவர் அருகில்  அமர்ந்திருப்பார்.  அவர் யாகத்தில் நேரடியாக பங்கேற்பதில்லை. தேவையான அறிவுரை மட்டுமே வழங்குவார்.  அதே போல தானே உடலின் செயல்களில் பங்கேற்காமலும், அதே சமயம் அருகில் இருந்து கவனித்துக் கொள்டிருப்பதுமான செயலைதான் ஆத்மா செய்கிறது.   வேறு விதமாக சொல்வதானால், முதலில் உடல், அடுத்து கண் முதலான புலன்கள், அடுத்து மனம், புத்தி, அதையும் அடுத்து சூக்ஷ்மமாக இருப்பது ஆத்மா.  ஸ்தூலத்திலிருந்து கிரமமாக சூக்ஷ்மம் நோக்கி செல்கிறது இந்த வரிசை.

உள் நோக்கி பார்த்தோமானால், ஆத்மா தான் கடைசி- அதற்குப் பின் வேறு எதுவும் இல்லை என்பதால் அது தான் மிக அணுக்கமானது என்றும் ஆகிறது. யாகத்தில் உயர் அதிகாரியாக, உதவும் அனுபவஸ்தர் போல இங்கு உடல் இயக்கத்தின் உபத்ரஷ்டா- கண் காணிப்பவர் வேலையை ஆத்மா செய்கிறது. அந்தராத்மாவாக இருந்து அனுமதி அளிக்கிறது. மனமும் புத்தியும் ஏற்றுக் கொண்டாலும் சில சமயம் அந்தராத்மா ஏற்பதில்லை என்பது நாம் அறிந்ததே. அதே சமயம் எச்சரிப்பதுடன் நின்று விடுகிறது.  காக்கும் செயலை செய்யும் பொழுதும் ஆத்மா மனதின்  ஆசை போன்றவற்றை, புத்தி மூலம் ஆராயச் செய்கிறது. ஆத்மா நித்ய சைதன்ய ஸ்வரூபமான பரமாத்மாவின் அம்சமேயானதால், ஆனந்தம் என்பதையும் அனுபவிக்கிறது.

இப்படி ப்ரக்ருதி, புருஷன், சத்வ ரஜஸ் தமஸ் என்ற குணங்கள், இவைகளை உள்ளபடி தெரிந்து கொண்டவன் எங்கு இருந்தாலும், மறுபடி பிறப்பதில்லை.

ச.பா: நெருப்பில் சுடப்பட்ட விதைகள் முளைக்காதது போல ஞானாக்னியில் புடம் போடப்பட்ட சரீரம் திரும்பவும் அமைவதில்லை.

இது சம்பந்தமாக நிறைய வாத விவாதங்கள். நிறைய மேற்கோள்களுடன்  மிக விரிவான பாஷ்யம்.

ஆத்ம ஞானம் பெற பலவிதமான  வழிகள் பற்றிச் சொல்கிறார்.  சிலர் தியானம் செய்து ஆத்ம ஞானம் பெறுகின்றனர்.  மற்றும் சிலர் தானே முயற்சிகள் செய்து தன்னை அறிகின்றனர். மற்றும் சிலர்  சாங்க்யம் என்ற மார்கம்- சாஸ்திரங்களைப் படித்து – இதுவும் ஒரு யோகம்- மற்றும் சிலர் கர்ம யோகத்தினால் ஞானம் அடைகின்றனர்.

மற்றவர்களிடம் கேட்டு சிலர் அறிந்து கொள்கின்றனர். இவர்கள் ஈடுபாட்டுடன் கேட்டு, அதை மனதில் உருவேற்றிக் கொள்கிறார்கள்.  இவர்களும் பிறவிக் கடலைக் கடக்கிறார்கள்.

பரத வீரனே! எந்த உயிரினம் எங்கு தோன்றினாலும் அது க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ, என்ற இரண்டும்  இணைவதால் தான் என்பதை புரிந்து கொள்.

பரமேஸ்வரன் என்ற பரமாத்மா எல்லா உயிரினங்களிலும் சமமாகவே இருக்கிறான். உயிரினங்கள் அழியும்,.  ஆனால் இந்த பரமாத்மா அழியாது.  இதை உணர்ந்தவன் தான்  உள்ளபடி அறிந்தவன். அனைத்து ஜீவராசிகளிடமும் உள்ள ஆத்மா பரமாத்வானின் அம்சமே என்றும் ஈஸ்வரனே பரமாத்மா என்பதையும் அறிந்தவன் தனக்கே கெடுதல் செய்து கொள்ளமாட்டான்.  பரகதியை அடைகிறான்.

ச.பா: இப்படி சர்வ லோகமும் பகவானின் அம்சமே என்று உணர்ந்தவன் மற்ற ஒருவரை தாக்கி ஹிம்சை செய்தால் அதனிடம் உள்ள ஆத்மாவும் தானும் ஒன்றே என்பதால் தன்னையே தாக்கி தீங்கு செய்து கொண்டதாகத் தானே ஆகும். அதனால் அதை செய்ய மாட்டான். அஹிம்சையை அதனாலேயே பிரதானமாக சொல்கிறார்கள்.

செயல்களைச் செய்வது உடல் அதனுடைய இயல்பான வழியில். ஆத்மா அதை தடுப்பதும் இல்லை, தான் செய்வதும் இல்லை.  முன் சொன்னபடி பார்வையாளனாக அருகில் இருக்கும்.  இவ்வாறு பூத- ஜீவன்கள், ப்ரும்மா இவற்றின் தனித் தன்மைகள் இவற்றை விஸ்தாரமாக அறிந்து கொள்பவன் தானும் ப்ரும்மமாக ஆகிறான்.

கடைசியாக, மறுமுறை திரும்பிப் பார்ப்பது போல, சொல்கிறார். கௌந்தேயா! ஆதி அந்தமில்லாதது, முக்குணங்கள் இதை ஆட்டுவிப்பதில்லை, அழிவற்றது என்பதால் உடலில் இருந்தாலும் பரமாத்மா எதுவும் செய்வதுமில்லை, தான் மாசு படுவதும் இல்லை. எதையும் ஏற்றுக் கொள்வதுமில்லை.

எப்படி ஆகாயம் எங்கும் பரவியிருந்தாலும் அதன் மேல் எந்த அழுக்கும் படுவதில்லையோ,  அதே போலத் தான் ஆத்மா உயிரினங்கள் அனைத்திலும் அந்தர்யாமியாக  வியாபித்து இருந்தாலும் தான் எந்த விதத்திலும் மாசு படுவதில்லை.

ஒரு சூரியன் உலகனைத்தையும் பிரகாசமாகச் செய்வது போல க்ஷேத்ரம், க்ஷேத்ரி என்ற இந்த இரண்டும் சேர்ந்து உலகை ப்ரகாசிக்கச் செய்கிறது.

ச.பா:  பரமாத்மா ஒன்றே. அதன் அம்சமாக உலகின் செயல்கள், அதன் பௌதிக ரூபமான உடல் என்பதன் மூலம் இயங்குகிறது.  அவ்யக்தமான மூல பொருட்களிலிருந்து, அசையும் அசையா பொருட்கள் வரை, ஐம்பூதங்கள் எனப்படும் அக்னி, வாயு, பூமி, நீர், நிலம், ஆகாயம் என்ற ஐந்து தத்வங்கள் முதல், உள் ஊடுருவியிருக்கும் பரமாத்மா ஒன்றே.

ஞானக் கண் கொண்டு பார். அதாவது மனதால் அலசி ஆராய்ந்து உணர்ந்து கொள். தோன்றுவதும், இருப்பதும் அழிவதுமான இந்த உலகின் இயல்பை அறிந்து பரகதியை அடைவாய்.

இத்துடன் இந்த அத்யாயத்தை முடிக்கிறார்.

(இத்துடன் உபனிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம் என்ற  பதின் மூன்றாவது அத்தியாயம்)

 

அத்யாயம் -14 குணத்ரய விபாக யோகம்

பகவான் என்ன நினைத்தோ, திரும்ப உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்,  உத்தமமான ஞானம். இதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் இதோ என்பதற்குள் சித்தியை அடைந்து விட்டார்கள் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதோடு நிற்காமல், அவர்கள்   மறுபிறவி என்று திரும்ப பிறப்பதுமில்லை, ப்ரளய காலத்தில் அவதிப் படுவதுமில்லை. என் சாதர்ம்யம்- எனக்கு சமமான நிலையை அடைந்து விட்டார்கள்.

கௌந்தேயா, உலகில்  தாயின் கருவில் பிறக்கும் உயிரினங்கள்,  என்ன என்ன உண்டோ அவையனைத்துக்கும் ப்ரும்மா தான்  மஹத்யோனி என்ற கருப்பை.  நான் பீஜம்- விதையை வழங்கும் தந்தை.

சத்வ ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள், இவைகள்  ஈஸ்வரனின் மாயையில் பிறந்தவை. இவை ஆத்மாவை சூழ்ந்து கொண்டு புத்தியை தன் இஷ்டப்படி செயல் பட வைக்கின்றன.

இவற்றில் சத்வம் மாசில்லாதது. எனவே ப்ரகாசிக்கச் செய்கிறது.  சுகமான விஷயங்களில் புத்தியை சேர்த்து வைக்கிறது. ஞானம் பெற வகை செய்கிறது.

ரஜஸ் ஆசையில் பிறக்கிறது.   பாசம், பந்தம் என்ற கட்டுப்பாடுகள் ஆசையுடன் உடன் வருகின்றன. எனவே, மனிதனின் (ஜீவராசிகளின்) புத்தியை கர்ம மார்கத்தில் செலுத்துகின்றன.

தமஸ் என்பது அக்ஞானம். உயிரினங்கள் அனைத்தையும் மோகிக்கச் செய்கிறது. மயக்குகிறது.  தவறான அணுகுமுறை, சோம்பல், நித்ரை   இவற்றில் புத்தியை மூழ்கச் செய்து அமுக்குகிறது.

சத்வம் சுகத்தில் கொண்டு சேர்க்கும். ரஜஸ் செயல் பரமாக ஆக்கும். அறிவை மறைத்து தாமஸம் மோஹத்தில் ஆழ்த்தும்.

இதில் அதிக சக்தி வார்ய்ந்த குணம் மற்றதை வீழ்த்தி தான் முன் நிற்கும். சத்வ குணம் அதிகமானால், மற்ற இரண்டும் தலை தூக்க விடாமல் புத்தியை காக்கும். அதேபோல ரஜஸ் அதிகமானால், தாமஸத்தை அடக்குவதோடு, சத்வ குணமும் வெளிப் படாமல் அடங்கி விடும். தாமஸமும் அவ்வாறே.

எந்த குணம் அதிக சக்தியுடன் உள்ளது என்பது எப்படித் தெரியும்?

புலன்களின் செயல்பாட்டில் தெரிந்து கொள்ளலாம்.

சங்கர பாஷ்யம்:  செவி முதலான புலன்கள், ஆத்மாவின்  தன்மையை அறிவிக்கும் வாசல் எனலாம். செவியின் திறன் சிறப்பாக இருந்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்.  புத்தி வளரும்.  ஞானம் அடைய இது ஒரு சிறந்த வழி. அதே போல நவத்வாரே புரே – என்பது மற்ற ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களின் சக்தியும் ஆற்றலும் விளக்கு போட்டது போல சத்வ குணம் என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்யும்.

அதே போல ரஜஸ் என்ற குணம் அடிப்படையில் லோபம்,  செயல்களில் பொறுமையின்மை, ஆசை, நிலை கொள்ளாமல் அனைத்திலும் முயன்று தோற்றல் – இவை ரஜஸ் அதிகமாக இருப்பதை தெரிவிக்கும்.

ச.பா: ஆசை தான்  முதல் காரணம் மற்ற பேராசை, பொறாமை இவைகளைத் தூண்ட.

கர்மணாமசம: ஸ்ப்ருஹா – இரண்டு நிலை. ஒன்று எடுத்த காரியத்தில் ஒரே முனைப்பாக செயல் பட்டு முடிக்காமல் பாதியில் விடுதல், ஸ்ப்ருஹா – நப்பாசை.  எல்லாவற்றிலும் ஆசை. தேவையா இல்லையா என்ற எண்ணம் கூட இல்லாமல்.  இதிலும் ஒரு நன்மை – செயல் இருக்கும்.

ப்ரகாசமே இல்லாத, செயலும் இல்லாத சோம்பேறித் தனம், தவறான அணுகுமுறை. மோகம் – இவை தாமஸம்.   இதை இருள் எனச் சொல்கிறார்.

இந்த குணங்களில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், ப்ரளயம் என்று வரும் பொழுது அழியத்தான் அழியும். பிறந்தவை மரணிப்பது இயற்கை. ஆனால், சத்வ குணம் மேலோங்கி இருந்தால், உத்தமமான உலகங்களை அடைவான்.  ராஜஸ குணம் மேலோங்கி இருந்தாலும் உழைக்கும் வர்கத்தில் பிறப்பான்.  தாமஸ குணம் மேலோங்கி இருந்தால் மூடர்களாக பிறப்பார்கள்.

இந்த குணம் யாருக்கு எப்படி வாய்க்கிறது.

நல்ல காரியங்களை செய்து வந்தால் சத்வ குணம் தானாகவே படியும்.  செயல்கள் மட்டுமே, தனக்கான, சுய லாபத்துக்கான  உடல் உழைப்பே என்று இருப்பவர்களுக்கு ராஜஸ குணம் படியும்.  எதையும் தெரிந்து கொள்ளவும் முயலாமல், அறியாமையிலேயே ஆழ்ந்து கிடந்தால், தாமஸமான குணமே வாய்க்கும்.

நல்ல செயல்களை செய்து அனுபவஸ்தர்களாக உள்ளவர்களும் சாத்விகமான தெளிந்த அறிவைப் பெறுவார்கள்.  ராஜஸமான குணம் உள்ளவர்கள் செயல்கள் துக்கத்தை தான் கொடுக்கும்.  அக்ஞானம் தாமஸ குணத்தின் பலன்.

முன் சொன்னபடி சத்வ குணம் ஞானம் பெற உதவும்.  ரஜஸ் லோபத்தை பெருக்கும்.  ப்ரமாதம் என்ற மனதின் சம நிலை குறைவும், மோஹமும் தமஸ் எனும்  அக்ஞானமே.

சத்வ குணம் உயர்வைத் தருகிறது. ராஜஸ குணம் மத்யமமாக, தாமஸ குணம் அதோ கதியாக்கி கீழே  தள்ளி விடுகிறது.

காண்பவன், இந்த முக்குணங்களின் தன்மையை அறிந்து இதனால் பாதிக்கப் படாத பரமாத்மா என்று என்னை உணருவானேயானால்  அவன் எனக்கு சமமான தன்மையை அடைகிறான்.

உடல் வரை தான் இந்த குணங்கள் பாதிப்பது. ஆத்மாவை பாதிக்காது. சாதகன், இந்த குணங்களை கடந்து தன் சாதனையைத் தொடர்ந்து செய்வான்.  அவன் முக்தி எனும் அம்ருத தன்மையை அடைகிறான்.

அர்ஜுனன் கேள்வி: எந்த அடையாளத்தைக் கொண்டு ஒருவன் முக்குணங்களை வென்று விட்டான் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார்:  அது போன்ற ஒருவரை பார்த்தாலே தெரியும்.  ப்ரகாசமாக ஏதோ ஒன்று அவரிடம் இருக்கும். பார்த்தவரை தன் பால் இழுக்கக் கூடிய ஒரு ஒளி.

அடுத்து அவரது நடத்தை.  கடந்து போனதை எண்ணி பச்சாதாபமோ, மற்றவரிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்று வருத்தமோ இருக்காது.  எதனிடமும்  த்வேஷம் – வெறுப்பு  அதிகமாக எதிலும் பற்று இன்மை இவைகளைக் கொண்டு இவன் சத்வ குணமுடையவன் என்று அறியலாம்.

நடு  நிலைமை வகிப்பான். தன் விருப்பு வெறுப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,  விலையுயர்ந்த தங்கமோ, ஓட்டான்சில்லியோ அவனுக்கு சமமே.  (ஓடுகள் வீட்டுக் கூரைகளில் அடுக்கி இருக்கும். அதில் ஒன்று உடைந்தால் பயனில்லை. மண்ணை சுட்டு செய்யப்படுவதால் அதை திரும்பி பயன் படுத்த இயலாது. அதனால் மிகவும் மதிப்பில்லாத ஒரு பொருள்.  அதுவே தங்கம் சிறு துண்டானாலும் பயன் படும். முற்றிலும் எதிர் மறையான உவமானம்)    தன்னைச் சார்ந்த மக்களிடமும் இதே போல பேத பாவம் இன்றி இருப்பான்.  தீரன். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன் நிலையிலிருந்து தவற மாட்டான்.

ச.பா: இப்படி இருப்பவன் சன்யாசி என்ற பெயருக்கு ஏற்றவனாகிறான்.  தன்னுள் இருந்து தன்னை ஆட்டி வைக்கும் இந்த குணங்கள் ஒரு பொருட்டல்ல. இவைகளை வென்ற பரமாத்மாவே தன்னுடைய இலக்கு என்று தெளிந்து இருப்பான்.

அவனுக்கு மரியாதையும், அவமரியாதையும் ஒன்றே. இவன் மித்ரன், இவன் விரோதி என்று இன்றி அனைவரிடமும் அன்பாகவே பழகுவான். தியாகி. முக்குணங்களையும் கடந்தவன் என்று பெயர் பெறுவான்.

என்னை ஆஸ்ரயித்தவன், என்னை பணிந்து என்னிடம் பக்தியுடன் சேவை செய்பவன், சுலபமாக இந்த நிலையைத் தாண்டி ப்ரும்மமாகவே ஆகிறான்.

அழிவற்றவது, முடிவற்றது என்று சொல்லப்படும்   ப்ரும்மத்தில் நானே இருக்கிறேன்.(அம்ருதம்- முடிவு இல்லாதது ) ப்ரும்மானந்தமான  நிலையில் இருப்பவன் நானே.  அதுவே சாஸ்வதம், தர்மம், சுகம், மற்றும் ஒன்றேயான முழு முதற் பொருள்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையில், ப்ரும்ம சூத்ரத்தின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன ம்பாஷனையில், குணத்ரய விபாக யோகம் என்ற பதினான்காம் அத்தியாயம்).

 

 

அத்யாயம் -14 குணத்ரய விபாக யோகம்

பகவான் என்ன நினைத்தோ, திரும்ப உனக்கு ஒரு விஷயம் சொல்கிறேன்,  உத்தமமான ஞானம். இதைத் தெரிந்து கொண்டு முனிவர்கள் இதோ என்பதற்குள் சித்தியை அடைந்து விட்டார்கள் என்று சொல்ல ஆரம்பிக்கிறார்.

அதோடு நிற்காமல், அவர்கள்   மறுபிறவி என்று திரும்ப பிறப்பதுமில்லை, ப்ரளய காலத்தில் அவதிப் படுவதுமில்லை. என் சாதர்ம்யம்- எனக்கு சமமான நிலையை அடைந்து விட்டார்கள்.

கௌந்தேயா, உலகில்  தாயின் கருவில் பிறக்கும் உயிரினங்கள்,  என்ன என்ன உண்டோ அவையனைத்துக்கும் ப்ரும்மா தான்  மஹத்யோனி என்ற கருப்பை.  நான் பீஜம்- விதையை வழங்கும் தந்தை.

சத்வ ரஜஸ், தமஸ் என்ற மூன்று குணங்கள், இவைகள்  ஈஸ்வரனின் மாயையில் பிறந்தவை. இவை ஆத்மாவை சூழ்ந்து கொண்டு புத்தியை தன் இஷ்டப்படி செயல் பட வைக்கின்றன.

இவற்றில் சத்வம் மாசில்லாதது. எனவே ப்ரகாசிக்கச் செய்கிறது.  சுகமான விஷயங்களில் புத்தியை சேர்த்து வைக்கிறது. ஞானம் பெற வகை செய்கிறது.

ரஜஸ் ஆசையில் பிறக்கிறது.   பாசம், பந்தம் என்ற கட்டுப்பாடுகள் ஆசையுடன் உடன் வருகின்றன. எனவே, மனிதனின் (ஜீவராசிகளின்) புத்தியை கர்ம மார்கத்தில் செலுத்துகின்றன.

தமஸ் என்பது அக்ஞானம். உயிரினங்கள் அனைத்தையும் மோகிக்கச் செய்கிறது. மயக்குகிறது.  தவறான அணுகுமுறை, சோம்பல், நித்ரை   இவற்றில் புத்தியை மூழ்கச் செய்து அமுக்குகிறது.

சத்வம் சுகத்தில் கொண்டு சேர்க்கும். ரஜஸ் செயல் பரமாக ஆக்கும். அறிவை மறைத்து தாமஸம் மோஹத்தில் ஆழ்த்தும்.

இதில் அதிக சக்தி வார்ய்ந்த குணம் மற்றதை வீழ்த்தி தான் முன் நிற்கும். சத்வ குணம் அதிகமானால், மற்ற இரண்டும் தலை தூக்க விடாமல் புத்தியை காக்கும். அதேபோல ரஜஸ் அதிகமானால், தாமஸத்தை அடக்குவதோடு, சத்வ குணமும் வெளிப் படாமல் அடங்கி விடும். தாமஸமும் அவ்வாறே.

எந்த குணம் அதிக சக்தியுடன் உள்ளது என்பது எப்படித் தெரியும்?

புலன்களின் செயல்பாட்டில் தெரிந்து கொள்ளலாம்.

சங்கர பாஷ்யம்:  செவி முதலான புலன்கள், ஆத்மாவின்  தன்மையை அறிவிக்கும் வாசல் எனலாம். செவியின் திறன் சிறப்பாக இருந்தால் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவான்.  புத்தி வளரும்.  ஞானம் அடைய இது ஒரு சிறந்த வழி. அதே போல நவத்வாரே புரே – என்பது மற்ற ஞானேந்திரியங்கள், கர்மேந்திரியங்களின் சக்தியும் ஆற்றலும் விளக்கு போட்டது போல சத்வ குணம் என்பதை நாம் அறிந்து கொள்ளச் செய்யும்.

அதே போல ரஜஸ் என்ற குணம் அடிப்படையில் லோபம்,  செயல்களில் பொறுமையின்மை, ஆசை, நிலை கொள்ளாமல் அனைத்திலும் முயன்று தோற்றல் – இவை ரஜஸ் அதிகமாக இருப்பதை தெரிவிக்கும்.

ச.பா: ஆசை தான்  முதல் காரணம் மற்ற பேராசை, பொறாமை இவைகளைத் தூண்ட.

கர்மணாமசம: ஸ்ப்ருஹா – இரண்டு நிலை. ஒன்று எடுத்த காரியத்தில் ஒரே முனைப்பாக செயல் பட்டு முடிக்காமல் பாதியில் விடுதல், ஸ்ப்ருஹா – நப்பாசை.  எல்லாவற்றிலும் ஆசை. தேவையா இல்லையா என்ற எண்ணம் கூட இல்லாமல்.  இதிலும் ஒரு நன்மை – செயல் இருக்கும்.

ப்ரகாசமே இல்லாத, செயலும் இல்லாத சோம்பேறித் தனம், தவறான அணுகுமுறை. மோகம் – இவை தாமஸம்.   இதை இருள் எனச் சொல்கிறார்.

இந்த குணங்களில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், ப்ரளயம் என்று வரும் பொழுது அழியத்தான் அழியும். பிறந்தவை மரணிப்பது இயற்கை. ஆனால், சத்வ குணம் மேலோங்கி இருந்தால், உத்தமமான உலகங்களை அடைவான்.  ராஜஸ குணம் மேலோங்கி இருந்தாலும் உழைக்கும் வர்கத்தில் பிறப்பான்.  தாமஸ குணம் மேலோங்கி இருந்தால் மூடர்களாக பிறப்பார்கள்.

இந்த குணம் யாருக்கு எப்படி வாய்க்கிறது.

நல்ல காரியங்களை செய்து வந்தால் சத்வ குணம் தானாகவே படியும்.  செயல்கள் மட்டுமே, தனக்கான, சுய லாபத்துக்கான  உடல் உழைப்பே என்று இருப்பவர்களுக்கு ராஜஸ குணம் படியும்.  எதையும் தெரிந்து கொள்ளவும் முயலாமல், அறியாமையிலேயே ஆழ்ந்து கிடந்தால், தாமஸமான குணமே வாய்க்கும்.

நல்ல செயல்களை செய்து அனுபவஸ்தர்களாக உள்ளவர்களும் சாத்விகமான தெளிந்த அறிவைப் பெறுவார்கள்.  ராஜஸமான குணம் உள்ளவர்கள் செயல்கள் துக்கத்தை தான் கொடுக்கும்.  அக்ஞானம் தாமஸ குணத்தின் பலன்.

முன் சொன்னபடி சத்வ குணம் ஞானம் பெற உதவும்.  ரஜஸ் லோபத்தை பெருக்கும்.  ப்ரமாதம் என்ற மனதின் சம நிலை குறைவும், மோஹமும் தமஸ் எனும்  அக்ஞானமே.

சத்வ குணம் உயர்வைத் தருகிறது. ராஜஸ குணம் மத்யமமாக, தாமஸ குணம் அதோ கதியாக்கி கீழே  தள்ளி விடுகிறது.

காண்பவன், இந்த முக்குணங்களின் தன்மையை அறிந்து இதனால் பாதிக்கப் படாத பரமாத்மா என்று என்னை உணருவானேயானால்  அவன் எனக்கு சமமான தன்மையை அடைகிறான்.

உடல் வரை தான் இந்த குணங்கள் பாதிப்பது. ஆத்மாவை பாதிக்காது. சாதகன், இந்த குணங்களை கடந்து தன் சாதனையைத் தொடர்ந்து செய்வான்.  அவன் முக்தி எனும் அம்ருத தன்மையை அடைகிறான்.

அர்ஜுனன் கேள்வி: எந்த அடையாளத்தைக் கொண்டு ஒருவன் முக்குணங்களை வென்று விட்டான் என்பதை நாம் அறிந்து கொள்வோம்.

ஸ்ரீ க்ருஷ்ணர் சொல்கிறார்:  அது போன்ற ஒருவரை பார்த்தாலே தெரியும்.  ப்ரகாசமாக ஏதோ ஒன்று அவரிடம் இருக்கும். பார்த்தவரை தன் பால் இழுக்கக் கூடிய ஒரு ஒளி.

அடுத்து அவரது நடத்தை.  கடந்து போனதை எண்ணி பச்சாதாபமோ, மற்றவரிடம் இருப்பது தன்னிடம் இல்லையே என்று வருத்தமோ இருக்காது.  எதனிடமும்  த்வேஷம் – வெறுப்பு  அதிகமாக எதிலும் பற்று இன்மை இவைகளைக் கொண்டு இவன் சத்வ குணமுடையவன் என்று அறியலாம்.

நடு  நிலைமை வகிப்பான். தன் விருப்பு வெறுப்புகளை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,  விலையுயர்ந்த தங்கமோ, ஓட்டான்சில்லியோ அவனுக்கு சமமே.  (ஓடுகள் வீட்டுக் கூரைகளில் அடுக்கி இருக்கும். அதில் ஒன்று உடைந்தால் பயனில்லை. மண்ணை சுட்டு செய்யப்படுவதால் அதை திரும்பி பயன் படுத்த இயலாது. அதனால் மிகவும் மதிப்பில்லாத ஒரு பொருள்.  அதுவே தங்கம் சிறு துண்டானாலும் பயன் படும். முற்றிலும் எதிர் மறையான உவமானம்)    தன்னைச் சார்ந்த மக்களிடமும் இதே போல பேத பாவம் இன்றி இருப்பான்.  தீரன். புகழ்ந்தாலும், இகழ்ந்தாலும் தன் நிலையிலிருந்து தவற மாட்டான்.

ச.பா: இப்படி இருப்பவன் சன்யாசி என்ற பெயருக்கு ஏற்றவனாகிறான்.  தன்னுள் இருந்து தன்னை ஆட்டி வைக்கும் இந்த குணங்கள் ஒரு பொருட்டல்ல. இவைகளை வென்ற பரமாத்மாவே தன்னுடைய இலக்கு என்று தெளிந்து இருப்பான்.

அவனுக்கு மரியாதையும், அவமரியாதையும் ஒன்றே. இவன் மித்ரன், இவன் விரோதி என்று இன்றி அனைவரிடமும் அன்பாகவே பழகுவான். தியாகி. முக்குணங்களையும் கடந்தவன் என்று பெயர் பெறுவான்.

என்னை ஆஸ்ரயித்தவன், என்னை பணிந்து என்னிடம் பக்தியுடன் சேவை செய்பவன், சுலபமாக இந்த நிலையைத் தாண்டி ப்ரும்மமாகவே ஆகிறான்.

அழிவற்றவது, முடிவற்றது என்று சொல்லப்படும்   ப்ரும்மத்தில் நானே இருக்கிறேன்.(அம்ருதம்- முடிவு இல்லாதது ) ப்ரும்மானந்தமான  நிலையில் இருப்பவன் நானே.  அதுவே சாஸ்வதம், தர்மம், சுகம், மற்றும் ஒன்றேயான முழு முதற் பொருள்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீ மத் பகவத் கீதையில், ப்ரும்ம சூத்ரத்தின் யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன ம்பாஷனையில், குணத்ரய விபாக யோகம் என்ற பதினான்காம் அத்தியாயம்).

 

 

அத்யாயம்-  15- புருஷோத்தம யோகம்

 

அர்ஜுனன் கேட்காமலே பகவான் மேலும் சில விஷயங்களைச் சொல்கிறார்.   செயலைச் செய்பவன்  அது நல்ல படியாக,  நினைத்தபடி முடிய வேண்டுமே என்றும், சாதகன், தனக்கு ஞானம் கிடைக்க வேண்டுமே என்றும், மற்றும் பல காரிய சித்திகளுக்காக மற்ற  ஜீவராசிகளும், மோக்ஷம் வேண்டும் என்று சிலரும் என்னைப் பணிகிறார்கள் என்று முன் சொன்ன ஒரு விஷயத்தை விரிவாக விவரிக்கிறார்.

ஸ்ரீ பகவான் சம்சாரத்தை ஒரு மரமாக உருவகித்து விளக்குகிறார்.

ஊர்த்வமூலமத: சாகம் அஸ்வத்தம் ப்ராஹுர் அவ்யயம் | சந்தாம்ஸி யஸ்ய பர்ணானி யஸ்தம் வேத ஸ வேதவித்||

ऊर्ध्वमूलमध:शाखमश्वत्थं प्राहुरव्ययम् |छ्न्दांसि यस्य पर्णानि यस्तं वेद स वेदवित् ||

பெரிய அரச மரம் தலைகீழாக இருப்பது போல கற்பனை பண்ணிக் கொள். வேர்கள் மேலே, இலை, கிளைகள் கீழ் நோக்கி பரவியிருப்பது போல ஒரு தோற்றம்.  அது தான் சம்சாரம்.

மஹத் – அழிவற்ற பேருண்மை – ப்ரும்மம் தானாக  வெளிப் படையாகத் தெரியாது –  ‘கூடஸ்த’  மறைந்திருப்பது எனப்படுவது.   எனவே,   மஹா மாயையாக இருந்து உலகை நடத்திச் செல்கிறது.

(மஹா மாயா என்பது தேவியை குறிக்கும்.

பலாதாக்ருஷ்ய மோஹாய மஹா மாயா ப்ரயச்சதி – தேவி மாஹாத்ம்யம்)

தன்மாத்ரைகள் என்று புலன்கள் மூலம் அறிவது – செவி அறிவது  சப்தம், நுகருவது மணம் , கண் காண்பது -ஒளி , வாய்  நாக்கின் மூலம் அறிவது ருசி என்பன

அஹங்காரம்- ego-  இவைகள் கிளைகள்.

இலைகள் அதன் சந்தஸ் –  இலைகள் சூழ்ந்து இருந்து மரத்தை காப்பது போல கவிதை அமைய வேண்டிய விதிகள் பற்றிய இலக்கணம் – இதன் வேலை எழுதப்பட்ட கவிதையை காப்பது.  உயிரைக் காக்கும் மூச்சு போல வேத காலம் முதல் இன்று  வரை காவ்யங்களுக்கு மூச்சாக இருப்பது.

(‘சத் என்ற ஸம்ஸ்க்ருத வார்த்தையின் பொருள் மறைப்பது அல்லது போர்த்துவது.  ஒரு பொருளின் மேல் பரவி அதை பாதுகாப்பது. அதிலிருந்து வந்த சந்தஸ்- காவ்ய அலங்காரத்தின் ஒரு பகுதி. பாட்டுக்குத்  தாளம் போல கட்டுக்  கோப்பாக இருக்கச் செய்வது.  கேள்வியே கல்வியாக இருந்த நாட்களில் இதன் முக்கியத்வம் மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும்.  தாளம் ஒரு பாடலின் அமைப்பை உறுதியாக காப்பதால் தான் பல இடங்களில் கற்றுத் தேர்ந்தவர்களும்  ஒருங்கிணைந்து சேர்ந்து பாட முடிகிறது. அதே போல வேத பாடங்களை எங்கு யாரிடம் கற்றாலும்  ஒரு எழுத்தின் அரை மாத்திரை வரை சந்தஸ் வரையறுக்கிறது.  வேதம் மாறாமல், காலம் கடந்தும் நிற்பதற்கு காரணம் சந்தஸ் என்ற வரை முறையே.  இதை மரத்தின் இலைகளாக உருவகிக்கிறார். )

சந்தஸ் அறிந்தவன் தான்  வேத பாடத்தை தவறின்றி கற்பிக்க முடியும்.  அவன் தான் வேதவித். – வேதம் அறிந்தவன்.

  1. கீழிருந்து மேலாக அதன் கிளைகள் படருகின்றன. விஷய ப்ரவாலம் – நப்பாசைகளே அதன் துளிர்கள், முக்குணங்கள் என அவை பெருகி அடர்த்தியாக கிளைகளில் தெரிகின்றன.

மனிதனிடமிருந்து, அசையா பொருட்கள் வரை  ஸ்ருஷ்டி செய்யும் ப்ரும்மாவின் இருப்பிடம் அடிவேர்.  அதையடுத்து புத்தி,  ஜீவராசிகளின் சக்திக்கு ஏற்ப பெறும் அறிவும்,  அறிவின் பயனாக செயல்களும் அவை தான் பரவிக் கிடக்கும் கிளைகள்.  இந்த செயலை நடத்திச் செல்லும் மூன்று குணங்கள்,  சத்வ ரஜஸ், தமஸ் , இவையே ஜீவராசிகளின் பௌதிகமான உடலை அல்லது இருப்பை நிர்வஹிக்கின்றன. கிளைகளை  போஷிப்பதும் தடிக்கச் செய்வதும் இதன் வேலையே.  இதை உபாதானம் என்கின்றனர்.  கிளைகளில் தோன்றும் துளிர்கள் தன்மாத்ரைகள் எனப்படும்  ஸப்தம், (காது) ஒலி (வாய்), ஒளி,(கண்) ருசி,(நாக்கு) உணர்ச்சி என்று 5 வகைப்படும்.  இவை கண் முதலான புலன்கள்  மூலம் செயல் படுபவன.

அடி வேரை பேருண்மை அல்லது மஹா மாயை என்று சொன்னவர், அதன் அடுத்த நிலை வேர்க் கூட்டங்களை  தர்ம, அதர்மம், வாசனை என்பவைகளுக்கு காரணமாக குறிப்பிடுகிறார்.  வாசனை உணர்ச்சிகளில் விருப்பு வெறுப்புகளுக்கு காரணம்.  ஒருவரிடம் அன்புடன் இருப்பதோ, மற்றவரை தவிர்க்க முயலுவதோ, தூஷிப்பதோ,  இதன் வேலை.  இந்த வேர்க் கூட்டம் இருப்பது தெய்வீகமான – தேவர்கள் முதலானவர்களுக்கு அடுத்த நிலையாக உள்ளவை. உலகில் தர்ம அதர்ம செயல்களை ஊக்குவிப்பவை, அனுகுணமாக இதற்கு உதவுவது வாசனை – இது செயல்களினால் பெறும் பலனால் உருவாவது.

இந்த மரம் ஸ்திரமாக இருக்கும் வரை, மனித குலம் தன் செயல்களிலும், அதன் பலன்களிலுமே நாட்டம் கொண்டு இருக்கும்.

4-5) அடுத்த ஸ்லோகத்தில் இந்த மரத்தை வெட்டு என்கிறார். எதற்காக?

இதன் ரூபம் என்ன? ஆதியோ, அந்தமோ தெரியவில்லை. வழியை மறித்து, வேரூன்றி நிற்கும் இந்த அஸ்வத்த மரத்தை, த்ருடமான ஒரு சஸ்திரம் கொண்டு வெட்டி,  அதன் பின் உன் வழியை கண்டறிந்து முன் செல்.  எந்த நிலையை அடைந்த பின் எவரும் திரும்பி வந்ததில்லையோ அந்த ப்ரும்ம பதம் தான் இலக்கு.

அந்த ஆதி புருஷனையே சரணடைகிறோம்.  எதிலிருந்து உலகனைத்தும் சரா சரங்களும் உண்டானதோ, அந்த புராண புருஷனை வணங்குவோம். இங்கிருந்து தான் புராதனமான ப்ரக்ருதி என்ற ஸ்ருஷ்டி ஆரம்பித்தது.

சங்கர பாஷ்யம்:

என்ன ஏதென்று தெரியாது, எங்கிருந்து தோன்றியது தெரியாது, எப்படிப்பட்டது, தெரியாது –   இப்படி ஒரு பொருள் அதை எப்படி விளக்கிச் சொல்வது. கண்டவர்கள் உண்டா என்றால், இல்லை.  தேடித் தேடிச் சென்றவர்கள் கண்டிருந்தாலும் வந்து சொல்லவில்லை.  அஸ்வத்தமாக தெரிவது மாயையே. அதை வேரோடு, விதைகளோடு அழித்தால் தான் சாதகன் செல்ல வேண்டிய பாதை தெரியும்.

முக்குணங்களை கடந்து, மாயையில் சிக்காமல் சாதகன் செல்லும் வழியின்  இடர்களைக் களைந்து செல்ல வேண்டும்.   இடர்கள், சம்சாரத்தில் சாதாரணமானது அல்ல

என்று விளக்கவே ப்ரும்மாண்டமான அஸ்வத்தம் என்ற மரமாக மாயை உருவகப் படுத்தப் பட்டுள்ளது.

6-7) எந்த விதமான மனிதர்கள் இந்த மாயையை கடக்கிறார்கள்.  சன்யாசிகள். தன்னுடைய மனதை அடக்கி, மோகத்தில் இருந்து விடுபட்டு, சங்கத்தை தவிர்த்து, அத்யாத்ம ஞானம் அடைய வேண்டும் என்று தவம் இருப்பவர்கள்.  இவர்கள் காமத்தை ஜெயித்தவர்கள். அக் ஞானம் துளிக் கூட இல்லாமல்  அவ்யயமான- அழியாத பரம பதம்- பகவானை அடைகிறார்கள்.

முன் அத்யாயங்களில் விவரமாக சொல்லப்பட்டவையே, இந்த ஒரு ஸ்லோகத்தில் சொல்கிறார்.  அப்படி பார்த்தால், கீதை உபதேசம்  சாதாரண மனிதர்களுக்கு அல்ல, சாதகனுக்கே என்று  தோன்றுவது இயல்பு.  உலகை துறந்தவனே  தன்னை அறியமுடியும்.  ஆனால் பரப்ரும்மம் உலகில் செயல் படுவது எப்படி என்பதை , தானே அந்த ப்ரப்ரும்மம் என்பதால் தன்மையில் சொல்கிறார். (first person).   அடுத்து வரும்  ஸ்லோகங்களில். பர ப்ரும்மத்தை, பரப்ரும்மமான தன்னை வர்ணிக்கிறார்.

சூரியன் ஒளியோ, சந்திரனின்  பிரகாசமோ,  அக்னியின் ஜ்வாலையோ அதற்கு ஈடு இல்லை.   தானே பிரகாசமானது.   அந்த ஜோதி ஸ்வரூபமே தான்  நான். இந்த அறிவைத் தேடிச் சென்று கண்டவன்,  திரும்புவதில்லை. அதுவே நான்.

உலகில் என் அம்சமாகவே உயிரினங்கள், ஸ்ருஷ்டியின் சகல அசையும் அசையா பொருட்கள் உள்ளன.  மனதைச் சேர்த்து-ஆறு- இந்திரியங்கள் இயங்குவதால் இயற்கையாக இருந்து உயிரினங்களை ஆட்டுவிக்கிறது.

ச.பா:  சென்றவன் திரும்புவது தான் நியதி.   திரும்ப மாட்டான் என்பது பொருத்தமில்லையே என்று ஒரு வாதம். அதற்கு விளக்கமாக –

குளத்து நீரில் சூரியனின் ஒளி விழுந்து மற்றொரு சூரியன் போலவே காண்கிறது.  அதே போல காலி குடத்துக்குள் உள்ள வெட்டவெளி, ஆகாயத்தால் நிரம்பி இருக்கிறது. நீர் வற்றினால், இந்த பிம்பமும் மறையும். அதே போல மண் குடம் உடைந்தால் வெட்டவெளியும் இல்லை. எங்கே போய் விட்டன.  இந்த விஷயமும் பல விதமாக ஆராயப் பட்டுள்ளன.  முடிவில்லாத விவாதங்கள்.

தானும் சரீரம் எடுத்து அவதரிப்பதாகச் சொன்னாரே, அவதார காலம் முடிந்து என்ன செய்வார், எங்கு போய் சேர்வார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறார்.

வாயு மணத்தை எடுத்துச் செல்வது போல மனதோடு ஆறு புலன்கள், என்றும், இயற்கையின் கையில் இருந்து ஆட்டி வைக்கப் படுகிறது என்றும் சொன்ன அனைத்தும் அவதார முடிவில்  அவருடைய பரப்ரும்ம ஸ்வரூபத்தில் கரைந்து விடும்.

இந்திரியங்கள் என்று எதைச் சொல்வோம். செவி, கண்,ஸ்பர்ஸனம்(தோல்) நாக்கு, நாசி, இவைகளுடன் மனதும் சேர்ந்து விஷயங்களை அனுபவிக்கிறது.

அவதாரத்தையோ, இப்படி தங்களுடன் தானுமாக இருந்து உலக சுக, துக்கங்களை அனுவித்தாரே என்றோ, அவதார கார்யம் முடிந்தவுடன் திரும்பிச் சென்றதையோ, அறிவில்லாதவர்கள் உணர மாட்டார்கள்.  ஞானம் என்ற கண் உள்ளவர்கள் மட்டுமே அறிவார்கள்.

ச.பா: ஓரளவு வருத்தத்துடனே இப்படி சொல்வதாக பாஷ்யக்காரர் சொல்கிறார். அதர்மத்தை அழிக்கவும், தர்மம் தழைக்கவும் என்று தான் இறங்கி வந்த போதும், தங்கள் சுய இன்பத்திலேயே மூழ்கி அறியாமையிலேயே கிடக்கிறார்கள், அறிவற்ற ஜனங்கள்.

யோகிகள், முனைந்து ஆத்ம ஞானம் பெறவே முயற்சிகள் செய்பவர்கள் தன்னுள்ளேயே கண்டு கொள்வார்கள். அவர்களுக்கு புரியும். மற்றவர்கள் சொல்லி, இதோ பரமாத்மாவே அவதாரம் செய்திருக்கிறாரே, போய் வணங்கு என்று சொன்னாலும் அவர்கள் கண்களுக்கு பரமாத்மா தெரியாது.  தன்னைப் போலவே ஒரு பிறவி என்று நினைப்பார்கள்.

சூரியனிடம் உள்ள தேஜஸ், உலகை ஒளி மயமாக ஆக்குகிறதே, சந்திரனிடம் உள்ள குளுமை இதமாக இருக்கிறதே, அக்னியிடம் உள்ள தேஜஸ் உதவியாக இருக்கிறதே, இவையனைத்தும் என் தேஜஸே.

பூமியில் நான் பரவி இருந்து என் ஓஜஸ் என்ற சக்தியால் அதிலுள்ள ஜீவ ராசிகள், அசையாத மரம், மலைகள் முதலியவற்றுடன் தாங்குகிறேன்.  ரஸாத்மகன், உள்ளூற ரஸமாக உள்ள சந்திரனாக இருந்து பூமியிலிருந்து தாவரங்களை வெளி வரச் செய்து( விதை முளைக்கச் செய்து) வளர்க்கிறேன்.

பிராணிகளின் உடலில் வைஸ்வானரன் என்ற அக்னியாக இருக்கிறேன்.   ப்ராணன், (உட்கொள்ளும் மூச்சு), அபானன்  (வெளியேற்றும் வாயு) என்ற ஆறு வாயுக்கள் (ப்ராண, அபான, வ்யான, உதான, சமான,ப்ரும்ம) என்பவைகளுடன் சேர்ந்து அவை உண்ணும் உணவை செரித்து உடலுக்கு பலம் சேர்க்கச் செய்கிறேன்.  உண்ணும் உணவு நான்கு வகைப் படும் அவையாவன: பற்களால் கடித்தல், நாக்கால் நக்கி உண்ணுதல், மென்று உண்ணுதல், குடித்தல் – நாம் உண்ணும் உணவு வகைகள்  அனைத்தும் இந்த நான்கில் அடங்கி விடும்.

உயிரினங்களின் ஹ்ருதயத்தில் நான் உறைகிறேன். என்னிடமிருந்தே ஸ்ம்ருதி என்ற நினைவாற்றலும், ஞானமும், மறத்தலும் தோன்றுகின்றன. வேதங்கள் மூலம் அறிய வேண்டியவன் நானே. வேதாந்தமும் நானே. வேதம் அறிந்தவனும் நானே.

உலகில் இரண்டு பொருட்கள் – ஒன்று அழியும். மற்றது அழியாமல் இருக்கும். க்ஷரம் என்ற ஒன்றும் மற்றது அக்ஷரம். உலகில் உள்ள உயிருள்ள பிராணிகள்- ஜீவன்கள், அசையா பொருட்கள் க்ஷரம் என்ற ஒரு நாள் முடிவை அடைந்தே தீரும். அக்ஷரம் என்பது கூடஸ்தோ என்ற மறை பொருள், ஆத்மா.

இது தவிர உத்தமமான மற்றொன்று பரமாத்மா என்று சொல்லப் படுபவர். அவர் தான் மூவுலகையும் சுற்றி சூழ்ந்து, தான் என்றும் இருந்து காப்பாற்றுகிறார்.  பிபர்தி- தாங்குகிறார்.  அவர் தான் ஈஸ்வரன்- தலைவன்.  அது நானே.

நான் க்ஷரம் என்ற அழியும் வஸ்து இல்லை, அக்ஷரம் என்ற அழியா பெரும் பொருள் என்ற புருஷனையும்  விட மேம்பட்டவன் என்பதால் புருஷோத்தமன் என்று என்னை அழைக்கிறார்கள்.  உலகியலிலும், வேதங்களிலும் நான் புருஷோத்தமனாகவே வர்ணிக்கப் படுகிறேன்.

இந்த விதமாக என்னை புருஷோத்தமனாக அறிபவன், பலவிதமாகவும் என்னை பஜிப்பான்.  மனப் பூர்வமாக துதிப்பான்.

பாரதா!  இது ஒரு ரகசியமான   (இங்கு ரகஸியம்- அரிதான என்ற பொருளில்) சாஸ்திரம், தத்வம்.  இதைத் தெரிந்து கொண்ட நீ புத்திமானாக  ஆவாய்.  என்னருள் என்ற பெரும் பேறு பெற்றவனாக விளங்குவாய்.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்ம வித்தையில், யோக சாஸ்திரம் என்பதில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் புருஷோத்தம யோகம் என்ற பதினைந்தாவது அத்யாயம்)

அத்யாயம்-16 தைவாசுர சம்பத் விபாக யோகம்

இந்த அத்யாயத்தில் ஒரு பக்கம், தெய்வீகமான குணங்களையுடையவர்களும். எதிரிடையான அசுர குணங்கள் உடையவர்கள் என்று சிலரையும் குறிப்பிடுகிறார்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்:

முதல்  குணம் பயம் இன்றி இருத்தல்.  தூய்மயான மனம். ஞானம், யோகம், தானம், பொறுமை, யாக காரியங்களில் ஈடுபடுவது, ஸ்வாத்யாயம் என்ற கற்றதை மனதில் நிலை நிறுத்தி திரும்பத் திரும்ப உருவேற்றிக் கொள்ளல், தவம், நேர்மை

  1. அஹிம்சை, சத்யம், கோபம் கொள்ளாமை, தியாக சிந்தை, அமைதி, கஞ்சத் தனம் இன்றி தாராள மனதுடன் இருத்தல், மற்ற ஜீவன்களிடம் தயை, லோபம்- நப்பாசை இன்றி இருத்தல், ம்ருதுவாக பேசுதல், செய்கையில் நிதானம், வெட்கம்- தவறான செய்கையை செய்ய உள்ளம் கூசுதல், அனாவசிய சபலம் இல்லாமல் இருத்தல்.
  2. சக்தி. பொறுமை, திடமான கொள்கையில் பிடிப்பு, ஒழுக்கம்,- மனதளவிலும், உடல், சுற்றுப்புறங்களிலும் தூய்மையை கடை பிடித்தல்,  துரோகம் செய்யாமை, தான் என்ற கர்வமின்மை, இவையெல்லாம் நற்குடி பிறந்தவர்கள் குணங்கள், இவை தெய்வீகமானவை.

எதிரிடையான சில குணங்கள் உள்ளவர்களும் உள்ளனர். அவர்கள் அசுரர் -அரக்கர் எனப்படுவர்.

தன்னை பற்றி தானே உயர்வாக பேசுதல்,

அபிமானம் , க்ரோதம், கடுமையாக பேசுதல், அக்ஞானம், இவை   அசுர குணங்கள்.

தெய்வீக குணங்கள் விடுதலை அளிக்கும். மற்றது கட்டுப்படுத்தும். கவலைப் படாதே. நீ  நற்குடி பிறந்தவனே.

இரு விதமான ஸ்ருஷ்டி – ஒன்று தெய்வம், மற்றது ஆசுரம்.  தெய்வீகமான குணங்கள் பற்றி விஸ்தாரமாக சொல்லி விட்டேன். இப்பொழுது ஆசுரம் எனும் அரக்க குணங்கள் பற்றிச் சொல்கிறேன் கேள்.

அரக்க குணம் கொண்டவர்கள் எதையும் அறிய மாட்டார்கள்.  செயல் என்பதன் பொருளோ, சுத்தம், ஒழுங்கு இவையோ, ஆசாரம் மரபு வழிகள் என்பதோ, சத்யமோ இவர்களுக்கு தெரியாது.

ஈஸ்வரன் என்ற ஒன்று இல்லை என்பர். இயற்கையில் தோன்றும் – பரஸ்பர சம்போகத்தில் பிறவிகள் தோன்றுகின்றன. வேறு என்ன? என்பர். இப்படி ஒரு எதிர் மறையான நம்பிக்கை கொண்டவர்கள் அல்ப புத்தி, உலகை அழிக்கவே பிறந்தவர்கள்.  உக்ரமான செயலுடையவர்கள்.

தம்பமும், மதமும், தவறான கொள்கைகளுமாக ஒழுக்கமும் இன்றி தான் தோன்றியாக இருப்பர்.

காமமே எல்லாம் என்று நினைப்பர். ஆசையும், பாசமும் அலைக்கழிக்க, தவறான வழியில் பணம் சம்பாதிப்பதே குறி என்று இருப்பர்.

இதை சம்பாதித்து விட்டேன்,  என் தேவை இன்னும் உள்ளன- இன்னும் தனம், பொருள் வேண்டும் என்றும்,

இந்த சத்ருவை அழித்து விட்டேன், மற்ற சத்ருக்களையும் அழிப்பேன், நான் தான் ஈஸ்வரன், சித்தியடைந்த பலவான்,  நானே சுகி- சுகமாக இருப்பவன்.

நிறைந்த செல்வம் உடையவன் நானே.  என்னைச் சுற்றி என் நண்பர்கள், என்னைப் போல வேறு யார் இருக்க முடியும்? யாகம் செய்வேன், தானம் செய்வேன், சந்தோஷமாக அனுபவிப்பேன், என்பர். பலவிதமான கொள்கை குழப்பங்கள், மோகம் இவர்களை சூழ்ந்து இருக்கும். காமமே உயர்வு என்று இருந்து கடைசியில் நரகத்தில் வீழ்வர்.

தன் விருப்பப்படி,  தனம், கௌரவம் காரணமாக யாகங்கள் எந்த விதியையும் அனுசரிக்காமல் செய்வர். தம்பம்- வெற்று தற்பெருமை, அகங்காரம், பலம்- அதனால் வரும் தர் ப்பம்- கொழுப்பு, காமம் – அதனால் தொடரும் க்ரோதம் முதலான கெட்ட குணங்கள், என்னை தூஷிப்பதே சந்தோஷம் என்று இருப்பர்.

இவர்களை என்ன செய்வது?  மட்டமான  மனிதர்கள். திரும்பத் திரும்ப அசுர குடியிலேயே பிறக்கச் செய்வேன். என்னையடையாமலேயே பிறவி தோறும் இதே போல வாழ்ந்து மறைவர்.

காமம், க்ரோதம், லோபம் இவை தான் நரகத்தின் வாசல். இந்த மூன்றையும் விட்டவர்களே, தன் நன்மைக்கு தேவையானதை செய்வார்கள், பின் நல்ல கதியை அடைவார்கள்.

சாஸ்திரம் சொல்வதை ஏற்காமல் தன் விருப்பப்படி செயல் படுபவர்கள், எந்த சித்தியையும், சுகமோ, பரகதியோ கிடைக்கப் பெறுவதில்லை.

அதனால் சாஸ்திரம் தான் ப்ரமாணம். எதைச் செய்யலாம், செய்யக் கூடாது என்று சாஸ்திரம் சொல்வதை அனுசரித்து நட.

(இதுவரை உபநிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையில், ப்ரும்மவித்தையின், யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் தைவாசுர சம்பத் விபாக யோகம் என்ற பதினாறாவது அத்யாயம்)

அத்யாயம் -17 ஸ்ரத்தா த்ரய விபாகம்

 

இந்த அத்யாயத்தில் அர்ஜுனன்   சாஸ்திரங்களை அனுசரிப்பது பற்றிய தனது சந்தேகத்தைச் சொல்கிறான்.   நம்பிக்கையுடன், ஸ்ரத்தையாக  யாகங்களை,  தெய்வ காரியங்களை , தானம் முதலியவற்றை செய்தாலும் சாஸ்திரங்களை அனுசரிக்கவில்லையெனில் அச்செயலுக்கு பலன் உண்டா?  இல்லையெனில் ஏன்?   அந்த செயல்கள் சத்வமா, ரஜஸா, தமஸா என்ற மூன்றில் எதில் சேர்த்தி?

ச.பா: ஏதோ நம்மை மீறிய சக்தி இருக்கிறது என்ற எண்ணத்துடன், பெரியவர்கள், செய்வதை பார்த்து தானும் செய்ய முனைந்தால்,  அதற்கு தேவையான, வேத சாஸ்திரங்கள் அறியாதவர்கள்,  நம்பிக்கை மட்டுமே துனையாக பகவானை வழிபடுகிறார்கள். அவர்களை அறிஞர்களுடன் சேர்க்காவிட்டால் எந்த விதமான குணம் உடையவர்கள் என்று சொல்ல வேண்டும். முன்பு சொன்னது போல அந்தணர்கள் சத்வ குணம், க்ஷத்ரியர்கள் ராஜஸம் என்ற வரையறையில் இவர்களுடைய இடம் என்ன ?

பகவான் சொல்கிறார். ஸ்ரத்தையே இந்த மூன்று குணங்களில் எது என்று  காட்டி விடும். சத்வ குணம் மேலோங்கியிருந்தால் தேவர்களை வழிபடுவார்கள்.  ராஜஸமானால் யக்ஷ, ராக்ஷஸர்களை, ப்ரேத பூத கணங்களை வழிபடுபவர்கள் தாமஸம் எனலாம்.

சாஸ்திர விதியை மீறும் பொழுது அஹங்காரம்,  தம்பம் வரும். காமமும், ஆசையும் அதிகரிக்கும். தன் சரீரத்தை வறுத்தும் பொழுது நான் அந்த சரீரத்துள் உறைந்துள்ளதை மறந்தவர்களாக அசுரர்கள் போல செயல் படுவார்கள்.

முக்குணங்கள் மற்ற விதங்களிலும் வெளிப்படும். ஒருவரது ஆகாரத்தில், வழிபாடு, தவம், தானம் என்பவைகளும் மூவகைப் படும்.

வரிசையாகப் பார்ப்போம். ஆகாரம்.  ஆயுளை வளர்க்கக் கூடியது. ஆரோக்யம் தரும், உணவே சுகமாகவும், சந்தோஷமாகவும் இருக்கும். ரஸம் நிறைந்து, திடமாகவோ, திரவமாகவோ, மனதிற்கு பிடித்த உணவு சாத்விகம்.

அதிக புளிப்பு, உப்பு, அதிகமான காரம் மற்றும் சூடு, கடக் கடக் என்று கடிக்க வேண்டியிருக்கும். உண்டபின் உடலே எரிச்சல் அடையும். இந்த விதமான ஆகாரம் துக்கத்தையும், சோகத்தையுமே தரும்.

சமைத்து யாமம் கடந்து, சரியாக வேகாமல், அதன் ருசியே மாறி, ஊசிப் போன உணவு, அதையும் ஒருவர் சாப்பிட்டு வைத்த மீதி, சுத்தமாக இல்லாத உணவு தாமஸ குணம் உடையவர்களுக்கு பிரியமாக இருக்கும்.

அடுத்து யாகம், பூஜை முதலியவை: பலனில் பற்றுதல் இல்லாமல், சாஸ்திர விதிப்படி செய்வது சத்வம்.  பூஜையோ, யாகமோ செய்ய வேண்டியது என்ற எண்ணம் மட்டுமே காரணமாக இருக்கும்.

ஏதோ ஒரு காரிய சித்திக்காக, தம்பம் காரணமாக ஆடம்பரமாக செய்வது ராஜஸம்,.

சாஸ்திரமும் இல்லை,  அன்ன தானம் போன்றவைகளும் இல்லை, தக்ஷிணை தருவதிலும் குறைவு, அத்துடன் ஸ்ரத்தையும் இன்றி ஏனோ தானோ என்று செய்வது தாமஸம்.

அடுத்து தவம். தேவ, ப்ராம்மணர்கள் அல்லது அறிவிற் சிறந்த பெரியவர்கள், இவர்களை மரியாதையுடன் வணங்குதல். தன் வரையில் சுத்தம் ஒழுக்கம் இவற்றை கடை பிடித்தல். ப்ரும்மசர்யம். அஹிம்ஸா. இவை சரீரம் சம்பந்தப் பட்ட தவம்     செய்யும் முறை.

அடுத்து வருவது ஒரு நல்ல ஸ்லோகம்.  பேசுவது பற்றி நம் பெரியவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள். சொல் அற – ரொம்ப பேசாதே என்றார்  அருணகிரினாதர். பார்த்து பேசு. நா காக்க என்றார் வள்ளுவர்.  கீதாசாரியனின் உபதேசம் – கேட்பவனை உத்வேகம் கொள்ளும்படி பேசாதே. கேட்பவன் உன் சொல்லைக் கேட்டு வெகுண்டு எழும் படி பேசாதே. சத்யமான சொல், பிரியமானது, ஹிதமானது தான் பேசுவதற்கு ஏற்றது. தன் கல்வியை முறைப் படி கற்று தேறுதல், அதை மனனம் என்று திரும்பத் திரும்ப நினைத்து உருவேற்றிக் கொள்ளுதல் இவை வாக்கினால் செய்யும் தவம்.

அனுத்வேககரம் வாக்யம் சத்யம் ப்ரியஹிதம் ச யத் | ஸ்வாத்யப்யஸனம் சைவ வாங்மயம் தப உச்யதே ||

अनुद्वेग करम् वाक्यम् सत्यम् प्रियहितम् स यत् | स्वाध्याभ्यसनम् चैव वान्ग्मयम् तप उच्यते.||

ப்ரஸன்னமான மனம், அமைதியான தன்மை, மௌனம், தன் கட்டுப்பாடு, தூய்மையான எண்ணங்கள் இவை மனதால் செய்யும் தவம்.

ஸ்ரத்தையுடன் செய்வது சாத்விகம். இதில் பலனைப் பற்றி எண்ணம் வராது.  பகட்டுக்காக செய்வது, ஆடம்பரம் அதிகமாக செய்வது ராஜஸம். அறிவின்மையால் உடலை வருத்தி, மற்றவர்களுக்கு காட்டிக் கொள்வதற்காக மட்டுமே செய்யப்படுவது தாமஸமானது.

கொடுப்பதை மனப் பூர்வமாக கொடுப்பது சாத்விகமான தானம். பாத்திரம் அறிந்து, தேவையான காலத்தில் கொடுப்பது உத்தமம்.

ப்ரதி பலனை எதிர் பார்த்து அல்லது அதனால் வேறு எதோ ஆதாயம் என்று எண்னி, அதையும் வேண்டா வெறுப்பாக தருவது மத்யமம்.

காலமோ, தேவையோ கருத்தில் கொள்ளாமல் யாரோ ஒருவருக்கு தருவது அதமம்.

ஓம் தத் ஸத் என்பது ப்ரும்ம வாக்யம். ஓம் என்று சொல்லி  யாக, தான, தவம் போன்றவற்றைச் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரம் ப்ரும்மவாதிகளுக்கு விதித்தது.

தத்  என்று சொல்லாமல் மோக்ஷம் விரும்புவோர் இவற்றை செய்வார்கள்.

நல்லது என்ற பாவம் இந்த சத் என்ற உச்சரிப்பால் பெறும் விளக்கம்.  முக்கியமான செயல்களை சத் – நல்ல என்போம்.

யக்ஞம், தவம், தானம் இவற்றின் செயலே – சத் – எனப்படும். அதைச் சார்ந்த  செயல்களும் சத் ஆகும்.

ஸ்ரத்தை இன்றி செய்யப்படும் பொழுது இவை அசத் என்று குறிக்கப் படும்.

ச.பா: இந்த அத்யாயத்தில் என்ன உபதேசம் என்பதை பின் வருமாறு சுருக்கமாக புரிந்து கொள்ளலாம்.   ஆர்வமுள்ள சிலர், சாஸ்திரங்களை அறியாதவர்கள், ஆனாலும் முழு நம்பிக்கையோடு,  சிரத்தையுடன் அவர்கள் மனதுக்கு சரி என்று தோன்றியபடி வழி படுகிறார்கள், சில நற்செயல்களைச் செய்கிறார்கள்.  அன்ன தானமோ, மற்ற உதவியோ செய்கிறார்கள்.  செய்து வரும் பொழுதே அனுபவத்தால் எது நல்லது என்று அறிந்து கொள்வார்கள்.  பழக்கம் காரணமாக  சத்வமோ,ராஜஸமோ, தாமஸமோ உணவு, தானம் கொடுக்கும் பொருட்கள், வழிபாட்டு முறைகள் மாறலாம்.  அதில் தவறுதல் ஏற்படாமல் இருக்க ஓம் தத் ஸத் என்ற சொற்களை சொல்லிச் செய்தால், பிராயச் சித்தம் போல அந்த சொற்களின் சக்தியே காப்பாற்றும்.  சாஸ்திரங்களை தெரிந்து கொள்வோமே என்று முனைவர்.  ப்ரும்ம ஞானம் பற்றி அறிவர். அதன் மூலம் நேரடியாக சத்யம்- உண்மை என்ன என்பது உணர்ந்து முடிவில் விடுதலை அடைவார்கள்.

(இதுவரை ஸ்ரீமத் பகவத் கீதையின், ப்ரும்ம வித்தையின், யோக சாஸ்திரத்தில், ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில், ஸ்ரத்தா த்ரய விபாக யோகம் என்ற பதினேஷாவது அத்யாயம்)

 

அத்யாயம் -18  மோக்ஷ சன்யாச யோகம்

 

அர்ஜுனனின் சந்தேகம்- சன்யாசம் என்பதும் தியாகம் என்பதும் ஒன்று தானா? என்ன வித்தியாசம். இது வரை பல முறை இந்த வார்த்தைகளை கேட்டிருக்கிறோம்.

ஸ்ரீ பகவான் சொல்கிறார்-    பலன் தரும் செயல்கள், யாகம் போன்றவைகளை விடுவது, செய்யும் செயல்களில் பலனை எதிர்பாராமல் செய்வது  இரண்டையுமே சன்யாசம் அல்லது தியாகம் என்ற பெயரில் சொல்கிறோம். இதைக் கூட விடக் கூடாது என்று ஒரு சாரார் சொல்வதுண்டு.  யாக காரியங்களோ, தானம்,தவம் முதலியவைகளோ  கண்டிப்பாக செய்ய வேண்டிய செயல்களே.  தியாகமும் மூன்று வகைப் படும். இவைகள் கண்டிப்பாக  செய்ய வேண்டிய செயல்களே. மனிதர்களுக்கு இவை புனிதமானவை. அதைச் செய்யும் பொழுது பலனை மட்டும் நினைத்து செய்யாதே,  விளம்பரமாக ஆரவாரமாக செய்யாதே, மனப் பூர்வமாக செய் என்று நான் சொல்கிறேன்.

கடமையை செய்யாமல் விட்டு விட்டு நான் சன்யாசி என்பது அர்த்தமற்றது.  உடல் உழைப்பு, துக்கம் என்பதால் விடுவதும் பலனைத் தராது. கடமை, நமக்கு செய்யும்  பொறுப்பு மட்டுமே என்று நினைத்து செய்ய வேண்டும். அதைத் தான் சாத்விகம் என்கிறோம்.

அறிவுடையவனுக்கு  சந்தேகம் வராது. கடமையில் இது உயர்ந்தது, இது மட்டம் என்ற பேதம் பார்க்க மாட்டான்.   மனிதனாக  பிறந்தவன் ஒரு வேலையும் செய்யாமல் இருப்பது இயலாது.  கடமையை செய்யும் பொழுது பலனை நினைக்காமல் இருப்பவனே தியாகி.  சில சமயம் விரும்பாத பலனாக இருக்கலாம், சில சமயம் வேண்டியது கிடைக்கலாம், மற்றும் சில சமயம் இரண்டும் சேர்ந்தும் வரலாம், இதனால் எதிர்பார்த்த பலன் கிடைத்த பொழுது மகிழ்ச்சியும், கிடைக்காத சமயம் துக்கமும் வரும். பலனை தியாகம் செய்தவன் பாதிக்கப் படாமல் இருப்பான்.

வேதாந்தம் என்பது வேதங்களில் சொல்வதை சுருக்கமாக, அல்லது முடிவாக சொல்வது – வேத அந்தம் – என்ற பதம் உப நிஷதுகளை குறிக்கும். இதையே சாங்க்யம் என்பர்.  இதில்  ஐந்து காரணங்கள் சொல்லப்படுகின்றன.  கடமை, செயல் என்பது போன்ற பல விஷயங்களும் வேதங்களை கற்றுத் தேர்ந்த பின் பல சந்தேகங்களும் விடு பட்டு விடுகின்றன.  ப்ரும்ம ஞானம் வந்து விடும். செயல்களின் முடிவு என்பது வேத அந்தம் அல்லது தன்னை அறிதல்.

அதிஷ்டானம் ததா கர்தா கரணம் ச ப்ருதக்விதம் |      விவிதாஸ்ச ப்ருதக் சேஷ்டா தைவம் சாத்ர பஞ்ச்சமம் ||

अधिष्टानं तथा कर्ता करणं च पृथक्विदम् | विविधाश्च पृथक्चेष्टा दैवं चात्र पन्चमम् ||

சங்கர பாஷ்யம்:  ஆசனம்,அதாவது இருப்பு,  உடல், ஆசை, வெறுப்பு, மகிழ்ச்சி, வருத்தம், அறிவு போன்ற அனைத்தும் வெளிப்படும் ஆதாரம் (base) .

கர்த்தா- செய்பவன்- அனுபவிப்பவன்,

கரணம்-  கருவி, இங்கு மனிதனின் புலன்கள்.

தனித் தனியான அங்கங்கள்- தனித் தனியான  இதன் அவயவங்கள்

செயல்கள், மூச்சு விடுவதிலிருந்து  பன்னிரண்டு விதமான செயல்களும்.

தைவம்- ஆதியன் மற்றும் இயற்கையின் தெய்வ சக்திகள்- ஆதித்யன் கண் பார்க்க உதவுவது, வாயு மூச்சு விட,  என்பது போல ஒவ்வொரு அவயவமும் செயல் படச் செய்யும் தெய்வ சக்தி.

உடல், வாக்கு, மனம் இவற்றால் மனிதன் செய்வது அனைத்தும் நியாயமாகவோ, விபரீதமாகவோ  ஆக, இந்த ஐந்தும் தான் அதன் காரணம்.

இப்படி இருக்க,  நான் செய்கிறேன் என்று ஒருவன் அபிமானத்தால் சொன்னால், அது பேதமை.  எவனுக்கு இந்த அஹம் -நான் என்ற எண்ணம் விடுபட்டதோ ( அறிவினால் உணர்ந்து கொண்டு விட்டானோ, புத்தி தெளிவாகி விட்டதோ)   அவன் கொலையே செய்தாலும், அவன் செய்வது கொலையல்ல.

இது சம்பந்தமான விவாத, ப்ரதி வாதங்கள் பாஷ்யக்காரர் பலவிதமாக கொடுத்திருக்கிறார்.  எது வித்யா, எது அவித்யா என்ற விஷயங்கள் விவாதிக்கப் பட்டுள்ளன.

அடுத்த ஸ்லோகத்தில், செயல் பட தூண்டுவது எவை என்பது பற்றிச் சொல்கிறார்.  அறிவு, அறியும் பொருள், அறிபவன் என்ற மூன்று இவையே, கரணம், கர்ம, கர்தா என்பதன் அடிப்படை.

ச.பா: அறிவு என்பது பொது.  அறியும் பொருள் என்பதும் பொது.

அறிபவன், அனுபவிப்பவன், பங்கு கொள்பவன்  எதையும் தானாக செய்வதில்லை.  அறிவு அல்லது புத்தியால் செய்விக்கப் படுகிறான். புத்தி தான் இதைச் செய், இதை செய்யாதே என்று ஆணையிடுகிறது. முன் சொன்ன கரணம், கர்த்தா, என்ற ஐந்தும், வாக்கு, மனம், உடல் என்ற மூன்றாலும்., புலன்கள் உள்ளூற ஊடாக செயல்படுவதாலும், ஒரு செயல் நடக்கிறது.

அறிவு, செயல்,செய்பவன் என்ற மூன்றுமே முக்குணங்கள் என்று முன் சொன்ன சத்வ, ரஜஸ், தமஸ் என்ற பாகுபாட்டின் கீழ் வருகின்றன.

ஞானம் அல்லது அறிவு- சாத்விகமானது – அனைத்து ஜீவராசிகளிடமும் ஒரே பாவம்- அழியாத் தன்மை -ஆத்மாவை காண்பவன்.  பலவிதமாக பிரிந்து இருந்தாலும் ஒன்றே, என்ற அறிவே சாத்விகம்.

ஒவ்வொன்றும் தனிதனியான உருவம் உடையன, அவை பலவிதமான அடையாளங்களை, தன்மைகள் உடையன என்று நம்புபவன் ராஜஸன்.

சிறிதளவே அறிவுடைய,  ஒரே செயலில், ஈடுபடுபவன், கொள்கையோ,  காரணமோ இல்லாதவன் தாமஸன்.

அதே போல கர்ம- செயல்- விருப்பு வெறுப்பு இன்றி, பலனையே மட்டும் எண்ணாமல் செய்வது உயர்வு.

எதையோ விரும்பி, அகங்காரம் காரணமாக , மிக சிரமப் பட்டு செய்வது மத்யமம்.

ஹிம்சை, நிரந்தரமில்லாத, இதன்  விளைவு என்ன என்பதையும் யோசிக்காமல்,  மோகம் காரணமாக ஆரம்பித்து செய்வது அதமம்.

அடுத்தது கர்த்தா – செய்பவன். திடமான கொள்கை, உத்ஸாகம், தான் செய்கிறோம் என்ற அகம்பாவம் இல்லாதவன்,  அனாவசிய கூட்டம் போடாமல், விளைவு எதுவானாலும் சரி, செய்வதை சரியாக செய்கிறேன் என்ற நம்பிக்கையோடு செய்வது உத்தமம்.  அப்படிச் செய்பவன் சத்வ குணம் உள்ளவன்.

அதையே  இன்ன பலன் கிடைக்கும் என்ற விருப்பத்துடன், தானம் கொடுப்பதில் குறைவாகவோ, கொடுக்காமலோ, உடல், மனது, சுற்றுப்புற சுத்தமும் இல்லாமல், அதிக மகிழ்ச்சியோ, துக்கமோ வெளிப்படையாக தெரிய செயலைச் செய்பவன் மத்யமன், ராஜஸ குணம் உடையவன்.

பாமரனாக, சரிவர  தெரிந்து கொள்ளாமலும், வேலையில் திறமையும் இல்லாமல், தாமதமாக  செய்பவன் தாமஸ குணம் உடையவன்.

புத்தி, திடமான கொள்கை இவற்றிலும் இந்த முக்குணங்கள் வெளிப் படும்.

எதை செய்ய வேண்டும், எதை செய்யக் கூடாது என்ற பாகுபாடு அறிந்தவன் புத்திசாலி.  பந்தம்-கட்டுப்பாடு, மோக்ஷம்- விடுதலை என்பதை அறிந்தவன். அந்த புத்தி சாத்விகம்.

எதையுமே தவறாக புரிந்து கொள்வது ராஜஸம்.

அதர்மத்தையே தர்மம் என்று நினைப்பவன் தாமஸ புத்தியுடையவன்.  கற்றதை விபரீதமாக புரிந்து கொள்வது.

த்ருதி என்ற மனத்திடம் – மனம், ப்ராணன், இந்திரியங்களின் செயல்கள், யோகம், அலை பாயாத மனத் திண்மை இவை சாத்விகமான த்ருதி.

தர்ம காம அர்த்தங்களை அதன்  பொருள் அறிந்து அனுபவிப்பவன், யதேச்சையாக அதன் விளைவால் பெறும் நன்மையையும் எதிர் பார்ப்பது ராஜஸமான த்ருதி.

கனவு, பயம், காரணமின்றி வருத்தம், சஞ்சலமான மனம், அளவுக்கதிகமான உணர்ச்சிகள், கட்டுப் படுத்த முடியாத அளவு- மதம் என்பது இதுவே. இவைகளுடன் உள்ளது தாமஸமான த்ருதி.

அதே போல சுகம் என்பதும் மூன்று விதம். துக்கம் இல்லாதது சுகம்.  அனுபவித்து  அறிந்த சுகத்தை அதே போல பேணி காப்பது உத்தமம். ஆரம்பத்தில் விஷம் போல இருந்தாலும் அதன் முடிவு அம்ருதத்துக்கு இணையாக இருந்தால் அது சாத்விகமான சுகம்.

விஷய சுகம், மற்ற உலகியலான சுகங்கள், ஆரம்பத்தில் அம்ருதம் போல இருந்தாலும் அதன் விளைவு விஷமாக இருந்தால், அது ராஜஸமானது.

ஆரம்பமும் சரி, முடிவும் சரி, எந்த பலனும் தராமல், தூக்கம், சோம்பேறித் தனம் போன்றவை தாமஸமானவை.

பூமியிலும் சரி, தேவ லோகத்திலும் சரி, இயல்பிலேயே இந்த மூன்று வகையான மனப் பாங்குகள் உள்ளன.

ப்ராம்மணன். க்ஷத்திரியன், வைஸ்யன், சூத்ரன் என்ற பாகுபாடு இந்த குணங்களின் அடிப்படையிலேயே அமைக்கப் பட்டது.  அவர்கள், மனப் போக்கிற்கு ஏற்ப செயல்கள் விதிக்கப் பட்டன.

தன்னடக்கம், பொறுமை, சுத்தம், ஒழுக்கம், மன்னிக்கும் தன்மை, தன் வரையில் நேர்மை, நல்ல அறிவு, நிறைவான  செல்வம் இவை இயல்பிலேயே ப்ரும்ம கர்மம் செய்யும் அந்தணனனுக்கு அமையும்.

நல்ல வீரம், தேஜஸ், மனத் திடம், தேவையான இடத்தில் தாக்ஷிண்யம், யுத்தத்தில் புற முதுகிடாமை, தானம், தலைவன் என்ற தகுதி, க்ஷத்ரியனுக்கு இயல்பாக அமையும்.

விவசாயம், பசு கன்று, வீட்டுப் பிராணிகளை வளர்ப்பது, வியாபாரம் – இவை  வைஸ்யனுக்கு இயல்பாக அமையும். இம்மூவருக்கும் பரிசாரகம், உதவி செய்வது (அடியாளாக) சூத்ரனுக்கு இயல்பாக அமையும்.

தங்கள் தங்கள் வேலையில் ஈடுபாட்டுடன் செய்தே மனிதர்கள் சித்தியை அடைய முடியும். எந்த தொழிலும் மட்டமல்ல.  தன் செயலில் ஈடுபட்டவன் எப்படி சித்தி அடைகிறான் என்பதையும் சொல்கிறேன், கேள்.

எதிலிருந்து உலகமும், ஜீவராசிகளும், சரா சரங்களும் தோன்றினவோ,  எந்த சக்தியால் இன்றளவும்  இயங்கி கொண்டிருக்கிறதோ, அந்த ப்ரக்ருதி-இயற்கை அல்லது தெய்வம், அதை தன் செயலால் அர்ச்சித்து – செய்யும் தொழிலை உண்மையாக செய்து- மனிதர்கள் சித்தியை அடைகிறார்கள்.

செய்யும் தொழிலே தெய்வம்.

தனக்கு விதிக்கப்பட்ட தொழிலை செய்வதே நன்மை பயக்கும்.  மற்றவர்களின் தொழில் எளிதாக இருப்பதாக நினைத்தோ,  அதிக லாபம் தரும் என்றோ நினைத்து அதை தானும் அனுசரிப்பது தேவையற்றது.  தனக்கு இயல்பான செயலை செய்பவன் எந்த தீமையையும் எதிர் கொள்ள மாட்டான்.

தன்னுடன் பிறந்த செயல், அது தோஷம் உடையது என்றாலும் கூட விடக் கூடாது. அது உண்மையில் தோஷம் அல்ல. அக்னியை சூழ்ந்திருக்கும் புகை போன்றதே. அருகில் செல்லச் செல்ல புகை மறைந்து அக்னியின் ஒளி தெரியும்.

பற்றின்றி தன் குலத் தொழிலை செய்து வந்தாலே, நாளடைவில் சன்யாச நிலையை அடையலாம். தானாகவே ஜிதாத்மா, தன்னை வென்றவனாக ஆகலாம்.  குலத் தொழிலில் பெறும் அனுபவம் கர்மா எனும் செயலில் இருந்து விடுதலை அளிக்கிறது.

அப்படி சித்தியை அடையும் பொழுது, ப்ரும்மத்வம் அதாவது பரமாத்மாவை உணர்ந்து கொண்டு,  சாதனையால்  ஞானிகள் அடையும் பரம ஞானத்திற்கு சற்றும் குறைந்ததல்ல இந்த நிலை.

தெளிந்த புத்தியுடன்  திடமான மனதுடன் தன்னை கட்டுப் படுத்திக் கொண்டு, சப்தம் முதலான விஷயங்கள்- மனச் சிதறல்களை துறந்து, ஆசை த்வேஷம் என்பவைகளையும் தள்ளி, குறைந்த அளவே உண்பவனாக, வாக்கு, மனம், உடல் இவைகளால் த்யானம், யோகம் இவைகளை செய்பவனாக, நித்யம் வைராக்யத்துடன்,

அஹங்காரம், பலம், தர்ப்பம்- தற்பெருமை, காமம், க்ரோதம், மற்றவர்களிடமிருந்து, பெறுவது அல்லது அபகரிப்பது, இவைகளை விட்டு, தான் என்ற எண்ணம் இல்லாமல், சாந்தமாக இருப்பவன் ப்ரும்மமாகவே ஆக தகுதியுடையவனாகிறான்.

அப்படி ப்ரும்மமாக ஆனவன் ப்ரஸன்னமாக இருப்பான். வருத்தமோ, தேவைகளோ இல்லாமல் இருப்பான். எல்லா உயிர்களையும் சமமாக பாவிப்பான்.  என்னிடம் விசேஷமான பக்தி தானாக அவனிடம் வந்தமையும்.

என்னிடம் கொண்ட பக்தியால் என்னை முற்றிலுமாக அறிவான்.  அறிய வேண்டிய அனைத்தும் அவனிடம் தானே வந்து சேரும். என்னில் ஐக்யமாவான்.

அதன் பின் அவன் செயல்கள் என் பரமாகவே இருக்கும். என்னருளால் சாஸ்வதமான அழிவற்ற பதத்தை அடைவான்.

எனவே, உன் மனதில் என்னை எண்ணி உன் செயல்கள் அனைத்தையும் என்னிடம் ஒப்படைத்து விடு.  புத்தி யோகத்தால் என்னை அறிந்து கொள்.  என்னையே  சரணடை. எப்பொழுதும் என்  நினைவுடன் இரு.

என்னருளால் எல்லா இடையூறுகளையும் கடந்து வெல்வாய். அப்படி செய்யாமல் உன்  அஹங்காரத்தால் தானே செய்வதாக எண்ணினால், அழிவாய்.

எந்த அஹங்காரத்தால் நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று தற்சமயம் சொல்கிறாயோ, அது மாயையே.  உன்னால் செய்யாமல் இருக்க முடியாது. உன் இயல்பு, க்ஷத்ரியனாக நீ செய்ய வேண்டிய கடமை உன்னை கட்டிப் போடும்.

பிறப்பினால் கூட வந்த குலத் தொழில் – அதனால் நீ அதைச் செய்ய  பொறுப்புள்ளவனாக ஆகிறாய். மோகத்தால். செய்ய விரும்பாமல் தட்டிக் கழிக்க நினைத்தாலும் உன் இயல்பு விடாது.  உன் வசம் இல்லாமலே அதைச் செய்வாய்.

அனைத்து உயிரினங்களிலும் ஈஸ்வரன் அதனதன் ஹ்ருதயத்தில் வீற்றிருக்கிறான்.  அனைத்து ஜீவ ராசிகளையும் ஆட்டுவிக்கிறான். ஏதோ யந்திரம் சுழலுவது போல சுழலும் மாயை இது.

அந்த ப்ரும்ம ரூபத்தை, ஈஸ்வரனையே சரணடை. பாரதா! அதன் அருளால் பரம சாந்தியை அடைவாய். சாஸ்வதமான நிலையை பெறுவாய்.

பரம ரகசியம் என்று போற்றப்படும் தத்வங்களை உனக்கு விவரித்துச் சொன்னேன். நீ மனதில் அலசி ஆராய்ந்து உனக்கு எது சரியென்று படுகிறதோ அப்படியே செய்.

என் வார்த்தையை கேள். இது மிகவும் அரிதான என் உபதேசம், திரும்பச் சொல்கிறேன். என் பக்தன், எனக்கு பிரியமானவன் என்பதால் உன் நன்மைக்காக சொல்கிறேன்.

மன்மனா பவ மத் பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு | மாமைவைஷ்யஸி சத்யம் தே ப்ரதிஜானே ப்ரியோ(அ)ஸி மே||

मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु | मामैवेष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ||

என்னையே மனதில் நினை. என் பக்தனாக இரு. என்னை பணிந்து வணங்கி வா.  என்னையே அடைவாய். இது சத்யம்.என் பிரியமானவன் நீ என்பதால் உனக்கு அபயம் அளிக்கிறேன். வாக்கு கொடுக்கிறேன்.

சர்வ தர்மான் பரித்யஜ்ய மாமேகம் சரணம் வ்ரஜ | அஹம் த்வா சர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா சுச: ||

सर्व धर्माऩ् परित्यज्य मामेकं शरणं व्रज | अहं त्वा सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुच: ||

எல்லா தர்மங்களையும் தியாகம் செய்து விட்டு என்னையே சரணடைவாய். நான் உன்னை எல்லா பாபங்களிலிருந்தும்  விடுவிக்கிறேன். வருந்தாதே.

சங்கர பாஷ்யம்:  புனிதமான தன்னையறிதல் என்ற ஞானமே மிக உயர்ந்த பேரானந்தம்.  விடுதலையை அளிக்கும் சாதனம்.  பல விதமான செயல்கள், கடமைகள் கொண்டு செல்லும் இடம் இந்த ப்ரும்ம ஞானமே. அவித்யா என்ற அறியாமையை நீக்கி இந்த அனுபவத்திற்கே கொண்டு செல்லும்.   என் செயல், நான் செய்வேன், இந்த செயலால் இந்த பயனையடைவேன் என்று மனிதன் நினைப்பது இந்த அவித்யாவின் காரணமாகவே.  இந்த அவித்யா காலம் காலமாக உள்ளதே. ஸ்ருஷ்டியின் ஆரம்பத்திலிருந்தே இந்த அவித்யாவும் தோன்றி விட்டது போலும்.  தான் யார் என்று உணர்ந்த பின்னரே இதுவும் மறையும்.  இதோ நான் சுதந்திரமானவன். எந்த செயலும் என்னைக் கட்டுப் படுத்தாது. விளைவு பற்றி நான் வருந்த மாட்டேன் என்று சொல்ல முடிந்தவன் பேரானந்தம் பெற்றவன். அவனுக்கு இனி  உலகியல் துன்பங்கள் இல்லை, மறு பிறவி இல்லை.

இந்த உபதேசத்தை என் பக்தர்களிடம் கொண்டு செல்.  எனக்கு உலகில் பிரியமானவர்கள் என் பக்தர்களே.  எனக்கு பிரியமானதை செய்பவர்கள் என்று ஒரு சிலரே என்னையே சரணம் என்று இருப்பவர்கள்.  அவர்களே என்னருளுக்கு பாத்திரமாகிறார்கள்.

சிரத்தையுடன், அசூயை இல்லாமல் யார்  கேட்கிறார்களோ, அவர்களும் நல்ல கதியை அடைவார்கள்.  புண்ய கர்மாக்களை செய்பவர்கள் பெறும் சுபமான லோகங்களை பெறுவார்கள்.

தனஞ்சயா!  உன் மனதில் தெளிவு வந்ததா? இது வரை நான் சொன்னதை ஒரு மனதோடு கேட்டு  புரிந்து கொண்டாயா?  உன் மன குழப்பம் விலகியதா?

அர்ஜுனன் பதில் சொல்கிறான். அச்யுதா! என் மனக் குழப்பம் விலகியது. மோகம் நீங்கியது. உன்னருளால் சந்தேகம் இன்றி, தீர்மானமாக உன் சொல்படியே நடப்பேன்.

கேட்டுக் கொண்டிருந்த சஞ்சயனுக்கு மகா சந்தோஷம். அரசே, வியாசருடைய அருளால் அத்புதமான இந்த சம்பாஷனையை கண்டும் கேட்டும் தன்யனானேன், சாக்ஷாத் க்ருஷ்ணன் சொல்லக் கேட்கும் பேறு பெற்றேன்.  வாசுதேவனும், பார்த்தனும் பேசிக் கொண்டது எனக்கு மயிர் கூச்செரிய செய்தது. ஆனந்தமாக கேட்டேன்.

அரசே! இந்த சம்பாஷனையை மனதில் திரும்பத் திரும்ப நினைத்து பார்த்து மகிழ்கிறேன்.  அத்புதமான அனுபவம். புண்யம் செய்தவன் நான்.  கேசவ அர்ஜுனன்  இடையில் நடந்த புண்யமான சம்பாஷனையை அறிய கொடுத்து வைத்ததே என்று மகிழ்கிறேன்.  நான் தான் கேட்டேனா என்று அதிசயிக்கிறேன். நினைக்க நினைக்க என் மனம் நிலை கொள்ளாமல் மகிழ்ச்சியில் தத்தளிக்கிறேன்.

யோகேஸ்வரன் க்ருஷ்ணன் இருக்கும் இடம். கையில் வில்லேந்தி பார்த்தன் நிற்கும் இடம்,  மகா பவித்ரமானது. அங்கு லக்ஷ்மி தேவி சாக்ஷாத்தாக வந்து வெற்றியை அளிப்பாள்.  நிறைந்த செல்வமும், பல நன்மைகளையும் அருளுவாள்- எனக்கு சந்தேகமேயில்லை. இது நிச்சயம்.

(இது வரை உபனிஷதான ஸ்ரீமத் பகவத் கீதையின் ப்ரும்ம வித்தையின் யோக சாஸ்திரத்தில் ஸ்ரீ க்ருஷ்ண அர்ஜுன சம்பாஷனையில் மோக்ஷ சன்யாச யோகம் என்ற பதினெட்டாவது அத்யாயம்.)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 அத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா

 அத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா

ஸ ஸாகரமவனாத்ருஷ்யமதிக்ரம்ய மஹாபல: |

த்ரிகூட ஸிகரே லங்காம் ஸ்திதாம் ஸ்வஸ்தோ ததர்ஸ ஹ ||

தத: பாதப முக்தேன புஷ்பவர்யேன வீர்யவான் |

அபிவ்ருஷ்ட: ஸ்திதஸ்தத்ர பபௌ புஷ்பமயோ யதா ||

யோஜனானாம் ஸதம் ஸ்ரீமான் தீர்த்வாப்யுத்தம விக்ரம: |

அனிஸ்வஸன் கபிஸ்தத்ர ந க்லானிமதிகச்சதி ||

ஸதான்யஹம் யோஜனானாம் க்ரமேயம் சுபஹூன்யபி |

கிம் புன: சாகரஸ்யாந்தம் ஸம்க்யாதம் ஸத யோஜனம் ||

ஸ து வீர்யவதாம் ஸ்ரேஷ்ட: ப்லவதாமபி சோத்தம: |

ஜகாம வேகவ்வன் லங்காம் லங்கயித்வா மஹோததிம் ||

ஸாத்வலானி ச நீலானி கந்தவந்தி வனானி ச |

கண்டவந்தி ச மத்யேன ஜ்காம நகவந்தி ச ||

ஸைனாம்ஸ்ச தருபிஸ்சன்னான் வனராஜீஸ்ச புஷ்பிதா: |

அபிசக்ராம தேஜஸ்வீ ஹனூமான் ப்லவகர்ஷப: ||

ஸ தஸ்மின்னசலே திஷ்டன் வனான்யுபவனானி ச |

ஸ நகாக்ரே ஸ்திதாம் லங்காம் ததர்ஸ பவனாத்மஜ: ||

ஸரலான் கர்ணிகாராம்ஸ்ச கர்ஜூராம்ஸ்ச சுபுஷ்பிதான் |

ப்ரியாலான் முசுலிந்தாம்ச குடஜான் கேதகானபி ||

ப்ரியங்கூன் கந்தபூர்ணாம்ஸ்ச நீபான் சப்தஸ்ஸ்தன் ததா||

அஸனான் கோவிதாராம்ஸ்ச கரவீராம்ஸ்ச புஷ்பிதான் ||

புஷ்பபார நிபத்தான்ஸ்ச ததா முகுலிதானபி |

பாதபான் விஹகாகீர்ணான் பவனாதூத மஸ்தகான் ||

ஹம்ஸ காரண்டவா கீர்ணா வாபீ: பத்மோத்பலாயுதா: |

ஆக்ரீடான் விவிதான் ரம்யான் விவிதாம்ஸ்ச ஜலாஸயான் ||

ஸந்ததான் விவிதைர் வ்ருக்ஷை: சர்வர்து பல புஷ்பிதை: |

உத்யானானி ச ரம்யாணி ததர்ஸ கபி குஞ்ஜர: ||

ஸமாஸாத்ய ச லக்ஷ்மீவான் லங்காம் ராவண பாலிதாம் |

பரிகாபி: ஸபத்மாபி: ஸோத்பலாபிரலங்க்ருதாம் || (2-14)

சீதாபஹரணார்தேன ராவணேன சுரக்ஷிதாம் |

ஸமந்தாத் விசரித்ப்யஸ்ச ராக்ஷஸை: காம ரூபிபி: ||

காஞ்சனேனாவ்ருதாம் ரம்யாம் ப்ராகாரேண மஹாபுரீம் |

க்ரஹைஸ்ச க்ரஹ ஸம்காஸை: ஸாரதாம்புத ஸன்னிபை: |

பாண்டுரோபி: ப்ரதோலிபி: உச்சாபிரபி சம்வ்ருதாம் || 2-16

 

அத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)

 

கடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான்.  2-1 கால்களில்  ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. 2-2  நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. 1-3  நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன்,  இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான்.  1-4 வீரர்களுள் சிறந்த வீரன்.  தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை. 1-5  அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. 1-6  மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். 1-7  மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது,  மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும்  மணம் நிறைந்தவை. 1-9

நீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. 2-10 சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக,  காண ரம்யமாகத் தெரிந்தன. 2-11 ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன.    இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. 2-12 பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன.  ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான். 2-13-14 சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான்.  ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான். 2-15 மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர்.  மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது. 2-16

अट्टालकशताकीर्णां पताकाध्वजमालिनीम्॥                                5-2-17
तोरणैः काञ्चनैदृदीप्तां लतापंक्तिविचित्रितैः।
ददर्श हनुमाल्ँलङ्कां दिवि देवपुरीमिव॥                             5-2-18

गिरिमूर्ध्नि स्थितां लङ्कां पाण्डुरैर्भवनैः शुभैः।
स ददर्श कपिः श्रीमान् पुरमाकाशगं यथा॥                           5-2-19

पालितां राक्षसेन्द्रेण निर्मितां विश्वकर्मणा।
प्लवमानामिवाकाशे ददर्श हनुमान् पुरीम्॥                           5-2-20

वप्रप्राकारजघनां विपुलाम्बुनाम्बराम्।
शतघ्नीशूलकेशान्तामट्टालकवतंसकाम्॥                            5-2-21
मनसेव कृतां लङ्कां निर्मितां विश्वकर्मणा।
द्वारमुत्तरमासाद्य चिन्तयामास वानरः॥                            5-2-22

कैलासनिलयप्रख्यमालिखन्तमिवाम्बरम्।
डीयमानामिवाकाशमुच्छ्रितैर्भवनोत्तमैः॥                              5-2-23
संपूर्णां राक्षसैर्घोरैर्नागैर्भोगवतीमिव।
अचिन्त्यां सुकृतां स्पष्टां कुबेराध्युषितां पुरा॥                        5-2-24
दंष्ट्रिभिर्बहुभिः शूरैः शूलपट्टिशपाणिभिः।

रक्षितां राक्षसैर्घोरैर्गुहामाशीविषैरिव॥                                      5-2-25
तस्याश्च महतीं गुप्तिं सागरं च निरीक्ष्य सः।
रावणं च रिपुं घोरं चिन्तयामास वानरः॥                            5-2-26

आगत्यापीह हरयो भविष्यन्ति निरर्थकाः।
न हि युद्धेन वै लङ्का शक्या जेतुं सुरैरपि॥                        5-2-27

इमां तु विषमां दुर्गां लङ्कां रावणपालिताम्।
प्राप्यापि स महाबाहुः किं करिष्यति राघवः॥                         5-2-28

अवकाशो न सान्त्वस्य रक्षसेष्वभिगम्यते।
न दानस्य न भेदस्य नैव युद्धस्य दृश्यते॥                          5-2-29

चतुर्णामेव हि गतिर्वानराणां महात्मनाम्।
वालिपुत्रस्य नीलस्य मम राज्ञश्च धीमतः॥                          5-2-30

यावज्जानामि वैदेहीं यदि जीवति वा न वा।
तत्रैव चिन्तयिष्यामि दृष्ट्वा तां जनकात्मजाम्॥                      5-2-31

ततः स चिन्तयामास मुहूर्तं कपिकुञ्जरः।
गिरिशृङ्गे स्थितस्तस्मिन् रामस्याभ्युदये रतः॥                       5-2-32

 

அட்டாலிக சதாகீர்ணாம் பதாகாத்வஜ மாலினீம் |

தோரணை: காஞ்சணைர் தீப்தாம் லதா பங்க்தி விசித்ரிதை: ||2-17

ததர்ஸ ஹனூமான் லங்காம் திவி தேவ புரீமிவ |

கிரிமூர்த்னி ஸ்திதாம் லங்காம் பாண்டுரைர் பவனை: ஸுபை: |

ஸ ததர்ஸ கபி: ஸ்ரீமான் புரமாகாஸகம் யதா |

பாலிதாம் ராக்ஷஸேந்த்ரேண நிர்மிதாம் விஸ்வ கர்மணா |

ப்லவமானாமிவாகாஸே ததர்ஸ ஹனுமான் புரீம் ||

வப்ரப்ராகார ஜகனாம் விபுலாம்புவனாம்பராம் |

ஸதக்னீ ஸூல கேஸாந்தாம் அட்டாலிக வதம்ஸகாம் ||

மனஸேவ லக்ருதாம் லங்காம் நிர்மிதாம் விஸ்வகர்மணா | த்வாரமுத்தரமாஸாத்ய சிந்தயாமாஸ வானர: ||

கைலாஸ நிலய ப்ரக்யம் ஆலிகந்தமிவாம்பரம் |

டீயமானமிவாகாஸனம் உச்ச்ரிதைர் பவனோத்தமை: ||

ஸம்பூர்ணாம் ராக்ஷஸைர் கோரை: நாகைர் போகவதீமிவ |அசிந்த்யாம் சுக்ருதாம் ஸ்பஷ்டாம் குபேராத்யுஷிதாம் புரா ||

தம்ஷ்ட்ரிபி: பஹுபிர் ஸூரை: ஸூல பட்டிஸ பாணிபி: |

ர்க்ஷிதாம் ராக்ஷஸைர் கோரை: குஹாமாசீவிஷைரிவ ||

தஸ்யாஸ்ச மஹதீம் குப்திம் ஸாகரம் ச நிரீக்ஷ்ய ஸ |

ராவணம் ச ரிபும் கோரம் சிந்தயாமாஸ வானர: ||

ஆகத்யாபீஹ ஹரயோ ப்விஷ்யந்தி நிரர்தகா: |

ந ஹி யுத்தேன வை லங்கா ஸக்யா ஜேதும் சுரைரபி ||

இமாம் து விஷமாம் துர்காம் லங்காம் ராவண பாலிதாம் | ப்ராப்யாபி ஸ மஹாபாஹு: கிம் கரிஷ்யதி ராகவ: ||

அவகாஸோ ந ஸாந்த்வஸ்ய ராக்ஷஸேஷு அபிகம்யதே|

ந தானஸ்ய ந பேதஸ்ய நைவ யுத்தஸ்ய த்ருஸ்யதே ||

சதுர்ணாமேவ ஹி கதிர் வானராணாம் மஹாத்மனாம் |

வாலிபுத்ரஸ்ய நீலஸ்ய மம ராஞஸ்ச தீமத: ||

யாவஜ்ஜானாமி வைதேஹீ யதி ஜீவதி வா ந வா |

தத்ரைவ சிந்தயிஷ்யாமி த்ருத்ட்வா தாம் ஜனகாத்மஜாம் ||

தத: ஸ் சிந்தயாமாஸ முஹூர்தம் கபி குஞ்ஜர: |

கிரிஸ்ருங்கே ஸ்திதஸ்தஸ்மின் ராமஸ்யப்யுதயே ரத: ||2-32 பிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன. 2-17  மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த  மாளிகைகள், பால்கனிகள்  இருந்தன. 2-18 நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற,  தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை  ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம். 2-19 ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது.  அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள்,  மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. 2-20 வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், 2-21  வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, 2-22  ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர்.  ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். 2-24 இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். 2-25 இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை.  எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம்.  முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட  அசாதாரணமானவையே.  ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான்? 2-25 இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே43மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். 2-26 இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது.  வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான் 2-27.  சாம, தான பேத, தண்டம் என்ற  நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.  2-28 ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது.  2-29 க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். 2-30  தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். 2-31 திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. 2- 32

 

अनेन रूपेण मया न शक्या रक्षसां पुरी।
प्रवेष्टुं राक्षसैर्गुप्ता क्रूरैर्बलसमन्वितैः॥                              5-2-33

उग्रौजसो महावीर्या बलवन्तश्च राक्षसाः।
वञ्चनीया मया सर्वे जानकीं परिमार्गता॥                           5-2-34

लक्ष्यालक्ष्येण रूपेण रात्रौ लङ्कापुरी मया।
प्रवेष्टुं प्राप्तकालो मे कृत्यं साधयितुं महत्॥                         5-2-35

तां पुरीं तादृशीं दृष्ट्वा दुराधर्षं सुरासुरैः।
हनूमांश्चिन्तयामास विनिःश्वस्य मुहुर्मुहुः॥                          5-2-36

केनोपायेन पश्येयं मैथिलीं जनकात्मजाम्।
अदृष्टो राक्षसेन्द्रेण रावणेन दुरात्मना॥                              5-2-37

न विनश्येत् कथं कार्यं रामस्य विदितात्मनः।
एकामेकश्च पश्येयं रहिते जनकात्मजाम्॥                           5-2-38

भूताश्चार्था विपद्यन्ते देशकालविरोधिताः।
विक्लबं दूतमासाद्य तमः सूर्योदये यथा॥                           5-2-39

अर्थानर्थान्तरे बुद्धिर्निश्चितापि न शोभते।
घातयन्ति हि कार्याणि दूताः पण्डितमानिनः॥                        5-2-40

न विनश्येत् कथं कार्यं वैक्लव्यं न कथं भवेत्।
लङ्घनं च समुद्रस्य कथं नु न भवेद्वृथा॥                           5-2-41

मयि दृष्टे तु रक्षोभी रामस्य विदितात्मनः।
भवेद्व्यर्थमिदं कार्यं रावणानर्थमिच्छतः॥                            5-2-42

न हि शक्यं क्वचित् स्थातुमविज्ञातेन राक्षसैः।
अपि राक्षसरूपेण किमुतान्येन केनचित्॥                            5-2-43

वायुरप्यत्र नाज्ञातश्चरेदिति मतिर्मम।
न ह्यस्त्यविदितं किंचिद्राक्षसानां बलीयसाम्॥                        5-2-44

इहाहं यदि तिष्ठामि स्वेन रूपेण संवृतः।
विनाशमुपयास्यामि भर्तुरर्थश्च हीयते॥                              5-2-45

तदहं स्वेन रूपेण रजन्यां ह्रस्वतां गतः।
लङ्कामभिगमिष्यामि राघवस्यार्थसिद्धये॥                           5-2-46

रावणस्य पुरीं रात्रौ प्रविश्य सुदुरासदाम्।
विचिन्वन् भवनं सर्वं द्रक्ष्यामि जनकात्मजाम्॥                       5-2-47

इति संचिन्त्य हनुमान् सूर्यस्यास्तमयं कपिः।

आचकाङ्क्षे तदा वीरो वैदेह्या दरशनोत्सुकः॥                         5-2-48

அனேன ரூபேண மயா ந ஸக்2யா ரக்ஷஸாம் புரீ |

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் ப3ல ஸமன்விதை: ||

உக்3ரௌஜஸோ மஹாவீர்யா ப3லவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்க3தா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாத4யிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்3ருஸீம் த்3ருஷ்ட்வா து3ராத4ர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்3ருஷ்டோ ராக்ஷஸேந்த்3ரேண ராவணேன து3ராத்மனா ||

ந வினஸ்யேத் கத2ம் கார்யம் ராமஸ்ய விதி3தாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூ4தாஸ்சார்தா2 விபத்யந்தே தே3ஸ கால விரோதி4தா: |

விக்லவம் தூ3தமாஸாத்4ய தம: சூர்யோத3யே யதா2 ||

அர்தா2னர்தா2ந்தரே பு3த்3தி4ர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

கா4தயந்தி ஹி கார்யாணி தூ3தா: பண்டித மானின : || 2-40

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் பல ஸமன்விதை: ||

உக்ரௌஜஸோ மஹாவீர்யா பலவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்கதா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாதயிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்ருஸீம் த்ருஷ்ட்வா துராதர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்ருஷ்டோ ராக்ஷஸேந்த்ரேண ராவணேன துராத்மனா ||

ந வினஸயேத் கதம் கார்யம் ராமஸ்ய விதிதாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூதாஸ்சார்தா விபத்யந்தே தேஸ கால விரோதிதா: |

விக்லவம் தூதமாஸாத்ய தம: சூர்யோதயே யதா ||

அர்தார்னர்தாந்தரே புத்திர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

காதயந்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின : ||

ந வினஸ்யேத் கதம் கார்யம் வைக்லவ்யம் ந கதம் பவேத் |

லங்கனம் ச சமுத்ரஸ்ய கதம் நு ந வ்ருதா பவேத் ||

மயி த்ருஷ்டே து ரக்ஷோபி: ராமஸ்ய விதிதாத்மன: |

ப்வேத்வ்யர்தமிதம் கார்யம் ராவணானர்தமிச்சத: ||

ந ஹி ஸக்யம் க்வசித் ஸ்ததுமவிஞாதேன ராக்ஷஸை: |

அபி ராக்ஷஸ ரூபேன கிமுதான்யேன கேனசித் ||

வாயுரப்யத்ர நாஞாதஸ்சரேதிதி மதிர்மம |

ந ஹ்யஸ்த்யவிதிதம் கிம்சித் ராக்ஷஸானாம் பலீயஸாம் ||

இஹாஹம் யதி திஷ்டாமி ஸ்வேன ரூபேன ஸம்வ்ருத: |

வினாஸமுபயாஸ்யாமி பர்துரர்தஸ்ச ஹீயதே || (2-45)

ததஹம் ஸ்வேன ரூபேண ரஜன்யாம் ஹ்ரஸ்வதாம் கத:|

லங்காமபிகமிஷ்யாமி ராகவஸ்யார்த சித்தயே ||

ராவணஸ்ய புரீ ராத்ரௌ ப்ரவிஸ்ய சுதுராஸதம் |

விசின்வன் பவனம் சர்வம் த்ரக்ஷ்யாமி ஜனகாத்மஜாம் ||

இதி சம்சிந்த்ய ஹனுமான் சூர்யஸ்யாஸ்தமயம் கபி: |

ஆசகாங்க்க்ஷே ததா வீரோ வைதேஹ்யா தர்ஸனோத்சுக: ||2-48

என்ன உபாயம் செய்வேன்? எப்படி ஜனகாத்மஜாவை காண்பேன்? என்ற கவலை சூழ்ந்தது.  எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. 2-41  காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது.  நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு. 2-42  இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா? அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும்? 2-43  காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. 2-44 பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், 2-45 இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். 2-46 எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். 2-47  வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். 2-48 மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். 2-49

 

सूर्ये चास्तं गते रात्रौ देहं संक्षिप्य मारुतिः।
पृषदंशकमात्रः सन् बभूवाद्भुतदर्शनः॥                              5-2-49

प्रदोषकाले हनुमांस्तूर्णमुत्प्लुत्य वीर्यवान्।
प्रविवेश पुरीं रम्यां सुविभक्तमहापथाम्॥                            5-2-50

प्रासादमालाविततां स्तम्भैः काञ्चनराजतैः।
शातकुम्भमयैर्जालैर्गन्धर्वनगरोपमाम्॥                               5-2-51
सप्तभौमाष्टभौमैश्च स ददर्श महापुरीम्।
तलैः स्फटिकसंकीर्णैः कार्तस्वरविभूषितैः॥                           5-2-52

वैदूर्यमणिचित्रैश्च मुक्ताजालविभूषितैः।
तलैः शुशुभिरे तानि भवनान्यत्र रक्षसाम्॥                           5-2-53

काञ्चनानि विचित्राणि तोरणानि च रक्षसाम्।
लङ्कामुद्द्योतयामासुः सर्वतः समलंकृताम्॥                         5-2-54

अचिन्त्यामद्भुताकारां दृष्ट्वा लङ्कां महाकपिः।
आसीद्विषण्णे हृष्टश्च वैदेह्या दर्शनोत्सुकः॥                         5-2-55

स पाण्डरोद्विद्धविमानमालिनीं

महार्हजाम्बूनदजालतोरणाम्।
यशस्विनीं रावणबाहुपालितां
क्षपाचरैर्भीमबलैः समावृताम्॥                                     5-2-56

चन्द्रोऽपि साचिव्यमिवास्य

कुर्वंस्तारागणैर्मध्यगतो विराजन्।
ज्योत्स्नावितानेन वितत्य

लोकमुत्तिष्ठते नैकसहस्ररश्मिः॥                                   5-2-57

शङ्खप्रभं क्षीरमृणालवर्ण-
मुद्गच्छमानं व्यवभासमानम्।
ददर्श चन्द्रं स कपिप्रवीरः
पोप्लूयमानं सरसीव हंसम्॥                                            5-2-58

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे निशागमप्रतिक्षा नाम द्वितीयः सर्गः

சூர்யே சாஸ்தம் க3தே ராத்ரௌ தே3ஹம் ஸங்க்ஷிப்ய மாருதி: |

ப்ருஷதம்க மாத்ர: ஸன் ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||

ப்ரதோ3ஷ காலே ஹனுமான் தூர்ணமுத்ப்லுத்ய வீர்யவான் |

ப்ரவிவே புரீம் ரம்யாம் ஸுவிப4க்த மஹா பதா2ம் ||

ப்ராஸாத4 மாலா விததாம் ஸ்தம்பை4: காஞ்சன ராஜதை: |

ஸாதகும்ப4 மயைர் ஜாலை: க3ந்த4ர்வ நக3ரோபமாம் ||

சப்தபௌ4மாஷ்டபௌ4மைஸ்ச ஸ த33ர் மஹாபுரீம் |

தலை: ஸ்பாடிக ஸங்கீர்ணை: கார்தஸ்வர விபூ4ஷிதை: ||

வைதூ3ர்யமணி விசித்ரைஸ்ச முக்தாஜால விபூ4ஷிதை: |

தலை: ஸுஸுபி4ரே தானி ப4வனான்யத்ர ரக்ஷஸாம் ||

காஞ்சனானி விசித்ராணி தோரணானி ச ரக்ஷஸாம் |

லங்காமுத்த்3யோதயாமாஸு: சர்வத: ஸமலங்க்ருதாம் ||

அசிந்த்யாம் அத்பு4தாகாராம் த்3ருஷ்ட்வா லங்காம் மஹா கபி: |

ஆசீத்விஷண்ணோ ஹ்ருஷ்டஸ்ச வைதே3ஹ்யா த3ர்ஸனோத்ஸுக: || 2-55

ஸ பாண்டரோத்3வித்த4 விமான மாலினீம் மஹார்ஹ ஜாம்பூ3னத3ஜால தோரணாம் |

ஸ்வினீம் ராவண பா3ஹு பாலிதாம் க்ஷபாசரை: பீ4ம ப3லை: ஸமாவ்ருதாம் ||

சந்த்3ரோ(அ)பி ஸாசிவ்யமிவாஸ்ய குர்வன் தாராக3ணைர் மத்4ய க3தோ விராஜன் |

ஜ்யோத்ஸ்னா விதானேன விதத்ய லோகமுத்திஷ்டதே நைக ஸஹஸ்ர ரஸ்மி: ||

ங்க2ப்ரப4ம் க்ஷீரம்ருணால வர்ணமுத்கச்ச2மானம் வ்யவபா4ஸமானம் |

3த3ர்  சந்த்3ரம் ஸ கபிப்ரவீர: போப்லூயமானம் ஸரஸீவ

ஹம்ஸம் || (2-58)

(இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்தர காண்டே சாக3ர லங்க4ணம் நாம த்விதீய: த்விதீய:ஸர்க:)

அந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது. 2-50  ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும்.  ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது. 2-51 வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன. 2-52  தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின. 2-53 நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன. 1-54  வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது. 1-55 வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, 2-56 இலங்கை எனும் ஸ்திரீயை, கண்டான். -56  சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான். 2-57  அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. -57  அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான். -2-58

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

द्वितीयः सर्गः

निशागमप्रतीक्षा

 

स सागरमनाधृष्यमतिक्रम्य महाबलः।
त्रिकूटशिखरे लङ्कां स्थितां स्वस्थो ददर्श ह॥                         5-2-01

ततः पादपमुक्तेन पुष्पवर्षेण वीर्यवान्।
अभिवृष्टः स्थितस्तत्र बभौ पुष्पमयो यथा॥                          5-2-02

योजनानां शतं श्रीमांस्तीर्त्वाप्युत्तमविक्रमः।
अनिःश्वसन् कपिस्तत्र न ग्लानिमधिगच्छति॥                       5-2-03

शतान्यहं योजनानां क्रमेयं सुबहुन्यपि।
किं पुनः सागरस्यान्तं संख्यातं शतयोजनम्॥                        5-2-04

स तु वीर्यवतां श्रेष्ठः प्लवतामपि चोत्तमः।
जगाम वेगवाल्ँलङ्कां लङ्घयित्वा महोदधिम्॥                        5-2-05

शाद्वलानि च नीलानि गन्धवन्ति वनानि च।
गण्डवन्ति च मध्येन जगाम नगवन्ति च॥                                5-2-06

शैलांश्च तरुभिश्छन्नान् वनराजीश्च पुष्पिताः।
अभिचक्राम तेजस्वी हनूमान् प्लवगर्षभः॥                           5-2-07

स तस्मिन्नचले तिष्ठन् वनान्युपवनानि च।
स नगाग्रे स्थितां लङ्कां ददर्श पवनात्मजः॥                         5-2-08

सरळान् कर्णिकारांश्च खर्जूरांश्च सुपुष्पितान्।
प्रियाळान् मुचुलिन्दांश्च कुटजान् केतकानपि॥                        5-2-09
प्रियङ्गून् गन्धपूर्णांश्च नीपान् सप्तच्छदांस्तथा।
असनान् कोविदारांश्च करवीरांश्च पुष्पितान्॥                        5-2-10
पुष्पभारनिबद्धांश्च तथा मुकुलितानपि।
पादपान् विहगाकीर्णान् पवनाधूतमस्तकान्॥                                5-2-11
हंसकारण्डवाकीर्णा वापीः पद्मोत्मलायुताः।
आक्रीडान् विविधान् रम्यान् विविधांश्च जलाशयान्॥                   5-2-12
संततान् विविधैर्वृक्षैः सर्वर्तुफलपुष्पितैः।
उद्यानानि च रम्याणि ददर्श कपिकुञ्जरः॥                                5-2-13

समासाद्य च लक्ष्मीवालँलङ्कां रावणपालिताम्।
परिखाभिः सपद्माभिः सोत्पलाभिरलंकृताम्॥                         5-2-14
सीतापहरणार्थेन रावणेन सुरक्षिताम्।
समन्ताद्विचरद्भिश्च राक्षसैः कामरूपिभिः॥                         5-2-15
काञ्चनेनावृतां रम्यां प्राकारेण महापुरीम्।
गृहैश्च ग्रहसंकाशैः शारदाम्बुदसंनिभैः॥                              5-2-16

அத்யாயம் 2 – நிஸாகம ப்ரதீக்ஷா

ஸ ஸாக3ரமனாத4ருஷ்யமதிக்ரம்ய மஹாப3ல: |

த்ரிகூட ஸிகரே லங்காம் ஸ்தி2தாம் ஸ்வஸ்தோ த33ர்ஸ ஹ ||

தத: பாத3ப முக்தேன புஷ்பவர்ஷேன வீர்யவான் |

அபி4வ்ருஷ்ட: ஸ்திதஸ்தத்ர ப3பௌ4 புஷ்பமயோ யதா2 ||

யோஜனானாம் தம் ஸ்ரீமான் தீர்த்வாப்யுத்தம விக்ரம: |

அனிஸ்வஸன் கபிஸ்தத்ர ந க்3லானிமதி43ச்சதி ||

தான்யஹம் யோஜனானாம் க்ரமேயம் ஸுபஹூன்யபி |

கிம் புன: சாக3ரஸ்யாந்தம் ஸம்க்2யாதம் கத யோஜனம் ||

ஸ து வீர்யவதாம் ஸ்ரேஷ்ட: ப்லவதாமபி சோத்தம: | ஜகா3ம வேகவான் லங்காம் லங்க4யித்வா மஹோத4தி3ம் ||

ஸாத்3வலானி ச நீலானி க3ந்த4வந்தி வனானி ச |

3ண்டவந்தி ச மத்4யேன ஜகா3ம நக3வந்தி ச ||

ஸைலாம்ஸ்ச தருபி4ஸ்ச2ன்னான் வனராஜீஸ்ச புஷ்பிதா: |

அபி4சக்ராம தேஜஸ்வீ ஹனூமான் ப்லவக3ர்ஷப4: ||

ஸ தஸ்மின்னசலே திஷ்டன் வனான்யுபவனானி ச |

ஸ நகா3க்3ரே ஸ்தி2தாம் லங்காம் த33ர்ஸ பவனாத்மஜ: ||

ஸரலான் கர்ணிகாராம்ஸ்ச கர்ஜூராம்ஸ்ச சுபுஷ்பிதான் |

ப்ரியாலான் முசுலிந்தாம்ச குடஜான் கேதகானபி ||

ப்ரியங்கூ3ன் க3ந்த4பூர்ணாம்ஸ்ச நீபான் சப்தஸ்சதான் ததா2||

அஸனான் கோவிதா3ராம்ஸ்ச கரவீராம்ஸ்ச  புஷ்பிதான் ||

புஷ்பபார நிபத்தான்ஸ்ச  ததா2 முகுலிதானபி |

பாத3பான் விஹகா3கீர்ணான் பவனாதூ4த மஸ்தகான் ||

ஹம்ஸ காரண்டவா கீர்ணா வாபீ: பத்3மோத்பலாயுதா: |

ஆக்ரீடான் விவிதா4ன் ரம்யான் விவிதா4ம்ஸ்ச  ஜலாயான் ||

ஸந்ததான் விவிதை4ர் வ்ருக்ஷை: ஸர்வர்து பல புஷ்பிதை: |

உத்3யானானி ச ரம்யாணி த33ர்ஸ கபி குஞ்ஜர: ||

ஸமாஸாத்ய ச லக்ஷ்மீவான் லங்காம் ராவண பாலிதாம் |பரிகாபி: ஸபத்3மாபி4: ஸோத்பலாபிரலங்க்ருதாம் || (2-14)

சீதாபஹரணார்தே2ன ராவணேன ஸுரக்ஷிதாம் |

ஸமந்தாத் விசரித்ப்4ஸ்ச  ராக்ஷஸை: காம ரூபிபி4: ||

காஞ்சனேனாவ்ருதாம் ரம்யாம் ப்ராகாரேண மஹாபுரீம் |

க்3ருஹைஸ்ச  க்3ரஹ ஸம்காஸை: ஸாரதா3ம்பு33 ஸன்னிபை4: |

அத்தியாயம் 2 (340) நிசாக3ம ப்ரதீக்ஷா (இரவு வர காத்திருத்தல்)

 

கடக்க முடியாது என்று நினைத்த கடலையே கடந்து வந்து விட்ட ஹனுமான், த்ரிகூட மலையில் அமைந்திருந்த லங்கா நகரை நிதானமாக ஊன்றி கவனித்தான்.  2-1 கால்களில்  ஒட்டியிருந்த புஷ்பங்களை உதற, அது குவியலாக அவனுக்கே புஷ்பங்களால் அபிஷேகம் செய்து வைத்தது போல மறைத்தது. 2-2  நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடந்து வந்த பின்னும், வானர வீரன் களைப்பாகத் தெரியவில்லை. 1-3  நூறு யோஜனை தூரம் தாண்டி விட்டேன். இன்னும் எல்லையில்லாமல் பரந்து இருந்தாலும் தாண்டுவேன்,  இது நிச்சயிக்கப் பட்ட நூறு யோஜனை தூரம் தானே என்று மனதில் எண்ணிக் கொண்டான்.  1-4 வீரர்களுள் சிறந்த வீரன்.  தாண்டி குதிக்கும் வானர இனத்திலும் முதன்மையானவன். அவன் ஒருவனால் தான் சமுத்திரத்தை கடந்து லங்கையை அடைய முடிந்தது என்பதில் சந்தேகமில்லை. 1-5  அந்த மலையில் நின்றபடி வனங்களையும், உப வனங்களையும் கண்டான். பசும் புற்தரை, கரு நீல வர்ணத்தில், மணம் வீசும் புஷ்பங்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்து தெரிந்தன. 1-6  மலை என்பதே தெரியாதபடி நெருங்கி வளர்ந்திருந்த மரங்கள், இவைகளைப் பார்த்தபடி ஹனுமான் மேலும் நடந்தான். 1-7  மலையின் உச்சியில், லங்கா நகரம் தெரிந்தது,  மரங்களில் பல பரிச்சயமானவை. சால, கர்ணிகார, கர்ஜூர, மரங்கள் புஷ்பித்திருந்தன. ப்ரியாவான், முசுலிந்தான் என்பவையும், குடஜம், கேதகம், ப்ரயங்கா4ன் என்பவையும்  மணம் நிறைந்தவை. 1-9

நீப, சப்தச்சத, அஸன, கோவிதா3ர, கரவீர எனும் மரங்களும் பூத்துக் குலுங்கின. புஷ்ப பாரத்தினால் இவை வளைந்து தொங்கின. 2-10 சில மரங்களில் இப்பொழுது தான் மொட்டு கட்ட ஆரம்பித்திருந்தன. காற்றில் அசைந்தாடும் கிளைகளும், கிளைக்கு கிளை பறவை கூடுகளுமாக,  காண ரம்யமாகத் தெரிந்தன. 2-11 ஆங்காங்கு இருந்த கிணறுகளில், குளங்களில், பத்ம, உத்பலங்கள் மலர்ந்து காணப் பட்டன.    இவைகளில் ஹம்ஸங்களும், காரண்டவ பக்ஷிகளும் விளையாடின. 2-12 பலவிதமான நீர் நிலைகள், விளையாட்டு மைதானங்கள் காணப்பட்டன.  ராவணன் பாலித்து வந்த லங்கா நகரத்தில் எந்த பருவமானாலும் பழுக்கக் கூடிய பழ மரங்கள், சந்ததம் எனும் இனம், பலவித மரங்களூம் அடர்த்தியாக இருக்க, உத்யான வனங்கள் மனதைக் கவரும் வண்ணம் இருந்ததை மாருதாத்மஜன் கவனித்து மனதில் வியந்து கொண்டான். 2-13-14 சீதையை கவர்ந்து கொண்டு வந்த பின் காவல் மேலும் பலப் படுத்தப் பட்டிருப்பதை ஊகித்துக் கொண்டான்.  ஊரெங்கும் ராக்ஷஸர்கள், காவல் வீரர்கள் நடமாடுவதைக் கண்டான். 2-15 மிக அதிகமான எண்ணிக்கையில் இந்த வீரர்கள், பெரிய வில்லும் ஆயுதங்களும் தாங்கி சுறு சுறுப்பாக நடை போட்டனர்.  மகாபுரி-பெரிய நகரமாக லங்கா நகரம் இருந்தது. 2-16

 

अट्टालकशताकीर्णां पताकाध्वजमालिनीम्॥                                5-2-17
तोरणैः काञ्चनैदृदीप्तां लतापंक्तिविचित्रितैः।
ददर्श हनुमाल्ँलङ्कां दिवि देवपुरीमिव॥                             5-2-18

गिरिमूर्ध्नि स्थितां लङ्कां पाण्डुरैर्भवनैः शुभैः।
स ददर्श कपिः श्रीमान् पुरमाकाशगं यथा॥                           5-2-19

पालितां राक्षसेन्द्रेण निर्मितां विश्वकर्मणा।
प्लवमानामिवाकाशे ददर्श हनुमान् पुरीम्॥                           5-2-20

वप्रप्राकारजघनां विपुलाम्बुनाम्बराम्।
शतघ्नीशूलकेशान्तामट्टालकवतंसकाम्॥                            5-2-21
मनसेव कृतां लङ्कां निर्मितां विश्वकर्मणा।
द्वारमुत्तरमासाद्य चिन्तयामास वानरः॥                            5-2-22

कैलासनिलयप्रख्यमालिखन्तमिवाम्बरम्।
डीयमानामिवाकाशमुच्छ्रितैर्भवनोत्तमैः॥                              5-2-23
संपूर्णां राक्षसैर्घोरैर्नागैर्भोगवतीमिव।
अचिन्त्यां सुकृतां स्पष्टां कुबेराध्युषितां पुरा॥                        5-2-24
दंष्ट्रिभिर्बहुभिः शूरैः शूलपट्टिशपाणिभिः।

रक्षितां राक्षसैर्घोरैर्गुहामाशीविषैरिव॥                                      5-2-25
तस्याश्च महतीं गुप्तिं सागरं च निरीक्ष्य सः।
रावणं च रिपुं घोरं चिन्तयामास वानरः॥                            5-2-26

आगत्यापीह हरयो भविष्यन्ति निरर्थकाः।
न हि युद्धेन वै लङ्का शक्या जेतुं सुरैरपि॥                        5-2-27

इमां तु विषमां दुर्गां लङ्कां रावणपालिताम्।
प्राप्यापि स महाबाहुः किं करिष्यति राघवः॥                         5-2-28

अवकाशो न सान्त्वस्य रक्षसेष्वभिगम्यते।
न दानस्य न भेदस्य नैव युद्धस्य दृश्यते॥                          5-2-29

चतुर्णामेव हि गतिर्वानराणां महात्मनाम्।
वालिपुत्रस्य नीलस्य मम राज्ञश्च धीमतः॥                          5-2-30

यावज्जानामि वैदेहीं यदि जीवति वा न वा।
तत्रैव चिन्तयिष्यामि दृष्ट्वा तां जनकात्मजाम्॥                      5-2-31

ततः स चिन्तयामास मुहूर्तं कपिकुञ्जरः।
गिरिशृङ्गे स्थितस्तस्मिन् रामस्याभ्युदये रतः॥                       5-2-32

 

அட்டாலிக சதாகீர்ணாம் பதாகாத்வஜ மாலினீம் |

தோரணை: காஞ்சணைர் தீப்தாம் லதா பங்க்தி விசித்ரிதை: ||2-17

ததர்ஸ ஹனூமான் லங்காம் திவி தேவ புரீமிவ |

கிரிமூர்த்னி ஸ்திதாம் லங்காம் பாண்டுரைர் பவனை: ஸுபை: |

ஸ ததர்ஸ கபி: ஸ்ரீமான் புரமாகாஸகம் யதா | பாலிதாம் ராக்ஷஸேந்த்ரேண நிர்மிதாம் விஸ்வ கர்மணா |

ப்லவமானாமிவாகாஸே ததர்ஸ ஹனுமான் புரீம் ||

வப்ரப்ராகார ஜகனாம் விபுலாம்புவனாம்பராம் |

ஸதக்னீ ஸூல கேஸாந்தாம் அட்டாலிக வதம்ஸகாம் ||

மனஸேவ லக்ருதாம் லங்காம் நிர்மிதாம் விஸ்வகர்மணா | த்வாரமுத்தரமாஸாத்ய சிந்தயாமாஸ வானர: ||

கைலாஸ நிலய ப்ரக்யம் ஆலிகந்தமிவாம்பரம் |

டீயமானமிவாகாஸனம் உச்ச்ரிதைர் பவனோத்தமை: ||

ஸம்பூர்ணாம் ராக்ஷஸைர் கோரை: நாகைர் போகவதீமிவ |அசிந்த்யாம் சுக்ருதாம் ஸ்பஷ்டாம் குபேராத்யுஷிதாம் புரா ||

தம்ஷ்ட்ரிபி: பஹுபிர் ஸூரை: ஸூல பட்டிஸ பாணிபி: |

ர்க்ஷிதாம் ராக்ஷஸைர் கோரை: குஹாமாசீவிஷைரிவ ||

தஸ்யாஸ்ச மஹதீம் குப்திம் ஸாகரம் ச நிரீக்ஷ்ய ஸ |

ராவணம் ச ரிபும் கோரம் சிந்தயாமாஸ வானர: ||

ஆகத்யாபீஹ ஹரயோ ப்விஷ்யந்தி நிரர்தகா: |

ந ஹி யுத்தேன வை லங்கா ஸக்யா ஜேதும் சுரைரபி ||

இமாம் து விஷமாம் துர்காம் லங்காம் ராவண பாலிதாம் | ப்ராப்யாபி ஸ மஹாபாஹு: கிம் கரிஷ்யதி ராகவ: ||

அவகாஸோ ந ஸாந்த்வஸ்ய ராக்ஷஸேஷு அபிகம்யதே|

ந தானஸ்ய ந பேதஸ்ய நைவ யுத்தஸ்ய த்ருஸ்யதே ||

சதுர்ணாமேவ ஹி கதிர் வானராணாம் மஹாத்மனாம் |

வாலிபுத்ரஸ்ய நீலஸ்ய மம ராஞஸ்ச தீமத: ||

யாவஜ்ஜானாமி வைதேஹீ யதி ஜீவதி வா ந வா |

தத்ரைவ சிந்தயிஷ்யாமி த்ருத்ட்வா தாம் ஜனகாத்மஜாம் ||

தத: ஸ் சிந்தயாமாஸ முஹூர்தம் கபி குஞ்ஜர: |

கிரிஸ்ருங்கே ஸ்திதஸ்தஸ்மின் ராமஸ்யப்யுதயே ரத: ||2-32

 

பிரகாரங்கள் பொன்னால் இழைத்து செய்யப் பட்ட வேலைப் பாடுகளுடன் காணப்பட்டன. 2-17  மலை போல் நிமிர்ந்து நின்றன. சரத் கால சந்திரன் போல பிரகாசமாக விளங்கின. வெண் நிற பூச்சுகளுடன், உயர்ந்த  மாளிகைகள், பால்கனிகள்  இருந்தன. 2-18 நூற்றுக் கணக்கான மாடங்கள், கொடிகளும் கம்பங்களும் காஞ்சனமயமான தோரணங்களும் செல்வ செழிப்பை பறை சாற்ற,  தேவ லோகத்து நகரம் போல, பலவிதமான அலங்காரங்களுடன் அந்த நகரை  ஹனுமான் கண்டான். வெண் நிற மாளிகைகள், வரிசையாக அந்த மலை உச்சியில் வரிசையாகத் தெரிந்தன. ஆகாயத்தில் நிர்மாணிக்கப்பட்டது போல அந்த பவனங்கள் தனித்து தெரிந்தன. விஸ்வகர்மாவினால் கட்டப் பட்டு, ராவணன் பரி பாலித்து வந்த நகரம். 2-19 ஆகாயத்தில் தாவிச் செல்வது போல, ஊஞ்சல் ஆடுவது போல அந்த நகரம் மிகச் சிறப்பாக விளங்கியது.  அந்த நகரமே ஒரு பெண் போல, உருண்டு திரண்ட ஜகனங்களும், (பிரகாரங்கள்), ஏராளமான காடுகளும், நீர் நிலைகளூம் அம்பரமாக (ஆடையாக), நூற்றுக் கணக்கான சூலங்கள் கேசங்களாக (கேசமாக), அட்டாலிகா – மாட மாளிகைகள்,  மனதில் உருவகப்படுத்திக் கொண்டு உடனுக்குடன் விஸ்வகர்மா கட்டியது போல இருந்தது. 2-20 வடக்கு வாயிலை அடைந்து ஹனுமான் யோஜித்தான். (பெண்ணாக பாவித்து மிகவும் சிரத்தையுடன் கட்டியதாக) கைலாஸ நிலயம் போலவும், 2-21  வானத்தை தொட்டு விடுவது போலவும், உத்தமமான பவனங்கள். போ4கவதி நகரம் முழுவதும் நாகங்கள் மண்டிக் கிடப்பது போல, 2-22  ராக்ஷஸர்கள் கோரமான முகத்துடன் கணக்கில்லாமல் இருந்தனர்.  ஆலகால விஷம் உள்ள குகையைப் போல ராக்ஷஸர்கள், நீண்ட பற்களும், சூலம், பட்டிசம் இவைகளை கையில் ஏந்தியும், பொறுக்கி எடுத்த வீரர்களாக காவலுக்கு நியமிக்கப் பட்டிருந்தவர்களைத் தவிரவும் நிறைய காணப்பட்டனர். 2-24 இந்த லங்கா நகரையும், சமுத்திரத்தையும் பார்த்து, ஹனுமான் நமது எதிரி சாதாரணமானவன் அல்ல என்று நினைத்தான். 2-25 இங்கு வந்தால் கூட நமது வானரப் படையினர் எதையும் சாதிக்க முடியப் போவதில்லை.  எந்த தேவர்கள் வந்தாலும் யுத்தம் செய்து இந்த லங்கா நகரை ஜயிப்பது கடினம்.  முடியாது எனலாம். இந்த லங்கையின் கோட்டைகள் கூட  அசாதாரணமானவையே.  ராவணன் ரக்ஷித்து வரும் இந்த நகரம் வந்தும் ராகவன் தான் என்ன செய்யப் போகிறான்? 2-25 இந்த ராக்ஷஸர்களுடன் சமாதான பேச்சு வார்த்தையும் எடுபடாது. தா3னமோ, பே43மோ பலனளிக்கப் போவதில்லை. யுத்தம் செய்வதோ, கேட்கவே வேண்டாம். 2-26 இந்த நான்கு முறைகள் தான் நமக்குத் தெரிந்தது.  வாலி புத்திரனுக்கும், நீலனுக்கும், எங்கள் அரசனான சுக்ரீவனுக்கும் தெரிந்த ராஜ தந்திரம் இது தான் 2-27.  சாம, தான பேத, தண்டம் என்ற  நான்கு வழிகள், இது இருக்கட்டும், நாம் வந்த காரியத்தை கவனிப்போம். வைதேஹி உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டும்.  2-28 ஜனகாத்மஜாவை எங்கு, எப்படிக் காண்போம். ராமனுடைய காரிய சித்திக்காக மனதினுள் தியானம் செய்தவனாக, மலையின் மேல் முஹுர்த்த நேரம் ஹனுமான் நின்றான். இந்த ரூபத்தோடு என்னால் லங்கா நகரினுள் போக முடியாது.  2-29 க்ரூரமான, பலசாலிகளான காவல் வீரர்கள் போகும் இடமெல்லாம் எதிர்ப்படுவார்கள். உக்ரமாக தண்டிக்கக் கூடியவர்கள். கண்டால் விட மாட்டார்கள். இவர்கள் கண்ணில் படாமல், ஜானகியைத் தேடியாக வேண்டும். 2-30  தெரிந்தும் தெரியாமலுமான ஒரு உருவம் எடுத்துக் கொண்டு லங்கையில் இரவில் நுழைந்தால், என் காரியத்தை ஒழுங்காக செய்ய முடியலாம். 2-31 திரும்ப திரும்ப லங்கையின் காவல் ஏற்பாடுகளையும், தேவர்கள் கூட எளிதில் நுழைய முடியாதபடி லாகவமாக பாதுகாப்பாக கட்டப் பட்டிருந்த லங்கா நகரையும் காண நிராசையே நிறைந்தது. 2- 32

 

 

 

अनेन रूपेण मया न शक्या रक्षसां पुरी।
प्रवेष्टुं राक्षसैर्गुप्ता क्रूरैर्बलसमन्वितैः॥                              5-2-33

उग्रौजसो महावीर्या बलवन्तश्च राक्षसाः।
वञ्चनीया मया सर्वे जानकीं परिमार्गता॥                           5-2-34

लक्ष्यालक्ष्येण रूपेण रात्रौ लङ्कापुरी मया।
प्रवेष्टुं प्राप्तकालो मे कृत्यं साधयितुं महत्॥                         5-2-35

तां पुरीं तादृशीं दृष्ट्वा दुराधर्षं सुरासुरैः।
हनूमांश्चिन्तयामास विनिःश्वस्य मुहुर्मुहुः॥                          5-2-36

केनोपायेन पश्येयं मैथिलीं जनकात्मजाम्।
अदृष्टो राक्षसेन्द्रेण रावणेन दुरात्मना॥                              5-2-37

न विनश्येत् कथं कार्यं रामस्य विदितात्मनः।
एकामेकश्च पश्येयं रहिते जनकात्मजाम्॥                           5-2-38

भूताश्चार्था विपद्यन्ते देशकालविरोधिताः।
विक्लबं दूतमासाद्य तमः सूर्योदये यथा॥                           5-2-39

अर्थानर्थान्तरे बुद्धिर्निश्चितापि न शोभते।
घातयन्ति हि कार्याणि दूताः पण्डितमानिनः॥                        5-2-40

न विनश्येत् कथं कार्यं वैक्लव्यं न कथं भवेत्।
लङ्घनं च समुद्रस्य कथं नु न भवेद्वृथा॥                           5-2-41

मयि दृष्टे तु रक्षोभी रामस्य विदितात्मनः।
भवेद्व्यर्थमिदं कार्यं रावणानर्थमिच्छतः॥                            5-2-42

न हि शक्यं क्वचित् स्थातुमविज्ञातेन राक्षसैः।
अपि राक्षसरूपेण किमुतान्येन केनचित्॥                            5-2-43

वायुरप्यत्र नाज्ञातश्चरेदिति मतिर्मम।
न ह्यस्त्यविदितं किंचिद्राक्षसानां बलीयसाम्॥                        5-2-44

इहाहं यदि तिष्ठामि स्वेन रूपेण संवृतः।
विनाशमुपयास्यामि भर्तुरर्थश्च हीयते॥                              5-2-45

तदहं स्वेन रूपेण रजन्यां ह्रस्वतां गतः।
लङ्कामभिगमिष्यामि राघवस्यार्थसिद्धये॥                           5-2-46

रावणस्य पुरीं रात्रौ प्रविश्य सुदुरासदाम्।
विचिन्वन् भवनं सर्वं द्रक्ष्यामि जनकात्मजाम्॥                       5-2-47

इति संचिन्त्य हनुमान् सूर्यस्यास्तमयं कपिः।

आचकाङ्क्षे तदा वीरो वैदेह्या दरशनोत्सुकः॥                         5-2-48

 

அனேன ரூபேண மயா ந ஸக்2யா ரக்ஷஸாம் புரீ |

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் ப3ல ஸமன்விதை: ||

உக்3ரௌஜஸோ மஹாவீர்யா ப3லவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்க3தா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாத4யிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்3ருஸீம் த்3ருஷ்ட்வா து3ராத4ர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்3ருஷ்டோ ராக்ஷஸேந்த்3ரேண ராவணேன து3ராத்மனா ||

ந வினஸ்யேத் கத2ம் கார்யம் ராமஸ்ய விதி3தாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூ4தாஸ்சார்தா2 விபத்யந்தே தே3ஸ கால விரோதி4தா: |

விக்லவம் தூ3தமாஸாத்4ய தம: சூர்யோத3யே யதா2 ||

அர்தா2னர்தா2ந்தரே பு3த்3தி4ர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

கா4தயந்தி ஹி கார்யாணி தூ3தா: பண்டித மானின : || 2-40

ப்ரவேஷ்டும் ராக்ஷஸைர்குப்தா க்ரூரைர் பல ஸமன்விதை: ||

உக்ரௌஜஸோ மஹாவீர்யா பலவந்தஸ்ச ராக்ஷஸா: |

வஞ்சனீயா மயா சர்வே ஜானகீ பரிமார்கதா ||

லக்ஷ்யாலக்ஷ்யேன ரூபேண ராத்ரௌ லங்கா புரீ மயா |

ப்ரவேஷ்டும் ப்ராப்தகாலோ மே க்ருத்யம் ஸாதயிதும் மஹத் ||

தாம் புரீம் தாத்ருஸீம் த்ருஷ்ட்வா துராதர்ஷம் சுராசுரை: |

ஹனுமான்ஸ்சிந்தயாமாஸ வினிஸ்வஸ்ய முஹுர்முஹு: ||

கேனோபாயேன பஸ்யேயம் மைதிலீம் ஜனகாத்மஜாம் |

அத்ருஷ்டோ ராக்ஷஸேந்த்ரேண ராவணேன துராத்மனா ||

ந வினஸயேத் கதம் கார்யம் ராமஸ்ய விதிதாத்மன: |

ஏகாமேகஸ்ச பஸ்யேயம் ரஹிதே ஜனகாத்மஜாம் ||

பூதாஸ்சார்தா விபத்யந்தே தேஸ கால விரோதிதா: |

விக்லவம் தூதமாஸாத்ய தம: சூர்யோதயே யதா ||

அர்தார்னர்தாந்தரே புத்திர் நிஸ்சிதாபி ந ஸோபதே |

காதயந்தி ஹி கார்யாணி தூதா: பண்டித மானின : ||

ந வினஸ்யேத் கதம் கார்யம் வைக்லவ்யம் ந கதம் பவேத் |

லங்கனம் ச சமுத்ரஸ்ய கதம் நு ந வ்ருதா பவேத் ||

மயி த்ருஷ்டே து ரக்ஷோபி: ராமஸ்ய விதிதாத்மன: |

ப்வேத்வ்யர்தமிதம் கார்யம் ராவணானர்தமிச்சத: ||

ந ஹி ஸக்யம் க்வசித் ஸ்ததுமவிஞாதேன ராக்ஷஸை: |

அபி ராக்ஷஸ ரூபேன கிமுதான்யேன கேனசித் ||

வாயுரப்யத்ர நாஞாதஸ்சரேதிதி மதிர்மம |

ந ஹ்யஸ்த்யவிதிதம் கிம்சித் ராக்ஷஸானாம் பலீயஸாம் ||

இஹாஹம் யதி திஷ்டாமி ஸ்வேன ரூபேன ஸம்வ்ருத: |

வினாஸமுபயாஸ்யாமி பர்துரர்தஸ்ச ஹீயதே || (2-45)

ததஹம் ஸ்வேன ரூபேண ரஜன்யாம் ஹ்ரஸ்வதாம் கத:|

லங்காமபிகமிஷ்யாமி ராகவஸ்யார்த சித்தயே ||

ராவணஸ்ய புரீ ராத்ரௌ ப்ரவிஸ்ய சுதுராஸதம் |

விசின்வன் பவனம் சர்வம் த்ரக்ஷ்யாமி ஜனகாத்மஜாம் ||

இதி சம்சிந்த்ய ஹனுமான் சூர்யஸ்யாஸ்தமயம் கபி: |

ஆசகாங்க்க்ஷே ததா வீரோ வைதேஹ்யா தர்ஸனோத்சுக: ||2-48

 

 

என்ன உபாயம் செய்வேன்? எப்படி ஜனகாத்மஜாவை காண்பேன்? என்ற கவலை சூழ்ந்தது.  எதை எதையோ சம்பந்தமில்லாமல் யோஜித்து செயல் படுவதும் சரியல்ல. சிரமப்பட்டு கடலைக் கடந்து வந்ததும் வீணாகக் கூடாது. 2-41  காரியமும் கெடாமல் நானும் பத்திரமாக திரும்பச் செல்ல வேண்டும். என்னை இந்த ராக்ஷஸர்கள் கண்டு கொண்டால், அவ்வளவு தான், ராமனுடைய உத்தேசமும் நிறைவேறாது.  நாம் எண்ணியிருப்பது ராவணனின் முடிவு. 2-42  இந்த ராக்ஷஸர்கள் அறியாமல் எங்கும் தங்குவது கூட சாத்தியமில்லை என்று தோன்றுகிறதே. ராக்ஷஸ ரூபமே எடுத்துக் கொள்வோமா? அல்லது வேறு எந்த ரூபம் இவர்கள் கண்ணில் படாமல் இருக்க உதவும்? 2-43  காற்று கூட இங்கு தன்னிச்சையாக வீசுவதில்லை என்று தோன்றுகிறதே. 2-44 பலசாலிகளான இந்த ராக்ஷஸர்கள் கூர்மையான அறிவும் கொண்டவர்களாகத் தெரிகிறது. நான் இந்த சுய ரூபத்தில் நின்றால், பிடிபடுவது நிச்சயம். என் எஜமானனின் காரியமும் அதோ கதி தான், 2-45 இருட்டிய பின் என் உருவத்தை சிறிதாக்கிக் கொண்டு வானரமாகவே, லங்கையின் உள்ளே பிரவேசிப்பேன். 2-46 எல்லா வீடுகளிலும் தேடி ஜனகாத்மஜாவை கண்டு பிடிப்பேன். சூரியன் அஸ்தமனம் ஆவதை எதிர் நோக்கி ஹனுமான் காத்திருந்தான். 2-47  வைதேஹியை காணும் ஆவலுடன் காத்திருந்தான். 2-48 மிகவும் சிறிய வானரமாக சூரியன் அஸ்தமிக்கும் பிரதோஷ காலத்தில், வேகமாக தாவி குதித்து, மிக நேர்த்தியாக அமைக்கப் பட்டிருந்த பெரிய வீதிகளையுடைய லங்கா நகரினுள் பிரவேசித்தான். 2-49

 

सूर्ये चास्तं गते रात्रौ देहं संक्षिप्य मारुतिः।
पृषदंशकमात्रः सन् बभूवाद्भुतदर्शनः॥                              5-2-49

प्रदोषकाले हनुमांस्तूर्णमुत्प्लुत्य वीर्यवान्।
प्रविवेश पुरीं रम्यां सुविभक्तमहापथाम्॥                            5-2-50

प्रासादमालाविततां स्तम्भैः काञ्चनराजतैः।
शातकुम्भमयैर्जालैर्गन्धर्वनगरोपमाम्॥                               5-2-51
सप्तभौमाष्टभौमैश्च स ददर्श महापुरीम्।
तलैः स्फटिकसंकीर्णैः कार्तस्वरविभूषितैः॥                           5-2-52

वैदूर्यमणिचित्रैश्च मुक्ताजालविभूषितैः।
तलैः शुशुभिरे तानि भवनान्यत्र रक्षसाम्॥                           5-2-53

काञ्चनानि विचित्राणि तोरणानि च रक्षसाम्।
लङ्कामुद्द्योतयामासुः सर्वतः समलंकृताम्॥                         5-2-54

अचिन्त्यामद्भुताकारां दृष्ट्वा लङ्कां महाकपिः।
आसीद्विषण्णे हृष्टश्च वैदेह्या दर्शनोत्सुकः॥                         5-2-55

स पाण्डरोद्विद्धविमानमालिनीं

महार्हजाम्बूनदजालतोरणाम्।
यशस्विनीं रावणबाहुपालितां
क्षपाचरैर्भीमबलैः समावृताम्॥                                     5-2-56

चन्द्रोऽपि साचिव्यमिवास्य

कुर्वंस्तारागणैर्मध्यगतो विराजन्।
ज्योत्स्नावितानेन वितत्य

लोकमुत्तिष्ठते नैकसहस्ररश्मिः॥                                   5-2-57

शङ्खप्रभं क्षीरमृणालवर्ण-
मुद्गच्छमानं व्यवभासमानम्।
ददर्श चन्द्रं स कपिप्रवीरः
पोप्लूयमानं सरसीव हंसम्॥                                            5-2-58

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे निशागमप्रतिक्षा नाम द्वितीयः सर्गः

 

 

சூர்யே சாஸ்தம் க3தே ராத்ரௌ தே3ஹம் ஸங்க்ஷிப்ய மாருதி: |

ப்ருஷதம்க மாத்ர: ஸன் ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||

ப்ரதோ3ஷ காலே ஹனுமான் தூர்ணமுத்ப்லுத்ய வீர்யவான் |

ப்ரவிவே புரீம் ரம்யாம் ஸுவிப4க்த மஹா பதா2ம் ||

ப்ராஸாத4 மாலா விததாம் ஸ்தம்பை4: காஞ்சன ராஜதை: |

ஸாதகும்ப4 மயைர் ஜாலை: க3ந்த4ர்வ நக3ரோபமாம் ||

சப்தபௌ4மாஷ்டபௌ4மைஸ்ச ஸ த33ர் மஹாபுரீம் |

தலை: ஸ்பாடிக ஸங்கீர்ணை: கார்தஸ்வர விபூ4ஷிதை: ||

வைதூ3ர்யமணி விசித்ரைஸ்ச முக்தாஜால விபூ4ஷிதை: |

தலை: ஸுஸுபி4ரே தானி ப4வனான்யத்ர ரக்ஷஸாம் ||

காஞ்சனானி விசித்ராணி தோரணானி ச ரக்ஷஸாம் |

லங்காமுத்த்3யோதயாமாஸு: சர்வத: ஸமலங்க்ருதாம் ||

அசிந்த்யாம் அத்பு4தாகாராம் த்3ருஷ்ட்வா லங்காம் மஹா கபி: |

ஆசீத்விஷண்ணோ ஹ்ருஷ்டஸ்ச வைதே3ஹ்யா த3ர்ஸனோத்ஸுக: || 2-55

ஸ பாண்டரோத்3வித்த4 விமான மாலினீம் மஹார்ஹ ஜாம்பூ3னத3ஜால தோரணாம் |

ஸ்வினீம் ராவண பா3ஹு பாலிதாம் க்ஷபாசரை: பீ4ம ப3லை: ஸமாவ்ருதாம் ||

சந்த்3ரோ(அ)பி ஸாசிவ்யமிவாஸ்ய குர்வன் தாராக3ணைர் மத்4ய க3தோ விராஜன் |

ஜ்யோத்ஸ்னா விதானேன விதத்ய லோகமுத்திஷ்டதே நைக ஸஹஸ்ர ரஸ்மி: ||

ங்க2ப்ரப4ம் க்ஷீரம்ருணால வர்ணமுத்கச்ச2மானம் வ்யவபா4ஸமானம் |

3த3ர்  சந்த்3ரம் ஸ கபிப்ரவீர: போப்லூயமானம் ஸரஸீவ

ஹம்ஸம் || (2-58)

 

(இத்யார்ஷே ஸ்ரீமத் ராமாயணே வால்மீகீயே ஆதிகாவ்யே சதுர்விம்ஸதி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்தர காண்டே சாக3ர லங்க4ணம் நாம  த்விதீய:ஸர்க:)

 

 

அந்த நேரத்தில் லங்கா ரம்யமாக இருந்தது. மாளிகைகள் தொடுத்து வைத்தாற்போல வரிசையாகத் தெரிந்தன. கந்தர்வ நகரம் போல இருந்தது. 2-50  ஜன்னல்களும், வலைகள் பொருத்தப் பட்டதும் தங்கமே போலும்.  ஏழு மாடி, எட்டு மாடி கட்டிடங்களாக இருக்க, ஹனுமான் எண்ணி பார்த்துக் கொண்டான். தரை ஸ்படிகத்தால் அல்லது மணிகளால் (கார்த்தஸ்வர) அலங்கரிக்கப் பட்டிருந்தது. 2-51 வைடூரியமும், முத்துக்களும் வீடுகளுக்கு அலங்காரமாக வேலைப் பாடுகள் செய்ய பயன் படுத்தப் பட்டிருந்தன. 2-52  தரைகள் மிக அழகாகத் தெரிந்தன. தோரணங்கள் விசித்ரமாக இருந்தன. ராக்ஷஸர்களின் வீடுகள் இப்படி பலவிதமாக செல்வ செழிப்பை பறை சாற்றும் விதமாக லங்கையின் அழகையே தூக்கி காட்டின. 2-53 நினைத்துக் கூட பார்க்க முடியாத அத்புதமான காட்சி. ஒரே சமயத்தில் சந்தோஷமும், நிராசையும் மனதில் குடி கொண்டன. 1-54  வைதேஹியைக் காண வேண்டுமே என்ற தாபமும் அதிகரித்தது. 1-55 வெண் நிற பூச்சுகளுடன், விமானங்களும் வரிசையாக அதன் மேல் பொன் நிறத் தோரணங்கள், விலை மதிக்க முடியாத பொன்னாலான வலை பொருத்தப் பட்ட ஜன்னல்கள், ராவணனின் ஆளுமையில், தானே கவனமாக ரக்ஷித்து வந்த இலங்கை நகரை, 2-56 இலங்கை எனும் ஸ்திரீயை, கண்டான். -56  சந்திரனும் தன் பங்குக்கு உதவி செய்ய எண்ணியது போல ஒளி வீசிக் கொண்டு தாரா கணங்கள் புடை சூழ வந்து சேர்ந்தான். 2-57  அவன் கிரணங்கள் ஆயிரக் கணக்காக ஒளியைச் சிதறியபடி தெரிந்தன. -57  அந்த ஒளியில் சங்கு போல, பால் போல, தாமரைத் தண்டு போல குளுமையும், பிரகாசமும் பூமியில் நிறைந்தன. பெரிய குளத்தில் நிதானமாகச் செல்லும் ஹம்ஸம் போல நீல வானில் சந்திரன் பவனி வருவதை ஹனுமான் கண்டான். -2-58

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், நிசாக3ம ப்ரதீக்ஷா என்ற இரண்டாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

 

तृतीयः सर्गः

लङ्काधिदेवताविजयः

स लम्बशिखरे लम्बे लम्बतोयदसंनिभे।

सत्त्वमास्थाय मेधावी हनुमान् मारुतात्मजः॥                         5-3-01
निशि लङ्कां महासत्त्वो विवेश कपिकुञ्जरः।
रम्यकाननतोयाढ्यां पुरीं रावणपालिताम्॥                           5-3-02

शारदाम्बुधरप्रख्यैर्भवनैरुपशोभिताम्।
सागरोपमनिर्घोषां सागरानिलसेविताम्॥                             5-3-03
सुपुष्टबलसंगुप्तां यथैव विटपावतीम्।
चारुतोरणनिर्यूहां पाण्डुरद्वारतोरणाम्॥                              5-3-04

भुजगाचरितां गुप्तां शुभां भोगवतीमिव।
तां सविद्युद्घनाकीर्णां ज्योतिर्गणनिषेविताम्॥                        5-3-05

मन्दमारुतसंचारां यथा चाप्यमरावतीम् |
शातकुम्भेन महता प्राकारेणाभिसम्वृताम्॥                           5-3-06
किङ्किणीजालघोषाभिः पताकाभिरलंकृताम्।
आसाद्य सहसा हृष्टः प्राकारमभिपेदिवान्॥॥                         5-3-07

विस्मयाविष्टहृदयः पुरीमालोक्य सर्वतः।
जाम्बूनदमयैर्द्वारैर्वैदूर्यकृतवेदिकैः॥॥                                      5-3-08
वज्रस्फटिकमुक्ताभिर्मणिकुट्टिमभूषितैः |
तप्तहाटकनिर्यूहै राजतामलपाण्डुरैः॥                                5-3-09

वैदूर्यतलसोपानैः स्फाटिकान्तरपांसुभिः।
चारुसंजवनोपेतैः खमिवोत्पतितैः शुभैः॥                             5-3-10
क्रौञ्चबर्हिणसंघुष्टै राजहंसनिषेवितैः।
तूर्याभरणनिर्घोषैः सर्वतः प्रतिनादिताम्॥                             5-3-11
वस्वोकसाराप्रतिमां समीक्ष्य नगरीं ततः।
खमिवोत्पतिताम् लङकां जहर्ष हनुमान् कपिः॥                       5-3-12

तां समीक्ष्य पुरीं लङकां राक्षसाधिपतेः शुभाम्।
अनुत्तमामृद्धिमतीं चिन्तयामास वीर्यवान्॥                           5-3-13

नेयमन्येन नगरी शक्या धर्षयितुं बलात्।
रक्षिता रावणबलैरुद्यतायुधधारिभिः॥                                     5-3-14

कुमुदाङ्गदयोर्वापि सुषेणस्य महाकपेः।
प्रसिद्धेयं भवेद्भूमिर्मैन्दद्विविदयोरपि॥                             5-3-15

विवस्वतस्तनूजस्य हरेश्च कुशपर्वणः।
ऋक्षस्य केतुमालस्य मम चैव गतिर्भवेत्॥                           5-3-16

சுந்தரகாண்டம் – அத்யாயம் 3 – லங்காதி தேவதா விஜய:

 

ஸ லம்ப சிகரே லம்பே லம்ப தோயத ஸன்னிபே |

சத்வமாஸ்தாய மேதாவி ஹனூமான் மாருதாத்மஜ: ||

நிஸி லங்காம் மஹா சத்வோ விவேஸ கபி குஞ்ஜர: |

ரம்ய கானன தோயாட்யாம் புரீம் ராவண பாலிதாம் ||

ஸாரதாம்புதர ப்ரக்யைர்பவனைருபஸோபிதாம் |

சாகரோபம நிர்கோஷாம் சாகரானில சேவிதாம் ||

சுபுஷ்ட பல ஸங்குப்தாம் யதைவ விடபாவதீம் |

சாரு தோரண நிர்வ்யூஹாம் பாண்டுர த்வார தோரணாம் ||

புஜகாசரிதாம் குப்தாம் ஸுபாம் போகவதீமிவ |

தாம் வித்யுத் கணாகீர்ணாம் ஜ்யோதிர்கண நிஷேவிதாம் ||

மந்த மாருத சன்சாராம் யதா சாப்யமராவதீம் |

ஸாத கும்பேன மஹதா ப்ராகரேணாபி சம்வ்ருதாம் ||

கிங்கிணீ ஜால கோஷாபி: பதாகாபிரலங்க்ருதாம் |

ஆஸாத்ய சஹஸா ஹ்ருஷ்ட: ப்ராகாரமபிபேதிவான் ||

விஸ்மயாவிஷ்ட ஹ்ருதய: புரீமாலோக்ய ஸர்வத: |

ஜாம்பூ3னத3மயைர்த்3வாரைர் வைதூர்3ய க்ருத வேதி3கை: ||

வஜ்ரஸ்படிக முக்தாபி: மணிகுட்டிம பூ4ஷிதை: |

தப்த ஹாடக நிர்யூஹை: ராஜதாமல பாண்டரை: ||

வைதூ3ர்ய தல ஸோபானை: ஸ்பாடிகாந்தர பாம்ஸுபி: |

சாரு ஸம்ஜவனோபேதை: க2மிவோத்பதிதை: ஸுபை4: ||

க்ரௌஞ்ச ப3ர்ஹிண ஸ்ங்கு4ஷ்டை: ராஜ ஹம்ஸ நிஷேவிதை:||

தூர்யாப4ரண் கோ4ஷை: சர்வத: ப்ரதினாதி3தாம் |

வஸ்வோக ஸாரா ப்ரதிமாம் சமீக்ஷ்ய நக3ரீம் தத: ||

2மிவோத்பதிதாம் லங்காம் ஜஹர்ஷ ஹனுமான் கபி: |

தாம் ஸமீக்ஷ்ய புரீம் லங்காம் ராக்ஷஸாதி4பதே: சுபா4ம் ||

அனுத்தமாம் ருத்3தி4மதீம் சிந்தயாமாஸ வீர்யவான் |

ரக்ஷிதா ராவண ப3லை: உத்3யதாயுதாயுத4 தா4ரிபி4: ||

குமுதா3ங்கதயோர்வாபி சுஷேணஸ்ய மஹாகபே: |

ப்ரசித்3தே4யம் ப4வேத் பூ4மிர் மைந்த3 த்3விவித3யோரபி ||

விவஸ்வதஸ் தனூஜஸ்ய ஹரேஸ்ச கு பர்வண: |

ருக்ஷஸ்ய கேதுமாலஸ்ய மம சைவ க3திர்ப4வேத் ||(3-16)

 

அத்தியாயம் 3 (341) லங்காதி4 தே3வதா விஜய: (லங்கையின் காவல் தேவதையை ஜயித்தல்)

உயரமான சிகரங்களை உடைய அந்த மலை மேல், தொங்கும் பெரிய கார் மேகம் போல இருந்த மாருதாத்மஜனான ஹனுமான், தன் உருவை தேவைக்கேற்ப  மாற்றிக் கொண்டு, இரவில் அந்நகரில் பிரவேசித்தான். 3-2 அழகிய கானனங்களும் நீர் நிலைகளும் இருந்த ராவணனின் நகரம். மாளிகைகள் ஒவ்வொன்றும் சரத் கால சந்திரன் போல பிரகாசமாக இருந்தன. கடல் காற்று சுகமாக வீச, ஊரின் உள்ளே ஜனங்கள் ஆரவாரமாக இருப்பதும், கடலின் கோஷம் போலவே கேட்டது. 3-3 நல்ல வீரர்கள் காவலில், அமரர் தலை நகரமான அமராவதி போலவே பாதுகாப்பாக இருந்த நகரம். வாயிலில் அழகிய வெண்ணிற தோரணங்கள் தொங்க, ரஸிக்கத் தகுந்த முறையில் அலங்கரிக்கப் பட்டிருந்த மாளிகைகள். 3-4  சுபமான போ4கவதீ நகரம், (புஜகம்) நாகங்கள் நிறைந்து இருப்பது போல ஒரு க்ஷணம் தோன்றியது. 3-5 எங்கும் பளீரென்ற வெளிச்சம் தரும் விளக்குகள். இதமாக வீசிய காற்றில் அமராவதியில் இருப்பது போன்ற பிரமையைத் தரும் ராவணனின் ராஜதாணி.  3-6 உயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம் எங்கும் சாதாரணமாக காணப்பட்டது. பிராகாரங்கள், கிண்கிணி மணி கட்டிய சாளரங்கள், இது காற்றில் அசைய ஏற்படும் இனிமையான ஒலி, கொடிகள் கட்டப் பட்டு அலங்காரமாக இருந்த பிரதான சாலையில் வந்து நின்ற ஹனுமான் தன்னையுமறியாமல் மகிழ்ச்சியை அடைந்தான். 3-7

ஆச்சர்யம்  மனதில் நிறைந்தது. அந்த நகரை திரும்பி பார்த்த இடமெல்லாம் செல்வ செழிப்பே கண்களை நிறைத்தது.  ஜாம்பூனதம் எனும் உயர்ந்த பொன்னும், வைடூரியம் முதலிய மணிகளும் கொண்டு யாக சாலைகள் நிறுவப் பட்டிருந்தன.3-8 வஜ்ரமும் ஸ்படிகமும் இழைத்து புடமிட்ட தங்கத்தாலும், நிர்மலமான  வெள்ளியினாலும் (வெண்மை நிறத்தில்) அலங்கரிக்கப் பட்டு, 3-9 வைடூரியம் பதித்த தளமும், படிக்கட்டுகளும், ஸ்படிக துகள்கள் இடை இடையே தூவப் பெற்று, ஆகாயத்தை தொடும் உயரத்துடன்,3-10  ஆங்காங்கு இருந்த நீர்   நிலைகளில் க்ரௌஞ்ச, ப3ர்ஹிண பக்ஷிகள் குதூகலமாக இரைச்சலிட    தூர்ய வாத்யங்கள் இசைக்கப் பட அதன் நாதமும் இசைந்து வர,   எங்கும் எதிரொலித்த இனிய கோஷமுமாக லங்கையை ஹனுமான் கண்டான். 3-11  நகரின் அழகைக் கண்டு மெய் மறந்து ஹனுமான் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினான். 3-12  வேறு யாரும் இந்த நகரத்தை தாக்கவோ, ஆக்ரமித்து தனதாக்கிக் கொள்வதோ முடியாது. 3-13 குமுத, அங்கதன் முதலானோர், சுஷேணன் போன்ற மகா வீரர்களான கபி (வானரம்), மைந்த த்விவிதர்கள், விவஸ்வதன் மகன், குச பர்வண வானரத்திற்கும், ருக்ஷன், கேது மாலன், நான் இவ்வளவு பேரும் சேர்ந்து பாடு பட வேண்டும். 3-14-16

 

समीक्ष्य च महाबाहू राघवस्य पराक्रमम्।
लक्ष्मणस्य च विक्रान्तमभवत् प्रीतिमान् कपिः॥                      5-3-17

तां रत्नवसनोपेतां गोष्ठागारावतंसकाम्।
यन्त्रागारस्तनीमृद्धां प्रमदामिव भूषिताम्॥                           5-3-18
तां नष्टतिमिरां दीपैर्भास्वरैश्च महागृहैः।
नगरीं राक्षसेन्द्रस्य ददर्श स महाकपिः॥                             5-3-19

अथ सा हरिशार्दूलं प्रविशन्तं महाबलम्।
नगरी स्वेन रूपेण ददर्श पवनात्मजम्॥                             5-3-20

सा तं हरिवरं दृष्ट्वा लङ्का रावणपालिता।
स्वयमेवोत्थिता तत्र विकृताननदर्शना॥                              5-3-21

पुरस्तात् कपिवर्यस्य वायुसूनोरतिष्ठत।
मुञ्चमाना महानादमब्रवीत् पवनात्मजम्॥                           5-3-22

कस्त्वं केन च कार्येण इह प्राप्तो वनालय।
कथयस्वेह यत्तत्त्वं यावत् प्राणा धरन्ति ते॥                          5-3-23

न शक्या खल्वियं लङ्का प्रवेष्टुं वानर त्वया।
रक्षिता रावणबलैरभिगुप्ता समन्ततः॥                              5-3-24

अथ तामब्रवीद्वीरो हनुमानग्रतः स्थिताम्।
कथयिष्यामि ते तत्त्वं यन्मां त्वं परिपृच्छसि॥                        5-3-25

का त्वं विरूपनयना पुरद्वारेऽवतिष्ठसे।
किमर्थं चापि मां रुद्ध्वा निर्भर्त्सयसि दारुणा॥                        5-3-26

हनुमद्वचनं श्रुत्वा लङ्का सा कामरूपिणी।
उवाच वचनं क्रुद्धा परुषं पवनात्मजम्॥                            5-3-27

अहं राक्षसराजस्य रावणस्य महात्मनः।
आज्ञाप्रतीक्षा दुर्धर्षा रक्षामि नगरीमिमाम्॥                           5-3-28

न शक्या मामवज्ञाय प्रवेष्टुं नगरी त्वया।
अद्य प्राणैः परित्यक्तः स्वप्स्यसे निहतो मया॥                      5-3-29

अहं हि नगरी लङ्का स्वयमेव प्लवङ्गम।
सर्वतः परिरक्षामि ह्येतत्ते कथितं मया॥                            5-3-30

लङ्काया वचनं श्रुत्वा हनूमान् मारुतात्मजः।
यत्नवान् स हरिश्रेष्ठः स्थितः शैल इवापरः॥                         5-3-31

स तां स्त्रीरूपविकृतां दृष्ट्वा वानरपुंगवः।
आबभाषेऽथ मेधावि सत्त्वान् प्लवगर्षभः॥                            5-3-32

 

ஸ்மீக்ஷ்ய ச மஹாபா3ஹூ ராக4வஸ்ய பராக்ரமம் |

லக்ஷ்மணஸ்ய ச விக்ராந்தமப4வத் ப்ரீதிமான் கபி: || 3-17

தாம் ரத்ன வஸனோபேதாம் கோ3ஷ்டாகாராவதம்ஸகாம் |

யந்த்ராகாரஸ்தனீம் ருத்தாம் ப்ரமதா3மிவ பூ4ஷிதாம் ||

தாம் நிஷ்ட திமிராம் தீ3பைர்பா4ஸ்வரைஸ்ச மஹாக்3ருஹை:|

நக3ரீ ராக்ஷஸேந்த்3ரஸ்ய த33ர்ஸ ஸ மஹா கபி: |

தாம் ரத்ன வஸனோபேதாம் கோ3ஷ்டாராவதோம்ஸகாம் ||

ய்ந்த்ராகார ஸ்தனீம்ருத்3தா4ம் ப்ரமதா3மிவ பூ4ஷிதாம் ||

தாம் நஷ்ட திமிராம் தீ3பைர்பா4ஸ்வரைஸ்ச மஹாக்ருஹை:|

நக3ரீம் ராக்ஷஸேந்த்3ரஸ்ய த33ர்ஸ ஸ மஹாகபி: ||

அத ஸா ஹரிஸார்தூ3லம் ப்ரவிந்தம் மஹாப3லம் |

நக3ரீ ஸ்வேன ரூபேண த33ர்ஸ பவனாத்மஜம் ||

ஸா தம் ஹரிவரம் த்3ருஷ்ட்வா லங்கா ராவணபாலிதா|

ஸ்வயமேவோத்தி2தா தத்ர விக்ருதானன த3ர்ஸனா ||

புரஸ்தாத் கபிவர்யஸ்ய வாயுஸூனோரதிஷ்டத |

முஞ்சமானா மஹா நாத3மப்3ரவீத் பவனாத்மஜம் || 3-22

கஸ்த்வம் கேன ச கார்யேன இஹ ப்ராப்தோ வனாலய |

கத2யஸ்வேஹ யத்தத்வம் யாவத் ப்ராணா தரந்தி தே ||

ந ஸக்2யா க2ல்வியம் லங்கா ப்ரவேஷ்டும் வானரத் த்வயா |

ரக்ஷிதா ராவண ப3லைரபி4குப்தா சமந்தத: ||

அத தாமப்3ரவீத் வீரோ ஹனுமானக்3ரத: ஸ்தி2தாம் |

கதயிஷ்யாமி தே தத்வம் யன்மாம் த்வம் பரிப்ருச்ச2ஸி ||

கா த்வம் விரூப நயனா புரத்3வாரே(அ)வதிஷ்டஸே |

கிமர்தம் சாபி மாம் ருத்3த்4வா நிர்ப4ர்த்ஸயதி தா3ருணா ||

ஹனுமத்வசனம் ஸ்ருத்வா லங்கா ஸா காமரூபிணி |

உவாச வசனம் க்ருத்3தா4 பருஷம் பவனாத்மஜம் ||

அஹம் ராக்ஷஸ ராஜஸ்ய ராவணஸ்ய மஹாத்மன: |

ஆஞா ப்ரதீக்ஷா து3ர்தர்ஷா ரக்ஷாமி நக3ரீமிமாம் |

ந ஸக்யா மாமவஞாய  ப்ரவேஷ்டும் நக3ரீ த்வயா ||

அத்ய ப்ராணை: பரித்யக்த: ஸ்வப்ஸ்யஸே நிஹதோ மயா||

அஹம் ஹி நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம |

சர்வத: பரிரக்ஷாமி ஹ்யேதத்தே கதி2தம் மயா ||

லங்காயா: வசனம் ஸ்ருத்வா ஹனுமான் மாருதாத்மஜ: | யத்னவான் ஸ ஹரிஸ்ரேஷ்ட: ஸ்தி2த: ஸைல இவாபர: ||

ஸ தாம் ஸ்த்ரீரூப விக்ருதாம் த்3ருஷ்ட்வா வானர புங்க3வ:|

ஆப3பா4ஷே(அ)த2 மேதா4வி ஸத்வவான் ப்லவக3ர்ஷப4: ||(3-32)

 

ராகவனுடைய பராக்ரமும், லக்ஷ்மணன் விக்ரமும், ஹனுமான் ஒருமுறை மனதினுள் நினைத்து பாராட்டிக் கொண்டான்.  3-17 அழகிய ஸ்த்ரீ போல அலங்கரிக்கப் பட்டிருப்பதாக அந்த நகர் தோற்றமளித்தத்து. ரத்னங்கள் ஆடையாக, கோஷ்டாகாரங்கள், யந்த்ராகாரங்கள், ஸ்தனங்கள் போல பருத்து இருப்பதாக நினைத்துக் கொண்டான்.3-18  விளக்குகள் இருட்டை விரட்டியடித்தன. ஒவ்வொரு வீடும் ஒளி வெள்ளத்தில் மூழ்கியிருந்தது,3-19 ராக்ஷஸேந்திரனுடைய நகரீ- மிக அழகு என்று சிலாகித்தான். 3-20  இப்படி யோசித்துக் கொண்டே தன் சுய ரூபத்தில் நகரின் உள்ளே நுழைவதை, லங்கா நகரை காத்து வந்த லங்கா நகரீ என்ற ஸ்த்ரீ கண்டு கொண்டாள். உடனே எழுந்து வந்தாள். 3-21  அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22  அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22 யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-23  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-24  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32

 

द्रक्ष्यामि नगरीं लङ्कां साट्टप्राकारतोरणाम्।
इत्यर्थमिह संप्राप्तः परं कौतूहलं हि मे॥                            5-3-33

वनान्युपवनानीह लङ्कायाः काननानि च।
सर्वतो गृहमुख्यानि द्रष्टुमागमनं हि मे॥                            5-3-34

तस्य तद्वचनं श्रुत्वा लङ्का सा कामरूपिणी।
भूय एव पुनर्वाक्यं बभाषे परुषाक्षरम्॥                              5-3-35

मामनिर्जत्य दुर्बद्धे राक्षसेश्वरपालिता।
न शक्यमद्य ते द्रष्टुं पुरीयं वनराधम॥                             5-3-36

ततः स हरिशार्दूलस्तामुवाच निशाचरीम्।
दृष्ट्वा पुरीमिमां भद्रे पुनर्यास्ये यथागतम्॥                          5-3-37

ततः कृत्वा महानादं सा वै लङ्का भयावहम्।
तलेन वानरश्रेष्ठं ताडयामास वेगिता॥                              5-3-38

ततः स कपिशार्दुलो लङ्काया ताडितो भृशम्।
ननाद सुमहानादं वीर्यवान् पवनात्मजः॥                             5-3-39

ततः संवर्तयामास वामहस्तस्य सोऽङ्गुलीः।
मुष्टिनाभिजघानैनां हनूमान् क्रोधमूर्चितः॥                           5-3-40
स्त्री चेति मन्यमानेन नातिक्रोधः स्वयं कृतः।

सा तु तेन प्रहारेण विह्वलाङ्गी निशाचरी॥                          5-3-41
पपात सहसा भूमौ विकृताननदर्शना।

ततस्तु हनुमान् प्राज्ञस्तां दृष्ट्वा विनिपातिताम्॥                     5-3-42
कृपां चकार तेजस्वी मन्यमानः स्त्रियं तु ताम्।

ततो वै भृशसंविग्ना लङ्का सा गद्गदाक्षरम्॥                        5-3-43
उवाच गर्वितं वाक्यं हनूमन्तं प्लवङ्गमम्।

प्रसीद सुमहाबाहो त्रायस्व हरिसत्तम॥                                     5-3-44
समये सौम्य तिष्ठन्ति सत्ववन्तो महाबलाः।

अहं तु नगरी लङ्का स्वयमेव प्लवङ्गम॥                           5-3-45
निर्जिताहं त्वया वीर विक्रमेण महाबल।

इदं च तथ्यं शृणु वै ब्रुवत्या मे हरीश्वर॥                           5-3-46
स्वयंभुवा पुरा दत्तं वरदानं यथा मम।

यदा त्वां वानरः कश्चिद्विक्रमाद्वशमानयेत्॥                        5-3-47
तदा त्वया हि विज्ञेयं रक्षसां भमागतम्।

स हि मे समयः सौम्यः प्राप्तोऽद्य तव दर्शनात्॥                                                       5-3-48
த்3ரக்ஷ்யாமி நக3ரீ லங்காம் ஸாட்டப்ராகார தோரணாம் |

இத்யர்த2மிஹ ஸம்ப்ராப்த: பரம் கௌதூஹலம் மே || 3-33

வனான்யுபவனானீஹ லங்காயா: கானனானி ச |

ஸர்வதோ க்3ரஹ முக்2யானி த்3ரஷ்டுமாக3மனம் ஹி மே ||

தஸ்ய தத்வசனம் ஸ்ருத்வா லங்கா சா காம ரூபிணீ |

பூ4ய ஏவ புனர்வாக்2யம் ப3பா4ஷே பருஷாக்ஷரம் ||

மாமனிர்ஜித்ய து3ர்புத்3தே4 ராக்ஷஸேஸ்வர பாலிதா |

ந ஸக்2யமத்3ய தே த்3ரஷ்டும் புரீயம் வானராத4ம ||

தத: ஸ ஹரிஸார்தூ3லஸ்தாமுவாச நிஸாசரீம் |

த்3ருஷ்ட்வா புரீமிமாம் ப4த்ரே புனர்யாஸ்யே யதா23தம் ||

ஆப3பா4ஷே(அ)த2 மேதா4வி ஸத்வவான் ப்லவக3ர்ஷப4: |

தத: க்ருத்வா மஹானாதம் ஸா வை லங்கா ப4யாவஹம் ||

தலேன வானர ஸ்ரேஷ்டம் தாடயாமாஸ வேகி3தா ||

தத: ஸ கபி ஸார்தூ3லோ லங்காயா தாடிதோ ப்3ருஸம் |

நனாத3 ஸுமஹா நா3ம் வீர்யவான் பவனாத்மஜ: ||

தத:ஸம்வர்த4யாமாஸ வாம ஹஸ்தஸ்ய ஸோ(அ)ங்குலீ:| முஷ்டினாபி4ஜகா4னைனாம்  ஹனூமான் க்ரோத4 மூர்ச்சி2த: ||

ஸ்த்ரீசேதி மன்யமானேன நாதிக்ரோத4: ஸ்வயம் க்ருத: |

ஸா து தேன ப்ரஹாரேண விஹ்வலாங்கீ3 நிஸாசரீ ||

பபாத விக்ருதானன த3ர்னா |

ததஸ்து ஹனுமான் ப்ராஞஸ்தாம் த்3ருஷ்ட்வா வினிபாதிதாம் ||                                         க்ருபாம் சகார தேஜஸ்வீ மன்யமான: ஸ்த்ரியம் து தாம் |

ததோ வை ப்3ருஸ ஸம்விக்4னா லங்கா ஸா கத்33தா3க்ஷரம் ||

உவாச க3ர்விதம் வாக்யம் ஹனுமந்தம் ப்லவங்க3மம் |

ப்ரஸீத3 சுமஹாபா3ஹோ த்ராயஸ்வ ஹரிஸத்தம ||

ஸமயே சௌம்ய திஷ்டந்தி ஸத்வவந்தோ மஹாப3லா:|

ஹம் து நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம ||

நிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமேண மஹாப3ல |

இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்3ருவத்யா மே ஹரீஸ்வர ||

ஸ்வயம்புவா புரா த3த்தம் வரதா3னம் யதா2 மம |

யதா2 த்வாம் வானர: கஸ்சித் விக்ரமாத்வஸமானயேத் ||

ததா2 த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் ப4யமாக3தம் |

ஸ ஹி மே சமய: சௌம்ய: ப்ராப்தோ(அ)த்3ய தவ த3ர்ஸனாத் || (3-48)

 

அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 22 யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-23  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-24  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32  இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-33  வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். 3-34 இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். 3-35 வானரமே,  என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. 3-36 ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-37

 

 

அவள் உடலும், முகமும் மகா கோரமாக இருந்தன. வாயு புத்திரனின் எதிரில் நின்று அதட்டினாள். 3- 38 யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-39  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-40  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3- 41  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-42 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3- 43 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-44  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-45 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-46 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32  இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-47  வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான்.   இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள்.   வானரமே,  என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது.   ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-48

 

ततः कृत्वा महानादं सा वै लङ्का भयावहम्।
तलेन वानरश्रेष्ठं ताडयामास वेगिता॥                              5-3-38

ततः स कपिशार्दुलो लङ्काया ताडितो भृशम्।
ननाद सुमहानादं वीर्यवान् पवनात्मजः॥                             5-3-39

ततः संवर्तयामास वामहस्तस्य सोऽङ्गुलीः।
मुष्टिनाभिजघानैनां हनूमान् क्रोधमूर्चितः॥                           5-3-40
स्त्री चेति मन्यमानेन नातिक्रोधः स्वयं कृतः।

सा तु तेन प्रहारेण विह्वलाङ्गी निशाचरी॥                          5-3-41
पपात सहसा भूमौ विकृताननदर्शना।

ततस्तु हनुमान् प्राज्ञस्तां दृष्ट्वा विनिपातिताम्॥                     5-3-42
कृपां चकार तेजस्वी मन्यमानः स्त्रियं तु ताम्।

ततो वै भृशसंविग्ना लङ्का सा गद्गदाक्षरम्॥                        5-3-43
उवाच गर्वितं वाक्यं हनूमन्तं प्लवङ्गमम्।

प्रसीद सुमहाबाहो त्रायस्व हरिसत्तम॥                               5-3-44
समये सौम्य तिष्ठन्ति सत्ववन्तो महाबलाः।

अहं तु नगरी लङ्का स्वयमेव प्लवङ्गम॥                           5-3-45
निर्जिताहं त्वया वीर विक्रमेण महाबल।

इदं च तथ्यं शृणु वै ब्रुवत्या मे हरीश्वर॥                           5-3-46
स्वयंभुवा पुरा दत्तं वरदानं यथा मम।

यदा त्वां वानरः कश्चिद्विक्रमाद्वशमानयेत्॥                        5-3-47
तदा त्वया हि विज्ञेयं रक्षसां भमागतम्।

स हि मे समयः सौम्यः प्राप्तोऽद्य तव दर्शनात्॥                    5-3-48
स्वयंभुविहितः सत्यो न तस्यास्ति व्यतिक्रमः।

सीतानिमित्तं राज्ञस्तु रावणस्य दुरात्मनः॥                           5-3-49

रक्षसां चैव सर्वेषां विनाशः समुपस्थितः।
तत् प्रविश्य हरिश्रेष्ठ पुरीं रावणपालिताम्॥                          5-3-50
वित्स्व सर्वकार्याणि यानि यानीह वाञ्चसि॥

प्रविश्य शापोपहतां हरीश्वर पुरीं
शुभां राक्षसमुख्यपालिताम्।
दिदृक्षया त्वं जनकात्मजां सतीं
विमार्ग सर्वत्र गतो यथासुखम्॥                              5-3-51

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे लङ्काधिदेवताविजयो नाम तृतीयः सर्गः

 

தத: க்ருத்வா மஹானாதம் ஸா வை லங்கா ப4யாவஹம் |

தலேன வானர ஸ்ரேஷ்டம் தாடயாமாஸ வேகி3தா ||

தத: ஸ கபி ஸார்தூ3லோ லங்காயா தாடிதோ ப்3ருஸம் |

நனாத3 ஸுமஹா நா3ம் வீர்யவான் பவனாத்மஜ: ||

தத:ஸம்வர்த4யாமாஸ வாம ஹஸ்தஸ்ய ஸோ(அ)ங்குலீ:| முஷ்டினாபி4ஜகா4னைனாம்  ஹனூமான் க்ரோத4 மூர்ச்சி2த: || || ஸ்த்ரீசேதி மன்யமானேன நாதிக்ரோத4: ஸ்வயம் க்ருத: |

ஸா து தேன ப்ரஹாரேண விஹ்வலாங்கீ3 நிஸாசரீ ||

பபாத விக்ருதானன த3ர்னா |

ததஸ்து ஹனுமான் ப்ராஞஸ்தாம் த்3ருஷ்ட்வா வினிபாதிதாம் ||                                         க்ருபாம் சகார தேஜஸ்வீ மன்யமான: ஸ்த்ரியம் து தாம் |

ததோ வை ப்3ருஸ ஸம்விக்4னா லங்கா ஸா கத்33தா3க்ஷரம் ||

உவாச க3ர்விதம் வாக்யம் ஹனுமந்தம் ப்லவங்க3மம் |

ப்ரஸீத3 சுமஹாபா3ஹோ த்ராயஸ்வ ஹரிஸத்தம ||

ஸமயே சௌம்ய திஷ்டந்தி ஸத்வவந்தோ மஹாப3லா:|

அஹம் து நக3ரீ லங்கா ஸ்வயமேவ ப்லவங்க3ம ||

நிர்ஜிதாஹம் த்வயா வீர விக்ரமேண மஹாப3ல |

இதம் து தத்யம் ஸ்ருணு வை ப்3ருவத்யா மே ஹரீஸ்வர ||

ஸ்வயம்புவா புரா த3த்தம் வரதா3னம் யதா2 மம |

யதா2 த்வாம் வானர: கஸ்சித் விக்ரமாத்வஸமானயேத் ||

ததா2 த்வயா ஹி விக்ஞேயம் ரக்ஷஸாம் ப4யமாக3தம் |

ஸ ஹி மே சமய: சௌம்ய: ப்ராப்தோ(அ)த்3ய தவ த3ர்ஸனாத் || (3-48)

ஸ்வயம்பு3 விஹித: சத்யோ ந தஸ்யாஸ்தி வ்யதிக்ரம: |

சீதா நிமித்தம் ராக்ஞஸ்து ராவணஸ்ய து3ராத்மன: ||

ரக்ஷஸாம் சைவ சர்வேஷாம் வினா: ஸமுபஸ்தி2த: |

தத் ப்ரவிஸ்ய ஹரிஸ்ரேஷ்ட புரீம் ராவண பாலிதாம்||

வித4த்ஸ்வ ஸர்வ கார்யாணி யானி யானீஹ வாஞ்ச2ஸி ||

ப்ரவிஸ்ஸாபோபஹதாம் ஹரீஸ்வர புரீம்

ஸுபா4ம் ராக்ஷஸ முக்2ய பாலிதாம் |

தி3த்3ருக்ஷயா த்வம் ஜனகாத்மஜாம் ஸதீம்

விமார்க3 சர்வத்ர க3தோ யதா 2ஸுகம் || (3-51)

 

( இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே

சதுர்விம்தி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்த3ர காண்டே லங்காதி4 தே3வதா விஜயோ நாம த்ருதீய: சர்க: )

 

 

யார் நீ? என்ன காரியமாக இங்கு வந்தாய்? வனத்தில் வசிக்கும் விலங்கு தானே நீ? உயிருடன் இருக்க ஆசையில்லையா? உடனே சொல், என்றாள். 3-23  வானரா, இந்த லங்கா நகரத்தினுள் உன்னால் சுலபமாக நுழைந்து விட முடியாது.  ராக்ஷஸர்கள், ராவணனின் நம்பிக்கைக்கு பாத்திரமானவர்கள்,  காவல் காக்கிறார்கள். 3-24  எதிரில் பார், என்றாள். ஹனுமான் தன் எதிரில் நின்றவளை ஏற இறங்க பார்த்து விட்டு, சொல்கிறேன், கேள். நீ கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறேன். 3-25  என்னை கேள்வி கேட்கும் நீ யார் ? ஊர் வாசலில், அவலக்ஷணமாக நிற்கிறாயே?  கோபத்துடன் என்னை தடுத்து நிறுத்த நீ யார்?     3-26 லங்கிணி மேலும் ஆத்திரம் அடைந்தாள்.  3-27 நான் ராக்ஷஸேந்திரனான ராவண ராஜாவின் கட்டளைப் படி இந்த நகரை ரக்ஷித்து வருகிறேன். 3-28  என்னை மீறி இந்த நகரத்தின் உள்ளே யாரும் நுழைய முடியாது. மீறினால் தண்டிப்பேன். 3-29 இன்று உன்  முறை போலும். உயிரை இழந்து, இங்கேயே மீளா தூக்கத்தில் ஆழப் போகிறாய். நானே லங்கா நகரீ. இதை நாலாபுறமும், யாரும் தாக்காமல் பாதுகாக்கிறேன். தெரிகிறதா, என்றாள். 3-30 இதைக் கேட்டு ஹனுமான் கஷ்டப்பட்டு தன்னை அடக்கிக் கொண்டு, சிலை போல நின்றான். 3-31 ஸ்த்ரீ ரூபம்,  ஆனால் கோரமான உருவம், இவற்றை வைத்து, தான்  எப்படி, என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டான். 3-32  இந்த லங்கா நகரீ பிராகாரங்களுடன், தோரணங்களுடன் அழகாக காட்சியளிக்கிறது. அதனால் இதை பார்க்க வந்தேன். குதூகலத்துடன் இந்த நகரை சுற்றி பார்க்க வந்தேன். 3-33  வனங்களும், உப வனங்களும், லங்கையின் கானனங்களும், பெரிய மாளிகைகளும், என்னுள் ஆவலை தூண்டி விட்டன என்றான். 3-34 இதை நம்பாமல் லங்கா நகரீ என்ற அந்த ராக்ஷஸி அதட்டினாள். 3-35 வானரமே,  என் அனுமதியின்றி நீ எதையும் பார்க்க முடியாது. 3-36 ஹனுமான் சற்றும் தயங்காமல், பத்ரே, இந்த நகரை சுற்றிப் பார்த்து விட்டு திரும்பி போய் விடுகிறேன். அனுமதி கொடு என்று பணிவாக வேண்டினான். 3-37 உடனே ராக்ஷஸி, தன் கைதலத்தால் ஓங்கி ஒரு அறை விட்டாள். 3-38 எதிர்பாராத இந்த அடியால் ஹனுமான் திகைத்து வாய் விட்டு அலறி விட்டான். 3-39 தாங்க முடியாத கோபத்துடன், இடது கை விரல்களை மடக்கி முஷ்டியால், அவளை திருப்பி அடித்தான். 3-40  ஸ்த்ரீ என்பது மனதில் தயக்கத்தை உண்டாக்கியது. அதிக கோபம் வராமல் அடக்கிக் கொண்டான். 3-41 அந்த நிசாசரீ, இந்த அடியையே தங்க முடியாமல், உடல் சோர விழுந்தாள். கீழே விழுந்தவளைப் பார்த்து ஹனுமான், பாவம், ஸ்த்ரீ தானே என்று தயவுடன் அருகில் சென்றான்.   3-42 மிகவும் வேதனையோடு குரல் தழ தழக்க, அந்த லங்கா நகர காவல் தேவதை, தன் கர்வம் அழிந்தவளாக, வானர வீரனைப் பார்த்து, ஹரி சத்தமா, தயவு செய். காப்பாற்று. 3-43  சுமஹா பா3ஹோ- பெரிய கைகளுடன், ஆற்றல் மிகுந்தவனாக தெரிகிறாய்.  காலத்தை அனுசரித்து ஜீவராசிகள் நடமாடுகின்றன. நான் லங்கா நகரீ.  நீ என்னை ஜயித்து விட்டாய். 3-44 இதன் பலனை சொல்கிறேன், கேள். 3-45  முன்பு ஒரு சமயம், ஸ்வயம்பூ தானாக எனக்கு ஒரு வரம் கொடுத்தார்., எப்பொழுது ஒரு வானரம், தன் பலத்தால், உன்னை வெற்றி கொள்கிறானோ, அப்பொழுது இந்த ராக்ஷஸர்களுக்கு ஆபத்து என்று நினைத்துக் கொள். அந்த சமயம் வந்து விட்டதாக அறிகிறேன். வானரமே, உன்னை நான் கண்ட இந்த நிமிஷம், ராக்ஷஸர்களின் விநாசம் ஆரம்பம். 3-47  ஸ்வயம்பூ சொன்னது தவறாது. ஆபத்து காலம் தான் நெருங்கி விட்டது. சீதை காரணமாக, ராவண ராஜா தவறு இழைத்து விட்டான். 3-48 எல்லா ராக்ஷஸர்களையும் ஆபத்து சூழ்ந்து கொண்டு விட்டது. சரி, போய் வா, வானரோத்தமா, ராவணன் கவனமாக பாலித்து வரும் நகரத்தினுள் நுழைந்து சுற்றிப் பார்த்து விட்டு வா, என்ன செய்ய வேண்டுமோ, செய். 3-49 ஜனகாத்மஜாவை தேடி வந்திருக்கிறாயா? உள்ளே போய் நன்றாக தேடிப் பார். இந்த லங்கா நகரியும் சாபத்துக்கு ஆளானவளே. ஹரீஸ்வரா, போ. போய் உன் காரியத்தைப் பார். 3-50 சௌகரியம் போல போ, என்று அனுமதித்தாள்.3-51

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

चतुर्थः सर्गः   लङ्कापुरीप्रवेशः

स निर्जत्य पुरीं श्रेष्ठां लङकां  तां कामरूपिणीम्।
विक्रमेण महातेजा हनूमान् कपिसत्तमः॥                            5-4-01
अद्वारेण महाबाहुः प्राकारमभिपुप्लुवे।

निशि लङ्कां महासत्तवो विवेश कपिकुञ्जरः॥                        5-4-02

प्रविश्य नगरीं लङ्कां कपिराजहितम्करः।
चक्रेऽथ पदं सव्यं शत्रूणां स तु मूर्धनि॥                             5-4-03

प्रविष्टः सत्त्वसंपन्नो निशायां मारुतात्मजः।
स महापथमास्थाय मुक्तपुष्पविराजितम्॥                           5-4-04
ततस्तु तां पुरीं लङ्कां रम्यामभिययौ कपिः।

हसितोत्कृष्टनिनदैस्तूर्यघोषपुरःसरैः॥                                5-4-05
वज्राङ्कुशनिकाशैश्च वज्रजालविभूषितैः।
गृह मुख्यैः पुरी रम्या बभासे द्यौरिवाम्बुदैः॥                        5-4-06

प्रजज्वाल तदा लङ्का रक्षोगणगृहैः शुभैः।
सिताभ्रसदृशैश्चित्रैः पद्मस्वस्तिकसंस्थितैः॥                          5-4-07
वर्धमानगृहैश्चापि सर्वतः सुविभाषिता

तां चित्रमाल्याभरणां कपिराजहितंकरः॥                             5-4-08
राघवार्थं चरन् श्रीमान् ददर्श च ननन्द च।

भवनाद्भवनं गच्छ्न् ददर्श पवनात्मजः॥                            5-4-09
विविधाकृतिरूपाणि भवनानि ततस्ततः।

शुश्राव मधुरं गीतं त्रिस्थानस्वरभूषितम्॥                            5-4-10
स्त्रीणां मदसमृद्धानां दिवि चाप्सरसामिव।

शुश्राव कान्चीनिनदं नूपुराणां च निःस्वनम्॥                               5-4-11
सोपाननिनदांश्चैव भवनेषु महात्मनम्।

आस्फोटितनिनादांश्च क्ष्वेलितांश्च ततस्ततः॥                        5-4-12

शुश्राव जपतां तत्र मन्त्रान् रक्षोगृहेषु वै।

स्वाध्यायनिरतांश्चैव यातुधानान् ददर्श सः॥                          5-4-13
रावणस्तवसंयुक्तान् गर्जतो राक्षसानपि।

राजमार्गं समावृत्य स्थितं रक्षोबलं महत्॥                           5-4-14
ददर्श मध्यमे गुल्मे राक्षसस्य चरान् बहून्।

दीक्षिताञ्जटिलान् मुण्डान् गोऽजिनाम्बरवाससः॥                      5-4-15

दर्भमुष्टिप्रहरणानग्निकुण्डायुधांस्तथा।

कूटमुद्गरपाणींश्च दण्डायुधधरानपि॥                                                                                          5-4-16

சதுர்த4: ஸர்க: -லங்காபுரீ ப்ரவே:

ஸ நிர்ஜித்ய புரீம் ஸ்ரேஷ்டாம் லங்காம் தாம் காமரூபிணீம் |

விக்ரமேண மஹாதேஜா ஹனூமன் கபி சத்தம: ||

அத்3வாரேண மஹாபா3ஹு: ப்ராகாரமபி4புப்லுவே |

நிஸி லங்காம் மஹாசத்வோ விவே கபிகுஞ்ஜர: ||

ப்ரவிஸ்ய நக3ரீம் லங்காம் கபிராஜ ஹிதங்கர: |

சக்ரே(அ)த2 பாத3ம் சவ்யம் த்ரூணாம் ஸ து மூர்த4னி ||

ப்ரவிஷ்ட: சத்வ சம்பன்னோ நிஸாயாம் மாருதாத்மஜ: |

ஸ மஹாபத2மாஸ்தா2ய முக்த புஷ்பவிராஜிதம் ||

ததஸ்து தாம் புரீம் லங்காம் ரம்யாமபி4யயௌ கபி: |

ஹசிதோத்க்ருஷ்ட நினதஸ்தூர்ண கோ4ஷபுர:ஸரை:||

வஜ்ராங்குஸ நிகாஸைஸ்ச வஜ்ர ஜால விபூ4ஷிதை: |

க்3ருஹ முக்யை: புரீ ரம்யா ப3பா4ஸே த்3யௌரிவாம்பு3தை4: ||

ப்ரஜஜ்வால ததா2 லங்கா ரக்ஷோக3ண க்3ருஹை: ஸுபை4: |

ஸிதாப்4ர சத்3ருஸை: சித்ரை: பத்3ம ஸ்வஸ்திக ஸம்ஸ்தி2தை: ||

வர்த4 மான க்3ருஹைஸ்சாபி சர்வத: சுவிபூ4ஷிதா |

தாம் சித்ர மால்யாப4ரணம் கபிராஜ ஹிதங்கர: ||

ராக4வார்த2ம் சரன் ஸ்ரீமான் த33ர்ஸ ச நனந்த3 ச |

4வனாத் ப4வனம் கச்சன் த33ர்ஸ பவனாத்மஜ: ||

விவிதா4க்ருதி ரூபாணி ப4வனானி ததஸ்தத: |

சுஸ்ராவ மது4ரம் கீ3தம் த்ரிஸ்தான ஸ்வர பூ4ஷிதம் ||

ஸ்த்ரீணாம் மத சம்ருத்3தா4னாம் தி3வி சாப்ஸரஸாமிவ |

ஸுஸ்ராவ காஞ்சீ நினத3ம் நூபுராணாம் ச நிஸ்வனம் ||

சோபான நினதா3ம்ஸ்சைவ ப4வனேஷு மஹாத்மனாம் |

ஆஸ்போ2டித நினாதா3ம்ஸ்ச க்ஷ்வேலிதாம்ஸ்ச ததஸ்தத: || 4-12

ஸுஸ்ராவ காஞ்சீ நினத3ம் நூபுராணாம் ச நிஸ்வனம் ||

சோபான நினதா3ம்ஸ்சைவ ப4வனேஷு மஹாத்மனாம் |

ஆஸ்போ2டித நினாதா3ம்ஸ்ச க்ஷ்வேலிதாம்ஸ்ச ததஸ்தத: ||

ஸுஸ்ராவ ஜபதாம் தத்ர மந்த்ரான் ரக்ஷோ க்3ருஹேஷு வை |

ஸ்வாத்யாய நிரதாம்ஸ்சைவ யாது தா4னான் த33ர்ஸ ஸ: ||

ராவணஸ்தவ ஸம்யுக்தான் க3ர்ஜதோ ராக்ஷஸானபி |

ராஜமார்க3ம் ஸமாவ்ருத்ய ஸ்தி2தம் ரக்ஷோப3லம் மஹத் ||

33ர் மத்3யமே குல்மே ராக்ஷஸஸ்ய சரான் ப3ஹூன் |

தீ3க்ஷிதான் ஜடிலான் முண்டான் கோ(அ)ஜினாம்பர வாஸஸ: ||

3ர்ப முஷ்டி ப்ரஹரணான் அக்3னிகுடாயுதாம்ஸ்ததா3 |

கூட முத்கர பாணீன்ஸ்ச த3ண்டாயுத த4ரானபி || (4-16)

 

அத்தியாயம் 4 (342) லங்கா புரி பிரவேச: (லங்கா நகரில் நுழைதல்)

 

இரவின் முன் பகுதியில், கபி குஞ்சரன், குறுக்கு வழியில் லங்கா நகரத்தினுள் நுழைந்தான். தன் பலத்தால் லங்கா நகரீ  என்ற க்ஷேத்ர தேவதையை (ஊர்க் காவல் தேவதை) வீழ்த்தி விட்டு நகரத்தின் பிராகாரத்தை அடைந்தான். 4-1 இடது பாதத்தை, சத்ருக்களின் தலையில் வைப்பதாக எண்ணிக் கொண்டு, முன் வைத்தபடி நுழைந்தான். பூக்கள் உதிர்ந்து கிடக்க, பிரதான (தெருவை,) வீதியை அந்த இரவில் பார்வையால் அளந்தான். 4- 2  தூர்ய வாத்ய கோஷங்களும், ஜனங்க  ளின் சிரிப்பும் மகிழ்ச்சியுமாக பேசும் சப்தங்களும், கலந்து அந்த வீதியை நிறைத்திருந்ததைக் கண்டான். 4-3  மாளிகைகள் அழகாக காட்சியளித்தன. வீடுகளுக்கு நுழை வாசல் கதவுகளும், வஜ்ராங்குசம் போல பலமாக போடப் பட்டிருந்தன.  மேகக் கூட்டங்கள் வானத்தை நிறைத்திருப்பதைப் போல தெரிந்தன. 4-4  வெண்மையான வான வெளியில், சித்திரங்கள் வரைந்தது போல வெண் நிற பூச்சுகளில், பத்மம், ஸ்வஸ்திகம் என்று வேலைப் பாடுகள் செய்யப் பட்டிருந்தன.

4-5  கபி ராஜனான சுக்ரீவனின் நலனை விரும்பும், வானர வீரனான ஹனுமான், நெடிதுயர்ந்த  மாளிகைகளுக்கு இடையில் நின்றபடி இந்த காட்சிகளை ரசித்து மகிழ்ந்தான். 4-6  அடிக்கடி, மனதினுள் தான் வந்திருப்பது ராம காரியத்திற்காக என்றும் நினைவு படுத்திக் கொண்டான். வீட்டுக்கு வீடு தாவி குதித்து தேடினான்.

4-8-  பலவிதமான அமைப்புகளுடன் வீடுகள்.  மூன்று ஸ்தாயியிலும் சுஸ்வரமாக ஸங்கீதம் கேட்டது. 4-9  தேவ லோகத்து அப்ஸர ஸ்த்ரீகள் போல இங்கும் பல பெண்கள் கூட்டம் கூட்டமாக காணப்பட்டனர்.  கால் கொலுசுகள் அசைவதாலும், இடுப்பு ஒட்டியாண மணிகள் அசைந்தும் எழுப்பிய ஒலிகளைக் கேட்டான். 4-10 மாடிப்படிகளில் ஏறுவதும் இறங்குவதும் துல்லியமாக கேட்டது. 4-11  ஆங்காங்கு தோள் தட்டி போட்டிக்கு அழைக்கும் குரலும்,  வெற்றி பெற்றவர்கள் எக்காளம் இடுவதும் கேட்டது.4-12 ராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும்  கேட்டது. 4-13 ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். 4-14 சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான்.   குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர்.4-15 இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். 4-16
एकाक्षानेककर्णांश्च लम्बोदरपयोधरान्।
करालान् भुग्नवक्त्रांश्च विकटान् वामनांस्तथा॥                       5-4-17
धन्विनः खड्गिनश्चैव शतघ्नीमुसलायुधान्।
परिघोत्तमहस्तांश्च विचित्रकवचोज्ज्वलान्॥                           5-4-18
नातिस्थूलान्नातिकृशान्नातिदीर्धातिह्रस्वकान्।
नातिगौरान्नातिकृष्णान्नातिकुब्जान्न वामनान्॥                       5-4-19
विरूपान् बहुरूपांश्च सुरूपांश्च सुवर्चसः।

पताकाध्वजिनश्चैव ददर्श विविधायुधान्॥                            5-4-20
शक्तिवृक्षायुधांश्चैव पट्टिशाशनिधारिणः।
क्षेपणीपाशहस्तांश्च ददर्श स महाकपिः॥                             5-4-21
स्रग्विणस्त्वनुलिप्तांश्च वराभरणभूषितान्।
नानावेषसमायुक्तान् यथास्वैरगतान् बहून्॥                          5-4-22
तीक्ष्णशूलधरांश्चैव वज्रिणश्च महाबलान्।

शतसाहस्रमव्यग्रमारक्षं मध्यमं कपिः॥                              5-4-23
रक्षोऽधिपतिनिर्दिष्टं ददर्शान्तःपुराग्रतः।

स तदा तद्गृहं दृष्ट्वा महाहाटकतोरणम्॥                           5-4-24
राक्षसेन्द्रस्य विख्यातमद्रिमूर्ध्नि प्रतिष्ठितम्।
पुण्डरीकावतंसाभिः परिखाभिः समावृतम्॥                           5-4-25
प्राकारावृतमत्यन्तं ददर्श स महाकपिः।

त्रिविष्टपनिभं दिव्यं दिव्यनादविनादितम्॥                           5-4-26
वाजिहेषितसंघुष्टं नादितं भूषणैस्तथा।
रथैर्यानैर्विमानैश्च तथा गजहयैः शुभैः॥                              5-4-27

वारणैश्च चतुर्दन्तैः श्वेताभ्रनिचयोपमैः।
भूषितं रुचिरद्वारं मत्तैश्च मृगपक्षिभिः॥                             5-4-28
क्षितं सुमहाविर्यैर्यातुधानैः सहस्रशः।

राक्षसाधिपतेर्गुप्तमाविवेश गृहं कपिः॥                              5-4-29

सहेमजाम्बूनदचक्रवालं
महार्हमुक्तामणिभूषितान्तम्॥
परार्ध्यकालागुरुचन्दनाक्तं
स रावणान्तःपुरमाविवेश॥                                  5-4-30

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे लङ्कापुरीप्रवेशो नाम चतुर्थः सर्गः

 

ஏகாக்ஷானேக கர்ணாம்ஸ்ச லம்போ33ர பயோத4ரான் |

கராலான் புக்3னவக்த்ரான்ஸ்ச விகடான் வாமனாம்ஸ்ததா3 ||

4ன்வின: க2ட்கி3னஸ்சைவ தக்4னீ முஸலாயுதா4ன் |

பரிகோ3த்தம ஹஸ்தாம்ஸ்ச விசித்ர கவசோஜ்ஜ்வலான் ||

நாதிஸ்தூ2லான்னாதி க்ருஸான்னாதி தீ4ர்காதி ஹ்ரஸ்வகான் |

நாதிகௌரான்னாதி குப்ஜான்ன வாமனான் ||

விரூபான் பஹுரூபாம்ஸ்ச சுரூபாம்ஸ்ச சுவர்சஸ: |

பதாகாத்4வஜினஸ்சைவ த33ர்ஸ விவிதா4யுதா4ன் ||

சக்திவிருக்ஷாயுதாம்ஸ்சைவ  பட்டிசாஸனி தா4ரிண: |

க்ஷேபணி பாஸ ஹஸ்தாம்ஸ்ச த33ர்  ஸ மஹாகபி: ||

ஸ்ரக்3வினஸ்த்வனுலிப்தாம்ஸ்ச வராப4ரண பூ4ஷிதான் |

நானாவேஷ ஸமாயுக்தான் யதா2 ஸ்வைர க3தான் ப3ஹூன் ||

தீக்ஷ்ணசூல த4ராம்ஸ்சைவ வஜ்ரிணஸ்ச மஹாப3லான் |

ஸதஸாஹஸ்ரமவ்யக்3ரமாரக்ஷம் மத்3யமம் கபி: ||

ரக்ஷோ(அ)தி4ப நிர்தி3ஷ்டம் த33ர்ஸாந்த:புராக்3ரத: |

ஸ ததா3  தத்க்3ருஹம் த்3ருஷ்ட்வா மஹா ஹாடக தோரணம் ||

ராக்ஷஸேந்த்3ரஸ்ய விக்2யாதமத்3ரி முர்த்4னி ப்ரதிஷ்டிதம் |

புண்டரீகாவதம்ஸாபி: பரிகா2பி: சமாவ்ருதம் ||

ப்ராகாராவ்ருதமத்யந்தம் த33ர் ஸ மஹாகபி: |

த்ரிவிஷ்டப நிப4ம் தி3வ்யம் தி3வ்ய நாத3 வினாதி3தம் ||

வாஜி ஹேஷித ஸம்கு3ஷ்டம் நாதி3தம் பூ4ஷணைஸ்ததா3 |

ரதைர் யானைர் விமானைஸ்ச ததா33ஜ ஹயை: ஸுபை4: || 4-27

வாரணைஸ்ச சதுர்த3ந்தை: ஸ்வேதாப்4ர நிசயோபமை: |

பூ4ஷிதம் ருசிரத்3வாரம் மத்தைஸ்ச ம்ருக3 பக்ஷிபி4: ||

ரக்ஷிதம் ஸுமஹாவீர்யை: யாதுதா3னை: ஸஹஸ்ர: |

ராக்ஷஸாதிபதேர் குப்தமாவிவேஸ க்3ருஹம் கபி: ||

ஸஹேம ஜாம்பூனத3 சக்ரவாளம்

மஹார்ஹ முக்தா மணி பூ4ஷிதாந்தம் ||

பரார்க்3ய காலாக3ரு சந்தனாக்தம்

ஸ ராவணாந்த:புரமாவிவே || (4-30)

 

(இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே சதுர்விம்தி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயாம் சுந்த3ரகாண்டே லங்காபுரீ ப்ரவேஸோ நாம் சதுர்த4: ஸர்க3:  )

 

 

 

 

ராக்ஷஸர்களின் வீடுகளில் மந்திர கோஷமும், ஜபம் செய்வதும்  கேட்டது. 4-13 ஸ்வாத்யாயம் எனும் வேத பாராயணம் செய்வதில் ஈ.டுபட்ட ராக்ஷஸர்கள் பலரையும் ஹனுமான் கண்டான். 4-14 சில ராக்ஷஸர்கள் உரத்த குரலில் ராவணனை ஸ்தோத்திரம் செய்து கொண்டிருந்தனர். இடையிடையே காவல் வீரர்களையும் கண்டான்.   குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த அவர்களில் பலர், ராஜ வீதியை அடைத்துக் கொண்டு இருந்தனர்.4-15 இடையிடையில் ராக்ஷஸர்களில் துப்பறியும், வேவு பார்க்கும் படையினரும் கலந்து நடமாடுவதை ஊகித்தான். சிலர் ஜடா முடியுடன், சிலர் தலையை மழித்துக் கொண்டவர்களாக, பசு, மான் தோல் ஆடைகளை அணிந்தவர்களாக. கையில் தர்ப்பை கட்டாக ஏந்தி அக்னி குண்டலங்களுடன், நித்ய கர்மானுஷ்டானங்களை செய்பவர்களாக கண்டான். 4-16 கூடம், உத்33ரம் என்ற ஆயுதங்களும், த3ண்டாயுதமும் வைத்துக் கொண்டு, ஏகாக்ஷ- ஒரு கண்ணுடையவர்கள், ஒரு காது உடையவர்கள், பெருத்த வயிறு உடையவர்கள்,  ஸ்தனங்கள் நீண்டு தொங்கும் சிலர், பெரிய கட்டை (கதவு தாழ்ப்பாள்) போன்ற கைகளுடையவர்கள். விசித்ரமான பள பளக்கும் கவசங்களை அணிந்தவர்,4-17  இப்படி சிலர்.  பெரும்பாலோர்,  அதிக ஸ்தூலமும் இல்லாமல், அதிக க்ருசம் (மெலிந்த சரீரமும்) இல்லாமல் இருந்தனர்.  காண கொடூரமாக, வாயும் முகமும் வெந்தது போன்ற தோற்றத்துடன் குள்ளர்கள்,  சமமில்லாத உடல் அமைப்பு கொண்டவர்கள், சிலர். 4-18   வில்லேந்தியவர்கள், வாளேந்தியவர்கள், சதக்4னீ, முஸலம் இவற்றை ஆயுதமாக ஏந்தியவர்கள், அதிக ஸ்தூலமோ, அதிக க்ருசமோ- மிக அதிக உயரமோ, மிகச் சிறிய உருவமோ, மிகவும் வெளுத்த சரீரமோ, அதிக கறுப்போ, முதுகு கூணல் உடையவர்களோ,  வாமனர்களோ, ரூபம் இன்றி இருந்தவர்களும் மிகக் குறைவே.  அழகிய சரீரமும், கட்டான தேகம் உடையவர்களுமே  கொடிகளையும், த்வஜ ஸ்தம்பங்களையும் கையில் வைத்திருந்தனர். 4-19 சக்தி, வ்ருஷ என்ற ஆயுதங்களையும், பட்டிச, அசனி இவைகளையும், க்ஷேபணி, பாசம் இவைகளையும், கையில் ஏந்தி தனித் தனி கூட்டமாக நடந்து செல்பவர்களையும் கண்டான். 4-20  உயர்ந்த ஆபரணங்களை அணிந்தவர்களாக, மாலைகளும் ஹாரங்களும் அணிந்து, அங்க ராகம் பூசிக் கொண்டும்,4-21 பலவித வேஷங்கள் கலந்து தெரிய வேகமாக நடைபோடும் காவல் வீரர்கள். தீக்ஷ்ணமான சூலங்கள் ஏந்தியவர்கள், வஜ்ரத்தையும் ஏந்திய நூறாயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் மத்தியில் 4-22  வானரம் தன்னை மறைத்துக் கொண்டு நடப்பதே சிரமமாக, மறைந்து மறைந்து ராவணனின் அந்த:புரம் இருந்த மாளிகையை வந்தடைந்தான்.  அந்த க்ருஹத்தை சற்று நேரம் பார்த்தபடி நின்றான். 4-23-24 மகா ஹாடகம் விலையுயர்ந்த பத்தரை மாற்றுத் தங்கம், இதில் தோரணங்கள் கட்டப் பட்டிருந்தன.  மலையின் உச்சியில், ராக்ஷஸேந்திரனின் புகழை பரப்பிக் கொண்டு, அரண்மணை கம்பீரமாகத் தெரிந்தது  4-25 தாமரைத் தண்டு போன்ற குளுமையும், வெண்மையுமான சுவர்கள், நாலா புறமும் ஓடிய ப்ராகாரங்களுடன், தேவலோகம். போன்ற திவ்யமான அமைப்புடன், இனிய நாதம் கேட்க, குதிரைகள் கனைக்கும் சத்தமும் ஊடே கேட்க, ஆபரணங்கள் உராய்வதால் உண்டான சப்தமும் இடையிடையே கேட்டது. 4-26 ரதங்கள், மற்ற வாகனங்கள், விமானங்கள், யானை, குதிரைகள், சுபமான நான்கு தந்தங்கள் உடைய பட்டத்து யானைகள், இந்த யானைகளே வெண் மேகம் போல காட்சியளித்தன. 4-27   நுழை வாயில் மிக நேர்த்தியாக ரசனையுடன் அலங்கரிக்கப் பட்டிருந்தது.   மதம் கொண்டு உல்லாசமாகத் தெரிந்த வளர்ப்பு மிருகங்களும், பக்ஷிகளும் வாசலில் காணப் பட்டன. 4-28  இவை உட்பட காவல் வீரர்கள் பத்திரமாக பாது காத்தனர்.  ஆயிரக் கணக்கான ராக்ஷஸர்கள் வந்து போய் கொண்டிருந்தனர். இந்த கோலாகலத்துக்கு இடையிலும், வானரம் ராவணன் மாளிகையில் யாரும் அறியாமல் நுழைந்து விட்டது. 4-29  பொன்னாலான தூண்களுடன் நடு முற்றமும், விலையுயர்ந்த முத்துக்களும், மணிகளும் பதித்த உட்பகுதி, பரார்க்4ய, கால, அகரு, சந்தனம் இவை மணம் பரப்ப, ராவணனின் அந்த:புரத்தில் பிரவேசித்தான். 4-30

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், லங்கா புரி ப்ரவேச: என்ற மூன்றாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

 

 

 

पञ्चमः सर्गः

भवनविचयः

ततः स मध्यं गतमंशुमन्तं ज्योत्स्नावितानं महद्दुद्वमन्तम्।
ददर्श धीमान् दिवि भानुमन्तं गोष्ठे वृषं मत्तमिव भ्रमन्तम्।।                  5.5.01

लोकस्य पापानि विनाशयन्तं महोदधिं चापि समेधयन्तम्।
भूतानि सर्वाणि विराजयन्तं ददर्श शीतांशुमथाभियान्तम्।।              5.5.02

या भाति लक्ष्मीर्भुवि मन्दरस्था यथा प्रदोषेषु च सागरस्था।
तथैव तोयेषु च पुष्करस्था रराज सा चारुनिशाकरस्था।।                5.5.03

हंसो यथा राजतपञ्जरस्थः सिंहो यथा मन्दरकन्दरस्थः।
वीरो यथा गर्वितकुञ्जरस्थश्चन्द्रोऽपि बभ्राज तथाम्बरस्थः।।             5.5.04

स्थितः ककुद्मानिव तीक्ष्णशृङ्गो महाचलः श्वेत इवोच्चशृङ्गः।
हस्तीव जाम्बूनदबद्धशृङ्गो रराज चन्द्रः परिपूर्णशृङ्गः।।               5.5.05

विनष्टशीताम्बुतुषारपङ्को महाग्रहग्राहविनष्टपङ्कः।
प्रकाशलक्ष्म्याश्रयनिर्मलाङ्कॊ रराज चन्द्रो भगवाञ्शशाङ्कः।।            5.5.06

शिलातलं प्राप्य यथा मृगेन्द्रो महारणं प्राप्य यथा गजेन्द्रः।
राज्यं समासाद्य यथा नरेन्द्रस्तथा प्रकाशो विरराज चन्द्रः।।             5.5.07

प्रकाशचन्द्रोदयनष्टदोषः प्रवृत्तरक्षः पिशिताशदोषः।
रामाभिरामेरितचित्तदोषः स्वर्गप्रकाशो भगवान् प्रदोषः।।                 5.5.08

तन्त्रीस्वनाः कर्णसुखाः प्रवृत्ताः स्वपन्ति नार्यः पतिभिः सुवृत्ताः।

नक्तंचराश्चापि तथा प्रवृत्ता विहर्तुमत्यद्भुतरौद्रवृत्ताः।।                        5.5.09

मत्तप्रमत्तानि समाकुलानि रथाश्वभद्रासनसंकुलानि।
वीरश्रिया चापि समाकुलानि ददर्श धीमान् स कपिः कुलानि।।                  5.5.10

परस्परं चाधिकमाक्षिपन्ति भुजांश्च पीनानधिविक्षिपन्ति।
मत्तप्रलापानधिविक्षिपन्ति मत्तानि चान्योन्यमधिक्षिपन्ति।।              5.5.11

रक्षांसि वक्षांसि च विक्षिपन्ति गात्राणि कान्तासु च विक्षिपन्ति।
रूपाणि चित्राणि च विक्षिपन्ति दृढानि चापानि च विक्षिपन्ति।।          5.5.12

ददर्श कान्ताश्च समालपन्त्यस्तथापरास्तत्र पुनः स्वपन्त्यः।
सुरूपवक्त्राश्च तथा हसन्त्यः क्रुद्धाः पराश्चापि विनिःश्वसन्त्य:।।        5.5.13

महागजैश्चापि तथा नदद्भि: सुपूजितैश्चापि तथा सुसद्भिः।
रराज वीरैश्च विनिःश्वसद्भिर्ह्रदो भुजङगैरिव निःश्वसद्भिः।।                  5.5.14

बुद्धिप्रधानान् रुचिराभिधानान् संश्रद्धधानाञ्जगतः प्रधानान्।
नानाविधानान् रुचिराभिधानान् ददर्श तस्यां पुरि यातुधानान्।।           5.5.15

ननन्द दृष्ट्वा च स तान् सुरूपान्नानागुणानात्मगुणानुरूपान्।
विद्योतमानान् स तदानुरूपान् ददर्श कांश्चिच्च पुनर्विरूपान्।।           5.5.16

பஞ்சம: ஸர்க:    பவன விசய:

தத: ஸ மத்3யம் க3தமம்ஸுமந்தம் ஜ்யோத்ஸ்னாவிதானம் மஹது3த்3வமந்தம் | த33ர் தீ4மான் தி3வி பா4னுமந்தம் கோ3ஷ்டே வ்ருஷம் மத்தமிவ ப்3ரமந்தம் ||

லோகஸ்ய பாபானி வினாயந்தம் மஹோததி4ம் சாபி ஸமேத4யந்தம் | பூ4தானி ஸர்வாணி விராஜயந்தம் த33ர் ஸீதாம்ஸுமதாபி4யாந்தம் ||

யா பா4தி லக்ஷ்மீர் பு4வி மந்த3ரஸ்தா2 யதா2 ப்ரதோ3ஸேஷு ச ஸாகரஸ்தா2 | ததை3வ தோயேஷு ச புஷ்கரஸ்தா2 ரராஜ ஸா சாரு நிஸாகரஸ்தா2 ||

ஹம்ஸோ யதா2 ராஜத பஞ்ஜரஸ்தா2 சிம்ஹோ யதா2 மந்தர கந்தரஸ்த2: | வீரோ யதா2 கர்வித குஞ்ஜரஸ்த2: சந்த்3ரோ(அ)பி ப3ப்4ராஜ ததா3ம்ப3ரஸ்த2: ||

ஸ்தி2த: ககுத்3மானிவ தீக்ஷ்ண ஸ்ருங்கோ3 மஹாசல: ஸ்வேத இவோச்சஸ்ருங்க: | ஹஸ்தீவ ஜாம்பூனத3 பத்34 ஸ்ருங்கோ3 ரராஜ சந்த்3ர: பரிபூர்ண ஸ்ருங்க3: ||

வினஷ்ட ஸீதாம்பு துஷார பங்கோ மஹாக்3ரஹ க்3ராஹ வினஷ்ட பங்க2: | ப்ரகாஸ லக்ஷ்ம்யாஸ்ரய நிர்மலாங்கோ ரராஜ சந்த்3ரோ ப4கவான் ஸஸாங்க: ||

ஸிலாதலம் ப்ராப்ய யதா2ம்ருகேந்த்3ரோ மஹாரணம் ப்ராப்ய யதா2 கஜேந்த்ர: | ராஜ்யம் ஸமாஸாத்4ய யதா2 நரேந்த்ரஸ்ததா2 ப்ரகாஸோ விரராஜ சந்த்3ர : ||

ப்ரகா சந்த்3ரோத3ய நஷ்ட தோ3ஷ: |ப்ரவ்ருத்த ரக்ஷ: பிஸிதாஸ தோ3ஷ: | ராமாபி4ராமேரித சித்த தோ3ஷ: ஸ்வர்க3 ப்ரகாஸோ43வான் ப்ரதோ3ஷ: || 5-8

தந்த்ரீஸ்வனா: கர்ண சுகா2: ப்ரவ்ருத்தா: ஸ்வபந்தி நார்ய: பதிபி4: சுவ்ருத்தா: |

நக்தம் சராஸ்சாபி ததா2 ப்ரவ்ருத்தா விஹர்துமத்யத்3பு4த ரௌத்3ர வ்ருத்தா: ||

மத்த ப்ரமத்தானி ஸமாகுலானி ரதாஸ்வ ப4த்3ராஸன ஸங்குலானி | வீர ஸ்ரியா சாபி சமாகுலானி த33ர்  தீ4மான் ஸ கபி:குலானி ||

பரஸ்பரமாதி4கமாக்ஷிபந்தி பு4ஜாம்ஸ்ச பீனானதி விக்ஷிபந்தி

மத்த ப்ரலாபானதி விக்ஷிபந்தி மத்தானி சான்யோன்யமதி க்ஷிபந்தி ||

ரக்ஷாம்ஸி வக்ஷாம்ஸி ச விக்ஷிபந்தி கா3த்ராணி காந்தாஸு ச விக்ஷிபந்தி | ரூபானி சித்ராணி ச விக்ஷிபந்தி த்3ருடானி சாபானி ச விக்ஷிபந்தி ||

ததர்ஸ காந்தாஸ்ச ஸமாலபந்த்ய: ததாபராஸ்தத்ர புன: ஸ்வபந்த்ய: | ஸுரூப வக்த்ராஸ்ச ததா2 ஹஸந்த்ய: க்ருத்3தா4: பராஸ்சாபி வினிஸ்வஸந்த்ய: ||

மஹாக3ஜைஸ்சாபி ததா2 நத3த்பி4: சுபூஜிதைஸ்சாபி ததா2 சுஸத்பி: |

ரராஜ வீரைஸ்ச வினிஸ்வஸத்பி4: ஹ்ரதோ3 புஜங்கை3ரிவ நிஸ்வஸத்பி4: ||

புத்3தி4 ப்ரதா4னான் ருசிராபி4தா3னான் ஸம்ஸ்ரத்34தா3னான் ஜகத: ப்ரதா4னான் | நானா விதா4னான் ருசிராபி4தா3னான் த33ர் தஸ்யாம் புரி யாதுதா4னான் ||

நனந்த3 த்3ருஷ்ட்வா ச ஸ தான் ஸுரூபான் நானா கு3ணானாத்ம கு3ணானுரூபான் | வித்3யோதமானான் ஸ ததா3னுரூபான்த33ர்  காம்ஸ்சிச் ச புனர்விரூபான் || (5-16)

 

அத்தியாயம் 5 (343)  ப4வன விசய: (வீடுகளில் தேடுதல்)

 

தீ4மாந்- புத்திசாலியான ஹனுமான் சுற்று முற்றும் பார்த்து, தான் தேட வேண்டிய இடங்களை மனதில் குறித்துக் கொள்ள தானும் உதவி செய்ய விழைந்தது போல,  சந்திரன் உதயம் ஆனான்.  ஒளியை உமிழ்ந்து கொண்டு சந்திரன் வானில் மத்தியில், பசுக்களின் கூட்டத்தில், மதம் பிடித்த ரிஷபம் தன்னிச்சையாக நடப்பது போல மிதந்துகொண்டு செல்வதைக் கண்டான். 5-1  குளிர்ந்த கிரணங்களைக் கொண்டவன். உலகில் உள்ளவர்களின் பாபங்களை போக்குபவன், பெருங்கடலையும் ஆட்டுவிப்பவன், எல்லா ஜீவ ராசிகளையும் பிரகாசிக்கச் செய்பவன், வானத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தான். 5-2  எந்த லக்ஷ்மி உலகில் (மந்தரஸ்தா) மந்தர மலையில் இருக்கிறாளோ, ப்ரதோஷ காலங்களில் சாகரஸ்தா- சாகரங்களில் இருக்கிறாளோ, நீர் நிலை என்றால் புஷ்கரத்தில் விளங்குகிறாளோ, அவள் அந்த நிசாகரன் எனும் சந்திரனிடத்தில் குடி கொண்டாள்.  5-3 ஹம்ஸம் ஒன்று  வெள்ளியினாலான கூண்டில் இருப்பது போலவும், சிங்கம் ஒன்று மந்தர மலையின் குகையில் இருப்பது போலவும், வீரன் ஒருவன் பெருமிதத்துடன் யானை மேல் அமர்ந்திருப்பது போலவும், சந்திரன் அந்த வானத்தில் இருந்தபடி பிரகாசித்தான். 5-4 (ககுத்- காளையின் முதுகில் இருக்கும் திமில்,  ககுத்மான், திமில் உடைய காளை) கூர்மையான கொம்புகளையுடைய காளை போலவும், ஸ்வேத மகா மலை, உயர்ந்த சிகரத்துடன் இருப்பது போலவும், யானை தந்தத்துக்கு தங்க முலாம் பூசியது போலவும், சந்திரனும் பரிபூர்ண கலைகளோடு பிரகாசித்தான். 5-5  குளிர்ந்த நீரின் பனித்துளிகள் சேறாக (ஒன்று சேர), கடலில் பெரும் முதலைகள் அசைந்து நீரைக் கலக்குவதால் சேறு படியாமல் நீர் தெளிவாகத் தெரிவது போலவும், பிரகாசமான லக்ஷ்மி ஆசிரயித்ததால், நிர்மலமான சரீரத்துடன் (அங்கங்களுடன்) பகவான் சசாங்கன் (விராஜ) பரிசுத்தமாகத் தெரிந்தான். 5-6  ம்ருகேந்திரன் எனும் சிங்கம் சிலாதலம் பாறையை அடைந்து சுகமாக படுப்பது போலவும், பெரும் அரண்யத்தை அடைந்த மகா க3ஜம் மன நிறைவு கொள்வது போலவும், நரேந்திரன் ராஜ்யத்தையடைந்து திருப்தியடைவது போலவும், சந்திரன் தன் பிரகாசத்தை வீசிக் கொண்டு சந்தோஷமாக உலவுவது போல் பவனி வந்தான். 5-7  பிரகாசமான சந்த்ரோதயத்தால் தோஷங்கள் நீங்கப் பெற்று, வளர்ந்து வரும் ராக்ஷஸர்களின் பலம் மட்டுமே தோஷமாக, பெண்களின் மனதில் தோன்றும்  சித்ர தோஷ:-ஆசைகள், நப்பாசைகள் (பெண்கள் என்றால்) மட்டுமே இருக்க, ஸ்வர்க பிரகாசமாக பகவான் ப்ரதோஷன் காட்சி தந்தான். 5-8 தந்தி வாத்யங்கள் காதுக்கு இனிமையாக கேட்டன. தங்கள் கணவன்மார்களை அணைத்துக் கொண்டு ஸ்த்ரீகள் படுத்துறங்கினர். இரவில் சஞ்சரிக்கும் ராக்ஷஸர்களும், தங்கள் க்ரூர கர்மாக்களை செய்ய வெளிப்பட்டனர்.    அதுவே அவர்களின் அத்புதமான விளையாட்டு போலும். 5-9 கபியின் கண்களுக்கு வீர லக்ஷ்மி தாண்டவமாடுவதாக தெரிந்தது.  மதம் கொண்டு கர்வத்துடன் ஏராளமாக கலந்து கிடந்த யானை குதிரைகள், ரதங்கள், பத்ராஸனங்கள், வீடு தோறும் காணப்பட்டன. 5-10  ஒருவருக்கொருவர் சவால் விட்டு அறை கூவி போருக்கு (போட்டிக்கு) அழைத்தனர். நீண்ட கைகளால் குஸ்தி மல்யுத்தம் செய்தனர். வாயால் சுய பிரதாபங்களைப் பேசிக் கொண்டனர்.  விளையாட்டாக ஒருவரை ஒருவர் ஏசிக் கொண்டனர். 5-11  ராக்ஷஸர்கள் மோதிக் கொண்டும், தங்கள் பத்னிகளிடம் உறவாடிக் கொண்டும், அழகிய சித்ரங்களை வரைந்து கொண்டும், வாள் முதலியவைகளை வீசிக் கொண்டும் திரிந்தனர். 5-12  சிலர் மனைவிகளுடன் பேசி பொழுதைக் கழித்தனர். மற்றும் சிலர் தூங்கினர். சிலர் சிரித்தனர். கோபம் கொண்டு சிலர் பெருமூச்சு விட்டனர். 5- 13  பெரும் யானைகள்       பிளிறுவது போலவும், நல்லவர்கள், சத்தான ஜனங்களை மதித்து போற்றுவது போலவும், வீரர்கள் பெருமூச்சு விடுவது போலவும், குளத்து நீரில் நாகங்கள் சீறுவது போலவும், 5-14 புத்தியே பிரதானமாக உடையவர்களையும், ரசித்து மகிழும் ரசிகர்களையும், (ரஸனையே – ரசிப்பதே பிரதானமாக) சிரத்தையுடன் செயல் படுபவர்களையும், உலகில் மேன்மையாக வாழ ஆசை கொண்டவர்களும் பலவிதமாக ராக்ஷஸர்களைக் கண்டான். 5-15  இப்படி இவர்களைப் பார்த்து ஹனுமான் மகிழ்ச்சியடைந்தான். நல்ல ரூபம் உடையவர்கள், குணம் நிறைந்தவர்கள், தன்னைப் போலவே உயர்ந்த கொள்கையுடையவர்களும், பலர் இருக்க, ஒரு சிலர் இதற்கு நேர் எதிராக, எதிரான குணங்களுடன் இருப்பதையும் கண்டான். 5-16

 

ततो वरार्हाः सुविशुद्धभावास्तेषां स्त्रियस्तत्र महानुभावाः।
प्रियेषु पानेषु च सक्तभावा ददर्श तारा इव सुप्रभावाः।।                 5.5.17

श्रियॊ ज्वलन्तीस्त्रपयोपगूढा निशीथकाले रमणोपगूढाः।
ददर्श काश्चित् प्रमदोपगूढा यथा विहङ्गाः कुसुमोपगूढाः।।               5.5.18

अन्याः पुनर्हर्म्यतलोपविष्टास्तत्र प्रियाङ्केषु सुखोपविष्टाः।
भर्तुः प्रिया धर्मपरा निविष्टा ददर्श धीमान् मदनाभिविष्टाः।।            5.5.19

अप्रावृताः काञ्चनराजिवर्णाः काश्चित् परार्घ्यास्तपनीयवर्णाः।
पुनश्च काश्चिच्छशलक्ष्मवर्णाः कान्तप्रहीणा रुचिराङ्गवर्णाः।।                  5.5.20

ततः प्रियान् प्राप्य मनोऽभिरामान् सुप्रीतियुक्ताः प्रसमीक्ष्य रामाः।
गृहेषु हृष्टाः परमाभिरामा हरिप्रवीरः स ददर्श रामाः।।                              5.5.21

चन्द्रप्रकाशाश्च हि वक्त्रमालाः वक्राक्षिपक्ष्माश्च सुनेत्रमालाः।
विभूषणानां च ददर्श मालाः शतह्रदानामिव चारुमालाः।।                      5.5.22

न त्वेव सीतां परमाभिजातां पथि स्थिते राजकुले प्रजाताम्।
लतां प्रपुल्लामिव साधु जातां ददर्श तन्वीं मनसाभिजाताम्।।                  5.5.23

सनातने वर्त्मनि संनिविष्टां रामेक्षणां तां मदनाभिविष्टाम्।
भर्तुर्मनः श्रीमदनुप्रविष्टां स्त्रीभ्यो वराभ्यश्च सदा विशिष्टाम्।।           5.5.24

उष्णार्दितां सानुसृतास्रकण्ठीं पुरा वरार्होत्तमनिष्ककण्ठीम्।
सुजातपक्ष्मामभिरक्तकण्ठीं वने प्रनृत्तामिव नीलकण्ठीम्।।               5.5.25

अव्यक्तरेखामिव चन्द्रलॆखां पांसुप्रदिग्धामिव हेमरेखाम्।
क्षतप्ररूढामिव बाणरेखां वायुप्रभिन्नामिव मेघरेखाम्।।                        5.5.26

सीतामपश्यन् मनुजेश्वरस्य रामस्य पत्नीं वदतां वरस्य।
बभूव दुःखाभिहतश्चिरस्य प्लवङ्गमो मन्द इवाचिरस्य।।               5.5.27

 

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्

सुन्दरकाण्डे भवनविचयो नाम पञ्चमः सर्गः

 

ததோ வரார்ஹா: ஸுவிஸுத்த பா4வாஸ்தேஷாம்

ஸ்த்ரியஸ்தத்ர மஹானுபா4வா: | 5-7

ப்ரியேஷு பானேஷு ச சக்த பாவா: த33ர் தாரா இவ சுப்ரபா4வா: ||

ஸ்த்ரியோ ஜ்வலந்தீஸ்த்ரபயோப கூ3டா4 நிஸீத காலே ரமணோபகூடா4: |

33ர் காஸ்சித் ப்ரமதோ3பகூ3டா4 யதா2 விஹங்கா: குசுமோபகூடா4: ||

அன்யா: புனர்ஹர்ம்யதலோபவிஷ்டாஸ்தத்ர ப்ரியாங்கேஷு  ஸுகோபவிஷ்டா: |

பர்து: ப்ரியா த4ர்மபரா நிவிஷ்டா த33ர் தீ4மான் மத3னாபிவிஷ்டா: ||

அப்ராவ்ருதா: காஞ்சன ராஜிவர்ணா: காஸ்சித் ஸஸலக்ஷ வர்ணா: காந்தப்ரஹீணா ருசிராங்க3 வர்ணா: ||

தத: ப்ரியான் ப்ராப்ய மனோ(அ)பி4ராமான் சுப்ரீதி யுக்தா: ப்ரஸமீக்ஷ்ய ராமா: | க்3ருஹேஷு ஹ்ருஷ்டா: பரமாபி4ராமா ஹரிப்ரவீரா: ஸ த33ர் ராமா: ||

சந்த்3ரப்ரகாஸாஸ்ச வக்த்ர மாலா: வக்ராக்ஷி பக்ஷ்மாஸ்ச சுனேத்ர மாலா: |

விபூ4ஷணானாம் ச த33ர் மாலா: த ஹ்ரதா3னாமிவ சாரு மாலா: ||

ந த்வேவ சீதாம் பரமாபி4ஜாதாம் பதி2 ஸ்தி2தே ராஜ குலே ப்ரஜாதாம் ||

லதாம் ப்ரபு2ல்லாமிவ சாது4 ஜாதாம் த33ர் தன்வீம் மனஸாபி4ஜாதாம் ||5-23

 

ஸனாதனே வர்த்மனி ஸன்னிவிஷ்டாம் ராமேக்ஷணாம் தாம் மத3னாபிவிஷ்டாம் |

பர்துர்மன: ஸ்ரீமத3னுப்ரவிஷ்டாம் ஸ்த்ரீப்4யோ வராப்4யஸ்ச ஸதா3 விஸிஷ்டாம் ||

உஷ்ணார்தி3தாம் சானுஸ்ருஸ்ருதாஸ்ர கண்டீம்

புரா வரார்ஹோத்தம நிஷ்க கண்டீம் |

சுஜாத பக்ஷ்மாமபி4ரக்த கண்டீம் வனே ப்ர ந்ருத்தாமிவ நீலகண்டீம் ||

அவ்யக்த ரேகா2மிவ சந்த்ர ரேகா2ம் பாம்ஸு ப்ரதி3க்தாமிவ ஹேமரேகா2ம் |

க்ஷத ப்ரரூடா4மிவ பா3ணரேகா2ம் வாயு ப்ரபி4ன்னாமிவ மேக4ரேகா2ம் ||

சீதாமபஸ்யன் மனுஜேஸ்வரஸ்ய ராமஸ்ய பத்னீம் வத3தாம் வரஸ்ய |

3பூ4வ து:கா2பி4ஹதஸ்சிரஸ்ய ப்லவங்க3மோ மந்த3 இவாசிரஸ்ய || (5-27)

 

(இத்யார்ஷே ஸ்ரீமத்3ராமாயணே வால்மீகீயே ஆதி3காவ்யே சதுர்விம்தி ஸஹஸ்ரிகாயாம் ஸம்ஹிதாயம் சுந்தர3காண்டே ப4வனவிசயோ நாம பஞ்சம: ஸர்க3: )

 

 

சுவிசுத்34 பாவம்- மிக உயர்ந்த மனோபாவம்- மிக உயர்ந்த மன நிலை கொண்டவர்கள், அவர்களுக்கு இணையான பத்னிகள் கிடைக்கப் பெற்ற பாக்கியசாலிகள்,  தங்கள் பிரியமான மனைவியிடமும், பானங்களிலும் ஈ.டுபாடு கொண்டவர்கள், தாரா கணங்கள் போல நல்ல பிரபாவம் உடையவர்கள் இவர்களைக் கண்டான். 5-17  செல்வ செழிப்பு வெளிப்படையாகத் தெரிந்தது. இரவு நேரமானதால், லஜ்ஜையுடன் தங்கள் ரமணனுடன் மறைந்து தெரிந்த ஸ்த்ரீகள்.  சிலர் பெண்களிடம் தங்களை மறந்து ஈ.டுபட்டு இருந்தனர். பறவைகள் புஷ்பங்களில் மறைந்து கிடந்தன. 5-18 (வார்த்தைகள் அழகுக்காக கோர்த்து எடுக்கப் பட்ட ஸ்லோகங்கள்-அதன் மூலத்தில் உள்ள அழகு படித்து தான் புரிந்து கொள்ள வேண்டும்).  இரவில் மதனனின் ஆதிக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. 5-19  சிலர் மாளிகையின் வெளி வாசலில் அமர்ந்திருந்தனர். தங்கள் பிரியமான கணவன்/ மனைவியுடன் சல்லாபித்துக் கொண்டு, நெருங்கி அமர்ந்து சரசமாக இருந்தனர். 5-20 தர்ம பத்னி, பர்த்தாவின் அணைப்பில்,  நியாயமாக இயல்பாக மதனனின் வசமாக இன்பமாக இருப்பதைக் கண்டான். 5-21  அந்த ஸ்த்ரீகளில் பல வர்ணத்தினரும் இருந்தனர். பொன் நிறத்தில், எரியும் ஜ்வாலை போல, சிலர் சந்திரனின் களங்கம் போன்ற நிறத்தினர், எந்த நிறமானாலும், தங்கள் காந்தனுக்கு பிரியமான, ரசிக்கத் தகுந்த வர்ணமே எனும்படி இருந்தனர். 5-22  பொதுவாக, பெண்கள் இல்லற வாழ்க்கையில் மகிழ்ச்சியும் நிறைவும் பெற்றவர்களாகவே, கொண்டவனிடம் அன்பும், ஆதரவும் உடையவர்களாகவும் இருக்கக் கண்டான். அவர்கள் முகங்களோ, சந்திரனுடைய பிரகாசமாகவும், கண்களின் இமை, இவையே நேத்ர மாலாவாக, ஆபரணங்களின் மாலையாக கூட்டமாகத் தெரிந்தன.5-23   அந்த இடத்தில் ராஜ குலத்தில் தோன்றியவளும், கொடி மலர்ந்தது போல சரீரத்தை உடையவளுமாக தான் அறிந்திருந்த, ப்ரும்மா மனதில் நினைத்து உருவம் கொடுத்தது போன்றவளுமான பெண்மணியை மட்டும் காணவில்லை. 5-24

சனாதனமான தர்ம வழியில் நிற்பவளை, ராமனின் மனதில் வசிப்பவளை, அவனையே காம வசமாகி துன்புறச் செய்தவளை, உயர்ந்த ஸ்த்ரீகளிலும் உயர்ந்த ஸ்த்ரீயானவளை, கணவனின் மனதுக்கினியாளை மட்டும் காணவில்லை. 5-25  வனத்தில் தோகை விரித்தாடும் மயில் போன்றாளை, வரிசையாக, நீண்டு வளர்ந்திருந்த இமைகள் பட படக்க சிவந்து போகும் மென்மையான இயல்புடையவளை மட்டும் காணவில்லை. 5-26 தெளிவாகத் தெரியாத சந்திரனின் கிரணங்களோ, தங்கத்தால் ஆன எழுத்துக்கள் (சித்திரம்) புழுதி படிந்து கிடக்கிறதோ, அம்புகள் ஓயாமல் பயன் படுத்தி நுனி மழுங்கிப் போயினவோ, மேகங்களின் வரிசை காற்றில் அலைக்கழிக்கப்பட்டதோ, எனும்படி இருந்த சீதையைக் காணவில்லை. 5-27 சொல்லின் செல்வனான ராமனுடைய பத்னியை, சீதையைக் காணாமல், துக்கம் மேலிட, வெகு நேரம் ஹனுமான் மந்தமாக செய்வதறியாது நின்றான். 5-27

 

(இதுவரை வால்மீகி முனிவரின் ஆதி காவ்யமான ஸ்ரீமத் ராமாயணத்தின் இருபத்து நாலாயிரம் பாடல் தொகுப்பில், சுந்தர காண்டத்தில், ப4வன விசயோ என்ற ஐந்தாவது அத்தியாயத்தின் தமிழாக்கம்)

இதுவரை முதல் நாள் பாராயணம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சுந்தர காண்டம்

ராம நவமி வருகிறது. அந்த ஒன்பது நாட்களில் சுந்தர காண்டத்தை பாராயணம் செய்வது முறை. இதற்கு நவாஹம் என்றே பெயர். அந்த கிரமத்தில் வால்மீகியின் சுந்தர காண்டத்தை ஸம்ஸ்க்ருதம் டமில் இரண்டிலும் மூல பாடமும், தமிழில் வசன நடையாகவும் தொடர்ந்து பார்க்கலாம்.
முதல் நாள் பாராயணம் ஒன்று முதல் ஐந்து சர்கங்கள் அதாவது அத்யாயங்கள்:-

 

॥श्रीमद्वाल्मीकिरामायणम्॥

॥अथ सुन्दरकाण्डः॥

प्रथमः सर्गः सागरलङ्धनम्

 

ततो रावणनीतायाः सीतायाः शत्रुकर्शणः।
इयेष पदमन्वेष्टुं चारणाचरिते पथि।।                               5.1.01

दुष्करं निष्प्रति ध्वन्दम् चिकीर्षन् कर्म वानरः।
समुदग्रशिरोग्रीवो गवां पतिरिवाबभौ।।                               5.1.02

अथ वैदूरयवर्णेषु शाद्वलेषु महाबलः।

धीरः सलिलकल्पेषु विचचार यथासुखम्।।                           5.1.03

द्विजान् वित्रासयन् धीमानुरसा पादपान् हरन्।
मृगांश्च सुबहून्निघ्नन् प्रवृद्ध इव केसरी।।                          5.1.04

नीललोहितमाञ्जिष्ठपत्रवर्णैः सितासितैः।
स्वभावविहितैश्चित्रैर्धातुभिः समलंकृतम्।।                           5.1.05
कामरूपिभिराविष्टमभीक्ष्णं सपरिच्छदैः।
यक्षकिंनरगन्धर्वैर्देवकल्पैश्च पन्नगैः।।                              5.1.06

स तस्य गिरिवर्यस्य तले नागवरायुते।
तिष्ठन् कपिवरस्तत्र ह्रदे नाग इवाबभौ।।                            5.1.07

स सूर्याय महेन्द्राय पवनाय स्वयंभुवे।
भूतेभ्यश्चाञ्जलिं कृत्वा चकार गमने मतिम्।।                       5.1.08

अञ्जलिं प्राङ्मुखः कुर्वन् पवनायात्मयोनये।
ततो हि ववृधे गन्तुं दक्षिणो दक्षिणां दिशम्।।                        5.1.09

प्लवङ्गप्रवरैर्दृष्टः प्लवने कृतनिश्चयः।
ववृधे रामवृद्ध्यर्थं समुद्र इव पर्वसु।।                               5.1.10

निष्प्रमाणशरीरः सँल्लिलङ्घयिषुरर्णवम्।
बाहुभ्यां पीडयामास चरणाभ्यां च पर्वतम्।।                          5.1.11

स चचालाचलश्चापि मुहूर्तं कपिपीडितः।
तरूणां पुष्पिताग्राणां सर्वं पुष्पमशातयत्।।                           5.1.12

 

ஸ்ரீமத்3 ராமாயணம்  – சுந்த3ர காண்டம்

அத்யாயம் -1  – சாகர லங்கணம் – சமுத்திரத்தை கடத்தல்

ததோ ராவண நீதாயா: சீதாயா: சத்ரு கர்ன: | இயேஷ பத3மன்வேஷ்டும் சாரணாசரிதே பதி2 ||

து3ஷ்கரம் நிஷ்ப்ரதி த்3வந்த4ம் சிகீர்ஷன் கர்ம வானர: | சமுத3க்3சிரோ க்3ரீவோ க3வாம் பதிரிவாப3பௌ4 ||

அத2 வைடூர்ய வர்ணேஷு சாத்3வலேஷு மஹாப3ல: | தீ4ர: சலில கல்பேஷு விசசார யதாசுகம் ||

த்3விஜான் வித்ராஸயன் தீ4மான் உரஸா பாதபான் ஹரன் | ம்ருகாம்ஸ்ச சுப3ஹூன் நிக்னன் ப்ரவ்ருத்34 இவ கேஸரி ||

நீல லோஹித மாஞ்சிஷ்டை: பத்ர வர்ணை: சிதாசிதை: | ஸ்வபாவ விஹிதைர் சித்ரை: தா4துபி4ர் ஸ்மலங்க்ருதம் ||

காம ரூபிபி4ராவிஷ்டம் அபீ4க்ஷ்ணம் சபரிஸ்சதை: | யக்ஷ கின்னர கந்த4ர்வைர் தேவ கல்பைஸ்ச பன்னகை3:||

ஸ் தஸ்ய கி3ரிவர்யஸ்ய தலைர் நாக3 வராயுதே | திஷ்டன் கபிவரஸ்தத்ர ஹ்ரதே நாக3 இவாப3பௌ4 ||

சூர்யாய மஹேந்த்ராய பவனாய ஸ்வயம்புவே | பூ4தேப்4யஸ்சாஞ்சலிம்  க்ருத்வா சகார க3மனே மதிம் ||

அஞ்ஜலிம்  ப்ராரங்முக2:குர்வன் பவனாயாத்ம யோனயே | ததோ2 ஹி வவ்ருதே43ந்தும் த3க்ஷிணோ த3க்ஷிணாம் தி3சம் ||

ப்லவங்க3 ப்ரவரைர் த்3ருஷ்ட: ப்லவனே க்ருத நிஸ்சய: | வவ்ருதே4 ராம வ்ருத்4யர்த2ம் சமுத்3ர இவ பர்வசு ||

நிஷ்ப்ரமாண ரீர: ல்லிலங்க3யிஷுரர்ணவம் | பா3ஹுப்4யாம் பீட3யாமாஸ சரணாப்4யாம் ச பர்வதம் ||

ஸ சசாலாசலஸ்சாபி முஹூர்தம் கபி பீடித: | தரூணாம் புஷ்பிதாக்3ராணாம் சர்வம் புஷ்பம ஸாதயத் || 1-12

அத்தியாயம் 1 (339) சாகர லங்க4ணம் (கடலை கடத்தல்)

தத:-இதன் பின், சாரணர்கள் புழங்கும் பாதையில், சத்ருக்களை ஒடுக்கும் வீரனான ஹனுமான், சீதை இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க, ராவணன் அவளை அழைத்துச் சென்றதாக அறிந்த தென் திசையில் செல்லத் தயாரானான். 1-1 மிகவும் கடினமான காரியம். ஒப்பில்லாத சாகஸம்.  இந்த செயலை செய்யத் துணிந்த வானரன் தலையைத்  தூக்கி, கழுத்தை சாய்த்து, பசுக்களின் தலைவனான காளை போல நின்றான். 1-2  வைமூடுரியம் போல ஜ்வலித்த பசும் புற் தரைகளுக்கிடையில் நீர் பள பளக்க இருந்த பூமியில் தீரனும் மகா பலசாலியுமான ஹனுமான் நடந்தான்.  1-3 பறவைகள் பயந்து சிறகடித்து பறக்கலாயின.  மரங்கள் ஆடின. பல மிருகங்கள் கீழே விழுந்தன.  பெரிய கேசரி (சிங்கம்) நெடிதுயர்ந்து நிற்பது போல நின்றான்.  1-4 வெண்மையும் கருப்பும், நீலமும் சிவப்பும், மஞ்சளுமாக இலைகள் பல வர்ணங்க  ளில் தென்பட்டன. இயல்பான நிறங்களில் தா4து பொருட்கள் அலங்காரமாகத் தெரிந்தன.  1-5  யக்ஷ கின்னர, தேவர்களுக்கு இணையான க3ந்த4ர்வர்கள்,  பன்னகர்கள் தங்கள் விருப்பம் போல உருவம் எடுக்க வல்லவர்கள்,  சூழ்ந்து நிற்க, அவர்கள் பரிவாரமும் உடன் நின்றனர். 1-6   நாகங்கள் நிறைந்த அந்த சிறப்பான மலையின் உச்சியில்,  நீர் நிலையில் யானை நிற்பது போல தனித்து தெரிந்தான். 1-7 இதன் பின் அவன், சூரியனுக்கு, மகேந்திரனுக்கு,  வாயுவுக்கு, ப்ரும்மாவுக்கு, மற்றும் பஞ்ச பூதங்கள், இவர்களுக்கு அஞ்சலி செய்து வணங்கி விட்டு தன் யாத்திரையைத் தொடர தீர்மானித்தான். 1-8  கிழக்கு நோக்கி நின்று, தன்னை ஈ.ன்ற வாயுவுக்கு நமஸ்காரம் செய்து விட்டு, தென் திசையில் செல்லத் தயாராக வளர ஆரம்பித்தான்.1-9 மற்ற வானரங்கள் கீழே நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தன. இதற்குள் தன் பிரயாணத்தை மனதினுள் ஒருவிதமாக திட்டமிட்டுக் கொண்டு விட்ட வகையில், ராம காரியம் நிறைவேறும் பொருட்டு, மலையின் மேல் சமுத்திரம் பொங்கி எழுவது போல எழுந்தான். 1-10  அளவிட முடியாத, ஒப்பிட முடியாத பெரிய சரீரம். கடலைக் கடந்து செல்லவும் துணிந்த உயரிய எண்ணம்.  அரிய செயலைச் செய்யத் துணிந்தவன் தன் புஜங்களால் மலையை தடவிக் கொடுத்தும், கால்களால் உதைத்தும் அந்த மலையை ஒரு ஆட்டு ஆட்டி விட்டது போலவும், தானே அசைந்து கொடுத்ததோ எனும் படி அந்த மரங்கள், தங்கள் நுனியிலிருந்து புஷ்பங்களை உதிர்த்தன. (1-12)

तेन पादपमुक्तेन पुष्पौघेण सुगन्धिना।
सर्वतः संवृतः शैलो बभौ पुष्पमयो यथा।।                           5.1.13

तेन चोत्तमवीर्येण पीड्यमानः स पर्वतः।
सलिलं संप्रसुस्राव मदं मत्त इव द्विपः।।                            5.1.14

पीड्यमानस्तु बलिना महेन्द्रस्तेन पर्वतः।
रीतीर्निर्वर्तयामास काञ्चनाञ्जनराजतीः।।                            5.1.15

मुमोच च शिलाः शैलो विशालाः सुमनःशिलाः।
मध्यमेनार्चिषा जुष्टॊ धूमराजीरिवानलः।।                            5.1.16

गिरिणा पीड्यमानेन पीड्यमानानि सर्वतः।
गुहाविष्टानि भूतानि विनेदुर्विकृतैः स्वरैः।।                           5.1.17

स महासत्त्वसंनादः शैलपीडानिमित्तजः।
पृथिवीं पूरयामास दिशश्चोपवनानि च।।                             5.1.18

शिरोभिः पृथुभिः सर्पा व्यक्तस्वस्तिकलक्षणैः।
वमन्तः पावकं घोरं ददंशुर्दशनैः शिलाः।।                            5.1.19

तास्तदा सविषैर्दष्टाः कुपितैस्तैर्महाशिलाः।
जज्वलुः पावकोद्दीप्ता बिभिदुश्च सहस्रधा।।                         5.1.20

यानि चौषधजालानि तस्मिञ्जातानि पर्वते।
विषघ्नान्यपि नागानां न शेकुः शमितुं विषम्।।                       5.1.21

भिद्यतेऽयं गिरिर्भूतैरिति मत्वा तपस्विनः।
त्रस्ता विद्याधरास्तस्मादुत्पेतुः स्त्रीगणैः सह।।                        5.1.22
पानभूमिगतं हित्वा हैममासवभाजनम्।
पात्राणि च महार्हाणि करकांश्च हिरण्मयान्।।                         5.1.23
लेह्यानुच्चावचान् भक्ष्यान् मांसानि विविधानि च।
आर्षभाणि च चर्माणि खडगांश्च कनकत्सरून्।।                       5.1.24

कृतकण्ठगुणाः क्षीबा रक्तमाल्यानुलेपनाः।
रक्ताक्षाः पुष्कराक्षाश्च गगनं प्रतिपेदिरे।।                           5.1.25

हारनूपुरकेयूरपारिहार्यधराः स्त्रियः।
विस्मिताः सस्मितास्तस्थुराकाशे रमणैः सह।।                        5.1.26

दर्शयन्तो महाविद्यां विद्याधरमहर्षयः।
सप्रियास्तस्थुराकाशे वीक्षांचक्रुश्च पर्वतम्।।                          5.1.27

தேன பாத3ப முக்தேன புஷ்பௌகே3ன சுகந்தி4னா | சர்வத: சம்வ்ருத: சைலோ ப3பௌ புஷ்பமயோ யதா2 |

தேனசோத்தம வீர்யேன பீட்யமான: ஸ பர்வத: | சலிலம் சம்ப்ரசுஸ்ராவ மதம் மத்த இவ த்3விப:||

பீட்யமானஸ்து ப3லினா மஹேந்த்ரஸ்தேன பர்வத: | ரீதிர் நிர்வர்தயாமாஸு: காஞ்சனாஞ்ஜன ராஜதீ: ||

முமோச ச ஸிலா:சைலோ விஸாலா: சுமன: ஸிலா: | மத்யமேனார்சிஷா ஜுஷ்டோ தூ4மராஜீரிவானல: ||

கி3ரிணா பீட்யமானேன பீட்யமானானி சர்வத:| கு3ஹாவிஷ்டானி பூதானி வினேது3ர் விக்ருதைர் ஸ்வரை: ||

ஸ மஹா ஸத்வ ஸன்னாத: ஸைல பீடா நிமித்தஜ: | ப்ருது2வீ பூரயாமாஸ திஸஸ்சோபவனானி ச ||

ஸிரோபி: ப்ருதுபி: சர்ப்பா: வ்யக்த ஸ்வஸ்திக லக்ஷணை: | வமந்த: பாவகம் கோ4ரம் த33ம்சு: த3ஸனை: ஸிலா: ||

தாஸ்ததா3 ஸவிஷைர் த3ஷ்டா: குபிதைர்தை: தை: மஹாஸிலா: | ஜஜ்வலு: பாவகோத்3தீ4ப்தா பி3பி4து3ஸ்ச சஹஸ்ரதா ||

யானி ஔஷத4 ஜாலானி தஸ்மிஞ் ஜாதானி பர்வதே | விஷக்4னான்யபி நாகா3னாம் ந ஸேகு: மிதும் விஷம் ||

பித்3த்4யதே (அ) யம் பூ4தைரிதி மத்வா தபஸ்வின: | த்ரஸ்தா: வித்4யாத4ரா: தஸ்மாதுத்பேது: ஸ்த்ரீக3ணை:ஸஹ ||

பானபூ4மிக3தம் ஹித்வா ஹைமமாஸவ பா4ஜனம் | பாத்ராணி ச மஹார்ஹாணி கரகாம்ஸ்ச ஹிரண்மயான் ||

லேஹ்யான் சோச்சாவசான் ப4க்ஷ்யான் மாம்ஸானி விவிதா4னி ச | ஆர்ஷபா4னி ச சர்மானி க2ட்காம்ஸ்ச கனகத்ஸரூன் ||

க்ருத கண்ட கு3ணா: க்ஷீபா ரக்த மால்யானுலேபனா: | ரக்தாக்ஷா: புஷ்கராஸ்ச க3க3னம் ப்ரதிபேதிரே ||

ஹார நூபுர கேயூர பாரிஹார்ய த4ரா: ஸ்த்ரிய: | விஸ்மிதா: ஸஸ்மிதா: தஸ்துராகாஸே ரமணை:  ஹ ||

3ர்ஸயந்தோ மஹாவித்4யாம் வித்4யாதர மஹர்ஷய: |  ப்ரியா: தஸ்துராகாஸே வீக்ஷாம் சக்ருஸ்ச பர்வதம் ||

கைகளாலும், கால்களாலும் ஹனுமான் மலையின்  திடத்தை சோதனை செய்வது போல தட்டிப் பார்த்தது போலவும், மலையும் தன் ஒப்புதலை தந்தது போலவும் அந்த காட்சி அமைந்தது. 1- 14  மலை முழுவதும் அந்த புஷ்பங்களின் சிதறல் அர்ச்சனை செய்யப் பட்டது போல கண் கொள்ளா காட்சியாக இருந்தது.  மலர்களின் மணம் பரவியது.  மதம் கொண்ட மத்த கஜத்தின் முகத்தில் துளிர்க்கும் வியர்வைபோல மலையின் மேலிருந்து நீர் வடிந்தது.  1-13 ஹனுமானின் கால்கள் அழுந்த பிடித்ததால், பலமாக யானைப் பாகன் மிதிப்பதால் துன்புறுவது போல மகேந்திர பர்வதம் துன்புற்றது.  1-15 பித்தளை, பொன்,  வெள்ளி, கரும் பொன் (இரும்பு) இவை மலையிலிருந்து சிதறின.  விசாலமான சுமன:சிலம் எனும் பாறையும் கீழே விழுந்து சிதறியது.  கொழுந்து விட்டெரியும் நெருப்பின் நடுவில் புகைந்து எழும் புகை மூட்டம் போல தெரிந்தது.  1-16 மலையே, ஹனுமானின் பாதத்தால் உதைக்கப் பட்ட சமயம், மலை குகையிலிருந்த மிருகங்களும் பாதிக்கப் பெற்றன. வித விதமான குரலில் கூக்குரலிட்டன. 1-17  இந்த பெரும் மலையில் வசித்த ஏராளமான ஜீவ ஜந்துக்கள் ஏக காலத்தில் எழுப்பிய ஒலி, அலை அலையாக பரவி உலகம் முழுவதும் எல்லா திசைகளிலும், உப வனங்களிலும் எதிரொலித்தன. 1-18 பளீரென்று நிமிர்ந்த தலையுடன், நாகங்கள்,  ஒளி வீசும் தங்கள் படங்களுடன் நிமிர்ந்து நின்றன.  விஷத்தைக் கக்கின. 1-19 அகப்பட்ட பாறைகளை பல்லால் கடித்து உமிழ்ந்தன.  இப்படி கடிபட்ட பாறைகள் சில உடைந்து சிதறின.  சில பள பளவென மின்னின. 1-20 கோபம் கொண்டு விஷமுடைய பற்களால் கடிக்கப் பெற்ற பாறைகள், நெருப்பு பற்றிக் கொண்டது போல தோற்றமளித்தன. அந்த மலையில் உற்பத்தியாகும் ஆயிரக் கணக்கான மூலிகைகள், அவற்றில் பல பாம்பு விஷத்தை அடக்கும் சக்தியுடையவை, இருந்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. பயனற்றுப் போயின. 1-21 தபஸ்வி ஜனங்கள், ஏதோ பூத கணங்கள் வந்து மலையை பிளக்கின்றனவோ என்று ஐயுற்றனர்.  வித்யாதர கணங்கள் தங்கள் ஸ்திரீகளுடன் பயந்து அலறியபடி மலையை விட்டு வெளியேற முயற்சி செய்யலாயினர். 1-22   பான பூமியில் (கள் குடிக்கும் இடம்) வண்ண மயமான பாத்திரங்களில் மதுவை அருந்திக் கொண்டு இருந்தவர்கள், விலையுயர்ந்த அந்த பாத்திரங்களை, கரண்டிகளை, லேகியங்கள், ஊருகாய்கள், பக்ஷணங்கள், மாமிசங்கள் இன்னும் பல உணவு வகைகளையும்,  பழமை வாய்ந்த தோல் வாள், பொன்னாலான கரண்டிகள், இவைகளை கையில் வைத்தபடி, கழுத்தைச் சுற்றி அணிந்திருந்த வஸ்திரங்களுடன், சிவந்த மாலைகளையும் அணிந்து, அங்க ராகங்களை பூசி மகிழும் இயல்புடையவர்கள், சிவந்த மஞ்சள் நிற கண்கள் உடையவர்கள், என்ன நடக்கிறது என்று பார்க்க ஆகாயத்தில் வந்து நின்றார்கள்.  ஹாரங்கள், நூபுரங்கள், இடுப்பு ஒட்டியாணம் என்று பலவிதமான ஆபரணங்களுடனும் வளைய வந்த ஸ்த்ரீகள், ஆச்சர்யத்துடன், தங்கள் கணவன்மாரோடு சேர்ந்து கொண்டு  வேடிக்கை பார்க்க வந்து நின்றனர். (1-27)

शुश्रुवुश्च तदा शब्दमृषीणां भावितात्मनाम्।
चारणानां च सिद्धानां स्थितानां विमलेऽम्बरे।।                       5.1.28

एष पर्वतसंकाशो हनूमान् मारुतात्मजः।
तितीर्षति महावेगः सागरं मकरालयम्।।                            5.1.29

रामार्थं वानरार्थं च चिकीर्षन् कर्म दुष्करम्।
समुद्रस्य परं पारं दुष्प्रापं प्राप्तुमिच्छति।।                           5.1.30

इति विद्याधराः श्रुत्वा वचस्तेषां तपस्विनाम्।
तमप्रमेयं ददृशुः पर्वते वानरर्षभम्।।                                5.1.31

दुधुवे च स रोमाणि चकम्पे चाचलोपमः।
ननाद सुमहानादं स महानिव तोयदः।।                             5.1.32

आनुपूर्व्येण वृत्तं च लाङ्गूलं रोमभिश्चितम्।
उत्पतिष्यन् विचिक्षेप पक्षिराज इवोरगम्।।                          5.1.33

तस्य लाङ्गूलमाविद्धमात्तवेगस्य पृष्ठतः।
ददृशे गरुडेनेव ह्रियमाणो महोरगः।।                                5.1.34

बाहू संस्तम्भयामास महापरिघसंनिभौ।
ससाद च कपिः कट्यां चरणौ संचुकोच च।।                         5.1.35

संहृत्य च भुजौ श्रीमांस्तथैव च शिरोधराम्।
तेजः सत्त्वं तथा वीर्यमाविवेश स वीर्यवान्।।                         5.1.36

मार्गमालोकयन् दूरादूर्ध्वं प्रणिहितेक्षणः।
रुरोध हृदये प्राणानाकाशमवलोकयन्।।                                    5.1.37

पद्भ्यां दृढमवस्थानं कृत्वा स कपिकुञ्जरः।
निकुञ्च्य कर्णौ हनुमानुत्पतिष्यन् महाबलः।।                              5.1.38
वानरान् वानरश्रेष्ठ इदं वचनमब्रवीत्।

यथा राघवनिर्मुक्तः शरः श्वसनविक्रमः।।                           5.1.39

गच्छेत्तद्वद्गमिष्यामि लङ्कां रावणपालिताम्।

न हि द्रक्ष्यामि यदि तां लङ्कायां जनकात्मजाम्।।                    5.1.40
अनेनैव हि वेगेन गमिष्यामि सुरालयम्।

यदि वा त्रिदिवे सीतां न द्रक्ष्यामि कृतश्रमः।।                         5.1.41
बद्ध्वा राक्षसराजानमानयिष्यामि रावणम्।

सर्वथा कृतकार्योऽहमेष्यामि सह सीतया।।                           5.1.42
ஸுஸ்ருவுஸ்ச ததா3 சப்தம் ருஷீணாம் பா4விதாத்மனாம் | சாரணானாம் ச சித்3தா4னாம் ஸ்தி2தானாம் விமலே (அ)ம்பரே || (1-28 )

ஏஷ பர்வத சங்காஸோ ஹனூமான் மாருதாத்மஜ: | திதீர்ஷதி மஹாவேக3: சாக3ரம் மகராலய: ||

ராமார்த2ம் வானரார்த2ம் ச சிகீர்ஷன் கர்ம து3ஷ்கரம் |சமுத்3ரஸ்ய பரம் பாரம் து3ஷ்ப்ராபம் ப்ராப்துமிச்சதி ||

இதி வித்3யாத4ரா: ஸ்ருத்வா வசஸ்தேஷாம் தபஸ்வினாம் | தமப்ரமேயம் த3த்3ருஸு: பர்வதே வானர்ஷபம்

து3து4வே ச ஸ ரோமானி சகம்பே ச அசமலோபம: | நனாத3 சுமஹா நாத3ம் ஸ மஹானிவ தோயத3: ||

ஆனுபூர்வ்யேன வ்ருத்தம் ச லாங்கூ3லம் ரோமபிஸ்சி2தம் | உத்பதிஷ்யன் விசிக்ஷேப பக்ஷிராஜ இவோரக3ம்||

தஸ்ய லாங்கூ3லமாவித்34மாத்த வேக3ஸ்ய ப்ருஷ்டத: | த3த்3ருஸே க3ருடே3னேவ ஹ்ரியமானோ  மஹோரக3: ||

பா3ஹூ சம்ஸ்தம்ப4யாமாஸ மஹாபரிக3 ஸன்னிபௌ4 | சசாத ச கபி: கட்யாம் சரணௌ சம்சுகுசோச ச ||

சம்ஹ்ருத்ய ச புஜௌ ஸ்ரீமான்ஸ் ததைவ ச சிரோதராம் | தேஜஸ் ஸத்வம் ததா3 வீர்யமாவிவேஸ ச வீர்யவான் ||

மார்க3மாலோகயன் தூ3ராதூ4ர்த்3வம் ப்ரணிஹிதேக்ஷண: | ருரோத3 ஹ்ருத3யே ப்ராணானாகாச மவலோகயன் ||

பத்3ப்4யாம் த்4ருடமவஸ்தானம் க்ருத்வா ஸ கபி குஞ்ஜர: | நிகுஞ்ஜ்ய கர்ணௌ ஹனுமானுத்பதிஷ்யன் மஹாப3ல: ||

வானரான் வானர ஸ்ரேஷ்ட இத3ம் வசனமப்3ரவீத் | யதா2 ராகவ நிர்முக்த: சர: ஸ்வஸன விக்ரம: |

தத்3வத் க3மிஷ்யாமி லங்காம் ராவண பாலிதாம் | ந ஹி த்3ரக்ஷ்யாமி யதி3 தாம் லங்காயாம் ஜனகாத்மஜாம் ||

அனேனைவ ஹி வேகே3ன க3மிஷ்யாமி சுராலயம் || யதி3 வா த்ரிதி3வே சீதாம் ந த்3ரக்ஷ்யாமி க்ருத ஸ்ரம: ||

3த்4வா ராக்ஷஸ ராஜானமானயிஷ்யாமி ராவணம் | சர்வதா3 க்ருத கார்யோஹம் ஏஷ்யாமி ஸஹ சீதயா | 1-42

மகா வித்யையை அறிந்து கொண்டு கடை பிடித்து வந்த வித்யாதர மகரிஷிகள், தங்கள் மனைவிமாருடன், ஆகாயத்தில் வந்து நின்று, மலையை நோக்கினர். 1-28 தவ வலிமை மிக்க ரிஷிகள், சாரணர்கள், சித்தர்கள் என்று ஆகாயத்தில் குழுமியிருந்தோர் பேசும் பேச்சுக்களைக் கேட்டனர். விமலமான ஆகாயத்தில் முனிவர்களின் பேச்சுக் குரல் ஓங்கி ஒலித்தது.  1-29 இதோ இந்த ஹனுமான் தானே பர்வதாகாரமாக நிற்கிறான். மகா வேகத்துடன் கடலைத் தாண்டத் தயாராக நிற்கிறான். 1-30   மகரங்கள் நிறைந்த இந்த கடலைத் தாண்ட ஆயத்தம் செய்வது தான் இவ்வளவு பர பரப்புக்கு காரணம்.  இந்த அரிய செயலை ராமனுக்காகவும், தன் தலைவனான வானர ராஜனின் பொருட்டும்  செய்யத் துணிந்திருக்கிறான். 1-31 எளிதில் கடக்க முடியாத இந்த கடலின் அக்கரையைத் தொட்டுவிட துடிக்கிறான், என்றிவ்வாறு ரிஷிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதை வித்யாதரர்கள் கேட்டனர்.  1-32 ஒப்புவமை இல்லாத வானர வீரன் மலையின் மேல் நிற்பதைக் கண்டனர். அந்த மலையின் மேல் மற்றொரு மலை குலுங்கி ஆடியது போல ஒரு உலுக்கலில் தன் பெரிய உடலின் ரோமங்கள் சிதறி விழச் செய்தான், ஹனுமான். 1-33  மகா மேகம் போல கர்ஜித்து, திக்குகளை அதிரச் செய்தான்.  சாட்டையை விசிறி அடித்தது போல சுழற்றவும்,  சுருட்டி வைக்கப் பட்டிருந்த ரோமங்கள் அடர்ந்த வால், பக்ஷி ராஜனான கருடனின் கால்களில் சிக்கிய பெரு நாகம் போல நீண்டது. 1-34 நாகத்தை கவ்விக் கொண்டு வேகமாக செல்லும் பக்ஷிராஜனின் வாயிலிருந்து தொங்கும் நாகம் போல அந்த வால் நீண்டு தொங்கியது. 1-35  புஜங்கள் இரண்டையும் விரித்து, பரிக4ம் என்ற ஆயுதத்தைப் போல நீண்ட கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டான். (பரிக4ம்-கதவுக்கு தடுப்பாக உபயோகிக்கும் மரக் கட்டை).  1-36  கால்களைக் குறுக்கிக் கொண்டான். தன் புஜங்களையும் கழுத்தையும் சுருக்கிக் கொண்டு, தலையை நிமிர்த்தி, தன் உடலில் தேஜஸ், ஆற்றல் இவற்றை நிரப்பிக் கொள்வது போல நிமிஷ நேரம் நின்றான். 1-37  கண்களை இடுக்கி வெகு தூரம் வரை தான் செல்ல வேண்டிய பாதையை நோட்டம் விட்டு கணித்துக் கொண்டவனாக, தன் ஹ்ருதயத்தில் பிராணனை நிலை நிறுத்தி, மூச்சை அடக்கி, யோக சாதனையை செய்தான். 1-38 ஆகாயத்தை பார்த்தபடி, கால்களை திடமாக ஊன்றி அந்த கபிகுஞ்சரன், காதுகளை மடக்கியபடி வேகமாகத் தாவி, ஆகாய மார்கத்தில் நுழைந்தான்.  கீழே நின்ற வானரங்களைப்  பார்த்து, எப்படி ராகவன் கையிலிருந்து, பாணங்கள் சீறிக் கொண்டு பாயுமோ,  அதே போல வேகத்துடன் நானும் போகிறேன். 1-39 ராவணன் பாலித்து வரும் லங்கா நகரை நோக்கிச் செல்கிறேன்.  ஜனகாத்மஜாவை அந்த லங்கா நகரில் நான் காணவில்லையெனில், இதே வேகத்தோடு  தேவர்கள் வசிக்கும் தேவ லோகம் செல்வேன். 1-40  த்ரிதிவம் எனும் தேவலோகத்திலும் சீதையைக்  காணவில்லையெனில், என் சிரமம் வீணாகாமல், ராக்ஷஸ ராஜனான ராவணனை கட்டி இழுத்துக் கொண்டு வருவேன்.  நிச்சயமாக என் காரியம் வெற்றியாகி, சீதையோடுதான் வருவேன். 1-42

आनयिष्यामि वा लङ्कां समुत्पाट्य सरावणाम्।

एवमुक्त्वा तु हनुमान् वानरान् वानरोत्तमः।।                         5.1.43
उत्पपाताथ वेगेन वेगवानविचारयन्।
सुपर्णमिव चात्मानं मेने स कपिकुञ्जरः।।                           5.1.44

समुत्पतति तस्मिंस्तु वेगात्ते नगरोहिणः।
संहृत्य विटपान् सर्वान् समुत्पेतुः समन्ततः।।                              5.1.45

स मत्तकोयष्टिभकान् पादपान् पुष्पशालिनः।
उद्वहन्नूरुवेगेन जगाम विमलेऽम्बरे।।                              5.1.46

ऊरुवेगोद्धता वृक्षा मुहूर्तं कपिमन्वयुः।
प्रस्थितं दीर्घमध्वानं स्वबन्धुमिव बान्धवाः।।                         5.1.47

तदूरुवेगोन्मथिताः सालाश्चान्ये नगोत्तमाः।
अनुजग्मुर्हनूमन्तं सैन्या इव महीपतिम्।।                           5.1.48

सुपुष्पिताग्रैर्बहुभिः पादपैरन्वितः कपिः।
हनूमान् पर्वताकारो बभूवाद्भुतदर्शनः।।                                   5.1.49

सारवन्तोऽथ ये वृक्षा न्यमज्जल्ँलवणाम्भसि।
भयादिव महेन्द्रस्य पर्वता वरुणालये।।                              5.1.50

स नानाकुसुमैः कीर्णः कपिः साङ्कुरकोरकैः।
शुशुभे मेघसंकाशः खद्योतैरिव पर्वतः।।                             5.1.51

विमुक्तास्तस्य वेगेन मुक्त्वा पुष्पाणि ते द्रुमाः।
अवशीर्यन्त सलिले निवृत्ताः सुहृदो यथा।।                           5.1.52

लघुत्वेनोपपन्नं तद्विचित्रं सागरेऽपतत्।
द्रुमाणां विविधं पुष्पं कपिवायुसमीरितम्॥                           5.1.53
पुष्पौघेनानुविद्धेन नानावर्णेन वानरः।
बभौ मेघ इवोद्यन् वै विद्युद्गणविभूषितः।।                        5.1.54

तस्य वेगसमाधूतैः पुष्पैस्तोयमदृश्यतँ।
ताराभिरभिरामाभिरुदिताभिरिवाम्बरम्।।                             5.1.55

तस्याम्बरगतौ बाहू ददृशाते प्रसारितौ।
पर्वताग्राद्विनिष्क्रान्तौ पञ्चास्याविव पन्नगौ।।                       5.1.56

पिबन्निव बभौ श्रीमान् सोर्मिमालं महार्णवम्।
पिपासुरिव चाकाशं ददृशे स महाकपिः।।                            5.1.57

तस्य विद्युत्प्रभाकारे वायुमार्गानुसारिणः।
नयने संप्रकाशेते पर्वतस्थाविवानलौ।।                               5.1.58

ஆனயிஷ்யாமி வா லங்காம் சமுத்பாட்ய ஸராவணாம் | உத்பபாதாத வேகே3ன வேக3வானவிசாரயன் ||

ஏவமுக்த்வா து ஹனுமான் வானரான் வானரோத்தம: | சுபர்ணமிவ சாத்மானம் மேனே ஸ கபிகுஞ்ஜர: ||

சமுத்பததி ச தஸ்மின்ஸ்து வேகாத்தே நகரோஹிண: | சம்ஹ்ருத்ய விடபான் சர்வான் சமுத்பேதது: சமந்தத: ||

ஸ மத்த கோயஷ்டி பகான் பாதபான் புஷ்ப ஸாலின: | உத்வஹன்னூருவேகேன ஜகாம விமலே அம்பரே ||

ஊருவேகோ3த்34தா வ்ருக்ஷா: முஹூர்தம் கபிமன்வயு: | ப்ரஸ்தி2தம் தீ4ர்கமத்4வானம் ஸ்வ ப3ந்து4மிவ பா3ந்த4வா: ||

ததூ3ருன்மதி2தா: சாலாஸ் சான்யே நகோ3த்தமா: | அனுஜக்3முர் ஹனூமந்தம் சைன்யா இவ மஹீபதிம் ||

சுபுஷ்பிதாக்3ரை: ப3ஹுபி4: பாத3பைரன்வித: கபி: | ஹனூமான் பர்பவதாகாரோ ப3பூ4வாத்3பு4த த3ர்ஸன: ||

சாரவந்தோ(அ) த2 யே வ்ருக்ஷா: ந்யமஜ்ஜன் லவனாம்ப4சி | ப3யாதி3வ மஹேந்த்3ரஸ்ய பர்வதா வருணாலயே ||

ஸ நானா குசுமை: கீர்ண: கபி: சாங்குர கோரகை: | ஸுஸுபே மேக4 சம்காஸ: க2:த்3யோதைரிவ பர்வத: ||

விமுக்தா: தஸ்ய வேகே3ன முக்த்வா புஷ்பாணி தே த்3ருமா:| அவஸீர்யந்த லிலே நிவ்ருத்தா: சுஹ்ருதோ3 யதா2 ||

லகு3த்வேனோபபன்னம் தத் விசித்ரம் சாக3ரே(அ)பதத் | த்3ருமாணாம் விவித4ம் புஷ்பம் கபி வாயு சமீரிதம் ||

புஷ்பௌகே3னானுவித்3தே4ன நானா வர்ணேன வானர: | ப3பௌ4 மேக4 இவோத்3த்4யன் வை வித்3யுத் க3ண விபூ4ஷித: ||

தஸ்ய வேக3 ஸமாதூ4தை: புஷ்பை: தோயமத்3ருஸ்யத | தாராபி4ரபி4ராமாபி4ருதி3தாபி4ரிவாம்ப3ரம் ||

தஸ்ய அம்ப3ரக3தௌ பா3ஹூ த3த்ருஸாதே ப்ரசாரிதௌ | பர்வதாக்3ராத் வினிஷ்க்ராந்தௌ பஞ்சாஸ்யாவிவ பன்னகௌ3 ||

பிப3ன்னிவ ப3பௌ4 ஸ்ரீமான் ஸோர்மிமாலம் மஹார்ணவம் | பிபாசுரிவாகாஸம் த3த்ருஸே ஸ மஹா கபி:

தஸ்ய வித்4யுத் ப்ரபா4காரே வாயு மார்கே3 வாயுமார்கா3னுசாரிண: | நயனே சம்ப்ரகாஸேதே பர்வதஸ்தா2விவானலௌ | 1-58

ராவணனையும் சேர்த்து, லங்கா நகரையே பெயர்த்து கொண்டு வந்தாலும் வருவேன். இவ்வாறு வானரோத்தமனான ஹனுமான் மற்ற வானரங்களைப் பார்த்து சூளுரைத்து விட்டு, மேலும் தாமதியாமல் சட்டென்று தாவி, ஆகாயத்தில் குதித்தான்.  தானே சுபர்ணம் எனும் கருடன் என்று நினைத்துக் கொண்டான். 1-44 வேகமாக அந்த வானர வீரன் தாவி குதித்த பொழுது, மலையிலிருந்த மரங்கள், வேரோடு சாய்ந்து எதிரில் விழுந்தன. 1-45 பூக்கள் நிறைந்து, வண்டுகள் மதுவை குடித்து மயங்கி ரீங்காரம் செய்தபடி இருந்த அந்த மரங்களைத் தன் கால்களின் வேகத்தில் தள்ளிக் கொண்டே சென்றான்.  கால் (துடை) வேகத்துக்கு ஈ.டு கொடுக்க முடியாமல் மரங்கள் சற்று தூரம் தொடர்ந்து சென்றபின் விழுந்தன. 1-46 வெகு தூரம் செல்லக் கிளம்பிய நெருங்கிய உறவினர்களை, வழியனுப்பச் செல்பவர் போல உடன் சென்று வழியனுப்பியதோ,  பெரிய சால மரங்கள், கால்களை உதைத்து ஹனுமான் கிளம்பிய வேகத்தில், அரசனை எப்பொழுதும் பின் தொடர்ந்து செல்லும்  பாதுகாவலர்கள் போல சென்றனவோ, எனும்படி இருந்தது. 1-47  நுனியில் புஷ்பங்களுடன் கூடிய மரங்களின் கிளைகள், ஹனுமானை பின் தொடர்ந்து செல்வதைப் பார்க்க, பர்வதாகாரமான பெரிய உருவமும், இந்த புஷ்பங்களும் வித்யாசமாக மகா அத்புதமாக தெரிந்தன 1-48 ஈ.ரப்பசையுடன், ஜீவனுடன் இருந்த மரங்களே உப்பு நீரில் விழுந்தனவே, என்ன காரணம்?  மகேந்திர மலையிடம் பயமா?  மலையை விட்டு நகர்ந்ததால் கோபிக்கக் கூடும் என்ற எண்ணமா? அதை விட சமுத்திரத்தில் விழுவது மேல் என்று விழுந்தனவா. இளம் தளிர்களும், மொட்டுகளும், மலர்களுமாக ஹனுமானின் மேலும் விழுந்து, மகேந்திர மலையில் மின் மினி பூச்சிகள் வட்டமிடுவது போல, பர்வதாகாரமான சரீரத்தை மறைத்தன.  கை கால்களை உதறியதும் அந்த புஷ்பங்கள் கீழே விழுவதைக் காண, நண்பர்கள் வழியனுப்பி விட்டுத் திரும்பியதைப் போல இருந்தது. 1-52 வாயு உடனே துணை போவது போல இப்படிச் சிதறிய புஷ்பங்களை  கீழே நீரில் கொண்டு சேர்த்தது. மேகத்தின் இடையில் மின்னல் தெறித்தாற்போல இந்த புஷ்பங்கள் பல வண்ணங்களில் வானர வீரனின் உடலில் கிடந்தன.  இப்பொழுது திடுமென சமுத்திரத்தில் விழுந்து, நக்ஷத்திரக் கூட்டங்களுடன் ஆகாயமே தெரிவது போல சமுத்திரத்தின் மேற்பரப்பில் பரவித் தெரிந்தன. 1-53 வீசி எறிவது போல தன் புஜங்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தி,  நின்ற பொழுது இரு பெரும் நாகங்கள் திடுமென சீறி நின்றது போல இருந்தன. 1-56 தாகம் எடுத்தவன் நீரைக் கண்டது போல, கடல்  நீரை விழுங்குவது போல பார்த்தான்.  அதே போல நிமிர்ந்து ஆகாயத்தையும் கண்களால் அளந்தான். 1-57  வாயு மார்கத்தில் மின்னல் பரவுவது போல நின்ற ஹனுமானின் கண்கள், மலையின் மேல் கொழுந்து விட்டெரியும் நெருப்பு ஜ்வாலையை ஒத்திருந்தது. 1-58

பிங்கே3 பிங்கா3க்ஷ முக்2யஸ்ய ப்3ருஹதீ பரிமண்டலே|சக்ஷுஷீ சம்ப்ரகாஸேதே சந்த்ர சூர்யாவிவாமலௌ ||

முகம் நாசிகயா தஸ்ய தாம்ரயா தாம்ரமாப3பௌ4 | சந்த்3யயா சமபி4ஸ்ப்ருஷ்டம் யதா2 சூர்யஸ்ய மண்டலம்|| (1-60)

லாங்கூ3லம் ச ஸமாவித்34ம் ப்லவமானஸ்ய ஸோபதே | அம்பரே வாயு புத்ரஸ்ய க்ரத்4வஜ இவோச்ஸ்ரித: ||

லாங்கூ3ல சக்ரேண மஹான் சுக்லத்ம்ஷ்ட்ரோ (அ)நிலாத்மஜ: | வ்யரோசத ப்ராக்ஞ:பரிவேஷீவ பா4ஸ்கர: ||

ஸ்பிக்தேஸேனாபி4தாம்ரேண ரராஜ ஸ மஹாகபி: |மஹதா தா3ரிதேனேவ கிரிர்கைரிக தா4துனா ||

தஸ்ய வானர சிம்ஹஸ்ய ப்லவமானஸ்ய சாக3ரம்| கக்ஷாந்தரக3தோ வாயுர் ஜீமூத இவ க3ர்ஜதி ||

கே2 யதா2 நிபதந்த்யுல்கா ஹ்யுத்தராந்தாத் வினிஸ்ருதா | த்3ருஸ்யதே சானுபந்தா ச ததா2 ஸ கபி குஞ்ஜர: ||

பதத்பதங்க3 சங்காஸோ வ்யாயத: ஸுஸுபே கபி: | ப்ரவ்ருத்3த4 இவ மாதங்க3: கக்ஷ்யயா ப3த்4யமானயா ||

உபரிஷ்டாச்சரீரேண ச்சா2யயாவகா4டயா | சாக3ரே மாருதாவிஷ்டா நௌரிவாசீத் ததா3 கபி: ||

யம் யம் தேஸம் சமுத்3ரஸ்ய ஜகா3ம ஸ மஹா கபி: | ஸ ஸ தஸ்யோருவேகே3ன சோன்மாத3 இவ லக்ஷ்யதே ||

சாக3ரஸ்ய ஊர்மி மாலானாம் உரஸா ஸைல வர்ஷ்மணாம் | அபிக்4னம்ஸ்து மஹா வேக3: புப்லுவே ஸ மஹாகபி: ||

கபிவாதஸ்ச பலவான் மேகவாதஸ்ச நிச்ஸ்ருத: |ஸாகரம் பீம நிர்கோஷம் கம்பயாமாசதுர் ப்ருஸம் ||

விகர்ஷ்ன்னூர்மி ஜா3லானி ப்3ருஹந்தி லவணாம்பஸ: | புப்லுவே ஹரி ஸார்தூலோ விகிரன்னிவ ரோதஸி ||

மேருமந்தர சம்காஸானுத்கதான் ஸ மஹார்ணவே | அத்யக்ராமன்மஹாவேகஸ்தரங்கான் க3ணயன்னிவ ||

தஸ்ய வேக3 சமுத்தூ4த்தம் ஜலம் ஸ்ஜலதம் ததா3 | அம்ப3ரஸ்த2ம் விப3ப்4ராஜ ஸாரதாப்4ரமிவாததம் ||1-73

நீள் வட்டமான மஞ்சள் நிறக் கண்கள், அணுவிலும், ப்ருஹத்திலும் பிரகாசமாகத் தெரியும் சந்திர சூரியர்களை ஒத்திருந்தது. 1-59 மூக்கின் நிறம் மட்டும் தனித்து தாமிர வர்ணமாகத் தெரிந்தது, சந்த்யா கால சூரிய மண்டலம் போல. 1-60 வேகமாக கிளம்பிய சமயம் சுருண்டு கிடந்த வால் மேல் நோக்கி எழும்பியது இந்திரன் தன் த்வஜத்தை உயர்த்தி பிடித்துக் கொண்டு போவதைப் போல இருந்தது. 1-61 வெண்மையான பற்களையுடைய ஹனுமான்,  உடலைச் சுற்றி வாலுடன், பாஸ்கரனைச் சுற்றி  ஒளி வட்டம் அமைந்தது போல இருந்தான். 1-62 மலைப் பிளவுகளில் தாமிர தாது தெரிவது போல முதுகுத் தண்டின் கீழ் சிவந்து காணப்பட்டது.1-63  வானர சிம்மத்தின் கட்கத்தில் அமுக்கப் பட்ட காற்று, அதன் வேகத்தில் மேகம் போல கர்ஜித்தது. 1-64 நெருப்புப் பொரி பறப்பது போல ஆகாயத்தில் திடுமென ஒரு தோற்றம் எழவும், யாரோ மத்தாப்பு கொளுத்துவது போல இருந்தது. 1-65 பறக்கும் பட்டம் போல வானரம் ஆகாயத்தில் அந்தரத்தில் நின்றான். வளர்ந்து பெரிதாகிக் கொண்டு போகும் யானை ஒன்று  கயிற்றின் பலத்தில் நிற்பது போல இருந்தது. மேலே பறந்த வானரத்தின் நிழல் கீழே சாகர ஜலத்தில் விழ, படகு போவது போல நிழலின் தோற்றம் சமுத்திரத்தின் மேல் மட்டத்தில் தெரிந்தது. 1-66 எந்த எந்த திசையில் மாருதன் வேகமாக போகிறானோ, அந்த அந்த இடத்தில் ஜலம் கலக்கப் பட்டு கொந்த  ளித்தது. 1-67 மலைச் சிகரம் போன்ற தன் மார்பு பிரதேசத்தால் சாகரத்தின் அலைகளை முட்டித் தள்ளிக் கொண்டும், கைகளால் அலைகளை  அடித்துக் கொண்டும் ஹனுமான் முன்னேறினான். 1-68  மேலே மேகத்திலிருந்து வந்த காற்றும், கபி கிளப்பிய காற்றும் சேர்ந்து சமுத்திரத்தின் அலகளை கொந்தளிக்கச் செய்தது. சாகரமே நடுங்குவது போல இருந்தது. 1-69 பெரிய பெரிய அலைகளை கைகளால் தள்ளிக் கொண்டே சென்றான். ஒரு சமயம் ஹனுமான் குனிந்த தலையுடன், அலைகளை எண்ணிக் கொண்டே செல்வது போல இருந்தது. 1-71 சரத் கால ஆகாயம் போல கடல் காட்சியளித்தது. 1-72 ஹனுமனால் கிளப்பப் பட்ட நீர்த்திவலைகள் மேகமாக திரண்டு நிற்க, கீழே சமுத்திரத்தின் பரப்பு ஆகாயமோ எனும்படி இருந்தது. 1-73

तिमिनक्रझषाः कूर्मा दृश्यन्ते विवृतास्तदा।
वस्त्रापकर्षणेनेव शरीराणि शरीरिणाम्।।                             5.1.74

प्लवमानं समीक्ष्याथ भुजङ्गाः सागरालयाः।
व्योम्नि तं कपिशार्दूलं सुपर्ण इव मेनिरे।।                           5.1.75

दशयोजनविस्तीर्णा त्रिंशद्योजनमायता।
छाया वानरसिंहस्य जले चारुतराभवत्।।                            5.1.76

श्वेताभ्रघनराजीव वायुपुत्रानुगामिनी।
तस्य सा शुशुभे छाया वितता लवणाम्भसि।।                        5.1.77

शुशुभे स महातेजा महाकायो महाकपिः।
वायुमार्गे निरालम्बे पक्षवानिव पर्वतः।।                             5.1.78

येनासौ याति बलवान् वेगेन कपिकुञ्जरः।
तेन मार्गेण सहसा द्रोणीकृत इवार्णवः।।                             5.1.79

आपाते पक्षिसङ्घानां पक्षिराज इवाबभौ।
हनूमान् मेघजालानि प्रकर्षन् मारुतो यथा।।                          5.1.80

प्रविशन्नभ्रजालानि निष्पतंश्च पुनः पुनः।
प्रच्छन्नश्च प्रकाशश्च चन्द्रमा इव लक्ष्यते।।                         5.1.81

पाण्डुरारुणवर्णानि नीलमाञ्जिष्ठकानि च।
कपिना कृष्यमाणानि महाभ्राणि चकाशिरे।।                          5.1.82

प्लवमानं तु तं दृष्ट्वा प्लवगं त्वरितं तदा।
ववर्षुः पुष्पवर्षाणि देवगन्धर्वचारणाः।।                              5.1.83

तताप न हि तं सूर्यः प्लवन्तं वानरेश्वरम्।
सिषेवे च तदा वायू रामकार्यार्थसिद्धये।।                            5.1.84

ऋषयस्तुष्टुवुश्चैनं प्लवमानं विहायसा।
जगुश्च देवगन्धर्वाः प्रशंसन्तो महौजसम्।।                           5.1.85

नागाश्च तुष्टुवुर्यक्षा रक्षांसि विविधाः खगाः।
प्रेक्ष्याकाशे कपिवरं सहसा विहतक्लमम्।।                           5.1.86

तस्मिन् प्लवगशार्दूले प्लवमाने हनूमति।
इक्ष्वाकुकुलमानार्थी चिन्तयामास सागरः।।                           5.1.87

साहाय्यं वानरेन्द्रस्य यदि नाहं हनूमत:।
करिष्यामि भविष्यामि सर्ववाच्यो विवक्षताम्।।                       5.1.88

अहमिक्ष्वाकुनाथेन सगरेण विवर्धितः।
इक्ष्वाकुसचिवश्चायं नावसीदितुमर्हति।।                              5.1.89

திமி நக்ர ஜஷா: கூர்மா த்3ருஸ்யந்தே விவ்ருதாஸ்ததா  | வஸ்த்ராப கர்ஷணேன(இ)வ ரீராணி ரீரிணாம் ||

ப்லவமானம் ஸமீக்ஷ்யாத2 பு4ஜங்கா3: சாக3ராலயா: | வ்யோம்னி தம் கபி ஸார்தூ3லம் சுபர்ண இதி மேனிரே ||

3ஸ யோஜன விஸ்தீர்ணா த்ரிம்ஸத்யோஜனமாயதா | ச்சா2யா வானர சிம்ஹஸ்ய ஜலே சாருதராபவத் || (1-76)

ஸ்வேதாப்4ரக4னராஜீவ வாயுபுத்ரானுகா3மினீ |தஸ்ய ஸா ஸுஸுபே ச்சா2யா விததா லவனாம்ப3ஸி ||

ஸுஸுபே4 ஸ மஹாதேஜா மஹாகாயோ மஹாகபி: | வாயுமார்கே3 நிராலம்பே3 பக்ஷவானிவ பர்வத: ||

யேனாஸௌ யாதி ப3லவான் வேகே3ன கபிகுஞ்ஜர: | தேன மார்கேன ஸஹஸா த்3ரோணி க்ருத இவார்ணவ: ||

ஆபாதே பக்ஷி ஸங்காணாம் பக்ஷிராஜ இவாப3பௌ4 |ஹனூமான் மேக4 ஜாலானி ப்ரகர்ஷன் மாருதோ யதா2 ||

ப்ரவிஸன்னப்4ர ஜாலானி நிஷ்பதம்ஸ்ச புன: புன: || ப்ரச்2சன்னஸ்ச ப்ரகாஸஸ்ச சந்த்3ரமா இவ லக்ஷ்யதே ||

பாண்டராருண வர்ணானி நீல மாஞ்ஜிஷ்டகானி ச | கபினா க்ருஷ்யமாணானி மஹாப்4ராணி சகாஸிரே ||

ப்லவமானம் து தம் த்3ருஷ்ட்வா ப்லவக3ம் த்வரிதம் ததா3 | வவர்ஷு: புஷ்ப வர்ஷாணி தே3வ கந்த4ர்வ சாரணா: ||

ததாப நஹி தம் சூர்ய: ப்லவந்தம் வானரேஸ்வரம் | ஸிஷேவே ச ததா3 வாயூ ராம கார்யார்த2 சித்34யே ||

ரிஷய: துஷ்டுவுச்சைனம் ப்லவமானம் விஹாயஸா | ஜக்3முஸ்ச தே3வக3ந்த4ர்வா: ப்ரம்ஸந்தோ மஹௌஜஸம் ||

நாகாஸ்ச துஷ்டுவுர்யக்ஷா ரக்ஷாம்ஸி விவிதா4: க2கா3: | ப்ரேக்ஷ்யாகாஸே கபிவரம் ஸஹஸா விஹத க்லமம் ||

தஸ்மின் ப்லவக3 ஸார்தூ3லே ப்லவமானே ஹனூமதி | இக்ஷ்வாகு குல மானார்தீ2 சிந்தயாமாஸ ஸாக3ர: ||

ஸாஹாய்யம் வானரேந்த்3ரஸ்ய யதி3 நாஹம் ஹனூமத: | கரிஷ்யாமி பவிஷ்யாமி ஸர்வ வாச்யோ விவக்ஷதாம் ||

அஹமிக்ஷ்வாகு நாதே2ன ஸகரேண விவர்தி4த:| இக்ஷ்வாஸகு ஸசிவஸ்சாயம் நாவஸீதி3துமர்ஹதி 1-89

திமிங்கிலங்கள், மீன்கள், கூர்மங்கள், நக்ரம், முதலைகள், முதலியவை பரபரப்புடன் இங்கும் அங்குமாக அலைந்தன.  சரீரம் உடைய மனிதர்கள், திடுமென வஸ்திரத்தை யாரோ பறித்தால் பரபரப்படைவது போல,1-74 திடுமென ஆகாயத்தில் தோன்றி கடலைத் தாண்டும் பெரிய உருவத்தை இதுவரை கண்டறியாத கடல் வாழ் ஜந்துக்கள், பதறின.  நாகங்கள், சுபர்ணன், கருடன் என்று ஹனுமானை பார்த்து நடுங்கின 1-75.  வானர சிம்மத்தின் நிழலே, பத்து யோஜனை விஸ்தீர்ணமும், முப்பது யோஜனை நீளமும், அதுவே கண்டறியாத புதுமையாக இருந்தது. 1-76 வெண்மையான மேகங்களை கரு மேகம் தொடர்வது போல, வானரத்தை அதன் நிழல் தொடர்ந்து ஜல பரப்பில் விரிந்து தெரிந்தது. 1-77 எந்த விதமான பிடிமானமோ, ஆதாரமோ இல்லாமல்,  வாயு மார்கத்தில், தானே ஏற்றுக் கொண்ட ப்ரும்மாண்டமான சரீரத்துடன் வாயு புத்திரன், மகா தேஜஸுடன், கவர்ச்சியுடன் இருந்தான்.  மலைக்கு இறக்கை முளைத்து விட்டது போல், 1-78   வேகம் எடுத்துச் சென்ற திசைகளில் பெரும் கடல் த்3ரோணஎ அளவு, (படி என்பதுபோல அளக்கும் அளவு), ஆயிற்று.  1-79 கூட்டம் கூட்டமாக பறக்கும் பறவைகளின் நடுவில் பக்ஷிராஜனாகத் தெரிந்தான்.  மாருதன் போலவே அவன் மகனும் மேகங்களை வருத்திக் கொண்டே சென்றான். 1-80 ஆகாயத்தை துளைத்துக் கொண்டு செல்வது போல மேல் நோக்கி ஒரு சமயம், திரும்ப கீழே விழுந்து விடுவது போல மறு நிமிடம் என்று, தெரிவதும் மறைவதுமாக சந்திரமா போல இருந்தான். 1-81 வெண்மை, அருண நிறம்,  நீலம், மஞ்சள் என்று பல வர்ணங்களிலும் விளங்கும் ஆகாயம், கபி இழுக்க, இழுக்க, உடன் வருவது போல வளைந்து கொடுத்ததோ. 1-82  தேவ, கந்தர்வ, சாரணர்கள், இதற்குள், ஹனுமான் லங்கையை அடைய பெரும் கடலைத்  தாவித் தாண்டி கடக்க ஆரம்பித்திருக்கிறான் என்று தெரிந்து, புஷ்பமாரி பொழிந்தனர். 1-83  வேகமாக செல்பவனை வாழ்த்தினர்.  சூரியன் அவனை சுடவில்லை. வாயு அவனை நகர்த்தி அலைக்கழிக்கவில்லை. ராம காரியம் நல்ல விதமாக நிறைவேற, வாழ்த்தி அனுப்பினார்கள். 1-84 ஆகாய மார்கமாக துணிந்து புறப்பட்ட அனுமனை, ரிஷிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து வழியனுப்பினர்.  தேவ, கந்தர்வர்கள், புகழ் பாடினர்.1-85 நாகர்கள், மகிழ்ந்தனர். யக்ஷ, ராக்ஷஸர்கள், பலவிதமான பறவைகள், ஆகாயத்தில் நிமிர்ந்து பார்த்து, கடலைத் தாண்டும் பெரிய வானரம் களைப்பின்றி செல்வதைக் கண்டனர். 1-86 இப்படி வானர வீரன் ஆகாயத்தை மறைத்துக் கொண்டு செல்லும் பொழுது, சாகர ராஜன், இக்ஷ்வாகு குலத்திற்கு பந்தம் உடையவன், யோசிக்கலானான். 1-87 ஹனுமானுக்கு நான் ஏதாவது உதவி செய்ய வேண்டுமே, எதுவும் செய்யாமல் விட்டால், எல்லோரிடமும் பொல்லாப்பு வரும். 1-88  நான் இக்ஷ்வாகு குல அரசனால் சகரனால் வளர்க்கப் பட்டவன். இவன் இக்ஷ்வாகு குல மந்திரி. இவன் வருந்தாமலிருக்க வேண்டும். இவன் சற்று ஓய்வு எடுத்துக் கொண்டு, செல்ல நான் ஏதாவது செய்து தான் ஆக வேண்டும். 1-89

तथा मया विधातव्यं विश्रमेत यथा कपिः।
शेषं च मयि विश्रान्तः सुखेनातिपतिष्यति।।                         5.1.90

इति कृत्वा मतिं साध्वीं समुद्रश्छन्नमम्भसि।
हिरण्यनाभं मैनाकमुवाच गिरिसत्तमम्।।                             5.1.91

त्वमिहासुरसङ्घानां पातालतलवासिनाम्।
देवराज्ञा गिरिश्रेष्ठ परिघः संनिवेशितः।।                            5.1.92

त्वमेषां ज्ञातवीर्याणां पुनरेवोत्पतिष्यताम्।
पातालस्याप्रमेयस्य द्वारमावृत्य तिष्ठसि।।                          5.1.93

तिर्यगूर्ध्वमधश्चैव शक्तिस्ते शैल वर्धितुम्।
तस्मात् संचोदयामि त्वामुत्तिष्ठ नगसत्तम।।                    5.1.94

स एष कपिशार्दूलस्त्वामुपैष्यति वीर्यवान्।
हनूमान् रामकार्यार्थं भीमकर्मा खमाप्लुतः।।                          5.1.95

अस्य साह्यं मया कार्यमिक्ष्वाकुहितवर्तिनः।
मम हीक्ष्वाकवः पूज्याः परं पूज्यतमास्तव।।                         5.1.96

कुरु साचिव्यमस्माकं न नः कार्यमतिक्रमेत्।
कर्तव्यमकृतं कार्यं सतां मन्युमुदीरयेत्।।                            5.1.97

सलिलादूर्ध्वमुत्तिष्ठ तिष्ठत्वेष कपिस्त्वयि।
अस्माकमतिथिश्चैव पूज्यश्च प्लवतां वरः।।                         5.1.98

चामीकरमहानाभ देवगन्धर्वसेवित।
हनूमांस्त्वयि विश्रान्तस्ततः शेषं गमिष्यति।।                        5.1.99

काकुत्स्थस्यानृशंस्यं च मैथिल्याश्च विवासनम्।
श्रमं च प्लवगेन्द्रस्य समीक्ष्योत्थातुमर्हसि।।                          5.1.100

हिरण्यनाभो मैनाको निशम्य लवणाम्भसः।
उत्पपात जलात्तूर्णं महाद्रुमलतायुतः।।                         5.1.101

स सागरजलं भित्त्वा बभूवाभ्युत्थितस्तदा।
यथा जलधरं भित्त्वा दीप्तरश्मिर्दिवाकरः।।                           5.1.102

स महात्मा मुहूर्तेन पर्वतः सलिलावृतः।
दर्शयामास शृङ्गाणि सागरेण नियोजितः।।                          5.1.103
शातकुम्भमयैः शृङ्गैः सकिंनरमहोरगैः।

आदित्योदयसंकाशैरालिखद्भिरिवाम्बरम्।।                           5.1.104
ததா2 மயா விதா4தவ்யம் விஸ்ரமேத யதா2 கபி: | ஸேஷம் ச மயி விஸ்ராந்த: சுகே2னாதி4பதிஷ்யதி ||

இதி க்ருத்வா மதிம் ஸாத்4வீம் ஸமுத்3ரச்ச2ன்னமம்ப3ஸி | ஹிரண்யனாபம் மைனாகமுவாச கி3ரிசத்தமம் || (1-91)

த்வமிஹாசுர ஸங்கா4னாம் பாதால தல வாசினாம் | தே3வராஜா கி3ரிஸ்ரேஷ்ட பரிக3: ஸன்னிவேசித: ||

த்வமேஷாம் ஜாத வீர்யாணாம் புனரேவோத்பதிஷ்யதாம் | பாதாலஸ்யாப்ரமேயஸ்ய த்3வாரமாவ்ருத்ய திஷ்டஸி|| த்வமிஹா ஸுர ஸங்கானாம் பாதால தல வாஸினாம் | திர்யகூ3ர்த்4வமத4ஸ்சைவ ஸக்திஸ்தே ஸைல வர்திதும் ||

தஸ்மாத் சம்சோதயாமி த்வாமுத்திஷ்ட நக3 சத்தம||

ஸ ஏஷ கபி ஸார்தூ3லஸ்த்வாமுபைஷ்யதி வீர்யவான் | ஹனூமான் ராமகார்யார்த2ம் பீ4மகர்மா க2மாப்லுத: ||

அஸ்ய ஸாஹ்யம் மயா கார்யமிக்ஷ்வாகு ஹித வர்தின: | மம இக்ஷ்வாகவ: பூஜ்யா: பரம் பூஜ்யதமாஸ்தவ ||

குரு  ஸாசிவ்யமஸ்மாகம் ந ந: கார்யமதிக்ரமேத் |

கர்தவ்யமக்ருதம் கார்யம் ஸதாம் மன்யுமுதீ3ரயேத் ||

ஸலிலாதூ3ர்த்4வமுத்திஷ்ட திஷ்டத்வேஷ கபிஸ்த்வயி | அஸ்மாகமதி2திஸ்சைவ பூஜ்யஸ்ச ப்லவதாம் வர: ||

சாமீகர மஹா நாப4 தே3வ கந்த4ர்வ ஸேவித | ஹனூமான்ஸ்த்வயி விஸ்ராந்த: தத: ஸேஷம் க3மிஷ்யதி ||

காகுஸ்த2ஸ்யான்ருஸம்ஸ்யம் ச   மைதில்யாஸ்ச விவாஸனம் | ஸ்ரமம் ச ப்லவகேந்த்3ரஸ்ய  ஸமீஸ்க்ஷ்யோத்தாதுமர்ஹசி ||

ஹிரண்யனாபோ4 மைனாகோ நிஸம்ய லவனாம்ப3ஸ: | உத்பபாத ஜலாத்தூர்ணம் மஹாத்3ரும லதாயுத:||

ஸ ஸாகர ஜலம் பி4த்வா ப3பூ4வாப்யுத்தி2தஸ்ததா | யதா3 ஜலத4ரம் பி4த்வா தீ3ப்தரஸ்மிர் தி3வாகர: ||

ஸ மஹாத்மா முஹூர்தேன பர்வத: ஸலிலாவ்ருத: | த3ர்ஸயமாஸ ச ஸ்ருங்கா3னி ஸாக3ரேண நியோஜித: ||

ஸாதகும்ப4மயை: ஸ்ருங்கை3: ஸகின்னர மஹோரகை3: | ஆதி3த்யோத3ய சங்காஸை: ஆலிக2த்பிரிவாம்ப3ரம் || 1-104

சற்று நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு, பயணத்தை தொடர்ந்தால், புத்துணர்ச்சி பெற்றவனாக, ஆவான். 1-90  இப்படி எண்ணி, சமுத்திர ஜலத்தில் மறைந்து இருந்த மைனாகம் என்றும், ஹிரண்ய நாப4 என்றும் அழைக்கப் பட்ட மலையை அழைத்தான். 1-91 இந்திரனால் விரட்டப் பட்டு கடலில் மூமூழ்கி இருந்த மலை. நக3 சத்தமா, (மலைகளுள் சிறந்தவனே,) பாதாளத்தின் வாயிலை மறைத்துக் கொண்டு நிற்கிறாய். 1-92  மேலும், கீழும், பக்க வாட்டிலும் நகர உனக்கு சக்தியுள்ளது. 1-93 அதனால் உனக்கு ஒரு வேலை தருகிறேன்.  எழுந்திரு. இதோ பார். இந்த வானர வீரன் ஹனுமான், ராம காரியமாக கிளம்பி இருக்கிறான். ஆகாய மார்கமாக வந்து கொண்டிருக்கிறான். 1-94  இதோ அருகில் வந்து விடுவான். எனக்கு இக்ஷ்வாகு குலத்தின் அரசர்களிடம் நன்றிக் கடன் உள்ளது.  இன்னும் சொல்லப் போனால் உனக்கும் இக்ஷ்வாகு குலத்தினர் மரியாதைக் குரியவர்கள். 1-95  உனக்கு நன்மை செய்தவர்கள். அதனால் ஒரு காரியம் செய். செய்ய வேண்டிய கடமையை செய்யாது விட்டால், நல்லவர்கள் கூட கோபம் கொள்வார்கள். 1-96 இந்த நீருக்கு வெளியில் தெரியும்படி நின்று கொள். உன் மேல் முஹுர்த்த நேரம் இந்த வானர வீரன் நின்று சிரம பரிகாரம் செய்து கொள்ளட்டும் 1-97. காகுத்ஸனுடைய நல்ல குணம், அவனுடைய தயை, அவனுக்கு நேர்ந்த கஷ்டம், சீதை காணாமல் போனது. இந்த வானரம் ராம காரியமாக கிளம்பியிருக்கிறான், பயணத்தின் சிரமம் இவற்றை நினைத்து,  நீ எழுந்திரு. 1- 98 இதைக் கேட்டு, ஹிரண்யனாபனான மைனாகம் நீருக்குள்ளிருந்து  புறப்பட்டு மேலே வந்து, ஹனுமானை வரவேற்க தயாராகியது. மலையின் மேல் இருந்த மலை நிறைந்த மரங்களும், பழ மரங்களும் வெளியே தெரியலாயிற்று. 1-99 சமுத்திர ஜலத்தை கிழித்துக் கொண்டு மேல் எழும்பிய மைனாக மலை மேகங்களை பிளந்து கொண்டு, கடுமையான கிரணங்களுடன் தி3வாகரன் (பகலவன்) உதித்தது போல இருந்தான். 1-100  சாகரத்தின் கட்டளைப்படி, நாலா புறமும் ஜலம் சூழ்ந்த அந்த பிரதேசத்தில், கால் ஊன்ற தன் தலையையே கொடுக்கத் தயாராக இருப்பது போல, தன் சிகரத்தை மட்டும் வெளியே தெரியும் படி வைத்து நின்று கொண்டான். -101 கின்னரர்களும், மகா உரகங்களும் (நாகங்கள்) வசிப்பதும், உதய சூரியன் போன்ற பிரகாசத்துடன், மேகத்தை தொட்டு விடும் உயரத்துடன், காஞ்சன மயமான சிகரங்கள் திடுமெனெ நீர்ப் பரப்பில், தெரியலாயின. 1-102 ஹிரண்யனாபன் என்ற பெயருக்கு ஏற்ப, பொன் நிறமான அந்த சிகரங்கள் ஆகாயத்தையே பொன் நிறமாக்கின.  நூறு ஆதித்யர்கள் ஒரே சமயத்தில் உதித்த பிரமையை உண்டு பண்ணியது. 1- 103-104

तप्तजाम्बूनदैः शृङ्गैः पर्वतस्य समुत्थितैः।
आकाशं शस्त्रसंकाशमभवत् काञ्चनप्रभम्।।                          5.1.105

जातरूपमयैः शृङ्गैर्भ्राजमानैः स्वयंप्रभैः।
आदित्यशतसंकाशः सोऽभवद्गिरिसत्तमः।।                           5.1.106

तमुत्थितमसङ्गेन हनुमानग्रतः स्थितम्।
मध्ये लवणतोयस्य विघ्नोऽयमिति निश्चितः।।                       5.1.107

स तमुच्छ्रितमत्यर्थं महावेगो महाकपिः।
उरसा पातयामास जीमूतमिव मारुतः।।                             5.1.108

स तथा पातितस्तेन कपिना पर्वतोत्तमः।
बुद्ध्वा तस्य कपेर्वगं जहर्ष च ननंद च।।                           5.1.109

तमाकाशगतं वीरमाकाशे समुपस्थितः।
प्रीतो हृष्टमना वाक्यमब्रवीत् पर्वतः कपिम्।।                        5.1.110
मानुषं धारयन् रूपमात्मनः शिखरे स्थितः।

दुष्करं कृतवान् कर्म त्वमिदं वानरोत्तम।।                            5.1.111
निपत्य मम शृङ्गेषु विश्रमस्व यथासुम्।

राघवस्य कुले जातैरुदधिः परिवर्धितः।।                             5.1.112
स त्वां रामहिते युक्तं प्रत्यर्चयति सागरः।

कृते च प्रतिकर्तव्यमेष धर्मः सनातनः।।                            5.1.113
सोऽयं तत्प्रतिकारार्थी त्वत्तः संमानमर्हति।

त्वन्निमित्तमनेनाहं बहुमानात्प्रचोदितः।।                             5.1.114
योजनानां शतं चापि कपिरेष खमाप्लुतः।

तव सानुषु विश्रान्तः शेषं प्रक्रमतामिति।।                           5.1.115
तिष्ठ त्वं हरिशार्दूल मयि विश्रम्य गम्यताम्।
तदिदं गन्धवत् स्वादु कन्दमूलफलं बहु।।                           5.1.116
तदास्वाद्य हरिश्रेष्ठ विश्रम्य श्वो गमिष्यसि।

अस्माकमपि संबन्ध: कपिमुख्य त्वयास्ति वै।।                       5.1.117
प्रख्यातस्त्रिषु लोकेषु महागुणपरिग्रहः।

वेगवन्तः प्लवन्तो ये प्लवगा मारुतात्मज।।                         5.1.118
तेषां मुख्यतमं मन्ये त्वामहं कपिकुञ्जर।

अतिथिः किल पूजार्हः प्राकृतोऽपि विजानता।।                        5.1.119
தப்த ஜாம்பூ3னதை3: ஸ்ருங்கை3: பர்வதஸ்ய ஸமுத்திதை: | ஆகாஸம் ஸ்த்ர ஸ்ம்காஸமபவத் காஞ்சனப் ப்ரபம் ||

ஜாதரூபமயை: ஸ்ருங்கை3: ப்4ராஜ மானை: ஸ்வயம்ப்ரபை4: | ஆதித்ய ஸத ஸம்காஸ: ஸோ(அ)பவத்கி3ரிசத்தம: || 1-106)

தமுத்திதம்ஸங்கே3ன ஹனூமானக்3ரத: ஸ்தி2தம் | மத்4யே லவண தோயஸ்ய விக்3னோ(அ)யமிதி நிஸ்சித: ||

ஸ தமுச்2ச்ரிதமத்யர்த2ம் மஹாவேகோ3 மஹாகபி: | உரஸா பாதயாமாஸ ஜீமூதமிவ மாருத: ||

ஸ ததா3 பாதிதஸ் தேன கபினா பர்வதோத்தம: | புத்3த்4வா தஸ்ய கபேர்வேக3ம் ஜஹர்ஷ ச நனந்த3 ச ||

தமாகாஸ க3தம் வீரமாகாஸே சமுபஸ்தி2த: | ப்ரீதோ ஹ்ருஷ்டமனா வாக்யமப்3ரவீத் பர்வத: கபிம் ||

மானுஷம் தா4ரயன் ரூபமாத்மன: ஸிகரே ஸ்தி2த: | து3ஷ்கரம் க்ருதவான் கர்ம த்வமித3ம் வானரோத்தம ||

நிபத்ய மம ஸ்ருங்கே3ஷூ விஸ்ரமஸ்வ யதா2 சுகம் | ராக4வஸ்ய குலே ஜாதைருத3தி4: பரிவர்தி4த: ||

ஸ த்வாம் ராம ஹிதே யுக்தம் ப்ரத்யர்சயதி ஸாக3ர: |

க்ருதே ச ப்ரதிகர்தவ்யம் ஏஷ த4ர்ம சனாதன: ||

ஸோ(அ)யம் தத்ப்ரதிகாரார்தீ த்வத்த: ஸம்மானமர்ஹதி  |

த்வன்னிமித்தமனேனாஹம் பஹுமானாத்ப்ரசோதி3த: ||

யோஜனானாம் தம் சாபி கபிரேஷ க2மாப்லுத: | தவ ஸானுஷு விஸ்ராந்த: ஸேஷம் ப்ரக்ரமதாமிதி ||

திஷ்ட த்வம் ஹரிஸார்தூ3ல மயி விஸ்ரம்ய க3ம்யதாம் |

ததி3தம் கந்த4வத் ஸ்வாது3 கந்த3மூலபலம் ப3ஹு ||

ததாஸ்வாத்3ய ஹரி ஸ்ரேஷ்ட விஸ்ரம்ய ஸ்வோ க3மிஷ்யசி | அஸ்மாகமபி சம்பந்த4: கபிமுக்2ய த்வயாஸ்தி வை |

ப்ரக்யாதஸ்திரிஷு லோகேஷு மஹாகு3ண பரிக்3ரஹ: | வேக3வந்த: ப்லவந்தோ யே ப்லவகா மாருதாத்மஜ ||

தேஷாம் முக்யதமம் மன்யே த்வாமஹம் கபி குஞ்ஜர | அதி2தி: கில பூஜார்ஹ: ப்ராக்ருதோ(அ)பி விஜானதா|| 1-119

எதிர்பாராமல் தன் எதிரில் வந்து நின்ற, இந்த மலையை  ஹனுமான் ஏதோ இது ஒரு தடை என்றே எண்ணினான். 1-105  விக்னம், இதை கடந்து செல்ல வேண்டும் என்று மகா வேகமாக தன் மார்பினால் அதை தள்ளிக் கொண்டு சென்றான்.  தந்தையான மாருதி, மேகங்களை நெட்டித் தள்ளுவது போல. 1-106 தன்னைத் தள்ளியதிலிருந்தே மகா கபியின் வேகத்தை புரிந்து கொண்ட மைனாகம், மகிழ்ச்சி ஆரவாரம் செய்தான். 1-107 ஆகாயத்தில் நின்ற வீரனைப் பார்த்து, மலையுச்சியில் தானும் மனித உருவம் எடுத்துக் கொண்டு நின்றபடி வானரோத்தமா, அரிய செயலைச் செய்கிறாய்.  சற்று என் சிகரத்தில் தங்கி சிரம பரிகாரம் செய்து கொள்.  1-108-109 ராகவனுடைய குலத்தில் பிறந்தவர்களால் தான் இந்த சமுத்திரம் உண்டானது.  அதனால் சாகரன், ராம காரியத்திற்காக செல்லும் உனக்கு உபசாரம் செய்ய விரும்புகிறான். 1-110  ஒருவன் செய்த உதவிக்கு பிரதி உதவி செய்தே ஆக வேண்டும்.  இது பழமையான தர்மம்.  அதனால் சாகர ராஜன் உனக்கு சேவை செய்து, ராகவ குலத்திற்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விழைகிறான்.  1-111 என்னை அனுப்பியிருக்கிறான். மிகவும் மரியாதையுடனும் சிரத்தையுடனும், என்னை உனக்கு சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்து கொள்ள இடம் தரும்படி சொல்லியனுப்பினான். 1-112 நூறு யோஜனை தூரம் கடலைத் தாண்டும் முயற்சியில், வானர ராஜன் இறங்கியிருக்கிறான். உன் சாரலில் தங்கி இளைப்பாறிச் செல்லட்டும் என்றான். 1-113  அதனால் ஹரிசார்தூ3லா, சற்று நில். இதோ, காய்கறி பழ வகைகள். இவைகளைப் புசித்து, சிரம பரிகாரம் செய்து கொண்டு நாளை செல்வாய். 1-114  வானரனே, எங்களுக்கும் உன்னுடன் நெருங்கிய சம்பந்தம் உள்ளது.  1-115 மூன்று உலகிலும் தேடினாலும் உன்னைப் போல வானரங்களை காண்பது அரிது 1-116 . மாருதாத்மஜா, நீ பூஜிக்கத் தகுந்த அதிதி. சாதாரணமாகவே, அதிதி என்று யார் வந்தாலும் உபசரிக்க வேண்டியது சாதாரண தர்மம். 1-117 அதிலும், உன் போன்றவர்களை அதிதியாக பெறுவதே பாக்கியம். 1-118 கபிகுஞ்சரா, நீயோ மாருதனின் புதல்வன்.  அவனைப் போலவே ஆற்றலும், வேகமும் உடையவன். உன்னை நான் உபசரித்தால் உன் தந்தையை உபசரித்தது போலாகும்.1-119

धर्मं जिज्ञासमानेन किं पुनर्यादृशो भवान्।

त्वं हि देववरिष्ठस्य मारुतस्य महात्मनः।।                          5.1.120
पुत्रस्तस्यैव वेगेन सदृशः कपिकुञ्जर।

पूजिते त्वयि धर्मज्ञ पूजां प्राप्नोति मारुतः।।                         5.1.121
तस्मात्त्वं पूजनीयो मे शृणु चाप्यत्र कारणम्।

पूर्वं कृतयुगे तात पर्वताः पक्षिणोऽभवन्।।                           5.1.122
तेऽभिजग्मुर्दिशः सर्वा गरुडानिलवेगिनः।

ततस्तेषु प्रयातेषु देवसङ्घा: सहर्षिभिः।।                             5.1.123
भूतानि च भयं जग्मुस्तेषां पतनशङ्कया।

ततः क्रुद्धः सहस्राक्षः पर्वतानां शतक्रतुः।।                           5.1.124
पक्षांश्चिच्छेद वज्रेण ततः तत्र सहस्रशः।

स मामुपागतः क्रुद्धो वज्रमुद्यम्य देवराट्।।                         5.1.125
ततोऽहं सहसा क्षिप्तः श्वसनेन महात्मना।

अस्मिँल्लवणतोये च प्रक्षिप्तः प्लवगोत्तम।।                          5.1.126
गुप्तपक्षसमग्रश्च तव पित्राभिरक्षितः।

ततोऽहं मानयामि त्वां मान्यो हि मम मारुतः।।                      5.1.127
त्वया मे ह्येष संबन्धः कपिमुख्य महागुणः।

अस्मिन्नेवं गते कार्ये सागरस्य ममैव च।।                          5.1.128
प्रीतिं प्रीतमनाः कर्तुं त्वमर्हसि महाकपे।

श्रमं मोक्षय पूजां च गृहाण कपिसत्तम।।                            5.1.129
प्रीतिं च बहु मन्यस्व प्रीतोऽस्मि तव दर्शनात्।

एवमुक्तः कपिश्रेष्ठस्तं नगोत्तममब्रवीत्।।                            5.1.130
प्रीतोऽस्मि कृतमातिथ्यं मन्युरेषोऽपनीयताम्।

त्वरते कार्यकालो मे ह्यहश्च व्यतिवर्तते।।                          5.1.131
प्रतिज्ञा च मया दत्ता न स्थातव्यमिहान्तरा।

इत्युक्त्वा पाणिना शैलमालभ्य हरिपुंगवः।।                          5.1.132
जगामाकाशमाविश्य वीर्यवान् प्रहसन्निव।

स पर्वतसमुद्राभ्यां बहुमानादवेक्षितः।।                              5.1.133
पूजितश्चोपपन्नाभिराशीर्भिरनिलात्मजः।

अथोर्ध्वं दूरमुत्पत्य हित्वा शैलमहार्णवौ।।                            5.1.134
पितुः पन्थानमास्थाय जगाम विमलेऽम्बरे।

ततश्चोर्ध्वं गतिं प्राप्य गिरिं तमवलोकयन्।।                         5.1.135
4ர்மம் ஜிஞாஸமானேன கிம் புனர் யாத்3ருஸோ ப4வான் | த்வம் ஹி தே3வ வரிஷ்டஸ்ய மாருதஸ்ய மஹாத்மன: ||

புத்ரஸ்தஸ்யைவ வேகே3ன சத்3ருஸ: கபி குஞ்ஜர | பூஜிதே த்வயி த4ர்மஞ பூஜாம் ப்ராப்னோதி மாருத: ||(1-121)

தஸ்மாத்த்வம் பூஜனீயோ மே ஸ்ருணு சாப்யத்ர காரணம் |பூர்வம் க்ருத யுகே3 தாத பர்வதா: பக்ஷிணோ(அ)ப4வன் ||

தே(அ)பி4ஜக்3முர்தி3ஸ: சர்வா க3ருடானில வேகி3ன: | ததஸ்தேஷு ப்ரயாதேஷு தேவ சங்கா4: ஸமஷர்ஷிபி:||

பூ4தானி ச ப4யம் ஜக்3முஸ்தேஷாம் பதன ஸங்கயா | தத: க்ருத்34: ஸஹஸ்ராக்ஷ: பர்வதானாம் ஸதக்ரது: ||

பக்ஷாம்ஸ்சிச்சேத3 வஜ்ரேண தத்ர தத்ர ஸஹஸ்ரஸ: || ஸ மாமுபக3த: க்ருத்3தோ4 வஜ்ரமுத்3த்4யம்ய தே3வராட் |

ததோ(அ)ஹம் ஸஹஸா க்ஷிப்த: ஸ்வஸனேன மஹாத்மனா | அஸ்மில்லவண தோயே ச ப்ரக்ஷிப்த: ப்லவகோ3த்தம ||

குப்தபக்ஷ ஸமக்ரஸ்ச தவ பித்ராபிரக்ஷித: | ததோ(அ)ஹம் மானயாமி த்வாம் மான்யோ ஹி மம மாருத: ||

த்வயா மே ஹ்யேஷ சம்பந்த4: கபிமுக்ய மஹாகு3ண: | அஸ்மின்னேவம் க3தே கார்யே ஸாக3ரஸ்ய மமைவ ச |

ப்ரீதிம் ப்ரீதமனா: கர்தும் த்வமர்ஹஸி மஹாகபே | ஸ்ரமம் மோக்ஷய பூஜாம் ச க்ருஹாண கபிசத்தம ||

ப்ரீதிம் ச ப3ஹு மன்யஸ்வ ப்ரீதோ(அ)ஸ்மி தவ த3ர்ஸனாத் | ஏவமுக்த: கபிஸ்ஸ்ரேஷ்ட: தம் நகோ3த்தமமப்3ரவீத் ||

ப்ரீதோ(அ)ஸ்மி க்ருதமாதித்யம் மன்யுரேஷோ(அ)பனீயதாம் | த்வரதே கார்ய காலோ மே ஹ்யஹஸ்ச வ்யதிவர்ததே ||

ப்ரதிக்ஞா ச மயா த3த்தா ந ஸ்தா2தவ்யமிஹாந்தரா | இத்யுக்த்வா பாணினா ஸைலமாலப்4ய ஹரிபுங்க3வ: ||

ஜகா3மாகாஸமாவிஸ்ய வீர்யவான் ப்ரஹஸன்னிவ |  ஸ பர்வதசமுத்3ராப்4யாம் ப3ஹுமானாதவேக்ஷித: ||

பூஜிதஸ்சோபபன்னாபி: ஆஸீபிரனிலாத்மஜ: | அதோர்த்4வம் தூ3ரமுத்பத்ய ஹித்வா ஸைல மஹார்ணவௌ ||

பிது: பந்தா2னமாஸ்தாய ஜகா3ம விமலே(அ)ம்ப3ரே | ததஸ்சோர்த்4வம் க3திம் ப்ராப்ய கி3ரிம் தமவலோகயன் ||1-135

இப்படி நான் உன்னை உபசரிக்க விரும்புவதன் காரணம் சொல்கிறேன் கேள். 1-120 முன்பு க்ருத யுகத்தில் மலைகள் இறக்கைகளுடன் இருந்தன.  நாலா திசைகளிலும் அவை சென்றன.  கருடனோ, காற்றோ, எனும்படி வேகமாக சென்றன.1-121 இப்படி இவர்கள் செல்லும் பொழுது தேவர்களும், ரிஷிகளும், மற்ற ஜீவராசிகளும் பயந்து நடுங்கின. எந்த நிமிடமும் விழலாம் என்ற சந்தேகம்.1-122  இதனால் சஹஸ்ராக்ஷன் கோபம் கொண்டான்.  தன் வஜ்ராயுதத்தை எடுத்து கிடைத்த இடத்தில் பர்வதங்களின் இறக்கையை வெட்டி எறிந்தான். 1-123  என்னை நோக்கி வஜ்ராயுதத்தை தூக்கிக் கொண்டு வந்த சமயம், உன் தந்தையான வாயுவினால் தள்ளப்பட்டு இந்த உப்புக் கடலினுள் போடப் பட்டேன் 1-124 . என் இறக்கைகளோடு உன் தந்தையினால் ரக்ஷிக்கப் பெற்றேன். அதனால் உன்னை உபசரிக்கிறேன். 1-125 நீ என்னால் உபசரிக்கப் பட வேண்டியவனே.  நமக்குள் உள்ள இந்த சம்பந்தமும் குறிப்பிடத் தக்கதே. ஆகையால், சாகரத்தில், என்னுடைய இந்த விருந்தோம்பலை, உபசாரத்தை ஏற்று, 1-126  இந்த சிகரத்தில் சிரம பரிகாரம் செய்து கொள். உன்னைக் கண்டதில் மிக மகிழ்ச்சியடைகிறேன். 1-127  என்று இவ்வாறு மைனாக பர்வதம் சொல்வதைக் கேட்ட ஹனுமான், 1-128 பர்வதமே, நீ பேசியதிலேயே ஆதித்யம் (விருந்தோம்பல்) ஆகி விட்டது. நானும் மகிழ்ச்சியடைந்தேன். தவறாக எண்ண வேண்டாம். வீணாக கவலைப் படாதே. என் காரியம் அவசரமானது. 1-129  இதோ, பொழுதும் சாய்ந்து கொண்டிருக்கிறது.  நான் பிரதிக்ஞை செய்து இருக்கிறேன்.  வழியில் எங்கும் தங்கக் கூடாது  என்பது என் விரதம், 1-130 என்று சொல்லி கைகளால் மலையைத் தள்ளி விட்டு, சிரித்துக் கொண்டே ஆகாயத்தில் ஏறி தன் பயணத்தைத் தொடர்ந்தான். 1-131  பர்வதமும், சாகரமும், மதிப்பும் மரியாதையுமாக ஏறிட்டு நோக்கி, ஆசிகளும் வழங்க, 1-132  இன்னும் வேகமாக மேல் நோக்கிச் சென்று, தன் தந்தையின் மார்கத்தில், விமலமான வானத்தில் பயணித்தான். 133-134  மேலே இருந்தபடி  மலையைக் கண்டு, தன் போக்கில் வேகமாக செல்லலானான்.  இது ஹனுமானின் இரண்டாவது அரிய செயல். -135

वायुसूनुर्निरालम्बे जगाम विमलेऽम्बरे।

तद् द्वितीयं हनुमतो दृष्ट्वा कर्म सुदुष्करम्।।                       5.1.136
प्रशशंसुः सुराः सर्वे सिद्धाश्च परमर्षयः।

देवताश्चाभवन् हृष्टास्तत्रस्थास्तस्य कर्मणा।।                         5.1.137
काञ्चनस्य सुनाभस्य सहस्राक्षश्च वासवः।

उवाच वचनं श्रीमान् परितोषात् सगद्गदम्।।                         5.1.138
सुनाभं पर्वतश्रेष्ठं स्वयमेव शचीपतिः।

हिरण्यनाभ शैलेन्द्र परितुष्टोऽस्मि ते भृशम्।।                        5.1.139
अभयं ते प्रयच्छामि तिष्ठ सौम्य यथासुखम्।

साह्यं कृतं त्वया सौम्य विक्रान्तस्य हनूमतः।।                      5.1.140
क्रमतो योजनशतं निर्भयस्य भये सति।

रामस्यैष हितायैव याति दाशरथेर्हरिः।।                              5.1.141
सत्क्रियां कुर्वता तस्य तोषितोऽस्मि भृशं त्वया।

ततः प्रहर्षमगमद्विपुलं पर्वतोत्तमः।।                               5.1.142
देवतानां पतिं दृष्ट्वा परितुष्टं शतक्रतुम्।

स वै दत्तवरः शैलो बभूवावस्थितस्तदा।।                            5.1.143
हनुमांश्च मुहूर्तेन व्यतिचक्राम सागरम्।

ततो देवाः सगन्धर्वाः सिद्धाश्च परमर्षयः।।                         5.1.144
अब्रुवन् सूर्यसंकाशां सुरसां नागमातरम्।

अयं वातात्मजः श्रीमान् प्लवते सागरोपरि।।                         5.1.145
हनूमान्नाम तस्य त्वं मुहूर्तं विघ्नमाचर।
राक्षसं रूपमास्थाय सुघोरं पर्वतोपमम्।।                             5.1.146
दंष्ट्राकरालं पिङ्गाक्षं वक्त्रं कृत्वा नभःस्पृशम्।

बलमिच्छामहे ज्ञातुं भूयश्चास्य पराक्रमम्।।                         5.1.147
त्वां विजेष्यत्युपायेन विषादं वा गमिष्यति।

एवमुक्ता तु सा देवी दैवतैरभिसत्कृता।।                            5.1.148
समुद्रमध्ये सुरसा बिभ्रती राक्षसं वपुः।
विकृतं च विरूपं च सर्वस्य च भयावहम्।।                          5.1.149

प्लवमानं हनूमन्तमावृत्येदमुवाच ह।

मम भक्षः प्रदिष्टस्त्वमीश्वरैर्वानरर्षभ।।                             5.1.150
வாயுசூனுர்னிராலம்பே ஜகா3ம விமலே(அ)ம்ப3ரே | தத் த்3விதீயம் ஹனுமதோ த்3ருஷ்ட்வா கர்ம ஸுது3ஷ்கரம் ||

ப்ரம்ஸஸு: ஸுரா: சர்வே சித்தா4ஸ்ச பரமர்ஷய: | தே3வதாஸ்சாபவன் ஹ்ருஷ்டா: தத்ரஸ்தாஸ் தஸ்ய கர்மணா || (1-137)

காஞ்சனஸ்ய ஸுனாப4ஸ்ய ஸஹஸ்ராக்ஷஸ்ச வாஸவ: | உவாச வசனம் ஸ்ரீமான் பரிதோஷாத் ஸக3த்333ம் ||

ஸுனாப4ம் பர்வத ஸ்ரேஷ்டம் ஸ்வயமேவ ஸசீபதி:| ஹிரண்யனாப4 ஸைலேந்த்3ர பரிதுஷ்டோ(அ)ஸ்மி தே ப்4ருஸம் ||

அப4யம் தே ப்ரயச்சாமி திஷ்ட சௌம்ய யதா2 சுகம் | ஸாஹ்யம் க்ருதம் த்வயா சௌம்ய விக்ராந்தஸ்ய ஹனூமத: ||

க்ரமதோ யோஜன ஸதம் நிர்ப4யஸ்ய ப4யே ஸதி | ராமஸ்யைஷ ஹிதாயைவ யாதி தா3ஸரதேர்ஹரி:  ||

ஸத்க்ரியாம் குர்வதா தஸ்ய தோஷிதோ(அ)ஸ்மி ப்4ருஸம் த்வயா | தத: ப்ரஹர்ஷமக3மத்விபுலம் பர்வதோத்தம: ||

தே3வதானாம் பதிம் த்3ருஷ்ட்வா பரிதுஷ்டம் தக்ரதும் | ஸ வை த3த்த வர: ஸைலோ ப3பூ4வாவஸ்தி2தஸ்ததா3 ||

ஹனூமான்ஸ்ச முஹூர்தேன வ்யதிசக்ராம ஸாக3ரம் | ததோ தே3வா: ஸக3ந்த4ர்வா: சித்3தா4ஸ்ச பரமர்ஷய: ||

அப்3ருவன் ஸூர்யஸங்காஸாம் சுரஸாம் நாக3மாதரம் | அயம் வாதாத்மஜ: ஸ்ரீமான் ப்லவதே ஸாக3ரோபரி ||

ஹனூமான் நாம தஸ்ய த்வம் முஹூர்தம் விக்4னமாசர | ராக்ஷஸம் ரூபமாஸ்தா2ய  ஸுகோ4ரம் பர்வதோபமம்

தம்ஷ்ட்ரா கராலம் பிங்கா3க்ஷம் வக்த்ரம் க்ருத்வா நப4ஸ்ப்ருஸம் | ப3லமிச்சாமஹே ஞாதும் பூயஸ்சாஸ்ய பராக்ரமம் ||

த்வாம் விஜேஷ்யத்யுபாயேன விஷாதம் வா க3மிஷ்யதி | ஏவமுக்த்வா து ஸா தேவி தை3வதைரபி ஸத்க்ருதா ||

ஸமுத்3ரமத்4யே ஸுரஸா பி3ப்4ரதீ ராக்ஷஸம் வபு: | விக்ருதம் ச விரூபம் ச ஸர்வஸ்ய ச ப4யாவஹம் ||

ப்லவமானம் ஹனூமந்தம் ஆவ்ருத்ய இத3முவாச ஹ | மம ப4க்ஷ: ப்ரதிஷ்டசஸ்த்வம் ஈஸ்வரைர் வானர்ஷப4 | 1-150

இதை சுரர்களும், சித்தர்களும் வியந்து பாராட்டினர். தேவர்களும் மகிழ்ச்சியடைந்தனர். 1-136 மற்றும் அங்கு இருந்த அனைவரும் இந்த செயலால் வியப்பு எய்தினர். 1-137  சஹஸ்ராக்ஷன், தானே குரல் தழ தழக்க, ஹிரண்யனாபன் எனும் மைனாக மலையை பாராட்டினான். 1-138   உன் உபசாரம் செய்யும் இந்த உயரிய நோக்கமே பாராட்டுக்குரியதே. 1-139  நான் உனக்கு அபயம் அளிக்கிறேன். இப்படியே இரு சௌம்யனே,. ஹனுமானுக்கு நீ உதவி செய்தாய். அரிய செயலைச் செய்யத் துணிந்த வீரனுக்கு இதுவும் ஒரு உதவியே. 1-140  பயப்பட வேண்டிய இந்த நூறு யோஜனை தூரத்தை அனாயாசமாக கடக்கத்  துணிந்திருக்கிறான்.  ராமனுடைய  நன்மைக்காக, தசரத மகனின் காரியமாக இந்த வானரம் இந்த பெரும் செயலைச் செய்யக் கிளம்பியிருக்கும்பொழுது, நாமும் நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டியது அவசியமே. உன் செயலால் நான் உன்னிடமும் திருப்தியடைந்தேன். 1-141 இப்படி சஹஸ்ராக்ஷனும் பாராட்ட,  மைனாக பர்வதம் பெரும் சந்தோஷம் அடைந்தது. உபரியாக பெற்ற வரதானம், இதனால் மலை திரும்ப கடலினுள் மூழ்காமல், அப்படியே நின்றது.  1-142  ஒரு முஹுர்த்த நேரம், எந்த வித தடங்கலும் இன்றி, ஹனுமான் தன் பயணத்தை தொடர்ந்தான். 1-143 அச்சமயம் தேவர்களும், கந்தர்வர்களும், சித்தர்களும், பரம ரிஷிகளும், சுரஸா என்ற நாக மாதாவை அணுகி, ஒரு திட்டத்தை செயல் படுத்த அவள் உதவியைக் கோரினர். 1-144  இந்த வாதாத்மஜன்,  ஸ்ரீமான், சாகரத்துக்கு மேல் பறக்கிறான்.  ஹனுமான் என்ற பெயருடைய வானரம்.  நீ முஹுர்த்த நேரம்  அவனுக்கு தடை உண்டு பண்ணுவாய்.  பர்வதம் போன்ற உருவமும், கோரமான ராக்ஷஸ ரூபத்தை எடுத்துக் கொண்டு, கூர்மையான பற்களும், மஞ்சள் நிறக் கண்களும், அகலமாக திறந்த வாயுடன் அவன் முன் நின்று தடுக்கப் பார். 1-145  அவன் பலத்தை எடை போட விரும்புகிறோம். பராக்ரமம் என்ன என்பதையும் தெரிந்து கொள்வோம் என்றனர். 1-146  உன்னை உபாயத்தால் வெற்றி கொள்வான் அல்லது வாட்டமடைவான் என்றனர்.  அவளும் சம்மதித்து, தேவர்களின் விருப்பத்துக்கு இணங்க 1-147 சமுத்திர மத்தியில் பயங்கரமான ராக்ஷஸ உருவத்தை எடுத்துக் கொண்டு, கண்டவர் நடுங்கும்படியான தோற்றத்துடன், தாவித் தாண்டிச் செல்லும் ஹனுமானை நாலாபுறமும், சுற்றி வளைத்தபடி கொக்கரித்தாள். 1-148 வானரர்ஷப4,  எனக்கு ஆகாரமாக வந்து சேர்ந்தாய். 1-149 விதி தான் உன்னை எனக்கு கொண்டு வந்து தந்திருக்கிறது. நான் உன்னை சாப்பிடப் போகிறேன். என் வாயில் நுழை 1-150

 

अहं त्वां भक्षयिष्यामि प्रविशेदं ममाननम्।

एवमुक्तः सुरसया प्राञ्जलिर्वानरर्षभः।।                             5.1.151

प्रहष्टवदनः श्रीमान् सुरसां वाक्यमब्रवीत्।
रामो दाशरथिः श्रीमान् प्रविष्टो दण्डकावनम्।।                        5.1.152
लक्ष्मणेन सह भ्रात्रा वैदेह्या चापि भार्यया।

अन्यकार्यविषक्तस्य बद्धवैरस्य राक्षसैः।।                           5.1.153
तस्य सीता हृता भार्या रावणेन यशस्विनी।

तस्याः सकाशं दूतोऽहं गमिष्ये रामशासनात्।।                        5.1.154
कर्तुमर्हसि रामस्य साह्यं विषयवासिनि।

अथवा मैथिलीं दृष्ट्वा रामं चाक्लिष्टकारिणम्।।                      5.1.155
आगमिष्यामि ते वक्त्रं सत्यं प्रतिशृणोमि ते।

एवमुक्ता हनुमता सुरसा कामरूपिणी।।                             5.1.156
अब्रवीन्नातिवर्तेन्मां कश्चिदेष वरो मम।

तं प्रयान्तं समुद्वीक्ष्य सुरसा वाक्यमब्रवीत्।।                              5.1.157
बलं जिज्ञासमाना वै नागमाता हनूमतः।

प्रविश्य वदनं मेऽद्य गन्तव्यं वानरोत्तम।।                           5.1.158
वर एष पुरा दत्तो मम धात्रेति सत्वरा।
व्यादाय वक्त्रं विपुलं स्थिता सा मारुतेः पुरः।।                       5.1.159

एवमुक्तः सुरसया क्रुद्धो वानरपुंगवः।
अब्रवीत् कुरु वै वक्त्रं येन मां विषहिष्यसे।।                         5.1.160

इत्युक्त्वा सुरसां क्रुद्धो दशयोजनमायताम्।
दशयोजनविस्तारो बभूव हनूमांस्तदा।।                              5.1.161

तं दृष्ट्वा मेघसंकाशं दशयोजनमायतम्।
चकार सुरसाप्यास्यं विंशद्यॊजनमायतम्।।                          5.1.162

तद् दृष्ट्वा व्यादितं त्वास्यं वायुपुत्रः स बुद्धिमान्।
दीर्घजिह्वं सुरसया सुघोरं नरकोपमम्।।                             5.1.163
स संक्षिप्यात्मनः कायं जीमूत इव मारुतिः।

तस्मिन् मुहूर्ते हनुमान् बभूवाङ्गुष्ठमात्रकः।।                         5.1.164

सोऽभिपत्याशु तद्वक्त्रं निष्पत्य च महाजवः।
अन्तरिक्षे स्थितः श्रीमानिदं वचनमब्रवीत्।।                          5.1.165

प्रविष्टोऽस्मि हि ते वक्त्रं दाक्षायणि नमोऽस्तु ते।
गमिष्ये यत्र वैदेही सत्यश्चासीद्वरस्तव।।                           5.1.166

அஹம் த்வாம் ப4க்ஷயிஷ்யாமி ப்ரவிஸேதம் மமானனம் ||

ஏவமுக்த: ஸுரஸயா ப்ராஞ்ஜலிர்வானர்ஷப4: | ப்ரஹ்ருஷ்டவத3ன: ஸ்ரீமான் ஸுரஸாம் வாக்யமப்3ரவீத் |

ராமோ தா3ஸரதி: ஸ்ரீமான் ப்ரவிஷ்டோ த3ண்டகாவனம் | லக்ஷ்மணேன ஸஹ ப்4ராத்ரா வைதே3ஹ்யா சாபி பா4ர்யயா |

அன்ய கார்ய விஷக்தஸ்ய ப3த்34 வைரஸ்ய ராக்ஷஸை: | தஸ்ய சீதா ஹ்ருதா பா4ர்யா ராவணேன யஸ்வினி |

தஸ்யா: ஸகாஸம் தூதோ(அ)ஹம் க3மிஷ்யே ராம ஸாஸனாத் || 154

கர்துமர்ஹஸி ராமஸ்ய ஸாஹ்யம் விஷய வாஸினீ | அத2வா மைதிலீம் த்3ருஷ்ட்வா ராமம் சாக்லிஷ்ட காரிணம் ||

ஆக3மிஷ்யாமி தே வக்த்ரம் சத்யம் ப்ரதி ஸ்ருணோமி தே |ஏவமுக்தா ஹனுமதா ஸுரஸா காம ரூபிணீ ||

அப்3ரபவீன்னாதிவர்தேன்மாம் கஸ்சிதேஷ வரோ மம |தம் ப்ரயாந்தம் ஸமுத்வீக்ஷ்ய ஸுரஸா வாக்யமப்ரவீத் ||

3லம் ஜிஞாஸமானா வை நாக3மாதா ஹனூமத: | ப்ரவிஸ்ய வத3னம் மே(அ)த்3ய க3ந்தவ்யம் வானரோத்தம ||

வர ஏஷ புரா ததோ மம தா4த்ரேதி ஸத்வரா | வ்யாதா4ய வக்த்ரம் விபுலம் ஸ்தி2தா ஸா மாருதே: புர: ||

ஏவமுக்த: ஸுரஸயா க்ருத்3தோ4 வானர புங்க3வ: | ஸாப்ரவீத் குரு வை வக்த்ரம் யேன மாம் விஷஹிஷ்யஸே || 160

இத்யுக்த்வா ஸுரஸாம் க்ருத்3தோ43 யோஜனமாயதாம் |த3 யோஜன விஸ்தாரோ ப3பூ4வ ஹனுமான்ஸ்ததா3 ||

தம் த்3ருஷ்ட்வா மேக4 சங்காஸம் த3 யோஜனமாயதாம் |    சகார ஸுரஸாப்யாஸ்யம் விம்த்யோஜனமாயதம் ||

தத் த்3ருஷ்ட்வா வ்யாதி4தம் த்வாஸ்யம் வாயு புத்ர: ஸ புத்திமான் | தீ3ர்க4 ஜிஹ்வம் ஸுரஸாயா:  ஸுகோ4ரம் நரகோபமம் ||

ஸ சம்க்ஷிப்யாத்மன: காயம் ஜீமூத இவ மாருதி: | தஸ்மின் முஹூர்தே ஹனூமான் ப3பூ4வாங்குஷ்ட மாத்ரக:   ||

ஸோ(அ)பி4பத்யாஸு தத்வக்த்ரம் நிஷ்பத்ய ச மஹாஜவ: | அந்தரிக்ஷே ஸ்தி2தஸ் ஸ்ரீமானித3ம் வசனமப்3ரவீத் ||

ப்ரவிஷ்டோ(அ)ஸ்மி ஹி தே வக்த்ரம் தா3க்ஷாயணி நமோ(அ)ஸ்து தே | க3மிஷ்யே யத்ர வைதே3ஹீ சத்யஸ்சாஸீத்வரஸ்தவ || 1-166

எனவும், பணிவுடன் ஹனுமான் சொன்னான். 1-151  ராமன் என்ற ராஜகுமாரன், தசரத ராஜாவின் மைந்தன், தண்டகாவனம் வந்தான். சகோதரன் லக்ஷ்மணனுடனும், மனைவி சீதையுடனும் வசித்து வந்தான். 1-152 வேறு ஏதோ காரணமாக ராக்ஷஸர்களுடன் விரோதம். அதை வைத்து அவன் மனைவி சீதையை ராவணன் அபகரித்தான். 1-153 அவளிடம் நான் ராமனின் ஆணைப்படி தூது செல்கிறேன். 1-154  விஷயவாஸினி, நீயும் ராமகாரியத்திற்கு சகாயம் செய். அல்லது நான் போய் சீதையைக் கண்டு ராமனிடம் சொல்லி, 1-154  என் கடமையை முடித்தவுடன் நானே உன் வாயில் வந்து விழுகிறேன். இது சத்யம். நான் பிரதிக்ஞை செய்கிறேன். வார்த்தை மீற மாட்டேன். இதைக் கேட்டு நாகமாதா, 1-155 வானரத்தின் பலத்தை எடை போடும் உத்தேசத்துடன் என் வாயில் விழுந்து புறப்பட்டுச் செல்வாய். வானரமே, இன்றே, இப்பொழுதே. எனக்கு இப்படி ஒரு வரம் ப்ரும்மா கொடுத்திருக்கிறார் 1-156. என்று சொல்லியபடி வேகமாக வளர்ந்து தன் வாயை பூதாகாரமாக விரித்து அவன் முன் நின்றாள். 1-157  ஹனுமானும் ஆத்திரத்துடன், சரி, என்னை தாங்கும் அளவு உன் வாயை அகலமாக விரித்துக் கொள், என்றான். 1-158  சுரஸா பத்து யோஜனை தூரம் விஸ்தாரமாக தன் வாயை திறக்கவும், ஹனுமான் தானும் அதே அளவு பெரிதாக வளர்ந்தான். 1-159 மேகம் போல எதிரில் நின்றவனைப் பார்த்து சுரஸா மேலும் வளர்ந்து இருபது யோஜனை தூரம் பெரிதாக வாயைத் திறந்தாள். 1-160  வாயு புத்திரன் அவள் மேலும் மேலும் வளருவதை பார்த்துக் கொண்டே இருந்தவன், 1-161 சட்டென்று தன் உருவத்தை குறுக்கி, மகா மேகம் போல இருந்தவன், கட்டை விரல் மாத்திரமாக ஆகி, அவள் வாயில் புகுந்து, கிழித்துக்கொண்டு வெளியே வந்து அந்தரிக்ஷத்தில் நின்றவன் 1-162 தா3க்ஷாயணி, நமஸ்காரம். உன் வாயில் புகுந்து வெளி வந்து விட்டேன். நான் வைதேஹியைத் தேடி போகிறேன். 1-163-165 உன் வரமும் சத்யமாயிற்று.  ராகு முகத்திலிருந்து விடுபட்ட சந்திரன் போல வெளியே வந்து நின்ற ஹனுமானை, 1-166

तं दृष्ट्वा वदनान्मुक्तं चन्द्रं राहुमुखादिव।
अब्रवीत् सुरसा देवी स्वेन रूपेण वानरम्।।                          5.1.167

अर्थसिद्ध्यै हरिश्रेष्ठ गच्छ सौम्य यथासुखम्।
समानयस्व वैदेहीं राघवेण महात्मना।।                              5.1.168

तत् तृतीयं हनुमतो दृष्ट्वा कर्म सुदुष्करम्।
साधु साध्विति भूतानि प्रशशंसुस्तदा हरिम्।।                        5.1.169

जगामाकाशमाविश्य वेगेन गरुडोपमः।

सेविते वारिधाराभिः पतगैश्च निषेविते।।                            5.1.170
चरिते कैशिकाचार्यैरैरावतनिषेविते।
सिंहकुञ्जरशार्दूलपतगोरगवाहनैः।।                                 5.1.171
विमानैः संपतद्भिश्च विमलैः समलंकृते।
वज्राशनिसमाघातैः पावकैरूपशोभिते।।                              5.1.172
कृतपुण्यैर्महाभागैः स्वर्गजिद्भिरलंकृते।
वहता हव्यमत्यर्थं सेविते चित्रभानुना।।                             5.1.173

ग्रहनक्षत्रचन्द्रार्कतारागणविभूषिते।
महर्षिगणगन्धर्वनागयक्षसमाकुले।।                                 5.1.174
विविक्ते विमले विश्वे विश्वावसुनिषेविते।
देवराजगजाक्रान्ते चन्द्रसूर्यपथे शिवे।।                              5.1.175
विताने जीवलोकस्य वितते ब्रह्मनिर्मिते।
बहुशः सेविते वीरैर्विद्याधरगणैर्व रैः।।                                    5.1.176
जगाम वायुमार्गे च गरुत्मानिव मारुतिः।

हनुमान् मेजालानि प्राकर्षन् मारुतॊ यथा।।                         5.1.177

कालागुरुसवर्णानि रक्तपीतसितानि च।

कपिना कृष्यमाणानि महाभ्राणि चकाशिरे।।                          5.1.178

प्रविशन्नभ्रजालानि निष्पतंश्च पुनः पुनः।

प्रावृषीन्दुरिवाभाति निष्पतन् प्रविशंस्तदा।।                          5.1.179

प्रदृश्यमानः सर्वत्र हनुमान् मारुतात्मजः।
भेजेऽम्बरं निरालम्बं लम्बपक्ष इवाद्रिराट्।।                          5.1.180

प्लवमानं तु तं दृष्ट्वा सिंहिका नाम राक्षसी।
मनसा चिन्तयामास प्रवृद्धा कामरूपिणी।।                          5.1.181

தம் த்3ருஷ்ட்வா வத3னான்முக்தம் சந்த்3ரம் ராஹுமுகாதிவ |அப்3ரவீத் ஸுரஸா தே3வீ ஸ்வேன ரூபேண வானரம் ||

அர்த3 சித்3த்4யை ஹரிஸ்ரேஷ்ட க3ச்ச ஸௌம்ய யதாசுகம் |ஸமானயஸ்வ வைதே3ஹீம் ராக4வேண மஹாத்மனா || (1-168)

தத் த்3ருதீயம் ஹனுமதோ த்ருஷ்ட்வா கர்ம சுது3ஷ்கரம் |  சாது4 சாது4விதி பூ4தானி ப்ரஸஸம்ஸுஸ்ததாததாததா3 ஹரிம் ||

ஜகா3மாகாமாவிஸ்ய வேகே3ன கருடோபம: | ஸேவிதே வாரிதா4ராபி4: பதாகைஸ்ச நிஷேவிதே | 170

சரிதே கைஸிகாசார்யை: ஐராவத நிஷேவிதே | சிம்ஹ குஞ்ஜர ஸார்தூ3ல பதகோ3ரக3 வாஹனை: ||

விமானை: சம்பதத்3பி4ஸ்ச விமலை: சமலங்க்ருதே | வஜ்ராஸனி சமாகா3தை: பாவகையருபஸோபி4தே ||

க்ருத புண்யைர்மஹாபா4கை3: ஸ்வர்க3ஜித்பிரலங்க்ருதே | வஹதா ஹவ்யமத்யர்த2ம் சேவிதே சித்ரபா4னுனா ||

க்ரஹ நக்ஷத்ர சந்த்3ரார்க தாராக3ண விபூ4ஷிதே | மஹர்ஷி க3ண க3ந்த4ர்வ நாக3 யக்ஷ ஸமாகுலே ||

விவிக்தே விமலே விஸ்வே விவாசு நிஷேவிதே | தே3வ ராஜ க3ஜாக்ராந்தே சந்த்3ர சூர்ய பதே2 ஸிவே ||

விதானே ஜீவலோகஸ்ய விததே ப்3ரஹ்ம நிர்மிதே | ப3ஹு: சேவிதே வீரைர் வித்3யாத4ரக3ணைர் வரை: || 175

ஜகா3ம வாயு மார்கே3 ச க3ருத்மானிவ மாருதி: | ஹனுமான் மேக4ஜாலானி ப்ராகர்ஷன் மாருதோ யதா2 ||

காலாக3ரு ஸவர்ணானி ரக்த பீத ஸிதானி ச | கபினா க்ருஷ்யமானானி மஹாப்4ராணி சகாஸிரே ||

ப்ரவின்னப்4ர ஜாலானி நிஷ்பதம்ஸ்ச புன: புன: | ப்ராவ்ருஷீரிந்து3ரிவாபா4தி நிஷ்பதன் ப்ரவின் ததா3  ||

ப்ரத்ருஸ்யமான: சர்வத்ர ஹனுமான் மாருதாத்மஜ: |பே4ஜே(அ)ம்ப3ரம் நிராலம்ப3ம் லம்ப3 பக்ஷ இவாத்3ரிராட் || 180

ப்லவமானம் து தம் த்3ருஷ்ட்வா சிம்ஹிகா நாம ராக்ஷஸி| மனஸா சிந்தயாமாஸ ப்ரவ்ருத்3தா4 காம ரூபிணீ || 1-181

தன் சுய உருவில் சுரஸா வாழ்த்தினாள்.  1-167  ஹரிஸ்ரேஷ்ட, சௌம்யனே, சௌகர்யமாக போய் வா. வைதேஹியை அழைத்துக் கொண்டு வந்து ராகவனோடு சேர்த்து வை.  1-168 இந்த மூன்றாவது அரிய செயலைப் பார்த்து உலகமே வியந்தது. சாது, சாது என்று ஜீவ ஜந்துக்கள் அனைத்தும் புகழ்ந்தன. 1-169 கருடன் போன்ற வேகத்துடன் ஹனுமான் வான வெளியில் திரும்பவும் பறக்கலானான். 1-170 பக்ஷிகளும், நீர்த் திவலைகளும் ஒன்றாக பறந்தன. சந்திர சூரியர்கள் பாதையில் ஹனுமான் கண்ட காட்சிகள் புதுமையானவை.  நடந்து செல்லும் ஐராவதம் சிம்மம், யானை, சார்தூலம், பறவைகள், பாம்புகள் இவற்றின் உருவ அமைப்பில் வாகனங்களில் செல்பவர், விமானங்களில் செல்பவர், வஜ்ரம் அடித்தது போல வெப்பம் தாக்கும் முக்யமான பாதை, ஸ்வர்கம் செல்லும் அளவு புண்யம் செய்த மகாத்மாக்கள் வசிக்கும் அல்லது நடமாடும் பாதை, சித்ரபானு வணங்கும், 1-173 (ஹவ்யவாஹண-ஹவ்யம் எனும் தேவர்களின் உணவை எடுத்துச் செல்லும் அக்னியின் பாதை,)  க்3ரஹ, நக்ஷத்திர, சந்திர, சூரிய, தாரகைகள் நிறைந்ததும், மகரிஷிகள், கந்தர்வ, நாக, யக்ஷர்கள் சூழ்ந்திருப்பதும்,1-174 விஸ்வாவசு வசிக்கும் விசாலமான, விமலமான இடம், தேவராஜனின் யானை கம்பீரமாக நடக்கும் சுபமான சந்திர, சூரிய பாதை (மார்கம்) இதைத் தாண்டி ப்ரும்மாவால் நிர்மாணிக்கப்பட்ட மங்களமான வாயு மார்கத்தில் ஹனுமான் நுழைந்தான்.1-174 வித்யாதர கணங்கள் சிறப்பாக பூஜைகள் செய்து கொண்டிருந்தனர். 1-175 கருடன் போல பறந்தான். தன் தந்தையைப் போல மேகங்களை கிழித்து சீறிக் கொண்டு சென்றான். 1-176 வானத்தில் வண்ணங்கள் மாறி மாறி காட்சியளித்தன. சில சமயம் அக3ருவின் புகை போன்ற நிறத்திலும், சிவப்பு, மஞ்சள், வெண்மை என்றும் மாறி, மாறி கபியின் வேகத்தில் மேகம் நகர, 1-177 வானத்தின் நிறம் தெரிந்தது.  மேலே ஏறியும், இறங்கியும் சென்ற ஹனுமான், மழைக்கால சந்திரன் போல சில சமயம் மறைந்தும், சில சமயம் வெளிப்பட்டும், 1-178 கீழேயிருந்து பார்த்துக் கொண்டிருந்த கண்களுக்குத் தெரிந்தான். எங்கும் மாருதாத்மஜனே நிறைந்து இருந்தான். பார்க்கும் இடம் எல்லாம், இதோ, இதோ எனும்படி நீளமான இறக்கையுடன் ஒரு பர்வத ராஜன் ஏறி இறங்கி வானத்தில் விளையாடுவது போல 1-179 தோற்றமளித்தான். இப்படி நிச்சைந்தையாக பறந்து கொண்டிருந்த ஹனுமானைப் பார்த்து சிம்ஹிகா என்ற ராக்ஷஸி, தன் மனதில் நினைத்தாள். 1-180-181

अद्य दीर्घस्य कालस्य भविष्याम्यहमाशिता।
इदं हि मे महत् सत्त्वं चिरस्य वशमागतम्।।                   5.1.182

इति संचिन्त्य मनसा छायामस्य समाक्षिपत्।
छायायां गृह्यमाणायां चिन्तयामास वानरः।।                         5.1.183

समाक्षिप्तोऽस्मि सहसा पङ्गूकृतपराक्रमः।
प्रतिलोमेन वातेन महानौरिव सागरे।।                              5.1.184

तिर्यगूर्ध्वमधश्चैव वीक्षमाणस्ततः कपिः।
ददर्श स महत् सत्त्वमुत्थितं लवणाम्भसः।।                          5.1.185

तद् दृष्ट्वा चिन्तयामास मारुतिर्विकृताननम्।
कपिराजेन कथितं सत्त्वमद्भुतदर्शनम्।।                             5.1.186
छायाग्राहि महावीर्यं तदिदं नात्र संशयः।

स तां बुद्ध्वार्थतत्त्वेन सिंहिकां मतिमान् कपिः।।                     5.1.187
व्यवर्धत महाकायः प्रावृषीव वलाहकः।

तस्य सा कायमुद्वीक्ष्य वर्धमानं महाकपेः।।                         5.1.188
वक्त्रं प्रसारयामास पातालान्तरसंनिभम्।

घनराजीव गर्जन्ती वानरं समभिद्रवत्।।                             5.1.189
स ददर्श ततस्तस्या विवृतं सुमहन्मुखम्।
कायमात्रं च मेधावी मर्माणि च महाकपिः।।                          5.1.190

स तस्या विवृते वक्त्रे वज्रसंहननः कपिः।
संक्षिप्य मुहुरात्मानं निपपात महाबलः।।                            5.1.191

आस्ये तस्या निमज्जन्तं ददृशुः सिद्धचारणाः।
ग्रस्यमानं यथा चन्द्रं पूर्णं पर्वणि राहुणा।।                           5.1.192

ततस्तस्या नखैस्तीक्ष्णैर्मर्माण्युत्कृत्य वानरः।
उत्पपाताथ वेगेन मनः संपातविक्रमः।।                             5.1.193

तां तु दिष्ट्या च धृत्या च दाक्षिण्येन निपात्य हि।
स कपिप्रवीरॊ वेगाद्ववृधे पुनरात्मवान्।।                            5.1.194

हृतहृत्सा हनुमता पपात विधुराम्भसि।

स्वयंभुवैव हनुमान् सृष्टस्तस्या विनाशने।।                          5.1.195

तां हतां वानरेणाशु पतितां वीक्ष्य सिंहिकाम्।
भूतान्याकाशचारीणि तमूचुः प्लवगोत्तमम्।।                          5.1.196

அத்3ய தீ3ர்க3ஸ்ய காலஸ்ய ப3விஷ்யாம்யஹமாஸிதா | இத3ம் ஹி மே மஹத் சத்வம் சிரஸ்ய வமாக3தம் ||

இதி சன்சித்ய மனஸா சா2யாமஸ்ய ஸமாக்ஷிபத் | சா2யாயாம் க்ருஹ்யமானாயாம் சிந்தயாமாஸ வானர: ||

ஸமாக்ஷிப்தோ(அ)ஸ்மி ஸஹஸா பங்கூ3க்ருத பராக்ரம:  | ப்ரதிலோமேன வாதேன மஹானௌரிவ ஸாகரே || (1-184)

திர்யகூ3ர்த்வமத4ஸ்சைவ வீக்ஷமாணஸ்தத: கபி: | த33ர்ஸ ஸ மஹத் ஸத்வமுத்2திதம் லவணாம்ப3ஸ: ||

தத்3ருஷ்ட்வா சிந்தயாமாஸ மாருதிர் விக்ருதானனம் | கபிராஜேன கதி2தம் சத்வமத்பு4த த3ர்ஸனம்  ||

சா2யாக்ராஹி மஹாவீர்யம் ததி3தம் நாத்ர ஸம்ய: | ஸ தாம் பு3த்3த் 4வார்த தத்வேன சிம்ஹிகாம் மதிமான் கபி: ||

வ்யவர்த4த மஹாகாய: ப்ராவ்ருஷீவ ப3லாஹக: | தஸ்ய ஸா காயமுத்வீக்ஷ்ய வர்த4மானம் மஹாகபே: ||

வக்த்ரம் ப்ரஸாரயாமாஸ பாதாலாந்தர ஸன்னிப4ம் | கனராஜீவ கர்ஜந்தீ வானரம் ஸமபி4த்3ரவத் |

ஸ த33ர் ததஸ்தஸ்யா: விவ்ருதம் ஸுமஹன்முகம் | காயமாத்ரம் ச மேதா4வீ மர்மானி ச மஹா கபி: || 190

ஸ தஸ்யா விவ்ருதே வக்த்ரே வஜ்ர ஸம்ஹனன: கபி: | ஸம்க்ஷிப்ய முஹுராத்மானம் நிபபாத மஹாப3ல: ||

ஆஸ்யே தஸ்ய நிமஜ்ஜந்தம் த3த்3ருஸு: சித்34சாரணா: || க்3ரஸ்யமானம் யதா2 சந்த்3ரம் பூர்ணம் பர்வணி ராஹுணா ||

ததஸ்தஸ்யா: நகை2ர்தீக்ஷ்ணை: மர்மான்யுக்ருத்ய வானர: | உத்பபாதாத வேகே3ன மன: ஸம்பாத விக்ரம: ||

தாம் து தி3ஷ்ட்யா ச த்4ருத்யா ச தா3க்ஷிண்யேன நிபாத்ய ஹி | ஸ கபிர்வீரோ வேகா3த் வவ்ருதே4 புனராத்மவான் || 194

ஹ்ருதஹ்ருத் ஸா ஹனுமதா  பபாத விது4ராம்பஸி | ஸ்வயம்பு4வைவ ஹனுமான் ஸ்ருஷ்டஸ்தஸ்யா வினாஸனே || 195

தாம் ஹதாம் வானரேந்த்3ரேணாஸு  பதிதாம் வீக்ஷ்ய சிம்ஹிகாம் | பூ4தான்யாகா சாரீணி தமூசு: ப்லவகோ3த்தமம் || 1-196

இஷ்டம் போல வளரக் கூடியவள், பெரிதாக வளர்ந்து வெகு நாட்களுக்குப் பின் இன்று நான் திருப்தியாக சாப்பிடப் போகிறேன் என்று எண்ணிக் கொண்டாள்.  ஏதோ ஒரு மிகப் பெரிய ஜீவன் வேகமாக வருகிறது. 1-182 என் பசியைத் தீர்க்கத்தான் வருகிறது போலும் என்று நினைத்தாள். இப்படி எண்ணிக் கொண்டே ஹனுமானின் நிழலை இறுக்கிப் பிடித்தாள். தன் நிழல் பிடிக்கப் பட்டு கதியில் தடை உண்டாவதைக் கண்டு வானரம் யோசித்தது. 1-183 என் பராக்ரமத்தில் திடீரென இது என்ன தடை? எதிர்க் காற்றினால் தாக்கப் பட்டு அலை பாயும் கப்பல் போல என் வேகத்தை ஏதோ சக்தி எதிர்த்து தடுக்கிறதே. 1-184 குறுக்காக, மேலே கீழே என்று எல்லா திசைகளிலும் பார்வையை ஓட விட்ட வானர வீரன், ஏதோ ஒரு பெரிய ஜீவன் உப்புக் கடலின் பரப்பில் தெரிவதைக் கண்டான். 1-185 கோரமாக, காணத்தகாத உருவமும், அதன் இருப்பிடமும், வானர ராஜன் சுக்ரீவன் சொன்னது சரிதான். 1-186  நிழலைப் பிடித்து இழுக்கும் ராக்ஷஸ ஜாதியைச் சார்ந்தது தான் இது.  சிம்ஹிகா என்று சுக்ரீவன் சொன்னது இவளைத்தான் என்று நொடியில் புரிந்து கொண்டவன், 1-187 மழைக் கால மேகம் போல தன் உருவத்தை மேலும் பெருக்கிக் கொண்டான். கீழேயிருந்து ராக்ஷஸியும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ப. தன் வாயையும் அகல பிளந்து கொண்டாள். 1-188  பாதாளம் வரை ஆக்ரமித்துக் கொண்டாற் போல நின்றாள். இடி இடிப்பது போல சிரித்தாள். 1-189  வானரத்தை நெருங்கி வந்தாள். அவளது பெரிய உருவத்தையும், பிளந்த வாயையும் வைத்து அவள் உடலின் மற்ற பாகங்களை ஊகித்துக் கொண்ட ஹனுமான்,1-190 திடுமென தன் உடலை குறுக்கிக் கொண்டு அவள் வாயினுள் நுழைந்தவன், தன் நகத்தால்  அவள் மர்மஸ்தானத்தை கிழித்து அவளை வீழ்த்தி விட்டு மனோ வேகத்தில் வெளியே வந்தான். 1- 191 சித்த சாரணர்கள், அவள் வாயில் நுழைந்தவனைக் கண்டு கவலையுடன் காத்திருந்தனர். 192  தீர்மானமாக, அதே சமயத்தில் தாக்ஷிண்யத்தோடு உதறி தள்ளி விட்டு, வான வெளியில் திரும்பவும் தன் பெரிய சரீரத்துடன் பயணத்தைத் தொடங்கினான்.  1-193 அவள் தடாலென்று உப்புக் கடலில் விழுந்தாள். 1-194  ஸ்வயம்பூவான ப்ரும்மாவே, அவள் முடிவுக்கு ஹனுமானை பயன் படுத்திக் கொண்டிருந்தார் போலும். 1-195  ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்த ஜீவ ராசிகள், அனுமனின் கையால் கிழிபட்டு கீழே விழுந்த அவளைப் பார்த்து  வானரேந்திரனை வாழ்த்தினர். 196

भीममद्य कृतं कर्म महत् सत्त्वं त्वया हतम्।
साधयार्थमभिप्रेतमरिष्टं प्लवतां वर।।                               5.1.197

यस्य त्वेतानि चत्वारि वानरेन्द्र यथा तव।
स्मृतिर्धृतिर्मतिर्दाक्ष्यं स कर्मसु न सीदति।।                          5.1.198

स तैः संभावितः पूज्यैः प्रतिपन्नप्रयोजनः।
जगामाकाशमाविश्य पन्नगाशनवत् कपिः।।                          5.1.199

प्राप्तभूयिष्ठपारस्तु सर्वतः प्रतिलोकयन्।
योजनानां शतस्यान्ते वनराजिं ददर्श सः।।                           5.1.200

ददर्श च पतन्नेव विविधद्रुमभूषितम्।
द्वीपं शाखामृगश्रेष्ठो मलयोपवनानि च।।                            5.1.201

सागरं सागरानूपं सागरानूपजान् द्रुमान्।
सागरस्य च पत्नीनां मुख्यान्यपि विलोकयत्।।                       5.1.202
स महामेघसंकाशं समीक्ष्यात्मानमात्मवान्।
निरुन्धन्तमिवाकाशं चकार मतिमान् मतिम्।।                        5.1.203

कायवृद्धिं प्रवेगं च मम दृष्ट्वैव राक्षसाः।
मयि कौतूहलं कुर्यरिति मेने महाकपिः।।                            5.1.204

ततः शरीरं संक्षिप्य तन्महीधरसंनिभम्।
पुनः प्रकृतिमापेदे वीतमोह इवात्मवान्।।                            5.1.205

तद्रूपमतिसंक्षिप्य हनूमान् प्रकृतौ स्थितः।
त्रीन् क्रमानिव विक्रम्य बलिवीर्यहरो हरिः।।                          5.1.206

स चारुनानाविधरूपधारी        परं समासाद्य समुद्रतीरम्।
परैरशक्यं प्रतिपन्नरूपः                समीक्षितात्मा समवेक्षितार्थः।।                              5.1.207

ततः स लम्बस्य गिरेः समृद्धे          विचित्रकूटे निपपात कूटे ।
सकेतकोद्दालकनारिकेले                   महाद्रिकूटप्रतिमो महात्मा।।                                5.1.208

ततस्तु संप्राप्य समुद्रतीरं             समीक्ष्य लङ्कां गिरिराजमूर्ध्नि।
कपिस्तु तस्मिन्निपपात पर्वते             विधूय रूपं व्यथयन् मृगद्विजान्।।                          5.1.209

பீ4மமத்3ய க்ருதம் கர்ம மஹத் ஸத்வம் த்வயா ஹதம் |  ஸாத4யார்த்மபி4ப்ரேதமரிஷ்டம்  ப்லவதாம் வர ||

யஸ்ய த்வத்யேதானி சத்வாரி வானரேந்த்3ர யதா2 தவ | ஸ்ம்ருதிர் த்4ருதிர் மதிர்தா3க்ஷ்யம் ஸ கர்மஸு ந ஸீத3தி ||

ஸ தை: ஸம்பா4வித: ப்ரதிபன்ன ப்ரயோஜன: |   ஜகா3மாகாஸமாவிஸ்ய பன்னகா3னவத் கபி: || (1-199)

ப்ராப்த பூ4யிஷ்ட பாரஸ்து சர்வத: ப்ரதிலோகயன் | யோஜனானாம் தஸ்யாந்தே வனராஜிம் த33ர்ஸ ஸ: ||

33ர்ஸ ச பதன்னேவ விவித4 த்3ரும பூ4ஷிதம் |த்3வீபம் ஸாகாம்ருக3 ஸ்ரேஷ்டோ மலயோபவனானி ச ||

ஸாக3ரம் ஸாக3ரானூபம் ஸாக3ரானூபஜான் த்3ருமான் | ஸாக3ரஸ்ய ச பத்னீனாம் முக்3யான்யபி விலோகயத் ||

ஸ மஹா மேக4 ஸங்காஸம் ஸமீ க்ஷ்யாத்மான மாத்வமவான் | நிருந்த3ந்தமிவாகாஸம் சகார மதிமான் மதிம் ||

காயவ்ருத்3தி4ம் ப்ரவேக3ம் ச மம த்3ருஷ்ட்வைவ ராக்ஷஸா:|  மயி கௌதூஹலம் குர்யுரிதி மேனே மஹா கபி: ||

தத: ஸரீரம் ஸம்க்ஷிப்ய தன்மஹீத4ர ஸன்னிப4ம் | புன: ப்ரக்ருதிமாபேதே வீதமோஹ இவாத்மவான் ||

தத்ரூபமதிஸம்க்ஷிப்ய ஹனூமான் ப்ரக்ருதௌ ஸ்தி2த: | த்ரீன் க்ராமானிவ விக்ரம்ய ப3லிவீர்ய ஹரோ ஹரி: ||

ஸ சாரு நானாவித4 ரூப தா4ரி பரம் ஸ்மாசாத்4ய ஸமுத்3ர தீரம் | பரைரஸக்2யம் ப்ரதிபன்ன ரூப: | ஸ்மீக்ஷிதாத்மா ஸமவேக்ஷிதார்த2: ||

தத: ஸ லம்ப3ஸ்ய கி3ரே: ஸம்ருத்3தே4 விசித்ர கூடே நிபபாத கூடே | ஸகேதகோத்தா3லக நாரிகேலே மஹாத்3ரிகூட ப்ரதிமோ மஹாத்மா ||

ததஸ்து ஸம்ப்ராப்ய ஸமுத்3ர தீரம் ஸமீக்ஷ்ய லங்காம் கிரிராஜ மூர்த்னி | கபிஸ்து தஸ்மின்னிபபாத பர்வதே விதூ4ய ரூபம் வ்யத2யன் ம்ருக3த்விஜான் || 1-209

சாது சாது என்றனர். இன்று நீ மிகப் பெரிய காரியம் சாதித்திருக்கிறாய். இந்த பெரிய ஜீவன் உன் கையால் வதம் செய்யப்பட்டு மடிந்தது அரிய செயல். 1-197 மேலும் எதுவும் தடையின்றி  நீ உன் காரியத்தை முடிக்க வாழ்த்துகிறோம். ஸ்ம்ருதி, த்ருதி, மதி, தா3க்ஷ்யம்- நல்ல ஞாபக சக்தி, திடமான கொள்கை, புத்தி, சாமர்த்யம் இந்த நான்கு குணங்களும் உன்னிடம் பொருந்தியிருப்பது தான் இப்படி நீ வெற்றி வீரனாக செயல்படக் காரணம், 1-198 இந்த நான்கு குணங்கள் கொண்டவன் யாரும் தான் எடுத்துக் கொண்ட காரியத்தில் பின் வாங்குவதில்லை.    இவர்கள் இவ்வாறு மதிப்புடனும், மரியாதையுடனும் வாழ்த்தி வழியனுப்பவும், தன்னம்பிக்கையுடன், பன்னகம் எனும் பாம்பைத் தின்னும் கருடன் போல 1-199 வான வெளியில் தாவிக் கிளம்பினான். வெகு தூரம் பிரயாணம் செய்து நூறு யோஜனை தூரத்தில் முடிவில் அடர்ந்து இருந்த வனத்தைக் கண்டான். 1-200 தன் வேகத்தை குறைக்காமலேயே, மரங்களும், பலவிதமான தாவரங்களும்  நிறைந்து இருந்த அந்த அழகிய வளமான பிரதேசத்தை கண்ணுற்றான். 1-201 சாகா ம்ருகம், மரக் கிளைகளில் வாழும் விலங்கு இனம் எனும் வானர ஜாதியைச் சேர்ந்த ஹனுமான் அந்த அழகிய தீவைக் கண்டான். 1-202 மலய மலை, உபவனங்கள் இவற்றைக் கண்டான். சாகரத்தை, சாகரத்தின் கரையை, கரையில் வளரும் விசேஷமான மரங்களை சாகரத்தின் பத்னிகள் எனும் நதிகளின் முகத்வாரத்தையும் கண்டபடி இறங்கினான். 1-203  தன் உருவை, மகா மேகம் போல வானத்தின் பரவியிருந்த பெரும் உருவத்தை ராக்ஷஸர்கள் பார்த்தால் சந்தேகம் கொள்வர். அல்லது ஆவலுடன் என்னை கூர்ந்து கவனிப்பர்.  குதூகலத்துடன் யார் இது என்று விவரம் அறிய முயலுவர். தேவையில்லாமல் சங்கடங்கள் வரலாம். என்று எண்ணி. உடனே தன் உருவத்தை குறுக்கிக் கொண்டு,1-204-205  மேலும் சிறியதாக ஆக்கிக் கொண்டு, பலி சக்ரவர்த்தியின் வீர்யத்தை அடக்க வந்த ஹரி மூன்று அடிக்குள் உலகத்தை அளந்தது போல, வாமனனாக நின்றான். 1- 206 பலவிதமான ரூபங்களை எடுத்தும் அழகு குன்றாமல் நின்றவன், சமுத்திர தீரத்தில் வேறு யாராலும் நினைத்து கூட பார்க்க முடியாத கார்யாகாரியம் அதன் பலன்கள் இவற்றை ஆராய்ந்து தன் உருவை நிர்ணயித்துக் கொண்டான். 1-207  அதன் பின் அந்த பெரிய மலையில் சிகரத்தில் இருந்து குதித்து கீழே இறங்கினான். கேதக, உத்துங்க, நாரிகேள என்று பலவிதமான மரங்களைக் கண்டான். 1-208 இந்த மரங்களின் வளர்ச்சியே அசாதாரணமாக இருந்தது.  இலங்கையை அடைந்து மலையுச்சியில் இருந்து சமுத்திரத்தை நோக்கினான். அருகில் தென்பட்ட பக்ஷிகளையும், மிருகங்களையும் பயமுறுத்தியபடி, மலையின் மேல் சஞ்சரித்தான். 1-209

स सागरं दानवपन्नगायुतं        बलेन विक्रम्य महोर्मिमालिनम्।
निपत्य तीरे च महोदधेस्तदा                ददर्श लङ्काममरावतीमिव।।                                5.1.210

इत्यार्षे श्रीमद्रामायणे बाल्मीकीये आदिकाव्ये चतुर्विशतिसहस्रिकायां संहितायाम्  सुन्दरकाण्डे सागरलङ्घनं नाम प्रथमः सर्गः

 

 

Panchamukhi Hanuman

Shri Panchmukhi Hanuman – The Story Behind The Five Faces of Lord Hanuman : Story of Panchmukhi Hanuman, the lord Hanuman with five face (five heads). Know the meaning of the five heads of Shri Pan…

Source: Panchamukhi Hanuman

नामदेव

नामदेव
उद्धवा, जरा इधर आ – क्षीरसागर से भगवान नारायण ने बुलाया । जब उद्धव वहाँ पहुँचा, भगवान ने बोला – तुमें भूलोक में एक मानव का जन्म लेना है ।
भगवन्, आपका वचन मेरे शिरोधार्य है ही, फिर भी..
फिर क्या – भगवान बोले
जैसे साधारण व्यक्ति जन्म लेता है वैसा नहीं..
भगवान् हँसते हाँ किया । वैसे ही उन्हें एक शिशु बनाया और एक पत्ते मे बिठाकर वैकुण्ठ से भीमावति नदी जल मे उतार दिया । नदी मे बहता बच्चे को एक दर्जी ने देखा । वह भी विट्ठल भक्त था, हर रोज वहाँ स्नान करने आता था । यहाँ नदी को चन्द्रभागा कहते थे । स्नान के बाद बच्चे को साथ लेकर मन्दिर में विटठलजी दर्शन करके, घर पहुँचा – पति पत्नि दोनों बडे प्यार से बच्चे को अपनाया – विधिवत् नामकरण किया – नामदेव इति । आगे चलकर वही प्रसिद्ध भक्तकवि बना । भक्त जनों के बीच यह कथा प्रचलित है कि उस दिन भगवान विटठलजी स्वयं आशीर्वाद करने आए थे – बच्चे को एक कमीस आर टोपी पहनाया था ।
नामदेव सदा सर्वदा विट्ठल ध्यान मे रहता – लौकिक चीजों पर जरा भी दिलचस्पी न रहा – यहाँ तक कि न पढता न कुछ सीखता – माँ बाप दुःखी थे कि कुछ तो सीखे विना धन कमाएगा कैसे और जीवन बिताएगा कैसे । बहुत समझाया – मगर वह सुधरा नहीं ।
नामदेव एकदिन भगवान से विनती करता- हे भगवन्, मुझे क्यों इस संसार मे छोडा – भगवान ने पूछा – क्यों क्या दुख है तुमे –
नामदेव ने बोला – माँ बाप प्यार करते हैं ही मगर सदा माँ बडबडाती है – नौकरी करो, धन कमाओ – मेरा मन तो सदा तुम्हारे पास रहने और भजन करने मे लगे रहना चाहता है ।।
पास मे माँ रुक्मिणी खडी थी – भगवान उससे कहा – देखो देवी, ये तो चाहता है हम भी उसके साथ ही रहें –अब पत्नि भी है – तो माँ क्यों नही चिन्ता करती –
इसी समय घर मे नामा की पत्नि सास से कह रही थी – माँजी आपके बेटा एक अमूल्य रत्न है – भक्तिमान और सदा भजन विट्ठल ध्यान जप करता है- मगर मुझे देखिए – फट्टी पुरानी के अलावा, न कपडे – भरपेट भोजन क्या घर मे एक दाना नही, हम सब क्या जिन्दगी बिता रहे हैं – भूखे प्यासे – माँ उससे मरना अच्छा नही है – वह रो पडी ।
माँ क्या करती – आस पास मे माँगने जा रही थी – तब मन मे एक ख्याल आया – इन लोगों से क्या माँगना –सब हमारे जैसे बाल बच्चे वाले – कितना दे सकते – विट्ठलजी से ही अपना हालत सुनाती हूँ – सीधे मन्दिर गई । नामा जब अपनी व्यथा सुनाता था ठीक वही समय ।। भगवान ने नामा को अपने पीछे चुपाकर रखा -और
माँ कोना को दर्शन दिया – जोर से रो रोकर वह बोली- विट्ठला – मेरे बेटे को समझाओ – पागल सा हमेशा भजन करने – ध्यान करने बैठ जाता – अब अकेला भी नहीं, पत्नि है, बच्चे हैं – एक बेटे के नाते, पति और पिता के नाते कर्तव्य पूरा करना चाहिए न – विट्ठला, दया कर, परिवार को दुखी करके वह क्या सुख पाना चाहता – तुम तो कुचेल को अनुग्रह करनेवाला, दरिद्रता हमे भी सताती है, द्रौपदी को बचाने भाग आया, हमारे घर हम दो औरतें दैनिक उपयोग कि कपडे के लिए तडप रहे हैं – तुम्हें दीखता नहीं – कहते कहते रो रही थी ।
विट्ठल इस माँ को क्या जवाब देगा – मुसकुराकर बोले – माँजी तुम फूल कर रही हो – तुम्हारे पास बेटा रूप मे एक अमृत कलश है – जो मनुष्य को इस संसार से पार करने वाला है –नामा मेरा भक्त होने की वजह से तुम भी मुझे देखती हो – मै तुम से बात कर रहा हूँ – निशश्चिन्त हो जा – घर लौटो – सम्भालो अपने को – और समझो कि इस अनोखी संपत्ति तुम्हें अपनी पूर्वजनम सुकृत से ही मिला ।
पास मे देविय़ाँ दोनों रुक्मिणी और सत्यभामा की और देखा और बोला – देवी आप ही बोलिए – नामा सदा विट्ठल भजन करता है – भक्त का घरवाले कैसे जीवन विता रहें है – कभी सोचा – माँ मै हूँ, पत्नी है, बच्चे है- लोक मे घर वाला हो तो सबको संभालता – अन्न वस्त्र का प्रबन्ध करता – भक्त हो तो इन सब कर्तव्य़ों उसे हाथ धोना हो तो वैसे ही सही – चलो नामा – घर चलतें हैं – विट्ठल अपने कमर पर हाथ रखते वीट पर खडा रहेगा – तुम्हें छोडकर मै नही जाऊँगी
कोना, बेटे को लेकर तुम घर जाना हो तो जाओ – हमे तक्रार न करना – रुक्मिणी बोली –
नामा के आँखों से आँसू बह रहा था – बोला कुछ नहीं –विट्ठल – कोना, तुम्हारा बेटा संसार के बन्ध पाश से मुक्ति पाना चाहता है – इसमे क्या गलत है – तुम अपने आप समझोगे -अब उसे हाथ पकडकर ले चल –
माँ बेटे घर पहूँचे तो आश्चर्य चकित रह गए – नामा की पत्नी खाना पका रही थी – बहुत सारे कपडे, धन धान्य – ये क्या – नामा की पत्नी ने कहा – कोई नामा से मिलने आए थे – ये सब दे गये थे ।।
अब माँ कोना, पत्नि राजा ही नहीँ सारे गाँवाले नामा को आदर से देखने लगे। माँ उसे गृहस्थी की चिन्ता होने नहीं दिया । नामदेव आगे चलकर कई अभंग गा रहे थे जो अब भी मशहूर है ।।

कोना ने देखा कि नामा चिन्तित था । नामा क्या बात है –
नामा ने बोला – किसी के लिए लाया होगा – हमे दे गया – कौन है , क्यों हमे देता – हमे क्या जरूरी है एसे चमकदार कपडे पहन्ने – और धौलत दिखाने का – जो वास्तव मे हमारा नही है –
राजाई ने जवाब दिया – माँ जब आप इन्हें लाने गए थे – एक सज्जन आया – इन्से मिलना चाहता था – मैने बोला आप दोनों मन्दिर गए – मुझे बहुत बुरा लगा कि घर आए अतिथि को कुछ दे न सकती – अपनी घर की हालत कह सुनाया – क्षमा कीजिए, मै आपको खाने पीने के लिए कह न सकी – आस पास मे सबसे उदार ले चुकें अब कैसे चुकाएँगे – मेरे आँखों मे आँसु बहने लगी –
आगन्तुक सज्जन ने कहा – बेटी रो मत – मुझे मालुम है – नामा के वित्त व्यवस्था अच्छा नहीं है – इसलेए ये धन देने ही आया हूँ – अपना नाम केशव दत्त कहा – सम्भालो इन चीजों को – मै मन्दिर मे ही नामा और तुम्हारी सास से मिलूँगा – कहते कहते चल पडे –
अब सबको मालुम हो गया कि केशव दत्त कौन है ।
मगर नामा नया घर नहीं अपनी पुरानी झोंपडी मे ही रहता था .

नामदेव
उद्धवा, जरा इधर आ – क्षीरसागर से भगवान नारायण ने बुलाया । जब उद्धव वहाँ पहुँचा, भगवान ने बोला – तुमें भूलोक में एक मानव का जन्म लेना है ।
भगवन्, आपका वचन मेरे शिरोधार्य है ही, फिर भी..
फिर क्या – भगवान बोले
जैसे साधारण व्यक्ति जन्म लेता है वैसा नहीं..
भगवान् हँसते हाँ किया । वैसे ही उन्हें एक शिशु बनाया और एक पत्ते मे बिठाकर वैकुण्ठ से भीमावति नदी जल मे उतार दिया । नदी मे बहता बच्चे को एक दर्जी ने देखा । वह भी विट्ठल भक्त था, हर रोज वहाँ स्नान करने आता था । यहाँ नदी को चन्द्रभागा कहते थे । स्नान के बाद बच्चे को साथ लेकर मन्दिर में विटठलजी दर्शन करके, घर पहुँचा – पति पत्नि दोनों बडे प्यार से बच्चे को अपनाया – विधिवत् नामकरण किया – नामदेव इति । आगे चलकर वही प्रसिद्ध भक्तकवि बना । भक्त जनों के बीच यह कथा प्रचलित है कि उस दिन भगवान विटठलजी स्वयं आशीर्वाद करने आए थे – बच्चे को एक कमीस आर टोपी पहनाया था ।
नामदेव सदा सर्वदा विट्ठल ध्यान मे रहता – लौकिक चीजों पर जरा भी दिलचस्पी न रहा – यहाँ तक कि न पढता न कुछ सीखता – माँ बाप दुःखी थे कि कुछ तो सीखे विना धन कमाएगा कैसे और जीवन बिताएगा कैसे । बहुत समझाया – मगर वह सुधरा नहीं ।
नामदेव एकदिन भगवान से विनती करता- हे भगवन्, मुझे क्यों इस संसार मे छोडा – भगवान ने पूछा – क्यों क्या दुख है तुमे –
नामदेव ने बोला – माँ बाप प्यार करते हैं ही मगर सदा माँ बडबडाती है – नौकरी करो, धन कमाओ – मेरा मन तो सदा तुम्हारे पास रहने और भजन करने मे लगे रहना चाहता है ।।
पास मे माँ रुक्मिणी खडी थी – भगवान उससे कहा – देखो देवी, ये तो चाहता है हम भी उसके साथ ही रहें –अब पत्नि भी है – तो माँ क्यों नही चिन्ता करती –
इसी समय घर मे नामा की पत्नि सास से कह रही थी – माँजी आपके बेटा एक अमूल्य रत्न है – भक्तिमान और सदा भजन विट्ठल ध्यान जप करता है- मगर मुझे देखिए – फट्टी पुरानी के अलावा, न कपडे – भरपेट भोजन क्या घर मे एक दाना नही, हम सब क्या जिन्दगी बिता रहे हैं – भूखे प्यासे – माँ उससे मरना अच्छा नही है – वह रो पडी ।
माँ क्या करती – आस पास मे माँगने जा रही थी – तब मन मे एक ख्याल आया – इन लोगों से क्या माँगना –सब हमारे जैसे बाल बच्चे वाले – कितना दे सकते – विट्ठलजी से ही अपना हालत सुनाती हूँ – सीधे मन्दिर गई । नामा जब अपनी व्यथा सुनाता था ठीक वही समय ।। भगवान ने नामा को अपने पीछे चुपाकर रखा -और
माँ कोना को दर्शन दिया – जोर से रो रोकर वह बोली- विट्ठला – मेरे बेटे को समझाओ – पागल सा हमेशा भजन करने – ध्यान करने बैठ जाता – अब अकेला भी नहीं, पत्नि है, बच्चे हैं – एक बेटे के नाते, पति और पिता के नाते कर्तव्य पूरा करना चाहिए न – विट्ठला, दया कर, परिवार को दुखी करके वह क्या सुख पाना चाहता – तुम तो कुचेल को अनुग्रह करनेवाला, दरिद्रता हमे भी सताती है, द्रौपदी को बचाने भाग आया, हमारे घर हम दो औरतें दैनिक उपयोग कि कपडे के लिए तडप रहे हैं – तुम्हें दीखता नहीं – कहते कहते रो रही थी ।
विट्ठल इस माँ को क्या जवाब देगा – मुसकुराकर बोले – माँजी तुम फूल कर रही हो – तुम्हारे पास बेटा रूप मे एक अमृत कलश है – जो मनुष्य को इस संसार से पार करने वाला है –नामा मेरा भक्त होने की वजह से तुम भी मुझे देखती हो – मै तुम से बात कर रहा हूँ – निशश्चिन्त हो जा – घर लौटो – सम्भालो अपने को – और समझो कि इस अनोखी संपत्ति तुम्हें अपनी पूर्वजनम सुकृत से ही मिला ।
पास मे देविय़ाँ दोनों रुक्मिणी और सत्यभामा की और देखा और बोला – देवी आप ही बोलिए – नामा सदा विट्ठल भजन करता है – भक्त का घरवाले कैसे जीवन विता रहें है – कभी सोचा – माँ मै हूँ, पत्नी है, बच्चे है- लोक मे घर वाला हो तो सबको संभालता – अन्न वस्त्र का प्रबन्ध करता – भक्त हो तो इन सब कर्तव्य़ों उसे हाथ धोना हो तो वैसे ही सही – चलो नामा – घर चलतें हैं – विट्ठल अपने कमर पर हाथ रखते वीट पर खडा रहेगा – तुम्हें छोडकर मै नही जाऊँगी
कोना, बेटे को लेकर तुम घर जाना हो तो जाओ – हमे तक्रार न करना – रुक्मिणी बोली –
नामा के आँखों से आँसू बह रहा था – बोला कुछ नहीं –विट्ठल – कोना, तुम्हारा बेटा संसार के बन्ध पाश से मुक्ति पाना चाहता है – इसमे क्या गलत है – तुम अपने आप समझोगे -अब उसे हाथ पकडकर ले चल –
माँ बेटे घर पहूँचे तो आश्चर्य चकित रह गए – नामा की पत्नी खाना पका रही थी – बहुत सारे कपडे, धन धान्य – ये क्या – नामा की पत्नी ने कहा – कोई नामा से मिलने आए थे – ये सब दे गये थे ।।
अब माँ कोना, पत्नि राजा ही नहीँ सारे गाँवाले नामा को आदर से देखने लगे। माँ उसे गृहस्थी की चिन्ता होने नहीं दिया । नामदेव आगे चलकर कई अभंग गा रहे थे जो अब भी मशहूर है ।।

 

vittala-1

ஸ்ரீ ஜே.கே. சிவன் அவர்கள் தமிழில் -தெவிட்டாத விட்டலா –என்று எழுதியுள்ளதிலிருந்து அவர் விரும்பிய படி ஹிந்தியில் மொழி பெயர்த்தது.

घोडेवाला:
सन्त तुकाराम के बारे में हम लोगों ने कई कहानियाँ सुना है । महाराष्ट्र के विट्ठल मन्दिर जितना प्रसिद्ध है उतना ही सन्त कवियों के सच्चरित्र और उनके कृतियाँ जिसे अभंग नाम से गाते हैं, वे भी प्रसिद्ध है। भक्ति भाव भरी इन गाथाएँ भारतीय साहित्य संसार मे एक अनोखी स्थान प्राप्त हुए हैं ।

इस महान का आश्रम एक गाँव मे वन के समीप बसा हुआ था | चारों तरफ घन जंगल – बस्ति भी बहुत ही साधारण – छत की जाल से घुसकर सूरज के किरणें फर्श पर रंगोली बना रखा था । बारिश हो तो क्या हाल होगा – अन्दर की मन्दिर नाम के एक शिथिल बस्ती ही – फ़िर भी उसमे भक्त जन उत्साह से गाते, नाच्ते थे | मूल स्थान मे भगवान विट्ठल के सुन्दर मूर्ति – जैसे सजीव थे – दोनों हाथ कमर मे किए खडे हुए अवसर में सन्त तुकाराम भजन को सुन्ते आनन्द्मग्न थे. उन सन्तों मे छत्रपति शिवाजि भी एक थे | वह भी इतर सन्तों के साथ भक्ति भाव से भावुक होकर गाते नाचते थे | तब एक सिपाही आया – भजन कर्ते लोगों के बीच चुप चाप छत्रपति के कानों मे अपना संदेश सुनाया – महराज, मुगल सैन्य आपको ढून्ढ्ते ढून्ढ्ते नजदीक आ गये – शायद आपको इधर होना उन लोगोंको मालुम हो गया हो | तुकाराम स्वामिजी, मै चल्ता हूं – शिवाजी बोले – भजन कर्ते भक्त लोगों को मेरी वजह से आपत्ति न हो – | मगर सन्त तुकाराम जी उन्हें जाने न दिया – बोले – भजन के बीच मे छोड्कर मत जा – जरा ठ्हरो – विट्ठळजी पर भरोसा रख – निश्शिन्त रहो – विटोभा के अभंग अधूरी न हो -छत्रपति शिवाजी उस सन्त के वचन को टाल न सके – मन पूर्वक भजन मे लगे रहे | सुमधुर अभंग – अगर जान देने ही पडे तो इस मधुर गाना सुनते भगवान की गोद मे हि क्यों न हो ।।

मुगल सेनापति अपने 2000 सेना वीरों के साथ उस गांव मे घुसा | किसी तरह, जिन्दा हो या मुर्दा – शिवाजी को पकड्कर लाने का आदेश लेकर तो आया है- मगर – ये क्या – अचानक शिवाजी सैन्य सहित उस सेना को चारों तरफ़ से घेर लिया – और शिवाजी अकेले तल्वार घुमाते दुश्मनों को काफ़ी नुक्सान पहुंचाया – इस मुकाबला के लिए जरा भी मुगल सेना तैयार नहीं थे | मुगल सेनापति शिवाजी को पकड्ने के उद्देश्य से जब पास मे आया तो शिवाजी किसी बहाने से उन्हें वन के भीतर दूर तक ले चले – छायाभरी जंगल – सूर्यास्तमन तक युद्ध चलता रहा – दुश्मनों के बीच ‘पहाड के चूहा’ नाम से शिवाजी जाना जाता था | पहाडी इलाके सब जगह शिवाजी को परिचय रह्ने के कारण उन्हें पक्ड्ना असंभव समझ्कर मुगल सेना लौट पडे – निराश होकर जब सुल्तान को बताया कि शिवाजी पहाड के गुफों मे अन्तर्दान हो गये – तो सुल्तान नाराज होकर उन्हें डांटा – मूंह लट्क कर वे चुप रहे – भला और क्या कर्ते |

इधर भजन समाप्त हुआ – प्रसाद बांट्ते थे – सब प्रसाद लेकर लौट्ते थे – आपस मे खुशी से बात कर जा रहे थे – वहां एक तरफ़ का कोलाहल मचा हुआ था –
एक सिपाही शिवाजी के पास आया और बोले – महराज आप की बहादुरी के सामने शत्रु सैन्य छिन्न भिन्न होकर भाग गये – आप तो इतना बडा उत्साह और धीरता से लडते थे – बिज्ली के समान आप इधर पहुंच भी गये –
छत्रपति शिवाजि निश्शब्द रह गये – आंखों मे आंसू बह्ने लगें – दोनों हाथ जोड्कर विट्ठळ को प्रणाम किया – विट्ठल मूर्ति मे बसे भगवान को धन्यवाद कह्ते रहे | मगर उन्हें तो सुल्तान के वीर पहाडों मे ऒर भी तलाश करते फिरते थे ||
बच्चों ! आप लोग समझ गये होंगे – जब शिवाजी भजन में लगे हुए थे – विट्ठल स्वयं शिवाजी बनकर लड्ने चल पडे – इस घटना से आप को मालुम हो गया होगा कि भगवान भक्त जनों को कभी भी दु:ख होने नहीं देते ||

ஸ்ரீமத் ராமாயணம் நிறைவுற்றது. – முடிவுரை

முடிவுரை

 

இது  MLJ publications – என்ற பதிப்பகத்தின் ராமாயணத்தின் தமிழாக்கம். ராமாயணத்தின் பிரதிகள் பல விதமான பாட பேதங்களுடன் உள்ளன. மஹா பெரியவர்களின் அனுகிரஹத்துடன் எனக்கு கிடைத்ததை பல முறை பாராயணம் செய்த பின்னரே தமிழாக்கம் செய்ய முனைந்தேன்.  இம்முயற்சி நிறைவேற  உதவியவர் பலர். அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

 

 

ஜானகி கிருஷ்ணன்